நான் அறிந்த சிலம்பு – 92
மலர் சபா
புகார்க் காண்டம் – 10.
நாடுகாண் காதை
“கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக் கடந்து செல்லுதல்”
உலகின் சிறந்த கண்ணாகிய
கதிரவன் தோன்றிடாத
அந்த
வைகறை யாமப் பொழுததனில்
விண்மீன்கள் மின்னிடும் வானிலிருந்து
வெண்மதி நீங்கிLடும் பொழுததனில்
கரிய இUருள் இறுதி வரை வியாபித்திருக்கும்
இராப் பொழுததனில்…
முன்னர் செய்த தீவினையானது
உண்ணம் தன்னைத் துரத்திச் செலுத்த
ஆட்டுக் கிடாயும் கவரிமானும்
தூயசிறகுடைய அன்னமும்
இவைதாம் ஓரினம் இல்லையென்றாலும்
ஓர் இனம்போல ஒன்றுகூடித் திரியும்
அடிவரை குடைந்த வேலைப்பாடமைந்த
பெருமையான சிறப்பினையுடைய
நீண்ட நெடிய கதவுடைய
இடைக்கழியை அடைந்து
அதைக் கடந்து
அப்பொழுதே
“மணிவண்ணன் கோயிலை வலம்செய்து போதல்”
அழகு பொருந்திய பாம்பணையின்மீது
பள்ளி கொண்ட
நீலமணி போன்ற நிறமுடைய
திருமாலின் கோயில்
வலம் வந்து அதை விட்டு நீங்கினர்
கோவலனும் கண்ணகியும்…
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 01-10
http://www.chennailibrary.com/iyumperumkappiangal/silapathikaram5.html
படத்திற்கு நன்றி: http://nagapattinam.nic.in/thestory.html

