செண்பக ஜெகதீசன்
கிளையதிலே இலையை வைத்து
இலையிலே பச்சை வைத்து
இயற்கைக்கு அழகு வைத்து
இதையே பழுக்க வைத்து
இடம்பெயர்ந்து விழவே வைத்து
சுடுமணலில் காயவைத்து
சருகெனவே ஆகவைத்து
தெருத்தெருவாய்ப் பறக்க வைத்து
பனிமழையில் நனைய வைத்து
உரமாக மக்கவைத்து,
மரம்வளர ஊக்குவிக்கும்
உண்மைதான்-
இறைவன்…!
படத்திற்கு நன்றி: http://www.gameinformer.com/blogs/members/b/rfxrage_blog/archive/2013/06/12/my-top-10-favorite-skill-tree-characters.aspx


Leave a Reply