நான் அறிந்த சிலம்பு! – 98
மலர் சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
வயல் வழி
கயல் போன்ற கண்ணையுடைய
கண்ணகியின் காதலனே!
வயல் வழியே நாம் செல்லலாம்;
என்றாலோ..
அந்த இடங்களில்
குளங்களில் எல்லாம் நறுமணப் பூக்கள்…
நீண்ட முதுகையுடைய வாளை மீன்கள்
கயல் மீன்களைத் துரத்தும்;
அவ்வாளை மீன்களை
நீர்நாய்கள் வாயில் கவ்விப் பிடிக்கும்.
தப்பிய வாளைமீன்கள்
விலாங்குமீன்கள் உழல்கின்ற
சேற்றினில் துள்ளிப் பாயும்.
இக்காட்சியைக் காணும் கண்ணகி
அஞ்சவும் நேரிடும்.
கரும்புவயல்களில் காணப்படும்
தேனடைகள் சிதைந்து
அவற்றினின்று வழிகின்ற தேன்
அருகிருக்கும் வயல்களில்
வண்டுகள் சூழ்ந்திருக்கும்
பொய்கை நீரில் கலந்திருக்கும்.
அடங்காத தாகத்தால் நாம்
அறிவு மயங்கி விதிகள் மறந்து
உட்கை குவித்து
அத்தண்ணீரை அள்ளிப் பருகவும் கூடும்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 76- 85
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html