Tag: இந்த வார வல்லமையாளர் விருது

  • இந்த வார வல்லமையாளர் (296) – டி குகேஷ்

    -விவேக்பாரதி

    முன்னரே நிறுவி வைத்திருக்கும் இலக்கினைக் காலம் ஒவ்வொரு திறனாளிகளைக் கொடுத்து உடைத்துப் பார்க்கின்றது. எளிமையாக நமது எண்ணங்களை மற்றொரு எண்ணம் வெல்வது என்பதில் தொடங்கி சர்வதேச அளவில் இந்த இலக்கை முறியடித்து சாதனை படைப்பதும் வெற்றி வாகை தரிப்பதும் ஒரு உலகியல் நியதி. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வினை விளையாட்டு சம்பந்தமான துறையில் நிறையவே காணப்படுகிறது. ஏற்கனவே சாதனையாளராக ஒரு விளையாட்டு வீரர் தன் திறத்தால் தாம் சேர்ந்த துறையில் பதித்து வைக்கின்ற இலக்குக் கல்லை மற்றொரு சாதனையாளர் தம் திறத்தால் இடம்பெயர்த்து உயர்த்தி வைக்கிறார் என்பதி விளையாட்டுத் துறையில் எளிதில் நமக்குப் புலப்படும் ஓர் ஆரோக்யமான போட்டி.

    இந்த வார வல்லமையாளர் அப்படிப் பட்டவரே! ஆனால் இங்கே சாதனைக்கு உள்ளானது விளையாட்டு வீரர்களின் வயது! ஆம்! மிகவும் சிறு வயதிலேயே இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராகவும், உலக ளவில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டராகவும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் என்னும் 12 வயது நிரம்பிய மாணவர் சாதனை படைத்துள்ளார். அவரே இந்த வாரத்து வல்லமையாளர்.

    டில்லியில் நடந்த சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தினேஷ் சர்மா என்னும் வீரரை 9 ஆவது சுற்றில் வீழ்த்தி குகேஷ் இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார். இதற்கு முன்னதாக 12 வயது 10 மாதங்கள் 13 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்னாநந்தா என்பவர் நிறுத்தி வைத்திருந்த இலக்கைத் தான் குகேஷ் முறியடித்து 12 ஆண்டு 7 மாதங்கள் 13 நாட்களில் இந்தியாவின் மிகக்குறைந்த வயது கிராண்ட் மாஸ்டராக வலம் வருகிறார்.

    அவரது தந்தை மற்றும் தாயின் தளராத ஊக்கத்தாலும், 5 வயதிலிருந்தே அவர் மேற்கொண்டு வரும் செஸ் விளையாட்டின் பயிற்சி மற்றும் ஆர்வத்தினாலும் இந்த வெற்றிப் பதக்கத்தைத் தோளில் சுமந்துள்ளார். மார்ச் மாதம் சர்வதேச செஸ் மாஸ்டர், பாங்காக் ஓபன் போட்டியில் 3 ஆம் இடம், ஆர்பிஸ் போட்டிகளில் 2 ஆம் இடம் ஆகிவற்றை வென்றதன் நீட்சியாகவே இப்போது உலகத்திந் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டராகப் பரிமளிக்கிறார்.

    இவர்தம் வல்லமையை மெச்சி, இன்னும் பல விருதுகளும் பல திறமைகளும் வாய்க்கப்பெற வல்லமை மின்னிதழ் குழுமம் டி குகேஷ் அவர்களுக்கு வல்லமையாளர் என்ற விருதினைப் பெருமையுடன் வழங்கி மகிழ்கின்றது.

    சதுரங்க ஆட்டத்தில் காய் நகர்த்தும்
    சமர்த்தாலே உலகிலிளம் கிராண்ட் மாஸ்டர்
    மதிப்பதனை வென்றகுகேஷ் வல்ல மைக்காய்
    வல்லமையாளர் விருதை வழங்குகின்றோம்!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (295) – குக்கூ குழந்தைகள் வெளி

    உலகறியாத சிறுவர்க்குள் தான்
    உலகம் சுழல்கிறது!
    ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ரகமாய்
    உயர்ந்து விரிகிறது!
    கலகம் அறியாப் பிள்ளை நெஞ்சுள்
    கடவுள் வாழ்கிறது!
    கணமொரு வடிவாய்ப் புதிதினும் புதிதாய்க்
    கனவாய் வளர்கிறது!

    என்ற வரிகள் இதயத்தில் உதயமாகின்றன. இவை இந்நேரம் தோன்றக் காரணம் என்ன? அதற்குக் காரணமானவர்களே இந்த வாரத்தின் வல்லமையாளர். விதையை யார் தான் எழும்ப வைக்கிறார்? இந்தக் கேள்விக்கு என்னவாயிருக்கும் பதில்? அப்படி சிறிய விதைகளாய் விளங்கும் குழந்தைகளைச் சமுதாய நெறியின்படி நல்ல நடத்தையுடன் எழுப்பும் ஒரு சுவாரஸ்யமான முயற்சியைச் சுலபமாக மேற்கொண்டுக் கொண்டிருக்கின்ற குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினர் அனைவருமே இந்த வாரத்து வல்லமையாளர்கள் தாம்.

    குக்கூ குழந்தைகள் வெளி என்ற அமைப்பினர், http://cuckoochildren.in என்றொரு இணையதளம் மூலம் தங்களது அன்றாட சேவைகளை உலகின் பார்வைக்குப் பதிவுசெய்கிறார்கள். அந்த வலைதளத்தில் அவர்களைப் பற்றி குறிப்பிடும் பகுதியில்,

    Forgive my grimy hands. I’m just back from the forest.
    There is a stream there.
    On its banks is a rock that’s shaped like an elephant.
    I was sitting on it with my friends all morning.
    We played a lot of games.
    We made animals and birds with clay from the bank and released them into the forest.
    We drew clouds on the ground using red earth, we also drew the sun.
    We wrote a story in which the moon goes for a swim one night.
    We collected seeds which we will plant near our homes.
    We read a book under a tree when it drizzled.
    And when the sun came out we danced for a song we wrote.
    We then…oh my, we’re late.
    The seeds! We have to plant them right away.
    See those grey clouds floating towards us?
    They hold precious water drops that will give life to the seeds.
    We have to go now, there’s so much to do.
    Good-bye.
    No, wait, do you want to come along?

    என்று ஒரு அற்புதமான கவிதை வழியாகத் தாங்கள் வித்யாசமானவர்கள் என்று நிறுவுகிறார்கள்.

    நண்பர்கள் சிலர் கூடி 2004 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட தன்னார்வ அமைப்பான குக்கூ குழந்தைகள் வெளி, ஊர்ப்புற சிறார்களுக்கு உள்ளே அமிழ்ந்திருக்கும் ஆற்றல் மிகுந்த படைப்பாளிகளையும், திறமைசாலிகளையும் எளிதில், இயற்கையோடு இயைந்த வாழ்வியல் முறையில் கண்டெடுத்துப் பயிற்சி அளிக்கும் செயலினைத் தொண்டாகச் செய்து வருகிறது.

    Our objective — letting children discover themselves. We mostly work with little ones from rural Tamilnadu, who lack the opportunities that children from urban environments take for granted. We introduce them to Nature, good books and movies. We tell them stories, play with them, draw and paint with them, introduce them to the colorful world of photography, traditional folk arts, music, martial arts, theatre, and also engage them in exciting discussions on socio-political and environmental issues. We wish to bring out the inherent spark in every child. And more than anything, we want to learn from them, for their world is the most beautiful place on earth.

    என்ற அவர்களின் தன்விவரக் குறிப்பு நமக்கு அவர்களின் தன்மையை விளக்கும்.

    கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாகக் கலைநயத்துடன் புது நயத்தையும் சேர்த்துக் குழந்தைகளை உயர்த்தும் இந்த குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினரின் சாதனைகளை அவர்களது முகநூல் பக்கத்தில் காணும்பொழுது மெய் சிலிர்த்துப் போகிறது. சிறிய, எளிய, இதுவரை யாரும் யோசிக்காத விஷயங்களை மிகவும் சாதாரணமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். அந்தப் புதிய பார்வை மிகவும் பாராட்டத் தக்கது. அதிலும் குறிப்பாக இந்த வாரம், பனை ஓலைகளை வைத்து விளையாடப் பழக்கியிருக்கும் இவர்களது முயற்சி மிகவும் புதுமையாகவும், கேட்கவே சுவாரஸ்யமானதாகவும் விளங்குகிறது என்பது படிக்கும் உங்களுக்கும் பிடிபடும்.

    அவர்களின் பதிவு,

    பனை ஓலையில் பொம்மைகள் செய்யக் கற்றுத்தரும் குழந்தைகள் பயில்முகாம் இனிதே நிகழ்ந்துமுடிந்தது குக்கூ காட்டுப்பள்ளியில்… பனை ஓலையின் வாசத்தை நாசியில் ஏற்றி ஓலையை மடித்தும் நுழைத்தும் சின்னச்சின்ன பறவைகளாகவும், விலங்குருவங்களாகவும் செய்து இவ்வெட்டவெளியில் மிதக்கவிட்டனர். மகிழ்வின் நிறைவின் புகைப்படங்கள் உங்கள் விழிகளுக்காக… ஒளிப்படங்கள் : அய்யலு குமரன், திருமலைவாசு

    பொதுவாகவே ஒரு விருதளிப்பது என்பது இன்னும் திறம்படச் செயலாக்க அவர்களை ஊக்கும் சக்தியாக விளங்கும். அந்த வகையில் குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினருக்கு வல்லமையாளர் என்ற விருதினை வழங்கி மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம். நாளைய சமுதாய பூக்களை சரியாக வகையில் பயிரிட்டு அடை காக்கின்ற குக்கூ குழந்தைகள் வெளி போல பல அமைப்புகள் இன்றைய சூழலில் நாளைக்காகவும் உழைக்க வேண்டும் என்ற வேண்டுதல்களை இறைவன் முன்னம் வைத்து வாழ்த்துகிறோம்.

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share
  • இந்த வார வல்லமையாளர் (285)

    இந்த வார வல்லமையாளர் விருது!

    இந்த வார வல்லமையாளராக உலகின் மிக நீண்ட பாலத்தைக் கடலில் கட்டிய பொறியாளர் ’மெங் ஃபான்சாவ்’ (Meng Fanchao) என்னும் சீன சிவில் எஞ்சினீயரை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.


    14,000 கோடி ரூபாய் செலவில் சீன நகரம் ஃசுலாய், மக்காவ் தீவு, ஹாங் காங்கையும் இணைக்கும் பாலம் இது. 54 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கடலின் மீது வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய பொறியியற் சாதனை. இதன் தலைமைப் பொறியாளர் மெங் ஃபான்சாவ் அவர்களை வாழ்த்துகிறோம்.  ரிச்டர் ஸ்கேலில் 8 எண்ணலகு கொண்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கூடத் தாங்கும் வலிமை கொண்டது. பல நூறு மைல் வேகம் கொண்ட சூறாவளிப்புயலோ, சுனாமிப் பேரலைகளோ வந்தாலும் தாங்கும் அளவிலும், 120 ஆண்டுகள் வரை இருக்கும் வரையிலும் இந்த எஞ்சினீரிங் சாதனை உருவமைக்கப்பட்டுள்ளது.

    ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்றார் மகாகவி பாரதியார். ஒருநாள் ஈழத்துக்காரர்கள் ராமேசுவரத்தில் சினிமா, கலை நிகழ்ச்சிகள் பார்க்கவும், தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகளில், கார்களில் மக்கள் இலங்கைக்கு கடலின் மீது எழுப்பப்பட்ட பாலத்தின் வழியாகப் போய் சுற்றுலா, வணிகம் செய்யும் நாள் வரட்டும். சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையில் கடல்வழியாக செல்ல வசதிகள் உள்ளதுதானே.

    தமிழ்நாட்டு, இலங்கை (தமிழ், சிங்களம்) அரசியல் தலைவர்கள் முயன்றால் கடல்பாலம் வரும். தொழில்நுட்பம் இருக்கிறது, பாலம் கட்ட தமிழ்நாடு, இலங்கையில் பணமும் நிறைய உள்ளது. அரசியல் முயற்சிகளால் இது சாத்தியம் ஆகலாம். கப்பல் போக்குவரத்தும், கடற் பாலமும் ஆகி தமிழக, இலங்கை உறவுகள் அதிகமாகவேண்டும். இப்பொழுது இலங்கைத் தீவுக்கு தமிழ்நாட்டில் இருந்து பலர் சுற்றுலாச் சென்றுவருகின்றனர். அது நீர்வழி, பாலவழி, விண்வழி என்று மிகவேண்டும்.  இந்தியா, இலங்கை பாலத்திற்கு பூகம்பப் பிரச்சினை இருக்காது. புயல் காற்றும், ஆழிப்பேரலை என்னும் சுனாமியும் எப்போதாவது வரலாம். அதற்கான கட்டுமானப் பொறியியல் எளிது. வலிமையாக பாலம் எழுப்ப இயலும்.

    ”ராமேஸ்வரம் கொட்டகை தியேட்டரில் படம் பார்க்க யாழ்ப்பாணத்தில் இருந்தும் வருவார்கள்” ‘கதம்பம்’ ஆசிரியர் கே.வி.எஸ் மோகன் http://123tamizhamutham.blogspot.com/2009/12/re_7707.html

    டென்மார்க்கையும் சுவீடனையும் இணைக்கும் ஒர்சன் பாலம் (Øresundsbron)  http://vinaiooki.blogspot.com/2010/05/resundsbron.html

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (279)

    இந்த வார வல்லமையாளராக வானியல் விஞ்ஞானி ஜாசிலின் பர்னல் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. பல்ஸார் (Pulsar) என்னும் வேகமாகச் சுழல்கிற இறந்துபட்ட நட்சத்திரங்களை முதன்முதலில் கண்டறிந்தவர் பேரா. பர்னல். அவர் மாணவராக இருக்கும்போது நடந்த கண்டுபிடிப்பு ஆனதால், அவரது பேராசிரியர் ஹ்யுயிஷ் நோபல் பரிசை வென்றார்.

    இப்போது 3 மில்லியன் $ பரிசான Special Breakthrough Prize ஜாஷ் பர்னலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுப் பரிசுத் தொகையையும் பெண்கள் பௌதீகவியலில் ஆராய்ச்சி செய்ய வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இப்பரிசைப் பெறும் முதல் பெண்மணி ஜாஸ்லின் பர்னல் ஆவார். இவர்க்கு முன்னர் ஸ்டீபன் ஹாக்கிங், ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்புக் குழு, ஈர்ப்புவிசை அலைகள் (Gravity waves) கண்டறிந்தோருக்கு இந்த பிரேக்துரோ பரிசில் வழங்கப்பட்டது.

    Professor Dame Jocelyn Bell Burnell, visiting Professor of Astrophysics, University of Oxford, from Bradford-on-Avon, is made a Dame Commander of the British Empire by The Queen at Buckingham Palace, for services to Science. (Photo by PA Images via Getty Images)

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (275)

    முனைவர் நா.கணேசன்

    இந்த வார வல்லமையாளராக பாரத ரத்தினம் அடல் பிகாரி வாய்பாய் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    அடல் பிகாரி வாஜ்பாய் (டிசம்பர் 25, 1924 – ஆகஸ்டு 16, 2018) 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.


    வாஜ்பேயி

    தூய்மைக்குப் பெயர்பெற்ற தலைவர்,  வெற்றி
    தோல்விகளை ஒருநிலையாய்க் கொண்ட மேதை
    வாய்மையிலே வழுவாதார்,  மோசம் என்றே
    வாய்வார்த்தை கூடயிவர் பற்றி நெஞ்சில்
    நோய்தவழும் மனத்தோரும் பேச மாட்டார்
    நுட்பமுடன் பேசுகிற ஆற்றல் மிக்கார்
    தாய்மனத்தர், சுதந்திரப்போர் தன்னில் முன்னர்த்
    தடியடியடியும் சிறைவாழ்வும் பெற்ற வீரர்.

     கவிஞரிவர், எழுத்தாளர், பிரம்மச் சாரி
    கண்ணியவான் , அவர்பேச எழுந்து விட்டால்
    அவையிலுள்ள எதிர்க்கட்சிக் காரர் கூட
    ஆர்வமுடன் கேட்பார்கள், இன்று நாட்டில்
    உவகையுடன் இடங்களுக்குச் சாலை மூலம்
    உலாச்செல்ல முடியுமென்றால் அரிய திட்டம்
    நவையிலதாய் அளித்ததுதான், ஆமாம் தங்க
    நாற்கரமாம் திட்டம்மிகப் பெரிய வெற்றி!

    போக்ரானில் அணுத்திட்டம் செயல்படுத்தி
    புவியறிய வைத்தார் நம் நாட்டின் மேன்மை
    தாக்கத்தான் பாக்கிஸ்தான் முனையக் கார்க்கில்
    சாதனையைச் சரித்திரமாய் மாற்றித் தந்தார்
    வாக்குக்கும் செய்கைக்கும் மாறு பாடு
    வழங்காத நேர்மைக்குச் சொந்தக் காரர்
    தேக்குபுகழ் நம் அப்துல் கலாமை ஏற்றுச்
    சிறப்புடனே ஜனாதிபதி ஆக்கிவைத்தார்.

    இனிமேலே வாஜ்பேயி போலே இங்கே
    எவரைத்தான் பார்க்கிறது? வாழ்வு முற்றும்
    தனியில்லாத் தனிமனிதன், சமர்த்தர், வெற்றிச்
    சாதனைகள் செய்தமகான் இன்றைக் கில்லை
    நனைகின்ற நம்கண்கள் அன்னார் வாழ்வின்
    நாணயத்தை இங்கெடுத்துச்  சொல்லும், என்றும்
    நினைத்திடுவோம் வாஜ்பேயி நாமம் வாழ்க!
    நீநிலத்தில் வரலாறாய் வாழ்க வாழ்க!

                                                                                     – இலந்தை இராமசாமி

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com,  vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (273)

    முனைவர். நா.கணேசன்

    இந்த வார வல்லமையாளராக ஸ்டான்போர்ட் பல்கலை பேரா.  அக்‌ஷய் வெங்கடேஷ்  அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    “மறைவாக நமக்குள்ளே பழம்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்றார் பைந்தமிழ்ச் சாரதி பாரதியார். உலகம் புகழும் கணிதவியல் நிபுணர் ஒருவரை இந்த வார வல்லமையாளர் எனத் தெரிவுசெய்கிறோம்.

    இந்தியாவில் கணிதத்தில் சாதனை புரிந்தவர்கள் பலர். தொல்லியலாளர்கள் சிந்து சமவெளியிலேயே நீளம், எடை போன்றவற்றை அளக்கும் அளவைகள் தரப்படுத்தியிருக்கிறார்கள் என்பார்கள். தமிழ்நாட்டில் எண்கணித வரலாறு பற்றிய கட்டுரை: வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்.   பாரத தேசத்தில் பிறந்து மேற்கு ஆஸ்திரேலியா பல்கலையில் இளங்கலைப் பட்டம் 17 வயதில் முடித்து, 21 வயதில் பீட்டர் சார்னாக் என்னும் பேராசிரியர் நெறியாளராக இருந்து கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் அக்‌ஷய் வெங்கடேஷ். இப்பொழுது ஸ்டான்போர்ட் பல்கலை, கலிபோர்னியாவில் கணிதப் பேராசிரியர், அக்‌ஷய் தன் கணக்குப் பங்களிப்பைப் பற்றிப் பேசுகிறார்: https://www.youtube.com/watch?v=p7iXVQxvM00

    இன்போசிஸ் கம்பெனியின் பரிசை அக்‌ஷய் வெங்கடேஷ் பெற்றபோது நடந்த விழா: https://www.youtube.com/watch?v=IWHb_STZvzA

    அண்மைக் காலத்தை எடுத்துக்கொண்டால், சீனிவாச ராமானுஜன் நினைவுக்கு வருகிறார். கனடாவைச் சேர்ந்தவர் ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் (1863 – 1932) 1924இல் சர்வதேசக் கணிதவியலாளர்கள் அமைப்பை உருவாக்கிய இவர், கணிதத் துறையில் சாதிப்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன் விளைவாக, ஃபீல்ட்ஸ் பதக்கம் என்ற பரிசு உருவானது. கணிதத்துக்கான நோபல் பரிசு எனப் புகழ் பெற்றது இப்பரிசு. 2014இல் முதன்முதலாக இந்தியாவைச் சேர்ந்த மஞ்சுள் பார்க்கவா, ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்றார். இப்பொழுது தமிழர் அக்‌ஷய் வெங்கடேஷ் வென்றுள்ளார். Synthesis of analytic number theory, homogeneous dynamics, topology, and representation theory துறைகளில் பங்காற்றும் வெங்கடேஷுக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

    இவர்தம் தாயார், ஆஸ்திரேலியாவில் டீக்கின் பல்கலையில் கணினியியல் பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வெற்றியாளரும் 15,000 கனடா டாலர் பரிசுத் தொகையைப் பெறுகின்றனர். இந்த ஆண்டு நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அக்‌ஷய என்றால் தமிழில் கேடிலி. தேவாரத்தில் கீழ்வேளூர் தலப்பாடல்களில் இத் தமிழ்ப்பெயரைப் பார்க்கலாம். இந்தியப் பல்கலைகளிலே பணிபுரியும் கணிதப் பேராசிரியர்களும் நல்ல ஆய்வுகளின் மூலம் மஞ்சுள், அக்‌ஷய் போலவே ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றெடுக்க வாழ்த்துகிறோம்.

    எண் கணித வல்லுநர் அக்ஷய் வாழ்த்துப் பதிவில் தமிழ்நாட்டின் எண்வரலாற்றைப் பார்க்கலாம்: வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள் (http://www.vallamai.com/?p=29153)

    வலமிருந்து இடமாகப் பேரெண்களை வர்ணித்தல் (வாமகதி முறை):

    ஸ்ரீபுராணத்தில் வலப்பக்கத்தில் இருந்து எண்கள் வளர்ந்தன எனப்படும் கதையை பிராமிக் கல்வெட்டுக்கள், தமிழின் 2000 ஆண்டு இலக்கியங்கள் வழியாகப் பார்க்கலாம். பிராமியில் எண்களை எழுத வாமகதித் தத்துவம், அதாவது வலப்புறம் சிற்றெண்ணில் தொடங்கி பேரெண்களை ஒன்றன் பின் ஒன்றாக இடப்புறமாக எழுதிச் செல்லும் வழிமுறை பயன்படுகிறது. இப் பண்டைய வாமகதி முறையை “அங்காநாம் வாமதோ கதி” என்று சிற்றெண்ணை முதலில் வலப்புறம் எழுதி இடப்புறத்தில் அடுத்தடுத்த பெரிய எண்களை எழுதுதலை வடமொழி கணித சாஸ்திரங்களில் குறிப்பிடுகின்றனர். இந்த வாமகதி முறையைத்தான் ஸ்ரீபுராணத்தில் அழகான கதையாகச் சொல்லியுள்ளனர்.

    புள்ளி உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவங்களின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடும் தொல்காப்பியர் தன் காலத்தில் புழங்கிய பேரெண்களை வாசிக்கும் வாமகதி முறையைப் பல சூத்திரங்களில் தந்துள்ளார்.  உதாரணமாக, தொல்காப்பியம் (புணரியல்) முதல் நூற்பா:

    ”மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்

    இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது

    அறுநான்கு ஈற்றொடு நெறி நின்று இயலும்”

    தொல்காப்பியர் காலத்தில் பூஜ்யம் இல்லை. தசமகணித முறையும் கண்டுபிடிக்கப் படாத காலம். ஆனால், 10, 100, 1000 இவற்றுக்குத் தனிச் சின்னங்கள் இருந்தன. 3 (10) 3 = 33. சிறிய எண் 3ஐ வலப்புறம் அமைத்து (மூன்று தலையிடுதல்), அதற்கு இடமாக 3(10) எழுதுதலைச் சுட்டுகிறார். அதுபோலவே,  2 (10) 2 = 22 என்பதையும் வாமகதி முறையில் தொல்காப்பியர் எழுதிக் காட்டியுள்ளார். தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் நூற்பா ஒன்று பேரெண் 13699-ஐ வாமகதி முறையில் தருகிறது. வாமகதி முறையை அறிந்துகொள்ளாமல் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பிழைபட எண்களைத் தம் உரைகளில் தருகின்றனர். ஆனால் தொல்காப்பிய முதல் உரைகாரர் இளம்பூரண அடிகளும் யாப்பருங்கல விருத்தியிலும் சமணர்கள் வாமகதி முறையைப் பயன்படுத்திக் காப்பியரின் 13699 எண்ணைச் சரியாக விளக்கியிருப்பது அறிந்து இன்புறத்தக்கது. யாப்பருங்கல விருத்தியின் மேற்கோள் வெண்பா (மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ள பதிப்பு) இதுதான்:

    ஆறிரண்டோ டைந்தடியை ஐந்நான் கிருதொடையான்
               மாறி நிலமைம்பத் தொன்றகற்றத் – தேறும்
               ஒருபதின்மூ வாயிரத்தோடொன்றூன மாகி
               வருமெழுநூ றென்னும் வகை.

    சீவக சிந்தாமணி, புறப்பொருள் வெண்பாமாலை, இலக்கணவிளக்கம் போன்ற பிற்கால நூல்களிலும் இந்த வாமகதி முறை உள்ளது. ’ஓரேழ் தலையிட்ட இருபான் மைந்தர் ’ – குசேலர் மைந்தர் 27  பேர் என 19-ஆம் நூற்றாண்டில் கூடக் குசேலோபாக்கியானம் குறிப்பிடுகிறது.  ”ஆறு தலையிட்ட அந்நாலைந்தும்” (= 26, தொல். செய்யுளியல், 310), “நாலைந்தும் மூன்று தலையிட்ட” (=23, தொல். சொல். 210)  – இவை போல வாமகதியில் எழுதும் பானையோடு கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து அழகன்குளம் என்ற கடற்கரைப் பட்டினத்தில் கிடைத்துள்ளது அருமை.  ஐராவதம் மகாதேவன் மருங்கூர்ப்பட்டினம் (அழகன்குளம்) அளித்த சங்ககாலப் பானையோட்டை இந்து நாளிதழில் 29.12.2011-ல் வெளியிட்டுள்ளார். அந்த ஓட்டில் (படம் 3), 804 என்ற எண் தான் எழுதப்பட்டுள்ளது என இலங்கை பிராமிக் கல்வெட்டு எண் மதிப்பை (படம் 4) வைத்துத் தெளிந்தோம்.  தொல்காப்பியம் அதன் பின்னர் எல்லா நூற்றாண்டுக் கல்வெட்டுகள், இலக்கியங்கள் தரும் எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால், மருங்கூர்ப் பட்டினப் பானையோட்டுப் பேரெண்ணை “நான்கு தலையிட்ட எட்டின் நூறு”(=804) என்று வாசிக்கவேண்டும். வலப்புறத்தில் நான்கு எனும் எண்ணை எழுதி அதற்கு இடப்புறமாக 8 (100) எழுதப்பட்டுள்ளது. 100 என்பதன் சின்னமாக ஸ (=ஸதம்) உள்ளது. ஐராவதம் வாமகதி முறையை விளக்கியுள்ளார். ஆனால், எண்ணின் மதிப்பு என்று பார்த்தால் 804 தான், 408 அன்று. இதற்கு ஆதாரம். தொல்காப்பியத்தின் நான்கு எடுத்துக்காட்டுகளும், படம் 4-ம் (விக்கிரமசிங்கே, 1901, JRAS). 1996-ல் ஐராவதம் அவர்கள் அரிகமேடு அகழாய்வில் பெரிய எண்களுடன் கிடைத்த பானை ஓடுகளை வெளியிட்டார்.  அருகமேட்டுப் பானையோட்டில் 855 = = ௮௱ ௫௰ ௫ என்ற எண் உள்ளது. அதை “ஐந்து தலையிட்ட ஐம்பதிற்று எண்ணூறு” என்று வாமகதி முறையில் எழுதி வாசிக்கவேண்டும்.  குறளில் “பத்து அடுத்த கோடி” என்பதை ௰ (C) என்றிருக்கும். அதாவது, (10), (100), (1000) மாத்திரம் இப்போது உள்ளது. வள்ளுவர் காலத்தில் லட்சம் (L), கோடி (C) இரண்டுக்கும் தனிச் சின்னம் (symbol) இருந்திருக்கும்.

    ———–

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • முனைவர் நா. கணேசன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!

    பவள சங்கரி

    முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றியவர், நம் வல்லமை இதழ் மற்றும் குழுமத்தில் பல ஆண்டுகளாக தமது சிறந்த படைப்புகளையும், தமிழின் வேர்சொற்கள் குறித்த ஆகச்சிறந்த கருத்துகளையும், விவாத மேடைகளையும் ஏற்படுத்தி தமிழார்வலர்களின் சிந்தையின் விழிப்புணர்வை மலரச் செய்பவர் என்றால் அது மிகையாகாது..

    இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர், என்று நண்பர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கருத்துரையும் குறிப்பிடத்தக்கது. உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html

    அன்பு நண்பர், வல்லமை இதழின் சிறந்த பங்களிப்பாளர் முனைவர். நா. கணேசன் அவர்கள் வல்லமையாளர் விருது வழங்கும் வகையில் நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுவதை வாழ்த்தி வரவேற்கிறோம். குடத்திலிட்ட விளக்காக ஒளிரும் ஆகச்சிறந்த வல்லமையாளர்களை இவர்தம் அரிய முயற்சியால் கண்டடைந்து வெளிக்கொணர்வோம் என்று நம்புவோம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர் (268)

    இந்த வார வல்லமையாளர்! 

     

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் சற்குணா பாக்கியராஜ் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    மொழியியல் மற்றும் பறவைகள் ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவரது கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை வல்லமை வாசகர்களிடம் பெற்றுள்ளன.

    இவரை வாழ்த்திய முனைவர் ராஜம் “இவருடைய கட்டுரைகளின் தனித்தன்மை என்னவென்றால் …

    ‘சங்கப்பாடல்களில் பறவைகள்’ என்று வெறும் விவரிப்புக் கட்டுரையாக (descriptive essay) எழுதாமல் … அந்தப் பாடல்களில் காணும் செய்திகளுக்கும் பறவையியலில் கூறப்படும் செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசி எழுதுவது.

    இவருடைய கட்டுரைகளை ஊன்றிப்படித்தால் சங்கப்பாடல்களில் வலம்வரும் பறவைகளைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.” என குறிப்பிடுகிறார்

    சங்க இலக்கியத்தில் சிட்டுக்குருவி பற்றி இவர் கூறும் கட்டுரை மிக சிறப்பானது

    “————————————பாரி பறம்பின்
    நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
    முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
    இரை தேர் கொட்பின ஆகி, பொழுது படப்
    படர் கொள் மாலை படர்தந்தாங்கு” (ஒளவையார், அகநானூறு: 303: 10௧5)

    இந்தப் பாடலில் ஒளவையார், “பாரியின் பறம்பு மலையிலிருந்து காலை நேரத்தில் குருவிக்கூட்டம் வரிசையாகப் பறந்து, மடிந்திருக்கும் பின்பகுதியை உடைய செந்நெல்லைக் கொண்டுவருவதற்காக இரைதேடி ஒன்று சேர்ந்து இங்கும் அங்குமாகச் சுற்றி, வருத்தம் கொள்ளும் மாலை நேரத்தில், திரும்பிவந்து படர்ந்து நிற்கின்றன” என்கிறார்.

    மேற்கண்ட பாடலில் புலவர் பறவைகள் இரைதேடும் முறையை மட்டும் வர்ணித்துள்ளார். பறவைகளின் பெயர், தோற்றம், நிறம், அலகு, அல்லது கால்களைப் பற்றிய வர்ணனைகள் கொடுக்கவில்லை. ஆகவே படிப்பவர்களின் மனத்தில் இந்தக் குருவிகள் எதுவாக இருக்கலாமென்ற கேள்விகள் எழலாம்.

    இந்தப் பாடலின் விளக்கவுரையில் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் (அகநானூறு: நித்திலக்கோவை, ப்,12) “குரீஇ இனம்- கிளிகளின் கூட்டம்” என்று குறித்துள்ளார். ஆனால், சங்க இலக்கியத்தை ஆராயும் போது புலவர்கள் கிளிகளைக் குரீஇக்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகக் காணப்படவில்லை.

    திரு. பி. எல். சாமி, “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976, ப், 273) என்ற நூலில், “கிளியினத்தைப் பற்றித் தெளிவாகச் சங்க நூல்கள் கூறுவதால் குருவி என்பது கிளியன்று” என்றும், சங்க நூல்களில் வர்ணிக்கப் பட்டுள்ள தினை கவரும் குருவியும், நெல் கவரும் குருவியும் முனியாக் குருவிகளே” என்கிறார். மேலும் அகநானூறு, 303- ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ள நெல் கவரும் குருவிகளை, “The Spotted or the Black Headed Munia” (புள்ளி முனியா அல்லது கருப்புத் தலை முனியா) என்று கொள்ள வேண்டுமென்கிறார்.

    சங்க இலக்கியத்தில் புலவர்கள் சிட்டுக் குருவியை “மனையுறை குரீஇ” (குறுந்தொகை: 46) “உள்இறைக் குரீஇ “(நற்றிணை:181) உள்ளூர்க் குரீஇ” (குறுந்தொகை: 85) என்றும், தூக்கணாங் குருவியை “முதுக்குறை குரீஇ” (நற்றிணை: 366), “தூங்கணம் குருவி” (குறுந்தொகை:374, புறம்:225), என்றும், “Alpine Swift” என்னும் குருவியைக் “குன்றத் திருத்த குரீஇ” ( புறம்: 19) என்றும் குருவிகளை வேறுபடுத்தி வர்ணித்துள்ளனர். வேறு குருவிகளைப் பற்றிய வர்ணனைகள் காணப்படவில்லை.” என்கிறார்

    அறிவியலையும், இலக்கியத்தையும் ஒருங்கிணைத்து எழுதும் வல்லமையாளார் சற்குணா பாக்கியராஜ் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.இவரை விருதுக்கு பரிந்துரைத்த முனைவர் ராஜம் அவர்களுக்கு நம் நன்றிகள்

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (266)

    இந்த வார வல்லமையாளராக சென்னை காவல்துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம்

    போரூரில் சாலையில் வைத்து இளைஞர்களைத் தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வீட்டிற்கே நேரில் சென்று போலீஸார் மன்னிப்பு கேட்டு சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

    சென்னை போரூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேரை மடக்கிய போரூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பாபு என்பவர் அவர்கள் செய்த ஒரு தவறுக்காக சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்ததால் இளைஞர்கள் அவமானத்தால் குறுகி நின்றனர்.

    நட்டநடு சாலையில் பொதுமக்கள் பலர் முன்னிலையில் காவலர் ஒருவர் இளைஞர்களைத் தாக்கும் சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துப் பகிர்ந்தார்.

    இந்த வீடியோ பதிவு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார்.

    விசாரணையில் காவலர் மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீட்டுக்குச் சென்று அந்தக் காவலரை மன்னிப்பு கேட்க ஆணையர் உத்தரவிட்டார்.

    ஆணையரின் உத்தரவை அடுத்து ராமாபுரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீடுகளுக்கு அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் மற்றும் உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் காவலர் பாபுவுடன் சென்றனர். மொத்தமாக போலீஸார் வந்ததைப் பார்த்த பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால் அவர்களிடம் பேச்சுகொடுத்த துணை ஆணையரும், உதவி ஆணையரும் ‘பயப்படாதீர்கள், அன்று நடந்த சம்பவத்தில் எங்கள் காவலர் தவறிழைத்துள்ளார். பாதிக்கப்பட்ட தம்பிகளைப் பார்த்து தனது வருத்தத்தைக் கூறி மன்னிப்பு கேட்க வந்துள்ளார்’ என்று கூறியுள்ளனர்.

    ஒரு கணம் தங்களை மறந்த பெற்றோர் ‘பரவாயில்லை சார்’ என்று கூறியுள்ளனர். இல்லை. சம்பந்தப்பட்ட இளைஞர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க, கமிஷனர் உத்தரவு என்று அதிகாரிகள் கூறி 3 இளைஞர்களையும் அழைத்து வருமாறு கூறினர்.

    பின்னர் அழைத்து வரப்பட்ட இளைஞர்களிடம், அதிகாரிகள் முன்னிலையில் காவலர் பாபு மன்னிப்பு கேட்டு, ‘எதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூற நெகிழ்ந்து போன அந்த இளைஞர்கள் சார் நாங்கள் அதை அன்றே மறந்துவிட்டோம். எங்களுக்கு ஒரு அண்ணன் இருந்து கண்டித்தது போல் எடுத்துக்கொண்டோம் என்று கூறியுள்ளனர்.

    ஆனாலும் காவலர் பாபு, ‘நான் செய்தது தவறுதான், அவர்களை அடித்திருக்கக் கூடாது’ என்று கூற, ‘நாங்கள் தான் சார் தவறு செய்துவிட்டோம் என்று இளைஞர்கள் கூற நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வை பார்த்த அக்கம் பக்கத்தினரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.

    இளைஞர்களுக்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் புத்தகமும், இனிப்புகளும் அளித்த துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் அறிவுரை வழங்கினார். பின்னர், காவலர் பாபுவிற்கு அந்த இடத்திலேயே உதவி ஆணையர் கண்ணன் ஆலோசனை வழங்கினார்.

    காவலரால் தாக்கப்பட்ட இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்படும், அவர்கள் போலீஸாரை விரோதியாகவே பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து போலீஸாருக்கும் பாடமாக, அதே சமயத்தில் இளைஞர்களும் அவர்கள் தவறை உணரும் வண்ணம் அவர்கள் வீட்டிற்கே போலீஸ் உயரதிகாரிகள் சென்று வருத்தம் தெரிவித்தது நெகிழ்ச்சியானதாக அமைந்தது.

    இந்த நல்ல மாற்றம் நாடெங்கும் தொடர கமிஷனர் விஸ்வநாதன் அவர்களின் முன்னுதாரணம் உதவும் எனும் நோக்கில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (249)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக அஜீத் பாய் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அஜித் பாய் அமெரிக்க தகவல் தொடர்புத்துறை (எப். சி சி) தலைவர் ஆவார். இப்பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் எனும் பெருமைக்கு உரியவர். இவரது பெற்றோர் கொங்கணி மொழி பேசுவோர். அஜீத் பாய் பிறந்த ஊர் நியூயார்க்.

    வக்கீல் படிப்பில் தேர்ச்சி பெற்ற அஜீத் பாய் அமெரிக்க டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸில் பணிபுரிந்தார். அதன்பின் 2001ல் வெரிசான் கம்பனியில் சேர்ந்தார். அதன்பின் எப்.சி.சியில் பல்வேறு பதவிகளை வகித்தார். இவரது நிர்வாகதிறமையை பாராட்டி ஒபாமா 2012ம் ஆண்டில் எப்.சி.சி கமிட்டியில் உறுப்பினராக ஆக்கினார். அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதும் அஜீத் பாயை எப்.சி.சி தலைவராக நியமித்தார். இந்த பெருமைமிகு பதவிக்கு நியமிக்கடும் முதல் இந்தியராக அஜீத் பாய் ஆனது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    சுதந்திர பொருளாதார கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட அஜீத் பாய் அரசு இணையத்தில் தலையிடுவதை கடுமையாக எதிர்த்துவந்தார். ஒபாமா அரசு கொண்டு வந்த நெட் நியூட்ராலிட்டி விதிமுறைகள் இணையத்தில் அரசின் தலையீட்டை அதிகரித்து, சுதந்திர இணையம் உருவாவதை தடுக்கும் என நம்பினார்.

    இன்று அஜீத் பாய் வெளியிட்ட அறிவிப்பில் இணைய நெட் நியூட்ராலிட்டி விதிகள் முழுமையாக இரத்து செய்யபடும் என அறிவித்துள்ளார். பொருளாதார நிபுணர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், கருத்துரிமை ஆர்வலர்கள் என பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்து அஜீத் பாயை பாராட்டி வருகிறார்கள்.

    இணையம் சுதந்திரமாக இருப்பதே அனைவரின் கருத்துரிமையையும் உறுதி செய்யும் என்பதால் அஜீத் பாய் எடுத்துள்ள இந்த முடிவு உலகெங்கும் உள்ள கருத்து சுதந்திர ஆர்வலர்களின் சுதந்திரத்தைக் காக்கும் விதத்தில் இருக்கிறது. இன்று நெட் நியூட்ராலிட்டி சட்டம், நாளை வேறு ஒரு சட்டம் என இணையத்தை அரசு நசுக்க முற்படுவது கருத்துரிமைக்கு எதிரான செயலாகும்.

    அஜீத் பாயின் இந்த வெற்றிகரமான முடிவும், அவரது வாழ்வின் வெற்றிக்கதையும் உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என நம்பி வல்லமை  அஜீத் பாயை பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (248)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக முனாப் கபாடியாவை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    பன்னாட்டு கம்பனிகளில் வேலை செய்வது பலருக்கும் ஒரு கனவு. ஆனால் உலகின் மிகப்பெரிய கம்பனியான கூகிளில் பணிபுரியும் ஒருவர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சமோசா விற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் என்றால் அது நமக்கு வியப்பாக தானே இருக்கும்? அதை செய்தவர் தான் முனாப் கபாடியா.

    இது குறித்து தட்ஸ்தமிழ் இணையதளம் கூறுவது என்னவெனில்

    “2015ஆம் ஆண்டு முனாப் கபாடியா எம்பிஏ படித்து முடித்துவிட்டு கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது தாய் நபிசா அவர்களை டிவி முன் தினசரி பார்ப்பதைத் தவிர்க வேண்டும் எனத் திட்டமிட்டு புதிய புட் பிராஜெக்ட்-ஐ தயாரித்தார். கபாடியாக்கள், போஹ்ரி சமூகத்தைச் சார்ந்தவர்கள், இவர்கள் பொதுவாக எச்சில் ஊறும் தின்பண்டங்களைச் செய்வதில் பிரபலமானவர்கள். இதில் முனாப் கபாடியா-வின் தாயார் நபிசா கைதேர்ந்தவர். அம்மா கையால் செய்த உணவு.. தனது உறவினர்கள் மத்தியில் நபிசா உணவு மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக இருந்த நிலையில், இதனை வெளியுலகத்திற்கும் கொண்டு செல்ல முடிவு செய்தார் முனாப். சோதனை முதலில் இந்த முயற்சியை நேரடியாகச் சந்தைக்குக் கொண்டு செல்வதை விட அதனை முறையாகச் சோதனை செய்து பார்க்க முடிவு செய்தார் முனாப்.

    இதன் படி தனது தெரிந்த வெளிநபர்களை இரவு உணவிற்காக அழைத்தார். அப்போது தனது தாய் சமைத்த உணவை அனைவருக்கும் அளித்து அதன் ருசி, மக்கள் கருத்து, சந்தையில் இதன் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றைத் துல்லியமாக்க கணித்தார். அடுத்தக் கட்டமாக அறிமுகம் இல்லாதவர்களைத் தனது தாயின் உணவை ருரி பார்க்க வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இணையத்தில் word of mouth என்ற பிரச்சாரத்தின் மூலம் சில பெண்கள் குழுக்களைச் சாப்பிடத் தனது வீட்டிற்கு அழைத்தார். இதற்கு அவர் நிர்ணயம் செய்த கட்டணம் ஒரு நபருக்கு 700 ரூபாய். இதின் பின்னரே தனது பிராஜெக்ட்-க்கு போஹ்ரி கிட்சென் எனப் பெயர் வைத்தார். உடனே பேஸ்புக்-இல் போஹ்ரி கிட்சென் என்ற பக்கத்தைத் திறந்தார். இதன் பின் தனது தாயைவிடவும் முனாப் மிகவும் பிசியாக இருந்தார். தனது கனவிற்கும் திட்டத்திற்கும் வேலை ஒரு தடையாக இருக்கும் காரணத்தால், கூகிள் போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை செய்தாலும் அதனை விட்டுவிட்டு உணவு சந்தையில் புதிய புரட்சியைச் செய்யக் களமிறங்கினார்.

    இன்றைய நிலையில் இந்த உணவை நீங்கள் ருசிக்க ஆசைப்பட்டால், அதற்கு மூனாப்-ஐ உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவரின் நண்பர்களை யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையாக நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் அந்த அளவிற்கு இவர் தற்போது மும்பையிலே பேமஸ். பிரபலங்கள் தற்போது இவர் வீட்டு உணவகத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் வந்த சாப்பிட்டுள்ள காரணத்தால், இந்திய மீடியா மட்டும் அல்லாமல் உலக மீடியாக்களிலும் இவர் இடம்பிடித்துள்ளார். மேலும் உணவு சந்தையில் இருக்கும் பல இவர் வெற்றியின் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

    தற்போது இவரது போஹ்ரி கிட்சென் தனது டெலிவரி அங்காடியை மும்பையின் வார்லி பகுதியில் திறந்துள்ளது. இந்நிலையில் முனாப் புதிய ரெஸ்டாரண்ட் திறக்குத் திட்டத்தில் தற்போது உள்ளார். மேலும் தனது மார்கெட்டிங் தந்திரத்தையும் யாருக்கும் பயப்படாமல் கூறிய முனாப், போஹ்ரி கிட்சென் என்பதை ஒரு பிராண்டாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். வெற்றி இதுகுறித்து முனாப் கூறுகையில், “போஹ்ரி கிட்சென் திட்டத்தை ஒரு வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் துவங்கவில்லை. இதன் வெற்றியே தற்போது அடுத்தடுத்த வளர்ச்சி திட்டத்திற்கு எங்களைக் கொண்டு சென்றுள்ளது. இந்தப் பிராஜெக்ட் முழுவதும் அம்மாவிற்காகத் துவங்கப்பட்டது, அவளின் எண்ணத்தின் படியே அனைத்தையும் வடிவமைக்கப்பட்டது. இதன் வெற்றிக்கு அம்மா-வின் பார்வையே முக்கியக் காரணமாக உள்ளது”. என்று கூறினார்.

    மேலும் அவர் கடையில் முக்கியமான மற்றும் பிரபலமான உணவு அல்லது தின்பண்டமாகப் பார்க்கப்படுவது மட்டன் சமோசா. இதை விற்பனை செய்வதற்காகலவே கூகிள் வேலையை விட்டுவிட்டு அதில் வெற்றிப் பெற்றுள்ளார் முனாப். பிராண்ட் அம்பாசிட்டர்.. எங்களுடைய வர்த்தகத்திற்கு அம்மா (நபிசா) தான் பிராண்ட் அம்பாசிட்டர் என முனாப் கூறினார். சாப்பிட வீட்டுக்கு வரும் அனைவரும் வயிறு நிறைந்து மகிழ்ச்சியுடனும், புன்னகையுடனும் செல்கின்றனர். இதுதான் எங்களின் வெற்றி. பேஸ்புக் இவ்வளவு பிரபலம் ஆன பின்பும் முனாப், போஹ்ரி கிட்சென் பேஸ்புக் பக்கத்திற்கு ஒரு வாரம் 700 ரூபாய் செலவு செய்து புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பன்னாட்டு கம்பனி வேலையை விட்டுவிட்டு சுயதொழில் துவக்கி பலருக்கும் வேலைவாய்ப்பை அளித்த சாதனையாளரான முனாப் கபாடியாவை பாராட்டும் விதத்தில் அவருக்கு இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர் (247)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக மலாலா யூசுப்சையிவை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    மலாலா யூசுப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் பிறந்தார்.  இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்லக்கூடாது என தலிபான் அமைப்பு தடை விதித்திருந்தது. தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும்  தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார். இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாகிஸ்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

    மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது. இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவில் குடியேறினார் மலாலா. இவரது 17ம் வயதில் 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.

    இவ்வருடம் இவருக்கு இன்னொரு சிறப்பும் கிடைத்தது. தன் மேல்படிப்புக்காக உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்பர்டு பல்கலைகழகத்தில் சேர இவருக்கு சீட்டு கிடைத்தது. அத்துடன் இவ்வாரம் “மலாலாவின் மேஜிக் பென்சில்” எனும் நூலையும் எழுதி வெளியிட்டார். குழந்தைகளுக்கான இந்த நூலை இவர் வெளியிட்டது பெண்கல்விக்கு உதவும் வண்ணம் இருப்பதால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    பெண்கல்வி, பெண்முன்னேற்றம், பழமைவாத மூடநம்பிக்கைகளை சாடல் என பெண்களின் முன்னேற்றத்தின் சின்னமாக திகழும் செல்வை மலாலாவை பாராட்டி இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. மலாலா போல பெண்கல்விக்கு பாடுபட அனைவருக்கும் இது ஊக்கம் அளிக்கும் என வல்லமை நம்புகிறது.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    நன்றி

    https://ta.wikipedia.org/wiki/மலாலா_யூசப்சையி

    Share
  • இந்த வார வல்லமையாளர் (246)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் பா.ராகவன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

    அமுதசுரபி, தாய் இதழ்களில் இவரது எழுத்துலக பயணம் துவங்கியது. அதன்பின் கல்கியில் துணையாசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து ‘ஜங்ஷன்’ என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பாசிரியராக ஓராண்டுகாலம் பணியாற்றினார். அதன்பின் பத்திரிகைப் பணியிலிருந்து விலகி பதிப்புத்துறைக்கு வந்த இவர், தற்போது நியூ ஒரைசன் மீடியா நிறுவனத்தின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். சில தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் இவர், இப்போது திரைப்படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

    வாணி ராணி தொடரின் வசனகர்த்தாவாக அத்தொடரின் 1400வது எபிசோடை இவ்வாரம் எழுதிமுடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். பாரதிய பாஷா பரிஷத், இலக்கியபீடத்தின் சிறந்த நாவலாசிரியர் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

    மாய வலை, பாக், ஒரு புதிரின் சரிதம் போன்ற நூல்களை எழுதினாலும் இவரை அனைவரும் திரும்பிப்பார்க்க வைத்தது “நிலமெல்லாம் இரத்தம்” தொடர்தான். இஸ்ரேலிய வரலாற்றை பைபிள் காலம் துவங்கி தற்போதைய பாலஸ்தின பிரச்சனை காலகட்டம் வரை எழுதிய நூல் இதற்கு முன்னரும், பின்னரும் தமிழில் இதுவரை வந்ததில்லை எனலாம்.

    அதன்பின் இவரது டாலர்தேசம் எனும் அமெரிக்காவின் வரலாற்றை சொல்லும் தொடரும் வெளிவந்து பெருத்த வெற்றியை அடைந்தது. இவை நூல்களாக வெளிவந்தும் பெருவெற்றி பெற்றன. அவ்விதத்த்தில் தமிழின் மிகச்சிறந்த வரலாற்று நூல் ஆசிரியர்களில் ஒருவர் என இவரை கருதலாம்.
    இவரைப்பற்றி பொதுமக்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று உண்டு. அது இவர் ஒரு சிறந்த சமையல் கலைஞர் என்பதே. பனீர் டிக்கா சில்லி பனீர் , காய்கறிபொறியல், அவியல் என சமையலை கற்றுக்கொண்டு அதில் இவர் காட்டும் நளபாகம் அனைவரையும் வியக்கவைக்கும். இவரது முகநூல் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த இவரது நளபாகத்திறனை உலகுக்கு தெரிவிக்கும் விதம் ருசியியல் எனும் தொடரை தமிழ் இந்து பத்திரிக்கையில் எழுதி வாசகர்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தார்.

    ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் எழுதிய பொலிக, பொலிக எனும் இராமானுஜ முனிவரின் வாழ்க்கைசரிதம் நூலாக வந்து வெற்றிபெற்றது.

    இவரது முகநூல் பதிவுகள் பலவும் இவரது நூல்களை மிஞ்சும் அளவு சுவாரசியத்துடன் இருக்கும். புறாவை பிடித்த பூனை பற்றிய இப்பதிவு அதற்கு ஒரு உதாரணம்.

    “இன்றைய காலை நடையின்போது ஒரு காட்சியைக் கண்டேன். இந்தக் கணம் வரை கண்ணையும் மனத்தையும்விட்டு நகராத காட்சி.

    நான் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தை மொத்தமாக ஒரு சுற்று சுற்றி வந்தால் 618 தப்படிகள் காட்டும். மித வேக நடையில் தோராயமாக அதற்கு ஆறு நிமிடங்கள் பிடிக்கும். பொதுவாக நான் இந்த நீண்ட நடை வட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில்லை. வளாகத்திலேயே அறுபத்து ஐந்து தப்படிகள் வரக்கூடிய அளவுக்கு ஒரு சிறு ரவுண்டானா உண்டு. அதில்தான் நடப்பேன். நீள் நடையைக் காட்டிலும் சிறு வட்ட நடையில் அதிக கலோரி எரிக்கப்படுகிறது என்பது என் பிரத்தியேக ஆய்வுத் தீர்மானம். [இது அறிவியல்பூர்வமானதோ இல்லையோ, எனக்கு இதுதான் சரிப்பட்டு வருகிறது.]

    நிற்க. இன்று ஒரு மாறுதலுக்கு மூன்று சுற்றுகள் நீள்நடை போகலாம் என்று முடிவு செய்தேன். அதாவது சுமார் இரண்டாயிரம் தப்படிகளுக்கு நீண்ட நடை.

    முதல் சுற்று முடியும்போது வளாகத்தில் எப்போதும் சுற்றி வரும் பூனையொன்றைக் கண்டேன். முன்னூறு குடும்பங்கள் உள்ள வளாகத்தில் இதற்கு உணவுப் பிரச்னை இராது என்று எப்போதும் நினைத்துக்கொள்வதையே இன்றும் நினைத்துக்கொண்டு நடந்தேன்.

    மேலே படபடவென்று புறாக்கள் சிறகடித்துக்கொண்டன. காலைப் பொழுதில் புறாக்களின் புறப்பாட்டைக் கவனிப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவற்றின் சுறுசுறுப்பு, காகங்களிடமும் காண முடியாதது. கொத்தாக பத்து சன் ஷேடுகளின்மீது நூறு புறாக்கள் அமரும். ரெடி ஒன் டூ த்ரீ சொல்லி சொய்யாவென்று எம்பிப் பறக்கத் தொடங்கும். ஒரு நீரூற்று பீய்ச்சியடிப்பது போல.
    முன்னூறு குடும்பங்கள் உள்ள வளாகத்தில் இப்புறாக்களுக்கு தானியம் வைப்போர் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. என் மனைவி தினமும் சமையலறை ஜன்னல் திறந்து ஒரு தட்டு சாதம் வைப்பார். சமர்த்தாக நேரத்துக்கு வந்து சாப்பிட்டுப் போகும் புறாக்கள் சிலவற்றை நானறிவேன். உணவு வைக்கும் மனித உயிர்களிடம் பறவைகள் காட்டும் பிரியம் மகத்தானது. உண்டு முடித்ததும் அவை எழுப்பும் ஒரு வினோதமான ஒலியில் நன்றியை உணர முடியும். மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

    இன்றைய எனது இரண்டாவது சுற்று நடையின்போது சன்ஷேடுகளில் புறாக்களின் அணிவகுப்பு நிகழ்ந்து முடிந்திருந்தது.

    ரெடி ஒன் டூ த்ரீ.

    படபடவென்று சிறகுகளை அடித்துக்கொண்டு அவை உயரே எழும்பிப் பறக்கத் தொடங்கின. ஒரு கணம் நின்று அண்ணாந்து பார்த்து ரசித்தேன். பறக்கத் தொடங்கிய ஒரு புறாவுக்கு என்ன தோன்றியதோ, சரேலென்று அறுபது, எழுபது டிகிரி சரிவில் தரையை நோக்கிச் சீறி வந்தது. அதன் கண்ணில் அங்கு ஏதோ தானிய மணிகள் பட்டிருக்க வேண்டும்.

    அதனைக் கொத்திக்கொண்டு அது மீண்டும் மேலேறிப் பறக்க ஓரிரு வினாடிகள்கூடப் பிடிக்காது. ஆனால் அந்த ஓரிரு வினாடிகளுக்குள்தான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது.

    புறா கீழே பாய்ந்து வந்து தானியத்தைக் கொத்திய அதே கணத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த பூனை ஒரே கவ்வாக அதன் கழுத்தைக் கவ்வியது.

    துடித்துவிட்டேன். ஒரு வீராவேசம் வந்து ஏய் என்று கத்திக்கொண்டு நான் அதை நோக்கி ஓடுவதற்குள் கவ்விய புறாவைத் தூக்கிக்கொண்டு பூனை ஒரு காருக்கு அடியில் பாய்ந்தது.
    எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. புறாவின் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருந்தது. அது தினசரி ஜன்னலில் உண்டு முடித்துவிட்டு நன்றி சொல்லும் குரல் அல்ல. அடி வயிற்றில் இருந்து எழுந்த அவல ஓலம். தனது இறுதி மூச்சை விடப் போகிற பதற்றத்தில் அதன் சிறகுகள் படபடவென்று அடித்துக்கொண்டன.

    காருக்கடியில் குனிந்து பூனையை விரட்டப் பார்த்தேன். எடுத்து எறிய ஏதேனும் கல்லோ வேறு பொருளோ கிடைக்குமா என்று தேடினேன். ஒரு வாட்டர் பாட்டில் கிடந்தது. அதை எடுத்து விட்டெறிந்தேன். பூனை உடனே அடுத்த காரின் அடியே ஓடி மறைந்தது. கீழ்த்தளம் முழுதும் கார்கள். குறைந்தது இருநூறு, இருநூற்றைம்பது கார்கள். அந்தப் பூனை சரியான மறைவிடத்தைத்தான் தேர்ந்தெடுத்திருந்தது. என்னால் ஒவ்வொரு காருக்கு அடியிலும் குனிந்து விரட்டுவதென்பது இயலாத காரியம். தவிர ஒவ்வொரு முறையும் அந்தத் தண்ணீர் பாட்டிலையும் பொறுக்கி எடுத்து எறிய வேண்டும். நடக்கிற கதை இல்லை என்று தோன்றியது.

    பதற்றத்தில் செக்யூரிடியை அழைத்து விவரம் சொன்னேன். எப்படியாவது அந்தப் பூனையை வெளியே கொண்டு வாருங்கள். அதன் வாயில் கவ்வியிருக்கும் புறாவுக்கு விடுதலை கொடுக்கப் பாருங்கள்.

    அவரும் தம்மாலான முயற்சிகளைச் செய்து பார்த்தார். ஆனால் அந்தப் பூனை பிடிபடவேயில்லை. கவ்விய புறா கதறக் கதற அதன் கழுத்தைக் குதறியெடுத்தபடி அது ஓடியேவிட்டது.
    எலியை உண்ணும் பூனையை அறிவேன். புறாவைத் தின்னுமா?

    தானியத்துக்காகப் புறா தேடிக் கிளம்பியது எத்தனை சரியோ, அதே அளவு தனது உணவைத் தேடியடைந்த பூனை செய்ததும் சரியே. ஆனாலும் அடித்துத் தின்பதை உணர்ச்சிவசப்படாமல் பார்க்க முடியவில்லை. சுய உணர்வின்றி வாட்டர் பாட்டிலைத் தேடியெடுத்து அதன்மீது நாலைந்து முறை விட்டெறிந்த என் கோபத்தை எண்ணிப் பார்த்தேன். பிறகு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.
    இயற்கையை அதன் அனைத்து குணாதிசயங்களுடனும் ஏற்கும் மனம் எனக்கில்லை. இந்த ஜென்மத்தில் அது வரவும் வராது என்று தோன்றுகிறது.

    இன்று மதியம் என் மனைவி ஜன்னல் திறந்து சாப்பாடு வைக்கும்போது என் ஒரு சொட்டுக் கண்ணீர்த்துளியைச் சேர்த்து வைப்பேன். உண்ண வரும் புறாவுக்கு அது நிச்சயம் புரியும்.”

    தமிழ்மண்ணின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பா.ராகவன் அவர்களுக்கு அளிக்கும் இந்த விருதானது அவரைப்போல் சுவாரசியமாக எழுத இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என வல்ல்மை நம்புகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (245)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக தொழிலதிபர் திரு குமார் துரைசாமி அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    குமார் துரைசாமி அவர்களின் சொந்த ஊர் திருப்பூர். பின்னலாடை தொழில் செய்து வருபவர். டாலர் சிட்டி என பெயர் பெற்றிருந்தாலும் சுற்றுச்சூழல் பிரச்சனை திருப்பூரை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தினமலர் நாளிதழ் மற்றும் தமிழக வனத்துறை ஆகியோர் உதவியுடன் திருப்பூர் மாநகர மக்கள் இணைந்து வனத்துக்குள் திருப்பூர் எனும் ஒரு முயற்சியை முன்னெடுத்தனர்.

    இதன்படி அப்துல்கலாம் ஐயா அவர்கள் கனவை நிறைவேற்றும் வகையில் திருப்பூர் எங்கும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகளில் மரக்கன்றை நட்டுவிட்டுப் போய்விடுவார்கள். மரம் விரைவில் பட்டுப்போய்விடும். ஆனால் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினர் மரங்களை நடுவதுடன் நில்லாமல் அவற்றுக்கு தினமும் தண்ணீர் லாரிகளை கொண்டு நீர் பாய்ச்சி மரங்களை கண்காணித்து வளர்த்தார்கள்.

    பல தனியார் நிறுவனங்கள், கம்பனிகள் ஆகியோரை தொடர்புகொண்டு தொழிலகங்களின் நிலங்களில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டுகோள் விடுத்தார்கள். திருப்பூர் தொழிலதிபர்களும், பொதுமக்களும் இதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உதவி செய்தார்கள். சில ஆண்டுகளில் இது திருப்பூரா, கானகமா எனக் கேட்கும் அளவு திருப்பூர் பசுமை பொருந்திய மாநகர் ஆகிவிட்டது.

    இரண்டுகட்டமாகத் துவங்கிய இத்திட்டம் 1 .40 இலட்சம் மரங்களை நடுதல் என்ற இலக்குடன் ஆகஸ்ட் 15 ‘2017 அன்று மூன்றாம் கட்டமாக விரிவடைந்தது. இரு மாதங்களில் 75 ,000 மரக்கன்றுகள் நிறைவு பெற்று இலக்கின் பாதியை எட்டவுள்ளது.

    இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் தலைவரும் ஆன தொழிலதிபர் குமார் துரைசாமி அவர்கள் இது குறித்து கூறுகையில் “இன்றைய வனத்துக்குள் திருப்பூர் 3.0 நிகழ்வின் வெற்றி அனைவருக்கும் மகிழ்வளிக்கிறது. குக்கிராமமாக இருந்த இந்த திருப்பூர் இன்று மாவட்டத் தலைநகராக உருவெடுத்துள்ளதென்றால் அதற்கான முழு காரணம் உழைப்பு மட்டுமே, இன்றைய முதலாளிகள் அனைவருமே நேற்றைய தொழிலாளிகள், உழைக்கும் வர்க்கம் இல்லையென்றால் இந்த ஊரின் வளர்ச்சி கேள்விக்குறியே, பல்வேறு இன்னல்களை இந்த நகரம் குறிப்பாக பின்னலாடை தொழில் சந்தித்தபோதெல்லாம் அனைவரோடும் தோளோடு தோள்கொடுத்து வளர்ச்சியை சீராக்கிய பங்கு இங்குள்ள தொழிலாளர்களையும் அவர்கள் சார்ந்த அனைத்து தொழில்சங்கங்களையும் சாரும்.
    தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் எங்கள் கரங்களை கோர்ப்போம்” எனக் கூறினார்.

    மரங்களை நடுவதுடன் நில்லாமல் நீர்நிலைகளை மேம்படுத்தவும் இவ்வமைப்பு பாடுபட்டு வருகிறது. இது குறித்து பேசிய குமார் துரைசாமி அவர்கள் “தான் உண்பதைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் தொகுத்துக் கூறிய அரங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த அறமாகும்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப வாழாமல் தொடர்ந்து தான் வாழ பிற உயிர்களை தெரிந்தும் தெரியாமலும் அழித்து வந்ததால் ஏற்பட்ட வினையின் நீட்சி பருவமழை பொய்த்தல், அதன் விளைவாக நீர் நிலைகள் அழிந்து அதன் ஆதாரத்தில் வாழ்ந்த பல்வேறு உயிரினங்கள் அழிந்து அதன் காரணமாக ஏற்பட்ட இயற்கைக்கு முரணான நிகழ்வுகள், விழித்துக்கொண்ட தருணத்தில் இயற்கையைக் காக்கவும் மீட்கவும் இயன்ற அளவு,  தலைப்பட்டு வருகிறோம். அந்த வகையில் எங்கள் வெற்றி அமைப்பு திருப்பூர் மக்களோடு இணைந்து நீர்வழித் தடங்களை செப்பனிட்டு தூர்வாரிய ஆண்டிபாளையம் குளத்தில் பல்வேறு உயிரினங்கள் மீண்டும் வாழத் துவங்கி பதிமூன்று ஆண்டுகள், படத்தில் காண்பது ஆண்டிபாளையம் குளத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் விருந்தாளிகள், குளத்தின் நடுவே செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இரண்டு தீவுகளில் சர்க்கரை பழம் உள்ளிட்ட பல்வேறு சிறு பழங்களை தரும் மரங்களை நட்டோம், நன்கு வளர்ந்துள்ள இந்த மரங்களில் ஏராளமான பறவையினங்கள் வசிக்கின்றன. காலையிலும் மாலையிலும் அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

    மாணிக்கபுரம் குளம், மூளிக்குளம், வேட்டுவப்பாளையம் குளம், அவிநாசி தாமரை குளம் என மாவட்டத்தின் பல்வேறு குளங்கள் பல்வேறு அமைப்புகளால் குறிப்பாக இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து தூர் வாரப்பட்டு பருவமழையின் காரணமாக நிரம்பியுள்ளது, அங்கெல்லாம் பல்வேறு உயிரினங்கள் மறுவாழ்வு பெற்றுள்ளன, பறவை இனங்கள் வந்த வண்ணம் உள்ளன, நாளது தேதியில் பல்வேறு அமைப்புகள் மாவட்டம் முழுவதும் மரங்களை நடுவது, அதனை பராமரித்து வளர்ப்பது, நெகிழி ஒழிப்பு, குப்பை மற்றும் கழிவு நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு என ஒரு எழுச்சியுடன் இளைஞர்கள் செயலாற்றுகிறார்கள்.

    இன்னும் 10 வருடங்களில் நிச்சயம் திருப்பூர் மிகப் பசுமையான மாவட்டமாக உருவெடுக்கும் நிலப்பரப்பில் 34 % மரங்கள் , 50 அடியில் நிலத்தடி நீர், நீர் மேலாண்மை , மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் மேலாண்மை உள்ளிட்ட இயற்கை சார்ந்த அனைத்து பிரிவுகளிலும் முன்னோடியாகத் திகழும் , வலிமையான, வளமான, பசுமையான இந்திய தேசத்தை கட்டமைக்க திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் நிச்சயம் முன்னோடியாக இருப்பார்கள்” என்றார்

    திருப்பூர் வணிகத்துக்கு மட்டுமல்ல, சுற்றுசூழலிலும் இந்தியாவுக்கே முன்னோடி என்பதை உணர்த்தும் வகையில் செயல்படும் வனத்துக்குள் திருப்பூர் மற்றும் வெற்றி அமைப்புகளை பாராட்டும் வகையில் குமார் துரைசாமி அவர்களை வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை இதழ் மகிழ்ச்சி அடைகிறது. இவரை கண்டு தற்கால இளைஞர் சமூகம் சுற்றுசூழல் மேம்பாட்டில் ஆர்வம் காட்டவேண்டும் என வல்லமை விரும்புகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (243)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளாராக சவுமியா சாமிநாதன் அவர்களை மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுக்கிறோம். இப்பரிந்துரையை அளித்தவர் வல்லமை நிறுவனர் திரு அண்ணா கண்ணன் அவர்கள் ஆவார்கள்.

    சவும்யா ஒரு குழந்தைகள் நல மருத்துவர். இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என அறியப்படும் எம்.எஸ் சாமிநாதனின் மகள். 30 ஆண்டுகள் மருத்துவத்துறையில் பணியாற்றி இந்திய மெடிக்கல் கவுன்சிலின் தலைவராக பணீயாற்றுகிறார். சுகாதாரதுறையின் ஆய்வுத்துறை செக்ரட்டரியாகவும் பணியாற்றுகிறார்.

    இதன்மூலம் உலக சுகாதார மையத்தின் பல அமைப்புகளில் பணிபுரிந்தார். டிபி. எச்.ஐ.வி ஆகிய நோய்களின் தடுப்பில் முக்கிய பணீயாற்றினார். யுனிசெப், உலகவங்கி ஆகியவற்றின் பல கமிட்டிகளில் பணீபுரிந்தார்

    இவ்வாரம் அவர் உலகசுகாதார மையத்தின் திட்டங்களுக்கான துணை இயக்குனர் ஆக நியமிக்கபட்டுள்ளார்.

    “தனக்கு கிடைத்த இவ்வாய்ப்பு இந்தியாவுக்கு அளிக்கபட்ட கவுரமாக” கருதி செயல்படுவதாக சவும்யா பேட்டி அளித்தார்

    இந்தியாவின் புகழையும், இந்திய மருத்துவர்களின் திறமையையும் ஹைலைட் செய்யவும், சேவை பணியில் அனைவரையும் ஈடுபட வைக்கவும் வேண்டிய ஊக்கத்தை சவும்யாவின் தேர்வு அளிக்கும் என வல்லமை நம்பி அவரை வல்லமையாளராக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது

    வல்லமையாளர் சவும்யா சாமிநாதனுக்கு நல்வாழ்த்துகள்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share