Tag: கவியோகி வேதம்

  • ஊறுகிற குஷி

    ஊறுகிற குஷி

    கவியோகி வேதம் 

    “ஊறுகாய்?’ என்றாள்—ஊறியது குஷியும்!!
    ஊறுதே அம்மாவின் அன்றைய நினைவுமே!!
    ஊறுகிற நாக்கில் அவள்செய்த நெல்லிபதம்
    ஓட்டியது வயிற்றுளே கற்சட்டிச் சாதமே!

    தயிர்சாதம் என்றால் எலுமிச்சை, மிளகாய்
    தழைந்த இஞ்சியுடன் இட்டாலே போதுமே!
    அயனான பொங்கலும் மாகாணி ஊறுகாயின்
    அடிதொட்டால், நாக்கில் அப்படியே செல்லுமே!

    எண்ணெய் மாங்காயாம் கார  ஊறுகாய்!
    எந்தஓர் விருந்திலும் நண்பரைக்  கூட்டுமே!
    துண்டுபல கடித்தே சுவைத்து ரசிப்பமே!
    தூயசின்னப்   பிள்ளைகளாய்   மாறியே   நிற்பமே!

    வடுமாங்காய் என்றாலே  எச்சில்  வழியுமே!
    வக்கணையாய் எச்சாதமும் நிறையப் போகுமே!
    கொடுகொடு எனப்பாலர் கைகள் நீட்டியே
    கொட்டமடித்  துண்ணஒரு ஜமா சேருமே!!

    மாகாணி என்ற ஒரு  அதிசய  ஊறுகாய்!
    மாகாளி  நேர்வரினும்  எங்கே? என்பாளே!!
    வேகாத வெயிலிலும் சாதம் கூடையாய்
    வெட்டிடவே காரமுடன் நாக்கில் நிற்குமே!

    நெல்லிக்காய்  ஊறுகாய் நாவிலே   ஊறுமே!
    நிறையவே  மனத் தினில் உற்சாகம் சேருமே!
    கொல்லுமந்த  கோங்குரா சட்னி என்றாலே
    கொண்டுவா  ஒருசட்டி  சாதம்  என்னுமே!

    எத்தனையோ  விதமாந்தர்  தமிழ் நாட்டில்  உண்டடா!
    எத்தனையோ ஊறுகாயும்  ருசிப்பதற்கே –  உண்டடா!
    அத்தனையும்  தாய்மார்தம்  கற்பனையின் சுவையடா!
    அன்னையின் கைகளுக்கே  தனிருசி  உண்டடா!

    Share
  • உள்ளே.. உள்ளே!

    உள்ளே.. உள்ளே!

    கவியோகி வேதம்

    வானம் வரையும் ஓவியத்துள்-ஒரு
    மயக்க மருந்தே இருக்குதப்பா!
    மோனம் சொல்லும் சொற்களுக்குள்-ஒரு
    முனிவன் இருத்தல் தெரியுதப்பா!

    விண்ணில் புகையும் முகிலுக்குள்-ஒரு
    விருந்தே சமைதல் புரியுதப்பா!
    மண்ணில் அதுவே கர்ப்பமப்பா!-அது
    மனிதன் உணவாய்ப் பிறக்குதப்பா!

    இழையும் காற்றில் ரகசியத்தை-நம்
    “எடிஸன்’ கண்டான்! விளக்காச்சு!
    நுழையும் ஒலியைப் பிசைந்திடவும் -அது
    நுட்பக் கணினி என்றாச்சு!

    ஆம்!
    மனமே எழுத்தின் கருவூலம்!-அதில்
    வார்த்தைக் கவிதை ஒருஜாலம்!
    இனிப்பின் உள்ளே பலபுரட்சி!-நீ
    இதனை ஆய்ந்தால் வரும்மிரட்சி!

    ‘உள்ளே பார்த்தல்’- ஓர்அறிவாம்!-அதில்
    உண்மை ஒளிரும்! கண்டறிவாய்!
    உள்ளே என்றும் நான்உள்ளேன்-கூட
    ஒருவன் உள்ளான்! கண்டுகொண்டேன்!

    Share
  • கற்பனைத் தேரேறி கவலையை ஓட்டு!

    கற்பனைத் தேரேறி கவலையை ஓட்டு!

    கவியோகி வேதம்

    கற்பனைத் தேரில்நீ பறந்து சென்றால்
    கவலையும் உன்னைவிட் டோடி டாதோ?
    அற்பமாம் வேதனை முட்கள் எல்லாம்
    அந்தஓர் தேர்மூலம் மாய்ந்தி டாதோ?

    விண்ணில்உன் கற்பனை பாய்ந்து சென்றால்
    மேவிடும் காட்சிகள் இன்பமன்றோ?!-மனக்
    கண்ணிலே தென்படும் அமுதக் குடம்உன்
    கவலை- அசுரரை மாய்க்குமன்றோ!

    வளைந்துமே விண்ணிலே ஓடும்அந் நாரையும்
    மாயைய டாஇந்த உலகம் என்னும்!
    உளையும்உன் எண்ணமாம் குப்பை எல்லாம்
    ஒன்றாகிச் சொற்களுள் தேய்ந்து விடும்!!

    கவிதையாம் வானில்நீ பார்க்கலையோ அந்தக்
    கந்தர்வன் ரம்பையைத் தழுவுவதை?-
    புவியைத் தொடப்போம் இருள்முகிலும் உன்னில்
    புதுமையாம் சொற்களை விதைப்பதுவை?

    அம்பிகை உன்னையிங் கழைப்பதுவை உன்றன்
    அமுதக் கவிதையால் கண்டுவிடு! –(இந்த)
    வம்புக்க ரோனாஉனைப் பார்க்கும் முன்-அந்த
    மாயக்கைக் குள்ளே ஒளிந்துவிடு!

    Share
  • ஏமாறாதே ஜாக்கிரதை!

    ஏமாறாதே ஜாக்கிரதை!

    கவியோகி வேதம்

    வானவில்லின் நாணறுந்து
    வர்ணமெல்லாம் மறையுதே!!
    நீநினைக்கும் கடல்ஓலம்,
    நிமிடத்தில் மாறுதே!!
    ஞானச்சுட ர்  ‘வாசல்’
    நாணமின்றி ஏய்க்குதே!
    கூனல் மயக்கத்தில்-அட!
    குனிந்தேநீ விழுவயோ!
    ஈன‘அகம்’ அகற்றிநீ
    ஈசனை“உள்” பூட்டுவாய்!

    சட்டிசுட்ட  பின்னுமிந்தச்
    சட்டையுடல்  காவலா?
    விட்டகுறை  வினையெல்லாம்
    விலகுமோ மானிடா?
    சட்டுவ- விவாதத்தால்
    சரியாமோ உன் ‘பாவம்’?
    முட்டைவிட்டுக்  குஞ்சுவரும்;
    முன்மயக்கம் தீர்ந்துவிடும்!

    பட்டணத்துச்  சாமிவந்து
    பற்றவைத்த  தீயடா-(*உன்னுள்)
    பத்ரகிரி  மயங்கிப்போய்
    பற்றுவைத்த  ஓடடா!
    பட்டுப்பட்டும் மாறுமோ-
    பாழுமனப் பேயடா?-(உன்)
    பட்டினியில், பத்தியத்தில்
    பயந்திடுமோ விதி-யடா?

    சாட்டைக்கோர்  விதியுண்டே,
    பம்பரம் சாட்சியடா!
    சாதகமும் உனைப்பற்றிச்
    சாற்றுவது கேளடா!
    நீட்டிப் படுத்துவிட்டால்
    நீயும்அங்கு நெருப்படா!(அவன்!)
    நிச்சயித்து விட்டாலோ
    நினக்கில்லை மண்ணடா?

    Share
  • முதலுக்கே மோசம்

    கவியோகி வேதம்

    சிற்பியின் கைகள் நடுங்குமெனில்
       சிலைகளும் எவ்வா றுருவாகும்?
    கற்பவன் கல்வி சிறந்திடுமோ,
       கற்பிப்ப வனுமே அரக்கனெனில்?
    கற்பிலா மாதர் தலைவியெனில்
       கன்னலாய் ஆட்சி நடப்பதெங்கே?
    சொற்களும் இவைபோல் சக்திபெறா,,
       சொலும்காப் பியமே ‘சக்கை’எனில்!

    கதிரவன் சக்தி வராநிலத்தில்
       கனிதராப் புல்லும் முளைப்பதில்லை!
    முதியவர் ‘சோடை’- போம்ஊரில்
       முன்னேற் றமென்றும் இருப்பதில்லை!
    சுதிகளே சேரா வீணைகொண்டால்
       ‘சுக’மெனும் வார்த்தைக் கர்த்தமில்லை!
    கதியிலா ஏழை வாழ்வதெங்கே?
       கருணையே பாயா ஆட்சிதன்னில்!

    பயிற்சியே செய்யா சோம்பல்மனம்
       பகுத்தறி புத்தி கொள்வதில்லை!
    அயற்சியில் உழலும் நெஞ்சத்தில்
       அற்புத ‘ஸித்தி’ வருவதில்லை!
    வயிற்றினில் அடிக்கும் சீமான்கள்
       வாழ்வதும், ”சொல்லும்” தரமில்லை!
    கயிற்றினில் மாயை வாழ்வு‘கட்டும்’
       கடவுளே! உனையான் விடுவதில்லை!

    Share
  •  முதலுக்கே மோசம்!

    கவியோகி வேதம்

    சிற்பியின் கைகள் நடுங்குமெனில்

        சிலைகளும் எவ்வா றுருவாகும்?

    கற்பவன் கல்வி சிறந்திடுமோ,

        கற்பிப்ப வனுமே அரக்கனெனில்?

    கற்பிலா மாதர் தலைவியெனில்

        கன்னலாய் ஆட்சி நடப்பதெங்கே?

    சொற்களும் இவைபோல் சக்திபெறா,,

        சொலும்காப் பியமே  ‘சக்கை’எனில்!

    .

     கதிரவன் சக்தி வராநிலத்தில்

         கனிதராப் புல்லும் முளைப்பதில்லை!

     முதியவர்  ‘சோடை’- போம்ஊரில்

         முன்னேற் றமென்றும்  இருப்பதில்லை!

     சுதிகளே சேரா வீணைகொண்டால்

         ‘சுக’மெனும் வார்த்தைக் கர்த்தமில்லை!

      கதியிலா ஏழை வாழ்வதெங்கே?

          கருணையே பாயா ஆட்சிதன்னில்!

    .

    பயிற்சியே செய்யா சோம்பல்மனம்

       பகுத்தறி புத்தி கொள்வதில்லை!

    அயற்சியில் உழலும் நெஞ்சத்தில்

        அற்புத  ‘ஸித்தி’ வருவதில்லை!

    வயிற்றினில் அடிக்கும் சீமான்கள்

       வாழ்வதும், ”சொல்லும்” தரமில்லை!

    கயிற்றினில் மாயை வாழ்வு‘கட்டும்’

       கடவுளே! உனையான் விடுவதில்லை!

    Share
  • குளிர்ச்சியின் கொழுந்து நான்; நெருப்பன்று!

    கவியோகி வேதம்

     

     

    குளிர்ச்சியின் கொழுந்தை உறிஞ்சிட என்றன்
    கொடிய மனமும் தாபமுறும்;.
    தளிரின் மென்மையைக் கவிச்சொல்லில் புகுத்திடத்
    தவிக்கும் நெஞ்சமும் வேகமுறும்;.
    நெளியும் பாம்புகள், நிமிரும் விதைகள்-என் 
    நேசம் கலந்த நுண்உயிர்கள்;
    களிப்பைச் செய்யும் ப்ரம்மனின் கைகள்-என்
    காவல் மந்திரம் உணருங்கள்!.

    வெட்ட வெளியினில் கொட்டிக் கிடக்கும்
    விந்தையும் நரம்பினில் உள்ளதடீ!
    கட்டப் படுமுன் பட்டிடும் ஓலமும்
    கர்வ மனத்துள் அடங்குதடீ!
    கொட்டும் மழையும் வெட்டும் அலையும்
    கொஞ்சமும் வெளியில் இல்லையடீ!
    நிட்டை வரணுமா? சட்டென மனக்கண்
     நிச்சயம் அதனில் ஒடுங்குதடீ!

    கள்ள மனஎண்ணம் என்முன் நிற்கையில்
    கருப்பாய்ப் பொடிந்தே பொசுங்குமடீ!
    வெள்ளம் எனஒரு வேதனை பிறக்கையில்
    விரல்கள் தடவிட மறையுமடீ!
    சள்ளைக் குமுறலும் தடுக்கும் புலம்பலும்
    சட்டெனக் கண்முன் நசுங்குமடீ!
    கொள்ளை கொள்ளையாய்த் துர்க்கை சிரிக்கிறாள்!
    குலவத் தொல்லைகள் வருமோடீ?
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

    Share
  • கடலுள் ஒரு மொக்கு விரியும்போது!

    -கவியோகி வேதம்

    நான்இதோ வந்தேன் என்று
    நறுவிசாய் மலர்ந்து பொங்கி
    தேன்‘கொணர்’ என்றே  மொட்டைத்
    தேர்ந்துபின்  நிமிர்த்தும் காலை!

    ஒளித்தது நேற்று கடலென்
    றொப்புதல் வாக்கு செய்து
    களிப்புடன் கதிரோன்  சிரிக்கக்
    கால்களைப் பரப்பும் காலை!

    வண்டுகள் முனகிப் பாயும்!
    வாசமது நுகர்ந்து  தோயும்!
    தண்டைகள் குலுங்கப் பெண்ணும்
    தளுக்கியே மினுக்கும் காலை! .

    குருவிகள் விழித்துச்  சிலிர்க்க,
    குடங்களில் ஒலிநீர்ச் சந்தப்
    பெருமையில் துள்ளும் காலை!
    பீறிடும் கவிதை மாலை!

    சிறுமிகள் தந்தை யார்க்கே
    சின்னஇ டைகு லுங்க
    கறுத்தஓர் கலயம் தன்னில்
    கஞ்சியைச் சுமக்கும் காலை!

    உழவனும் சூச்சூ என்றே
    உயர்ந்தநல் மாட்டை ஓட்டி
    உழுதலில் நாட்டம் கொள்ள
    உயர்ந்தமண் நெகிழும் காலை!

    தேன்நிறைப் பூக்கள் எல்லாம்
    தேனியின் எச்சில் படுமுன்
    மானமோ டிறையை நாட
    வணங்கியே பதறும் காலை!

    கிளையினில் விழித்த  குயிலும்
    கிழக்கினில் எழும்வி ளக்கே
    சுளையெனப்  ‘பறக்கும்’ – உணவைச்
    சொன்னதாய்ப் பாட்டுப் பாடும்!

    மருட்சியாய்ப் புல்லை மேயும்
    மான்களும் துள்ளும் காலை!
    திரட்சியாய்க் கண்ணீர்  தோயத்
    தேவனை  வணங்கும் காலை!

     

    Share
  • உலகம் என்னும் பந்தினை உருட்டுவது யார்?

    -கவியோகி வேதம்

    ஓம் சக்தி!

    உலகமெனும் பந்தினை உருட்டுபவன் நானய்யா!கலகம்செய்(து) உருட்டுவது நீயன்றோ கலி-
    மனிதா?

    ஜீவனையும், சடத்தினையும் ஜிவ்வென்று காணும் (உ)ன்கண்
    ஜீவனுள்ளே மறைந்தஎன்னைக் காணாது செல்லுதய்யா!

    மனம்தந்தேன் நானுனக்கு! மதியையும் தந்துநின்றேன்!மனமிழந்தே என்னையேநீ  வசவாகப் பொழிவதுஏன்?

    மனமென்னும் பெட்டகத்தில் மங்காத சுக-துக்கம்
    இனம்காணா வகையினிலே கலந்து இனிதளித்தேன்!

    சுகம்காணில் துள்ளுகின்றாய்! சோகத்தில்
    சுருள்கின்றாய்!

    முகம்பார்க்கும் ஆடியைப்போல் முறைத்தேனோ
    எனைப்பார்ப்பாய்?

    வாழ்வின் வகையறியா வனவிலங்காய்த் திரியும்நீதாழ்வு
    வருகையிலோ, தலைபிடித்தேன் கதறுகின்றாய்?

    “நல்லதுவும் கெட்டதுவும் கலந்ததுவே நம்வாழ்வாம்”-
    நல்லோர் சொல்லியதை நாளும்நீ கேட்டதில்லை?

    நல்லதையே மனத்துள்வை! அல்லதுவை மறந்துவிடு!நல்லோரின் இச்சொல்லை நாயகனே! ஏன்மறந்தாய்?

    நல்லது வருகையிலே  ‘நான்நான்’ எனக்குதிப்பாய்!அல்லது வரின்என்னை  அரக்கன்போல்  சாடுகிறாய்!

    “நல்லதுவும் கெட்டதுவும் கண்ணனுக்கே அர்ப்பித்தேன்!”-சொல்வதிது எப்போதும் பிறருக்கே சொல்லுவையோ?

    மன-நிலத்துள் உறைகின்ற மகாதேவன் எனை-
    உணரஇனியவனே! பிறவிகளும் எத்தனைதான்
    வேண்டுமடா!?

    கர்மபலன் கழிக்கஅன்றோ கனிவான பிறவிதந்தேன்!
    தர்மமிது புரியாமல் சாடுவதேன் என்கண்ணா!

     

     

     

    Share
  • ஓம்.சக்தி

    கவியோகி வேதம்

     

     

    amman

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    எவள்என்றன் முடிகோதி  “அஞ்சேல்நீ!” என்றாளோ

    இவளே இவளேஎன் துர்க்கைஅம்மை!

    எவள்என்றன் கவலையெல்லாம்  ‘தன்’கவலை என்றாளோ

    இவளே இவளேஎன் துர்க்கைஅம்மை!…………1

    .

    எவளென்றன் பயமெல்லாம்  தீர்த்தென்னை அணைத்தாளோ

    இவளே இவளேஎன்  அன்பு–அம்மை!

    எவளென்றன் வாழ்வினிலே ஒளிகூட்டி நிற்பாளோ,

    இவளே-   ஆம்என்றன்  கருணை-அம்மை!…….2

    .\

    நாடிக்குள் கசடெல்லாம்  நீக்கிப்பின் பலம்தந்து

    ‘நல்மூச்சால்’ உயிர்ப்பிக்கும்  பெரும்தேவி!

    பாடிநின்றேன், அழுதுவிட்டேன், பரவசத்தில் மிதந்துவிட்டேன்!

    பளீர்என்று  அருள்தந்தாள் சுடர்த்தேவி!! ………..3

     

    அன்று-ஒரு ராட்சசனின்  ஆணவத்தைக் குதிபோட்டு

    அடக்கினையோ என்றதற்குச் சிரிக்கின்றாள்!

    இன்றெதற்குப் பழையகதை? என்னுடைய நாத்திகத்தை

    இளஞ்சிரிப்பால் மாற்றியதைச் சொல்கின்றாள்!….4

     

    எதற்கம்மா ஆயுதங்கள் இத்தனையும் வைத்து-என்னை

    இன்னமும்நீ  பயமுறுத்தல் வேணும்?என்றேன்!

    கதைஇல்லை என்குழந்தாய்!  எளியவனாய்  மாறுமுன்னைக்

    கண்டவர்கள் துன்புறுத்தல் தடுக்கஎன்றாள்! ….5

    ..

    .      எலுமிச்சம்  பழமாலை, தனி-உன்றன் விருப்பமதோ?

    என்றேநான்  கேட்டதற்கும் பெரும்சிரிப்பு!

    கொலுவிருக்கும் அழகினுக்கும், என்மேலுன் பித்தினையே

    குறைப்பதற்கும் வைத்துள்ளேன் எனச்சொன்னாள்!…….6

    .

    எத்தனைதான்  கேள்வியுடன்  துர்க்கையம்மை இவளைநான்

    இம்சித்தால்  கூடஇவள் புன்னகைப்பாள்!

    முத்தனைய  செல்விஇவள்! மோகமதைத் தூண்டுபவள்!

    முழுதுமென்னைத் தந்ததனால் நெஞ்சில்வைத்தாள்!….7

    ….

    அடுத்தஒரு  பிறவியிலும் உரிமையுடைக் குழவியென

    அழகாக  எனை-ஆக்கு துர்க்கையம்மா!!

    எடுத்துவிடு மந்திரச்சொல், கொடுத்துவிடு உன்நேசம்!

    எப்போதும் இடுப்பிலென்னைத் தூக்கம்மா!

    Share
  • என்று வரும் கிளரொளி?

    கவியோகி வேதம்

     

    இருட்டைக் குத்திட,- கதிரும்  பிறந்தது;

    இன்பனி உருண்டிட இலைமுளை துளிர்த்தது;

    சுருட்டிய பாயும் தூக்கம் கலைந்தது;

    துயராம்  ‘சேரி’யின்  ‘விடியல்’ வந்ததா?

    .

    ஆண்யானை விந்தில் ஆச்சர்யம் வளர்ந்தது!

    அருகம் புல்லிலும்  புவனம் தெரிந்தது;

    மாண்ட அரசரால் சரித்திரம் புரிந்தது!

    மண்புரள்  ‘வேட்டி’யால் வறுமை தீர்ந்ததா?

     

    . பன்றியும் குழந்தையும் ஒன்றாய்ப் புரண்டு,

    பள்ளமும் சேறும் காதல் புரிந்து,

    குன்றிய வயிற்றில் வாயுவே நிரம்பும்

    குலமகன் வாழ்வும் என்றுதான் துலங்கும்?

     

    . மனைகள் பணத்தால் மாளிகை ஆகலாம்;

    ‘மாண்பும்’ கட்சியால் மந்திரி ஆகலாம்;

    வனைவுறும் நேர்மையே நிலமெங்கும் பரந்து,

    வளர்ந்(து)என் ‘றிந்தியா’ வல்லர சாகும்?

     

     

    Share
  • மீசை நாய்க்கர்

     

    கவியோகி வேதம்

     

     

    meesai naaikar

     

     

     

     

     

     

     

     

     

     

    மீசை நாய்க்கர் ஒருசுரங்கம்!-அவரின்

    ..மீசை!உழைப்பு!-கலைஅரங்கம்!

    ஆசை யாகப் பலஆண்டு,-நெய்யை

    …”ஆண்டே” மீசை  இவர் வளர்த்தார்!

     

    இங்கிலீஷ் எழுத்து “டபிள்யூ’போல்-ஐயா!

    ..ஏனோ இதனை வளர்க்கின்றீர்?

    பொங்கும் அலைபோல் வளைகிறதே!-ஐயா!

    பூரிப் பு கண்ணில் தெரிகிறதே!”

     

    என்றே கேட்டால் சிரித்திடுவார்!-“கின்னஸ்”

    ..இதற்கே பரிசாய்த் தரும்என்பார்!

    இன்னல் இதனால் வரவிலையா?-என்றால்,

    ..எதில்தான் சிக்கல் இல்லை?என்பார்!

     

    பாம்பாய் நெளியும் மீசையைப்போல்-இவர்

    ..பத்து கலையும் அறிந்திடுவார்!

    வீம்புக் கிதனைச் சொல்லவில்லை-செய்யும்

    ..வேலை சொன்னால் மிகையுமில்லை!

     

    ஈனும் பசுவுக் கருகிலிருப்பார்!-முதுகை

    ..இதமாய்த் தடவி வலிகுறைப்பார்!

    பூனை உடலில் புனுகெடுப்பார்!-நீரைப்

    …பூமி உறிஞ்சும் ஒயில்.இருக்கும்!

     

    காளை முதுகின் உண்ணிகளை-விரைவாய்க்

    …கரண்டி நெருப்பில் போடுகையில்,

    வாளை மீன்தன் வால்சுழற்றி-நீரில்

    ..வட்டம் போடும் கலைதெரியும்!

     

    ஜாதிச் சேவல் மடியில்வர-கேப்பை.

    ….ஜலம்கலந்தே ஊட்டுகையில்

    ஜாதி மொக்கு விரியஅதில்-தேனீ

    ..ஜாலம் பண்ணும் நினைவுவரும்!

     

    விடலைப் பனையின் குருத்தெடுத்தே-பாலர்க்கு

    ..விசிறி பண்ணித் தருகையிலோ

    இடர்கள் களையும் இராமனுக்கே-பழம்

    ..ஈந்த ‘சபரி” முகம்தெரியும்!

     

    மீசை வளர்க்கும் கலையிலும்தான்,–லட்சிய

    ..வேட்கை அன்றோ தெரிகிறது!

    பூசை,’தெய்வம்’ இவர்அறியார்!-உழைப்புப்

    …”பொழுதே” கடவுள் என்றறிவார்!

     

    கரணை கரணை யாய்கைகள்!- நல்ல

    ..கடுவன் பூனை நாய்க்கர்முகம்!

    கருத்த உருவம், “காளி’யைப்போல்!-எனினும்

    ..கருணை வடிவம் அவர்இதயம்!

    .

    மீ சை நாய்க்கர் ஒரு சுரங்கம்!- அவர்

    மீசை, உழைப்பு,.. கலைஅரங்கம்

     

    Share
  • துறட்டுக்கோல்!

    -கவியோகி வேதம்

    தடைகள் இன்றி நடக்கத் தெரிந்தும்
    –தாத்தா கையில் துறட்டுக்கோல்!
    முடவ னாய்யா என்றே கேட்டால்
    –முறுவல் தானே! பதில்சொல்லார்;
    யார்க்கும் உதவும் எண்ணத் தோடே
    –இன்றும் கிளம்புவார் காட்டுக்கு!
    வேர்க்க வேர்க்கத் தழைகள் பறித்தே
    –வெட்டிப் போடுவார் ஆட்டுக்கு!

    பத்தடி உயரம் துறட்டிக் கோலாம்
    –பதமாய்த் தாத்தா ஏந்திடுவார்!
    கொத்தாய் மாங்காய் தந்தே பாலரைக்
    –கொஞ்சி அழகை மாந்திடுவார்
    கம்பியில் சிக்கிய பட்டம் எடுத்துக்
    –கனிவாய் அவர்க்கே உதவிடுவார்
    எம்பிக் குத்துவார் புளியங் காய்கள்
    –இவரின் கைவரச் சிரித்திடுவார்!

    ஆ! இப்போ!
    படப்பில் சிக்கிய வேலிமுள் அய்யோ
    –பாதை முழுக்கக் கிடக்கிறதே!
    முடங்கிக் கிடக்குதே துறட்டிக் கோலும்
    –மூலையில் தாத்தா படுத்ததுமே…!

     

     

    Share
  • பள்ளமும் மேடும்!

     -கவியோகி வேதம்

    ஆசைஎன்னும்  பள்ளத்தில்  தெரிந்தே  வீழ்வோம்!
    –ஆத்மாவாம் மேட்டினிலோ  இருட்டைச் சேர்ப்போம்!
    பாசமென்னும்  பள்ளத்தில்  மகிழ்ந்தே பாய்வோம்;
    –பாசங்கள் எதிர்த்தாலோ  அழுதே மாய்வோம்!
    ஓசைமனப் பள்ளத்துள்   ‘த்யானம்’- சேர்ப்பாய்;
    –ஒளியிலங்கே இறைவன்வந்து சிரிப்பான் என்றால்
    வாசம்கொள் அவ்வார்த்தை  கசப்பாய் நிற்கும்;
    –வானவில்லில்  அழகெங்கே? என்றே  கேட்போம்!

    குயில்வந்தே சோம்பலுடன்  காக்கைக் கூட்டில்
    –குறுமுட்டை இட்டுவிட்டே  வாழ்வ தொப்ப
    ஒயிலான   சுகவாழ்வைத்  தேடு கின்றோம்!
    –உலையினில்நீர்  மட்டு(ம்) இட்டால்  பசியா போகும்?
    வெயிலினிலே  வேலைசெய்வோன்  உழைத்த பின்பு
    –வீடுவந்தே  உணவுண்ட  சிரிப்பே தெய்வம்!
    பயில்கின்ற மூதுரைகள்  வாழ்(வு) அச் சாணி!
    –பாதகரின்  பசப்புரைகள் வறுமைக் கேணி!.

    நாகரிகம், விஞ்ஞானம் — கருவி  எல்லாம்
    –நச்சுத்தூள் கலந்துவாழ்வில் பள்ளம்  ஆச்சு!
    நாகரிகக்  கருவிகளை  அளவாய்க் கொண்டால்
    –நல்லதொரு  ‘ சுக’-மேட்டை யாரும் காண்பர்!
    வாகனங்கள் நேரத்தை  மிச்சம் செய்யும்!
    –வக்கணையாய்க் கையாண்டால், வாழ்வே உய்யும்!
    தோகையில்லாப்  பெண்மயிலும் துவள்வ துண்டோ?
    –துள்ளல்கொண்ட  ஆணவம்தான் ஜெயிப்ப துண்டோ?

    பள்ளத்தில்  இறங்கிடினும்  அருவி  நன்மை!
    –பாவத்தில் இறங்கிவிட்ட உயிர்கள் தீமை!
    வெள்ளிமலைப்  பனிமேட்டால் பயனே  இல்லை!
    –வெள்ளமெனக் கருணைவந்தால்  உலகே போற்றும்!
    ’சுள்’எனவே  வரும்கோபம் குணத்தில் பள்ளம்!
    –தூய்மையெனும் மனமேடோ வாழ்வு யர்த்தும்!
    ‘வள்’ என்றே  விழும்செல்வர்  சுமைப்பள்  ளம்தான்!
    –வள்ளலெனும்  பணமேடோ   வைரப் பள்ளம்!

     

     

     

    Share
  • சுமையும் சுகமும்!

    -கவியோகி வேதம்

    பாடச்  சுமைகள் அழுத்திய  போது
    –பள்ளி வாழ்க்கை கசந்ததே!
    தேடி அதனால்  வேலை வந்ததும்
    –தேன்போல் சுகமாய் இனித்ததே!

    முயல்க  முயல்க முன்னேறு என்கையில்
    –மூச்சும்  சுமையாய்ப் போனதே!
    முயற்சி வெற்றியும் பணமும் குவித்ததில்
    –மொத்தமும் சுகமாய் ஆனதே!

    வயிற்றில் பலரும்  ஏய்த்தே அடித்ததில்
    –வாழ்வே  சுமையாய் மாறிற்றே!
    மயிலாய் நல்லோர்  வந்தே  அணைக்க
    –மனதும் சுகத்தில்  தேறிற்றே!

    திருமணம்  வேண்டாம்  என்றே ஒதுங்கினேன்!
    –தேவையும்  குறைந்தே இனித்ததே!
    உறவுகள் நெருக்க  ஒருத்தியைத் தேடினேன்;
    –உலகே   சுமைபோல்  கசந்ததே!

    விதியின்  சுமையை  நினைத்தே  ஓடினேன்!
    –விரக்தியும்  என்னை   அணைந்ததே!
    மதிகொள்  குருஎன்னைப் பார்த்ததும்  ‘ தெய்வமே’
    –மனத்துள் சுகமாய் இணைந்ததே!!

     

     

     

    Share