கவியோகி வேதம்

வானம் வரையும் ஓவியத்துள்-ஒரு
மயக்க மருந்தே இருக்குதப்பா!
மோனம் சொல்லும் சொற்களுக்குள்-ஒரு
முனிவன் இருத்தல் தெரியுதப்பா!

விண்ணில் புகையும் முகிலுக்குள்-ஒரு
விருந்தே சமைதல் புரியுதப்பா!
மண்ணில் அதுவே கர்ப்பமப்பா!-அது
மனிதன் உணவாய்ப் பிறக்குதப்பா!

இழையும் காற்றில் ரகசியத்தை-நம்
“எடிஸன்’ கண்டான்! விளக்காச்சு!
நுழையும் ஒலியைப் பிசைந்திடவும் -அது
நுட்பக் கணினி என்றாச்சு!

ஆம்!
மனமே எழுத்தின் கருவூலம்!-அதில்
வார்த்தைக் கவிதை ஒருஜாலம்!
இனிப்பின் உள்ளே பலபுரட்சி!-நீ
இதனை ஆய்ந்தால் வரும்மிரட்சி!

‘உள்ளே பார்த்தல்’- ஓர்அறிவாம்!-அதில்
உண்மை ஒளிரும்! கண்டறிவாய்!
உள்ளே என்றும் நான்உள்ளேன்-கூட
ஒருவன் உள்ளான்! கண்டுகொண்டேன்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *