கவியோகி வேதம்

 

 

meesai naaikar

 

 

 

 

 

 

 

 

 

 

மீசை நாய்க்கர் ஒருசுரங்கம்!-அவரின்

..மீசை!உழைப்பு!-கலைஅரங்கம்!

ஆசை யாகப் பலஆண்டு,-நெய்யை

…”ஆண்டே” மீசை  இவர் வளர்த்தார்!

 

இங்கிலீஷ் எழுத்து “டபிள்யூ’போல்-ஐயா!

..ஏனோ இதனை வளர்க்கின்றீர்?

பொங்கும் அலைபோல் வளைகிறதே!-ஐயா!

பூரிப் பு கண்ணில் தெரிகிறதே!”

 

என்றே கேட்டால் சிரித்திடுவார்!-“கின்னஸ்”

..இதற்கே பரிசாய்த் தரும்என்பார்!

இன்னல் இதனால் வரவிலையா?-என்றால்,

..எதில்தான் சிக்கல் இல்லை?என்பார்!

 

பாம்பாய் நெளியும் மீசையைப்போல்-இவர்

..பத்து கலையும் அறிந்திடுவார்!

வீம்புக் கிதனைச் சொல்லவில்லை-செய்யும்

..வேலை சொன்னால் மிகையுமில்லை!

 

ஈனும் பசுவுக் கருகிலிருப்பார்!-முதுகை

..இதமாய்த் தடவி வலிகுறைப்பார்!

பூனை உடலில் புனுகெடுப்பார்!-நீரைப்

…பூமி உறிஞ்சும் ஒயில்.இருக்கும்!

 

காளை முதுகின் உண்ணிகளை-விரைவாய்க்

…கரண்டி நெருப்பில் போடுகையில்,

வாளை மீன்தன் வால்சுழற்றி-நீரில்

..வட்டம் போடும் கலைதெரியும்!

 

ஜாதிச் சேவல் மடியில்வர-கேப்பை.

….ஜலம்கலந்தே ஊட்டுகையில்

ஜாதி மொக்கு விரியஅதில்-தேனீ

..ஜாலம் பண்ணும் நினைவுவரும்!

 

விடலைப் பனையின் குருத்தெடுத்தே-பாலர்க்கு

..விசிறி பண்ணித் தருகையிலோ

இடர்கள் களையும் இராமனுக்கே-பழம்

..ஈந்த ‘சபரி” முகம்தெரியும்!

 

மீசை வளர்க்கும் கலையிலும்தான்,–லட்சிய

..வேட்கை அன்றோ தெரிகிறது!

பூசை,’தெய்வம்’ இவர்அறியார்!-உழைப்புப்

…”பொழுதே” கடவுள் என்றறிவார்!

 

கரணை கரணை யாய்கைகள்!- நல்ல

..கடுவன் பூனை நாய்க்கர்முகம்!

கருத்த உருவம், “காளி’யைப்போல்!-எனினும்

..கருணை வடிவம் அவர்இதயம்!

.

மீ சை நாய்க்கர் ஒரு சுரங்கம்!- அவர்

மீசை, உழைப்பு,.. கலைஅரங்கம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *