Tag: வல்லமை சிறுகதைப் போட்டி

  • 2012 – 2013 ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி முடிவுகள்

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். கடந்த ஓராண்டு காலமாக பல சிறுகதைகள், மிக வித்தியாசமான கதைக் களங்களுடன், தேர்ந்த எழுத்தாளர்களின் சிறப்பான நடையுடன், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற இடைவிடாத முயற்சியில் தன்னை மென்மேலும் பட்டை தீட்டிக்கொண்டு களம் இறங்கியவர்களின் அருமையான படைப்புகள் வாசகர்களாகிய நம் அனைவருக்கும் பெருவிருந்தாக அமைந்தது. ஓராண்டு முடிந்து விட்டது என்று நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. மாதா மாதம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில், தம் இடைவிடாத பணிகளுக்கிடையேயும், காலந்தவறாமல் தம் தீர்ப்பை வழங்கி வந்தார் ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள். அவர்களின் கடமையுணர்ச்சியைப் பார்த்து பல முறை வியந்திருக்கிறேன் நான். அவருக்கே உரிய தனிப்பட்ட பாணியில் விமர்சனங்கள் சுவை கூட்டின. அதன் மூலம் தங்களை  மேலும் செம்மையாக்கிக் கொள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. அந்த வகையில் உயர்திரு வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுவோம். ஐக்கியா நிறுவனத்தின் உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர், திரு வையவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையை எழுதியவருக்கு தாம் அறிவித்திருந்தபடி பரிசுத் தொகையை அனுப்பியிருந்தார். அவருடைய முழுமையான ஒத்துழைப்பு நமக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. மேலும் தொடர்ந்து சில போட்டிகள் ஐக்கியா தொண்டு நிறுவனம் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    போட்டி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்ற இத்தருணத்தில் இறுதிக்கட்ட திறனாய்வை மேற்கொள்ள பிரபல எழுத்தாளர் திரு நாஞ்சில்நாடன் அவர்கள் மனமுவந்து இசைந்துள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்திற்கும் அற்புதமாக மதிப்புரை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். அவருக்கும் நம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    IMG_7849

    போட்டியில் வெற்றிபெற்ற திரு பழமைபேசி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த வாழ்த்துகள். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள். தொடர்ந்து நம் வல்லமையுடன் இணைந்திருங்கள் . புதுமையான பல போட்டிகளைச் சந்திக்கக் காத்திருங்கள் நண்பர்களே!

    அன்புடன்

    பவள சங்கரி

    ஆசிரியர்

    நாஞ்சில் நாடன்

    nanjilஆகஸ்ட் 2013-ல் சென்னை கம்பன் விழாவில், பெரியவர் இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, கவலை தொனிக்கும் குரலில் குறிப்பிட்டார் – தமிழில் நாவல் வரத்து அருகி, சிறுகதை எழுத்து குறைந்து போய்விட்டது என. எனக்கும் அந்தக் கருத்தே தான். காரணம் கேட்டு வாடி என ஒற்றை வரியில் நாம் தட்டிக் கழித்து விட இயலாது. படைப்பாற்றல் குறைந்து போனதா, எழுத்து ஊக்கம் தளர்ந்து வருகிறதா, வாழ்க்கை பற்றிய பார்வையும், அனுபவமும் இல்லாமல் ஆகிவிட்டதா? முயற்சி இனமையா, மொழி வசப்படவில்லையா, உழைக்கத் தயாரில்லையா, என்ன எழுதி என்ன ஆகப்போகிறது எனும் சலிப்பா, இவை எல்லாமுமேயா, அல்லது இவற்றுக்கும் வெளியேயும் வேறுள காரணங்களா?

    மாய்ந்து, மாய்ந்து எழுதத் தேவையற்று, எளிதான கணினி தட்டச்சு வந்துவிட்டது. முன்னைப்போல வெளியீட்டு சிரமங்கள் இல்லை. தாளிதழ்கள் இல்லை என்றாலும் மின்னிதழ்கள் பல உள. எதிர்காலத்தில் அரசு நூலக ஆணைகளை நம்பி, புத்தகம் எழுதவும், வெளியிடவும் இயலாது. எந்தக் காலத்திலும் அது எழுத்தாளன் கவலையாக இருந்தது இல்லை. அவனைப் பொறுத்தவரை, விற்றாலும் காப்பீடு இல்லை, விற்காவிட்டாலும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வாசகனை , ஒற்றைப் பிரதி விற்பனையை நம்பித்தான் படைப்பாளியும் வெளியீட்டாளர்களும் இயங்க வேண்டியது இருக்கும்.

    பேரம் இல்லாதிருந்த அல்லது சின்ன ஊழலுடன் இருந்த அரசு நூலகத் துறை இன்று நூலகங்களுக்கு புத்தகம் வாங்கினாலும், தமது பை நிறையும் என்று கண்டுகொண்டது. வெளியே உரத்து, சமத்துவம், சகோதரத்துவம், சமூக விடுதலை என்று பேசுகிறவர்களும், தமது நிறுவனங்களுக்கான ஆணைகள் பெற அனைத்து குறுக்கு வழிகளையும் அரசியல் செல்வாக்கையும் கட்சி அனுகூலங்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். காரசாரமாகக் கட்டுரைகளும், தலையங்கங்களும் எழுதுகிறவர்களும் இதனை நோகாமல், கூசாமல் செய்கிறார்கள்.

    அது கிடக்க…….

    ‘இலக்கிய சிந்தனை’ அரை நூற்றாண்டுக்கும் மேலாக மாதம் தோறும், ஆண்டு தோறும் நல்ல சிறுகதைகளைத் தெரிந்து, பரிசளித்து ஊக்கப்படுத்தி வரும் அமைப்பு. அவர்களது நடுவர்களின் தெரிவுகளில், பல சமயம் தீவிர, நவீன படைப்பாளிகளுக்கு விமர்சனம் உண்டு என்றாலும் பணி போற்றுதலுக்கு உரியதுதான். அதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. திரு ப.இலட்சுமணன் அவர்களுடைய கவலை மெய்யானது.

    குறிப்பிட்டுச் சொல்லும்படியான தமிழ்ச் சிறுகதையாளர்கள் பலரும் இன்று நாற்பது அகவை கடந்தவர்கள். இளம் படைப்பாளிகள் என்று முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் சிலரை மட்டுமே நம்மால் குறிப்பிட முடிகிறது. சாகித்ய அகாதமிக்கு வேண்டுமானால் நூற்றுக்கணக்கில் கிடைப்பார்கள். அவர்கள் தர மதிப்பீடு இலக்கியம் மட்டுமே அல்ல. ஈழத்துப் படைப்பாளிகள் பலர் இன்னும் தீவிரத்துடன் இயங்கி வருகிறார்கள். அவர்களது அனுபவக் களம் இணைய தளத்தில் புகைப்பட திரைப்படக் காட்சிகளில், புத்தகங்களில் வாசித்த அனுபவங்கள் அல்ல. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின், அகதி வாழ்க்கையின் சொந்த வலிகள். சமீபத்தில் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ என்று இளங்கோ எனும் ஈழத்தமிழ் இளைஞரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வாசித்தபோது எனக்கது மீண்டும் உறுதியானது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு.

    ‘உயிர் எழுத்து’ போன்ற சில இதழ்கள் தவிர்த்து, மற்றெவரும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை ஒரு இதழில் வெளியிடுவதில்லை. அவற்றுள்ளும் சில குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கே பொட்டுக் கட்டிக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில், இணையதள இதழ்களில் நடக்கும் சிறுகதை முயற்சிகள் உற்சாகமூட்டுகின்றன.

    ‘ஐக்கியா & வல்லமை.காம்’ நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த 2012 ஆகஸ்ட் முதல் 2013 ஜூலை வரையில் எழுதப்பட்ட, எட்டு எழுத்தாளர்களின் பதினேழு சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவை அனைத்தும் மதிப்புறு திறனாய்வாளர், திரு. வெங்கட் சாமிநாதன் தெரிவு செய்தவை. எனக்குக் கிடைத்த நம்பிக்கை, தமிழ்ச் சிறுகதை கவலைக்கிடமான நிலையில் இல்லை என்பது.

    கவனமாக வாசிக்கும்போது, கதை கூறலின் பாணி சுதந்திரம் பெற்று காணப்படுகிறது என்பதும், வழக்கமான கதை கூறல் உத்தியில் இருந்து வெகுவாக விலகி, கதைகள் யோசிக்கவும் எழுதவும்படுகின்றன என்பதும் ஆறுதலான விடயங்கள். வெ.சா. தெரிவு செய்தபின் மறுபடியும் அவற்றில் என்ன தெரிவு செய்வது என்று எனக்குத் தோன்றியது. எல்லாக் கதைகளுமே பண்பட்ட எழுத்து. காலம் அவர்களுக்கான கவனிப்பையும் இடத்தையும் பெற்றுத் தரும். மேலும் இந்த எட்டு படைப்பாளிகளுமே எனக்கு முற்றிலும் புது முகங்கள்.

    பழமைபேசியின், ‘செவ்வந்தி’, பார்வதி இராமச்சந்திரனின், ‘நம்மில் ஒருவர்’, ஜெயஸ்ரீ சங்கரனின், ‘நாலடிக் கோபுரங்கள்’ எனும் கதைகள் நல்ல கதைகள் என்றபோதும், வாசகன் பழகிய தடத்திலேயே பயணம் செய்கின்றன. சுதாகரின், ‘காட்சிப் பிழை’ வேறுபட்டதோர் மனநிலையை நுட்பமாகச் சொல்கிறது. அரவிந்த் சச்சிதானந்தத்தின், ‘கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்’ நல்ல முயற்சி. ஆனால் சற்று கூர்மையும், தீவிரமும் குவியப் பெற்றிருக்கலாம். தேமொழியின், ‘ஜினா என்றொரு க்ருயல்லா’ சுறுசுறுப்பான வாசிப்பைத் தருகிறது. ஆங்கில வாசிப்புப் பழக்கம் உடையவருக்குப் புதுமை தராதது.

    மணி ராமலிங்கத்தின் ‘நோ- பால்’ படைப்பு நேர்த்தியும், தேர்ச்சியும் கொண்ட எழுத்து. மாதவன் இளங்கோவின், ‘அம்மாவின் தேன்குழல்’ நல்ல கதை. தாய் மனத்தின் ஆழமன நீரோட்டம். பேசுவது மற்றொரு சிறந்த கதை. பழமைபேசியின், ‘மணவாளன்’ இந்தக் கதையின் பிற்பகுதி, கவிதையின் ஆழம் கொண்டது. வரலாற்றில் கவித்துவம் உடைய சிறுகதைகளே நின்று வாழ்கின்றன.

    எனக்குத் தரப்பட்ட இந்தப் பதினேழு கதைகளில், சிறந்த மூன்று என வரிசைப்படுத்தச் சொன்னால்,

    1.மணவாளன் – பழமைபேசி
    2. நோ-பால் – மணி ராமலிங்கம்
    3. அம்மாவின் தேன்குழல் – மாதவன் இளங்கோ

    என்பதாக இருக்கும் அது. என்னை ஒத்த இன்னொருவர் இந்த வரிசையை மாற்றவும் கூடும். அது அவ்வளவு முக்கியம் இல்லை. தமிழில் நல்ல சிறுகதைகள் இன்னும் எழுதப்படுகின்றன எனும் மகிழ்ச்சியே போதுமானது.
    ஏனெனில் முதல், இரண்டு, மூன்று எனும் வரிசை வெறும் சடங்குதான். ஓட்டப் பந்தயம் என்று எடுத்துக் கொண்டாலும், அந்தக் குறிப்பிட்ட நாளில், அந்த மைதானத்தில், அந்தக் கணத்தில், அந்தத் தட்ப வெப்பத்தில் அவர் முதலாவதாக வந்தார் என்று சொல்வதே சரியானதாக இருக்கும்.

    எட்டுச் சிறுகதை ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள். ஐக்கியா & வல்லமை.காம் நிறுவனங்களுக்கும் எனது நன்றியும், பாராட்டும். இத்தொகுப்பில் கண்ட எட்டுச் சிறுகதை ஆசிரியர்களின் தனித்தனித் தொகுப்புகளுக்காகக் காத்திருப்போம்.

    மிக்க அன்புடன்

    நாஞ்சில் நாடன்

    கோவை – 641028

     30 – ஆகஸ்ட் – 2013

    Share
  • ஜூலை (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவு!

    வெங்கட் சாமிநாதன்

    இம்முறை மூன்று பேர்களின் கதைகள் முன் நின்றன. ஒன்று பார்வதி ராமச்சந்திரனின் சரயு, பழமை பேசியின் பேச்சி, தேமொழியின் அனிச்ச மலர்கள். தேர்ந்த கையான பழமை பேசியின் பேச்சி யில் கிராமத்து சூழல் மிக அடர்த்தியாக எழுப்பப்பட்டிருக்கிறது. கதையென்று ஏதும் இல்லாது சூழல் கொஞ்சம் அதிகமாகவே அடர்த்தி கொண்டுள்ளது. அனிச்ச மலரில் பிராமணப் பெண் என்று அழுத்திச் சொல்ல வேண்டாத இடங்களில் எல்லாம், பள்ளிக்கூடத்தில் கூட பிராமணப் பேச்சு வலிந்து புகுத்தப்பட்டுள்ளது. சிறு பெண்கள் சித்திரம் தடித்த கோடுகளால் வரையப்பட்டுள்ளது. மூன்று பேரில் பார்வதி ராமசாந்திரனின் சரயு கதை தான் சாதாரணமாக குடும்பங்களில் நடக்கும் நிகழ்வையும் அதன் பாரம்பரிய சிக்கல்களையே சொன்னாலும் குறைந்த சொற்களில் திறம்படச் சொல்வதில் வெற்றி கண்டுள்ளது.

    என் தேர்வு பார்வதி ராமச்சந்திரனின் சரயு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    பழமை பேசி, தேமொழி இருவருக்கும் கூட என் வாழ்த்துக்கள்.

    கடந்த ஒரு வருட காலத்தில் மூன்று நான்கு புதிய திறன்களைக் கண்டு கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்களுக்கெல்லாம் என் வாழ்த்துக்கள்..

    போட்டியில் பங்குபெற்ற சிறுகதைகள்:

    2.

    உறக்கத்திலோர் உளறல் !!!

    3.

    ஓடிப் போன புத்தர்

    4.

    “பத்ரமா இருங்கப்பா!”

    5.

    நான் வேற அப்பாவிற்குப் பிறந்திருக்கலாம்

    6.

    அந்த நூறு நாட்கள்!

    7.விடுகதை!…

    8.

    சரயு…

    9.

    ஆங்காரியும் கோணங்கியும் இடையிலொரு அம்புஜவல்லியும்

    10.

    முசுட்டுத் தாத்தா …

    11.

    நன்றி

    12.

    புரியாத புதிர்

    13.

    டேய். நம்ம காலேஜ் சல்யூட்டை அடி!!!

    14.

    பேச்சி

    15. ‘நீர்’

    17. அனிச்ச மலர்கள்

     

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். இப்பொழுதுதான் போட்டி ஆரம்பித்தது போல் இருக்கிறது. ஒரு வருடம் ஓடிவிட்டது. முதன் முதலில் நாம் ஒரு சிறுகதைப் போட்டி நடத்தினால் நன்றாக இருக்கும் என்று எழுத்தாளர் திரு வையவன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் உடனே மிக உற்சாகமாக, “நல்ல விசயம்தானே உடனே செய்யுங்கள், அதற்கான பரிசுத் தொகையும் அறிவித்துவிடுங்கள். எங்கள் டிரஸ்ட் மூலமாக நான் கொடுத்து விடுகிறேன். அதுமட்டுமல்லாமல், மாதம் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து அதற்கும் 100 ரூபாய் பரிசு வழங்கலாம், பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகவும் வெளியிடலாம்” என்று மனமுவந்து கூறினார். உடனடியாக அந்த மாதமே போட்டி ஆரம்பிக்கப்பட்டது, இதே ஜூலை மாதம் 2012ம் ஆண்டு. சிறுகதைப் போட்டிக்கு பல படைப்பாளிகள் தங்கள் அற்புதமான படைப்புகளை வழங்கி இப்போட்டியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றிருக்கின்றனர். போட்டிக்கான பரிசுக் கதையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முதுபெரும் எழுத்தாளர், மிகச் சிறந்த விமர்சகர் என்று அனைவராலும் போற்றப்படும் ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள் மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்கள். தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையில் காலந்தவறாமல், குறிப்பிட்ட நேரத்தில் அதனைத் தேர்ந்தெடுத்து பாரபட்சமற்ற தீர்ப்பையும் வழங்கியுள்ளார்கள். இதற்கெல்லாம் அனைவருக்கும் நன்றி என்ற மூன்றெழுத்து வார்த்தையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். இப்போது அடுத்தக் கட்டத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நகர்கிறது. விரைவில் அதற்கான முடிவும் அறிவிக்கப்படும். இதுவரை போட்டியில் தங்கள் பங்களிப்புகளை அளித்துள்ள அனைத்து படைப்பாளர்களுக்கும், வெற்றி வாகை சூடியவர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து நம் வல்லமைக்கு ஆதரவு அளித்து வரும் நம் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்னும் பலப்பல நல்ல நல்ல படைப்புகளை தங்களிடமிருந்து எதிர் நோக்கி காத்திருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே.

     

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • மே (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!

    வெங்கட் சாமிநாதன்

    கதைகளின் வருகை குறைந்ததற்குக் காரணம் எழுதுபவர்கள் பலருக்கு நாம்/ நான் உற்சாகம் கொடுக்கமுடியாமற் போவது தான் . வருவது முப்பது முப்பத்தைந்து கதைகளே ஆனாலும் ஒன்றிரண்டு நம்மை மிகவும் கவர்ந்து கொள்வதே பெரிய காரியம்.

    இம்முறை கதைகள் வெகுவாகக் குறைந்த போதிலும் பலர் வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறார்கள். அவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. கவிதை வடிவில் எழுதுகிறார்கள். ஒரு பொழுதின் நகைச் சுவையை எழுதிப் பார்க்கிறார்கள். துப்பறியும் கதை எழுதிப் பார்க்கிறார்கள். இப் புதிய முயற்சிகளில், தேமொழியின் துப்பறியும் கதை முயற்சி வந்தவற்றுள் படிக்க சுவாரஸ்யமாக சிறப்பாக வந்துள்ளது. மே மாத சிறுகதைப் போட்டியின் வெற்றியாளராக தேமொழியைத் தேர்ந்தெடுக்கிறேன்.

    தேமொழிக்கு என் பாராட்டுக்கள்.

    இந்த மாத சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்ற சிறுகதைகள்:

    1.முன்னைப் பிறவியில்… (கவிதைக்கதை)

     

    2. நகைச்சுவைத் திருவிழா

    3.ஜினா என்றொரு க்ருயெல்லா

    4.அவ்யயாநந்தர்

    5. பேஸ்புக் ஸ்டேடஸ் (Facebook Status)

    6. ஆராதனா

    7.பெண்மை

    போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே. வெற்றி  பெற்ற தேமொழிக்கு வல்லமை குழுவினரின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.  போட்டியில் அனைவரையும் பங்குபெற வரவேற்கிறோம்.
    அன்புடன்
    பவள சங்கரி
    Share
  • மார்ச் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!

    வெங்கட் சாமிநாதன்

    இந்த முறை கதைகளின் வருகை குறைந்திருந்தாலும் நல்ல எழுத்தின் சதமானம் பெருகியுள்ளது என்பதோடு சில புதிய கைகளும் தென்படுகின்றன். ஒரு வேளை நான் மறதியில் புதிய கை என்கிறேனோ என்னவோ.

    இம்முறை எனக்கு மூன்று கதைகள் குறிப்பிடத் தக்கனவாகப் படுகின்றன. இரண்டு பழைய கைகள்.  மாதவன் இளங்கோவின் “அமைதியின் சத்தம்”. அயல் நாட்டு வாழ்வின் சிக்கல்கள். கதை முழுதும் கடைசி வரை ஒரு அயல் நாட்டின் கலாச்சார மேலாதிக்கத்தின் அகங்காரம் எனத் தோன்றினாலும் கடைசியில் அங்கும் மனித வாழ்வின் அவலங்கள் வேதனைகள் சில நமக்குக் கடைசி வரை புரியாமலேயே போகின்றன. எல்லா இடத்திலும் நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதம் இல்லாமல் போய்விடுவதைல்லை.

    அதே மனிதப்பண்புகள் தான் மில்லியன் டாலர்கள் கணக்கில் நஷ்டப்பட்டாலும் மனித உயிரின் பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு.சரி இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா எங்கிலும் என்பது தெரியவில்லை. இருப்பினும் அது இன்னமும் உயிர்த்திருபபது காணும் ஒரு இடத்தையாவது காண முடிகிறதே. பழமை பேசியின் ”ககனமார்க்கம்”.கதையில். தன் ஒவ்வொரு கதையிலும் வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களை நம் முன் மிகத்திறமையுடன் வைக்கிறார் பழமை பேசி.

    கடைசியாக எனக்குப் புதியவராகத் தோன்றும் பார்வதி ராமச்சந்திரனின் “நம்மில் ஒருவர்” இம்மாதத்திய பரிசுக்குகந்த கதையாகச் சொல்லத் தோன்றுகிறது. புதிய எழுத்தாகவே தோன்றவில்லை. பழகிய கை மாதிரிதான் இருக்கிறது எழுத்தின் தேர்ச்சி. அந்தச் சூழலின் சித்திரம்.

    பரிசுக்குரிய கதையாக பார்வதி ராமச்சந்திரனின் கதையைச் சொல்ல விரும்புகிறேன்.

    அதே சமயம் முடிவில் இந்த வருடத்திற்கான சிறந்த கதைத் தேர்வின் போது, மாதவன் இளங்கோவின் அமைதியின் சத்தம், பழமை பேசியின் ககனமார்க்கம் கதைகளையும் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளலாம். அவை முன்னரே பரிசு பெற்ற கதைகள் மாத்திரமலல, இக்கதைகளும் சேர்த்துக்கொள்ளலாம்.

    பார்வதி ராமச்சந்திரனுக்கு என் பாராட்டுக்கள்.

    இந்த மாதப் போட்டியில் பங்குபெற்ற சிறுகதைகளின் விவரம் வருமாறு:

    மறுபடியும் ஒருமுறை

    நம்மில் ஒருவர்….

    அமைதியின் சத்தம்

    பதில்??

    முத்தம்

    நவீன ரோபோக்கள் “

    ககனமார்க்கம்

    சாய்ந்து சாய்ந்து… அவள் பார்த்த போது …

    உண்மைக்காதல்

    தாமரை நெஞ்சம்

    பயம் “

    எழுச்சி

    பரிசு பெற்ற திருமிகு பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். திரு பழமைபேசி மற்றும் மாதவன் இளங்கோ இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து அனைவரும் பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

    Share
  • பிப்ரவரி (2013) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்

     

    அன்பு நண்பர்களே,

     வணக்கம். ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்து வரும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிகஅவசியமாகிறது. தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறோம். தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் ஐக்கியா தொண்டு நிறுவனர் திரு வையவன் அவர்களுக்கும், சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வரும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதோ சென்ற பிப்ரவரி மாதத்தின் போட்டி முடிவுகள். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறும்  விடாமுயற்சியில் இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே. தொடர்ந்து உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.

    அன்புடன்
    பவள சங்கரி

    வெங்கட் சாமிநாதன்

    இம்மாதம் கதைகள் குறைந்துள்ளது வழக்கமாக நிறைய கதைகள் அனுப்புகிறவர்கள் பலனின்றி உற்சாகம் குறைந்த காரணமாகவும் இருக்கலாம். ஆனாலும்  இரண்டு கதைகள் நன்றாக எழுதப்பட்டுள்ளனவை வந்துள்ளன. வழக்கம் போல் பழமை பேசியின் ”பணவிடையும்”, மணி ராமலிங்கத்தின்  ”சூரியன் வந்து வாவென்றபோது” என்னும் இரண்டு கதைகளும் நன்றாக எழுதப்பட்டுள்ளன். உண்மையில் கதைகள் என்று எழுதப்பட்டுள்ளவை இவை இரண்டு தான். இரண்டுமே தடம் மாறும்போது திரும்ப தடம் வந்து சேரும் மனிதப் பண்பைச் சொல்கின்றன. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    வெ.சா.

    போட்டியில் பங்கு பெற்ற கதைகள்:

    வறு கடலை

    முதல் நாள்

    வயோதிகருக்குமுண்டு வெறி

    கல்லூரி கட்டணம்

    பழங்கணக்கு

    உறவுகள்

    பறவை மனசு

    ஆட்ரா ராசா”

    பச்சை நிறமே இல்லை”

    குறையொன்றுமில்லை”!…..

    ஆதிரையின் தீர்மானம்

    தொடர்ந்து இந்த முறையும் பரிசு பெற்றுள்ள திரு பழமைபேசி மற்றும் மணி ராமலிங்கம் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  தொடர்ந்து அனைவரும்  இப்போட்டியில் பெங்கெடுத்து தங்கள் வல்லமையை  வெளிப்படுத்தி பரிசுபெற வாழ்த்துக்கள்.

     

    Share
  • ஜனவரி (2013) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்!

    வெங்கட் சாமிநாதன்

    எல்லாக் கதைகளையும் படித்தேன். இந்தத் தடவை வந்த கதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.  நிறைய கதைகள் எழுதி வந்தவர்கள் கூட இம்முறை எழுதவில்லை. ஒரு வேளை ஏமாந்த மனக் கசப்புடன் இருக்கிறார்களோ என்னவோ.

    வந்த கதைகளில் முற்றிலும் திருப்தி அளித்த கதைகள் என்று சொல்லமுடியாவிடடாலும் தமிழில் சாதாரணமாக எழுதப்படாத, சரி, வல்லமையில் சாதாரணமாக எழுதப்படாத விஷயங்களை கையாண்டு பெரும்பாலும் நன்றாகவே எழுதப்பட்டவை என்று சொல்லப்படவேண்டியவை இரண்டு. ஒன்று, அம்மாவின் தேன் குழல் மாதவன் இளங்கோ எழுதியது; இரண்டாவது  நாலடி கோபுரங்கள்  ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியது.

    பெரும்பாலும் நன்றாக எழுதப்பட்டவை என்று சொன்னேன். மாதவன் இளங்கோ எனக்கும் ஒரு வேளை வல்லமைக்கும் கூட புதியவர். எங்கோ இருப்பவர். ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும். ஆனால் இணையாதவர்கள் இரண்டு முனைகளி. நன்றாகத் தான் ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார். ஆங்காங்கே சில வார்த்தைகள், சில வாக்கியங்கள் melodrama வாக இருக்கின்றன. அதைப் பெரிது படுத்த வேண்டாம். போகப் போக சரியாகும்.  கடைசியாக், வரும் சில பாராக்களை ஒதுக்கியிருக்கலாம்.  ”இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன  என்னும் வரியோடு கதை முடிகிறது. அடுத்து வருபவை வேண்டாம்.

    ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து  நாலடி கோபுரங்கள் மாறுபட்டது.  தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயலப்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போல தோன்றுகிறது. அதேபோல முன்னரும் கூட தன்னை மாற்றச் சொல்லி கடிதமாக எழுதி ராஜாவிடமே கொடுத்தது. இது மறைவாகச் செய்யப்பட்டது பின் ராஜாவின் காதில் விழுகிறது என்றிருந்தால் அது இயல்பாக இருந்திருக்கும்.

    எப்படியாயினும் இந்த இருகதைகளும் என் தேர்வுகள். மாதத் தேர்வு தானே. அதனால் பரவாயில்லை. இரண்டும் உற்சாகப்படுத்த தகுதி கொண்ட எழுத்துக்கள்.

    இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    வெ.சா.

    இந்த மாதப் போட்டிக்கான சிறுகதைகள்

    1. கண்ணாள் ஓதுகம்

    2. பச்சைக் கிளி

    3. ஆசான்

    4. பட்டி நோம்பி

    5. “வடு”

    6. காதல் கீதை …

     

    7. அம்மாவின் தேன்குழல்

    8. பொய் வாழ்க்கை

     

    9. பலிபீடம்

     

    10. ஆத்ம சாந்தி

    11. நாலடிக் கோபுரங்கள்…!

     

     

    போட்டியில்  வெற்றி பெற்ற திரு மாதவன் இளங்கோ மற்றும் திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.  பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  தொடர்ந்து தங்கள் படைப்புகளை அனுப்புங்கள். பரிசினை வெல்லுங்கள்!

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • டிசம்பர் (2012) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

    வெங்கட் சாமிநாதன்

    இம்மாதம் வந்துள்ள 21 கதைகளுள் மூன்று மிக முக்கியமாகத் தெரிகின்றன.

    இரண்டு பேர், பழமைபேசியும், மணியும் முன்னரே தெரிந்தவர்கள்.

    தெரிந்தெடுக்கப்பட்டவரகளும் கூட.  இருவரும் இம்முறையும் தாம் சொல்ல வந்த விஷயத்தாலும் சொல்லும் திறமையாலும் முன்னிற்கின்றனர். அதே போல நரசய்யாவும் புனைவு அல்ல எனினும், அவர் சொல்லித்தானே இது உண்மை சம்பவம், புனைவு அல்ல என்று நமக்குத் தெரிகிறது, அன்றாட கடல் வாழ்வில் எப்போதும் நிகழ்ந்துவிடக்கூடும்  வாழ்வின் எல்லைக்குப் போய் மீளும் அனுபவத்தை ஏதோ தூங்கி எழுந்த சமாசாரமாக நாடக பாணியும் அதீத வார்த்தைகளும் அற்று மிக அடங்கிய குரலில் எழுதியிருக்கிறார்.  மணி பேசாப் பொருளை எவ்வளவு தூரம் பேசவும் வேண்டும், பேசாது ஒதுங்கவும் வேண்டும், என்று தானே எல்லைக் கோடு இட்டு விளையாடியிருக்கிறார். பழமை பேசியும் பாசமும் ஏக்கமும் மூன்று காலகட்டங்களில் வெளிப்படும் வேறுபடும் உணர்வுகளை, மறுபடியும் அசட்டு உணர்ச்சிகள் இல்லாது எழுதியிருக்கிறார். இம்மூன்றுமே எனக்கு திறமையான எழுத்துக்களாகப் படுகின்றன. எதை விடுவது? எதை ஏற்பது? புனைவு அல்ல என்று ஒதுக்குவதா? ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று ஒதுக்குவதா? ஒவ்வொரு முறையும் ஒரு  புது உலகம். ஒரு  புது வெளியீட்டு முறை.  கைப்பாவை,  மனம் அகண்டம், அங்கிங்கென்னாதபடி, மூன்றையுமே சொல்லத் தோன்றுகிறது. வ்ருடக் கடைசித் தேர்வில் ஒன்று தானே தேர்வு பெறும், எத்தனை எழுதினாலும். இப்போதைக்கு புதிய அனுபவங்களையும், அதைச் சொல்லும் திறமையையும்  கொண்டவர்களை அங்கீகரிப்போமே.

    இம்மூவரில் எவரையும் ஒதுக்கும் காரணங்கள் இப்போது எனக்கு ஏதும் புலப்படவில்லை. இடைப்பட்ட நிலை தானே.

    பங்கு கொண்ட எல்லோருக்கும் என்  புது வருட வாழ்த்துக்கள்

    தேர்வு செய்யப்பட்டுள்ள சிறுகதைகள், (1) பழமை பேசியின், கைப்பாவை, (2) மணியின் மனம் அகண்டம், (3) நரசய்யாவின் அங்கிங்கென்னாதபடி.

    வெ.சா.

    டிசம்பர் (2012) சிறுகதைப் போட்டியில் பங்குபெற்ற  சிறுகதைகள்:

    1.விதி செய்வோம்

    2. ரிஷி கர்பம்

    3. ரத்தப் பிச்சை

    4. பலா மரங்கள்

    5. கைப்பாவை

    6. பூக்களில் பேதமென்ன?

    7. அன்னையர் தினம்

    8. ஞானோதயம்

    9. அவசரப் புத்தி

    10.ப்ரைவசி

    11. ஊர் நூலகம்

    12. அருவி சத்தம்

    13. குழந்தையும் தெய்வமும்

    14. விழுதுக்குள் வேர்

    15. அங்கிங்கெனாதபடி!

    16. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?

    17. ஜோடிக்கிளிகள்

    18. கண் பேசும் வார்த்தைகள்

    19. மனம் அகண்டம்

    20. கூர் வாள்

    21. ஸ்டீல் பீரோ

    பரிசு பெற்ற மூவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.  போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    ஆசிரியர்

    Share
  • நவம்பர் (2012) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்!

     

     

    வெங்கட் சாமிநாதன்

     

    இம்மாத கதைகள் அதிக மகிழ்ச்சி தரும் வகையில் நல்ல எழுத்தின் பெருக்கத்தை தந்துள்ளன.

     

    வந்துள்ள 24 கதைகளில் நான்கு கதைகள் ஒன்றோடொன்று போட்டியிடும் வகையில் புதிய விஷயத்தைச் சொல்வனவாகவும் அதைத் திறமையுடன் ஒரு தேர்ச்சியுடன் கையாள்வதாகவும் உள்ளன.

    1. இருவேறு பார்வைகள் : கே. எஸ். சுதாகரன். 2. கல் – மணி ராமலிங்கம், 3. நந்தியாவட்டை – பழமை பேசி  4. கைக்குட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிஸமும்.அரவிந்த் சச்சிதானந்தம்.

     

    இக்கதைகளில் அரவிந்த் சச்சிதானந்தம் எழுதியுள்ள கைக்குட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிஸமும் கதையை இம்மாத வல்லமை பரிசுக்குரியதாகச் சொல்ல விரும்புகிறேன்.

     

    மிகச் சிக்கலான ஒரு ஆளுமை தன்  அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சின்ன சின்ன கஷ்டங்கள், மனப் பிரள்வுகள், தன் இச்சைக்கும் மற்றோர் எதிர்பார்ப்புக்கு வாழும் முரண்களுமான நிரந்தர மனப் போராட்டம். ஆணாகப் பிறந்தும் பெண்மை சார்ந்த விருபபங்கள் மறைத்தே மறைந்தே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள் தன் திருமணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.  இதன் உண்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கதை சொல்லத் சம்பவங்கள், விருப்பங்கள் நம்பக வட்டத்துக்கு வெளியே போவதில்லை. நன்றாக, திறமையுடன் எழுதப்பட்டுள்ளது.

    மற்ற மூவருடைய கதைகளை நான் ஒதுக்க விரும்பவில்லை. இவர்களும் புதிய கதைக் களன்களைக் கொண்டு சேர்த்துள்ளார்கள். அதைத் திறமையுடனும் கையாண்டிருக்கிறார்கள். ஆனால்,  அவர்கள்  ஒரு முறை பரிசு பெற்று விட்டதால், . கடைசியான ஆண்டுத் தேர்வுக்கு அவர்களின் இம்மாதக் கதைகளும் சேர்க்கப்படட்டும். ஒரு முறை பரிசு பெற்ற காரணத்தால் இவை ஒதுக்கப்பட வேண்டாம்.  இம்முறை புதியவருக்கு, திறமையுடன் எழுதப்பட்ட ஒரு புதிய கதைக்கு தரப்படட்டும்

    அரவிந்த சச்சிதானந்தத்துக்கு என் வாழ்த்துக்கள். . .

     

    சிறுகதைப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்:

     

    1. கணினி, ஜகம் நீ

    2. 3ஒரு வினாடி உயிர்

    3.சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க!

    4. அம்பாரி

    5. வயிறாற நன்றி

    6. ரசிகன்

    7. தனக்கொரு நியாயம்

    8. திருத்தப்பட்ட தீர்ப்புகள்

    9. இசைக்க மறந்த வீணை

    10. கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்

    11. வெளி

    12. எங்க வீட்டு சர்வெண்ட்

    13. யாருக்காக அழுதாள்?

    14. பாசம்

    15. தங்க விமானங்கள்

    16. காதல் கல்யாணம்

    17. நன்மையே தீமையாய்!

    18. நந்தியாவட்டை

    19. ஒரு புறம் வேடன்…மறு புறம் நாகம்!

    20. கல்

    21. போதுமடா சாமி

    22.குப்பை

    23. இருவேறு பார்வைகள்

    24. வைரக்கீரிடம்

     

    பரிசு பெற்ற அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த பாராட்டுகள்.  கௌரவப் பரிசு பெறும்  திரு கே.எஸ். சுதாகர், திரு மணி ராமலிங்கம் மற்றும் திரு பழமைபேசி ஆகியோருக்கும் பாராட்டுகள். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து போட்டியில் பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

     

    அன்புடன்

    ஆசிரியர்

     

     

     

     

     

    Share
  • அக்டோபர் (2012) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

     

    அன்பு நண்பர்களே,

     வணக்கம். ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்து வரும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிகஅவசியமாகிறது. தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறோம். தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் ஐக்கியா தொண்டு நிறுவனர் திரு வையவன் அவர்களுக்கும், சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வரும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதோ சென்ற அக்டோபர் மாதத்தின் போட்டி முடிவுகள். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறும்  விடாமுயற்சியில் இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே. தொடர்ந்து உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.

    அன்புடன்
    பவள சங்கரி

    இம்மாதம் முப்பத்தியோரு கதைகள். வல்லமை பிராபல்யமாகி வருகிறது. இந்த மாதக் கதைகளில் மணி ராமலிங்கம் அவர்கள் எழுதிய நோ பால் சிறந்த கதையாக எனக்குப்படுகிறது. இதில் என்னைக் கவர்ந்தது நம் இன்றைய வாழ்க்கையின் முக்கிய கவர்ச்சிகளில் ஒன்றாகிவிட்ட கிரிக்கெட் விளையாட்டும் அதில்  செலவாகும் நேரமும் வாழ்க்கை அனுபவமும்  குறிப்பிடத்தக்க அளவில் இருந்த போதிலும் அது என்னவோ ஒரு விளையாட்டு, அது அவ்வளவு முக்கியமில்லை போல எழுத்தில் அது பிரதிபலிப்பதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அதற்குரிய அழகுகளோடுதான் இருக்கிறது. குழந்தைப் பருவம், பள்ளி வாழ்க்கை,  போலத் தான் விளையாட்டுப் பருவமும்.  அங்கும் மனித உறவுகள் உண்டு, மனிதனின் பலங்களும் பலவீனங்களும் பங்கு கொள்கின்றன. அது ஒரு கால கட்டம் இருப்பினும் பின்னர் அந்தக் கட்டம் முடிந்து திரும்பிப் பார்க்கும் போது கடந்த உறவுகளும் அதன் சந்தோஷங்களும் மனதை பின்னும் ஒரு nostalgia வோடு பாதிக்கின்றன.  மணி மிகத் திறமையாக, convincing -ஆக அந்த அனுபவங்களையும் பின்னர் ஒரு ஏக்க உணர்வோடு திரும்பிப் பார்த்தலையும் எழுதியுள்ளார். யாரும் தொடாத அனுபவ தளம். வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆக, அவருடைய நோ பால் தான் எனக்கு இந்த மாதச் சிறந்த கதையாகத் தோன்றுகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    வெ.சா.

    சென்ற மாத போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் பட்டியல் இதோ:

    1. நீறு பூத்த நெருப்புகள்

    2. நாணயம்

    3. தனியொருவனுக்கு உணவில்லையெனில்!

    4. கொள்ளி எறும்பு

    5. மாற்றான் தோட்டம்

    6.சுழல்

    7. தாசரி

    8. ஒரு முடிவின் மறு பக்கம்

    9. அம்மணி

    10. நாக்பூருக்குப் போ!

    11. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

    12. நோ-பால் – No Ball

    13. கூவமும் கங்கைதான்

    14. ஆண்மீக இச்சை..! (இது எழுத்துப் பிழை அல்ல….மனத்துப் பிழை…)

     

    15. பெட்டைகள்

    16. அம்மாவுக்குக் கடிதம்!

    17. சராசரிகள்

    18. நாத்திகம்

    19. ஈரத்துணி

    20. பேச்சு

    21. வந்து சொல்றேம்மா…

    22. இது என் சொத்து

    23. கனவுச் சாவி

    24. அன்பே தெய்வம்

    25. கோபம்.

    26. மாற்று(ம்) திறனாளி

    27. சொர்க்க வாசல்

    28. மாத்தி யோசி

    29. மௌன ராகம்

    30. நீ என்றுமே என் மகன்தான்

    31.ரகசியம்

    அக்டோபர் மாதப் போட்டியில பரிசை வென்றுள்ள  திரு மணி ராமலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து முயற்சி செய்ய வாழ்த்துக்கள்.

     

    Share
  • செப்டம்பர் மாத சிறுகதைப் போட்டி முடிவு

     

    வெங்கட் சாமிநாதன்

    செப்டம்பர் மாதம் போட்டிக்காக வந்துள்ள சிறுகதைகளுள் பழமைபேசி எழுதியுள்ள செவ்வந்தி என்ற கதை தான் முன்னிற்கிறது.  கிராமத்து எதிர்பார்ப்புகள், ஆசைகள். தன் மருமகள் பெற்ற இரண்டும் பொட்டைப் பிள்ளைகளாக பிறந்தது அவளுக்கு ஒரு ஆற்றாமை. அடிக்கடி சொல்லித் தீர்க்கவேண்டியிருக்கிறது. ஆனால் சினை கண்டிருக்கும் வீட்டுமாடு மட்டும் என்ன கிடரிக்கன்னாவா போடும், அதுவும் காளைக்கன்னைத் தான் போடும், தன் அவதியைப் பெருக்கும் என்று வேதனைப் படுகிறாள். இது ஒரு முரணாக அவளுக்குப் படுவதில்லை.  வெகு இயல்பான சாதாரண எதிர்பார்ப்பு என்று தான் தோன்றுகிறது. கடைசியில் அதுகிடாரி என்றும் செவ்வந்தி என்று  ஆசையாக வளர்க்கலாம்.  இந்த மாறிய முரணான வாழ்க்கை மதிப்பீடுகள் உறுத்துவதில்லை. பொருளாதாரம், மாறும் வாழ்க்கைச் சூழல் எல்லாம் காரணமாகின்றன்.

    இந்த முரண் வாழ்க்கையில் இயல்புதான். எதுவும் வலிய புகுத்தப்படவில்லை. ஆனால் அந்த முரணை பழமை பேசி கொஞ்சம் அழுத்திச் சொல்கிறார். தான் சொல்ல வந்தது அந்த முரணைப் பற்றி என்று தெரியா வண்ணம், ஒரு நிகழ்ச்சியை இயல்பாக, வேதனைக் குரல் அதிகம் பீறிடாமல் வெளியிட்டிருந்தால் நன்றாக் இருந்திருக்கும்.

    ஆனாலும்  வந்திருக்கும் கதைகளில் இது தான் இயல்பான ஒரு சித்திரத்தைத் தருகிறது. சம்பவங்கள், பாத்திரங்கள், பேச்சுக்கள் எதுவும் செயற்கையாக உருவாக்கப்படவில்லை.  பெரும்பாலான கதைகள், “இதை வச்சு ஒரு கதை ஒண்ணு எழுதிட்டாப் போச்சு” என்கிற தோரணையிலேயே இருக்கின்றன. கதை எழுதப்படுவதுதான். ஆனால் அது எழுதப்பட்டதாக தோன்றாதிருக்க எழுதுவது தான் எழுத்துத் திறன்.

    இந்த மாதப்  போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறுகதைகள்:

    தலைவா…தலைவா….

    காக்கா ஃபார்முலா

    வண்ணமற்ற எண்ணங்கள்

    ஆத்மாவின் கோலங்கள்

    தண்டனைக் காலம்

    இந்த அப்பா வேண்டாம்

    பிரம்மாவின் தலையெழுத்து

    குயில் சத்தம்

    புரிதல்கள்

    ஒரு ஊஞ்சல் பேசுகிறது

    உறைந்த புன்னகை

    மணல் கயிறு

    செவ்வந்தி

    பாட்டிக்கு உடம்பு சரியில்லை

    லட்சியக் கணவன்

    கரையாத மெழுகுவத்தி

    .பெயர் சொல்லும் பிள்ளைகள்

     

    போட்டியில் பரிசு பெற்ற  பழமைபேசி அவர்களுக்கு பாராட்டுகள்.  பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  தொடர்ந்து முயற்சி செய்யவும் வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share