டிசம்பர் (2012) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

வெங்கட் சாமிநாதன்

இம்மாதம் வந்துள்ள 21 கதைகளுள் மூன்று மிக முக்கியமாகத் தெரிகின்றன.

இரண்டு பேர், பழமைபேசியும், மணியும் முன்னரே தெரிந்தவர்கள்.

தெரிந்தெடுக்கப்பட்டவரகளும் கூட.  இருவரும் இம்முறையும் தாம் சொல்ல வந்த விஷயத்தாலும் சொல்லும் திறமையாலும் முன்னிற்கின்றனர். அதே போல நரசய்யாவும் புனைவு அல்ல எனினும், அவர் சொல்லித்தானே இது உண்மை சம்பவம், புனைவு அல்ல என்று நமக்குத் தெரிகிறது, அன்றாட கடல் வாழ்வில் எப்போதும் நிகழ்ந்துவிடக்கூடும்  வாழ்வின் எல்லைக்குப் போய் மீளும் அனுபவத்தை ஏதோ தூங்கி எழுந்த சமாசாரமாக நாடக பாணியும் அதீத வார்த்தைகளும் அற்று மிக அடங்கிய குரலில் எழுதியிருக்கிறார்.  மணி பேசாப் பொருளை எவ்வளவு தூரம் பேசவும் வேண்டும், பேசாது ஒதுங்கவும் வேண்டும், என்று தானே எல்லைக் கோடு இட்டு விளையாடியிருக்கிறார். பழமை பேசியும் பாசமும் ஏக்கமும் மூன்று காலகட்டங்களில் வெளிப்படும் வேறுபடும் உணர்வுகளை, மறுபடியும் அசட்டு உணர்ச்சிகள் இல்லாது எழுதியிருக்கிறார். இம்மூன்றுமே எனக்கு திறமையான எழுத்துக்களாகப் படுகின்றன. எதை விடுவது? எதை ஏற்பது? புனைவு அல்ல என்று ஒதுக்குவதா? ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று ஒதுக்குவதா? ஒவ்வொரு முறையும் ஒரு  புது உலகம். ஒரு  புது வெளியீட்டு முறை.  கைப்பாவை,  மனம் அகண்டம், அங்கிங்கென்னாதபடி, மூன்றையுமே சொல்லத் தோன்றுகிறது. வ்ருடக் கடைசித் தேர்வில் ஒன்று தானே தேர்வு பெறும், எத்தனை எழுதினாலும். இப்போதைக்கு புதிய அனுபவங்களையும், அதைச் சொல்லும் திறமையையும்  கொண்டவர்களை அங்கீகரிப்போமே.

இம்மூவரில் எவரையும் ஒதுக்கும் காரணங்கள் இப்போது எனக்கு ஏதும் புலப்படவில்லை. இடைப்பட்ட நிலை தானே.

பங்கு கொண்ட எல்லோருக்கும் என்  புது வருட வாழ்த்துக்கள்

தேர்வு செய்யப்பட்டுள்ள சிறுகதைகள், (1) பழமை பேசியின், கைப்பாவை, (2) மணியின் மனம் அகண்டம், (3) நரசய்யாவின் அங்கிங்கென்னாதபடி.

வெ.சா.

டிசம்பர் (2012) சிறுகதைப் போட்டியில் பங்குபெற்ற  சிறுகதைகள்:

1.விதி செய்வோம்

2. ரிஷி கர்பம்

3. ரத்தப் பிச்சை

4. பலா மரங்கள்

5. கைப்பாவை

6. பூக்களில் பேதமென்ன?

7. அன்னையர் தினம்

8. ஞானோதயம்

9. அவசரப் புத்தி

10.ப்ரைவசி

11. ஊர் நூலகம்

12. அருவி சத்தம்

13. குழந்தையும் தெய்வமும்

14. விழுதுக்குள் வேர்

15. அங்கிங்கெனாதபடி!

16. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?

17. ஜோடிக்கிளிகள்

18. கண் பேசும் வார்த்தைகள்

19. மனம் அகண்டம்

20. கூர் வாள்

21. ஸ்டீல் பீரோ

பரிசு பெற்ற மூவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.  போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

அன்புடன்

ஆசிரியர்

Share

Comments

One response to “டிசம்பர் (2012) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்”

  1. பழமைபேசி

    போட்டியில் பங்கு பெற்ற, பாராட்டிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *