Tag: sathiyamani srinivasan kavithai tamil delhi avvai

  • தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து. விசுவ(வா)வசு

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து. விசுவ(வா)வசு

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து.
    விசுவ(வா)வசு

    சத்தியமணி 14 04 2025
    ராகம். ஆனந்த பைரவி

    பிறந்தாளே பிறந்தாளே சித்திரை பூமியில்
    விஸ்வவசு பெயரோடு தான்
    மலர்ந்தாளே தவழ்ந்தாளே நித்திரை எழுப்பியே
    விசுவாசம் மணம்வீசும் தான்

    திங்கட் கிழமை திவிதியை நன்னாளில்
    மங்களம் பொங்கிவர நம்வாசல் வந்தாள்
    அங்கம் மினுக்கும் தங்கம் அணிந்து
    சுவாதியில் சிற்றாடைப் பெண்ணாய் நுழைந்தாள்
    தெய்வங்களும் அருள் கூட்டுமே
    முன்னோர்களின் வரம் சேருமே
    இந்நாளும் எந்நாளும் இன்பங்களே

    வச்சிரம் யோகம் சைதுளைக் கரணமாய்
    அச்சிராப் பள்ளி பிள்ளையும்
    தடை போக்குவார்
    மெச்சிப் புகழும் உச்சி குளிரும்
    அன்போடு சுற்றமும்
    களிப் பூட்டுவார்
    மயிலோடு வேல் சிவனாருமே
    உமையோடு ஏழு மலையானுமே
    திருமகள் இல்லத்தில் அமர்ந்தார்களே

    Share
  • அனுமன் பத்து

    அனுமன் பத்து ( 200423)

    முடியாத செயல்களும் முடிக்கும் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு …1
    இயலாது இராமன் துயரறுத்த ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…2
    படியாத அசுரரை அழித்த ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…3
    ஏய்க்கும் ஏமாற்றும் மாயர்வீழ ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…4
    ஆபத்தை அழித்து அருளால் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…5
    துன்பம் அணுகாது காப்பாய் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…6
    ராமஜய ராமஜப ராமசுப ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…7
    வாலிலே பலமோடு வரமாய்வா ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…8
    திக்கெலாம் நிறைந்து காக்கின்ற ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…9
    மறைவாய் மாயையது அணுகாது ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…10
    பத்தும் துதிக்க பத்திரம் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கி யருள்.

    Share
  • அறியாயோ சிறுகிளியே  (கலித்தாழிசை)

    அறியாயோ சிறுகிளியே  (கலித்தாழிசை)

    நமக்கானது என்பதெலாம் நமைவிட்டு போகாது

    நம்மைவிட்டு போவதெலாம் நமக்கென்று ஆகாது

    கிடைக்காத எதுவுமெளிதாய் தானாயாய கிடைக்கும்

    நிலைக்காதது காலவயதும் கர்மம் வினையில் நடக்கும் அறியாயோ சிறுகிளியே

    எதுவும் இல்லை என்றே சொல்வார்

    பணமும் பகட்டும் செருக்கும் கண்டார்

    அதுவும் அவரை அழிக்கும் ஒருநாள்

    பழிக்கும் விதிக்கும் பலியாய் சுருண்டார்  அறியாயோ சிறுகிளியே

    கதவை மூடிட கண்ணை மூடிட

    செய்திடும் தப்புகள் காண்பான்

    காலசக்கர மேந்திட புவிபோல்

    பால்வெளி பலவும் ஏற்பான்  அறியாயோ சிறுகிளியே

    கெடுதல் செய்தார் செழிப்பார் தெரியும்

    வளரும் அவர்தம் ஆசையும்  வெறியும்

    நொடியில் முன்வினை புண்ணியம் அழியும்

    யாவும் கரைந்த பின்னால்  மரியும் அறியாயோ சிறுகிளியே

    வரவும் செலவும் கணக்கு எல்லாம் உனக்கும் மட்டுமல்ல

    பிறவிகள் நோக்கம் அறியும் இறைவன் கணக்கும் தப்புமல்ல

    உறவுகள் பிரிவும் இன்பம் துன்பம் பக்தியும் அதுபோலல்ல

    மனமும் தெளிவும் சரணம் அடைந்தால் இறைவன் தூரமல்ல அறியாயோ சிறுகிளியே

    பார்க்கும்  சுவற்றின் சிற்றெரும்பேநீ

    பாரில் முழுதும்  உனைக்கண்டால்

    கார்க்கும் சிறுகரு கடுகளவேதான்

    பாரும் வளிக்கு  நம்முன்னால்   அறியாயோ சிறுகிளியே

    பெற்றவர் அன்பும் கற்றவர் பண்பும் உற்றது பக்திசாலை

    விற்றவர் வணிகர் மற்றவர் மடையர் பற்றிடு கடவுளின்காலை அறியாயோ சிறுகிளியே

    Share
  • கவியரசும்  கடவுளும்

    கவியரசும் கடவுளும்

    [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

    கவியரசும் கடவுளையும் கண்டதெங்கே

    கண்குளிர கவிதைகளை பொழிந்ததெங்கே

    மண்மகிழ மனங்குளிர கவர்ந்தனால்

    பண்ணிசையில் கலந்தபல பாடலிங்கே

    கவியரசு இறைவனையும் பார்த்தவிதம்

    கண்மூடி கொண்டவனைக் கண்டவிதம்

    ஒவ்வொன்றாய் நானிங்கே சொல்லட்டுமா

    ஒருநாளும் போதாது யுகமும் வேண்டும்

    மதுவெனும் பேயணங்கை கொண்ட போதும்,

    மங்கையரின் மஞ்சனையில் துஞ்சும் போதும்,

    தங்கமகள் செந்தமிழாள் கொஞ்சும் போதும்,

    மெல்லிசை விஸூவோடு கெஞ்சும் போதும்,

    பக்திபட கதைகளிலே கலந்த போதும்,

    வீணையுடன் மகாதேவன் மீட்டும் போதும்,

    கண்ணனுடன் கீதையுடன் கலந்த போதும்,

    கட்டுமீசை பாரதியை படித்த போதும்,

    கழகமென கொடுத்து சொத்தை இழந்த போதும்,

    பகுத்தறிவை தேடி பக்தி சுவைத்த போதும்,

    தனக்கு என்று தன்னுள்ளே நின்ற போதும்,

    தயங்காது உண்மைசொலும் நேரம் போதும்,

    போதும் போதுமென தெய்வம் கண்டார்

    கவியரசு

    போகின்ற போக்கினிலே நமக்கும் தந்தார்

    திரைப்பாடல் என்றதனால் எளிதில் ஈர்க்கும்

    தினம்தினமும் கேட்பதனால் செவிகள் ஏற்கும்

    இசையோடு மூளையிலே பதிந்ததெலாம்

    எப்போதும் இனிக்கிறது  ஆமாம்  என்பீர்

     

    Share
  • தமிழிவள் துடிப்பும் அடங்கிடுமோ?

    சித்திரை நிலவு சிரிக்கின்றாள்
    செந்தமிழ் கேட்டு நகைக்கின்றாள்
    முத்தமிழறிஞர் சங்கத்தை
    மோகனமிட்டு அளக்கின்றாள்
    உத்தமர் யாரெவர் புரியவில்லை
    பித்தர்கள் கூட்டமாய் குறைவுஇல்லை ()

    கற்றவர் சபையிலை அங்கினுமே
    கட்சிகளாக காணுகின்றாள்
    பெற்றவரில்லா பிள்ளையைப் போல்
    பெருந்துயர் மனதுடன் வாழுகிறாள்
    உற்றவர் உறவினர் எனச்சேர்ந்த
    ஒருபிடி குழுக்களில் மேடைகளில்
    மற்றவர் யாவரும் பார்வையிலா குருடராகவே காணுகிறாள் ()

    தனைச்சுற்றி வட்டமும் போட்டதிலே
    தினமொரு பலன்தரும் சனியவராய்
    அணைகட்டி ஓடிடும் காவிரியை
    தன்பிடி தடுக்கும் மாநிலமாய்
    கடன்விட்டு போயினும் கர்மாவின்
    கடைபட துயருரும் நாடதுபோல்
    உடன்கட்டை ஏறிட விழைவதுஉம்
    உத்தமமா பழி
    மொழியினமா? மொழியிடமா ? ()

    பணத்துக்கு வள்ளுவன் எழுதவில்லை
    பதவிக்கு பாரதி பணியவில்லை
    ஆட்சிக்கு ஆழ்வார் பாசுரங்கள்
    தமிழினில் தந்தார் புகழ்ச்சியில்லை
    விருதுகள் பெற்றிட விளம்பரங்கள்
    கம்பனும் அவ்வையும் செய்யவில்லை
    திறமைகள் பளிச்சிட தெரிந்தும்பலர்
    வளர்ந்திட வளர்த்திட நினைப்பதில்லை ()

    தன்னலமோடு கங்கைநதி
    தண்ணீர் மறுத்தால் பயனுளதோ
    தன்குலம் வாரிசெனச்சொல்லி
    வானம் மாரியை மறுத்திடுமோ
    பிரிவினை ஏற்றி அதில் பிழைக்கும்
    நரிகளும் எலிகளும் அணிவகுத்தால்
    துயரினைப் போக்கி உயிர்வாழ
    தமிழிவள் துடிப்பும் அடங்கிடுமோ ()

    Share
  • அன்னையர் தினம் 2022

    அன்னையர் தினம் 2022

    எத்தனை அடைந்தாலும் நிறைக்காதம்மா

    அத்தனை உறவுகளும் உனக்காகுமா

    உனக்கே நிகராகுமா () 

     

    உனக்கென நான் கிடைத்தேன்

    எனக்கென நீ கிடைத்தாய்

    தவமெனத் தான் சுமந்தாய்

    தயவுடன் தாங்கி நின்றாய்

    என்னுடன் நிதம் அமர்ந்தாய்

    இன்முகம் தினம் கொடுத்தாய்

    கவிதைகள் எழுத வைத்தாய்

    களித்தபின் தலை முகர்ந்தாய்

    அத்தனை நினைவுகளும் மறக்காதம்மா

    எத்தனை பிறவிகளும் பிரிக்காதம்மா ()

    தூளியில் துயிலளித்தாய்

    தோளினில் இதமளித்தாய்

    பைந்தமிழ்ப் பாசுரங்கள்

    பாலினில் நீ சுரந்தாய்

    அன்பினில் வளரவைத்தாய்

    அறவழித் தெளியவைத்தாய் 

    பண்புடன் பயிலவைத்தாய்

    பாரினில் பழகவைத்தாய்

    உதவிடும் குணமளித்தாய் தொடர்வேனம்மா

    உயர்ந்திட வழிவகுத்தாய் சிறப்பேனம்மா ()

    தாயினும் உயர்வுண்டோ

    தாயகம்!! அயர்வுண்டோ

    பிறவியின் பயனுண்டோ

    பிழைப் பொறுத்தருளுண்டோ

    கயமை விலக்கச் சொன்னாய்

    மெய்மை விளக்கி சென்றாய்

    நன்நெறி புரிய வைத்தாய்

    நலங்களைக் குவியத்தந்தாய்

    நனவினில் பிரிந்தே சென்றாயம்மா

    நினைவினில் இருந்தே காப்பாயம்மா ()    

    Share
  • தீபாவளி 21

    நேர்மறை எழுக எதிர்மறை விழுக
    பார்மறை ஒதும் படி………………………………………………..1

    புகையும் பகையும் அகலும் அகலால்
    குகையும் ஒளியாகவே………………………………………….2

    ஒளியும் ஒலியும் வழியும் அறியும்
    விழியும் மனதும் களி……………………………………………..3

    சக்கரம் சுற்றிட சங்கடம் கலைய
    இக்கணம் இறையைப் பிடி……………………………..4

    புத்தாடை அணியும் இந்நாளில்
    பக்தியும் வளர்க்கப் பார்…………………………………….5

    கசப்பினை மறந்து இனிப்புச் சுவைத்தாலும்
    கசப்பிலே அகலும் பிணி……………………………………6

    நடிப்பும் நாடகம் (தீப)ஒளியில் தெரிந்தபின்
    படிப்பினை பயனாக முயல்……………………………7


    தெரியாதென நினைத்துப் பிழைகள் செய்தாரை
    சரியாகக் காட்டும் நாள்…………………………………….8


    குருவிடமே திருடும் மாணவர் பலருக்கும்
    குருடுமே அளிக்கும் விதி…………………………………..9


    தீயால் வண்ணம் தீட்டிடும் வளியதை
    தூய்மை ஆக்க முனை……………………………………….10

    இல்லோர் அகமகிழ இருப்பதைப் பகிரவே
    இருப்போர் பெற்ற பயன்…………………………………….11

    வாழ்த்தோடு மட்டும் பயனிலை வையத்தில்
    வீழ்ந்தோரை எழுப்பி விடல்……………………………….12

    முறுக்கோடு காரம் சுவைக்கும் போதிலே
    பொறுப்போடு பற்கள் துணை………………………..13

    கங்கை நீராடின் கசடுபோம் வினையகல
    அங்கை யால்தானம் செய்………………………………….14

    ஊசியின் பட்டாசு வெடிப்பது அன்றி
    ஓசியில் மனதும் கெடும்……………………………………15

    தலையாய் தீபாவளி பலருக்கு சிலருக்கு
    தலையில் தீராத வலி…………………………………………….16

    இருட்டில் ஒளியான பின்னரும் சிலருக்கு
    இருட்டில் தான்வயிர் வளர்ப்பது…………………17

    கெடுவது இனுமென்ன இருக்கிறது ஆட்சியில்
    சுடுவதே கொள்கை யானபின்……………………18

    கற்றவர்க்குச் சிறப்பிலை தேர்வில் தோற்று
    உற்றவர்க்கு ஊடகம் இனி………………………………..19

    எரிவாயு கடனேற சம்மதம் ஊடகமே
    கரிவாயு வந்தால் பிணி…………………………………….20

    வாழ்த்தினை வழங்கினால் கீர்த்தி வெறுத்து
    காழ்ப்பினை அளித்தே அழி………………………….21




    Share
  • கோட்டையினில் கவியரசு

        புது கோட்டைகளில்  உன் முடியரசு
         மது  ஊற்றுகளில்      தமிழ்  குடியரசு
         உள  மாளிகையில்    பெருமா நிலஅரசு
         நீ  மாத்திரம்  தான்  கவி புவியரசு       ()
        செட்டினில்  நுழைந்ததும் மெட்டுவரும்
        மெட்டினில்  கலந்ததும்  சந்தம் வரும்
        சட்டென  சொற்களில் ஆற்றல்வரும்
        தட்டினில்  பதிவிடும் பாட்டுவரும்
        பள்ளி களறியா பாமரர்க்கும்
        கல்வி களறியா  காதலருக்கும்
        மல்யுத்தமறியா கோழையருக்கும்
        புரிந்திடும் உரந்தரம்  பொருளிருக்கும்   ()
        கண்ணனும் பிறந்து தவழ்ந்திடுவான்
       ஆயரின்  மடியினில் உறங்கிடுவான்
       மூங்கில்  காடுகள் குழலோதும்
       தூங்கிட   மருத்துவம் இது போதும்
        ஏய்த்தவர் இன்னும்   இருந்தாலும்
       ஏமாற்றியவர்  தான்  இளித்தாலும்
       கோட்டைகள்  உன்கொடி  பறக்குதய்யா
       கோபுரங்கள் பார் வணங்குதய்யா !!   ()
    Share
  • திருமாலடி பிடிப்பாவை

    திருமாலடி பிடிப்பாவை

    சத்தியமணி
    பொடியான் தானமிட நெடியான் அடியளக்க
    அடியான் கல்லையே அகலிகை ஆக்கும்
    முடியான் மூவுலகின் இடையான் திருமலைப்
    படியான் அரங்கக் குடியானைப் பிடிமனமே…1
    ஆவினம் அழைக்க அதன்மடி பால்சுரக்க
    பூவினம் மொட்டுரிய பொன்வண் டெச்சமிட
    கூவினம் பாபயில  கோபியர் மத்தொலிக்க
    நாவினம் கோவிந்தா வெனுநாதனைப் பிடிமனமே…2
    Share
  • அந்த வருடம், புதிய வருடம்

    சத்தியமணி

    வருவது யாரோ??…புது வருடமா!!
    தருவது தானோ ?? இனிய வரமா!!
    முகங்களைப் பார்த்து முறுவல் பெறுமா?
    உறவுகள் கூடி விருந்து தருமா?

    எந்நேரமும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    எப்போதுமே ஃபேஸ்புக் ஃபேஸ்புக் ஃபேஸ்புக்
    இல்லையென்றால் ச்சேட்டிங் ச்சேட்டிங் ச்சேட்டிங்
    மிச்சமெல்லாம் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங்
    தங்க நேரம் வீணாகிக் கழிகின்றதே
    வாழ்வு வெறும் வயதாகி வளர்கின்றதே… (வருவது யாரோ?)

    தாயுடன் பாட நேரமில்லையா?
    தந்தையுடன் பேச வார்த்தையில்லையா?
    உறவுகள் ஒன்றாய்க் கூடவில்லையே?
    நனவுகள் நட்டம் பார்க்கவில்லையே?
    இந்த வருத்தம் நீக்கிடுமோ
    அந்த வருடம் புதிய வருடம் (வருவது யாரோ?)

    அறிவினில் பெற்றது அதையும் மறந்தோம்
    பிரிவினில் விட்டது எதையும் தொலைத்தோம்
    அனுபவம் கொடுத்ததை எங்கு நினைத்தோம்
    அதற்கும் மேலே தனித்துத் தவிர்த்தோம்
    இந்த வருத்தம் நீக்கிடுமோ
    அந்த வருடம் புதிய வருடம் (வருவது யாரோ?)

    Share
  • பொறித்துப் படி

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    எத்தனைக்  கொடுமையிது எத்தனைக்    கொடுமையிது இத்தருண  மிங்கே
    அத்தனைக்  கடுமையிது      அத்தனைக்   கடுமையிது       முத்தமிழ    ணங்கே!
    இத்தனைக்  காயமுடன்         இம்மகள்         துடித்தழுது        இவ்வலியு   மோடு
    வத்தனைக்  காய்வந்து            பலியாகி         கிடக்கிறாள்      பரிகாச        மோவிது ?

    பெண்ணுக்கு  சீர்மதிப்பும்  சிதறாத           சிறப்பும்   தருவதுதான்       ஈன்ற‌
    மண்ணுக்கு     அழகாகும்     மறையாதப் புகழாகு   மெனத்தெரியா மலே
    கண்ணுக்கு      இழுக்கும்      கசையடி       வழக்கும்   காணநாற்சந்      தியில்
    இண்டனமா!    இதற்கும்       மேலெழு         ந்தாரினி   எள்ளிநகை           யாடவோ

    குயிலாய்ப்    பாடிவரும்   பறவையை   பருந்துகள்  உரித்து    ருசியாற‌
    மயிலாய்ப்     பரதமிட        மேடையில்    வருவதை    குறித்து    பசியாற‌
    பயிலாய்ப்     பைந்தமி      ழாலினுடை   கண்ணகி    பதிவிர    தையான‌
    உயிரும்          குலமும்          இனமும்           இனியும்      கற்புடன்   வாழுமோ

    அன்னைக்கு   தங்கைக்கு   தமக்கைக்கு      தாரமாய்  வந்துள மனைக்கும்
    இன்றைக்கு    மகனுக்கு       மனைவியாய்    வந்திடும்  குலவிளக் கிற்கும்
    என்றைக்கோ  இந்நிலை     ஏற்பட்டிருப்பின்  ஆதாரம்  கேட்டுநீ   பார்ப்பாய்
    வன்மைக்கு      பலியாகி       இன்மைக்குள்     நீமட்டும்   அகந்தை  யோடு

    தவறிழைத்தால்  திருந்தவே  தப்புசெயின் வருந்தவே இனியும் வாழ்வில்
    உபரியானவை    வந்தபோது  உணர்ந்து       தெளிந்து  அறமும்   கண்டே
    கவரிமானினக்     கட்டுப்பாடு   மறந்து               போனதில்  தட்டுப்பா    டுமனச்
    சுவரினில்       குறளும்   அவ்வையின் அகச்சூடி  பொறித்துப்  படி

    Share
  • இரங்கற்பா – கலைஞர் கருணாநிதி யெனும்……

    கலைஞர் கருணாநிதி யெனும்……

    உதய சூரியன் மறைந்து விட்டது தமிழ்
    இதய காவியம் இறந்து விட்டது
    பதிய வைத்தவை படர்ந்து வளர்ந்தவை
    விதியெனும் சொலில் நழுவி விட்டது

    சென்னை யென்பதும் கோட்டையின் பலம்
    இன்று நமக்கென கிடைத்ததெப்படி
    செம்மொழி யெனும் சிறப்பு கிட்டிட‌
    தம்மொழிக்குமோர் வாய்ப்பதெப்படி
    சாதியிலை யினும் சாற்றும் பெருந்தகை
    வானப்பாதைக்கு சென்றதெப்படி
    மீதியிலை யெனும் போர்க்களங்களில்
    வாகை சூடியே வாழ்ந்ததெப்படி

    கறுப்பில் தெரிவதை சிகப்பில் தோய்ந்திட‌
    கவிதை வசனமாய் கொடுத்த‌தெப்படி
    வெறுப்பில்லாமல் தமிழ் விரத‌மிருந்தவன்
    விருப்பமுடன் விண்விழைந்ததெப்படி
    புதையலாய் தமிழ் அகத்தின் முளைத்தவன்
    புதைந்து பெட்டியில் போனதெப்படி
    நிலையிலாது இவ்வுலகம் மென்றென‌
    அலைகள் மடியினில் அயர்ந்ததெப்படி

    தலையிலாது வெறும் சிலையிலாது
    கலைஞரெனுமுன் பெயரழியாது!
    சிதையிலாது துயர் வதையிலாது
    சென்ற பின்னுமுன் புகழ் அழியாது! – சீர்
    வினையிலாது பெறும் மதிப்பிலாது
    வாழும் வாழ்வதூஉம் பயனிலாதெனப்
    பிழையிலாது இப்பிறந்தமண்ணிலே
    நிகழ்ந்த சரிதமும் நிலைத்து வாழுமே!!

    Share
  • திருடி விட்டான்

    சத்தியமணி

     

    திருடி விட்டான் ஒருவன் நெஞ்சத்தினை
    திருடும் காதலில் வஞ்சத்தினை
    கேட்டால் தருவேனே உள்ளத்தினை – கண்ணா
    திரும்ப தரவேண்டாம் கள்ளத்தினை

    மருளும் மான் விழிகள் உனைப் பார்த்து
    மயங்கும் போதுனக்கு கலக்கமென்ன‌
    அருளும் தேன் மொழிகள் எனைப் பார்த்து
    அள்ளி பொழிவ‌தற்கு தயக்கமென்ன‌
    விரையும் யமுனை நதி பெருக்கெடுப்பில்
    விழையும் உன்னாட்டம்! அரங்கேற்று !!
    உறையும் வரையில் எனை உறவாடி
    உடைகளாகி யெனை அழகேற்று !!

    விரும்ப விரும்ப குழல் இசைப்பிரித்து
    விருந்து கொடுக்கும் இதழ் மதுகொடுத்து
    திரும்ப திரும்ப மனம் துதிகொடுத்து
    அருந்த விழையும் திறன் துளிர்விடுத்து
    அரும்ப அரும்ப மலர் மணம்பிறந்து
    ஆரமாகும் அவன் மனம்திறந்து
    நிறம்ப வழியும் இன்ப முகில்பொழிந்து
    நீலவான மதில் நினைவிழந்து

    Share
  • நமக்கு நாமே எதிரிகள்

     சத்தியமணி

     

    நமக்கு நாமே எதிரிகள்

    நாம்தான் தேச துரோகிகள்

    உண்மையில் குற்றவாளிகள்

    உணர்ந்தால் இலை பிரதிவாதிகள்

     

    நிறங்களை இனங்களை கலக்க‌விடாது

    பிரித்து கலவரம் காட்டினோம்

    திறங்களை பார்த்து வாய்ப்பளிக்காது

    பள்ளியை சுடுகாட்டாக்கினோம்

    வகுப்பு என்பதன் பொருளதை மாற்றி

    வீதியில் வெறியுடன் ஆடினோம்

    சிறப்பு சொல்லிடும் பல்கலைகழகம்

    சிதைத்து சிறைகளாய் மாற்றினோம்

     

     

    பணமும் பகட்டும் வசதியும்காண‌

    விட்டு அயலகம் ஏகினோம்

    புழுங்கும் மனதை திருந்தவிடாது

    அங்கே குடிமகனாகினோம்

    கலங்கும் தாயகம் வதங்கிட கண்டும்

    காணா திருகுரு டாகினோம்

    கற்க கசடற கற்ற பின்னாலே

    விற்ற கலைபொருளாகினோம்

     

     

    அழுகிய காய்களை கறிகளில் சேர்த்து

    அமுதாய் உண்பவர்  ஆகினோம்

    அழுக்கினில் கிடைத்த அவலங்களோடு

    அணிவகுப்புகளை பாராட்டினோம்

    குலப்பட மெடுத்து கலப்படம் மாட்டி

    கும்பிடும் பக்தரும் ஆக்கினோம்

    செவிப்பட கதறிட செப்புகிறாள் தாய்

    மண்ணுக்கு ஏதுரை செய்யுவீர்

     

     

    லஞ்ச ஒழிப்போம் இன்றெனச் சொல்லி

    அஞ்சலுடன் கை அலம்பினோம்

    வஞ்சகம் அறுப்போம் என்றெனச் சொல்லி

    வயதினர் விடுதிகள்  காட்டினோம்

    தஞ்சம் என்றென வரும் அரவுகளை

    நஞ்சுடன் வாழக் காப்பாற்றினோம்

    மிஞ்சும்படி இனி மிச்சம் வைக்காது

    எல்லாம் கெட கொண்டாடினோம்

     

    தாயைப் பழித்து வாழ்ந்தாரென்ற‌

    சரித்திர முண்டோ சொல்லுவீர்

    தாய்மண் அழிக்க சிறந்தாரென்ற‌

    தகவலும் முண்டோ சொல்லுவீர்

    அடிமை அழித்து குடியரசாகியும்

    அவலப்பெண்ணா ? பாரதம்

    உரிமை கோரி உலையில் போட்டீர்

    பெருந்தகை யாளரே! வாழியே

    Share
  • பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

    சத்தியமணி

    KKL18PML-horz

    கணபதி நின்பொற் தாளடி சரணம்

    ரிதிசித்தி நிம்மதி தா

     

    ஆழ்வார் அடிபற்றி அருட்பக்தி பெற்றாரும்

    தாழ்வாரோ இவ்வையகத்தே

     

    சக்தியை தந்துநல் சாந்தமும் தந்து

    பக்தியை தந்துதிரு மகளுடன்சேர்

    யுக்தியை தருமுன் அருள்கொண்டபின்

    பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா ! (more…)

    Share