கண்ணதாசன்2

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

கவியரசும் கடவுளையும் கண்டதெங்கே

கண்குளிர கவிதைகளை பொழிந்ததெங்கே

மண்மகிழ மனங்குளிர கவர்ந்தனால்

பண்ணிசையில் கலந்தபல பாடலிங்கே

கவியரசு இறைவனையும் பார்த்தவிதம்

கண்மூடி கொண்டவனைக் கண்டவிதம்

ஒவ்வொன்றாய் நானிங்கே சொல்லட்டுமா

ஒருநாளும் போதாது யுகமும் வேண்டும்

மதுவெனும் பேயணங்கை கொண்ட போதும்,

மங்கையரின் மஞ்சனையில் துஞ்சும் போதும்,

தங்கமகள் செந்தமிழாள் கொஞ்சும் போதும்,

மெல்லிசை விஸூவோடு கெஞ்சும் போதும்,

பக்திபட கதைகளிலே கலந்த போதும்,

வீணையுடன் மகாதேவன் மீட்டும் போதும்,

கண்ணனுடன் கீதையுடன் கலந்த போதும்,

கட்டுமீசை பாரதியை படித்த போதும்,

கழகமென கொடுத்து சொத்தை இழந்த போதும்,

பகுத்தறிவை தேடி பக்தி சுவைத்த போதும்,

தனக்கு என்று தன்னுள்ளே நின்ற போதும்,

தயங்காது உண்மைசொலும் நேரம் போதும்,

போதும் போதுமென தெய்வம் கண்டார்

கவியரசு

போகின்ற போக்கினிலே நமக்கும் தந்தார்

திரைப்பாடல் என்றதனால் எளிதில் ஈர்க்கும்

தினம்தினமும் கேட்பதனால் செவிகள் ஏற்கும்

இசையோடு மூளையிலே பதிந்ததெலாம்

எப்போதும் இனிக்கிறது  ஆமாம்  என்பீர்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.