கந்தசஷ்டிப் பிரார்த்தனை [4 ம் நாள்]

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

ஓமென்னும் பிரணவத்தின் உட்பொருளும் ஆவாய்
உலகுய்ய அவதாரம் எடுத்துவனும் ஆவாய்
தீமையெனும் இருள்சூழா காத்திடுவாய்  முருகா
தினந்தோறும் பரவுகின்றோம் திருவருள்தா முருகா

அறமற்ற அரசியலார் ஆட்சி அமர்கின்றார்
ஆணவத்தை அகமிருத்தி அல்லல் கொடுக்கின்றார்
நீதியொடு நிதிதன்னில் ஊழல் நுழைக்கின்றார்
நெஞ்சுருக வேண்டுகிறோம் எமைக்காப்பாய் முருகா

ஆதியந்தம் இல்லாத அருட்சுடரே கந்தா
அசுரரது செருக்கடக்கி அமரர்துயர் தீர்த்தாய்
பேதலித்து நிற்கின்ற அடியார் துயர்தீர்க்க
பெம்மானின் திருக்குமரா பேரருளைப் பொழிக

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *