தீபாவளி 21
நேர்மறை எழுக எதிர்மறை விழுக
பார்மறை ஒதும் படி………………………………………………..1
புகையும் பகையும் அகலும் அகலால்
குகையும் ஒளியாகவே………………………………………….2
ஒளியும் ஒலியும் வழியும் அறியும்
விழியும் மனதும் களி……………………………………………..3
சக்கரம் சுற்றிட சங்கடம் கலைய
இக்கணம் இறையைப் பிடி……………………………..4
புத்தாடை அணியும் இந்நாளில்
பக்தியும் வளர்க்கப் பார்…………………………………….5
கசப்பினை மறந்து இனிப்புச் சுவைத்தாலும்
கசப்பிலே அகலும் பிணி……………………………………6
நடிப்பும் நாடகம் (தீப)ஒளியில் தெரிந்தபின்
படிப்பினை பயனாக முயல்……………………………7
தெரியாதென நினைத்துப் பிழைகள் செய்தாரை
சரியாகக் காட்டும் நாள்…………………………………….8
குருவிடமே திருடும் மாணவர் பலருக்கும்
குருடுமே அளிக்கும் விதி…………………………………..9
தீயால் வண்ணம் தீட்டிடும் வளியதை
தூய்மை ஆக்க முனை……………………………………….10
இல்லோர் அகமகிழ இருப்பதைப் பகிரவே
இருப்போர் பெற்ற பயன்…………………………………….11
வாழ்த்தோடு மட்டும் பயனிலை வையத்தில்
வீழ்ந்தோரை எழுப்பி விடல்……………………………….12
முறுக்கோடு காரம் சுவைக்கும் போதிலே
பொறுப்போடு பற்கள் துணை………………………..13
கங்கை நீராடின் கசடுபோம் வினையகல
அங்கை யால்தானம் செய்………………………………….14
ஊசியின் பட்டாசு வெடிப்பது அன்றி
ஓசியில் மனதும் கெடும்……………………………………15
தலையாய் தீபாவளி பலருக்கு சிலருக்கு
தலையில் தீராத வலி…………………………………………….16
இருட்டில் ஒளியான பின்னரும் சிலருக்கு
இருட்டில் தான்வயிர் வளர்ப்பது…………………17
கெடுவது இனுமென்ன இருக்கிறது ஆட்சியில்
சுடுவதே கொள்கை யானபின்……………………18
கற்றவர்க்குச் சிறப்பிலை தேர்வில் தோற்று
உற்றவர்க்கு ஊடகம் இனி………………………………..19
எரிவாயு கடனேற சம்மதம் ஊடகமே
கரிவாயு வந்தால் பிணி…………………………………….20
வாழ்த்தினை வழங்கினால் கீர்த்தி வெறுத்து
காழ்ப்பினை அளித்தே அழி………………………….21
அருமை அருமை.. வாழ்க தமிழ்.. வாழ்க கவிஞர்