Blog

  • கதை வடிவில் பழமொழி நானூறு – 30

    கதை வடிவில் பழமொழி நானூறு – 30

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 61

    கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
    அற்ற முடிப்போன் அறிவுடையான் – உற்றியம்பும்
    நீத்தநீர்ச் சேர்ப்ப! ‘இளையோனே ஆயினும்
    மூத்தோனே ஆடு மகன்’.

    பழமொழி –  ‘இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’

    கான்பால் பாபியின் பையன் ஷுப்கருக்கு இன்னிக்கு பாராட்டு விழா. நானே ஆட்டோ பிடிச்சு கிளம்பி வந்துட்டேன். உள்ளுக்குள்ள இருக்கற  நீ இன்னும் கிளம்பலையே. உனக்குத் தெரியாதா? கேட்டுக் கொண்டே வருகிறாள் என் தோழி வசுதா. நானூறு வீடுகள் கொண்ட எங்கள் சொசைட்டியில் முன்பு குடியிருந்தவள் அவள்.

    ஆமாம்.. நேற்றைக்கு துர்கா பூசையிலேயே எல்லாரும் இதைப்பற்றி அலசிட்டாங்க. உனக்குத்தான் தெரியுமே நம்ம சொசையிட்டியில ரெண்டு குரூப் இருக்குனு. அதில நம்ம கமலா ஆன்ட்டி குரூப் நேற்றைக்கு பயங்கரமா விமர்சனம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என்னை அவசரப்படுத்தியவள் வம்பு கேட்க உள்ளே வந்து உட்கார்ந்து விட்டாள்.

    பூசை ஏற்பாடு அமக்களமா இருந்துச்சு. பத்துநாட்கள் நடக்கற பூசையில நேத்தைக்குத்தானே முதல் நாள். நம்ம சொசைட்டி பிரசிடெண்ட் ஏற்பாடாச்சே. என ஆரம்பித்து நான் அவளை அந்நிகழ்வுக்கே அழைத்துச் சென்றேன்.

    துர்கா மாதாவுக்கு இன்னிக்கு அணிவித்திருக்கிற உடை முதல் ஆபரணம் வரை எல்லாம் எங்க குடும்பச் செலவு. மாதா அருளால என் மனைவி போட்டிருக்கிறத விட அதிக விலையில அவளுக்கு வாங்கி அணிவிச்சிருக்கேன். பெருமையாக ஆரம்பித்தார். சொசைட்டி பிரசிடெண்ட் கௌரவ் தோபால்.

    இந்தத் தடவை துர்கா பூஜா பந்தலோட தீம் பசுமைங்கறதால பச்சைக்கலரிலேயே அலங்காரங்களப் பண்ணச் சொன்னேன்.  நம்ம சொசையிட்டி பொதுக்கூடமே உருமாறி இருக்கறத நீங்க கவனிச்சிருப்பீங்க. வெளியிலேந்து பார்த்தா ஏதோ ஒரு மர பொந்துக்குள்ள நுழையற மாதிரி  பெரிய ஆல மர வடிவத்தைச் செய்து வாயிலை மறைத்திருக்காங்க. உள்ள நுழைந்தவுடனே சுவர்கள் முழுக்க பறவை உருவங்களும் அவைகளோட கூடுகளையும் வச்சிருக்காங்க. தரையில் பல விலங்கு உருவங்கள். மொத்தத்துல ஒரு காட்டுக்குள்ள துர்கா நிக்கற மாதிரி இருக்கு.

    பூசை முடிஞ்சு ஷுப்கர் தீச்சட்டியப் புடிச்சு முதலில தனுசி நடனத்தை ஆரம்பிச்சான். அவன் ஆடி முடிச்சவொடனே அவன் நண்பன் பபுலு கிட்ட குடுத்துட்டான். அதுக்கப்புறம்தான் கமலா ஆன்ட்டி குரூப் வம்புபேச ஆரம்பிச்சிட்டாங்க. ஷுப்கர் ஆடி முடிச்சு தீச்சட்டிய என் பேத்தி கையிலதான் குடுத்திருக்கணும். அவளும் அவ தோழிகளும் ரொம்ப நேரமா துர்கா மாதா ஆசி வாங்க காத்திருக்காங்க. சின்ன பிள்ளைங்க போய் படிக்க வேணாமா. இவங்க எப்ப தனுசி ஆட உடுவாங்கனு காத்துக்கிட்டா நிக்க முடியும். சரி அதுதான் போகட்டும். குறைந்த பட்சம் சங்கு ஊதறதுக்காவது விட்டிருக்கணும்.அதையும் ஷுப்கர் அம்மா கான்பால் வாங்கி கையில வச்சிக்கிட்டாங்க. என்னவோ இந்த பூசையே இவங்களுக்காகப் பண்ணற மாதிரி குடும்பமே இப்படி முன்னால நின்னா எப்படி.

    பாரு பத்ராஜி குடும்பம் எவ்ளோ நேரம் காத்துக்கிட்டு நிக்கறாங்க. அவங்க பெங்காலி இல்லையா. அவங்களுக்குதானே இந்தப் பூசை முக்கியம். இதுலயும் பீஹாரி, பஞ்சாபி எல்லாரும் முன்னால வந்துட்டா நல்லாவா இருக்கு. அடுத்து வர சத் பூஜா இதுல எல்லாம் அவங்க செய்துக்க வேண்டியது தானேன்னு ஆரம்பிச்சதுதான் தாமதம். பிரசிடெண்ட் மைக் எடுத்து அமைதினு சொல்ற வரை எல்லாரும் கூடிப்பேச ஆரம்பிச்சிட்டாங்க.

    அப்பறமாதான் தோபால்ஜி ஒருவழியா எல்லாருக்கும் விளக்கிச் சொன்னார். கான்பால் அவர்களின் பையனான ஷுப்கர் தன் நண்பர்கள் உதவியோட உங்க எல்லார் பிளாக்கோட மொட்டைமாடிகளிலும், உங்க ஒவ்வொரு வீட்டு பால்கனியிலயும் செடிகள் வைக்க முயற்சி செஞ்சான். அப்ப எவ்வளவு பாடுபட்டிருப்பான். இப்ப பாக்கறதுக்கு நம்ம சொசைட்டியே நல்லா இருக்கு. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மையத்திலிருந்து அவனோட இந்தச் சேவையைப் பாராட்டி பரிசு கொடுத்தாங்க. அந்தப் பணம் பத்தாயிரத்தையும் அவன் சொசைட்டியின் நலத்துக்கே கொடுத்துட்டான். அதைப் பாராட்டிதான் நாளைக்குவிழா எடுக்கப்போறோம். எல்லாரும் அவசியம் கலந்துக்கணும்.

    அப்டின்னு அவர் உரையை முடிச்சவொடனே பாக்கணுமே கமலா ஆன்ட்டி குரூப்ல எல்லார் முகத்திலயும் எள்ளும் கொள்ளும் வெடிச்சுச்சு.

    இவங்களப் பத்தி தெரியாதா என்ன. நாளைக்கே இவங்க பேத்தி பன்னிரண்டாம் வகுப்பில் தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேல மதிப்பெண் எடுத்தான்னா சொசையிட்டி சார்புல பரிசுத்தொகை குடுப்பாங்கல்ல. அப்ப இந்த பிரசிடெண்ட்ட உட்டா வேற ஆள் இல்லனு முகஸ்துதி பாடுவாங்க.

    பாவம் அந்த ஷுப்கர் எத்தன வருசமா பாடுபட்டான். அவனுக்கு இந்த மரியாதை கம்மி தான். ‘இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’னு பழமொழியே இருக்கே. இறுதி வரையும் ஏற்றதை முடித்துக் காணும் தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும் அப்டிங்கறதுதான் அதோட பொருள்.

    அம்மா மதுரை நகர் சங்கப் புலவியே… கிளம்பலாமா என வசுதாவைக் கலாய்த்துக்கொண்டே விழாவிற்குச் செல்ல வீட்டைப் பூட்டுகிறேன். .

    பாடல் 62

    நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
    காட்டிக் களைதும் எனவேண்டா – ஓட்டி
    இடம்பட்ட கண்ணாய்! ‘இறக்கும்மை யாட்டை
    உடம்படுத்து வெளவுண்டார் இல்’.

    ‘இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்’

    அவன் நம்ம சோலிக்கு சரிப்பட்டு வரமாட்டாம்னு சொல்லிக்கிட்டே கெடக்கேன். செவி குடுத்து கேக்கானான்னு பாரு. ஏல…. போக்கத்தவனே. நான் இங்ஙன கெடையா கெடந்து கத்திக்கிட்டு கெடக்கேன். நீ உம்பாட்டுக்கு போய்க்கிட்டே இருந்தா எப்டி. ஏல…..செத்த நில்லு… என் ராசாப்பய நான் சொன்னா கேளு அய்யா……  ஆத்தா எப்பமும் உன் நல்லதுக்குத் தான் சொல்லுவேனாம். கத்த ஆரம்பிச்ச ஆச்சி.. கோவத்த அடக்கிக்கிட்டு குழைந்து பேசறாங்க.

    கொஞ்ச நேரமா நான் என் எதிர்வீட்ட கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஆச்சிக்கு வயல் வயக்காடு இதுதான் மொத்த வாழ்க்கையும். அவ மகன் சோலையப்பனும் விவசாயம் தான் பாக்கறான். நல்ல நாணயமான பையன். கல்லூரி வரைக்கும் படிச்சுட்டு திரும்பவும் விவசாயத்துக்கே வந்துட்டாம்னு ஆச்சிதான் அப்பப்ப பொலம்பும். அவங்களுக்கு என்ன பிரச்சினையோ. நாம நம்ம பொழைப்பப் பாப்போம். தீர்மானத்துடன் எழுந்து குளிக்கப் போனேன். குளிச்சிட்டு வந்த பெறகும் ஆச்சி தனக்குத்தானே பேசிக்கிட்டு என் வீட்டுப்பக்கத்துல இருக்கற வைக்கல்படைப்ப ஒழுங்கு படுத்திக்கிட்டு நிக்கறாங்க. பாவம்னு நினைச்சு என்ன ஆச்சினு கேக்கறேன்.

    ஒண்ணுமில்ல ராசா. இப்பம் கொரோனாவால பிள்ளைகளெல்லாம் பள்ளிக்கூடம் போகறதில்ல. எப்டி வெரட்டி உட்டாலும் கேக்காம வைக்கல்படைப்பு மேல ஏறி ஏறி குதிச்சு உருளுதுங்க. அதான் வைக்கல் பூராவும் சிதறிக்கிடக்கு. ஒழுங்கு படுத்துக்கிட்டு நிக்குதேம். அவள் முடித்துவிட்டாள். சரி. காலையில என்ன பிரச்சினைனு சொல்ல விருப்பமில்ல போலன்னு நினைச்சு திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்.

    யய்யா… . சோலிகெடக்கோ. ஆமா உனக்கு ஆயிரம் சோலி கெடக்கும். பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்குடுக்கணுமா இல்லையா. நீ போய்வானு சொல்லறாங்க. நான் கிராமப்புற பள்ளியில் வேலைபாக்கறதால பாடங்களப் பதிவு பண்ணி வாட்ஸஅப்ல அனுப்பிக்கிட்டு இருக்கேன். ஏற்கனவே தொலைக்காட்சி வழி கல்வி கற்பிப்பதற்காக பதிவு செஞ்சு அனுப்பிட்டோமே. அதெல்லாம் சொன்னா இந்த ஆச்சிக்குப் புரியாது.இருந்தாலும் பள்ளிக்கூட வாத்தியார்னு எம்மேல இவங்களுக்கு ரொம்ப மரியாதை. அதுமட்டுமில்லாம தனியா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்னு ஒரு பரிவும் தான். அப்பப்ப சொந்தத்துல பொண்ணுகிண்ணு இருக்கா. பாக்கட்டுமான்னு கேப்பாங்க.

    எனக்கு இப்ப வேற சோலி எதுவுமில்ல. உங்களுக்கு ஏதும் உதவி வேணுமா.., ஆரம்பித்தேன். ஒண்ணுமில்ல. கொழக்கட்ட அவிச்சேன். சூடா ரெண்டு வந்து சாப்பிடுனு அழைப்பு விடுக்கிறாங்க. சரினு சொல்லி வீட்டுக்குள்ள போனேன்.

    கருப்பட்டி, தேங்காய், பாசிபருப்பு எல்லாம் சேந்த பூரணம். நல்லாயிருக்கா. இந்த இன்னும் ரெண்டு போட்டுக்கோ. பனங்கிழங்கு அவிச்சு வச்சிருக்கேன் நாலு எடுத்துக்கிட்டு போ. எம்மவன்தான் புத்திகெட்டு விருட்டுனு சாப்புடாம போயிட்டான். நீயும் எம்புள்ளமாதிரிதான் சாப்புடு. உபசரிக்கிறாள்.

    சாப்பிட்டுக்கொண்டே என்ன பிரச்சினைனு கேக்கறேன். ஒண்ணுமில்ல. அவன்கூட கல்லூரியில படிச்ச புள்ள ஒருத்தனுக்கு வேலை வேணும்னு சொன்னான். நானும் நம்ம மில்லுல வேலை வாங்கித் தரப்போறாம்னு நினைச்சு சரின்னுட்டேன். இப்பந்தான் தெரியுது. இவன் அவன கூடமாட ஒத்தாசைக்கு வச்சிக்கிடப் போறானாம். அந்தப் பிள்ளை வயக்காட்டுச் சோலிக்கு ஒத்துவருவாம்னு எனக்குத் தோணல. மெல்லிசா உடம்புல கதியே இல்ல. ஏதும் உக்காந்து பாக்குத வேலைக்குதான் அவன் லாயக்கு படுவான். அதச் சொன்னா இவனுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வருது. இவன்தான் ஊருக்கு உபகாரியாச்சே. காலையில நீ பாத்துக்கிட்டு இருந்தயில்ல. எப்டி முறுக்கிக்கிட்டு போனான்.

    கவலைப்படாதீங்க ஆச்சி.  உங்க மவன்கிட்ட நான் பேசிப்பாக்கறேன். அப்போதைக்கு அவளைச் சமாதானப்படுத்தினேன். மதியம் பார்க்கும்போது சோலையப்பனுடன் அந்த நண்பனும் வந்திருந்தான். சன்னல் வழியா அவன் உருவத்தைப் பார்த்தபோது  காலையில ஆச்சி சொன்னது நினைவுக்கு வருது

    முறத்த உசத்தி புடிச்சிக்கிட்டு காத்து வீசுத திசையில போரடிச்ச நெல்லை தூத்துவிட்டோம்னா உமி எப்டி பறக்குமோ அப்டி அந்தப் பயலும் நல்ல காத்துல திசை தெரியாம பறந்துடுவாம். கதியத்த பய…  உண்மதான். எவ்வளவு ஒல்லியா இருக்கான் இந்தப் பையன். இதுதான் சந்தர்ப்பம். சோலையப்பன் சீக்கிரமா சாப்பிட்டு எழுந்தரிச்சிட்டான். அந்தப்பையன் இன்னும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கான். ஆச்சியோட குரல் கேக்குது.

    சோத்த அளஞ்சுக்கிட்டே இருக்காதப்பா நல்லா அள்ளி வாயில போடு. இளம்பிள்ளை. நாலு வகைய அள்ளிவச்சு வஞ்சகமில்லாம முழுங்கணும். அப்பந்தான் உடம்பு தேறும்.

    நான் சோலையப்பனை வெளியே அழைத்துப் பேச ஆரம்பித்தேன். நீங்க உங்க நண்பனுக்கு ஏற்ற ஏதாவது அலுவலக வேலைக்கு டிரை பண்ணச் சொல்லலாமே. எதுக்குத் தேவையில்லாம இங்க கூட்டிக்கிட்டு வந்து….. நான் முடிப்பதற்குள் அவன் ஆரம்பித்தான்.

    இல்ல அண்ணே. அவனுக்கு அப்பா கிடையாது. என்னய மாதிரிதான். சொத்து சொகமும் ரொம்ப இல்ல. சம்பாதிச்சே ஆகணும்னு நிலைமை. விவசாயம் பழகிக்கிட்டாம்னா சொந்தக்கால்ல நிக்கலாம்னு நினைச்சிருப்பான் போல. அதான் எங்கிட்ட உதவி கேட்டான். எனக்கும் தெரியும் அவனுக்கு உடல் உழைப்பு ஒத்துவராதுனு. ஆனா மொதல்ல சேத்துக்கிட்டு பிறகு மெதுமெதுவா புரிய வைக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள என் ஆத்தா கத்தி ஊரைக்கூட்டுது.

    உங்க ஆத்தா சொல்றது நியாயம்தான். ‘இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்’ னு பழமொழியே இருக்கே. நான் ஆரம்பிச்சேன். ஆட்டோட இரத்தத்த சமைக்கணும்னு நினைக்கறவங்க அதுகிட்ட பேசி சம்மதிக்க வச்ச பிறகா சாப்பிடுவாங்க. அதுமாதிரிதான் உன் நண்பனச் சேத்துக்கிட்டு அவனுக்கு தகுதியில்லைனு தெரியப்படுத்தி பிறகு விலக்கறத விட மொதலிலேயே நீக்கிடலாமே. சோலையப்பன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான். நல்ல முடிவு எடுப்பான்னு நம்பி நானும் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குள் போனேன்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(328)

    குறளின் கதிர்களாய்…(328)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(328)

    கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
    யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.

    – திருக்குறள் – 130 (அடக்கமுடைமை)

    புதுக் கவிதையில்...

    கற்கவேண்டியவற்றைக் கற்று
    மனதினில்
    கோபம் பிறக்காமல் காத்து,
    அடக்கமாக வாழும்
    ஆற்றல் உடையவனை
    அடைந்திடும் காலம்பார்த்து
    அறக்கடவுளும்
    அவன் வழியில் நுழைந்து
    அவனுக்காகக் காத்திருக்கும்…!

    குறும்பாவில்...

    கல்வி கற்று சினம்காத்து
    அடக்கமுடன் வாழ்வபனிடம் சென்றடைய
    அறம் அவன்வழியில் காத்திருக்கும்…!

    மரபுக் கவிதையில்...

    கல்வியைக் கற்றுத் தேர்ச்சிபெற்றே
    கடுஞ்சினம் நெஞ்சில் வந்திடாமல்
    நல்வழி அடக்கம் தனைப்பேணி
    நலமுடன் வாழும் வகைதெரிந்த
    நல்லவன் தனது நிலையறிந்து
    நாடியே அவனைச் சேர்ந்திடவே
    நல்லறத் தேவதை காத்திருந்தே
    நாடிடும் அவன்தன் வழியினையே…!

    லிமரைக்கூ..

    கல்வியுடன் சினமிலா அடக்கம்
    கொண்டொருவன் வாழ்ந்தால் அவனை நாடி
    அறமதும் அவன்வழி நடக்கும்…!

    கிராமிய பாணியில்...

    வேணும் வேணும் அடக்கம் வேணும்
    வாழ்க்கயில ஒசந்திருக்க
    வேணும் வேணும் அடக்கம் வேணும்..

    படிக்கவேண்டியதெல்லாம் படிச்சி
    மனசுல கோவமே வராமப் பாத்து
    அடக்கத்தோட வாழத் தெரிஞ்சவன
    அறக்கடவுளும் தேடி
    அவன் வழியில காத்திருக்குமே..

    அதால
    வேணும் வேணும் அடக்கம் வேணும்
    வாழ்க்கயில ஒசந்திருக்க
    வேணும் வேணும் அடக்கம் வேணும்…!

    Share
  • சேவடி தொழுது நின்றால் தெரிசனம் தருவான் கந்தன்!

    சேவடி தொழுது நின்றால் தெரிசனம் தருவான் கந்தன்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    வேலினைக் கையில் ஏந்தி
    வெற்றியைத் தந்த கந்தன்
    மூலமாய் நின்ற மூர்த்தி
    பொறியிலே வந்த கந்தன்
    கார்த்திகைப் பெண்கள் ஏந்த
    கந்தனாய் ஆன தெய்வம்
    கலியுகம் காக்க என்றும்
    கருணையாய் நிற்கும் தெய்வம்!

    ஆணவம் அழித்த கந்தன்
    அகவிருள் அகற்றும் கந்தன்
    பேணிடும் அடியார்க் கெல்லாம்
    பேரருள் ஈயும் கந்தன்
    நாமெலாம் விரும்பி நிற்கும்
    நல்லையில் உறையும் கந்தன்
    சேவடி தொழுது நின்றால்
    தெரிசனம் தருவான் கந்தன்!

    சூரரை வதைத்த கந்தன்
    சூழ்ச்சியை அறுக்கும் கந்தன்
    மாயிருள் மாயை போக
    வந்தனன் ஒளியாய் கந்தன்
    ஆழமாம் பிறவி நோயை
    அகற்றிட மருந்தாய் நிற்கும்
    வேலுடை கந்தன் பாதம்
    பற்றுவார் வீடு காண்பார்!

    Share
  • முத்தைத்தரு பாடல் – சுதா மாதவன் குரலில்

    முத்தைத்தரு பாடல் – சுதா மாதவன் குரலில்

    அருணகிரிநாதர் அருளிய ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ பாடலைச் சுதா மாதவன் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என்முகம் பாரய்யா, சண்முகனே!

    என்முகம் பாரய்யா, சண்முகனே!

    என்முகம் பாரய்யா, சண்முகனே – தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற திருமதி சுப்புலட்சுமி மோகன் அவர்களின் உருக்கமான பாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 285

    படக்கவிதைப் போட்டி – 285

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (22.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21 | வேதா கோபாலன்

    குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21 | வேதா கோபாலன்

    திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இன்று குருப்பெயர்ச்சி.. உங்க ராசிக்கான பலன்களைப் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இழப்பு (சிறுகதை)

    இழப்பு (சிறுகதை)

    வசுராஜ்

    நான் தான் ஜானகி. இந்தத்  திண்ணையில் உட்கார்ந்து இரண்டு மாமாங்கம் ஆறது. இது  திருச்சி பக்கத்திலுள்ள அழகான கிராமம்.  கல்யாணமானதிலிருந்து  30  வருஷம் இங்கு தானிருந்தேன். அப்புறம் பிள்ளைகளோடும் பெண்களோடும் இப்ப வரை இருந்துண்டிருக்கேன். ரொம்ப நாட்களுக்கப்புறம் குடும்பத்தோடு  சொந்தக்காரா  கல்யாணத்துக்கு இங்க வந்திருக்கோம். இரட்டை வரிசை வீடுகளும் கம்பீரமான  கோபுரமும் மனதுக்கு இதமாய் இருக்கு. எல்லார் வீட்டு வாசலிலும் பெரிது பெரிதாய்க் கோலம். புள்ளி வைத்த கோலம்,  தாமரை இதழ்கள் விரியும் இழைக் கோலம், மணைக்கோலம் எனப் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கு. கண் பார்வை தான் கொஞ்சம் மங்கிண்டு வருது. முன்னாடின்னா கோவில் வாசல்ல யாராவது வந்தால் கூட யாருன்னு கரெக்டாத் தெரியும். இப்ப நாலு ஆத்துக்கு முன்னாடி வந்தாத் தான் யாருன்னு தெரியறது.

    பொண்ணோட பேரன் ஆதர்ஷ் பெங்களூரிலிருந்து வந்திருக்கான்.  குழந்தையோட அம்மா அதான் என் பேத்தி அவனுக்குச் சாப்பாடு ஊட்ட அவன் பின்னாலேயே ஓடிண்டிருக்கா. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எல்லாம் கிடைக்கிறது. அதனால் அருமை தெரியலை. குழந்தைக்குன்னு தனியா வாட்டர் பாட்டில் வாங்கறா. அதையும் கொதிக்க வைச்சுக் குடுக்கறா. சாப்பிட புதுசு புதுசா ஏதேதோ குடுக்கறா. ஒரு பெரிய பெட்டி நிறைய குழந்தைக்கு மட்டுமே என்னென்னவோ எடுத்துண்டு வந்திருக்கா. எல்லாரும் ஒண்ணே ஒண்ணு  பெத்துக்கறா. அதைப் பொத்திப் பொத்தி  வளக்கறா. அதுல தப்பில்லையே. எங்க காலம் மாதிரிப் பெத்தது பாதியைப் பறி குடுக்கற நிலை இப்ப இல்லை.

    நானும் 6 பெத்து அதுல இரண்டைப் பறி குடுத்தேன். முதல் பெண் நன்றாய் இருந்தாள். இரண்டாவது புள்ளை பிறக்கும் போதே ரொம்ப நோஞ்சானாகப் பிறந்து ஒரே வாரத்தில் புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேர்ந்து விட்டது. மத்ததெல்லாம் பார்க்க என்னைப் போல் சுமாராய் இருந்தாலும் ஆரோக்கியமாய் இருந்தது. அந்தக் கடைசிப் புள்ளை தாசரதி தான் கொள்ளை அழகு. கிட்டத்தட்ட இந்தக் கொள்ளுப்பேரன் ஆதர்ஷ் மாதிரி இருப்பான். பிறந்த போது கிருஷ்ண  விக்ரகம் மாதிரி இருந்தான். கொழு கொழுன்னு தான் 10 மாசம் வரை இருந்தான். யார் கண் பட்டுதோ திடீர்னு ஒரு காய்ச்சல் வந்தது. பக்கத்து டவுண் திருச்சில உள்ள அரசாங்க  ஆஸ்பத்தரில கொண்டு போய்க் காட்டினோம். அங்க குழந்தையை அட்மிட் பண்ணச் சொல்லிட்டா.  குழந்தை கூட ஒருத்தர் தான் இருக்க முடியும்கறதால நான் மட்டும் இருந்தேன். இவர் ஆத்துக்கும் ஆஸ்புத்தரிக்கும் அலைஞ்சுண்டிருந்தார். மத்த குழந்தைகளை எச்சுமு  அம்மங்கா தான் பாத்துண்டிருந்தா.

    குழந்தைக்குக் காய்ச்சல் முதல்ல அனலா அடிச்சது. அப்புறம் 2 நாள்ல கொஞ்சம் குறைய ஆரம்பிச்சது. ரொம்ப பலகீனமாக இருந்ததால டிரிப்ஸ் ஏத்தினா. அரசாங்க ஆஸ்பத்திரி என்பதால டாக்டருக்குப் படிக்கறவா கூட வந்து வந்து பார்ப்பா. எல்லாருக்கும் குழந்தையை ரொம்ப பிடிச்சுப்  போயிட்டதால தினமும் வந்து பார்த்துட்டுப் போவா. குழந்தையைக் கொஞ்சுவா. துவண்டு போன குழந்தை அவாளைப் பார்த்து சிரிச்சான். குழந்தை சிரிக்க ஆரம்பிச்சதும் எங்களுக்கும் நம்பிக்கை வந்துடுத்து. “இந்த டிரிப்ஸ் முடிஞ்சதும் இதோட நிறுத்திடலாம். இனிமேல் கஞ்சி குடுக்கலாம்”னு  நர்ஸ் சொன்னா. அதை சொல்ல மறந்துட்டேனே,  குழந்தைக்குக் காய்ச்சலோட வயித்துப்போக்கும் இருந்தது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சுண்டு வந்தது. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லிட்டா.

    அதுனால இவர் ஆத்துக்குப் போயிட்டுக் காலையில குழந்தைக்கும் எனக்கும் உடுத்திக்கத் துணியும்  பணமும் எடுத்துண்டு வரேன்னு இந்தக் கிராமத்துக்கு வந்தார். இந்தக் கிராமத்துல தான் அப்ப நாங்க  இருந்தோம். நான் மறுநாள் ஊருக்குப் போகப் போறோம்னு பக்கத்து பெட் மாமி கிட்ட சொல்லிண்டிருந்தேன்.  அவா பெண்ணுக்குக் கீழ விழுந்து தலையில அடிபட்டு அவாளும்  10 நாளா ஆஸ்பத்திரில இருந்தா. பாவம் பொண்ணு பொழைச்சதே பெருசு என்றார்கள். அவாத்து மாமா தான் எங்களுக்கு நல்ல உதவியாய் இருந்தார். அந்தக் குழந்தைக்கு சீக்கிரம் சரியாகணும்னு வேண்டிண்டேன். அந்த மாமி “நீங்க இருந்தது எனக்கு எங்க அக்கா கூட இருக்கற மாதிரி இருந்தது. நீங்க போயிட்டா எனக்குக் கஷ்டமாய் இருக்கும். உங்க குழந்தைக்கு சரியாகி ஆத்துக்குப் போயிட்டா நல்லது தானே” என்று சொல்லிக்கொண்டிருந்த போதே, “அய்யோ குழந்தை!” எனக் கத்தினாள். நான் அவா பொண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்தால் என் குழந்தைக்குக் கையும் காலும் உதறிக் கொண்டிருந்தது.  ஓடிப் போய் நர்சைக் கூப்பிட்டாள் அந்த மாமி. நான் குழந்தையை அழுத்திப் பிடிச்சுண்டே “தாசரதி தாசரதி” எனக் கூப்பிட்டுப் பார்த்தேன். குழந்தை முழியே வித்தியாசமாய் இருந்தது.

    நர்ஸ் வந்து டிரிப்ஸை நிறுத்தினாள். அப்ப இருந்த டாக்டர் வந்தார். அவரைப் பார்த்தால் படிச்சுண்டிருப்பவர் போல இருந்தது. அவர் நர்ஸ் கிட்ட ஜன்னி வந்திருக்கு என ஏதோ மெதுவாய் சொல்லிண்டிருந்தார். நான் எல்லாத் தெய்வங்களையும் கெஞ்சிண்டிருந்தேன் 10 நிமிஷம் என்னென்னவோ பண்ணிப் பார்த்தார். எந்தத் தெய்வத்துக்கும் நான் கேட்டது காதுல விழலை போல. குழந்தையின் அசைவு கொஞ்சம் கொஞ்சமாய் நின்றுவிட்டது.   டாக்டர் “என்னால எதுவும் பண்ண முடியலை. எனக்கே ரொம்பக் கஷ்டமாயிருக்கு”ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். நர்ஸ் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். எனக்குக் கொஞ்ச நேரம் உலகமே நின்னுட்ட மாதிரி இருந்தது.

    “கடவுளே! எனக்குத் தைரியத்தைக் கொடு. அவன் உயிரைத்தான் கொடுக்கல” என்று வேண்டிக்கொண்டேன். அடுத்தது என்ன பண்ணணும்னு யோசிச்சேன். எப்படியும் உடனே ஊருக்குப் போயிடணும்னு முடிவு பண்ணினேன். பக்கத்து பெட் மாமாவும் மாமியும் குழந்தையைப் பார்த்து அழுது கொண்டிருந்தார்கள். நான் மாமா கிட்ட “ஒரு டாக்ஸி பிடிச்சுண்டு வர முடியுமா?” ன்னு கேட்டேன். அப்பெல்லாம் இந்த மாதிரி ஆம்புலன்ஸ் வசதி இருந்த மாதிரித் தெரியலை. ஏற்கெனவே இந்த மாதிரி ஒருத்தர் முந்தின நாள் செத்துப் போன போது ஆஸ்பத்திரில எதுவும் ஏற்பாடு பண்ண மாட்டோம்னு சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் தான் அவரிடம் டாக்ஸி பத்திக் கேட்டேன் அவர் தயங்கினார். செத்துப் போன குழந்தையை எப்படி டாக்ஸியில் ஏத்துவான்னு யோசிச்சார் போல. நான் சொன்னேன், “குழந்தை உயிரோட இல்லைன்னு டாக்ஸிக்காரர் கிட்ட சொல்லாதீங்கோ. நான் குழந்தை தூங்கற மாதிரி வைச்சுக்கறேன்”னு சொன்னேன். அவர் பிரமித்துப் போய்ப் பார்த்தார். மாமி தான் உடனே சுதாரிச்சுண்டு “டாக்ஸி பிடிச்சுண்டு வந்துட்டு நீங்களும் கூடப் போயிட்டு வாங்கோ”ன்னு சொன்னா. மாமா போய் டாக்ஸி கொண்டு வந்துட்டார். நான் இறுக்கமான முகத்துடன் குழந்தையுடன் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். மாமா முன்னாடி உட்கார்ந்து கொண்டார். டிரைவர் சின்னப் பையனாய்த் தெரிந்தான்.

    “என்னம்மா, குழந்தைக்கு?” ன்னு கேட்டான். மாமா “ஜுரம். இப்ப பரவாயில்லை. மருந்து கொடுத்தது நன்னாத் தூங்கறான்” னு சொன்னார். “தூங்கறான்”னு சொல்லும் போது அவர் குரல் தழுதழுத்தது. குழந்தை மடியில் சில்லென்று இருந்தான். நான் கண்ணை மூடிக்கொண்டு “தெய்வமே! இந்தக் குழந்தையை எனக்குக் கொடுக்காமல் இருந்திருக்கலாம்” என்று மருகிக்கொண்டிருந்தேன். “இவ்வளவு அழகான குழந்தை, எனக்குக் கொடுத்தது தப்புன்னு நினைச்சயா? மத்த குழந்தைகள் மாதிரி இதுவும் சுமாராய் இருந்தால் என்னிடம் இருந்திருக்குமோ?” என நினைத்துக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டேன். டிரைவர் ஏதோ பேசிக்கொண்டு வந்தான். மாமாவும் கேட்பது போல் நடித்துக் கொண்டிருந்தார். ½ மணி நேரப் பயணம் மிக நீண்டதாகத்  தெரிந்தது.

    வீட்டு வாசலுக்கு வந்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை. குழந்தை கனத்த மாதிரி இருந்தது. மாமா போய்க் கதவைத் தட்டினார். நான் குழந்தையுடன் இறங்கினேன். எங்க ஆத்துக்காரர் வந்து கதவைத் திறந்ததும் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்தது அழுகையாய் வெடித்தது. என்னால் அதற்கு மேல் அடக்கவே முடியவில்லை. கதறிவிட்டேன். என் அழுகைச் சத்தம் கேட்டு எதிர்த்தாத்து மாமி, பக்கத்து ஆத்து பானு எல்லாரும் வந்துட்டா. அழுகையோடே டிரைவருக்குப் பணம் கொடுக்கச் சொன்னேன். அம்மங்கா வந்து பார்த்து விட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டாள். என் ஆத்துக்காரர் பித்துப் பிடிச்சாப்புல நின்னுண்டிருந்தார். அவருக்கு நடப்பதெல்லாம் நிஜமா, கனவான்னு தெரியலை.

    அம்மங்கா வந்து பணம் கொடுத்தாள். டிரைவர் கண் கலங்க நின்றார். கூட வந்த மாமா, என் ஆத்துக்காரரிடம் “மாமா, பகவான் கருணையே இல்லாமல் குழந்தையை எடுத்துண்டுட்டார். மாமி இடிதாங்கி மாதிரி உக்காண்டு வந்தா” என்றார் அழுதுகொண்டே. என் ஆத்துக்காரர் அப்போது தான் உணர்வு வந்தவராய்க் குழந்தையை வாங்கி நெஞ்சோடு சேர்த்துண்டு அழ ஆரம்பிச்சார். டிரைவரிடம் “மன்னிச்சுடுப்பா. எனக்கு வேற வழி தெரியலை” என்றேன் அழுதுண்டே. அவன் சொன்னான் “இந்தக் குழந்தையைப் பார்த்தால் தெய்வக் குழந்தை மாதிரி இருக்கு. இவ்வளவு நேரம் துக்கத்தை அடக்கிட்டு வந்த உங்களைப் பார்த்தால் தெய்வத்தைப் பார்த்த மாதிரி இருக்கு. உங்க கிட்டக் காசு வாங்கக் கூடாது. பெட்ரோலுக்கு மட்டும் வாங்கிக்கறேன்” என்று சொல்லி மீதியை வைத்துவிட்டுப் போனான்.  மாமாவும் அழுதுகொண்டே கிளம்பினார்.

    அப்புறம் ஊரே வந்து அழுதுவிட்டுப் போனது. அவனைத் தூக்கிண்டு போகும் போது எங்கள் குடும்பத்தின் கதறல் அந்த எமனுக்கே கேட்டிருக்கும். நாளாக ஆக, இந்தக் குழந்தைகளையாவது  ஆயுசோட வைத்திரு என்று பிரார்த்தனை பண்ணினேன். பகவானும் இரக்கப்பட்டு இப்போது வரை என் குழந்தைகள், பேரன், பேத்தி எல்லாரையும் நன்னா வச்சிருக்கான். பேத்தியின் குழந்தை முக ஜாடை என் தாசரதி மாதிரி இருக்கறதால இன்னிக்குப் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து உங்க கிட்ட புலம்பிட்டேன். எல்லாரும் ஷேமமா இருக்கப் பெருமாளைப் பிரார்த்திச்சுக்கறேன்.

    ஆதர்ஷ் ஓடி வந்து மடியில் உட்கார்ந்தான். “தாசரதி” என அணைத்துக்கொண்டேன்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 43

    பழகத் தெரிய வேணும் – 43

    நிர்மலா ராகவன்

    குழந்தைகளுக்குச் சுதந்திரம் எதற்கு?

    “அந்தப் பையனைப் பார்! எவ்வளவு சமர்த்தாக தனக்கு வேண்டும் என்கிறதைத் தானே கேட்டு வாங்கிக்கிறான்!”

    உணவுக்கடையொன்றில் அடுத்த மேசையிலிருந்த சிறுவனைக் காட்டி, தன் பேத்தியின் சாமர்த்தியம் இன்மையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. பெண்ணுக்குச் சுமார் எட்டு வயதிருக்கும்.

    நானும் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். தனக்கு என்ன வேண்டும் என்று அவள் சொல்வதற்கே அவளுடன் வந்திருந்த அம்மாவும் பாட்டியும் அனுமதிக்கவில்லை. `இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்!’ என்று அவர்களே தீர்மானித்து, ஒவ்வொரு பிடியின்போதும், ஏதாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார்கள்.

    விருப்பப்படி சாப்பிடுவதற்குக்கூட விடாது, அவளுடைய சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டால், புதிய இடத்தில் எதைச் செய்யத்தான் அவளுக்குத் துணிச்சல் எழும்?

    எப்படி யோசிப்பது என்று கற்றுக்கொடுப்பதைவிட்டு, `இப்படித்தான் யோசிக்கவேண்டும்!’ என்றா கட்டாயப்படுத்துவார்கள்?

    `சிறு வயதிலிருந்தே இவனுக்குச் சுயமாக எதுவும் செய்துகொள்ளத் தெரியாது! நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம்!’ என்று சலித்துக்கொள்ளும் பெற்றோர் தம்மீதுதான் தவறு என்று உணர்வதில்லை.

    இப்போக்கைத்தான், `சொல்லிக்கொடுத்த வார்த்தையும் கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை நாட்களுக்கு வரும்?’ என்று மறைமுகமாகக் கண்டிக்கிறார்கள்.

    `வெளியே போறியா? முகக் கவசம் எடுத்துண்டு போ!’ தற்போது அடிக்கடி கேட்கும் வாசகம். அப்போது எழும் எரிச்சலில், `பெரியவர்கள் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது?’ என்று ஏறுமாறாக நடக்கத்தான் தோன்றும்.

    சொல்வதைவிட செய்துகாட்டுவதுதான் பயனளிக்கும்.

    `உன்னால் முடியும்!’ என்று நம்பினால், சிறுவர்களும் அதை நம்பிவிடுவார்கள்.

    கதை

    இரண்டு வயதாக இருந்தபோது, என் பேரனை குழந்தைகளுக்கான `ஜிம்’மிற்கு அழைத்துப் போயிருந்தேன். அங்கு நான்கடி உயரத்தில் ஏணியைப்போன்ற ஒரு சாதனம். ஆனால், படிகள் கிடையாது. இரு பக்கமும் கால் விரல்களை மட்டும் சிறு பள்ளத்தில் பதித்துக்கொண்டு ஏறவேண்டும்.

    பயத்தால் குழந்தையின் கண்கள் விரிந்தன.

    “ஏறு. விழமாட்டே. நான் பிடிச்சுக்கறேன்!” என்று தைரியம் அளித்து, அவன் உடலைச்சுற்றி ஒரு கையைப் போட்டு இறுக்கி, இன்னொரு கையால், “இப்போ இங்கே கால் வைக்கணும்,’ என்று காட்டி, ஒவ்வொரு அடியாகப் பழக்கினேன். ஏறி முடித்ததும், பாராட்டு.

    அடுத்த முறை நான் அவனைப் பிடித்துக்கொள்ளப்போக, “எனக்குத் தெரியும்,” என்று என் கையை விலக்கினான்.

    ஓரிரு முறை செய்துகாட்டி, மேற்பார்வை மட்டும் பார்த்தால் சிறுவர்களின் தைரியம் பெருகுகிறது. புதிய காரியங்களில் ஈடுபடும் துணிச்சல் வரும்.

    இது புரிந்துதான் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தம் குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே சிறு, சிறு வேலைகளைக் கொடுத்துப் பழக்குகிறார்கள்.

    சமையலறையில், வேகவைத்த உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் ஆகியவைகளின் தோலை உரிப்பது என்று ஆரம்பித்து, பெண் குழந்தைகள் சிறுகச் சிறுக சமையல் கற்றுக்கொள்கிறார்கள்.

    எந்த வேலையையும், `இப்படிச் செய்!’ என்று அதிகாரமாகக் கூறுவதைவிட, `நான் இப்படிப் பண்ணுவேன். நீ உன் சௌகரிப்படி செய்!’ என்று விட்டுக்கொடுத்தால், நம்மைப்போலவே செய்வார்கள்! நம்மீது மதிப்பும் பெருகும்.

    குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள்போல் `நார்மலாக’ இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. (நம்மில் எத்தனை பேர் அப்படி இருக்கிறோம்?).

    தம் விளையாட்டுச் சாமான்களை தரை பூராவும் பரப்புவது அவர்களுக்குப் பிடித்தமான சமாசாரம்.

    `குப்பை போடாதே!’ என்று கண்டிப்பதைவிட்டு, `இந்த ஓரமா வெச்சுக்கோ,’ என்று ஒரு மூலையை ஒழித்துக்கொடுக்கலாம்.

    சில தாய்மார்கள் உடனுக்குடனே அந்த விளையாட்டுச் சாமான்களைத் திரட்டி வைத்துவிடுவார்கள். சொல்வதைக் கேட்காவிட்டால் தண்டனை. தாயை எதிர்க்கவும் முடியாத நிலையில், அவளிடம் அன்பைவிட அச்சம்தான் அதிகமாக எழும்.

    சிறுவயதில் எல்லாவற்றிற்கும் பயந்து வளர்பவன் முரடனாகிறான் — `நான் பெற்ற பயம் இவ்வையகமும் அடைக!’ என்பதுபோல். இல்லையேல், பயந்தாங்கொள்ளியாக ஆகிறான்.

    குழந்தைகளை அஞ்சவோ, அழவோ வைத்தால் ஒருவருடைய பலம் கூடிவிடுவது போன்ற உணர்வு ஏற்படலாம். அதற்காக சுயநலம் கொண்டவர்களாக ஆகலாமா?

    மகிழ்ச்சியாக வளரும் குழந்தைகளே நல்லவர்களாக வளர்கிறார்கள்.

    சுதந்திரத்திற்கு வயதில்லை

    ஒரு குழந்தையைத் புத்திசாலியாகவும் தைரியசாலியாகவும் வளர்ப்பது வளர்க்கிறவர்களுக்கும் உற்சாகமானதாக இருக்கும். அவர்களும் கூடவே வளர்வார்கள்.

    “உனக்கு இப்போ ஹார்லிக்ஸ் வேணுமா, மைலோ வேணுமா?” ஒன்றரை வயதானதும், என் குழந்தைகளைக் கேட்பேன். “இப்போ என்ன குடிக்கப்போறே?”

    நான் சொல்வது புரியாது, குழந்தை விழிக்கும்.

    “இது வெள்ளையா இருக்கு, பாரு! இன்னொண்ணு ப்ரௌன்,” என்று சந்தடி சாக்கில் வண்ண பேதத்தையும் சொல்லிக்கொடுப்பேன்.

    சற்று யோசித்துவிட்டு, “இது. இல்லை, இது!” என்று ஏதாவது ஒன்றைக் காலை வேளையில் குடிக்கத் தேர்ந்தெடுப்பார்கள்.

    ஒரு முறை, வெள்ளையான பானத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள் என் பன்னிரண்டு வயது மகள்.

    அவளுடைய தம்பி கால்களை உதைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். ஏனெனில், அவனுடைய தேர்வு மதிக்கப்படவில்லை.

    அவளைத் திட்டுவதுபோல் பாவனை செய்துவிட்டு, “இதிலேயே கொஞ்சம் மைலோ கலந்து கொண்டுவா!” என்றேன், ரகசியக்குரலில்.

    “சகிக்காது,” என்றாள். ஆனாலும் அப்படியே செய்தாள்.

    குழந்தை மகிழ்ச்சியுடன் குடித்தான். அவனைப் பொறுத்தவரை, காலையில் குடிக்க அவன் தேர்ந்தெடுத்தது கோக்கோ கலராக இருக்கும். அந்த வயதில், ருசியைப்பற்றிய அக்கறையோ, அறிவோ கிடையாது.

    என் மகளுக்கு ஒரு வயதானபோது, இதே வளர்ப்பு முறையை நான் கையாண்டேன்.

    அதைப் பார்த்த என் தாய், “இது என்ன, பெரிய மனுஷி? இதுகிட்ட கேக்கறே?” என்றாள்.

    “சுயமா யோசிக்க கத்துக் குடுக்கறேன்,” என்றேன். அவர்கள் சம்பந்தப்பட்ட சமாசாரங்களுக்கு அவர்கள்தாம் பொறுப்பு என்று மறைமுகமாக உணர்த்துவதாகத்தான் நான் நினைத்தேன்.

    ஆனால் அம்மாவோ, “ஒன் குழந்தைகளுக்குப் பைத்தியம்தான் பிடிக்கப்போறது!” என்றாள்!

    `அன்பு’ என்ற பெயரில் எட்டு வயதானபின்னும் தன் மகளைத் தூக்கி வைத்துக்கொள்ளும் தாய் அறிவதில்லை, அவளுக்குத் தீங்கு இழைக்கிறோம் என்று.

    பதினோரு மாதங்களே ஆன என் மகளின் கையைப் பிடித்து நான் தெருவில் நடந்தபோது, இந்தியாவில் பெண்கள் சிரித்தார்கள், ஏதோ பெரிய வேடிக்கையைக் கண்டுவிட்டதுபோல்.

    “இது ரொம்ப அநியாயம்!” என்று அவர்கள் சொல்லிக்கொண்டு போனது கேட்டது.

    நான் `கொடுமைப்படுத்துவதை’ பொறுக்கமுடியாத ஒருவர், “தூக்கிக்குங்கம்மா,” என்று சிபாரிசு செய்தார்.

    நடக்க ஆரம்பித்ததுமே, குழந்தைகள் ஓடுவார்கள். அடிக்கடி விழுந்தாலும், அடுத்த முறையும் ஓடுவார்கள். பதட்டப்படாது, `இதுதான் அவர்கள் பொழுதுபோக்கு!’ என்று விடவேண்டியதுதான்

    தாய் இரக்கம் காட்டும்போதுதான் சுயபரிதாபம் எழுகிறது. கவனிக்காததுபோல் இருந்தால் கீழே விழுந்தாலும், தாமே எழுந்துவிடுவார்கள்.

    எல்லா வயதிலும் `வீழ்ச்சி’ என்று ஒன்று இருக்கிறது. அப்போது அயர்ந்துபோய், கீழேயே கிடக்க வேண்டாம், மீண்டும் எழ வேண்டும் என்ற பாடத்தைச் சிறுவயதிலேயே புகட்டலாமே!

    Share
  • Story of How Ganapathy Subramaniam became Gemini Ganesan

    Story of How Ganapathy Subramaniam became Gemini Ganesan

    Seshadri Baskar

    On this day, hundred years ago, when Ganesan was born in Pudukkottai never in their family had even thought that he would make it big one day .

    Ganesan wanted to become a Doctor but after the graduation in Maharaja College (He did B.Sc., Physics), he had to face many turbulences in life and he came to Chennai to take an assignment at Gemini Studios as a casting assistant . His job is to ensure the testing process of the aspiring actors and see whether they fit the bill.

    One of the find of Ganesan was Chandrababu. He was by then married and had four children. Well before that he had taken the asylum in Muthulakshmi House in Adayar. Later she was celebrated as Dr. Muthulakshmi Reddy a leading doctor and a reformist a daring approach of a woman of those days.

    It will be quite interesting to note that even Vizhupuram Chinnaya Ganesan later to become Nadigar Thilakam was tested and certified by Ganesan. It was Missmalini in 1947 ( a Work of RK Narayanan ).

    His films Moondru Pillaigal and Thai Ullam did not go well in the box office but it was Manam Pola Mangalyam (மாப்பிள்ளை டோய்) marked the entry of Savitri in his life in this 1957 Release which did magic and the star was born.

    Remember MGR and Sivaji Ganesan had already settled. He played Pennin Perumai, Bandha Paasam and many more with Nadigar thilakam and it was only one movie with MGR (Mukarasi). From Nagaraja , it was Sridhar, Balachander, Bhimsingh, Pantulu and many more directors had done with him. Who can forget the climax of Sumaithangi, or a rightist man in Punnagai as sathyamurthy and as David aseervatham in Naan Avan Illai, it was his home production of Narayanee Films .

    He was a celebrated throughout his career and did the best of roles till he did his Avvai Shanmugi or Mettukudi. He had won Padmashree award and had achieved more accolades throughout south India and other states .

    At the age of 85 he breathed his last around 1,30 in the noon when his family members were around him. Today its his Hundredth Birth Anniversary. When cremation was in the process, I was in Woodlands Hotel seated next to PB Srinivas. When I said that his songs had made him hero quickly he refuted and said he had become hero overnight with காலங்களில் அவள் வசந்தம் in a way Gemini Ganesan was senior to both SivajI Ganesan and MGR. But Nambiar and Manohar are seniors to Gemini Too.

    The story of Ramaswamy Ganesan to Become Kadhal Mannan it had taken nearly fifty years. He paired with Jaya in only one movie that too as a guest role . When I think of Gemini Ganesan I recollect one song of Velli vizha immeditley. உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா.

    He was in the throne of peoples hearts all through.. Gemini In my view is a urban romantic street smart and he won the hearts at ease .

    ————————————————————————

    Tail piece

    Gemini was an ace cricketer and he had served in Madras Christian College as a Lecturer. He had a passion to Translate Kannadasan’s Arthamulla Indhu Madham in English but that could not happen unfortunately.

    Additional story

    Gemini was a craze in our family and in 1959 when the film Kalyana Parisu was released my mother who was in her Mid pregnancy state went to Casino with my aunts and they all decided to name the boy child as Baskar and if the baby happens to be a girl it was decided to name as Vasanthi . Reason is this – The hero Gemini’s Name was Baskar and the Heroine Saroja Devi’s Name was Vasanthi . It was a film that was released in Casino on April 9 , 1959. I was christened as Baskar this way

    Share
  • படக்கவிதைப் போட்டி 284இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 284இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சுடர்விடும் சோடிக் குத்துவிளக்குகளை அழகாய்ப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ் ஒளிப்படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 284க்கு  வழங்கப்பட்டிருக்கின்றது. அழகொளிரும் படம்தந்த ஒளிப்பட வல்லுநர்க்கு என் நன்றி!

    ”இருளகற்றும் சோதி விளக்குகளைப் போலநம்
    மருளகற்றும் கல்வி ஒளி!”

    சுடர்விடும் இந்தக் குத்துவிளக்குகள் குறித்து முத்தாகக் கவிசொல்லக் காத்திருக்கும் வித்தகக் கவிஞர்களை மெத்த மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்!

    *****

    ”மனிதனின் மன இருட்டை விரட்ட உண்மையே விளக்கு” என்ற நற்கருத்தை நவிலும் திரு. செண்பக ஜெகதீசன், ஏற்றிவைத்த குத்துவிளக்குக்கு ஈடாக வேறோர் விளக்கில்லை என்கிறார் வியப்போடு!

    எல்லா விளக்கும்…

    இருளை அகற்றிட ஏற்றிடும் விளக்கு
    இருக்கும் இடமே ஒளியால் சிறப்பு,
    இருட்டு மனிதன் இதயத்தில் இருந்தால்
    இதனை ஓட்டிட உண்மையே விளக்கு!

    எத்தனை விளக்குகள் வகைகள் பலவாய்
    ஏற்றி வைத்தே அழகு பார்த்தாலும்
    குத்து விளக்கின் அழகைப் போலக்
    குடும்பப் பாங்காய் எதுவும் இலையே…!

    *****

    ”இருமுக விளக்கு; இல்லற விளக்கு; கார்த்திகை விளக்கு; காரிருள் விலக்கு” என்று விளக்கின் சிறப்பினை விவரமாய் விளம்புகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    இருமுக விளக்கு
    இல்லற விளக்கு
    இருள் அகல் விளக்கு
    இறை அருள் விளக்கு

    சொல்லக விளக்கு
    சுடரொளி விளக்கு
    பன்முக விளக்கு
    பாவை கை விளக்கு

    ஒளிச்சுடர் விளக்கு
    ஓங்கச் செய் விளக்கு
    ஒற்றுமை ஆக்கும் விளக்கு
    ஓங்கார விளக்கு

    கார்த்திகை விளக்கு
    காரிருள் விலக்கு
    வள்ளலார் விளக்கு
    வாழ்வு மலரச்செய் விளக்கு!

    *****

    விளக்குகளை வைத்து நல்ல கருத்துக்களை விளக்கியிருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    தீப ஒளி!

    கருமைத் தாளில் நிறங்கள் தீட்டி
    வண்ணங்கள் ஏற்றும் தூரிகை
    இருளெனும் மௌனம் விரட்டிட
    வெளிச்சத் தாளம் கொட்டும் பேரிகை

    மறையும் பகலின் வாழ்வை நீட்டிக்கும்
    வெளிச்சக் கீற்றெனும் தேவதை
    அறியாமை இருளை நீக்கி உண்மை
    ஞானம் வளர்க்கும் நல்லொளிக் காரிகை

    இருளை விலக்கி வாழ்வில் தினமும்
    வெளிச்சம் செதுக்கும் உளி
    காரிருள் நீக்கிப் பார்வையில்
    தெளிவைக் கொடுக்கும் சூரியத் துளி

    தனிமை வெக்கைப் போக்கித்
    துணையைக் காட்டும் இன்ப வளி
    இனிமை பொங்கி நம் இல்லம் சிறக்க
    ஒளிரட்டும் நல் தீப ஒளி!

    ”இருளை விலக்கி வாழ்வில் தினமும் வெளிச்சம் செதுக்கும் உளி; காரிருள் நீக்கிப் பார்வையில் தெளிவைக் கொடுக்கும் சூரியத் துளி” எனும் அழகிய வரிகளால் நம் சிந்தையை வருடியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • உருசியத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி மறைந்தார் | Alexander Dubiansky passes away

    உருசியத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி மறைந்தார் | Alexander Dubiansky passes away

    உருசியத் தமிழறிஞர், பேராசிரியர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி (Алекса́ндр Миха́йлович Дубя́нский, Alexander Dubiansky) (வயது 80), மாஸ்கோவில் இன்று மறைந்தார். கொரோனா தொற்றின் தாக்கத்தால் அவர் உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு வல்லமை மின்னிதழ், வாசகர்கள் சார்பிலும் தமிழ்கூறு நல்லுலகு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    சென்னையில் பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி அவர்களும் எழுத்தாளர் செயகாந்தன் அவர்களும். படம் கே. பிச்சுமணி, இந்து ஆங்கில நாளிதழ் (சூன் 22, 2010) (The Hindu, June 22, 2010, Picture: K. Pichumani)

    மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வந்தார். தமிழில் சரளமாகப் பேசவும் கற்றவர். இவர் தொல்காப்பியத்தைப் பற்றியும் சிலப்பதிகாரத்தைப் பற்றியும் உருசிய மொழியில் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஏறத்தாழ 110 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவருடைய பணியைப் போற்றி இவருக்குத் தென் ஆசிய கல்விக்கான குமுகத்தின் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013இல் வழங்கப்பெற்றது.

    1998ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலகளாவிய முருகன் மாநாட்டில் பேரா.அலெக்சாந்தர் துபியான்ஸ்கி அவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளேன். தமிழ்ச் செவ்விலக்கியங்களின் பெருமைகளை உலக சமூகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றதில் இவருக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.

    இவரது 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வல்லமையாளர் விருதினை வழங்கி மகிழ்ந்தோம். இது தொடர்பான பேரா.செ.இரா.செல்வக்குமார் அவர்களின் அறிவிப்பு இங்கே: https://www.vallamai.com/?p=69166

    துபியான்ஸ்கி அவர்களின் மறைவு குறித்து, ழான் லூக் செவியார் (Jean-Luc Chevillard), வல்லமைக் குழுமத்தில் பகிர்ந்துள்ள செய்தி இங்கே:

    Dear Vallamai list members,

    It is with great sadness that I have to announce that our dear colleague
    and friend Alexander Dubiansky (b. 1941) died in Moscow this morning
    because of Covid.

    We shall miss him very much.

    I include a picture taken in Paris on 28th september 2019 during the 4th
    European Tamil conference. This was the last occasion for Eva and me to
    meet with him face to face.

    — Jean-Luc Chevillard (in Müssen)

    போற்றுதலுக்கு உரிய பணிகள் புரிந்த துபியான்ஸ்கி அவர்களின் மறைவு, தமிழுலகிற்கும் மொழியியலுக்கும் பேரிழப்பு. தமிழின் தகுதிகளை, தமிழிலக்கியத்தின் சிறப்புகளை உலக அரங்கில் ஓயாமல் உரைத்த தமிழறிஞர், அறிவியல் பார்வையும் நம்பகத்தன்மையும் கொண்டவர், உவந்தேற்று மதிக்கப்பெற்ற அறிஞர் துபியான்ஸ்கியின் மறைவுக்குப் பெரிதும் வருந்துகிறோம். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

    படத்துக்கு நன்றி: https://www.ldcil.org,

                                                    The Hindu, June 22, 2010, Picture: K. Pichumani

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 19

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 19

    -மேகலா இராமமூர்த்தி

    இராவணன் மனத்தில் சூர்ப்பனகையால் விதைக்கப்பட்ட சீதை மீதான காம விதை விறுவிறுவென வளர்ந்து விருட்சமானது. அதன்பின்னர் அரியணையில் அமர்ந்திருக்கவோ அமைச்சர்களோடு அளவளாவவோ அவனால் இயலவில்லை. விருட்டென ஆசனத்திலிருந்து எழுந்தான். அவன் உளக் குறிப்புணர்ந்த ஏனையோரும் அவையினின்று வெளியேறினர். பிறன்மனை நயத்தலைப் பாவமென்று எண்ணாத இராவணன், சீதையைக் காணும் ஆசையால் மனம் நைந்தான். சோலையின் நடுவே அமைந்திருந்த தன் மாளிகைக்குச் சென்று அமளியில் வீழ்ந்தான்.

    ”பாலும் கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடீ
    கோலக் கிளிமொழியும் செவியில்
    குத்தல் எடுத்ததடீ” என்று மகாகவி படைத்த கண்ணனின் காதலி வாடுவதுபோல், சீதையை எண்ணி வாடினான் இராவணன். விரக வேதனை அவனுக்கு நரக வேதனையானது. பகைவன் அடைந்த புகழ் ஒருவனைச் சுடுவதுபோல் சீதையின் நினைவு அவனைச் சுட்டது.

    ஆதலால், நிலவினை அழைத்து வானில் தண்ணொளி பொழியச் செய்யுமாறு ஏவலர்களைப் பணித்தான். ஆனால் நிலவொளியும் கதிரொளியாய் அவனை எரிக்கவே, வீரக்கழலணிந்த இயமனும் அஞ்சுகின்ற இராவணன் சினந்து, ”குளிர்ச்சிதரு கிரணங்களை உடைய சந்திரனை அழைத்து வாருங்கள் என்றால் கொடுநெருப்பையும், வலிமிகு நஞ்சினையும், கடுங்கோபத்தினையும், வெம்மையான கிரணங்களையும் கொண்ட அருக்கனை (சூரியன்) ஆர் அழைத்தீர்கள்?” என்றான் கடுமையான குரலில்.

    கருங் கழல் காலன் அஞ்சும்
         காவலன் கறுத்து நோக்கி
    தரும் கதிர்ச் சீத யாக்கைச்
         சந்திரன் தருதிர் என்ன
    முருங்கிய கனலின் மூரி விடத்தினை
         முருக்கும் சீற்றத்து
    அருங் கதிர் அருக்கன்தன்னை ஆர்
         அழைத்தீர்கள் என்றான். (கம்ப: மாரீசன் வதைப் படலம்: 3274)

    சீதை குறித்தே எப்போதும் சிந்தனை சுழன்றமையால் அவள் உருவெளித் தோற்றம் இராவணனுக்குத் தோன்றியது. நாம் யாரை எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கின்றோமோ (அன்பின் காரணமாகவோ பகையின் காரணமாகவோ) அவர்களின் உருவம் அவர்கள் இல்லாதபோதும் நம் கண்களுக்குத் தெரிவது ஒருவகை மனப் பிரமைதான்!

    தேவகியின் தமையனான கம்சன், கண்ணனை அழித்துவிடவேண்டும் என்ற வெறிச் சிந்தனையிலேயே எப்போதும் இருந்தமையால் கண்ணன் தன்னெதிரில் நிற்பதாகவே எண்ணி அடிக்கடி வாளை வீசி ஏமாறிப் போவானாம்! அவ்வாறே தங்கை சூர்ப்பனகை சீதை குறித்து வருணித்ததிலிருந்து அவளிடம் தன் மனத்தைப் போக்கிவிட்ட இராவணனுக்கு, ”எங்கெங்கு காணினும் சீதையடா!” என்று சொல்லும்படி அவள் மாயத்தோற்றம் எங்கும் புலப்படத் தொடங்கியது!

    ”ஆகா! இவள் போல்வதோர் உருக்கண்டிலேன்!” என்று தன்னுள் எண்ணி வியந்தவன், தனக்குப் புலப்படுவது சீதையின் தோற்றந்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளச் சூர்ப்பனகையை அழைத்துவரச் செய்தான்.

    பொய் நிறைந்த நெஞ்சுடைய சூர்ப்பனகை வந்துசேர்ந்ததும் அவளிடம் நறுநெய் பூசிய கூர்வாளை உடைய இராவணன், ”பெண்ணே! நன்றாக உற்றுப் பார்! அஞ்சன மை பூசிய, ஒளிமிகு கண்களோடு தோகை மயிலென என்முன் வந்துநிற்கும் இவளா நீ குறிப்பிட்ட சீதை?” என்றான் ஆர்வத்தோடு!

    பொய்ந் நின்ற நெஞ்சின்
         கொடியாள் புகுந்தாளை நோக்கி
    நெய்ந் நின்ற கூர் வாளவன் நேர்
         உற நோக்கு நங்காய்
    மைந் நின்ற வாள்கண் மயில் நின்றென
         வந்து என் முன்னர்
    இந் நின்றவள் ஆம்கொல்
         இயம்பிய சீதை என்றான். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3311)

    இராவணன் காட்டிய இடத்தை உற்றுப் பார்த்தாள் சூர்ப்பனகை. ”என்ன அண்ணா நீங்கள்? செந்தாமரைக் கண்களோடும் கோவைக்கனி போன்ற இதழ்களோடும் சந்தனம் பூசிய தோளோடும் தாழ்ந்த தடக்கைகளோடும் மலரணிந்த மார்போடும் நீலமலைபோல் நிற்கின்றவனைப் பார்த்துச் சீதை என்கிறீர்கள்? இவன் வீர வில்லேந்திய இராமன் அல்லவோ? என்றாள். இராமன்மீது காமப் பித்தேறி நின்ற அவள் கண்களுக்கு உருவெளித் தோற்றமாய் இராமன் தெரிந்தானேயொழியச் சீதை தெரியவில்லை.  

    செந் தாமரைக் கண்ணொடும்
         செங்கனி வாயினோடும்,
    சந்து ஆர் தடந் தோளொடும்
         தாழ் தடக் கைகளோடும்
    அம் தார் அகலத்தொடும்
    அஞ்சனக் குன்றம் என்ன
    வந்தான் இவன் ஆகும் அவ்
    வல் வில் இராமன் என்றாள்.
    (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3312)

    இராவணனும் அவன் தங்கை சூர்ப்பனகையும் சீதைமீதும் இராமன்மீதும் கழிகாமம் கொண்டதனால் அவர்கள் உள்ளத்தில் நிகழும் வேடிக்கை வினோதங்களை இவ்விடத்தில் அழகிய நாடகமாக்கியிருக்கின்றார் கவிவேந்தர் கம்பர். கம்ப நாடகம் என்று இக்காட்சிகளை விளிப்பர்; வியப்பர்  கம்பனில் தோய்ந்த அறிஞர்பெருமக்கள்.

    இராவணன் சூர்ப்பனகையின் பதிலால் வியந்து, ”நான் சீதையையே எண்ணி மறுகிக்கொண்டிருப்பதால் அவள் உருவம் எனக்குத் தோன்றுகிறது; ஆனால் உனக்கு இராமனின் உருவம் தோன்றக் காரணம் என்ன?” என்றான் ஐயத்தோடு.

    பொய்சொல்வதில் தேர்ந்தவளான சூர்ப்பனகை உடனே, ”அந்த இராமன் எப்போது எனக்குக் கொடுமை இழைத்தானோ அதுமுதல் அவன் நினைவு என்னை நெஞ்சைவிட்டு அகலவில்லை; அதனால்தான் காணும் திசையெங்கும் அந்தக் கார்மேனியான் எனக்குக் காட்சியளிக்கின்றான்” என்றாள் தந்திரமாகத் தன் காமத்தை மறைத்து!

    ”நீ சொல்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதே!” என்று மொழிந்த இராவணன், ”சீதையை நினைந்தேங்கும் இந்தத் துன்பத்திலிருந்து நான் விடுதலை அடைவது யாங்ஙனம்?” என்று சூர்ப்பனகையிடம் கேட்க, ”உலகுக்கு ஒப்பற்ற முதல்வனாக விளங்கும் நீ இதற்குப் போய் கலங்குவதா? நீ சென்று பூங்குழலியான சீதையைக் கவர்ந்து வா; அதுவே உன் துன்பம் தீர்வதற்கான வழி!” என்று பிறன்மனையாளைக் கவர்ந்துவரும் அறம்பிறழ்ந்த யோசனையை அண்ணனுக்குரைத்து அவ்விடம்விட்டு அகன்றாள் அரக்கர் குலத்தை அழிக்கவந்த விடமன்ன சூர்ப்பனகை.

    ஆம் ஆம் அது அடுக்கும் என்
         ஆக்கையொடு ஆவி நைய
    வேமால் வினையேற்கு இனி என்
         விடிவு ஆகும் என்ன
    கோமான் உலகுக்கு ஒரு நீ
         குறைகின்றது என்னே
    பூ மாண் குழலாள்தனை வவ்வுதி
         போதி என்றாள். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3316)

    சீதை விஷயத்தில் தான் அடுத்து என்ன செய்யலாம் என்று தன் அமைச்சர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினான் இராவணன். எனினும் தெளிவான முடிவு எதனையும் அவ் ஆலோசனை அவனுக்கு அளிக்கவில்லை என்கிறார் கம்பர். அப்படியாயின், சீதையைக் கவர்ந்துவர எண்ணும் அவன் விருப்பத்துக்கு ஆதரவாகச் சிலரும் எதிராகச் சிலரும் கருத்துக்களைக் கூறியிருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்க முடிகின்றது.

    ஆனால், யார் என்ன ஆலோசனை சொன்னாலும் இறுதியில் தன் விருப்பப்படியே நடந்துகொள்ளும் இயல்புடைய இராவணன், சீதையைக் கவர்வதற்குத் தன் மாமன் மாரீசன் உதவியை நாடி அவன் இருப்பிடம் வந்துசேர்ந்தான்.

    இராவணனை வரவேற்ற மாரீசன், அவன் தன்னை நாடிவந்த காரணமென்ன என்று வினவ, ”உன் மருகிக்கு (மருமகள்) தீங்கிழைத்து, உன் மருகர்களான கரன் தூடணன் திரிசிரன் ஆகியோரையும் அழித்துவிட்ட மானுடர்களை நான் பழிவாங்க விரும்புகின்றேன்; ஆதலால் அவர்களோடிருக்கும் பெண்ணைக் கவர்ந்துசெல்ல முடிவெடுத்திருக்கின்றேன்; அதற்கு உன் துணை தேவை” என்றான் இராவணன்.

    அதைக் கேட்டுத் துணுக்குற்றான் மாரீசன். அவன் இராம இலக்குவர்களின் வில்லாற்றலை நன்கறிந்தவன். தன்னுடைய தாய் தாடகையையும் தம்பி சுபாகுவையும் ஏற்கனவே இராம பாணத்துக்குப் பலிகொடுத்தவன். எனவே இராவணனை இந்த அடாதசெயலில் ஈடுபடவிடாது தடுக்கவேண்டும்  என்றெண்ணி, ”ஐயா! அன்பு பூண்டாரது நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்களும், நீதிநெறிக்குப் பொருந்தாத வகையில் குடிமக்களை வருத்தி வரிப்பொருளைப் பெற்றவர்களும், பிறருக்கு உரிமையாய் அவர் இல்லத்தில் வாழும் மனைவியை வயப்படுத்திக் கொண்டவர்களுமான இவர்களை அறக்கடவுள் அழித்துவிடுவான். இக்கொடுமைகளைச் செய்தவர் எவர் தப்பிப் பிழைத்துள்ளார்?  எனவே இவ்வெண்ணத்தைக் கைவிடுக! என்றான்.

    நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார்
         நடை அல்லா
    வாரம் கொண்டார் மற்று
         ஒருவற்காய் மனைவாழும்
    தாரம் கொண்டார் என்ற
         இவர்தம்மைத் தருமம்தான்
    ஈரும் கண்டாய் கண்டகர்
         உய்ந்தார் எவர்ஐயா. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3344)

    இதனைக் கேட்டு முனிந்த இராவணன், ”நமக்கு அம் மானிடர்களால் நேர்ந்த தீங்கினை நீ நினைந்திலை; அவர்களுக்குச் சாதகமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றாய்; எனினும் உன் பிழை பொறுத்தேன்!” என்றான்.

    அப்போது மாரீசன், ”இராவணா! நான் உன் மாமன்; உன்னைவிட வயதில் மூத்தவன் என்ற முறையில் உனக்குச் சொல்லுகிறேன்! தயைகூர்ந்து நீ செய்யக் கருதியிருக்கும் தீச்செயலைக் கைவிட்டுவிடு! அது நிருதர் குலத்தையே அழித்துவிடும்!” என்றான்.

    மாரீசனின் இதோபதேசம் இராவணனின் கோபத்தைக் கிளறிற்றேயன்றி அவனிடம் எவ்வித நல்ல மனமாற்றத்தையும் உண்டாக்கவில்லை. ’விநாச காலே விபரீத புத்தி’ என்பதை மெய்ப்பிப்பதாகவே இருந்தது அவன் செய்கை.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 106 (அப்பொன்)

    சேக்கிழார் பாடல் நயம் – 106 (அப்பொன்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    அப்பொன்  பதியின்   இடைவேளாண்   குலத்தை  விளக்க  அவதரித்தார்
    செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய   கழல்பற்றி
    எப்பற் றினையும்  அறஎறிவார்; எல்லை  தெரிய  ஒண்ணாதார்
    மெய்ப்பத்   தர்கள்பால்   பரிவுடையார்  எம்பி   ரானார்;  விறன்மிண்டர்

    பொருள்

    அந்த அழகிய பதியிலே வேளாண் குலத்தை விளக்கம் செய்ய அவதரித்தார்; சொல்லுதற்கரிய பெருஞ் சீர்த்தியுடைய சிவபெருமானாரின் சேவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டு ஏனைய எல்லாப் பற்றுக்களையும் அறஎறிவார்; எல்லையிட வொண்ணாதார் உண்மையடியார்களிடத்து அன்புமிக உடையவர்; எமது பெருமானாராகிய விறன்மிண்டர்.

    பொன்பதி – பொன் -அழகு. திருவுடைமையுமாம். இவற்றின் காரணம் முன்பாட்டில் உரைக்கப்பெற்றது.

    வேளாண் குலத்தை விளக்க  – என்ற தொடர்  வேளாளர் என்ற குலம் இவர் அதனுள் வந்தவதரிக்கப் பெற்றமையால் விளக்கமடைந்தது. வேளாளர் குலத்திற்கு முன்னரிருந்த அளவிளாத பெருமைகளினும், திருத்தொண்டத்தொகையை உலகம் பெற்றுய்தற்குக் காரணராயிருந்த இவரைத் தன்னுட் பெற்றது அக்குலத்திற்கு மிகப் பெருமையும் விளக்கமும் தந்தது என்க.

    “ஆசின் மறைக்,
    கைப்படுத்து சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்,
    செப்பு நெறி வழிவந்தார் சிவபாத விருதயர்“ என்றும்,

    “கானவர் குலம் விளங்கத் தத்தைபாற் கருப்பம் நீட“ என்றும்

    சேக்கிழார்  கூறிய   திருவாக்குக்கள்  குலமாண்பை சிறப்பித்தமை  காண்க.

    செப்பற்கரிய பெருஞ் சீர்த்திச் சிவனார் –  என்ற தொடர்  ‘செப்பற்கரிய’  அதாவது , “உலகெலா  முணர்ந்   தோதற் கரியவன்“ என முதற்கண்ணே ஒதியதை  நினைவூட்டுகிறது.

    “யதோ வாசோ நிவர்த்தந்தே“ – (எதினின்றும் வாக்குக்கள் திரும்பிவிடுகின்றனவோ) – என்னும் பொருள் காட்டும்  உபநிடதத்தால்   செப்பற்கருமை உணரப்படும். பெரும் – மிகச்சிறியதும் செப்பரிதாம்   ஆதலின் அதனை  விலக்க, ‘பெரும்’ என்றார்.

    சீர்த்தி – இச் சீர்த்திகளை மறைகள் பற்பலவாறு பேசித் திளைத்துணர்த்தும் சிவம் என்ற சொல் இருத்தல் – கிடத்தல் எனப் பொருள் தருதலால், எங்கும் இருப்பது – எங்கும் பதிந்து கிடப்பது எனப் பொருள் கொண்டு சிவபெருமானது எல்லா மறியுந் தன்மை, ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருக்குந் தன்மை முதலிய பல சீர்த்திகளையும் மறைகள் பேசும். வேதங்களுள்ளே திருவுருத்திரமும்,

    “மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
    வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகி“,

    “மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை“,

    என்பன முதலிய எண்ணிறந்த தமிழ் மறைகளும் இறைவன் எல்லாமாய் அல்லனுமாய் நின்றருளும் இச்சீர்த்தியை மிக விதந்து பேசுகின்றன. இறைவன் உயிர்களுக்கருள்புரியும் சீர்த்தியே அவனது கீர்த்திகளுள் மிகச் சிறந்ததாம். மாணிக்கவாசக அடிகள் கீர்த்தித் திருவகவலுள்ளே இதனை விரித்துப் பாராட்டியிருத்தலைக்  கண்டு தெளிக..

    இனி வேதம்,  முன்னுரையாகப்  பிரமன் விட்டுணு முதலிய தெய்வங்களின் புகழ்களையும் பேசும். ஆனால் அவை, இறைமைக் குணங்கள் முற்றும் உடையவரல்லாதாரை அவையுடையரெனப் பேசுதலால், பொருள் சேராவாம். அவை அவற்றினும் வலிமையுடைய கூற்றுக்களாற் பாதிக்கப்பட்டு இறுதியில் சிவனது சீர்த்தியே பெரியதாய்ப் பேசப்பெறும்.

    பிரமனை, அயன் – அசன் – பிறப்பில்லாதான் என உபசரிக்கும் கூற்று, பிரமன் விட்டுணு உந்தியிற் பிறந்தான் என்றபோது பொருள் சேராப் புகழாயொழியும். அவ்வாறே விட்டுணுவைப் பேசும் நாராயண உபநிடதம், நாராயணன் ஆத்மா – ‘’அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன்’’ – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில் நாராயணன் ஆத்மா – அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன் – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில், நாராயண:பரோத்யாதா – சுவேதாசுவதரம், அவர்தியானிக்கிறவர்; சிவனொருவனே தியானிக்கத்தக்கவர்; தியானிக்கப் படுபவர். சிவ ஏகோத்யேம்: (அதர்வசிகை) என முடிக்கின்றபோது முன்னர்க் கூறிய புகழ்கள் பொருள் சேராவாம்.

    “பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி கொள் வானுள்ளத் தான்“, “திருமாலகத்தான்“, “தொழப்படுந் தேவர் தொழப்படுவானை“, “சேர்ந்தறியாக் கையான்“, “தன்னாற் றொழப்படுவா-ரில்லை தானே“ என்பனவாதி எண்ணிறந்த தமிழ்

    மறைகளும் இக்கருத்தே பற்றியன.

    (இவை திரு.க. சதாசிவ செட்டியா ரவர்கள் உரைக் குறிப்புக்கள்.)

    சிவனார் – ஆர் விகுதி உயர்வு குறித்தது. செய்ய கழல்- சேவடி “அரவணையான் சிந்தித் தரற்றும்படி“ என்பது முதலாகத் திருவடித் திருத்தாண்டகத்திற் கூறியன காண்க.

    கழல் – ஆகுபெயர். திருவருள் நிறைவே திருவடியாகக் கூறப்பெறும். இறைவனுக்குத் திருமேனி கற்பிக்கப் பெறும்போது திருவடியும் கற்பிக்கப் பெறுமென்க. திருவடியே சிவசத்தியாம் – அதுவே தாரகமாவது.

    செய்ய – செம்மையுடைய – வீடுபேறுதரும் – என்ற பொருளில் வந்தது. செய்ய -சிவந்த எனக் கூறலுமாம். எல்லாரும் மலரிட்டு அருச்சித்து வணங்குதலால்  சிவந்தது.

    “தேவரெல்லாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட் செங்கரும்பே“ – தாயுமானார்;

    “நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நினைந்துகுத்த,
    பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன“ (அப்பர் – திருவிருத்தம்).

    அருச்சித்த மலர்களினின்றும் தேன்பாய்ந்து சிவந்தது என்பதுமொரு கருத்து.

     “சிறந்து வானோர் ,
    இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
    வின்மலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி,
    நனைந்தனைய திருவடி“      என்பது  திருமுறை .

    கழல்பற்றி எப்பற்றினையும் அற எறிவார் – பற்றத்தக்கது கழலேயாம் என்பது. அதனைப் பற்றுவதும் பிற எல்லாப் பற்றுக்களும் அறுதற்கேயாம். பிற பற்றுக்களற்ற போதே திருவடிப் பற்று உளதாம். திருவடிப் பற்று உளதாகப் பிற பற்றுக்கள் அறும். இவ்விரண்டும் திருவருளால் உண்டாகவேண்டும் என்க. “முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே“ என்ற தேவாரமும் காண்க.

    எப்பற்றினையும் – யான் எனது என்ற அகப்பற்று, புறப்பற்றுக்கள் அனைத்தையும்; தேவலோக நாகலோக பூலோகப் பற்றுக்களையும்.

    “போகம்வேண்டிவேண்டிலேன்புரந்த ராதி இன்பமும்,
    ஏக நின் கழலிணை யலாது  இலேன்“ என்பது திருவாசகம்.

    கழற்பற்று ஒன்றொழித்து வேறு எல்லாப் பற்றுக்களையும் எப்பற்றினையும் என்றதனால் “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“, “ஈசனோ டாயினு மாசை யறுமின்“ என்றபடி நிராசையாகிய தொண்டர் நிலையுங் கொள்ளப்பெறும்.

    இந்நாயனார் இறைவனிடத்து வீடும் வேண்டா விறலை உடையராய், அவனையும் புற கென்ற திறத்தைக் காண்க. அற எறிவார் – அற – அறவே – முழுதும். அறும்படியாக என்றலுமாம். எறிவார் – எறிவாராயினர்.

    எல்லைதெரிய ஒண்ணாதார்  என்ற தொடர்,  பொருளின் அளவால் அளக்க லாகாதவருடைய. முன் செப்பற்கரிய என்றது உரையின் அளவால்  அளக்கலாகாமை குறித்தது.  இதனை நாயனார்க்குக் கூட்டி, அளவிடமுடியாத பெருமையுடையவர் என்றுரைப்பதும்  உண்டு. எல்லை தெரிய ஒண்ணா இறைவன் கழல்பற்றியவராதலின் இவரும் அத்தன்மையினரே.

    மெய்ப்பத்தர்கள் – உண்மை யன்பர்கள். மெய்ப்பொருணாயனார் போலல்லாது இந்நாயனார் உண்மை யன்பர்கள் பாலே பத்தி செய்வார். ஆயின் இவர் வேடத்தைச் சிந்தை செய்யாரோ எனின், வேடத்துடன் உண்மை யன்பும் உடன்சேர்த்தி எண்ணி அன்பு செய்வார் என்க.

    இது இவரது சரிதக் குறிப்பாகும். நம்பியாரூரரையும் அவரை ஆட்கொண்ட பெருமானையும் புறகு என்று கூறவல்ல விறல் படைத்தவராதலின் இவரது திருவுள்ளம் மெய்ப் பத்தர்கள் பாற் பரிவுடையது என்றார். பரிவுடைமை – அன்பு பூண்டொழுகுதல்.

    எம்பிரானார் – எமது பெருமானார். தலைவர் என்று ஆசிரியர் இங்குக் குறித்ததன் காரணம்இப்புராணப்  பாட்டிற் காண்க. இப்புராணத்திற்கு முதனூலாகிய திருத்தொண்டத் தொகை இவராலே உலகம் பெறுதற்குக் காரணமாயிற்று என்ற நன்றி கருதி வணங்கினார் என்க. அதனாலே தொண்டர் கூட்டமும் அவர் புகழும் உலகெலாம் எங்கும் நிலவி நின்றதென்பதுமாம்.

    அவதரித்தாராகவும், எறிவாராகவும், உடையாராகவும், பிரானாராகவும்  விளங்கிய விறன்மிண்டர் என முடிக்க.

    நாயனாரது பெயரை முதலிற் கூற நேர்ந்தபோது, இவ்விடத்து “மெய்ப்பத்தர்கள்“ அடியின் அடியில் ஆசிரியர் அமைத்துக்காட்டி, நாயனாரது உண்மை நிலையைக் குறித்த அழகு காண்க. மெய்ப்பத்தர்கள்பாற் பரிவுடைமையே “கூட்டம் பேணா தேகும் ஊரனுக்கும் புறகு“ என்று நாயனார் கூறக் காரணமாயிற் றென்பதும், இதுவும் இச்சரிதக் குறிப்பாம் என்பதும் இங்கும் காண்க. வரும் பாட்டுக்களிலும்   காண்போம்.

    Share
  • அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன்

    அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன்

    அண்ணாகண்ணன்

    தமிழ்ப் பதிப்பியலை, அகராதியியலை நவீன கண்ணோட்டத்துடன் அணுகி, தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப, புதிய பரிமாணங்களுடன் மிளிரச் செய்த க்ரியா ராமகிருஷ்ணன், இன்று (17.11.2020) மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன்.

    க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களை நான் ஓரிரு முறைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். முதல் முறை, 2004 காலக்கட்டத்தில் அமுதசுரபியில் நான் பொறுப்பில் இருந்தபோது, வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிப்பித்தேன். அப்போது ஒரு கூட்டத்தில் அவர், க்ரியா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகம் செய்வித்தார். க்ரியா என மெய்யெழுத்தில் தொடங்குமாறு ஏன் வைத்தீர்கள் எனக் கேட்டேன். அதுதான் அதன் உச்சரிப்பு என்றார். அப்படியானால், ராமக்ருஷ்ணன் என்றுதானே எழுத வேண்டும். அங்கு மட்டும் ஏன் கிருஷ்ணன் என எழுதுகிறீர்கள் எனக் கேட்டதாக ஞாபகம்.

    க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் சைக்கிள் உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள் எப்படி இடம்பெற்றன? என அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்களிடம் கேட்டேன். ஆனால், பிறகு இதற்கான தேவையைப் புரிந்துகொண்டேன். தமிழர் நாவில் புழங்கும் சொற்கள் அனைத்தையும் திரட்டித் தொகுக்கும் முயற்சியில் ராமகிருஷ்ணன், ஒரு முன்னோடி.

    க்ரியா வலைத்தளத்தையும் (https://www.crea.in) செயலியையும் அவர் உருவாக்கியிருந்தார். தமிழில் அதிக அளவு சொற்களைத் திரட்டி, சொல்வங்கி ஒன்றை அவர் வைத்திருந்தார். தமிழில் மென்பொருள் கருவிகளை உருவாக்கும் நண்பர்கள், சொற்றொகுதிகள் தேவை எனக் கேட்டபோது, விக்கிப்பீடியாவையும் க்ரியாவையும் பரிந்துரைத்துள்ளேன்.

    க்ரியா ஆண்ட்ராய்டு செயலியைத் தரவிறக்கினால் 10 முறைகள் மட்டுமே இலவசமாகத் தேட முடியும்; அதற்கு மேல் தேடுவதானால், ரூ.199 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டிருந்தார். இதற்காக அந்தச் செயலிக்கு மிகக் குறைவான மதிப்பீடு அளித்து, அவரை வசைமாரி பொழிந்திருப்பதைக் காணும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் மென்பொருள்கள், தமிழ்ச் செயலிகள், தமிழுக்காக உருவாகும் தொழில்நுட்பக் கருவிகளின் வணிகச் சந்தை, மிக பலவீனமாக இருக்கிறது. இந்த இடர்களை எதிர்கொண்டே, கடந்தே தமிழுக்கும் தமிழ்கூறு நல்லுலகிற்கும் தொண்டாற்ற வேண்டியிருக்கிறது.

    புதிய சிந்தனை, புதிய ஆக்கங்கள், சமரசம் இல்லாத தரம், செம்மை ஆகியவற்றை முன்னிறுத்தி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி உழைத்த க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு, தமிழுலகிற்குப் பேரிழப்பு. அவர் என்றென்றும் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

    அவரது முக்கியமான ஒரு நேர்காணல் இங்கே – https://tamil.asiavillenews.com

    படத்துக்கு நன்றி: ஆசியாவில்லி

    Share