Blog

  • பறப்பதே வாழ்விங்கு

    பறப்பதே வாழ்விங்கு

    பாஸ்கர் சேஷாத்ரி

    பேருடம்பு இங்கே கால் பதிந்து நிற்கிறது

    மனமோ ஹோவென வானில் கலந்து கிடக்கிறது

    இயக்கம் நின்ற சிந்திப்பில் கண்கள் செருகி நிற்கின்

    இது இல்லை இது இல்லை என நில்லாத பயணம்

    பேரானந்தத் தவிப்பிலும் கிடந்தே படபடக்கிறது மனம்

    இலக்கை நோக்கும் அம்பு போல ஓர்திசை வேகம்.

    வண்ண வண்ணக் காற்றாடிகளைத் தாண்டிவிட்டேன்

    பறவைகளே அரண்டு சிறகடிப்பதை நிறுத்தின.

    இரைச்சல் கொண்ட பூமி சற்றே விலகிப் போனது

    சப்தமற்ற பேரண்டம் விரிந்துகொண்டே செல்கிறது

    ஆதியும் இல்லாது, அந்தமும் புரியாத அல்லாட்டம் .

    தேடும் பொருள் சுகம் இல்லை, தேடுவதே சுகமிங்கு .

    பறந்தே களைத்து, பாதையே மறந்து போனேன்

    பாதையே தேவையில்லை பறப்பதே வாழ்விங்கு .

    காற்றில் கலந்து கரைந்தே போவேன் ஓர் நாள்

    தேடாதீர் என்னை எங்கும் நீரும் மறைந்து போவீர் .

    Share
  • ‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

    ‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

    காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 246

    படக்கவிதைப் போட்டி – 246

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முகம்மது ரஃபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (23.02.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பூக்களுக்கு இடையே காதல் பாக்கள் இசைத்தபடி அமர்ந்திருக்கும் காதல் புறாக்களைத் தம் ஒளிப்படப் பெட்டியில் களிப்போடு கொண்டுவந்திருப்பவர் திரு. பார்கவ் கேசவன். காதலர் தினத்தை ஒட்டிய வாரத்துக்குப் பொருத்தமான படமிது என்று இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இல்லறத்தில் புதிதாய் இணைந்திருக்கும் இணையரின் திருமணம் குன்றாத நறுமணத்தோடும் குறையாத இன்பத்தோடும் என்றும் இருந்திட, ஒருவர் உணர்வை மற்றொருவர் புரிந்துகொள்வதும், எடுத்ததற்கெல்லாம் முட்டிக்கொண்டிராமல் சிறிது விட்டுக் கொடுத்துச் செல்வதும், அடுத்தவரின் தனிப்பட்ட ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் இருவருமே மதிப்பளிப்பதும் அவசியம். அத்தகு இல்லறம் அன்பும் அறனும் உடைய நல்லறமாய் என்றும் திகழ்ந்திடும் என்பதில் ஐயமில்லை.

    இனி, மோதலில்லாக் காதல் வாழ்வுக்கு நம் கவிஞர்கள் கூறும் ஆலோசனைகள் என்னென்ன என்பதையும் அறிந்துவருவோம் வாருங்கள்!

    *****

    ”புதிதாய் வாழ்வில் இருவர் இணைந்திடத் தொடங்கிய இந்த இல்லறம் இறுதி வரை இன்பத்தோடு நிலைக்கட்டும்” என்று மணமக்களை அகமகிழ்ந்து வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இன்பம் நிலைக்கட்டும்…

    புதிதாய் வாழ்வில் இணைந்தவர்கள்
    புவியைச் சுற்றும் கணமிதுவே,
    எதிலும் குறைகள் வைக்காமல்
    எல்லாம் துய்த்திடும் வேளையிது,
    இதயமும் ஒன்றாய்க் கலந்ததாலே
    இறக்கை கட்டிப் பறக்கின்றார்,
    முதுமை வரைக்கும் நிலைக்கட்டும்
    முறையாய் இல்லற வாழ்விதுவே…!

    திருமண வைபவத்தில் போடப்படும் மூன்று முடிச்சுக்குப் பொருள்பொதிந்த விளக்கங்களை அழகுறக் கவிதையில் அடுக்குகின்றார் திரு. ராவணா சுந்தர்.

    திருமணம்

    என் வாழ்வியலை
    அழகாக உயிராக்கும்
    என் மறைமதியே
    உன்னைப் பிறைமதியாகப்
    பிரதிபலிக்கும் வைபவத்தை
    நோக்கிப் பிரார்த்திக்கிறேன்!

    மணமாலை நாம்
    மாற்றிடவே நீ
    மறுமுறை மலர்ந்திட வேண்டும்!

    மங்கள இசை மனமுருக
    அட்சதையில் மாங்கல்யம் பவனிவர,
    புரோகிதர் பொன்மொழியில்
    இறையோர்களை அழைத்திட,
    கெட்டிமேளம் ஓங்கிட,
    சொந்தமும் நட்பும்
    வாழ்த்துகளை வார்த்தைகளற்று
    அரிசி மழையாகப் பொழிந்திட,
    வேண்டிய கனவுகளை
    கைகளில் ஏந்தி,
    உன் பொன்முறுவலை எனதாக்கி,
    நான் இடும் முதல் முடிச்சினில்
    உன் தனிமையைத் தகர்த்திட வேண்டும்.
    இரண்டாம் முடிச்சினில்
    நம்பிக்கையை விதைத்திட வேண்டும்.
    மூன்றாம் முடிச்சினில்
    அழியும் மெய்யிலும்
    அழிவில்லாக் காதலை
    வரமாக்கிட வேண்டும்.

    உன் நெற்றியில் கறைபடியவே
    என் கைவிரல்கள் ஏங்கிட வேண்டும்!

    உன் பாதம்
    ஏந்திய தருணம்
    என் கைகள் மோட்சம்
    அடைந்திடுமே -அதை
    மெட்டி ஒலியால் நான்
    உணர்த்திட வேண்டும்!

    நமது ஆடைகளின்
    முடிவினில் இடும் முடிச்சினில்
    வாழ்க்கை தொடங்கிட வேண்டும்!

    சுற்றத்தார் கண்களும்
    நாம் சுற்றிவரும் அக்னியில்
    கரைந்திட வேண்டும்!

    நல்வரவின் நோக்கம்
    பலித்திடவே நாம்
    சுற்றத்தை வணங்கிட வேண்டும்!

    *****

    உறவென்ற கயிறு உணர்வென்ற அச்சில் சுழல, பருவம் கடந்தபின்னும் பரிவோடு தொடரவிருக்கும் இனிய இல்லறத்திற்கான தொடக்க ஆட்டமிது என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    பொன்னூஞ்சல்

    உறவென்ற கயிறு கட்டி
    உணர்வென்ற அச்சில் சுழல
    மனமென்னும் காற்று ஆட
    மணமக்கள் ஆடும் ஆட்டம்!

    சொந்தங்கள் வாழ்த்துரைக்க
    சீதையுடன் இராமனென
    சந்ததிகள் தொடர்ந்துவாழ – இன்பச்
    சன்னிதியில் ஆடும் ஆட்டம்!

    சோர்வுற்ற நேரமெல்லம் சொந்தமெனத் தாகம்தீர்த்து
    பருவம் கடந்த பின்னும் பரிவுடன் நீர்த்திருந்து
    மேடுபள்ளம் தாண்டி ஜீவநதியாய் ஓட
    இல்லறத்தின் இன்பம் காணும் துவக்க ஆட்டம்!

    *****

    இல்வாழ்வில் புதிதாய் இணைந்திருக்கும் இணையருக்கு மண்ணில் நல்லவண்ணம் வாழ வழிசொல்லியிருக்கும் கவிஞர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    காதல் திருமணம்!

    கல் தோன்றி மண் தோன்றிய
    காலம் முன்னே தோன்றிய காதல்
    கண் முன்னே நீ தோன்ற
    என் நெஞ்சில் தோன்றியதே
    இதயத் துடிப்பில் தோன்றி
    ஊமை விழிகள் பேசும் மௌனமொழி
    உணர்வாய் மாறி
    நெஞ்சில் தோன்றிடும் காதலாய்த்
    தரையில் கால் படாமலே
    விண்ணில் பறந்திடும்
    உன்னை நினைக்கையிலே
    றெக்கை கட்டி மனசு!

    விழியில் தோன்றி இதயம் நுழைந்து
    உணர்வாய்த் தோன்றி உள்ளம் கவர்ந்து
    சொல்லத் துடித்த மனதை அறிந்து
    என்னை ஏற்க
    நெஞ்சம் துணிந்து கரங்கள் பற்றிட
    இருமனம் இணைந்த திருமணம்!

    தேக்கி வைத்த அணை நீராய்ச்
    சேர்த்து வைத்த ஆசைகள்
    மடை திறந்த வெள்ளமாய்த்
    தடை ஏதும் இன்றியே
    பொங்கி வழியும் காதல்
    என் அருகில் நீ இருக்க
    உலகை மறந்து
    உயரப் பறந்திடும் மனம்
    இடைவெளி இல்லாமல்
    ஒருவரை ஒருவர்
    புரிந்துகொள்ள அறிந்துகொள்ள
    இடையூறு ஏதும் இன்றியே
    காதல் பாடம் கற்றுப் பயிலத்
    திருமணமெனும் பள்ளிக்கூட
    அறிவிப்புப் பலகை ஊருக்கு அறிவித்ததே
    புது மண தம்பதியர் இவர்கள் என்று!

    ”அணைபோட்ட ஆசைகள் மடைதிறந்த வெள்ளமாய்ப் பாய்ந்திட, இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத் திருமணப் பள்ளியில் இணைந்துவிட்ட புதுமணத் தம்பதியர் இவர்கள் என்பதை அறிவிக்கும் பலகை இது!” என்று அந்தரத்தில் ஊஞ்சலாடும் இணையருக்குச் சுந்தரத் தமிழில் அறிமுகம் தந்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்

    குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்

    அண்ணாகண்ணன்

    20.02.2020 அன்று சென்னை வேப்பேரி குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையில் உரையாற்றுகிறேன். 

    வாய்ப்புள்ளோர் வருக.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-11

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-11

    தி. இரா. மீனா

    உரிலிங்க பெத்தி

    களவுத் தொழில் செய்து கொண்டிருந்த இவர் உரிலிங்க தேவனின் மாணவனாகி கல்வியும் அனுபவமும் பெற்று பல வசனங்களை இயற்றியவர். உரிலிங்கதேவனுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பையேற்றுச் செயல்பட்டவர். தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராயினும் தலைமைப் பொறுப்பில் செயல்பட்டது பசவரின் அனுபவ மண்டபம் அனைவரையும் சமமாகப் போற்றும் தன்மையை வெளிப்படுத்துகிறது. ”உரிலிங்க பெத்திப்பிரியா விஸ்வேஸ்வரா“ என்பது இவர் முத்திரையாகும். குருவின் உயர்வு, இலிங்க—ஜங்கமக் கோட்பாடுகள் ,குலம்—சாதி வேறுபாட்டு ஐயங்களை விளக்குவதாக இவர் வசனங்கள் அமைகின்றன. பலவிடங்களில் வசனங்கள் சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டுள்ளன. அது இவரது புலமையைக் காட்டுவதாக அமைகிறது.

     1. “அமுதென்பது எல்லோருக்கும் அமுதே
    அது சிலருக்கு அமுதும் சிலருக்கு விடமுமாகாது
    நல்ல குரு அனைவருக்கும் குருவாவார்
    உரிலிங்கப் பெத்திப் பிரிய விஸ்வேஸ்வரனே”

    2. “ஐயனே! உன் சரணர் பாதபக்தி எனக்குச் சிவமுக்தி
    உன் சரணரை வணங்குவது எனக்குச் சிவமுக்தி
    உன் கணங்களின் தியானம் எனக்குச் சிவமுக்தி
    உன் மூதாதையரின் ஞான அனுபவம் எனக்குச் சிவமுக்தி
    நான்குவகை முக்தியன்றி வேறொன்றறியேன்
    உரிலிங்கப் பெத்திப் பிரிய விஸ்வேஸ்வரனே”

    3. “காமம் பேராசை சினம் மோகம் செருக்கு பொறாமை
    நட்பு பகை என உடலிருக்கிறது
    நட்பும் பகையும் வந்து வந்து போகிறது.
    இதில் நானே பிரம்மமெனும் வீண் பேச்செதற்கு?
    இன்பம் அறிக,நம்புக
    உரிலிங்கப் பெத்திப் பிரிய விஸ்வேஸ்வரனே”

    4. “தீயில் புடமிட்டுச் சோதித்த
    சாம்பல் போலானேன் உம்மை வணங்கி
    ஞானாக்னிஸ்சர்வகர்மாணி பஸ்ம சாத்கருத்தே” என
    காய்ச்சிய இரும்பின் மீது நீர் தெளித்தது போலானேன்
    உரிலிங்கப் பெத்திப் பிரிய விஸ்வேஸ்வரனே”

    5. “இலிங்கத்தில் உள்ளமிணைந்து
    ஜங்கமத்துள் பணமிணைந்து
    சத்குருவில் அங்கமிணைந்தால்
    பக்தன் இலிங்கத்துக்குள் ; இலிங்கம் பக்தனுக்குள்.
    கபடமற்ற தாஸோகம் பரமாத்ம மோட்சம்
    சத்தியமிது, நித்தமும் அறிவான் சிவன்
    உரிலிங்கப் பெத்திப் பிரிய விஸ்வேஸ்வரனே”

    உரிலிங்கப் பெத்தியின் புண்ணியஸ்திரி காளவ்வே

    உரிலிங்கப் பெத்தியின் மனைவி காளவ்வே. ”உரிலிங்கப் பெத்திகள் அரசா” என்பது இவரது முத்திரையாகும். விரத உயர்வு, காயக இன்றியமையாமை, சாதி—குலம் பற்றிய தீவிரமான எதிர்ப்பு ஆகியவை இவரது வசனங்களின் சிறப்பாகும்.

    “கடமை காயகமற்றவர் பக்தரில்லை
    காயகமென்பது உண்மையற்றதும் தூய்மையற்றதுமல்ல
    ஆசையென்பது இவ்வுலகின் விதை
    ஆசையற்றிருப்பது முக்தி தருவதெனினும் சுலபமானதல்ல
    உரிலிங்கப்பெத்திகள் அரசா”

    எலேகார ராமண்ணா

    இலை விற்கும் தொழில் இவருடையது. ”ஆதுரேஸ்வரலிங்கா” இவரது முத்திரையாகும். விரத மேன்மை பற்றியதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

    “வெற்றிலை முற்றுவதற்கு ஆறு திங்கள்
    கணமொன்றில் நோன்பு கெட்டால் நீசனென்று சேரமாட்டார்
    வெற்றிலை முற்றினால் சிவனுக்கு அர்ப்பணம்
    நோன்பு  கெட்டால் அக்கணமே மரணம்
    ஆதுரேஸ்வரலிங்கமே”

    ஏகாந்த ராமிதந்தே

    கல்புர்கி மாவட்டம் ஆளந்தா என்னும் பகுதியைச் சேர்ந்தவர். புலிகெரே சோமேஸ்வரன் இவர் கனவில் தோன்றி வேற்று சமயத்தைச் சேர்ந்தவர்களை வெற்றி கொள்ள வேண்டுமென்று கட்டளையிடுகிறார். அதையேற்று அந்த நோக்கத்தோடு அப்பலூர் வருகிறார். சமணர்களோடு வாதம் செய்து பிரமேஸ்வரர் கோயிலில் தலையெடுக்கும் போட்டியில் வெற்றி பெற்று பசதி சோமேஸ்வரர் ஆலயத்தை அமைக்கிறார். இந்த நிகழ்ச்சி அப்பலூர்க் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. இது சோமேஸ்வர ஆலயத்தின் சுவர்களிலும் செதுக்கப்பட்டுள்ளது. ”என்னய்யா சென்னராமா” என்பது இவரது முத்திரையாகும். ஆத்மா-உடல் வேறுபாடு, ஆசையற்ற தன்மை, ஆடம்பரத்தை வெறுக்கும் தன்மை ஆகியவை வசனங்களில் வெளிப்படுகின்றன.

    “உணவு உடை பிற தேவைகளுக்குப் பொய் சொல்லி
    கருமித்தன இயல்பால் துன்பமடைந்து
    சேவை செய்ய வைப்பது குருவின் இயல்புக்குப் பொருளற்றது.
    எண்ணெய் –நீருக்குமான வேறுபாட்டை அறிந்திருக்க வேண்டும்
    மாலைக்குள் மறைந்திருக்கும் நூல் போல
    தன்தோலைக் களையும் பாம்பு போன்றது குருஸ்தலம்
    சென்னராமேஸ்வரலிங்கா அறிந்தவர் இப்பண்பானவர்”

    ஏலேஸ்வர கேதய்யா

    கல்புரிகி மாவட்டம் ஏலேஸ்வரத்தைச் சேர்ந்தவர். விவசாயம் இவரது தொழிலாகும். ”உடலுக்குப் பாதுகாப்பு ஒழுக்கம்; உள்ளத்துக்குப் பாதுகாப்பு அறிவு ”என்பது இவரது கொள்கையாகும். ”ஏலேஸ்வரலிங்கா” என்பது இவரது முத்திரையாகும். நோன்பு—விதிமுறிகள்—இயல்பு, ஒழுக்கம் பற்றிப் பேசுகின்றன இவரது வசனங்கள்.

    1. “ஒழுங்கு விரதம் என எதைப் பின்பற்றினாலும்
    அது தூய்மையானதாக இருக்கவேண்டும்
    சண்டை, வேளாண்மை, இரத்தல், தொழில் என்று எதுவாக
    இருப்பினும் தூய்மை வேண்டும். அந்த பக்தனின் உடல்
    ஏலேஸ்வரலிங்கத்தின் உடலாம்”

    2. “தகப்பன் மகனை அழைப்பது;மகன் தந்தையை அழைப்பது
    மாமன் மைத்துனனை அழைப்பது மைத்துனன் மாமனை
    அழைப்பது—இப்படித் தங்களுக்குள்ளே உணவிட்டுக் கொண்டு
    தங்களை ஜங்கமர்களென்று அழைத்துக் கொள்பவர்கள்
    ஏலேஸ்வரலிங்கத்தோடு ஐக்கியமானவர்களில்லை”

    3. “நோன்பு உள்ளத்திற்குரியது செயல்கள் உடலிற்குரியது
    புலன்களடக்கி ஐயம் நீங்கிச் செயல்பட வேண்டும்
    மனம் போனபடி திரிந்து வாயில் வந்தது பேசுபவரை
    ஏலேஸ்வரலிங்கன் இலகுவில் விடுவானோ?”

    4. “சம்சாரியுடன் கூடி விவசாயம் வாணிகம் படைத்தொழில்
    செய்யாத நியமம் பின்பற்றுவேன்
    காயகத்தில் கிடைத்த பொருளைப் படைத்து
    உடனிருந்து உண்பவனின்  பிரசாதத்தை
    ஏகேஸ்வரலிங்கத்திற்குப் படைப்பேன்”

    ஒக்கலிக முத்தண்ணா

    இவரது தொழில் உழவு. ஜங்கமருக்கு உணவு படைப்பது இவரது நோன்பு. மன்னன் கூடுதலாக வரி விதித்தபோது அதைக் கொடுக்காமல் அந்தப் பணத்தை தாசோகத்திற்குத் தந்தவர்.” காமபீட ஜீவதன ஓடேயன்” என்பது இவரது முத்திரையாகும்.

    1.  “உடல் பூமியாகி இலிங்கம் செடியாகி
    நம்பிக்கை வளர்ந்த பயிராக
    உண்டு இன்பமடைய வேண்டுமென்றான்
    காமபீட ஜீவதன ஓடேயன்”

    2. “வேதம் மந்திரம் சொல்வதால் அந்தணனில்லை
    போரிடுவதால் சத்திரியனில்லை
    வாணிகம் செய்வதால் வைசியனில்லை
    விவசாயியின் மகன் நான்
    என் பிழை பாராமல் ஏற்பாய்
    காமபீட ஜீவதன ஓடேயனே”

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 68 (அளவிலா)

    சேக்கிழார் பாடல் நயம் – 68 (அளவிலா)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அளவிலா மரபின்  வாழ்க்கை  மண்  கலம்  அமுதுக்கு ஆக்கி
    வளரிளம்   திங்கள்  கண்ணி  மன்றுளார்  அடியார்க்கு  என்றும்
    உளமகிழ்   சிறப்பின்  மிக்க  ஓடு  அளித்து  ஒழுகும்  நாளில்
    இளமை   மீதூர  இன்பத்   துறையினில்  எளியர்  ஆனார் !

    சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை என்ற சிவனடியார் பற்றிய முதல் நூலை இயற்றினார். அந்நூலில்  ஓரடிக்கு  ஒருவராக,

    தில்லைவாழ்  அந்தணர்தம்  அடியார்க்கும்  அடியேன்
    திருநீல  கண்டத்துக்   குயவனார்க்கு அடியேன்

    என்று தொடர்ந்துபாடினார். தில்லைவாழ் அந்தணரை அடுத்து திருநீலகண்ட நாயனாரைத் தம் நூலில் அறிமுகம் செய்தார். பின்னர் அந்நூலில் உள்ள புராணங்களைப் பிற்காலத்தில் ஓர் அடியாருக்கு ஒருபாடல்  வீதம், ‘’திருத்தொண்டர் திருவந்தாதி’’ என்ற வழிநூலாக, நம்பியாண்டார் நம்பிகள் இயற்றி அளித்தார். அதனை வழிகாட்டி நூலாகக்  கொண்டு சேக்கிழார் பெருந்தகை ‘’திருத்தொண்டர்புராணம்’’ என்ற விரிநூலை இயற்றி யருளினார். இந்நூல் திருமலைச் சருக்கத்தை முதல் சருக்கமாகக் கொண்டு திருத்தொண்டர் திருவந்தாதியின் ஒவ்வொரு விருத்தத்தின்  முதற்சீர்களை சருக்கம் என்ற நூற்பகுதியின் பெயராகக் கொண்டு, தில்லைவாழ் அந்தணர் சருக்கம்  முதலாக, மன்னிய சீர்ச் சருக்கம் ஈறாகப் பன்னிரண்டு சருக்கங்களுடன் அமைந்துள்ளது. இந்நூல் இரண்டு காண்டங்களைக்  கொண்டது!

    இந்நூலில் போற்றப்பெறும்  தனியடியார்களுள் திருநீலகண்ட நாயனார் முதலாமவர் ஆவார். இவர் வேதியர்களாகிய தில்லைவாழ் அந்தணர்களின் வாழ்விடமாகிய தில்லையில் தோன்றினார். அவ்வூரில் வேட்கோவர் எனப்பெறும் குயவர் குலத்தைச் சார்ந்தவர். சிவபெருமான் அடியார்களில் அந்தணர்களுக்கு இணையான நன்னிலையைக் குயவர்களும் பெற்றார்கள் என்ற சமரசக் கருத்தை  இப்புராணம் காட்டுகிறது.

    ‘’வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து  வந்தார்’’ என்றே இப்புராணம் தொடங்குகிறது. இவ்வடியார் எல்லையற்ற மரபில் வழிவழியாக மண்ணைக் குழைத்து  சுட்டுச்  சட்டி, பானைகளை உணவுக்காக  உற்பத்திசெய்யும் குயவர் மரபில் தோன்றியவர்; இறைவனடியார்களுக்கு வேண்டிய பரிகலன்களைக் காணிக்கையாகத் தருபவர். அவ்வாறு மண்சட்டி, திருவோடு முதலியவற்றை உருவாக்கி அடியார்களுக்கு வழங்கி வாழும்  நாளில், அவருடைய மண்பானை வாணிகத்தில் வந்த பொருட்செல்வ மிகுதியால் இளமைக்கால  விளையாட்டில் ஈடுபட்டு அதன் தொடர்ச்சியாய்க்  காம வின்பத்தில் எளியவராகித்  திளைத்தார்.

    இந்தப் பாடலில் வாணிகத்தின் நுட்பங்கள் கூறப்பெறுகின்றன! வாணிகத்தில், வியாபார நோக்கத்துடன் அடிக்கடி அழியும் பொருள்களை  உற்பத்தி செய்தல், அவற்றை ஓரிடத்திலிருந்து கடை வீதிக்கு எடுத்துச் சென்று தொகுத்து வைத்தல், அவற்றை வாங்கிய விலைக்குமேல் இலாபம் வைத்து விற்றல் ஆகியவற்றின்  நுணுக்கங்களை சேக்கிழார்  பெருமான் இப்பாடலில் கூறுகிறார்.

    இந்தத் தொழில் மிகப்பழையானது என்பதை ‘’அளவிலா மரபின் வந்த மட்கலம்‘’ என்ற தொடர் விளக்குகிறது! மேலும் இறைவனின் படைத்தல் தொழிலுக்கு  இத்தொழிலையே உவமையாக்குவார்கள்!அளவிட முடியாத பயனுடையதாய், “ஆரியன் குலாலனாய்நின் றாக்குவ னுலக மெல்லாம்“ என்றபடி, இறைவனது சிருட்டித்தொழிலுக்கு இணை சொல்லத்தக்க மரபில் வந்ததாய் உள்ளது  என்று உரைத்தனர்.

    ஜப்பான் நாட்டிலிருந்து வந்த வணிகக் குழுவினர் இரண்டு தலைமுறையாய் வீட்டில் கிடந்த ஆட்டுக்கல்லைப்  பார்த்து அதிர்ந்தனர். ‘’இப்படி நீண்டநாள் இருந்தால் எப்படி புதிய கல்லை உருவாக்கி விற்பது? அடிக்கடி உடைந்தால் தானே அடுத்ததை விற்பனை செய்யலாம்?’’ என்றார்கள்! தொன்மையும் பெருமையும் மிக்க இத்தொழிலில் உருவாக்கி விற்கும் மண் பாண்டங்கள் அடிக்கடி அடுப்பில் ஏற்றி இறக்குவதால்  உடைந்து, மீண்டும் விலைக்குப் பெறத்  தூண்டும்!  ஆகவே  நிலையாத  பாண்டங்கள் நிலைத்த ஊதியத்தைத் தரும். இதனை ‘’மட்கலம்  அமுதுக்கு ஆக்கி ‘’ என்ற தொடரால் நுட்பமாக  விளக்குகிறார்.

    மேலும் தம் இல்லத்திற்குத் தேவையான உணவைச் சமைப்பதற்கும், விருந்தோம்புவதற்கும் அடியார்களுக்கு வழங்குவதற்கும் இவற்றை உருவாக்கினார் என்ற கருத்தையும் இத்தொடர் விளக்குகிறது! இதனை மேலும், ‘’அடியார்க்கு என்றும் உளம் மகிழ் சிறப்பின் மல்க  ஓடளித்து  ஒழுகும் நாளில் ‘’ என்ற தொடர் விளக்குகிறது!

    தாம் செய்த வாணிகத்தால் ஈட்டிய செல்வத்தை அடியார்களுக்கு அளித்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இவர்,  இளமைக்கால ஆடல் பாடல்களில் ஈடுபாடு காட்டியதால்,  தம் நிலையில் தாழ்ந்து  காம இச்சைகொண்டு அவ்வேட்கையைத் தணித்துக்கொள்ள மனைவியை விட்டு நீங்கி மற்ற பெண்டிருடனும் பழகினார். இதனைச்   சேக்கிழார், ‘’இளமை  மீதூர  இன்பத்துறையினில்  எளியர் ஆனார்!’’ என்ற தொடரால் குறிப்பிடுகிறார். இளமை விரும்பிய இன்பம்  இவர் மனவலிமையைக் குறைத்து இவர் மேலேறி ஊர்ந்து, எளியவர் ஆக்கி விட்டது. இதனை, ‘’மீதூர’’ என்ற சொல் விளக்குகிறது.  அதனால் பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கத்தை  விலக்க மாட்டாதவராய்த்  தாழ்ந்தார்.

    இவர் செய்த  பிழை  பின்னர் இறைவனால் திருத்தும் பெற்றது. தாம் செய்த தவற்றை உணர்ந்து வருந்தி  மன்னிக்க வேண்டுவோரை இறைவன் கருணை காட்டி ஏற்றுக்கொள்வதை குற்றம் புரிந்து உடல் தேயச் சாபம் பெற்று இறைவனை அடைந்து சாபநீக்கம் பெற்ற சந்திரனை இளம்பிறையாக்கித் தலைமேல் சூடிக்கொண்ட சிவபிரானை, ‘’வளர் இளந்  திங்கள்  கண்ணி மன்றுளார்‘’என்றதொடர்புலப்படுத்துகின்றது.

    ’’மாதர்ப்ப்பிறைக்கண்ணியானை “போழிளங்கண்ணியினானை“, “வளர்மதிக் கண்ணியி னானை“ என்ற அப்பர் தேவார அடிகளை  இந்த அடிகள் நமக்கு நினைவூட்டுகின்றன! இப்பாடலை  மீண்டும் பயின்று மகிழ்வோம்.

    அளவிலா மரபின்  வாழ்க்கை  மண்  கலம்  அமுதுக்கு ஆக்கி
    வளரிளம்   திங்கள்  கண்ணி  மன்றுளார்  அடியார்க்கு  என்றும்
    உளமகிழ்   சிறப்பின்  மிக்க  ஓடு  அளித்து  ஒழுகும்  நாளில்
    இளமை   மீதூர  இன்பத்   துறையினில்  எளியர்  ஆனார்.

    பொருட் செல்வவளம், அவ்வளம் பெற்றோரைப்  பூரியார் ஆக்கும். இதனை

    ‘’அருட்செல்வம்  செல்வத்துட்  செல்வம்  பொருட்செல்வம்
    பூரியார்   கண்ணும் உள!’’ என்றும்,

    ‘’அறன்ஈனும்   இன்பமும்  ஈனும்  திறனறிந்து
    தீதின்றி    வந்த   பொருள்!’’  என்றும்

    திருக்குறள் கூறுகிறது! ‘’திறனறிந்து தீதின்றி வந்த பொருள்’’ என்ற தொடரின் சொல்தோறும் பொருள்நயம்  சிறந்து விளங்குவதைக்  காண்க!

    Share
  • உலகே மாயம்

    உலகே மாயம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    தினம் தினம் இங்கு ஒரு பெருங்கூத்து
    இரவு பகல் ஆடியும் இரைச்சல் முடியவில்லை.
    ஸ்திரீபார்ட் வேஷம் கட்டியவன் பால் மறந்தான்
    ராஜா உடை போட்டவன் சைக்கிள் சாவி தேடினான்
    ராணி வேஷக்காரி குழந்தைக்கு சோறூட்டினாள்.
    ஒப்பனையால் கனமேறி கண்ணீரில் சிரங்கவிழ்த்தான்
    கிளிகளும் புறாக்களும் கூண்டுக்கு திரும்பின
    படுதாக்களும் போர்வாளும் இடம் மாறி மறைந்தன
    மக்கள் வெள்ளம் நிஜம் தேடி வேறிடம் விரைந்தது
    இருக்கைகள் எல்லாம் வாடகை வண்டி ஏறின
    பள்ளம் உடைத்தவன் பாதையை சரி செய்தான்
    விளக்குகள் இருண்டன வண்ண நிலவும் தெரிந்தது
    மரங்கள் தெரிந்தன மர்மங்களெல்லாம் விலகின
    மின்மினி பூச்சிகள் வெளிச்சத்தில் விசாரித்தன
    இருட்டின் அமைதியில் இரவே தவித்தது
    மனிதர்கள் அகன்றனர் மண் மட்டுமே மிஞ்சியது
    திரண்ட இடங்களில் சுவர்க்கோழி எல்லை மீறியது
    போரும் இல்லை சண்டை போட ராஜாவும் இல்லை
    எதிரிகள் இல்லை எல்லையுமில்லை ஆயுதமில்லை
    ஒப்பனை மேடையில் வேஷங்கள் கலைந்தன
    எல்லோரும் கரைந்தனர் -எங்கேயோ மறைந்தனர்
    ஆளற்ற பிரதேசத்தை மணல்துகள்கள் தாங்கி நின்றன
    எல்லாமே மாயையென புதுக் காற்றும் வீசியது
    காலம் நின்று காவல் காத்து சாட்சியாக நீள்கிறது

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-114

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-114

    நாங்குநேரி வாசஸ்ரீ

     114. நாணுத் துறவுரைத்தல்

    மடலூர்தல்னா என்னன்னு மொதல்ல தெரிஞ்சிக்கிடுங்க. எம்புட்டு மொனஞ்சும் காதலிய அடைய முடியாத காதலன் கடைசியா மடலேறி அவள அடைய முயலுவான். மடல் ங்கது பனை மட்டையால குதிரை உருவம் செஞ்சி கீழ உருள பொருத்தி, கயிறு கட்டி இழுத்துக்கிட்டு போகுத மாரி செஞ்சிருக்க வண்டி கணக்கா இருக்கும். ஊருக்கு நடுவுல முச்சந்தியில அத நிப்பாட்டி காதலன் ஏறி உக்காந்துக்கிடுவான். அவன் கையில காதலியோட படம் வரைஞ்ச துணி (கிழி) இருக்கும். ஒடம்பு முழுக்க திருநீறு பூசியிருப்பான். உணச்சியில்லாம வேற எந்த நெனப்பும் இல்லாம காதலியப் பத்தியே பாட்டு பாடிக்கிட்டு கெடப்பான். ஊர்க்காரங்க மடல இழுப்பாங்க. இதால என்ன பிரயோசனம்னா ஊர்க்காரவுங்களுக்கு அவன் நேசம் தெரிஞ்சு போவுததால அவன் படுத சங்கடத்தப் பாத்து சிலசமயம் அந்தப் பிள்ளையக் கட்டிக்கிட அவனுக்கு ஒதவியா நிப்பாங்க.

    குறள் 1131

    காமம் உழந்து வருந்தினார்க் கேம
    மடலல்ல தில்லை வலி

    நேசம் வச்சி கைகூடாத நேரம் மடலூர்தலத் தவித்து பிடிப்பான தொண வேற இல்ல.

    குறள் 1132

    நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
    நாணினை நீக்கி நிறுத்து

    நேசம் வச்சி பிரிஞ்சதப் பொறுத்துக்கிட ஏலாம என் ஒடம்பும் உசிரும் வெக்கத்த விட்டு மடல் ஏறுததுக்கு துணிஞ்சு போச்சு.

    குறள் 1133

    நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
    காமுற்றார் ஏறும் மடல்

    நல்ல ஆண்மையோடயும் மானவெக்கத்தோடயும் முன்ன நான் இருந்தேன். இப்பம் காதலுக்காவ மடலூர்தலச் செய்யுதேன்.

    குறள் 1134

    காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
    நல்லாண்மை என்னும் புணை

    காதல்னு சொல்லப்படுத பெரு வெள்ளம் ஆண்மை, மானம் ங்குத தோணிகள  அடிச்சி கொண்டு போயிடும்.

    குறள் 1135

    தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
    மாலை உழக்கும் துயர்

    மடலேறுதலோட சேத்து அந்தி சாயுத நேரம் ஏங்குத சங்கடத்தையும் மால கணக்கா வரிசையா வளவி போட்டிருக்க இவதான் எனக்கு குடுத்தா.

    குறள் 1136

    மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
    படலொல்லா பேதைக்கென் கண்

    காதலியப் பிரிஞ்சதால கண்ணு ஒறக்கம் இல்ல. ராப்பூரா மடலூர்தலப் பத்தியே ரோசன பண்ணிக்கிட்டுக் கெடக்கேன்.

    குறள் 1137

    கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணிற் பெருந்தக்க தில்

    கொந்தளிக்குத கடல் கணக்கா காதல் நோய் சங்கடத்தக் கொடுத்தாலும் பொறுத்துக்கிட்டு மடலேறாம இருக்க ஒசந்த பெண்பிறப்புக்கு சமானமா எதுவுமில்ல.

    குறள் 1138

    நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
    மறையிறந்து மன்று படும்

    பாவம் இவரு மனசுல ஒளிவுமறைவு கெடையாது. பாவப்பட்ட மனுசன். இப்டியெல்லாம் நெனையாம இப்பம் எங்க நேசம் ஊரறிஞ்சிக்கிடுத மாரி  வெளிய தெரியப் போவுது.

    குறள் 1139

    அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
    மறுகின் மறுகும் மருண்டு

    அமைதியா இருந்ததால என்னையத் தவித்து யாரும் தெரிஞ்சிக்கிடலனு நெனச்சி இப்பம் என் காதல் தெருப்பூரா பரவி சுத்திக்கிட்டு கெடக்குபோல.

    குறள் 1140

    யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
    யாம்பட்ட தாம்படா ஆறு

    நான் படுத சங்கடத்த அனுவிச்சு அறியாதவங்க எம் முன்ன நான் காணுதமாரி நின்னு எளக்காரமா சிரிக்காங்க.

    Share
  • பேராசிரியர் வீ.அரசு மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு

    பேராசிரியர் வீ.அரசு மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு

    உரையாளர் குறித்து

    தமிழ்த் தேசிக அரங்கர் அண்ணாவியார் இளைய பத்மநாதன் அவர்கள் இலங்கை நெல்லியடியில் (1938) பிறந்தவர். தற்பொழுது ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருபவர். தமிழ் அரங்கச் செயல்பாட்டில் மூத்த முன்னோடி வழிகாட்டியாகச் செயல்பட்டு வருபவர். இலங்கையில் நடைபெற்ற, நடைபெற்று வருகிற இனவாதச் சிக்கலில் அரங்கச் செயல்பாட்டின் வழியாகத் தமிழ்த் தேசிகத்தைக் கட்டமைக்க முயன்றவர். இதனைப் பண்டைய தமிழ் மரபிலிருந்தும் சமகால கூத்து மரபிலிருந்தும் மீள் உருவாக்கம் செய்தவர். சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்க மரபுகளை ஆய்வு செய்யும் அதே வேளையில் சிலப்பதிகாரமே ஒரு அரங்கப்பனுவல்தான் என்பதையும் நிறுவுகிறார். இவரது முதன்மையான ஆய்வு நூல் சிலப்பதிகாரம் அரங்கத் திறம். நாடகக்கலை குறித்து உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முறையாகப் பயிற்சி பெற்று பத்துக்கும் மேற்பட்ட நாடகப்பனுவல்களை உருவாக்கியுள்ளார். இலங்கை, தமிழகம், ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் தனியாகவும் கூட்டாகவும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். எண்பது வயதினைக் கடந்து இன்றும் தமிழ் தேசிக அரங்கம் குறித்து சிந்தித்தும் செயல்பட்டும் வருபவர். இவரது கலைப்பயண வரலாறு என்பது கடந்த அறுபது ஆண்டுகால தமிழ் அரங்கக்கலைவரலாற்றின் கலைப்பயணமும் ஆகும்.

    முகமாடல் – Curtain Raiser

    ‘எனது அரங்கப் பயணம்’ எனது அரசியல் பயணமும் ஆகும். நான் அரசியலுக்கு ஊடாக நாடக அரங்கிற்கு வந்தவன். எனது நாடகங்கள் அரசியல் பேசும். எனது நாடகங்கள் நிரந்தர முரண்பாடுகளைப் பற்றிப் பேசும். ஏனைய முரண்பாடுகள் முனைப்புப் பெறும்போது அவற்றையும் பேசும். முரண்பாடுகளில் நடுநிலைமை இல்லை. எப்பக்கம் என்பதுதான் கேள்வி. வர்க்கமாக இருக்கலாம் இனமாக இருக்கலாம் சாதியாக இருக்கலாம் பால்வேறுபாடாகவும் இருக்கலாம். எதுவானாலும் அடக்கி ஒடுக்கப்பட்டவர் பக்க நியாயத்தையே எனது நாடகங்கள் பேசும்.

    உள்ளடக்கத்தில் மட்டுமல்ல உருவத்திலும் அரசியல் உண்டு. உருவம் அடையாளம் காட்டும். இது அடையாள அரசியல். அரங்கின் அடையாளத் தேடலே எனது அரங்கப்பயணமாகும். என் அரங்கப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். உணராமலும் உணர்ந்தும் அடையாளத்தைத் தேடியே அரங்கில் பயணித்திருக்கிறேன். பயணத்தின் ஒவ்வொரு தரிப்பிடமும் ஒவ்வொரு அரங்கக் கோட்பாடாக வழிகாட்டியது. தேசிக அரங்கு என்ற அரங்கக் கோட்பாட்டை அடைந்திருக்கிறேன். அடையாளத் தேடலின் அதிமுக்கிய இடத்திற்கு வந்திருக்கிறேன். நான் இந்த இடத்திற்கு வந்தவற்றை உரையாடவுள்ளேன். எனது ஒவ்வொரு நாடக அரங்காக்கமும் அரங்கியல் அடையாளத்தை நோக்கிய பாய்ச்சலாக உள்ளது. ஆகவே ஒவ்வொரு நாடகத்தையும் சுட்டிப் பேசலாம்.

    பேராசிரியர் வீ. அரசு பற்றிய சிறு குறிப்பு

    பேராசிரியர் வீ. அரசு அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் பேராசிரியர் மற்றும் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கியக் கல்வியை, ஆய்வை விரிவான தளத்தில் முன்னெடுத்தவர். தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல் முதலான துறைகளோடு இணைத்து தமிழ்க்கல்வியை சமூகவியல் கல்வியாக வளர்த்தெடுத்ததுடன் அதே தன்மையோடு ஏராளமான ஆய்வு மாணவர்களையும் உருவாக்கியவர். தமிழ்ச்சமூகம் குறித்த மறைக்கப்பட்ட உண்மைகளை  அரிதான ஆவணங்களிலிருந்து தொகுத்தும் பதிப்பித்தும் ஆராய்ந்தும் வெளிப்படுத்தி வருபவர்.

    பேராசிரியர் வீ. அரசு அவர்களின் மணிவிழாவின் போது அவரது மாணவர்களால் உருவாக்கப்பட்டது இவ்வறக்கட்டளை.

    Share
  • மாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்

    மாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்

    டாக்டர் வே. விக்னேசு,
    தமிழ் உதவிப்பேராசிரியர்,
    பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் –
    14.
    9597203214.
    vigneshrathinam432@gmail.com

     

    ********* 

    பறந்துபோய் மலையுச்சியை அடைவோம் என்று சொல்கின்றவர்களைப் பார்த்து ஏங்கி நிற்பது வீண். படிப்படியாக நடந்து ஏறி மலையுச்சியை அடைகின்றவர்களைப் பார்த்து பின்பற்றுவதே கடமை.– (காந்தி அண்ணல் – மு.வ. – ப. 8)

    தோற்றுவாய் :

        எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்து சிந்தனைச் சிறப்பாலும் தொண்டாலும் உலகத்தோர் நெஞ்சில் நிறைந்து வாழும் சான்றோர் உயர்திரு. டாக்டர் மு.வரதராசனார் அவர்களாவார். தம் வாழ்வைப் பிறர்கற்றுப் பயன்பெறுமாறு எடுத்துக்காட்டான வாழ்வினராய் வாழ்வாங்கு வாழ்ந்த மு.வ. அவர்களின் உயரிய வாழ்வில் இருபெருஞ் சான்றோருக்குச் சீரிய இடமுண்டு. ஒருவர் தமிழ்முனிவர் திரு.வி.க. அவர்கள். மற்றுமொருவர் மு.வ. அவர்களைத் தமிழ் படிக்கத்தூண்டி மாலை வேளைகளில் முருகன் கோயில் முன்றிலில் சில நூல்களைக் கற்பித்து, அவரை நன்கு உருவாக்கிய சான்றோரான முருகைய முதலியார் அவர்களாவார். இச்சான்றோர் பெருந்தகையால் ஊன்றப்பெற்ற தமிழ்வித்தே மு.வ. அவர்களைத் தாமே தமிழ்பயிலச் செய்து தமிழ்ச்சான்றோராக்கியது எனல் தகும்.

    மு.வ.வின் ஆசிரியப்பெருமக்கள் :

    தமிழகத்தின் வடபகுதியிலமைந்த வடார்க்காடு மாவட்டத்திலமைந்த வாலாஜாப்பேட்டை நகர இரயில் நிலையத்திற்கு அருகிலமைந்துள்ள வேலம் என்னும் அழகிய சிற்றூரே மு.வ. அவர்களின் சொந்த ஊராம். திருப்பத்தூரே மு.வ.அவர்களின் பிறந்த ஊராம். மு.வ. அவர்கள் தொடக்கப்பள்ளிக் கல்வியை வேலத்திலும் உயர்நிலைப்பள்ளிக் கல்வியைத் திருப்பத்தூரிலும் பெற்றார்கள். ஆசிரியர் போற்றும் நன்மாணாக்கராகத் திகழ்ந்து ஆசிரியரின் அன்பிற்கும் பாராட்டிற்கும் உரியவராக விளங்கிய மு.வ. அவர்கள் பெரிதும் மதித்துப்போற்றிய ஆசிரியப்பெருமக்கள் மூவர். அவருள் தொடக்கப்பள்ளியில் மு.வ.வின் ஆசிரியராக விளங்கியவர் அமைதியே உருவான பாலப்பிள்ளை அவர்கள். மு.வ.வைச் சிறந்த மாணாக்கனாக உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

    மு.வ.வின் ஆசிரியர்களுள்  மற்றுமொருவர் திருவேங்கடத்தையங்கார் என்பார். மு.வ.வின் மீது மிகுந்த அன்பு கொண்ட இவர் கணித ஆசிரியராவார். கற்பித்தப் பாடம் தமிழிலக்கணம். தம் ஆசிரியப்பற்றி அவரின் மாணவரான மு.வ. கூறுகின்றார்:-

    “யான் ஆறாம் வகுப்பில் கற்றபோது எனக்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தவர் கணக்கு ஆசிரியர். அவர் தமிழ் கற்றுத் தேர்ந்தவர் அல்லர்; வடமொழியைப் பாடமாகக்கொண்டு தேர்ந்து கணக்கு ஆசிரியராக வந்தவர். ஆயினும், தமிழ் வகுப்பு அவரைத் தமிழ் கற்கத் தூண்டியது. அவர் நடத்திய வகுப்பில் இலக்கணப் பகுதி வரும்போதெல்லாம் மாணவர்க்குப் பேரச்சம் ஏற்படும். ‘இலக்கணக் கேள்விகளுக்கு நன்றாக விடை எழுதுவோர்க்கு நல்ல மார்க்குத் தருவேன். அப்படித்தான் இவன் என்னிடம் 60,65 என மார்க்கு வாங்குகிறான்’ என்று மற்ற மாணவரிடம் கூறுவார். ஆனால் யான் தவறு செய்யும் போதெல்லாம் தண்டனையும் இரட்டிப்பாகத் தருவது அவர் வழக்கம்… அவர் 60,65 என உயர்ந்த எண்களும், தவறியபோது இரட்டிப்புத் தண்டனையும் கொடுத்த கொடையே என்னை இன்று தமிழ்க்கடலுள் திளைக்கச் செய்துள்ளது என நினைந்து நன்றியுடையேனாகும் போது என் உள்ளம் குளிர்கின்றது” (மொழியியற் கட்டுரைகள் – மு.வ.-பக். 35,36) மு.வ.வைத் தமிழ்ச்சான்றோராக மாற்றுவதற்கு உரமிட்டத் திருவேங்கடத்தையங்காருக்கு நாமும் நன்றிபாராட்டுங் கடப்பாடுடையோம்.

    மு.வ. தமிழ்ப்பேராசிரியராகக் காரணமாக அமைந்தவர் அவருக்கு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக அமைந்த முருகைய முதலியார் என்பார். மு.வ.வின் மீது  மிகுந்த அன்பு கொண்ட இவரின்பால் மு.வ.விற்கு அளப்பரிய அன்புண்டு. தம் தமிழாசிரியப்பெருமானின் அருங்குணங்களை உன்ன உன்ன உள்ளம் உருகும் மு.வ., தம் ஆசிரியரைப்பற்றி உவகைபெருகக் கூறுகின்றார். அவர் கூறுமாறு:-

    “ஆறு மாதத் தேர்வு முடிவு வந்தது; விடுமுறையும் கழிந்தது; பள்ளிக்கூடம் திறந்த நாள் அது. மாணவர்கள் மகிழ்ச்சியோடு ஒருவரை ஒருவர் கண்டு அளவளாவினார்கள். மணி அடித்தது. எட்டாம் வகுப்பில் நானும் மற்றவர்களும் விரைந்து போய் ‘இடம்பிடித்து’ இருந்தோம். தமிழ்ஆசிரியர் வந்தார். உயர்ந்த பண்புகளுக்கெல்லாம் உறைவிடமான அவரைக் கண்டதும் எங்கள் மகிழ்ச்சி தெய்வத்தன்மை பெற்றுவிட்டது. வழக்கம்போல் முன்னுரையாக இன்மொழி பேசித் தமிழமுது ஊட்டினார்(மொழியியற் கட்டுரைகள் -மு.வ.-ப. 118) இவ்வகையில், இம்மூன்று ஆசிரியப் பெருந்தகைகளே மு.வ.வை நன்கு உருவாக்கியதில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

    முருகைய முதலியார்:

          மேற்குறித்த மூன்று ஆசிரியர்களுள் மு.வ. அவர்கள் பேரன்பு கொண்டு மதித்துப் போற்றிய நல்லாசான் மு.வ.வின் தமிழாசிரியரான முருகைய முதலியார் ஆவார். இவர் தாமே தமிழ்பயின்று 1912-விரோதிகிருது தைமாதம் 9,10,11ஆகிய நாள்களில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் நடத்திய தனித்தமிழ் தேர்வில் சிறப்புறத் தேர்ந்தவர். திருப்பத்தூர் நகராண்மைக்கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். எவ்வித ஊதியமும் எதிர்பாராமல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வகுப்பிலே மட்டுமின்றி, இல்லத்திலும் வெளிப்புறங்களிலும் கல்விச்செல்வத்தை வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தவர். இப்பெருந்தகையிடமிருந்து மு.வ. சமயநூல்களையும் நால்வர் நான்மணிமாலை முதலான சில நூல்களையும் பாடங்கேட்டார். பள்ளியிறுதித் தேர்வில் சிறப்புறத் தேர்ந்த மு.வ., திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியை ஏற்றார். மிக்க பணிச் சுமையாலும் ஈளைநோயாலும்  அவதிப்பட்டு, வேலையைவிட்டு ஓய்வாக வேலத்திலிருந்த காலத்தில் மு.வ.வை அழைத்து ‘தம்பி நீ தமிழ் வித்துவான் கல்வி பயிலலாமே? நான் சொல்லித்தருகின்றேன் என்று அன்போடு இச்சான்றோர் பெருந்தகை கற்பித்தக் கல்வியே மு.வ.வை வித்துவான் தேர்வில் முதல்வகுப்பில் முதலாவதாகத் தேறி, திருப்பனந்தாள் காசிமடத்தினர் தமிழ் முதன்மைக்கு வழங்கிய 1000 ரூபா பரிசு பெறச்செய்தது எனல் மிகையன்றாம்.

    பள்ளியாசிரியர் மு.வ. :

      தாமே கற்றுத் தனிமுதன்மை பெற்ற மு.வ.விற்குத் தமிழாசிரியப்பணியும் தேடி வந்தது. ஆம்! தம் உள்ளங்கவர்ந்த தமிழய்யா முருகைய முதலியாரவர்கள் தாம் ஓய்வு பெற்றபோது அப்பணிக்கு மு.வ.வை அழைத்து அவரைத் தமிழாசிரியராக்கினார். எந்தப்  பள்ளியில் முருகைய முதலியாரிடம் உருகி உருகிப் பாடங் கேட்டாரோ அதே திருப்பத்தூர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் தாம் பெரிதும் மதித்துப் போற்றிய தம்முடைய தமிழாசிரியர் வகித்த அப்பணியினை ஏற்ற மு.வ. அவர்களின் உள்ளம் எத்துணைப் பூரிப்படைந்திருக்கும் என்று இயம்பவும் வேண்டுமோ!

    அழியா வாழ்வு :

         பொழுதுபோக்கிற்காக நாவல்களைப் படித்து வந்த நிலைமையை மாற்றி, சிந்தனையும் கற்பனையும் வளரும் வகையில், அறம் புகட்டும் வகையிலான நாவல்களைப் படைத்த குறிக்கோளுடைய நாவலாசிரியராக மிளிர்ந்தவர் மு.வ. ஆவார். வாழ்வைப் பற்றிய அவருடைய பார்வை, தத்துவம் என்றின்னவை இளைஞர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் போற்றப்பட்டன; பின்பற்றப்பட்டன. இவரின் நாவல்கள் யாவும் குறிக்கோளுடைய கருத்தமைவு நாவல்களாகும். அன்றியும் கருத்தமைவு நாவல்களில் பாத்திரப் பண்பிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அவ்வகையில் மு.வ.வின் நாவல்களில் இடம்பெறும் பாத்திரங்களுள் பெரும்பான்மையான அவர்தம் கண்ணுக்குமுன் நடமாடியவர்களிடமிருந்து பிறந்துள்ளனவாம். தவிர, இவரின் நாவல்களில் முருகையா, சான்றோர் மெய்கண்டார், பேராசிரியர் நரேந்திரர், கமலக்கண்ணர் போன்ற அறச்சிந்தனையாளர்கள் சிலர், மனிதசிந்தனையின் பிரதிநிதிகளாகத் திகழ்கின்றனர். இவர்கள் யாவரும் மு.வ. தாம் பெரிதும் மதித்துப் போற்றிய தாம் நேரிற் கண்டு பழகிய சான்றோர்களாவர். இவ்வகையில், தமக்குத் தமிழ்ச் செல்வத்தை வாரி வழங்கிய வள்ளலாகவும் தமக்கெனவாழாப் பிறர்க்குரியாளராய்ப் பிறர்க்கு எடுத்துக்காட்டான வாழ்வினராய்த் தமக்குக் காட்சி வழங்கிய ஆசிரியர் முருகைய முதலியாரவர்களைத் தாம்படைத்த கள்ளோ? காவியமோ? வாடாமலர் என்னும் இரு நாவல்களில் முருகையா என்னும் பெருமகனாராகப் படைத்து அச்சான்றோர் பெருந்தகைக்கு அழியா வாழ்வு கொடுத்து உள்ளம் நிறைவு கொண்டார் மு.வ.

    முருகையா–முருகய்யா:

         தம் நெஞ்சை கவர்ந்த தம்முடைய ஆசிரியரான முருகைய முதலியாரின் நிழலுருவப் பாத்திரமாக மு.வ.வினால் படைக்கப்பட்ட முருகையா எனும் ஆசிரியர், கள்ளோ? காவியமோ?-வில் முருகையா’ என்றும் வாடாமலரில் ‘முருகய்யா’ என்றும் பெயர் மாற்றத்தோடு குறிப்பிடப்படுகின்றார். அன்றியும், முருகையா உயர்நிலைப் பள்ளியாசிரியர்; வயது முதிர்ந்தவர். முருகய்யா இளம் பருவத்தினர்; பள்ளிக்கூட ஆசிரியர்.

    முருகையா:

         கள்ளோ? காவியமோ? நாவலில் இடம்பெறும் ஆசிரியர் முருகையாகாலமறிந்து தம் கடமைகளைச் செய்யும் வழக்கம் கொண்டவர். மங்கை – அருளப்பன் ஆகியோர் திருமணத்தை எளிய, பொருத்தமான முறையில் நடத்தி வைக்கும் இவர், அவ் இணையரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிணக்குத் தொடர்பாக அவர் கூறும் கருத்துக்கள் யாவரும் போற்றிப் பின்பற்றத்தக்கதாம். அவர் கூறுகின்றார்:-   

         “காதல் வாழ்க்கையில் ஒருவகைக் கண்மூடி வாழ்வு வேண்டும். குழந்தை போல் வாழ வேண்டும். தொடக்கத்தில்தான் ஆராய்ச்சி வேண்டும். பிறகு ஆயுள்வரைக்கும் ஆராய்ச்சியும் கூடாது; அறிவு மிகுதியாகக் கூடாது. ஒருவர் குற்றம் ஒருவருக்கு தெரியாத அன்பு வாழ்வு – கண்மூடி வாழ்வு – வேண்டும்.” (கள்ளோ? காவியமோ?-மு.வ.-ப.100) என்றுரைக்கும் அவர்,

    “நீ இப்போது அறிவை நம்புவதுதான் தப்பு. எல்லாம் படித்தும்,
    எல்லாம்தெரிந்தும் சிறுபிள்ளைபோல் நடக்கிறாய். இப்படித்தான்|வாழ்க்கை. ஒவ்வொரு வேளைஅன்புக்குச் சோதனைக்காலம் நடக்கும்.அப்போது அறிவைத்  தொலைவில் வைத்துவிட வேண்டும். கூர்ந்த அறிவெல்லாம் கொள்ளை கொடுக்க வேண்டும் என்று தாயுமானவர் சொன்னது கடவுளன்பரின் வாழ்க்கைக்கு மட்டும் அல்ல. காதலர் வாழ்க்கைக்கும் முழுவதும் பொருந்தும்” (கள்ளோ? காவியமோ? – மு.வ.- ப.103) என்பதனான், இல்வாழ்க்கையில் அன்பு இருக்க வேண்டுமேயன்றி, அறிவு இடம்பெறுதற் கூடாது. அறிவு பயனற்றது; அன்பு ஒன்றே பிணைக்க வல்லது என்னும் இவரின் அரிய கருத்துக்கள் இல்வாழ்க்கையில் பிணக்கு ஏற்படாமல் காக்கவல்லனவாம். இவ்வகையில், ஆசிரியர் முருகையாவின் அரும்பண்பு நலம் வெளிப்படுகின்றனதாம்.

    முருகய்யா :

    வாடாமலர் நாவலில் இடம்பெறும் ஆசிரியர் முருகய்யா இந்நாவலின் முதன்மைப் பாத்திரமான தானப்பனின் தங்கையான சுடர்விழியின் கணவர். மிக நல்லவர். தேவைகளை எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு வாழ்க்கையில் சிக்கல் குறையும்; துன்பம் குறையும் என்னும் உயரிய கொள்கையினர். தேவைகளைக் குறைத்துக் கொண்டு நாட்டிலேயே வாழும் இந்தக் காலத்துத் தவ வாழ்வினர்.  செடியிலிருந்து பூப்பறிப்பதும் ஒரு குற்றம் என்று எண்ணுவது முருகய்யாவின் மனம். நன்மையே விளைவதானாலும் தப்பான வழி வேண்டாம். காலப்போக்கில் உண்மை வழியே காப்பாற்றும் என்னும் உயர் நெறியினர்.

    தானப்பனின் திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர் முருகய்யா, தம் வாழ்க்கையைப் பற்றிய சில செய்திகளைக் குழந்தைவேலுவிடம் வெளிப்படுத்துகின்றார். எளிமையைப் போற்றி, எளிய ஆடைகளை விரும்பி, உடுத்தியபோது தம்மைப் பைத்தியக்காரர் என்று ஊரார் எள்ளி நகையாடிதையும் நாள் செல்லச் செல்லப் பலரும் தம்மை ஒப்பித் தம்மை அணுகி அறிவுரை கேட்பதாகவும் அவர் கூறுகின்றார். அன்றியும், எளிமை என்றால் உடலை மட்டுமல்லாமல் பதவி முதலிய எதற்கும் ஆசைப்படாமல் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்ந்தால் சுற்றுப்புறம் நம்புகிறது என்றும் மற்றவர்களைவிட ஒரு சிறப்பும் வேண்டாம், வாழ்க்கைக்குத் தேவையான எளிய உடை, எளிய உணவு, எளிய வீடு என்பவற்றைமட்டும் தேடிக்கொண்டு வாழ்ந்தால், சுற்றுப்புறம் நாளடைவில் நம்பி போற்ற முன்வருகிறது. நல்ல துறவிகளை நம்புவது போல் எளிய வாழ்க்கை வாழ்வோரையும் சமுதாயம் நம்புகிறது என்றும் தாமாக நன்மை தீமையை எண்ணிப்பார்த்து வாழ்கிறவர்கள் மிகச் சிலரே. அதனால் பலரைத் திருத்த முடியாமற் போகிறது. ஆனால், அதற்காகச் சோர்வு அடையக்கூடாது. நம் கடமையைச் செய்து விட்டுப் போக வேண்டும் என்றும் அவர் கூறுவதனின்றும் ஆசிரியர் முருகய்யாவின் உயரிய உள்ளமும் ஒரு நெறியான எளிய, தூய வாழ்வும் நன்கு புலனாகின்றதாம்.

    இறுவாய் :

          இன்னவகையான் கண்ணற்றுநோக்கில், எளிமையை ஓர் அறமாகப் போற்றியவரும் பலருக்கும் பயன்பட்ட தூய வாழ்வினரும், எளிமையைப் பின்பற்றுவதால் இன்று பயன் குறைவாகவே இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்து வருவோம்; செய்ய முடியாவிட்டால் சொல்லி வருவோம்; காலம் வரும்போது பயன்படும் என்றாங்குப் பயன் கருதாது பணிசெய்த முருகைய முதலியாரவர்களின் தூய வாழ்வும் அரும்பண்புகளுமே மாண்புள்ள மு.வ. படைத்த இரு நாவல்களில் ஆசிரியர் முருகையாவாக அழியா வாழ்வு பெற்றுள்ளது என்பது இனிதின் விளங்குகின்றதாம்.

    முதன்மைச் சான்று முலம் :
    1. வரதராசனார். டாக்டர் மு. – கள்ளோ? காவியமோ? – பாரி நிலையம்,சென்னை-8  (2008).
    2. வரதராசனார். டாக்டர் மு. – வாடாமலர், பாரி நிலையம், சென்னை-8 (2008).

     

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-113

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-113

    நாங்குநேரி வாசஸ்ரீ

    113. காதற் சிறப்புரைத்தல்

    குறள் 1121

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயி றூறிய நீர்

    எங்கிட்ட இனிக்கப் பேசுத இவ முத்துப்பல்லுக்கு இடையில ஊறுத எச்சி பாலும் தேனும் கலந்து வச்சாப்போல ருசியக் கொடுக்கும்.

    குறள் 1122

    உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொ டெம்மிடை நட்பு

    ஒடம்புக்கும் உசிருக்கும் உள்ள ஒட்டுஒறவு எங்ஙன இருக்குமோ அதுகணக்கா இருக்கதுதான் எனக்கும் இந்த பிள்ளைக்கும் இருக்க ஒறவு.

    குறள் 1123

    கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
    திருநுதற் கில்லை யிடம்

    என் கண்ணோட கருமணியில இருக்க பாவையே நீ வெளிய போயிரு. ஏம்னா நான் ஆசைவச்சிருக்க இவள கண்ணுக்குள்ளார வச்சிக்கிட இடமில்ல.

    குறள் 1124

    வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
    அதற்கன்னள் நீங்கும் இடத்து

    ஆராஞ்சு நகநட்டு பூட்டி இருக்க இவ என்னோட கூடுத நேரம் உசிரு வாழுதது கணக்காவும், விட்டு வெலகும்போது உசிரு பிரியுதது கணக்காவும் உணருதேன்.

    குறள் 1125

    உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
    ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

    ஒளி வீசுத கண்ணோட இருக்க இவ கொணத்த நான் நெனச்சி பாக்கதே கெடையாது. ஏம்னா நான் எப்பமும் அயத்ததேயில்ல.

    குறள் 1126

    கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
    நுண்ணியர்எம் காத லவர்

    நான் நேசிக்கவரு என் கண்ணுக்குள்ளாலேருந்து வெளிய எங்கும் போவ மாட்டாரு. கண்ண மூடி சிமிட்டினாலும் சங்கடப்பட மாட்டாரு. அவரு அம்புட்டு நுணுக்கமானவரு.

    குறள் 1127

    கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக் கறிந்து

    என் கண்ணுக்குள்ளார நான் நேசிக்கவரு இருக்கதால, மை பூசினா அவரு காங்காம போயிடுவாருங்குத நெனைப்புல நான் மை பூசாம இருக்கேன்.

    குறள் 1128

    நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக் கறிந்து

    நான் நேசிக்கவரு என் நெஞ்சுக்குள்ளார வாழுததால சூடா தின்னா அவருக்கு காந்தும் னு நெனச்சி சூடா திங்காம இருக்கேன்.

    குறள் 1129

    இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
    ஏதிலர் என்னுமிவ் வூர்

    நான் கண்ண சிமிட்டினேம்னா உள்ள இருக்க அவர காங்க ஏலாம புரிஞ்சிக்கிடாத ஊர்க்காரவுக அவர நேசமத்தவருனு சொல்லிப்போடுவாக. அதுங்காட்டி நான் சிமிட்டாம நிக்கேன்.

    குறள் 1130

    உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
    ஏதிலர் என்னுமிவ் வூர்

    நான் நேசிக்கவரு என் நெஞ்சுக்குள்ளார சந்தோசமா வாழுதாரு. இதப் புரிஞ்சிக்கிடாம நேசமில்லாம பிரிஞ்சி வாழுதோம்னு பொறளி பேசுது இந்த ஊரு.

    Share
  • பல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்

    பல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     
    Image result for multiple eco crisis could trigger systemic collapse
     
    உலக நாடுகளில் விளையும் நச்சு வாயுக்களால் நாள் ஒன்றுக்கு நேரும் நிதி இழப்புகள்
     
    1. இந்தியா : விநாடிக்கு நிதி விரையம் : 3.39 லட்ச ரூபாய் [பிப்ரவரி 13, 2020 தேதியில் மேம்படுத்தப் பட்டது].  ஆண்டுக்கு நிதி விரையம் : 10.7 லட்சம் கோடி ரூபாய்.
     
    2.  இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும்  ஆஸ்த்மா நோயில் வருந்தும் குழந்தைகள் புதிய எண்ணிக்கை:  350,000.
     
    3.  இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் நச்சு வாயுக்களால் மரணம் அடைகிறார்.
     
    4. பூகோள நோக்குப்படி 2018 ஆண்டில் பொருளாதார வாயு மாசுக்க ளால் நிதி இழப்பு டாலர் 2.9 டிரில்லியன். [10^12]
     
    5. பூகோள நோக்குப்படி 2018 ஆண்டில் இறந்தவர் : 4.5 மில்லியன் மக்கள்.  இறந்த  ஒருவர் சராசரி ஆயுள் இழப்பு : 19 ஆண்டுகள்
     
    +++++++++++++++++
     
    Image result for global cost of air pollution
     
    Image result for global cost of air pollution
     
    ++++++++++++++++++

    அழுதாலும் பயனில்லை!

    தொழுதாலும் பயனில்லை!

    கரைமதில் உடைந்து விட்டால்,

    காத தூரம் ஓட வேண்டும் அம்மா !

    குடியிருக்க இடம் ஏதம்மா ,

    கடல் தடுப்பு முறிந்து போனால் !

    உடைந்து போகும் பழைய மதில்

    ஓலமிட்டு மக்கள்

    துயர்ப்படவே  வைக்குதம்மா !

    ஒருநாட் பொழுதில் அடித்த

    சூறாவளிப் பேய்மழை

    நியூ ஆர்லீன்ஸ்  கீழ்த்தளப்

    பெரு நகரை

    வெறு நரக மாக்கிய தம்மா!

    +++++++++++++++

    லெட் ஸெப்பெளின் இசைப்பாடல் [Led Zeppelin Lyrics (1929)]

     
    Image result for global cost of air pollution
     
    Image result for world pollution statistics
     
     
     
    Image result for world pollution statistics
    Global CO2 gas Emissions
     
    Image result for world pollution statistics
     
    Image result for world pollution statistics
     
    Image result for world pollution statistics
     
    In the future, humanity will face the devastating combined impacts of multiple interacting climate hazards
     
    Extreme climatic events:the worst-affected countries
     

     

    +++++++++++++++

    http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html

    http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101


    Image result for hurricanes in history

    Image result for hurricanes in history

     

     

    hurricale-buildup-1

    பூகோளச் சூடேற்றத்தைக் கணிக்க உதவும் புவிச் சூழ்வெளி அறிகுறிகள்.

    பூகோளச் சூழ்வெளியில் கரியமில வாயுவின் திணிவு மிகை ஆவதால் வாயு மண்டலமும், கடல் நீரும் சூடாகி, கிரீன்லாந்தின் பனிக்குன்றுகள், ஆர்டிக் பனி மதில்கள்  உருகிக் கடலில் சேர்ந்து கடல்நீர் மட்டம் உயர்கிறது. பூகோளம் சூடேற்றத்தை அளக்க, முக்கியமாக புவிச் சூழ்வெளியில்  வாயுவின் உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்ட உயர்வு, கடல்நீர் வெப்பக் கொள்ளளவு ஆகிய மூன்று விளைவுகளின் அளவுகள் தேவைப்படும்.  கடல்நீர் மட்ட அளவு உயரும்போது, கடலின் வெப்பக் கொள்ளவு [Heat Content] மிகையாகிறது. அத்துடன் நீராவி எழும் கடல் பரப்பளவும் அதிக மாகி சூழ்வெளி வாயுவில் நீர்மைத் திணிவு [Moisture Density] சேர்கிறது.  வேனிற் காலத்தில் பேரளவு நீராவி விரைவாகக் கடலில் உருவாகி முகிலில்  கூடுகிறது.

    கரியமில வாயுவையும், மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்களையும், எரிமலை வெடிப்புகள், மின்னல் தூண்டும் காட்டுத் தீக்கள் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளும், மனிதனின் செயற்கை முறைகளும் தொடர்ந்து வெளியாக்கிச் சூரியக் கதிர்கள் சூழ்வெளியைச் சூடாக்கி வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்பட்டு, 21 ஆம்  நூற்றாண்டில்  பன்மடங்கு பெருகி புகை மூட்டம் உலகை இருண்ட கண்ட மாக்கி வருகிறது. எத்தனை விரைவில் சூடேற்றம் மிகையாகிறது என்பதை தொழில் நிபுணரும், விஞ்ஞானிகளும், பொது நபரும் கணித்துத் தீர்மானிக்க வேண்டியது.  இப்போது சராசரிக் கடல்நீர்த் தள உஷ்ணக் கணிப்பே பூகோளச் சூடேற்றத்தைக் காண உதவுகிறது.  புது முறைப்படி இன்னும் உயரிய வழிப்படிப் பூகோளச் சூடேற்றம் அறிய கடநீர் மட்ட உயர்வும், கடல்நீர் வெப்பக் கொள்ளளவு மாற்றமும் தெரிய வேண்டும். நவீன உலகில்  இவற்றின் அளவுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருபவை :1. சைனா  2.  அமெரிக்கா  3. பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகள்.

    மனித செயற்கை நிகழ்ச்சிகளால் உண்டாகும்,  கரியமில வாயுவால்  எழும் வெப்ப சேமிப்பில் 90% அளவு கடல்நீர் வெப்பம் ஏறச் சேர்கிறது. கிரீன்லாந்தின் பனிநீர்க் குன்றுகள் மட்டும் உருகி ஆண்டு தோறும் 250 கிகாடன் [250 பில்லியன் டன்] நீர் வெள்ளம் கடலில் சேர்கிறது.  அப்போது கடல் மட்டம் உயர்ந்து கடற்கரை நகரங்கள் மூழ்கும்.  அசுரப் புயல் & பெருமழை ஹர்ரிகேன்கள் உருவாகி, கடற்கரை நகரங்கள் நீரில் மூழ்கும். 2005 ஆண்டில் நியூ ஆர்லின்ஸ் மூழ்க்கிய கேட்ரீனா ஹர்ரிக்கேன், 2012 ஆண்டில் நியூ யார்க்கை மூழ்க்கிய பூதப்புயல் ஸாண்டி, 2017 ஆண்டில் ஹூஸ்டன், டெக்ஸஸ்  மூழ்க்கிய ஹர்ரிக்கேன் ஹார்வி குறிப்பிடத் தக்கவை.

    பூகோளச் சூடேற்றத்துக்கும் சூறாவளிப் பெரு மழைக்கும் தொடர்பு உள்ளதா ?

    2017 செப்டம்பரில் அமெரிக்காவைத் தாக்கிய ஹர்ரிக்கேன்கள் ஹார்வி, இர்மா, மரியா போன்றவை பேரளவு வலுமிக்க அசுரச் சூறாவளிப் பெருமழையாகக் கருதப்படுகின்றன. வேனிற் கால ஹர்ரிக்கேன்களின் வலுவும், வேகமும் தற்போது மிகுந்துள்ள தாக அறியப் படுகிறது.  அவற்றின் கணிப்பு :  சுமார் ஒரு டிகிரி செல்சியஸ் கடல் நீர் உஷ்ண உயர்வுக்கு & வினாடிக்கு 8 மீடர்  [25 அடி] வேக அதிகரிப்பு  [மணிக்கு 30 கி.மீ] உண்டாகுகிறது !

    மேலும் கடற்தள உஷ்ண ஏற்றத்தால், நீர் ஆவியாகிச் சூழ்வெளி வாயுவில் நீர்மைத் திணிவு [Moisture Density]  ஒவ்வோர் டிகிரி செல்சியஸ் ஏறும் போது 7% அதிகரிக்கிறது. சமீபத்தில் டெக்ஸசைத் தாக்கிய ஹர்ரிக்கேன் ஹார்வி இவ்விதமே அசுர வலுப் பெற்றுள்ளது.

     

     

    ஆண்டுதோறும் அமெரிக்காவில் அடிக்கும் சூறாவளிப் பேய்மழைகள். 

    ஹர்ரிக்கேன் எனப்படும் அசுரச் சூறாவளி பேய்மழை அடிப்புகள் பருவக் காலம் தவறாது, ஆண்டுதோறும் அமெரிக்கத் தென்னக மாநில நகரங்களைத் தாக்கி, நரகப் புழுதியாக்கி பேரளவு நிதிச் செலவை உண்டாக்கி வருகின்றன. அவற்றுக்கு விஞ்ஞானப் பின்புலமாய் உள்ள காரணங்கள் என்ன ?  ஒவ்வோர் ஆண்டிலும் அவற்றின் தாக்குதல்கள் தவிர்க்க முடியாததாய், எதிர்பார்க்க முடியாததாய், தடுக்க இயலாததாய் மக்களுக்குத் துயர் அளிப்பதாய்த் தெரிகின்றன. மானிடர் வல்லவராய், அறிவுள்ளவராய், பொறிநுணுக்கத் திறமையாளராய் இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டில், சிறியவராய், அவற்றின் முன்னே ஆற்றலின்றிப் பின்வாங்கிப் போகும் மனித இயலாமை தெளிவாய்ப் புரிகின்றது.  சரி நமக்குப் பருவக் காலப் பேரிடர்களான சூறாவளிப் பேய்மழைத் தடுப்புகள் பற்றி என்ன தெரியும் ?

    hurricane-flooding

    seawater-surging

    2004 அக்டோபரில் கூடிய அமெரிக்க விஞ்ஞானிகள் ஹர்ரிக்கேன் இடர்களை எப்படித் தவிர்ப்பது, தடுப்பது என்று ஆய்வுகள் செய்ய முயன்ற போதிலும், 2017 இல் இதுவரை அந்தக் குறிக்கோள் நெருங்க முடியாதபடித் தூரமாய்ப் போய் விட்டது !  அடுத்த கேள்வி, எங்கே இருந்து இந்த ஹர்ரிக்கேன்கள் உருவாகின்றன ?  1851 ஆண்டுமுதல் 2012 வரைப் பதிவு செய்தவை ஆக்டபஸ்போல் சுழிவடிவில் உருவானவையே.  2016 ஜூன் வரை அறிந்த விளைவுகளின்படி அவற்றைத் தவிர்க்க முடியாது, தடுக்கவும் முடியாது, திசை மாற்றவும் இயலாது என்பதே !  2016 அக்டோபரில் உருவான பூதச் சூறாவளிப் பேய்மழை “மாத்தியூ” அமெரிக்கத் தென்னக மாநிலங்களைத் [பிளாரிடா, அட்லாண்டா, தென் கரோலினா] தாக்கிப் பல நகரங்கள் நீரோடத்தில் மூழ்கின.  ஐந்தாம் தகுதியில் [Category : 5] அடித்து ஹெய்தித் தீவில் பேரளவு சேதாரம் விளைவித்தது, மாத்தியூ ஹர்ரிக்கேன்.

    +++++++++++++

    ‘ஹரிக்கேன் கேட்ரினா நியூ ஆர்லியன்ஸ் நகர்ப் புறங்களில் பேரளவு சூழ்நிலைச் சீர்கேட்டை விளைவிக்கப் போகிறது. நகர்ப் பாதுகாப்புக் கரைமதில் ஏற்பாடுகளைத் [The City Levee System] தகர்த்துக் கொண்டு நீர் வெள்ளம் கடல் கீழ்மட்டப் பகுதிகளை நிரப்பி, தெருக்களில் நீர்க்குளங்களை உண்டாகிக் குப்பை, நரகல் கழிவுகளுடன் சேர்ந்து, அபாய இரசாயனத் திரவங்களுடன் கலந்து மக்கள் தப்பி வெளியேற முடியாதபடி அடைத்து விடலாம். ‘

    இவார் வான் ஹீர்டென் [Ivor Van Heerden, Marine Scientist, Louisiana State University]

    hurricane-flooding-4

    ‘பொஞ்சாட்ர்டிரைன் ஏரியுடன் [Lake Pontchartrain] இணைக்கப்பட்ட கால்வாய் கரை மதில்களில் ஏற்பட்டுள்ள இரண்டு உடைப்புகளைச் செம்மைப் படுத்த முயல்கிறோம். அதற்காக வேண்டிய கல், பாறைகள், மணல் போன்றவையும், கட்டுவதற்குத் தேவையான மணல் மூட்டைகள், தூக்கி யந்திரங்கள், டிரக்குகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறோம். ‘

    வால்டர் பெளமி [Walter Baumy, Manager, Army Corps of Engineers (Aug 31, 2005)]

    ‘தேசீயப் பாதுகாப்பாளர் எண்ணற்ற மணற் சாக்குகளை இட்டு மதில் உடைப்பை மூட முயன்றார்கள். ஆனால் அவை யாவும் இருட்குழியில் விழுந்து மறைவன போல் காணாமல் போகின்றன. ‘

    காதிலீன் பிளான்கோ [Louisiana Governor (Aug 31, 2005)]

    hurricane-flooding-1

    உலகிலே நீளமான ஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதில்கள்

    2300 ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பாம்புபோல் கற்களால் கட்டப்பட்ட, உலக விந்தைகளில் ஒன்றான சைனாவின் பெரும் நெட்டை மதில்சுவர் [The Great Wall of China] 1500 மைல் தூரம் நீண்டு செல்பவை. ஆனால் அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாக் கரையில் இருக்கும் நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றிலும் எழுப்பியுள்ள குட்டைக் கரை மதில்கள் [Levees] 340 மைல் [560 மி.மீ] தூரம் கட்டப்பட்டு, கடல் மட்டத்துக்குத் கீழாக இருக்கும் பெரும்பான்மையான பகுதிகளை நீர் பாய்ந்து நிரப்பாமல் பாதுகாத்து வருகின்றன. நீளத்திலே சைனாவின் பெரு மதிலுக்கு குறைந்த தாயினும், உலகிலே குட்டை மதில்களில் மிக நீண்டதாக இந்த கரை மதில்களைக் கூறலாம். நியூ ஆர்லியன்ஸ் நகரத்தின் வடக்கே பொஞ்சார்ட்டிரைன் ஏரி [Lake Pontchartrain], கிழக்கே போர்ன் ஏரி [Lake Borgne], தெற்கில் ஊடே செல்லும் மிஸ்ஸிஸிப்பி நதி, பிறகு சிதறிக் கிடக்கும் மெக்ஸிகோ வளைகுடாப் பகுதிகளால் சூழப்பட்டது! கால மாறுபாட்டாலும், எப்போதும் ஹரிக்கேன் சூறாவளிகள் படையெடுக்கும் பாதையில் இருப்பதாலும், அந்த பகுதிகளின் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து நகரின் கீழ்த்தளப் பரப்புகளில் பாய்ந்து நிரப்பா வண்ணம் பாதுகாப்பு மதில்கள் கட்டப் பட்டிருக்கின்றன.

    hurricane-flooding-2

    சென்ற நூற்றாண்டில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1965 செப்டம்பரில் தீவிரம்: 3-4 [Category: 3-4] கொண்ட ஹரிக்கேன் பெட்ஸி [Hurricane Betsy] கடைசியாக அடித்த சூறாவளிப் பேய்மழையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அதிர்ஷ்ட வசமாகப் பெருஞ் சேதத்திலிருந்து தப்பியது. ஆனால் பாதுகாப்பு மதில் தடுப்புகளிலும், சில உள்ளக நகராட்சிப் பகுதிகளிலும் [St. Charles, St. Bernard, Plaquemines Parishes] நீர் மட்டம் 23 அடி வரை உயர்ந்து விட்டது. மிகக் கடுமையான தீவிரம்: (4-5) கொண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரை மோதப் போகும் ஹரிக்கேன் கேட்ரினாவைப் பாதுகாப்பு மதில்கள் தாங்கிக் கொள்ள மாட்டா வென்று கேட்ரினா தாக்குவதற்கு முன்பே பல நிபுணர்கள் மீண்டும், மீண்டும் தமது எச்சரிக்கையை வெளிட்டனர். மதில்கள் சில மண் மேட்டாலும், சில இரும்புத் தட்டுகளாலும், சில காங்கிரீட் சுவர்களாலும் கட்டப் பட்டவை. ஆனால் அவை யாவும் தீவிரம்: 3 தாக்குதலுக்கே கட்டப் பட்டதால், கேட்ரினாவின் வேங்கை அடியைத் தடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவை என்று முன்னெச்சரிக்கை செய்தது மெய்யாகவே இம்முறை நிகழ்ந்து விட்டது! புகழ் பெற்ற நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கடல் வெள்ளமும், புயலும் அடித்துக் கடல் நீரால் மூழ்க்கிப் பேரளவு நாசத்தை விளைவித்து விட்டது!

    hurricane-flooding-3

    நியூ ஆர்லியன்ஸ் கரைமதில்கள் சொல்லும் கதை

    சூறாவளிக் காற்று அடித்த ஒருநாள் கழித்து, 2005 ஆகஸ்டு 30 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று இரண்டு மதில் அணைகள் உடைக்கப்பட்டு, நகரின் 80% கடல் மட்டம் தாழ்ந்த பகுதிகளில், கடல் வெள்ளம் நிரம்பியது. முதலில் பேய்க்காற்று மணிக்கு 150 மைல் உச்ச வேகத்தில் தாக்கிக் கடல் வெள்ளத்தால் அடித்து, கரைமதிலில் 200 அடி அகலத்தைப் பெயர்த்து கடலே நகருக்குள் நுழைந்தது! அடுத்து காற்றின் வேகம் மணிக்கு 100 மைலாகத் தணிந்தாலும், கடல் நீரின் வலுவில் மதில் உடைப்பு 500 அடியாக அகன்று கடல்நீர் திமுதிமுவென நகருக்குள் அலை அலையாய் நுழைந்து தெருவெல்லாம் 20 அடி உயரத்துக்கு மேலாக நீர் நிரம்பியது. நாகரீகப் புராண நகரமான நியூ ஆர்லியன்ஸில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், வாணிபக் கட்டடங்கள், வீடுகள், குடில்கள் யாவும் ஒருநாளில் மூழ்கிப் போயின!

    hurricane-matthew-mapping

    ஹரிக்கேன் மாத்தியூவின் போக்கு

    2003 ஆண்டு முதல் ஈராக் போருக்குப் பிறகு கரைமதில் புதுப்பிப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதித்தொகை [Federal Fund] குறைந்து கொண்டே வந்தது. அரசாங்க நிதிவளம் ஈராக் போரைத் தொடரவும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், வரிக் குறைப்பு ஈடுக்கும் பங்கிடவே பற்றாமல் குழி விழுந்தது. 2004 ஆம் ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிக் கரைமதில்களை மேம்படுத்த புஷ் அதிகார வர்க்கம் 20% குறைந்த அளவு தொகையைத் தருவதாகச் சொன்னது.

    1. 2004 ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிப் பகுதி ஹரிக்கேன் பாதுகாப்புக்கு ஒதுக்கிய நிதி யில்லாமையால் 20% [750 மில்லியன் டாலர்] மதிப்பளவே புஷ் அதிகார வர்க்கம் அளிப்பதாய் வாக்களித்தது.

    2. 2005 ஆண்டில் மேற்கண்ட திட்டத்துக்கு 20 மில்லியன் டாலர் தேவைப்பட்ட போது, புஷ் அரசாங்கம், பட்ஜெட்டில் 3.9 மில்லியன் டாலரே ஒதுக்க முன்வந்தது.

    3. காத்திருக்கும் காலம் நீடிக்க நீடிக்க, பிரச்சனைகள் பெருகி நிதிச் செலவை மிகையாக்கும். சில கரைமதில் செப்பனிடும் திட்டங்களை முடித்த கான்டிராக்டருக்கு, இன்னும் 5 மில்லியன் டாலர் தொகை கொடுக்கப் படாமலே இருக்கிறது.

    sheltered-people

    நிரம்பிய வெள்ளத்தை வெளியேற்றுவதில் பிரச்சனைகள்

    அமெரிக்க இராணுவப் படையினர் கரைமதில்களில் உடைபட்ட பகுதிகளைச் செப்பனிட அரும்பாடு பட்டனர். இரட்டைச் சுழலிகள் சுழலும் CH-53 ஹெலிகாப்டர்களில் பறந்து கொண்டு 1360 கிலோ கிராம் சாக்கு மண் பைகளைத் தொப்பென இறக்கி உடைப்பை அடைக்க முயன்றார்கள். அது பலன் அளிக்க வில்லை! அடுத்து பெரும் இரும்புத் தொட்டிகளில் கற்களை நிரப்பி இடைவெளியை மூட முற்பட்டார்கள். அம்முறையும் பலன் தரவில்லை! நகரின் கடல்மட்டத் தணிவுப் பகுதிகளின் தேக்கு வெள்ளத்தை வெளியேற்ற ஆற்றல் மிக்க 22 பூத பம்பு நிலையங்கள் இருந்தாலும், அவை யாவும் நீரில் மூழ்கிப் போனதால் அவற்றை நீர்ப் பாதிப்பிலிருந்து முதலில் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது மூன்று பம்பு நிலையங்கள் செம்மை யாக்கப்பட்டு நீரை வெளியேற்றி வருகின்றன. அத்துடன் அபாய கால தற்காலிய பம்புகளை நிறுவி, நீர் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடல் மட்டத்துக்குத் தணிவான பூதத் தொட்டி போல் நீர் கட்டிக் கிடக்கும் நியூ ஆர்லியன்ஸ் வெள்ளத்தையும், மற்றுமுள்ள சுற்றுப்புறப் பகுதிகளின் தேக்க நீரையும் வெளியேற்ற 24 முதல் 80 நாட்கள் ஆகலாம் என்று ஊகிப்படுகிறது.

    katrina-flooding

    கரைமதில்களைச் செப்பனிடும் பணிகள்

    நியூ ஆர்லியன்ஸ் நகரின் பெரும்பகுதிகள் கடல் மட்டத்திற்குச் சராசரி 6 அடித் தணிவாக உள்ளன. எல்லாவற்றிலும் கீழான தளம் 20 அடி தணிவாகவும், மேலான தளம் ஓரடி தணிவாகவும் இருப்பதாக அறியப்படுகிறது. ஏறக்குறைய நகரின் பாதிப்பகுதி [907 சதுர கி.மீடர்] நீர் மயமாகவும், மீதிப் பாகம் மட்டுமே நில மயமாகவும் இருக்கின்றது. இயற்கையாகவே உண்டாகும் நீர் வெள்ளத் தாக்குதலை நியூ ஆர்லியன்ஸ் தவிர்க்க முடியாததால், எஞ்சினியர்கள், கால்வாய்கள், கரை மதில்கள், நீர் வெளியேற்றுப் பம்புகள் கொண்ட மிகவும் சிக்கலான சில முறைகளை அமைத்து, நகரின் வெள்ளத் தேக்கங்களைக் கையாள கட்டி யுள்ளனர். குறைந்த அளவு [2.5 செ.மீ] மழைகூட சில பகுதிகளில் சிறிது நீர்த் தேக்கத்தை உண்டாக்கித் தொல்லை கொடுத்து விடும். நகரின் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 90 செ.மீ.

    new-orleans-1

    நியூ ஆர்லியன்ஸ் நகரை உருவாக்கிய பிரெஞ்ச் நிபுணர்கள் 1718 ஆம் ஆண்டு முதல் கரை மதில்களைக் கட்டி நகரின் கடல் மட்டத் தணிவுப் பகுதிகளைப் பாதுகாத்தனர். அதுமுதல் பிற்காலச் சந்ததிகளும் நகரின் கரை மதில்களைச் செம்மைப் படுத்தி அவற்றின் நீளம், உயரம், வலு போன்றவற்றைத் தொடர்ந்து விருத்தி செய்து வந்துள்ளனர். 1965 இல் ஹரிக்கேன் பெட்ஸி நியூ ஆர்லியன்ஸ் கடற்கரைப் பகுதியைத் தாக்கி நீர் வெள்ளம் தேங்கிப் பாதகம் விளைந்த போது, கரைமதில்களின் உயரம் பல மீடர்கள் அதிகமாக்கப் பட்டன. ஆயினும் தீவிரம்: (4-5) கொண்ட ஹரிக்கேன்களின் அடியைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மதில்களுக்கு அறவே இல்லை. நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றியுள்ள குட்டைக் கரைமதிகள், நாளுக்கு நாள் புதைந்து போய் அவற்றின் உயரங்கள் குன்றி வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து எஞ்சினியர்கள் செம்மைப் படுத்தினாலும், எடுத்த பணிகள் முழுவதும் இதுவரை முடிவடைய வில்லை.

    new-orleans-city-1

    பெருநகரைப் பெருநரக மாக்கிய ஹரிக்கேன் கேட்ரினா

    நியூ ஆர்லியன்ஸ் நகரம் சுமார் 480,000 பேர் வாழ்வதற்குரிய இல்லங்களைக் கொண்டது. ஆனால் அதன் வாணிபத் தொழில் துறைகளுக்கு வந்து போகும் மக்கள் தொகையையும் சேர்த்தால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டது என்று யூகிக்கப் படுகிறது. இப்போது ( செப் 7, 2005) அடித்த கேட்ரினாவில் 10,000 பேருக்கு மேலாக இறந்திருக்கலாம் என்று அறியப் படுகிறது. ஆரம்பத்தில் 80% பரப்பாக இருந்து ஒரு வாரம் கழித்து நீர் மட்டம் குறைந்து தற்போது நகரின் 60% பரப்பில் மாசுகள் படிந்த வெள்ளம் சூழ்ந்து, விஷப் பண்டங்கள் கலந்து, பாக்டாரியா பெருகிப் பாதுகாப்புக்குப் மேல் 45,000 மடங்கு கூடி விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. நீர் வெளியேற்றிப் பம்புகள் நகரின் அசுத்த வெள்ளத்தை நீக்க இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று எஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.

    new-orleans-3

    நியூ ஆர்லியன்ஸ் நகர் முழுவதும் நாசமாகிப் பெரும்பான்மையான நகர மக்கள் வெளியேறி விட்டதால், 400,000 பேர்கள் உழைப்பும், ஊதியமும் இழந்து, மாநில அரசாங்கத்தின் வருமானம் பெருத்த அளவில் சிறுத்து விட்டது. நீர்த் தேக்கங்களை வெளியேற்றி, கழிவு நீர் ஏற்பாடுகளைச் சீராக்கி, நகரத்தைச் சுத்தீகரித்துப் புத்துயிர் உண்டாக்கவும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, தகவல், வசதிகளைச் செப்பனிடவும் நிதித்தொகை (50-60) பில்லியன் டாலர் ஆகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது. இனிவரும் அடுத்த 10 ஆண்டுகளில் எஞ்சினியர்கள் [Army Corps of Engineers] ஸேலா நீர் தேக்கக் கட்டுப்பாடுத் [Southeast Louisiana Urban Flood Control Unit (SELA)] திட்டத்தில் 430 மில்லியன் டாலர் செலவு செய்து, கரைமதில்களின் உயரம், ஆற்றலை அதிகரிக்கவும், புது பம்பு நிலையங்கள் கட்டவும் நகராட்சியில் வழிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆயினும் உயிரில்லாத நியூ ஆர்லியன்ஸ் நகரம், நகர நடப்பு உள்ளமைப்புகளை [Infrastructure] மீண்டும் உருவாக்கி ஓரளவு இயங்க மூன்று அல்லது ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்.

    sheltered-people

    1. https://youtu.be/FY86NrdqoQ4
    2. https://youtu.be/hxRWe58BZHA
    3. https://youtu.be/-Kou0HBpX4A
    4. https://youtu.be/7qym7b-qvkE

    +++++++++++++++++++++++++++++++++

    தகவல்:

    1. New Orleans Levees No Match for Katrina By: David Crary [AP National Writer (Aug 31, 2005)]

    2. Why the Levee Broke By: Will Bunch, Attytood [www.alternet.org/story/24871/] (Sep 1, 2005)

    3. New Orleans Levees Patched, Army Starts Pumping Water, [Update: 2 & 6] (Sep 6, 2005)

    4. Law Enforcement May Forcibly Remove New Orleans Residents By: Scott Gold & Lianne Hart [www.Newsday.com] [Times Staff Reporters (September 7, 2005)]

    5. When the Levee Breaks By: Bill Diskoch, CTV.ca News Writer (Sep 5, 2005)

    6. Mayor of New Orleans Orders Forced Evaquations By: CTV.ca News Staff (Sep 7, 2005)

    7. An American Tragedy, Time Magazine Special Report (Sep 2, 2005) Picture Courtesy: Time.

    8.  http://www.nhc.noaa.gov/  [USA Hurricane Center]

    9.  http://environment.nationalgeographic.com/environment/natural-disasters/hurricane-profile/

    10.  https://en.wikipedia.org/wiki/Tropical_cyclone [October 13, 2016]

    11. https://en.wikipedia.org/wiki/Effects_of_Hurricane_Katrina_in_New_Orleans   [October 14, 2016]

    12. https://en.wikipedia.org/wiki/Hurricane_Matthew  [October 15, 2016]

    13. <a href=”https://blogs.scientificamerican.com/sa-visual/visualizing-hurricanes/?print=true” rel=”nofollow noreferrer” style=”border:0px;font-family:inherit;font-style:inherit;fon

     
    Share
  • குறளின் கதிர்களாய்…(288)

    குறளின் கதிர்களாய்…(288)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்… (288)

    சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
    பெற்றத்தாற் பெற்ற பயன்.
           –திருக்குறள் –524 (சுற்றந்தழால்)

     புதுக் கவிதையில்…

    செல்வம் பெற்றதால்
    பெற்ற பயனே,
    சுற்றத்தார் நம்மைச்
    சுற்றியிருக்கும் வகையில்
    அவர்களைத்
    தழுவி ஒழுகுதலே…!

    குறும்பாவில்…

    உறவினர் உடனிருக்கும் வகையிலவர்க்கு
    உதவி ஒழுகுதலே ஒருவன் சேர்த்த
    செல்வத்தால் பெற்ற பயனே…!

    மரபுக் கவிதையில்…

    அல்லும் பகலும் பாடுபட்டே
         அளவ திலாதே சேர்த்திடும்
    செல்வ மதனால் வருகின்ற
         செப்பிடத் தக்க பயனொன்றே,
    இல்ல மதிலே சுற்றத்தார்
        இருந்தே நம்மைப் பிரியாமல்
    நல்ல உறவாய்ச் சேர்ந்திருக்க
       நன்மை யவர்க்குச் செய்வதுவே…!

    லிமரைக்கூ..

    செல்வமது சேர்த்தோமெங்கும் தேடி
    செல்வமதால் பெறுபயனே சுற்றத்தார்குச் செலவிடலே
    சேர்ந்திருக்க அவர்நம்முடன் கூடி…!

    கிராமிய பாணியில்…

    ஒண்ணாயிரு ஒண்ணாயிரு
    ஒறவுகளேட ஒண்ணாயிரு,
    ஒருத்தருக்கொருத்தர் ஒதவிசெய்து
    ஒறவுகளோட ஒண்ணாயிரு..

    ஒடித்தேடி சம்பாதிச்ச
    செல்வத்தால
    நமக்குக் கெடச்ச பயனே,
    நம்ம ஒறவுக்காரங்கயெல்லாம்
    பிரியாம
    நம்மச்சுத்தி இருக்கிறபடி
    செய்யிறதுதானே..

    அதால
    ஒண்ணாயிரு ஒண்ணாயிரு
    ஒறவுகளேட ஒண்ணாயிரு,
    ஒருத்தருக்கொருத்தர் ஒதவிசெய்து
    ஒறவுகளோட ஒண்ணாயிரு…!

    Share