Blog

  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 1

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 1

    தி. இரா. மீனா   

                             அறிமுகம்

    மனித வாழ்க்கை அவன் வாழும் இடம், பேசும் மொழி என்று ஒவ்வொரு சூழ்நிலைக்கும், மாறுபட்டு அமைவது இயல்பே என்றாலும் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களும், அதை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை குறித்து படைப்பாளிகள் காட்டும் வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் எல்லா மொழிகளிலும் எல்லாக் காலகட்டத்திலும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றன. உலகமுழுவதிலும் சமுதாய சீர்திருத்தவாதிகள் தனி மனிதர்களாக தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒரு சக்தியாகவே செயல்பட்டு வந்திருக்கின்றனர். இந்திய பக்திக் காலச் சூழல் இதற்குத் தகுந்த சான்றாகிறது. அவ்வகையில் 12 ம் நூற்றாண்டில் கன்னட இலக்கிய மற்றும் பக்தியுலகில் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள் ’வசனக்காரர்கள் ’என்ற அடை மொழிக்குரியவர்களாவார்கள். வீரசைவர்கள் என்ற பிரிவிலடங்கும் அவர்கள் ’வசனங்கள்’ என்ற வடிவம் மூலம் புதிய மறு மலர்ச்சிக்கு வித்திட்டனர்.

    வீரசைவம் – அறிமுகமும் கொள்கைகளும்

    சுத்தசைவம், பூர்வசைவம், மார்க்கசைவம், ஆதிசைவம், வீரசைவம் என்று  சைவம் பலவகைப்பட்டு நின்ற காலகட்டத்தில் வீரசைவத்தின் கொள்கைகள் வசனக்காரர்களைக் கவர்ந்தன. பிற சைவர்களுக்கும், வீர சைவர்களுக்கும் உள்ள வேற்றுமையானது பிற சைவர்கள் ஆலயத்தி்லுள்ள லிங்கங்களை [ஸ்தாவர லிங்கங்கள்] வழிபட்டுவர வீர சைவர்கள் குருவிடமிருந்து பெற்றுக்  கொண்ட லிங்கத்தை உடலின் மேல் கட்டிக் கொண்டு அதை வழிபட்டு வந்தனர். [இஸ்ட ஜங்கமம்] உபதேசம் தரும்  குருவின்  சிவ அடையாளப் பொருளே லிங்கமாகும். அதனால் தாங்கள் அணிந்திருக்கும் லிங்கங்களை மட்டுமே இவர்கள் வழிபடுவார்கள். வர்ணாசிரம முறையிலான சாதிவேறுபாடுகளை வீர சைவம் ஏற்றுக்கொள்ளவில்லை. சிவதீட்சை பெற்றபிறகு அனைவரும் ஒன்றாகவே கருதப்பட்டனர். இங்கு அறிவிற்கும், தொழிலுக்கும் அளிக்கப்படும் இடத்தை விட பக்திக்கே முதலிடம் தரப்பட்டது. சாதி, பொருளாதார, தொழில்  முறையிலான  வேறுபாடுகளின்மை, பெண்ணை மாயையாக எண்ணி விரட்டாத உயர்வு, அவர்களுக்குச் சமமதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீரசைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்.

    உழைப்பே தெய்வம்:[’காயகவே கைலாசா’]

    வீரசைவர்கள் மக்கள் மத்தியில் பரப்பமுயன்ற கொள்கைகளில் மிகச் சிறந்ததாக அமைவது ’காயகவே கைலாசா”. காயகம் என்பதற்கு உடல் உழைப்பு என்பது பொருளாகும். உழைப்பின்றி வாழ்க்கையில்லை. மனிதன் தன் அறநெறிச் சாதனையை சாதித்துக் கொள்ளவுதவும் ஒரு சாதனம்தான் உழைப்பு. அது இருந்தால் மட்டுமே வாழ்க்கைக்குரிய பலன் கிடைக்க முடியும். உடல் உழைப்புதான் மோட்சம் தருவது என்ற உண்மையைச்  சாதாரண மனிதனும் அறியச் செய்வதே அவர்களின் அடிப்படை நோக்கமாகும். மனிதன் ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும். எதுவும் செய்யாமல் பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கு உலகில் இடமில்லை. ’குருவானாலும் தொழில் செய்தால்தான் மோட்சம்’ என்று நூலிய சந்தையன் என்னும் வசன ஆசிரியன் குறிப்பிடுகிறான். முள்மரத்தின் இலையாக இருந்தாலும் உடலுழைப்பால் கிடைத்ததை மட்டும் லிங்கத்திற்குப் படைக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. எனவே காயகத்தின்படி எந்த ஒரு தொழிலும் உயர்ந்ததும் இல்லை; தாழ்ந்ததும் இல்லை என்ற கொள்கையை வீர சைவர்கள் தலைமையான இயல்பாகக் கொண்டதால் விறகு வியாபாரியான மாரய்யன், துணி வெளுக்கும் மடிவாளமாச்சையன், படகோட்டியான சௌடையன், கூடைமுடை பவனான மேதர கேதையன், செருப்புத் தைக்கும் ஹள்ளய்யன் என்று பலரும் வீரசைவத்தில் இணைய முடிந்தது. சாதி வேறுபாடுகளினால் தான் சமுதாயம் சீரழிகிறது என்பது வசன இலக்கியத்திற்கு முன்னோடியான பசவேசரின் உறுதியான எண்ணமாக இருந்ததால் அதை நீக்கும் வகையில் எல்லாத் தரப்பு மக்களும் பக்தி என்ற அடிப்படையில் ஒன்று சேரும் அனுபவமண்டபம் [திருச்சபை] அவரால் உருவாக்கப் பட்டது ஆண், பெண் வேறுபாடின்றி, உயர்வு தாழ்வு இன்றி அனைவரும் கூடி அனைத்தையும் விவாதித்ததும் அன்றைய காலகட்டத்தில் மிகப் புரட்சியான செயலாகவேயிருந்தது. வீரசைவர்கள்தான் அதற்கு வித்திட்டனர்.

    வசனம் என்பது

    வசனம் என்பது ஒரு தனிப்பட்ட இலக்கிய வகையாகும். அது உரைநடை மற்றும் பாடல் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட நடை கொண்டது. சொல்லுவதைச் சுருக்கமாகவும், எளிமையாகவும், நேரடியாகவும், எல்லோருக்கும் பொருள் புரியும்படியாகவும்  விளக்குவதாகும். வசன இலக்கியத்திற்கு முன்பு படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் வடமொழிச்சொற்கள் நிறைந்ததாக பழங்கன்னடமிருந்தது. அந்த வடிவத்திலிருந்து விலகி, வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த கருத்துக்களை சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் அன்றைய  பேச்சு வழக்கையே பயன்படுத்தி வசனநடையில் இலக்கியத்தைப் படைத்தது வசனக்காரர்களின் சிறப்பாகும். அறிவை வளர்க்கும் முயற்சி யைவிட மனதை, அதன் உண்மையை அறியச் செய்யும் முயற்சி வசனங்களில் வெளிப்படுதியது அவற்றின் சிறப்பாகும். வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப்படுகின்றன தேவரதாசிம்மையன், சித்தராமன், பசவேசர், அல்லமாபிரபு, அக்கமாதேவி, சென்னபசவர் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வசனகாரர்கள் இருந்தனர்.

     

    வீரசைவம் காட்டும் பெண்ணுயர்வு

    அன்று இந்தியக் கண்டம் முழுவதிலும் பெண்களை ஒதுக்கி வைக்கும்  சூழ்நிலையே வழக்கிலிருந்தது. வசனக்காரர்கள் பெண்ணை ஒதுக்கி வைக்கும் நிலையை ஏற்கத் தயாராக இல்லை. ”பெண் என்பவள் மாயை இல்லை. மனதிலுள்ள ஆசையே மாயை, பார்ப்பதற்கு இருகண்கள் தேவைப்படுவதைப் போல வாழ்வு முழுமையடைய ஆண்-பெண் இருவரும் வேண்டும் என்பன போன்ற கொள்கைகளில் வீரசைவமும், வசனகாரர்களும் உறுதியாக நின்றனர்: வாழ்ந்தும் காட்டினர்.

              ”மேலே முடி வந்தால் பெண்ணென்பார்
               தாடி மீசை வந்தால் ஆணென்பார்
               நடுவில் சுற்றும் ஆத்மா ஆணும் அல்ல
               பெண்ணும் அல்ல காண் ராமநாதா”

    என்று தேவரதாசிமையன் அவர்களுக்கிடையே காணப்படுவது புறத்தோற்றப் பாகுபாடே தவிர வேறில்லை என்று ஒரு வசனத்தில் குறிப்பிடுகிறான். வீரசைவத்தின் இந்த அணுகுமுறை பெண்கள் சமுதாயத்திலும், அறநெறியிலும் சமநிலை பெற அன்று உதவியது என்பதை மறுக்கவியலாது. வசனக்காரர்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் அவர்களின் காலத்திற்கு மிகவும் புதியவை; மக்களின் சிந்தனை இயக்கத்தில் புரட்சியைத் தோற்றுவிக்க வந்தவை. இந்த வழிகாட்டல் முடங்கிய நிலையிலிருந்த பெண்ணுலகம் அதிலிருந்து வெளிப்பட்டு சமுதாயச் செயல்பாடுகளில் பங்கு கொண்டு தமது அனுபவங்களை வசனமாகத் தர உதவியது. அக்கமாதேவி, லக்கம்மா, முக்தாயக்கா, காளவ்வே, துக்களே, நீலம்மா, நீலலோசனை, கங்காம்பிகை, லிங்கம்மா, சத்யக்கா என்று முப்பதுக்கும் மேற்பட்ட பெண்வசனக்காரர்களைப் பட்டியலிடலாம். இன்றும் கன்னட நாட்டில் வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் மிக இயல்பாகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 58 (கையினிற்)

    சேக்கிழார் பா நயம் – 58 (கையினிற்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

     

    கையினிற்     புனைபொற்   கோலும்   காதினி   லிலங்கு  தோடு
    மெய்யினிற்  றுவளு    நூலு    நெற்றியின்   விளங்கு    நீறு
    மையனுக்      கழகி     தாமென்   றாயிழை   மகளிர்   போற்றச்
    சைவமெய்த்   திருவின்   கோலந்   தழைப்பவீ  தியினைச்   சார்ந்தார். (331)

    சுந்தர மூர்த்தி  நாயனார் திருவாரூரில்  மன்னவர்திருப்பொங்க, அரசர் மைந்தர் என்ற வகையில் பொலிந்து  விளங்கினார்.  பின்னர் தங்கள் வைதிகத் திருவும் பொங்கத்  திருமணக் கோலத்துடன் விளங்கினார். இந்தத் திருக்கோலத்தைப் பார்த்த பெண்கள், ‘’இவருக்கு இந்த  வைதிகக் கோலமே  பொருந்துகிறது’’ என்று மகிழ்ந்து  போற்றினர்.

    அத்திருக்கோலம், கைகளிலே  தாங்கிய பொற்கோலும், காதுகளிலே  விளங்கிய குண்டலங்களும்,  மார்பிலே  துவண்டு  அசையும் பூணூலும், நெற்றியிலே விளங்கிய திருநீறும் புனைந்து பொலிந்த கோலம்ஆகும். இக்கோலமே சுந்தரருக்கு என்றும்  உரியதாய் நித்தியமாகத்  தங்கியது. அதனால்தான் பின்னர் இந்திரர் மால் பிரமன் எழிலால் மிகு  தேவரெல்லாம்  வெள்ளை யானையுடன்  வந்து நம்பிகளை  எதிர் கொண்டு வணங்கித்   திருக்  கயிலைக்கு அழைத்துச்   சென்றனர்.

    அவர் இங்கே அவரது திரு அவதாரத்தின் பயனாகிய ’’தீதிலாத் திருத்தொண்டத் தொகை‘’ வழங்கச் சென்றார். அங்கே இறைவனை ஆசிரயித்து, வாயிலைக்  காத்துக்  கொண்டு, தேவாசிரிய மண்டபத்துள் எழுந்தருளிய அடியார்களைத்  துதித்து வணங்கவே அவர்சென்றார். இதனால் அடியார்களின் பெருமையை உணர்ந்து கொண்டார்; தம் பெருமையை அடியார்களுக்கும் உணர்த்தினார். இருவகையினர் பெருமையையும் உலகம் உணர்ந்துகொண்டு போற்றியது. ஆகவே மன்னவர் கோலத்தின் மேம்பட்டது வைதிகத் திருக்கோலம் என்பதை இப்பாடல் புலப்படுத்துகிறது.

    கையினிற்  புனை பொற்கோல், சைவ ஆட்சியின் செங்கோலாகி  ஐயனுக்கு அழகிய தாயிற்று  என்று மகளிர்  போற்றினர், காதினில் இலங்கும்  தோடு செவிக்குத்  தேனாகிய பாடல்களை  வழங்குவதால்  ஐயனுக்கு  அழகிய  தாயிற்று  என்று  மகளிர்  போற்றினர்.  மெய்யினில்  துவளும்  பூணூல் வைதிகச்  சைவத்தின்  சிறப்பை  உணர்த்தி,  ஐயனுக்கு  அழகியதாயிற்று, என்று மகளிர்  போற்றினர். நெற்றியில் விளங்கும் நீறு, சிவஞானப் பொலிவை உலகிற்கே  உணர்த்தி, ஐயனுக்கு  அழகியதாயிற்று என்று  மகளிர் போற்றினர். அங்கிருந்த பெண்டிர் அடியார்க்கு அடிமை பூண்ட  ‘’சிவவேதிய’’ மகளிர் ஆதலால் அவர்கள் மனநிலைக்கு ஏற்ப சுந்தரரின் வைதிகத் திருக்கோலத்தைத் தனித்தனியே புகழ்ந்தனர். முன்பிருந்த  இந்திரத் திருக்கோலத்தை விடவும், சைவ மெய்த்திருவின் கோலம் உயர்ந்தது என்பதை ‘’மெய்த்திரு’’ என்ற அடைமொழி உணர்த்துகிறது. இதுவே மெய், இந்திரத் திருக்கோலம் பொய் என்பதை நமக்கு உணர்த்தும்தொடர் இது.

    இதில், ‘’வைதிகத்திரு, இன், கோலம்’ ’என்ற தொடர், இக்கோலமே அழிவில்லாதது என்பதையும், சிவத்தின் சார்பு பெறுதலையும், இக்கோலம் பிராரத்தத்தின் வாசனையை  இனித் தொலைக்கும்  என்பதையும் புலப்படுத்துகிறது என்று உரையாசிரியர் விளங்குகிறார்.

    கண்டார் விரும்பும் திருவுடைய  இனிய கோலம் நெற்றியில் விளங்கும்  நீற்றினால் முழுமை  பெற்றது.

    “காண  வினியது  நீறு, கவினைத்  தருவது நீறு
    பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம்
    பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு’’

    என்பன,  சம்பந்தரின்   தேவாரத்  திருவாக்குகளின்  பொருளைக்  குறித்தன. இப்பாடலைச்  சீர் பிரித்து  மீண்டும் காண்போம்,

    கையினில்      புனைபொன்    கோலும்   காதினில்    இலங்கு  தோடும்
    மெய்யினில்   துவளும்     நூலும்     நெற்றியில்    விளங்கும்     நீறும்
    ஐயனுக்கு       அழகிதாம்      என்று    ஆயிழை   மகளிர்   போற்றச்
    சைவமெய்த்   திருவின்   கோலம்     தழைப்பவீ  தியினைச்   சார்ந்தார்.

    இப்பாடலில் ‘’சைவ  மெய்த்   திருவின்  கோலம்  தழைப்ப   வீதியினைச்  சார்ந்தார் ‘’என்ற ஈற்றடி, இனி  இச்சைவ  மெய்க்கோலம்  வீதியெங்கும்  விளங்கி, உலகெங்கும்  பரவத்    தீதிலாத்  திருத்  தொண்டத்   தொகையை  அன்றைக்கே  வழங்கினார் என்பதை   உணர்த்துகிறது.

    ‘’உயிர்க்கோலமான இம் மெய்த்திருக்கோலத்தைப் புறக்கணித்து ஏனை ஆடை ஆபரணங்களையும், வாகன முதலிய சடங்களையும் பெரிதாய் எண்ணி வீண்நாள் போக்கும் இந்நாள் மாக்கள் ‘சைவமெய்த் திருவின்கோலம்’ என்று ஆசிரியார் இடித்துக் கூறி எடுத்துக்காட்டிய இதன் உண்மையை உற்றுநோக்கி உணர்ந்து உய்வார்களாக.’’ என்று உரையாசிரியர் கூறுவதன்  உண்மையை  உற்று நோக்குக.

    ஆகவே  சுந்தரரின்  சைவ மெய்த் திருக்கோலம் என்றும் நின்று நிலவி, பிற்காலப் பொய்க் கோலங்களை வென்று நிற்கும் என்பதே  இப்பாடலின் உட்பொருளாகி சேக்கிழாரின்  நயம் மிக்க  பாடலை  உணர்த்துகிறது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 85

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 85

    நாங்குநேரி வாசஸ்ரீ

    85. புல்லறிவாண்மை

    குறள் 841:

    அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
    இன்மையா வையா துலகு

    புத்தியில்லாம போவுததுதான் கொடும் பஞ்சம். மத்த பஞ்சத்தையெல்லாம் பெரிசா எடுத்திக்கிடமாட்டாக ஒலகத்து பெரிய மனுசங்க.

    குறள் 842:

    அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
    இல்லை பெறுவான் தவம்

    கூறுகெட்டவன் ஒரு பொருளக் கொடுத்தாம்னா அதுக்குக் காரணம் அத வாங்கிக்கிடுதவங்க செஞ்ச நல்லகாரியந்தான்னு நெனச்சிக்கிடணும்.

    குறள் 843:

    அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது

    பகையாளியால கூட செய்ய ஏலாத அளவு எடஞ்சல கூறுகெட்டவன் தனக்குத்தானே செஞ்சிக்கிடுவான்.

    குறள் 844:

    வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
    உடையம்யாம் என்னும் செருக்கு

    அறியாமைங்கது என்னன்னா ஒருத்தன் தன்னயத்தானே அறிவாளினு நெனச்சி அகராதி புடிச்சு அலயுததுதான்.

    குறள் 845:

    கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
    வல்லதூஉம் ஐயம் தரும்

    புத்தியில்லாதவன் தான் படிக்காத நூலையும் படிச்சாமாரி பேசிக்கிட்டுத் திரிஞ்சாம்னா அவன் நெசமாவே படிச்சு தெரிஞ்சுக்கிட்டது மேலயும் மத்தவங்களுக்கு  சந்தேகம் வரும்.

    குறள் 846:

    அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
    குற்றம் மறையா வழி

    தங்கிட்ட  இருக்க குத்தங்கொறைய களையாம ஒடம்ப மறைக்க உடுப்பு உடுக்க நெனயுததும் புத்திகெட்ட காரியந்தான்.

    குறள் 847:

    அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
    பெருமிறை தானே தனக்கு

    நல்ல புத்திமதிகளக் கேட்டு அதுகணக்கா நடந்துக்கிடாதவக தனக்குத்தானே பெரிய தீங்க செஞ்சுக்கிடுவாக.

    குறள் 848:

    ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவுமோர் நோய்

    சொந்தபுத்தியும் இல்லாம சொல்புத்தியும் கேக்காம இருக்கவங்களுக்கு அதுவே அவுக ஆயுசுக்கும் நோயா வந்துமுடியும்.

    குறள் 849:

    காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு

    கூறுகெட்டவன புத்திசாலியாக்க நெனச்சி பேசுதவன் அவன் முன்ன புத்திகெட்டவனாத்தான் நெனக்கப்படுவான். ஏம்னா கூறுகெட்டவன் தனக்குத் தெரிஞ்சத வச்சிக்கிட்டு தான் பெரிய புத்திசாலினு காட்டிக்கிடுதது தான் காரணம்.

    குறள் 850:

    உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
    தலகையா வைக்கப் படும்

    இருக்குனு ஒலகத்து பெரியமனுசங்க சொன்ன விசயத்த வேணும்னே இல்லன்னு எதித்துப் பேசுதவன பேயா நெனச்சி வெலக்கி வச்சிடுவாக ஒலகத்து மனுசங்க.

    Share
  • திருவிளக்குத் திருவிழா – ஒரு நோக்கு

    திருவிளக்குத் திருவிழா – ஒரு நோக்கு

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா
    தமிழ்மொழிக் கல்வி முன்னாள் இயக்குநர் 
    
    

    ‘ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே’ என்று இறைவனை மனமெண்ணி துதிப்பதும், பிரார்த்தனை செய்வதும், பாடுவதும், ஆடுவதும், நடைமுறையில் இருந்து வருகிறது. இறைவனைக் கண்டோமா என்றால் அதற்குச் சரியான பதிலை எம்மால் சொல்லிவிட முடியாமலே இருக்கிறோம். ஆனாலும் இறைவன் இருக்கிறான் என்பதைப் பலரும் நம்பியே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறைவனை கல்லிலும், செம்பிலும், மண்ணிலும், மரத்திலும், பொன்னிலும், நிலத்திலும், நீரிலும், காற்றிலும், தீயிலும், ஒளியிலும் ஒலியிலும், மழையிலும், இடியிலும், என்று பலநிலையில் காண முற்படுகின்றோம். இந்த வகையில் ஒளிவடிவில் இறைவனை மனமிருத்தும் தத்துவார்த்தமான விழாவாக விளங்குவதுதான் கார்த்திகை மாதத்தில் வருகின்ற’ திருவிளக்குத் திருவிழா’ எனலாம்.

    தீபத்திருவிழா என்றதும் ‘தீபாவளி’ பண்டிகைதான் எங்கள் மனதில் வந்து முதலில் நிற்பதாகும். உண்மையில் கார்த்திகையில் வருகின்ற விழாவினைத்தான் ‘தீபாவளி’ என்று கொள்ளுதல் வேண்டும் என்னும் ஒரு கருத்தும் இன்று பரலாகி வருகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். தீவ + ஆவலி என்றால் தீபங்களை வட்டமாக வைப்பதாகும். கார்த்திகை விழாவிலும் தீபங்கள் வரிசையாயும் வட்டமாயும் வீட்டு வாசல்களில் வைக்கப் படுகிறது. கோவில்களிலும் வைக்கப் படுகிறது. எனவே கார்த்திகையில் வருகின்ற’  திருவிளக்கு விழாவினை ‘தீப ஒளித் திருநாள்’ என்றால் பொருந்தாதா என்று கேட்கும் நிலையும் உருவாகி வருகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தாக இருக்கிறதல்லவா?

    தீபாவளி எனும்பொழுது ஆணவம் அடங்கிய நிலை அடையாளப் படுத்தப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிளக்கு விழாவும் ஆணவம் அடங்கிய நிலையினயே காட்டி நிற்கிறது. தீபாவளியில் திருமால் இணைக்கப்படுகிறார். கார்த்திகை தீபத்திருவிளக்கு விழாவில் சிவன் இணைக்கப்படுகிறார். சிவன் என்பதோ திருமால் என்பதோ முக்கியமல்ல. இறை என்பதுதான் இங்கு முக்கியமாகும். அதாவது ஆணவம் அடங்கினால் இறையின் தரிசனம் கிடைக்கும் என்பதுதான் இதன் உண்மையான தத்துவமாக பொதிந்து கிடக்கிறது எனலாம்.

    அடிமுடி தேடிய வரலாறு, ஆறுமுகப் பெருமான் தோன்றிய வரலாறு, என்று பல வரலாறுகள் கார்த்திகை திருவிளக்குத் திருவிழாவுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. இங்கெல்லாம் முக்கியத்துவம் பெற்று நிற்பது ஒளியேயாகும். அடி முடி வரலாற்றில் இறைவன் ஜோதிப் பிழம்பாக வந்தார் என்பதும், ஆறுமுகன் வரலாற்றில் இறைவனின்  நெற்றிக் கண்ணில் தோன்றிய ஒளிப் பொறியே ஆறுமுகனாக கொள்ளப் பட்டார் என்றும் கருதும் நிலையில் ஒளிதான் முக்கியம் பெற்று நிற்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    ஆதிகாலத்து மனிதன் வாழ்க்கையில் ஒளி மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்தது. இருளைக் கண்டால் பயந்த மனிதன் ஒளியைக் கண்டபொழுது உவகை உற்றான். ஒளி எப்படி வருகிறது என்பதை அவனால் அறிய முடிய வில்லை. இதனால் ஒளி என்பது உயர்வானது என்னும் கருத்து அவனின் உள்ளத்தினுள் இறுக்கமாய் அமர்ந்து கொண்டே விட்டது எனலாம். மனித வரலாற்றில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் பின்னர் அறம் என்றும் நீதி என்றும் கடவுள் என்றும் சமயம் என்றும் ஏற்பட்ட பின்னரும் கூட ஒளியின் இருக்கை என்பதும் முக்கியத்துவத்தை இழக்காமலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதன் நிலையினையே கார்த்திகை திருவிளக்குத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

    இந்து சமயத்தில் விளக்கு என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்று நிற்கிறது. எந்தவொரு நிகழ்ச்சியானாலும் விளக்கு இல்லாமல் அந்த நிகழ்ச்சி இடம்பெறவே மாட்டாது. மங்கலம் என்னும் அரிய கருத்து விளக்குடன் இணைக்கப்பட்டே விட்டது. விளக்கினை சகல செல்வங்களும் தரும் இலக்குமி ஆகவே ஆக்கியும் விட்டார்கள். இறைவழி பாட்டில் ஒளியின் இடம் மிகவும் இன்றியமை யாததாகும். ஒளியின் அடையாளங்களாக பல விளக்குகள்  கோவில்கள் தோறும் இருக்கின்றன. இறைவனுக்கு நடைபெறும் பூசையின் பொழுது காட்டப்படும் பலவித தீபங்கள் அனைத்துமே ஒளியின் வெளிப்பாடே எனலாம்.

    கார்த்திகைத் திருவிளக்குத் திருவிழா என்றால் எல்லோர் எண்ணங்களிலும் திருவண்ணாமலைதான் முன்வந்து நிற்கும். அங்குதான் இவ்விழா மிகவும் பக்திபூர்வமாக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல பஞ்சபூத தலங்களில் அக்கினிக்குரிய தலமாகக் கொள்ளப் படுவதும் திருவண்ணாமலைத் தலமேயாகும். அக்கினிக்கான தலத்திலே கார்த்திகைத் திருவிளக்கு விழாவினைச் செய்வதுதான் மிகவும் பொருத்தம் என்னும் ஐதீகம் தொடர்ந்து கொண்டே வருவதால் திதுவண்ணாமலைக் கார்த்திகைத் தீப விழா இந்துக்களின் முக்கிய சமயவிழாவாக அமைந்து விட்டது.

    திருவண்ணாமலையின் உச்சியில் மிகப்பெரிய தீபம் ஏற்றப் படுகிறது. மூன்று தொடக்கம் நான்கு நாட்கள்வரை எரியும் இத்தீபம் அறுபது மீட்டர்வரை ஒளியினைக் காட்டி நிற்கும். அண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகைத் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும் எனலாம். இத்தீபங்கள் ஏற்றப் படுவதால் பலனுண்டா என்னும் வினாவும் இல்லாமல் இல்லை. இந்து சமயத்தில் நம்பிக்கைகள் பல இருக்கின்றன. ஆனால் மூட நம்பிக்கைகளை விதைக்க முற்படுவதால்த்தான் கடவுளையோ சமயத்தினையோ கேள்விக்கு ஆளாக்கும் நிலை ஏற்படுகிறது எனலாம். எக்காரியத்துக்கும் அர்த்தம் இல்லாமல் இந்துசமயம் இருக்கவில்லை என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். அர்த்தத்தை மக்கள் மனதில் அமர்த்திட அங்கு இறை நம்பிக்கையை இணைத்திருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டால் எந்தச் சிக்கலுக்கும் இடமிருக்காது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    பெருந்தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் அப்படிப் புயல் தோன்றுமாயின் அதன் வேகம் தணிக்கப்படும் என்று நம்பப் படுகிறது. திருவிளக்குகள் ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையில் உள்ள இணைப்பை உணர்த்தி நிற்கின்றன. விளக்கில் எரிகின்ற சுடரானது  நமக்கு நன்றாகத் தெரியும் புறத்தோற்றமாகும். ஆனால் அந்தச் சுடரானது  எண்ணெயை மெல்ல மெல்ல கிரகித்தே எரிகிறது என்பது நாமுணரவேண்டிய அகத் தோற்றமாகும். வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான நுட்பமான புறத்தோற்றத்தையும் உணர்ந்து செயற்பட வேண்டு என்பதை  எடுத்துக்காட்டி நிற்பதே தீபவளிபாட்டின் உட்கருத்தாகும்.

    மிருகத்துடன் காட்டில் வாழ்ந்த மனிதன் நாளடைவில் காட்டைவிட்டு நாட்டுக்கு வருகிறான். நாட்டினை உருவாக்கி தனது வாழ்வினை வளமாக்குகின்றான். அவ்வழியில் சமயம் முகிழ்க்கிறது. கடவுள் நம்பிக்கை எழுகிறது. மனிதனே தனக்கான வழிபாட்டு முறைகளை உருவாக்குகிறான். இங்குதான் நம்பிக்கை என்பது தலைமை வகிக்கிறது. அந்த நம்பிக்கைதான் கடவுளையே தோற்றுவிக்கிறது. நம்பிக்கையின் அடிப்பபடையில் பல கதைகள் உருவாகின்றன. அக்கதைகள் நம்பக்கூடியனவா நம்ப முடியாதனவா என்பது விவாதம் அல்ல. அக்கதைகள் மனிதனை நல்வழிப் படுத்த உதவியாய் அமைந்தன என்பதை மறுத்துவிட முடியாது.

    இந்த வகையில் உருவான பல புராணங்களை விமர்சனம் செய்வதோ அல்லது கிண்டல் கேலி செய்வதோ பொருத்தம் உடையதாகத் தெரியவில்லை. தத்துவங்களை அப்படியே சொன்னால் ஏற்றுக் கொள்ளுவது என்பது மிகவும் கடினமாகும். அதனால் சாதாரண மக்களும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் உண்மைகளும் தத்துவங்களும் நல்லவடிவில் கதை என்னும் வடிவமாக்கப்படும் தேவை அவசியமானது. அந்தவகையில் கார்த்திகை திருவிளக்கு விழா பற்றி புராணக்கதைகள் பல இருக்கின்றன. அவற்றை நம்புவதா? அப்படியெல்லாம் நடக்குமா? என்றெல்லாம் எண்ணும் பாங்கினை விட்டுவிட்டு மனித வாழ்வினை வையத்துள் வாழ்வாங்கவாழ உதவும் நல்ல கருத்துக்களை சமயத்தின் ஊடாகவும் இறையென்னும் மெய்பொருளின் ஊடாகவும் காண்பதும் கருத்திருத்துவதுமே பண்புடை செயலாகும். அந்தவகையில் கார்த்திகைத் திருவிளக்கு விழாவினை மனமிருத்துவோம்! ஒளிமயமாக இறைவனைக் காண்போம். ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்து இருப்போம். ஜோதிப் பிழம்பாக இறையினைக் காணுவோம்!

     
    Share
  • “Include us” – Sri Lankan Hindus appeal to India

    Maravanpulavu K Sachithananthan
    Leader, Sri Lankan Shiva Senai
     
    Citizenship Amendment Bill presented today 09.12.2019 in Lok Sabha by the Honorable Home Minister attempts to redress longstanding grievances of Hindu refugees in India who do not want to return to their home lands.
     
    The bill seeks to facilitate Hindu refugees from Afghanistan Pakistan and Bangladesh.
     
    The situation for Hindus in all three countries is not different from that of the Hindus in Sri Lanka. But the bill has conveniently ignored the the ten thousand year old history of the Hindus in Sri Lanka.
     
    Sri Lanka is the land the Hindus. Periodic introductions of religion and sects alien to the land had brought irrepairable damage to the Hindus in Sri Lanka.
     
    Recent happenings require the attention of the Indian government and the Lok Sabha.
     
    In 1958 at Pananthurai, 30 kilometres south of Colombo, during the height of arsom looting and damage to Hindu persons and properties, Hindu priest was burnt alive inside the Murugan Temple.
     
    In 1983 during the anti Hindu riots, statue of Lord Ganesha situated at the entrance to the fort of Trincomalee was uprooted and thrown into the sea. A line was written in Sinhala language at the place where the statue was. It’s said Lord Ganesha had gone for a bath.
     
    During the long drawn out struggle Hindus had since 1948, they lost nearly 3000 Hindu temples. That was the estimate in May 2009 when the war almost ended.
     
    Post war semblance of peace and harmony has been intentionally disturbed by placing Hindus in a precarious situation.
     
    Navatkuli is Hindu dominated village. Few Buddhist settlers colonized with government support. They started building a Buddhist vihara. The colony dispersed. The Vihars continues to be there in the midst of Hindus. This is in Jaffna district.
     
    Kanakambhihai kulam Hindu temple is venerated by Hindus of Kilinochchi district. On the full moon day of Vaikasi it has been tradition of 1000 years or more that Hindus congregate in large numbers (say more than a lakh) to offer pongal to the deity. During 2017 statue of Buddha has been erected in the area close to the sanctum sanctorum preventing Hindus from taking their chariot procession. This is in Kilinochi district.
     
    Archaeologicaly significant Hindu temple for Lord Ganesha is at Nayaru. During 2016 Buddha statue was erected subsequently an enclave of Buddhist presence dominated by Buddha priests sprang up. During 2019 after the Hindus celebratre their pongal, Buddhists damaged the flags to the irritation of Hindus. This is in Mullaitivu district.
     
    At Murunkan on the banks of the Giants tank, a temple for Shakti was built during the time Giants tank was constructed nearly 2000 years ago. Untouched by other religionists until 2016, suddenly a Buddhist priest came to the temple and erected statue of Buddha. This is Mannar district.
     
    Swami Vigyanand ji, International Secretary of the Vishwa Hindu Parishad had first hand personal experience of facing difficulties in taking over the historical Hindu Amman kovil at Kathirkamam  at Hambantota district Sri Lanka.
     
    Kannya is tourist attraction for its antiquity. There are seven hot spring wells each having a different temperature. Ravana is said to have performed the last rites for his mother, when he constructed these hot spring wells. There is a Shiva temple and temple for Lord Ganesha. Post war the Buddhists came and started erecting structures for propagation of Buddhism. Recently in 2019 the trustee of the Lord Ganesha Temple begin reconstruction work to conduct the Maha kumbh abhishekam. Buddhist priests came and obstructed with assistance of their fellow believers. Now now the matter is subjudice. This is in Trincomalee district.
     
    These are examples or instances. Post independent Buddhist majority exercises are aimed at damage and destruction to Hindu temples and in driving away the Hindus from their traditional homelands.
     
    So much so today Hindus have fled to nearly 40 countries all over the world seeking refuge. 12 lacs of Hindu refugees from Sri lanka are spread across the world.
     
    Except in India in almost all the countries these Hindu refugees enjoy citizenship or permanent resident status.
     
    Since 1983 almost three hundred thousand Hindus are living in India as refugees. Of these around one hundred thousand are inside refugee camps and around 200000 living outside refugee camps.
     
    Various incentives by the government of Sri Lanka and the UNHCR to move this refuges in India to Sri Lanka proved futile.
     
    Even the families who returned, many have decided to go back to India because of the poor facilitation and continued discrimination.
     
    For 35 long years around 300000 Hindus living in India are without citizenship. They do not have travel documents. They do not enjoy the same benefits Indians enjoy.
     
    Out of these three hundred thousand nearly a third do not know their mother country. For them India is their motherland.
     
    Situation for Hindus in Sri Lanka is not different from that of those in Afghanistan Pakistan of Bangladesh.
     
    For the Hindu, the Sri Lankan situation is a fire place without flames. Post independent Sri Lanka is an example of this fire place fanning from time to time into flames by extremist Buddhist elements. The sober, the moderate and reason minded Buddhist practitioners have little or no say on these extreme elements. There is no social political judicial or other mechanism in place to control them.
     
    We the Hindus in Sri Lanka appeal to the members of the Lok Sabha in India and to the government of India to include Sri Lanka as a country along with Afghanistan Pakistan and Bangladesh in the Citizenship Amendment Bill.
     
    That will facilitate those Sri Lankan refugee Hindus who may want to remain India. The human angle should not be forgotten. Because they were born as Hindus and the Sri Lankan Buddhists extremists do not tolerate them, are they to perish without citizenship during their lifespan?
     
    (09 12 2019)
    Share
  • கரிவாயுவை எரிவாயுவாக மாற்ற, ஒளித்துவ இயக்க ஊக்கி

    கரிவாயுவை எரிவாயுவாக மாற்ற, ஒளித்துவ இயக்க ஊக்கி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    கரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்

    Image result for catalyst CUPROUS OXIDE that uses light to turn carbon dioxide to fuel
    Scientists Devise Photo-Catalyst to Turn Carbon Dioxide to Useful Fuel.
    ++++++++++++++++
    Looking into the hard X-ray Nanoprobe Synchrotron Chamber while Measuring a response of an individual Cuprous Oxide Particle to the exposure of Carbon Dioxide, Water and Light.
    +++++++++++++++++++++

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++

    Related image

    சூட்டு யுகம் புவியைத் தாக்கி
    வேட்டு வைக்க மீறுது !
    நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்
    நாச மாக்கப் போகுது !
    சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது !
    பேய் மழைக் கருமுகில் சூழுது !
    நீரை, நிலத்தை, வளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    விரைவில் சிதைக்கப் போகுது !
    கடல் மட்டம், வெப்பம் ஏறி
    கரைகள் மூழ்கப் போகுது !
    மெல்ல  நோய்கள் பரவி, நம்மைக்
    கொல்லப் போகுது !
    நில்லா திந்த கலியுகப் போர் !
    பொல்லாத கரிவாயு மயத்தைப் புவியில்
    இல்லாமல் செய்ய வேண்டும் !

    ++++++++++++++++

    Related image

    இரசாயன ஆராய்ச்சியாளர் புதிய முறையில் கரிவாயுவை எரிவாயுவாக மாற்ற முயல்கிறார்.

    நாளுக்கு நாள் கரிவாயுவின் கொள்ளளவு நமது சூழ்வெளியில் பெருகிக் கொண்டே ஒரு தாக்கத்தை உண்டாக்க வருகிறது.  அதைக் கட்டுப்பாடு செய்ய, அல்லது அளவைக் குறைக்க சமீபத்தில் விஞ்ஞானிகள் சூழ்வெளியில் கரியைக் கைப்பற்றவோ, விழுங்கவோ, அல்லது அதை ஓர் எரிசக்தி வாயுவாய் மாற்றவோ முயன்று வருகிறார்.   அவற்றில் ஒரு முறைதான் இந்த ஒளித்துவ இயக்க ஊக்கி சாதனை [Photo-Catalytic Process]

    Image result for catalyst CUPROUS OXIDE that uses light to turn carbon dioxide to fuel

    அமெரிக்க எரிசக்தித் துறையகத்தின் ஆர்கான் தேசிய ஆய்வுக்கூட [Argonne National Laboratory U.S. Department of Energy]  விஞ்ஞானிகள், சூரிய ஒளியை இயக்க ஊக்கியான தாமிரத்தின் [Copper] மீது பாயவிட்டுக் கரிவாயுவை மெதனால் எரிவாயுவாக [Methanol] மாற்றியுள்ளார். இந்த ஒளித்துவ இயக்க ஊக்கி தாமிர ஆக்சைடு [Photo-Catalyst : Cuprous Oxide].  அந்த புதிய முறையைப் பயன்படுத்திய விஞ்ஞானி டியானா ராஜ்  [Tijana Rajh]  என்பவர். அந்த இரசாயன முறையில் தனிப்பட்ட  ஆறு எலக்டிரான்களை உண்டாக்கி கரிவாயுவை மெதனால் எரிவாயுவாக மாற்றிக் காட்டினார் [A Semiconductor Cuprous Oxide when exposed to Sun Light, can produce Electrons that become available to react with or reduce many compounds. To make Methanol from CO2, we need six Electrons] . இந்த புதிய இரசாயன முறை, வணிக முறையில் பேரளவில் இனி செய்து காட்ட வேண்டும்.

    An illustration of the reaction that creates methanol from CO2

    ++++++++++++++++++++++++++++++++++++++++++++

    பூகோளத்தில் அனுதினம் அளவுக்கு மீறும் கரிவாயு சேமிப்பைக் குறைப்பது எப்படி ?

    Planned Fossil Fuel Extraction Would Blow Past Warming Limits

    1. https://qz.com/1638096/the-story-behind-the-worlds-first-large-direct-air-capture-plant/
    2. https://oilprice.com/Energy/Coal/China-Adds-Wave-Of-New-Coal-Fired-Power-Plants.html
    3. https://www.carbonbrief.org/mapped-worlds-coal-power-plants
    4. https://www.npr.org/2019/04/29/716347646/why-is-china-placing-a-global-bet-on-coal

    Image result for carbon dioxide buildup

    Related image

    புவி மாந்தருக்கு ஆண்டு முழுதும் இடர் விளைவிக்கும் சூட்டு யுகம்

    சுமார் 800,000 ஆண்டு காலமாக நமது பூர்வ உயிரின மூலவிகள் தோன்றியது முதல் சூடேற்றக் கரிவாயு [கார்பன் டையாக்ஸைடு] தொடர்ந்து சேமிப்பாகி, தற்போது வாயுக் கொள்ளளவு மிகவும் ஏறிவிட்டது என்று  பென்சில்வேனியா பல்கலைக் கழகக் காலநிலைப் பேராசிரியர், மைக்கேல் மான்ன் 2019 மே மாதம் 14 ஆம் தேதி அறிவித்துள்ளார்.   மே மாதம் 11 ஆம் தேதி, கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அளவாகப் 415 ppm [parts per million] பெருகி யுள்ளது.  இந்த அளவைக் கருவி மூலம் அறிந்தது : ஹவாயின் மௌன லோவா தேசீகக் கடற்துறைச் சூழ்வெளி ஆணை  ஆய்வகம் [National Oceanic and   Atmospheric Administration’s Mauna  Loa Observatory, in Hawaii].  1958 முதலாக இந்த ஹவாயி ஆய்வகம் செய்து வருகிறது.

    Image result for carbon dioxide buildup

    Global Coal Power Plants :

    Year:  2018

    Operating: 2,024,100 MW

    Related image

    Image result for carbon dioxide buildup

    https://qz.com/1638096/the-story-behind-the-worlds-first-large-direct-air-capture-plant/

    There is a set of technologies, scientists say, without which the world is unlikely to avert climate crisis. These so-called “negative-emissions technologies” have been discussed by climate scientists in academic journals for many years. But now, entrepreneurs at three startups—one each in the US, Canada, and Switzerland—are vying to bring the most promising of those technologies to market. They will potentially offer the world a new set of tools to stave off climate catastrophe—a reverse gear on a car headed for the cliff.

    The startups have each been developing a technology called direct air capture. The idea is to build machines that can filter the air and capture only carbon dioxide molecules. If those molecules aren’t released into the atmosphere, the result is negative emissions. So far every startup has showed the technology works. The next hurdle is to scale the technology and lower its cost.

    First out of the gate was Climeworks. In 2017, with the help of small grants from the EU, the Swiss startup installed a machine in Iceland that captured carbon dioxide from the air, mixed it with water, and injected it underground. There, thanks to geology, the gas reacted with minerals to become stone. The machine captures about 50 metric tons each year, which is the annual emissions of one household in the US—or about 10 in India.

    But to hit the more ambitious climate goals set under the Paris climate agreement, annual negative emissions need to reach more than 1 billion metric tons by mid-century. That’s why an announcement made last month in Jackson Hole, Wyoming was especially interesting. Canadian startup Carbon Engineering is pairing with US oil giant Occidental Petroleum to build a plant by 2022 that will capture and bury 500,000 metric tons each year. The plant is expected to cost hundreds of millions of dollars.

    State of Climate 2018

    Here’s how the plant works: A large fan sucks in huge volumes of air and passes it over corrugated sheets. A chemical solution, which reacts with carbon dioxide in the air, is poured onto the sheets. The carbon-rich solution is then transported to a container where it’s brought in contact with quicklime (or calcium oxide) that reacts with the mixture to form pellets of limestone (or calcium carbonate). In a third container, these limestone pellets are heated to about 1000°C to create quicklime that can be reused and release carbon dioxide as a pure stream of gas. The greenhouse gas can then be injected underground in depleted gas fields or converted into something useful.

    (To heat the kiln to 1000°C, natural gas is burned in pure oxygen and the carbon dioxide produced in the process is also captured. There are also plans to use renewable electricity to heat the kiln, cutting out the use of any fossil fuels.)

    In June 2018, Keith published a peer-reviewed study in the journal Joule that described the process in great detail. It’s the only direct-air-capture (DAC) company to offer its work for peer review so far. The main point of the paper, however, was to correct a misconception about the technology that it’s necessarily expensive.

    According to a 2011 study by the American Physical Society, DAC technology could cost more than $600 per metric ton. For context, the highest global price on carbon emissions—as a tax or a tradable credit—is around $200 per ton. But Keith showed that Carbon Engineering’s technology could capture carbon dioxide for between $100 and $250 per metric ton.

    Within months of the paper’s publication, Steve Oldham, who Keith and Holmes had brought in to be CEO of Carbon Engineering, found himself in a meeting with Vicki Hollub, CEO of Occidental Petroleum. She wanted access to more carbon dioxide. He wanted to raise capital to scale up the technology to capture hundreds of thousands of tons each day.

    இம்முறை போக அடுத்துப்  பயன்படும் முறை : பனிப்பாறை வளரும் காலங்களில் [Interglacial Periods] சேர்ந்திருக்கும் பூர்வ வாயுக் குமிழ்கள்  சமீபத்து பனியுக யுகத்தில் நீண்ட குழல் களைச் சொருகி வாயுவின் அளவு  200 ppm என்று  அறிந்தது.  தற்போதைய பனியுகச் சேமிப்பு  அளவுநிலை : 280 ppm. ஒவ்வோர் ஆண்டும் பூமி 3 ppm காரிவாயு மிகையாகப் பதிவு செய்கிறது.  அதே சமயத்தில் 19 நூற்றாண்டு தொழிற் புரட்சி காலத்தில் பூகோள உஷ்ணம்  1.8 டிகிரி F  [1 டிகிரி C ] ஏறியுள்ளது.  இன்னும் பத்தாண்டுகளில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அளவு : 450 ppm அளவைத் தாண்டிவிடும் என்று மைக்கேல் மான்ன் எச்சரிக்கை விடுகிறார்.  பனித் தட்டுகள் சிறிதாக இருந்த போது,  கடல் மட்டம் 65 அடி [20 மீடர்]  உயரத்தில் மிகையாய் இருந்துள்ளது.

    http://www.chicagotribune.com/92378906-132.html

    Added Arctic data shows global warming didn't pause

    Added Arctic data shows global warming didn’t pause

    November 20, 2017

    உலக விஞ்ஞானிகளின் புதியதோர் எச்சரிக்கை

    22 உலக நாடுகளின் 98 விஞ்ஞானிகள் 2000 ஆண்டு காலப் பூகோள உஷ்ணப் பதிவு இலக்கங்களைத் திரட்டி வெளியிட்டு பூகோளம் வெகு விரைவாகச் சூடேறி வருகிறது என்று இப்போது புதியதோர் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.  பல்வேறு விஞ்ஞானக் குழுவினர் சேர்ந்து மூன்று ஆண்டுகளாய் மெய்வருந்திச் செய்த கூட்டு முயற்சி இது.  இந்த வெளியீட்டுத் திட்டத்தின் பெயர் “பதிவுகள் 2000” [PAGES2K].  இத்திட்டம் உலகின் 648 பகுதியில் எடுத்த 692 பல்வேறு காலவெளிப் பதிவுகள்.  இத்தகவலில் நீர், நிலம், கடல் பனிக்குன்றுகள், மரங்கள், கடல் பவழங்கள், கடல் சேர்ப்புப் படிவுகள், பருவக் காலப் பதிவுகள் ஆகியவற்றின் நீண்ட காலத் திரட்டுச் சேமிப்புகள்.  பருவகாலப் பதிவுகள் 2 வாரத்திலிருந்து, 2000 ஆண்டுகள் வரை நீடித்தவை.  இந்த புதிய விஞ்ஞான அறிக்கை 2017 ஜூலையில் “இயற்கை” மின்னியல் [Online Nature] இதழில் வெளியானது.

    இதன் முக்கிய அறிவிப்பு : “பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது, நாம் அஞ்சுவது போல்” என்பதே.   இதை வெளியிட்ட துணைப் பேராசிரியர் : ஜீன் மேரி  ஸெயின்ட் ஜேக்ஸ்.   அவர் கூறுவது :  கால நிலை உஷ்ண மாறுதல்கள் கடந்த 150 ஆண்டுகளாக எடுக்கப் பட்டவை. அதுவும் கனடாவில் கடந்த 50 வருடங்களாகப் பதிவானவை தான்.  அவற்றுக்கு முந்தையப் பதிவுகள் – உஷ்ண அளவீடுகள் எதிர்மறையாகக் கணிக்கப் பட்டவை.

    2015 இல் 195 உலக நாடுகள் நிலக்கரி போன்ற இயற்கைக் கனல்சக்திப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பூமியின் சராசரித் தள உஷ்ணத்தை 2 டிகிரி C [ 3.6 டிகிரி F] கீழ் நிலைநிறுத்த முயன்றன.  அதாவது 1.5 C அளவுக்கு நிலைநாட்ட முடிவு செய்தன.  பூகோளத்தில் 1 டிகிரி C உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்டத்தை உயர்த்தி, வேனிற் காலச் சூறாவளிகளைப் பெருக்கியும், வெப்பப் புயல்களை அடித்தும், காட்டுத் தீக்களைத் தூண்டியும், நில வறட்சியை உண்டாக்கியும், ஹர்ரிக்கேன் தாக்குகளை ஏவியும் மக்களுக்குப் பெருந்துயர் அளித்து வருகின்றன.  சூடேற்றம் 1.5 முதல் 2.0 டிகிரி வரைக் கட்டுப்பாடுக் குள்ளே கொண்டு வர,  எப்படிக் கரிவாயு [CO2] உற்பத்தி குறைய வேண்டும் என்பதுதான் தற்போதைய சவாலாக உள்ளது !

    An Argo float is deployed into the ocean

    3800 AGRO FLEET Autonomous Devices Spread out Uniformly across Oceans

    Image result for oceans are warming rapidly

    கடல் வெள்ளம் விரைவாகச் சூடேறுவதைப் புதிய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

    கடற்பகுதிகளின் பரவலான பதிவுகளில் மாறும் உஷ்ண நிலையைத் தீர்வாகச் சொல்ல முடியா விட்டாலும், கடல் நீர் விரைவாகச் சூடேறுகிறது என்பதில் எதிர்ப்பு எதுவும் இல்லை. அண்டவெளித் தொழில் யுகத்தில் அனுதினமும் மனிதனும், இயற்கைத் தீ மூட்டத்திலும் ஏராளமான புகைமுகில் சூழ்வெளியில் வெளியாகிக் கடல் கனல் சேர்ப்பு [Ocean Heat Content (OHC)] மிகுதியாகி வருகிறது. பூமியின் வெப்பமும் ஏறுகிறது.  இவைதான் பூகோளச் சூடேற்றப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணிகள்.  ஆயினும் இந்தக் கனல்சக்தி எங்கே போகிறது ?  எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது ?  இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது ? பல்லாயிரம் மைல் பரந்த கடற் பகுதிகளில் வெப்ப ஏற்ற இறக்கம் தொடர்ந்து எப்படி நெறிப்படி பதிவாகிறது ?

    Image result for oceans are warming rapidly

    பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய கணக்கீடு கடற் பகுதிகளில் உள்ளது.  மெய்யாக புவிக்கனல் ஏற்றம் என்பது கடற்கனல் ஏற்றமே.  அதற்கு உலகக் கடல் பரப்பு பூராவும் பரவலாக உணர்வுக் கருவிகள் ஆழத்திலும், மேல்தளத்திலும் நிறுவப் படவேண்டும். பல்லாண்டு கால அளவுகள் பலரால் நீண்டு தொடரப்பட்டு சேமிக்கப் படவேண்டும்.  சிக்கலான, சிரமான இப்பணியை மூன்று விதக் கடற்கனல் ஆய்வு வரைக் குழுவினர் [Oceanographers] செய்து வருகிறார்.  அவரின் ஆய்வுப் பதிப்புரை 2017 ஜுன் வெளியீட்டில் [Journal Climate Dynamics] வந்துள்ளது.  அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் காஞ்சி வாங்  [Dr. Gonjgie Wang].

    “எமது ஆய்வுப் பதிப்பு  1970 ஆண்டு முதல் பூகோளக் கடல் நீர்ச் சூடேற்றம் பொங்கி வருகிறது என்று மீண்டும் உறுதி செய்கிறது. ஆயினும் பரவலான கடற்கனல் பதிவுகளில்  பேரளவு ஐயப்பாடு காணப் படுகிறது. சமீபத்தில் வந்த பத்தாண்டு விளைவுகளில் பூகோளச் சூடேற்றத்தில் கடற்கனல் மாற்றங்களில் தணிப்பு நிலை [Slowdown] தெரிகிறது. அதற்குப் பெருவாரியான விளக்க ஆய்வுகள் மதிப்பீடு  [Comprehensive Evaluation] தேவைப் படுகிறது. மேலும் 2000 மீடர் [6600 அடி] கடல் ஆழத்தில் நீரோட்டம் ஆயும் பல்வேறு கடற்கனல் கண்காணிப்புக் கூட்டுப்பணிக் குழு [Ocean Monitoring Network] அமைக்கப் பட வேண்டும்.” என்று சொல்கிறார் டாக்டர் காஞ்சி வாங்.  இப்போது அவர்கள் பயன்படுத்துவது 3800 சுயயியக்கிகள் கொண்ட ஆர்கோ படைக் கப்பல் [ARGO FLEET with 3800 Autonomous Devices].  அது 2005 ஆண்டு முதல் கடற்பணி செய்து வருகிறது.

    Icebergs in the Sea

    கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் 

    21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் சூழ்வெளிப் பாதிப்புச் சவாலாய் இருப்பது பூகோளக் கடற்கனல் ஏற்றமே , அதற்குக் காரணமான கடல்நீர் மட்ட உயர்வு.  கடல்நீர் மட்ட உயர்வுக்கு இரு முக்கிய காரணங்கள்:  ஒன்று துருவப் பனிக்குன்றுகள், கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது, அடுத்து கடல் வெள்ளம் வெப்ப மிகையால் கொள்ளளவு விரிவது.  நாசாவின் குறிப்பணி [Oceans Melting Greenland (OMG) Mission] வான் பறப்பு, கப்பல் பயணக் கண்காணிப்புகள் மூலம் தொடர்ந்து, கரையோரப்  பகுதி பனிக் குன்றுகள் உருகி நீராவதைப் பதிவு செய்வது. ஐந்தாண்டு பணி இது [5 Year Airborne & Ship-Based Mission]. இவற்றின் விளைவு  என்ன ? மேற்தள / அடித்தளக் கடல்நிலைகள் எப்படி நீர் மட்ட உயர்வை மாற்றுகின்றன என்பதை அறிவது.  துருவப் பனி உருகுவதற்கு புவிச் சூடேற்றம் மட்டுமே காரணமாகிறது.

    கிரீன்லாந்தின் பனிச்சேர்க்கை அண்டார்க்டிகாவுக்கு அடுத்தபடி அளவில் பெரியது.  கிரீன்லாந்து பனிமட்டும் உருகினால் கடல் நீர் உயரம் 23 அடி உயரும்.  அந்தப் பயங்கர கடல் உயரம் பல கடற்கரை நகரங்களை மூழ்க்கி விடும்.  அப்படிக் கிரீன்லாந்து உருக  பல நூற்றாண்டுகள் ஆகலாம்.  தற்போது கடலில் சேரும் கிரீன்லாந்து பனியுருக்க நீர் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டன்  என்று  ஓயெம்ஜி மூலம் [OMG MISSION] நாசா கணித்துள்ளது.

    Greenland Ice melting

    Image result for oceans are warming rapidly

    http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I

    http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ]

    ++++++++++++++++++++

    Image result for oceans are warming rapidly

    கடல் சூடேற்றத்தால் விரிவதும், பனிக்குன்றுகள், உறைப் பாறைத் தட்டுகள் உருகிக் கடல் நீர்க் கொள்ளளவு மிகை யாவதும் இப்போது நமக்குத் தெரிந்ததுதான்.  அம்முறைப்படி குறைந்தது சுமார் 3 அடி [1 மீடர்] அல்லது அதற்கும் மிகையான கடல் மட்ட உயர்ச்சி, ஒரு நூற்றாண்டில் நேரலாம் என்பது இப்போது உறுதியாகி உள்ளது.  ஆனல் அந்த உயர்ச்சி ஒரு நூற்றாண்டுக்குள் நேருமா அல்லது அதற்கும் அப்பால் ஏறுமா என்பது எமக்குத் தெரிய வில்லை.
    ஸ்டீவன் நீரம் [ தலைமை ஆய்வாளி, கொலராடோ, போல்டர் பல்கலைக் கழகம்]
    பூர்வீகக் காலநிலைப் பதிவு [Paleoclimate Record] மூலம் நாங்கள் அறிந்தபடி ஓரிரு நூற்றாண்டுகளில் 10 அடி [3 மீடர்] கடல் மட்ட உயர ஏற்றம், நிகழக் கூடிய மாறுதல்தான்.
    டாம் வாக்னர் [Cryosphere Program, NASA Headquarters, Washington.D.C]
    Image result for oceans are warming rapidly
    நாசாவின் அறிவிப்புப்படி கடல் மட்டம் மென்மேலும் உயர்ந்து கொண்டு வருகிறது.
    1992 ஆண்டு முதல் 2015 [?] வரை உலகளாவிய கடல் பரப்புகளில் சராசரி 3 அங்குலம் [ 8 செ.மீ.] உயர்ந்துள்ளது.  சில கடல் மட்டப் பகுதிகளில் 9 அங்குலத்துக்கும் [25 செ.மீ.] மேலாக இயற்கை மாறுபாடுகளால் ஏறியுள்ளது என்று நாசா துணைக்கோள் கருவிகள் மூலம் அறியப் பட்டுள்ளது.  இப்போது ஓர் ஆழ்ந்த ஆய்வு முயற்சி நாசா துணைக்கோள் அளப்புகளை வைத்து தவிர்க்க முடியாத பல்லடிக் கடல் மட்ட உயர்ச்சி நேரப் போவதாக எச்சரிக்கை வந்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது எழுப்பும் வினா எத்தனை விரைவில் கடல் மட்ட  உயரம்  ஏறப் போகிறது ?
     Image result for oceans are warming rapidly
    கொலராடோ, போல்டர் பல்கலைக் கழக ஆய்வாளர் நாசா துணைக்கோள் 1992 ஆண்டு முதல் 2015 வரை அனுப்பிய 23 ஆண்டுகளின் கடல் மட்ட உயர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சீரான ஏற்றமில்லாத நிலைக்கு விளக்கம் தேடுவார்.   2013 ஆண்டில் காலநிலை மாறுதலை நோக்கும் ஐக்கிய நாடுகளின் அரசாங்க உட்துறைக் குழுவினர்  [United Nations Intergovernmental Panel on Climate Change]  அறிவிப்புப்படி, உலகளாவிய கடல்களின் நீர்மட்ட உயரம் சுமார் 1 அடி முதல் 3 அடி [0.3 முதல் 0.9 மீ.] இந்த நூற்றாண்டு  இறுதியில் ஏறிவிடும் என்று கூறியுள்ளது.   இதற்குப் பிறகு குறிப்பிடப்படும் ஆய்வுச் செய்திப்படி மிகையாகக் கூறப்படும் 3 அடி [0.9 மீ.] உயரமே உறுதியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.
    Image result for oceans are warming rapidly
    இந்த 3 அடி [0.9 மீ.] உயர ஏற்றத்தில் 1 அடி உயரம் கடல்நீர் சூடேற்றத்தால் உண்டாகுகிறது என்றும், அடுத்த 1 அடி [0.9 மீ.] ஏற்றம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனிப்பாறை உருகுவதால் நேர்கிறது என்றும், மிச்சமுள்ள 1 அடி உலக மலைச் சிகரப் பாறை உருகுவதால் என்றும் மதிப்பிடப் படுகிறது.  கிரீன்லாந்தின் பனித்தளம் 660,000 சதுர மைல் [1.7 மில்லியன் சதுர கி.மீ.] பரப்பு சுமார் 303 கிகா டன் [gigatons] பனிக்கட்டிகளை ஓராண்டு காலத்தில்  உதிர்த்துவிடும் என்று நாசாவின் துணைக்கோள் மூலம் அறிய வருகிறது.  இது கடந்த பத்தாண்டு கணக்கீடுகள்.  அண்டார்க்டிக் துருவப் பனித்தட்டு சுமார் 5.4 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் [14 மில்லியன் சதுர கி.மீ.] உருகி சராசரி 118 கிகா டன் அளவில் கடல் நீர்க் கொள்ளளவு சேர்ந்துள்ளது.
    Greenland Rivers -2

    2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year]  என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது.  அதாவது  2006 முதல் 2008 வரை ஓராண்டுக்குப் பனிப் பரிமாண இழப்பானது 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது.  2000 முதல் 2008 வரை அறியப் பட்ட கடல் மட்ட உயரம் : 4 மில்லி மீடர்.  கடைசி  மூன்று ஆண்டு களில் மட்டும் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது.

    Van Den  Broeke [Dutch Researcher Spoke to SPEIGEL ONLINE]

    கிரீன்லாந்துதான் உலகப் பெரும் நீர் சேமிப்புப் பூங்காவாகக் கருதப் படுகிறது !  அங்கு ஓடும் நீல நிற ஆறுகள் பனிப்பாறைக் குள்ளே மகத்தான, நளிமான, ஆனால் பயங்கரமான பாதாளங்களை [Canyons] உண்டாக்கி வருகின்றன.

    Image result for oceans are warming rapidly

    2015 ஜனவரியில் செய்த புதிய ஆராய்ச்சிகள் நொறுங்கி விடும் அந்தப் பனித்தட்டுகளின் போக்கைச் சுட்டிக் காட்டி, பூகோளச் சூடேற்றம் விளைவிக்கும் பேரிடரை முன்னறிப்பு செய்கின்றன.

    லாரென்ஸ் ஸ்மித் [தலைமை ஆய்வாளி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]

    கிரீன்லாந்து பனித்தளத் தேய்வு எதிர்காலக் கடல் மட்ட உயர்வுக்குப் பெரும்பங்கு வகிக்க மெய்யாக உதவி செய்கிறது.  நவீன பூகோளச் சூடேற்றத்தின் தாக்கத்தைக் கூறும், காலநிலைக் கணினி மாடலைச் செம்மைப் படுத்தவும் அது அவசியமானது.

    திடெஸ்கோ [இணைப் பேராசிரியர், புவியியல் & சூழ்வெளி விஞ்ஞானம்]

    Arctic Ice Region

    “துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும்,  விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும்  கிடைத்தது.   இந்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது.   பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய்  நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.”

    பேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து]

    Image result for oceans are warming rapidly

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் விரைவில் உருகி ஆறுகளாய் ஓடுகின்றன.

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் ஆறுகளாய் விரைவில் உருகி ஓடிக் கடல் நீர் மட்ட உயர்ச்சிக்கு மற்ற பனிச்சேமிப்புகளுக்குச் சமமாகப் பெரும்பங்கு ஏற்கிறது.  இந்தப் புதிய கண்டுபிடிப்பு இவ்வாண்டு 2015 ஜனவரி 15 இல் வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் ஜனவரி இதழில்  [National Academy of Sciences Journal] பதிவாகி உள்ளது.  கிரீன்லாந்தின் 80% பரப்பளவில் பனித்தளப் பாறைகள் உறைந்துள்ளன.   இவை தொடர்ந்து உருகி ஓடினால் கடல் மட்ட உயர்ச்சி பேரளவில்  ஏறிட வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது. கிரீன்லாந்தால் நீரோட்டம் நிலைபெற்ற 523 ஆறுகள் சுமார் 2000 சதுரமைல் பரப்பில் ஓடி நீரைக் கடலில் மௌலின்ஸ் என்னும் புதை குழிகள் [Moulins or Sink Holes] மூலம் கொட்டி வருகின்றன. நீரோட்டத்தின் வேகம் : 23,000  முதல்  46,000 ft/sec. கொள்ளளவு : 55,000 முதல்  61,000 cuft/sec. பேரளவு நீரை உருகிக் கொட்டும் கிரீன்லாந்தின் பனித் தட்டுகளே உலகின் மிகப் பெரும் நீர்ச் சேமிப்புத் தீவாகக் கருதப் படுகிறது.

     

    Arctic Ice Retreat

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டு களில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!

     

    Image result for oceans are warming rapidly

    அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    Greenland Iceberg

    “பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது.

    டாக்டர் எரிக் ஐவின்ஸ் [Co-Leader, NASA Jet Propulsion Laboratory]

    “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

    உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

    Greenland homes

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங் களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    Greenland Location

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

    பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

    அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

    Melting Days

    “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

    பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

    1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டு முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது.  கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளது.

    2.  20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

    Fig 1 Carbon Emissions

    Fig 1 Global CO2 Concentrations

    3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!  கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது.  அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.

    4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங் களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்புச் சாலை களிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக் களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக் கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference] (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6.   [11 Facts About Global Warining ]

    7.   http://www.cosmosmagazine.com/news/676/ice-retreat-opens-passage-north-pole  [September 21, 2006]

    8.  http://www.spiegel.de/international/world/a-warming-arctic-greenland-s-ice-sheet-melting-faster-than-ever-a-661192.html  [November 13, 2009]

    9.  http://topics.nytimes.com/top/news/science/topics/globalwarming/index.html#  [December 6, 2012]

    10.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [December 8, 2012]

    11.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Katrina  [Katrina Hurricane Damage in New Orleans] [December 9, 2012]

    12.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Sandy  [Sandy Hurricane Damage in New York, New Jersey etc]

    13.  http://en.wikipedia.org/wiki/European_Remote-Sensing_Satellite  [European Remote Sensing Satellite Mission] [December 7, 2012]

    14.  http://en.wikipedia.org/wiki/Gravity_Recovery_and_Climate_Experiment  The Gravity Recovery And Climate Experiment (GRACE), a joint mission of NASA and the German Aerospace Center  [Noember 20, 2012]

    15.  EcoAlert :  Forty Seven ESA/NASA Experts Warn of Increasing Ice Melt & Rising Sea Levels  [December 3, 2012]

    16.  http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-148   [May 12, 2014]

    17. http://scitechdaily.com/rivers-glacial-meltwater-contribute-rising-sea-levels/  [Jan 13, 2015]

    18.  http://en.wikipedia.org/wiki/Greenland  [May 16, 2015]

    19.  http://www.nasa.gov/jpl/rivers-are-draining-greenland-quickly-nasa-ucla  [May 16, 2015]

    20. http://www.spacedaily.com/reports/NASA_Zeroes_in_on_Ocean_Rise_How_Much_How_Soon_999.html   [August 27, 2015]

    21.  http://www.space.com/30379-nasa-sea-level-rise-model-video.html  [August 26, 2015]

    22.  https://www.theguardian.com/environment/climate-consensus-97-per-cent/2017/jun/26/new-study-confirms-the-oceans-are-warming-rapidly [June 26, 2017]

    22(a)  http://www.dailygalaxy.com/my_weblog/2017/06/ecoalert-greenlands-great-melt-nasa-monitoring-the-massive-ice-sheet-thats-adding-250-gigatonnes-of-.html [June 27, 2017]

    23.   https://phys.org/news/2017-06-oceans-rapidly.html  [June 30, 2017]

    24. http://www.terradaily.com/reports/Oceans_are_warming_rapidly_999.html  [July 3, 2017

    25.  https://www.accuweather.com/en/weather-blogs/climatechange/new-research-confirms-that-global-oceans-are-warming-rapidly/70002053  [July 6, 2017]

    26. http://www.spacedaily.com/reports/Figuring_out_how_fast_Greenland_is_melting_999.html  [July 7, 2017]

    27.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/07/ecoalert-greenlands-ice-melt-doubles-the-planets-canary-in-the-mine-shaft.html  [July 10, 2017]

    28.  https://www.livescience.com/59773-trillion-ton-iceberg-breaks-off-antarctica.html?  [July 12, 2017]

    29. https://phys.org/news/2017-10-paris-climate-goals-recede-geoengineering.html  [October 11, 2017]

    30. http://environmentalresearchweb.org/cws/article/yournews/70191  [October 13, 2017]

    31.  https://www.canada.ca/en/environment-climate-change/services/climate-change/science.html  [November 23, 2015 – 2017]

    32.  //www.livescience.com/19481-ice-age-carbon-dioxide-orbit.html  [April 12, 2012]

    33. https://www.livescience.com/35635-climate-change-health-countdown.html  [April 22, 2019]

    34. https://www.livescience.com/64535-climate-change-health-deaths.html  [January 17, 2019]

    35. https://public.wmo.int/en/media/press-release/state-of-climate-2018-shows-accelerating-climate-change-impacts  [March 28, 2019]

    36.  https://www.livescience.com/65469-highest-carbon-dioxide-levels.html  [May 14, 2019]

    37.http://www.biofueldaily.com/reports/Scientists_devise_catalyst_that_uses_light_to_turn_carbon_dioxide_to_fuel_999.html

    38.https://newatlas.com/photochemical-photosynthesis-uta-co2-methanol/26766/

    39.https://www.intechopen.com/books/carbon-dioxide-chemistry-capture-and-oil-recovery/carbon-dioxide-conversion-to-methanol-opportunities-and-fundamental-challenges

    40. https://www.technologynetworks.com/applied-sciences/news/green-invention-turns-carbon-dioxide-into-valuable-fuels-323551

    Share
  • (Peer Reviewed) உளவியல் நோக்கில் ‘அவன்-அது = அவள்’

    (Peer Reviewed) உளவியல் நோக்கில் ‘அவன்-அது = அவள்’

    முனைவர் த. ராதிகா லட்சுமி
    இணைப் பேராசிரியர்-தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி

    உளவியல் நோக்கில் ‘அவன்-அது = அவள்’

    மனித மனமே இலக்கியத்தின் வற்றாத ஊற்றுக்கண்ணாகும். மனித மனம் நுண்மையான, விசித்திரமான போக்கினைக் கொண்டது. விலங்குகளிலிருந்து மனிதன் மாறுபட்டுச் சிந்திக்க, செயலாற்றுவதற்கு அடிப்படையான காரணம் மனவுணர்ச்சிகளாகும்.

    ‘மனித உள்ளத்தின் உணர்வே (Human psyche) எல்லா அறிவியல்களுக்கும், கலைகளுக்கும் கருவறையாக விளங்குவது. எனவே அத்தகைய உள்ளத்தின் வழிமுறைகளை ஆராய்கிற உளவியல், இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிக்கும் ஏற்புடையதாக இருக்க முடியும்’ என்று உளவியல் அறிஞரான யுங் குறிப்பிடுகிறார். இலக்கியத்தில் உளவியல் அணுகுமுறையைப் பின்பற்றுவதால் படைப்பாளரின் மனநிலை, கதைமாந்தர்களின் மனநிலை, கதை தோன்றிய சூழல், சமூக இயல்பு போன்றவற்றைத் தெளிவாக அறியலாம். உளவியலாளர் மனித மனத்தை நனவு மனம், நனவிலி மனம் என இரண்டாகப் பிரிப்பர். மனித மனத்தின் நனவுநிலைக்கு அப்பாற்பட்டவையே நனவிலி மனம். பல அனுபவங்களை மனிதன் உள்வாங்கிக் கொள்ள அவை நாளடைவில் மறந்து போகின்றன. அந்த மறந்து போன எண்ணங்கள், உள்ளத்திலேயே பதிந்து விடும். இத்தகைய உள்ளத்தின் எண்ணங்களே நனவிலியாக உருவெடுக்கின்றன.

    பொதுவாக ஆண், பெண் மனங்களின் சிக்கல்களை அறிந்துகொள்ள இயலும். ஆனால் ஆண்,பெண் என்ற இருநிலையையும் கடந்து திருநங்கையாக வாழ்பவரின் மனநிலையை அவன்-அது = அவள் என்னும் நாவலின் வாயிலாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    அவன்அது = அவள்

    இந்நாவல் உடலளவில் ஆணாகவும், மனதளவில் பெண்ணாகவும்  மாற்றம் பெற்ற திருநங்கைகளின் அவல நிலையை எடுத்துரைக்கிறது. சமூகத்தில் பிறரைப் போல இயல்பான குடும்ப வாழ்க்கையை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு வாழ்பவர்களே திருநங்கைகள். குடும்பத்தினரின் நிராகரிப்பு, சமூகத்தினரின் புறக்கணிப்பு இவற்றைக் கடந்து  தன்னிலையை அறிந்துகொள்ள இயலாமல் தவிக்கும் கோபி என்ற கோமதியின் மனப் போராட்டத்தை நுண்மையாக இந்நாவலில் எடுத்தாண்டுள்ளார் நாவாலாசிரியர் யெஸ்.பாலபாரதி.

    குடும்பத்தின் கடைக்குட்டியாக, ஆறாவதாகப் பிறந்த கோபி பையனாக இருப்பினும் அத்தையரின் அணைப்பில் பெண்களுக்கான அலங்காரங்கள் புனையப்பட்டுச் சிறுமிகளுடன் பல்லாங்குழி, பாண்டி விளையாடி வளர்ந்தான். ஐந்தாம் வகுப்பு முடிந்தவுடன் முடி வெட்டப்பட்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க, தன்னுலகம் மாற்றப்பட்டதாக ஆண் என்னும் உருவம் விருப்பமில்லாமல் தன் மேல் திணிக்கப்பட்டதாக உணர்ந்தான். ஆண் எனும் புதிய உலகத்தில் சரவணனின் நட்புடன் பதினொன்றாம் வகுப்பு வரை கல்வி கற்க, மனம் மட்டும் பெண்களின் உடையிலேயே விருப்பம் கொண்டது. வீட்டில் யாருமில்லாத வேளையில் சகோதரியின் பாவாடை, தாவணி அணிந்து கண்ணாடி முன் ஆடி, பாடிய கோபியைக் கண்ட சங்கரபாண்டி, அவமானமாகக் கருதி அவனை அடித்து நையப் புடைத்தான்.

    மனிதனின் மனம் பலவீனமானது. அடிமனத்தை id என்னும் தூண்டல்,  Ego எனும் ஆணவம், Super Ego எனும் மனச்சான்று என மூவகையாகப் பிரிப்பர். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

    ‘id என்பது குழந்தை மனம் போன்றது. அது விரும்பியதை எல்லாம் அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. ஈட்டின் விருப்பங்களை ஈகோ பூர்த்தி செய்கின்றது. ஆனால் Super Ego-வின் அனுமதி பெற்று தான் எதையும் செய்யவேண்டும் என்ற நிலையில் உள்ளது’ என்பதற்கேற்ப கோபியின் மனம், பெண் உருவத்தின் மீது கொண்ட வேட்கையால் பெண்ணைப் போலவே உடையணிந்து மகிழ்கிறது. அதாவது மனச்சான்றின் அனுமதியோடு தூண்டல் ஏற்பட மனம் தான் விரும்பியதை அடைவதை அறிய முடிகிறது.

    ஏக்கம்

    மனித மனத்தில் வித்தாகத் தோன்றிய ஆசை பல நாட்களாகியும் நிறைவேறாமல் உறுத்திக்கொண்டிருக்க, அது ஏக்கத்தைத் தோற்றுவிக்கிறது. ஒரு பெண்ணைப் போன்ற உறவுமுறைகளுடன் இயல்பான குடும்ப வாழ்க்கையைத் திருநங்கை வாழவியலாததால் ஏக்கம் உருவெடுக்கிறது. அவ்வேக்கத்தை நிறைவு செய்ய திருநங்கைகள் தங்களுக்குள்ளாகவே மகள், சகோதரி உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

    ‘நம்பள மாதிரி பொட்டைக்கு இன்னொரு பொட்டைதான் ஆதரவு. ஒரு பொட்ட இன்னொருத்தியைத் தத்து எடுத்துக்கிட்டு அவள மகளா சொந்தம் கொண்டாடுறது தான் மொற’ என்பதில் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்படும் திருநங்கை உறவுகளுக்காக ஏங்குவது தெளிவாகிறது. சுசீலா-கோமதியின் சகோதரி உறவு, தனத்தின் சேலா எனும் மகள் உறவுகளின் வாயிலாகத் திருநங்கைகள் பெண் உறவுகளிலேயே திருப்தியடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை அறிய முடிகிறது.

    மனப் போராட்டம் :

    ‘ஒரே நேரத்தில் நிறைவுற இயலாததும், ஒன்றற்கொன்று தனித் தனியானதுமான செயல்நோக்கமும் ஊக்கமும் உள்ளத்தில் இருப்பதனால் விளைவதே உள்ளப் போராட்டம்’ என்பதற்கேற்ப வளரிளம் பருவத்தில் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களால் கோபி மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கிறான். குடும்பமும் சமூகமும் தன்னை ஆணாகப் பார்க்க, தன் மனம் அதை ஏற்க முடியாமல் தவிக்கிறதே! பெண்ணாக நினைப்பதற்குக் காரணம் என்ன? தான் யார்? என்ற வினாவிற்கு விடை தெரியாமல் கோபியின் மனம் உள்ளப் போராட்டத்தில் சிக்குகிறது. வீட்டினர் கோபியின் உடை மாற்றத்துக்குக் காரணம் பெண்பேய் பிடித்திருப்பது எனக் கருதி அதையோட்டுவதற்கான பூசையை மேற்கொண்டனர்.

    ‘உண்மையில் தான் யார்? பெண் எனில் ஏன் அவர்களுக்கான உடல் இல்லாது போனது? ஆண் எனில் உடல்மொழியும், அந்த உணர்வுகளும் எப்படி வந்து சேர்ந்தது? கேள்விகள்… கேள்விகள்… கேள்விகள்… கண்களை இருட்டிக்கொண்டு வந்தது… விசும்பலற்ற அழுகை அது. ஏன் அழுகிறோம் என்று தெரியாமலேயே அழுது கொண்டிருந்தான்’ என கோபியின் மனம் சிந்திப்பதில் தன்னை அடையாளம் காண முடியாத மனப் போராட்டத்தை உணர முடிகிறது. பேயோட்டுபவராவது தன்னை யார் எனத் தெரிவிப்பாரா? என்று ஏங்கும் மனம், சிகப்பு பாவாடை, மஞ்சள் தாவணி, வளையல்கள் எனத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறது. திருநங்கைகளின் குடியிருப்புக்கு அருகே சென்ற கோபி, அவர்கள் ஆணுடையில் இருப்பினும் சராசரி ஆணாய்ச் செயல்படாததை உணர்ந்து பேசி, தன்னிலையை அறிந்துகொண்டான்.

    ‘நீ ஆம்பளையுமில்ல… பொம்பளையுமில்ல… ரெண்டும் கெட்டான்…

    கோபி மௌனமாக இருந்தான்.

    வெளங்கலையா ஆம்பளையா பொறந்துட்ட  பொம்பளைங்க தான்.. நம்மள அலின்னு சொல்றாங்க.. அடிக்கிறாங்க.’ என்பதன் வாயிலாக தன்னையறிந்து தன்னைப் போன்றவர்களும் உலகில் இருப்பதையறிந்து மகிழ்கிறான். திருநங்கைகளின் வீட்டில் பெண்ணுடையை அணிந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டு தன் வீட்டில் ஆண்மகனாக வேடமிட்டு வாழத் தொடங்குகிறான்.

    மனவடக்கமும் ஒடுக்கமும்:

    மனிதர்கள் மனத்தில் பல சோகங்கள் நிறைந்திருப்பினும் அவற்றை வெளிக்காட்டாமல் மனத்திற்குள் அடக்குவதும் ஒடுக்குவதும் உண்டு.

    ‘தொல்லை தரும் உள்துடிப்புகளையும் நினைவுகளையும் திட்டமிட்டு உணர்ந்து கவனத்தில்; களத்தினின்று அகற்றுவதை அடக்குதல் என்றும், அவற்றை முயற்சி இன்றி இயல்பாக நனவுநிலையினின்று நீக்கப்படுவதை ஒடுக்குதல்’ என்றும் பெசன்ட் கிரீப்பர் ராஜ் குறிப்பிடுகிறார்.

    பெண் என்ற உள்துடிப்பைச் சமூகத்திற்காக, கவனமாக மறைத்த கோபி, கல்லூரி விடுதியிலிருந்து வீட்டினர் அறியாமல் தன்னை ஒத்தவர்களைச் சந்தித்து மகிழ, கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்றான். பயணத்தில் கோபியின் நடத்தையில் மாற்றத்தை அறிந்த மூன்று ஆண்கள் பாலியல் வன்புணர்ச்சி புரிய, அவன் மயக்கமடைந்தான். திருநங்கை தனம் மருத்துவமனையில் சேர்த்து, தன்னைக் காப்பாற்றியதை அறிந்ததும் பெண்கள் மட்டுமல்ல, தன்னைப் போன்றவர்களும் இப்பாலியல் கொடுமையால் பாதிக்கப்படுவது வெளியுலகிற்கு ஏன் தெரிவதில்லை?

    ‘ஏனிந்த இழிபிறப்பு? பிறப்பு என்பது விரும்பி ஏற்க முடியாததாக இருக்க.. இப்படி பிறந்ததற்கு நானோ என்னைப் போன்றவர்களோ எப்படிப் பொறுப்பேற்க முடியும்? பிறகு ஏன் என்னைப் போன்றவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சட்டம் எல்லாருக்கும் பொது தானே… சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் என்ன?’

    என்னும் அகத்தனிமொழியின் வாயிலாக சமூகத்தினரால் புறக்கணிக்கப்படும் கிருநங்கையின் வலியை உணர முடிகிறது. பள்ளி, கல்லூரிக்குச் சென்று கல்வி கற்க முடியாத நிலை, இரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்வதால் சமூகத்தினர் ஏற்படுத்தும் அவமானம், உணவகத்தில் காலம் தாழ்த்திக் கொடுக்கப்படும் உணவு, திருநங்கையினரையே தவறாக உரைத்து வன்முறைக்கு உட்படுத்தும் காவல்துறை என வாழ்வின் பல இடங்களில் இப்பிறப்பின் சாபத்தை அனுபவிப்பதாகக் குறிப்பிடுவதில் மனவடக்கத்தையும் ஒடுக்கத்தையும்  காண முடிகிறது.

    குற்றவுணர்ச்சி:

    மனித மனம் கடந்த கால நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து தவறுக்கான காரணங்களைத் தீவிரமாக அலசுவதுண்டு. நிகழ்காலப் பிரச்சனையின் வேரைத் தேடும் மனிதனின் மனம் செய்த தவற்றினைச் சுட்டிக் காட்டுகிறது. அத்தருணத்தில் தோன்றும் உணர்ச்சியே குற்றவுணர்ச்சி. சூழ்நிலை மனிதனை முடிவெடுக்கத் தூண்டும்  நிலையில் அவன் சிந்தித்துச் சரியான முடிவை மேற்கொள்வது அவசியம். இல்லையெனில் துன்பமடைவது உறுதி என்பதைப் படைப்பாளரின் அவன்- அது அவள் புதினம் எடுத்துரைக்கிறது.

    காவல் துறையினரின் வன்முறையைத் தாங்கி, அவமானப்பட்டு மும்பைக்கு தனம், சுசீலாவுடன் பயணம் செய்ய முற்பட்ட கோமதி, தொடர்வண்டியில் பயணச்சீட்டு  பெறாமல் பயணிக்கிறோம் என்பதை அறிந்து பயந்தாள். ஒரு வயதான பெண்மணி திருநங்கை எனப் பாலியல் ரீதியாக இழிவாகப் பேச, அவமானப்பட்டாள்.

    ‘ச்சே.. என்ன வாழ்க்கை இது? ஒழுங்கா ஹாஸ்டல்லயே இருந்திருக்கலாம். சுயத்தோட வாழலாம்னு இவங்க கூட சேர்ந்த ஒரு வாரத்துக்குள்ள எத்தனை பிரச்சனைகளைச் சந்திச்சாச்சு… நிம்மதியா வாழக்கூட வேணாம்.. மனுசனாக்கூட வாழவிட மாட்டாங்க போலிருக்கே… வீட்டில் இருக்குற வரைக்கும்தான் உனக்குப் பாதுகாப்பு. உன் பாதுகாப்பு ஆயுசுக்கும் வேணும்னா… ஒழுங்கா படிச்சு பெரிய ஆளா வரணும் அப்பத்தான் நல்லது என்ற சங்கரண்ணனின் வார்த்தைகள் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைத்தது. விசும்பலாய் வெளிப்பட்டது.’

    வீட்டை விட்டு வெளியேறியதும் பட்ட துன்பங்கள், அவமானங்களால் கோமதியின் மனம் அகஸ்டின் சங்கரபாண்டியனின் அறிவுரைகளை மீறியதால் இந்நிலைக்கு ஆளானோமா? எனக்  குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவிப்பதை அறிய முடிகிறது.

    ஏமாற்றமும் தவிப்பும்:

    கோமதி, தனம், சுசீலா, சீத்தல், சுந்தரி போன்றவர்களின் வாயிலாகச் சமூகத்தில் உள்ள திருநங்கைகளின் வலியை நாவலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். கோமதி ஆணுறுப்பை நீக்கிய பிறகு இயல்பான பெண்ணின் வாழ்க்கையை ஒத்து, இல்லற வாழ்க்கையை வாழலாம் என எண்ணினாள். அன்பரசனின் மீது கொண்ட உண்மையான காதலால், நம்பிக்கையால் தனம், சுசீலா, சீத்தல் போன்ற உறவுகளின் அறிவுரையைக் கேட்காமல் அவனைக் கைப்பிடித்தாள். ஒரு வருடத்திற்கு பின் தோள்பட்டையின் இருபக்கங்களிலும் விளக்கேற்றும் அளவிற்கு இளைத்து கண்களில் பரிதவிப்புடன் நிற்கும் கோமதியைக் கண்ட சுசீலா பாசத்தால் தவித்து வினவினாள்.

    ‘சுசீலாவின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. வெளியில் சொல்ல முடியாத சோகம், பல நாட்கள் உள்ளுக்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி இருந்தாகிவிட்டது. பல நாட்கள் மனசு சரியில்லாமல் போனாலும் அழுகை வராது. கோபமும் ஆத்திரமும் வெளிவருவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும்’ என்பதில் மனத்தின் வலி வெளிப்படுகிறது. கோமதி குடும்பத்தை விட்டு வெளியேறியபின் தாயாக, தமக்கையாக இருந்த தனம், சுசீலாவின் அன்பை அறிந்தவளாக ஏமாற்றத்தில் தவித்தாள். சுசீலா அவள் நிலை அறிந்து உணவு வாங்கித் தந்தாள். பசி நீங்கிய பின் கோமதி, அன்பரசு குடித்துவிட்டு வந்து அடிப்பதாகவும் உடல் விருப்பத்தினை மட்டும் தீர்த்துக் கொள்வதாகவும் கடைகேட்டு பணம் சம்பாதித்து வருமாறு வற்புறுத்துவதாகவும் உரைத்தாள். கோமதி ஏமாந்ததை அறிந்த சுசீலா, மனம் நொந்தாள்.

    ‘இப்போது கண்ணைக் கசக்கிட்டு நிற்கும்போது மனசு வலிக்கிறது. வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத வலி. ஆணின் அடையாளத்தை இழக்கும் தருணத்தைவிட இந்த வலிக்குச்  சக்தி அதிகம். எதிர்பார்ப்பு, கனவுகள் என்ற எல்லா நம்பிக்கையையும் குலைக்கும் போது இப்படித்தான் வலியெடுக்கும். அதை உணரத்தான் முடியுமே தவிர விளக்கிச் சொல்லிவிட முடியாது’ என்பதில் வலியின் வேதனை புலனாகின்றது. குடும்பத்தினர் இழிபிறப்பாகக் கருதி, திருநங்கையினரை நிராகரிக்க, சமூகத்தினர் புறக்கணிக்க அன்பரசனின் காதல், கோமதிக்குப் பற்றுக்கோலாக இருந்தது. உடல்உறுப்பை நீக்கிப் பெண்ணாக உருமாறி, இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தவள், கணவனின் போக்கால் ஏமாற்றத்துடன் வேதனையடைந்தாள். முதலில் கணவனின் சந்தேகப் புத்தியைக் கண்டு தன்னையும் பெண்ணாகக் கருதிச் சந்தேகப்படுகிறானே என மகிழ்ச்சியுற்றாள். நாளடைவில் வன்முறை, வன்புணர்ச்சி, சந்தேகப் புத்தி எனக் கொடுமைப்படுத்தினும் கோமதி அவனை விட்டுப் பிரிய மறுக்கிறாள்.

    சுயம் தேடும் மனம்:

    பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாகவும், பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவிலேயே முதல் மாணவனாகவும் தேர்ச்சி பெற்ற கோபி, மதுரையில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்புக்குச் சேர்ந்தான். சக மாணவர்களின், ஆசிரியர்களின் ஏளனப் பேச்சு, தவறான செய்கைகள் மனத்தைத் துன்புறுத்த, வகுப்பிற்கு வராமல் நண்பன் சரவணனின் உதவியுடன் விடுதியில் இருந்தவாறே படிக்க முற்பட்டான்.

    மனம், உடல்ரீதியாக சில சிக்கல்களை அனுபவிப்பினும் கோபி கற்பதை நிறுத்தவில்லை. வாழ்வின் உயர்வுக்கு, சிறந்த வேலை பெறுவதற்குக் கல்வியின் இன்றிமையாமையை உணர்ந்து செயல்பட்டான். பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின் கோமதி, தன் மனவிருப்பத்திற்காக இயல்பாக வாழ ஒரு வாய்ப்பு என்ற நிலையில் திருநங்கை தனத்துடன் வாழ முற்படுகிறாள். எனினும் திருநங்கைகள் கடைக்குச் சென்று பிச்சை எடுப்பதற்கு அழைக்க, அவள் பணிக்குச் செல்வதாக உரைத்து மறுக்கிறாள். பிறரின் ஏளனச் சிரிப்பைக் கண்டதும் அழுதவளாக ஆதரவு தேடி தனத்தை நாடுகிறாள்.

    ‘பிச்ச எடுக்கத்தான் போகணும்னு அவங்க எல்லோரும் சொல்றாங்க. நா வேலைக்குப் போறேன்னு சொன்னதுக்கு சேர்ந்துக்கிட்டு சிரிக்கிறாங்க… எனக்கு அது புடிக்கலம்மா… நா வேலைக்கு போறேனேம்மா’ என்ற கோமதியின் சொற்களில் தன்மானம் வெளிப்படுகிறது. ஆனால் சமூகம், திருநங்கைகளுக்கு எத்தகைய வேலையும் தராமல் நிராகரிக்கும் என்ற நிதர்சனமான உண்மையை அவளே அனுபவத்தின் வாயிலாக உணரட்டும் எனத் தனம் எண்ணுகிறாள். தாய் பிச்சை எடுக்கச் செல்ல வேண்டாம் என்றுரைத்ததும் மகிழ்கிறாள்.

    அன்பரசுடனான காதலுக்காக உயிரைப் பணயம் வைத்து ஆணுறுப்பை நீக்கி, தாயின் அறிவுரையை ஏற்காமல் எதிர்த்துத் திருமணம் செய்துகொண்டாள் கணவனுக்கு வேலையில்லாத தருணத்தில் கோமதி பிச்சையெடுக்கச் செல்வதில் தன்மானம் தகர்ந்து அன்பு மேலோங்குகிறது. எனினும் கணவன் தொடர்ந்து பிச்சையெடுக்க வற்புறுத்த, சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.

    விரக்தி:

    ஒருவரது எண்ணங்கள் ஈடேறாத போதும், தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கும் போதும் மனத்தில் சலிப்பும் வெறுப்பும் உண்டாகின்றன. இத்தகைய மனநிலையே விரக்தியாகும்.

    ‘பொட்டயாப் பொறந்ததே தப்பு. அதுலையும் கல்யாணம் காட்சின்னு ஆசப்படுறது அதவிட தப்பு. பார்க்கலாம். இன்னும் எத்தனை காலத்துக்குன்னு .முடியிற வரைக்கும் சமாளிப்பேன். என்னைக்கு முடியாமப் போகுதோ. அன்னிக்கு ஏதாவது டிரெயினுக்கு முன்னால பாய்ஞ்சுடுவேன்..’ என்பதில் விரக்தியின் உச்சம் தற்கொலைக்குத் தள்ளும் என்ற உண்மை புலனாகின்றது.

    தொகுப்புரை:

    ஒரு புதினத்தின் முதன்மையான பாத்திரச் சித்திரிப்பில் மனித மனங்களின் வேட்கைகள், உயர்வு தாழ்வுகள், இலட்சியங்கள், நடத்தைகள் இடம் பெற்றிருப்பதில் உளவியலே வெளிப்படுகிறது. தான் யார்? என்பதறியாமல் துடிக்கும் இயலாமை, பாலியல் வன்புணர்ச்சியால் உடலும் மனமும் தளர்ந்து போதல், பிறப்பின் மீதான மனஒடுக்கம், குற்றவுணர்ச்சி, உறவுக்காக ஏங்கித் தவித்தல், குடும்ப அமைப்பை விரும்பி ஏமாறுதல், பெண் என்ற அங்கீகாரத்தை விரும்புதல், உயிரைப் பணயம் வைத்து ஆணுறுப்பை நீக்குதல், சமூகத்தினரின் இழிபேச்சிற்கு ஆளாகுதல், இல்லற வாழ்விற்காக தன்மானத்தைத் தகர்த்தல், வேதனையின் உச்சத்தில் தற்கொலையை நாடும் மனம் என இப்புதினம் திருநங்கைகளின் மனவுணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. சமூகத்தினரின் கேலி, ஏளனப் பேச்சிற்கு உள்ளாக்கப்பட்டு அவமானங்களையும், அநீதிகளையும் சந்தித்து மனம் துவண்டு வாழும் திருநங்கைகளின் வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம் என்ற முதன்மையான கருத்தை இப்புதினம் புலப்படுத்துகிறது.

     

    பார்வை நூல்கள்:

    1. அரவாணிகள் – முனைவர்.மு.அருணாசலம்
    2. அவன்-அது ஸ்ரீ அவள்- யெஸ்.பாலபாரதி;
    3. சங்க இலக்கியத்தில் உளவியல் – து.சிவராஜ்
    4. தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள் – முனைவர்.மு.அருணாசலம்
    5. தமிழும் பிற துறைகளும் – முனைவர்.உ.கருப்பத்தேவன்
    6. திறனாய்வுக் கலை – தி.சு.நடராசன்
    7. பெசன்ட் கிரீப்பர் ராஜ் – பிறழ்நிலை உளவியல்
    _________________________________________________________________________________________
    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
    ஆய்வாளர் இக்கட்டுரையில் திருநங்கைகளின் மனப் போராட்டத்தைச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். கோபி என்ற திருநங்கையின் வாழ்வியலை மையமாகக் கொண்டது இந்நாவல். ஒருவர் தன்னை மாற்றுப் பாலினமாக உணர்ந்து கொள்வதும்  அங்கீகரிக்க மறுக்கும் சமூக நிலையும் இக்கட்டுரையில் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. வாழ்தல் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் சமூகக் கட்டமைப்புகள் பெரும் தடையாகச் செயல்படுவதை இக்கட்டுரை எடுத்துக் காட்டுவது சிறப்பு.
    _________________________________________________________________________________________

     

    Share
  • இஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு

    இஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேலில் ஏப்ரலில் ஒன்றும் செப்டம்பரில் ஒன்றுமாக இரண்டு தேர்தல்கள் நடந்தன. முதல் தேர்தலில் நேத்தன்யாஹுவின் கட்சிக்கு 35 இடங்களும் முந்தைய ராணுவத் தளபதி கேன்ட்ஸுக்கு 34 இடங்களும் கிடைத்தன. இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மற்றக் கட்சிகளோடு சேர்ந்து அரசு அமைக்க முயன்றனர்.  இவர்களோடு சேர்வதற்கு மற்ற எந்தக் கட்சியும் ஒத்துக்கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து அரசு அமைப்பதற்கு இருவரும் இசையவில்லை.

    அதனால் செப்டம்பர் மாதம் இரண்டாவது தடவையாக தேர்தல் நடந்தது.  அதிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேத்தன்யாஹுவின் கட்சிக்கு முதல் தேர்தலில் கிடைத்ததைவிட ஒரு இடம் குறைவாகத்தான் கிடைத்தது. கேன்ட்ஸுக்கு அதே எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தன. மறுபடி மற்ற எந்தக் கட்சிகளும் இவர்களோடு அரசு அமைக்க ஒப்புக்கொள்ளவில்லையாதலால் இரண்டாவது தேர்தல் முடிவுகளுக்கும் அர்த்தமில்லாமல் போனது.

    இஸ்ரேல் ஜனாதிபதி டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு சாத்தியம் இல்லையென்றால் மறுபடி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இஸ்ரேல் சமூகம் கிட்டத்தட்ட இரண்டு பகுதிகளாகப் பிளவுபட்டிருக்கிறது.  பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு கொடுக்க வேண்டுமா என்று கேட்டால் இஸ்ரேல் மக்கள் அனைவரும் – ஒரு சிலரைத் தவிர – தேவையில்லை என்றுதான் கூறுவார்கள்.

    ஆனாலும் பாலஸ்தீனர்களுக்கு எந்த உரிமைகளும் தேவையில்லை என்று நினைக்கும் பழமைவாத, சுயநலமிக்க யூதர்கள் ஒரு பக்கமும் ஏதோ சில உரிமைகள் கொடுக்கலாம் என்று கூறும் இஸ்ரேலியர்கள் இன்னொரு பக்கமும் இருப்பதால் நாடு பிளவுபட்டிருக்கிறது. இந்த இரண்டு பக்கத்தினரிடையேயும் ஒற்றுமை இல்லாததால்  யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் அரசியல் கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    நேத்தன்யாஹு மேல் பலவித ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவரும் அவருடைய மனைவியும் பெரும் பணக்காரர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகள் வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு. அவருடைய மனைவி மேல் அடிக்கடி பிரதமர் மாளிகைக்கு வெளியிலிருந்து உணவு தருவித்ததாகத் தனியாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. வழக்கு நடந்து குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனை கிடைப்பதாக இருந்த சமயத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு 75,000 டாலர் அரசுக்குக் கொடுத்து அந்த வழக்கிலிருந்து விடுதலை பெற்றார். இஸ்ரேலில் இருக்கும் இரண்டு பத்திரிக்கைகளில் ஒன்றிற்கு லஞ்சம் கொடுத்துத் தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதுமாறு செய்தார்.

    இவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள் ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கியபோது கையூட்டு வாங்கயதாகக் குற்றம் சுமத்தப்பட்டார்கள். இன்னும் சில சிறிய குற்றங்களும் நேத்தன்யாஹு மேல் இருக்கின்றன.  இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் விசாரணைக்குத் தகுந்தவை என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இவர் அமைச்சரவையில் எந்தத் துறைப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் பிரதம மந்திரி பதவியை மட்டும் வகிக்கலாம் என்றும் ஜனாதிபதி ஆணையிட்டிருக்கிறார்.

    இந்தக் குற்றங்கள் எல்லாம் நிரூபிக்கப்பட்டு இவருக்குத் தண்டனை கிடைத்தால் தேர்தலில் ஜெயித்து பிரதமராக இருந்தாலும் இவர் பதவி விலக வேண்டும் என்பது இப்போதைய சட்டம். பிரதம மந்திரியாகி எப்படியாவது அந்தச் சட்டத்தைத் திருத்தி பிரதம மந்திரிக்கு அந்த விதியிலிருந்து விலக்களிக்க இவர் முயன்று வருகிறார்.  ஆனால் இரண்டு தடவை நடந்த தேர்தல்களிலும் இவருடைய கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    ஏப்ரல் தேர்தலுக்கு முன் சிரியாவில் ஆக்கிரமித்திருக்கும் கோலன் ஹைட்ஸை இஸ்ரேலுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் அங்கீகாரம் கிடைத்தது.  அதனால் எப்படியும் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைத்தார்.  அப்படி நடக்கவில்லை.

    மறுபடி செப்டம்பர் தேர்தலுக்கு முன் வெஸ்ட் பேங்கில் ஆக்கிரமித்திருக்கும் இடங்களை இஸ்ரேலோடு சேர்த்துக்கொண்டார். அதற்கு உலகம் முழுவதிலும் கண்டனம் எழுந்தாலும் இஸ்ரேல் மக்களிடம் ஆதரவு இருக்கும், அதனால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால், முதல் தேர்தலைவிட இதில் ஒரு இடம் குறைவாகத்தான் கிடைத்தது. இப்போது அடுத்த முறை தேர்தல் வந்தால் எப்படிப் பிரதம மந்திரியாகலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். அப்படி நடந்தால் பிரதம மந்திரி பதவியும் கிடைத்துவிடும், குற்றங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

    இஸ்ரேல் மக்கள் இவரைப் போன்று அரசியலில் ஊழல் செய்தவர்களைச் சும்மா விடக்கூடாது. இவர் எப்படியும் தேர்தலில் தோற்றுப் பிரதம மந்திரியாகும் வாய்ப்பை இழப்பதோடு சிறைக்கும் செல்ல வேண்டும். இவர் பாலஸ்தீனர்களுக்கு எதிராக எத்தனையோ அநியாயங்கள் புரிந்திருக்கிறார்.

    ஆஸ்லோ ஒப்பந்தம் முழுவதுமாக முறிந்து போனதற்கு இவர்தான் முழுக் காரணம். அதை அன்றைய அரசு உண்மையாக நிறைவேற்றியிருந்தால் பாலஸ்தீனர்களுக்கு ஓரளவு நியாயம் கிடைத்திருக்கும். இவர் தொடர்ந்து பிரதம மந்திரி பதவி வகித்து அவர்களுக்குப் பல அநீதிகளை ஒவ்வொன்றாக இழைத்தார்.  பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு கிடைக்கும் என்ற அவர்களுடைய கனவையே முழுவதுமாகக் குலைத்துவிட்டார்.

    இவரைப் போன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்காவிட்டால் உலகில் நீதி செத்துவிட்டதாகத்தான் அர்த்தம்.

    Share
  • ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

    ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    இனி எங்கும் செல்ல முடியாது .
    ஆணி அடித்த பூமி எல்லா புறமும்
    மேலே நீலக்கூரை நாலா பக்கமும்
    வந்து வெளியில் வீழ்ந்து விட்டோம்
    இல்லாத கரையில் நீச்சல் மட்டும் நிதம் நடக்க
    பொல்லாத மனம் பொங்கிப் பொங்கி தினம் வழியும்
    தேடி ஒன்றில் லயிக்காமல்
    அடுத்தடுத்து ஓடும் ஆட்டமதில்
    நிற்பதற்கும் நேரமில்லை – கடக்கவும் முடியவில்லை
    என் மூச்சை யாரோ விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    Share
  • குறளின் கதிர்களாய் – 278

    செண்பக ஜெகதீசன்

    சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்

    வறுமை தருவதொன் றில்.

                                         – திருக்குறள் -934 (சூது)

     

    புதுக் கவிதையில்…

    இதனை விரும்பி

    ஏற்றுக் கொள்வோர்க்கு,

    இதுவரை இல்லாத

    இன்னலெல்லாம் தந்து

    இருக்கும் பெருமையையெல்லாம்

    இல்லாததாக்கும்

    இந்தச் சூதினைப்போல்

    வறுமை கொடுப்பது

    வேறொன்றுமில்லை…!

     

    குறும்பாவில்…

    விரும்பி ஏற்றிடுவோர்க்குத் துன்பந்தந்து,

    இருந்த பெருமையும் அழித்திடும் சூதினைப்போல

    வறுமை தரவல்லது வேறில்லை…!

     

    மரபுக் கவிதையில்…

    விரும்பியே யிதனை மேற்கொள்வோர்

    விரும்பா வகையில் பற்பலவாய்

    வருந்தச் செய்யும் துன்பமதை

    வழங்கிக் கெடுத்தே யிதுவரையில்

    இருந்த பெருமை யாவையுமே

    இலாம லாக்கும் சூதினைப்போல்

    திருவிலாத் தீதாம் வறுமையதைத்

    தந்திட வல்லது வேறிலையே…!

     

    லிமரைக்கூ..

    ஈடுபடில் இன்பமழிக்கும் ஈது,

    இருக்கும் பெருமையெல்லாம் அழித்துவிடும்

    இல்லாத வறுமையேதரும் சூது…!

     

    கிராமிய பாணியில்…

    ஆடாத ஆடாத

    சூதாட்டம் ஆடாத,

    சோகத்தக் கொடுக்கும்

    சூதாட்டம் ஆடாத..

    விரும்பி அதுல

    ஈடுபடுபவுனுக்கு

    இதுவர இல்லாத

    துன்பமெல்லாம் சேந்துவரும்,

    இருந்த பெருமயெல்லாம்

    இல்லாம அழிஞ்சிபோவும்..

    இந்தச் சூதுபோல

    வறுமயத் தாறது

    வேற எதுவுமேயில்ல..

    அதால

    ஆடாத ஆடாத

    சூதாட்டம் ஆடாத,

    சோகத்தக் கொடுக்கும்

    சூதாட்டம் ஆடாத…!

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 84

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 84

    நாங்குநேரி வாசஸ்ரீ

    84. பேதைமை

    குறள் 831:

    பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
    டூதியம் போக விடல்

    பேதைமைங்கது என்னன்னு கேட்டா நமக்கு நல்லது செய்யுதத விட்டுப்போட்டு தீம தருதத ஏத்துக்கிடதுதான்.

    குறள் 832:

    பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
    கையல்ல தன்கண் செயல்

    பேதைமையிலெல்லாம் பெரிய பேதைமை னு சொல்லப்படுதது தன்னால ஏலாத தனக்கு நன்ம தராத காரியத்த ஆசப்பட்டு செய்யுதது தான்.

    குறள் 833:

    நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்

    வெக்கப்பட வேண்டிய நேரத்துல வெக்கங்கெட்டு அலையுததும், தேடிப் பெற வேண்டியதுல நாட்டமில்லாம இருக்கதும், நேசம் காட்ட வேண்டிய எடத்துல நேசமில்லாமயும் , காக்க வேண்டியத காவாம இருக்கதும் புத்திகெட்ட பேதைங்களோட கொணம்.

    குறள் 834:

    ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையிற் பேதையார் இல்

    படிச்சுப்போட்டு தான் படிச்சத உணந்து பொறத்தியாருக்கு எடுத்துச்சொல்லி இருக்கவங்க தங்க வாழ்க்கையில அத கடைபிடிக்காம உட்டாகன்னா அவுகளப் போல கூறுகெட்ட பேதையர் இருக்க முடியாது.

    குறள் 835:

    ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
    தான்புக் கழுந்தும் அளறு

    புத்திகெட்டவன் தன்னோட ஒரு பொறப்புலயே அடுத்தடுத்து ஏழு பொறப்புலயும் பொறந்து அனுவிக்குத அளவு நரக வேதனய அனுவிப்பான்.

    குறள் 836:

    பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்

    நேர்மையான பாத தெரியாத கூறுகெட்டவன் தொடங்கின காரியத்த முடிக்க ஏலாம காரியத்தையும் கெடுத்து தானும் கெட்டு அழிவான்.

    குறள் 837:

    ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
    பெருஞ்செல்வம் உற்றக் கடை

    புத்திகெட்டவன்கிட்ட பணம் குவிஞ்சிச்சின்னா அத அயல் மனுசங்க சுருட்டிக்கிட்டுப் போவாகளே தவித்து அவன்கிட்ட பாசமா இருக்க சொந்தபந்தம் பசியால தான் வாடும்.

    குறள் 838:

    மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
    கையொன் றுடைமை பெறின்

    நல்லதுகெட்டது தெரியாத பேதைகிட்ட பொருள் கெடச்சிச்சின்னா அது கோட்டிக்காரன் கள் குடிச்சு மயங்குதது கணக்கா ஆவும்.

    குறள் 839:

    பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
    பீழை தருவதொன் றில்

    புத்திகெட்ட பேதைகிட்ட வச்சிருக்க சேக்க ரொம்ப இனிமை. ஏம்னு கேட்டா அவுககிட்டேந்து பிரிஞ்சு போகுத நேரம் வெசனப்பட வேண்டியதில்ல.

    குறள் 840:

    கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
    குழாஅத்துப் பேதை புகல்

    படிச்ச புத்திசாலி பெரிய மனுசங்க இருக்க சபையில கூறுகெட்ட பேதை நொழையுதது ஒருத்தன் கழுவாத கால படுக்க மேல வச்சது கணக்கா ஆவும்.

    Share
  • ஓட்டம்

    ஓட்டம்

    ரா. திவ்யா, பொள்ளாச்சி
    கோலாகல மனங்களின்
    கூதிர்கால சாரல்கள்
    மனித ஓட்டங்கள்
    எண்ண முடியாத
    பிம்பத் தளிர்களாய் மாறி
    நிசப்தத்தை மாற்ற
    நீரோடைகளாக…
    சிக்கலின் பின்னல்களின்
    வாழ்க்கை!
    போராட்டங்களைப்
    புதிர்களாய்
    வெற்றியைப் பதித்துவிட
    ஓடுகிறான்!
    சோதனையைத் தாண்டி
    சாதனையாக்க!
    Share
  • பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின்  யோகப்பயிற்சிகள் – ஓர் ஆய்வு

    பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் – ஓர் ஆய்வு

    கு.பூங்கொடி, முனைவர் பட்ட ஆய்வர், 
    யோகமும் மனித மாண்பும் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை                            
    
    முனைவர் பெ. சுந்தரமூர்த்தி, நெறியாளர், 
    யோகமும் மனித மாண்பும் துறை, விஷன்ஸ்கை ஆராய்ச்சி மையம் ஆழியாறு, பொள்ளாச்சி

    சுருக்கம்

    மாணவப் பருவம் என்பது கற்கும் பருவம். கல்வி என்பது அறிவையும் மற்றும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ள வழி செய்கிறது. மாணவர்கள் தம்மை செம்மைபடுத்திக் கொள்ள ஏற்ற இடமாகக் கல்விக் கூடம் அமைகிறது. மாணவர்களுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். பிற செல்வங்கள் அத்தகைய சிறப்புக்குரியவை ஆகாது. இதையே வள்ளுவ பெருந்தகை

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

    மாடல்ல மற்றை யவை. (குறள் 400) எனப் பகர்கிறார்.

          இன்றைய மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கமும், நற்பண்புகளும், நன்னெறிகளும் கூடிய ஆளுமைத்திறனே தேசத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும். தற்போதைய கல்வி முறையில் யோகப்பயிற்சிகள் பள்ளியிலே கற்றுத் தருவதன் மூலம் மாணவர்களின் உடலும், மனமும் மேம்பட்டு, ஒருமுகப்பட்டு, சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கும். கல்வியில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் மாணவ சமுதாயத்தின் தனிநபர் முன்னேற்றம் சமுதாய முன்னேற்றமாக மிளிரும்.

    கலைச் சொற்கள் : காயம், கல்பம், அலைச்சூழல், உயிர்வளம்

    முன்னுரை

    மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம், சிந்தனைக்கு ஏற்றபடி சிறகடித்து, வாழ்வை வளமாக்கும்; பருவம். உலக அரங்கில் இந்தியா நல்லரசாக மாற இன்றைய இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். எனவேதான் நமது அன்புக்குரிய டாக்டர் அப்துல்காலம் அவர்கள் “கனவு காணுங்கள்” என்கிறார்.

    கல்விக்கூடம்  மாணவர்களைச் செதுக்கும் கலைக்கூடம். வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் கற்றுக் கொள்ளாமல், கல்வியுடன் கூடிய ஒழுக்க நெறிகள், ஆளுமைப் பண்புகள், தனித்திறன் மேம்படுத்துதல் ஆகியன மாணவ முன்னேற்றத்திற்கு அவசியமாகின்றன.  ஆசிரியர்கள் மாணவர்களிடம்  உயர்வு தாழ்வு பாராமல் வாழ்வியல் விழுமியங்களை  உணர்த்துகிறார்கள்.

    மாணவர்களுக்கு ஒரே மாதிரி பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பள்ளிப் பருவ இறுதியில் நடக்கும் தேர்வில் பெரும்பாலோர் வெற்றி பெறுகின்றனர். சில பேர் குறைவான மதிப்பெண் பெறுவதும், ஒரு சிலர் தோல்வியைத் தழுவியதையும் பார்க்கிறோம். இதன் அடிப்படையை ஆராய்ந்தால் தேர்வின் போது மாணவர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடு, மன ஒருமைப்பாடு இன்மை, நினைவாற்றல்  திறன் குறைபாடு  ஆகியவற்றில் ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம்.

    எதுவாயினும் அதற்கான தீர்வைக் கண்டாக வேண்டும். அதைப் போக்க யோகப் பயிற்சிகள் உதவியாக இருக்குமா? என ஆராயப்படுதல் வேண்டும்.

    வேதாத்திரி மகரிஷியின் யோகப் பயிற்சிகள்

    யோகம் என்பது உடலோடு மனம் இணையவும், மனதோடு உயிர் இணையவும், சமுதாயத்திற்கும், இயற்கைக்கும் இனிமை காக்கவும் வேண்டும். இதற்கு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் எளியமுறை யோகப் பயிற்சிகள் உறுதுணையாக இருக்கின்றன. உடலுக்கு உடற்பயிற்சியும், மனதிற்கு அகத்தவப்பயிற்சியும் உயிருக்குக் காயகல்பப் பயிற்சியும் கற்றுத் தரப்படுகின்றன.

    உடல் நலம் காக்க எளிய முறை உடற்பயிற்சி

    தினந்தோறும் எளியமுறை உடற்பயிற்சியைச் செய்வதால், உடலில் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் அனைத்து உறுப்புகளும் நலம் பெறுகின்றன.

    இப்பயிற்சியில் மொத்தம் 9 நிலைகள் உள்ளன. அவை

    1. கைப்பயிற்சி
    2. கால்பயிற்சி
    3. நரம்பு தசை நார் மூச்சுப் பயிற்சி
    4. கண்பயிற்சி
    5. கபாலபதி
    6. மகராசனம்
    7. உடம்பைத் தேய்த்து விடுதல்
    8. அக்குபிரஷர்
    9. உடம்பைத் தளர்த்துதல் – ஓய்வு தரும் பயிற்சி ஆகியன ஆகும்.

    பயன்கள்

    1. உடலின் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், காந்த ஓட்டம் மற்றும் உயிரோட்டம் ஆகியன சீர்படுத்தப்படுகின்றன.
    2. நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது.
    3. முடிவெடுக்கும் திறன் மற்றும் மன ஒருமைப்பாடு அதிகரிக்கின்றன.
    4. உடல் நலம் மற்றும் மனம் நலம் மேம்படுகிறது.

    மன வளம் காக்கும் அகத்தவப் பயிற்சிகள்

    தவத்தின் போது புலன்களின் இயக்கம் குறைந்து விடுவதாலும், எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கின்ற மனத்தை ஒருமுகப்படுத்துவதாலும், உயிர் ஆற்றலின் செலவு தவிர்க்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.

    மன அலைச்சூழலானது நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது அவையாவன.

    1. பீட்டா
    2. ஆல்பா
    3. தீட்டா
    4. டெல்டா

    இதில் பீட்டா அலையானது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். இந்நிலையில் மனம் ஒருவிதப் பதற்றத்துடன் காணப்படும். பெரும்பாலான நேரங்களில் மனம் இந்த நிலையில் இருக்கும். அகத்தவப் பயிற்சியால் மனம் படிப்படியாகக் குறைந்து ஆல்பா நிலைக்கு வரும். இந்த நிலையில் மனம் அமைதியாகச் செயல்படும். மாணவர்கள் அகத்தவப் பயிற்சியை மேற்கொண்டு மனதை அமைதி நிலையில் இருத்தி பாடங்களைப் படித்தால் நன்றாக மனதில் பதிவு ஆவதோடு,  தேவைப்படும் போது எளிதில் நினைவுக்கு கொண்டு வந்து பயன்படுத்த முடியும்.

    பயன்கள்

    1. நினைவாற்றல் மேம்படுகிறது
    2. மன நிறைவு மற்றும் தன்னம்பிக்கை கிட்டுகின்றன.

    உயிர்வளம் காக்கும் காயகல்பப்பயிற்சி

    “காயம்” என்பது உடல். “கல்பம்” என்பது உறுதி.இப்பயிற்சியைத் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது 40 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பின் மனித குலத்திற்கு அளித்துள்ளார். உயிரின் வளமே மன நலம் ஆகும். இப்பயிற்சியில் உயிர்சக்தியின் வளத்தை அதிகரிக்கிறோம். இதனால் உடல், மனம் பாதிப்புகள் நீங்கி உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் விளங்கும்.

    பயன்கள்

    1. மாணவ ஒழுக்கத்திற்கு உறுதுணையாக உள்ளது.
    2. முதுமையைத் தள்ளிப் போடலாம்.
    3. படிப்பில் கவனம் மேலோங்கும்.

    ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வி

     “உயிர்களுக்குத் துன்பம் தரா உயர்ந்த செயல் ஒழுக்கமாகும்”.கல்வியில் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும்; கற்பிக்கப்படல் வேண்டும். அன்பும், பண்பும் மாணவர்கள் மனதில் உள்ளுணர்வாக வெளிப்பட வேண்டும்.

    ஒழுக்கமும் ஈகையும்

    ஒழுக்கமும் ஈகையும் உளத்தில் கொண்டால்

    உயர்ந்துகொண் டேஇருக்கும் அறிவுச் செல்வம்.

    அழுக்காறு அவாவெகுளி, வன்சொல் இன்றி

    அன்பூறும்; பண்பாட்டின் எடுத்துக் காட்டாய்

    வழுக்காத பேரறிவில் வாழ்க்கை செய்ய,

    வளர்த்தறிவை இறைநிலையோ டிணைப்ப தற்குப்

    பழுக்கும்வாறு எண்ணம்சொல் செயல்க ளெல்லாம்

    பழிச்சுமையை நீக்கும்அருள் ஆற்ற லாகும்.

    ஞானக் களஞ்சியம் -1 பா.எண்-457  ப.எண்-168

    முடிவுரை

    ஒவ்வொரு மாணவரும் தமது உடலை, மனதை மற்றும் உயிரை உயர்த்தும் பயிற்சிகளை முறையாக கற்றுக்கொண்டு தன்னுடைய கல்வித்திறனை மேம்படுத்தி சமுதாய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். கல்வியினால் வாழ்வில் வளம் துய்த்து நாட்டிற்கும், வீட்டிற்கும் தொண்டாற்றும் கடமையுணர்வை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். வருங்கால சந்ததியினர் வளமுடனும், நலமுடனும் வாழ இப்பயிற்சிகள் உறுதுணையாக இருக்கும்.

    துணை நூல்களும், வலைதளங்களும்

    1. தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி, எளியமுறை உடற்பயிற்சி, வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரி பதிப்பகம் , 6 ஆம் பதிப்பு 2006
    2. வேதாத்திரி மகரிஷி, காயகல்பம், முதல் பதிப்பு ,வேதாத்திரி பதிப்பகம் , 2005.
    3. வேதாத்திரி மகரிஷி, குணநலப் பேறும் சமுதாய நலனும் ,ஆன்மிக மற்றும் உள்ளுணர்வு கல்வி நிலையம் 6 ஆம் பதிப்பு, ஆகஸ்டு 2005
    4. வேதாத்திரி மகரிஷி, உடல், உயிர், மனம் தொகுப்பு, ஆன்மிக மற்றும் உள்ளுணர்வு கல்வி நிலையம் ,வேதாத்திரி பதிப்பகம் 3 ஆம் பதிப்பு.
    5. வேதாத்திரி மகரிஷி, ஞானக்களஞ்சியம் பகுதி-1 ,, வேதாத்திரி பதிப்பகம் ,1991.
    6. www.vethathiri.edu.in

     

    ____________________________________________________________________________________________

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வேதாத்திரி மகரிஷியின்  யோகப்பயிற்சிகள் எவ்வாறு உதவும் என்பதை விளக்குவதாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களுக்கு மனதளவில் ஏற்படக்கூடிய சிக்கல்களை விளக்கி வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் அவற்றைப் போக்க எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதை கட்டுரையாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். சான்றாதாரங்கள் அடிப்படையிலும் விவாதங்களின் அடிப்படையிலும் ஒரு ஆய்வுக்கட்டுரைக்கு உரிய தன்மையோடு இல்லாமல் பொதுக்கட்டுரையாகவே இக்கட்டுரை உள்ளது. கள ஆய்வின் வழியாக மாணவர்களின் சிக்கல்களைப் பதிவுசெய்து சிக்கல்களைப் போக்கக்கூடிய வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லி அதன் முடிவுகளை ஆய்வு முடிவாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுமாயின் சிறந்த ஆய்வுக்கட்டுரையாகத் திகழும். 

    ____________________________________________________________________________________________

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2

      மீனாட்சி பாலகணேஷ்
    
    

    (சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்)

    பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியத்தின் பல பருவப்பாடல்களும் பலவிதமான சுவைகளைத் தம்முள் கொண்டு பொலிவன. தமிழ் நயம், எதுகை, மோனை அமைப்பு, வண்ணம், தொன்மங்கள், தலபுராணக் கதைகள் எனப் பலவிதமான நயங்களையும் நாம் இவற்றில் கண்டு இன்புறலாம்.

    சிறுதேரை உருட்டி விளையாடும் முருகனைப் பற்றி எண்ணுங்கால், ஒரு புலவரின் கற்பனை தேரில் பல செயல்களைச் செய்தவர்களைப் பற்றி விரிகிறது. தேரினைப் பற்றியே கருத்துக்கள் குவிகின்றன.

    ஒரு தேரின் அச்சு முறித்தவன் விநாயகப் பெருமான். முப்புரங்களையும் அழிக்கும் போருக்குச் சிவபிரான் புறப்பட்டகாலை முதலில் விக்கினங்களை அழிக்கும் விநாயகரை வணங்கிச் செல்லாததனால் அவர் சினம்கொண்டு சிவபிரானுடைய தேரின் அச்சினை முறியுமாறு செய்தார். பின்பு விநாயகப்பெருமானை வணங்கினார் சிவபிரான். தேரும் சரியானது; தேரின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கடவுள் அமர்ந்து திரிபுரசங்காரத்திற்குத் தம் பங்கை அளிக்க, அந்தத் தேரினைச் செலுத்தும் சாரதியாக பிரம்மன் அமைந்தான். சிவபிரானோ அத்தேரில் நின்று நகைத்தான்; நகைப்பினாலேயே புரங்களை எரித்தழித்தான்.

     இது இவ்வண்ணம் இருக்க, திருமால் என்ன செய்தான் எனக் காணலாமா? அவன் கிருஷ்ணனாக அவதாரம் செய்த காலத்து, பாரதப்போரில் அருச்சுனனின் தேருக்குச் சாரதியாய் அமைந்தான். பிரம்மாஸ்திரம் அருச்சுனனை அழிக்க வந்தக்கால், அதனின்று அவனைத் தப்புவிக்க, தேரினைத் தனது காலால் ஒரு அழுத்து அழுத்தினான். அருச்சுனன் தலையைக் குறிவைத்து விடப்பட்ட பிரம்மாஸ்திரம் பயனின்றிப் போயிற்று. இது தேரில் திருமால் செய்த செயல்.

    இவ்வாறெல்லாம் செயல்கள் செய்தோரான விநாயகப்பெருமான், சிவபிரான், திருமால் ஆகியோர் போற்றுமாறு சித்தர்கிரி முருகா, நீ தேரினை உருட்டுவாய்! என வேண்டும் பாடலிதுவாம்!

                                 தேரின் அச்சு முறித்தானும் தேரைக் கடவ அமைந்தானும்

                                 தேரில் நின்று நகைத்தானும் தேரை அழுத்திக் காத்தானும்

                                  ……………………………………………………………….

                                  …………………. சித்தர்கிரிக் கந்தா சிறுதேர் உருட்டுகவே1

    சித்தர்கிரி முருகன் பிள்ளைத்தமிழில் இந்த இனிய பாடலைக் காண்கிறோம்.

    ***

    வேறொரு அடியாருக்கு இந்தக் கடல்சூழ் உலகமே முருகன் உருட்டி விளையாடும் தேராகக் காட்சியளிக்கின்றது.

    ‘பூவுலகினைச் சூழ்ந்துள்ள கடல்களையே தேரின் சக்கரங்களாக அமைத்தும், புவியினை உட்காரும் இடமாகிய அடித்தட்டாகக் கொண்டும், பனிபடர்ந்த இமயமலை முதலான மலைகளைத் தேர்க்கால்களாக்கியும், ஏழு மேலுலகங்களையும் மேல்தட்டுகள் என அமைத்து அத்தேரினை அழகுசெய்யும் கொடுங்கைகளாக எட்டுத் திசைகளையும் வைத்தும், மேலே மூடுதுணி எனப்படும் அகலமான விதானமாக சுவர்க்கத்தை வைத்தும், தேரின் உச்சிமேல் சிகரமாக தொன்மறைகளை வைத்தும் பிரமனை அத்தேரின் பாகனாகக் கொண்டும், உலகு எனும் ஒரு தேரினைச் செய்து விளையாடும் செல்வனே, நீ உனது சிறுதேரினையும் உருட்டியருளுக!’ என முருகனை எல்லாம் வல்ல இறையாகக் கண்டு குழந்தையாகவும் கொண்டு அமைக்கப்பட்ட அழகிய பாடலிதுவாகும்.

                                             தாரணியைச் சூழ்ந்தலை சாகரங்கள் தம்மையே

                                                       சக்கரங்க ளெனவ மைத்துத்

                                             தடமாரும் புவிதனைத் தங்குமிட மாமடித்

                                                       தட்டெனவே கொண்டு …………….

                                                       ……………………………………………………

                                              சீரணியுந் தேரெனச் செய்துவிளை யாடிடுஞ்

                                                        செல்வதே ருருட்டி யருளே

                                                …………………………………………………2

    ***

    முருகன் உருட்டும் சிறுதேர் உருள உருள, வேறு என்னவெல்லாம் உருளுகின்றது என அடியாரின் அன்பு உள்ளத்தில் எண்ணங்களும் உருண்டு விரிகின்றது. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சென்னை மாநகர்க் கந்தசுவாமிபேரில் பாடிய பிள்ளைக்கவி இதுவாகும்.

    மனவலிமை படைத்தவர்களின் உள்ளத்தில் ஒழுக்கம் நிறைந்துள்ளது (உருளுகிறது). அவர்கள் வாக்கில்  ‘சரவணபவ’  எனும் இருமூன்றெழுத்தாகிய ஆறெழுத்துச் சொல் புரள்கிறது (உருளுகிறது). கரத்தில் இறைவனின் பெயரை உச்சரிக்கும்தோறும் படிகமணிமாலைகள் உருளுகின்றன. வானில் நிலவானது உருண்டு வலம் வருகின்றது.

    பொல்லா அரக்கரின் உடலங்கள் போர்க்களத்தில் மடிந்து உருளுகின்றன; புலவர்களின் வறுமைநோய் தீருகின்றது- (புறத்து உருளுகிறது); தேவர்களின் துயரங்கள் அனைத்தும் அரக்கர்களின் உடல்கள் இறந்து உருளும்போது தீர்ந்துவிடுகின்றன (புரத்து உருள).

    கல்வியறிவற்ற கயவர்களின் கொடும் கண்ணீர் அருவி தாம் படும் அல்லல்களால் ஆற்றாமையில் திரண்டு வழிகின்றது (உருள்கிறது). விருப்பத்துடன் திருநீற்றினை அணிந்த உன் அடியார்களின் களிக்கும் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் முத்துக்கள்போன்று உருள்கின்றது.

    சென்னைக் கந்தகோட்டத் தலைவனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டுக என வேண்டும் பாடல்.

                                                  வல்லா ருளத்தில் குறியுருள

                                                            வாக்கில் இருமூன் றெழுத்துருள

                                                  மலர்மென் கரத்தில் மணியுருள

                                                            ………………………………………..

                                                  கல்லா மனத்துக் கயவர்கொடும்

                                                            கண்ணீர் அருவி கரைந்துருளக்

                                                  ……………………………….

                                                            ……… பொழிற்சென் னையிற்றலைவா

                                                  சிறுதே ருருட்டி அருள்வாயே

                                                             ………………………………………3

    ‘உருள’ எனும் சொல்லினை ஒவ்வொரு வரியின் ஈற்றடியாகவும் வெவ்வேறு தொடர்புகளில் அமைத்துப் பாடப்பட்ட அருமையான சுவைமிகு பாடலிது.

    (சென்னை மாநகர்க் கந்தசுவாமிபேரில் பிள்ளைக்கவி- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

                                                                                                       ***

    திருமால் மீதான சில பிள்ளைத்தமிழ் நூல்களின் நயத்தையும் காணலாமா?

    பத்திராசல இராமச்சந்திரன் பிள்ளைத்தமிழின் சிறுதேர்ப்பருவப் பாடலொன்று சந்தநயம் செறிந்தும் பொருள்நயம் செழித்தும் அழகான தொன்மங்களை விளக்கியும் அமைந்துள்ளது கருத்தினைக் கவரும். ‘உருட்டிய’ எனும் சொல்லைப் பல கருத்துக்களில் அமைத்துக் கொண்டு கவிதையைச் சுவையாக்கித் தந்துள்ளார் புலவனார்.

    ‘ஓசைமிகுந்த அலைகளைக்கொண்ட கடல் எனும் சேலையை உடுத்திக்கொண்டிருப்பவள் நிலமடந்தை; அவளுடைய திலகமணிந்த முகங்களாக விளங்கும் எட்டுத்திசைகளிலும் பாதாளத்திலும் மேகங்கள் உலவுகின்ற மேலுலகமாகிய சுவர்க்கத்தின்மீதும் எனும் பத்து திசைகளிலும் வேகமாகத் தனது தேரினை ஓட்டியதால் தசரதன் எனப் பெயர் படைத்த மன்னனின் அருமை மனைவி கைகேயி ஆவாள். அவன் ஒரு போரில் தேர் செலுத்தியபோது அதன் அச்சு முறிந்ததனால், அவள் வளையல்களணிந்த தனது கையையே தேரின் இசை அச்சில் பொருத்தி அதனை சரியாக ஓடச் செய்தாள். அவளுடைய புதல்வனான இராமனே! பத்திரகிரி இறைவனே! சிறுதேர் உருட்டுக,’ என வேண்டுவதாக அமையும் பாடல். உருட்டிய எனும் சொல்லைப் பலவிதங்களில் கையாண்டுள்ளது சுவைபட அமைந்துள்ளது.

                                            நீர் உருட்டிய தெழிப்பார் முரிதரங்கத்தின்

                                                      நிரைகடல் கலைஉடுத்த

                                            நிலமகள் மணித்திலக முகமான எண்திசையும்

                                                       …………………………………

                                            கார் உருட்டிய ஒலிப்பொன் உலக மீதினும்

                                                       கடிது சென்றிடு திறத்தால்

                                            …………………………………………………

                                                      ஏர் உருட்டிய கேகயன்…………………………..

                                            இன்பமெய்ப் புதல்வி ஆகி

                                                       இசை அச்சு……………………………….

                                           தேர் உருட்டினள் புதல்வ! பத்திரகிரிக்கு இறைவ!

                                                       சிறுதேர் உருட்டியருளே!

                                            ………………………………………………4

    ***

    வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழின் பாடலொன்று, தேருருட்டும் சிறுகுட்டனான வைகுந்தநாதன் இராமனின் கதையையே அருமையாக உள்ளடக்கிக் கொண்டு திகழ்கிறது. இதிலுள்ள பத்துப் பாடல்களுமே ஒவ்வொரு இராமாயண நிகழ்வையும் சுவைபட உட்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.

    விண்ணிலுறையும் தேவர்கள், மறையோராகிய முனிவர்கள், தவம்செய்வோர் ஆகிய அனைவரையும் காக்க எண்ணங்கொண்டு  மனுவின் குலத்தில் அவதரித்தவன் இராமபிரான். இதனால் இராமாவதாரம் கூறப்பட்டது; அவன் குரங்குகளின் படையைக்கொண்டு ஒரு அணையைக்கட்டி உவரிக்கடலைக் கடந்து அப்புறம் சென்று காவல்மிகுந்த மதில்களைக்கொண்ட இலங்கைநகரில் உறைகின்ற அரக்கர்களைக் கொன்றான். பின்பு மிதிலைநகரின் மடமானாகிய சீதையுடன் புட்பக விமானத்தில் ஏறி தனக்கு உரிமையுள்ள நாட்டை (அயோத்தி) வந்தடைந்தான்; பின்பு அரசுரிமையை ஏற்றுக்கொண்டான் என்று முழுமையான இராமாயண காதையும் இதில் இரத்தினச் சுருக்கமாகக் கூறப்பட்டது.

    அவன், திருமகளுக்கும் புவிமகளுக்கும் கணவனகிய திருமாலே, சிறுதேரை உருட்டுயருளுக எனும் பாடலிது.

                                                 மாகத் தமரும் புத்தெளிர்

                                                             மறையோர் தவத்தர் தமைக்காத்து

                                                  …………………………………….

                                                             மனுவின் குலத்தி லவதரித்தே

                                                  யூகப் படைகொண் டணைதிருத்தி

                                                             யுவரிக் கடலப் புறமெய்தி

                                                ……………………………………………

                                                             வேக முடன்புட் பகமெய்து  

                                                  மிதிலை மடமான் தன்னுடனே

                                                             மேவிப் பதிவந் தரசுரிமை

                                                  விருப்புற் றளிக்கும் காகுத்தன்

                                                             ………………………………..

                                                 கொழுநன் தடந்தே ருருட்டுகவே5

    வித்தாரகவிஞர்களாகிய புலவர்பெருமக்கள் பலவித அழகிய உத்திகளைக் கொண்டு பாடல்களைப் படைத்துள்ள நயம் சிந்தைக்கு விருந்தாகிறது.

                                                                                               ***

    திருமாலின் அடியார்கள் இராமாயணக் காதைகளின் சிறப்பான கதைகளைத் தாமியற்றியுள்ள பிள்ளைத்தமிழ் நூல்களில் அழகுபடப் புகுத்தியுள்ளமை நயக்கத்தக்கதாகும்.

    ‘எனக்கு மன்னன் தசரதன் இருவரங்களைத் தந்துள்ளான்; குறையாத வளம்பொருந்திய கோசலநாட்டினை ஒருகோலோச்சி பரதனே நாடாளுவன் என்பது ஒன்று; இராமனாகிய நீ சென்று காடாளச்செல்லவேண்டும் என்பது மற்றொன்றாகும்,’ எனச் சிற்றன்னையாகிய கைகேயி கூறியதன்படி, மலர்களைச் சூடிய கூந்தலாள் சானகியுடனும் கூடப்பிறந்த இளவலாகிய இலக்குவனுடனும் கொதிக்கும் பரல்கற்களையுடைய கொடும் கானகத்தை அடைந்தபோதும் செந்தாமரைபோல் மலர்ந்த திருமுகம் படைத்த செல்வனே உனது சிறுதேரினை உருட்டுக!

                                               தந்தா னெனக்கு வரமிரண்டும்

                                                          தலைநாளுரைத்த சொற்படிக்குன்

                                              தகப்பன் புரன் முறை தருமந்

                                                          தழைப்பஒரு கோலோச்சியெங்கும்

                                              நந்தா வளமைப் பரதனிந்

                                                          நாடாளுவன் நீகாடாள

                                              நடவென்று ரைக்க சிற்றவைசொல்

                                                         ……………………………………………..

                                              கொந்தார் குழவி சனகியொடுங்

                                                        கூடப்பிறந்த இளவலொடுங்

                                                ………………………………………………………….

                                             செந்தா மரைப்போற் றிருமுகத்துச்

                                                        செல்வா …………………………………………

                                             தென் பேரையில் நங்குலநாதன்

                                                        ……………………………… தேருருட்டுகவே6.

    இந்நூலாசிரியர் கம்பனின் இராமகாதையால் கவரப்பட்டவர் என உய்த்தறியலாம். ஏனெனில் இராமனின் திருமுகம், கைகேயியின் இச்சொற்களைக் கேட்டும் அன்றலர்ந்த தாமரையினை ஒத்து மலர்ந்தவண்ணமே இருந்தது என்பது கம்பனின் கற்பனையே! (ஸ்ரீ குழைக்காதர் பிள்ளைத்தமிழ்)

                                                 இப்பொழுது எம்மனோரால்

                                                        …………………………..

                                                 செப்பரும் குணத்து இராமன்

                                                        திருமுகச் செவ்வி நோக்கில்

                                                         ………………………………

                                                 அப்பொழுது அலர்ந்த செந்தா

                                                        மரையினை வென்றதம்மா7!

    ***

    கவி காளருத்திரர் இயற்றியுள்ள அழகர் பிள்ளைத்தமிழ் இன்னொரு இராமாயண நிகழ்வைக் கண்முன் விரிக்கின்றது.

    இராம இராவண யுத்தத்தில் இந்திரன் தனது தேரினையும் அத்தேரை திறம்படச்செலுத்தும் தேரோட்டியான மாதலியையும் இராமனுக்குத் தேரோட்ட அனுப்பி வைக்கிறான். அத்தேர் விரைந்து போர்க்களத்திடை சென்றபோது:

    கடலின் அலைகள் மிகுதியாகப் பொங்கி இருகரைகளிலும் நீரை வீசின; கடலிலுள்ள சுறாமீன்கள் கதறலாயின; இராமனின் அம்புகளின் விசையினால் உண்டான தீயில் புனல் வறண்டு வற்றிப்போனது. நீண்ட கடலில் ஆழித்தேர் நெருப்பினைப்போல் புகுந்து அழிவை உண்டுபண்ணியது; இராமனின் வெற்றியினால், இத்துணை நாட்களாக அணுகவும் அஞ்சியிருந்த இலங்கைநகரினுள் ஆதவனின் தேர் புகுந்து சென்றது; கொலை அரக்கப்படைகளின் உடல்கள் வெம்மைபொருந்திய மலைகளாகக் கிடக்க, அவ்வுடல்களிலிருந்து வெளிப்போந்த உயிர்கள் அழகான பொற்றேர்களில் உயர எழும்பின; சிவந்த குங்குமக் குழம்பினை மார்பிலணிந்த தேவமாதர்கள் மகிழ்ச்சியால் புளகம் அடைந்தனர்; இராமனின் வெற்றியால் எங்கும் அனைவரும் விழா எடுத்துக் களித்தனர்; மாரவேள் ஆகிய மன்மதன் தென்றலெனும் தேரில் ஊர்ந்து வந்தான்.

    இவையனைத்தும் தனது வெற்றி பொருந்திய வில்லைக்கொண்ட இராமன், குதிரைகளைக்கொண்ட மணித்தேரினை மாதலி நடாத்திட, இராவணனுடன் போர்புரிந்து வெற்றிகண்டபோது நிகழ்ந்தன எனப் புலவரின் கற்பனையும் வருணனைகளுமாகும்.

                                    அலையெடுத் திருகரை நெரித்துச் சுறாக்கதற

                                                வறைபுனல் வறண்டுநெட்டை

                                    ஆழியிற் கானலந் தேர்புக விலங்கைக்கு

                                                ளாதவன் றேர்கடாவக்

                                            …………………………………………………………

                                     ………………………………. வா னவமாதர்

                                                 குங்குமச் சேதகத்து

                                     மலையெடுக் கும்புளகம் விளையவா வெங்கணும்

                                                             ……………………………………..

                                     மாரவே டென்றலந் தேரூர மாதலி

                                                மணித்தேர் நடாத்திவெற்றிச்

                                     சிலையெடுக் குங்கொண்டல் பரிமா தொடக்குபொற்

                                                சிறுதே ருருட்டியருளே

                                     சிலைவிசயன் விடுபெருந் தேர்கடவு மழகனே

                                                சிறுதே ருருட்டியருளே8.

    இவ்வாறு குதிரைகள் பொருத்திய சிறுதேரைச் செலுத்தியருளுக. அருச்சுனனுக்குத் தேர் செலுத்திய அழகனே! உனது சிறுதேரினை உருட்டி அருளுக என வேண்டுகிறார்.

    இவை கம்பனின் இராமகாதையின் யுத்தகாண்டத்து நிகழ்வுகளைத் தம்முள் அடக்கிக்கொண்டு பொலிகின்றன என்றால் மிகையாகாது.

    இவ்வாறு பற்பல பிள்ளைத்தமிழ் நூல்களிலும் பலபாடல்கள்; பல நயங்கள்; பல அழகுகள்; படித்துமகிழவும் பற்பல கற்பனைகள்.

    இதுகாறும் ஆண்பால் பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் வழக்கமாக அமையும் பத்துப்பருவங்களின் நயங்களைக் கண்டு மகிழ்ந்தோம். இனி வரும் அடுத்தடுத்த பாகங்களில் பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்குட்பட்டு அரிதாகப் பாடப்பட்ட பருவங்கள் பற்றிய செய்திகளைக் கண்டு மகிழலாம்.

                                                                                                                                                                           (வளரும்)

     

    பார்வை நூல்கள்:

    1. கம்பபாதசேகரன்- சித்தர்கிரி முருகன் பிள்ளைத்தமிழ்
    2. தி. சு. ஆறுமுகதாசன் – குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
    3. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்- சென்னைமாநகர்க் கந்தசுவாமி பேரில் பிள்ளைக்கவி
    4. தவத்திரு கந்தசுவாமி சுவாமிகள்- பத்திராசலம் இராமச்சந்திரன் பிள்ளைத்தமிழ்
    5. கோவிந்தன் – வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ்
    6. ஸ்ரீ குழைக்காதர் பிள்ளைத்தமிழ்
    7. கம்பன் – இராமாயணம்- அயோத்தியா காண்டம்- கைகேயி சூழ்வினைப்படலம்
    8. கவி காளருத்திரர்- அழகர் பிள்ளைத்தமிழ்
    
    
    Share
  • நூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்

    நூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
    மின்னஞ்சல்: ramachandran.ta@gmail.com
    

    (நிலம் பூத்து மலர்ந்த நாள்) இந்நாவலை மலையாளத்தில் எழுதியவர் மனோஜ் குரூர், தமிழாக்கம் கே.வி. ஜெயஸ்ரீ, வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை.

    சங்க கால மக்களின் வாழ்வியலை நவீன மொழியோடு  எடுத்துரைக்கும் நாவல். தமிழரின் தொன்மையான பண்பாடு சங்க காலப் பண்பாடு. இதனை எடுத்துக் கூறும் அகச் சான்று சங்க இலக்கியம். சங்க கால மக்கள் மனித வாழ்க்கையை இரண்டு பிரிவாகப் பிரித்துச் சிந்தித்துள்ளனர். ஆண் பெண் உறவைக் கூறுவது அக வாழ்க்கை என்றும் மன்னர்களின் போர் வீரம் பற்றிப் பேசுவது புற வாழ்க்கை என்றும் பதிவு செய்துள்ளனர். இந்த இலக்கியப் பதிவுகள் அக்கால மக்களின் எண்ண ஓட்டங்களை மன உணர்வுகளை வரலாற்றுப் பின்புலத்தை அறிந்து கொள்ள உதவுகின்றன. இத்தகைய பின்புலத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.

    சங்கப் புலவர்கள் கபிலர், பரணர், ஒளவை இவர்கள், கடையெழு வள்ளல்களில் வேள்பாரி, நன்னன், அதியமான் போன்றோரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இவர்களின் நட்புக்குப் பாத்தியப்பட்டவர்களாக இருந்து வந்தனர். நன்னனின் நட்புக்குப் பரணரும், பாரியின் நட்புக்குக் கபிலரும், அதியமானின் நட்புக்கு ஒளவையும் விளங்கியதை அவர்களின் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

    நவிற மலையை ஆட்சி செய்தவன் நன்னன், பறம்பு மலையை ஆண்டவன் பாரி, குதிரை மலையை ஆண்டவன் அதியமான் இவர்கள் அனைவரும் கலை இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள், அதே வேளையில் அரசியல் போர் முதலியவற்றிலும் சிறந்து விளங்கினர். மக்களின் நலன் கருதி புலவர்களின் அன்பு பெற்றுச் செம்மையாக அரசியல் வாழ்வை முன்னெடுத்தவர்கள் இவர்கள். என்றாலும் இம்மன்னர்களின் வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டு பாணர்களின் வாழ்வியலோடு கதைக் கூறுவது இந்நாவல்.

    பாடி ஆடி மக்களையும் மன்னர்களையும் மகிழ்விப்பவர்கள் பாணர்கள். இசை கூத்து கதை என்று வாழ்ந்து வரும் பாணர்கள் வறுமையில் உழன்று புகழிடம் தேடி பயணிக்கும் பயணத்தில் இந்நாவல் தொடங்குகிறது. வறுமையின் துன்பம் தாளாமல் கொடையாளரைத் தேடியதில் நன்னன் முதலிடம் பெறுகிறான்.

    பெரும் பாணர் தலைமையில் பாணர்க் கூட்டம் பயணத்தைத் தொடங்குகிறது. இதில் கொலும்பன் குடும்பம் (கொலும்பன், மனைவி, மயிலன், சித்திரை, சீரை, உலகன்) இக்கதையின் முதன்மை கதைமாந்தர்களாகப் பின்னப்பட்டுள்ளது. நாவல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி கொலும்பன் மூலமும் இரண்டாம் பகுதி சித்திரை மூலமும் மூன்றாம் பகுதி மயிலன் மூலமும் சொல்லப்படுகிறது. இவர்களின் வாழ்க்கைச் சூழலில் மனிதர்களாகப் புலவர்களும்  வள்ளல்களும் வந்து செல்கின்றனர்.

    சங்க கால வாழ்வியல் மன்னர்களில் தொடங்கி மன்னர் களில் முடியுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்களின் புலவர்களின் வாழ்க்கை சொல்லப்பட்டுள்ளது. இதனால் நமது சிந்தனை மன்னன், புலவர், சமூகம், மக்கள் என்று பழக்கப்பட்டு உள்ளது. இந்நிலையைத் தலைகீழாக மாற்றியுள்ளது இந்நாவல். நவீனத்துவத்தின் மாபெறும் இருப்பாக இதனைக் கூற முடியும். கொலும்பனும் சித்திரையும் மயிலனும் முதன்மை பெற்று இவர்களின் வாழ்வியல் போக்கில் புலவர்களும் மன்னர்களும் வந்து செல்வது புதுமையான நவீனமான எடுத்துரைப்பு முறையாகும்.

    பெண் கொலை புரிந்த நன்னன் என்று கூறும் போதும் பாணர்களின் சூழ்நிலையைப் பயன்படுத்தி கொலை செய்யப்படும் பாரியின் நிலையும் அதியனின் ஒதுங்கி நிற்கும் அரசியல் சூழ்ச்சியிலும் அறம் அழுத்தமாகப் பேசப்படுகிறது. மயிலனை இந்த அறம் வேறு நாட்டிற்கு  துரத்தும் அளவிற்கு வினையாற்றுவதாகக் கூறப்படும் பின்புலம் (இந்து தத்துவ மரபு) சிந்தனையைத் தூண்டுகிறது.

    நாவலை எடுத்துரைக்கும் பண்பில் ஒரு புதிர் கூடவே பயணிப்பதை வாசர்கள் அறிய முடியும். வாசகனை அடுத்து என்ன நிகழப் போகிறது என்ற தூண்டுதலைக் கடைசி வரை தொய்வில்லாமல் கொண்டு சென்றது பாராட்டத்தக்கது. மொழிபெயர்ப்பு என்ற உணர்வு சற்றும் இல்லாமல் நாவல் செம்மையாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் வாசிக்க வேண்டிய சிறந்த நாவல் இது.

    Share