Blog

  • சேக்கிழார்  பாநயம் – 12

     

    =======================

    திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி

    ———————————————————–

     

    ஓரூரின் சிறப்பு அவ்வூர் மக்களின் நல்வாழ்வைப் பொறுத்தே அமையும்! ஒவ்வோர் ஊரிலும் அந்த ஊரில்  நெடுங்காலம் வாழ்வோரின் வரலாறு, எல்லா வகையிலும்  வெளிப்படும். தமிழ் நாட்டின் பழங்காலத்து நகரங்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் வரலாற்றைப் புலப்படுத்தும்! பூம்புகார் சோழ நாட்டின் பழங்காலத்  துறைமுக நகரம்! அந்த நகரின் சிறப்பினைப் பற்றி சிலப்பதிகாரத்தின் தொடக்கத்திலேயே இளங்கோவடிகள் கூறுகிறார்!

    ’பொதியிலாயினும்  இமயமாயினும்

      பதியெழுவறியாப்  பழங்குடி  கெழீஇய

     பொதுவறு  சிறப்பின் புகாரே  யாயினும்

     நடுக்கின்றி  நிலைஇய என்பதல்லதை

     ஒடுக்கம் கூறார்  உயர்ந்தோர் உண்மையின் ‘’

    என்று பாடுகிறது. பொதியில், இமயம், புகார் என்ற மூன்று இடங்களையும்  கல்வியிற் சிறந்த பெரியோர் ‘’எக்குறையும் இல்லாமல் நிலைத்த  சிறப்பின, என்பார்களே அல்லாமல் எந்தக்  குறையையும் கூற மாட்டார்கள்! அதற்குக்  காரணம்  அங்கெல்லாம்  நீண்டகாலம்  உயர்ந்தோர் வாழ்வதே!’’ என்று புகழ்வர்!

    பொதியில் அகத்தியர் முதலான முனிவர்களும், இமயத்தில் சிவபிரானும், புகாரில் , எக்காரணத்தைக் கொண்டும் ஊரைவிட்டுச் செல்லாத சோழ நாட்டுப் பழங்குடிகள் நிறைந்து வாழ்வதாலும் , அவ்வாறு புகழ்வர்.  அவ்வகையில் ஓரூரின் சிறப்பு அங்கு நீண்டகாலம் வாழும் மக்களால் விளங்கும்!

    தமிழகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றாகிய திருவாரூரின் சிறப்பைச்  சேக்கிழார் சுவாமிகள் பற்பலபாடல்களில் புகழ்கிறார்! ஓரூரின் சிறப்பு அங்குள்ள சிறந்த சான்றோர்களாலும் , அங்குள்ள நீர்வளம், நிலவளம், தொழில் வளம், கோயில் முதலானவற்றாலும் புலப்படும் என்பதைச் சிலம்பு கூறுவதை மேலே கண்டோம்! அவ்வகையில் ‘’திருவாரூர்  அங்குள்ள பறவைகளின் ஒலிகளால்,  சிறந்த ஊர் என்பதை அறிந்து கொள்ளலாம்! ‘’ என்கிறார் புலவர்.

    சங்க இலக்கியமாகிய பெரும்பாணாற்றுப் படையில் , பாணர்களை அந்தணர் வாழும் இல்லத்துக்குச்சென்றால், அங்கு எவ்வகை உணவைப் பெறலாம் என்பதைக் கூறி ஆற்றுப்படுத்துகிறார்கள். அப்போது, ‘’அந்தணர் இல்லத்தில் பசுமாட்டின் கன்றைக் கட்டிவைத்த பந்தலின் உள்ளே,பசுஞ்சாணத்தை இட்டு  மெழுகிய யாகசாலை உடைய வீட்டில், கோழியும்,அதனை விரட்டும்  ஆடும் உள்ளே நுழைய மாட்டா! அங்கே வளைந்த வாயினை உடைய கிளிகள்   வேளைதோறும் இடைவிடாது அந்தணர்கள் கூறும் அறிய வேதங்களைக் கேட்டு, மீண்டும் சொல்லிப்  பயிலும் ‘’  என்பதை,

    ‘’செழுங்கன்று  யாத்த  சிறுதாள் பந்தல்

     பைஞ்சேறு  மெழுகிய படிவ நன்னகர்

     மனையுறை  கோழி, அடு ஞமலி துன்னாது

     வளைவாய்க்  கிள்ளை  மறைவிளி  பயிற்றும்

     மறைகாப்பாளர்  உறைபதி’’

    என்று பாடுகிறது.  வேதங்களைக் கிளிகள் பயிலும் அடையாளம் சிறந்த வேதியர் வாழும் இடத்தைக் குறிக்கிறது!திருவெண்காடு சிறந்த சிவத்தலம்! அங்கே வாழும் அந்தணர்கள் ஸ்ரீருத்திரம் போன்ற வேத மந்திரங்களை வேளைதோறும் விடாமல் ஒதுகின்றனர்! அதைக்கேட்ட அவ்வூரில் உள்ள  கிளிகள் அவ்வேத மந்திரங்களைக்   கொண்டே  பேசப்   பழகுகின்றனவாம்! இதனைத் திருஞானசம்பந்தர் ,

    “நாதன்  நமையாள்வான்   என்று  நவின்றேத்தி

     பாதம்  பன்னாள்  பணியும் அடியார்கள் தங்கள்மேல்

     ஏதம்தீர   இருந்தான்   வாழும்    ஊர்போலும்

    வேதத்து  ஒலியால்  கிளிசொல்  பயிலும்  வெண்காடே!’’ என்று பாடுகிறார்!

     மேலும் அவர் ‘’திருவீழி மிழலை என்ற திருத்தலத்தில், இடமகன்ற திருமடங்களில்  அந்தணச் சிறுவர்கள் ‘பதம்’ என்ற வகையில்   படித்த நால்வேதங்களைக் கேட்டு, மகிழ்ந்து இருந்த பசுங்கிளிகள் , அவ்வாறே ஓதக்கேட்டு , அத்திருக்கோயில் வாயிலில் படுத்துக் கிடந்த பசுக்குலங்கள்,வேத ஒலியைத் தாமும் பயின்று முழங்குகின்றன. இத்தலத்தின் இறைவனின்  திருவைந்தெழுத்தை  நாமும் ஓதினால் நம் வினைகள் கெடும்!’’ என்கிறார்! அவர் பாடல்,

    ’அஞ்செழுத்துரைக்க அருளினன்   தடமிகு  நெடுவாள்

    படித்த  நான்மறைகேட்    டிருந்த பைங்கிளிகள்  பதம்ஓத, பாடுஇருந்த

    விடைக்குலம்  பயிற்றும்  விரிபொழில்வீழி  மிழலையான்  எனவினை  கெடுமே!’’

    என்று பாடுகிறார்.  மேலும் விடமுண்ட கண்டராகிய சிவபிரான் என்றும் வாழும் நகராகிய  சீர்காழியை, ‘’மிகவும் நல்லவர்களாகிய வேதியர் கற்றுப்  பயில்கின்ற வேதங்களைக் கேட்டு, அவ்வூர்ச் சோலைகளில் பறந்து திரியும் கிளிகள், தாமே அப்பதங்களைச்  சொல்லி மகிழும் திருப்புகலி!’’ என்று பாடுகிறார்! இதனைத் திருமுறை,

    “ சால  நல்லார் பயிலும்  மறைகேட்டுப் பதங்களை

     சோலை மேவும் கிளித்தான்  சொல்பயிலும் புகலியே!’’    

    என்று பாடுகின்றது!

    இவையனைத்தையும்  பயின்ற   சேக்கிழார்   பெருந்தகை,   திருவாரூரில் உள்ள  இல்லங்களில், சிறந்த திருமுறைகளை  அனைவரும் வேளைதொறும் பயில்வர்! அதனை அங்கே  வாழும் கிளிகள் கேட்டு மீண்டும் கூறுமாம். அதனை நாகணவாய்ப் பறவைகளும் கேட்டு மகிழும் என்று பாடுகிறார்.

    ‘’உள்ளம்  ஆர் உரு  காதவர்?  ஊர்விடை

     வள்ள   லார்திரு  வாரூர்  மருங்கெலாம் 

     தெள்ளும்  ஓசைத்  திருப்பதி  கங்கள் பைங்

     கிள்ளை  பாடுவ  கேட்பன  பூவைகள்!’’

    என்பது அவர் அருளிய திருப்பாடல். இப்பாடலில் வேதப்  பதங்களைக் கிளிகளும், பசுக்களும் பயிலும் என்று, சங்க இலக்கியமும், சம்பந்தர் தேவாரமும் கூறியதைச் சற்றே மாற்றம் செய்து பாடுகிறார்! திருவாரூரில் இல்லங்களிலும் , வீதிகளிலும், திருக்கோயிலிலும் , புறநகர்ப் பகுதிகளிலும் அடியார்கள் இடைவிடாமல்  சைவத்  திருமுறைப் பதிகங்களைப்    பயில்கிறார்கள், என்று மாற்றி, வேதமும்  திருமுறையும் ஒன்றே என்ற கருத்தை நிலை நாட்டுகிறார்!

    மேலும் ‘வள்ளலார்’ என்று திருவாரூர்த் தியாகேசரைக் குறிப்பது, அவர் தம்மையே தமர்க்கு நல்கும் தியாகத்தைச் செய்தருளுபவர் என்பதை நமக்குத் புலப்படுத்தும். அவ்வூரில் தம்மைக் காதல் தூதுவராக்கிக் கொண்டு இரண்டு முறை திருவாரூர் வீதியிகள் நடந்தருளியவர்! அவர் திருவருட் சிறப்பைப் பாடும் பாடல்கள் நால்வரும், காரைக்காலம்மையாரும்  நல்கிய பத்துப் பத்துப் பாடல்களால் ஆகிய பதிகங்களே, என்கிறார்! முன்னோர் மொழிந்த  கருத்துக்களைக்  காலத்துக்கும்  இடத்துக்கும் ஏற்பச்  சற்றே  மாற்றிப்  பாடிய சேக்கிழாரின் திருமுறைப் பற்றினை இப்பாடல் குறிக்கின்றது!

    =====================================================================13

    ——— சே.பா.ந. – 12 —- sent  on   15/11/’18.

    Share
  • மலையாளம் தமிழ் அகராதி

         தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்ட திராவிட மொழிகளில் ஒன்றே மலையாளம்.  இன்று இலக்கியச் செல்வங்களுடன் புதுப் பொலிவு பெற்றுத் திகழும் மலையாள மொழி பண்டைய தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியான சேர நாட்டில் பேசப்பட்டு வருகிறது.  இதற்குப் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் போன்ற நூற்களே சான்றாகும்.  மலையாள மொழியின் தொடக்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும் தமிழின் ஆதிக்கமே மிகுந்துள்ளது.  இம்மொழி தனித்தனியாகப் பிரிந்தாலும் இன்றும் அம்மொழி பேசுவோர் இலக்கணமோ அகராதியோ இன்றி தமிழர் மலையாளத்தையும் மலையாளி தமிழையும் புரிந்துகொள்ளத்தான் செய்கின்றனர்.   இருப்பினும் மொழியின் உள்ளமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்களும் பிறதொடர்புகளும் வேறுபடுவதால் செப்பமாக மொழியைப்பயில்வதற்கு இலக்கண நூல்களும் அகராதிகளும் ஏழவேண்டிய தேவை எழுகிறது.  இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மலையாளம் தமிழ் அகராதி ஒன்றை உருவாக்கி 2016 – ஆம் ஆண்டில் வெளியிட்டது.

          மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்திற்கு வித்திட்டவர்கள் இத்துறையின் மேனாள் பேராசிரியர் பெருமக்களாவார்.  அவர்கள் இத்துறையில் பணியாற்றிய காலத்தில் ஆய்வு மாணவர்களைக்கொண்டு சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான அனைத்து இலக்கியதங்களுக்கும் சொல்லடைவு உருவாக்கி அகராதி தொகுப்பிற்கு வித்திட்டனர்.  அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரா. மா . இளையபெருமாள் ஆவார்.  அவர் மலையாள இலக்கண நூல்களைத் தமிழுக்கும்  தமிழ் இலக்கண நூல்களை மலையாளத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். மேலும் அவர் மலையாளம் –  தமிழ் , தமிழ் – மலையாளம் அகராதியையும் தயாரித்து வைத்திருந்தார். அது அச்சில் வராமல் போனது. அவரைத் தொடந்து தற்போது பணியாற்றும் பேரா. ப. . ஜெயகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நான் உள்ளிட்ட துறையின் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் போன்றொரின்  அரிய முயற்சியால் உருவானதே இவ்வகராதி. இதனை கேரளப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியிட்டுள்ளது.

    அகராதி அமைப்பு

          மலையாளம் – தமிழ் அகராதி வரலாற்றில் இது முதன்மையானது.  மலையாளம் தலைச்சொல்லாக அமைகிறது.  தொடர்ந்து அச்சொல்லுக்காண இலக்கண விளக்கம் , ஆங்கில ஒலிபெயர்ப்பு , தமிழ் விளக்கம் என்ற அமைப்பில் இவ்வகராதி அமைந்துள்ளது. தலைச்சொல் மலையாள சொல்லாக இருப்பதால் மலையாளம் அறியாத அனைவரும் எளிதில் வாசிக்கும் வகையில் ஆங்கில் ஒலிபெயர்ப்பு ( Translitration)  கொடுக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிலையில் இவ்வகராதி அமைந்துள்ளது.

    இவ்வகராதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைச்சொற்கள் தற்கால மொழிப்பயன்பாட்டிற்கு ஏற்ற முறையிலான இருபதாயிரம் மலையாளச் சொற்கள் தேர்வுசெய்யப்பட்டன. இச்சொற்கள் சப்ததாராவலியில் இருந்தும், மலையளப்பேரகராதியில் இருந்தும் மலையாளச் சொல்தரவகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையாகும்.

    இருமொழி அகராதி உருவாக்கச் சிக்கல்களும் தீர்வுகளும்

         ஒருமொழி அகராதி உருவாக்குவதை விட பணிச்சுமையும் குழப்பங்களும் கொண்டதே இருமொழி அகராதி உருவாக்கம்.  இருமொழி அகராதியின் தலையாய நோக்கம் ஒருமொழியிலுள்ள சொற்களைப் பிரிதொரு மொழிச்சொல்லோடு ஒப்புமைப்படுத்திக்க காட்டுவதாகும்.தமிழும் மலையாளமும் ஒரு மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என்றாலும் அம்மொழிகள் பேசுவோர் இருவேறு சமூகத்தைச் சார்ந்தவர் ஆவர்.  அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மொழிக்கூறுகள், போன்றவை பல நேரங்களில் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.    உலகமொழிகள் அனைத்திலும் அவ்வவ் மொழிக்குரிய தனித்தன்மைகள் காணப்படத்தான் செய்கின்றன.  பிஞ்சு, காய் போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் இல்லாதது போல கணினி, பேருந்து போன்ற சொற்கள் மலையாளத்தில் இல்லை. எனினும் மலையாலத்திற்கே உரிய  தனிப்பட்ட சொற்கள் அம்மொழியில் காணப்படத்தான் செய்கின்றன.  சான்றாக,

         மாப்பு சாக்ஷி – என்ற சொல்லிற்கு இணையான  தமிழ் சொல் இல்லை. அதற்கு அகராதியில் ஒரு தொடராகத்தான் விளக்கம் கொடுக்க முடிந்தது. அதாவது ”குற்றங்களைச் செய்து விட்டு கூட இருப்பவரைக் காட்டிக்கொடுத்து சாட்சி கூறுபவன்”. எனபொருள் விளக்கம் கொடுக்கப்பட்டது.

         கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சில பண்பாட்டுச் சொற்களுக்கு விளக்கம் தரும்போதும் சிக்கல்கள் ஏற்பட்டது.  சான்றாக,

    கை நீட்டம் – என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இல்லை. அதற்கு “ விசுப்பண்டிகையின் போது கொடுக்கப்படும் பரிசுப்பொருள் ‘ என் விரிவான முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

    அஞ்சாம்புரை – நம்பூதிரிப் பெண்ணை விசாரணைக்காக வைக்கப்படும் அறை

    படிப்புர-  வெளிப்புறக் கதவுள்ள வீடு.  இச்சொற்கள் கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சொற்களாகும்.

         மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின்போது தமிழ் மலையாள ஒலியொற்றுமையுடைய சொற்களுக்கு பொருள் எழுதும்போதும் சிக்கல்கள் தோன்றின.

    கழி- மலையாளத்தில் சாப்பிடுதல் என்னும் பொருளில் வரும். தமிழில் வெளியேற்றுதல், மலம் கழித்தல் என்னும் பொருளில் வரும். அதேபோன்று  அவசரம்- என்ற சொல் மலையாளத்தில் சந்தர்ப்பம் வாய்ப்பு என்ற பொருளில் வருகிறது. தமிழில் சீக்கிரம் என்ற பொருளில் வருவதைக்காணலாம்.

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோன் எனக்கேட்ட தாய்  – என்ற குறளுக்கேற்ப

         மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றினும் இன்று இருமொழியாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சியே.

    ஆசிரியர்:-

    முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி. அ

    உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 187-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. சுந்தரம் செந்தில்நாதனின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

    கடலைப் பார்த்து ஆரவாரிக்கும் இளஞ்சிறார்களைக் காண்கிறோம் படத்தில். இவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் அலையெழுச்சியா அல்லது தாங்கள் எதிர்பார்த்திருக்கும் ஒன்றைக் கண்டதால் ஏற்பட்ட மனவெழுச்சியா என்பதைக் கண்டுபிடித்துத் தம் கவிதையில் ஏற்றும் பொறுப்பை நம் வித்தகக் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்!

    *****

    முங்கிக்குளித்து முத்தெடுப்போரும், வலைவீசி மீன்பிடிப்போரும், உணவுக்கு ருசியூட்டும் உப்பெடுப்போரும் ஆழி அன்னைக்கு அன்பு வணக்கம் செலுத்துவதைக் காண்கிறோம் நாங்குநேரி திருமிகு. வாசஸ்ரீயின் கவிதையில்.

    எம் வணக்கம்!

    காலை நேர விடியலிலே
    கதிரவனுக்கு எம் வணக்கம்
    தங்கச் சேலை உடுத்திய
    தாயவளின் அலை மடியில்
    பயணித்து அனுதினமும்
    பல பொருள் ஈட்டுகிறோம்
    முங்கிக் குளித்து
    முத்து எடுப்போரும் யாம்
    மீன் பிடித்துக் கரைக்கு
    மீண்ட பின் விற்போரும் யாம்
    உணவு ருசிக்க உலகிற்கு
    உப்பு அளிப்போரும் யாம்
    இத்தனையும் கொடுத்து
    இனிதே வாழ்விக்கும்
    ஆழி அன்னைக்கும் எங்களின்
    அன்பான வணக்கம்
    வாழ்த்தி எம்மை
    வாழ்விப்பீர் இருவரும்

    *****

    ”ஆதவன் உதிக்கும் அழகிய காலைநேரத்தில் உழைக்கத் தொடங்கினால், அவன் மறையுமுன்னே சாதனை செய்வீர் சத்தியமாய்!” என்று இவ்விளையோரை வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    சாதனை செய்வீர்…

    ஆதவன் உதிக்கும் நேரம்
    அழகிய காலை நேரம்,
    வேதனை மறையும் நேரம்
    வெற்றியைத் தொடங்கும் நேரம்,
    சோதனை செய்திடும் கதிரவன்
    சொக்கத் தங்கமாய்க் கடலும்,
    சாதனை செய்வீர் இன்றே
    சாயும் கதிரின் முன்னே…!

    *****

    கவிதைகளின் ஊடே தம் கருத்துக்களைச் சிறப்பாய்ச் செப்பியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது இனி…

    சென்றவர் மீள்வரோ!

    ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தங்கள்
    அப்பாவை, அண்ணாவைத் தம்பிமாரை
    மீளவும் தாம் காண்போமா அல்லதன்னார்
    தாழமுக்க வலயத்துள் நுழைந்திட்டாரா?

    வீசிய சூறாவளியில் சிக்கினாரா?
    விதி முடிந்து கடலுக்குப் பலியானாரா?
    ஆசையிலே பெருமீனைப் பிடிக்கச் சென்று
    அதன் வாய்க்கு இரையாக வீழ்ந்திட்டாரா?

    எல்லையிலே அயல் நாட்டுப் படைகள் நின்று
    எதிர்ப்படுவோர்க் கின்னல்தரும் இயல்புக் கஞ்சி
    தொல்லைக்குள் ளாகாமற் தூர ஓடி
    துறை தெரியாதாழ் கடலிற் தொலைந்திட்டாரா?

    கொதியறிந்து வலை வீசக் கொஞ்ச தூரம்
    கோடறியா தெல்லைதனைத் தாண்டிச் செல்ல
    கொலை வெறியில் எதிர்ப் படைஞர் தாக்கினாரா?
    கொடுமையினாற் தமர் உயிரைப் போக்கினாரா?

    என்று மனங்கவன்றபடி அடி வானத்தை
    ஏக்கமுடன் பார்க்கின்றார் கரையில் நின்று
    ஒன்றுமிலை கடல் விளிம்பில் உற்றுப்பார்க்க
    உருளையென மிதப்பதெது படகா வென்று

    ஏது மறியாராகத் தவித்து நின்று
    எதிரில் வரும் படகுகளின் வரவு காணக்
    கடல் விளிம்பிற் செங்கதிரோன் வரவுக்காகக்
    கையுயர்த்திக் காத்திருக்கும் இளையோர் கூட்டம்!

    ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றோரின் நிலையறியா இவ்விளையோர் கூட்டம், ”அவர்கள்  பெருமீனுக் கிரையானாரா? எதிர்ப்படைஞரிடம் சிக்கிச் சிதைந்தாரா? துறையறியாது ஆழ்கடலில் தொலைந்திட்டாரா?” என்று கவன்றபடி தமர் நிலையறியக் கடலில் தோன்றும் படகைப் பதைபதைப்போடு பார்த்திருக்கின்றனர்!” என்று இன்றைய சூழலுக்குப் பொருத்தமான சிந்தனையைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181120 -DWA wcol- Canson A4 200gsm 100dpi
    (the Panchajanya has already sucked the life out of your opponents. All you have to do is hit the target – Pazhaveri Rajagopalachariar ref.) Lr

    டார்கெட்டைப் பார்த்தர்க்கு தார்வண்ணர் காட்டினார்
    போர்மு டியபாரம்(பூ பாரம்) போக்கணும்-யார்வில்லும்
    கொல்வதும் இல்லை கொலையுண் பவனுமில்லை
    வெல்வதுன் வேள்விவிஜ யா”…கிரேசி மோகன்…..!

    Share
  • வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரு கோடி குபேர ஜப யக்ஞம்

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டி சென்ற 14.11.2018 புதன்கிழமை முதல் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை பயன் தரும் பத்து ஹோமங்களுடன் ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம் நடைபெறுகிறது. இந்த யாகம் வருகிற 25.11.2018 ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது. இந்த யாகத்துடன் 22.11.2018 வியாழக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகமும், 23.11.2018 வெள்ளிக்கிழமை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், 24.11.2018 சனிக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு வாஸ்து சாந்தி ஹோமமும், 25.11.2018 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு நவக்கிரக ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமத்துடன் கோடி ஜப குபேர யக்ஞம் நிறைவு பெறுகிறது.

    இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில் ,உன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆன்ந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோமங்கள் மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்ப்படவும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்க ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டு நடைபெறும் இந்த யாகங்களில் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ குபேர லக்ஷ்மி அருள் பெற்று நலமுடன் வாழ அன்புடன் அழக்கின்றோம். இன்று வரை 60 லக்ஷம் ஜபங்கள் தாமரை விதைகள், தாமரை புஷ்பங்கள், விசேஷ மூலிகை திரவியங்களுடன் குபேர யாகம் நடந்துள்ளது. இந்த யாகம் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இன்று வரை இந்த யாகத்தில் முன்னாள் வேலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆர்.நந்தகோபால் IAS அவர்கள், இந்து முன்னணி திருநெல்வேலி மாவட்டசெயலாளர் திரு. எம்.பால்மாரியப்பன் அவர்கள், திரு. சோளிங்கர் பிரகாஷ் அவர்கள், ஸ்ரீராம் பட்டாசாரி, தென் இந்திய புரோகித சங்க தலைவர் வி.ஆர்.சீதாராமன் மற்றும் நிர்வாகிகள், ராணிப்பேட்டை விக்னேஷ் மோட்டார் உரிமையாளர், வாலாஜாபேட்டை W.G.முரளி, முன்னாள் தலைவர் நித்தியானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

    Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in

    Email: danvantripeedam@gmail.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181119 DWA Parthasarathy -wcol – A4 Canson 200 gsm 300 dpi (After the Vishwaroopa darshan at Parthasarathy temple on 181118. lr

    பார்த்தன் பார்த்திட பார்த்தனின் சாரதி
    வேர்த்தல் விலக்கிடும் விஸ்வரூபம், -தீர்த்தம்
    குளக்கரை அல்லியூரில்(திருவல்லிக்கேணி) கோவிந்தர், நெஞ்ச
    உளைச்சலை நீக்கும் உரு(உருவம்)…..கிரேசி மோகன்….!

    திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்….
    ———————————————————————-
    வேதவல்லித் தாயே வினைதீர்க்கும் செங்கமலப்
    பாதவல்லி பார்த்தன்தன் சாரதியின் -கீதவல்லி
    ஏதமில்லா ஞானத்தை ஏதுமில்லா மோனத்தை
    சாதகனென் சிந்தையில் சேர்….!

    அப்பாவின் 85வது பிறந்த நாளில் எழுதியது
    ——————————————————-
    பார்த்த சாரதி பெருமாள் கோயிலில்
    ———————————————-
    மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
    ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு
    ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
    வாழ்வோனை நெஞ்சே வணங்கு….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (288)

    இந்த வார வல்லமையாளராக  பத்திரிகையாளர் ரவி அகர்வாலை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. ரவி அகர்வால் லண்டனில் 1982-ல் பிறந்தவர். கல்கத்தாவில் வளர்ந்து, ஹார்வர்ட் பல்கலையில் இதழியல் பயின்றவர். சிஎன்என், டெல்லி தலைவராகப் பணிபுரிந்து, தற்போது ‘ஃபாரின் பாலிசி’ என்னும் ஜர்னலின் ஆசிரியர் ஆகியுள்ளார். https://en.wikipedia.org/wiki/Ravi_Agrawal

     

    1990களில் செல்பேசிகளால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஒன்று நிகழ்ந்தது. அதே போல இப்பொழுது  இந்தியாவில் வலைபேசி பல கோடி மக்களின் கைகளில் வந்துகொண்டுள்ளது. வலைபேசி என்பது ஸ்மார்ட் ஃபோன்ஸ். காமிராவும், இணையத்துக்கு சென்று எழுதுவதும், படிப்பதும், வாட்ஸப் மூலம் உலகெங்கும் செலவின்றி உறவாடவும் வலைபேசிகள் உதவுகின்றன. 30 கோடி மக்கள் தற்போது வலைபேசிகளைப் புழங்குகிறார்கள். இது 2021-ல் 50 கோடி வலைபேசிப் பயனர்களாக உயரும் என இந்தியர்கள் கணக்கிடுகிறார்கள். பேரிடர்கள் தாக்கும்போது சுனாமி, சூறாவளிப் புயல், அணுநிலைய விபத்து, … போன்றவைகளை மக்களுக்கு உடனுக்க்டன் அறிவிக்க வலைபேசிகள் மிக உதவும். உள்ளங்கையில் உலகம் என்பதை இந்தியாவில் உண்மையாக்குவது வலைபேசிகள் தாம். இது ஓர் யுகப்புரட்சி.

    ஆக்ஸ்போர்ட் பல்கலையில் இந்தியாவில் வலைபேசி யுகப்புரட்சி பற்றி விரிவான நூல் எழுதிய இளைஞர் இரவி அகர்வாலை வாழ்த்தி வல்லமையாளர் என அறிவிக்கிறோம். மேலும் பல நூல்கள், கட்டுரைகள், தொலைக்காட்சி, ஆய்வு ஜர்னல்கள், … இவற்றில் இந்தியாவைப் பற்றிய செய்திகளை மேற்குத்திசை நாடுகளில் வாரந்தோறும் பிரபலம் ஆக்குவதன் மூலம் தொழில், வணிக உறவுகளை இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் பெருக்கும் அரிய பணீயைச் செய்யும் ரவி போன்றோர் பங்களிப்பு முக்கியமானவை.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

     

    Share
  • எழுத்து – 9

    ரங்கராட்டினமாய் மனதில் தினம் கட்டமிடும்
    சதுரங்க ஆட்டம் தான் எழுத்தும்.
    மதுரமான மூளை சார்ந்த தந்திரமும்
    மதுரச மதியூகக் கலை அறிவியல்.
    கிடையாகவும் செங்குத்தாகவும் எழுத்துக்கள் நகர்த்தி
    குதிரை, ராசா, ராணி மந்திரிகளுடன்
    காய்களை அசைத்துத் தமிழ்க் கோட்டையேறும்
    ஐம்புலன் அறிவுச் செல்வம் தமிழ்.

    சீவனில் மலர்ந்த எழுத்து வற்றாத
    சீவ நதி…மாறாத முற்றத்து மணல்
    சீர் செய்து கலைத்துக் குவித்தல் போல
    சீண்டிக் குலைத்து திரும்பக் கட்டும்
    சீரிய பணியே எழுத்து. மாந்தர்
    சீர்ப்பாட்டில் நாளானாலும் நழுவிடாது எழுத்து.
    சீலமுடை எழுத்து மகா சமுத்திரம்.
    பாலமிடுங்கள் பண்புடன் பாதுகாக்க! எம்முயிர்!

    எங்கு விழுந்தாலும் நதி தன்
    பங்கில் வழி கண்டு கடல் சேர்தல் போல
    மங்காத எழுத்துமதன் வழி காணும்.
    பொங்கும் எழுத்தால் ஏறும் வாசனைத்
    திரவியம் மழைக்காலத் தேநீரின் கதகதப்பாய்
    அரவணைத்தல் அலங்கார உற்சவ அனுபவமே!
    அரவிந்தத் தமிழை தாலியின்றி மனது
    கரவின்றிச் செய்த புனிதத் திருமணமிது

    மனமெனும் அடர்வனத்துள் ஒளி பாய்ச்சும்
    இனமறியா கதிர்வீச்சே! அறிவை மெல்லிசையாய்,
    கனமழையாய் சுரம் பாட வைப்பாய்!
    தனமாய் விரிந்த உள்ளங்கையாய் இருப்பாய்!
    கனமென்று யாராலும் ஒளித்திடவியலாத எழுத்து (அறிவு)
    தினமாய் செவிகாள் கேண்மின்களே! கற்கண்டினம்!
    மனம் இனிக்க கண்காள் காண்மின்களே!
    வனமெனும் வார்த்தை விண்மீன் தடாகமுலகம்.

    வேதா. இலங்காதிலகம்
    டென்மார்க் 12-11-2018

    Share
  • ஆழ்ந்த இரங்கல் …

    நம் மதிப்பிற்குரிய அறிவியல் விஞ்ஞானி திருமிகு ஜெயபாரதன் ஐயா அவர்களின் அன்பு மனைவியார் தசரதி அவர்கள் நேற்று (17.11.18) மாலை 6.10 மணியளவில் இறையடி நிழலில் தஞ்சம் புகுந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், நம் ஜெயபாரதன் ஐயாவும் அவர்தம் குடும்பத்தினரும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை மனமாரப் பிரார்த்தனை செய்கிறோம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 188

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முரளிநாதன் வித்யாதரன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(233)

    செண்பக ஜெகதீசன்

     

    கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேற்கொண்    

    டல்லவை செய்தொழுகும் வேந்து.

           -திருக்குறள் -551(கொடுங்கோன்மை)

     

    புதுக் கவிதையில்…

     

    நாட்டு மக்களுக்கு

    நல்லது செய்யாமல்

    அல்லவை செய்து

    அவர்களை

    அல்லற்படுத்தும் அரசன்,

    கொலைத்தொழில் செய்வோரைவிடக்

    கொடியவன் ஆவான்…!

     

    குறும்பாவில்…

     

    குடிமக்களை வருத்தி அல்லலுறுத்தும்                   

    கொடுங்கோல் வேந்தன், கொடியவனாகிறான்   

    கொலைத்தொழில் செய்வோரைவிடக் கூடுதலாய்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    நல்லது ஏதும் செய்யாதே

         நாட்டு மக்களைத் துன்புறுத்தும்

    பொல்லா மாந்தர் அரசாண்டால்

         பெயரில் தானவர் மன்னனாவார்,

    கொல்லும் செயலை மேற்கொண்டே

         கொலையே தொழிலாய்க் கொண்டுள்ள

    எல்லாக் கொடியோர் தமைவிடவும்

         இவரே மிகவும் பெருங்கொடியரே…!

     

    லிமரைக்கூ..

     

    மக்களிடம் கருணையென்பதே இல்லாதவன்,          

    கொடுங்கோல் ஆட்சிசெய்யும் மன்னனவன்,                        

    கொலைத்தொழில் கொடியரைவிடப் பொல்லாதவன்…!

     

    கிராமிய பாணியில்…

     

    மன்னனில்ல மன்னனில்ல

    கொடுங்கோலாட்சி செய்யிறவன்

    மன்னனில்ல மன்னனேயில்ல..

     

    நாட்டு மக்களுக்கு

    நல்லதே செய்யாம

    கொடுமப்படுத்துறவன் மன்னனில்ல..

     

    அவன்

    கொலசெய்யிறதயே தொழிலாக்கொண்ட

    கொகாரனவிட ரெம்பப் பெரிய

    கொடியவனே..

     

    அதால

    மன்னனில்ல மன்னனில்ல

    கொடுங்கோலாட்சி செய்யிறவன்

    மன்னனில்ல மன்னனேயில்ல…!

     

    செண்பக ஜெகதீசன்…

    Share
  • முடுகா மொழியின் பெயர்ச் சொற்களில் பழந்தமிழ் வழக்காறுகள்

    -முனைவர். த. கவிதா

    உலக நாகரிகங்களுள் பழைமை மிக்க நாகரிகமாக விளங்குவது  திராவிட நாகரிகம். அந்நாகரிகத்திற்குரிய  மக்கட் தொகுதியினர்  ஒரு காலத்தில் பாரதம் முழுக்கப் பரந்து வாழ்ந்திருந்தனர்  என்பது அறிஞர்களின் கணிப்பு. உலக மொழிக்குடும்பங்களில் ஒன்றாக விளங்கும் திராவிடமொழிக் குடும்பத்தில் தலைமை சான்ற மொழியாகத் திகழ்வது தமிழ் மொழியே. அத்தமிழ் மொழியிலிருந்து பல கிளை மொழிகளும் தனிமொழிகளும் உருவாகியிருக்கின்றன. தமிழின் கிளை மொழிகளில் பல பழங்குடியினரின் மொழிகளும் அடக்கம். சில பழங்குடியினரின் மொழிகள் தனித்தகுதி பெறும் அளவுக்கு மாறியிருக்கின்றன. எனினும் அவற்றில் பழந்தமிழ்ச் சொற்கள் சில அவ்வாறே வழங்கப் படல் உண்டு. பல சொற்களோ சிற்சில நிலைகளில் மருவி வழங்கும் சூழலில் வழக்கிலுள்ளன. இத்தகு நிலையில் கேரள மாநிலத்தின்  பாலக்காடு மாவட்டத்திலுள்ள  அட்டப்பாடி மலைப் பகுதிகளில்  வாழ்ந்து கொண்டிருக்கும் முடுகர் இன மக்களின்  பேச்சு மொழியிலும் பல பழந்தமிழ்வழக்காறுகள் இன்றும் நிலவி வருவதைப் பார்க்கின்றோம்.

    பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய கேரளத்தில் உள்ள மலைப்பகுதிகளில்  முடுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  பிற மொழிக் கலப்பிற்கும் பிற நாகரிகக் கலப்பிற்கும் அதிகமாக இடம் தராமல்  அவர்கள்  வாழ்ந்து கொண்டிருப்பது சிறப்பு. எனவே  தங்களுக்கான தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இனமாக அவர்களை அடையாளம் காண முடிகின்றது. அம்மக்கள் பேசும் மொழியானது பழந்தமிழோடு மிக நெருங்கிய தொடர்புள்ள மொழியாக விளங்குவதை அறிய முடிகின்றது.  சான்றுக்குச் சில பெயர்ச் சொற்கள் மட்டும்  கீழே தரப்படுகின்றன.

    தமிழ் மொழி
    முடுகா மொழி

    உயர்திணைப் பெயர்கள்

    தாய்                                                                      அவ்வ, அவ்வெ, அப்ப(abba)

    தந்தை                                                                   அம்ம, அம்மெ

    என்தந்தை                                                               தந்தெ

    குழந்தை                                                                   பிள்ளெ

    கணவன்                                                                   ஆளெ(ன்)

    மனைவி                                                                    பெண்டு

    ஆண்குழந்தைகள்                                               ஆம்பிள மக்கா

    பெண்குழந்தைகள்                                               பொம்பிள மக்கா

    அஃறிணைப் பெயர்கள்

    மான்                                                                             மா

    அணில்                                                                       அணாலு

    மலையணில்                                                           பெளிலு (beLilu)

    கறையான்                                                                 சிதாலு

    முயல்                                                                             முசாலு

    காற்று                                                                            காத்து, காலு

    மேகம்                                                                            மஞ்சு

    வீடு                                                                                 கூரெ

    ஊர்                                                                                 ஊரு

    மலை                                                                              மலெ, வரெ

    குகை                                                                               அளெ

    கீரை                                                                               அடா

    நகம்                                                                                ஒயிறு, நகா

    உரல்                                                                                உராலு

    உலக்கை                                                                      உலாக்கெ

    சோறு                                                                             சோறு, அன்னம்

    தேன்                                                                               தேனு

    மலைத்தேன்                                                              பெருந்தேன்

    வானம்                                                                           வானு

    உனக்கு                                                                           நினக்கு

    கிழங்கு                                                                          கிகாங்கு

    முதலான சில முடுகா மொழிப் பெயர்ச்சொற்களை நாம் கண்ணுறும்போது  அவை பழந்தமிழின்  பல சொற்களையும் சில வடிவ மாற்றத்தோடு வழங்கி வருவனவாகக் காணப்படுகின்றன. அதனால் பழந்தமிழின் ஒரு வட்டார வழக்கு மொழியாக இம்மொழியினை இனங்காண வழியுண்டு.

    முடுகா மொழியில் “தாய்” என்ற உறவு முறைச் சொல் “அவ்வ”  அல்லது “ அப்ப” (abba)  என்று இடம் பெறுகின்றது. இச்சொல் செவ்விலக்கியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் பதிவாகியுள்ளது.

    அவ்வையர் ஆயினீர்: நும்அடி தொழுதேன். (மணி–பாத்திரம் பெற்ற காதை – 137)

    என்று மணிமேகலை கூறுகின்ற கூற்றில் ”தாய்” என்னும் பொருளமைந்த “அவ்வை” என்ற சொல் இடம் பெறுவதைப் பார்க்கின்றோம்.  இச்சொல் முடுகர் நாவில் ஒலிக்கப்படும்  பொழுது  சிற்சில சமயங்களில் “அப்ப” (abba) என்றும் மாறுகின்றது. இங்கு வகரம் ஒலிப்பு ஒலியாகிய பகரமாக (ba) மாறியொலிக்கின்றது. உச்சரிப்பு எளிமை கருதி இத்தகைய மாற்றத்தினைப் பெறுகின்றது. கீழிதழையும் மேற்பல்லையும் பொருத்தி உச்சரிப்பதைவிட இரு இதழ்களையும்  பொருத்தி உச்சரிக்கும் செயல்  எளிமையாக அமைந்து விடுகின்றது. எனவே பல வகரச் சொற்களும் இம்மொழியில் இத்தகைய மாற்றத்தினை அடைவது இயல்பாகி விடுகின்றது.

     முடுகர் இன மக்கள் தந்தையை விளிக்கும் போது ”அம்ம” என்கின்றனர். ஆனால் பிறரிடம் தந்தையைப் பற்றிப் பேசும் போது “என்னு தந்தெ” என்று கூறுவதுண்டு. இச்சொல் வழக்காறும்  சங்ககாலத்திற்குரியதே.

    குறுக வாரல் தந்தை” (அகநா – 195) என்ற அகநானூற்று  அடியினில்  அச்சொல் இடம்பெறுவதுண்டு.

    பறவைகளின்  குஞ்சுகளை தொல்காப்பியம்  “பிள்ளை” என்று குறிப்பதுண்டு.

    “அவற்றுள் பார்ப்பும் பிள்ளையும்  பறப்பவற் றிளமை”(தொல் 1503)

    என்பது நூற்பா. ஆனால் முடுகர் மொழியில் அச்சொல் உயர்திணையில் குழந்தையினைச் சுட்ட வரும்  சொல்லாக அமைகின்றது. குழந்தையை அம்மக்கள் “பிள்ளெ” என்பார்கள். மட்டுமின்றி பன்மை நிலையில் குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது “மக்கள்”, “மக்களு”  என்ற சொல் முடுகரிடையே புழக்கத்திலுள்ளது.

       ”…………..வடமொழிப் பெயர் பெற்ற
        முகத்தவன் மக்களுள்  முதியவன் புணர்ப்பினால்” (கலித் – 25 – 2)

    என்னும் கலித்தொடரில்  பன்மையில் குழந்தைகளைச் சுட்டுவதற்கு  ”மக்கள்” என்ற சொல் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம்.

    முடுகர்கள் கணவனை “ஆளெ(ன்) என்றும் மனைவியை “பெண்டு” என்றும் கூறுவர். இச்சொற்கள்  சங்க இலக்கியங்களில்  காணப்படுவது கண்கூடு. திருமுருகாற்றுப் படையில்  முருகனைச் சிறப்பித்துப் பேசும் நக்கீரர்  “இசைபேர் ஆள”(திருமுரு – 270) என்று விளிப்பதுண்டு. இங்கு ”உரியவன்”, ”ஆள்பவன் ” என்ற பொருள்களில்  “ஆளன்” என்ற சொல் இடம்பெறுகின்றது. ஆகவே ‘இல்லத்தை ஆள்பவன்’, ’மனைவிக்கு உரியவன்’ என்ற பொருள்களில் முடுகர்கள் கணவனை  ‘ஆளெ(ன்)’ என்ற சொல்லால் புலப்படுத்துகின்றார்கள் என்று  கருதலாம்.  சங்கத் தமிழர் அரசனின் மனைவியைக் குறிப்பதற்கு “பெருங்கோப்பெண்டு” என்று மொழிந்திருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே முடுகர்களும் மனைவியை ”பெண்டு”  என்ற சொல்லால்  வழங்குவது கவனிக்கத்தக்கது. .

    மான் என்னும் உயிரினம் சங்ககாலத்தில்  “மா” என்றழைக்கப் பட்டதுண்டு. முடுகர்கள்  இன்றளவும்  மானைச் சுட்டுவதற்கு “மா” என்பதனையே  வழக்கத்தில் வைத்திருக்கின்றார்கள். “மாப்பிணை” (புறநா – 2) என்றவாறு அமையும் புறநானூற்றுச் சொல் மான்பிணையைச் சுட்டுவதற்கு வந்ததாக அமைகின்றது. ”அணில்” என்னும் சிறுபிராணி முடுகர்களால் “அணாலு” என்று கூறப்படுகின்றது. மலையணிலைக் குறிக்கும்போது “பெளிலு” (beLilu) என்பர்.

    அணிலாடு முன்றில்” (குறுந் – 41)

    கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை” (அகநா – 12)

    என்ற  பழந்தமிழிலக்கியத்  தொடர்களில்  அணில், வெளில் என்ற சொற்கள் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம். இச்சொற்கள்

    அணில் – அணிலு – அணலு –  அணாலு என்றும்

    வெளில் – வெளிலு – பெளிலு (beLilu) என்றும் மருவி முடுகர்களால் வழங்கப்படுகின்றன. இங்கு  முயற்சி எளிமை கருதி பல்லிதழ் ஒலியாகிய வகரத்தை ஒலிப்பில் ஒலியாகிய பகரமாக(ba)  மாற்றிவிடுகின்றார்கள். இத்தகு நிலையினை மன்னான், இரவாளர், இருளர் போன்ற இதர பழங்குடியினரின்  மொழிகளிலும் காணலாம்.

    “கறையான்” எனும் சிறு உயிரினத்தை முடுகர் இன மக்கள் “சிதாலு” என்பர். இச்சொல் வழக்காற்றினை  “முது  சுவர்க் கணச்சிதல் அரித்த” (சிறுபாண் – 133) என்றவாறு சிறுபாணாற்றுப் படையில் காண்கின்றோம். இங்கு  சிதல் – சிதலு – சிதாலு என்று முயற்சி எளிமையின் பொருட்டு மொழியிடை அகரம் ஆகாரமாக நீண்டொலிக்கின்றது. ”முயல்” என்ற பெயர்ச் சொல்லும் இத்தகு மாற்றத்திற்கு உள்ளாவது உண்டு.    “முயல் சுட்ட வாயினும் தருகுவோம்” (புறநா – 319) என்னும் தொடரில் இடம்பெறும் ”முயல்”  என்ற சொல் முடுகா மொழியில் “முசாலு” என்று மாற்றமடைகின்றது. தமிழைப் பொறுத்த வரையில் பேச்சு வழக்கில் மொழியிடை யகரம் சகரமாக மாற்றம் பெறுதலுண்டு. பங்கயம் – பங்கசம் என்று ஒலிக்கப் பெறுதலைக் காணலாம். அவ்வாறே இங்கு   முயல் – முசல் – முசால் – முசாலு என்று மாற்றமடைவதைப் பார்க்கின்றோம். முடுகர்கள் வீட்டினை “கூரெ” என்று சுட்டுவர். இச்சொல் பழந்தமிழிலக்கியங்களில் இடம் பெறுவதுண்டு. ”குறுங் கூரைக் குடிநாப்பண்” (பட்டினப் – 81)  என்பார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.  மலையினை சங்ககால மக்கள் “வரை” என்றும் வழங்குவர்.  “பனிபடு நெடு வரை” (புறநா – 6) என்னும் தொடரே அதற்குச் சான்று. அச்சொல்லினை முடுகர் இன மக்கள் “வரெ” என்று கூறுவர்.

    காற்றினைக் “காத்து”, “காலு” என்ற இருநிலைகளில் கூறுவது முடுகர் இன மக்களின் வழக்கமாகும். அவ்வாறெ “மேகம்” என்பதனை “மஞ்சு” என்ற  சொல்லால் அம்மக்கள் கூறியமைவதுண்டு. “குகை” என்பதோ “அளெ” என்ற சொல்லால்  குறிக்கப்படும்.

            “காற்று என்னக் கடிது” (மதுரைக் 52)

    கால் உணவாக” (புறநா – 43)

    அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன” (அகநா – 71)

    அளைச் செறி உழுவை” (புறநா – 78)

    போன்ற சங்கத் தொடர்களில் காற்று, கால், மஞ்சு, அளை முதலான சொற்கள் இடம் பெறுகின்றன. அச்சொற்களே சிறு அளவிலான மாற்றங்களுடன் முடுகா மொழியில்  வழங்கப்படுகின்றன. அங்ஙனமே

              “உரற்கால் யானை” (குறுந் – 232)

    பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை” (குறுந் – 238)

    என்ற சங்கத் தொடர்களில் காணலாகும்  “உரல்”, ”உலக்கை”  என்பன முறையே “உராலு”, ”உலாக்கெ” என்ற நிலையில் முடுகர் மொழியில்  சற்று நீண்டு ஒலிக்கப் படும் சொற்களாக மாற்றமடைகின்றன.

    குறுந்தொகைத் தலைவி மலைத் தேனைப் பற்றிக் கூறும்போது “பெருந்தேன்” என்று சிறப்பித்துக் கூறுவாள்.  “பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” (குறுந் – 3) என்பது  குறுந்தொகைத் தலைவியின் கூற்று. முடுகர் மொழியிலும் மலைத்தேனைக் குறிப்பதற்கு ”பெருந்தேனு” என்ற சொல்லே  பயன்பாட்டில் உள்ளது.

    “நகம்” என்னும் சொல் முடுகர் மொழியில் “ஒயிரு” , நகா” என்ற சொற்களால் வழங்கப்படுகின்றது.  ”உகிர்” என்ற சங்ககாலச்சொல் உகிர் – ஒகிர் – ஒகிரு – ஒயிரு என்று முடுகர் மொழியில் மருவியிருக்க வேண்டும். ”வள் உகிர்க் குறைத்த” (சிறுபாண் – 136) என்ற பத்துப்பாட்டுத் தொடரில்  ”உகிர்”  என்ற சொல்  நகத்தைக்  குறிப்பதாக  அமைகின்றது. அவ்வாறே “கீரை”  என்ற சொல்லின் வேறு வடிவமான “அடகு” என்னும் சங்கச் சொல் முடுகர் மொழியில் “அடா”  என்ற நிலையில் காணப்படுகின்றது.  இங்கு ஈறு மறைந்து  ஈற்றயல்  நீண்டு அமைந்த சொல்லாக மாறி விடுவதை உணரலாம். ”படப்பை கொய்த அடகு” (புறநா – 140)  என்று புறநானூற்றில்  அச்சொல் இடம்பெறுவதுண்டு.

    ”சோறு” என்ற சொல் சங்க காலத்தில் உணவைக் குறித்த சொல்லாக  வழங்கப்பட்டது. முடுகர்களும்  உணவினைக் குறிப்பதற்கு  “சோறு” என்ற வழக்காற்றினையே பயன்படுத்துகின்றனர். ”சோறு வாக்கிய கொழுங்கஞ்சி” (பட்டினப் – 44) என்பது பட்டினப்பாலைத் தொடராகும்.

    ”வானம்” என்பது சங்ககாலத்தில்  “வான்” என்றும் குறிக்கப்பட்டது.  “வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய” (அகநா – 10) என்னும் அகநானூற்றுத் தொடரில் அச்சொல் இடம்பெறுதல் உண்டு. அச்சொல் முடுகர்களால் “வானு” என்றவாறு  ஈற்று மெய்யின் மீது உகரம் ஏறிய நிலையில்  வழங்கப்படுகின்றது.  “உனக்கு” என்னும் தற்காலத் தமிழ் வடிவம் முடுகர் மொழியில் “நினக்கு” என்று சுட்டப்படுகின்றது. இச்சொல் வழக்காறு சங்ககாலத்திற்குரியதாகும்.

    நினக்கே அன்றுஅஃது  எமக்குமார் இனிதே” (ஐங்குறு – 46)

    என்னும் சங்க இலக்கியத் தொடரில்  அச்சொல் இடம்பெறுவதைக் காணலாம். ”கிழங்கு” என்னும் தமிழ்ச்சொல் முடுகா மொழியில் “கிகாங்கு” என்று சற்று மருவிய நிலையில் காணப்படுகின்றது.  உச்சரிப்பு எளிமை காரணமாக ழகரத்தைத் தவிர்க்கும் பொருட்டு இவ்வாறு மருவியிருக்கின்றது என்பது புலனாகின்றது. இம்மொழியில்  ழகர ஒலி வழக்கிலில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி” (புறநா – 168) என்னும் தொடரில் ”கிழங்கு” என்னும் சொல் இடம்பெறுவதைக் காணலாம்.

    மேற்கண்ட சான்றுகளால் முடுகாமொழியின் பெயர்ச்சொற்கள் பழந்தமிழின் பெயர்ச் சொற்களோடு நெருங்கிய உறவு கொண்ட சொற்களாக உள்ளன  என்று உறுதியாக மொழியலாம்.  முடுகா மொழியின் வினைச்சொற்களும் இத்தகைய நிலையினவே என்பது இதனால் பெறப்படும். அதனால் பழந்தமிழின் வட்டார வழக்கு  மொழிகள்  இன்னும் மறைந்து விடவில்லை என்பது தெளிவாகின்றது. எனவே இத்தகு பழங்குடியினர் மொழிகளை ஆய்ந்துணர்ந்து பழந்தமிழின் இயல்பினை உணர்ந்தறிவது மொழியறிஞர்களின் கடமையாகின்றது.

    *****

    துணை நின்ற நூல்கள்:

    1. அகத்தியலிங்கம். ச , திராவிட மொழிகள் , மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை -08.
    2. கருணாகரன். கி , சமுதாய மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு, சிதம்பரம் – 1.
    3. சண்முகம் பிள்ளை.மு. (ப. ஆ), தொல்காப்பியம் –பொருள்- இளம்பூரணம், முல்லை நிலையம், மண்ணடி, சென்னை – 1.

    4..தண்டபாணி. துரை (உ.ஆ).  2010. மணிமேகலை  உமா பதிப்பகம்                                                                            மண்ணடி, சென்னை-1.

    1. பாலசுப்பிரமணியன்.கு(த.ப.ஆ), எட்டுத்தொகை& பத்துப்பாட்டு நூல்கள் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2004.

    *****

    கட்டுரையாளர் பணியாற்றுவது –  தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம்,
    அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, 678104.                                         அலைபேசி: 9846741558

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 134

    நிர்மலா ராகவன்

     

    எப்படியெல்லாம் கையாளுகிறார்கள்!

    `பெண் என்றால் ஆணுக்கு அடங்கி இருக்கவேண்டும்!’

    பெண்கள் கல்வியறிவு பெறுவதே தகாத காரியம் என்றிருந்த காலத்தில் எவரெவரோ எழுதி வைத்துவிட்டுப்போனது. ஆணாதிக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் தற்காலத்திலும் நம்புவது – தமக்குச் சாதகமாக இருப்பதால்.

    இன்று பெண்களும் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். உத்தியோகம் வகித்து, சொந்தக்காலில் நிற்கவும் முடிகிறது. அவர்களை இப்போது நேரிடையாக எதிர்த்தால், ஆத்திரம்கொண்டு எதிர்ப்பார்களே! அதனால், அவர்களே உணராதபடி கையாள்வது வழக்கமாக ஆகிவிட்டது.

    பிறரைக் கையாள்வதற்கு எத்தனை எத்தனையோ வழிமுறைகள்!

    1   போலியான புகழ்ச்சிமூலம்.

    எந்தப் பெண்ணும், `நீ எவ்வளவு அழகு!’ `உன்னைமாதிரி வெகுளித்தனமாக சிரிப்பவர்களை இப்போது எங்கே பார்க்க முடிகிறது!’ என்றெல்லாம் பலவாறாகப் பாராட்டினால், உடனே மயங்கிவிடுவாள்.

    2   வேறு எந்த கவனமும் இல்லாததுபோல் அவளையே கூர்ந்து கவனிப்பது. (பல நாட்டுப் பெண்களும் இதற்குத்தான் மயங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்).

    3   போலியான கரிசனத்தால்.

    `இந்த இளம் வயதில் உனக்கு இவ்வளவு பொறுப்புகளா!’

    `நீ வயதுக்குமீறிய  புத்திசாலி. அதனாலேயே உன்னை ஒருவருமே புரிந்துகொள்வது கிடையாது, இல்லையா?’

    4   இனிமையான பேச்சு.

    ஒரு பெண்ணுக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதைப்பற்றியே பேசி, அவள் நம்பிக்கையையும், நட்பையும் பெறுவதற்கு ஒரு நல்ல வழி இது.

    5   ஒருவரது மனதைப் புண்படுத்திவிட்டு, அளவுக்கு மீறி, திரும்பத் திரும்ப மன்னிப்பு கோருவது.

    6   ஒரு பெண் வேடிக்கை என்றெண்ணி எதையாவது ரசித்துக் கூறுகையில், பெரிதாகச் சிரிப்பது.

    7   பரிசுகள் வழங்குவது.

    (இவற்றில் சில வழிகளைப் பெண்களும் கையாளக்கூடும்).

    `நான் சொன்னதைக் கேட்க யார் இருக்கிறார்கள்!’ என்று கழிவிரக்கத்துடன் பேசி, பச்சாதாபத்தை உண்டுபண்ணுவது.

    8   கத்துவது. இம்முறை பலிக்காதுபோனால், அழுவது. (சிறு குழந்தைகளுக்கு இத்தன்மை இயற்கையாகவே அமைந்திருக்கிறது).

    வாழ்க்கைத்துணையோ, நண்பர்களோ, ஒருவரின் நம்பிக்கையைப் பெற்றபின், தமக்குச் சாதகமானதை சூழ்ச்சி செய்தாவது படியவைக்கிறார்கள் பலரும். இலக்கானவர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல் புரிய வைக்கிறார்கள்.

    கதை

    சிவானி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்வி படித்தபோது காதலனாக அமைந்தவன் ராஜா. காதல் மயக்கத்தில், அவனுக்குப் போதைப்பழக்கம் இருந்தது அப்போது அவளுக்குத் தெரியவில்லை.

    சில மாதங்கள் உல்லாசமாகக் கழிந்தன.

    `உனக்கு உண்மையில் என்மேல் காதல் இருந்தால், நான் சொன்னதைக் கேட்பாய்,’ என்று ராஜா வற்புறுத்த ஆரம்பித்தான். முதலில் மறுத்த சிவானி, அவன் பேச்சில் மயங்கி, ஓரிரு முறை அவனுடன் சேர்ந்து போதை மருந்தை உடலில் செலுத்திக்கொண்டாள். விரைவிலேயே அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாது போயிற்று.

    பணத்திற்கு என்ன செய்வது?

    அதற்கும் ஒரு வழி காட்டினான் காதலன்.

    போதை மருந்தை விற்பனை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாள் சிவானி.

    `புத்தி கெட்டுப்போய் அவனோட சேர்ந்து, என் வாழ்க்கையையே பாழடிச்சுக்கிட்டேன்!’ என்று கதறினாள் சிவானி. (மலேசிய தொலைகாட்சியில் பார்த்தது).

    பிறரைத் தம் வசப்படுத்த விரும்புகிறவர்கள்  தாமே சிறந்தோங்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் பிறரை ஏளனம் செய்தும், அச்சமுறுத்தியும் அவர்களுக்குத் தம்மேலேயே சந்தேகம் எழச் செய்துவிடுவார்கள்.

    `எனக்குத் தெரிந்துவிட்டது. உனக்கு யாரோ காதலன் இருந்திருக்கிறான்!’ என்று மிரட்டி மனைவியின் பணிவைப் பெற முயற்சிப்பார்கள் சிலர். பழி உண்மையாக இல்லாவிட்டாலும், பெண்ணுக்கு அச்சமும் துக்கமும் எழும்.

    பொறுக்க முடியாது அவள் எதிர்த்தால், சாமான்களைத் தூக்கிப்போட்டு உடைத்தல். `விவாகரத்துதான் ஒரே வழி!’ என்று மிரட்டுவான்.

    குடும்ப அமைதி கெடுமே, குழந்தைகள் அஞ்சுவார்களே என்று பணிந்துவிடுகிறாள் பெண்.

    `நீங்கள் ஓயாமல் என்னைக் கட்டுப்படுத்துகிறீர்கள்!’ என்ற எதிர்ப்பு எழுந்தால், அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதும் ஒரு கலைதான்

    லாவகமாக பேச்சை மாற்றக்கூடும்.

    `நான் சிறு வயதில், உன்னைப்போல் மகிழ்ச்சியாக இருக்கவில்லை!’ (அந்தஸ்து வித்தியாசத்தில் மணம் புரிந்துகொள்பவர்கள் கையாளும் முறை).

    வலிய வரவழைத்துக்கொண்ட அலுப்பு: `உனக்கு என்னை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்!’

    கதை

    “உனக்குக் கடையில் இருப்பதை எல்லாம் வாங்கிவிட வேண்டும்!”

    பாஸ்கரன் கத்தியது எல்லாருக்கும் கேட்கும்படி அமைந்தது. அவன் தன் மனைவியைத்தான் வார்த்தைகளால் தாக்கினான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

    “எனக்கென்று வாய்த்தாயே! அடிமுட்டாள்!” என்ற சீறல் வேறு!

    முகம் சிறுக்க, தாரா சுற்றுமுற்றும் பார்த்தாள். அனைவரும் எதுவும் காதில் விழாததுபோல் தத்தம் காரியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் அந்தப் பேரங்காடியில்.

    வீட்டுக்கு வந்ததும், அழுகையுடன், ஒரு பொது இடத்தில் கணவன் தன்னை அவமானகரமாக நடத்தியதை பதின்ம வயது மகளிடம் முறையிட்டாள் தாரா.

    “ஒன்றைப் பத்தாக்குவதே இவள் வேலை! சும்மா சொல்கிறாள்,” என்று சமாளித்தான் பாஸ்கரன்.

    மனைவியிடம், “நீயே ஏதேதோ கற்பனை செய்துகொள்கிறாய்! நான் எங்கே அப்படிச் சொன்னேன்!” என்று அப்பாவித்தனமாகக் கூற, அவளுக்குக் குழப்பம் உண்டாகியது.

    பல முறை அப்படியே நடக்க, தாராவின் பொறுமை மீறியது. “இன்னொரு முறை நீங்கள் அப்படி நடந்தால், நானும் அங்கேயே பதிலுக்குக் கத்துவேன்!” என்று மிரட்டினாள்.

    அடுத்த முறை, அவள் ஒவ்வொரு சாமானைக் கையில் எடுக்கும்போதும், `இது எதற்கு? அநாவசியம்!’ என்று பாஸ்கரன் ஆட்சேபிக்க, அவள் வாங்கவில்லை. (அவர்களுக்குப் பணப்பிரச்னை கிடையாது. அதிகாரம் செய்பவன்தான் ஆண் என்ற மனப்பான்மை கொண்ட மனிதர்களுள் ஒருவன் பாஸ்கரன்).

    “சாப்பிட நொறுக்குத்தீனி ஒன்றுமே இல்லையே1” என்று குறைப்பட்டபோது, “எதுவுமே வாங்காதே என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? எப்படிப் பண்ணுவது?” என்று தாக்கினாள் மனைவி.

    பயம், மரியாதை, கலாசாரம் என்று ஒரேயடியாக விட்டுக்கொடுத்துவிட்டால், நம்மையே நம்மால் மதிக்க முடியாது போகலாம். அல்லது, நம் அதிர்ஷ்டத்தைக் குறை கூறிக்கொண்டே இருப்போம்.

    முடிவெடுப்பது உன் கையில்தான்!

    சில சமயம், நண்பர்களோ, உறவினர்களோ, `நீ இதுதான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்யவேண்டும்!’ என்று வற்புறுத்துவார்கள். சாப்பாட்டு சமாசாரமோ, உடை வாங்குவதோ எல்லாவற்றிலும் அவர்களின் குறுக்கீடு இருக்கும்.

    நம் உணர்வுகளைவிட அவர்களது உணர்வுக்கு எதற்காக அதிக மதிப்புக் கொடுத்து நடக்கவேண்டும்?

    (விருந்தோம்பல் என்ற பெயரில் நம்மை அளவுக்குமீறி சாப்பிட வைத்து, மறுநாள் வயிற்றுக்கோளாறால் அவதிப்பட வைப்பவர்கள் சிந்திப்பார்களா?!)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 43

    க. பாலசுப்பிரமணியன்

     

    மன அழுத்தங்களும் தோல்விகளும்

    வாழ்க்கையிலே பல பேர்கள் நல்ல அறிஞர்களாக இருந்தாலும், நன்கு படித்தவர்களாக இருந்தாலும், நல்ல திறனுடையவர்களாக இருந்தாலும் அடிக்கடி தோல்வியைத் தழுவிக்கொள்கின்றனர். “இவ்வளவு இருந்தும் நாம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லையே” என்ற ஆதங்கத்தில் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் – அவர்களில் பலர் மன அழுத்தங்களுக்கு இரையாகித் தங்கள் வெற்றிப்பாதைகளுக்குத் தேவையான சக்தியையும் முழுக்கவனத்தையும் இழந்து தடுமாறுவதால் மட்டுமே.

     தற்கால சமுதாயத்தின் வாழ்க்கை மேடையில் பலரும் இந்த மன அழுத்தத்திற்கு இரையாகி நிம்மதியையும் மகிழ்ச்சியையும் இழந்து நிற்கின்றனர். தேவைகளை அதிகரித்துக்கொண்டு அவைகளை அடைய முடியாததால் ஒரு பொய்யான சமாளிக்க முடியாத வழிமுறைகளை மேற்கொண்டு சிறிது காலத்திலேயே மன அழுத்தங்களுக்கு இரையாகி வாழ்க்கையிலே தோல்வியடைந்துவிட்டோம் என்ற தவறான கருத்தை மனதில் நிறுத்தி வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்குத் தயாராகி விடுகின்றனர்.

    இந்த மாதிரியான மன அழுத்தங்களுக்குப் பல காரணங்கள் உண்டு.

    1. நாம் செய்கின்ற எல்லா வேலைகளையும் நூறு விழுக்காடு சரியாகச் செய்யவேண்டும் (urge for perfection) என்ற ஒரு ஆதங்கம். இது ஒரு உன்னதமான எண்ணம்தான். இது ஒரு உயரிய நோக்கம்தான். ஆனால் இது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளும் நடக்கக்கூடியது அல்ல. ஆனால் அதற்கான முயற்சிகளை நாம் நிச்சயமாகக் கைவிடக் கூடாது. எந்தச் செயலிலும் குறைகள் இருக்க வாய்ப்புகள் உண்டு. அவைகளை அறிந்து அந்தக் குறைகளைத் தொடர்ந்து களைந்து கொண்டு வருதலே வாழ்க்கையின் சிறப்பு. இதுவன்றி குறைகளுக்காகவும் இயலாமைகளுக்காகவும் மனதில் வீணான பயம் மற்றும் தாழ்வு மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்ளுதல் தோல்விக்குத் தேவையான அடித்தளத்தை அமைந்துவிடும்.
    2. “தங்கள் வாழ்க்கையில் தாங்களே புயலை ஏற்படுத்திக்கொள்பவர்கள் சிலர் உண்டு.” என்பது ஒரு மனோதத்துவக் கணிப்பில் காணப்பட்ட உண்மை. தங்களுடைய அறியாமையினாலேயோ, அரைகுறை அறிவினாலேயோ அல்லது தங்களிடம் இல்லாத ஒரு திறனை இருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டத்துடிக்கின்ற பொய்யான பக்குவமின்மை காரணமாகவோ ஒரு செயலில் இறங்கி திக்கு முக்காடுபவர்கள் பலருண்டு. பல நேரங்களில் தங்களுக்குத் தெரியாத வியாபாரங்களைத் தொடங்கி அதன் நுணுக்கங்களை அறியாமல் பண இழப்புகளுக்கு ஆளாகி மன அழுத்தத்தில் முன்னேறமுடியாமல் தவித்து தோல்வியைத் தழுவிக்கொண்டவர்கள் பல பேர். ஒரு அலுவலகத்தில் மிகச் சிறப்பாகப் பணிசெய்துக்கொண்டிருந்த ஒருவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருந்தன. அதனால் ஏற்பட்ட தன்னுடைய தகுதியைப் பற்றிய ஒரு மாயை அவரைத் தான் அது போன்ற நிறுவனத்திற்குத் தலைவராகவே ஆகிவிட வேண்டும் என்ற ஒரு வெறியை உண்டாக்கி தற்போது இருக்கும் வேலையைத் தூக்கி எறியத் தூண்டியது. அதன்பின் ஓராண்டிற்கும் மேலாக இன்னொரு வேலை கிடைக்காமல் வேறு தொழிலும் தொடங்க முடியாமல் மன அழுத்தங்களுக்கு ஆளாகி மனநல நிபுணர்களைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஒரு சுவரில் தலையை நாமே முட்டிக்கொண்டு வலிக்கின்றதே என்று சொன்னால் அது முட்டாள்தனமான செயலன்றோ? அதைப்போலத்தான் பல நேரங்களில் சிலர் தனக்குத் தானே வேதனைகளையும் துன்பங்களையும் ஏற்படுத்திக்கொள்கின்றனர் ஆகவே தோல்விகளை நாமே ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்த்தல் மிக அவசியம்.
    3. பதட்டம், அவசரம் காரணமாக மன அழுத்தங்களை ஏற்படுத்திக்கொண்டு தவறுகளுக்கு இலக்காகி மேலும் மேலும் அதே தவறுகளை திரும்பத் திரும்பச் செய்து “உதவாக்கரை” என்று பலரால் அடைமொழி கொடுக்கப்பட்டு தோல்வியைத் தழுவியவர்கள் சிலர். பதட்டங்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. மற்றவர்களைவிட தான் அதிகமாகச் சாதிக்க வேண்டும், மற்றவர்களைவிட தான் அதிகம் சேகரிக்க வேண்டும், காலங்கள் கனிவதற்கு முன்னேயே தான் சாதனைகளை நிகழ்த்த வேண்டும், தன்னுடைய சாதனைகளையும் சேகரிப்புகளையும் விட மற்றவர்கள் அதிகம் சேகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் – என்ற சிந்தனைகள் மன அழுத்தத்தில் பதட்டங்களை ஏற்படுத்துகின்றன. அது மட்டுமின்றி, நாம் ஒரு செயலைச் செய்யும் பொழுது மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா அவர்கள் நம்மை எவ்வாறு மதிப்பீடு செய்திருப்பார்கள் என்ற ஒரு சிந்தனை பதட்டங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக தேர்வுகளுக்குச் செல்லும் மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ” நீ இதைப் படித்துவிட்டாயா?”  “இந்த கேள்விகளெல்லாம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லையே” என்ற கேள்விகள் அவர்களுடைய பதட்டங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் சில முன்னுதாரணங்கள். பல நேரங்களில் தேர்வுகளில் மாணவர்கள் இந்த பதட்ட நிலை காரணமாகவே தங்கள் முழுத் திறமையைக் காட்டாமல் தவறி விடுகின்றனர்.

    இதே போன்று மிகச் சிறப்பான தகுதி உடையவர்கள் கூட நேர்காணல்களில் பதட்டத்தினாலும் உடனே பதில் சொல்லவேண்டும் என்ற அவசர புத்தியினாலும் தவறுகள் இழைத்துத் தோல்வியை தழுவிக்கொள்கின்றனர்.

    மன அழுத்தங்களைத் தவிர்ப்பதற்கான வழிகள் என்ன?

    1. நம்மை நாமே புரிந்துகொள்ளுதல்
    2. நமது திறன்களையும் நமது சூழ்நிலைகளையும் ஏற்றுக்கொள்ளுதல்
    3. நமது செயல்களுக்கான இலக்குகள், வழிமுறைகள், எண்ணப்போக்குகள், திறன்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து செய்தல்

    4.நம்முடைய தனித்தன்மையை உணர்ந்து மற்றவர்களோடு போட்டிபோடாமல் இருத்தல்

    1. இன்ப-துன்பங்களைச் சமமாக நினைத்துச் செயல்படுதல்
    2. உடல்-மனம் இரண்டையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்பாடாக வைத்தல்
    3. நிகழ்காலத்தில் வாழ்தல் (இறந்த மற்றும் வருங்காலச் சிந்தைங்களுக்கு இரையாகாமல் இருத்தல்)

    இது போன்ற பல கருத்துக்கள் நம்மை மன- அழுத்தம் இல்லாத வாழ்வு வாழ்வதற்கு உதவும்.  முயன்று பார்க்கலாமா ?

    வாழ்க்கை ஒரு போராட்டம்தான் -ஆனால் இனியது !! – வாழ்ந்து பார்க்கலாமா ?

    (தொடரும் )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181118 -DWA wcol- Canson A4 100gsm 300dpi lr
    ”தென்பாண்டி சீமையில் தேரோடும் வீதியிலே
    என்பாண்டு மைந்தனை யரடிச்சார் -விண்பார்த்த
    வைகுண்ட வாசலின் மைவண்ணன் வாத்சல்யக்
    கைகொண்டு பார்த்தனுக்கு காப்பு’’…..கிரேசி மோகன்…..!
    Share