Blog

  • வேதாந்த அந்தாதி….!

     

    ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுத்தாலும்
    காக்கும் கடவுள் கவலைப்படான் -நோக்கு
    விதித்ததை ஏற்றி வினையால் அணைத்து
    புதைப்ப(து) அவன்பொழுது போக்கு….(1)….20-1-2010

    போக்கத்(து) உலகில் பொழுதைக் கழித்திரு
    காக்கும் கடவுளுடன் கைகோர்த்து -தாக்கும்
    செடியாய வல்வினைகள் செங்கரும்பாம், ஊன்றத்
    தடியாகும் பட்டினத் தார்….(2)….20-1-2010

    தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம்
    சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில்
    வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக்
    கரத்தியங்கும் புல்லாங் குழல்….(3)….20-1-2010

    குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர்
    விழலுக்(கு) இறைக்காதீர் வீணாய் -தழலுக்குள்
    வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
    சாகாத அவ்வுணர்வே சத்து….(4)….20-1-2010

    சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
    அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
    மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
    உனையுண்ணத் தூக்கும் உறவு….(5)….21-1-2010

    உறவும் பகையும் துறவும் தெளிவும்
    வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
    ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
    பெறுவீடு காணப் பயன்….(6)….21-1-2010

    பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
    வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
    அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
    மரணத்தில் தானே முடிவு….(7)….21-1-2010

    முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
    வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
    சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
    தர்கமற்ற தேடல் தவம்….(OR)
    தர்கத்தைத் தாண்டல் தவம்….(8)….21-1-2010

    தவமாய்த் தவமிருந்து தத்துவங்கள் தேர்ந்து
    சவமாய் சுடுகாடு செல்வீர் -சிவஞானம்
    சிந்திக்க வாராது சித்தம் ஒருமிக்க
    சந்திக்க முந்துவான் சம்பு….(9)….21-1-2010

    சம்பு மஹேசனை நம்பியவன் நானென்று
    கும்பிடப் போக வரும்குறுக்கே -ஒன்பது
    வாசலுடற் கோசத்தில் நேசமுறக் காண்போமே
    ஈசனிடம் சாத்தான் இயல்பு….(10)….21-1-2010

    இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
    குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
    பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
    சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்….(11)….21-1-2010

    சமர்த்தஅவ் ஆன்மனை சிந்தா சனத்தில்
    அமர்த்தி இகபரம் ஆளு -நிமிர்த்த
    முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
    விடியாத நெஞ்சை விலக்கு….(12)….22-1-2010

    விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
    விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
    இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
    தனிமரத் தோப்பில் திளைப்பு….(13)….22-1-2010

    திளைப்பாய், இளைப்பாய், களைப்பாய் புலனார்
    அலைக்கழிப்பால் ஆயுள் அடைப்பாய் -முலைப்பால்
    அருந்திட மீண்டும் அவனிக்கு வருவாய்
    திருந்திட ஏற்பாய் துறவு….(14)….22-1-2010

    துறவில் மரமாய், உறவில் கிளையாய்
    பிரிவில் கனியாய்ப் பழுத்து -நிறைவில்
    நிலைத்திருப்பாய் நெஞ்சமே ஞானக் கடலின்
    அலைக்கரத்தால் மண்தொட்(டு) அகன்று….(15)….22-1-2010

    அகன்று விரியும், அணுவாய்க் குறையும்
    உகந்த உறவில் உலவும் -புகன்ற
    மறைகளும் காணா மகத்துவம் நெஞ்ச
    அறைதனில் வாழும் அவன்….(16)….22-1-2010

    அவனால் அவனி, அவன்தான் புவனி
    அவனை அவனால் கவனி -அவனே
    வருவான் குருவாய் அறிவைத் தருவான்
    பெருவாய் பரம பதம்….(17)….22-1-2010

    பதப்பருக்கை பானை புசிக்கின்ற பூதம்
    முதற்கொண்டிங்(கு) எல்லாமே மாயை -எதற்காக
    அம்மா பசியென்றிங்(கு) ஆலாய்ப் பறக்கின்றாய்
    சும்மா இருக்க சுகம்….(18)….23-1-2010

    சுகம்கிடைத்தும் ஓரிடத்தில் சும்மா இராமல்
    நகம்கடித்து நாற்புறமும் நோக்கி -முகம்சுளிப்பாய்
    மேலான பேரின்பம் தோலால் கிடைக்காது
    வேளாண்மை செய்யான்மா வில்….(19)….23-1-2010

    வில்லிருந்தும் தோளிருந்தும் வீரம் பிறக்காது
    கள்ளிருந்தும் போதை கிடைக்காது -உள்ளிருக்கும்
    ஆன்மனே ஆண்மை அவனெழுச்சி சம்போகம்
    ஊன்மனங்கள் சோரும் உறுப்பு….(20)….23-1-2010

    உறுப்பதற்கு ஞானம், உரைப்பது மோனம்
    பிறப்பிறப்(பு) இல்லா புருஷன் -கருப்பொருளாய்
    சக்தியவள் , அன்பில் சிவனவன், பாலில்
    யுக்தியிலாண் பெண்ணாம் அது….(21)….23-1-2010

    அதுவாக ஓர்நாள் ருதுவாகும் ஆன்மா
    அதுவரை ஐம்புலனை ஆள்வாய் -கதையல்ல
    கற்பனை மாயையைக் கட்டக் களித்துடுவான்
    அற்பனும் அக்குடையை ஆண்டு….(22)….26-1-2010

    ஆண்டோனும் ஆண்டியும் மாண்டபின் மீண்டுமிங்கு
    ஆண்டியாய் ஆண்டோனாய் ஆகிடுவர் -வேண்டாமே
    வேஷமிது அஞ்ஞானம் வேதாந்த கும்பலின்
    பாஷையில் கோவிந்தா போடு….(23)….26-1-2010

    போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
    ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
    அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்
    கொய்யா(து) இருப்பானா கூறு….(24)….26-1-2010

    கூறிடும் கீதை குரான்பைபிள் எல்லாமே
    போரிட ஐம்புலன் போகுமென்று -சாறான்மா
    விட்டிந்த சக்கையாம் கட்டையைப் பேணுகிற
    மட்டிங்கு ஜீவனுக்கு மண்….(25)….26-1-2010

    மண்ணோடு மண்ணாகும் மேனியை மெய்யென்று
    உன்னோடு சேர்த்து உழலாதே -பெண்ணோடு
    ஆணாகும் பேரின்ப ஆன்மா அசலாம்
    நானாகும் தோற்றம் நகல்….(26)….27-1-2010

    நகிலைப் புகழ்ந்து முகில்குழலைப் பாடி
    துகிலணி மாதர் துணையே -புகலென்று
    வீழ்ந்து வணங்காதே தாழ்ந்து துதிக்காதே
    ஆழ்ந்திரு ஆன்மாவில் வாழ்ந்து….(27)….27-1-2010

    வாழ்க்கையில் வென்றென்ன வாரிக் குவித்தென்ன
    சீழ்க்கை அடித்து சிலிர்த்தென்ன -ஊழ்பையன்
    எள்ளி நகையாடி ஏய்ப்பது கேட்கிலையோ
    பள்ளி எழுந்திருப் பாய்….(28)….27-1-2010

    பாயில் படுத்து பணியாய் புணர்ந்திட
    நோயாய் வயோதிகம் நேர்ந்ததே -காயை
    தனியாய்த் தவத்தில் பிணிமூப்(பு) இராது
    கனியாக்கும் வித்தையைக் கல்….(29)….27-1-2010

    கல்வியா செல்வமா கேட்போர்க்கு வீரமாய்
    சொல்லுவாய் ஆன்ம சுதந்திரத்தை -அல்லலாய்
    பாரமாகி மூப்பில் பிணியுற்ற வேளையில்
    வீரமா கோழைக்கு வாய்ப்பு….(30)….27-1-2010

    வாய்க்கரிசி போட்டவாய் மாய்ந்தவுயிர் போகும்முன்
    வாய்க்கு ருசியாய் விருந்துண்ணும் -வாய்க்குவாய்
    பேராண்மை போற்றுவர் பத்தாம்நாள் தூற்றுவர்
    ஓரான்மா தானுன் உறவு….(31)….27-1-2010

    உறவுக்குத் தேவை உருவும் திருவும்
    கறவைக்குப் பின்லாடம் காலில் -பறவைக்கு
    உள்ள சுதந்திரமும் இல்லை, சிறகுவிரி
    கள்ளத் தனத்திலென்ன கற்பு….(32)….28-1-2010

    கற்பூர வாசனை கழுதை அறியுமா
    விற்பனைக்கு வந்தாலும் வீடுபெறும் -நற்கதியை
    நெஞ்சமது ஏற்காது வஞ்சக மாயைகை
    அஞ்சுவிரல் கோர்க்கும் அசடு….(33)….28-1-2010

    அசடுக்கு உண்டு அடைக்கும்தாள் வாழ்க்கை
    கசடற கற்றுக் கொடுத்தும் -முசுடாய்
    கதவைத் திறக்காது, காற்றாக ஞானப்
    பதவி வரப்போடும் பூட்டு….(34)….28-1-2010

    பூட்டாத நெஞ்சக வீட்டாசை வாயிலில்
    கூட்டைம் புலன்களே காவலாம் -கோட்டான்கள்
    ஆண்டவன் வேடத்தில் ஆளை மயக்கிடும்
    வேண்டாமை வேண்டல் விதி….(35)….28-1-2010

    விதியை ஜெயிக்க மதியின் முயற்சி
    நதியை குடத்தில் நிரப்பல் -எதையும்
    புதிதாய்ப் பழகேல் பழயன போற்று
    உதவிக்கு உபநிடதம் உண்டு….(36)….28-1-2010

    உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
    கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
    செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
    ரெண்டாகி வந்துபோகும் பண்டு….(37)….29-1-2010

    பண்டமாய் பாத்திரமாய் உண்டவனாய் ஜீரணிப்பாய்
    பிண்டமாய் மோட்சமாய் பித்ருவாய் -எண்டிசையாய்
    பூதமாய் புல்பூண்டாய் யாதுமாய் உள்ளதாய்
    ஆதலே ஆன்மீக ஆய்வு….(38)….1-2-2010

    ஆய்ந்தரிய ஆன்மா அவரைக்காய் அல்லவே
    மேய்ன்தழியும் ஐம்புல மாடுகளை -சாய்ந்திருந்து
    வேடிக்கைப் பார்த்திடும் வேதாந்த பட்சியாம்
    பாடிக்கை கோர்த்துப் பற….(39)….3-2-2010

    பறந்திடும் ஆவி ,பிறந்திறக்கும் மேனி
    மறந்திடும் மாயமனக் கூனி -நிரந்தரம்
    ஒன்றந்த ஆன்மனுடன் ஒன்றி இருத்தலே
    கன்றிந்த ஜீவனுக்கு காப்பு….(40)….3-2-2010

    Share
  • பேஷ்! பேஷ்! சீரீஸ் [3]

    இன்னம்பூரான்

    ஆகஸ்ட் 24, 2018

    ஆங்கிலத்தில் அதிகப்படியாக ஒரு மைல் நடக்கவும் என்பார்கள். அதாவது உம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடமையையும், அனுமார் கடலை தாண்டின மாதிரி, தாண்டி செயல்பட்டால் தான் மேன்மை என்பார்கள். என்னுடைய அனுபவத்தில் இந்த நல்வரவை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அரசு உத்யோகம் என்று மட்டுமில்லை. யாவருக்கும் – தோட்டியிலிருந்து தொண்டைமான்- வரைக்கும் இது பொருந்தும். 

    ‘செல்வகளஞ்சியமாக’ அங்கங்கே காப்பரேட் ஆஸ்பத்திரிகள் மடியில் கை போடும் இன்றைய சூழ்நிலையில், சென்னை பொது ஆஸ்பத்திரியில் (ராஜீவ் காந்தி நாமகரணம் பிற்காலத்தில். 400 வருடங்களுக்கு மேலாக பணி புரியும் தர்மாஸ்பத்திரிக்கு) அவசர மருத்துவ துறை 24×7 பரபரப்பாக இருக்கும்; எங்கு பார்த்தாலும் ரத்தம், ஓலம், ஒரு மாதிரியான அக்கறையின்மை, கீழ்த்தட்டு மக்களிடம் கீழ்த்தட்டு மக்கள் பணம் பிடுங்குவது, சாவு, சாவு கிராக்கி வகையறா.

    கடந்த ஏழு மாதங்களுக்குள் மெச்சத்தக்க முன்னேற்றங்கள். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தேவையான தகவல் வருமுன் கொடுத்து விடுவதால், ஒரு டீம் தயார் நிலையில் வரவேற்று உரிய அவசர சிகிச்சை அளிக்கின்றனர். கத்திக்குத்துப்பட்டவரும், இதயக்கோளாறு நோயாளியும், சைக்கிளிலிருந்து விழுந்து லேசாக சிராய்த்துக்கொண்டவருக்கும் வரிசைப்படி ஒரே டீம் கவனிப்பு. அதற்குள் ஒருவர் செத்தால், அது அவர் தலைவிதி. அந்தக்காலம் போச்சு. அதி அவசரம்: சிவப்பு/அவசரம்: பச்சை/ அவசரமில்லை: பச்சை என்று மூன்று பிரிவுகள் தேவைக்கு ஏற்ப, செயல்படுகிறார்கள். நாட்தோறும் சரசரி 220 நபர்கள் வருகிறார்கள். ஏழுமாதங்களில், இறப்பவர்களின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து விட்டது. சிகிச்சை நபர் வந்த 2/3 நிமிடங்களில் துவங்கி விடுகிறது. அவசர சிகிச்சைக்கு வேண்டிய மருத்துவ சாதனங்கள் கைக்கெட்டிய தூரத்தில் பொருத்தப்பட்டிருப்பதால், உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த புதிய ஏற்பாடு மிகவும் போற்றப்படுவதால், இதை முன்மாதிரியாக வைத்து, பரவலாக, மாநிலம் முழுதும் செயல் படுத்த ஒரு திட்டம் இருக்கிறதாம். வாழ்க: சென்னை பொது ஆஸ்பத்திரி.

    Share
  • அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பெண்ணும் பெண்சார் மதிப்பீடுகளும்

    -முனைவர் கல்பனா சேக்கிழார்

    பெண்ணை ஒடுக்குதல் என்பது நம் நாட்டில் மட்டும் நடந்த நிகழ்வு அன்று. உலகம் முழுதும் நடைபெற்ற நிகழ்வு. ஆதியில் பெண்வழி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. குடும்பம் என்னும் அமைப்பு உருவாகாத காலத்தில் பெண்கள் தலைமையேற்று  அனைத்தையும்   நிர்வகிப்பவர்களாக இருந்தனர். காலப்போக்கில் உடைமைச் சமூகமும் அதன்வழி உருவான வாரிசுமையும் தோன்றியவுடன், பெண்களை அடிமைப்படுத்துதல் என்பது தொடங்கிவிட்டது. அத்துடன் மட்டுமல்லாமல் பெண்கள், வைசியர், சூத்திரர் பாவ யோனியில் பிறந்தவர்கள் (பக.கீதை:அத்.9, சுலோகம்.32) என அவர்களை இரண்டாம் தரமான சமூக மதிப்பீட்டையும் உருவாக்கியது. இதனை இது வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்பட்டதன்று, அதாவது வெற்றி பெற்றவர்களுக்கு முடிசூட்டும் வேலையைத் தோல்வி பெற்றவர்கள் தாராளச் சிந்தனையுடன் சூட்டி மகிழ்ந்தார்கள் என எங்கல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிவற்றின் தோற்றம் என்னும் நூலில் குறிப்பிடுவதுபோல் பெண்களுக்கான கருத்துகள் உருவாக்கப்பட்டு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் சூழலை எல்லாச் சமூகங்களுமே உருவாக்கியுள்ளன. அக்கருத்துக்களைப் பரப்பும் ஊடகங்களாக இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.

    இலக்கிய, இலக்கணங்களின் வழியாகவே தொல்சமூகம் குறித்தான புரிதலையும், சமூக மதிப்பீடுகளையும் நாம் தொகுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நமக்குக் கிடைத்துள்ள பழைமைப் பனுவல்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்.  இப்பிரதிகள் நாகரிகம் அடைந்த தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவே உள்ளன. இவை தமிழ் நிலப்பரப்பினுள் வந்துகலந்த வைதிகப் பண்பாட்டுக்கூறுகளையும் உள்வாங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய பதினெண் கீழ்க்கணக்கு வைதிகக் கருத்தியலோடு, சமணக்  கருத்தியல்களையும் உள்வாங்கியப் பனுவலாக  உருப்பெற்றுள்ளன.

    சங்க இலக்கியத்தில் பெண்ணிக்கிருந்த நெகிழ்வு அற இலக்கியங்களில் இறுக்கமாகவே இருக்கிறது. 40க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் சங்க இலக்கியத்துள் பாடியுள்ளனர் . ஆனால் பதினென் கீழ்க்கணக்கில்  பெண்பாற் புலவர்கள் ஒருவரும் இலர். இதனைப் பார்க்கும் பொழுது, அறம் சார்ந்த சிந்தனைகள் பெண்ணுக்கு இல்லையா என்னும் கேள்வியெழுகிறது. மேலும் பதினெண் கீழ்கணக்குத் தொகுக்கப்பட்டதன் பின்னுள்ள  அரசியலும் அறிய இயலவில்லை.  இத்தொகுப்பினுள் உள்ள 11 அறநூல்களும் பண்பாட்டின் அடையாளமாக அதனைக் கட்டிகாப்பவளாகப் பெண்ணையே முன்னிருத்துகிறது.

    பெண்களை வெறும் நுகர்பொருளாகவும், பாலியல் இயந்திரமாகவும் பயன்படுத்தியதோடு, அவர்களுடைய புழங்குவெளியையும் வரையறுத்து அதனைச் சட்டமாகவும் உருவாக்கினர். பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கான முயல்வுகளைக் காலந்தோறும் நிகழ்த்தியுள்ளனர். அவற்றை அடக்கியும் ஒடுக்கியும் வைப்பதற்கான வேலைகளை ஆண் மையச் சமூகம் மோற்கொண்டது. அவளுக்கான விதி இதுதான் என மூளைச் சலவையும் செய்யப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு புதிய அறிவியல் கண்டுப்பிடிப்புகள், தொழில் வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம் போன்றவை சமூகத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. அச்சூழலில் பெண் தன்னுடைய இருப்புநோக்கிச் சிந்திக்கத் தொடங்கினாள். அதன் விளைவாகப் பெண்ணியச் சிந்தனைகள் மேற்குலகில் உருப்பெற்று, தராள வாதப்பெண்ணியம், சமதர்மப் பெண்ணியம் தீவிரவாதப்

    பெண்ணியம், தலித்தியப் பெண்ணியம் எனப் பல்வேறு நிலைகளில் போராடத்தொடங்கினர். இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்படத்தொடங்கியது. தமிழகத்திலும் அது சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    எலைன் ஷோவால்டர்,

    • பெண்மை நிலை (Feminine Phase) – பண்பாடு சார்ந்தது
    • பெண்ணிய நிலை (Feminist Phase) – அரசியல் சார்ந்தது
    • பெண்நிலை (Female Phase) – உயிரியல்

    என மூன்று நிலைகளில் இலக்கியங்கள் பெண்களைக் கட்டமைப்பதாகக் கூறுகிறார். இதனடிப்படையில் அற இலக்கியங்கள் பெண்ணுக்கான வெளியையும்  குடும்ப சமூக மதிப்பீடுகளையும் எவ்வாறு உருவாக்கியுள்ளன என்பதை அறிய இக்கட்டுரை முயல்கிறது.

    சமூகத்தின் அனைத்துத் தளத்திலும் பெண்ணைச் சக உயிரியாகப் பாவிக்காமல்,  ஒரு சமூகத்தின் கட்டுமானப் பண்பாட்டுக் கூறுகள் யாவும் பெண் மீதே சுமத்தப்பெறுகின்றன. ஆண்வழிச் சமூகம் சுமத்தியுள்ள பண்பாட்டுக் கூறுகளைப் பேணுகின்றவர் ஒழுக்கமானவர் என்றும், அப்பண்பாட்டு நடத்தையிலிருந்து விலகிச் செல்பவர் ஒழுக்கம் கெட்டவர் என்றும், கற்புக்கோட்பாட்டின் வழி சமூக மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இவ்வாறான ஆண்வழிச் சமூக அமைப்பின் ஒழுங்கிற்கும் நியதிகளுக்கும் உட்பட்டு, ஆணின் அதிகார எல்லைக்குள் ஓர் அடிமை போன்ற வாழ்வை மேற்கொண்டு ஆணுக்கு எல்லா வகையிலும் சேவகம் புரிவதையே பெண்ணுக்கான அறம் என்பதாகச் சமூகம் கற்பித்து வைத்திருக்கிறது (2010: 80).  வினையை ஆடவருக்கு உயிராகவும், பெண்களுக்கு அவ்வாடவரே உயிராகவும் ( குறுந்தொகை, 135) பெருமையும் வீரமும் ஆணுக்குரியதாகவும், அச்சம், மடம், நாணம் பெண்ணுக்குரியதாகவும் (தொல்காப்பியம், களவியல் 7,8) ஆண் அதிகாரம்/பெண் அடங்கிபோதல் என்ற பண்பாட்டு நிலையிலே இலக்கியங்கள் கட்டமைக்கின்றன.

    பாண்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் அடிப்படையிலான அறங்கள் அணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறானவையாக அமைந்தன.

    ஆணுக்குப் பெருமை, வலிமை, அழகு, புகழ், அறிவு, கடமை, ஆள்வினை, உரிமை, செயலூக்கமான பாலியல், ஆட்சி அதிகாரம், செல்வம் ஆகியவை உயர் அறங்கள். பெண்ணுக்கு உடலின் மென்மை, அழகு, பணிவு, அடக்கம், அடங்கிய பாலியல், அச்சம், நாணம், மடம், கற்பு ஒழுக்கம், பொறுமை, சேவை, தியாகம் ஆகியவை உயர் அறங்கள்.

    பெண் என்பவர்

    பெண்ணை, இலட்சிய வாழ்க்கைத் துணைவி என்றோர் அசாதாரணமான சித்திரத்தை அறநூல்கள் வழங்குகின்றன. தாயுரிமை தூக்கி எறியப்பட்டது. பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். ஆண் வீட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றினான்; பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாள். இவை முழுதும் ஏடறியா வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த நிகழ்ச்சியாகளாகும். இவை மெய்யாகவே நிறைவேற்றப்பட்டன என்பதற்குப் பாஹொஃபென் திரட்டியுள்ள தாயுரிமை பற்றிய ஏராளமான எச்சங்களே சாட்சியாகும் என்பது ஏங்கல்ஸ் கூற்று.     

    மென்மை

    வை யெயிற்று ஐயள் மடந்தை (நற்றிணை,2) அனிச்சம் பூவை உவமையாக 1111,1120ஆம் குறட்பாக்களில் மோந்தாலே வாடிவிடும் மென்மைமிக்க பூவினும் மென்மையானவளாக பெண்ணைப் படைக்கிறார் வள்ளுவர். உடற் கூற்றியல் அடிப்படையில் ஆணைவிடப் பெண்ணே வலிமையானவராக இன்றைய அறிவியல் கூறுகிறது. 

    அழகு

    சங்க இலக்கியங்கள் அழகு என்பது பெண்ணுக்குரியதாகவே அவர்களின் புற அழகிற்கு முதன்மைக் கொடுத்து (பெண்களின் ஒவ்வொரு உறுப்பையும்) வருணிக்கின்றன. வள்ளுவரும் ஒளி பொருந்திய நுதல்(1088) மான் போன்ற அழகிய பார்வை (1089) அழகிய மயில் (1081) அமிழ்தின் இயன்ற தோள் (1106) முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல் உண்கண் வேய்த்தோள்(1113) மதியும் மடந்தை(1116) எனப் பெண்ணின் உடலுக்கு கொடுக்கும் முதன்மை பெண்ணின் அறிவுக்கு வழங்கவில்லை. 

    உடைமை

    பெண்ணின் இயல்புகளான குணங்கள் மறுக்கப்பட்டு உடைமைச் சமூகத்துக்கு ஏற்ற பெண்ணாக வள்ளுவம் கட்டமைக்கிறது. குறள் 1007  – இல் பொருள் இல்லாத வறியவருக்குப் பொருள் கொடுத்து உதவாதவனைக் கூறவந்தவர் மிக்க அழகு பொருந்திய பெண் தனிமையில் வாழ்ந்து முதுமையுற்றது போன்றது என்று எடுத்துக்காட்டுகிறார். ஒரு பெண் என்பவள் ஆணுக்குப் பயன்படுபவளாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். 

    கற்பு என்பது

    மனைவியாக அமைந்தவள் மாண்பினை உடையவளாகவும், கணவனின் வளத்திற்குத் தக்கவளாகவும் அமையவேண்டும். குடும்பத்திற்குத் தக்க சிறப்பில்லாத பெண் இல்லை என்றால் என்ன சிறப்பு இருந்தும் வீண். பெண்ணின் பெருமை கற்புடன் இருப்பது. கணவனைத் தொழுபவளுக்கு (வணங்குதலுக்கும் தொழுதலுக்கும் வேறுபாடு உண்டு, தாளை வணங்காத் தலை (9) , கொல்லான்…கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260) வணங்குதல் – தலையின் செயல், தொழுதல் – கையின் செயல்) இயற்கையே கட்டுப்படும். தன்னையும் காத்து, கணவனையும் காத்து குடும்பப் புகழையும் காத்து ஓம்பவேண்டும். பெண் தன் கற்பினைத் தானே காக்க வேண்டும், சிறந்த மனைவியைப் பெறுவதே எல்லாவற்றையும் விடச் சிறப்பானது என வாழ்க்கைத்துணை நலம் கூறுகிறது.

    கற்புடை மனைவி இருக்கும் வீடே வீடாகும்; செல்வம் முதலியவற்றை விட இல்லக் கிழத்தியின் நற்குணமே இல்வாழ்க்கைக்கு முதன்மையானது (நாலடியார், 383) கற்புடைய பெண்களுக்கு நாணம் முதலியவை பெண்மையியல்புகள் அணிகளாகும் (நாலடி, 385); கற்புடைய மனைவி தூயர் ( நாலடி, 387); கற்புடைய மகளிர்க்கு தங் கணவர் மாட்டு அன்பு எந்நிலையிலும் குறையாது (நாலடி, 389). வினைத் திறன் அறியாத ஆண் மகனைக் காட்டிலும் கற்பமைந்த பெண்டிர் நல்லவர் ( நான்மணிக் கடிகை) தாரம் என்பவள் கணவன் குறிப்பறிந்து நடக்க வேண்டும் (முதுமொழிக் காஞ்சி,5, திரிகடுகம்,96, சிறுபஞ்ச மூலம், 15).

    உடைமை பொருள்

    பிறனில் விழையாமையில் பெண்ணைப் பிறன் பொருளாகக் (141) கூறுகின்றார் வள்ளுவர். மேலும் பிறன் இயலாள் என்றும் பிறன் வரையாள் என்றும் உடைமைப் பொருளாகவே பெண்ணைப் பதிவு செய்கிறார்.

    நிலைத்த மனம் இல்லார்

    கூடா நட்பு குறித்துக் கூறும்பொழுது உண்மையில்லாதவரிடம் கொள்ளும் நட்பு பெண்ணின் மனம் போல வேறுபடும் என்று கூறுகிறார். வரைவின் மகளிரில் பொருட்பெண்டிர் என்றும் அன்பில்லாதவர்கள், பண்பற்றவர்கள், நெஞ்சத்தை நிறுத்தியாளும் திறன் அற்றவர்கள், மாய மகளிர் என வரையறுக்கிறார். 

    காத்திருப்பவள்

    கணவன் பிரிவை எண்ணிக் கலங்கி  அழகு கெட காத்திருப்பவளாக(1157,1234) படைக்கிறார். 

    பெண் கொல்லும் படை

    ஆண்மகனை எதிர்த்து நிற்கும் பெண் எமன், அதிகாலையில் சமையல் அறைக்குச் செல்லாதவள் ஒருவனுடைய நோய், சமைத்ததைக் கணவனுக்கு எடுத்துப் படைக்காதவள் பேய், இப்படிப்பட்ட குணங்களை உடையவள் கணவனைக் கொல்லும் படை (நாலடி, 363) மனையாள் இல்லாத வீடு வீடன்று (நாலடி, 361)  கற்புடைய மகளிருக்குக் கடமை விருந்தோம்பல், இல்லத்தைக் காத்தல், மக்களைப் பெறல் இம்மூன்றும் (திரிகடுகம், 64). 

    முயன்று வினையாற்றாள்

    ஊழ் கூட்டாதவிடத்தும், அரிய காரியங்களைச் செய்தலில் தளர்வின்றிருந்து முயலும் ஆண்மை தாளாண்மையாகும். ஊழ் கூட்டி முடிப்பது பெண்டிரின் செயல் (194). 

    ஆண் செய்யக் கூடாதவை

    கற்புடைய மகளிரை அடித்தல் மனிதனின் அறியாமை (திரிகடுகம், 3) விருப்பம் இல்லாத பெண்களிடம் ஆண்கள் இன்பம் துய்ப்பது அருந்துயர் கொடுக்கும் (திரிகடுகம், 5). பெண்வழிச் சேரலில் பத்துக் குறளிலும் மனைவின் சொற்படி நடக்கும் ஒருவன் வாழத் தகுதியில்லாதவனாக உருவாக்கியுள்ளார் வள்ளுவர். 

    அறிவும் வேண்டும்

    அழகோடு, வாழ்க்கையை நடத்தும் நல்லறிவும் உடையவள் இல்வாழ்க்கைக்குரிய துணைவி ( நான்மணிக்கடிகை,54) பெண்ணிடம் அழகு இல்லாவிட்டாலும் மாட்சிமையுடைய இயல்புகள் இருக்கும் (திரிகடுகம்,64)

    ஆணும் பெண்ணும் எண்ணும் எழுத்தும் அறிந்திருக்கவேண்டும் என நாலடியாரும் ஏலாதியும் கூறுகின்றன.

    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
    நல்லயாம் என்னும் நடுவு நிலைமையால்
    கல்வி யழகே அழகு (நாலடியார், 14) 

    இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
    நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
    கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
    எழுத்தின் வனப்பே வனப்பு (ஏலாதி – 74) 

    பெண் – மதிப்பீடு

    மதிப்பு என்பதற்கு அளவிடுகை, கௌரவிக்கை, உவமைச் சால மதிப்பொழிந்த வல்லமார் மாண்டார் (தேவாரம்,1014) கருத்து, மண்ணுலகாளும் மதிப்பை யொழித்தே (பிரமோத்.8, 99) (தமிழ் லெக்ஸிகன், பகுதி,5,பக்.3057) மதிப்பீடு என்பது ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிக் கொண்டிருக்கும் கண்ணோட்டம் அல்லது கருத்து (க்ரியா அகராதி.பக்.1071)  எனவும் அகராதிகள் விளக்கம் அளிக்கின்றன.

    ஆண்கள் படைத்துள்ள படைப்புகளில் பெண் குறித்தான மதிப்பீடுகள் பற்றிய ஆய்வை நிகழ்த்திய மேரி எல்மான் எழுதிய பெண்களைப் பற்றிய சிந்தனை என்ற நூலில் ஆண்கள் படைத்துள்ள படைப்புகளில் பெண்கள் என்போர் அடங்கிப் போகும் குணமுடையவர்களாக (passivity) உருவமற்றவர்களாக (formlessness) மன உளைச்சலுக்கு ஆட்பட்டவராக (instability) கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களாக (confinement) கடமையுணர்வு உடையவர்களாக (piety) பொருள் பற்றுடையவர்களாக (materiality) ஆன்மீக நம்பிக்கை உடையவர்களாக (spirituality) பகுத்றிவுக்கு மாறானவர்களாக (irrationality) கவர்ச்சி மற்றும் சூன்யம் உடையவர்களாக (witch) அடங்காப் பிடாரிகளாக (shrew) குறை கூறுபவர்களாக (compliancy) என்ற முரண்பட்ட குணமுடையவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். சமூகம், பண்பாடு அரசியல் மற்றும் தனிப்பட்ட சூழல் என்று எல்லா நிலைகளிலும் ஆண் மேலாதிக்கம் வேரூன்றியிருப்பதால், அவர்கள் படைத்த இலக்கியங்களிலும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை என்றார் எல்மன் ( 2010; பக்.81).

    அற இலக்கியங்கள் கூறிய கற்பு, காவல், கணவன்வழிபாடு ஆகியவை கட்டுப்பாடுகளும் பெண்ணின் பாலியல் செயல்பாட்டை அவளது கணவனை மட்டும் சார்ந்திருக்க அவளை ஒழுங்குபடுத்துகின்றன. பாலியலில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சார்பு நிலை பெண்களை, சிறு வயது முதல் சாகும் வரை ஆணைச் சார்ந்து வாழும் இயல்புடையவர்களாக ஆக்கியது. பெண்ணின் பாலியல் அறம் காவலால் சாத்தியமாகவும், அவர்களே நிறையாக இருக்கவேண்டும் என்றும் அற இலக்கியங்கள் வற்புறுத்துகின்றன.

    அற இலக்கியங்கள் முன்வைக்கும் பெண் குறித்தான மதிப்பீட்டைக் கீழ்க்கண்டவாறு வரையறுத்துக் கொள்ளலாம்.

    • இல்லறத்தை நல்லறமாகப் போற்றுபவர்
    • இல்லத்திற்கு இன்றியமையாதவர்கள்
    • கற்புடையோர் பெய்யென்றால் மழையும் பெய்யும்
    • விருந்தோம்பும் பண்புடையவர்கள்
    • கணவன் எவ்வழியோ அவ்வழி நடப்பவர்கள்
    • கணவனைத் தெய்வதிற்கு மேலாக உயிரைவிட மேலாகப் போற்றுபவர்
    • மென்மையுடையவர்கள்
    • பிரிவுத் துயரில் உழல்பவர்கள்
    • திருமணமே முதற்கடமை
    • உடைமைப் பொருள்
    • குடும்பத்தில், பொதுவெளியில் தம் கருத்தைக் கூற இயலாதவர்கள்
    • உறுதியான மனம் இல்லாதவர்கள்
    • கணவனை இழந்தால் வாழ்வே இல்லை என்று எண்ணுபவர்கள்
    • கணவனுக்குத் தேவையானதைச் செய்யாதவர்கள் கொல்லும் படை போன்றவர்கள்

    அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பெண்கள் ஆண் மையச் சமூகத்தில் ஆணுக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யபவர்களாகவும், தம் விருப்பங்களை மனதுள் வைத்து பூட்டியவர்களாகவும் இருக்கிறார்கள். குடும்ப அமைப்பில் அவர்களுக்கான இடம் குறித்து மிகவும் சுருக்கப்பட்டதாவே அமைந்திருக்கிறது. சமூகவெளியில் அவர்களுடைய செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிலவிடத்துப் பெண் அறிவு சார்ந்த சிந்தனையும் வெளிப்பட்டுள்ளது.  வால்கா முதல் கங்கை வரை நூலில் வங்க எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன் தாய்வழிச் சமூகம் இருந்துள்ளதை தக்க சான்றுடன் எடுத்துரைப்பார். அந்த வகையில், 

    பெண்ணே அருகில் வா, நான் கூறுவதைக் கேள், பயனுள்ள விசயங்கள் மீது ஒருமுறை உனது ஆர்வத்தைத் திருப்பு. இயற்கை உனக்கு வழங்கிய இச்சமூகம் தட்டிப் பறித்த ஆதாயங்களைக் கருதிப்பார். நீ ஆணுடைய கூட்டாளியாகப் பிறந்து எப்படி அவனுடைய அடிமையானாய் என்பதை அறிவதற்கு அருகில் வா, செயற்கையான நிலைமைகளை எவ்வாறு இயற்கை என்று நினைத்து நீ அதனை விரும்பத் தொடங்கினாய் என்பதை அறிந்திட வா. நீண்ட கால அடிமைப் பழக்கம் உன்னைக் கீழ்மைப்படுத்தியதை அறிந்திட வா. சுதந்திரம், புகழ் ஆகியவற்றின் மேன்மைகள் கடினமானவை என்று ஒதுக்கிவிட்டுச் சொகுசான இழிவுகள் போதுமென்று எவ்வாறு தெரிவு செய்தாய் என்பதை அறிந்திட வா. நான் வரைகின்ற இந்தச் சித்திரம் உன்னை உன் கட்டுக்குள் வைக்கும் என்றால், இது பற்றி உணர்ச்சி கலவாமல் உன்னால் சிந்திக்க முடியும் என்றால் பயனற்ற உனது வேடிக்கை விளையாட்டுகளுக்குத் திரும்பிப் போய்விடு. இதற்கு மருந்து ஏதுமில்லை, இழிவுகள் பழகிவிட்டன (2010; பக்.23,24). 

    என்னும் கூற்றுக்கிணங்கப் பெண்கள் மெல்ல மெல்லத் தமக்கான இயல்பைவிட்டு ஆண் மையச் சமூகம் உருவாக்கிய கருத்திற்குள் தம்மைப் பழக்கிக்கொண்டு அதனை வழக்கமாக்கிக் கொண்டனர்.  எலைன் ஷோவால்டர் கூறுவதுபோலப் பெண்ணைச் சக உயிரியாகப் பாவிக்காமல், பெண்மை என்னும் பண்பாட்டு அடிப்படையிலேயே அற இலக்கியங்களைப் பெண்ணுக்கான புற உருவத்தைக் கட்டமைத்து, அவர்களின் அகத்தைப் புறந்தள்ளியுள்ளது.

    உசாத்துணை

    1. பக்தவசல பாரதி, சம்பத் இரா., (ப.ஆ) 1998. பெண்ணிய ஆய்வுகள், முதற்பதிப்பு, புதுச்சேரி: புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
    2. பக்தவசல பாரதி, 2011, பண்பாட்டு மானிடவியல், முதல் பதிப்பு, திருச்சி: அடையாளம் பதிப்பகம்.
    3. மகாராசன், 2010. பெண்மொழி இயங்கியல், முதற்பதிப்பு, சென்னை: தோழமை வெளியீடு.
    4. முருகேசபாண்டியன் ந., 2014. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், முதல் பதிப்பு, சென்னை: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
    5. ஜர்மெய்ன் கிரீர், ராஜ்கௌதமன் (தமிழில்) 2011. பாலற்ற பெண்பால் பெண்பால் நபும்சகம், கோவை: விடியல் பதிப்பகம்.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    தமிழியல்துறை
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
    அண்ணாமலை நகர் – 608002
    Mail – kalpanasekkizhar@gmail.com

         

    Share
  • இலக்கியங்களில் முலை

    -முனைவர்  க. மங்கையர்க்கரசி     

    ‘முலை’ என்றாலே அது காமத்திற்கும் தாய்மைக்கும் உரியது என்றாலும், முலை என்ற உடனே காமம் தொடர்பான எண்ணமே எல்லோர்க்கும் தோன்றுகிறது. தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்யின் புறப்புலப்பாடுகள் எட்டும் முலையில் வருகின்றன என்பதை இலக்கியப் பாடல்களின் வழி காண்போம்.

    பருவத்தில் மாற்றம்

    ஒரு சிறுமியின் உடம்பு 12 வயதிலிருந்து 14 வயதுக்குள் துரிதமான வளர்ச்சி அடைகிறது. அப்போதுதான் அவளுடைய மார்பகம் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கிறது. 14-18க்கு இடையிலான கால கட்டத்தில் அவை முழுமையான வளர்ச்சி அடையும். பருவம் அடையும் போது சூலகத்தில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜெனால் பெண்களுக்குரிய தனங்கள் பெருகும்.  சில நேரங்களில் சத்தான உணவு இல்லாதபோதிலும் ‘இயக்கு நீர்’ (Hormone) கோளாறினாலும், பிறப்பிலேயே விளைந்த குறைபாட்டாலும் மார்பக வளர்ச்சி தடைப்படலாம்.

    ஈஸ்ட்ரோஜென்

    ஈஸ்ட்ரோஜென் என்பது ஸ்டெராய்டு ஹார்மோன்களில் ஒன்று. இது சூல்பைகளில் சுரக்கிறது.  பெண்களின் தனங்கள் பெருக்கத்திற்கும் எலும்பு வளர்ச்சிக்கும் முக்கியமானது. உடலில் கொழுப்புப் படிவதற்கும் இதுவே காரணமாகும்.

    மார்பக அமைப்பு

    பருவமடைந்த பெண்ணின் மார்புகள் உருண்டு திரட்சியுற்றுக் காணப்படும். உயர்வான மத்தியில் இருப்பது முலைக்காம்பு (Nipple) காம்பைச் சுற்றிய கருநிறப்பகுதி ஊதா வட்டம் (areola) எனப்படும். முதல் மாதவிலக்கு ஏற்படும் வரையில் மார்பின் வளர்ச்சி நிதானமாக, திடமாக இருக்கும். பிறகு இயக்கு நீரின் மாற்றத்தின் காரணமாக அவை வேகமாக வளர்ச்சி அடையும். முதலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பியும். அடுத்து ப்ரொஜஸ்ட்ரோனும் அவற்றின்மீது ஆதிக்கம் பெறும். பெண் சந்ததி விருத்தி (Procreate) செய்கிறபோது மார்பகம் முழு வளர்ச்சியுற்ற நிலையில் இருக்கும். பிரசவித்தப் பிறகே பால் சுரக்கும்.

    குழந்தை பிறந்த பிறகு பிட்யூட்டரி சுரப்பி ‘ப்ரோலாக்டின்’ (Prolactin) என்ற இயக்கு நீரைச் சுருக்கும். இதுவே பால் உற்பத்தியைத் தொடங்கி வைக்கும்.

    பாலை உறிஞ்சுதல்

    குழந்தையை ஒரு தாய் மார்பகத்திடம் கொண்டுசென்ற உடன், அது முலைக் காம்பில் வாய் வைக்க அழுத்தம் செலுத்தப்படுகிறது. இது தொடர்பான சமிக்ஞை மூளைக்கு அனுப்பப்படும். அந்த சமிக்ஞை தாயின் மூளையில் உள்ள ‘ஹைப்போதாலமஸ்’ என்ற பகுதிக்குச் சென்றடையும். இதுவே உணர்வுகளின் இருப்பிடம் ஆகும். பாலை உறிஞ்ச முற்படுகின்றபோது, கிடைக்கின்ற அழுத்தம் மட்டுமின்றி, தாயின் அன்பும் (தாய்மை உணர்வும்) ஹைபோதாலமஸ் மீது செயல்படுகிறது. அதனால் பிட்யூட்டரியின் பின்புறப்பகுதி ‘ஆக்ஸிடாசின்’ (Oxytocin) என்ற இயக்குநீரைச் சுருக்கும். இந்த இயக்குநீர் ஊதா வட்டத்தில் இயங்கிப் பாலை வெளிப்படுத்தும். தாயின் விரல்களும் இவ்விதம் அழுத்தம் கொடுக்கும்.

    சிறந்த அன்னை யார்

    நால்வர் நான்மணிமாலை என்ற நூல் சிறந்த அன்னை யார் என்பதைக் குறிப்பிடும் பாடல்

          “இலை படர்ந்த பொய்கையிடத் தழுதல் கண்டு
          முலைசுரந்த அன்னையோ முன்னின் நிலைவிளம்பக்
          கொங்கை சுரந்த அருட்கோ மகளோ சம்பந்தா
          இங்குயர்ந்தாள் ஆர்சொல் எனக்கு” என்ற பாடலின் மூலம் குழந்தை பசியால் அழும்முன்பே பால் நினைந்தூட்டும் தாய் தலையன்புடையவள். குழந்தை அழுவதைக் காதால் கேட்டவுடன் முலைசுரந்து ஊட்டுபவள் இடையன்புடையவள். குழந்தைப் பசியால் அழுவதைக் கண்ணால் கண்ட பிறகு பாலூட்டுபவள் கடையன்புடையவள் என்பது பெறப்படுகிறது.

    முலை என்ற உறுப்பே தாய் தன் குழந்தைக்குப் பால் ஊட்டுவதற்கென்றே இயற்கை வழங்கியுள்ளது என்பது பெறப்படுகிறது.

    திருக்குறளில் முலை

    பெண்ணின் மார்பகங்களை காம இன்பம் நுகர்ச்சிக்குரியவை என்றே கூறலாம். பெண்மையின் சிறப்புப் பற்றிக் கூறும் போது மார்பகங்களே முக்கியமாகக் கூறப்பட்டுள்ளன.

          “கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
          படாஅ முலைமேல் துகில்”                         (குறள் 1087)

    அரச யானை என்பதால் அந்த யானைக்குச் சிறப்பு அளிக்கவே அதற்கு முகபடாம் அளிக்கப்படுகிறது என்றும், யானையின் முகத்தை மறைக்க அல்ல. இது போல காமஇன்ப நுகர்ச்சிக்குரிய அரச உறுப்பு மார்பகம் என்பதால் அதுவே அனைவரையும் கவருகிறது என்பதையும் அறியவும், அழகுபடவும் மார்பகத்தின் மீது பட்டும் படாமலும் துகில் உள்ளதே தவிர அதை மறைக்க அல்ல என்றே குறள் கூறுகிறது.

          “கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
          இல்லாதாள் பெண்காமுற் றற்று”                       (குறள் 402)

    என்று ‘கல்லாமை’ என்ற அதிகாரத்தில் குறள் கூறுகிறது. கல்லாத ஒருவன் கற்றோர் நிறைந்த அவையில் பேச ஆசைப்படுவதென்பது முலைகள் இரண்டும் இல்லாத பெண்ணொருத்தி பெண்மையை விரும்புவது போலாகும் என்று மார்பகங்களின் சிறப்பை உணர்த்துகிறது.

    சிலப்பதிகாரத்தில் முலை 

    சிலப்பதிகாரத்தில் முலை பற்றி “சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும்” என்ற வரிகளில் அழகு முலைகள் தான் காதல் நோயைத் தீர்க்கும் போலும் என்றும், “மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ” என்ற வரிகளில் வலிமை பொருந்திய கச்சுக்கு அடங்காத அழகிய மார்போ என்றும் கூறுகிறார்.

    விவேகசிந்தாமணியில்முலை

    “சந்திர னில்லா வானந்தாமரை யில்லாப் பொய்கை
          மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை
          சுந்தரப் புலவா ரில்லாத் தொல்சபை கதரில்லா வாழ்வு
          தந்திக ளில்லா வீணை ஸ்தனமிலா மங்கை போலாம்” (விவேகசிந்தாமணி – 34)

    சந்திரன் இல்லாத ஆகாயம், தாமரை இல்லாத தடாகம், மந்திரி இல்லாத அரசன், மதயானை இல்லாத சேனை, அழகிய வித்வான்கள் இல்லாத சபை, கொஞ்சி மகிழக் குழந்தைகள் இல்லாத வாழ்க்கை, நரம்புகள் இல்லாத வீணை, இவை எல்லாம் அழகிய, பருத்து, உருண்டு திரண்ட இரண்டு மார்பகங்கள் இல்லாத பெண்ணைப் போல் பயனற்றதாகும்.

    முலை அணி

    பெண்கள் தமது அழகிய மார்பகங்களில் ‘பூண்’ என்னும் அணிகலனை அணிந்திருந்தனர் என்பதை,

          “ஒண்கேழ் வனமுலை பொழிந்த
          நுண்பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே”  (அகநானூறு 6 : 17-18) குறிப்பிடுகிறது.

    தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்யின் புறப்புலப்பாடுகள்:

    “நகையே அழுகை இளிவரல் மருட்கை
          அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
          அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”       (மெய்ப்பாட்டியல் – நூ 3)

    சிரிப்பு, அவலம், இழிவு, வியப்பு, பயம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என மெய்யின் புறப்புலப்பாடுகள்  எட்டு வகைப்படும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    நகை

      “எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்று
          உள்ளப் பட்டநகை நான்கு என்ப”         (மெய்ப்பாட்டியல் – நூ 4)

    இகழ்தல், இளமை, அறியாமை, அறிந்தும் அறியாதது போல இருத்தல் இந்த நான்காலும் சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

    உடம்பின் மேல்பாகத்தில் சந்தனம், குங்குமம், முதலியவற்றைக் குழம்பாகவோ, சாயமாகவோ செய்து அதனைப் பூசிக் கொண்டு, பின்னர் அதன் மேல் இலை, பூ முதலிய சித்திரங்களை வரைவர். இத்தகைய வரைவுகளின் வெளிப்பாடே “தொய்யில் வரைதலாகும்”. வேங்கைத் தாது பரப்பித் தோற்றம் செய்து எழுந்த தலைவியின் அழகிய முலை நிறம்பெறத் தலைவன் தொய்யில் வரைவான் என்பதை,

          “உருத்தெழு வனமுலை யொளிபெற
          வெழுதிய தொய்யில்”                      (குறுந்தொகை 276 : 3-4) என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.

    இப்பாடல் மூலம் ‘நகை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    அழுகை

       “இளிவே, இழவே, அசைவே, வறுமை என
          விளிவில் கொள்கை அழுகை நான்கே”  (மெய்ப்பாட்டியல் நூ 5)

    இழிவு, இழப்பு, தளர்ச்சி, வறுமை, அழிவில்லாத கொள்கை நான்கால் அழுகை ஏற்படும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

    வறுமையின் காரணமாக நல்ல உணவை உண்ண முடியாததால் முலையில் பால் சுரக்கவில்லை.

          “ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பில்
          ஆம்பி பூப்பத்தேம்பு பசி உழவாய்
          பாஅல் இன்மையின் தோலொடு இறங்கி
          இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
          சுவைத்தொறு அழுஉம்தன் மகத்துமுக நோக்கி
          நீரோடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்”   (புறநானூறு 164)

    வறுமையின் காரணமாகத் தாய்ப்பால் கிடைக்காமல் வருந்தும் மகவைக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ‘அழுகை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    இளிவரல்

          “மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையோடு
          யாப்புற வந்த இளிவரல் நான்கே”      (மெய்ப்பாட்டியல் நூ 6)

    முதுமை, நோய், துன்பம், எளிமை இவற்றால் இளிவரலாகிய இழிவு ஏற்படும் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

    திருமாவுண்ணி

       “ஏதிலாளன் கவலை கவற்ற
          ஒரு முலை அறுத்த திருமா உண்ணிக்
          கேட்டோர் அன்னையர் ஆயினும்
          வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே”      (நற்றிணை 216 : 8-11)

    அயலனாகிய ஒருவன் உண்டாக்கிய கவலையானது உள்ளத்தை நோயாக வருத்துதலினாலே தன் ஒரு முலையை அறுத்துக்கொண்ட வலிமையான திருமாவுண்ணி என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘இளிவரல்’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    மருட்கை

          “புதுமை, பெருமை, சிறுமை ஆக்கமொடு
          மதிமை சாலா மருட்கை நான்கே”        (மெய்ப்பாட்டியல் நூ 7)

    இது வரை காணாததைக் கண்ட புதுமை, அளவின் மிக்க பெருமை, அளவின் மிகக் குறைந்த சிறுமை, ஒன்று பிறிதொன்றாகும் ஆக்கம் இவை நான்காலும் அறிவான் அமையாத வியப்பு ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    பால் குடிக்கும் குழந்தை குறிப்பிட்ட நேரத்தில் பால் குடிக்காவிட்டாலோ, பால்சுரந்து குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைக்குப் பாலூட்டாவிட்டாலோ பால் கட்டிக் கொள்ளும் என்பதும், அப்போது உண்டாகும் வலியைப் போக்க, மார்பை அழுத்திப் பாலை வெளியே எடுக்க வேண்டும் என்பதை கலித்தொகை

          “சுரந்துயான் அரக்கவும் கைநில்லா வீங்கி
          சுரந்த என் மென்முலைப் பால் பழுதாக” (கலித்தொகை – முல்லைக் கலி 19)

         “உறு வளிதாக்கும் உயர்சினை மாவின்
          நறுவடி ஆரிற்றவை போல அழிய”      (கலித்தொகை – முல்லைக் கலி 19)

    மா மரத்தின் உயர்ந்த கொம்புகளிலுள்ள வடுக்கள் காற்றடித்தால் காம்பு முறிந்து பால்குதிப்பது போல, நான் உள்ளங்கையால் அமுக்கித் தேய்க்கவும், அடங்காது விம்மிச் சுரந்த என்னுடைய மெல்லிய முலையின் பால், பிள்ளை உண்ணாமல் பாழாகும் படி நேரம் தாழ்த்தி அழைத்து வருகிறாயே என்று தோழியிடம் கூறும் பாடல்

          “என் முலை பாலொடு வீங்கத்தவ
          நெடிதாயினை”   (கலித்தொகை – முல்லைக் கலி 19)

    தாய் தன் குழந்தையைச் சிறிதுநேரம் விளையாட்டுக் காட்ட வெளியே அழைத்துச் செல்லச் செல்கிறாள். சென்ற குழந்தை திரும்பிவர நேரமாகிறது. பாலூட்டும் நேரம் தவறுகிறது. எனவே பால் கட்டுகிறது, அதைத் தாய் அமுக்கி எடுத்து வெளியேற்றுகிறாள். இப்பாடல் மூலம் ‘மருட்கை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    அச்சம்

         “அணங்கே விலங்கே கள்வர் தம்இறை எனப்
          பிணங்கல் சாலா அச்சம் நான்கே”          (மெய்ப்பாட்டியல் நூ 8)

    கட்புலனாகா தம் ஆற்றலால் வருத்தும் சூர் முதலான தெய்வங்கள் கொடிய விலங்குகள், கள்வர், அரசன் மாறுபட்டு எதிர்த்தல் அமையாத அச்சம் என்ற நான்காலும் ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    தாயானவள் பின்னும்படி வளர்ந்து நெளிந்த கூந்தலையும், பொன்போல மார்பிலே தோன்றிய தேமலையும், கச்சு இற்று விடும்படியாகக் கண்ணுடன் உருக்கொண்டு, விம்மி எழுந்த முலையினையும், நோக்கி நீ பெரிதும் அழகுடன் தோன்றினாய் எனப் பலபடப் பாராட்டி, அவளுடைய தோளை முழுவதும் தழுவி, நெடிது நினைத்துப் பார்த்துத் தலைவியைக் கடந்து செல்வதற்கு அரிய காவலில் வைத்தனை என்று தோழி தலைவனிடம் தெரிவிக்கிறாள். அன்னை தலைவியின் களவொழுக்கத்தை அறிந்து கொண்டாள் என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே தலைவியை விரைவில் வரைந்து கொள் என்றாள்.

          “பின்னுவாட நெறித்த கூந்தலும் பொன்அணை
          ஆகத் திரும்பிய சுணங்கும் வம்புவிடக்
          கண்ணுருத் தெழுதரு முலையும் நோக்கி
          எல்லிணை பெரிதெனப் பன்மாண் கூறிப்
          பெருந்தோள் அடைய முயற்சி நீடுநினைந்து
          அருங்கடிப் படுத்தனள்”           (அகநானூறு 150 : 1-6)

    இப்பாடல் மூலம் ‘அச்சம்’ என்ற மெய்யின் புறப்பலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    பெருமிதம்

      “கல்வி, தறுக்கண், புகழ்மை கொடை எனச்
          சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே”          (மெய்ப்பாட்டியல் நூ 9)

    கல்வியால், அஞ்சாமையால், நன்னடையால் வரும் புகழால், வரையாது வழங்கும் வள்ளன்மையால் பெருமிதம் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    மாட்டின் கொம்புகளால் குத்தப்பட்டு மார்புஎங்கும் புண்பட்டு வருந்தும் காதலனைத் தன் முலை வெம்மையால் ஏந்தி எடுத்து, புண்ணாற்றுவதற்காக ஒரு தலைவி சொன்ன செய்தி

          “மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே
          அரும்பிய சுணங்கிண் அம்பகட்டு இளமுலை
          பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்”               (குறுந்தொகை 71)

    கொழுநன் பிணி நீங்க மருந்தாகவும், வறுமை நீங்கச் செல்வமாகவும், சுணங்குமுலை, தோள், நுசுப்பு ஆகியவை இன்பப் பொருளாகச் சிறப்பிக்கப்பட்டது. கொழுநன் பிணிக்கு மருந்தாகத் தன் உடம்பை அறுத்துத் தர முயல்வாள் குலமகள் என்று கூறப்பட்டுள்ளது. மருந்து, வைப்பு, இன்பம் ஆகிய மூன்றாகவும் முலை, தோள், நுசுப்பு ஆகிய மூன்றும் விளங்குவனவாகும். இப்பாடல் மூலம் ‘பெருமிதம்’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    வெகுளி

          “உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற
          வெறுப்ப வந்த வெகுளி நான்கே”           (மெய்ப்பாட்டியல் நூ 10)

    உறுப்புகளை அறுத்தலாலும், தன்கீழ் வாழும் குடிகளைத் துன்புறுத்தலாலும், வைதலும் அடித்தலாலும், அறிவாற்றல், புகழ் முதலானவற்றைக் கொன்றுரைப்பதாலும் வெறுக்கத்தக்க சினம் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன், கணவனுக்கு நேர்ந்த கொடுந்துயரைப் பொறுக்க மாட்டாதவள் மணமிகு கூந்தல் முதுகுப் புறத்தை மறைத்துக் கிடப்பக் கண்ணீரால் நனைந்த அழகிய கொங்கையை உறுதியுடன் திருகி எறிந்தாள். இதன் மூலம் அழலை மூட்டிப் பாண்டியனின் மூதூரான மதுரையை எரியுண்ணச் செய்தாள் என்பதை,

          “மணம்மலி கூந்தல் சிறுபுறம் சிதைப்ப
          கண்ணீர் ஆடிய கதிர்இள வனமுலை
          திண்ணிதின் திருகி தீஅழல் பொத்தி
          காவலன் பேர் ஊர்கனை எறி ஊட்டிய”      (சிலம்பு – ஊரலருத்தகாதை 52-55)

    என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது. இதன் மூலம் ‘வெகுளி’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    உவகை

       “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
          அல்லல் நீத்த உவகை நான்கே”            (மெய்ப்பாட்டியல் நூ 11)

    செல்வத்தால் ஏற்படும் நுகர்ச்சியாலும், புலமையால் ஏற்படும் அறிவு முதிர்ச்சியாலும், உள்ள இணைப்பாலும், உள்ளம் ஒத்தாரோடு கூடி ஆடும் விளையாட்டாலும் துன்பம் நீங்கிய மகிழ்ச்சி தோன்றும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    பால் சுரந்த பாசம்

    முதுமையான மறக்குடித் தாயொருத்தி தனது, மகன் உயிரைக் கொடுத்துத் தும்பைப் போர் புரிந்து, போர்க்களத்திலேயே விழும்புண்பட்டு வீழ்ந்து கிடப்பதைக் காணச் செல்கிறாள். வாளால் வெட்டுண்டு சிதைந்துக் கிடக்கும் மகனின் உடலைக் கண்டு உள்ளம் கரைகிறாள். அன்பின் முதிர்ச்சியால் அவளது வற்றிய வாடிய மார்பின்றும் பால் சுரந்தது என்பதை

          “இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
          சிறப்புடை யாளன் மாண்பு கண்டருளி
          வாடுமுலை யூரிச் சுரந்தன
          ஓடாப்பூட்கை விடலைத் தாய்க்கே”   (புறநானூறு 295) என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

    தளர்ந்த மார்பினின்றும் உவகையால் பால் சுரந்தது என்பதன் மூலம் ‘உவகை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

    முடிவுரை

    ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்று மாணிக்கவாசகர் இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். பால் நினைந்தூட்டல் தாய்மையின் பண்பாகும். முலையைத் தாய்மைக்கு உரியதாகவே இயற்கை படைத்திருக்கின்ற போதிலும் அது காம உணர்வு உறுப்பாகவே பார்க்கப்படுகிறது என்பதும் பெறப்படுகிறது. தொல்காப்பியம் வழி இலக்கியங்களில் முலை பற்றியும், மெய்யின் புறப்புலப்பாடுகள் பற்றிய செய்திகளையும் அறிய முடிகிறது.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    A M ஜெயின் கல்லூரி
    மீனம்பாக்கம்
    சென்னை – 600 114

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    இம்முறை வெண்பா அல்ல…கட்டுரை….!


    மன்னிக்க…..சென்றமுறை கேசவ் அனுப்பிய சூறைக் காற்று அசுரனை, சகடாசுரன் என்று தப்பாக எண்ணி வெண்பா எழுதிவிட்டேன்…பிள்ளைப் (கண்ணன்)பிராயச் சித்தமாய் கட்டுரை…. மீண்டும் கேசவ் கண்ணா மன்னிக்க…. இது பற்றிய ஆய்வில் ‘’டோங்க்ரே மஹராஜின்’’ பாகவத தஸம ஸ்கந்தம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது…. நன்றி கேசவ்…. கண்ணனின் கோபம் சக்கிர அசுரன்(சகடாசுரன்) மீதல்ல…. கண்ணனே சங்கூதும் சக்கிரத்தான்(சுதர்ஸனம்) அல்லவா….

    ’’எனக்காக இவ்வளவு கோலாகலமாக உத்ஸவம் (கிருஷ்ண ஜனனம்) நடக்கும்போது…. என் தாயார் எங்கே!’’ வண்டிக்கு அடியில் பாலகிருஷ்ணன் நினைக்கிறான்…. தினசரி செயல்களை (நித்ய கர்மாக்கள்) விடவேண்டியதில்லை…. அவற்றிலேயே மூழ்கி பகவானை மறந்து விடக் கூடாது… யசோதை ஸ்ரீ கிருஷ்ணனை மறந்த நாளில் ஆபத்து வந்தது…. கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் ரூபத்தில்…. ஆக கண்ணனின் கோபம் ‘’தன்னை வண்டிக்கடியில் தூங்க விட்ட தாயார் (யசோதையார்) மீது…. அந்தக் கோவத்தை சகடாசுரன் மீது கண்ணன் காண்பித்தார்… உதைத்தார் சகடனை…. வான்முகடில் அவனை உதைத்துக் கொன்றார்….

    சில பல லஷ்ஷத்திற்காக லஷ்யத்தை மறந்து விடாதீர்கள்…. நாம் ஸ்ரீ கிருஷ்ணனை (லஷ்யம்) அடைந்தே (வழி கேசவ் வண்ணம், கிரேசி எண்ணம் (வெண்பா), பக்தி) தீரவேண்டும் (டோங்க்ரே மஹராஜ்)….. டைப் அடித்து விரல் வலிக்கிறது…. வாசிக்கவும் டோங்க்ரேமஹராஜ் பாகவதம்….!

    ‘’பீலிபெய் (பீலிமயில் கண்ணன்) சாகாடும் (சாகடிப்பான்) அச்சுஇறும் (சகடாசுரன் அச்சை ஒடித்து) அப்பண்டம் (பரம்பொருள்)
    சால (கம்ஸனால் அனுப்பப்பட்ட) மிகுத்துப் (அளவுக்கு மீறிய) பெயின் (கம்ஸனால் இம்ஸைக்கு உள்ளான கண்ணனின் PAIN)”….’’வண்டியில் அளவுக்கு மீறிய, இலேசான மயிற்பீலியும் அச்சை உடைத்து விடும்’’….. வாகாகக் கிடைத்த வள்ளுவர்…. அளவுக்கு மீறினால் (கம்ஸன்போல்) அமிர்தமும் (அமுதன் கண்ணன்) விஷம்…. கற்கண்டும் காலன்(கம்ஸன் உயிருக்கு பீலிமயில் கண்ணன்)… குறள் வாசிக்க வைத்ததற்கு நன்றி கேசவ் …..!

    Share
  • தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

                                                     தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

    முனைவர் இரா. மதன் குமார்., இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,

                                              கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

     

    முன்னுரை              

                 ‘பெருமானைப் பேசாத நாளெல்லாம், பிறவாத நாளே’ என்பது, அறுபத்துமூவர் கொண்ட வாழ்வியல்நெறியாகும். ஆனால், ‘முற்பிறப்பில் செய்த அவ்வினையால், இப்பிறப்பில் இவ்வினையைச் செய்து இளைக்கின்றோம்’ என்பதே நமது அன்றாட வாழ்வியல் அவலமாக விளங்குகிறது. இவ்வவலத்தை மாற்ற, திருநீலகண்டத்தின் மீது மாறத பற்றுடன், கைவினையாகிய தொண்டுநெறியால், இறைவனைப் பணிந்துய்வதற்கு, திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டத் திருப்பதிகம் திருநெறி காட்டுகிறது. அத்திருநெறியில் நின்று, திருநீலகண்டம் என்பதனைத் தமக்குத் திருப்பெயராகப் பெற்றும், அதனைத் தம் வாழ்வின் திருமந்திர ஆணையாக ஏற்றும்,  சோதனையிலும் வாய்மை தவறாத வன்மையாளர் எனச் சிறந்தவர், ‘திருநீலகண்ட நாயனார்’. அவர்தம் வாழ்வு, ‘உலகோரின் நெஞ்சுக்கு நீதியென’ நன்னெறி காட்டவல்ல பாங்கினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    நம்மைத் தீவினை தீண்டா

    ஆளுடையபிள்ளையாரின் திருநீலகண்டத் திருப்பதிகமானது திருப்பாடல்தொறும், ‘திருநீலகண்டம்’ என்னும் திருப்பெயருடன் திருவருள்ஆணையாகத் திகழ்கிறது.            உலகமயக்காகிய கீழ்மைநிலைகளை நீக்கி, பிறந்த பிறப்பின் பெரும்பயனாகிய பெருமானின் திருவடியை அடைதற்குரிய உறுதியை ஊட்டுகிறது.

    ‘பிறந்த பிறவியிற்பேணி எஞ்செல்வன் கழலடைவான்’                         (முதல் திருமுறை: 116:11)

     பெறுதற்கு அரிய பேறாகிய திருவடிப்பேற்றுக்குத் தடையாகிய, ‘கீழான தீவினைகள், அடியாரின் சிந்தையை ஒருபோதும் தீண்டா’ என்பதும், நிகழ்செயலின் வருவினையும், திருநீலகண்டத்தின் திருவருளால், ‘தொடராது’ என்பதும் உறுதி.

     ‘சொற்றுணை வாழ்க்கை துறந்துத் திருவடி அடைந்தோம்

      செற்றெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்’                      (மேலது பதிகம்: 5)

     பெருமானை மறக்கின்ற மனத்தினையும், திருவடியில் நிலைநிறுத்தி,  பெருமானைப் பற்றி உய்யச் செய்வதாகிய அருட்சிறப்புடன் இலங்குவது, ‘திருநீலகண்டமாகிய’ பெரும்பெயராகும்.

     ‘மறக்கு மனத்தினை மாற்றியெம் ஆவியை வற்புறுத்திப்

      பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்

      பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்

      சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்’                          (மேலது பதிகம்: 6,7)

     உலகமயக்கில், எண்ணத்தால் எள்ளளவு நினைப்பினும், கீழ்நிலைக்குத்தள்ள வல்லதாகிய பெருமயக்காய் விளங்குவது, முறையற்ற பெண்ணின்பமாம். அதனாலேயே அருணகிரிநாதப் பெருமான்,  ‘மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் எனுற்ற மனம், உன்தனை நினைத்தமைய அருள்வாயே’ என்று கொங்கணகிரிப் பெருமானிடத்தில் விண்ணப்பித்தார். அத்தகைய உயர்விண்ணப்பத்துக்கு வழிகாட்டுபவராக, திருஞானசம்பந்தப்பெருமான், திருநீலகண்டத் திருப்பதிகத்தில், அளவுகடந்த பெண்ணின்பம் முதலாகிய உலக மயக்குகள், அடியவரை நலியாதவண்ணம், திருநீலகண்டமாகிய திருமந்திரம் முன்னின்று காத்தருளும்’ என்று உறுதிபட வலியுறுத்தியுள்ளார்.

     ‘முலைத்தட மூழ்கிய போகங்களும ற்றெவையு மெல்லாம்

      விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்

      இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்

      சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ  றாதிரு நீலகண்டம்’    (மேலது பதிகம்: 3)

     மேற்கண்ட, திருப்பதிகத் திருநெறியில் அயனும் மாலும் உணர்ந்து பற்றுதற்கு அரிய பெருமான்,  ‘உண்மைஅடியார் அழைத்தால் அவர்க்குத் தவறாது காட்சியளித்து அருள்வான்!; அது திருநீலகண்டத்தின் மீது ஆணை!’ எனத் திருஞானசம்பந்தர் குறித்தருளியுள்ளார். அவர்தம் திருவாக்கு, திருநீலகண்டத்துக் குயவனாரின் திருவாழ்க்கையாக மலர்ந்து விளங்கியதைப் பெரியபுராணம் விளக்கியுரைக்கிறது.

    திருநீலகண்டமும் திருநீலகண்டரும்

    பெருமான், பேராயிரம் உடைய பெரியோன். ‘ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாத அவனை, ஏதேனும் ஓர் உருவத்தால் பற்றுவதே சிற்றுயிர்க்கு இயல்பாகும். காணுகின்ற அருளுருவையும் சுருங்கச் சொல்லிச் சிற்றறிவுக்கு விளக்குவனவாக, அவனது திருப்பெயர்கள் விளங்குகின்றன. அவ்வவ்வுயிரும், தத்தமது அறிவுக்கும், வினைத்தகுதிக்கும் ஏற்ப, பெருமானின் திருப்பெயர்களுள்,  ஏதேனும் ஒன்றால் உய்வதே, திருவருளின் சித்தமாகிறது. வேதம் நான்கினும் மெய்ப்பொருளாகிய, ‘நமசிவாய’ திருமந்திரம், பாண்டி நன்நாட்டில் சைவம் தழைத்தோங்கக் கருவியானது.

    கல்லில் பூட்டிக் கடலில் பாய்ச்சியபோதிலும், நமசிவாய திருமந்திரம், அப்பர்பெருமானுக்குத் திருவருள் தெப்பமாகியது. அவர், ‘சிவாயநம’ எனத் திருவாய் பொலியக் கூறி உய்ந்ததும் திருவரலாறு. ‘நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே’ என்பது, சுந்தரர்பெருமானின் அருளனுபவத் திருவாக்கு. இவ்வாறு, பெருமானின் திருப்பெயருள் ஏதேனும் ஒன்றையேனும் பலகாலம் பயின்று, உள்ளத்தில் உருவேற்றி வாழ்வோருக்கு, அத்திருப்பெயரே, தீவினை தீண்டாது காக்கின்ற பெருமந்திரமாகின்றது.

    அவ்வகையில், திருக்கொடிமாடச் செங்குன்றூரில், அடியாரைத் தாக்கிய குளிர்ச்சுரத்தை அகற்றியருளத் திருஞானசம்பந்தப்பெருமானுக்கு, ‘திருநீலகண்டமே’ திருமந்திரமாகியது. அதுவே, ‘அடியாரின் உடலைச் சுடுகின்ற சுரத்தை மட்டுமல்லாது, உள்ளத்தைச் சுட்டு, உயிரைக் கீழ்நிலைக்குத் தள்ளுகின்ற உலகமயக்காகிய பல்வகைச் சுரங்களையும் வேரோடு களைந்தெறிய வல்லது’ என்பதைப் பெருமானார், ‘திருநீலகண்டத் திருப்பதிகமாகவே’ அருளிச்செய்துள்ளார்.  அத்திருப்பதிக நன்நெறியினைத் தமது வாழ்வியலாகக் கொண்டவர், நாயனார்.

    வழிபடு நலத்தின் மிக்கார்

                        ‘வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும்

                பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்

                            பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்

                பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூரானைப்

                பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’                                 (ஆறாம் திருமுறை: 1: 5)

    என்னும் திருத்தாண்டகத் தொடர்கள், அளவுகடந்த பெண்ணின்பத்தைத் துறந்தார்க்குப் பெரும்பற்றப்புலியூரன் பெருந்துணையாகவல்ல திறத்தை உணர்த்துகின்றன. இத்திருவாக்கின் பிழிவாக இல்லறத்தை நடத்தியவர்,  திருநீலகண்டத்துக் குயவனார். அவரின் பெருங்குணத்தை உலகுக்குக் காட்டியருள அம்பலக்கூத்தனார் புரிந்த அருள்விளையாடலின் மையமாக விளங்குவது, ‘திருநீலகண்டம்’ என்னும் திருமந்திரமாகும்.  இல்வாழ்க்கையும் விளங்கியது.

    வழிபடு நலத்தின் மிக்கார்

              அம்பலக்கூத்தனாகிய பெருமானின் திருநடனம், ஆனந்தக்கூத்தாக விளங்குவது. அதன் அருள்வீச்சினை உயிர்கள் தாங்க வொண்ணாது என்பது அவன் திருவுள்ளம். அதனாலேயே, தனது அருள்திருநோக்கத்தைத் தனது இடப்பாகத்தில் வீற்றிருக்கின்ற அம்மையிடம் செலுத்தி, மன்னுயிர்கள் பயனுறச்செய்கின்றான். ஆனந்தக்கூத்தின் அருள்விளைவுக்கு, அம்மையாகிய சக்திபாகம் கருவியாதல்போல, நாயனாரின் சிவப்பெருவாழ்வினை நாம் உணர்வதற்கு, அவர்தம் மனைவியார் கருவியாய் அமைந்த அருள்சிறப்பு போற்றத்தக்கதாகும். மனைவியாரது  திருவாயிலிருந்து வெளிப்பட்டது, ‘எம்மை தீண்டுவீராயின் திருநீலகண்டம்’ என்னும் திருவருளாணையாகும். அதுவே,  மாந்தர்தம் இல்லறம், சிவப்பெருவாழ்வாகப் பொலிவுற என்றென்றும் நின்று நெறிகாட்டுகிறது.

                நாயனார், ‘மாது சொன்ன சூளால் இளமை துறந்து, வாய்மையில் நிலைநின்று, நன்னிலைபெற்றார். அவர்தம் புறத்தொழுக்கமே மனைவியார், திருநீலகண்டத்தின் மீது சூளுரைக்கவும் காரணமானது. நாயனாரது புராணத்தின் முதல்பாடலின் ஈற்றடியானது, ‘வாழ்த்தி வழிபடு நலத்தின் மிக்கார்’ என நிறைவுறுகிறது. பொதுநிலையில் இத்தொடரானது, ‘நாயனார் புரிகின்ற வழிபாடு சிறப்புடையது’ என்னும் பொருளையும், ‘வாழ்த்தி வழிபடத்தக்க வகையில் நாயனார் சிறப்புடையவர்’ என்பதையும் ஒருசேரக் குறிக்கிறது எனலாம்.

                 ‘வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்

                  மாதொரு பாக நோக்கி மல்குசிற் றம்ப லத்தே

                  ஆதியு முடிவு மில்லா வற்புதத் தனிக்கூத் தாடு

                   நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடு நலத்தின் மிக்கார்’                      (திரு.நீல.புராணம்: 1)

     

     

    சைவ மெய்த் திருவானார்

              நாயனாரது மனைவாழ்க்கை, வையகம் போற்றுகின்ற நல்லறமாக, அடியார்க்குத் தொண்டு செய்கின்ற அறப்பணியாகத் திகழ்ந்தது. உடலாலும், உள்ளத்தாலும் பொய்ம்மை கடிந்து, மெய்ம்மையைப் போற்றுகின்ற சைவ மெய்த் திருவாக வாழ்ந்துவந்தார். ‘இறைவனைப் பற்றுவதற்குத் துறக்கவேண்டியவற்றைத் துறப்பதற்குக் காலம் வாய்க்கட்டும் என்றில்லாமல், இளமையும் செல்வமும் உள்ளபோதே துறப்பதால், எல்லை இல்லா பெரும்பயன் விளையும்’ என்பது வள்ளுவம். அந்நெறியினை உலகுக்கு உணர்த்த உண்ணிய திருவருள், நாயனாரைக் கருவியாகக் கொண்டது. அவர், புறத்தொழுக்கம் பூண்பவராய் அறிவு மயங்கினார். அதை அறிந்த மனைவியார், அவர்பால் புலந்தார். நாயனாரும் அவர்தம் ஊடல் தீர்க்க, நயந்து அவரை நெருங்கினார். ‘ஆயும் அறிவினர்’ என்னும் மெய்யுணர்வு கொண்டிருந்த அம்மையார், காமத்தீ தன்னையும் உய்வுபெற இயலாத கீழ்நிலைக்குத் தள்ளும்’ எனக் கருதித் தம்மை அதிலிருந்து காத்துக்கொள்ளச்  சித்தம்கொண்டார். ஆயினும், கணவனாரையும் நன்னிலையில் காத்தருளவேண்டிய கடப்பாடும், தமக்கே உண்டு என்பதனை உணர்ந்தவராக, இருவரும் ஒருசேர நன்னிலைபெறக் கருதினார். பெருமானின், நிலைபெற்ற திருப்பெயராம், ‘திருநீலகண்டத்தை’ முன்னிருத்தி, நாயனார்பால் ஆணை மொழிந்தார்.

                  “தீண்டுவீ ராயி னெம்மைத் திருநீல கண்ட” மென்றார்                                     (திரு.நீல.புராணம்: 6)

    சிந்தை திறம்பாத சீர்மையாளர்

                இல்லறநெறியிலும் இளமை துறந்து, சிவனடிக்கே சிந்தை பதித்த செழுமனச் செல்வியாக விளங்கியவர், ‘காரைக்காலம்மையார்’. அவர், பரமதத்தனுக்காக, பெருமானிடத்தில் மாங்கனி பெற்றளித்தார். அவ்வேளையில், ‘சிவனது திருவிளையாடலைப் பிறரிடத்தில் கூறுதற்கு வாய்ப்பில்லை’ என்ற நிலையிலும், அதனைத் தமது கணவனாரிடத்தில் மறைத்தல், ‘ இல்லற மாண்புக்கு இழுக்காகும்’ என்று வாய்மை திறம்பாதவராக, ‘சிவனருளால் பெற்ற மாங்கனி இது’ என்றே கூறி, அவர் கையில் ஒப்படைத்தார். அம்மாங்கனியும் பரமதத்தனின் கைகளிலிருந்து மறைந்து, அம்மையார் மொழிந்த வாய்மைப் பெருமொழிக்குச் சான்றாக அமைந்தது. அதன் பின்னரும்,  சிவனடியாரின் பசிப்பிணி போக்குதல் முதலான சிவத்தொண்டுக்குக் கருவியாகவே அம்மையார் தமது இல்லறத்தை நடத்திவந்தார். அதனாலேயே, கணவனாருக்குப் பயன்படாத  தசை உடம்பினைத் துறந்து, பேயுருக் கொண்டார். எந்நிலை வந்துற்றாலும், பெருமானை மறவாத அம்மையாரது பேரன்பின் திறமே,

                  ‘நின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப் பாங்குறவேண்டும்’     (காரை.அம்.புரா.: 49)

    என்னும் விண்ணப்பமாக விளங்குகிறது. இத் திருவிண்ணப்பத்தைச் சேக்கிழார்பெருமான்,

      ‘சிந்தை ஒன்றிய நோக்கின் மிக்க உணர்வு கொண்டு உரைசெய்கின்றார்’    (காரை.அம்.புரா.: 48)

    எனக் குறித்தருளியுள்ளார். இத்தகைய சிந்தை மாறாத சிவப்பற்று நாயனாரிடத்திலும், அவர்தம் மனைவியாரிடத்திலும் ஒருசேர அமைந்திருந்தது.

    மனத்தினாலும் தீண்டாத திருவாளர்

              காமவயப்பட்ட நிலையிலும், அறிவழியாத உறுதித்திறமுடையவரை திருவள்ளுவர், ‘ஆயும் அறிவுடையார்’ (திருக்குறள்: வரைவின் மகளிர்: 4,8)  என்று குறிக்கின்றார்.

              அம்மையார் மொழிந்ததாகிய, திருநீலகண்டத்து ஆணையைக் கேட்ட அளவில், நாயனாரும், ‘ஆயும் அறிவுடையவர்’ ஆனார். “மெய்யன்பின் முதிர்ந்த மேன்மைகளைத் துய்த்தறிந்த மேலோர், பொருளையே போற்றி மதிக்கும், பரத்தையரின் பொய்யின்பத்தை நாடார்” (திருக்குறள்: வரைவின் மகளிர்: 3- சிற்பி பாலசுப்பிரமணியனார் உரை) என்ற மெய்யுணர்வு வாய்க்கப்பெற்றார். அம்மையாரின் அருகிலிருந்த நாயனார்,  உடனே விலகினார். அம்மையாரின் ஆணையில்,  ‘எம்மை’ என்றமைந்த சொல்லமைதியில் சிந்தை செலுத்தினார். அச்சொல், மனைவியாரை மட்டுமன்றி பெண்கள் அனைவரையும் ஒருங்கே குறிப்பதாக உணர்ந்தார். அவ்வண்ணமே, திருநீலகண்டத்து ஆணைக்கு உறுதிசேர்க்க எண்ணினார். உடனே, ‘சிந்தையாலும் மாதர் எவரையும் இனித் தீண்டேன்’ என்று உறுதிபூண்டார். அத்தகைய மனவுறுதிக்கு, அந்நாள் வரையில் அவர், ‘திருநீலகண்டம்’ என்னும் திருப்பெயரின்பால் கொண்டிருந்த பற்றுறுதியே காரணமானது.

                 ‘ஆதியார் நீல கண்டத் தளவுதாங் கொண்ட வார்வம்

                  பேதியா வாணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி

                  ஏதிலார் போல நோக்கி, “எம்மைஎன் றதனான் மற்றை

                  மாதரார் தமையு மென்றன் மனத்தினும் தீண்டேன்” என்றார்’.           (திரு.நீல.புராணம்: 7)

                            நாயனாரது புறத்தொழுக்கத்தை அறிந்தவுடனேயே, மனைவியார் அதுகுறித்து அயலவர் அறியக்கூறி முறையிட்டிருக்க வாய்ப்புண்டு. அதுபோன்றே, நாயனாரும் அயலவரிடத்தில் கூறியிருப்பின், அவர்களும் அவர்தம் செய்கைக்கு நியாயம் கற்பித்து, மனைவியாரது செய்கை உலகவழக்குக்குப் பொருந்தாது எனக்கூறி, ‘இனியும் அன்புறு புணர்ச்சியால் இல்லறத்தை இனிது கழித்திருங்கள்’ என்றே உலகியலை ஒட்டி ஆற்றுப்படுத்தியிருப்பர்.

    காரைக்காலம்மையார், பரமதத்தனைப் பிரிந்திருந்த வேளையிலும், கழிகின்ற இளமைக்கும், காணாத போகங்களுக்கும் ஏங்கி இளைக்கவில்லை. மாறாக, அந்நாட்களிலும், அடியவர்க்குத் தொண்டுசெய்துவந்தார். அதுவே, ‘மறை பிறர் அறியாமை’ என்னும் மனையறமாகக் கடைப்பிடிக்கப்பட்டதனைப் பெரியபுராணம் உணர்த்துகிறது.

     அதைப்போன்றே, நாயனாரும், மனைவியாரும், இல்லறத்தைப் தொண்டர் பணிக்கான களமாகவே கொண்டிருந்தனர். தம்மிடையே அன்புறு புணர்ச்சி அகன்றநிலையிலும், அன்றாடம் அடியவர்க்குத் திருவோடு வழங்குகின்ற மேன்மைப்பணியில் பழுதேதும் ஏற்படாதவாறு அன்பின்திறத்தில் சாயாதிருந்தனர்.  ‘தாங்குதற்கு, இனிக் கோலே துணையாகும்’ என்று மூத்தநிலையிலும், பெருமானின் மீதுகொண்ட உண்மையன்பில் சிறிதும் பிறழாது உயர்ந்தனர்.

     ‘இளமையின் மிக்கு ளார்க ளிருவரு மறிய நின்ற

      அளவில்சீ ராணை போற்றி யாண்டுகள் பலவுஞ் செல்ல

      வளமலி யிளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து

      தளர்வொடு சாய்ந்து மன்பு தம்பிரான் றிறத்துச் சாயார்’                       (திரு.நீல.புராணம்: 9)

     

     நடந்து வந்தார்; நயந்து தந்தார்

              பொருள் கொண்டோர், இல்லாதவர்க்கு வழங்கி உதவுதலே, உலகியல் அறமாகும். அதனை உணர்த்தவேண்டியே பெருமான் பிரமகபாலத்தைக் கையில்கொண்டு பிச்சையேற்றருள்கின்றான்.

                 ‘பிச்சைய தேற்றான் பிரியா வறஞ் செய்ய’ (திருமந்திரம்: ஏழாம் தந்திரம்: 184) எனத் திருமந்திரம் குறிக்கின்றவாறு, அறங்காட்டியும், அவ்வறத்தைக் கடைப்பிடித்தொழுகி, நன்னிலை பெறவும், பக்குவம் கொண்டோரின் குற்றத்தையும் பெருமான் குணமாகக் கொள்வான்.  அப்பெருங்குணத்துக் காதலுடன்,  பக்திநெறிக்குத் தலைப்படுவாரை உயர்த்தியருளவேண்டி இறைவன், தன் திருக்கரத்தைத் தந்துதவுகின்றான். ஆயினும், வினைவயத்தால் உலகியல் மயக்குகள், ஆயிரம் அசுரக்கரம் கொண்டு,  அவ்வுயிர்களை வலிந்து இழுத்து, வினைச்சேறு மிக்க ஆழ்குழியில் வீழ்த்துகின்றன. இதுவே, பக்திநெறி நின்றாரின் அயராத மனக்கலக்கத்துக்கான சூழலாகிறது. அத்தகைய மனக்கலக்கமுற்ற நாயனாரின் வாட்டத்தை நீக்கி அருளவேண்டியே பெருமான், ஓடேந்திய கையராகிய கோலத்தை நயந்து ஏற்று,  நாயனாரின் மனையை நாடி நடந்தே வந்ததாகச் சேக்கிழார் பெருமான் குறித்துள்ளார்.

                 ‘நன்னெறி யிதுவா மென்று ஞாலத்தார் விரும்பி யுய்யும்

                  அந்நெறி காட்டு மாற்றா லருட்சிவ யோகி யாகி,……..                        (திரு.நீல.புராணம்: 10)

                  விடும்பலிப் பாத்திர மேந்து கையராய்

                  நடந்துவேட் கோவர்தம் மனையை நண்ணினார்’                                  (திரு.நீல.புராணம்: 12)

                            நாயனாரின், குற்றம் கடிந்த கொள்கை வாழ்வின் உயர்வினை உலகுக்கு உணர்த்தவேண்டி வந்தவர், தமது திருவோடு,  கொள்கின்ற (தீவினைகள்) யாவற்றையும் தூய்மையாக்கவல்லது’ என்றார். அத்தகைய சிறப்புடைய தமது திருவோட்டினைக் கொள்வதற்கு உரிய முழுத்தகுதியினையும் உடையவர் நாயனார் என்பவராக, பெருமான் அவர்பால், திருவோட்டினை ‘வாங்கு நீ’ என நயந்து கூறி ஒப்படைத்ததாகக் குறித்துள்ளார் சேக்கிழார்பெருமான்.

    மெய்ம்மைநிலை விளக்க வந்தார்

              திருநீலகண்டத்தின் மீதான ஆணையினை, உள்ளத்தில் மறைத்துக் காக்கின்ற உறுதியுடன், சிவயோகி தந்த திருவோட்டினையும் தம் மனையகத்தே உற்றஇடத்தில் பிறரறியாதவாறு உரிய பாதுகாப்பில் வைத்திருந்தார் நாயனார். ஆனால், பெருமானே அதனை மறையும்படியும் செய்தார். அத்துடன், ஏதும் அறியாதவரைப்போல, மீளவும் தமது திருவோட்டினைப் பெறுவதற்கு நாயனாரின் மனைக்கு வந்தார். அதனை, ‘வாலிதா நிலைமை காட்ட முன்புபோல் வந்தார்’  (திரு.நீல.புராணம்: 19) எனப் புராணம் சுட்டுகிறது. ‘வாலிதாம் நிலைமை’ – தூயதாகிய மெய்ம்மை நிறைந்து விளங்கியநிலை’ என்பது உரைவிளக்கம் (பெரியபுராணம்-முதல் தொகுதி-சி.கே.சுப்ரமணியனார் உரை: பக்.: 681).

             

    தூய்மைநிலை காட்டத் தீராவழக்கு

              வந்த சிவயோகியார், நாயனாரிடத்தில் தமது திருவோட்டினைத் திரும்பத் தரும்படிக் கேட்டவேளையில், அது குறித்த இடத்தில் இல்லாமை கண்டு, நாயனார் திகைத்தார். ‘வைப்பிடத்தில் அத்திருவோட்டினைக் காணேன்’ என்றார். அவ்வளவில் அவர்தம் அறிவையும் மறைப்பாற்றல் மறைக்கின்ற நிலையுற்றார். சிவயோகியாரிடத்தில், முன்பிலும் சிறந்த ஓட்டினைத் தாம் தந்துதவுவதாகக் கூறினார். அதைப்பெற்றுத் தமது பிழையைப் பொறுத்தருளவேண்டும்’ என வேண்டினார். ஆனால், வழக்காடி நாயனாரின் வாய்மையாம் வன்மையினை உணர்த்தவந்த சிவயோகியார் அதனை ஏற்கவில்லை. அடைக்கலப்பொருளைக் கவர்ந்துகொண்டதும் அல்லாமல், அதற்கு நாணாத குற்றத்துக்காக, குடும்பதோடு உம்மை, எம்உலகிற்குக் கொண்டு செல்வதே சிறந்த தீர்வாகும்’ என்றார். ஆயினும், நாயனார் கொண்டிருந்த பழியச்சம், அம்மொழிகளது உள்பொருளை உள்ளவாறு உணர்கின்ற தெளிவினை அவருக்குத் தரவில்லை. மாறாக, தம்பாலுள்ள உண்மையினை நிறுவுவதற்கான வாய்ப்புகளைச் சிவயோகியே தந்தருள்வார் என்ற உறுதியில் அவரது ஆணைக்குக் காத்திருந்தார். அவ்விடத்தில் சிவயோகியார், ‘நீர் களவுசெய்யாமை உண்மையாயின், உலகவர் முன்னால், ஆசை மகனுடன் நீரில் மூழ்கி எழுந்துவருக!’ என்றார்.

    நஞ்சொளித்தார் தந்த பெருஞ்சோதனை               

                 ‘யான் மகன் பெற்றிலேன்’; ‘அதனால் நீர் சொன்னவாறு செய்தற்கு இடமில்லை’ என நாயனார் மறுத்து உரைசெய்தார். அப்படியாயின், ‘உமது காதல் மனைவியின் கரம் பிடித்து, நீரில் மூழ்கி எழுக’ என்றார், சிவயோகியார். அதற்கும் மறுப்புரையாக, ‘யான் மட்டுமே மூழ்கி உண்மையினை உலகவர் உணர உரைப்பேன்’ என்றார் நாயனார். அதுகேட்டு வெகுண்ட யோகியார், ‘களவாடியதும் அல்லாமல், உண்மையாளன் என்றும் வாது செய்கின்றீர்; அவ்வுண்மையினைப் பிறருக்குச் சொல்ல வாய்ப்பளித்தபோதும், அதனை உரியவாறு அணுக மனமின்றி, பலவாறு மறுத்துரைக்கின்றீர்.  ‘உம்மிடமிருந்து உரிய நீதியைப் பெற, தில்லைவாழ் அந்தணர்களின் அவையினை யாம் நாடிச் செல்வோம்’ என்றார் யோகியார். அங்கு இருதரப்பு வாதங்களையும் கேட்ட அவர்கள், யோகியாரின் எண்ணப்படியே நாயனார், மனைவியாருடன் இருந்து நீரில் மூழ்கி எழுதலே சாலச் சிறந்தது’ என்று உரைத்தனர். அந்நிலையில், அவர்களது கருத்துக்கு, எதிர்க்கருத்து கூறுகின்ற மனநிலை நாயனாருக்கு இல்லை. தாம் காக்கவேண்டிய பேருண்மை என்னும், தீராதபெருங்கடமையில் நிலைநின்றார். தமது மனைவியாரைத் தீண்டியபடி,  நீரில் மூழ்கிஎழ வாய்ப்பில்லாமையை எண்ணிக் கலங்கினார். அதனைத் தவிர்க்கவேண்டுமாயின், தனது புறத்தொழுக்கத்தைக் கடிவதற்கு, மனைவியார் சொன்ன சூளுரையினை உலகறியச் சொல்கின்ற நிலை ஏற்படுமே என்று வருந்தினார். அவ்வேளையிலும் அது,  தனது தன்மானத்துக்கு இழுக்கு’ என அவர் எண்ணவில்லை.  புறத்தொழுக்கமும், திருநீலகண்டத்தின் மீதான ஆணையும், உலகறிய வெளிப்படுமானால், அதுகாறும் தாமும் மனைவியாரும் இல்லறத்தாருக்குரிய கடமைகளாகச் செய்துவந்த திருத்தொண்டின் சிறப்புக்கு குறைநேருமோ’ என்றே கலங்கினார். அதனாலேயே, சிவயோகியாரிடமும்,  தில்லைவாழ் அந்தணரிடமும்கூட ஆணை குறித்துக் கூறவில்லை.

    நாயனார், தில்லைவாழ் அந்தணர் கூறியவாறு செய்துமுடிக்க, மற்றோர் உபாயத்தைக் கைக்கொண்டவராக, அனைவரோடும் திருப்புலீச்சுரமாகிய திருத்தலத்தினை அடைந்தார். பெருங்கூட்டத்தின் முன்பிருந்து, மனைவியோடும் குளத்தில் மூழ்க எண்ணினார். மூங்கில் தண்டின் இருமுனைகளையும் பற்றியவாறு மூழ்கிஎழ எத்தனித்தார். அதைக் கண்ட சிவயோகியார், யாம் கூறியவாறே, மனைவியைக் கை தீண்டி, மூழ்கி எழுக’ என்றார். இதைக் கேட்டு, ஆற்றாமை மேலும் மிகுந்து கலங்கிய நாயனார், தமக்கும், மனைவியாருக்கும் இடையேயான திருநீலகண்டத்து மீதான ஆணையை உலகவர் அறியக் கூறி, மூழ்கி எழுந்தார். முந்தைய சிவப்பொலிவிலும் அவர்தம் திருமேனி, மேலும் பொலிவுற்றுத் திகழக் கண்ட அனைவரும் திகைத்தனர். அதுகாறும், அவ்விடத்தில் நின்றிருந்த சிவயோகியார், வானில், விடைமேல் மாதொருபாகரெனத் திருக்காட்சியும் தந்தருளினார்.

                 ‘மனைவியார் தம்மைக் கொண்டு மறைச்சிவ யோகி யார்முன்

                  சினவிடைப் பாகர் மேவுந் திருப்புலீச் சுரத்து முன்னர்

                  நனைமலர்ச் சோலை வாவி நண்ணித்தம் முண்மை காப்பார்

                 புனைமணி வேணுத் தண்டி னிருதலை பிடித்துப் புக்கார்’           (திரு.நீல.புராணம்: 37)

    அடியார்க்கு எளிய, ‘நீலகண்டன்’     

    ‘நீலகண்டம் இருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான்’ (இரண்டாம் திருமுறை: 100:9) என்பது திருஞானசம்பந்தர் அருள்மொழி. திருநீலகண்டனாகிய பெருமான்,  மாலுக்கும், பிரமனுக்கும் அரியவன். ஆயினும், அடியாருக்கு என்றும் எளியவன்’ என்பதற்கு, நாயனார் அருள்பெற்ற திறம் சான்றாகும்.

    நாயனாரும் அவர்தம் மனைவியாரும், மேன்மேலும் சீர்பெருகு சிவத்தொண்டாற்ற அவர்களுக்குக் குறையாத இளமை அளித்தருளிய பெருமான் இன்றளவும், ‘இளமையாக்கினார்’ என்று போற்றப்பெறுகின்றார். மேலும், கணம்புல்லர், முடியால் விளக்கெரித்த இத்திருத்தலம், தில்லைத் திருத்தலத்துக்கு அருகிலேயே உள்ளது.

    முடிவுரை

                திருவைந்தெழுத்தும், திருச்சிற்றம்பலமுமாகிய பலவகைத் திருப்பெயர் மந்திரங்களும், நுண்ணறிவால் மட்டுமே அணுகப்பெறுகின்ற அருமையுடையவை. அவற்றுள்,  ‘திருநீலகண்டம்’ என்னும்  திருப்பெயர், உண்மைஅன்பின் உணர்வுநிலையால், எளிமையுறப் பற்றுகின்ற மந்திரமாகிறது. அத்திருப்பெயர், ‘மன்னுயிர்க்காக, யாரும் உண்ணஇயலாத அருநஞ்சை உண்டு காத்த பெருமானின் அருந்தியாகத்தை உணர்த்துவது. திருஞானசம்பந்தப் பெருமான்,  அதன் எளிமைத்தன்மையில் கொண்ட ஈடுபாட்டினால், ‘நீலகண்டனை நித்தல் நினைமினே’ (5:57:9) என்றார். அவ்வகையில் வாழ்ந்த நாயனார்,  ‘பொய் கடிந்து அறத்தின் வாழ்வார்’ என்றும், ‘பழுதிலார்’ என்றும் போற்றப்பெறுகின்றார். அவர்தம்இல்லறம்,  காமம் கடந்து,  தொண்டுநெறியாகச் செழித்ததற்கு, ‘திருநீலகண்டமே’ கருவியானது. அத்திருப்பெயர் அன்றாட வாழ்வின் அருமந்திரமானால், நம்மைத் தீவினைத் தீண்டப்பெறாத உயர்வில். கொடிய காமவலையினை நீத்து, திருவடியினைப் பற்றி உய்யலாம்.

    ஆய்வுத் துணைநூல்கள்

    1. பெரியபுராணம்-முதல் தொகுதி-சி.கே.சுப்ரமணியனார் உரைநூல்,

               பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21.

    பதிப்பு ஆண்டு: செப்டம்பர், 2017.

    1. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை),

    பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்),

    கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.

    1. திருக்குறள், சிற்பி பாலசுப்பிரமணியனார் உரை,

    தாமரை பதிப்பகம், சென்னை.  இரண்டாம் பதிப்பு: அக்ட

    Share
  • பேஷ்! பேஷ்! சீரீஸ் [2]

    இன்னம்பூரான்

     

     

    ‘கலியிலே எலியும் புலியாகும்.’ என்ற கிலி நிஜமாயிடுத்தாம். காந்திமண்டபத்திற்கு எதிரில் இருக்கும் அண்ணாவின் பெயரை கெடுக்கவதற்கே இயங்கிவரும் பல்கலையில் ஒரு பரிக்ஷை நடந்தது. பெரிய வீட்டுப்பிள்ளையோ, ரவுடி வீட்டுத்தத்தாரியோ, ஒரு பையன் வாங்கிய மார்க் 24. அவனை கீர்த்தியுடன் கெலித்ததாகக்காட்டுகிறேன் என்று கை நீட்டி கையூட்டு வாங்கிய பரீக்ஷாதிகாரி அவர்களுக்கு தன் மதீப்பீடு கறார் என்ற அகந்தை உண்டு. மேலும்,அந்த விடைதாள் மறு பரீசீலனைக்கு உட்பட்டால், குட்டு வெளிப்படலாம் என்ற அச்சமும் உண்டு. பார்த்தார். பேனாக்கூட்டீல் தேடித்தேடி, அதே நிறத்தில் எழுதும் எழுதுகோலை எடுத்தார். கட கட என்று நீலகிரி எக்ஸ்பெரஸ் போல சரியான விடைகளை, மாடல் ஆன்ஸர்புக்கிலிருந்து எடுத்து எழுதினார். 14ஐ மனசாட்சியின் உதவியுடன் 94 ஆக்கினார். நல்ல வேளை. இவன் மெக்கானிகல் எஞ்சினியரிங் மாணவன். அதிகப்படியாகப்போனால், அவனால் மாவு மிஷினை ரிப்பேர் செய்யமுடியாது. அவனே மருத்துவ மாணவனாக இருந்திருந்தால் எத்தனை கொலை செய்வானோ! ‘அறிவியலார்’ நம்பாத நரியை பரியாக்கின கதையை விட அதிசயமாக இல்லை, இந்த மாதிரியான வாத்தித் தொழில்💣

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180822 -Brahma mohanam -Srimad Bhagavatham A4 wcol -graphite-indian ink 100dpi lr

    நான்முகர் சந்தேகம்! நாரணனா மாடுமேய்ப்போன்!
    வான்முகம் விட்டிந்த வையத்தில்! -தேன்முகர்
    தொப்புளில் தானமர் தாமரைத் தண்டுகண்டு
    அப்புள்ளான்(புள்வாகனர்) காலை அடைவு….கிரேசி மோகன்….!

    Share
  • வெகு தூரத்தில் இருந்தோம்

    ராதா விஸ்வநாதன் 
    
    

     

     

    வெகு தூரத்தில் இருந்தோம்

    தொடர்பு கொள்ள

    சாதனங்கள் இல்லை

    இருந்தும்

    நம் தொடர்புகள், சொந்தங்கள்

    துண்டிக்கப் படவில்லை

     

    இன்றோ

    சாதனங்கள் உண்டு பல

    இருந்தும் இருக்கிறோம்

    தொடர்பு எல்லைக்கு அப்பால்

    துண்டிக்கப்பட்டு

    Share
  •  முதலுக்கே மோசம்!

    கவியோகி வேதம்

    சிற்பியின் கைகள் நடுங்குமெனில்

        சிலைகளும் எவ்வா றுருவாகும்?

    கற்பவன் கல்வி சிறந்திடுமோ,

        கற்பிப்ப வனுமே அரக்கனெனில்?

    கற்பிலா மாதர் தலைவியெனில்

        கன்னலாய் ஆட்சி நடப்பதெங்கே?

    சொற்களும் இவைபோல் சக்திபெறா,,

        சொலும்காப் பியமே  ‘சக்கை’எனில்!

    .

     கதிரவன் சக்தி வராநிலத்தில்

         கனிதராப் புல்லும் முளைப்பதில்லை!

     முதியவர்  ‘சோடை’- போம்ஊரில்

         முன்னேற் றமென்றும்  இருப்பதில்லை!

     சுதிகளே சேரா வீணைகொண்டால்

         ‘சுக’மெனும் வார்த்தைக் கர்த்தமில்லை!

      கதியிலா ஏழை வாழ்வதெங்கே?

          கருணையே பாயா ஆட்சிதன்னில்!

    .

    பயிற்சியே செய்யா சோம்பல்மனம்

       பகுத்தறி புத்தி கொள்வதில்லை!

    அயற்சியில் உழலும் நெஞ்சத்தில்

        அற்புத  ‘ஸித்தி’ வருவதில்லை!

    வயிற்றினில் அடிக்கும் சீமான்கள்

       வாழ்வதும், ”சொல்லும்” தரமில்லை!

    கயிற்றினில் மாயை வாழ்வு‘கட்டும்’

       கடவுளே! உனையான் விடுவதில்லை!

    Share
  •        ஏன் இயற்கை அழிக்கின்றீர் !

     

                  எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     

     

    மரம் அழிக்கும் மானிடரே

    மரம்  வளர்க்க  வாருங்கள்

    மரம் அழித்து  நிற்பதனால்

    மரத்ததுவா உங்கள்  மனம்

    நிலம்  காக்கும்  மரத்தையெலாம்

    நிர்மூலம் ஆக்கி  நின்றால்

    நிச்சயமாய் இயற்கை அன்னை

    நிம்மதியை இழந்து  நிற்பாள்  !

     

     

    வயல்  நிலங்கள் எல்லாமே

    மாடி  மனை  ஆகிறது

    வளம் விழுங்கும் அரக்கர்களாய்

    மனிதர் பலர் மாறுகிறார்

    தொழிற்சாலை எனும் உருவில்

    தூசு மழை  குவிகிறது

    தூய  நீரை தேடிநின்று

    துவழ்கின்றார் மக்கள் எலாம் !

     

    எடுத்து  நிற்கும்  செயலாலே

    இயற்கை வளம் குலைகிறது

    இயற்கை எனும்  அமைப்புதான்

    இவ்  உலகின் அரணாகும்

    இயற்கை எனும் கவசத்தை

    எடுத்துப்  பிய்த்து எறிவதனால்

    இயற்கை அன்னை கோபமது

    எமைத்  தாக்கி   நிற்கிறதே  !

     

    ஓயாமல்  மழை  பெய்து

    ஒரு பக்கம் அழிகிறது

    பேயாகக் காற்று  வந்து

    பேர் அழிவைச்  செய்கிறது

    எதிர்பாரா தீ  வந்து

    இடர் கொடுத்து நிற்கிறது

    இவை பார்த்தும் மானிடரே

    ஏன் இயற்கை அழிக்கின்றீர் !

    Share
  •      கடுஞ்சட்டம் வரவேண்டும் !

     

                ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     

    கர்ப்பிணிகள் என்றுமவர்

    கண்களுக்குத் தெரிவதில்லை

    கண்ணிழந்தோர் என்பதையும்

    கருத்திலவர் கொள்வதில்லை

    புலனிழந்து இருக்கின்றார்

    என்றுமவர் பார்ப்பதில்லை

    போகமதை மனமிருத்தி

    பொறுக்கித்தனம் செய்கின்றார் !

     

    ஏழை பணக்காரரென்று

    எதுவுமவர் பார்ப்பதில்லை

    வாழ்வைத்தொடும் குருத்துக்களை

    வதைக்கவவர் தயங்கவில்லை

    பட்டினியாய் கிடக்கின்ற

    பரதேசி ஆனாலும்

    கட்டவிழ்த்து விட்டிடுவார்

    காமுகத்தின் கோரமதை !

     

    வயதுகூடப் பார்ப்பதில்லை

    வக்கிரங்கள் செய்திடுவார்

    சபலமனம் கொண்டதனால்

    சதிராடி நின்றிடுவார்

    கற்பழிப்புச் செய்வதிலே

    கருத்தாக இருக்குமவர்

    கழுவேற்றி வதைப்பதற்கு

    கடுஞ்சட்டம் வரவேண்டும் !

     

    கற்பழிக்கும்   கயவருக்கு

    காருண்யம் காட்டாதீர்

    நட்டநடு வீதிவைத்து

    சுட்டிடுங்கள்  தீயாலே

    வெட்டவெளி தனில்விட்டு

    விட்டெறிங்கள் கல்மாரி

    கெட்டவர் அழிவதற்கு

    இயற்றிடுவோம் கடுஞ்சட்டம் !

    Share
  • திருந்திய வாழ்விற்குத் திருமூலர் காட்டும் நெறிமுறைகள்

    -முனைவர் க. சிராஜுதீன்

    இன்றையவாழ்க்கை ஆரவாரம் மிக்கதாகவும் ஆடம்பரம் மிக்கதாகவும் போலித்தனம் நிறைந்ததாகவும் மாறிவருகிறது. வாழ்க்கையை அனுபவிக்கவோ சரிவரப் புரிந்துகொள்ளவோ இயலவில்லை. இந்நிலையில் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும்? என்பதற்குப் பலர் தாம் கண்ட, அனுபவித்த உண்மைகளைச் சமுதாயத்திற்கு வழங்கிச் சென்றுள்ளனர். அவர்களுடைய கருத்துகளும், கூற்றுகளும் உலக மக்களின் வாழ்விற்கு உறுதுணை புரிகின்றன.

    மக்களுக்கு வாழ்வியலை உணர்த்தும் பணி சங்ககாலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது என்பதற்கு,

    “நல்லது செய்தல் ஆற்றீராயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின்”1
    என்ற நரிவெரூஉத் தலையாரின் பாடலும்,
    “தீதும் நன்றும் பிறர் தரவாரா”2 என்ற கணியன் பூங்குன்றனார் பாடலும் சான்று பகர்கின்றன.

    ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்துடன் பல்வேறு இழைகளால் இணைக்கப்பட்டுள்ளான். அவனது சிந்தனைமுறை, ஒழுக்கக் கோட்பாடுகள் அனைத்தும் சமுதாயச் செல்வாக்கின் விளைவுகளாகும். இதனை உணர்ந்த வள்ளுவரும் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”3 என்றும் “இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்”4 என்றும் கூறுகிறார்.

    தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நெருங்கிய உறவு இருப்பதால் தனிமனிதனின் ஒழுக்கக்கேடு சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தனிமனிதன் நல்லவனாக வாழ்கின்றபோது சமுதாயம் பண்பட்டதாக விளங்கும். உயரிய சமுதாயமாக அமையத் தனிமனித ஒழுக்கம் அடிப்படையானதாகும். “மனிதர் தொகுப்பாக இருப்பினும் அவரவர் அளவில் தனிமனிதரே. தனிமனித வாழ்வில் ஒழுங்கும் அறமும் இன்றியமையாதன. தனிமனிதன் நன்றாக வாழ்ந்தால்தான் நாடும் உலகமும் உயர்வடையும்”5 என்ற கருத்தின் மூலம் உணரமுடிகிறது.

    “யாதும் ஊரே; யாவரும் கேளிர்”6 என்ற உலகநோக்குடன் பரந்த சிந்தையுடன் வாழ்ந்த தமிழர்கள் மனித சமுதாயம் ஒன்றெனக் கருதிக்கூடி வாழ்ந்தனர். ஒன்றுபட்டு உயர்ந்த வாழ்வை நடத்த விழைந்தனர். சமுதாயத் தேவைகளை உணர்ந்து பயனுடைய வாழ்வினை வாழும் மனிதர்கள் உழைப்பது தமது கடமை என்று கருதினர்.

    அக்காலத்தில் மக்களுக்காகச் சிந்தித்த வள்ளுவனைப் போல, இளம்பெருவழுதியைப் போல திருமூலரும் சிந்தித்து, அனுபவித்துத் தாம் உணர்ந்த வாழ்வை, மக்களுக்குத் தேவையான பல வாழ்வியல் சிந்தனைகளைத் திருமந்திரத்தின் மூலம் வழங்கியுள்ளார். பத்தாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ள திருமந்திரத்தின் தொடக்கப் பகுதியில் மக்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகளையும், அடுத்த பகுதியில் தாம் உணர்ந்த இறைநிலையையும், இறுதிப் பகுதியில் இறைவனால் பெறப்படும் ஞான நிலையையும் உணர்த்துகிறார். இம்மூன்றில் முதல் பகுதியான வாழ்வியல் நெறிமுறைகளைத் திருமூலர் வழி எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

    கொல்லாமை

    கருணை வடிவான இறைவன் தான் படைத்த உயிரினங்களை வதைத்கும் செயலை ஒரு பொழுதும் அங்கீகரிப்பது இல்லை, பொறுப்பதும் இல்லை. “வதைக்கும் செயல் புரிந்தால் வதைபட வேண்டி வரும்” என்பது அனைத்துச் சமயத்தாரின் நம்பிக்கை. ஆன்மாக்கள் கர்மபலனைப் பொறுத்து வெவ்வேறு வடிவங்கள் எடுத்துக் கொள்கின்றன என்பது இந்து தர்மத்தின் முக்கியக் கோட்பாடு. ஒவ்வோர் உயிரினத்திலும் ஒரு ஜீவாத்மா உறைந்துள்ளது. இறைவன் ஒருவனே பரமாத்மா. ஒரு ஜீவாத்மா மனித உடலில் உறையும்பொழுது அது வதைப்பட்டால் அதற்குப் பெயர் கொலை – வன்முறை – தீவிரவாதம். இறைவனின் படைப்புகளில் சில, மனித குலத்திற்காக மட்டுமே என்று எண்ணுவது பெரும்பிழை. கொல்லுதல் என்பது பெரும்பாவம். எவன் ஒருவன் கொலைத் தொழிலில் ஈடுபடுகிறானோ அவன் விரைவில் கூற்றுவனால் கொல்லப்படுவான். கொலை செய்யாதவனுடைய உயிர் அவனின் உடலில் நீண்டநாள் நிலைபெற்று வாழுமென்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இதனை,

    “கொல்லாமை மேற்கொண்டொழுவான் வாழ்நாள் மேல்
    செல்லாது உயிருண்ணுங் கூற்று”7
    என்ற குறட்பாவின் மூலம் வலியுறுத்துகிறார்.

    உயிர்களைக் கொல்லாமை என்பது தமிழர்களிடையே தொன்றுதொட்டு வரும் மரபாகும். இக்கொள்கை மங்கும் காலத்தில் வள்ளலார் புலால் ஒழித்தல் கொள்கையைத் தீவிரமாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதே கருத்தைத் தாயுமானவரும்,

    “கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க
    எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே” என்ற வரிகள் மூலம் எடுத்துரைக்கிறார். அனைத்து உயிர்களும், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணினால், அதற்கு அடிப்படையாக அமையவேண்டியது அன்பும், கருணையும் ஆகும். “புலையும் கொலையும் களவும் தவிர்”8 என்று கருணையோடு இருக்க வேண்டுமென்று கொன்றை வேந்தனும் குறிப்பிடுகிறது.

    எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவித்து அன்பு செய்தல் வேண்டும். அவ்வாறு அன்பு செய்யாது தீங்கு செய்வோமேயானால் கொடிய கூற்றுவன் நாம் செய்த தீங்கினை நமக்கே செய்வான். எனவே எவ்வுயிர்க்கும் அன்பு செய்ய வேண்டும். இப்படிச் செய்வோர் உள்ளத்திலேதான் இறைவன் தங்கி உறைவான் என்பதைத் திருமூலர்,

    “கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
    வல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்
    செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
    நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே”9 என்ற வரிகள் மூலம் விளக்குகிறார்.

    அன்புடைமை

    அன்புடைமை என்பது அன்பைக் கொண்டவராக இருத்தல். இது இல்லறத்தார்க்கு மட்டுமன்றி அனைவருக்கும் பொருந்துவது. அன்பு எனும் உள்ளுணர்வே அனைத்தையும் இணைக்கும் பாலம் ஆகும். அது கருணையாலும், கனிவாலும், ஆர்வத்தாலும், மனம் கொள்ளும் உணர்வும், அது கொடுக்கும் விரிந்து படர்ந்த இடமும், சலுகையும் இன்பமும், இன்னதென்று விளக்க முடியாத நல் எண்ணமுமாகும்.

    அன்புகொண்டு அணுகினால் பிரச்சினைகள் பிரச்சினைகளாகவே தோன்றாது. அன்பு எனும் கருணைகொண்டு பார்க்கும்பொழுது குற்றங்களையும் பொறுத்துக்கொள்ளும், மனமும் அவற்றிற்குத் தீர்வைக் காணும், அறிவும் மேலோங்குமே தவிர கோபம் எனும் குணம் வாராது. உண்மையில் அன்பு செய்வது இன்பமாகும். அன்பு எதையும் குணப்படுத்தும் குணம் கொண்டது. அன்பு தான் சிவம் என்றும், சிவம் தான் அன்பு என்றும் உலக மக்கள் யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். ஒருவன் அன்புதான் சிவமாகவும் சிவம்தான் அன்பாகவும் இருப்பதாக உணர்ந்தபின், அவர் சிவத்தன்மையை அடைந்து விடுவார் என்கிறார் திருமூலர். இதனை,

    “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
    அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே”10 என்ற வரிகள் மூலம் விளக்குகிறார்.

    உதவி

    உற்றாருக்கும், உறவினருக்கும், கண்ணில் பட்டாருக்கும் உதவவேண்டிய பொறுப்பு மனிதப் பிறவிகளுக்குக் கடமையாகிறது. பிறருக்காக இரக்கப்படும் மனம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறரின் கனவுகளை அடைய ஒருவர் உதவினால், அவர் தன்னுடைய இப்பிறவிக்கான இலக்கை மிக எளிதாக அடைந்துவிட முடியும் என்பது இறைக்கோட்பாடு மட்டுமன்று இயற்கை விதியும்கூட. ஒருவர்க்கு செய்யும் உதவி அதே வடிவத்தில் திரும்பக் கிடைக்காது. அது ஏதோ ஒரு வழியில், ஏதோ ஓர் உருவத்தில் கிடைத்தே தீரும். கைம்மாறு கருதாது உதவி செய்வது சிலரின் இயற்கைக் குணமாக அமைந்துவிடுகிறது. அத்தகைய குணம் கொண்ட மனிதர்கள் எப்போதும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

    பிறருக்கு உதவி செய்யும்போது பயனை எதிர்பார்க்காமல் உதவிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்கின்ற உதவிதான் உதவியாகக் கருதப்படும். பயனை எதிர்பார்த்துச் செய்வது உதவியாகாது. இதைத் திருவள்ளுவர்,
    “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீரது உடைத்து”11
    என்ற வரிகள் மூலம் விளக்குகிறார். உதவி செய்பவரைத் திருக்குரான் “(அவர் எத்தகையோரென்றால்) தம்மைத் தூய்மைப்படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார். மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம்மீது இல்லாதிருந்தும். மாறாக மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்). வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.”12 என்று குறிப்பிடுகிறது. வேறுபட்ட சமயமாக இருந்தாலும், உதவிசெய்தல் என்ற சிந்தனையில் எல்லாச் சமயங்களும் ஒரே கருத்தை விளம்புகின்றன.

    உதவி செய்தல் பற்றித் திருமூலர் குறிப்பிடும்போது, தானம் செய்ய முடியவில்லையே என்று எவரும் கவலைப்பட தேவையில்லை. உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி உணவைக் கண்ணில் தெரியும் காக்கைக்கு இட்டு உதவலாம். அத்தகைய நிலையை எட்ட முடியவில்லை எனில், பசுவிற்கு ஒரு கைப்பிடி வைக்கோலை எடுத்து உண்ணக்கொடுக்கலாம். அத்தகைய சூழலும் கைவரப்பெறவில்லையெனில் அருகில் உள்ளவரின் மனம் புண்படும்படி பேசாமல் இனிமையான சொற்களைப் பேசினாலே போதுமானது. அதனை மிகப்பெரிய தானமாகக் கருதலாம் என உதவி செய்வது குறித்து மிக எளிமையான முறையில் விளக்குகிறார். இதனை,

    யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
    யாவர்க்கு மாம்பசு விற்கொரு வாயுறை
    யாவர்க்கு மாம்உண்ணும் போதுஒரு கைப்பிடி
    யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே”13 என்ற திருமந்திரத்தின் வரிகள் விளக்குகின்றன. 

    அறம்

    ‘அறு’ என்ற வினைச்சொல்லின் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே, முழுநிறை வடிவமே அறம் என்று கூறலாம். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக்கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு. உலகம் ‘சீரழிந்து’ கொண்டிருந்தாலும், யுக யுகமாக உலகைத் தாங்கிப் பிடித்து நிற்கும் மிக இன்றியமையா விழுமியம் அறமாகும்.

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று தவறு செய்யும் ஆட்சியாளர்களைக் கொன்று போடும் வல்லமை உடையது என்று சிலப்பதிகாரத்தில் அறம் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் முப்பாலில் முதல் பாலாக அறத்துப் பாலை வைத்தார். அறம் பாடுவது தமிழ்ப் புலவர்களின் வலிமையான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவை இழிவுபடுத்தும் எவரையும் அறம்பாடி ஒழிக்கும் வல்லமையைத் தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் கைகளில் வைத்திருந்தார்கள்.

    இப்படிப்பட்ட அறத்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கிய மேதைகள் அடையாளம் கண்டு சமூகத்துக்கு அறியத் தருகிறார்கள். அறத்தைப் பேணவில்லையெனில் பல்வேறு துன்பங்களை அடைய நேரிடும் என்று திருமூலர் குறிப்பிடுகிறார். அறம் செய்யாவிட்டால் மனதிலே மாசு உருவாகும். ஞானத்தை அடையமுடியாது. செல்வம் நிறைந்திருந்தாலும் தான தர்மம் செய்யமுடியாது. கண் இருந்தும் குருடர் என்ற நிலையையே அடைய நேரிடும். தன்னைக் காப்பாற்ற எண்ணிலடங்கா பொருட்கள் வைத்திருந்தாலும், காலன் வரும்போது அறம் செய்யாத ஒருவரால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்று குறிப்பிடுகிறார். இதனை,

    “அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
    தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
    விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து
    விழிக்கவன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே”14 என்ற பாடல் வரிகள் விளக்கி நிற்கின்றன.

    பிறன்மனை நோக்காமை

    “பிறன்மனை விழையாமை” ஆண்களுக்கென உரைக்கப்பட்ட ஒரு விழுமியமாகும். காம இன்பங்களைத் தன் மனைவியிடம் பெறுதல் ஒழுக்கம். பிறன் இல்லாளை விரும்பி அடைதல் மற்றவர் உரிமையில் தலையிடும் அறமற்ற தீயசெயல். உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இணைவிழைச்சு இயல்பூக்கமாயினும், புறத்தொழுக்கம் இருப்பின் இல்வாழ்க்கைச் சிறக்காது என்பதால், மாந்தரை ஒரு வரையறைக்குள் கொண்டுவரப் பெற்றுள்ளது. பெண்ணுக்குக் கற்புப் போன்று ஆண்களுக்குப் பிறன்மனை நயவாமை வேண்டும் என்கிறது அற இலக்கியமும், பக்திப் பனுவல்களும். அடுத்தவனுடைய பொருளான மனைவிமீது காமுறுவது பேதைமை, தீமை, பழி, பாவம் என்று குறிப்பிடுவதோடு நின்றுவிடாமல் பிறன்மனை நோக்கா ஆண்களைப் பேராண்மை என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

    வள்ளுவர் முதலான அறநூலோர் வாழ்ந்த காலத்தில்தான் தமிழ் இலக்கிய உலகில், ஆணுக்குப் பிறனில் விழையாமை என்ற பாலியல் அறம் கூறப்பட்டது என்பர். ஆண்களுக்குப் பாலியல் ஒழுக்கத்தை வலியுறுத்துவது “பிறனில் விழையாமை” அதிகாரம். மற்றவர் மனைவியை காம மயக்கத்தோடு நோக்குவதற்கு எதிரான வள்ளுவரின் போராட்ட உணர்வு இவ்வதிகாரத்தில் நன்கு புலப்படும். இத்தகைய விழுமியம் எல்லா இலக்கியங்களிலும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகையக் கருத்தைத் திருமூலரும், தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணையாளை விடுத்து அடுத்தவர் மனைவியைக் காமுறும் செயல் என்பது காய்த்த பலா இருக்க ஈச்சம் பழத்திற்கு அலையும் வாழ்க்கையாகிவிடும் என்கிறார். இதனை,

    “ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
    காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
    காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
    ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே”15 என்ற வரிகள் மூலம் விளக்குகிறார். 

    நிலையாமை

    நிலையாமையாவது தான் என்று நினைத்திருக்கின்ற உடம்பும் தனது என்று நினைத்திருக்கின்ற செல்வமும் நிலை நில்லாமையைக் கூறுவது. ஒருவனது வாழ்நாள், அவ்வாழ்நாளில் அவனது இளமை, செல்வம், யாக்கை எல்லாம் நிலையற்றவை என்பது அறியப்படவேண்டும். செல்வம், யாக்கை, இளமை முதலானவற்றின் நிலையாமை பற்றிய உணர்வு ஒருவரது வாழ்வைப் பயனுடையதாக்கும். சிந்தித்துப் பார்த்தால், உலக வாழ்வே நாடகம்போல் தோன்றும். நாடகக்காட்சி போன்று நிகழ்ச்சிகள் சுழன்று சுழன்று செல்கின்றன. உடைமைகள், பதவிகள், அரசு, எல்லாம் உலகமேடையில் மாறுதல்களை தோற்றுவிக்கின்றன.

    “பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும்
    நில்லா வுலகம் புல்லிய நெறித்தே”16
    என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைச் சான்று பகர்கின்றன. இதற்கு நச்சினார்க்கினியர் “உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று குறிப்பிடுகின்றார்.

    நிலையில்லாத வாழ்க்கையின் தன்மையை அறிந்து அதன்வழி நடப்பதே சிறந்த வாழ்க்கையாகும். நிலையில்லாதவற்றை நிலையானவை என்று மயங்கி வாழ்பவர்கள் இழிநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை வள்ளுவர்,

    “நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மை கடை”17
    என்ற அடிகள் மூலம் உணர்த்துகின்றார்.

    “இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
    வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா”18
    என்ற மணிமேகலைப் பாடல் வரிகளும் இளமை நிலையில்லாதது, யாக்கை நிலையில்லாதது, செல்வம் நிலையில்லாதது என்று குறிப்பிடுகின்றது.

    திருமணம் போன்ற நிகழ்வுகள் புத்தாடை உடுத்தி பலர் நடுவே நடைபெறும். அப்போது மகிழ்ச்சியோடு இருப்பர். இறுதி காலத்தில் இறந்த பிறகு அத்தா என்று அலறி அழைத்தாலும் புரண்டுபடுக்க முடியாது. அப்போது சுடுகாடு செல்வதற்கு பல்லக்கு ஏறி செல்ல நேரிடும். எனவே இவ்வுலகில் எதுவும் நிலையில்லாதது என்பதை,

    “மன்றத்தே நம்பி மாடம் எடுத்து
    மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
    மன்றத்தடி நம்பி முக்கோடி அழங்கினான்
    செற்றத்தா வென்னத் திரிந்திலன் தானே” 19 என்ற வரிகள் மூலம் திருமூலர் விளக்குகிறார்.

    இளமை நிலையாமை

    உலக உயிர்கள் நிலையற்றவை. உலகத்துத் தோன்றும் எவ்வுயிரும் நிலைபெற்றுத் தங்குவதில்லை. நிலையாமை என்பதற்கு “அநித்தியம், உறுதியின்மை”20 என்று பொருள் ‘Instability’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லே நிலையாமை என்பதாகும். தமிழ் இலக்கியங்கள் அக, புற மற்றும் அறக்கருத்துகளோடு நிலையாமைச் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. நிலையாமையைத் தொல்காப்பியர் புறத்திணையியலில்,

    “காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
    பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
    நில்லா வுலகம் புல்லிய நெறித்தே ”21 என்று கூறுவர். இதனால் இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்ற தொல்காப்பியரின் கருத்தை உணர முடிகிறது. தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணரின் கருத்துப்படி நிலையாமை மூவகை என்பதனை, “காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம். அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பல நெறியாயினும் நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியையுடையது. நிலையாமை மூவகைப்படும். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என இவற்றுள்”22 என்ற கூற்றினால் அறிய முடிகிறது.

    வள்ளுவர் நிலையில்லாதவற்றை நிலையானதாகக் கருதுவதனைப் ‘புல்லறிவாண்மை’ என்று கூறுவதனை,

    “நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மைக் கடை
    ”23 என்ற குறள் விளக்குகிறது.

    மனித வாழ்க்கையில் வசந்த காலமாகக் கருதப்படுவது இளமைப் பருவமாகும். எப்பருவமும் நிலைத்து நிற்பதில்லை. இளமை நிலையாமையைத் தொல்காப்பியர், “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை”24 என்று கூறியுள்ளார். நாள்தோறும் கிழக்கே தோன்றுகின்ற பகலவன் மெல்ல மெல்ல உச்சிக்கு ஏறுகிறது. அதுபோலவே கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்கி மேற்கே மறைகின்றது. இங்ஙனம் மறைவதை ஒவ்வொரு நாளும் பார்த்திருந்தும் அகக் கண்ணாகிய திருவடியுணர்விலார் தமக்கும் இந்நிலைமை வரும் என்று நினைப்பதில்லை. இளங்கன்றானது ஆண்டுகள் செல்லச் செல்ல முதிர்ந்து சில ஆண்டுகளில் எருதாய் ஆகின்றது. பின் இறந்துபடுகின்றது. அவ்வாறுதான் ஒவ்வொருவரின் இளமை வாழ்வும் நிலையில்லாமல் இருக்கிறது என்பதை,

    “கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
    விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
    குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
    விழக்கண்டும் தேறார் வியனுல கோரே”25
    என்ற வரிகள் மூலம் திருமந்திரம் விளக்கி நிற்கிறது.

    கள்ளுண்ணாமை
    “வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.”26

    என்ற குறட்பாவானது “மனிதன் வாழ வேண்டிய நெறியுடன் வாழ வேண்டும்” என்பதை வலியுறுத்துகின்றது. இதனைச் சான்றோர்கள் பொய், களவு, கொலை, மது, மாது என்பன விலக்கி, சிறப்புடன் வாழவேண்டும் என்கின்றனர். இல்வாழ்க்கையின் இலக்கணம் என்பதுவும் இதுவே. மனிதன் சிறந்த முறையில் தாமும் வாழ்ந்து, தம்மைச் சேர்ந்த அனைவரையும் வாழவைக்க வேண்டும் என்பதேயாகும். இதுவே சிறந்த மனிதத்துவமாகவும் கருதப்படுகின்றது. ஆனால், இன்று பலர் விலை கொடுத்து, மெய்யை மறந்து, மதுவை வாங்கி, அறிவை மயக்கி வாழும் முறை தெரியாது அல்லல்படுகின்றனர். இதனை வள்ளுவன்,

    “கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து
    மெய்யறியாமை கொளல்”27
    என்று குறிப்பிடுகிறார். உலக மக்களின் ஆரோக்கியமான நல்வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக மது இருந்து வருகின்றது. இதனால் மனித குலமே சீரழிந்து கொண்டிருக்கின்றது. புத்தாக்கங்கள் நிறைந்த புதுமையான உலகில் மேல்நாட்டுத் தயாரிப்புக்களும், உள்நாட்டுத் தயாரிப்புகளும் விதம் விதமான விளம்பர உத்திகளின் ஊடாக புதிய புதிய வடிவங்களில் அறிமுகமாகிய வண்ணமே உள்ளன. இதன் காரணமாக பல கோடிக்கணக்கான குடும்பங்கள் குடும்பத் தலைவரின்றி வாழவேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். தற்காலத்தில் ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் மதுவை நோக்கி படையெடுக்கின்றனர். எனவே அக்குடும்பம் துன்பம் நிறைந்த குடும்பமாக மாறிவிடுகிறது. மதுவிற்கு அடிமையானவரும், மதுவிற்கு அடிமையானவர்களால் பாதிக்கப்பட்டவர்களும் சில நேரங்களில் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனைத் திருமந்திரமும், தங்கள் உடலையும் உணர்வையும் ஒருங்கு சுருக்கும் முழுமூடத் தன்மை வாய்ந்த இயற்கையும் செயற்கையுமாகிய கள்ளினை உண்பர். அவர்கள் அறமுறையும் அருள் முறையும் அகன்று பாவநெறியிற் செல்வோராவர் என்று குறிப்பிடுகிறது. இதனை,

    “கழுநீர்ப் பசுப்பெறில் கயந்தொறும் தேரா
    கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கம்
    முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
    செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே”28

    உயிர்கள் இன்புற்று வாழவேண்டுமாயின் நல்லதைச் செய்து தீயதை விலக்கி மனிதப் பிறவியின் நோக்கத்தை ஈடேற்ற வேண்டும் என்று மேற்கண்ட வரிகள் உணர்த்தி நிற்கிறது.

    நிறைவுரை

    வாழ்வியல் என்றால் என்ன என்பது பற்றியும், பழங்கால இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ள வாழ்வியல் சிந்தனைக் கருத்துகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    கொலைத் தொழிலில் ஈடுபடுகிறவன் விரைவில் கூற்றுவனால் கொல்லப்படுவான் என்றும் கொலை செய்யாதவனுடைய உயிர் அவனின் உடலில் நீண்ட நாள் நிலைபெற்று வாழுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அன்புதான் சிவமாகவும், சிவம்தான் அன்பாகவும் இருப்பதாக உணர்ந்தபின், ஒருவன் சிவத்தன்மையை அடைந்து விடுவான் என்று அன்புடைமைப் பற்றி வலியுறுத்தப்பட்டு;ள்ளது.

    உதவி செய்வதற்குப் பொருட்செல்வம் தேவை. பொருட்செல்வம் இல்லையெனில், அடுத்தவரைக் காயப்படுத்தாத இனிய சொற்களைப் பேசினாலே உதவி செய்ததற்குச் சமமாகும் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    அறம் செய்யாவிட்டால் மனத்திலே மாசு உருவாகும். ஞானத்தை அடையமுடியாது. செல்வம் நிறைந்திருந்தாலும் தான தர்மம் செய்யமுடியாது. கண் இருந்தும் குருடர் என்ற நிலையை அடைய நேரிடும். தன்னைக் காப்பாற்ற எண்ணிலடங்காப் பொருட்கள் வைத்திருந்தாலும், காலன் வரும்போது அறம் செய்யாத ஒருவரால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணையாளை விடுத்து அடுத்தவர் மனைவியைக் காமுறும் செயல் என்பது இன்பத்தை விடுத்துத் துன்பத்தைத் தேடும் வாழ்க்கையாகிவிடும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

    நிலையில்லாத வாழ்க்கையின் தன்மையை அறிந்து எதன் மீதும் பற்றில்லாமல் வாழ்வதே சிறந்த வாழ்வின் அடையாளம் என்று உரைக்கப்பட்டுள்ளது.

    இளமைக் காலம் என்பது சூரியன் தோன்றி மறைவது போன்றதாகும். எனவே இளமைப் பருவத்தில் ஈடுபாடில்லாது இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    இறைத்தன்மை மறந்து, அறிவை மயக்கும் கள்ளுண்பவர் அறமுறையும் அருள் முறையும் இழந்து பாவநெறியில் செல்பவர்களாக இருப்பர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    சான்றெண் விளக்கம்

    1. புறநானூறு, பா.எ., 195.
    2. மேலது, பா.எ., 192.
    3. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.596.
    4. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.987.
    5. சந்திரசேகரன். இரா (ப.ஆ), தமிழ் இலக்கியம் வாழ்வியல் நெறி, பக். 146- 147.
    6. புறநானூறு. பா.எ., 192.
    7. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ. 326
    8. ஒளவையார், கொன்றை வேந்தன் பா.எ. 63
    9. திருமூலர், திருமந்திரம், பா.எ.240
    10. திருமூலர், திருமந்திரம், பா.எ – 257
    11. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.221
    12. திருக்குர்ஆன் 92:18-21
    13. திருமூலர், திருமந்திரம், பா.எ. 252
    14. திருமூலர், திருமந்திரம், பா.எ.254
    15. திருமூலர், திருமந்திரம், பா.எ.244
    16. தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள். நூற். 78
    17. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.331
    18. சீத்தலைச் சாத்தானார், மணிமேகலை, சிறைசெய்காதை, 135.36
    19. திருமூலர், திருமந்திரம், பா.எ. 193
    20. பி.இராமனாதன், கழகத்தமிழ் அகராதி, ப.610
    21. தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள்.புறத்.76
    22. இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், பக்.125-126)
    23. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.331
    24. தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள்.புறத்.77
    25. திருமூலர், திருமந்திரம், பா.எ. 171
    26. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.,50
    27. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.925
    28. திருமூலர், திருமந்திரம், பா.எ. 824

    முதன்மை ஆதாரம்: திருமூலநாயனார் – திருமந்திரம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 79, பிரகாசம் சாலை, சென்னை – 01, மறுபதிப்பு – 1979
    துணைமை ஆதாரம்: ஒளவையார் -கொன்றைவேந்தன்,திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,  79,பிரகாசம் சாலை, சென்னை – 01, மறுபதிப்பு – 1985

    துரைசாமிப் பிள்ளை. சு (உ.ஆ) – புறநானூறு,திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,  154, டி.டி.கே. சாலை, சென்னை – 18, மறுபதிப்பு – 1990

    தொல்காப்பியர் – தொல்காப்பியம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 79, பிரகாசம் சாலை, சென்னை – 01, மறுபதிப்பு – 1985

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    முதுகலை & தமிழாய்வுத்துறை
    ஜமால் முகம்மது கல்லூரி (தன்னாட்சி)
    திருச்சிராப்பள்ளி – 620 020
    தமிழ்நாடு, இந்தியா.
    கைபேசி எண் 9865721142
    மின்னஞ்சல் sirajudeensvmtamil@gmail.com

     

     

    Share
  • Samasam in Keralapaniniyam and Veerachozhiyam

    -Dr. Hepsy Rose Mary. A

    Leelathilakam, Malayala Bhasha viyakaranam  and Kerala paniniyam are notable Grammatical works of Malayalam Language.  Among these Keralapaniniyam is practiced well from the school to College in the State of Kerala.  In his introduction, A.R. Rajarajavarma mentions that Kerala Paniniyam mostly follows the Grammatical work of Paniniyam in Sanskrit.   Veerachoziyam a grammatical book in Tamil written after a thousand years of Tholkappiyam.  It is one of the notable works in the history of Tamil Grammar. This book was written for the Tamil Scholars to learn Sanskrit Grammar.  This study deals with the comparative study of samasam in Veerachozhiyam and Keralapaniniyam.

    Definition of Samasam

    Samasam is equalize as Tokai in Tamil Grammatical works.  Tolkappiyam does not describe the definition of compound words in his work.   But the term ‘tokai’ is chosen by him to denote compound. Keralapaniniyam and veerachozhiyam have references for this Grammatical category.  Tokai is combination of two or more words are joining together and absence of affixes in combined words- These concepts prevails in the Tamil Grammatical tradition.

    Tolkappiyam says in his work ‘Ella thokayum oru soll nadaya’  tol.sol 420,’ vettumai thokaye vettumai yiyala’  and ‘vinayin thokaye kaalathiyalum’ .  From these sutras it’s clear that tolkappiyar’s idea on tokai or compound words is the combination of words.

    Veerachozhiyam explains samasam as “Namangalin porutham porul narthokai’ that is a single word contains two or more words reveal one and the same meaning. When explains samasa the author of Kerala Panini depicts as ‘vibakthik kuri kudathe, pathayogam samasam’ ( k.P.181).   It means that compounds as the joining of words without the case marker.  It can be understood from this sutra samasa is the combination of nouns devoid of case markers.  So, it is the common opinion on samasam of all authors.

    Classification of Samasa

    Tolkappiyar divides the compound, in the Tamil language into six kinds.  They are ‘Vetumaithokai (the declension compound) ‘uvamaithokai’ (the compound of comparison, Vinaithokai (the verb compound), panpputhokai ‘(the qualitative compound) ‘ummaithokai’ (the conjunctival or conjunctional Compound) and ‘ anmozhithokai ( the metonymical compound).

    Veerachozhiyam illustrates as follows,

    Tarpurudan palanel kanmathaarayam thangkiya seer
    Narthuvikuthokai  naavaar thuvanthuvam nalla theyvac
    Sorpayan mantharkalal avviyapavam ethennuthonmai
    Karpakamappakarnthaat thokai aarum kanankuzaye’              (v.c 45)

    That is,

    1. Tharpuruda samasam –           declension compound
    2. Palanel samasam ( bahuviri)    – metonymical compound (bahuvrihi is called anmozithokai in Tamil.  P. Meenakshi Sundaram explains the meaning of bahuvirihi, he says that bahu means ‘Much’ virihi means rice; both together denote ‘a person with much rice. Viracoliyam adopt this meaning and named bahuvirihi samasa as palanel samasa.)
    3. Kanmataaraya samaasa –            qualitative compound (the first word is a qualitative or attributive word)
    4. Dvigu samaasam –             ennodupunartha enthokai (dvigu samasa are those compounds which may be called numerical compound where there is a number word and also a noun.  Pirayoka vivekam explains this in Tamil as ennotu porul punarnta entokai.)
    5. Dvandva samaasam –           conjunctional Compound (dvandva samasa is a compound of two or more words in coordinate construction but where the conjuctive particles um / and is absent. It is called ummaithokai in Tamil)
    6. Avviyabva samaasam –     conjunctional Compound (avyayibhava samasa is a compound where a noun is either preceded or followed by indeclinable particle. Pirayoka vivekam explains that in Tamil as follows Munnum pinnum moliyatuttu varum itaicol tokai)

    The verb compound and the compound of comparison are not seen in Sanskrit language.  The avyabava samasa is absent in Tamil language.  The Tamil grammarians include avyabava samasa into conjunctional Compound and tuviku samasa into qualitative compound.   Subramaniya Deetshidar the author of prayoigaviveka opined that   the compound of comparison has been included in qualitative compound.

    The table follows clearly shows the samasa in Tolkappiyam, veerachozhiyam, and Keralapaniniyam.

    Sl. No  

    Tolkappiyam

     

    Veerachoziyam

     

    Keralapaniniyam

    1. vettumaithokai Tarpurudan Tarpurudan
    2. Anmozithokai Palanel/ bahuvirhi bahuvirhi
    3 ummaiththokai Tuvanthuvan Tuvanthuvan
    4 panputhokai Kanmathaarayam
    5 uvamaththokai Thuviku
    6 vinaithokai avviyabavam

    The significance of meaning in samasa

    Tolkappiyam explains that the above six kinds of compounds significance of meaning lies in four different was as follows.

    1. Meaning lies on the prior words
    2. Meaning lies on the later words
    3. Meaning lies on the Prior words and later words
    4. Meaning lies outside the compound word

    Viracoliyam does not have its own opinion on this.  But it follows the system above mentioned by Tolkappiyam.

    In Malayalam Keralapaniniyam follows only three types, taking the importance of component parts into consideration.  They are,

    1. Tatpurusan – importance given for the later words

    Eg: talavedana- tala _ vedana

    1. Bahuvirhi – importance given for word standing outside the compounded words.

    Eg. Tamarakkannan

    1. Dvantavan – some importance given to all words

    Eg. Achanammamar

    Meaning lies on the prior words are not explains by Keralapaniniyam.

    Structure of samasa

    The Structure of Samasa are not mentioned in Tolkappiyam and Veerachozhiyam. But it is described by the commemntators. The author of Kerala Paninayam describes it in detail. He denotes the structure with the words in samasam. This reveals the peculiar ability of author of Kerala Paniniam

    1. With Infinitive Verb+Verb –            Rekshichu Kolka
    2. Noun + Verb                      –           Nila Nilkuka
    3. Adjectival Participle +Noun –            Pettamma
    4. Noun – Adjectival Participle + Noun Thenolum Vani
    5. Noun+Noun                        –           Porkudam , Ramanattam
    6. Adjective + Noun –           Vensamaram, Sembaruthi
    7. Tatpirusa samasa – declensional Compound

    When a compound word is devoid of the case marker  and the elaborated word meaning is hidden,  it is called vettumai  thokai.  When the case marker can be seen clearly in a compound and when it is hidden also will expressed the same meaning if the meaning differs in two cases does not mean as a compound word.

    As discussed vettumai thokai is the combined form of a word which has the hidden case markers inside, the meaning of the line combined word form must be equal to that of the unhidden case markers.

    Structure of tatpurusa samasa

    The Commentators Described that the structure of Vettumai Thokai is Noun + Noun. But in veerachozhiyam and Kerala Paniniyam, the difference in the above said structure can be seen.

    Eg. Nilamkadanthaan (nilathai kadanthaan)  non + verb

    Classification of tatpurusa

    Tolkappiyam does not classified declension compound into further categories.  But it is clear from his examples that declension compound has six categories.  Viracoliyam classifies tatpurusa samasa into eight different kinds as follows,

    ‘eluvai muthalodu vettumaiyOdum ezum thadaiyil
    Vazhuvatha nanjodum ettaam tarpurudan    –            v.c 46

    The author of viracoliyam and its commentators does not use any Sanskrit technical terminology for the classifications of its tatpurusa samasa. (declensional compound.) But Kerala paniniyam uses all kinds of Sanskrit terminology.

    The table follows clearly the the classification of tatpurusa  samasa in veerachozhiyam and Keralapaniniyam are arranged side by side along with examples.

    Sl. No  Viracoliyam Keralapaniniyam
    1  Eluvia vettumai tatpurusan

    Eg. Markalitinkal

    1.     Nirdesika – fedam avuka

    2.     Karrmadharayan- Eg. Konna thennku-

     

    2 Irandam vettumai  tatpurusa

    Eg: kutitanki, malaitanki

    Pratigraahiha –  Eg. Paakku vetti
    3 Muntam vettumai tatpurusa

    Eg. Taai naalvar

    Samyojika – Eg. panthokkum
    4 Nankam vettumai tatpusa

    Eg. Malzaikudai

    Uddesika- Eg. homapura
    5 aintam vettumai tatpusa

    Eg:aattuppaal

     

    Prajojika – Eg. Mangakari
    6 Aaraam  vettumai tatpusa

    Eg: kottan mahan

     

    Sambandika – Eg.marappodi
    7 Elam  vettumai tatpusa

    UUrkuruvi

     

    Adarika- Eg. toolvala
    8 Nannju  tatpurusa

    Eg. atharma

     Ninnu – Nadu ninngi
    9 Kurichu – aanappranthu

    The eighth variety of tatpurusa is called nannju tatpurusa.  As started in Viracoliyam ( 46) it occurs only in Sanskrit where a negative particle na occurs as a before the consonant and as an before vowels

    Eg. Na+ asvam-       = an + asvam – anasva- one which is other than the horse.

    Na+ darma – = a + darma – adarma

    In Veerachozhiyam and Kerala Paninaim Instead of the structure Noun + Noun; Noun + Verb is also seen.

    Eg. Malai thaangki, naadu ningi

    Bahuvirihi samasa Metonymical

    Acording to Tolkappiyar  anmzhithokai or the metonymical compound is formed of the qualitative, conjunctival r declension  compound.  The member of the anmolitokai may stand to each other to any of the three relations viz qualifier non relation, conjunctive relation or case relation.

    Eg. Vellaithai vanthal – qualifier noun

    Takaranazal pusinaal – takaramum nazalum enaitha santhu – conjuctive

    Pottodi  vanthal – case relation

    Heralapanniiniyam says that ‘A visesana is compounded with visesya to show the among ‘one whohas is a bahiviri samasa. Eg: naan muhan

    Types of bahuvirihi samasa

    Keralapaniniyam following Sanskrit grammatical  works  and divides bahuvrihi samasa  into three divisions.

    1. Upamagarbha: That with a middle word indicating sameness is upamaafarbham

    Eg.      Kaanjaneermizhi – a lady whose eye is like a lotus.

    Here the word denoting similarity is mentioned.

    1. Upamaluptham – where the word showing similarity.

    Eg. Matimuhi  –  one whose face is like a moon

    1. Upamanaluptham – That in which the modifier ( upamanam) is lost is

    Eg. Pedakanni – a lady whose eyes are like those of  a deer.

    The above said three division comes under tholkappiyars ummaithogai the author of keeralapaniniyam describes these with the Sanskrit terminologies.

    Veerachozhiyam states the kind of bahuvirihi samasa as follows,

    Irumozhi panmozhi pinmozhi ennodirumozhi enn
    Maruvum vithiyaarilakkana mattai sahamunmozhi
    Paravun thikantharalathodai ennap palanel toka
    Viriyumorezavai vettu mozhipporl melliyale. Vc 40

    Anmozhithogai is known as palanelhogai by puthamithiranar perunthevanar, the commentator of virachozhiyam  called this as bahuvirr samasa.   Viracozhiyam divides bahuvirihi samasa in seven kinds.

    1. Irumolithokai: Compound with two words.

    Eg. Kaluthadai – one who wears a cloth around his neck.

    1. Panmozithokai: a compound having more than two words.

    Eg.  Mayiladuthurai- a place name

    1. Pinmozhi entokai: A compound where the second word is a number.

    Eg. Inna narpathu, purananuuru

    1. Irumozhi entokai: both the words denote a number.

    Eg. Aintaru

    1. Vithiyariklakkanatokai: This does not occur except in Sanskrit.

    Eg. Desadesi: when a fight spreads from country to country it is called desadesi

    Dandadandi- when a fight starts with striking with clubs it is called dandadandi.

    1. Cakamunmolithokai: saneethi were saha become

    Sa + neethi (nithiyodu kuudi varupavan)

    1. Tikantharalat tokai

    Direction in between two directions given by the two members of a compound.

    Eg. Tenkilakku, thenmerukku.

    The table follows clearly shows the classification of bahuvirihia  samasa in veerachozhiyam and Keralapaniniyam are arranged side by side along with examples.

    Sl. No Veeracholiyum                                              Kerala paniniyam
    1 Irumozhithogai upamakapam
    2 Panmozhithokai upamalupatham

     

    3 Pinmozhi entokai upamanalupatham
    4 Irumozhienthokai

     

    5 Vithiyariklakkanatoka
    6 Cakamunmolithokai
    7 Tikantharalat tokai

     Dvandva samasam

    Dvandva samasa is  ummaithokai in Tamil.  Ummaittokai or the conjunctival compound is that in which two nouns many nouns, nouns of measurement, nouns denoting countable objects, nouns of weights or numerals are combined together.  It is evident from tolkappiyam that only the conjenctival compounds may be formed of more than two words. Eg. Kapila paranar, puliverkondai.  Keralapaniniyam says that, words of equal importance are combined omitting the coplative conjunction.

    Classification of duvandva samasa

    Tholkappiyar divides it into six types ummaithokai in tamil.  They are,

    1. Irupeyar ummai thogai
    2. Palpeyar ummai thogai
    3. Alavupeyar umai thogai
    4. Enniyar peyar ummai thogai
    5. Nirai peyar ummai thogai
    6. Enpeyar ummai thogai

    Veeracholiyam describes it based on tholkappiyam.

    Ex: Irupeyar ummai thogai –Payaru thovarai

    Palpeyar ummai thogai – sulabumikae thippu

    Alavupeyar umai thogai – thooni pathoku

    Enniyar peyar ummai thogai -muppathumoovar

    Nirai peyar ummai thogai – kolanjakal

    Enpeyar ummai thogai- pathinmotu,aayinathu

    In Sanskrit, it is known as danduva samasam and it is of two kinds

    1.itharethara dvanva

    2.samakaram dvandva

    Itharetharthokai –   It is the dvandva which ends in the human plural.  The examples for two words are kapila paranar, cera cola pandiyar is the examples for more than two words.

    Ex: kapilaparanar

    Cholapandiyar

    Samakaraha dvandva —  samahara dvandva is in Tamil  iray vanta akkirinai ummaittokai. The dvandva which acts as neuter singular.  This may consist of two or more words.

    Eg. Aram poruk, uvappathinanku

    Kerala panniniyam describes this as word of equal importance are combined omitting the compilative conjunction. The dvandva compounds of numerals show the meaning.

                Ex:  accanammamar, Ancharu, Pathu pathinanchi, kaikalu

    Conclusion

    When we compare Veeracholiyam and Keralapaniniyam generally we found these two grammars follow paniniyam.  Keralapaniniyam not talk about the avyabhava samasam and duvihusamasam.  Even though Veeracholiyam and Keralapaniniyam follows Sanskrit moduels. Among these Keralapaniniyam has given more importance to Malayalam Samasa in many ways.

    Bibliography

    • Eluthachan .K. N The History of the Grammatical Theories in Malayalam, DLA, Trivandrum.
    • T. V(Editor) Veerachozhiyam, Nachiyar Publication, Trichy, 2005.
    • M, Treatment of Morphology in Tolkappiyam , DLA, Trivandrum, 1973.
    • Meenakshi Sundaram. T.P – Foreign Models in Tamil Grammar – D.L.A, 1974.
    • C. J- KeralaPaaniniyam, ISDL, Trivandrum
    • Subramania Thedshithar – Prayokavivekam, Madras the S.I.S.S.W Publishing society, Tirunelveli ltd, 1973.

    *****

    The writer is an Assistant Professor
    Department of Tamil, University of Kerala

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180821 -Kamsa (fear) and Krishna -A4 lr 100 dpi

    பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
    மயமான மூட மனமே -அயலாம்
    இவைதவிர்த்து ஆழ இதயத்தில் இருக்கும்
    சுவைசுகித்து வாழ சுகம்….!

    பயமில்லா வாழ்வே பெருவாழ்வு மற்று
    ஜயமென்ப(து) எல்லாம்வீண் ஜம்பம் -முயலாமை
    காதை உரைத்தது கீதை உரைத்தது
    ஏதும் உறைக்கலை யே….!

    ஜடமென்(று) அறிந்தும் மடையா உயிரே
    உடம்பை சுமந்தேன் உனக்காய் -அடங்கும்
    மூச்சை மணந்து துரோகம் புரிந்தாய்
    சீச்சீ பழம்நீ புளிப்பு….!

    அத்தனையும் ஆண்டிடும் ஆசை அதிகாரப்
    பித்தனாய் வாழ்ந்து பேதலித்தேன் -அத்தனே
    இத்தரை உண்டியால் ஏக அஜீரணம்
    சத்துணவு போடுசர்வே சா….!

    நானென்(று) இருக்கின்றேன் நானாய் உணர்கின்றேன்
    நானின்றி வேறே நிகழ்வேது -நானொன்றி
    நானோடு நானே நெகிழ்ந்து மயங்கிட
    நானா விதமானேன் நான்…!

    கண்டேன் திருடனை கையும் களவுமாய்
    கொண்டேன் மனச்சிறையில் கைதியாய் -அண்டேன்
    இனிஅவன் பக்கம் தனிமையே சொர்கம்
    கனிநான் அவன்கள்ளக் காய்….!

    ஆபாசம் அச்சம் அழுக்கா(று) அகங்காரம்
    நாபேசும் இன்னா நயவஞ்சக -ஏபாவா!
    என்பக்கம் வாராதே உன்னுருவைப் புண்ணியமாய்
    கண்ணப்பன் மாற்றிடுவான் காண்….!

    அச்சம், அழுக்காறு, ஆசை, வெகுளியை
    துச்சம் எனத்துணிந்து தூக்கியெறி -மிச்சம்
    இருந்திடும் வெற்று இதயக் கதவை
    திறந்திடு சீசே துறந்து….!

    ராமனாய் வாழ்தால் ரகசிய திண்டாட்டம்
    காமனாய்க் காய்ந்து கருகாதே -மாமனைக்
    கொல்லவந்தும், காதலித்து, கீதையும் சொன்னவன்போல்
    மெள்ளமெள்ளக் கண்ணனாய் மாறு….!

    ‘’காலன்(DEATH) ஒருபக்கம், கல்வி(WISDOM) ஒருபக்கம்
    காலடி சங்கரன் கற்றது, -ஸ்தூல
    உடலிது ஓர்நாள் உண்மையில் சேரும்:
    கடலதில் வான்நீர்(RAIN) கலப்பு’’….!

    ’’தூங்கும் முன் தோன்றியது’’….
    ————————————————————-
    ”பாட்டுக்கு நாச்சியார், பரவசம் மீராவால்,
    கூட்டுக்கு ராதை, குவலயப் -பாட்டுக்கு(பாடு),
    பாரதம், வீட்டுக்கு(வீடு) பாகவதம், மாட்டுக்கு
    பேரிதம்நான் சேர்க்கப் பிறப்பு’’….கிரேசி மோகன்….!

    ”பாம்பில் படுத்தவனைப், பத்த வதாரனை,
    சாம்பலான் பத்தினி சோதரனை, -நோம்பன்று,
    கண்ணனை நெஞ்சில் கருதி மணிக்கட்டில்
    கண்ணிநுண் தாம்பாகக் கட்டு’’….கிரேசி மோகன்….!

    Share