Blog

  • நினைத்துப் பார்க்க வேண்டும்

    நினைத்துப் பார்க்க வேண்டும்

    [ எம். ஜெயராமசர்மா B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) ]
    (முன்னாள் கல்விப் பணிப்பாளர்)
    [ மெல்பேண் ]

    sanka_kalam

    இருபத்தொரு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூட – சங்கத்தமிழை நினைத்துப்பார்க்கிறோமென்றால் அதற்குத் தக்க காரணங்கள் இருக்கத்தானே வேண்டும். அப்படிப்பட்ட காரணங்களைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் சங்கத்தமிழ் பற்றியும் அதற்கான சூழ்நிலை பற்றியும் எமக்கெல்லாம் தெரிய வருமல்லவா?

    சங்கம் வைத்துத் தமிழை வளர்க்கும் அளவுக்கு அக்காலத்தில் கற்றறிந்தோர் பலர் இருந்திருக்க வேண்டும். சங்கம் வைத்துத் தமிழை வளர்ப்பதற்கு ஏற்ற அரச, சமூகச் சூழலும் இருந்திருக்க வேண்டும். அரச ஆதரவு இல்லாவிட்டால் எந்த இயக்கமும் வளரமுடியாது. சங்க காலத்தில் அரச ஆதரவும் பெருமளவில் தமிழ் வளர்ச்சியின் அடிநாதமாகவே இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறதல்லவா?

    சங்க காலத்தில் அரசர்கள் பலர் புலவர்களாக விளங்கி இருந்திருக்கிறார்கள் என்பதை சங்கவரலாற்றால் அறியமுடிகிறது. அரசர்கள் புலவரை மதித்ததனர். புலவர்கள் அரசரை மதித்தனர். புலவர் வாயால் தான் பாடப்படவேண்டும் என்று அரசர்களிடத்து பேராவல் காணப்பட்டது. அறிவொழுக்கங்களில் சிறந்து விளங்கிய சங்ககாலப் புலவர்களைச் சான்றோர் என்றும் அவர்பாடிய செய்யுள்களைச் சான்றோர் செய்யுள் என்று சொல்லுவது தமிழ் வழக்காகும்.

    சங்கப்புலவர்களால் பாடப்பட்ட பாட்டுக்கள் 2381. இவற்றைப் பாடிய பெயர் தெரிந்த புலவர்கள் என்றவகையில் 473 பேர் காணப்படுகின்றனர். அதே வேளை 102 பாட்டுக்களைப் பாடியவர்கள் பெயர்கள் தெரியவராது இருக்கிறது. 235 பாட்டு க்களை கபிலர் என்னும் புலவர் பாடியிருப்பதாகவும் அறிய முடிகிறது. இவற் றைவிட வேறு புலவர்கள் நால்வர் ஒவ்வொருவரும் நூற்றுக்கு மேற்பட்ட பாட்டுக்களைப் பாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாட்டுப்பாடியவர்கள் என்ற வகையிலும் புலவர்கள் சங்ககாலத்தில் வருகிறார்கள்.

    நகரங்களைச் சார்ந்தவர்கள், சிற்றூர்களைச் சார்ந்தவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், பொன்வணிகர், ஆடைவணிகர், மருத்துவர், தச்சர், சோதிடர், பொற்கொல்லர், கொல்லர், சேனைத்தலைவர், அமைச்சர், பாணர், கூத்தர்  இவர்களுக்கிடையே இருந்தும் பலர் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். பல்  வேறு தொழில்களைப் புரிந்தவர்களும் புலவர்களாக விளங்கித்தமிழை வளம்படுத்தியிருக்கிறார்கள்.

    பெண்களும் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். அரசர்களுள் புலமை மிக்கவர்களாக முப்பத்தொருவர் என இனங்காணப்பட்டுள்ளார்கள்.கோப்பெரு ஞ் சோழன், கிள்ளிவளவன், சோழன் நலங்கிள்ளி, பாண்டியன்நெடுஞ்செழியன் ஆகியவர்கள் புகழ்பெற்று விளங்கியுள்ளனர். புலவர்கள் அல்லாத அரசர்கள் —-  தங்களைப் புலவர்கள் பாடவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். புலவர்களால் பாடப்பெற்றுப் புகழுக்கு ஆளாகியவர்களுக்கே மறுமையில் தேவருலகம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையும் அவர்களிடத்துக் காணப்படடது. அதனால் கற்றறிந்த புலவோருக்கு உயிரிய இடத்தைச் சங்ககாலம் கொடுத்தது முக்கிய அம்சமாகத் தெரிகிறதல்லவா?

    கற்றறிந்த புலவர்கள் கற்றதோடு நின்றுவிடாமல் — சாந்தி, சமாதானம், நல் உறவு, ஒற்றுமை இவற்றுக்காகவும் தமது நுண்ணறிவைப் பயன்படுத்தியும் இருந்திருக்கிறார்கள். இவர்களின் இந்தச் செயற்பாடு நமக்கெல்லாம் நல்ல ஒரு பாடமாக அமைகின்றது.

    ஒரு அரசனுக்கு நாட்டு மக்களிடையே எவ்வளவு செல்வாக்கும் மரியாதை யும் இருந்ததோ அதே அளவுக்குப் புலவர்களுக்கும் இருந்தது. இதனால் அரசனிடம் சென்று எந்தவித அச்சமும் இன்றி தமக்கு மனதில் சரி என்று பட்டதைத் துணிவுடன் சொல்லும் வகையில் அக்காலப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். உண்மையென்று கண்டால் அதனை அரசனுக்கு எப்படியும் உரைத்துவிடுவார்கள். வாழ்த்தாயினும், பாராட்டாயினும் உரியவர்க்கே வழங்குவார்கள். பொருத்தமில்லாதவருக்கு ஒருபோதும் வழங்கவே மாட்டார்கள்.

    இதனால் அரசர்கள் யாவரும் தம்மைப்புலவர்கள் பாடவேண்டும் என்னும் நோக்கோடு நல்லவற்றையே நாளும் செய்ய எண்ணுவர். வறுமையில் வாடினாலும், தக்கவரையே தமிழ்ப்புலவர் பாடினார்கள். அவர்களின் நாவில் வந்த தமிழுக்குத்தான் எவ்வளவு மரியாதை? எவ்வளவு உயர்வு? தமிழால் வைவதையும் வாழ்த்துவதையும் அக்காலச் சமுதாயம் பார்த்தது. வைதாலும் வாழ்த்தினாலும் அது வாழ்வில் பலிக்கும் என்னும் நம்பிக்கையும் திடமாக அவர்களிடத்தில் காணப்பட்டது. அந்த அளவுக்குத் தமிழ் மொழிக்கு ஆற்றல் இருந்ததை சங்காலம் நமக்கெல்லாம் காட்டி நிற்கிறது.

    முடியுடை மூவேந்தர்களுக்கிடையிலும், அவர்களுக்கும் சிற்றசர்களுக்கும் இடையிலும் பிணக்குகள் வந்து போர்மூண்ட வேளை சமாதானத்தூதுவர்களாகப் பல புலவர்கள் விளங்கி பெரும்போரையே தவிர்க்கும் படி செய்தி ருக்கின்றார்கள்.

    அதிகமான் என்னும் அரசனுக்காக ஒளவையார் தொண்டைமான் என்னும் அரசனிடம் துணிவுடன் சமாதானத்தூது சென்றுள்ளார்.சோழர்குடும்பத்தில் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையில் பெரும்பகை ஏற்பட்ட போது புலவர் கோவூர்கிழார் தலையிட்டுச் சமாதானப் படுத்தியுள்ளார். கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட வேளை, அது போராக மாறாமல் செய்தவர் புலவர் புல்லாற்றுர் எயிற்றனார்.

    மலைநாட்டுத் தலைவனான பாரியோடு தமது வாழ்வைப் பிணைத்துக் கொண்டவர் பெரும்புலவர் கபிலராவார். பாரியின் இழப்பால் பரிதவித்த அவரின் புத்திரிகைகளை தாமே பாதுகாத்து அவர்களுக்கு மணம்முடித்த தையும் சங்க இலக்கியம் காட்டி நிற்கிறது.

    அரசர்களிடம் நட்புரிமை பாராட்டி அவர்களை நல்வழிப்படுத்தும் மிகப் பெரிய கைங்கரியத்தை சங்கப்புலவர்கள் தமது தமிழ்ப்புலமையினால் செய்திருக்கிறார்கள். பொருத்தமான அறிவுரைகளை அவர்கள் அரசர்களுக்கு வழங்கி இருந்திருக்கிறார்கள். பிசிராந்தையர் என்னும் புலவர் அறிவுடைநம்பி என்னும்பாண்டிய மன்னனுக்குக் கூறிய அறிவுரை எப்படி இருக்கிறது பாருங்கள்.

    “காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
     மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்
     நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
     வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
     அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
     கோடியாத்து நாடுபெரிது நத்தும்
     மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
     வரிசை அறியார் கல்லென் சுற்றமொடு
     பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
     யானைபுக்க புலம் போலத்
     தானும் உண்ணான் உலகம் கெடுமே”

    ஒரு நாட்டை ஆளும்அரசன் மக்களிடம் எவ்வாறு வரியை அளவிடவேண்டும் என்று இந்தப்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.ச ங்கப்பாடலாக இருந்தாலும் இதில் சொல்லப்படும் கருத்து இக்கால அரசாங்களுக்கும் மிகவும் பொருத்த முடையதாகவே இருக்கிறது.

    வயலில் விளைந்த முற்றிய நெல்லை அறுவடைசெய்து அதனை அரிசியாக்கி உணவு செய்துகொடுத்தால்… சிறிதளவு நெல்லும் யானைக்குப் பலநாளுக்கு உணவாகிவிடும். அதைவிடுத்து யானை தானே வயலுக்குள் சென்று நெல்லை தின்னத்தொடங்கினால், நூறுவயல்கள் ஆனாலும் யாவும் அழிந்தே போய்விடும். வாயில் உணவாகிப் போவதைவிட காலினால் அழிவு படுவதே மிகுதியாகிவிடும். அறிவுள்ளஅரசனும் குடிகளிடம் முறையாக வரியை விதித்தால்  மக்களும் வாழ்வார்கள். அரசாட்சியும் நல்லபடி அமையும். அதைவிடுத்து பேராசையுடன் மக்களை வதைத்து வரியைப் பெற்றால் யானை புகுந்த வயலாகவே மாறிவிடும் நாடு. நாடும் வளம் பெறாது. நாட்டுமக்களும் நலன்பெறமாட்டார்கள். மிகவும் முக்கியமான செய்தியை இதைவிட இலகுவாகச் சொல்லிவிட முடியாது அல்லவா? அதனாலத்தான் சங்கத்தமிழை நினைக்க வேண்டியிருக்கிறது.

    அரசாங்கங்கள் நல்லாட்சி புரியாவிட்டால் நாடும் மக்களும் என்ன செய்வது? மோசிகீரனார் என்ற புலவர் மிகவும் சுருக்கமாக தருகின்ற அறி வுரையைப் பாருங்கள்.
    “உலகவாழ்க்கைக்கு அடிப்படையானது, உயிரானது,… நெல்லும் அல்ல! நீரும் அல்ல ! நாட்டுக்கு உயிராக உள்ள ஆட்சி புரியும் அரசனே, அதனால் யான் இந்த நாட்டுக்கு உயிராக இருக்கிறேன் என்பதை உணர்ந்து நல்ல  முறையில் ஆட்சி புரிவது அரசனுடைய கடமையாகும்”  இந்த அறிவுரை எல்லா நாட்டுக்கும் பொதுவான ஒன்றல்லவா? உயர்ந்த தத்துவங்கள், உயர்ந்த உண்மைகள் எல்லாம் சங்கப்புலவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. படிக்கப் படிக்க இப்படியும் தமிழில் இருக்கிறதா என்று எண்ணவே தோன்றும்.

    “ஓரில் நெய்தல் கறங்க ஓர் இல்
    ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
    புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
    பைதல் உன்கண் பணிவார்ப்பு உறைப்பப்
    படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்
    இன்னாது அம்ம இவ்வுலகம்
    இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே”
    நிலையாமையைப் பற்றி மிகவும் எளிமையான வகையில் இதை விட எவராலும் சொல்லிவிட முடியுமா என்பது கேள்விக்குரியதே! இதுதான் சங்கத்தமிழும் சங்கப் புலவனின் சாமர்த்தியமும் எனலாம்.

    இன்றைய வாழ்க்கை ஓட்டத்திலே ஒரே ஓட்டம்தான். மனத்திலே மகிழ்ச்சி குறைவு. எந்த நேரமும் ஒரே பதட்டம். படபடப்பு. இளமையிலேயே முதுமை வந்த மாதிரியான தோற்றம். நாடும் அப்படி. வீடும் அப்படி. ஆனால் சங்ககாலத்தில் ஒரு முக்கிய காட்சி இங்கே குறும்படம் போல காட்டப்படுகிறது பாருங்கள்.

    இருவர் வழியில் சந்திக்கின்றனர். ஒருவர் மற்றவரின் தோற்றத்தைப் பார்த்ததும் அவரிடம் கேட்பதாக இந்தப் பாடல் அமைகிறது.
    “யாண்டு பலவாக நரையில ஆகுதல்
    யாங்கு ஆகியர் எனவினவுதிர் ஆயின்
    மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
    யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
    அல்லவை செய்யான் காக்க அதன்தலை
    ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
    சான்றோர் பலர் யான் வாழும் ஊரே”

    நரை இல்லை. மூப்பு இல்லை. இளமையுடன் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதற்கு எப்படி விடை சொல்லப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? இதனைப் பாடியவர் பிசிராந்தையர் என்னும் பெரும்புலவர். இது ஒரு மனநலம் சார்ந்த குறுந்திரைப் படமாக மனத்திலே ஓடுகிறதல்லவா?

    பாண்டியர் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெரும்வழுதி மிகவும் அருமையான ஒரு செய்தியை க்காட்டுகின்றார் பாருங்கள்.
    “உண்டால் அம்மைவ் வுலகம் இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்
    தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
    துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
    புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழிஎனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
    அன்ன மாட்சி அனையர் ஆகித்
    தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மையானே “
    தன்னலமே இல்லாமல் பிறர் நன்மையே நாடி உழைக்கும் சான்றோர்கள் இருப்பதால்த்தான் இந்த உலகம் இருக்கிறது என்று சொல்லி அத்தகையவர்களின் பண்புகளை எல்லாம் இப்பாடல் எடுத்துக்காட்டி எமக்கெல்லாம் நல்ல ஒரு வாழ்க்கைப் பாடத்தை போதிக்கிறது எனலாம்.

    தமிழனது உயர்வினை உலகம் முழுவதும் தெரியப்படுத்தும் விதமாக இப்பாடல் அமைகின்றது. கணியன் பூங்குன்றனாரின் மனத்தில் உதித்த இக்கருத்து தமிழனும் தமிழ் இனமே தரணியில் உயர்ந்து நிற்க வைத்திருக் கிறது என்பதில் யாது ஐயம் இல்லை எனலாம். ஐக்கிய நாடுகள் சபையிலே உரத்து ஒலித்த பாடல் இதுவே ஆகும்.
    “யாதும் ஊரே யாவரும் கேளீர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
    சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
    இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    இன்னாது என்ரலும் இலமே மின்னோடு
    வானம் தண்துளி தலைஇ ஆனாது
    கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
    நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
    முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
    காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே “
    இப்படி ஒரு ஆழமான அர்த்தம் நிரம்பிய பாட்டை தமிழைத்தவிர வேறு எந்த மொழியிலும் காணவே முடியாது எனலாம்.

    ” யாதும் ஊரே யாவரும் கேளீர் “

    இப்படிச்சொல்லும் பரந்த நோக்கு தமிழினத்துக்குத்தான் இருக்கிறது என்பதை எங்கள் சங்கப் புலவன் தங்கத்தமிழ்கொண்டு உலகம் விழிப்படையச் சொல்லிச் சென்றுள்ளான். சங்கதமிழும் சங்கப் புலவனும் இல்லாவிட்டால் எங்கள் நிலை என்ன? எங்கள் உயர்வை பெருமையை உலகுக்கு பறை சாற்றும் பணியை சங்கப் புலவர்களின் தமிழல்லவா செய்திருக்கிறது. எனவே எங்களை வழிநடத்தும் சங்கப்புலவர்களையும் அவர்தம் அரிய படைப்புக்களான சங்கத்தமிழ் நூல்களையும் நினைத்துப் பார்க வேண்டும். நினைத்துப் பார்க்கும் பொழுது தான் நாங்கள் தமிழர்களாக தலை நிமிர்ந்து நிற்போம்.

    வாழ்க தமிழ் மொழி! வளர்க தமிழ் மொழி!

    படம் உதவிக்கு நன்றி: http://www.chennaizoom.com/tamil/img/sanka_kalam.jpg

    Share
  • கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு 3

    கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு 3

    ஒரு அரிசோனன்

    சென்ற இரு ஒப்பீடுகளில் கம்பனும், வால்மீகியும் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதைக் கண்டோம்.  இந்த ஒப்பீட்டில் இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வதைப் பற்றிக் கண்ணுறுவோம். இவண், மரபுப் பண்பாடு மாற்றம் மிக நன்றாகவே தெரிகிறது. அது மட்டுமன்றி, சீதையின் வாக்குத் திறனும் புலனாகிறது.

     வால்மீகி ஆரண்ய காண்டத்தில், நான்கு சர்க்கங்களில் (46-49), 130 குறள் பாக்களில் (260 வரிகள்), இராவணன்-சீதையின் வாக்கு வாதத்தை எழுதி உள்ளார்.

    அக்காட்சியே, சடாயு உயிர் நீத்த படலத்தில் 53 விருத்தப் பாக்களில் (212 வரிகள்) கம்பனால் தீட்டப் பட்டிருக்கிறது. இருவரின் கைவண்ணமுமே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது.

    சீதை சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொன்னதால் மனம் உடைந்த இலக்குவன், இராமன் சென்ற இடம் நோக்கிச் சென்றான்.  சீதை தனியாக விடப்பட்டாள். அது கண்டு, இராவணன் ஒரு துறவியைப் போல வேடம் அணிந்துகொண்டு, சீதை இருக்கும் பர்ணகசாலையை அடைந்தான்.

    வால்மீகியின் ஆரண்ய காண்டத்தின் 46வது சர்க்கத்தில் துவங்குவோம்:

    संदृश्य न प्रकंपन्ते न प्रवाति च मारुतः |

    शीघ्र स्रोताः च तम् दृष्ट्वा वीक्षंतम् रक्त लोचनम् || ३-४६-७

    स्तिमितम् गंतुम् आरेभे भयात् गोदावरी नदी |

    ஸந்த்ருஷ்ஸ்ய ந ப்ரகம்பந்தே ந ப்ரவாதி ச மாருத: |

    ஸீக்ர ஸ்ரோதா: ச தம் த்ருஷ்ட்வா வீக்ஷந்தம் ரக்த லோசனம் || 3-46-7

    ஸ்திதமிதம் கந்தும் ஆரேபே பயாது கோதாவரீ நதீ |

    அவனைக் கண்ட காற்றும் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. குருதிச் சிவப்பான கண்களை உடைய அவனைப் பார்த்த அச்சத்தால் வேகமாகச் செல்லும் கோதாவரி ஆறும் மெல்லச் செல்ல ஆரம்பித்தது. – 3.46.7

    अभ्यवर्तत वैदेहीम् चित्राम् इव शनैश्चरः |

    सहसा भव्य रूपेण तृणैः कूप इव आवृतः || ३-४६-१०

    அப்யவர்த்தத வைதேஹீம் சித்ராமிவ சனைச்சர: |

    ஸஹஸா பவ்ய ரூபேண த்ருணை: கூப இவ ஆவ்ருத: || 3-46-10

    புற்களால் மறைக்கப்பட்ட கிணறுபோல, தகுந்த (துறவி) வேடத்தில் (மறைத்துக்கொண்டு), சித்திரையில் (தோன்றும்) சனியைப்போல வைதேகி முன்னால் சென்றான். – 3.46.10

    दृष्ट्वा काम शर आविद्धो ब्रह्म घोषम् उदीरयन् |

    अब्रवीत् प्रश्रितम् वाक्यम् रहिते राक्षस अधिपः || ३-४६-१४

    த்ருஷ்ட்வா காம ஸ’ர ஆவித்தோ ப்ரஹ்ம கோஷம் உதீரயன்னு |

    அப்ரவீது பிரஸ்ரிதம் வாக்கியம் ரஹிதே ராக்ஷசம் அதிப: || 3-46-10

    ताम् उत्तमाम् त्रिलोकानाम् पद्म हीनाम् इव श्रियम् |

    विभ्राजमानाम् वपुषा रावणः प्रशशंस ह || ३-४६-१५

    தாம் உத்தமாம் த்ரிலோகானாம் பத்மஹீனாமிவ ஸ்ரியம் |

    விப்ராஜமானாம் வபுஷா ராவண: பிரஸ’ஸ’ம்ஸ ஹ || 3-46-15

    காமனின் அம்புகளால் அடிக்கப்பட்ட அரக்கர் தலைவன் தனியளான (சீதையைப்) பார்த்துவிட்டு, பிரம்ம கோஷங்களை (வேதங்களை) முழங்கிக்கொண்டு, மரியாதையான சொற்களைச் சொன்னான். மூன்று உலகங்களிலும் சிறந்தவளும், தாமரை இல்லாத (தாமரையில் நிற்காத) இலக்குமியைப் போன்ற அவளின் உடலை முன்னும் பின்னுமாக (முன்னழகையும், பின்னழகையும்) இராவணன் புகழ்ந்தான். – 3.46.14-15

    …இராவணன் பதினோரு சுலோகங்களில் சீதையின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் கொச்சையாக வர்ணிக்கிறான். அதன் பிறகு, நான்கு சுலோகங்கள் மூலமாக தன்னந்தனியளாக ஏன் சீதை இருக்கிறாள் என்று கேட்கிறான்….

    द्विजाति वेषेण हि तम् दृष्ट्वा रावणम् आगतम्  |
    सर्वैः अतिथि सत्कारैः पूजयामास मैथिली || ३-४६-३३

    த்விஜாதி வேஷேண ஹி தம் த்ருஷ்ட்வா ராவணம் ஆகதம் |

    ஸர்வை: அதிதி ஸத்காரை: பூஜயாமாஸ மைதிலீ || 3-46-33

    प्रसह्य तस्या हरणे धृढम् मनः समर्पयामास आत्म वधाय रावणः || ३-४६-३७

    பிரஸஹ்ய தசா ஹரணே த்ருடம் மன: ஸமர்ப்பயாமாஸ ஆத்ம வதாய ராவண: || 3-46-37

    ब्राह्मणः च अतिथिः च एष अनुक्तो हि शपेत माम् |

    इति ध्यात्वा मुहूर्तम् तु सीता वचनम् अब्रवीत् || ३-४७-२

    ப்ராஹ்மண: ச அதிதி: ச ஏஷ அனுக்தோ ஹி சபேத மாம் |

    இதி த்யாத்வா முஹூர்த்தம் து சீதா வசனம் அப்ரவீது || 347-2

    இருபிறப்பாளரின் (அந்தணரின்) வேடத்திலேயே வந்த அந்த இராவணனைப் பார்த்த மைதிலி, எல்லாவிதமான விருந்தினர் உபசாரத்துடன் பூசித்தாள்.  – 3.46.33

    இராவணன் அவளைக் கட்டாயப்படுத்திக் கடத்தவேண்டுமென்ற உறுதியைத் தன் அழிவிற்காக மனதில் அர்ப்பணித்தான். – 3.46.37  

    மறையவராகவும் விருந்தினராகவும் (இருக்கும்) இவர் பதில் கூறாமல் இருந்தால் என்னைச் சபித்து விடுவார் என்று சிறிது நேரம் சிந்தித்த சீதை பதில் சொன்னாள்.  – 3.47.2

    …மிதிலையின் அரசமுனி ஜனகனின் மகள் சீதை தான் என்றும், பேரரசன் தசரதனின் மைந்தன் இராமனை மணமுடித்து, அயோத்தியில் பன்னிரண்டு ஆண்டுகள் இனிது வாழ்ந்ததையும், கைகேயின் சொற்கேட்டு, தசரதன் இராமனை பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து வருமாறு பணித்ததால், தனது கணவன் இராமன், தான், மற்றும் இளையோன் இலக்குவன் கங்கையைத் தாண்டி தண்டகாரண்யம் வந்ததையும், பொன்மானைப் பிடிக்க இராமன் சென்றதையும், சீதை வாய்மொழியாக இருபது சுலோகங்களால் வால்மீகி வரைந்திருக்கிறார்…

    आगमिष्यति मे भर्ता वन्यम् आदाय पुष्कलम् |

    रुरून् गोधान् वराहान् च हत्वा आदाय अमिषान् बहु || ३-४७-२३

    ஆகமிஷ்யதி மே பர்த்தா வந்யம் ஆதாய புஷ்கலம் |

    ருருனு கோதானு வராஹானு ச ஹத்வா ஆதாய அமிஷானு பஹு  || 347-23

    सः त्वम् नाम च गोत्रम् च कुलम् आचक्ष्व तत्त्वतः |

    एकः च दण्डकारण्ये किम् अर्थम् चरसि द्विज || ३-४७-२४

    ஸ: த்வம் நாம ச கோத்ரம் ச குலம் ஆசக்ஷ்வ தத்த்வத: |

    ஏக: ச தண்டகாரண்யே கிம் அர்த்தம் சரஸி த்விஜ || 347-24

    என் கணவர் காட்டிலிருந்து நிறையக் கருவரி மான்கள், கீரிப்பிள்ளைகள் (போன்ற மிருகங்கள்), பன்றிகளையும் கொன்று, நிறைய இறைச்சி எடுத்துக் கொண்டு வருவார்.  இருபிறப்பாளரே (அந்தணரே), உண்மையில் உமது பெயரையும், கோத்திரத்தையும், குலத்தையும், தெளிவு படுத்துவீராக;  தண்டகாரண்யத்தில் தனியாக எதற்காக அலைகிறீர்? – 3.47.23&24

    …தான் அரக்கர்கோன் இராவணன் என்றும், கடலின் நடுவில் உள்ள இலங்கைக்கு அரசன் என்றும், அழகுள்ள பல மனைவியர் இருந்தும், அவளிடம் தான் மனதைப் பறிகொடுத்ததாகவும்,  அவள் தன்னுடன் வந்தால், அனைவருக்கும் தலைவியாக ஆக்குவதாகவும், (9 சுலோகங்கள்) ஆசை காட்டுகிறான்.  அதனால் கோபம் அடைந்த சீதை.பதினேழு சுலோகங்களில் தான் இராமனின் கற்புள்ள மனைவி என்றும், தன் கணவனின் பெருமையைப் பற்றியும், இராவணனால் தன் கணவரை வெற்றி கொள்ள இயலாது என்றும், இந்திரனின் மனைவி சசிதேவியைக் கடத்திச் சென்றாலும் ஒருவேளை அவனிடமிருந்து தப்பிவிடலாம், ஆனால் இராமனிடமிருந்து அவன் தப்ப இயலாது என்றும் அறிவிக்கிறாள். இபாடி ஒரு அரக்கனிடம் தனியாகச் சிக்கிகொண்டோமே என்று…

    गात्र प्रकंपात् व्यथिता बभूव वात उद्धता सा कदली इव तन्वी || ३-४७-४९

    காத்திர பிரகம்பாது வ்யதிதா பபூவ வாத உத்ததா கதலீ இவ தன்வீ || 347-49

    …காற்றினால் வீழ்த்தப்பட்ட வாழைமரத்தைப் போல உடல் நடுங்கி சித்திரவதைக்கு உள்ளானாள் (சீதை).  – 3.47.49

    …குபேரனின் மாற்றாந்தாய் மகனான தான் மிகுந்த பலவான் என்றும், மானிடனான இராமன் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் இராவணன் தற்பெருமை பேசுவதாக நாற்பத்திஎட்டாம் சர்க்கத்தில் 19 சுலோகங்களில் விளக்குகிறார் வால்மீகி….

    कथम् वैश्रवणम् देवम् सर्व देव नमस्कृतम् |

    भ्रातरम् व्यपदिश्य त्वम् अशुभम् कर्तुम् इच्छसि || ३-४८-२१

    கதம் வைஸ்’ரவணம் தேவம் சர்வ தேவ நமஸ்க்ருதம் |

    ப்ராதரம் வ்யப்திஸ்’ய த்வம் அசுபம் கர்த்தும் இச்சஸி || 348-21

    அதைக் கேட்ட சீதை, “எல்லா வானவர்களாலும் வணங்கப்படும் தேவனான வைஸ்ரவனை (குபேரனை) உடன்பிறப்பு என்று அறிவித்துக்கொண்டே, நீ எப்படி நலமில்லாததைச் (தீய செயலை) செய்ய விரும்புகிறாய்?” என்று கோபிக்கிறாள்.  – 3.48.21

    …அதனால் சினமடைந்த இராவணன், தனது அரக்க உருவத்தைக் காட்டி, (12 குறட்பாக்களில்) தற்பெருமை பேசுகிறான். அதன் பிறகு சீதையின் சொற்களால் மிகவும் கோபம் அடைந்து, தனது பெரிய வடிவத்தை எடுக்கிறான். தனது பலத்தால் எதையும் அழிக்கும் ஆற்றல் தனக்கு இருக்கிறது என்று மார் தட்டுகிறான். அந்தண வடிவை விட்டுவிட்டு, பத்து தலையுடனும், இருபது கைகளுடனும் காட்சி அளிக்கிறான்…

    जग्राह रावणः सीताम् बुधः खे रोहिणीम् इव || ३-४९-१६

    ஜக்ராஹ ராவண: சீதாம் புத: க்கே ரோஹிணீம் இவ || 349-16

    वामेन सीताम् पद्माक्षीम् मूर्धजेषु करेण सः |

    ऊर्वोः तु दक्षिणेन एव परिजग्राह पाणिना || ३-४९-१७

    வாமென சீதாம் ப்த்மாக்ஷீம் மூர்த்தஜெஷு கரேண ஸ: |

    ஊர்வோ: து தக்ஷிணேன ஏவ பரிஜக்ராஹ பாணினா || 349-17

    तम् दृष्ट्वा गिरि शृंग आभम् तीक्ष्ण दंष्ट्रम् महा भुजम् |

    प्राद्रवन् मृत्यु संकाशम् भय आर्ता वन देवताः || ३-४९-१८

    தம் த்ருஷ்ட்வா கிரி ஸ்ருங்க ஆபம் தீக்ஷ்ண தம்ஷ்ட்ரம் மஹா புஜம் |

    ப்ராத்ரவன்னு ம்ருத்யு ஸங்காஸ’ம் பய ஆர்த்தா வன தேவதா: || 349-18

    புதன் ரோகிணியைப் பிடித்தது போல, இராவணன் சீதையைப் பற்றினான். அவன் தாமரையைப் போன்ற கண்களை உடைய சீதையின் கூந்தலை இடது கையாலும்,, வலது கையினால் தொடைகளின் பின்புறத்தையும் பிடித்தான். நீண்ட கோரைப் பற்கள் உள்ளவனும், பெரிய புஜங்கள் உடையவனும், காலனைப் போன்றவனுமான அவனைப் பார்த்துப் பயந்து வனத்தின் தெய்வங்கள் விரைந்தோடின.  – (3.49.16-18)

    …அப்படியே சீதையைத் தனது புஷ்பக விமானத்தில் இராவணன் கவர்ந்து சென்றான் என்கிறார் வால்மீகி…

    சடாயு உயிர்நீத்த படலத்தில் கம்பநாட்டார் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் காதுறுவோம்:

     

    ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன்

    சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன்

    பாணியின் உழந்து இடைப் படிக்கின்றான் என

    வீணையின் இசைபட வேதம் பாடுவான்.  – 3-823

    உணவே இல்லாதவன் போல மெலிந்த உடல் உடையவன்; நீண்ட தூரம் வந்ததால் துயர் அடைந்து, தாளத்திற்கு ஏற்றவாறு பாடுவதைப்போல வீணையின் இசையைப்போன்ற குரலில் (சாம)வேதத்தைப் பாடினான்.

    இவ்வாறு தவசியின் வேடத்தைப் புனைந்த இராவணன் தூய்மையான மனமுடைய அருந்ததிக்கு இணையான கற்புடைய சீதை இருந்த இடத்தை அடைந்து நாக்குழற, “இங்கு இருப்பது யார்?” என்று கேட்டான்.

    தோகையும் அவ் வழி தோம் இல் சிந்தனைச்

    சேகு அறு நோன்பினர் என்னும் சிந்தையால்

    பாகு இயல் கிளவியாள் பவளக் கொம்பர் போன்று

    ஏகுமின் ஈண்டு என எதிர் வந்து எய்தினான்.  – 3.827

    குற்றமற்ற நினைவு உடையவர் ஆறு (விதமான) நோன்புகளைச் செய்பவர் (அந்தணர்) என்ற நினைப்பால், (சர்க்கரைப்) பாகு போன்ற மொழியுடையவுளும், தோகை மயிலைப் போன்றவளும், பவளக்கொடி போல இருந்த (சீதை), இங்கு வாருங்கள் என்று (அழைக்கவும்), எதிரே வந்து நின்றான்.

    சீதையின் அழகில் மயங்கிய இராவணன், தன்னை மறக்கிறான். தான் பெற்ற நீண்ட ஆயுளும், இருபது கண்களும் சீதையின் அழகைக் கண்டு களிக்கப் போதாது என்று மறுகுகிறான்.  மூன்று உலகத்தில் இருக்கும் அனைவரும் இவளுக்கு தொண்டு செய்யும்படி செய்வேன்.  இவள் காலடியில் விழுந்து கிடப்பேன், இவளைப் பற்றிச் சொன்ன என் தங்கை சூர்ப்பனகைக்கு என் அரசைத் தந்து விடுவேன் என்று பகல் கனவு காண்கிறான்.  அந்தணன் வேடத்தில் வந்த அவனுக்கு பிரம்பினால் செய்த ஆசனத்தை அளித்து உபசரிக்கிறாள் சீதை….

    நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து

    அடங்கின பறவையும் விளங்கும் அஞ்சின

    படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதகக்

    கடுந்தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே.  – 3.837

    மற்றவர்களுக்குக் தீமை விளைவிக்கும் கொடிய செயல்களைச் செய்யும் அரக்கன் (இராவணனைக்) கண்ட உடனே, மலைகளை கூட நடுங்கின.  (காற்றில் இலைகளை அசைத்து ஒலி எழுப்பிக் கொண்டு இருக்கும்) மரங்களும் பேச முடியாமல் அடங்கிப் போய்விட்டன.  பரவைகளும், (காட்டில் இருக்கும்) மிருகங்களும் பயந்து (அமைதியாகி விட்டன).  படம் எடுத்து ஆடக்கூடிய பாம்புகளும், (படத்தை) குறுக்கிக்கொண்டு ஒதுங்கி (ஒளிந்து) கொண்டன.

     ..இராவணன் சீதையிடம் அவளைப்பற்றிக் கேட்கிறான். சிற்றன்னையின் சொல்லை நிறைவேற்றுவதற்காகக் கானகம் வந்திருக்கும் தனது கணவர், தம்பியுடன் தானும் வந்திருக்கிறேன் என்று பதில் சொல்கிறாள் சீதை.  அவன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று வினவுகிறாள். அதிற்கு எட்டு விருத்தப் பாக்களில் இராவணன் பதில் அளிப்பதாகச் சொல்கிறார் கம்பர். துறவி வேடம் பூண்ட அரக்கர் தலைவன், தான் இராவணின் தலை நகரான இலங்கையில் நீண்ட காலம் இருந்து விட்டுத் திரும்பியதாகக் கூறுகிறான்.  திருக்கயிலை மலையையே பெயர்த்து எடுத்தவன் இராவணன், படைக்கும் கடவுளான பிரம்மனின் குளத்தில் தோன்றியவன், மிகவும் அறிவாளி, பலசாலி, சிவபெருமான் தந்த வாளைப் பெற்றவன், அவன் ஒரு மங்கையைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று சீதையிடம் தன்னைப்பற்றியே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறான். அதைக் கெட்ட சீதை…

    வேதமும் வேதியர் அருளும் வெஹ்கலா

    சேதன மன்னுயிர் தின்னும் தீவினைப்

    பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு

    ஏகு என் உடலமும் மிகை என்று எண்ணுவீர்.  —  3.851

    “என் உடம்புகூட துறக்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்க வேண்டிய (துறவியான) நீங்கள், வேதங்களையும், வேதியர் (வேதத்தைக் தந்த சிவபெருமானின்) அருளையும் வேண்டித் (தவம்) புரியாமல், ஆறறிவு உடைய மனிதர்களைத் உண்ணகூடிய தீய செயல்களைச் செய்கின்ற பாவிகளான அரக்கர்களின் நகரத்தில் தங்குவதற்காக எதற்காகச் சென்றீர்கள்?” என்று கேட்கிறாள்.

    …நீங்கள் மிகவும் தவறான செயலைச் செய்து விட்டர்கள் என்று அவனைக் கடிந்து கொள்கிறாள்.  சீதை தன்மீது சந்தேகம் கொள்கிறாள் என்று இராவணன் அறிந்து கொள்கிறான்.  எனவே, மனிதர்களைப் புசிப்பது  அரக்கர்களின் இயல்பு, நாம் என்ன செய்ய முடியும் என்று அதற்குச் சமாதானம் சொல்கிறான். அதை சீதை ஒப்புக் கொள்ளாமல் அவனுடன் வாதம் செய்கிறாள்.  இருவரும் தங்கள் பக்கமே சரி என்று விவாதம் செய்கிறார்கள்.

    அரண் தரு திரள் தோள் சால வள எனின் ஆற்றல் உண்டோ

    கரண்ட நீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த கழற்கால் வீரன்

    திரண்ட தோல் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்தன்னில்

    இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள்.  —  3.863

    மதில்கள் போன்று பாதுகாப்புத் தருகின்ற சிறந்த தோள்கள் பல இருந்தால் மட்டும் வலிமை உண்டாகி விடுமா?  நீர்க் காக்கைகள் மிகுந்த இலங்கையின் அரசனை (இராவணனை) வீரக் கழல்கள் (சிலம்புகள்) அணிந்த வீரன் (கார்த்த வீர்யார்ச்சுனன்) சிறைப் பிடித்தான்.  (அப்படிப்பட்ட கார்த்த வீர்யார்ச்சுனனின்) காட்டு மரங்கள் போன்ற (ஆயிரம்) பலம் பொருந்திய தோள்களை, இரண்டே தோள்கள் கொண்ட ஒருவன் (பரசுராமன்)தான் கோடாரியால் வெட்டி எறிந்தான் என்று கேட்டாள்

    …அதனால் கடும் கோபம் கொண்ட இராவணன், தனது துறவி வேடத்தை நீக்கிவிட்டு, தனது இயல்பான அரக்க உடலை எடுத்துக் கொள்கிறான்.  சீதை அதைக்கண்டு பயப்படுகிறாள் “என்னை இவ்வாறு தூற்றிய எவரையும் நான் கொன்று தின்று விடுவேன். நீ பெண் என்பதால் உன்னை விட்டு விடுகிறேன்.  நீ என்னுடன் வந்துவிடு, உன்னை மிகவும் சிறப்பாக வைத்துக் கொள்கிறேன்” என்று கூறுகிறான்…

    புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்குஎரி புனிதர் ஈயும்

    அவியை நாய் வேட்டதென்ன என் சொனாய் அரக்க என்னா.  —  3.869

    “இந்த உலகத்தில் ஒழுக்கமாக இருப்பதை விரும்ப மாட்டாய்; பெரிதாக எரிகின்ற (யாக அக்னியில்) தூயவர்கள் இடப்போகும் ஆகுதியை நாய் விரும்புவதைபோல எத்தகைய (இழிவான சொற்களைச்) சொல்கிறாய், அரக்கா?” என்று கேட்டாள்.

    … என் கணவர் இராமனின் கூரிய அம்புகள் உன் மீது பாய்வதற்கு முன் இங்கிருந்து ஓடிப்போய் உன் இலங்கையில் ஒளிந்துகொள் என்று சிறிதும் அஞ்சாமல் சீறி எழுகிறாள் சீதை.  அதைப் பொருட்படுத்தாமல், இராமனின் அம்பு என்னை ஒன்றும் செய்யாது. என்னை ஏற்றுக்கொள் என்று தரையில் விழுந்து அவளை வணங்கிக் கேட்கிறான் இராவணன்.  தன்னை இந்த இக்கட்டான் நிலைமையில் இருந்து காக்குமாறு இராமனையும், இலக்குவனையும் சீதை, கூவி அழைக்கிறாள்…

    ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத்

    தீண்டான் அயன் முன் உரை சிந்தைசெயா

    தூண்தான் எனல் ஆம் உயர்தோள் வலியால்

    கீண்டான் நிலம் யோசனை கீழ்ப் புடையே.  —  3.874

    முன்காலத்தில் பிரம்மா கொடுத்த (சாபச்) சொற்களை நினைவில் கொண்டு, அப்பொழுது தீயவனான (இராவணன்), நூலைப்போன்ற இடையுடைய (சீதையை)த் தொட வில்லை.  தூண்கள் போன்ற உயர்ந்த தோள்களின் வலிமையால், (சீதையையும் சேர்த்து ஒரு) யோசனை அளவுக்கு நிலத்தைத் தோண்டி எடுத்தான்.

    அதனால் மயக்கம் அடைந்த சீதையை, தான் தோண்டி எடுத்த நிலத்துடன் புஷ்பக விமானத்தில் எடுத்துச் சென்றான் என்று எடுத்துரைக்கிறார் கம்பர்.

    ஒப்பீடு

     

    துவக்கம் ஒரே மாதிரி இருந்தாலும், வால்மீகியும், கம்பனும் இந்நிகழ்ச்சியைக் கூறியிருப்பதில் நிறைய மாற்றமிருக்கிறது.  எனவே, மாற்றங்கள் என்ன என்று பார்ப்போம்.

    1. மிகப் பெரிய மாற்றம், இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும் முறைதான். சீதையின் தலை மயிரை ஒரு கையாலும், தொடைகளின் பின்புறத்தை இன்னொரு கையாலும் பிடித்துத் தூக்கிச் சென்றான் என்று வால்மீகி எழுதி உள்ளார்.  ஆனால், ஒரு யோசனை நிலத்தை அகழ்ந்து, சீதையைக் கவர்ந்தான் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.  “அயன் முன் உரை சிந்தைசெயா தீயவன் ஆயிழையைத் தீண்டான்”, அதாவது, பிரம்மா முன்நாளில் அளித்த சாபத்தைக் கருதியே, சீதையைத் தீயவனாகிய இராவணன் தொடவில்லை என்று எழுதி இருக்கிறார்.

    கற்பில் சிறந்த சீதையை இராவணன் தொட்டுத் தூக்கிச் செல்வதைத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், எனவே, மரபு காரணமாக கம்பர் இராவணனுக்கு ஒரு சாபம் இருந்தது என்று கம்பர் புனைந்து விட்டார் என்று எண்ணிவிடக் கூடாது.  அந்த சாபத்திற்கு ஆதாரத்தை அவர் வால்மீகியின் வடமொழி மூலத்திலிருந்துதான் பெற்றிருக்கிறார். யுத்த காண்டத்தில், பதிமூன்றாம் சர்க்கத்தில், பத்திலிருந்து பதினைந்தாம் சுலோகங்களில் அதை இராவணனின் வாய்மொழியாகவே, வால்மீகி எழுதிருக்கிறார்.  மகாபார்ச்வனுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன் என்று இராவணன் தனது சாபத்தைப் பற்றிக் கூறுகிறான்.  புஞ்சிதஸ்தலை என்ற தேவகன்னிகையைத் தான் பலாத்காரம் செய்ததாகவும், அதை பிரம்மா அறிந்து மிகவும் கோபம் கொண்டு சபித்ததாகவும் சொல்கிறான்.

    अद्यप्रभृति यामन्याम् बलान्नारीम् गमिष्यसि |

    तदा ते शतधा मुर्धा फलिष्यति न संशयः || ६-१३-१४

    அத்யப்ரபூதி யாமன்யாம் பலான்நாரீம் கமிஷ்யஸி |

    ததா தே சததா முர்த்தா பலிஷ்யதி ந ஸம்சய: || 349-18

    இன்றிலிருந்து எந்த பிற பெண்ணிடம் பலவந்தமாகச் செல்கிறாயோ (பலாத்காரம் செய்கிறாயோ), அப்பொழுது உன் தலை நூறாக வெடிக்கும், சந்தேகமில்லை.  —  6.13.14

    இதற்குப் பயந்தே நான் சீதையைக் கட்டாயப்படுத்தித் தன் விருப்பத்திற்கு உள்ளாக்கவில்லை என்று இராவணன் தெரிவிக்கிறான்.  இந்த ஆதாரத்தையே, கம்பர் குறிப்பிட்டு, சீதையை, அத்தீயவன் தீண்டவில்லை என்று தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறார்.  இதிலிருந்து கம்பருக்கு வால்மீகி இராமாயணத்தில் இருந்த புலமையும், வடமொழித் திறனும் புலனாகிறது.

    இருவருமே சீதையை கற்பில் சிறந்தவளாகத்தான் போற்றி இருக்கிறார்கள். இராவணன் சீதையை பலாத்காரமாகத் தூக்கித்தான் சென்றான், ஆனால் பலவந்தம் செய்யவில்லை என்பதை இராவணனின் மூலமாகவே வால்மீகி தெள்ளக் தெளிவாக்கி உள்ளார்.

    அந்தணத் துறவியாக வேடம் அணிந்து வந்த இராவணனை சீதை வரவேற்று உபசரித்தாள் அரக்கரின் அரசன் சீதையை அங்கம் அங்கமாக, அவளிடமே வர்ணிக்கிறான் என்று வால்மிகி கூறியிருந்தாலும், ஒரு பெண்ணை, அவள் முன்னே அப்படி வர்ணிப்பது தமிழ் மரபாகாது என்று கம்பர் தவிர்த்து விடுகிறார்.

    அதற்குப் பதிலாக, சீதையின் காலடியிலேயே விழுந்து கிடப்பேன், அவளைப் பற்றிச் சொன்ன தனது தங்கை சூர்ப்பனகைக்குத் தனது அரசையே பரிசளிப்பேன் என்று மனதிற்குள் மருகியதாக எழுதிவிடுகிறார்.

    அரக்கன் அப்படித் தன்னை வர்ணித்தாலும், தன்னைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்றே சீதை அவனுக்குப் பதில் சொல்கிறாள் என்று வால்மீகி சொல்கிறார்.

    கம்பர் சொல்லாத ஒரு செய்தியை வால்மீகி சீதையின் வாயிலாகத் தெரிவிக்கிறார். காட்டு மிருகங்களின் இறைச்சியை (மாமிசத்தை) என் கணவர் நிறையக் கொண்டு வருவார், அந்த உணவு கிடைக்கும் என்று தெளிவு படுத்திய பின்னரே, கள்ளவேடம் பூண்ட துறவியின் குலம், கோத்திரம் பற்றி வினவுவதாக எழுதி இருக்கிறார். இதன்மூலம், இராமாயண காலத்தில் அனைவரும் இறைச்சி உண்டார்கள் என்று புலனாகிறது.

    ஆயினும், கம்பனுக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, திருவள்ளுவர் புலால் மறுத்தல், கள் உண்ணாமை போன்ற இரண்டு பண்புகளையும் வலியுறுத்தி இருக்கிறார். எனவே, மறையவர்கள், துறவிகள் மாமிசம் உண்ணுவது என்பது திருவள்ளுவர் காலத்திலேயே தமிழ் நாட்டில் இருந்திருக்க இயலாது. அதனாலேயே கம்பர் இவ்வாறு எழுதாமல் தவிர்த்திருக்கிறார்.

    மேலும் புறநானூற்றில் எவர் வீட்டில் எப்படிப்பட்ட உணவு கிடைக்கும் என்பது பற்றிய பாட்டில், அந்தணர் வீட்டில், அரிசிச் சோறும், கீரையும் கிட்டும் என்று நான் படித்திருக்கிறேன். ஆகவே, இடத்திற்குத் தகுந்தவாறு உணவும் மாறுபட்டது. இன்றும் காஷ்மீர் பண்டிதர்கள் ஆட்டிறைச்சியும், வங்காள பிராமணர்கள் மீனும் உண்ணுகிறார்கள். ஆனால் தென்னிந்தியா, குஜராத், ராஜஸ்தானில் புலால் (இறைச்சி) அவர்களால் தவிர்க்கப்படுகிறது.

    எனவே, வால்மீகியை ஆதாரம் காட்டி தவறாக யாரையும் பழிக்கக் கூடாது என்பதற்காகவே, சீதை வாய்மொழியான இந்த சுலோகம் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டது. எவர் மனத்தையும் புண்படுத்தவதற்காக அல்ல.

    யார் என்று சீதை கேட்டதும், தன்னை இலங்கை மன்னன் என்றே அறிமுகம் செய்துகொள்வதாக வால்மீகி சொன்னாலும், கம்பர் அதை வேறுவிதமாகச் சொல்கிறார்.

    இலங்கை மன்னனின் அரசவையில் சுகமாகக் காலம் கழித்து விட்டுத் திரும்பி வருவதாக அவன் சொல்வதாகக் கூறுகிறார்.  அதோடு மட்டுமல்லாமல், சீதையின் அறிவையும், வாதத் திறமையையும் கம்பர் வெளிப்படுத்துகிறார்.  தவசி வேடத்தில் இருந்த இராவணன், இலங்கை அரசனின் புகழை – அதாவது, தந்து புகழையே — பாடியதைக் கேட்டதும், “ஆறு நோன்புகளை மேற் கொள்ளவேண்டியவரும், யாக்கையின் (உடலின்) நிலையாமையை அறிந்த நீர் எப்படி மனிதரைத் தின்னும் அரக்கனை அண்டி இருந்தீர்?” என்று கேட்கிறாள். வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், வேள்விகளைச் செய்தல், மற்றவர்களுக்குச் செய்வித்தல், தானம் வாங்குதல், தனது அன்றாடத் தேவைக்கு மீந்ததை மற்றவர்க்குத் தானமாக அளித்தல் என்ற ஆறு நோன்புகளையும் அந்தணர்கள் செய்யவேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருக்கிறாள்; துறவிகளும், அந்தணர்களும் மற்றவர்களை அண்டியே இருக்கவேண்டும் என்றாலும், நல்லவர் அல்லாதோரை அண்டி இருக்கக் கூடாது என்ற அறிவுரையையும், ஒரு துறவிக்குச் சுட்டிக்காட்டத் தயங்காதவளாகவே சீதை கம்பரால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறாள்.

    இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள்.  வாதிட்ட விதம்தான் மாறி உள்ளது.

    எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார்.

    ஆனால், உடல் வலிமை பயனற்றது, உன்னை ஆயிரம் கை கொன்ற கார்த்தவீர்யாஜுனன் சிறைப் பிடித்தான், அவனை இரண்டே தோள் கொன்ற பரசுராமன் வெட்டித் தள்ளினார் என்று இராவணனின் வரலாற்றையும், கார்த்தவீர்யாஜுனனின் வரலாற்றையும் சொல்லி அவனை எள்ளி நகையாடுகிறாள்.

    சீதையின் சீரிய கல்வி அறிவை இதன்மூலம் நமக்குக் கம்பர் புலப்படுத்துகிறார்.  அதுமட்டுமல்ல, வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். அவளது வீர்த்திற்கு அடி பணிந்து என்னை ஏற்றுக்கொள் என்று அவள் காலிலேயே இராவணன் விழுகிறான் என்று சீதியின் கற்புச் செருக்கை ஏத்தி இருக்கிறார் கம்பநாட்டார்.

    இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்.

    சீதையின் அந்தத் துணிச்சலை, இராவணன் அழிவுக்குப் பின்னர், இராமனுக்கும் சீதைக்கும் இடையில் நடக்கும் உரையாடலை, அடுத்த ஒப்பீட்டில் காண்போம்.

     

    =====================================================================

    Share
  • Somewhere Ramblings of a Nomadic Soul

    Ajith Subramanian

     

    What do you desire my soul?
    Happiness? And leave my heart with a hole?
    What is right and what is wrong?
    Happiness personified I am writing this song

    Torn apart as you can see,
    Tell me, how do you define me?
    I am sane is what I think,
    A lifetime just disappears in a wink!

    Oh let me think about time a bit,
    Quantum mechanics and the likes of it,
    What is time? What is space?
    Seems like I run on this recursive race!

    What is truth and what is real?
    Answering that makes my whole world whirl!
    This moment and this second,
    Don’t wanna lose it, I reckon

    Tell me universe or tell me god,
    Am I insane, am I a retard?
    The puzzle of life I try to solve,
    I melt in reality and I just dissolve!

    Happiness and living this moment,
    Is real and that I can see!
    To judge or not to judge,
    Truth and Morality it kills me!

    Who put the rules? And why is it there?
    To live life to the fullest, it’s just fair!
    One life and I know I am the hero,
    Puff! I disappear and I got to start at ground zero!

    Share
  • நீல நிறம்.. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்..

    கவிஞர் காவிரிமைந்தன்

    மொத்தத்தில் இந்தப்பாடல் முத்தமிழ் விருந்து!!

    ஆணும் பெண்ணும் இணைந்து பாடும் ஜோடிப் பாடல் என்பது ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம்பெறுவது இயல்புதான். கவிஞர்களின் கற்பனைத் திறம், சொல்லாட்சி இவைகளுக்கு களமாக அமைவதும் இப்பாடல்கள்தான்! அதுவும் இயல்பான காட்சியமைப்புகளையும் மீறி.. கனவுக்காட்சிகளாக அமையும்போது பாடலில் ஏற்படும் ஈர்ப்பு அதிகமே!!

    குறிப்பாக.. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்கும் திரைப்படத்தில் இதுபோன்ற கனவுக்காட்சிகளும் பாடல்களும் மிகப் பிரபலமான காலக்கட்டத்தில் அவர்தம் ரசிகர்களுக்கு ஒவ்வொரு பாடலும் தேனாமிர்தம்! கானாமிர்தம்! ‘என் அண்ணன்’ திரைப்படத்தில் கண்ணதாசன் வார்த்தைகள் வழங்க.. கே.வி.மகாதேவன் இசையில் முகிழ்த்து வரும் பாடலிது!

    காதலில் நடக்கும் இந்த ஆராய்ச்சிகள் கற்பனையின் உச்சங்களா? இயற்கையை உவமித்து இவர் காட்டியிருக்கும் எழில் ஓவியங்கள் இன்பத்தமிழ் நாட்டியங்களா?

    இலை மறை காய் விஷயங்களை நயமாய் எடுத்துரைக்கும் கவிஞரின் சாதுரியம் சபாஷ் போட வைக்கிறது! விரசமில்லாமல் நடக்கும் காதல் விருந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாமே!

    கண்ணனின் நீலம் கடல் நீலம் என்று கார்மேகவண்ணனைப் பாடிய கண்ணதாசன்.. காதலியின் கண்களிலும் நீலத்தைக் கண்டுபிடித்ததை அப்பட்டமாகச் சொல்லும் அட்டகாசமான பாடல்!

    டி.எம்.செளந்திரராஜன் எஸ்.ஜானகி கூட்டணியில் காலங்களைத் தாண்டி இன்றும் நம் காதுகளை கெளரவப்படுத்தும் பாட்டு!
    kanna
    கோயிலின் சிலைகள்.. நதியின் வளைவுகள் எல்லாமே கவிஞர் கைவண்ணத்தில் மிளிருகின்றன.. மொத்தத்தில் இந்தப்பாடல் முத்தமிழ் விருந்து!!

    நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்kaviri
    காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
    வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
    காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

    தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ
    வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ
    அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
    உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
    (நீல நிறம் )

    இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர்
    அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
    அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ
    இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
    (நீல நிறம் )

    கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
    கோபுரக் கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ
    இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
    அதில் தமிழ் கூறும் உவமைகள் சுவையல்லவா
    (நீல நிறம் )

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “LOVEஆகி ராதைஆ லிங்கனத் திற்கீடாய்
    COWஆன கங்கியைக் கட்டுகிறான்; -இவ்வாறு
    பண்பில் உயர்ந்தவன், பெண்,பசு பேதமற்றோன்
    அன்பிற்கும் உண்டோ அடைப்பு”….கிரேசி மோகன்….

    நமக்கு ஓரே அன்னை கண்ணன்….
    MOMஏகம் சரணம் வ்ரஜ(வ்ரஜகுலம் நாம்)….

    “கட்டிப் பிடிவைத்யம் கங்கிக்கு ,ஞானியர்
    எட்டிப் பிடித்திடா ஏகமவன்; -கொட்டும்
    பசூம்பால் பக்திக்கு பேரின்பம் கூட்டும்
    வசூல்ராஜா கண்ணன் விரல்”….கிரேசி மோகன்….

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “SHE-BIRD இராதையை சந்தித்த லாஹரியில்
    FREE-BIRDடாய் SYMPHONY FINGERரால் -KEY-BOARDடில்
    சங்கீ தலஹரியில் ஸ்நானிப்பு ஸ்ரீஹரி;
    இங்கீ டிதற்க்(கு)இளைய KING”….கிரேசி மோகன்….

    “முன்பனி காலத்தில் முத்த மழைபொழிந்து
    COMPANY ராதை களிப்பூட்ட -SYMPHONY
    KEY-BOARDடில் வாசிக்கிறான் கோவிந்தன் KUNGFU-BRUCE
    LEEபோல லீலை லயிப்பு”….கிரேசி மோகன்”..

    Share
  • இது என்ன ஜனநாயகம்?

    — நாகேஸ்வரி அண்ணாமலை.

    judgement dayமுதல் முதல் துகளக் பத்திரிக்கை தொடங்கப்பட்டபோது நாங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.  நண்பர்கள் பலர் அந்தப் பத்திரிக்கையைப் பற்றி நிறையப் புகழ்ந்து எழுதுவார்கள்.  எழுபதுகளில் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதுவும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதாக ஞாபகம் இல்லை.  இந்து பத்திரிக்கை மட்டும்தான் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு வாரம் ஒரு முறை விமானம் மூலம் வந்துகொண்டிருந்தது.  சனி, ஞாயிறுகளில் நூலகத்திற்குப் போய் அதைப் படிப்பதுண்டு.  இந்தியா திரும்பிய பிறகே நாங்கள் துக்ளக் பத்திரிக்கை படிக்க ஆரம்பித்தோம்.  தமிழில் உள்ள ஒரே அரசியல் நையாண்டி (political satire) பத்திரிக்கையாக அது விளங்கியது.  அதனால் அதற்கு மத்திய வர்க்கத்தினரிடம் பெரிய மவுசு இருந்தது.

    இப்போது துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் ஜெயலலிதாவிற்கு ஆலோசகர். 2014 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த இந்தியப் பாராளுமன்றத் தேர்தல்களில் மோதிக்கு (இவர் பெயரை மோடி என்று தமிழில் ஆங்கில உச்சரிப்பின்படி ஏன் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.  மோதி என்றுதான் குஜராத்தி உச்சரிப்புப்படி எழுத வேண்டும்.) ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு சாரார் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டபோது ஜெயலலிதா ‘மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம்.  லேடிக்குப் போடுங்கள்’ என்று தனக்கு ஓட்டுப் போடும்படி கேட்டுக்கொண்டார்.  இதனிடையில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் ‘மோடியும் வேண்டாம், லேடியும் வேண்டாம்.  டாடிக்குப் போடுங்கள்’ என்று தன் தந்தைக்குப் போடும்படி கேட்டுக்கொண்டார்.  மோடி, லேடி, டாடி சர்ச்சை நடந்துகொண்டிருக்கும்போது துக்ளக் ஆசிரியர் மோதியைப் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கும்படியும் அப்படி முடியாத பட்சத்தில் ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுக்கும்படியும் வாக்காளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஜெயலலிதாவைப் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அவருக்கு இந்திய அளவில் அரசியல் ஆதரவும் உலக அரசியல் அறிவும் இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தாரா என்று தெரியவில்லை.  இலவசங்களாகத் தமிழ்நாட்டில் அள்ளிக் கொடுத்த ஜெயலலிதா இந்தியாவின் பிரதமரானால் இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசங்களாகக் கொடுத்துக்கொண்டிருந்திருப்பாரா?  சமீபத்தில் வந்த ஒரு புள்ளிவிபரத்தின்படி தமிழகம் பொருளாதார ரீதியில் மற்ற மாநிலங்களை விட மிகவும் பின்னணியில் இருக்கிறது.  இலவசங்களாக அள்ளிக் கொடுத்துவிட்டுத் தமிழகத்தின் கஜானாவைக் காலிசெய்ததுபோல் இந்தியாவின் பொருளாதாரத்தையும் சீர்குலையச் செய்திருப்பார் என்பது துக்ளக் ஆசிரியருக்குத் தெரியவில்லையா?

    ஒரு நாட்டின் பிரதமர் என்றால் எத்தனை பொறுப்புகள்!  குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த ஜெயலலிதாவால் பல இன, மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்தியாவை ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க முடியுமா?  முதலில் தேர்தல் பிரச்சாரத்தில் ‘நாற்பதும் நமதே.  நாடும் நமதே’ என்று கூறிக்கொண்டிருந்த ஜெயலலிதாவே அந்த மந்திரத்தை விட்டுவிட்டு ‘அத்தனை பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஜெயிப்போம்’ என்று சொல்ல ஆரம்பித்தார்.  ஜெயலலிதாவைப் பற்றி ஜெயலலிதாவுக்கே தெரிந்த அளவு கூட துக்ளக் ஆசிரியருக்குத் தெரியவில்லையா?  ஜெயலலிதாவே தனக்குப் பிரதமர் பதவி கிடைக்காது என்று முடிவுசெய்த பின்னும் துக்ளக் ஆசிரியர் அந்தப் பொறுப்பை ஜெயலலிதாவிடம் கொடுக்கும்படி மக்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.

    அவருக்கு நாற்பது இடங்களும் கிடைத்திருந்தாலும் பிரதமர் பதவி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.  இரண்டு தேசிய கட்சிகளுக்கும் மிகக் குறைந்த இடங்கள் கிடைத்து உதிரிக் கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஜெயலலிதாவைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.  (இது துக்ளக் ஆசிரியர் கற்பனையில் மட்டுமே நடக்கக் கூடியது)  இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்றிருக்கும் ஜெயலலிதா பிரதமராக இருந்திருந்தால் பிரதமர் பதவியை இழந்து தனக்கு வேண்டியவர் ஒருவரை பிரதம மந்திரியாக நியமித்திருப்பாரா?  அப்போது நாட்டின் தலைவிதி என்ன ஆகியிருக்கும்?

    சொத்துக் குவிப்பு சம்பந்தமான வழக்கு நடந்துவருவது துக்ளக் ஆசிரியருக்கு நன்றாகத் தெரியும்.  அதில் ஜெயலலிதாவின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தன்னுடைய பதவியை – முதல் மந்திரி பதவியானாலும் சரி, பிரதம மந்திரி பதவியானாலும் சரி – இழக்க நேரிடும் என்பதை அவர் உணரவில்லையா?  அதெல்லாம் போகட்டும்.  இப்போது வழக்கின் முடிவு பற்றி எதுவும் கூறாமல் ஏன் மௌனம் சாதிக்கிறார்?  பல அரசியல் தலைவர்கள் பல காரணங்களுக்காக வழக்கு பற்றி எதுவும் கூறாமல் மௌனம் சாதிக்கிறார்கள்.  இவர் மௌனம் சாதிப்பதன் காரணம் என்ன?  ஒரு பொறுப்புள்ள பத்திரிக்கை ஆசிரியராக, மக்கள் நலனில் அக்கறை செலுத்துபவராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அவர் ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்குங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டது எவ்வளவு தவறு என்று உணர்ந்து தன் தவறுக்கு விளக்கம் தர வேண்டாமா?

    துக்ளக் ஆசிரியர் போன்ற ‘அறிவு ஜீவி’யே ஜெயலலிதாவின் ஊழல்களை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு அவரைப் பிரதமர் ஆக்குங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.  ஜனநாயகம் என்றால் என்ன, ஜனநாயக அரசு எப்படி செயல்படுகிறது என்பது பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாத படிப்பறிவு இல்லாத மக்கள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திரும்பப் பெறும்படி தர்ணா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.  நம் ஜனநாயகத்தைப் பற்றி என்ன சொல்வது?  சிலர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஜெயலலிதாவுக்கு இழைத்த கொடுமையாக எண்ணி உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.  இதற்கு மேல் சமூகத்துக்கு நற்செய்திகளைக் கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் திரை உலகைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.  இவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?  ஜெயலலிதா தவறே செய்யவில்லை என்கிறார்களா, அல்லது அவர் மக்களால் அமோகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவர் குற்றம் செய்தாலும் அவர் மீது வழக்கே போடக் கூடாது என்கிறார்களா, அல்லது அப்படி வழக்குப் போட்டாலும் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்கிறார்களா அல்லது அப்படி விசாரித்தாலும் தண்டனை எதுவும் கொடுக்கக்கூடாது என்கிறார்களா?  இவர்கள் என்னதான் வேண்டுகிறார்கள்?  இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும்வரை இந்தியாவை ஜனநாயக நாடு என்று எப்படி அழைக்க முடியும்?

    படங்கள் உதவி: இணைய செய்தித் தளங்கள்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர்  6, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  இந்திராணி அவர்கள்

     

    indhirani

    பொதுவாக, ஒரு மேம்போக்கான கோணத்தில் அணுகுவோமானால் ஆன்மிகம் என்ற அடிப்படையில் நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது என்பதை யாவரும் அறிவோம். இருப்பினும் இக்கொலுவிற்குப் பற்பல பரிமாணங்கள் உண்டு.  பொம்மைகள் செய்பவர்களின் வாழ்வாதாரத்தில் தொடங்கி  பொருளாதார அடிப்படையில் விழாவினை முன்னிட்டு   நாட்டின் செல்வ வளம் பரவுதலை  ஊக்குவிக்கும் செயலாக இவ்விழா அமையும் என்பதும், கலைகளின் வளர்சிக்குத் தூண்டுகோலாக அமைவதற்காகவும், இளையதலைமுறைக்கு நாட்டின் காலாச்சார பின்னணியை கொண்டுசெல்லும் முயற்சியாகவும் பலவகைகளின் நாம் நவராத்திரி கொலுவினைப் போற்றலாம்.  அதற்கும் மேலாக மேலும் சில பரிமாணங்களை அறிமுகப்படுத்துகிறார் இவ்வார வல்லமையாளர் இந்திராணி. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொலுவைப்பதுடன் அத்துடன்  கல்வி, தொண்டு ஆகியவற்றையும் இணைத்து புதுமை செய்திருக்கும் இந்திராணி அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்து பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும்  74 அகவையை நெருங்கிய இந்திராணி அவர்களுக்கு சிறு வயது முதலே கொலுவைப்பதில் அதிக ஆர்வம் உண்டு. பெரும்பாலோர் புராணக்கதைகள், தசாவதார பொம்மைகள் என்பதுடன் கொலு வைக்கும்  நிலையில் இருக்கும் பொழுது,  பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏதேனும் ஒரு கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு கொலு அமைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர் இந்திராணி.  பொங்கல்,விவசாயம்,கிராம திருவிழா என்பது போன்ற பல பின்னணிகளில்  தனது கற்பனையைக் கட்டவிழ்த்து கொலுவைத்தவர்.  மிகவும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய கொலுக்களில் ஒன்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இருபது அம்சத்  திட்டத்தை விவரிக்கும் இவரது கொலுவாகும்.  இதன் சிறப்பைக் கண்டவர்கள், இது பள்ளிச்சிறார்களுக்கு  நல்ல தகவலைக் கொடுக்கும் கொலு எனக் கருதி மேலும் சிலநாட்களுக்கு கொலுவை நடத்த கோரிக்கை வைத்துள்ளார்கள் என்ற செய்தி அக்கொலுவின் சிறப்பைக் காட்டும்.

    கடந்த சில ஆண்டுகளாக இவர் சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு குப்பைகளாக நாம் எறிந்துவிடும் காகிதக் கோப்பைகள், மருந்து புட்டிகள், தினசரித்தாள்கள், கெட்டியான அட்டைகளைக் கொண்ட வாழ்த்து அட்டைகள், அழைப்பிதழ்கள்,  பரிசு பொருட்களைச் சுற்றப் பயன்படும் காகிதங்கள், அட்டைப்பெட்டிகள் போன்றவற்றை மறுசுழற்சி செய்யும் வகையில் அவற்றில் பொம்மைகள் செய்கிறார்.

    காகிதக் கோப்பைகளால் உருவாக்கிய தோரணங்களுடன் இந்திராணி
    காகிதக் கோப்பைகளால் உருவாக்கிய தோரணங்களுடன் இந்திராணி

       gallery1gallery2

    ஆண்டின் துவக்கத்திலேயே திட்டமிட்டு பொருட்களை சேகரித்து, ஒரு நாளில் ஆறுமணி நேரமாவது செலவழித்து அவற்றைக்கொண்டு  தோரணங்கள், துளசிமாடங்கள், நாட்டியப் பெண்கள், பூந்தொட்டிகள் என்று பலப்பலவகையில் பொம்மைகள் செய்கிறார். இவரது  கைத்திறமையால் குப்பைகள் கருவூலமாக மாறுகின்றன என்று சொல்வோமானால்  மிகைபடுத்துதல் கிடையாது.  சுற்றுச்சுழலுக்கு வலு சேர்க்கும் விதத்தில் வடிவமையக்கப்படும் இந்தப் பொம்மைகளை வியக்கவைக்கும் வகையில் தொண்டு செய்யும் நோக்கிலும் பயன்படுத்துகிறார்.  இந்த பொம்மைகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஏழை மாணவியர் கல்விக்காக வழங்கி உதவியும் செய்து வருகிறார்.

    தொன்றுதொட்டு வரும் விழாவில் சுற்றுச்சுழலுக்கு வலு சேர்க்கும் விதத்தில் குப்பைகளின் மறுசுழற்சி, மாணவியரின் கல்விக்கு பொருளுதவித் தொண்டு எனப் புதிய உயரத்திற்கு கொலுவை உயர்த்திய வல்லமையாளர் இந்திராணி அவர்களுக்கு வல்லமை குழுவினர் பாராட்டுகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தகவலும் படங்களும் வழங்கியவர்: தினமலர் செய்தியாளர் – எல்.முருகராஜ்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1074201

    இந்திராணி அம்மையாரைப் பாராட்டவும், பொம்மைகள் பற்றிய தவலறிய தொடர்பு கொள்ளவும் அவருடைய தொலைபேசி எண்: 9940146233.

     

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம்http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 138

    -மலர் சபா

    மதுரை பயணம்

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    அடிகளின் அறவுரையைக் கேட்டுக் கோவலன் வழிநடத்தல்

    வழியில் நடந்ததால் துயருற்ற
    கண்ணகியிடம் கோவலன்
    “இக்கொடிய வழியில்
    புலிகள் திரியும்
    ஆந்தைகள் அலறும்
    கரடியும் சத்தமிடும்
    இதற்கெல்லாம் அஞ்சாமல் செல்வாயாக”

    இப்படிக்கூறி வளைந்த வளையலை அணிந்த
    அவள் கைகளைத் தன் தோள்மேல் சார்த்தி
    அன்புடன் அவளை அழைத்துச் சென்றான்.

    வழிநெடுகக் கவுந்தியடிகளின்
    பாவமொழிகள் நீங்கிய குற்றமற்ற
    அறவுரைகளைக் கேட்டுக் கொண்டே,
    அவர்கள் கடப்பதற்கு அரிய
    பல வழிகளைக் கடந்து சென்றனர்.

    வரிநவில் அந்தணர் வாழும் பதியை வைகறையின் சார்தல்

    வெம்மை நிலைபெற்று விளங்கும் காலத்தில்
    மூங்கில் வெம்மையில் கரிந்து கிடக்கும்
    காட்டின் இடையில்
    காட்டுக்கோழிகள் கூவிக்
    கதிரவனின் வரவை அறிவித்தன.

    வரிப்பாடல் பாடும் கொள்கையுடையவராய் ஆனால்
    அந்தக் கொள்கையிலிருந்து தற்போது வழுவியவராய்,
    முப்புரி நூல் அணிந்த அந்தணர்கள் வாழ்ந்துவந்த
    ஓர் ஊரினை அம்மூவரும் சென்றடைந்தனர்.

    கோவலன் நீர்நிலை நோக்கிச் செல்லுதல்

    அந்த காலைப் பொழுதினில்
    கண்ணகியுடன் கவுந்தியடிகளையும்
    ஒரு பாதுகாப்பான இடத்தில் அமரச் செய்துவிட்டு,
    முள்ளிட்டுக் கட்டப்பெற்ற வேலியைக் கடந்து
    நீர் கொண்டு வருவதற்காகத்
    தொலைவிலிருந்த நீர்நிலையிடத்துக்
    கோவலன் சென்றான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 30 – 43
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி:
    http://www.howtogeek.com/92364/peaceful-early-morning-by-the-riverside-wallpaper/

    Share
  • குறளின் கதிர்களாய்…(42)

    -செண்பக ஜெகதீசன்

    கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயு மோடா நிலத்து. (திருக்குறள்-496: இடனறிதல்)

    புதுக் கவிதையில்…

    இடமறிந்து செயல்படு                              Ratham-R2
    இடர்ப்பாடுகளின்றி வாழ..
    இடம் மாறினால் பாழ்தான்!
    பார்,
    நின்று அசைந்துவரும்
    திடமான தேரும்
    கடலில் ஓடாது,
    கடலில் மிதந்தோடும்
    மரக்கலம்
    ஓடாது நிலத்திலே…!

    குறும்பாவில்…

    தேர் ஓடிடாது கடலில்,
    கப்பல் ஓடிடாது நிலத்தில்,
    கற்றிடு இடமறிந்து செயல்பட…!

    மரபுக் கவிதையில்…

    இடமதை யறிந்தே செயல்படுவாய்,
    இடர்தான் வாழ்வில் இல்லையெனில்,
    கடலில் உலாவரும் கப்பலதைக்
    கரையில் கொணர்ந்தே ஓடவிட்டால்
    கடுகள வேனும் அசையாதே,
    காட்சிக் கழகிய தேரதுவும்
    கடலில் விட்டால் ஓடாதே,
    கருத்திதைக் கொண்டிடு செயல்படவே…!

    லிமரைக்கூ…

    கடலிலே ஓடிடாது தரையினிலோடும் தேர்,
    இடமறிந்து செயல்படு,
    கடலோடும் கப்பலும் கரையிலோடாது பார்…!

    கிராமிய பாணியில்…

    நடந்துக்க நடந்துக்க
    எடம்பாத்து நடந்துக்க,
    எடம்மாறிப் போச்சிண்ணா
    எல்லாமே பாழாவும்…

    கப்பலு கடலுலபோவும்
    தேரு தரைலபோவும்,
    கடலுல ஓடாதய்யா தேரு
    நெலத்துல நவுராதய்யா கப்பலு..

    பாத்துக்க பாத்துக்க
    பாத்தபடி நடந்துக்க,
    நடந்துக்க நடந்துக்க
    எடம்பாத்து நடந்துக்க…!

     

    Share
  • காந்தி கல்லாகிவிட்டார்!

    -ரா. பார்த்தசாரதி

    உண்மை  எங்கே  விலை  போயிற்று எனத்  தேடுவேன்   gandi
    நேர்மை எங்கே என்று எல்லோரிடத்திலும் கேட்பேன்
    எளிமை எங்கே எனத் தேடி அலைந்து கொண்டிருப்பேன்
    தூய்மை  எங்கே என மனம் குமுறித் துடித்துப்போவேன்

    சத்தியத்திற்கே ஒரு சத்தியசோதனையா என எண்ணிடுவேன்
    ’அகிம்சை’  என்ற  வார்த்தை காணாமல் போயிற்றே  என்பேன்
    மனித நேயத்தை இந்நாட்டில் எங்கே என்று கேட்பேன்
    நான் சொன்னதெல்லாம் எங்கே போயிற்று என் நினைப்பேன்

    அன்று வெள்ளையரை வெளியேற்ற அமைதிப் போரைத் துவக்கினேன்
    இன்று மக்கள் தண்ணீருக்காகப் போராட்டத்தை நடத்துகிறார்களே
    எங்கும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்து ஆடுகிறதே
    நிலைகெட்ட  அரசாங்கத்தை நினைத்தால் தலை சுற்றுகிறதே

    நான் பாடுபட்டதெல்லாம் நாட்டின் விடுதலைக்காகவே
    இன்றைய தலைவர்கள் பாடுபடுவது தன் சொந்தங்களுக்காகவே
    என்னைத் தந்தையாக  நினைத்த  இந்திய மக்களே
    என் சொற்களை மந்திரமாக நினைப்பது எக்காலத்திலே?

    என் மதிப்பு, என் தலை ரூபாய் நோட்டின் முகப்பிலே
    என் கொள்கைகள் எல்லாம் வீசப்படுகின்றதே தெருவிலே
    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றேனே
    இன்று காணமுடியாமல் கடற்கரையில் கல்லாய் நிற்கின்றேனே!

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 46

    கே. ரவி

    என்ன, வக்கீல் புத்தியைக் காட்டி விட்டேனோ? கட்சி பேசுவது, சாட்சி சொல்வது என்றெல்லாம் பழக்க தோஷத்தில் எழுதி விட்டேனோ?

    சாட்சி சொல்வது என்றதும் என் நினைவில் நிழலாடும் ஒரு நண்பர், ஒரு பிரபல நடிகர். அவர் இப்பொழுது நம்மிடையே இல்லை; ஆனால், தமிழ் மக்கள் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கா இடம்பெற்று விட்டவர். அவர் என் கட்சிக்காரராகவும் வந்து சேர்ந்தார், 1980-களில். அவருடைய திரையரங்கம் குறித்து ஒரு வழக்கு ஏற்பட்டு, அதில் நான் அவருக்காக வாதாடும் வழக்குரைஞனாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். நாலைந்து நாட்கள் அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் ஆறுமுகம் முன்னிலையில் சாட்சிக் கூண்டில் நின்று சாட்சி சொன்னார். நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீதியரசரும், அந்த நடிகருடைய நகைச்சுவையான பதில்களைப் பதிவு செய்துகொண்டே, நிதானமாக ரசித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதி:

    எதிரியின் வக்கீல்: என் கட்சிக்காரர் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் காசோலை வழங்கினாரா?

    நடிகர் : வழங்கினார்.

    எதிரியின் வக்கீல்: காசோலையை என்ன செய்தீர்கள்?

    நடிகர்: வங்கியில் போட்டேன்.

    எதிரியின் வக்கீல்: காசோலை, காசாக மாறியதா?

    நடிகர்: மாறியது.

    எதிரியின் வக்கீல்: பிறகு என்ன செய்தீர்கள்?

    நடிகர்: என்ன்ன்ன செய்தேனா? காசைச் செலவழித்தேன்.

    நீதிமன்றத்தில் சிரிப்பொலி அடங்கச் சில நிமிடங்கள் ஆயிற்று. நீதியரசரும், ஏன், எதிர்க்கட்சிக்காரரின் வக்கீல், என் இனிய நண்பர், மூத்த வழக்கறிஞர் திரு.ஆர்.கிருஷ்ணசாமி உட்பட எல்லாரும் சிரித்துவிட்டனர். அதுவும், “என்ன்ன்ன செய்தேனா? காசைச் செலவழித்தேன்” என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமியின் பாணியில் நாகேஷ் அவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொன்னதும் யார்தான் சிரிக்காமல் இருந்திருக்க முடியும்?

    nageshநாகேஷ் போன்ற நல்ல நகைச்சுவை உணர்ச்சி மிக்க நடிகரைப் பார்ப்பது அரிது. அத்துடன் அவர் குழந்தை உள்ளம் படைத்தவர். தினமும் வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கருதி, மாலை நேரத்தில் என் அலுவலக மேலாளர் திரு.ஹரிஹரன் அவர்கள் வீட்டுக்குச் சென்று, அன்றைய கோர்ட் நடவடிக்கை குறித்துத் தெரிந்துகொள்வதோடு, ஹரியின் அம்மா செய்து தரும் தோசையைச் சாப்பிட்டு விட்டு, மறுநாள் அதுபற்றி என்னிடம் வானளாவப் புகழ்வார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் தினமும் ஒரு முறையாவது என்னைப் பார்ப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    ஒருமுறை ஹைதராபாத்தில் இருந்து அவரும் நானும் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லி ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலை விமானத்திலேயே மெல்லிய குரலில் மிக இனிமையாக அவர் பாடியதை நான் மறக்கவே முடியாது. அப்பொழுது அவர் சொன்னார், “ரவி சார்! (என்னை விட வயதில் மிகவும் மூத்த அவர், நான் எவ்வளவு சொல்லியும் அப்படித்தான் என்னை அழைத்தார்). இந்தப் பாடலைக் கேட்கும் போது பாடும் மங்கையின் கனவுக்குள்ளேயே நாம் சென்று விடுகிறோம் இல்லையா”.

    அன்று நாகேஷ் சொன்னதை இன்று நினைத்துக்கொள்கிறேன். இன்னொருவரின் கனவுக்குள், அதுவும், அனுபவக் களத்துக்குள் தன் ரசிகர்களை அழைத்துச் செல்லும் சாதனையைக் கவிஞர் கண்ணதாசன் எவ்வளவு சுலபமாகச் செய்து விட்டார்! இந்தப் பாடலாகட்டும், “கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்” என்ற பாடலாகட்டும், அவற்றில் ஒரு மங்கையின் ஏக்கம் மட்டுமா வெளிப்படுகிறது. எந்தப் புருஷோத்தமனின் முன் ஆண்கள், பெண்கள் ஆகிய நாம் அனைவருமே கன்னிப் பெண்களோ, அந்தக் கண்ணனிடம் ஒன்றிவிட வேண்டும் என்ற உயிரின் ஜீவ தாகத்தையன்றோ இந்தப் பாடல்கள் எதிரொலிக்கின்றன!

    “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்” என்ற பாடலைக் கண்ணதாசன் எழுதிய காலத்தில், தமிழகத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களே இல்லை. அவர் பாடிய எட்டடுக்கு மாளிகை என்பது இந்த எண்சாண் உடம்புதான் சாமி! அதில் சிறைப்பட்டிருக்கும் ஜீவனின் பிரிவுத் துயரத்தையும், பரம்பொருளோடு கூடிவிடத் துடிக்கும் ஏக்கத்தையும் அந்தப் பாடலில் அவர் பிழிந்து தரவில்லையா?

    வ.ரா. சொன்னது இப்பத்தான் ஜோராப் புரியுது! சாட்சி சொல்வது வேறு, கட்சி பேசுவது வேறு. நாகேஷ் சொன்னது சாட்சி. கண்ணதாசன் பேசியது கட்சி. கண்ணதாசனுக்கும் கட்சிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு; ஆனால் அது மாறிக்கொண்டே இருந்த அரசியல் தொடர்பு. அது வேறு கதை.

    என் இசையில் எஸ்.பி.பி. பாடி, 1994இல் வெளியான ‘தெய்வ கானாம்ருதம்’ ஒளிப்பேழை வெளியீட்டு விழாவில் நாகேஷ் கலந்துகொண்டார். ‘என் வக்கீல் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியுமா?’ என்ற கேள்வியோடு பேச்சைத் தொடங்கி நகைச்சுவையோடு பேசினார். அதே விழாவில் கலந்துகொண்டு சுகி சிவம் பேசும் போது, அந்த ஒலிப்பேழையில் இருந்த “கல்மனம் உருகிக் கனிவதும் எக்காலம் அகலாதா இந்த அகலிகையின் சாபம்” என்ற பாடலைக் குறிப்பிட்டு ஒரு கருத்துச் சொன்னார்: இராமன் திருவடி பட்டுச் சாபம் நீங்கி அகலிகை மீண்டும் பெண்ணானதும், இராமன் அவளைத் தாய் என்றே குறிப்பிடுகிறான். அன்னையைப் போன்ற இந்த மங்ககைக்கு எப்படி இந்த நிலை ஏற்பட்டது என்று இராமன் விஸ்வாமித்திர முனிவரிடம் வினவுவதாகக் கம்ப சித்திரம் பேசுகிறது:

    அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக

    கெளசல்யா, பத்து மாதம்தான் அவனைக் கருவில் சுமந்தாள். ஆனால், அகல்யா எத்தனை ஆண்டுகள் அவன் வரவுக்காக அவனை நெஞ்சில் சுமந்தாளோ! எனவே, அவளை இராம பிரான் தாயென்றது பொருத்தமே. இதுதான் சிவம் சொன்ன கருத்தின் சாரம். விழாவின் பரபரப்பில் நான் சிவம் பேச்சைச் சரிவர கவனிக்கத் தவறியிருந்தேன். ஆனால், விழா முடிந்த மறுநாள் நாகேஷ் என்னிடம் தொலைபேசியில் சிவம் சொன்ன இந்தக் கருத்தைச் சொல்லி வெகுவாகப் பாராட்டினார். நாகேஷுக்குள் கவிதை ரசனை ஒளிந்திருந்ததை மீண்டும் உணர்த்திய சம்பவம் இது.

    Semmangudiஅந்த விழாவில்தான் செம்மங்குடி சீனிவாச மாமா என்னைக் ‘கவிரவி’ என்று அழைத்தார். அன்று முதல் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவர் அப்படியே அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அமரராகும் வரை, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், வானவில் பண்பாட்டு மையம் நடத்திய ஒவ்வொரு பாரதி விழாவையும் முன்னின்று நடத்தித் தந்த அந்தப் பெரியவரை என்னால் மறக்கவே முடியாது.

    சாட்சி சொல்லியாகி விட்டது, கட்சி பேசியாகி விட்டது. தீர்ப்பு எப்போது சாமி? நல்ல தீர்ப்பு வருமா? இன்றைய கேள்வி இதுதானே!

    சரி, நுட்ப உடலானது கனவில் கூடத் திட்ப உடலை நீங்கிப் பறக்கிறது என்று சொன்னேனே, அதில் ஒரு சிறு கவனக் குறிப்பை இணைக்க வேண்டும். கனவில் ஓரளவு ஆழம் அல்லது ஓரளவு உயரத்துக்கு மட்டுமே நுட்ப உடல் போகிறது. அதற்குமேல் தாண்டிப் போக அதனால் முடிவதில்லை. அது, முற்றிலுமாகத் திட்ப உடலை நீங்கிப் போவதில்லை. நீண்ட கயிற்றால் கட்டப்பட்ட நாய் போல் கொஞ்சம் தொலைவுதான் அதன் சுதந்திரம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், என்னுடைய தனிப்பட்ட அனுபவக் களத்துக்குள்தான் கனவில் என் நுட்ப உடல் அல்லாடுகிறது. நான் அனுபவித்தே இராத எதையும் அது அங்கே எதிர்கொள்வதில்லை. என் அனுபவக் களத்தில் உள்ள, தொடர்பற்ற இரண்டு அனுபவங்களை வேண்டுமானால் தொடர்பு படுத்தி அது அனுபவிக்கலாமே தவிர, என் அனுபவக் களத்தைக் கடந்து செல்ல அதற்கு உரிமை இல்லை. அதாவது, பெரோலில் (Parole) வெளியாகும் கைதி போலத்தானே ஒழிய, பெய்லில் (Bail), அதாவது, பிணையில் வெளியாகும் கைதி போல இல்லை. மீண்டும் வக்கீல் புத்தி!

    ஆனால், கவிதை உதிக்கும் கணத்தில், ஒரு கணம், அது அந்தச் சுதந்திரம் பெறுகிறது. அந்த ஒரே கணத்தில், பல யுகக் கணக்குகளைக் கடந்தும், பல அண்டத் தொலைவுகளைக் கடந்தும் சென்று மீள்கிறது. அப்பொழுதுதான், அது வேறு யுகங்களில், வேறு பரிமாணங்களில் எதிர்ப்படும் அனுபவக் களங்களில் பிரவேசிக்க முடிகிறது.

    கொஞ்சம் இயல்பியல் பாடம் படிக்கலாம். அதுவும் ‘க்வாண்டம் ஃப்ஸிக்ஸ்’ (quantum physics) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துளிநிலை இயல்பியல் பாடம்! அணுக்கருவுக்குள் கருவின் ஈர்ப்புச் சக்தியை மீற முடியாமல் சிறைப்பட்டுச் சுழலும் சிற்றணுத் துகள் ஒன்று, மிகச் சிறிய, அதாவது, கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவு மிகச் சிறிய கால அவகாசத்துக்குக் கடனாக அபார சக்தி பெற்று, அதன் மூலம் கருவின் ஈர்ப்புச் சக்தியில் இருந்து விடுபட்டு, வெளிச்சென்று, திரிந்து விட்டு, அந்த கால அவகாசம் முடிவதற்குள் கடன் வாங்கிய சக்தியைத் திருப்பிக் கொடுத்து விட்டு, கருவின் அமைப்பு வட்டத்துக்குள் வந்து ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் சுழன்று கொண்டிருக்குமாம். நான் சொல்லவில்லை தம்பி, விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அது போல், நுட்ப உடல் மிகச் சிறிய கால அவகாசம் ஆன ஒரு கணத்துக்குள் அபார சக்தியைக் கடனாகப் பெற்றுத் தன் பிரக்ஞை வட்டத்தை விட்டு வெளியேகிப் பல யுகங்கள், பல அண்டத் தொலைவுகள் கடந்து சென்று அனுபவங்கள் அள்ளி வந்து மீண்டும் தன் நுட்ப உடலை ஆண்டு கொண்டு உழலும் என்பதை நான் சொல்லவில்லை தம்பி, சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    “ஆளை விடப்பா!”

    புத்தி சிகாமணிக்கே தலை சுற்றுகிறது!

    “ஒரு கணத்தில் பல யுகங்களா? இது சாத்தியமா?”

    அதுதானப்பா மனோவேகம். மனோன்மணிக்குத் தெரியும்.

    ஒருமுறை, 1978ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ரமணன் அப்போது பங்களூரில், (அப்போது அது பங்களூர் தாங்க!) ஹிண்டு பத்திரிகையில் வேலை பார்த்து வந்தான். அவன் அடிக்கடிக் கடிதங்கள் எழுதுவான், அதுவும் நீண்ட கடிதங்கள். எனக்கென்னவோ, கடிதங்கள் எழுதுவது மட்டும் அவ்வளவாகக் கைவரவில்லை. கவிதை எழுதி விடுவேன், ஆனால் கடிதங்கள் எழுதச் சோம்பல் படுவேன். நான் பதில் கடிதம் எழுதாதது பற்றி ரமணன் சற்று வருத்தப்பட்டு எழுதியிருந்தான். பதிலுக்கு நான் எழுதினேன், கடிதம் இல்லை, கவிதை! அதைக் கூடத் தொலைபேசியில்தான் அவனுக்குப் பாடிக் காட்டினேன் என்று ஞாபகம்:

    கடிதம் எழுதும் வழக்கம் இல்லை

    கவிதை எழுத முடியும் – வெறும்

    சேதி கேட்க ஜீவன் இல்லை

    தேம்பி அழத் தெரியும் – மனம்

    தேம்பி அழத் தெரியும்

    முடிவு கூடப் புலப்படாத பாதை யிந்த வாழ்க்கை – இதில்

    அன்பு நட்பு காதல் பாசம் அளவி லாத சேர்க்கை

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    ஒருக ணத்தில் உருவம் எய்தி ஒரு கணத்தில் மறையும் – மனம்

    உலகம் என்றும் யுகங்கள் என்றும் உருவகங்கள் புனையும்

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    வான மிங்கு மழை பொழிந்து வாழ்த்துகின்ற போதும் – இருள்

    வடிவ மொன்று மின்னலாய் ஒளி வழங்குகின்ற போதும் – இனிய

    கானம் ஒன்று கவிதையாகக் காதில் வந்து மோதும் – உன்

    ஞாபகத்தை உறுதி செய்யப் பாடல் ஒன்று போதும்

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    ஒரு கணம் போதும். மனம், உருவம் எடுக்கவும், உலகம், யுகங்கள் என்று பல உருவகங்கள் புனையவும்!

    பாரதி என்ன சொல்கிறான் கேட்கலாம். கண்ணபிரான் தன் சக்கராயுதத்தை எடுப்பது ஒரு கணம்தான்; அடுத்த கணமே, அதாவது, மறுகணமே, உலகத்தில் தர்மம் நிலைநாட்டப்படுமாம்.

    “அப்படியா சங்கதி,” சிகாமணி நீட்டி முழக்குகிறான். “ஓ, அதான், அர்ஜுனன் சுபத்திரையை, அதாவது கண்ணனின் தங்கையைக் கடத்தக் கண்ணனிடமே ஐடியா கேட்டப்ப, கன்ணன் ரெண்டு நிமிடம் எடுத்துக்கிட்டாரோ?”

    சிகாமணி சிண்டு முடியப் பார்க்கிறான். பாரதி படாரென்று அவன் முதுகில் தட்டி, ” அடே, உன் நிமிடக் கணக்கைக் குப்பையில் போடு. கண்ணன் கணக்கோ கணக் கணக்கு. அதாவது கணங்களால் ஆன கணக்கு, கன ஜோரான கணக்கு. அவனுடைய ஒரு கணத்துக்கும் அடுத்த கணத்துக்கும் நடுவில் இன்னொரு கணம் கிடையாது. இரண்டு கணங்களும் ஒரே கணம்.”

    சக்கரத்தை எடுப்ப தொருகணம்

    தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்

    இக்கணத்தில் இடைக்கணம் ஒன்றுண்டோ

    சிகாமணி தலையைப் பிய்த்துக் கொள்கிறான்: இதானே வேணாங்கறேன். 2 = 1. என்னப்பா தப்புக் கணக்குச் சொல்லித் தருகிறாய்!

    “தப்புக் கணக்கில்லை தம்பி. தப்பாத கணக்கு. இன்னும் புரியவில்லை என்றால் மேலும் சொல்கிறேன்” என்று சொல்லி விட்டு பாரதி மடமடவென்று கவிதை பொழிகிறான்:

    கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்

    கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்

    கணம்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்

    கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே

    கணம்தோறும் ஒருபுதிய வண்ணம் காட்டிக்

    காளிபரா சக்தியவள் களிக்கும் கோலம்

    கணம்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்

    கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்

    அப்பா, உண்மையிலேயே தலை சுற்றுகிறதப்பா.

    இந்தக் கணங்கள் அடுக்குத் தொடராய் இருந்தாலும், சுபத்திரையைக் கடத்தக் கண்ணன் இரண்டு கணங்கள் எடுத்துக் கொண்டாலும், சரணம் என்று ஒருவன் அவனே கதி என்று வந்து அடைக்கலம் கேட்டுவிட்டால் ஒரே கணத்தில் அவனுக்கு அபயம் அளிப்பவன் கண்ணன். அதையும் பாரதி சொல்கிறான்:

    பொன்னவிர் மேனி சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவதற்கே – இனி

    என்ன வழியென்று கேட்கில் உபாயம் இருகணத்தே உரைப்பான் – அந்தக்

    கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழியொன்றில்லேன் – வந்திங்கு

    உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒருகணத்தே உரைப்பான்

    நான் சமீபத்தில், அதாவது இரண்டாண்டுகளுக்கு முன்னால் எழுதிய பாடல் ஒன்று இப்பொழுது நினைவுக்குள் அடியெடுத்து வைக்கிறது!

    தோன்றிய பிறகு, வந்து சேர இரண்டு ஆண்டுகளா, எவ்வளவு மெதுவாக வருகிறது?

    அப்படிச் சொல்லாதீர்கள். அது வந்த வேகம் அசாத்திய வேகம். தான் தோன்றிய கணத்தையும் அது முந்திக் கொண்டு வந்து விட்டதாம். நான் சொல்லவில்லை. அதுவே சொல்கிறது. பாட்டைக் கேளுங்கள்:

    இந்தக் கணம் இன்னும் வரவில்லை – அதை

    முந்தி வந்த திந்தப் பாடல்

    சந்தம் எதுகை உவமை புலமை

    எந்த நகையும் அணிந்துகொள் ளாமல்

    முந்தி வந்த திந்தப் பாடல்

    வந்த கணத்தை வழியனுப்பி – வர

    விருக்கும் கணத்தை வரவேற்கச்

    சொந்தக் கணமொன் றில்லாமல் – அதி

    சூட்சுமமாய் ஒரு சொப்பனமாய்

    முந்தி வந்த திந்தப் பாடல்

    அந்தரமோ நிரந்தரமோ – இந்த

    அனுபவத் தையென்ன சொல்லுவது

    காந்தநிலை ஏகாந்தநிலை – இது

    காலத்தை யும்வெற்றி கொள்ளுவது

    இந்தக் கணம் என்றும் தொடருவது – பேர்

    ஒளியாய் நெஞ்சில் படருவது

    சரி தம்பி. இந்தக் கணத்துக்கு இவ்வளவுதான்! அடுத்த கணத்தில் சந்திப்போம்.

    (தொடரும்)

    Share
  • இந்தியாவின்​ முதல் பௌதிக விஞ்ஞான மேதை​ ​ ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்

    — சி. ஜெயபாரதன்.

     

     இந்தியாவின்

    ​ முதல் பௌதிக விஞ்ஞான மேதை​

    ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்

    Jagadish Chandra Bose -1

    ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng (Nuclear),  கனடா

    பாரத தேசத்தின் விண்ணலை முன்னோடி ஆராய்ச்சி விஞ்ஞானி

     

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நான்கு சிறப்பான நிபுணர்கள் கம்பியில்லாத் தொடர்பை உலகில் ஏற்படுத்த இராப் பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்! இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் ​ரஷ்ய ​விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]. இந்தியாவில் பெளதிக விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ் [Jagadis Chandra Bose].  மெய்யாக போஸ்தான் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அனைவருக்கும் முன்பாக அமைத்துக் காட்டியவர். அதிர்ஷ்ட தேவதை அருட்கண் திறந்து ஆசீர்வதிக்கா விட்டாலும், இந்தியாவின் விஞ்ஞான நிபுணர் ஜகதிஷ் சந்திர போஸ்தான் வானொலித் தொடர்பு ஆய்வில் முதலில் வெற்றி பெற்றவர் என்பது விஞ்ஞான வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும்!

    நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. ராமனுக்கும் முன்பாகவே விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்கிக் கம்பியில்லாத் தொலைத் தொடர்பை உலகில் உண்டாக்கிய நான்கு முன்னோடி வல்லுநர்களில் ஒருவராகப் பெயர் எடுத்தவர் ஜகதிஷ் சந்திர போஸ். அத்துடன் பொது வினை புரியும் அநேக நுண்ணலைச் சிறு சாதனங்களைப் [Microwave Components] படைத்தவர். அவர் மில்லி மீட்டர் நீளலைகளில் [Millimeter Wavelengths] ஆய்வு செய்து பிறரை விட 50 ஆண்டுகள் முன்னதாக இருந்தார்! ரஷ்ய விஞ்ஞானி போபாவுக்கும் முதலாக, இங்கிலாந்தில் மார்க்கோனி [மே மாதம் 1897] படைப்பதற்கு முன்பாக, போஸ் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அமைத்துக் காட்டினாலும், இறுதியில் நோபெல் பரிசு பெற முடியாது சரியான சமயத்தில் இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞானி, ஜகதீஸ் சந்திர போஸின் உன்னத விஞ்ஞான ஆக்கம் உலகின் கண்களுக்குத் தென்படாமலே போனது!

    இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞான மேதை

    இந்தியாவில் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் தந்தை என்று சிலரால் போற்றப்படுவர் ஜகதிஷ் சந்திர போஸ்! 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்ற ஸர்.சி.வி. ராமன் (1888-1970) காலத்துக்கும் சிறிது முற்பட்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு பாரதத்தில் விதை யிட்டவர், J.C. போஸ். செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகளைப் போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் போஸ்! தாவரவியல் விஞ்ஞானத்தில் ஆழ்ந்து பயிர் இனங்களின் நுண்ணிய​உணர்ச்சியைக் கருவிகள் மூலம் பதிவு செய்து மனிதர், விலங்குகளைப் போன்ற உயிர் இனங்களை ஒத்துள்ளது என்று கண்டு பிடித்தவர் போஸ்! விலங்குகளின் தசைகளுக்கு இணையாக தாவரவியல் தசைகளும் [Plant Tissues] உள்ளன என்று எடுத்துக் காட்டியர், போஸ்! ரேடியோ மார்கோனியைத் தெரிந்த அளவுக்கு, ஸர் சி.வி. ராமனை அறிந்த அளவுக்கு, தேசீய வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் புரிந்த கொண்ட அளவுக்கு இந்தியருக்கும், உலகினருக்கும் பாரதத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸைப் பற்றிப் பூர்வமாகத் தெரியாது!

    பதினெட்டாம் நூற்றாண்டில் மின்சக்தி யுகம் [Electricity Age] தோகை விரித்ததும் கம்பியில்லாத் தொடர்பைப் [Wireless Communication] பற்றி வேட்கை உண்டாகி அடுத்து நூறாண்டுகள் விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணர்களும் முயன்று வந்திருக்கிறார்கள்! 1795 டிசம்பர் 16 ஆம் தேதி ஸ்பெயின் தேசத்து விஞ்ஞானி, ஸால்வா [Salva] ஸ்பெயின் விஞ்ஞானக் கழகத்தில் [Spanish Academy of Sciences] தொலை வரைவுக்கு மின்சக்தி உபயோகம் [On the Application of Electricity to Telegraphy] என்னும் புதிய கருத்து வெளியீட்டைச் சமர்ப்பித்து ரேடியோ சாதனத்திற்கு முதலில் விதை ஊன்றினார். ஆனால் தீவிர முயற்சிகள் 1830 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆரம்பமாயின! விஞ்ஞான வல்லுநர்கள் பலர் அத்துறையில் மூழ்கி 1895 ஆம் ஆண்டில் ஓரளவு வெற்றி பெற்று முதலில் சிறிதளவு தூரத்துக்கு ரேடியோ வானலையை அனுப்பிக் காட்டினர்!

    Marconi-1

    இத்தாலிய விஞ்ஞானி மார்கோனி

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நான்கு சிறப்பான நிபுணர்கள் கம்பியில்லாத் தொடர்பை உலகில் ஏற்படுத்த இராப் பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்! இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]. இந்தியாவில் பெளதிக விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ் [Jagadis Chandra Bose]. போட்டியில் எல்லோரையும் முந்திக் கொண்டதாகக் கருதப்பட்டு மார்க்கோனியும், கார்ல் பிரெளனும் 1909 இல் நோபெல் பரிசைத் தட்டிக் கொண்டு போய்ப் பகிர்ந்து கொண்டார்கள்! மெய்யாக போஸ்தான் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அனைவருக்கும் முன்பாக அமைத்துக் காட்டியவர். அதிர்ஷ்ட தேவதை அருட்கண் திறந்து ஆசீர்வதிக்கா விட்டாலும், இந்தியாவின் விஞ்ஞான நிபுணர் ஜகதிஷ் சந்திர போஸ்தான் வானொலித் தொடர்பு ஆய்வில் முதலில் வெற்றி பெற்றவர் என்பது விஞ்ஞான வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும்! அமெரிக்காவின் மின்துறை மின்னியல் பேரவை IEEE [The Institute of Electrical & Electronics Engineers] J.C. போஸ் ரேடியோ சாதனத்தைக் கண்டு பிடித்த முன்னோடிகளில் [Pioneers of Radio] ஒருவர் என்று மட்டுமே சமீபத்தில் சான்றிதழ் கொடுத்துள்ளது!

     Popov Radio Equipment

    அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]

    இந்தியாவில் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் தந்தை என்று சிலரால் போற்றப்படுவர் ஜகதிஷ் சந்திர போஸ்! 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்ற ஸர்.சி.வி. ராமன் (1888-1970) காலத்துக்கும் சிறிது முற்பட்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு பாரதத்தில் விதை யிட்டவர், J.C. போஸ். செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகளைப் போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் போஸ்! தாவரவியல் விஞ்ஞானத்தில் ஆழ்ந்து பயிர் இனங்களின் நுண்ணிய ​உணர்ச்சியைக் கருவிகள் மூலம் பதிவு செய்து மனிதர், விலங்குகளைப் போன்ற உயிர் இனங்களை ஒத்துள்ளது என்று கண்டு பிடித்தவர் போஸ்! விலங்குகளின் தசைகளுக்கு இணையாக தாவரவியல் தசைகளும் [Plant Tissues] உள்ளன என்று எடுத்துக் காட்டியர், போஸ்! ரேடியோ மார்கோனியைத் தெரிந்த அளவுக்கு, ஸர் சி.வி. ராமனை அறிந்த அளவுக்கு, தேசீய வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் புரிந்த கொண்ட அளவுக்கு இந்தியருக்கும், உலகினருக்கும் பாரதத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸைப் பற்றிப் பூர்வமாகத் தெரியாது!

    Radio Inventers

    ஹெர்ட்ஸ், போபாவ் & மாக்ஸ்வெல்

    ஜகதிஷ் சந்திர போஸின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு

    1858 நவம்பர் 30 ஆம் தேதி வங்காளத்தில் மைமென்சிங் [Mymensigh, Bengal] என்னும் ஊரில் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்தார். இருபத்திரண்டு வருடங்கள் இந்தியாவின் பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பாகக் கல்வி கற்று மேற்கொண்டு லண்டன் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில, 1880 இல் இங்கிலாந்துக்குச் சென்றார். ஓராண்டுக்குள் போஸ் இயற்கைவியல் விஞ்ஞானத்திற்கு [Natural Science] உபகாரச் சம்பளம் பெற்றுக் கிறித்துவக் கல்லூரியில் படிக்கக் கேம்பிரிடிஜ் பல்கலைக் கழகத்திற்குத் தாவினார். அங்குள்ள அவரது ஆசிரியர்களில் குறிப்பிடத் தக்கவர், பேராசிரியர் ஜான் ராலே [John W.S. Rayleigh (1842-1919)]. அவரிடம் கற்ற கல்விப் பயிற்சி போஸின் பிற்கால விஞ்ஞானப் படைப்புகளுக்கு மிகவும் பேராதரவாய் இருந்தது. போஸ் 1884 இல் கேம்பிரிட்ஜில் B.A. பட்டத்தையும், லண்டன் பல்கலை கழகத்தில் B.Sc. பட்டத்தையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு மீண்டார். கல்கத்தாவில் பிரசிடென்ஸிக் கல்லூரியில் பெளதிகத்தில் நுழைவுப் பேராசிரியர் பதவியை 1885 இல் ஒப்புக் கொண்டு வேலையில் சேர்ந்தார். அப்பணியில் இருந்த போது, அவரது முன்னாள் பிரிட்டிஷ் பேராசிரியர் ஜான் ராலேயின் சீரிய கல்வி முறைகளைக் கையாண்டு, விஞ்ஞானக் காட்சிச் சாதனங்களை மாணவர்களுக்கு இயக்கிக் காட்டி, கைதேர்ந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றார். அவரிடம் மாணவராகப் படித்தவர்களில் பலர் பின்னால் பெரும் பெளதிக மேதையாக பெயர் பெற்றனர்.

    Popov & Marconi Receivers

    ஸர் ஆலிவர் லாட்ஜ் [Sir Oliver Lodge] எழுதிய ஹையன்ரிச் ஹெர்ட்ஸ் & பின்வந்தவர்கள் [Heinrich Hertz & His Successors] என்னும் நூலை ஆழ்ந்து படித்து, மின்காந்தக் கதிர்வீச்சின் [Electromagnetic Radiation] தன்மைகளைப் படித்து, ஹெர்ட்சியன் அலைகளைப் [Hertzian Waves] பற்றி விபரமாக அறிந்து கொண்டார். அதன் பிறகு 1894 இல் கல்லூரியில் ஒர் ஒதுக்குப் புறத்தை அறையாக மாற்றிக் கதிரலை ஆய்வுச் சோதனைகள் [Refraction, diffraction, & Polarization] பலவற்றைத் தனியாகச் செய்ய ஆரம்பித்தார். ரேடியோ சிற்றலைச் சோதனைகளுக்கு அலையீர்ப்பியை [Receiver] உண்டாக்க காலினாப் படிகத்தை [Galena Crystal] விருத்தி செய்து முதன் முதலில் பயன்படுத்தினார். கல்கத்தாவில் 1898 இல் ஜெ.சி. போஸ் தான் முதலில் மில்லி மீட்டர் நீளலைகளை [Millimeter Wavelengths] உண்டாக்கிப் புரிந்த ஆராய்ச்சியை லண்டன் ராஜீய விஞ்ஞானக் கூடத்திற்கு [Royal Institution, London] எழுதி அனுப்பினார். 1904 ஆம் ஆண்டு அவரது, முதல் ‘மின்காந்தக் கதிரலை உளவிப் [Detection of Electromagnetic Radiation] படைப்புக்குக் காப்புரிமை [Patent Rights] வழங்கப் பட்டது!

    கல்லூரியில் 1915 வரைப் பேராசிரியராகப் பணி புரிந்து விலகி, 1917 இல் கல்கத்தாவில் போஸ் ஆய்வுக் கூடத்தை ஆரம்பித்து, அவர் இறக்கும் வரை [1937] அதன் ஆணையாளராக இருந்தார். 1920 இல் இங்கிலாந்து ஸர் பட்டத்தையும், F.R.S. [Fellow of Royal Society] கெளரவ அங்கீகாரத்தையும் J.C. போஸூக்கு அளித்தது.

    Bose microwave apparatus

    ஜகதிஷ் சந்திர போஸ் புரிந்த விஞ்ஞானச் சாதனைகள்

    (1894-1899) உலகின் பல்வழித் தொடர்பு [Multimedia Communication] முறையைத் துவக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஜகதிஷ் சந்திர போஸ். முதலில் இந்தியாவில் ஹெர்ட்ஸியன் அலைகளைப் [Hertzion Waves] பற்றிய சோதனை ஆராய்ச்சிகளை ஆரம்பித்து, மிகச் சிறிய 5 மில்லி மீட்டர் ரேடியோ அலைகளை [Radio Waves] உண்டாக்கிக் காட்டியவர், போஸ். தொடர்புக் கம்பமுடன் தூக்கிச் செல்லும் சாதனத்தைச் [Portable Apparatus with Antenna] செய்து, 5 mm அலைகளின் ஒளிக்காட்சித் [Optical Properties] தன்மைகளைக் கண்டு ஆராய்ந்தவர். தற்கால நுண்ணலைப் பொறியல் துறைக்கு [Microwave Engineering] அது அடிகோலியது. முதல் கம்பியில்லாத் தொலைத் தொடர்பைப் போஸ் 1895 ஜனவரியில் கல்கத்தாவில் செய்து காட்டினார். மின்காந்த அலைகளைப் பயன்படுத்தித் தூரத்திலிருந்து தூண்டி, கம்பி யில்லாமல் ஒரு மின்சார மணியை அடிக்கச் செய்தார்! அடுத்து அம்முறையில் வெடி மருந்தை வெடிக்கச் செய்தார்! 1896 இல் இங்கிலாந்தின் தினச் செய்தித்தாள் [Daily Chronicle], ‘ஆக்க நிபுணர் J.C. போஸ் ஏறக்குறைய ஒரு மைல் தூரம் கம்பி யில்லாமல் மின்னலைச் சமிக்கைகளை அனுப்பித் தொலைத்தொடர்பு செய்துள்ளார்! இது முதலில் செய்த ஓர் ஒப்பற்ற உயர்ந்த சாதனை! ‘ என்று பறை சாற்றியது! அரைக்கடத்தியைப் [Semiconductor] பயன்படுத்தி முதலில் அமைக்கப் பட்ட அவரது காலினா உளவியும் [Galena Detector] ஒளி மின்னழுத்தச் சிமிழும் [Photovoltaic Cell] 1904 இல் அமெரிக்கக் காப்புரிமை [U.S. Patent No.755840] பெற்றன.

    (1899-1907) கோஹெரர் உளவி [Coherer Detector] பற்றி முதற்படி ஆய்வு செய்து விலங்கினம், தாவர இனம், தாதுக் கலப்புத் திரவங்கள் [Inorganic Compounds] ஆகிய வற்றில் எழும் எல்லா விதத் தூண்டலையும் நுகர்ந்து அவை மின்சாரப் பதிவு [Electric Response to Stimulation] செய்வதைக் கண்டு பிடித்தார். உயிரினப் பெளதிக [Biophysical Phenomena] நிகழ்ச்சிகளின் தாது மாதிரிகளைத் [Inorganic Models] தயாரித்துத், தாவர இனம், விலங்கினத்தின் சதைகள் [Tissues] அனுப்பும் தூண்டலை மின்சார, யந்திரவியல் முறைகளில் பதிவு செய்தார். அம்முறையில் மனிதரின் கண்ணொளி, மூளையின் நினைவுச் சரங்கள் [Vision & Memory Units of Brain] ஆகியவற்றில் எழும் அதிர்வு அலைகளையும் ஆராய்ந்தார்.

    Microwave Spectrometer

    (1907-1933) தாவர இனங்களின் உணர்ச்சி முறைகளை ஆராய்ந்து, தாதுப் பண்டம், விலங்கினம் ஆகிய இரண்டின் உணர்ச்சிகளுக்கும் அவை இடைப்பட்டது என்று கண்டு பிடித்தார். போஸ் தனது ஆராய்ச்சிகளைச் செய்ய பலவிதக் கருவிகளை ஆக்கினார். மிக நுணுக்கமான நகர்ச்சி

    ​ ​

    களைப் பதிவு செய்யும் சுய இயக்கக் கருவிகள் காயம் பட்டத் தாவரப் பயிர்கள் உண்டாக்கும் மென்மையான உணர்ச்சியை வரைந்து காட்டின. J.C. போஸ் 1917 நவம்பர் 30 ஆம் தேதியில் தனது போஸ் ஆய்வுக் கூடத்தை [Bose Institute] ஆரம்பித்து வைத்தார். அன்று ‘உயிரினத்தின் கூக்குரல் ‘ [The Voice of Life] என்னும் சொற்பொழிவை நிகழ்த்தி, போஸ் ஆய்வுக் கூடத்தை பாரத நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்.

    நூறாண்டுகளுக்கு முன்பே கல்கத்தாவில் J.C. போஸ் மில்லி மீட்டர் மின்னலையை உண்டாக்கி, அவற்றை உளவிக் காணும் [Generation & Detection of Millimeter Waves] ஆய்வுகளைச் செய்து, அவ்வலைகளின் மூலம் பொருள்களின் குணாதிசயங் களையும் குறிப்பிட்டு எழுதினார். இக்காலத்தில் பயன்படும் நமக்குப் பழக்கமான நுண்ணலைச் சிறு கலன்கள் [Microwave Components], அலை வழிகாட்டி [Waveguide], கொம்பு மின்கம்பம் [Horn Antenna], போலரைஸர் [Polarizers], மின்தடுக்கி லென்ஸ் [Dielectric Lenses], முப்பட்டை [Prisms], மின்காந்த அலைவீச்சை உளவும் அரை மின்கடத்திகள் [Semconductor Detectors of Electromagnetic Radiation] ஆகிய யாவற்றையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் போஸ் தன் ஆராய்ச்சிகளுக்குப் பயன் படுத்தி யிருக்கிறார். அவை யாவும் இப்போது அவர் அமைத்த போஸ் ஆய்வுக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

    Bose lecturing

    போஸ் அமைத்த ரேடியோ சாதனங்களின் கண்காட்சி மாளிகை

    போஸ் தான் அமைத்த கருவிகளைக் கல்கத்தாவின் காட்சி மாளிகையில் [Bose Museum] பலர் காண வைத்துள்ளார். 1986 இல் காட்சி மாளிகை புதிய இடத்திற்கு மாறியது. அங்கே அடிக்கடி நுண்ணலைப் பொறியியல் [Microwave Technology] பற்றிப் பேரவைச் சொற்பொழிவுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய அரசின் மின்னியல் துறையின் [Dept of Electronics] ஆதரவில் இயங்கும், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் மின்னியல் பொறியியல் கூடத்தின் வானலைப் பெளதிக மாணவர்கள் செய்முறைப் பயிற்சிக்காக போஸ் காட்சி மாளிகைக்குப் போய் வருகிறார்கள்.

    போஸ் எழுதிய விஞ்ஞான நூல்கள்: உயிருள்ள, உயிரில்லாப் பிறவிகளின் உணர்வெழுச்சி [Response in the Living & Non-Living (1902)], தாவரங்களின் நரம்பு இயக்க முறைகள் [The Nervous Mechanism of Plants (1926)].

    அவரிடம் மாணவராக இருந்தவர்களில் சிலர் பின்னால் பெரும் பெளதிக மேதைகளாக உலகப் புகழ் அடைந்தனர். சிறப்பாக போஸான் [Boson] என்னும் அடிப்படைத் துகளைக் கண்டு பிடித்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களுடன் இணைந்து புகழ் பெற்ற ‘போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் ‘ [Bose-Einstein Statistics] கோட்பாடை உண்டாக்கிய சத்யேந்திர நாத் போஸ் [Satyendra Nath Bose (1894-1974)] அவரிடம் கற்ற விஞ்ஞானி. போஸான் போஸ் [Boson Bose] என்றும் உலகில் அழைக்கப்படும் எஸ். என். போஸ், பேராசிரியர் ஜகதிஷ் சந்திர போஸின் ஒப்பற்ற மாணவர்!

    Bose Statue

    குடத்து விளக்காய் ஒளிவீசிய ஆசீய தீபம் அணைந்தது!

    1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஜகதிஷ் சந்திர போஸ் தனது 79 ஆவது வயதில் பீஹாரில் கிரிடி [Giridih, Bihar] என்னும் ஊரில் காலமானார். அவர்தான் ரேடியோ அலைகளைத் தேட முதன் முதலில் மின்னியல் அரைக்கடத்தி இணைப்பைப் [Electronic Semiconductor Junction] பயன் படுத்தியவர். 1977 இல் திடப் படிக மின்னியல் [Solid-state Electronics] துறைக்கு நோபெல் பரிசு பெற்ற ஸர் நெவில் மாட் [Sir Neville Mott], ‘ஜகதிஷ் சந்திர போஸ் P-type, N-type அரை மின்கடத்திகள் [P-type, N-type Semiconductors] தோன்றப் போவதை எதிர்நோக்கி, அவரது காலத்திற்கும் முன்பாக அறுபது ஆண்டுகள் முன்னேறி இருந்தார் ‘ என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.

    நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. ராமனுக்கும் முன்பாகவே விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்கிக் கம்பியில்லாத் தொலைத் தொடர்பை உலகில் உண்டாக்கிய நான்கு முன்னோடி வல்லுநர்களில் ஒருவராகப் பெயர் எடுத்தவர் ஜகதிஷ் சந்திர போஸ். அத்துடன் பொது வினை புரியும் அநேக நுண்ணலைச் சிறு சாதனங்களைப் [Microwave Components] படைத்தவர். அவர் மில்லி மீட்டர் நீளலைகளில் [Millimeter Wavelengths] ஆய்வு செய்து பிறரை விட 50 ஆண்டுகள் முன்னதாக இருந்தார்! ரஷ்ய விஞ்ஞானி போபாவுக்கும் முதலாக, இங்கிலாந்தில் மார்க்கோனி [மே மாதம் 1897] படைப்பதற்கு முன்பாக, போஸ் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அமைத்துக் காட்டினாலும், இறுதியில் நோபெல் பரிசு பெற முடியாது சரியான சமயத்தில் J.C. போஸின் உன்னத விஞ்ஞான ஆக்கம் உலகின் கண்களுக்குத் தென்படாமலே போனது!

    *****************************

    1.  http://en.wikipedia.org/wiki/Jagadish_Chandra_Bose

    2.  http://www.conferencecallsunlimited.com/history-calling/

    3.  http://www.iloveindia.com/indian-heroes/jagadish-chandra-bose.html

    4.  http://www.ieeeghn.org/wiki/index.php/Jagadish_Chandra_Bose

    5.   http://en.wikipedia.org/wiki/Invention_of_radio

    +++++++++++++++++++++

    S. Jayabarathan  [jayabarathans@gmail.com]  October ​5, 2014.

     

     

    Share
  • என்ன விலை அழகே!!!

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    kaathalar thinam

     

    கவிதை என்னும் கனிமொழியில் தினம் உருகிக் கிடப்பதால் வாலி அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் முத்து முத்தாகவு உதிர்கின்றன!  அழகு என்னும் ஆபரணத்தை மங்கை அணிந்து வரும் போதிலே அதை வர்ணிக்க வேண்டும் என்றால் சொல்லவும் வேண்டுமோ? “பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே!” என்று  வார்த்தையில் வரைந்தளிக்க வாலியால்தான் முடிகிறது! காதலர் தினம் பாடல் தினம்தோறும் பாடலாம் போல்!

    படைத்தான் இறைவன் உனையே
    மலைத்தான் உடனே அவனே
    அழகைப் படைக்கும் திறமை முழுக்க
    உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது
    விடிய விடிய மடியில் கிடக்கும்
    பொன் வீணை உன் மேனி
    மீட்டட்டும் என் மேனி
    விரைவினில் வந்து கலந்திடு
    விரல்பட மெல்லக் கனிந்திடு

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இனிய இசையில் அழகைச் சுமந்துவரும் ஆனந்த பைரவிகள்! ஒவ்வொரு பாடலிலும் உயிர்ப்பு விசைகலந்து அளித்துள்ளார் போலும்.. வரிகள் எவ்வண்ணம் மின்னுகின்றனவோ அவ்வண்ணமே இசையும் இங்கே ஆடிப்பாடி.. வருகிறது!

    பல்லவன் சிற்பிகள் அன்று
    பண்ணிய சிற்பத்தில் ஒன்று
    பெண்ணென வந்தது இன்று சிலையே
    பல்லவன் சிற்பிகள் அன்று
    பண்ணிய சிற்பத்தில் ஒன்று
    பெண்ணென வந்தது இன்று சிலையே
    உந்தன் அழகுக்கில்லை ஈடு
    தினம் தினம் உனை நினைக்கிறேன்
    துரும்பென உடல் இளைக்கிறேன்
    உயிர் கொண்டு வரும் பதுமையே
    உனைவிட இல்லை புதுமையே
    உன் புகழ் வையமும் சொல்ல
    சித்தன்ன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
    உன் புகழ் வையமும் சொல்ல
    சித்தன்ன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல
    நல்ல நாள் உனைச்சேரும் நாள்தான்

    வற்றாத ஜீவநதிபோல் வரிகள் விழ எக்காலமும் கேட்டு மயங்கும் இசையை ரகுமான் தர இயக்குனர் கதிர் இயக்கத்தில் காதலர் தினம் கானங்கள் காலகாலம் நிலைக்கும் என்பது கன்னித்தமிழின் தீர்ப்பு! உயிர்கொண்ட ஓவியமாய் உலவி வரும் பேரழகை உள்ளத்தில் வாங்கி கவிதைமலர்களால் அலங்கரித்து வாலி அவர்கள் செய்திருக்கும் பணி பாராட்டத்தக்கது! இக்காலத்தில் இதுபோன்ற பாடலா என்று கேள்வியெழ வைத்தது.  பிறகுதான் கவிஞர் வாலியின் கைவண்ணத்தில் தெரிந்தது! காலகாலமாய் கவிஞர்கள் காதலை எழுதிக்குவித்திருந்தாலும் இன்னும் எழுத இதோ இருக்கிறது என்று காட்டியிருக்கும் அற்புதக்கவிஞர் வாலியின் விரல்களுக்கு நன்றி! நல்லதோர் பாடலை நற்றமிழ் புனைந்து நடமாடவிட்டிருக்கும் அத்தனைக் கலைஞரகளுக்கும் உள்ளத்து நன்றிகளை உரித்தாக்குகின்றேன்!

    http://www.youtube.com/watch?v=K7lE7n_mc1I
    காணொளி: http://www.youtube.com/watch?v=K7lE7n_mc1I

    படம்: காதலர் தினம்
    பாடல்: வாலி
    இசை: AR ரஹ்மான்
    பாடியவர்: உன்னி மேனன்
    …………………………………………………………..
    என்ன விலை அழகே …
    என்ன விலை அழகே …
    சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
    விலை உயிர் என்றாலும் தருவேன்
    இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

    என்ன விலை அழகே
    சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
    விலை உயிர் என்றாலும் தருவேன்
    இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
    ஒரு மொழியில்லாமல்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்..
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்..

    படைத்தான் இறைவன் உனையே
    மலைத்தான் உடனே அவனே
    அழகைப் படைக்கும் திறமை முழுக்க
    உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
    விடிய விடிய மடியில் கிடக்கும்
    பொன் வீணை உன் மேனி
    மீட்டட்டும் என் மேனி
    விரைவினில் வந்து கலந்திடு
    விரல்பட மெல்லக் கனிந்திடு
    உடல் மட்டும் இங்கு கிடக்குது
    உடன் வந்து நீயும் உயிர் கொடு
    பல்லவன் சிற்பிகள் அன்று
    பண்ணிய சிற்பத்தில் ஒன்று
    பெண்ணென வந்தது இன்று சிலையே
    பல்லவன் சிற்பிகள் அன்று
    பண்ணிய சிற்பத்தில் ஒன்று
    பெண்ணென வந்தது இன்று சிலையே
    உந்தன் அழகுக்கில்லை ஈடு
    என்ன விலை அழகே
    சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
    விலை உயிர் என்றாலும் தருவேன்
    இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ..
    ஒரு மொழியில்லாமல்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

    உயிரே உனையே நினைந்து
    விழி நீர் மழையில் நனைந்து
    இமையில் இருக்கும் இரவு உறக்கம்
    கண் விட்டுப் போயாச்சு
    காரணம் நீயாச்சு
    நிலவு எரிக்க நினைவு கொதிக்க
    ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
    தினம் தினம் உனை நினைக்கிறேன்
    துரும்பென உடல் இளைக்கிறேன்
    உயிர் கொண்டு வரும் பதுமையே
    உனைவிட இல்லை புதுமையே
    உன் புகழ் வையமும் சொல்ல
    சிற்றென்ன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
    உன் புகழ் வையமும் சொல்ல
    சிற்றென்ன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல லல்லலா
    உன்னை நாளும் சேரும் நாள்தான்

    என்ன விலை அழகே
    என்ன விலை அழகே
    சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
    விலை உயிர் என்றாலும் தருவேன்
    இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
    ஒரு மொழியில்லாமல்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்..
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ..
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ..

    vaali(1)ar-rahman-dc-0306_0_0_0_0_1unnimenonKadhalar_Dhinam_DVD_Cover

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
    கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலன்;
    ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
    கோவிந்தன் கொற்றவைக் கூத்து”….கிரேசி மோகன்….

    “அங்கதன்வாள் ஏந்தல், அனுமனிரு தாள்பிடித்தல்,
    தங்கமுடி தம்பியர் தாங்குதல், -மங்கல
    கங்கைநீ ராட்டலில்லை ,கம்பன்பா ராட்டலில்லை
    கங்கியாலா னான்கண்ணன் கோன்”….கிரேசி மோகன்….

    கோன் -அரசன்….
    கங்கி -கண்ணனின் ஆஸ்தான பசு….

    பண்டிதர்களும் ,பணக்காரர்களும் காத்திருக்க பழனிச் சாமியுடன் பிச்சை எடுத்து பகவான் ரமணர் தனது கரத்தை மண்டையில் தேய்த்தபடி சொன்னார் “Now I Feel Like A King” என்று….விடுதலை பெற்றவனே வீரன் ….வீரனே வேந்தன்….Being Simple தான் பட்டாபிஷேகம்….தானே தானாய் நிற்றல்….கண்ணனும் ரமணரும் Cousins….

    “பிச்சை எடுத்துண்டு பின்மண்டை உச்சியில்
    மிச்சத்தை தேய்த்த மகான்ரமணர் -RICHசானார்;
    கொட்டாயில் பாலாடை கட்டிய கண்ணனின்
    பட்டா பிஷேகம்SIM PLE”….கிரேசி மோகன்….

    Share