நான் அறிந்த சிலம்பு – 138
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை
அடிகளின் அறவுரையைக் கேட்டுக் கோவலன் வழிநடத்தல்
வழியில் நடந்ததால் துயருற்ற
கண்ணகியிடம் கோவலன்
“இக்கொடிய வழியில்
புலிகள் திரியும்
ஆந்தைகள் அலறும்
கரடியும் சத்தமிடும்
இதற்கெல்லாம் அஞ்சாமல் செல்வாயாக”
இப்படிக்கூறி வளைந்த வளையலை அணிந்த
அவள் கைகளைத் தன் தோள்மேல் சார்த்தி
அன்புடன் அவளை அழைத்துச் சென்றான்.
வழிநெடுகக் கவுந்தியடிகளின்
பாவமொழிகள் நீங்கிய குற்றமற்ற
அறவுரைகளைக் கேட்டுக் கொண்டே,
அவர்கள் கடப்பதற்கு அரிய
பல வழிகளைக் கடந்து சென்றனர்.
வரிநவில் அந்தணர் வாழும் பதியை வைகறையின் சார்தல்
வெம்மை நிலைபெற்று விளங்கும் காலத்தில்
மூங்கில் வெம்மையில் கரிந்து கிடக்கும்
காட்டின் இடையில்
காட்டுக்கோழிகள் கூவிக்
கதிரவனின் வரவை அறிவித்தன.
வரிப்பாடல் பாடும் கொள்கையுடையவராய் ஆனால்
அந்தக் கொள்கையிலிருந்து தற்போது வழுவியவராய்,
முப்புரி நூல் அணிந்த அந்தணர்கள் வாழ்ந்துவந்த
ஓர் ஊரினை அம்மூவரும் சென்றடைந்தனர்.
கோவலன் நீர்நிலை நோக்கிச் செல்லுதல்
அந்த காலைப் பொழுதினில்
கண்ணகியுடன் கவுந்தியடிகளையும்
ஒரு பாதுகாப்பான இடத்தில் அமரச் செய்துவிட்டு,
முள்ளிட்டுக் கட்டப்பெற்ற வேலியைக் கடந்து
நீர் கொண்டு வருவதற்காகத்
தொலைவிலிருந்த நீர்நிலையிடத்துக்
கோவலன் சென்றான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 30 – 43
http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–
படத்துக்கு நன்றி:
http://www.howtogeek.com/92364/peaceful-early-morning-by-the-riverside-wallpaper/