கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
“பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலன்;
ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
கோவிந்தன் கொற்றவைக் கூத்து”….கிரேசி மோகன்….
“அங்கதன்வாள் ஏந்தல், அனுமனிரு தாள்பிடித்தல்,
தங்கமுடி தம்பியர் தாங்குதல், -மங்கல
கங்கைநீ ராட்டலில்லை ,கம்பன்பா ராட்டலில்லை
கங்கியாலா னான்கண்ணன் கோன்”….கிரேசி மோகன்….
கோன் -அரசன்….
கங்கி -கண்ணனின் ஆஸ்தான பசு….
பண்டிதர்களும் ,பணக்காரர்களும் காத்திருக்க பழனிச் சாமியுடன் பிச்சை எடுத்து பகவான் ரமணர் தனது கரத்தை மண்டையில் தேய்த்தபடி சொன்னார் “Now I Feel Like A King” என்று….விடுதலை பெற்றவனே வீரன் ….வீரனே வேந்தன்….Being Simple தான் பட்டாபிஷேகம்….தானே தானாய் நிற்றல்….கண்ணனும் ரமணரும் Cousins….
“பிச்சை எடுத்துண்டு பின்மண்டை உச்சியில்
மிச்சத்தை தேய்த்த மகான்ரமணர் -RICHசானார்;
கொட்டாயில் பாலாடை கட்டிய கண்ணனின்
பட்டா பிஷேகம்SIM PLE”….கிரேசி மோகன்….

