Blog

  • என் பார்வையில் கண்ணதாசன்

    — சரஸ்வதி இராசேந்திரன்

     

    என் பார்வையில்  கண்ணதாசன்

     

     

    Kannadasanஎன் பார்வையில்  கண்ணதாசன்   குறை  நிறைகளுடைய  ஒரு சராசரி மனிதன், படிப்பறிவு   இல்லாவிட்டாலும்  பட்டறிவால்  வாழ்க்கை அவலங் களையே  பாடல்களாகப் புனைந்தவர்.  வெளிப்படையானவர், ஒரு நாத்திகனாக இருந்து ஆத்திகமானவர். அவர் ஒரு பலகோண கவி என்றால் மிகையில்லை. அதுவும் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலே பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதி மக்கள் மனதிலே  நீங்காத இடத்தை பிடித்து  சிம்மாசனமிட்டவர்.

    போன தலைமுறையிலிருந்து இன்றைய தலைமுறை வரை அவரது பாடல்களை விரும்பிப் பாடுவதிலிருந்தே இதுபுலப்படும்.  வாழ்க்கை நிதர்சனங்களையே பாடல்களாகப்  புனைந்ததினால் அவருக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் கூட அவை பொருந்தியிருக்கின்றன. அவர் பாடல்கள் பாமரனும் புரிந்து கொள்ளும் அளவில் எளிமையாக இருந்தன. என் வாழ்க்கையில் எற்பட்ட சில சிக்கலான நேரங்களில் ‘’அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தாலாடும்” பாட்டு மன அமைதியை தந்திருக்கின்றது அவரது.

    கருவிலேயே திருவுடைய கவி கண்ணதாசன்.  ஞான சம்பந்தர், குமர குருபர் போன்று ஒரு பிறவிக் கவி. குடும்பக் கஷ்டம் ஏற்படும் போது சொந்த அண்ணன் தம்பி கூட உதவாத காரணத்தால் விளைந்ததுதான் “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான  உலகத்திலே’’ பாடல்.  இந்தபாடல் நமக்கும் பொருந்தும் தானே?

    நம் நெருங்கிய உறவினர் நம்மை விட்டுப்போகும் போது மனம் விட்டுப்போயிடும். அந்த நேரத்தில் உண்மையை விவரிக்கும் ‘’போனால் போகட்டும் போடா இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?’’ பாடல் எத்தனை கருத்துச்செறிவான பாடல். இதை கேட்டதும் தன்னாலேயே மனம் அமைதியாயிடும். “வீடு வரை உறவு  வீதிவரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை யாரோ?”  மனிதனை தெளிய வைக்கும் பாடல்கள்.

    கனி பிழிந்த சாரங்களினால் காதல் கவிதை களையும் புனைந்தவர். “ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்”, “பொன்னெழில் பூத்தது புது வானில் வெண்பனி தூவும் நிலவே நில்”, “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே …நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி போவோம் குயிலே”  எத்தனை நாசுக்கான காதல் பாடல்கள்.

    மனிதனின் குண நலன்களை படம் பிடித்துக்காட்டுவதில் அவருக்கு இணை அவரே ‘’போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே, அதில் பொய்யும், புரட்டும், திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே’’,  “இறந்தவனை சுமந்தவனும்   இறந்திட்டான் அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான்”, “இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்,  உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான்”,’ அவர் தன் குறைகளை என்றுமே மறைத்ததில்லை. மதுத்தண்ணீர் விட்டேதான் தன் கவிதைகளை வளர்த்தியிருக்கிறார். அதன் விளைவுதான் ‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு  ஒரு கோலமயில் என் துணையிருப்பு”.  அவரைப்பொறுத்தவரையில் கெட்டபின்புதான் ஞானி ஆகியிருக்கிறார். அதையும் கூட பாட்டாக வரித்துள்ளார் “கெட்டபின்பு ஞானி” என்று.

    நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை “பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு  கண்பார்வை போடுதே சுருக்கு”, “வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நான் வாரி அணைச்சா வழுக்கிறியே  நீ அலேக்”. அரசியல் அவலங்களையும்  அலசியிருக்கிறார் ‘’சிரிப்பு வருது சிரிப்பு வருது
    சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது”. கண்டனக்கார்கள் கூட அவர் கூட கை கோர்த்து நடந்தார்கள் அவரின் நகைச்சுவையைக்கண்டு.

    “தமிழே அமுதே அழகிய மொழியே’’ என்ற பாடல் அவரின் தமிழ்ப் பற்றைக் காட்டியது. அவர் எழுதிய  தத்துவ  பாடல்களிலேயே அவரைக்கவர்ந்தது “பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது”,  என்ற பாடல். எனக்குமட்டுமில்லை எல்லோருக்கும் பிடித்த பாடல் அது. எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்கள் ஏராளம். அவர் ஒரு தெய்வீக கவி.  அவரொரு  காதல் கவி. அவரொரு  தத்துவக்கவி. அவரொரு தமிழ்க்கவி. அவர் ஒரு சீர்திருத்தக் கவி … இப்படி அவரை சொல்லிக்கொண்டேபோகலாம்.

    அர்த்தமுள்ள இந்து மதம் எழுதி அவர் ஒரு முழுமையான ஆன்மீக வாதி என்பதை நிரூபித்து விட்டவர். ஏசு காவியம் பாடி  எம்மதமும் சம்மதம் என்பதை காட்டியுள்ளார். அவரைப்பற்றி எழுத தாள்போதாது, நாள்போதாது  ஆகவே இத்துடன் முடிக்கிறேன்.  தமிழ்த்திரை உலகம்  உள்ள வரை  அவர் புகழ் ஓங்கிக்கொண்டேதான் போகும்.  எங்கள் இதயம் இயங்கும் வரை உன்   பாடல்கள்  ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் கண்ணதாசா உன் புகழ் எண்ணதாசா.

     
     
     
     
     
     
     
     
    மன்னை சதிரா (சரஸ்வதி இராசேந்திரன்)
    51,வடக்கு ரத வீதி  ,மன்னை
    sathiramannai@gmail.com

    Share
  • இன்பமே.. உந்தன்பேர் பெண்மையோ

    கவிஞர் காவிரி மைந்தன்

    இன்பமே.. உந்தன்பேர் பெண்மையோ – புலவர் புலமைப்பித்தன் – எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா எம்.ஜி.ஆர். ராதாசலூஜா

     

     

    இதயக்கனி திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் சுபலாலி! வஞ்சணையில்லாத வார்த்தைகளின் கூட்டுக் கொள்ளை! சந்தக்கவிதைக்கு சரியான சான்று! புல்லாங்குழலில் தொடங்கிடும் காதல் பூபாளம்! வார்த்தைகளும் இசையும் போட்டியிட்டு நடைபோடும் புதிய பவனி! இலக்கியவானிலிருந்து பொழிந்த இன்பத்தமிழ் மழை! அன்பின் பரிமாற்றத்திற்காகவே நடைபெற்ற ஒரு ஆனந்த விழா!

    இன்பமே.. உந்தன்பேர்பெண்மையோkaviri
    என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
    என்நெஞ்சில்ஆடும்பருவக்கொடி..
    இன்பமேஉந்தன்பேர்வள்ளலோ..
    உன்இதயக்கனிநான்சொல்லும்சொல்லில்மழலைக்கிளி
    உன்நெஞ்சில்ஆடும்பருவக்கொடி..(இன்பமே)

    சர்க்கரைப்பந்தல்நான்தேன்மழைசிந்தவா
    சந்தனமேடையும்இங்கேசாகசநாடகம்எங்கே
    தேனொடுபால்தரும்செவ்விளனீர்களை
    ஓரிருவாழைகள்தாங்கும்
    தேவதைபோல்எழில்மேவிடநீவர
    நாளும்என்மனம்ஏங்கும்(இன்பமே)

    பஞ்சணைவேண்டுமோநெஞ்சணைபோதுமே
    கைவிரல்ஓவியம்காண
    காலையில்பூமுகம்நாண
    பொன்னொளிசிந்திடும்மெல்லியதீபத்தில்
    போரிடும்மேனிகள்துள்ள
    புன்னகையோடொருகண்தரும்ஜாடையில்
    பேசும்மந்திரம்என்ன(இன்பமே)

    மல்லிகைத்தோட்டமோவெண்பனிக்கூட்டமோ
    மாமலைமேல்விளையாடும்
    மார்பினில்பூந்துகிலாடும்
    மங்களவாத்தியம்பொங்கிடும்ஓசையில்
    மேகமும்வாழ்த்திசைபாடும்
    மாளிகைவாசலில்ஆடியதோரணம்
    வானவீதியில்ஆடும்(இன்பமே)

    கவிதை ஒன்று கால் முளைத்து காதல் பாட்டுப் பாடுதோ? எழுதும் ஒவ்வொரு சொல்லுமே ஏகாந்தம் சொல்லுதோ? எங்கே இரண்டு இதயங்கள் அன்பில் இணைந்தாலும் அங்கே இந்தப் பாடல் இன்பம் சேர்க்குமே! இளமை குலுங்கும் இனிமை ததும்பும் இதயம் தழுவும் பாடலே!

    inbame undhan per idhayakani
    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — சாரதா சுப்பிரமணியன்

     

    கண்ணதாசன், என் பார்வையில் …

     

     

    Kannadasanகாவிரிப்பூம்பட்டினம் எனும் ஊரில் ஒரு சமயம் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவினால் பலகுடும்பங்கள் தத்தம் வீடுகள் பொருட்கள் யாவையும் இழந்து தவிக்கையில் மதுரையை ஆண்ட பாண்டியமன்னன் அவர்கட்டு ஓர் ஊரினையே குடியமைக்க கொடையாகத் தருகிறான். அந்தமக்களும் அங்கு தங்கி வாணிபம் செய்து புதுவாழ்வு தொடங்கினர். பல கோயில்கள் கட்டினர், பாடசாலைகள் தொடங்கினர். அந்த இடம்தான் தற்போதைய செட்டிநாடும் அதன் சுற்றுப்புறமும்.

    செட்டிநாடு என்றாலே அங்குள்ள மக்கள் பேசும் தமிழுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அதில் கவிதைநயம் இருக்கும், தமிழ்பற்று உண்டு, மொழியின் ரசனை எல்லாம் இழைந்து இருக்கும்.செட்டிநாடு ஒரு தமிழ் பாற்கடல் என்றால் மிகையாகாது. உதாரணமாக ஓர் ஆச்சி(வயது முதிர்ந்தோரை அப்படித்தான் அழைப்பர்)கவலையுடன் அமர்ந்து இருந்தால், மற்றொருவர் அவரிடம் வந்து “என்ன கவலையாக இருக்கீக… சொல்லுங்க” என்றால் அதற்கு அவரின் பதில், “என்ன சொல்ல, ஒண்ணு ஒண்னாசொல்லவா ஒருமிக்க சொல்லவா” என அழகிய நடையில் திருப்பி வரும். அதேபோல் ஒருவரை கோபித்துக் கொள்ளும் சமயத்தில் கூட அழகாகக் கூறுவார்கள். “கோவேறுக்கழுதைக்கு குடைப்பிடித்த கழுதை” என்று எதுகை மோனையுடன் கூடியதா அழகாகக் கோபிப்பார்கள். இப்பேர்பட்ட செட்டிநாடெனும் தமிழ்- -பாற்கடலில் வந்த அமிழ்தம் நம் கவியரசர் கண்ணதாசன். அந்த அமிழ்தத்தில் இருந்து கிடைத்த பலதுளிகளில் இருந்து சில துளிகளை நான் எப்படி பார்க்கிறேன் என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    என்னைப் பொறுத்தமட்டில் கண்ணதாசன் வெறும் கவிஞர் மட்டும்மல்லர். வாழ்க்கையில் நிகழும் பல நிகழ்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் வண்ணமயமாகக்குழைத்து,அதில் தமது பாட்டுத்திறன் எனும் தூரிகையால் வாழ்க்கைச்சித்திரத்தை வனப்புற வரைந்த வண்னணதாசன் என்பேன்.

    வீட்டில் குழந்தை பிறந்தவுடன் தொட்டில் வைபவமா? வளரும் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்தா? பக்கத்துவீட்டுப்பெண் சடங்காகி விட்டாளா? எதிர் வீட்டுப்பெண்ணுக்கு வளைகாப்பு சீமந்தமா? அடுத்தமாதம் வீட்டில்திருமணம் நடக்க உள்ளதா? விருந்தாளிகள் யார்வருகிறார்களோ இல்லையோ…தனது அழியாப்புகழ்பெற்ற இனிய வாழ்த்துப்பாடல்கள் வழியாகக் கண்ணதாசன் வீட்டுக்குள் ஆஜர் ஆகிவிடுவார்.

    “இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்” பாடலில் மனதை பறிக்கொடுக்காதவரும் உண்டோ? “மலர்ந்த்து மலராத பாதிமலர்” பணக்கார தாலாட்டு என்றால் “பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்” மனதைத்தொடும் ஏழையின் தாலாட்டு! எந்த பாடலை சொல்வது?அப்பா! கடல் என்றால் தாலாட்டும் தமிழ்க்கடல்தான்

    இளமைப்பருவத்தில் அரும்பும்காதல், ஒருதலைக்காதல், நிறைவேறாக் காதல், தத்துவப்பாடல்கள், சோக ரசம் சொட்டும் பாடல்கள், புறக்கணிக்கப்பட்ட முதுமையில் முதிர்ந்த கணவன் மனைவி ஆதரவு நிறம்பிய பாடல்கள், கல்லூரிச்சிட்டுக்களின் உல்லாசம், சரித்திரநாயகர்களின் பாடல்கள் இப்படி ரசனையோடு எந்தவித சூழ்நிலைக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி கவியரசர் புனைந்த திறனை என்ன என்பேன்?

    இதை நினைக்கும்போது “பொன்னென்பேன் ஒரு பூ என்பேன்” என்றபாடல் நினைவுக்கு வருகிறது. ”கடவுள் அமைத்து வைத்த மேடை” நிறைவேறாக் காதலைக்கூறும்.”அம்மாடி பொண்ணுக்குத்தங்கமனசு” ஒருத்தலைக் காதல், இப்படி எழுதிக்கொண்டேபோகலாம்!

    காஞ்சிப்பட்டுத்தி கஸ்தூரிபொட்டுவைத்து”, “திருமகள்தேடிவந்தாள்”, “பூமுடித்தாள் இந்தபூங்குழலி”, மணமகளே மருமகளேவாவா”, வாராயெந்தோழிவாராயோ” போன்றத்திருமணப் பாடல்களை இன்று கேட்டாலும் இனிமையே சந்தேகமில்லாமல் இல்லையா?

    கர்ப்பமான பெண் தனக்குப் பிறக்கபோகும் குழந்தையை நினைத்து ”பூப்போல பூப்போல பிறக்கும்” எனப் பூரித்துப் பாடும் பாடல் சோகமுடிவு ஆனாலும் இப்பாடல் அமரத்துவம் அடைந்துவிட்டது. ”உன் கண்ணில் நீர் வழிந்தால்”, பாடலைக் கேட்டால் இன்னும் நம்கண்களில் நீர் வடியும். “யாரைநம்பி நான் பிறந்தேன், போங்கடாபோங்க”, இந்தப் பாடலை எல்லாத் தகப்பன்மாரும் ஒருமுறையாவது நினைவுகூர்ந்து இருப்பார்கள்.

    “வீடுவரை உறவு வீதிவரைமனைவி”, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”, “உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை”, “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது”, போனால் போகட்டும்போடா”, போன்ற தத்துவப்பாடல்களில் வாழ்க்கைநெறி கருத்துக்களாகப் புதைந்து உள்ளது.

    இவரின் இசைக் கற்பனை தனி பாணிஎனலாம். “நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்”, “ஒருநாள் போதுமா நான்பாட இன்றொருநாள் போதுமா”, போன்றபாடல்களில் ஸ்வர கோர்வைகளூம் இராகங்களின் பெயர்களும் மணிப்ப்ரவாளமாக்கொட்டும்.

    இசை மட்டுமா, “பார்த்தேன் சிரித்தேன்”, “அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே”, “பொன்னென்பேன் சிறு பூ என்பேன்” போன்ற இலக்கிய ரசம் சொட்டும் பாடல்களும் என்று கேட்டாலும் இனிமை. இப்படி எழுத இனி ஒருவர் பிறக்கத்தான் வேண்டும்.

    மூன்றுமணிநேரம் போகும் திரைப்படத்தின் கதையினை தம் பாடல்களில் ஒரிரு வரிகளிலேயே நமக்கு உணர்த்திடும் வல்லமை நம் கவியரசருக்கு மட்டுமே சொந்தமான தனித்திறமை. கதாநாயகி விதிவசத்தால் காதலைத் துறந்துவேறு ஒருவனை மணக்கிறாள், குழந்தையும் பிறக்கிறது, குழந்தையைத் தாலாட்டிப் பாடுகிறாள், “தைமாதப் பொங்கலுக்கு” என்ற பாடலில் “யாரோடு யார் என்று காலமகன் எழுதியதை யார் மாற்றமுடியும்” என்று தம் மனதை வெளிப்படுத்துகிறாள். இதேபோல் சித்தி என்ற படத்தில், “காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே” என்ற பாடலில் ஒரு பெண் தன் வாழ்வு முழுவதும் தியாகரூபமாக பிறருக்காகவே வாழ்வதை அழகுபடக்கூறி இருக்கிறார்.

    “நாளாம் நாளாம் திருநாளாம்”, “மல்லிகை முல்லைப் பூப்பந்தல்”, “ஆயிரம் இரவுகள் வருவதுண்டு”, இவை என்றும் இளமை வரம் பெற்றவை.

    “எல்லோரும் கொண்டாடுவோம்,அல்லாவின் பெயரைச் சொல்லி”, “சத்திய முத்திரைக் கட்டளையிட்டது பாலகன் ஏசுவின் கீதம்”, “கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா” இந்தப்பாடல்கள் கவியரசரின் சமய ஒருமைப்பாட்டு உணர்ச்சிகளைக்காட்டுகின்றன.

    “ஓர் ஆலயமாகும் மங்கை மனது”, “ராதையின் நெஞ்சமே” நம் தமிழர் இல்லறத்தை நயமாக எடுத்துறைக்கும்படியான் பாடல்களாகும். கவியரசர் தன் பாடல்களில் ஆண்களைவிட தாய்குலத்தின் உணர்சிகளையும் தியாக்ச்சீலத்தையும், குடும்பபாங்கையும், விதவிதமாக வர்ணித்துள்ளார் எனவே என் வாழ்க்கையில் நான் நம் கவியரசரின் காலத்தில் வாழ்ந்ததையும் அவரது பாடல்களை எங்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகளில் பாடியதையும், எனது மாபெறும் சௌபாக்கியமாக நினைக்கிறேன். இதனை எழுதி முடிக்கும்போது தொலைக்காட்சிப்பெட்டியில், “நானாட்சி செய்து வரும் நான்மாடக்கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு” என்ற பாடல் ஒளிப்பரப்பாகியது.

    Share
  • முக்கோணக் கிளிகள்

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 7

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

     

    jay

     

    jay1

     

    jay2

     

    jay3

     

     

     

     

     

     

    Share
  • உலகச் சுற்றுச்சூழல் தினம்!

    -ரா. பார்த்தசாரதி

    சுற்றங்கள் சூழ வாழும் மனிதனே!
    சற்றே சுற்றுப்புறச்  சூழலைக்  கவனிக்காமல்  இருப்பது  ஏன்?            world-envernment-day-003
    பிற நாட்டினை மேற்கோள் காட்டும் நீ
    ஏன் உனது  நாட்டிற்குச்  செய்ய கழிவிரக்கம் கொள்கிறாய்?

    மனிதனே!   உன் சுற்றுப்புறச்  சூழலைப் பார்!
    இதற்கெல்லாம்  நாமேதான்  காரணம்
    வீட்டின் சுத்தம் நோயின்  ஓட்டம்!
    நாட்டின்  சுத்தம் சுகாதாரத்தின்  ஏற்றம்!

    வீட்டிற்கு ஓர் மரம் தெருவிற்குப் பல மரம்!
    வீட்டினைச் சுத்தமாக்கு, நாட்டினைப் பசுமையுடன் வளமாக்கு!
    மனித வாழ்க்கையினைப் பொன்மயமாக்கு!
    நமது நாட்டினைப் பலவகையில் ஏற்றமுடையதாக்கு!

    நமக்கு நாமே  சூளுரை  எடுத்துக்கொள்வோமே!
    நமக்கு நாமே  தூய்மை எனும் விதையினை விதைத்துக்கொள்வோமே!
    நாட்டிலும்  பசுமைப் புரட்சி  ஓங்கப்   பாடுபடுவோமே!
    உலகச்  சுற்றுச்சூழல் தினத்தைப்  பயனுறச் செய்வோமே!

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — வாஞ்சீஸ்வரன் கோபால்

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasan
    பாமரனும் பாடல்களை ரசிக்கும்படி செய்தவர் கவியரசு கண்ணதாசன்.

    அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருந்தாரோ அதைப் பற்றிக் கவலைப்படாமல் கவியரசரைப் பார்த்தோமென்றால், அவர் அந்தப் பாமரர்களைப் போலவே கள்ளம் கபடு இல்லாமல், குழந்தை மனத்துடன் வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.  மஹாகவி காளிதாசரைப்  போல், மஹாகவி பாரதியைப் போல்  இயல்பாகவே அவர் நாவில் கலைத்தாய் சரஸ்வதிதேவி குடிகொண்டிருந்தாள். வார்த்தைகளாக  மட்டுமன்றி, இசையுடனும் சேர்ந்து அமர்ந்திருந்தாள்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவருடைய எழுத்துத் திறமை,  பேச்சுத் திறமை இதையிரண்டும் தவிர நடிப்பு, திரைப்படத் தயாரிப்பு என்று பல முகங்களைக் கொண்டவராக அவரைப் பார்க்கிறோம்.  அவர் பேசினாலும், எழுதினாலும் அதில் சிறிதளவு கூட எந்தக் குறைகளையும்  நாம்  காண இயலாது.   இயல்பாகவே இசையறிவும் அவருக்குக் கூடி வந்ததால் அவர் இயற்றிய பெரும்பாலான பாடல்களும் வெற்றி பெற்றன. அவரால் இசையமைப்பாளர்களும் பெயர் பெற்றனர்.   அவர் பாடல்களை இசையின்றி பாடிப் பாருங்கள், பாடும் மெட்டுக்கு ஏற்றாற்போல் வார்த்தைகள் வந்து விழுவதை !  இதுதான் அவர் வெற்றியின் ரகசியம்.

    அவர் மெட்டுக்குப் பாட்டெழுதினாலும், அவருடைய பாடல்களுக்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்தாலும், அதில் நாம் வேறுபாடு காண இயலாது.  இரண்டும் ஒன்று போலவே நயமாக, ரசிக்கும்படி இருக்கும். அதனால் தான் அவருடைய பாடல்கள் ஐம்பது வருடங்கள் கடந்தும்  இன்னமும்  கேட்டு ரசிக்கப்படுகின்றன.   அவருக்குப் பின்னால் வந்த கவிஞர்களில், காவியக் கவிஞர் வாலியைத் தவிர, வேறு எவருமே கவியரசர் தொட்ட உயரத்தைத் தொட இயலாத காரணம் இதுவேயன்றி வேறில்லை.

    இதைத் தவிர, அவருடைய மேடைப் பேச்சைக் கேட்டிருக்கிறீர்களா…. அது அரசியல் என்றாலும் இலக்கியம், ஆன்மிகம் என்று எதுவாக இருந்தாலும் அவர் வாய் திறந்தவுடன் குற்றால அருவி போல் வார்த்தைகள் ஓடி வருமே அதைக்  கேட்டு மகிழ்ந்த நாட்கள்தான் எத்தனை, எத்தனை…!  “தடுமாறும் போதையிலும் கவி பாடும் மேதையவன்” என்று கவிஞர் சௌந்தரா கைலாசம் அவர்கள் சொன்னது  இங்கே என் நினைவுக்கு வருகிறது.  கவியரசரின் “டச்” என்பதை  ஆங்கிலத்தில் சொன்னால் அது “மைதாஸ் டச்”.  அவர் கை தொட்டதெல்லாம் பொன்னாக இன்னும் மின்னிக் கொண்டே இருப்பதை எவரேனும் மறுக்க முடியுமா ?

    அவரைப் பற்றி அவரே பாடிய பாடலுடன் இந்தப் “பார்வை”யை முடித்துக்  கொள்ள விழைகிறேன்:

    பாமர ஜாதியில் தனி மனிதன் – நான்
    படைப்பதனால் என் பேர் இறைவன் !
    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை !

     
     
     
     
     
     
     
     
    வாஞ்சி
    veegopalji@yahoo.com

    Share
  • ஆயுத மனிதன்

    –சி. ஜெயபாரதன்

    ஆயுத மனிதன்

    நெப்போலியன்
    (The Man of Destiny)
    (ஓரங்க நாடகம்)

     ******************************************************

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா

    ***************************

    “எனது ஓய்வு காலத்தில் நான் எனது உடைவாளை மயிலிறகாக மாற்றிக் கொள்வேன். என் அரசாட்சி வரலாற்றில் அது வியப்பூட்டலாம். இதுவரை அவர் எனது போலி நிழல் வடிவை மட்டுமே கண்டிருக்கிறார். இப்போது என் நிஜ உருவத்தைக் காட்டப் போகிறேன். எத்தனை தோற்றங்களைத்தான் நான் வெளிப்படுத்த முடியும் ? பல மனிதருக்கு என் பொய்யுருவே தெரிந்திருக்கிறது. ஆயிரக் கணக்காக நான் வெறுக்கத் தக்க வற்றை நாட்டுப் பாரமாக நிரப்பி வந்திருக்கிறேன். முடிவில் எனக்கு அவை என்ன செய்துள்ளன ? என்னை நயவஞ்சகத்தில் எல்லாம் தள்ளிவிட்டன !”

    நெப்போலியன் (1769–1821)
    “எனது வணிக யுத்தம் வெற்றி பெறுவது ! நான் அதில் கைதேர்ந்தவன் ! நானே என் இலியட் இதிகாசத்தை (Greek Epic Iliad -The Siege of Troy) உருவாக்குகிறேன் ! அனுதினமும் அதைத்தான் நான் ஆக்கி வருகிறேன்.”
    “படைவீரன் ஒருவன் வர்ண நாடா (Coloured Ribbon) ஒன்றைப் பெறக் கடுமையாக நீண்ட காலம் போரில் சண்டை செய்வான்.”
    “இரகசியங்களை ஒளித்து வைத்திருக்கும் ஒற்றர்களின் வாயிலிருந்து அவற்றை வரவழைக்கத் துன்புறுத்தும் காட்டிமிராண்டித்தனமான பழக்க முறை தவிர்க்கப் பட வேண்டும். இம்மாதிரி அவரைச் சித்திரவதை செய்து கேள்விகள் கேட்பதால் பயனுள்ள எதுவும் விளையாது.”

    ***************************
    நெப்போலியன், “யுத்தக் கலை” (1798)

    நூற்றாண்டுகளாய்
    மங்கலாகச் சிந்தித்து
    தோற்றம் பெற்ற வற்றை
    நெப்போலியன் உள்ளம்
    ஒளிமயத் தெளிவுடன் ஆய்ந்து
    உளவு செய்யும் !
    அற்ப மானவை எல்லாம்
    ஆவி யாகப் போகும் !
    கடலும் புவியும் தவிர இவரிடம்
    கனத்தது எதுவு மில்லை !

    ***************************

    நெப்போலியனைப் பற்றி ஜெர்மன் மேதை காதே (Goethe):
    “அரசக் கிரீடம் என்பது வெல்வெட்டுத் துணியால் சுற்றப்பட்ட ஒரு வெறும் மரக்கட்டை !”
    “போரில் தோல்வி அடைவதற்குக் காரணம் போரிடும் படைவீரர் அல்லர். அவரை வழி நடத்திச் செல்லும் போர்த் தளபதிகள்தான்.”
    “போர்ப் படை வீரர்கள் தமது வயிறு நிரம்பியதைப் பொருத்தே போரில் தீவிரப் பங்கு கொள்வார்”
    “போரின் வெற்றிக்குப் படைவீரர் போர்க் குணமும் ஒருவருக் கொருவர் இணைந்த தொடர்பும் முக்கால் பங்கு. படையாளர் எண்ணிக்கையும், தளவாடச் சாதனங்களும் மீதிக் கால் பங்கு.”

    ***************************

    Napoleon 1
    “ஆறு வயதில் நானொரு சமையல்காரனாக ஆக ஆசைப்பட்டேன். ஏழு வயதில் நெப்போலியனாக ஆக விரும்பினேன். அதற்குப் பிறகு என் பேராசை பெருகிக் கொண்டே போகிறது.”

    — நெப்போலியன்

    “என்னைக் கொல்லக் போகும் அந்த ஒரு புல்லட் இன்னும் உருவாக்கப்பட வில்லை.”
    “மேலிருந்து கேலிக்குட்பட்டுத் தடுமாறி விழ ஒரு படிக்கட்டு போதும்.”

    — நெப்போலியன்

    ***************************

    நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:
    ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
    அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

    ***************************

    ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :
    1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெஃப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெஃப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் ! அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

    ***************************

    நாடகத்தில் பங்கெடுப்பாளர் :
    1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் சக்ரவர்த்தி (27 வயது)
    2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)
    3. பிரென்ச் லெஃப்டினென்ட் : (24 வயது)
    4. ஹெலன் : ஓர் ஆஸ்டிரியப் பெண் (21 வயது)

    ***************************

    காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.
    இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

    ஆரம்பக் காட்சி :
    (விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்வை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெஃப்டினென்ட்) தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

    உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான். அந்த முயற்சியில் இறுதியில் கடிதங்களைப் பெற்று கொள்கிறான். பிறகு லெ•ப்டினென்டை எழுப்பி அரசாங்கக் கடிதங்களைக் களவாடிய கள்வனைப் பிடித்து வர அனுப்புகிறான்.)

    ***************************

    கியூஸெப்: (மலர்ந்த முகத்தோடு) இன்று எங்களுக்கு ஒரு பொன்னாள் ! மேன்மை தங்கிய சக்ரவர்த்தி தங்கள் வருகையால் எங்கள் விடுதி பெருமைப் படுகிறது !

    நெப்போலியன்: (படத்தில் முழுக் கவனத்தைச் செலுத்திக் கொண்டு) எதுவும் பேசாதே ! என் கவனத்தைக் கலைக்காதே !

    கியூஸெப்: தங்கள் ஆணைப்படி செய்கிறேன் பிரபு .

    நெப்போலியன்: (சட்டெனத் திரும்பி) கொஞ்சம் சிவப்பு மை கொண்டு வா !

    கியூஸெப்: ஐயோ சக்ரவர்த்தி ! என்னிடம் சிவப்பு மை இல்லையே !

    நெப்போலியன்: (கடுமையாக) எதையாவது கொன்று குருதியைக் கொண்டு வா !

    கியூஸெப்: (தயங்கிக் கொண்டு) மேதகு சக்ரவர்த்தி ! என்னிடம் எதுவும் இல்லை ! வெளியே உங்கள் குதிரை ! சிப்பாய் ! விடுதியில் என் மனைவி ! மாடி அறையில் ஓரிளம் பெண் !

    நெப்போலியன்: (கோபத்துடன்) உன் மனைவியைக் கொல் !

    கியூஸெப்: மேதகு சக்ரவர்த்தி ! அது முடியாத காரியம் ! என் மனைவிக்கு என்னை விடப் பலம் உள்ளது ! அவள்தான் என்னைக் கொன்று போட்டு விடுவாள் !

    நெப்போலியன்: அப்படியானாலும் சரி ! அல்லது போ வெளியே சிட்டுக் குருவி, காக்கா எதையாவது சுட்டுக் கொண்டு வா ?

    கியூஸெப்: எனக்குச் சுடத் தெரியாது பிரபு ! துப்பாக்கியும் கிடையாது ! நான் கொஞ்சம் சிவப்பு ஒயின் கொண்டு வரட்டுமா ?

    நெப்போலியன்: ஒயினா ? வேண்டாம். அதை வீணாக்கக் கூடாது !

    கியூஸெப்: ஒயின் குருதியை விட மலிவானது பிரபு !

    நெப்போலியன்: (ஒயினைக் குடித்துக் கொண்டு) உன்னைப் போன்றவர்தான் உலகில் அதிகம். ஒயினை வீணாக்காதே !

    (உருளைக் கிழங்கு மேல் ஊற்றிய குழம்பை எடுத்து வரைப்படத்தில் குறியிட்டுக் கொள்கிறான். வாயைத் துண்டால் துடைத்துக் கொண்டு காலை நீட்டிச் சாய்கிறான்.)

    கியூஸெப்: (மேஜைத் தட்டுகளை எடுத்துக் கொண்டு) எங்கள் விடுதியில் ஒயின் பீப்பாய்கள் நிறைய உள்ளன. நாங்கள் எதையும் வீணாக்குவ தில்லை. உங்களைப் போன்ற உயர்ந்த ஜெனரல்கள் மலிவான குருதியை நிரம்ப வைத்திருப்பீர் ! ஆனால் நீங்களும் இரத்தம் சிந்துவதில்லை !

    (மேஜை மீது யாரோ விட்டுச் சென்ற ஒயின் மிச்சத்தைக் குடிக்கிறான்)

    நெப்போலியன்: கியூஸெப் ! குருதிக்குப் பண மதிப்பில்லை ! அதுதான் மலிவு ! ஆனால் பணம் கொடுத்துத்தான் ஒயினை வாங்க வேண்டியுள்ளது ! (கனல் அடுப்பு அருகில் செல்கிறான்)

    கியூஸெப்: நான் கேள்விப் பட்டிருக்கிறேன் ! நீங்கள் எதன் மீதும் கவனமாக இருப்பீராம் மனித உயிரைத் தவிர !

    நெப்போலியன்: (புன்னகையுடன்) தோழனே ! மனித உயிர் ஒன்றுதான் தானே தன்னைக் கவனித்துக் கொள்கிறது ! (ஆசனத்தில் அமர்கிறான்) உயிருக்குப் பயந்தவன் வாழ முடியாது. சுதந்திரம் வேண்டுமென்றால் கில்லட்டினால்தான் முடியும் ! அமைதியை நிலைநாட்டப் புரட்சியை உண்டாக்க வேண்டும் ! பிரெஞ்ச் புரட்சி நினைவிருக்கிறதா ?

    கியூஸெப்: எங்களுக் கெல்லாம் அறிவு மட்டம் உங்களோடு ஒப்பிட்டால் ! வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் உங்கள் சாதிப்புகளின் ரகசியம் என்ன ? தெரியாது எங்களுக்கு !

    நெப்போலியன்: நீ இத்தாலியின் சக்ரவர்த்தியாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள் ! என்ன புரியுதா ?

    கியூஸெப்: அது நிரம்பத் தொல்லை சக்ரவர்த்தி ! அரசாங்கப் பொறுப்பு வேலை யெல்லாம் உங்களுக்குத்தான் ! நான் இத்தாலிக்குச் சக்ரவர்த்தி யானால் என் விடுதியை யார் நடத்துவது ? நான் பரபரப்பாய் விடுதியில் வேலை செய்வது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. தாங்கள் ஐரோப்பாவுக்கே மகா சக்ரவர்த்தியாகி இத்தாலிக்கும் வேந்தரானால் அது எனக்கு மிகவும் பிடிக்கும் !

    நெப்போலியன்: (புன்னகை புரிந்தவாறு) என் மனதில் உள்ளதை அப்படியே படம் பிடித்துக் சொல்கிறாயே ! ஐரோப்பியச் சக்கரவர்த்தியா ? ஐரோப்பாவுக்கு மட்டும்தானா ?

    கியூஸெப்: தவறிச் சொல்லி விட்டேன். உலகத்துக்கே சக்ரவர்த்தியாக வர வேண்டும் தாங்கள் ! ஒருத்தனைப் போல் மற்றொருவன் ! ஒரு நாட்டைப் போல் மற்றொரு நாடு ! ஒரு போரைப் போல் மற்றொரு போர் ! உங்களுக்கு இருக்கும் போர் அனுபவம் யாருக்குள்ளது ? ஒரு நாட்டை முறியடிப்பது போல்தான் அடுத்த நாட்டை பிடிப்பதும் !

    நெப்போலியன்: கியூஸெப் ! நீ எனக்கு மந்திரியாக இருக்கத் தகுதி உள்ளவன் ! போரிட்டு அடிமையாக்க வேண்டும் நான் எல்லா நாடுகளையும் ! ஒவ்வொரு நாட்டுக்கும் நான் அதிபதியாய் ஆக வேண்டும் ! ஆசிய நாடுகள் மீதும் எனது கண்ணோட்டம் உள்ளது ! குறிப்பாக பிரிட்டீஷ்காரரை விரட்டி இந்தியாவுக்கும் வேந்தனாக வேண்டும் ! அதற்காக சூயஸ் கால்வாயை வெட்ட நான் திட்டங்கள் தீட்டி வருகிறேன் ! இந்தியாவின் ஏகச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! மகா அலெக்ஸாண்டர் அப்படித்தான் செய்தார் ! அவர் தரை வழியாகப் போனார் ! நான் கடல் வழியாகப் போகத் திட்டமிடுகிறேன் !

    கியூஸெப்: நல்ல யோசனை பிரபு ! ஆனால் அதற்கு முதலில் கால்வாய் வெட்ட வேண்டுமே எகிப்தில் !

    நெப்போலியன்: அந்தப் பெரிய திட்டங்கள் எல்லாம் நிறைவேற எனது எஞ்சினியரை நியமித்திருக்கிறேன். இந்த பிரிட்டீஷ் வணிக நரிகளை எல்லா நாடுகளிலிருந்தும் விரட்டி அடிப்பது எனது குறிக்கோள்களில் ஒன்று. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதுவும் சொல்லாதே !

    கியூஸெப்: (அருகில் வந்து குனிந்து பணிந்து) மன்னிக்க வேண்டும் பிரபு. நான் ஒரு சாதாரண விடுதிக்குச் சொந்தக்காரன் ! நீங்கள் பிரான்சின் மாபெரும் தளபதி. இப்படி யெல்லாம் நான் தங்களிடம் பேசக் கூடாது. மேன்மை மிகும் நீங்கள் மற்ற வீரத் தலைவரைப் போன்றவர் அல்லர். யுத்தக் கலையில் உங்களுக்கு நிகர் வேறு யார் ? நீங்கள் ஒருவரே !

    நெப்போலியன்: அப்படியா ? என்னைப் பற்றி இத்தாலியச் சிற்றூரில் கூடப் பரவியுள்ளதே ! வேறென்ன சொல்கிறார் என்னைப் பற்றி !

    கியூஸெப்: ஆஸ்டிரியப் படைகளை முறியடித்து இத்தாலியைக் காத்த மாவீரர் அல்லவா தாங்கள் ! ஒன்று உங்களிடம் கேட்க வேண்டும் பிரபு ! உங்களுக்குத் தெரியுமா மேல் மாடியில் புதிதாய் இன்று வந்து தங்கியுள்ள ஓரிளம் பெண்ணை !

    நெப்போலியன்: (நிமிர்ந்து தலைதூக்கி) இளம் பெண்ணா ? அந்தப் பெண்ணுக்கு வயதென்ன ?

    கியூஸெப்: நல்ல வனப்பான வாலிப வயதுதான் !

    நெப்போலியன்: வயதை எண்ணிக்கையில் சொல் ! பதினாறா அல்லது இருபதா ?

    கியூஸெப்: முப்பது வயது இருக்கலாம் பிரபு !

    நெப்போலியன்: பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருப்பாளா ?

    கியூஸெப்: அழகு ஒப்புமையானது பிரபு ! அது அவரவர் விழியைப் பொருத்தது ! உங்கள் கண் மூலம் நான் காண முடியாது ! ஒவ்வொரு மனிதனும் அழகைத் தீர்மானிக்க வேண்டும். என் கருத்து அவள் ஒரு கவர்ச்சியான பெண் என்பது. இந்த மேஜைக்கு அவள் வந்து அமர நான் ஏற்பாடு செய்யவா ?

    நெப்போலியன்: (எழுந்து நின்று) வேண்டாம். இந்த மேஜையில் எதுவும் செய்யாதே. நான் வரைப்படத்தை விரித்து வைத்துள்ளேன் ! யாரும் அதைப் பார்க்கக் கூடாது. நான் காத்திருக்கும் என் படையாள் வரும் வரை யாரையும் நான் சந்திக்க விரும்ப வில்லை. (தன் சங்கிலிக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான். இங்குமங்கும் பரபரப்பாய் நடக்கிறான்.)

    கியூஸெப்: ஓ உங்கள் படையாளியா ? இத்தனை நேரமாக வராமல் இருப்பதற்குக் காரணம் ? பிரபு ! வழியில் அவனை ஆஸ்டிரியப் பகைவர் பிடித்திருப்பார். தப்பி வந்திருந்தால் இப்படித் தாமதம் செய்வானா ?

    நெப்போலியன்: (கோபத்துடன்) அப்படி நடந்திருந்தால் என் ஆறாக் கோபத்துக்கு சிலர் ஆளாவார் ! முதலில் அப்படி சொன்ன உன்னைத் தூக்கிலிடுவேன் ! அடுத்து உன் மனைவி. அப்புறம் மேல்மாடி அழகி. அத்தனை பேர் தலைகளும் தரையில் உருண்டோடும் !

    கியூஸெப்: தூதரைக் கொல்வீரா ? ஆனால் தயவு செய்து என் மனைவியை விட்டு விடுங்கள் ! அப்பாவி அந்த இளம் பெண் இதில் ஒன்றும் பங்கெடுக்காதவள் !

    நெப்போலியன்: உன்னை ஒருபோதும் தூக்கிலிட மாட்டேன். உயிரை இழக்க எதிர்ப்புக் காட்டாதவனைக் கொல்வதில் என்ன பயன் ?

    கியூஸெப்: உண்மைதான் பிரபு ! என்னுயிர் பிழைத்தது ! ஐயமின்றி நீங்கள் பெரிய மனிதர் ! பொறுப்பதில் உங்களை மிஞ்சுவோர் இல்லை. நியாயத்தை நிறுத்துப் பார்ப்பதில் நீங்கள்தான் உயர்ந்த நியாதிபதி !

    நெப்போலியன்: போதும் உமது முகத்துதி ! வாயை மூடு. போ வெளியே நில் ! என் படையாளி வந்தவுடன் உள்ளே அவனை அழைத்து வா ! (மறுபடியும் வரைப்படத்தில் கவனம் செலுத்து கிறான்)

    கியூஸெப்: அப்படியே செய்கிறேன். அவன் வருகையை உடனே தெரிவிக்கிறேன் (வெளியே போகிறான்)

    நெப்போலியன்: (வரைப்படத்தைப் பார்த்து மௌனமாக முணுமுணுத்து) முதலில் இத்தாலி, அடுத்து ஆஸ்டிரியா, அப்புறம் ஹாலண்டு. அடுத்த ஆண்டுக் கடைசியில் எகிப்து ! சூயஸ் கால்வாய்த் திட்டம் துவங்க வேண்டும். இந்தியாவுக்குப் புதிய கடல் மார்க்கம் சூயஸ் வழியாக !

    பெண்ணின் குரல்: (தூரத்திலிருந்து இனிமையான குரலில்) கியூ……..ஸெப் ! ஹலோ ! கியூஸெப் ! எங்கே இருக்கிறாய் ? காது கேட்கிறதா ?

    நெப்போலியன்: யார் குரல் அது ?

    கியூஸெப்: (உள்ளே எட்டிப் பார்த்து) அதுதான் பிரபு ! மேல்மாடி அழகி ! அவள் பேசுவது இசைபோல் இனிக்கும் !

    நெப்போலியன்: மேல்மாடி மங்கையா ?

    கியூஸெப்: அவள் ஓர் அதியசப் பெண் ! புதிரானவள் ! பிரபு !

    நெப்போலியன்: அதியசப் பிறவியா ? பெண் எப்போதும் புதிரானவள்தானே ! அவள் எந்த நாட்டுக்காரி ? எப்படி வந்தாள் ?

    கியூஸெப்: யாருக்குத் தெரியும் ? தாங்கள் குதிரை வாகனத்தில் வந்து தங்குவதற்குச் சற்று முன்னேதான் அவள் வந்தாள். யாரும் அவளுடன் வரவில்லை. ஒரு பெட்டி, கைப் பையுடன் வந்தாள். அவள் வாகனத்தை ஓட்டி வந்தவன் அவள் குதிரையை “கோல்டன் ஈகிள்” விடுதியில் விட்டு வந்ததாகச் சொல்கிறான். அவளது குதிரை அலங்கார அணிகள் பூண்டிருந்ததாம்.

    நெப்போலியன்: என்ன ? அணிசெய்த குதிரையோடு ஓரிளம் மங்கையா ? அவள் ஆஸ்டிரிய நாட்டிச் சேர்ந்தவளா ? அல்லது பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவளா ?

    கியூஸெப்: பிரெஞ்ச் நாடாக இருக்கலாம்..

    நெப்போலியன்: ஐயமின்றி அது அவளது கணவனின் குதிரை ! லோதி யுத்தத்தில் செத்துப் போயிருப்பான் ! பாவம் !

    பெண்ணின் குரல்: (இனிமையாக) கியூஸெப் !

    நெப்போலியன்: (எழுந்து நின்று) நேற்றுப் போரில் இறந்தவன் மனைவி, வாயில் வரும் குரல் இல்லை அது !

    கியூஸெப்: கணவர்கள் செத்துப் போவது எப்போதும் துக்கமாக இருப்பதில்லை பிரபு ! (பெண் குரல் வரும் திசை நோக்கி) இதோ வருகிறேன் பெண்ணே ! (உள்ளெ போகிறான்)

    நெப்போலியன்: (அவனைத் தடுத்து நிறுத்தி) நில் போகாதே ! அவளே இங்கு வரட்டும்.

    பெண்ணின் குரல்: (பொறுமை இழந்து) கியூஸெப் ! இங்கு சற்று வருகிறாயா ?

    கியூஸெப்: பிரபு ! என்னை அனுமதியுங்கள். என் கடமை அது ! யாரும் என்னுதவியைத் தேடி விடுதியில் அழைத்தால் நான் உடனே போக வேண்டும்.

    ஆடவன்: (அப்போது வெளியிலிருந்து ஆடவன் ஒருவன் குரல் கேட்கிறது) விடுதியின் அதிபரே ! எங்கிருக்கிறீர் ? (தடதட வென்று பூட்ஸ் சத்தமுடன் ஓர் இராணுவ அதிகாரி நுழைகிறான்.)

    நெப்போலியன்: (அவசரமாய்த் திரும்பி) அதோ ! என் படையாளி வந்து விட்டான். போ நீ உள்ளே ! அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்று கேள் !

    (கியூஸெப் உள்ளே போகிறான். உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் வருகிறான். நெப்போலியனைக் கண்டதும் நிமிர்ந்து நின்று சல்யூட் செய்கிறான்.)

    நெப்போலியன்: (பொறுமை இழந்து) கடைசியாய் வந்து சேர்ந்தாயே ! என்ன ஆயிற்று ? ஏனிந்தத் தாமதம் ? காலையில் வர வேண்டிய கடிதங்கள் பகல் பொழுது கடந்தும் எனக்கு வரவில்லையே ? ஏன் தடுமாறுகிறாய் ? என்ன நடந்தது ? குதிரையில் போனவன் கால் நடையில் வந்தாயா ? விரைவாய்ப் போகும் குதிரையை ஓட்டிச் சென்றாய் நீ ! குதிரைக்கு ஒரு கால் போனதா ? அல்லது உனக்கு ஒரு கை போனதா ?

    லெஃப்டினென்ட்: (நடுங்கிக் கொண்டு) குதிரை காணாமல் போனது பிரபு ! நடந்து வர வில்லை ! ஓடி வந்தேன் ! களைத்துப் போய் வாய் குழறுகிறது.

    நெப்போலியன்: எங்கே இராணுவக் கடிதங்கள் ? குதிரை எப்படிக் காணாமல் போகும் ?

    லெஃப்டினென்ட்: (தடுமாற்றமுடன்) கடிதங்கள் களவு போய் விட்டன பிரபு !

    நெப்பொலியன்: கடிதங்களுக்கு இறக்கை இல்லை ! அவை எப்படிக் களவு போகும் ?

    லெஃப்டினென்ட்: எனக்குத் தெரியாது பிரபு !

    நெப்போலியன்: உனக்குத் தெரியாமல் களவு போனது என்று தெளிவாகச் சொல்கிறாய் ?

    லெஃப்டினென்ட்: நான் பண்ணியது தவறுதான் பிரபு ! தண்டனை கொடுப்பீர் முதலில் எனக்கு ! படைக்குழு மன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பீர் என்னை ! அதுதான் எனக்கு உகந்தது பிரபு !

    நெப்போலியன்: என் வேலையை நீ எனக்குச் சொல்லாதே ! உன் வேலை என்ன ?

    லெஃப்டினென்ட்: தகவல் கடிதங்களைத் தவறாமல், தாமதிக்காமல் கொண்டுவந்து தருவது !

    நெப்போலியன்: அதை ஏனின்று செய்யத் தவறினாய் ?

    லெஃப்டினென்ட்: பிரபு ! என்னை ஒரு கயவன் ஏமாற்றிவிட்டான். அவன் என் கையில் கிடைத்தால் அவன் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவேன் ! வஞ்சகன், வாயாடி, மோசக்காரன் அவன் ! பார்த்தால் ஆடுபோல் தெரிவான் ! பாசாங்குக்காரன் !

    நெப்போலியன்: எப்படி நீ ஏமாந்தாய் என்று சொல் ? குதிரை எப்படிக் காணாமல் போனது ? இரகசியக் கடிதங்கள் எப்படிக் களவு போயின ? அந்தக் கயவன் ஓர் ஒற்றன் போல் தெரிகிறது ! ஒற்றனிடம் எல்லாக் கடிதங்களையும் இழந்து விட்டு நீதான் வெட்கமின்றி ஆடுபோல் வந்து நிற்கிறாய் !

    லெஃப்டினென்ட்: அந்த வஞ்சகனைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன் பிரபு ! அதுதான் எனது முதல் வேலை !

    நெப்போலியன்: உன் முதல் வேலை இரகசியக் கடிதங்களை என்னிடம் கொண்டு வருவது. போ முதலில் அதைச் செய் ! நான் காத்திருக்கிறேன். போ ! நில்லாதே என் முன்பு !

    லெஃப்டினென்ட்: அந்தக் கயவன் என் சகோதரன் போல் நடித்தான். அவன் சகோதரியின் கண்கள் போல் என் கண்கள் இருக்கிறதாம் ! என் காதலி அஞ்சலிகா பிரிந்து போனதைக் கேட்டு உண்மையாகக் கண்ணீர் வடித்தான் அந்த வஞ்சகன் ! ஹோட்டலில் என்னுடன் உள்ள போது என் ஒயின் மதுவுக்கும் காசு கொடுத்தான் அந்தக் கயவன் ! ஆனால் உண்ணும் போது பிரெட்டை மட்டும் தின்று ஒயினை அவன் குடிக்கவில்லை ! அதையும் நீயே குடியென்று அன்பாகக் கொடுத்தான் எனக்கு அந்தப் பாசாங்குக்காரன் !

    நெப்போலியன்: அதாவது உனக்கு ஒயினை ஊற்றிக் குடிபோதையை உண்டாக்கி விட்டான் அந்த ஒற்றன் !

    லெஃப்டினென்ட்: அது மட்டுமில்லை ! அவனது கைத் துப்பாகி, குதிரை, கடிதங்களை என் கையில் கொடுத்தான் !

    நெப்போலியன்: ஏன் அப்படிக் கொடுத்தான் உன்னிடம் ?

    லெஃப்டினென்ட்: என் நம்பிக்கையைச் சம்பாதிக்க பிரபு !

    நெப்போலியன்: அறிவு கெட்டவனே ! உன் மூஞ்சில் ஒற்றன் ஒருவன் கரியைப் பூசி உன் கண்களைக் கட்டுவது எப்படித் தெரியாமல் போனது ?

    லெஃப்டினென்ட்: அவன் என் மீது நம்பிக்கை காட்டியதும் நான் பதிலுக்கு என் நம்பிக்கையை அவன் மீது காட்டினேன் ! என் குதிரை, கைத் துப்பாக்கி, கடிதங்களை எல்லாம் அவனிடம் கொடுத்தேன் !

    நெப்போலியன்: மதி கெட்டவனே ! அவன் உன்னை ஒரு மந்தியாக மாற்றியது கூடத் தெரிய வில்லையே உனக்கு ! உன் கடிதங்களை அபகரிக்க ஒற்றன் செய்த தந்திரம் கூடத் தெரிய வில்லையே ! எங்கே காட்டு, அவன் உனக்குக் கொடுத்த கடிதங்களை ?

    லெஃப்டினென்ட்: அவற்றையும் அந்தக் கயவனே திருடி விட்டான் பிரபு ! அந்த வாலிபன் ஒரு நய வஞ்சகன் ! அகப்பட்டால் அவன் கையை முறித்து அடுப்பில் போடுவேன் ! காலை முறித்துக் கழுக்குக்கு இரையாக்குவேன் !

    நெப்போலியன்: அதை எத்தனை முறைச் சொல்லுவாய் ? போ போய் அவன் காலில் விழுந்து நமது கடிதங்களைப் பெற்று வா ! கையை முறிக்கவும் வேண்டாம். காலை வெட்டிக் கழுகுக்கு இடவும் வேண்டாம் ! அந்த ஒற்றன் யார் என்றாவது தெரிந்து கொண்டாயா ?

    லெஃப்டினென்ட்: அவனைப் பிடித்து வந்தவுடன் கேட்டுச் சொல்கிறேன் பிரபு ! அவனைப் பிடித்து வராமல் அதை எப்படி என்னால் சொல்ல முடியும் ?

    நெப்போலியன்: ஒற்றன் ஒருபோதும் தான் யாரென்று சொல்ல மாட்டான் ! அவன் நகத்தை உரித்தாலும் சரி அல்லது தோலை உரித்தாலும் சரி யாருக்கும் சொல்ல மாட்டான் ! நீதான் மூடத்தனமாக ஒற்றனிடம் மாட்டித் தோல்வி அடைந்திருக்கிறாய் !

    லெஃப்டினென்ட்: அத்தனை பழியையும் என்மேல் போடாதீர் பிரபு ! அவன் எப்படிப் பட்டவன் என்று முதலிலே நான் எவ்விதம் அறிய முடியும் ? நான் இரண்டு நாள் பட்டினி பிரபு ! எதுவும் உண்ணாமல், இரவில் உறங்காமல் கால் நடையில் இங்கு வந்திருக்கிறேன் (பெஞ்சில் மயங்கி உட்காருகிறான்.)

    நெப்போலியன்: (உரக்கப் பேசி) கியூஸெப் ! இங்கே வா ! உடனே வா !

    கியூஸெப்: (ஓடி வந்து பணிவுடன்) அழைத்தீரா பிரபு ?

    நெப்போலியன்: (ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு) இந்த அதிகாரியை உள்ளே அழைத்துச் செல் ! முதலில் உண்பதற்கு உணவைக் கொடு ! ஓய்வெடுக்க அறையை ஏற்பாடு செய் ! இரண்டு நாள் பட்டினியாய் நடந்திருக்கிறான்.

    கியூஸெப்: அப்படியே செய்கிறேன் பிரபு ! வாருங்கள் ஐயா !

    (லெஃப்டினென்ட் மேஜை மீது உடைவாளைப் போட்டு விட்டு கியூஸெப் பின்னால் செல்கிறான்.)

    நெப்போலியன்: (பொறுமை இழந்து) கடைசியாய் வந்து சேர்ந்தாயே ! என்ன ஆயிற்று ? ஏனிந்தத் தாமதம் ? காலையில் வர வேண்டிய கடிதங்கள் பகல் பொழுது கடந்தும் எனக்கு வரவில்லையே ? ஏன் தடுமாறுகிறாய் ? என்ன நடந்தது ? குதிரையில் போனவன் கால் நடையில் வந்தாயா ? விரைவாய்ப் போகும் குதிரையை ஓட்டிச் சென்றாய் நீ ! குதிரைக்கு ஒரு கால் போனதா ? அல்லது உனக்கு ஒரு கை போனதா ?

    லெஃப்டினென்ட்: (நடுங்கிக் கொண்டு) குதிரை காணாமல் போனது பிரபு ! நடந்து வர வில்லை ! ஓடி வந்தேன் ! களைத்துப் போய் வாய் குழறுகிறது.

    நெப்போலியன்: எங்கே இராணுவக் கடிதங்கள் ? குதிரை எப்படிக் காணாமல் போகும் ?

    லெஃப்டினென்ட்: (தடுமாற்றமுடன்) கடிதங்கள் களவு போய் விட்டன பிரபு !

    நெப்பொலியன்: கடிதங்களுக்கு இறக்கை இல்லை ! அவை எப்படிக் களவு போகும் ?

    லெஃப்டினென்ட்: எனக்குத் தெரியாது பிரபு !

    நெப்போலியன்: உனக்குத் தெரியாமல் களவு போனது என்று தெளிவாகச் சொல்கிறாய் ?

    லெஃப்டினென்ட்: நான் பண்ணியது தவறுதான் பிரபு ! தண்டனை கொடுப்பீர் முதலில் எனக்கு ! படைக்குழு மன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பீர் என்னை ! அதுதான் எனக்கு உகந்தது பிரபு !

    நெப்போலியன்: என் வேலையை நீ எனக்குச் சொல்லாதே ! உன் வேலை என்ன ?

    லெஃப்டினென்ட்: தகவல் கடிதங்களைத் தவறாமல், தாமதிக்காமல் கொண்டுவந்து தருவது !

    நெப்போலியன்: அதை ஏனின்று செய்யத் தவறினாய் ?

    லெஃப்டினென்ட்: பிரபு ! என்னை ஒரு கயவன் ஏமாற்றிவிட்டான். அவன் என் கையில் கிடைத்தால் அவன் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவேன் ! வஞ்சகன், வாயாடி, மோசக்காரன் அவன் ! பார்த்தால் ஆடு போல் தெரிவான் ! பாசாங்குக்காரன் !

    நெப்போலியன்: எப்படி நீ ஏமாந்தாய் என்று சொல் ? குதிரை எப்படிக் காணாமல் போனது ? இரகசியக் கடிதங்கள் எப்படிக் களவு போயின ? அந்தக் கயவன் ஓர் ஒற்றன் போல் தெரிகிறது ! ஒற்றனிடம் எல்லாக் கடிதங்களையும் இழந்து விட்டு நீதான் வெட்கமின்றி ஆடு போல் வந்து நிற்கிறாய் !

    லெஃப்டினென்ட்: அந்த வஞ்சகனைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன் பிரபு ! அதுதான் எனது முதல் வேலை !

    நெப்போலியன்: உன் முதல் வேலை இரகசியக் கடிதங்களை என்னிடம் கொண்டு வருவது. போ முதலில் அதைச் செய் ! நான் காத்திருக்கிறேன். போ ! நில்லாதே என் முன்பு !

    லெஃப்டினென்ட்: அந்தக் கயவன் என் சகோதரன் போல் நடித்தான். அவன் சகோதரியின் கண்கள் போல் என் கண்கள் இருக்கிறதாம் ! என் காதலி அஞ்சலிகா பிரிந்து போனதைக் கேட்டு உண்மையாகக் கண்ணீர் வடித்தான் அந்த வஞ்சகன் ! ஹோட்டலில் என்னுடன் உள்ள போது என் ஒயின் மதுவுக்கும் காசு கொடுத்தான் அந்தக் கயவன் ! ஆனால் உண்ணும் போது பிரெட்டை மட்டும் தின்று ஒயினை அவன் குடிக்கவில்லை ! அதையும் நீயே குடியென்று அன்பாகக் கொடுத்தான் எனக்கு அந்தப் பாசாங்குக்காரன் !

    நெப்போலியன்: அதாவது உனக்கு ஒயினை ஊற்றிக் குடிபோதையை உண்டாக்கி விட்டான் அந்த ஒற்றன் !

    லெஃப்டினென்ட்: அது மட்டுமில்லை ! அவனது கைத் துப்பாகி, குதிரை, கடிதங்களை என் கையில் கொடுத்தான் !

    நெப்போலியன்: ஏன் அப்படிக் கொடுத்தான் உன்னிடம் ?

    லெஃப்டினென்ட்: என் நம்பிக்கையைச் சம்பாதிக்க பிரபு !

    நெப்போலியன்: அறிவு கெட்டவனே ! உன் மூஞ்சில் ஒற்றன் ஒருவன் கரியைப் பூசி உன் கண்களைக் கட்டுவது எப்படித் தெரியாமல் போனது ?

    லெஃப்டினென்ட்: அவன் என் மீது நம்பிக்கை காட்டியதும் நான் பதிலுக்கு என் நம்பிக்கையை அவன் மீது காட்டினேன் ! என் குதிரை, கைத் துப்பாக்கி, கடிதங்களை எல்லாம் அவனிடம் கொடுத்தேன் !

    நெப்போலியன்: மதி கெட்டவனே ! அவன் உன்னை ஒரு மந்தியாக மாற்றியது கூடத் தெரிய வில்லையே உனக்கு ! உன் கடிதங்களை அபகரிக்க ஒற்றன் செய்த தந்திரம் கூடத் தெரிய வில்லையே ! எங்கே காட்டு, அவன் உனக்குக் கொடுத்த கடிதங்களை ?

    லெஃப்டினென்ட்: அவற்றையும் அந்தக் கயவனே திருடி விட்டான் பிரபு ! அந்த வாலிபன் ஒரு நய வஞ்சகன் ! அகப்பட்டால் அவன் கையை முறித்து அடுப்பில் போடுவேன் ! காலை முறித்துக் கழுக்குக்கு இரையாக்குவேன் !

    நெப்போலியன்: அதை எத்தனை முறைச் சொல்லுவாய் ? போ போய் அவன் காலில் விழுந்து நமது கடிதங்களைப் பெற்று வா ! கையை முறிக்கவும் வேண்டாம். காலை வெட்டிக் கழுகுக்கு இடவும் வேண்டாம் ! அந்த ஒற்றன் யார் என்றாவது தெரிந்து கொண்டாயா ?

    லெஃப்டினென்ட்: (கேலியாக) பெண்ணழகியா அவள் ? அவள் ஓர் ஆடவன் ! என்னை ஏமாற்றிய எத்தன் உம்மையும் ஏமாற்றுகிறான் ! இந்த வஞ்சகனை நம்பாதீர் பிரபு !

    ஹெலினா: (நெப்போலியன் பின்னால் ஓடி நின்று) அவனை நிறுத்துவீர் ஜெனரல் ! யாரையோ நினைத்து என்னைத் தூற்றுகிறான் ! மதி கலங்கி நிற்கிறான் !

    நெப்போலியன்: நிறுத்து உன் புலம்பலை ! நெருங்காதே என்று நான் ஆணையிட்டும் நீ அவளை ஏன் மிரட்டுகிறாய் ? உன்னைக் கைது செய்கிறேன் ! முதல் குற்றம் : அரசாங்கக் கடிதங்களை இழந்தது ! இரண்டாம் குற்றம் : அழகிய பெண்ணை ஆடவன் என்று அடிக்கப் போனது ! மூன்றாவது குற்றம் : என் ஆணையை மீறியது !

    லெஃப்டினென்ட்: மேதகு ஜெனரல் ! இவன் ஓர் ஆஸ்டிரிய ஒற்றன் ! வஞ்சிப்பது இவன் தொழில் ! வழிப்பறி செய்வது இவன் பணி ! என் கண்ணை நான் நம்புவதா இல்லையா ?

    ஹெலினா: ஜெனரல் ! இவன் ஏசுவது என் சகோதரனை ! என்னைப் போலிருப்பவன் அவன் ! என் இரட்டைப் பிறவி ! ஆம் அவன் ஆஸ்டிரியப் படையில் இருக்கிறான்.

    லெஃப்டினென்ட்: (வியப்புடன்) அப்படியா ? என்னை ஏமாற்றியவன் உன் சகோதரனா ? என்னால் நம்ப முடிய வில்லையே ! உன்னைப் போல் ஒருவனா ?

    ஹெலினா: என்னை நம்பலாம் ! ஆனால் என் சகோதரனை நம்பக் கூடாது !

    லெஃப்டினென்ட்: உன் சகோதரனை நம்பினேன், ஏமாந்தேன் ! உன்னைத்தான் நம்ப முடியவில்லை என்னால் !

    ஹெலினா: சரி, என்னை நம்ப வேண்டாம் ! சகோதரனை நம்பினால் மகிழ்ச்சிதான் !

    கியூஸெப்: குழப்புகிறாயே ஹெலினா ! உன்னை நம்ப வேண்டாம் என்று சொல்கிறாயே !

    ஹெலினா: என்னை நம்புவதற்குதான் அப்படிச் சொன்னேன் !

    நெப்போலியன்: நான் உன்னை நம்புகிறேன் ஹெலினா ! நீ ஒரு பெண் ! ஆணில்லை !

    லெஃப்டினென்ட்: அவள் பெண் வேடம் போட்ட ஆண் ! அல்லது அவள் சகோதரன் ஆண் வேடம் போட்ட பெண் !

    ஹெலீனா: நான் லெ·ப்டினென்டை நம்புகிறேன் அவர் என்னை நம்பாவிட்டாலும் !

    நெப்போலியன்: அறிவற்று உளறுகிறாய் ! போ வெளியே ! கட்டளைக்கு அடி பணி !

    லெஃப்டினென்ட்: ஒற்றரை நம்பக் கூடாது என்று கற்றுக் கொண்டேன் ! ஒன்றாய்த் தெரியும் இரட்டையரையும் நம்பக் கூடாது ஜெனெரல் !

    நெப்போலியன்: என் பொறுமையைச் சோதிக்கிறாய் லெஃப்டினென்ட் ! வெளியே போ !

    ஹெலினா: வேண்டாம் ! லெஃப்டினென்ட் உண்ண வேண்டும் ! உறங்க வேண்டும். நான் அவருக்குப் பதிலாக வெளியே போகிறேன் !

    நெப்போலியன்: நீ போகக் கூடாது ஹெலீனா ! உன்னிடம் ஒன்றைக் கேட்க வேண்டும். உன் சகோதரன் ஏன் எமது கடிதங்களைப் பறித்துக் கொண்டு போனான் ?

    கியூஸெப்: தளபதி ஸார் ! தயவுசெய்து போய் விடுங்கள் (கதவைத் திறக்கிறான்) விடுதியில் சண்டை நேர்ந்தால் வாடிக்காரர் எல்லாம் ஓடிவிடுவார் !

    லெஃப்டினென்ட்: (நெப்போலியனைப் பார்த்து) எச்சரிக்கை ஜெனரல் ! இந்தப் பெண்ணை விடாதீர் ! இவள் மூலம் அவள் சகோதரனைப் பிடிக்கலாம் ! நமது இரகசியக் கடிதங்களைக் கைப்பற்றலாம் ! (பெண்ணைப் பார்த்து) மேடம் ! நான் வருந்துகிறேன் என் தவறுக்கு ! உன் சகோதரனாக எண்ணி விட்டேன் உன்னை !

    ஹெலினா: அது உமது தவறில்லை ! உமது கோபம் தணிந்தது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். (கைகுலுக்கக் கரத்தை நீட்டுகிறாள்)

    லெஃப்டினென்ட்: (ஹெலினா கையை முத்தமிட்டு) உன் கரம் உன் சகோதரன் கரம் போல் உள்ளது. மோதிரமும் அதே மாதிரித் தெரிகிறது !

    ஹெலினா: நாங்கள் இருவரும் இரட்டையர் அல்லவா ? ஒரே மாதிரி நடப்போம், பேசுவோம், உடை அணிவோம் ! மோதிரம் கூட ஒன்றுதான் !

    லெஃப்டினென்ட்: அதுதான் தெரிகிறதே ! ஏமாற்றுவதிலும் கூட ஒரே மாதிரி இருக்குமா ?

    ஹெலினா: அதில் மட்டும் ஒற்றுமை இல்லை ! அவன் ஓர் ஆண்மகன் ! நானொரு பெண் ! அவனுக்குக் கல் மனது ! எனக்குப் பெண் மனது ! ஆண் ஏமாற்றுவான் ! பெண் ஏமாறுவாள் !

    லெஃப்டினென்ட்: என்னைப் பொறுத்த வரையில் ஆண் ஏமாறுவான் ! பெண் ஏமாற்றுவாள் ! ஆனால் நீ நல்ல பெண் ! எவரையும் ஏமாற்றாதவள் ! சரி நான் போகிறேன் ஜெனரல். (போகிறான்)

    நெப்போலியன்: (சிரித்துக் கொண்டு) முட்டாள் ! போய்த் தொலைந்தான் !

    ஹெலினா: (புன்னகையோடு) நான் எப்படி நன்றி சொல்வேன் உங்களுக்கு ? நீங்கள் கனிவான மனிதர் ஜெனரல் ! அந்த தளபதியின் முகத்தில் கடுகடுப்புதான் தோன்றுகிறது.

    நெப்போலியன்: (புன்னகையுடன்) எனக்கு உன் உதவி தேவை. உன் சகோதரனைக் கண்டுபிடித்து என் அரசாங்கக் கடிதங்களைக் கொண்டுவர வேண்டும். (சற்று அதட்டலுடன்) என் காவலை ஏமாற்றி விட்டான் அந்தக் கயவன் ! அந்தக் கடிதங்கள் எனக்குத் தேவை. அதை உடனே செய்வாயா என்ன ?

    ஹெலினா: (அதிர்ச்சி அடைந்து கண் கலங்கிக் கண்ணீரைத் துடைத்து) என்ன மிரட்டுகிறீர் ஜெனரல் ? எனக்கு ஒன்றும் தெரியாது !

    நெப்போலியன்: என்ன ? உன் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறாயா ? என் ஆயுதமெல்லாம் உன் ஆயுதத்தின் முன் தோற்றுப் போய்விடும் ! அழாதே ஹெலினா ! நீ கண்டுபிடிக்காவிட்டால் நான் கண்டுபிடிக்கிறேன் !

    ***************************
    “மதத்தின் உதவியின்றி எப்படி ஒரு நாட்டை ஆட்சி செய்வது ? செல்வீகச் சமத்துவமின்மைத் (Inequality of Fortune) தவிர்த்துச் சமூகம் நிலைத்திருக்க முடியாது ! ஆனால் செல்வீகச் சமத்துவமின்மை மதத்தின் துணையின்றி வரவேற்கப்பட மாட்டாது ! நானொரு காத்தலிக் மதத்தினனாக மாறிய பிறகுதான் வெண்டீ (Vendளூe)* இனத்தாரைச் சாமாதானப் படுத்த முடிந்தது. நான் யூதரை ஆட்சி செய்ய நேர்ந்தால் சாலமன் ஆலயத்தை மீண்டும் கட்டிப் புதுப்பிப்பேன் ! சொர்க்கம் என்பது மனித ஆத்மாக்கள் வெவ்வேறு பாதைகளில் சென்றடையும் ஓர் மைய அரங்கம் !”
    நெப்போலியன் (வெண்டீ யுத்தம்) (1800-1815)
    ***************************

    ஹெலினா: உங்கள் குதிரையில் என் சகோதரன் எங்கே சுற்றித் திரிகிறான் என்பது எனக்குத் தெரியாது. லெ·ப்டினென்ட் ஒருவருக்குத்தான் அவன் இருப்பிடம் தெரியும். அவர்தான் என் சகோதரனைப் பிடிக்க முடியும்.

    நெப்போலியன்: நீவீர் இருவரும் இரட்டையர் அல்லவா ? எப்படி உனக்குத் தெரியாமல் இருக்கும் ? ஆனால் பெண்கள் துணிந்து பொய் சொல்வார் ! உண்மை எப்போதாவது பேசுவாயா ? என்னிடம் யாரும் பொய் பேசக் கூடாது ! நான் யார் தெரியுமா ?

    ஹெலினா: (இத்தாலியர் உச்சரிப்பில்) ஓ எனக்குத் தெரியுமே ! நீங்கள் உன்னதப் புகழ் பெற்ற ஜெனரல் நெப்போலியன் பௌனபார்ட் !

    நெப்பொலியன்: (சற்று கோபத்துடன்) பௌனபார்ட் இல்லை ! போனபார்ட் மேடம் போன்பார்ட் ! எங்கே ஓவென்று வாயைப் பிளந்து சரியாக உச்சரி !

    ஹெலினா: (உதாசீனமாக) நாங்கள் எல்லாம் பௌனபார்ட் என்றுதான் சொல்வோம் ! எப்படி உச்சரித்தாலும் நெப்போலியன் நெப்போலியன் தானே ! யார் உங்களை வெல்ல முடியும் ?

    நெப்பொலியன்: நான் பெண்களிடம் தோற்றுப் போகிறேன் ! என் பேரைச் சரிவரச் சொல்ல உன்னை வற்புறுத்த முடியவில்லை என்னால் ! என் கடிதங்களை உன் சகோதரனிடமிருந்து பெற்று வரச் சொன்னேன் ! நீ மறுக்கிறாய் ! கொண்டு வந்தால் உனக்குச் சன்மானம் கிடைக்கும் ! (கைக்குட்டையை எடுத்து நுகர்ந்து கொண்டு) இந்த நறுமணம் உன் மீதும் வீசுகிறது ! இந்தக் கைக்குட்டை எனக்குக் கொடுத்தவன் எனது லெ·ப்டினென்ட் ! அவனுக்கு இதைக் கொடுத்தவன் உன் வஞ்சகச் சகோதரன் ! (அதட்டலோடு) அவனைப் பிடித்து என்னிடம் கொண்டு வருவாயா ?

    ஹெலினா: (கம்பீரமாக நிமிர்ந்து) ஜெனரல் ! பெண்டிரை நீங்கள் மிரட்டுவது உண்டா ? உங்களுக்குக் கடிதங்கள் தேவையென்றால் என்னை ஏன் மிரட்டுகிறீர் ? ஏமாந்தது உங்கள் லெ·ப்டினென்ட். ஆனால் மிரட்டுவது நீங்கள் !

    நெப்பொலியன்: (அழுத்தமாக) ஆமாம் ! அதுவும் பொய் பேசும் பெண்ணை அறவே பிடிக்காது !

    ஹெலினா: (அசட்டையாக) எனக்குப் புரிய வில்லை நீங்கள் சொல்வது ! உண்மை எதுவென்று தெரியாத நீங்கள் பொய்யை எப்படிக் கண்டுபிடித்தீர் ?

    நெப்பொலியன்: இந்தக் கைக்குட்டை நறுமணத்தில் ! உன் அழகு மேனியில் இதே நறுமணம் வீசுகிறது ! நீ இங்கு வந்திருக்கும் காரணம் எனக்குத் தெரியும். நீ ஒற்று உளவு செய்யும் ஒர் ஆஸ்டிரிய மாது ! ஊழியத்துக்கு உன்னை வைத்திருக்கும் உன் அதிகாரிகளுக்குத் தெரியம், நான் ஆறு மைல் தூரத்தில் இருக்கிறேன் என்று. என் பகைவர் எதிர்பாராத இடத்தில் நான் காணப் படுபவன் ! இப்போது நீ சிங்கத்தின் குகையில் நுழைந்திருக்கிறாய் பெண்ணே ! வரவேற்கிறேன் உன்னை ! நீ மிக்கத் தைரியசாலி ! அறிவோடு நடந்து கொள் ! விரையம் செய்ய நேர மில்லை எனக்கு ! எங்கே இருக்கும் என் கடிதங்கள் ?

    ஹெலினா: (கண்களில் கண்ணீருடன் மனமுடைந்து) நானா தைரியசாலி ? உங்கள் சிறுஅதட்டலே என் கண்களைக் குலுக்கி விட்டது ! கொஞ்சமும் தெரிவில்லை உமக்கு ! இன்றைய நாள் பூராவும் நான் மனமுடைந்து பயத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். ஒவ்வொரு சந்தேக நோக்கும் பளுவோடு என் நெஞ்சைத் தாக்கிறது ! பயமுறுத்தலும், அதட்டலும் இதயத்தைப் புண்ணாக்குகிறது ! உம்மைப் போல் ஒவ்வொருவனும் நெஞ்சுறுதியோடு இருக்க முடியுமா ? நானொரு பெண் ! ஓர் ஆண் தளபதியைப் போல் பெண் ஒருத்தி தீரமாய் இருப்பாளா ? நானொரு கோழைப் பெண் ! வன்முறைக்கு அஞ்சி ஒளிபவள் நான் ! அபாயத்துக்குள் சிக்கிக் கொள்வது எனக்கு வேதனை அளிக்கும்.

    நெப்போலியன்: பிறகு ஏன் அபாயத்தில் நுழைந்திருக்கிறாய் ? பிரெஞ்ச் நாட்டின் புனித நங்கை ஜோன் ஆ·ப் ஆர்க்கைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்காயா ? அந்தப் பெண்ணைப் போலொரு வாளேந்திய வீர மங்கை இதுவரைப் பிறக்க வில்லை ! அவள் ஒரு போர்த் தளபதி ! பிரெஞ்ச் ராணுவத்தை முன்னடத்திச் சென்று பிரிட்டனை விரட்டிய வீராங்கனை அவள் ! நீ ஒற்று வேலை புரியும் உளவுப் பெண் ! சிங்கத்திடம் சிக்கிக் கொண்ட செம்மறி ஆடு !

    ஹெலினா: வேறு வழியில்லை எனக்கு ! யாரையும் நம்ப முடியவில்லை ! எனக்குத் தெரியும். இப்போது நான் தப்ப முடியாது ! எல்லாம் உம்மால்தான் ! உமக்கோ அச்சமில்லை ! நெஞ்சில் இரக்க மில்லை ! உயிர்கள் மீது பரிவில்லாத் தளபதி ! (தள்ளாடி வீழ்ந்து மண்டி இடுகிறாள்.) ஜெனரல் ஸார் ! என்னைப் போக அனுமதி செய்வீர் ! வினாக்களில் என்னைத் துளைக்காமல் விட்டுவிடுவீர் ! உங்கள் கடிதங்களை உமக்குக் கொண்டு வந்து சேர்க்கிறேன் ! நிச்சயமாய் ! சத்தியமாய் !

    நெப்போலியன்: (மனமிரங்கி) சரி ! நான் அவற்றுக்குக் காத்திருக்கிறேன் ! போய்க் கொண்டுவா !

    ஹெலினா: (பெருமூச்சு விட்டு மெதுவாக எழுந்து) கனிவான மொழிக்கு என் பணிவான நன்றி ! அவற்றைக் கொண்டுவந்து சேர்க்கிறேன் ! என் அறையில்தான் உள்ளன ! நான் போகலாமா ?

    நெப்போலியன்: நானும் உன் கூட வருகிறேன் !

    ஹெலினா: என் பின்னால் நீங்கள் வருவதை நான் விரும்பவில்லை ஜெனரல் ! நம்புங்கள் என்னை ! தனிப்பட்ட என் அறைக்கு ஓர் ஆடவன் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன் !

    நெப்போலியன்: அப்படியானால் நீ இங்கே இரு ! நான் உன் அறையில் தேடி எடுத்துக் கொள்கிறேன்.

    ஹெலினா: (அறுவறுப்புடன்) தேடி ஏமாந்து போவீர் ஜெனரல் ! அந்தக் கடிதங்கள் மெய்யாக என் அறையில் இல்லை !

    நெப்போலியன்: என்ன சொன்னாய் ? இருக்கு என்பது உண்மையா ? இல்லை என்பது உண்மையா ? என்னைக் குழப்பி அடிக்கிறாய் பெண்ணே !

    ***************************
    (Vendée)* : The Vendée (French) is a Region in west central France, on the Atlantic Ocean. The name Vendée is taken from the Vendée River which runs through the south-eastern part of the Region. The Hundred Years’ War (1337-1453) turned much of the Vendளூe into a battleground.
    Since the Vendée held a considerable number of influential Protestants, including control by Jeanne d’Albret the region was greatly affected by the French Wars of Religion which broke out in 1562 and continued until 1598.
    In 1815, when Napoleon returned from Elba for his Hundred Days, La Vendée refused to recognise him and stayed loyal to King Louis XVIII . General Lamarque led 10,000 men into La Vendளூe to pacify the Region.

    ***************************

    “எனக்குக் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். அனைவரையும் ஐக்கியமாக்குவது, ஒத்திசைவு செய்வது, எல்லா வெறுப்புகளையும் மறக்கச் செய்வது, யாவரையும் ஒருமைப் படுத்துவது, வெவ்வேறு இனத்தாரை இணைத்து ஒருங்கே வரச் செய்வது, முழுமையாக எல்லோரையும் புதுப்பிப்பது, ஒரே பிரான்ஸ் ! ஒரே கட்சி !”
    நெப்போலியன் (செயின்ட் ஹெலினா தீவிலிருந்து)

    ஹெலினா: ஜெனரல் ! என்னிடம் உள்ளது ஒரே ஒரு கடிதம் ! அதுவும் தனிப்பட்ட கடிதம். அரசாங்கக் கடிதமில்லை அது. அதை நான் வைத்திருக்க எனக்கு உரிமை இல்லையா ? ஒன்றே ஒன்று ! நான் வைத்துக் கொள்ள நீங்கள் அனுமதிக்கக் கூடாதா ?

    நெப்போலியன்: (சற்று கடுமையாக) நியாயமான வேண்டுகோள்தான் ! உன் தனிப்பட்ட கடிதத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை ! ஆனால் உன் சகோதர ஒற்றன் களவாடிய என் அரசாங்கக் கடிதங்கள் எங்கே உள்ளன ? அதைச் சொல் எனக்கு !

    ஹெலினா: எனக்குத் தெரியாது. உங்கள் வற்புறுத்தல் தேவையற்றது. உங்கள் போர் வெற்றிக்காக ஆயிரக் கணக்காக உயிர்ப் பலிகளைச் செய்பவர் நீங்கள் ! அஞ்சாமல் நோகாமல் நீங்கள் செய்யும் கொலைகள் அவை ! உங்கள் பேராசைக்கோர் அளவில்லை ! எல்லை இல்லை ! ஊழ்விதி நிர்ணயம் செய்யும் மாவீரர் நீங்கள் ! ஆயுத மனிதன் என்று நான் சொல்வது ! என் மீது கருணை காட்டுங்கள் பிரபு ! பலவீனப் பெண் நான் ! அஞ்சா நெஞ்சர் நீங்கள் ! (பரிவோடு மண்டியிட்டு நெப்போலியனை நோக்குகிறாள்).

    நெப்போலியன்: (வாஞ்சையோடு) எழுந்திடு பெண்ணே ! எழுந்திடு ! (அவளை விட்டு சற்று அகன்று திரும்பிப் பார்த்து) அறிவில்லாமல் பேசுகிறாய் நீ ! அதுவும் தெரிந்தே பேசுகிறாய் ! (ஹெலினா மெதுவாகப் பெஞ்சில் அமர்கிறாள். நகர்ந்து சென்ற நெப்போலியன் திரும்பி வந்து அவள் அருகில் அமர்கிறான். ஹெலினா பயந்து போய்ச் சற்று நகன்று உட்காருகிறாள்.) பெண்ணே ! நான் பலசாலி என்று எப்படி உனக்குத் தெரியும் ?

    ஹெலினா: என்ன ? நெப்போலியன் பௌனபார்ட்டா இப்படிக் கேட்பது ?

    நெப்போலியன்: தப்பாக உச்சரிக்கிறாயே ! நெப்போலியன் போனபார்ட் !

    ஹெலினா: எப்படிக் கேட்கலாம் இந்தக் கேள்வியை நீங்கள் ? இரண்டு நாட்களுக்கு முன்னால் நீங்கள் வட இத்தாலிய எல்லைப் பகுதியில் லோதி பாலத்தின் (Lodi Bridge Near Miland, Italy) மீது நின்று, பீரங்கிகள் சுட்டுப் பொசுக்கும் மரண நாற்றத்தைச் சுவாசித்துக் கொண்டிருந்தீர் ! வல்லமை இல்லாத ஒரு ஜெனரலா இப்படித் தீரச்செயலைச் செய்ய முடியும் ?

    நெப்போலியன்: பலே பலே வாலிப் பெண்ணே ! நீயும் உன் சகோதரன் போலோர் ஒற்று வேலை செய்பவள் என்பதை நிரூபித்து விட்டாய் ! நான் சந்தேகப் பட்டது சரியாய்ப் போனது ! என்னிடமே என் கதையைச் சொல்லும் ஒரு துணிச்சல்காரி நீ ! என்னை விடப் பலசாலி நீதான் !

    ஹெலினா: நான் பலசாலியா ? (சற்று சிந்தித்து) அப்படியானால் நீங்கள் ஒரு கோழையா என்று நான் கேட்பேன் !

    நெப்போலியன்: (கடுமையாய்ச் சிரித்துக் கொண்டு தன் தொடையைத் தட்டி) அப்படி ஒரு வினாவை மாவீரன் ஒருவனிடம் நீ கேட்கக் கூடாது ! படை வீரரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரி உயரம், எடை, வயதை மட்டுமே கேட்பான்; ஆனால் மனிதன் வல்லமையைக் கேட்பதில்லை. படை வீரனுக்குப் பயம் உள்ளதா என்று கேட்பதில்லை !

    ஹெலினா: (சற்று கேலியாக) : ஆஹா ! நீங்கள் பயத்தை எள்ளி நடையாடுகிறீர் ! அச்சம் என்பதை அறியாதவரா நீங்களா ?

    நெப்போலியன்: (துடுக்காக) ஒருவேளை நீயே அந்தக் கடிதங்களைப் பறித்து நான் லோதி பாலத்தில் நின்ற போது பீரங்கி வெடிக்குத் தப்பி ஓடி வந்திருந்தால் அஞ்சி இருப்பாயா ?

    ஹெலினா: (நெஞ்சில் கைவைத்து) ஐயோ ! பீரங்கி வெடியா ? என் நெஞ்சே வெடித்துப் போயிருக்குமே ! சாதாண மனிதனைக் கொல்ல இத்தனை பெரிய சாதனம் எதற்கு ? உங்கள் பராக்கிரம் வெறும் பீரங்கி வெடியில்தான் இருக்கிறது ! உங்களிடம் இல்லை என்று தெரிகிறது ! பீரங்கிகள் இல்லாமல் போனால் நீங்கள் வெற்று வெடிதான் !

    நெப்போலியன்: லோதிப் பாலத்தில் நீ பயமின்றி வந்து எங்கள் கடிதங்களைக் களவு செய்திருப்பாயா ?

    ஹெலினா: (அழுத்தமாக) நிச்சயமாகச் செய்திருப்பேன் ! என் வேலையே அது ! உங்கள் பீரங்கி வெடிக்கு நான் பயந்திருக்க மாட்டேன் !

    நெப்போலியன்: (வெடுக்கென) மறுபடியும் என்னிடம் பொய் பேசுகிறாய் பெண்ணே ! பயத்தைப் பற்றி நான் சொல்கிறேன். போரில் பயப்படாத மனித ஆத்மாவே இல்லை. என் கடிதங்களை இரட்டையர் நீவீர் ஒளித்து வைத்து ஒரு சிங்கத்தோடு விளையாடுகிறீர் ! எனக்குப் பயங்காட்ட என் பகைவர் உம்மை அனுப்பியுள்ளார் ! உலக மெங்கும் நிலவிடும் ஆவேச உணர்ச்சி ஒன்றே ஒன்று ! அதுதான் பயம் என்பது ! ஒருவனிடம் உள்ள ஆயிரக் கணக்கான பண்பாடுகளில் உறுதியாக ஓர் இராணுவ முரசடிக்கும் சிறுவனும், என்னைப் போலவே, பயத்தோடுதான் உள்ளான் ! அந்தப் பயமே அவனைப் போரிடத் தூண்டும் ! அக்கறையின்மையே அவரை ஓட வைக்கிறது ! போரை நடத்தும் உந்து விசையே பயம்தான் ! பயம் ! பயமென்றால் நான் அறிவேன் ! உன்னை விடப் பயத்தை நான் நன்கு அறிந்தவன் ! பாரிசில் ஒருமுறை பலம் மிகுந்த சுவிஸ் இராணுவத்தினர் குழாம் முழுவதும் படுகொலை செய்யப்பட்டது ஒரு கலவரக் கூட்டத்தால் ! காரணம் நான் பயத்தால் தலையிடாமல் போனது. நானொரு கோழையாய் அப்போது எனக்கே நான் காணப் பட்டேன் ! ஏழு மாதங்களுக்கு முன்னால் அந்த வெட்கக் கேட்டைப் பழிவாங்கினேன், என் பீரங்கியால் அந்தக் கலவரக் கூட்டத்தைத் தூளாக்கி !

    ***************************
    “மதம் என்பது கற்பனையில் வந்த ஓர் ஊசி மருந்து (Vaccine of Imagination) ! அம்மருந்து அறிவுக்கு ஒவ்வாத ஆபத்தான நம்பிக்கைகளிலிருந்து காப்பாற்றுகிறது. அறைகுறை அறிவுள்ள ஒரு குரு ஊழியம் செய்யும் ஒருவனை இந்த வாழ்வு வெறும் பயணம் தவிர வேறில்லை என்று சொல்லும் அளவுக்குத் திறமை பெற்றுள்ளான். நன்னம்பிக்கையை மாந்தரிடமிருந்து நீக்கினால் முடிவாக வழிப்பறிக் கொள்ளைக்காரரை நீ உருவாக்குவாய்.”
    நெப்போலியன் (Declaration at the Council of State) (1804)
    “நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாகச் சாதித்து விட்டோம். பிரான்சுக்கு ஓர் அரசனை நிலைநாட்ட நினைத்தோம். ஆனால் நிலைபெற்றவர் ஒரு சக்ரவர்த்தி.”
    ஜார்ஜெஸ் கடவ்தால் (Georges Cadoudal, Royalist Conspirator)
    ***************************

    நெப்போலியன்: (வெடுக்கென) மறுபடியும் என்னிடம் பொய் பேசுகிறாய் பெண்ணே ! பயத்தைப் பற்றி நான் சொல்கிறேன். போரில் பயப்படாத மனித ஆத்மாவே இல்லை. என் கடிதங்களை இரட்டையர் நீவீர் ஒளித்து வைத்து ஒரு சிங்கத்தோடு விளையாடுகிறீர் ! எனக்குப் பயங்காட்ட என் பகைவர் உம்மை அனுப்பியுள்ளார் ! உலக மெங்கும் நிலவிடும் ஆவேச உணர்ச்சி ஒன்றே ஒன்று ! அதுதான் பயம் என்பது ! ஒருவனிடம் உள்ள ஆயிரக் கணக்கான பண்பாடுகளில் உறுதியாக ஓர் இராணுவ முரசடிக்கும் சிறுவனும், என்னைப் போலவே, பயத்தோடுதான் உள்ளான் ! அந்தப் பயமே அவனைப் போரிடத் தூண்டும் ! அக்கறையின்மையே அவரை ஓட வைக்கிறது ! போரை நடத்தும் உந்து விசையே பயம்தான் ! பயம் ! பயமென்றால் நான் அறிவேன் ! உன்னை விடப் பயத்தை நான் நன்கு அறிந்தவன் ! பாரிசில் ஒருமுறை பலம் மிகுந்த சுவிஸ் இராணுவத்தினர் குழாம் முழுவதும் படுகொலை செய்யப்பட்டது ஒரு கலவரக் கூட்டத்தால் ! காரணம் நான் பயத்தால் தலையிடாமல் போனது. நானொரு கோழையாய் அப்போது எனக்கே நான் காணப் பட்டேன் ! ஏழு மாதங்களுக்கு முன்னால் அந்த வெட்கக் கேட்டைப் பழிவாங்கினேன், என் பீரங்கியால் அந்தக் கலவரக் கூட்டத்தைத் தூளாக்கி.

    ஹெலினா: போர்முனையில் எப்போதும் வாய்திறந்து பேசுபவை உமது பீரங்கிகள் மட்டும்தான் ! மற்றவை யெல்லாம் அவை பின்னால் அணிவகுத்துச் செல்பவை.

    நெப்போலியன்: என்னாசைகள் நிறைவேறும் வரை என் பீரங்கிகள் கண்ணை மூடாது ! வாயை மூடாது ! சுழலும் சக்கரங்களும் ஓயாது ! பய உணர்ச்சி மனிதன் விரும்பிடும் எதையாவது அடையாமல் அவனைத் தடைசெய்கிறதா ? வா என்னோடு, உனக்குக் காட்டுகிறேன் ஒரு கிண்ணப் பிராந்தி வெகுமதிக்கு உயிரையே பணயம் வைக்கும் ஓராயிரம் கோழைகளை ! நீ நினைக்கிறாயா பட்டாளத்தில் மனிதனை விட தைரியமுள்ள மாதர் இல்லை என்று ? மாதரின் மதிப்பும் தகுதியும் மனிதனை விட மிகையானது ! பயமில்லாமல்தான் நீயும் உன் இரட்டைத் தமையனும் எங்கள் அரசாங்கக் கடிதங்களைக் களவாடி என்னைத் திண்டாட வைத்தீர் ?

    ஹெலினா: (சிரித்துக் கொண்டு) அப்போது நான் தைரியசாலி என்று பாராட்டுகிறீரா ? அல்லது நீங்கள் கோழையாகி விட்டீர் என்று காட்டுகிறீரா ?

    நெப்போலியன்: நான் மகா தீரன் என்று சொல்லமாட்டேன் ! மற்றவர் அப்படிச் சொல்லுவதைக் கேட்கும் என் காதுகள் ! அது உண்மையாக இருக்க வேண்டும் ! இல்லாவிட்டால் பிரென்ச் ஏகாதிபத்தியம் இத்தாலி வரை வந்திருக்காது ! நான் இப்போது பயத்தைப் பற்றி உனக்கு விளக்கம் தர முடியாது !

    ஹெலினா: நீங்கள் ஒரு தீரர், வீரர், சூரர் ! அதை நான் சொல்வேன் ஆயிரம் முறை ! ஐரோப்பிய வரலாற்றில் மகா அலெக்ஸாண்டருக்குப் பிறகு எழுந்த போர்த் தளபதி நீங்கள்தான் !

    நெப்போலியன்: ஆசியாவின் மீதும் எனக்கோர் கண்ணுள்ளது ! அதற்குத்தான் சூயஸ் கால்வாய் வெட்டும் திட்டமும் உருவாகி வருகிறது ! இந்தியாவில் பிரிட்டீஷ் ஆதிக்கத்தை நான் ஒழித்தாக வேண்டும்.

    ஹெலினா: நீங்கள்தான் உலகத்தை விடுவிக்க அளிக்க வந்த ஊழ்விதி மனிதர் !

    நெப்போலியன்: ஊழ்விதி மனிதன் ! நல்ல பட்டப் பெயர் ! ஆனால் அப்படி ஒருவன் பூமியில் பிறப்பதில்லை !

    ஹெலினா: ஆமாம் உதிப்பதில்லை ! ஆனால் உருவாக முடிகிறது ! அசுர வல்லரசுதான் பிறரது தலைவிதியை எழுதி வைக்கிறது ! எப்படி நீவீர் மாவீரராக மாறினீர் ?

    நெப்போலியன்: எப்படி நான் மாவீரன் ஆனேன் என்பது எனக்குத் தெரியாது. என் படையாட்கள்தான் என்னை வெற்றி வீரனாய் ஆக்கியவர் !

    ஹெலினா: இல்லை ! நீங்கள்தான் பச்சை மனிதரைப் படை வீரராய் மாற்றினீர் ! லோதிப் போரில் வெற்றி அடைந்தீர். அந்த வெற்றி உங்களுக்கா ? அல்லது வேறு யாருக்குமா ?

    நெப்போலியன்: ஆம் எனக்குத்தான் ! (சற்று சிந்த்தித்து) இல்லை, இல்லை ! பிரென்ச் குடியரசு மக்களின் ஊழியன் நான் ! அந்நாட்டின் பூர்வீக வரலாற்று நாயகர் வைத்த தடத்தில் நடந்து வந்தவன் நான் ! நான் வெல்வது குடிமக்களுக்கு ! என் நாட்டுக்கு ! வெற்றி எனக்காக இல்லை !

    ஹெலினா: அப்படியானால் நீவீர் ஒரு பெண்மைத்தன தீரர்தான் !

    நெப்போலியன்: (சற்று கோபத்துடன்) என்ன ? பெண்மைத்தனமா ?

    ஹெலினா: என்னைப் போல ! (வருத்தமாக) அரசாங்கக் கடிதங்களை நான் அபகரித்தாகச் சொல்கிறீர் ! அப்படியானால் அது நான் எனக்காகச் செய்தேனா ? அல்லது நாட்டுக்காகச் செய்தேனா ?

    நெப்போலியன்: உன் வீரத்தைக் காட்ட நீ செய்தது ! உனக்காகச் செய்தது நீ !

    ஹெலினா: ஜெனரல் ! உங்கள் கடிதங்களால் தனிப்பட்ட எனக்கு எந்தப் பயனும் உண்டாகாது ! அப்படி அவை எனக்குப் பயன் தந்தால் நான் உங்களைப் பார்க்கத் தைரியமாய் இந்த விடுதிக்கு வந்திருப்பேனா ? எனது தைரியம் ஓர் அடிமைத்தனமே ! எனக்கு அதில் பலாபலன் ஏதுவும் இல்லை !

    நெப்போலியன்: (வெறுப்புடன்) அப்படியானால் ஏன் எங்கள் கடிதங்களைப் பறித்துச் சென்றாய் ?

    ஹெலினா: கடிதங்களைக் களவாடியன் என் சகோதரன் ! என்னை ஓர் உதாரணத்துக்கு எடுத்துச் சொன்னேன்,

    நெப்போலியன்: மறுபடியும் பொய் பேசுகிறாய் பெண்ணே ! எனக்குக் குழப்பத்தை உண்டாக்கி உள்ளூரக் குதூகலம் அடைகிறாய் நீ !

    ஹெலினா: ஒருவனை நான் நேசித்தால், அவனும் என்னை நேசித்தால் மட்டுமே நான் துணிந்து எதையும் செய்வேன் ! தைரியமாய்ச் செய்வேன் ! பொய் சொல்வேன் ! வஞ்சம் செய்வேன் ! ஆனால் உண்மை சொல்வேன் பொய்யை மறைக்க !

    நெப்பொலியன்: இல்லை பெண்ணே ! பொய் சொல்கிறாய் நீ உண்மையை மறைக்க ! நீ சொல்வது எது உண்மை, எது பொய்யென்று என்னால் அறிய முடியவில்லை !

    ஹெலினா: அது உங்கள் இயலாமை ! எனக்குள்ள ஓர் வல்லமை ! நீங்கள் எத்தனைப் போரில் வெற்றி பெற்றாலும் பெண்ணிடம் தோற்றுத்தான் போகிறீர் ! குடிமக்களுக்காக வெற்றி பெறுவதாய்க் கூறும் நீங்கள் உண்மையில் உங்கள் தலையில் கிரீடத்தை ஏற்றிக் கொள்கிறீர் ! குடிமக்கள் தலையில் முடி சூட்டுவதில்லை ! முத்திரை அடித்த முன்மாதிரி பிரென்ச் மானிடன் நீங்கள் !

    நெப்பொலியன்: கீரிடம் ஜிகினா ஒட்டிய ஓர் மர வளையம் ! கீழே குனிந்தால் விழுந்து விடும் ஒரு போலித் தோரணம் ! நிலையற்றது ! நான் பிரென்ச் மானிடன் இல்லை !

    ஹெலினா: (ஏளனமாய்) நீங்கள் வெற்றி பெற்றது நாட்டுக்கு என்று சொல்லவில்லையா ? அதனால் உங்களைப் பிரெஞ்சுக்காரர் என்று கூறினேன் !

    நெப்பொலியன்: (வெகுண்டு) என் பொறுமையைச் சோதிக்கிறாய் பெண்ணே ! நானொரு பிரெஞ்ச் குடிமகன் ! ஆனால் பிரான்சில் பிறந்தவன் அல்லன் !

    ஹெலினா: என்ன ? நீங்கள் பிரான்சில் பிறக்க வில்லையா ? பின் எதற்காக பிரான்சுக்காக போரிடப் போகிறீர் ? எனக்குப் புரியவில்லை ஜெனரல் !

    ***************************
    “ஒரு மனிதன் தன்னை நோக்கி ‘நான் ஏன் வாழ்கிறேன்’ என்று புரியாமல் கேட்கும் போது, ‘எல்லோரைக் காட்டிலும் அவனொரு கீழான பிறவி’ என்பது எனது தனிப்பட்ட கருத்தாக இருக்கும். அவனது உடலின் யந்திர சாதனம் முறிந்து, மனிதனுக்குத் தேவையான இயக்கு சக்தியை அவன் இதயம் இழந்திருக்கிறது.”
    நெப்போலியன்
    “(நெப்போலியன்) எப்போதும் தன்வசம் உள்ள எல்லாவற்றையும் பயன்படுத்துவார். தன் வேலைகளுக்கு அனைத்துத் துறைகளையும் (Faculties) உதவிடச் செய்வார். உரையாடல் எதனிலும் தன் முழுக் கவனத்தைச் செலுத்துவார். ஒவ்வொன்றிலும் தன் உள்ளார்வ வேட்கையோடு (Passion) ஈடுபடுவார். ஆதலால் அவருக்கு அவரது எதிரிகளை விட மேலான சிறப்பு அம்சங்கள் இருந்தன. ஒரு குறிக்கோளில் முழு மனதை ஊன்றி, அந்த ஒரு கணத்தில் அந்த வினையை மட்டும் செய்பவர் மிகச் சிலரே.”
    “மெய்வருத்தம் பாராமல் எல்லையற்ற வல்லமையுடன் முனைவது, உள்ளொளி ஞானத்தோடு (Intuitive Sense) துணிவது, ஆளுமை ஆற்றலில் அசையாத உறுதி கொள்வது, குறிக்கோளில் மன அழுத்தம் உள்ளது – இந்தப் பண்பாடுகள்தான் நெப்போலியன் யாரென்று காட்டுபவை.”
    கௌலெயின்கோர்ட், நெப்போலியனின் நம்பிக்கைத் துணையாளி (Caulaincourt) (Napoleon’s Trusted Aide)
    ***************************

    நெப்போலியன்: இல்லை ! நான் பிரான்ஸ் நாட்டில் பிறக்கவில்லை.

    ஹெலினா: நான் நினைத்துக் கூடப் பார்க்க வில்லை. அப்படியானல் ஏன் உங்களுக்குப் பிரான்ஸ் நாட்டின் மீது அத்தனை அக்கறை, பற்று, மோகம், நேசம் ?

    நெப்போலியன்: நமக்கு மட்டும் நாம் வாழக் கூடாது சின்னப் பெண்ணே ! பிறருக்காக எப்போதும் நாம் சிந்திக்க வேண்டும் ! பிறருக்காக நாம் உழைக்க வேண்டும் ! அவருக்கு வழிகாட்டி அவரது நலனுக்காக நாம் அவரை ஆட்சி செய்ய வேண்டும். சுயப் பூர்த்தி தேடாமல், சுயநலம் கருதாமல் வாழ்வதே ஒருவரின் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும்.

    ஹெலினா: (ஏளனமாக) சொல்வதைப் பார்த்தால் ஏட்டு நெறி போல் தெரிகிறது. இது வெறும் உபதேசம். செய்து பார்க்காதவரை இவையெல்லாம் சுலபம்தான். நான் சின்னப் பெண்ணில்லை ஜெனரல் !

    நெப்போலியன்: (கோபத்தோடு) அப்படிச் சொன்னதின் அர்த்தம் என்ன ? உன்னைப் பெரிய மாதே என்று நான் விளிக்க மாட்டேன் ! நீ எனக்குச் சின்னப் பெண்தான் !

    ஹெலினா: ஆமாம் நீங்கள் ஒரு பெரிய சக்ரவர்த்தி அல்லவா ? ஆனால் நீங்கள் இளமையாக இருப்பதால் மற்றவரும் சின்னவராக இருக்க வேண்டுமா ? ஆயினும் நான் உங்களைச் சின்னவர் என்று சொல்ல மாட்டேன் ! சின்னவராகத் தெரிந்தாலும் நீங்கள் பெரிய தளபதிதான் !

    நெப்போலியன்: சின்னப் பெண்ணாயினும் நீ பெரிய சாமர்த்தியசாலி !

    ஹெலினா: (சிரித்துக் கொண்டு) பெரிய சக்ரவர்த்தியானாலும் நீங்கள் பெண்ணிடம் பணிவாக நடந்து கொள்கிறீர் ! மெய்ம்மை, தூய்மை, சுயநலமின்மை இம்மூன்றையும் எல்லோரும் உயர்வு நவிற்சியில் பேசுகிறார். ஏனென்றால் அவற்றைக் கடைப்பிடிப்பது அத்தனைச் சுலபமில்லை ! மேலும் அவற்றில் அனுபவம் இல்லை அவருக்கு !

    நெப்போலியன்: (சிரித்துக் கொண்டு கேலியாக) உனக்கு அனுபவம் உள்ளதா அவற்றில் ?

    ஹெலினா: ஆம் அனுபவம் உண்டு எனக்கு. நேர்மையான வழியில் வளர்ந்த துர்பாக்கியவதி நான் ! (நெப்போலியனைப் பக்கமாகப் பார்த்துக் கொண்டு) ஜெனரல் ! நான் சொல்கிறேன், அது ஒரு துர்பாக்கியம் ! நான் சத்திய வாணி ! தூய மாது ! சுயநலத்தை வெறுப்பவள் ! ஆனால் அவை எல்லாம் வெறும் கோழைத்தனமே தவிர வேறல்ல ! பண்பாடு இல்லாமை, சுயத் தன்மை இழப்பு, மெய்யாக வாழாமை, உறுதியாக இல்லாமை ஆகியவற்றைத்தான் அவை காட்டுகின்றன !

    நெப்போலியன்: (முகஞ் சுழித்து) மறுபடியும் புதிராகப் பேசுகிறாயே ! எது பாக்கியம், எது துர்பாக்கியம் என்பதைத் தலைகீழாகச் சொல்லிக் குழப்புகிறாயே ! நான் கற்றவற்றைச் சவால் விட்டு ஏளனம் செய்கிறாயே !

    ஹெலினா: (கூர்ந்து நோக்கி) சொல்லுங்கள் ! உங்கள் வல்லமைத் திறமையின் ரகசியம் என்ன ? என் ஊகிப்பு இது : உங்கள் மீது அசையாத நம்பிக்கை ! யுத்தம் செய்து வெற்றி பெறுவது நாட்டுக்கு ! உமக்கில்லை ! உமது ஊழ்விதி மேல் உங்களுக்கு எந்த அச்சமுமில்லை ! எமது ஊழ்விதியை மாற்றி அச்சம் ஊட்டுபவர் நீங்கள் ! எமக்கு உறுதி ஊட்டி, நல்வழிக்குப் பாதை காட்டி எமது எதிர்காலத்தைத் திறப்பவர் நீங்கள் ! (சட்டென மண்டியிட்டுக் கனிவோடு) நன்றி சொல்லக் கடமைப் பட்டவர் நாங்கள் ! வரவேற்று, வழிபட்டு, வந்தனம் செய்ய வேண்டும் நாங்கள் ! (நெப்போலியன் கையைப் பற்றி முத்தமிடுகிறாள்.)

    நெப்போலியன்: (நாணத்துடன் தடுமாறி உடல் கோணி) போதும், போதும் ! எழுந்திடு சின்னப் பெண்ணே ! வேண்டாம் இந்த விக்கிரக வழிபாடு !

    ஹெலினா: (எழாமல் மண்டியிட்டு) மறுக்காதீர் சக்ரவர்த்தி ! எங்கள் ஊழ்விதியை மாற்றுவது உங்கள் உரிமை ! அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை ! தோற்றவர் துதிபாடுவதும், வென்றவர் வெகுமதி பெறுவதும் தொன்று தொட்ட வழக்கம் ! உலகச் சம்பிரதாயம் பிரபு ! பிரான்ஸின் சக்ரவர்த்தி ஆவீர் நீங்கள் ! பெருமை உமக்குத்தான் எமக்கும்தான் !

    நெப்போலியன்: (அழுத்தமாக) பேச்சில் கவனம் வை ! இது துரோகச் செயல் பெண்ணே !

    ஹெலினா: ஆமாம் ! நீங்கள் பிரென்ச் சக்ரவர்த்திதான் ! நிச்சயம் அது ! அடுத்து ஐரோப்பாவுக்கு ! அப்புறம் இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ! ஏன் உலகுக்கே வரப் போகும் ஒப்பிலாச் சக்ரவர்த்தி ! உங்களை ஏற்றுக் கொண்டு உத்திரவாதம் செய்யும் முதல் குடிமகள் நான்தான் ! (மறுபடியும் கையில் முத்தமிடுகிறாள்.) எனது சக்ரவர்த்தி ! பேராயுதச் சக்ரவர்த்தி ! வீராயுதச் சக்ரவர்த்தி ! ஊழ்விதி மனிதர் !

    நெப்போலியன்: (தடுமாற்றமுடன்) இல்லை, இல்லை ! இது சரியில்லை, தப்பு ! அறியாமை ! (சற்று சிந்தித்து) இல்லை மேலான அறிவுடைமை பெண்ணே ! மெச்சுகிறேன் உன்னை !

    ஹெலினா: (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) இது என்னிடமுள்ள வீம்புத்தனம் ஜெனரல் ! இப்படித் திமிராக நானொரு சக்ரவர்த்தியிடம் ஞானமாகப் பேசக் கூடாது ! (தயங்கியபடி) என் மீது கோபமா உங்களுக்கு ?

    நெப்போலியன்: (கனிவாகக் குழைந்து) கோபமா ? இல்லை இல்லை ! நீ நல்ல மாது பொய் பேசினாலும் ! நீயொரு ஞானப் பெண் ! இனிப்பாகப் பேசிக் கல்லையும் கரைத்து விடுகிறாய் ! உன்னோடு நான் உரையாடுவதில் பேரானந்தம் அடைகிறேன் ! நேரம் போவதே தெரியவில்லை ! (மனம் நெகிழ்ந்து) நாம் நண்பராக இருக்கலாமா ?

    ஹெலினா: (பூரித்துப் போய்) உங்களோடு நண்பராகவா ? என்னை உங்கள் தோழியாக ஏற்றுக் கொள்வீரா ? நம்ப முடிய வில்லையே ! ஓ ஜெனரல் ! (எழுந்து நின்று தன்னிரு கரங்களையும் நீட்டுகிறாள். நெப்போலியன் மண்டியிட்டு அவள் கைகளை முத்தமிடுகிறான்.) பார்த்தீரா ? என் மீது உங்களுக்கு நன்னம்பிக்கை பிறந்திருக்கிறது.

    நெப்போலியன்: (தெளிவு பெற்று எழுந்து நின்று உரத்த குரலில்) என்ன சொல்கிறாய் ? உன் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா ? இல்லை ! நீ என் தோழி இல்லை, ஓர் அடிமை !மறந்து விடாதே அதை !

    ஹெலினா: ஜெனரல் ! யார் யாருக்கு அடிமை ? ஆணும் பெண்ணும் நண்பராய் வாழ முடியுமா ? ஆணை விடப் பெண்ணுக்கே ஆயுதங்கள் மிகுதி ! ஆதலால் ஆணைப் பெண் வெகு சுலமாக அடிமை ஆக்குவாள் ! கிளியோபாத்ராவுக்கு கோணல் மூக்குதான் ! ஆனாலும் ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸரும், அவரது போர் வீரன் மார்க் அண்டோனியும் அவள் காலடியிலே விழுந்து கிடந்தார் ! என்னை போல் அவளும் ஓர் சின்னப் பெண்தான் !

    நெப்போலியன்: (ஆத்திரம் அடைந்து) போதும் வழிபாட்டு நாடகம். சாமர்த்திய மாக என்னை நீ ஏமாற்றப் பார்க்கிறாய் சின்னப் பெண்ணே ! என்னிடம் செல்லாது உன் குறும்புத்தனம் ! என் ரகசியக் கடிதங்கள் எங்கே ? சொல் ! அவற்றை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் ?

    ***************************
    “எனக்கு எந்த மதத்திலும் ஈடுபாடு இல்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு எந்த ஒரு கற்பனை அச்சமும் இல்லை என்பதிலும் பெரும் திருப்தி உண்டாகிறது. எதிர்காலத்தைப் பற்றியும் பயம் கிடையாது எனக்கு.”
    “மனிதரை இரண்டு வித நெம்பு கோல்களில் நகர்த்தி விடலாம் : ஒன்று பயத்தை உண்டாக்கி, இரண்டாவது சுய விருப்பத்தைத் தூண்டி. (By Terrorizing & Creating Self-interest). புரட்சிப் போராட்டம் நடக்கும் போது பயமுறுத்துவது தவிர்க்க முடியாத ஒரு தீவிரப் போக்கு ! அதை மூட்டி விட வேண்டியதில்லை. நிறுத்தவும் தேவையில்லை. போரின் போது படைவீரர் செல்வக் களஞ்சியங்களைக் கொள்ளை யடிக்க வெட்கப்பட வேண்டிய தில்லை. அது சுய விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறது.”
    நெப்போலியன்.
    ***************************


    நெப்போலியன்: (ஆத்திரம் அடைந்து) போதும் வழிபாட்டு நாடகம். சாமர்த்தியமாக என்னை நீ ஏமாற்றப் பார்க்கிறாய் சின்னப் பெண்ணே ! என்னிடம் செல்லாது உன் குறும்புத்தனம் ! என் ரகசியக் கடிதங்கள் எங்கே ? சொல் ! அவற்றை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் ?

    ஹெலினா: சற்று முன் குழைந்து பேசிய நீங்கள் இப்போது என்னை மிரட்டுகிறீரா ? என்ன மன அழுத்தம் உமக்கு ?

    நெப்போலியன்: என்ன சொன்னாய் ? மன அழுத்தம் என்றா என்னைக் கேட்கிறாய் ?

    ஹெலினா: யார் நீங்கள் என்னை அதட்ட ? அதிகாரம் செய்ய ? நான் பிரென்ச் குடிவாசியும் யில்லை ! நீங்கள் எமது ஆஸ்டிரிய வேந்தரும் அல்லர் ! அவமதிக்கும் உங்கள் கார்ஸிகன் (Corsican) திமிர் வெளியே எட்டிப் பார்க்கிறதே !

    நெப்போலியன்: (கோபமாக) திமிர் என்றா சொல்கிறாய் ? நீ ஒரு பெண் பிசாசு ! என் கடிதங்களைக் கொண்டு வருகிறாயா ? இல்லை உன்னிருக்கையைச் சோதித்து நானே எடுத்துக் கொள்ளவா மூர்க்கத்தனமாய் ?

    ஹெலினா: (சட்டெனப் பயமின்றி) மூர்க்கத்தனமாய் எடுத்துக் கொள்வீர் !

    நெப்போலியன்: (புலிபோல் பாய வந்தவன் அதிர்ச்சியில் பின்வாங்கித் தன் கைகளைப் பின்னால் கட்டிக் கொள்கிறான். நெற்றி வியர்வையைத் துடைத்து சற்று சிந்திக்கிறான். அதட்டலும் அதிகாரமும் தோற்றுப் போய் தளர்ச்சி அடைந்து உதட்டைப் பிதுக்குகிறான். அவன் கோபம் தணிகிறது. அவளை உற்று நோக்கி விழிகள் பக்கவாட்டில் திரும்புகின்றன.) (மெதுவாக) அப்படியா சொல்கிறாய் ?

    ஹெலினா: இப்போது என்ன செய்யப் போகிறீர் ? உமது ஆணையை நான் மீறி விட்டேன் !

    நெப்போலியன்: (அதட்டலுடன்) உனது திமிரை அடக்க வேண்டும் சின்னப் பெண்ணே !

    ஹெலினா: அது காட்டுமிராண்டித்தனம் ஜெனரல் ! என்னை யாரும் அடக்க முடியாது ! ஆனால் சிறையில் போடலாம்.

    நெப்போலியன்: (கடுமையாக) என்னை யாரும் இதுவரை எதிர்த்த தில்லை ! எதிர்க்கக் கூடாது !

    ஹெலினா: யாரையும் நான் எதிர்க்க வில்லை ! பாருங்கள் என்னிடம் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா ? உம்மிடம்தான் ஆயுதம் உள்ளது ! ஆயுத மில்லாத மாதுடன் யாராவது போராடுவாரா ?

    நெப்போலியன்: உனக்கு நெஞ்சில் ஒரு பயம் கிடையாது ! நான் நெப்போலியன் போனபார்ட்.

    ஹெலினா: உமக்குத்தான் பயம் வந்து விட்டது இப்போது ! பெயரைச் சொன்னால் எனக்குப் பயம் வந்துவிடும் என்ற நினைப்பா ?

    நெப்போலியன்: (பெரு மூச்செடுத்து) சரி போதும் ! நான் சொல்வதைச் சற்று கேள் ! உன்னை எனக்குப் பிடிக்கிறது ! உன்னை நான் மதிக்கிறேன் !

    ஹெலினா: உம்மிடம் இல்லாதற்கு நீவீர் மதிக்கிறீர் அல்லவா ?

    நெப்போலியன்: (சற்று கோபத்தோடு) அப்படி எண்ணாதே சின்னப் பெண்ணே ! நீ வலுவற்ற பெண் என்பதால் என் வாள் வெளியே வரத் தயங்குகிறது ! நீ ஓரழகி என்பதால் என் நெஞ்சம் உன்னிடம் அடிமை ஆகிறது ! உன் மன அழுத்தத்தை எதிர்த்து என் ஆண்மை அடக்கத் தாவுகிறது. நீ ஆஸ்டிரியக் குடிவாசியாக இருப்பதால் உனக்குச் சமத்துவம் அளிக்க மனம் விழைகிறது. எமது ரகசியக் கடிதங்களை அபகரித்தால் உன்னைக் கடுங் காவலில் வைக்க உள்ளம் விரும்புகிறது. அதே சமயம் முடியாமையால் உன்னை விடுவிக்கவும் மனம் தூண்டுகிறது.

    ஹெலினா: இத்தனையும் உம்மை இப்போது ஆட்டிப் படைக்கிறது ! எதை முதலில் செய்வது எதை அடுத்து செய்வது என்று நீங்கள் திண்டாடுவது நன்றாகவே தெரிகிறது ! இத்தாலிய நகரை இரண்டே நாட்களில் பிடித்து விட்டீர் ! அடுத்து ஆஸ்டிரியா நகரை ஓரிரண்டு நாட்களில் பிடித்து விடுவீர் ! ஆனால் ஒரு சின்னப் பெண்ணிடமிருந்து உமது ரகசியக் கடிதங்களைப் பெற முடிய வில்லை ! இப்போதாவது தோல்வியை ஒப்புக் கொள்கிறீரா ?

    நெப்போலியன்: (தடுமாற்றமோடு, சிந்தனையுடன்) நான் என்றும் தோல்வி அடையவில்லை ! இதுவரை தோல்வி அடைந்ததில்லை ! இனிமேலும் தோல்வி அடையப் போவதில்லை !

    ஹெலினா: அப்படித்தான் எல்லாப் போராயுதத் தளபதிகளும் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தார். போரில் சில சமயம் பின்வாங்குவது நல்லது ! தீவிரமாய் முன்னேறித் தாக்குவதற்குச் செய்யும் ஒரு சூழ்ச்சி அது !

    நெப்போலியன்: (சற்று தலை குனிந்து) சரி நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன் சின்னப் பெண்ணே !

    ஹெலினா: (புன்னகையோடு) வெற்றி பெற்றேன் ஜெனரல் ! (அங்கிக்குள்ளே கையை விட்டு கடிதக் கட்டுகளை எடுத்து தலை வணங்கி) மேதகு நெப்போலியன் பௌனபார்ட் அவர்களே ! இதோ உமது ரகசியக் கடிதங்கள் ! (மெதுவாய்க் கடிதங்களை நெப்போலியன் கரத்தில் கொடுத்து விட்டு அச்சமுடன் பின்னால் நகர்ந்து செல்கிறாள். அதிர்ச்சியுற்ற நெப்போலியனின் கண்கள் கோபத்தில் நெருப்பைக் கக்குகின்றன.)

    நெப்போலியன்: (கோபத்தோடு) வெற்றி பெற்றது நானா ? அல்லது நீயா ?


    ***************************
    “பேராற்றல் பெருமிதமோடு நான் அதி விரைவாகத் தாக்கி, உலகத்தை அதிர்ச்சியில் வியக்க வைப்பேன்.”
    “செல்வீகக் கொடை (Fortune) என்பது ஓர் எழில் மாது. எத்தனைச் செம்மையாக அவள் எனக்குப் பணி செய்வாளோ அதற்கும் மேலாகச் செய்ய அவளை நான் வற்புறுத்துவேன்.”
    “மேற்கத்தியராகிய நாம் மாதரை மிகச் செம்மையாய் நடத்தி ஒவ்வொருவரையும் கெடுத்து விட்டோம். ஏறக்குறையாக நமக்கிணையாய் மாதருக்குச் சமத்துவம் அளித்ததில் நாம் பெருந் தவறைச் செய்து விட்டோம் ! கிழக்கத்தியர் அந்த முறையில் நம்மை விட அறிவோடு இருக்கிறார்.”
    நெப்போலியன்.
    ***************************

    ஹெலினா: வெற்றி பெற்றதும் நான் ! தோற்றுப் போனதும் நான் !

    நெப்போலியன்: (கடிதங்கள் அனைத்தும் திறக்கப் பட்டிருப்பதைப் பார்த்துக் கோபம் அடைகிறான். வேஜையில் கடிதங்களைப் பரப்பி முக்கியமானதை எடுத்து முதலில் படிக்கிறான்.) யாரிந்த கடிதங்களைத் திறந்தது ? யாரிதைப் படித்தது ? சொல் சின்னப் பெண்ணே ! நீ ஓர் ஒற்று மாது என்று நான் முதலில் சந்தேகப் பட்டது முற்றிலும் சரியே !

    ஹெலினா: அப்படி ஒற்று மாது என்றால் இந்தக் கடிதங்களை உமது கையில் கொடுக்க நான் இப்படி நேரே வருவேனா ? எப்போதே எரித்துச் சாம்பலாக்கி இருப்பேன் ! நான் சத்திய மங்கை ! உங்கள் கடிதங்களை உரிய இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்த பெண்டு நான் !

    நெப்போலியன்: (சீற்றமுடன்) திறக்காமல் கடிதங்களைக் கொடுத்திருந்தால் உன்னை நான் உத்தமி என்று முத்திரை அடிப்பேன் ! உமது ஆஸ்டிரிய அதிகார வர்க்கம் இந்தக் கடிதங்களைப் படித்ததால் உன்னை ஒற்று மங்கை என்றுதான் நான் குற்றம் சாட்டுவேன். கடிதங்களைக் களவாடிய உன்னைச் சிறையில் தள்ள வேண்டும். இந்தக் கடிதங்களை யாரும் படிக்க வில்லை என்று பைபிள் மேல் கைவைத்துச் சத்தியம் செய்வாயா நீ !

    ஹெலினா: நிச்சயம் செய்வேன் ! ஆனால் பைபிள் எனது பக்கத்தில் இல்லையே ! நானந்தக் கடிதங்களைப் படிக்க வில்லை ! யார் படித்தார் என்றும் தெரியாது ? கடிதங்களைக் களவாட விட்ட உமது லெ·ப்டினென்ட்தான் தண்டிக்கப்பட வேண்டும். பிரான்ஸின் ஜெனரலுக்கு இப்படி ஒரு மூடப் பணியாள் வேலைக்கு இருப்பது பிரான்சுக்கு மிக்க வெட்கக் கேடு !

    நெப்போலியன்: (கடிதம் படிப்பதை நிறுத்தி சினத்துடன்) என்ன சொன்னாய் ? உன் நாக்கைத் துண்டாக்க வேண்டும் ! மறுபடியும் நீ என் பொறுமையைச் சோதிக்கிறாய் ! அளவுக்கு மிஞ்சி உனது நாக்கு நீள்கிறது. இந்தக் கடிதங்களில் உள்ள செய்தி எனக்குத் தெரியாது என்று நினைக்காதே ! எனது முதல் தகவல் : ஆஸ்டிரிய இராணுவ தளபதி பியூலிவ் பின்வாங்குவது (Beaulieu’s Retreat)*. அதை இருமுறைகளில்தான் அவன் செயற்படுத்த முடியும் ! தோல் மண்டை மூடத் தளபதி அவன் ! மாண்டோவா (Mantova) நகரில் அவன் முடங்கிப் போவான்; அல்லது பெஸ்சீராவைப் (Peschiera) பிடித்துக் கொண்டு வெனிஸ் (Venice) நகர நடுமை நிலைக்கு இடர் விளைவிப்பான். நீயும் தோல் மூளையுள்ள போலி மங்கை ! உன்னைப் போன்ற ஒற்றர் தலைகள் உடனே வெட்டப்படும் ! வஞ்சிக்கப் பட்டதாய் உமது ஆஸ்டிரியன் தளபதி எண்ணிக் கடிதங்களைக் களவாட உன்னை அனுப்பி யுள்ளான். என்னிடமிருந்து அது தன்னைக் காக்கும் என்று நினைத்தான் அந்த முட்டாள் ! கடிதங்கள் பல எனக்குத் தனிப்பட வந்தவை. அவற்றால் உனக்கோர் பயனுமில்லை. எவருக்கும் பயனுமில்லை !

    ஹெலினா: நமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா ? ஆஸ்டிரிய இராணுவத்தைப் பற்றி உமது ஒற்றர் பெற்ற தகவலை நீவீர் வைத்துக் கொள்வீர் ! பாரிஸ் தகவலை மட்டும் என்னிடம் தந்துவிடுவீர் ! அதற்கு நான் உடன்படுகிறேன்.

    நெப்போலியன்: (ஏளனமாக) மேடம் ஹெலினா ! ஏதோ எனது கடிதங்கள் எல்லாம் உனது உரிமைச் சொத்தாய் நீ நினைக்கிறாய் ! நானதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் ! என்னோடு ஒப்பந்தம் பேச உனக்குத் தகுதியும் இல்லை; எந்த அதிகாரமும் இல்லை.

    ஹெலினா: உமது கடிதங்கள் வேண்டாம். அரசாங்கக் கடிதங்கள் தேவை யில்லை எனக்கு ! அந்தக் கடிதக் கட்டில் ஒரே ஒரு திருட்டுக் கடிதம் உள்ளது. ஒரு பெண் ஆடவனுக்கு எழுதியது ! ஆனால் அவன் அவளது கணவன் அல்லன் ! அது ஓர் அவமானக் கடிதம் ! பெயரைக் கெடுக்கும் கடிதம் !

    நெப்போலியன்: என்ன ? ஒரு காதல் கடிதமா ?

    ஹெலினா: (அருவருப்புடன்) காதல் கடிதத்தைத் தவிர வேறு எதுவாக இப்படி வெறுப்பை ஊட்டுவதாக இருக்க முடியும் ?

    நெப்போலியன்: ஏன் அந்தக் கடிதம் எனக்கு அனுப்பப் பட்டது ? அவள் கணவன் கை ஓங்க நான் உதவி செய்வதற்கா ?

    ஹெலினா: இல்லை ! இல்லை ! உமக்கொரு பயனும் இல்லை அந்தக் கடிதத்தால் ! என்னிடம் அதைக் கொடுத்து விடுவீர். ஒரு சிரமமும் இல்லை உமக்கு ! ஏதோ ஒரு வெறுப்பால் யாரோ ஒருவர் அனுப்பி விட்டார் உமக்கு. எழுதிய பெண்ணின் மனதைக் காயப்படுத்தச் செய்த சூழ்ச்சி இது !

    நெப்போலியன்: கணவனுக்கு அனுப்பி யிருக்கலாம் அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பாமல்.

    ஹெலினா: (தளர்ந்து போய் மனமுடைந்து) ஓ ! எனது மனத்தைக் குழப்புகிறீர் ! ஏன் இப்படிப் பேசுகிறீர் ? எனக்குப் புரியவில்லை ! (அயர்ந்து போய் நாற்காலியில் அமர்கிறாள்.)

    ***************************
    “உன்னை நேசிக்காமல் நானொரு நாள் வீணடித்த தில்லை. உன்னைத் தழுவிக் கொள்ளாமல் ஓரிரவை நான் இழக்க வில்லை ! . . இராணுவத்தை நடத்திச் செல்லும் தலைமையிலோ அல்லது இராணுவ முகாமைச் சோதன செய்வதிலோ என் கடமைகளுக்கு இடையில், என்னருமைக் காதலி ஜோஸ·பின் என்னிதயத்திலே தனித்து நிற்கிறாள், என்னுள்ளத்தை ஆட்கொள்கிறாள், என் சிந்தனையில் பொங்கி எழுகிறாள்.”
    “பெருந்தவறுகள் மட்டுமே கணவனையும், மனைவியையும் பிரித்து விடுகின்றன. படுக்கை அறை எனக்கும், மேடம் போனபார்ட்டுக்கும் (ஜோஸ·பின்) ஒன்றே ! ஆயினும் ஆடவர் புரியும் வஞ்சகம் உடலுறவுகள் கார்ஸிகன் இனத்தவர் தராசில் பெரிய தவறாக எடை போடப் படுவதில்லை.”
    “என்னினிய இணையில்லா ஜோஸஃபின் ! எத்தகைய அதிசயத்தோடு நீ என் இதயத்தைக் கவர்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கிறாய் !”
    நெப்போலியன் (தன் மனைவி ஜோஸஃபினைப் பற்றி)
    ***************************

    நெப்போலியன்: ஆஹா ! நான் இப்படி ஆகுமென்று நினைத்தேன். கொஞ்சம் காதல் விளையாட்டில் ஈடுபட்டால் உன்னிடமிருந்து என் கடிதங்களைக் கைப்பற்றி விடலாம் என்று யூகித்தேன். சின்னப் பெண்?ணே ! உன்னைப் போற்றாமல் இருக்க முடியாது. உன்னைப் போல் பொய் சொல்ல நான் இப்போது விரும்புகிறேன். பெருந் தொல்லையிலிருந்து அது என்னைக் காப்பாற்றும்.

    ஹெலினா: (கைகளைப் பிசைந்து கொண்டு) உம்மிடம் நான் இன்னும் சில பொய்களைக் கூறி யிருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன். நீங்களும் என்னை நம்பியிருப்பீர் அப்போது ! ஆனால் ஏனோ உண்மையை எவரும் நம்புவதில்லை.

    நெப்போலியன்: (சிரித்துக் கொண்டு) சின்னப் பெண்ணே ! கதைகள் சொல்வதில் நானோர் கைத்திறம் பெற்ற கார்ஸிகன் இனத்தவன் ! உன்னை விடச் சிறந்த முறையில் நான் கதை அளக்க முடியும். மனைவியை உடன்பட வைக்கும் ஒரு கடிதத்தை அவளது கணவனுக்கு ஏன் அனுப்பக் கூடாது என்று கேட்டால், நீ என்ன சொல்ல வேண்டும் ? அந்தக் கடிதத்தை அவள் கணவன் படிக்க மாட்டான் என்று ! ஒரு கணவன் தனது குடும்பச் சண்டையை அன்னியர் அறிய விடுவானா ? வீட்டுச் சண்டையை வீதியில் அரங்கேற்ற விழைவானா ? குடும்பம் முறிந்து போவதைச் சொல்வானா ? அவதூறால் தனது வாழ்வு காயமுறுவதை அவன் விரும்புவானா ? இவற்றை யெல்லாம் தான் தவிர்க்க முடியும் போது ஏன் அவன் அம்மாதிரிக் கடிதத்தை வாசிக்கப் போகிறான் ?

    ஹெலினா: (ஏளனமாக) ஒரு வேளை அந்தக் கடிதக் கட்டுக்குள் உமது மனைவியின் கடிதம் இருந்தால் !

    நெப்போலியன்: (சினத்தோடு) மேடம் ! மேடம் ! இது திமிரான பேச்சு ! வேண்டாத பேச்சு !

    ஹெலினா: (கண்ணியமாக) என்ன சொன்னீர் ? திமிர்ப் பேச்சா ? சீஸரின் மனைவி சிறிது சந்தேகத்துக்கும் அப்பாற் பட்டவள் ! சினம் வருவது ஏனோ ?

    நெப்போலியன்: நீ எல்லை மீறிவிட்டாய் பெண்ணே ! ஆயினும் உன்னை மன்னிக்கிறேன் ! என் மனைவி பெயரை வீணாக இழுக்க வேண்டாம் ! நீ எனது சொந்த வாழ்க்கையில் உன் மூக்கை விடாதே ! இந்த விளையாட்டு பிடிக்காது எனக்கு !

    ஹெலினா: (அஞ்சாது அழுத்தமாக) ஜெனரல் ! அந்தக் கடிதக் கட்டில் ஒரு பெண்ணின் கடிதம் உள்ளது. என்னிடம் கொடுங்கள் அதை !

    நெப்போலியன்: (கடுமையாக) ஏன் தர வேண்டும் ?

    ஹெலினா: அவள் எனது பழைய தோழி ! நாங்கள் பள்ளிக்கூடத்தில் ஒன்றாய்ப் படித்தோம். தன் கடிதம் தவறி உங்கள் கையில் விழக் கூடாதென்று கடிதம் எழுதி இருக்கிறாள் எனக்கு !

    நெப்போலியன்: (வியப்போடு) இது பொய் முழுப் பொய் ! பிறகு ஏன் என் கையில் கிடைத்தது ?

    ஹெலினா: காரணம், அது டைரக்டர் பர்ராஸ் (Ditrector Barras) உடன்படச் செய்தது !

    நெப்போலியன்: (சட்டென) கவனித்துப் பேசு ! டைரக்டர் பர்ராஸ் எனது தனிப்பட்ட நண்பர் ! என்னைச் சேர்ந்தவர் !

    ஹெலினா: ஆமாம் ! மறக்க வேண்டாம், பர்ராஸ் உங்கள் மனைவி மூலமாக உமக்கு நண்பர் ஆனவர் !

    நெப்போலியன்: (வெகுண்டு) இப்போதுதான் கூறினேன் என் மனைவியைப் பற்றிப் பேசாதே என்று ! மறந்து விட்டாயா ? யாரிந்தப் பெண் ? ஆழ்ந்த விருப்போடு நீ குறிப்பிடும் அந்த மாது யார் ? அவளுக்கும் உனக்கும் என்ன தொடர்பு ? என்ன உறவு ?

    ஹெலினா: ஜெனரல் ! நான் எப்படி உமக்குச் சொல்வேன் என் சொந்த உறவை ?

    நெப்போலியன்: பெண்டிர் நீங்கள் எல்லாரும் ஒன்றுதான் ! ஒருவரை ஒருவர் வெறுத்தாலும் உள்ளத்தில் வேறுபாடுகள் குறைவு ! ஒருத்திக்கு ஒருத்தி உடன்பாடு உள்ளது.

    ஹெலினா: (சிரித்துக் கொண்டு) நாங்கள் யாவரும் ஒரே மாதிரி என்று நினைப்பது தவறு ! ஆடவர் எல்லாரும் ஒன்று போல் உள்ளாரா ? வேடிக்கையாக இருக்கிறதே உமது பேச்சு ! நான் வேறோர் ஆடவனை நேசித்தால், என் கணவனை நேசித்துக் கொண்டிருப்பதாக நான் நடிப்பேன் என்று நினைப்பீரா ? அவனிடம் சொல்லவோ, அடுத்தவரிடம் சொல்லவோ நான் அச்சப் படுவேன் என்று எண்ணுவீரா ? ஆனால் இந்தப் பெண் அப்படி வார்க்கப் படவில்லை !அவள் வேறு ! அவள் ஆடவரை ஏமாற்றி ஆட்டிப் படைப்பவள் ! ஆடவரும் அதை விரும்புகிறார் ! அவளைத் தம் மீது ஆதிக்கம் செய்ய அனுமதிக்கிறார் ! ஆச்சரியமாய் உள்ளது !

    நெப்போலியன்: (காதில் விழாதது போல் புறக்கணித்து) பர்ராஸ் என் நண்பர் ! என்னவாயிற்று அவருக்கு ? சின்னப் பெண்ணே ! இனிமேல் பர்ராஸைப் பற்றியும் பேசாதே.

    ஹெலினா: என்ன சொல்கிறீர் ? புரிய வில்லையே எனக்கு !

    நெப்போலியன்: எதையோ நீ ஒளித்துப் பேசுகிறாய் ! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறாய் ! யாரிந்த மாது ? புரியும்படிச் சொல் !

    ஹெலினா: (ஏளனமாய்) அவள் ஓர் அற்பப் பெண், கர்வப் பெண், செலவாளிப் பெண், அவளது கணவன் ஒரு பேராசைக்காரன், அவளைப் பற்றி முற்றிலும் அறிந்தவன் ! அவள் தன் வயதை, வருவாயை, சமூக நிலையை எல்லாவற்றையும் அவனிடம் புளுகியவள் ! அவள் பிற ஆண்களிடம் உறவு கொண்டவள் ! ஆனால் அவளைக் கண்ட எந்த ஆடவனும் அவளிடம் மயங்குவான் ! அவளுக்கு அடிமை ஆவான் ! அவளைக் காதலிப்பான் ! அவளைப் பற்றிக் கனவு காணுவான் ! தனக்காக விரும்பி, தன்னலம் பேணி பர்ராஸை நண்பனாக இழுத்துக் கொண்டவள் !

    நெப்போலியன்: (மிகக் கோபத்துடன்) யார் ? யார் ? யாரந்தக் கபட மாது ? சொல் சின்னப் பெண்ணே ! சொல் !

    ***************************
    “இந்த ஆண்டுப் போர் நினைத்துப் பார்க்க முடியாதபடி முற்றிலும் மாறி விட்டது. போதிய அளவு இறைச்சி, ரொட்டித் துண்டுகள், குதிரைகளுக்குத் தீவனம் ஆகியவை எனக்குக் கிடைத்தன. நான் அவற்றைப் பகிர்ந்து அளித்தேன். எனது இராணுவப் படையினர் என் மீது சொல்ல முடியாத அளவுக்கு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார். ஆனால் நீ ஒருத்தி மட்டுமே என்மேல் மன எரிச்சல் கொண்டிருக்கிறாய் ! நீ மட்டுமே எனக்கு மகிழ்ச்சி ஊட்டுபவளாகவும், என்னைச் சித்திரவதை செய்பவளாகவும் இருந்து வருகிறாய்.”
    நெப்போலியன் (தன் மனைவி ஜோஸஃபினைப் பற்றி)
    ***************************

    நெப்போலியன்: (மிகக் கோபத்துடன்) யார் ? யார் ? யாரந்தக் கபட மாது ? சொல் சின்னப் பெண்ணே ! சொல் !

    ஹெலினா: முதலில் அந்தப் பெண்ணின் கடிதத்தை எனக்குத் தந்துவிட்டுக் கேட்பீரா ?

    நெப்போலியன்: நீ என்னைப் பைத்திய மாக்குகிறாய் பெண்ணே ! என் பொறுமையைக் கிண்டுகிறாய் ! போ வெளியே ! போ !

    ஹெலினா: (பிடிவாதமாய்) முதலில் அந்தக் கடிதம் இந்தக் கையிக்கு மாற வேண்டும் ! அதற்குப் பிறகுதான் நான் வெளியேறுவேன்.

    நெப்போலியன்: உனக்கு அந்தக் கடிதத்தை நான் தரப் போவதில்லை ! நான் உன்னை வெறுக்கிறேன். ஒற்றுப் பெண்ணான நீ என்னைப் பேதலிக்க வைக்கிறாய் ! அழகியானாலும் நீ அகத்தில் ஓர் அவலட்சண மாது ! ஒரு மூடப் பெண் தொல்லை எனக்கு வேண்டாம். போய்த் தொலை ! என் கண்முன் நில்லாதே ! (முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.) (திரும்பிக் பார்க்கிறான்). ஏன் குறும்புடன் சிரிக்கிறாய் ? யாரைப் பார்த்துச் சிரிக்கிறாய் ?

    ஹெலினா: (பெரிதாகச் சிரித்து) உம்மைப் பார்த்துதான் ஜெனரல் ! வல்லமை பெற்ற பெரிய தளபதி திடீரெனச் சிறிய பையனாக மாறிவிடுகிறார் ! எப்படிச் சிரிக்காமல் இருப்பது ? இப்படிப் பட்ட பெரிய வீரரை இப்போதுதான் நான் நேரே சந்திக்கிறேன் !

    நெப்போலியன்: (கோபத்துடன்) உன் வாயிலிருந்து வருவதெல்லாம் வசை மொழிகள்தான் ! ஒற்று வேலை செய்ய வந்திருக்கும் நீ என்னை அவமானப் படுத்த முனைகிறாய் ! முகத்துதி செய்வது போல் பாசாங்கு பண்ணி என் முகத்தில் கரியைப் பூசுகிறாய் !

    ஹெலினா: (ஏளனமாக) அந்தக் கடிதம் எனக்குத் தேவையில்லை ! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உம்மை அவமதித்து அந்தக் கடிதத்தில் எழுதி யுள்ளதைப் படித்து நீங்களே மன வேதனை அடைய வேண்டும் ! அந்தக் கடிதத்தின் குறிக்கோளும் அதுதான் ! அதன் வேலையாவது நிறைவேறட்டும் ! விடை பெறுகிறேன் ஜெனரல் ! (கோபத்துடன் கதவருகில் விரைந்து போகிறாள்.)

    நெப்போலியன்: (கையை நீட்டி) நில் போகாதே ! எங்கே போகிறாய் ? நிற்கிறாயா இல்லையா ? ஆணை இடுகிறேன் ! நில் இங்கே வா ! பிடிவாதக்காரியே நில் ! என்னருகே வா ! (வேகமாய்ச் சென்று ஹெலினாவின் கையைப் பற்றி நிறுத்துகிறான்) கேட்ட கேள்விக்குப் பதில் சொல் !

    ஹெலினா: (சினத்துடன்) கையைத் தொடாதீர் ! நான் உமது பணிப்பெண் இல்லை ! நீவீர் எனது மேலதிகாரியும் அல்லர் ! ஏனிப்படிக் கேட்கிறீர் ? போகும் என்னை ஏன் தடுக்கிறீர் ? நான்தான் காரணத்தை விளக்கிச் சொல்லி விட்டேனே !

    நெப்போலியன்: எப்போது விளக்கிச் சொன்னாய் ?

    ஹெலினா: (சினத்துடன்) முதலில் அந்தக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள் ஜெனரல் ! நான் சொல்லியது மெய்யா பொய்யா வென்று ?

    நெப்போலியன்: (கடிதக் கட்டுகளைத் தாவி எடுத்துத் தயக்கமோடு பார்த்து தூக்கி எறிகிறான்) நான் ஏன் பிறருக்கு வந்த கடிதத்தைப் படிக்க வேண்டும் ?

    ஹெலினா: அந்தக் கடிதத்தில் உமக்கினிய தகவல் உள்ளது ஜெனரல் ! அஞ்சாமல் படித்துப் பாருங்கள். உமக்குரிய கடிதம் அது !

    நெப்போலியன்: ஆகவே நான் அந்தக் கடிதத்தைப் படிக்க வேண்டும் என்று நீ எனக்கு ஆணை இடுகிறாயா ? வேடிக்கையாக உள்ளது மேடம் !

    ஹெலினா: சின்னப் பெண்ணிலிருந்து இப்போது எனக்கு மேடம் என்னும் மேல்நிலை மதிப்பு ! மகிழ்ச்சி உண்டாகுது எனக்கு !

    நெப்போலியன்: அந்தக் கடிதத்தில் அப்படி என்னதான் உள்ளது ?

    ஹெலினா: ஜெனரல் ! அந்தப் பெண்ணுக்குத் தன் கணவனைப் புரிந்து கொள்ளும் அறிவில்லை.

    நெப்போலியன்: (உடன்பாடுடன் தலை அசைத்து) அப்படியானால் நான் அந்தக் கடிதத்தைப் படிக்கிறேன். (கடிதக் கட்டை எடுத்துப் பிரித்துப் பார்க்கிறான்.)

    ஹெலினா: (ஆச்சரியமாக) எப்படிப் படிக்காமல் இருப்பது ? உதாரணமாக அது ஒரு வீட்டுச் சண்டை ! பர்ராஸோடு புரியும் வாள் சண்டை ! பிளவு பட்ட இல்வாழ்வு ! பொது மக்களின் அவதூறு ! உளவப்படும் ஓர் பதவிப் பீடம் ! இந்த மாதிரித் தவறுகள் அந்தக் கடிதத்தில் காணப் பட்டுள்ளன.

    நெப்போலியன்: (மனமுடைந்து, இங்குமங்கும் நடைபுரிந்து தயக்கமோடும், தடுமாற்றமோடும், தலை குனிந்து) தந்து விடுகிறேன் அந்தக் கடிதத்தை மேடம் ! நீதான் ஜெயித்தாய் ! நீ போராடிக் கேட்ட கடிதத்தை வாங்கிக் கொண்டு போய்த் தொலை ! கார்ஸிகன் தோற்றான் ஒரு காரிகைக்கு ! எடுத்துச் செல் உன் கடிதத்தை ! (கடிதக் கட்டுகளைக் ஹெலினாவிடம் கொடுக்கிறான்.)

    ***************************
    “இனிமேல் நான் உன்னை நேசிக்கப் போவதில்லை. அதற்கு மாறாக நான் உன்னை வெறுக்கிறேன். நீ ஓர் ஈனப் பெண் ! மனப் பிறழ்ச்சி உள்ளவள் ! எனக்கு நீ கடிதம் எழுதுவதே இல்லை. உனது கணவனை நீ நேசிப்பது மில்லை. மெய்யான உன் காதலனுக்கு எழுதுவதைத் தவிர வேறெந்த முக்கிய வேலைக்கு நேரத்தை நீ செலவழிக்கிறாய் ?”
    “என் பகைவனை வீழ்த்தி விட்டேன் நான் ! களைத்துப் போய் நான் இப்போது செத்துக் கொண்டிருக்கிறேன் ! வெரோனாக்கு நீ விரைந்து வா ! கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் உன்னை. என்னருகில் நீ இருக்க வேண்டும்.”
    நெப்போலியன் (வெரோனாவிலிருந்து மனைவி ஜோஸஃபினுக்கு எழுதிய கடிதம்)
    ***************************

    நெப்போலியன்: (மனமுடைந்து, இங்குமங்கும் நடைபுரிந்து தயக்கமோடும், தடுமாற்றமோடும், தலை குனிந்து) தந்து விடுகிறேன் அந்தக் கடிதத்தை மேடம் ! நீதான் ஜெயித்தாய் ! நீ போராடிக் கேட்ட கடிதத்தை வாங்கிக் கொண்டு போய்த் தொலை ! கார்ஸிகன் தோற்றான் ஒரு காரிகைக்கு ! எடுத்துச் செல் உன் கடிதத்தை ! (கடிதக் கட்டுகளைக் ஹெலினாவிடம் கொடுக்கிறான்.)

    ஹெலினா: (கடிதக் கட்டைக் கையில் வாங்கிக் கொள்ளாமல்) இதென்ன வேடிக்கை ? என்னிடம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி ஏனிப்போது அதைத் தருகிறீர் ? (நெப்போலியன் கடிதக் கட்டுகளைத் தரையில் எறிகிறான்.) (ஏளனமாக) அரசாங்க இரகசியமுள்ள கடிதங்களை இப்படித் தரையில் போடுவீரா ? ஒரு கடித்தைக் கேட்டால் நீங்களே கடிதக் கட்டை ஒற்றருக்குத் தரலாமா ? உமது கடிதங்கள் எனக்குத் தேவையில்லை.

    நெப்போலியன்: (ஆச்சரியமாக) பத்து நிமிடத்துக்கு முன் உனக்கு அதுதான் தேவையாக இருந்தது.

    ஹெலினா: (ஏளனமாக) பத்து நிமிடத்துக்கு முன் நீங்களும் அளவுக்கு மீறி என்னை அவமதிக்க வில்லை !

    நெப்போலியன்: (மனமிரங்கி) மன்னிப்புக் கேட்கிறேன் அதற்கு !

    ஹெலினா: (சாந்தமாக) நன்றி ! மிக்க நன்றி ஜெனரல் !

    நெப்போலியன்: (மரியாதையுடன் கடிதக் கட்டை அவளிடம் நீட்டுகிறான்.) சரி, கடிதத்தை நீ எடுத்துக் கொள்.

    ஹெலினா: (சற்று பின்வாங்கி) நீங்கள் கடிதத்தில் உள்ளதைப் படிக்க வில்லையா ? ஆஸ்டிரியப் படைகள் வட இத்தாலியில் மாண்டோவா அல்லது பெச்சிசராவில் (Mantova & Peschiera,, North Italy) புகுந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து கொள்ள விரும்ப வில்லையா ?

    நெப்போலியன்: (சற்றுக் கோபமோடு) நான் முன்பே சொல்லிவிட்டேன் ! எனது பகைவரை ஒற்றர் உதவியின்றி நான் முறியடிக்க முடியும் மேடம் !

    ஹெலினா: அது சரி, உமக்கு வந்த கடிதத்தைக் கூடப் படிக்க மாட்டீரா ?

    நெப்போலியன்: என் பெயருக்கு வரவில்லை அந்தக் கடிதம் என்று நீதானே கூறினாய் ! பிறருக்கு வந்த கடிதத்தை நான் படிக்கும் வழக்கமில்லை மேடம் ! (கடிதத்தை நீ எடுத்துக் கொள்.)

    ஹெலினா: நீங்கள் அந்தக் கடிதத்தை வைத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. (சிரித்துக் கொண்டு) எனது வேலை அந்தக் கடிதத்தை நீவீர் படிக்கக் கூடாதென்று தடுப்பதே. போய் வருகிறேன் ஜெனரல் ! (மெதுவாக வெளியேறுகிறாள்)

    நெப்போலியன்: (கோபமாகக் கடிதக் கட்டை மேஜை மீது எறிந்து) கடவுளே ! எனக்குச் சிறிது பொறுமையைக் கொடு ! (பல்லைக் கடித்து) அறிவு கெட்ட பெண்ணே ! உன் உயிர் மேல் உனக்குப் பயம் இருக்கிறதா ? அல்லது நீ அன்னியன் கையில் அடி வாங்கி உதை வாங்கி முகம் வீங்கிப் போக விரும்புபவளா ?

    ஹெலினா: நன்றி ஜெனரல் ! நான் விடை பெறுகிறேன். உங்கள் கண்களில் கனல் பறக்கச் செய்து விட்டது என் தவறு ! நீங்கள் பரிவு மிக்கவர் ! உங்கள் கடிதங்களைக் களவாடினேன் ! நீங்கள் அதற்கென்னை மன்னித்தீர் ! அந்தக் கடிதங்களை உம்மிடம் சேர்த்து விட்டேன் ! அதற்கும் பொங்கி எழாமல் நீங்கள் பொறுத்துக் கொண்டீர் ! போரில் தோற்கடித்த பிறகு நீவீர் பகைவரைப் பரிவுடன், மதிப்புடன் நடத்துகிறீர் ! விடை கொடுங்கள் ஜெனரல் ! என் வேலை முடிந்து விட்டது !

    நெப்போலியன்: (கோபம் எல்லை கடந்து, கை நீட்டிக் கதவைத் திறந்து, உரத்த குரலில்) கியூஸெப் ! கியூஸெப் ! வா இங்கே ! (கதவைப் படாரென்று சாத்துகிறான்)

    கியூஸெப்: (கதவைத் திறந்து நடுக்கமுடன் ஓடி வந்து கை கட்டி) மேதகு ஜெனரல் ! இதோ வந்து விட்டேன் ! (வணக்கம் செய்கிறான்)

    நெப்போலியன்: எங்கே அந்த முட்டாள் லெஃப்டினென்ட் ? என்ன செய்கிறான் ? அழைத்து வா அவனை !

    கியூஸெப்: மேதகு ஜெனரல் ! வயிறு புடைக்கத் தின்று பூதம் போல தூங்கிறான் குறட்டை விட்டு !

    ***************************
    “இன்றிரவு 1213 கிளர்ச்சிக்காரரைச் (Insurgents) சுட்டுக் கொல்லப் போகிறோம். இறுதி விடை தருவோம் அவருக்கு ! அதை நினைக்கும் போது ஆனந்தக் கண்ணீர் பொங்குது என் கண்களில்.”
    நெப்போலியன் (1793) [லையான் (Lyon) உள்நாட்டுக் கிளர்ச்சியை அடக்கிய போது]
    “அவளுக்கு எல்லாம் வேண்டுமாம் ! நான் அவளை மெய்யாக நேசித்தேன். ஆனால் அவள் மீது எனக்கு மதிப்பு உண்டாகவில்லை. அவளுக்கு மிக்க அழகிய சிறிய கொங்கைகள் !”
    நெப்போலியன் (மனைவி ஜோஸஃபினைப் பற்றிய உரையாடல்)
    ***************************

    நெப்போலியன்: கியூஸெப் ! எங்கே அந்த முட்டாள் லெ·ப்டினென்ட் ? என்ன செய்கிறான் ? போய் அழைத்து வா அவனை !

    கியூஸெப்: மேதகு ஜெனரல் ! வயிறு புடைக்கத் தின்று பூதம் போல தூங்கிறான் குறட்டை விட்டுக் கொண்டு !

    நெப்போலியன்: எழுப்பு அவனை ! இழுத்து வா உன்னுடன் ! (கியூஸெப் ஓடிச் செல்கிறான்.) (ஹெலினாவைப் பார்த்து) உனக்குத் தொந்தரவு கொடுக்கிறேன். தயவு செய்து சிறிது நேரம் பொறுத்திரு !

    (ஹெலினா திரும்பி வருகிறாள். நெப்போலியன் கடிதக் கட்டுகளை எடுத்துப் பைக்குள் திணிக்கிறான். கியூஸெப் பின்னால் லெஃப்டினென்ட் மெதுவாக வந்து நெப்போலியனுக்குச் சல்யூட் செய்கிறான். லெஃப்டினென்ட் தலையில் தொப்பி அணியாது, இராணுவ உடையைச் சரிவர அணியாது, வாளின்றி வந்து ஹெலினாவின் பக்கத்தில் நின்று கொள்கிறான். சாப்பிட்ட பின் சற்று தெம்பாக இருக்கிறான்.)

    நெப்போலியன்: லெஃப்டினென்ட் ! நீ ஓர் இராணுவ அதிகாரி ! இராணுவ உடையைச் சரியாக அணியாது இப்படி ஒரு கோமாளி போல் என் முன் வருவாயா ?

    லெஃப்டினென்ட்: (தயக்கமுடன்) மன்னிக்க வேண்டும் ஜெனரல் ! ஆடை அணிவதற்குள் என்னை அவசரமாய் இழுத்து வந்து விட்டார் இந்த விடுதி உரிமையாளர் !

    நெப்போலியன்: பார் லெஃப்டினென்ட் ! இந்த ஒற்றுப் பெண்ணை என்னால் வளைக்க முடிய வில்லை ! அவளிடமிருந்து எதையும் நான் கறக்க இயல வில்லை ! இவள் ஒரு கர்வக்காரி ! திமிர்ப் பிடித்தவள் ! அடங்கா மடந்தை ! உன்னை நடுவழியில் ஏமாற்றி உன் கடிதங்களைக் களவாடியவன் தன் தமையன் என்று உன்னிடம் ஒப்புக் கொண்டவள் இவள்தான் இல்லையா ?

    லெஃப்டினென்ட்: (வெற்றிப் பெருமிதமோடு) நான் இதைத்தான் சொன்னேன் ஜெனரல் ! இவளை நம்பக் கூடாது என்று சொன்னேன் ! இவளொரு புளுகு மங்கை என்று நான் சொல்ல வில்லையா ?

    நெப்போலியன்: முதலில் உன்னை ஏமாற்றிய உளுத்தனைக் கண்டுபிடித்து இங்கு இழுத்துவா ! உன் நேர்மைத்தனம் இப்போது சோதிக்கப் படுகிறது. நமது இராணுவத்தின் விதி உன் கையில் உள்ளது ! ஆஸ்டிரியாவைக் கைபற்றும் திட்டம் அந்த அரசாங்கக் கடிதங்களில் உள்ளது. பிரான்சின் தலைவிதி உன் கடமைப் பணியில் உள்ளது ! ஏன் சொல்லப் போனால் ஐரோப்பாவின் தலைவிதியே அந்தக் கடிதக் கட்டுகளில் உள்ளது ! அது தெரியாமல் எப்படி உனக்கு இரவில் உறக்கம் வருகிறது ? மனித இனத்தின் எதிர்காலப் போக்கே இராணுவ ரகசியமாய் எழுதப் பட்டு அந்தக் கடிதங்களில் இருக்கலாம் !

    லெஃப்டினென்ட்: (கவனமாக) அப்படியா ஜெனரல் ? இந்த அறிவீனனை மன்னித்து விடுவீர் ! அத்தகைய முக்கிய இராணுவ விபரங்கள் இருக்கும் என்று நான் நினைக்க வில்லை !

    நெப்போலியன்: (அழுத்தமாக) ஆமாம் லெ·ப்டினென்ட் ! அவற்றை என்னிடம் சேர்க்கும் அந்த முக்கியப் பணியில் நீ தவறினாய் ! கடிதங்களை நீ மீட்டு என்னிடம் தரவில்லை யானால் உன் இராணுவப் படையினர் முன்பாக நீ இகழப்படுவாய் !

    லெஃப்டினென்ட்: (மனம் குமுறித் தழுதழுத்து) ஜெனரல் ! அது சரியான தண்டனை எனக்கு ! என்மீது என் சகப் படையாளர் காறித் துப்ப வேண்டும் ! ஏற்றுக் கொள்கிறேன் ஜெனரல் ! ஆனாலும் நான் அந்தக் கடிதத்தைப் பெற்று என் பெயரைக் காப்பாற்ற வேண்டும்.

    நெப்போலியன்: உன்னை எல்லாருக்கும் முன் அவமானப் படுத்துவது என் குறிக்கோள் இல்லை ! உன்னை அதிலிருந்து காப்பாற்ற உனக்கொரு வழி காட்டுகிறேன் ! அடுத்தொரு வாய்ப்பு உனக்கு ! தேடிப் போய் அவனைக் கண்டுபிடித்து உன் மதிப்பைக் காப்பாற்றிக் கொள் !

    லெஃப்டினென்ட்: முதலில் பிரான்சின் பெயரைக் காப்பாற்றுகிறேன் !

    நெப்போலியன்: முதலில் என் பெயரைக் காப்பாற்று ! கடிதத்தில் உள்ளபடி நான் போரிட வில்லை யென்று அரசாங்கத்திட மிருந்து எனக்குத் தண்டனை கிடைக்கும் ! என்ன கண்டனம் உனக்கு வந்தாலும் சரி, அந்தக் கடிதங்கள் என் கையில் கிடைக்க வில்லை யென்று நான் உலகுக்கு நிரூபிக்க வேண்டும். உன்னை காப்பது எப்படி லெ·ப்டினென்ட் ?

    லெஃப்டினென்ட்: என்னைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் ஜெனரல் ! உங்கள் மனது நல் மனது ! கல் மனது இல்லை ! எனக்குக் கிடைக்கும் தண்டனையைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதீர். நான் எப்படியாவது தப்பிக் கொள்வேன் ! நம் படைவீரர் ஆஸ்டிரியாவைப் பிடித்து விடுவார் கடிதங்கள் கிடைத்தாலும் சரி ! காணாமல் போனாலும் சரி ! ஒளிந்திருக்கும் இந்தக் குள்ள இளைஞனைத் தேடச் சொல்லி என்னை மீண்டும் வற்புறுத்தாதீர் ! எங்கு மறைந்திருக்கிறான் என்று எனக்குத் தெரியாது ! எப்படிக் கண்டுபிடிப்ப தென்று எனக்குத் தெரியாது. எப்போது நானவனைப் பிடிப்பேன் என்பதும் தெரியாது ! எதை வைத்து ஈனப்பயலைக் கண்டுபிடிப்பது ?

    நெப்போலியன்: (கோபத்துடன்) நீ ஒரு படைவீரன் ! சொல், உனக்கு என்னதான் தெரியும் ? கடிதங்களைக் கைவிடத் தெரியும் ! கள்வனிடம் ஏமாறத் தெரியும் ! திட்டமின்றி நீ எப்படி ஆஸ்டிரியாவைக் கைப்பற்றுவாய் ?

    கியூஸெப்: லெஃப்டினென்ட் ! மறந்துவிட்டீரே உமது குதிரை அவனிடம் உள்ளதே ! அதை வைத்து அவனைக் கண்டுபிடிக்கலாமே !

    லெஃப்டினென்ட்: நல்ல யோசனைதான். நான் மறந்து விட்டேன் ! ஆனால் ஒரு குதிரை போல் ஆயிரம் குதிரைகள் இருக்கும் ! அந்தக் குதிரை உயிரோடு உள்ளதோ ? அல்லது செத்து விட்டதோ ? இத்தாலியில் அந்தக் குதிரைத் தேடுவதற்குப் பதிலாக சதிகாரனைத் தேடிப் போகலாம் ! ஜெனரல் ! விடை கொடுப்பீர். நான் போகிறேன். அந்தக் கயவனை நான் எப்படியாவது பிடித்தாக வேண்டும். கியூஸெப் ! போ ! போய் எனக்கொரு குதிரையைத் தயார் செய்வீர் ! செல் சீக்கிரம் செல் !

    ***************************
    “நான் பிரான்சின் ஆட்சித் தளபதியானால் பாரிஸ் நகரை உலகப் பெரும் அழகிய நகராக்குவதோடு இதுவரையில் காணாத ஓர் எழில் நகராக்குவேன். கடவுள் ஆசியால் என் ஆயுள் இன்னும் இருபது ஆண்டுகள் நீடித்து நான் ஓய்வில் இருந்தால், பாரிஸ் நகரின் பழைய சிறு பகுதி ஒன்றைக் கூட நீ பார்க்க நேர்ந்திடாது.”
    நெப்போலியன் (1798)
    ***************************

    லெஃப்டினென்ட்: (கியூஸெப்பைப் பார்த்து) போ ! குதிரை ஒன்றைக் கொண்டுவா !

    கியூஸெப்: (பரபரப்புடன்) இதோ போகிறேன் லெஃப்டினென்ட் ! (வேகமாக வெளியேறுகிறான்)

    லெஃப்டினென்ட்: அந்தக் கயவனை உங்கள் முன் இழுத்து வந்து நிறுத்துகிறேன் ஜெனரல் ! ஒரு சிறு வேண்டுகோள். (தயக்கமுடன்) இப்போது என் உடை வாளைக் காணோம் ! யார் களவாடி விட்டார் என்று தெரியவில்லை ? முதலில் என் வாளைக் கண்டுபிடிக்கிறேன் ! வாளின்றி அந்த ஆளைப் பிடிப்பது சிரமம் !

    நெப்போலியன்: முட்டாள் ! நீ போர் வீரனா ? படைவீரன் என்று வெளியே சொல்ல வெட்கப் பட வேண்டும் ! கள்வன் இல்லாத இடத்திலும் உன் வாள் காணாமல் போகிறது ! இனி உன்னிடம் உள்ளவை உன் கால்களும், கைகளும்தான் ! ஒருநாள் அவையும் உன்னிடமிருந்து களவு போகும் !

    ஹெலினா: (சிரித்துக் கொண்டே) இதெல்லாம் என்ன ஜெனரல் ?

    நெப்போலியன்: உன் சகோதரனை இந்த மாவீரன் காணப் போவதில்லை ! குதிரை இல்லை ! வாள் இல்லை !

    ஹெலினா: நிச்சயமாகக் காண மாட்டார் ! ஒற்றனைத் தேடிப் போகும் லெஃப்டினென்ட் எப்போது திரும்பி வருவாரோ ?

    நெப்போலியன்: முக்கிய அரசாங்கக் கடிதங்கள் எப்போதோ இழக்கப் பட்டன !

    ஹெலினா: இல்லை ஜெனரல் ! அவை உமது பையில் உள்ளன !

    நெப்போலியன்: இந்தக் கடிதக் கட்டில் எல்லாக் கடிதங்களும் இல்லை பெண்ணே ! நான் எதிர்பார்த்த கடிதமில்லை ! அந்த ரகசியக் கடிதங்கள் களவு போய் விட்டன சின்னப் பெண்ணே !

    ஹெலினா: அந்த அப்பாவி லெஃப்டினென்ட் வேலை போய்விடுமா ?

    நெப்போலியன்: அவனைச் சுட்டுத் தள்ளி துப்பாக்கி மருந்தை வீணாக்குவது கூடத் தப்பு !

    ஹெலினா: (அதிர்ச்சியோடு) கல் நெஞ்சம் படைத்தவர் தாங்கள் ! மனித உயிர் மேல் சிறிது கூடப் பரிவும் பாசமும் இல்லை உமக்கு. ஆணையும், பெண்ணையும் அவமதிப்பதே உமது தொழில் ! மனிதரைச் சுட்டு வேட்டையாடுவது உமது இனிய பொழுது போக்கு !

    நெப்போலியன்: (சிரித்துக் கொண்டே) நம்மில் யார் அந்தப் படைவீரனை ஏமாற்றி அவமானப் பட வைத்தது ? நீயா ? நானா ? அதை நீ சிந்தித்தது உண்டா ?

    ஹெலினா: நான் அப்படி எண்ணிப் பார்க்க வில்லை. அது எனது கெட்ட புத்தி ! பாவம் மனிதர் ! இப்போது அவரை அவமானத்திலிருந்து நான் எப்படிக் காப்பாற்றுவது ?

    நெப்போலியன்: அவன் பெயரைக் கெடுத்தது நீ ! இப்போது அவனைக் காப்பாற்ற போவதும் நீ ! பிறரிடம் ஏமாற்றம் அடையும் ஒரு படை வீரனை நான் மதிப்பதில்லை.

    (அப்போது லெஃப்டினென்ட் முறையாக இராணுவ உடை அணிந்து வாளுடன் வேகமாக வருகிறான்.)

    லெஃடினென்ட்: (முக மலர்ச்சியோடு) ஜெனரல் ! கள்வனைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன். விடை பெறுகிறேன் !

    நெப்போலியன்: கயவனை நான் காண வேண்டாம் ! கடிதங்களை நீ கைப்பற்றி வா !

    ஹெலினா: (கவலையோடு) லெஃப்டினென்ட் ! எந்தத் திசையில் போகிறீர் ? என்ன செய்யப் போகிறீர் என் அப்பாவிச் சகோதரனை ? கொல்லாதீர் அவனை !

    லெஃடினென்ட்: கால நேரத்தை வீணாக்க முனைகிறாய் மேடம் ! போதும் அறிவுரை ! போகும் போது என்னை நிறுத்தாதே ! முன்வைத்த காலை நான் பின்வைக்க மாட்டேன் !

    ஹெலினா: (கொல்லெனச் சிரித்து) அப்படியானால் எப்படி நீ நடக்க முடியும் ?

    லெஃடினென்ட்: அயோக்கியத் தமயன் மீது இத்தனை பாசமா ? அவன் தலையை நான் சீவப் போவதில்லை ! ஆனால் தோலை உரிப்பேன் ! அல்லது முதுகு எலும்பை நொறுக்குவேன் ! மன்னிக்க வேண்டும் மேடம் ! உன் தமயனால் என் ஊதியம் போனது !

    ஹெலினா: (கவலையோடு) அவனுக்குக் காயம் உண்டானால் என் கண்ணில் இரத்தம் வடியும் ! அவனை நீ விட்டுவிட வேண்டும் ! நான் சொல்வதைக் கேள் ! அவன் எங்கிருக்கிறான் என்று நான் சொல்கிறேன். அவனைப் பிடித்து உன் வசம் ஒப்படைப்பது என் பொறுப்பு. நீ அவனை ஜெனரலிடம் இழுத்து வரலாம் ! அவனைத் தாக்கப் போவதில்லை என்று நீ எனக்கு வாக்கு அளிப்பாயா ? வாள் சண்டை போடாமல் மதிப்போடு அவனை நடத்துவாயா நீ ?

    லெஃடினென்ட்: அவன் என்னைத் தாக்கினால் நான் என்ன செய்வது ? எனது துப்பாக்கி அவனிடம் உள்ளது. அதை மறக்காதே நீ !

    ஹெலினா: அவன் உன்னைத் தாக்கினால் நீ அவனைத் தாக்கலாம்.

    லெஃடினென்ட்: என்னுடைய குதிரை அவனிடம் உள்ளதே.

    ஹெலினா: உன் துப்பாக்கியும், குதிரையும் உன்னை வந்தடையும். அதற்கு நான் பொறுப்பு.

    லெஃடினென்ட்: (ஆவலாக) முதலில் அவன் எங்கிருக்கிறான் என்று சொல் ?

    ஹெலினா: அவன் வெகு தூரத்தில் இல்லை ! அவனுக்கு நான் சிமிக்கை செய்தால் அரை மணி நேரத்தில் இங்கு வந்து விடுவான் !

    லெஃடினென்ட்: (ஆச்சரியமாக, வாளை உருவி) என்ன ? அருகிலா இருக்கிறான் அந்தக் கயவன் ?

    ஹெலினா: வாளை உருவாதே ! அவனுக்கு எந்தக் காயமும் ஏற்படக் கூடாது ! பொறு ! ஆத்திரப் படாதே !

    ***************************
    “ஐரோப்பா முழுவதிலும் ஒரே விதமான நாணயம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது வணிகத் துறையில் பயன்படுத்த யாவருக்கும் எளிதாக இருக்கும்.”
    நெப்போலியன் (1802)
    நெப்போலியன் பாரிஸ் நகரைச் சீர்ப்படுத்த செய்தவற்றுள் நீடித்த நீர்வள வசதி 38 மில்லியன் பிராங்க் (5 மில்லியன் ஈரோ) (3.9 மில்லியன் டாலர்) செலவில் அறுபது மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டி ஒர்க் நதியிலிருந்து (River Ourcq) நல்ல தண்ணீர் கொண்டு வந்ததே.
    நெப்போலியன் (From The Nation Builder)
    ***************************

    ஹெலினா: வாளை உருவாதே ! என் சகோதரனுக்கு எந்தக் காயமும் ஏற்படக் கூடாது ! ஆத்திரப் படாதே ! அவசரப் படாதே ! அடிக்கப் போகாதே !

    லெஃப்டினென்ட்: மயிலே மயிலே என்றால் அது தோகையைப் போடாது. அதைப் பிடுங்கித்தான் எடுக்க வேண்டும் !

    ஹெலினா: கத்தியை நீட்டாது உன் புத்தியால் பெறு ! அவன் பயந்த சுபாவம் உள்ளவன் ! வாளும் வேலும் கோழைகளுக்குத் தேவை ! மெய்யான வீரனக்கு ஆயுதம் அவனது கூரிய புத்தி !

    லெஃப்டினென்ட்: புத்தி இருந்தாலும் நான் கத்தி நீட்டத்தான் கற்றுக் பெற்றவன் ! எனக்குப் புத்தி இருந்தாலும் பயனில்லை. புத்தி இருந்தும் நான் என் குதிரை இழந்தேன், கடிதங்களைப் பறி கொடுத்தேன். புத்தி எனக்கு உதவவில்லை.

    ஹெலினா: என் சகோதரனைப் பிடிப்பேன் அல்லது மடிவேன் என்பதைத் தவிர வேறொன்றும் அவனிடம் கூறாதே ! உன்னை அவன் நம்ப மாட்டான் ! ஆனாலும் அவனைப் பிடித்து விடலாம் அப்போது.

    லெஃப்டினென்ட்: கொக்கு தலையில் வெண்ணையை வைத்துப் பிடிப்பதுபோல் தெரியுது ! மேடம் ! நீ சொல்வது எனக்குப் புரியவில்லை !

    கியூஸெப்: (ஓடி வந்து) குதிரை தயார் லெ·ப்டினென்ட் ! நல்லாசிகள் ! போய் வருவீர் !

    லெஃப்டினென்ட்: ஆனால் நான் தயாராக இல்லை கியூஸெப் ! ஜெனரலைப் பார்த்து நான் பேச விரும்புவதாய்ச் சொல் !

    கியூஸெப்: என்ன ? அது நிறைவேற்ற முடியாத கட்டளை ! கேவலம் ஒரு லெ·ப்டினென்ட் விளித்து ஒரு ஜெனரலை அழைத்துவர என்னிடம் சொல்லலாமா ? வேடிக்கையாய் இருக்கிறதே ! நான் செய்ய முடியாது !

    லெஃப்டினென்ட்: ஏன் அப்படிச் சொல்கிறாய் ?

    கியூஸெப்: ஒரு ஜெனரல் தன்கீழ் வேலை செய்யும் ஒரு லெஃப்டினென்டை அழைத்து வர ஆணையிடலாம். லெ·ப்டினென்ட் எப்படித் தன் மேலதிகாரியை அழைத்து வரச் சொல்லலாம் ?

    லெஃப்டினென்ட்: உண்மைதான் ! நான் மறந்து விட்டேன் ! இப்போது நமது அரசாங்கம் ஒரு குடியரசு ! இந்தக் கட்டளை விதிகளை எல்லாம் நான் கடைப்பிடிக்க வேண்டும்.

    (அப்போது திடீரென நெப்போலியன் நுழைகிறான். கோட்டுப் பட்டனைப் போட்டுக் கொண்டு சிந்தனையோடு காணப் படுகிறான்.)

    கியூஸெப்: (நெப்போலியன் வருவதைப் பாராமல்) உண்மைதான் லெ·டினென்ட் ! பிரான்சில் நீங்கள் எல்லோரும் இப்போது விடுதிக் காப்பாளி போல் ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து வருகிறீர்.

    நெப்போலியன்: (கியூஸெப் தோள் மீது கைவைத்து) இப்போது அந்த அடிமைப் பணிவு உன்னிடம் போய் விட்டது அல்லவா ?

    கியூஸெப்: (பதறிப்போய்) ஜெனரல் ! அடியேனை மன்னித்து விடுவீர் ! நீங்கள் வந்தது தெரியாமல் போனது. என் வாயும் உளற ஆரம்பித்து விட்டது.

    நெப்போலியன்: (கியூஸெப் தலையைத் தட்டி) உன் மூளை துருப்பிடித்துப் போனது ! பேசும் போது கவனம் செலுத்து இனிமேல்.

    லெஃப்டினென்ட்: (நெப்போலியனைப் பார்த்து) அந்தப் போக்கிரியைப் பிடித்து உங்கள் முன் நிறுத்தும் வரை எனக்கு உறக்கம் வராது ! உண்பதும் செரிக்காது ஜெனரல் !

    நெப்போலியன்: (அதட்டலுடன்) லெ·ப்டினென்ட் ! அந்தக் கயவனை உன்னால் பிடிக்க முடியாது ! வீணான முயற்சி அது !

    லெஃப்டினென்ட்: அப்படியா நினைக்கிறீர் ? கொண்டு வந்து அவனை உமது முன் நிறுத்துகிறேனா இல்லையா வென்று பாருங்கள் ! அப்போதுதான் என் மதிப்பு மேலேறும் ! இராணுவப் படைகள் முன்பு என்னை அவமானம் செய்ய மாட்டீர் ! பலர்முன் நான் நகைப்பாளியாய் ஆகக் கூடாது.

    நெப்போலியன்: (ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டு) இவனை என்ன செய்யலாம் கியூஸெப் ? சொல்வ தெல்லாம் தவறு ! செய்வ தெல்லாம் தவறு ! இவன் புத்தியை எப்படித் தீட்டுவது ?

    கியூஸெப்: அவனை ஒரு ஜெனரலாக்கி விடுங்கள் ! அவன் செய்வ தெல்லாம் செம்மையாகப் போகும் ! சொல்வ தெல்லாம் நல்லதாகத் தெரியும் !

    லெஃப்டினென்ட்: (கலகலவெனச் சிரித்து) கியூஸெப் ! நீ யாரைக் கேலி செய்கிறாய் ? லெ·ப்டினென்ட் என்னையா ? அல்லது மேன்மை தங்கிய ஜெனரலையா ?

    நெப்போலியன்: கியூஸெப் ! நீ தவறிப் போய் இந்த விடுதி வேலையாளாகக் கிடக்கிறாய் ! என்னுடன் அழைத்துச் சென்று உன்னை ஓர் வீர மனிதனாய் ஆக்கவா ?

    கியூஸெப்: (பதறிக் கொண்டு) வேண்டாம் ! வேண்டாம் ! வேண்டாம் ! ஜெனரல் ! நான் ஓர் ஆயுத மனிதனாக ஆகிக் கொல்லும் தொழிலில் ஈடுபட வேண்டாம் ! கோழை மனிதனாகவே இந்த விடுதியில் வேலை செய்து வந்தால் போதும் ! என்னை நானாக இருக்க விட்டு விடுங்கள் ! லெ·ப்டினென்டை ஆயுத மனிதனாக்கி என்ன பயனைக் கண்டீர் ? அவர் உமது இரகசியக் கடிதங்களைப் பறிகொடுத்து ஏமாளியாகப் பரிதவிக்கிறார் ! நான் அந்த நிலையில் இருந்தால் இப்படி ஒரு கயவனிடம் குதிரையை இழந்து அலைமோத மாட்டேன் ! இராணுவக் கடிதங்களைக் களவாட விடமாட்டேன் !

    ***************************

    “எந்தச் சிற்பச் சிலையைப் பற்றிச் சொல்கிறீர் ? நான் எனக்காக ஒரு சிலை வைக்கக் கேட்ட தில்லை ! எனக்கொரு சிலை வடித்து அதை மாபெரும் ஒரு தேசச் சின்னமாய் விளங்க விட்டு, நான் பெருமிதமோடு ஆளுமை புரியும் என் இராணுவத்தை அவமதித்து நானே திறப்பு விழா செய்ய ஆணை இட்டதில்லை !
    நெப்போலியன்

    ***************************

    கியூஸெப்: (பதறிக் கொண்டு) வேண்டாம் ! வேண்டாம் ! வேண்டாம் ! ஜெனரல் ! நான் ஓர் ஆயுத மனிதனாக ஆக்கப் பட்டுக் கொல்லும் தொழிலில் ஈடுபட வேண்டாம் ! கோழை மனிதனாகவே இந்த விடுதியில் நான் வேலை செய்து வந்தால் போதும் ! என்னை நானாக இருக்க விட்டு விடுங்கள் ! லெஃப்டினென்ட்டைப் போன்ற ஏமாளியை ஆயுத மனிதனாக்கி என்ன பலனைக் கண்டீர் ? உமது இரகசியக் கடிதங்களைப் பறிகொடுத்து இப்போது பரிதவிக்கிறார் ! நான் அந்த நிலையில் இருந்தால் இப்படி ஒரு கயவனிடம் குதிரையை இழந்து அலைமோத மாட்டேன் ! இராணுவக் கடிதங்களைக் களவாட விடமாட்டேன் ! என் வாழ்வு முழுவதும் பலர் என்னைப் புது மனிதனாக்க முன்வந்தார். சிறுவனாக இருந்த போது எங்கள் மதக்குரு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து என்னை ஒரு மனிதனாக்க முனைந்தார். பிறகு ஒரு வாத்திய நிபுணர் எனக்கு இசையைக் கற்பித்து ஒரு மனிதனாக்க முயன்றார். பட்டாளத்துக்கு ஆள் எடுக்கும் அதிகாரி ஒருவர், இன்னும் நாலைந்து அங்குலம் நான் உயரமாக இருந்திருந்தால் என்னை இராணுவப் படையில் சேர்த்திருப்பார். எல்லோரும் எனக்கு வேலை பளுவைத்தான் ஏற்றினார். அம்முயற்சியில் அவர் தோற்றார். வெற்றி அடைந்தவன் நான். காரணம் நானொரு சோம்பேறி. என்னை யாரும் முன்தள்ள முடியாது. நானாக விரும்பிப் பயிற்சியில் கற்றுக் கொண்டது சமையல் தொழில் ஒன்றுதான் ! அதில் நான் கைதேர்ந்தவன் ! அதனால் இப்போது விடுதி வேலையில் பொறுப்பேற்று வேலைக்குக் கூலியாட்களையும் வைத்துள்ளேன். அதாவது நான் நானாக இருக்க விழைகிறேன்.

    நெப்போலியன்: இந்தத் தொழிலில் நீ திருப்தி அடைகிறாயா ?

    கியூஸெப்: பரம திருப்தி எனக்கு ஜெனரல் ! நானொருவன் இல்லாவிடினும் என்னாட்டுப் படைப்பலம் குன்றி விடாது. இத்தாலியைக் காப்பாற்றப் பல்லாயிரம் பேர் இருக்கிறார்.

    நெப்போலியன்: சாதித்து வெற்றி பெற வேண்டும் என்னும் வெறிப் பிசாசு உள்ளத்திலே இருந்து இராப் பகலாய் உன்னை விழுங்கித் தின்ன வில்லையா ? சமைப்புத் தொழிலில் என்ன சாதிப்பைச் செய்ய முடியும் ? நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வாரம் பூராவும் மெய்வருந்தி உழைத்து நீ சுக வாழ்வை அனுபவிக்கச் செய்வது யார் ? உனக்கு அடிமையாகவும் அதிகாரியாகவும் இருப்பது யார் ? உன்னத மேதையாகவும், உதவாக்கரை வேந்தாகவும் இருப்பது யார் ? ஒரு கையில் கிரீடத்தையும் மறு கையில் படகு தள்ளும் துடுப்பையும் ஏந்தி வருவது யார் ? உலகத்தின் அனைத்து சாம்ராஜியங்களையும் காட்டி உன்னை ஆசனத்தில் அதிபதியாய் ஏற்றி அடிமையாய் ஆக்குபவன் யார் ? அம்மாதிரிப் புரட்சி ஆசை எதுவும் உன்னிடம் எழுந்ததில்லையா ?

    கியூஸெப்: இல்லை ஜெனரல் இல்லை ! அதை நிச்சயம் சொல்ல முடியும் என்னால் ! என்னை விழுங்கித் தின்னும் பிசாசு படு மோசமானது ! எனக்கது கிரீடமோ அரசாட்சியோ தருவதில்லை ! மாறாக எல்லாவற்றையும் இளவச மாகப் பெறவே என்னை வற்புறுத்துகிறது. மூன்று வேளையும் தயாரிப்பு : ஆம்லெட் முட்டை, தக்காளிக் குழம்பு, திராட்சை, பாலாடைத் திரட்டு, வெண்ணை, ஒயின் ஆகிய இவைதான் என்னைத் துன்புறுத்தி வருகின்றன. விடுதியில் தினம் இவற்றுக்கு எந்தக் குறையும் நேரக் கூடாது.

    லெஃப்டினென்ட்: போதும் நிறுத்து கியூஸெப் ! எனக்குப் பசியை மீண்டும் தூண்டிவிடும் உமது பேச்சு ! நாக்கில் எச்சில் ஊறுது எனக்கு !

    நெப்போலியன்: என்ன லெஃப்டினென்ட் ? நான் உனக்கு சாம்ராஜிய ஆசையை எழுப்பி விட்டேனா ?

    லெஃப்டினென்ட்: (விரக்தியுடன்) எனக்கெல்லாம் அந்த இச்சை இல்லை ஜெனரல் ! என் கை வலிமை அப்படி ஓங்கியதில்லை உங்கள் கரத்தைப் போல் ! என் குரல் அப்படி ஓங்கி முழக்க வில்லை உங்கள் குரல் போல் ! இப்போதுள்ள என் நிலையே எனக்குத் தகுதியானது ! என்னைப் போல்பவர் இராணுவத்துக்கு இப்போது தேவை. எல்லாரும் பீடத்தில் அமர்ந்து ஆணை யிட்டால் அதை நிறைவேற்றுவது யார் ? புரட்சி குடிமக்களுக்கு இராணுவத் துக்கு இல்லை ! இராணுவ அமைப்பு அடிமைத் தொழில் போன்றது ! அதை ஆட்டிப் படைப்பவர் உங்களைப் போல் ஒரு சிலர் ! அடிமைகளாய்ப் பணி புரிபவர் என்னைப் போல் பலர் ! இராணுவத்தில் புரட்சிக்கு இடமில்லை ! படை வீரரைப் பற்றி உங்களுக்குத் தெரியும் ஜெனரல் ! இராணுவத்தில் பணி புரிந்து வருபவை படைக் குடும்பங்கள். லோதிப் போரை வென்றது யார் ? கர்னலா ? காப்டனா ? அல்லது ஜெனரலா ? இல்லை ! அல்லது அவர் இயக்கியப் பீரங்கிகளா ? இல்லை ! காலில் நடந்து செல்லும் படைவீரர் ! பனியிலும் குளிரிலும் தடம் நோகும் படை வீரர் ! பசியிலும், பிணியிலும் பிசுங்கி நொண்டிச் செல்லும் படைகள் ! உங்களுக்குத் தெரியும் இது ஜெனரல் ! நான் சொல்லக் கூடாது.

    நெப்போலியன்: நிறுத்து உன் உபதேசத்தை ! போதும் உமது புலம்பல் ! குதிரையைப் பறி கொடுத்து நடை வண்டியில் நடந்து பசியால் துடித்த நீயா லோதிப் போரை வென்றாய் ? கவனமாய்ப் பேசு ! யார் முன் பேசுகிறாய் என்று மறந்து விட்டாய் !

    லெஃப்டினென்ட்: மன்னிக்க வேண்டும் ஜெனரல் ! தெரியாமல் நான் ஏதோ உளறிவிட்டேன். பாலத்தை நீங்கள் கடக்க முனைந்த போது, தீயிட்டுக் கொளுத்த முயன்ற ஆஸ்டிரிய எதிர்ப்புப் படைகளை நமது செந்நிறப் பீரங்கிகளால் சுட்டுத் தள்ளவில்லையா ? அப்போது நான் எங்கிருந்தேன் என்று தெரியமா உங்களுக்கு ?

    நெப்போலியன்: எனக்கென்ன வேறு வேலை யில்லையா ? யாருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தாய் ?

    லெஃப்டினென்ட்: ஜெனரல் ! இந்தியாவில் ஒரு பழமொழி உண்டாம் ! ‘பந்திக்கு முந்திக்கொள் ! படைக்குப் பிந்திக்கொள் !’

    கியூஸெப்: பழமொழி என் விடுதிப் பயணிகளுக்கு எழுதியிருப்பது போல் தெரிகிறது !

    நெப்போலியன்: ஆனால் இது பிரெஞ்ச் படை வீரருக்குச் சொல்லப் படவில்லை. படை வீரர் பின்னால் நடந்து தளபதி முன்னால் சென்றால் என்னவாகும் தெரியுமா ? முதலில் சுடப்பட்டு மடிவது தளபதியாகத்தான் இருக்கும் ! கியூஸெப் ! சைனப் பழமொழி என்ன சொல்கிறது தெரியுமா ? ‘வழிகாட்டிச் செல்லப் படைக்குப் பின்னால் போ’ என்று !

    லெஃப்டினென்ட்: கியூஸெப் ! படைவீரர் யாவரும் தளபதிக்குக் கவசம் அளிக்கும் பலியாடுகள் என்று சொல்கிறார் எங்கள் ஜெனரல் !

    நெப்போலியன்: அப்படி அர்த்தமல்ல ! போரில் பகைவரை வெல்பவர், பின்னால் நிற்கும் தளபதி அல்லர் ! அணிவகுத்து முன்னால் போரிடும் படைவீரரே ! ஆனால் ஆணையிடும் தளபதி முதலில் மாண்டு போனால் சேனைப் படைவீரர் சிதறிப் போவார் !

    கியூஸெப்: (பெருமிதமுடன்) ஜெனரல் ! நான் கேள்விப் பட்டது நீங்கள் குதிரையிலிருந்து கீழே குதித்து, தரைப் பீரங்கியை உங்கள் கையாலே முடுக்கிப் பகைவரைத் தாக்கியவராம் ! எனக்குப் பெருமையாக இருக்கிறது ! பின்னால் நிற்கும் ஒரு பெரும் பிரென்ச் தளபதி முன்னால் வந்து படைவீரரில் ஒருவராய்ப் போரிடுவது பேராச்சரியம் !

    லெஃப்டினென்ட்: கியூஸ்ப் ! மாபெரும் தவறு அது ! பிரென்ச் ஜெனரல் அப்படிக் கீழான ஒரு வேலையை இராணுவத்தில் செய்யக் கூடாது. அது அவருக்கு அவமதிப்பு !

    நெப்போலியன்: (கண்களில் கனல் பொறிகள் பறக்கின்றன. கியூஸெப் நடுங்குகிறான்) (அதட்டிக் கொண்டு) என்ன சொன்னாய் ?

    ***************************

    “ரஷ்யரையும், ஆங்கிலேயரையும் அவமதிக்கும் எந்த ஓர் வாய்ப்பையும் ஒருவர் விட்டுவிடக் கூடாது.”
    “புதுப்புது வெற்றிச் சின்னங்கள் எழுப்ப வேண்டும். மாபெரும் மகத்தான மாளிகைகள் நிரம்பிய ஓர் எழில் களத்தை (பாரிசில்) உருவாக்க, முன்பிருந்தவற்றை எல்லாம் நீக்க வேண்டும்.”
    நெப்போலியன் (1812)

    ***************************

    லெஃப்டினென்ட்: கியூஸெப் ! மாபெரும் தவறு அது ! பிரென்ச் ஜெனரல் அப்படிக் கீழான ஒரு வேலையை இராணுவத்தில் செய்யக் கூடாது. அது அவருக்கு அவமதிப்பே !

    நெப்போலியன்: (கண்களில் கனல் பொறிகள் பறக்கின்றன. கியூஸெப் நடுங்குகிறான்) (அதட்டிக் கொண்டு) லெ•ப்டினென்ட் ! என்ன சொன்னாய் ?

    லெஃப்டினென்ட்: மன்னிக்க வேண்டும் என்னை ஜெனரல் ! ஆஸ்டிரியப் படைகள் மீது குறிவைத்து நீங்கள் பீரங்கி வெடிகளால் அவரை வீழ்த்தினீர் ! அப்போது ஆழமற்ற பகுதியைக் கண்டுபிடித்து ஆற்றைக் கடந்து மறுகரைக்குப் போய் உங்களுக்கு வழி அமைத்தவர் நாங்கள் ! ஆற்றின் அந்த ஆழமற்ற பகுதியைக் கண்டுபிடித்தவரே லோதி யுத்தத்தில் வெற்றிக்கு அடிகோலியவர். சொல்லுங்கள் யார் அதைக் கண்டுபிடித்தது ? நான்தான் முதலில் நடந்து சென்றவன் ! நான்தான் நதியைக் கடந்து பிறருக்குப் பாதை காட்டியவன் ! எனது குதிரைதான் அந்த வழியைக் கண்டது. அந்தக் குதிரைதான் ஆஸ்டிரியரை வென்ற மெய்யான வெற்றிக் குதிரை !

    நெப்போலியன்: முட்டாள் ! நீ அந்தக் குதிரையைத்தான் இப்போது பறிகொடுத்து விட்டாயே ! அத்தோடு கடிதங்களை இழந்ததற்கும் உன்னைச் சுட்டுக் கொல்ல வேண்டும். உன் தவறுகள் உனக்கு இன்னும் தெரியவில்லை !

    (அப்போது ஒரு பிரென்ச் அதிகாரி கையில் வாளேந்தி யாரும் பாராதபடி உள்ளே நுழைகிறான்.)

    லெஃப்டினென்ட்: (சட்டென) நானந்தக் கயவனை உங்கள் முன்னிழுத்து வருகிறேன்.

    நெப்போலியன்: அப்படி ஒரு கயவன் இப்போதில்லை லெஃப்டினென்ட் !

    பிரென்ச் அதிகாரி: (லெஃப்டினென்ட் முன்புறம் வந்து வணங்கி) லெஃப்டினென்ட் ! (வாளைச் சமர்ப்பித்து) நான் உனது கைதி ! என்னை நீ சிறைப் படுத்தலாம். (பேச்சில் பெண்குரல் ஒலிக்கிறது.) நான் செய்தது தவறு.

    நெப்போலியன்: (அதிகாரியைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைகிறான்.) யார் நீ ? ஓ நீயா ?

    லெஃப்டினென்ட்: (கோபத்துடன்) வாடா அயோக்கியப் பயலே ! எங்கே ஒளிந்து கொண்டிருந்தாய் ? எங்கே என் குதிரை ?

    அதிகாரி: பாதுகாப்பாக உள்ளது போர்கெட்டோவில் (Borghetto) ! காத்துக் கொண்டிருக்கிறது உனக்காக !

    நெப்போலியன்: (அதிகாரியைப் பார்த்து) எங்கே என் அரசாங்கக் கடிதங்கள் ?

    அதிகாரி: அவை இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கின்றன ! நீங்கள் யாராவது என் சகோதரியைச் சந்தித்தீரா ?

    லெஃப்டினென்ட்: ஆம் சந்தித்தோம், நளின நாடகி ! உன்னைப் போலவே இருக்கிறாள். ஆனால் உன்னை விட ஒப்பனையாக இருக்கிறாள்.

    அதிகாரி: (ஆர்வமுடன்) அவளைத் தெரியுமா உங்களுக்கு ! அவள் ஒரு மந்திரக்காரி !

    கியூஸெப்: (நடுங்கிக் கொண்டு) ஐயோ வேண்டாம் ! அவள் கால்பட்ட இடத்தில் என் கால் தடம் விழக் கூடாது. தெரியாமல் உன் சகோதரிக்கு என் விடுதியில் இடம் கொடுத்து விட்டேன் ! இப்போதே அவளை வெளியே தள்ளுகிறேன்.

    லெஃப்டினென்ட்: அவளை நீ விரட்டி விடு ! அவள் சகோதரனை நான் கைது செய்கிறேன். எனக்கு இந்த மந்திரம், மாயத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இதற்கெல்லாம் நீ மிரள வேண்டாம்.

    அதிகாரி: கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டதே ! மந்திர சக்தியால் என் சகோதரி ஜெனரலை மயக்கி விட்டாள். (கியூஸெப்பும், லெ•ப்டினென்ட்டும் சட்டென நெப்போலியனை விலகிச் சற்று தள்ளி நிற்கிறார்.) கடிதங்கள் உங்கள் கோட்டுப் பையில்தான் உள்ளன. (நெப்போலியன் கோட்டுப் பையில் கையை விட்டுக் கடிதங்களைத் தடவிப் பார்க்கிறான்.) ஈதோ உள்ளன கடிதங்கள் ! நான் எடுத்துத் தரலாமா ?

    நெப்போலியன்: (கோபத்துடன்) உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் உன் திருட்டுக் கையை என் பையில் விட்டு உளவிப் பார்ப்பாய் ? (கடிதக் கட்டை மெதுவாக எடுக்கிறான்)

    அதிகாரி: கியூஸெப் ! அதோ கடிதங்கள் !

    கியூஸெப்: (பயந்து கொண்டு) கடவுளே ! அந்தக் கடிதங்களும் மந்திர சக்தியால் சாபம் அடைந்தவை !

    நெப்போலியன்: முட்டாள்தானமாக எதுவும் பேசாதே ! மந்திரமும் இல்லை ! சாபமும் இல்லை !

    கியூஸெப்: ஜெனரல் ! சாபக் கடிதங்களைத் தொடாமல் தீயிட்டுப் பொசுக்குங்கள்.

    நெப்போலியன்: வாயை மூடு ! தீயிட்டு ஏன் கொளுத்த வேண்டும் ?

    அதிகாரி: (நெப்போலியனைப் பார்த்து) அவை உங்கள் அரசாங்கக் கடிதங்கள் ! அதுவும் இரகசியக் கடிதங்கள் ! படித்த பிறகு அடுப்பில் போட்டு விடுங்கள் !

    நெப்போலியன்: கியூஸெப் ! (கடிதங்களை வீசி எறிந்து) ஈதோ கடிதங்களைத் தீயில் பொசுக்கு !

    அதிகாரி: ஜெனரல் ! கடிதங்களை நீங்கள் படிக்க வில்லையா ? படிக்க வேண்டும் என்னும் துடிப்பில்லையா ?

    நெப்போலியன்: அந்தக் கடிதங்களைப் படிக்க எனக்குத் துடிக்க வில்லை மேடம் ! அவை பலரால் படிக்கப்பட்டு அவற்றின் ரகசியங்கள் காற்றிலே பரவிப் போயின ! உன்னுடைய கடமை நிறைவேறியது ! ஒற்றர் குழுவுக்கு நல்ல வேட்டை ! இப்போது ஆசைத் தீப் பற்றி எழுகிறது உனக்கு ! வேண்டுமானால் நீ படித்துக் கொள் !

    அதிகாரி: ஓ ! மிக்க நன்றி ஜெனரல் ! நான் முன்பே அவற்றை எல்லாம் படித்து விட்டேன் !

    ***************************
    “ஆங்கிலேயர் ஒரு வணிக தேசத்தவர்.”
    நெப்போலியன்
    “ஷேக்ஸ்பியரின் நாடகங்களைக் குப்பை என்று சொல்வேன். நான் அவற்றைப் படித்திருக்கிறேன். (பிரெஞ்ச் நாடக ஆசிரியர்) கார்நீல் அல்லது ரேசின் (Corneille or Racine) ஆகியோரோடு ஒப்பிட்டத் தகுதி இல்லாதவர் அவர். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் ஒன்றைப் படிப்போர் அவருக்காக அனுதாபப் படாமல் இருக்க முடியாது. இத்தகைய துன்பியல் நாடகம் (மாக்பெத்) ஒரு காலத்தில் லண்டனரை அதிர்ச்சிக்குள் தள்ளி உயர்ந்ததாக இருந்தாலும், பாரிஸ் மக்களுக்கு அது கவர்ச்சி ஊட்டாது.”
    நெப்போலியன் (1803)
    ***************************

    நெப்போலியன்: அந்தக் கடிதங்களைப் படிக்க எனக்குத் துடிப்பில்லை மேடம் ! அவை பலரால் படிக்கப்பட்டு அவற்றின் ரகசியங்கள் காற்றிலே பறந்து போயின ! உன்னுடைய கடமை நிறைவேறியது ! ஒற்றர் குழுவுக்கு நல்ல வேட்டை உன்னால் ! இப்போது ஆசைத் தீ பற்றி எழுகிறது உனக்கு ! வேண்டுமானால் நீ படித்துக் கொள் !

    அதிகாரி: ஓ ! மிக்க நன்றி ஜெனரல் ! நான் முன்பே அவற்றை எல்லாம் படித்து விட்டேன் !

    நெப்போலியன்: (கோபத்தோடு) என்ன ? கடிதங்களை நீ ஏற்கனவே படித்து விட்டாயா ?

    அதிகாரி: குதிரையை அந்த ஏமாளியிடமிருந்து பறித்துப் போனதும் நான் படித்தது முதலில் கடிதங்களைதான் ! அவற்றில் என்ன உள்ள தென்று எனக்குத் தெரியும் ! உமக்குத்தான் தெரியாது ஜெனரல் !

    நெப்போலியன்: (சிரித்துக் கொண்டு) நானும் படித்து விட்டேன் தோட்டத்திற்குள் போன சமயத்தில்.

    அதிகாரி: ஓ படித்து விட்டீரா ? அப்படியானல் நான்தான் தோற்றவன் ! உம்மைப் போற்றுகிறேன். (நெப்போலியன் சிரித்துக் கொண்டு அவன் முதுகைத் தட்டுகிறான்.) (நெப்போலியன் கையை முத்தமிடுகிறான்).

    நெப்போலியன்: நிறுத்து உன் முகத்துதியை இளைஞனே ! போதும் உன் பாராட்டு ! மாறுவேடத்தில் மந்திர மயக்கு செய்யாதே ! முகத்திரையை நீக்கு !

    அதிகாரி: நானொன்று சொல்ல விழைகிறேன் ஜெனரல் ! நீங்கள்தான் அதைத் தவறாக எடுத்துக் கொள்வீர் !

    நெப்போலியன்: வாயை மூடு வாலிபனே ! போதுமே உன் நடிப்பு !

    அதிகாரி: கீழ்மைத்தனமும் தன்னலமும் இல்லாத ஓர் உன்னத மனிதரை நான் பாராட்டவும் செய்வேன், பழிக்கவும் செய்வேன், அப்புறம் மன்னிப்பும் கேட்பேன் அவரிடம்.

    நெப்போலியன்: (கோபத்தோடு) சிக்கலான சிந்தனை மனிதன் நீ ! தன்னலம், கீழ்த்தனம் இல்லாதவன் அல்லன் நான் ! அரசாளும் பொறுப்பு வரும் போது தன்னலம் இல்லாத் தலைவன் ஆசனத்தில் நீடித்து அமர முடியாது. தன்னலம் கருதா மன்னன் இல்லை. கீழ்த்தனம், மேல்தனம் என்பது நீ எந்த அரங்கில் நின்று பேசுகிறாய் என்பதைப் பொருத்தது !

    அதிகாரி: நீங்களே உங்கள் மீது மதிப்புயர்வு கொள்வதில்லை. விந்தைத் தளபதி ! கடிதங்கள் எங்கே என்று அலை மோதினீர் முதலில் ! ஆனால் கடிதங்கள் கிடைத்த போது ஏனோ படிக்க மனமில்லை. பிறகு தோட்டத்துக்குள் நுழைவது போல் காட்டி அங்கே ஒளிந்து கொண்டு அவற்றைப் படித்தீர். பிறகு படிக்காதது போல் நடித்தீர் ! அதைத்தான் கீழ்த்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன். நீங்கள் அதற்கு நாண வில்லை.

    நெப்போலியன்: இந்தக் குற்றச் சாட்டுகளைச் சுட்டிக் காட்ட நீ எங்கே கற்றுக் கொண்டாய் ? உன் மனச் சாட்சி விநோதமாக வேலை செய்கிறது. உன்னை ஒரு நாகரீகப் பெண்ணாக நான் எண்ணுகிறேன். உன்னுடைய தாத்தா ஒரு வணிக வர்த்தகரா ?

    அதிகாரி: இல்லை ! அவர் ஓர் ஆங்கிலேயர் !

    நெப்போலியன்: அந்த ஆங்கில நிழல் நன்றாகவே உன்னைப் பின்பற்றி வருகிறது. என்னை நீ அடித்து வீழ்த்தியதின் காரணமும் தெரிகிறது.

    அதிகாரி: ஜெனரல் ! நான் உம்மை வீழ்த்தவும் இல்லை ! நானோர் ஆங்கிலேயனும் இல்லை !

    நெப்போலியன்: ஆம் ஆம், நீயோர் ஆங்கிலேயன்தான் ! அந்த ஆங்கில இரத்தம் உன் குருதியில் ஓடுது ! அது உனக்கு முதுகு எலும்பாகவும் உள்ளது ! நான் சொல்வதைக் கவனமாகக் கேள் ! இந்த ஆங்கிலக் கும்பல் யாரென்று உனக்குச் சற்று விளக்குகிறேன் .

    அதிகாரி: ஆங்கிலேயர் மீது உங்களுக்கு ஏன் இந்த வெறுப்பு ஜெனரல் !

    நெப்போலியன்: ஆங்கிலேயர் மட்டுமல்ல ! ரஷ்யரையும் கூட எனக்குப் பிடிக்காது. ரஷ்யாவையும் இங்கிலாந்தையும் ஒருநாள் கைப்பற்றி நான் ஐரோப்பியச் சக்ரவர்த்தியாக வருவதற்கு இராப் பகலாய்த் திட்ட மிட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கிலாந்தின் வணிக வர்த்தகக் கம்பேனியை இந்தியாவில் தகர்க்கத் திட்டமிட்டு வருகிறேன். ஆங்கிலேயர் வணிகப் பண்டங்களை வர்த்தகர் போல் விற்கும் போது பீரங்கிகளைக் காட்டி நாட்டைப் பிடுங்கிக் கொள்வார். அங்கே காலூன்றிப் பிறகு ஆள்கிறார் !

    ***************************
    பிரான்ஸ் ஆக்கிரமிக்கத் துடிக்கும் பிறரது நாட்டை !
    எதிர்த்துப் போரிட் டவர் இன்று முன்னடி வைப்பார் !
    வெற்றி பெற்று விடக் கண்முன் எதுவும் காணார்
    வேர்வை சிந்தினார் இதுவரை அதனை வேண்டி !
    நெப்போலியனைப் பற்றி பிரிட்டிஷ் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் (1804)
    ***************************

    நெப்போலியன்: ஆங்கிலேயர் மட்டுமல்ல ! ரஷ்யரையும் கூட எனக்குப் பிடிக்காது. ரஷ்யாவையும் இங்கிலாந்தையும் ஒருநாள் கைப்பற்றி ஐரோப்பியச் சக்ரவர்த்தியாக வருவதற்கு இராப் பகலாய்த் திட்ட மிட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கிலாந்தின் வர்த்தகக் கம்பேனியை இந்தியாவில் தகர்க்கத் திட்டமிட்டு வருகிறேன். ஆங்கிலேயர் வணிகப் பண்டங்களை விற்கும் போது பீரங்கிகளைக் காட்டி நாட்டைப் பிடுங்கிக் கொள்வார். அங்கே காலூன்றிப் பிறகு ஆட்சி செய்கிறார் ! வணிகர் கூட்டமாக வந்தவர் வல்லமை காட்டி நாட்டை ஆக்ரமிப்பார். அங்கே பிரிட்டிஷ் ஏகாதிபத்தைய சாம்ராஜ்யத்தை நிலைநாட்டுவார். அது குள்ள நரித் தந்திரம். ! ‘பிரித்து ஆளுமை புரிவாய்’ என்பதே பிரிட்டீஷ் வர்த்தக விதி ! அவரை வென்று விரட்ட முடியாது. பறித்துக் கொள்ளும் நாட்டின் பஞ்சுப் பொதியை பிரிட்டனுக்குக் கொண்டு போய் நூலாக்கி, நெய்து துணியாக்கித் திருப்பி அவருக்கே அதிக விலைக்கு விற்கிறார் ! பிரிட்டிஷ் கோமகனார் போல் தமக்கு இனிப்பதைச் செய்கிறார். தமக்குப் பிடிப்பதைப் பறித்துக் கொள்கிறார். ராயல் பற்றெனக் காட்டிக் கொண்டு வணிகப் பண்டங்களை விற்கப் போகிறார். பண்டங்களை விற்றுக் கண்டங்களைப் பிடிக்கிறார். சுதந்திர வீரராய்க் காட்டிக் கொண்டு தேச விடுதலை என்று கூறிக் கொண்டு பாதி உலகை அடிமை ஆக்கித் தமது காலனி ஆட்சியைத் திணிக்கிறார் ! கலப்படமான மான்செஸ்டர் பண்டங்களை விற்கப் புது நாடு தேட முதலில் கிறித்துவ மதப் பரப்பாளரை (Missionary) அமைதியைப் போதிக்க அனுப்புவார். ஆனால் குடிவாசிகள் மதப் பரப்பாளரை விரட்டிக் கொன்று விடுகிறார். பிறகு பிரிட்டீஷ் அரசாங்கம் கிறித்துவப் போதகரைக் காப்பாற்ற இராணுவப் படைகளை அனுப்பும். படைகள் எளிதாகப் போரிட்டு நாட்டைக் கைவசப் படுத்தும். பின்னர் அந்நாடு பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு சேர்க்கப் படும். பிரிட்டீஷ் தீவைப் பாதுகாக்கக் கப்பலில் சிலுவைக் கொடியைப் பறக்கவிட்டு அருகில் ஒரு பாதிரியாரை நிறுத்துகிறார். உலக முடிவு வரைப் பயணம் செய்து பகைவர் கப்பல்களைத் தாக்குவார், எரிப்பார், முறிப்பார், மூழ்க்குவார் ! எதிர்ப்படும் நாடுகளை எல்லாம் சிதைத்து அழிப்பார் ! அடிமைகள் பிரிட்டீஷ் மண்ணில் கால்வைத்ததும் விடுதலை அடைவர் என்று உறுதி அளிக்கப்படும் முதலில். தொழிற்சாலைகளில் ஆறு வயதுப் பாலர்களை வேலைக்கு வைத்து அனுதினம் பதினாறு மணி நேரம் வேலை வாங்குகிறது ! இரண்டு புரட்சிகளை உண்டாக்கிச் சட்டம், சமாதானம் நிலவ நமது பூமி மீது போர் தொடுக்கிறது ! நல்லதும், தீயதும் நிரம்பிய ஆங்கிலேயரைக் காணாமல் இருக்க முடியாது. கொள்கையில் தவறு செய்யாத ஆங்கிலேயரை நீவீர் காணவே இயலாது. தேசப் பற்றைச் சொல்லிக் கொண்டு அவர் உம்மீது போர் தொடுப்பார். உமது வர்த்தக முறையைத் திருடிக் கொள்வார் ! ஏகாதிபத்திய கோட்பாட்டில் உம்மை அடிமை ஆக்குவார் ! பல்வேறு கொள்கை முறையில் உம்மைச் சித்திரவதை செய்வார் ! அரசாங்க முத்திரைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அரசரரை ஆதரிப்பார் ! அதே சமயம் குடியரசுக் கொள்கை என்னும் போது அரசரின் சிரசைத் துண்டாக்குவார் ! அவரது கண்ணும், கருத்தும் எப்போதும் இருப்பது கடமை என்னும் ஒரு சொல்லில்தான் ! ஆனால் தேசத்தின் கடமை அவருக்கு எதிராக மாறி விடுகிறது !

    அதிகாரி: எனக்கு எதற்கு இந்த வரட்டு உபதேசங்கள் ? நான் ஆங்கிலேயன் அல்லன் ! ஆங்கிலேயர் யாவரும் மூடர் என்பது என் கருத்து.

    நெப்போலியன்: ஆங்கிலேயர் பக்காத் திருடர்கள் ! பகற் கொள்ளை அடிப்பவர் ! சென்ற விடமெல்லாம் கொன்றழிக்கும் கொடுங்கோலர் ! அவரைப் போல் நீயும் ஒரு திருடன் ! என் ரகசிய கடிதங்களைத் திருடியவன் ! என் படைவீரன் குதிரையைக் களவாடியவன் நீ ! திருடுவதே தொழிலான பிரிட்டீஷ் குருதி உனது இரத்தக் குழாய்களில் ஓடுகிறது ! உனது பாட்டனார் ஓர் ஆங்கிலேயன் ! உன் அன்னை யார் ? ஒரு பிரென்ச் மாதா ?

    அதிகாரி: இல்லை ! இல்லை ! என் தாய் ஓர் ஐரிஸ் மாது !

    நெப்போலியன்: ஓ ! உன் அன்னை ஓர் ஐரிஸ் மாதா ? நான் மறந்து போனேன் ! ஓர் ஆங்கில இராணுவத்தை வழி நடத்துவது ஓர் ஐரிஸ் ஜெனரலா ? மெச்சுகிறேன் ! அது ஒரு பிரென்ச் இராணுவத்தை ஓர் இத்தாலிய ஜெனரல் நடத்துவது போலிருக்கும் !

    ***************************
    “படைவீரர்களே ! நீங்கள் துவங்கப் போகும் இந்த தேச ஆக்கிரமிப்பால் நேரப் போகும் உலக நாகரீகப் பாதிப்பு, வர்த்தகப் போக்குகளின் மாற்றம் எண்ணிப் பார்க்கவே முடியாது. இங்கிலாந்து படை மீது நீங்கள் கொடுக்கும் அடி அதன் மென்மையான இடத்தில் நிச்சயம் காயப்படுத்தி விடும். விடிவதற்குக் காத்திருக்கும் போது நீங்கள் அதற்கொரு சாவு மணியை அடிப்பீர்.”
    நெப்போலியன் (எகிப்து படையெடுப்பு) (1798)
    “படைவீரர்களே ! நாம் பிடித்திருக்கும் இடங்கள் யாராலும் கைப்பற்ற முடியாதவை. ரஷ்யர்கள் நமது படை அணிகளை எதிர்த்து வரும் போது அவரது படைகளை நான் முன்னின்று தாக்குவேன். எல்லா போர்ப்படை அணிவகுப்பையும் நானே நேரிடையாக வழிநடத்துவேன். உங்களுக்கு தைரியம் உறுதி அளித்துப், பகைவர் அதிகாரப் பதவிகளுக்குள் நீங்கள் குழப்பம், கொந்தளிப்பு ஏற்படுத்தி, வெற்றி கிடைப்பது ஒருகணம் உறுதியற்றுப் போகாதது வரை, நான் விலகித் தூரத்தில் நிற்பேன்.
    எவரும் காயமடைந்தோரைத் தூக்கிச் செல்லும் பாவனையில் போர்ப்படை அணிகளை விட்டு நீங்கக் கூடாது. நமது தேசத்தை அறவே வெறுக்கும் இங்கிலாந்தின் கூலிப் படைகளைத் தாக்கி வெற்றி அடைவது மிக முக்கியமானது என்று ஒவ்வொருவர் உள்ளத்திலும் சிந்தனைகள் நிரம்ப வேண்டும்.”
    நெப்போலியன் (ரஷ்யப் படையெடுப்பு) (1805)
    “படைவீரர்களே ! இதுதான் நீங்கள் பேரளவு ஆசைப்பட்டு எதிர்பார்த்த போர். ஆதலால் இதுமுதல் வெற்றி உமது தாக்குதலைச் சார்ந்தது. ஆம் வெற்றி நமக்குத் தேவை.”
    நெப்போலியன் (1812)
    ***************************

    நெப்போலியன்: ஓ ! உன் அன்னை ஓர் ஐரிஸ் மாதா ? நான் மறந்து போனேன் ! ஓர் ஆங்கில இராணுவத்தை வழி நடத்துவது ஓர் ஐரிஸ் ஜெனரலா ? மெச்சுகிறேன் ! அது பிரென்ச் இராணுவத்தை ஓர் இத்தாலிய ஜெனரல் நடத்துவது போலிருக்கும் !

    அதிகாரி: ஜெனரல் ! உமக்கு போர்த் தொழில் தவிர வேறென்ன தெரியும் ? ஆயுதம் ஏந்தி அண்டை நாட்டை மிரட்டி அவரை ஆதிக்கம் செய்வதே உமது தொழில் ! பிற நாட்டாரைச் சீண்டுவதே உமது பிழைப்பாக இருக்கிறது ! நிம்மதியாக அவரை வாழ விடாது உமது ஆட்சி வலுவை அவர் மீது திணிக்க வேண்டுமா ? ஆங்கிலேயரை வர்த்தகக் கூட்டம் என்று திட்டுகிறீர் ! வர்த்தகராகிக் காலூன்றி மதத்தைப் பரப்பும் கர்த்தராகி மாறி விடுகிறார் ஆங்கிலேயர் ! பின்னர் நாட்டைக் கைப்பற்றி மன்னர் ஆகிறார். உமக்கும் அவருக்கும் ஒரே வேலைதான் ! போரில் பீரங்கிகளை வெடித்து நீவீர் அன்னிய தேசங்களை வீழ்த்துகிறீர்.

    நெப்போலியன்: இந்தியாவிலிருந்து பிரிட்டனை விரட்டி பிரென்ச் கொடியை ஆங்கே நாட்ட வேண்டும் ! என் மூளை அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டுள்ளது. சூயஸ் கால்வாய் வெட்டும் திட்டத்தைத் துவங்க வேண்டும். அதற்காக முதலில் எகிப்து மீது படையெடுத்து அதைக் கைப்பற்ற வேண்டும். எகிப்து பிரென்ச் கைவசம் ஆனதும் எனது மாபெரும் சூயஸ் கால்வாய்த் திட்டம் வெற்றிகரமாக, வேகமாக முடியும்.

    அதிகாரி: ஜெனரல் ! நானொரு திட்ட அதிகாரி அல்லன். போர்த் திட்ட மிடுவது என் தொழில்முறை இல்லை. ஆனால் நானொன்று கேட்கிறேன் : உண்ணும் போதும்,, உலாவிடும் போதும், உறங்கிடும் போதும் ஆயுதத்தைப் பக்கத்தில் வைத்துதான் வேலை செய்வீரா ? வாளில்லாத ஜெனரல் என்ன செய்வார் ? போர்க்களத்தை விட்டு ஓடுவாரா ? அல்லது வேறென்ன செய்வார் ?

    நெப்போலியன்: போரில் ஓடுபவனைச் சுட்டுக் கொல்வேன் நான் !

    அதிகாரி: நீவீர் தோற்று ஓடும் காலம் வரும் ! அப்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவீர் ! அப்போது உம்மைச் சுட்டுத் தள்ளுபவர் யார் ?

    நெப்போலியன்: நான் எந்தப் போரிலும் தோற்ற தில்லை ! எந்தப் போரிலும் தோற்று ஓடுவதில்லை ! என்னைக் கொல்லும் புல்லட் இன்னும் உருவாக்கப் பட வில்லை ! நான் ஐரோப்பியச் சக்ரவர்த்தி ஆவேன் ! ஆசியச் சக்ரவர்த்தி ஆவேன் ! அவை என் நெடுங்காலக் கனவுகள்.

    அதிகாரி: இப்போது நீவீர் ஆயுதம் ஒன்றுமில்லாத வெற்று மனிதன் !

    நெப்போலியன்: யார் சொன்னது ? நான் ஓர் ஆயுத மனிதன் ! உலக நாடுகளின் விதியை நிர்ணயம் செய்யும் ஊழ்விதி மனிதன் நான் !

    அதிகாரி: என் கண்களுக்குத் தெரிவது இதுதான் : நீவீர் ஆயுத மில்லாத வெற்று மனிதன் இப்போது !

    நெப்போலியன்: இதோ என் உடைவாள் ! (இடுப்பைச் சுற்றித் தடவுகிறான். வாள் உறையைக் காணவில்லை) ஆ ! எங்கே என் வாள் ? (அங்குமிங்கும் தேடுகிறான், வாளைக் காணாது தடுமாடுகிறான்)

    அதிகாரி: (அழுத்தமாக) ஆம் ஜெனரல் ! உமது வாள் இப்போது உன்னிடம் இல்லை !

    நெப்போலியன்: (அலறிக் கொண்டு) கியூஸெப் ! எங்கே என் வாள் ? மேஜையில்தான் வைத்தேன் ! யாரோ திருடி விட்டார் ! அந்த மாயக்காரியாக இருக்கலாம் ! தேடிப்பார் கியூஸெப் !

    அதிகாரி: (தன் உடை வாளை உருவி) ஜெனரல் ! இதோ என் கையில் உள்ளது வாள் ! இப்போது நான்தான் ஆயுத மனிதன் ! நான் நினைத்தால் இப்போது உம்மைச் சிறைப் படுத்தலாம் ! ஏன் வாளால் கொன்று விடலாம் !

    நெப்போலியன்: (நடுநடுங்கி) (அங்குமிங்கும் நடந்து வாளைத் தேடுகிறான்.) கியூஸெப் ! எங்கே எனது உடைவாள் ? பதிலைக் காணோம் ! எங்கே இருக்கிறாய் ?

    அதிகாரி: ஒற்றனாகிய நான் இப்போது உம்மைக் கொல்ல விரும்புகிறேன் ! உன்னைக் கொல்வதால் பிரிட்டன் பிழைத்துக் கொள்ளும் ! ரஷ்யா பிழைத்துக் கொள்ளும் ! எகிப்து பிழைத்துக் கொள்ளும் ! இந்தியா பிழைத்துக் கொள்ளும் ! (நெப்போலியனை நெருங்குகிறான்)

    நெப்போலியன்: (பயத்தோடு) வேண்டாம் ! என்னை விட்டு விடு ! (அலறிக் கொண்டு) கியூஸெப் ! என் உயிருக்கே ஆபத்து ! எங்கே எனது வாள் ? கியூஸெப் !

    அதிகாரி: நீங்கள் ஊழ்விதி மனிதனா ? நீங்கள் ஆயுதம் இழந்த காயித மன்னன் ! குறைபாடு நிறைந்த மனிதன் ! உம்மை உயிருடன் விடக் கூடாது !

    நெப்போலியன்: கியூஸெப் ! கியூஸெப் ! உடைவாளைக் கொண்டு வா ? மேஜையில் நான் தூக்கிப் போட்ட வாளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் ? (நெப்போலியன் வேகமாக உள்ளே ஓடுகிறான்)

    அதிகாரி: ஊழ்விதி மனிதன் படும்பாடு பரிதாபமாய் உள்ளது ! நெப்போலியனைத் துடிக்க வைத்து விட்டேன் ! என் வேலை முடிந்து விட்டது ! நான் போகிறேன் ! (அதிகாரி சட்டென வெளியேறுகிறான்)

    (உள்ளே இருந்து நெப்போலியன் குரல் கேட்கிறது. கியூஸெப் ! வாள் எங்கே ? என் உடைவாள் எங்கே ?)

    (முற்றியது)

    ***************************
    http://jayabarathan.wordpress.com/
    ***************************

    தகவல் :
    Based on The Play :
    (A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)
    (B) The Life & Times of Napoleon –Curtis Books (1967)
    (C) The Horizon Book of The Age of Napoleon (1963)
    (D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

    Share
  • திருமால் திருப்புகழ் (105)

    கிரேசி மோகன்

    Narration of  Bhagavath - Keshav
    Narration of Bhagavath – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ஏலேலோ போடுமிந்த, பூலோகம் போதுமே,
    மாலோலா, மாடுகள் மேய்ப்போனே, -கோலோகம்,
    நீவந்து கூட்டிச்செல், நானங்கு கும்பலோடு,
    கோவிந்தா போட்டு குதிப்பு….(136)

    எமக்கே எமக்கென்று, இவ்வுடம்பைப் பேணி,
    எமர்க்கே அளிப்பீர் எரித்து, -நமக்கே,
    நமக்குண்டு நாரா, யணநாமம் நெஞ்சில்,
    சுமப்பீர் அதனை சுமந்து….(137)

    எண்ணம் ஒடுங்கிட, ஏகாந்தம் கூடிட,
    கண்ணன் கருநீலக் காயாம்பூ, -வண்ணன்,
    நினைப்பும் நினைத்திடும், நானும் கலக்க,
    மனக்குறை நேர்நிறையா மே….(138)

    எந்தவேலை செய்தாலும், தொந்தரவாய்த் தோணுதே,
    இந்தநிலை ஏனெனக்கு நந்தலாலா, -அந்தநாளில்,
    ஆளாள் குறைதீர்க்க, ஆதரித்தோய் இன்றுமட்டும்,
    வாளா(து) இருப்பதேன் வா….(139)

    எந்தவேலை ஆனாலும், எந்தவேளை ஆனாலும்,
    நந்தலாலா நிந்தன் நினைவாக, -அந்தரங்க,
    பாவம் தனில்மூழ்கி, பார்க்கும் இடத்திலெல்லாம்,
    நீவந்து நீலமாய் நில்….(140)

    எழில்நீல வண்ணம் , பொழில்வேணு கானம் ,
    தொழில்காதல் , தாமரைத் தொப்புள் -சுழியில்,
    உலகெலாம் உண்டு, அலைகடல் நீந்தும்
    அலகிலாக் கண்ணன் அழகு….(141)

    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in

     

    Share
  • திருமால் திருப்புகழ் (104)

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ‘’கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
    அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு,
    கீதை, அடியார்தம் கண்ணீர் திவலைக்கு,
    தாதை அளிப்பான் துடைப்பு….(130)

     
    அவன்தான் குமரன், அவன்தான் களிறு,
    அவன்தான் அவன்தங்கை ஆயி, -அவன்தான்,
    சிவன்தான் அயன்தான், தவம்தான் வரம்தான்,
    அவன்தான் அனேகமான அது….(131)

     
    பாமாவின் பாய்ச்சலுக்கு, ருக்மணியின் கூச்சலுக்கு,
    ஆமாமாம் போட்டசாமி ஐடியாவாய், -காமாய்,
    கவுண்ட்செய்து பார்க்க கிடைத்தது கல்கி,
    டவுண்-டு-எர்த் மீண்டும் பிறப்பு….(132)

     
    தேவகி நந்தனின், சேவக நந்தகி
    ஆவலால் ஓர்கேள்வி அய்யனே, -பூவுளாள்,
    வேல்விழிபோல் எப்போதும், மாலன் மருங்கிலே,
    வாளாய் இருப்பதேன் வாள்….(133)

     
    தீவீரப் பித்தவெடி, வாதம் தகர்த்திட,
    வாவீரா வாளேந்தி வெண்புரவி, -மேவி,
    கயவர் குலமழித்தோய், கல்கியாய் இன்று,
    புவனம் பிழைக்கப் புகு….(134)….

    துரியோ தனனும், விருகோ தரனும்,
    சரியில் தவறில் சமமே, -அரியின்,
    அரசாட்சி தன்னிலே, ஆராய்ச்சி வேண்டாம்,
    ஒருசாட்சி யாய்அரி(றி) வோ(ஓ)ம்….(135)

    ———————————————————————————————————–

     

    Share
  • நட்பு வாழ்க!

    இசைக்கவி ரமணன்

    friendship_poster_by_dineshgreddy-d46z73p

    வாழ்க்கை என்பது உறவுகளின் கூடாரம். பெரும்பாலும் உறவுகளை நாம் அமைப்பதில்லை. உதாரணமாக,

    நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? இல்லை,
    என் பிள்ளை எனைக்கேட்டுப் பிறந்தானா?

    என்று கண்ணதாசன் பாடுவதுபோல், பெற்றோர்களை நாம் நிச்சயிக்கிறோமா? பிள்ளைகள் என்னும் உறவை நாம் ஏற்பாடு செய்கிறோமா? நாம் பிறக்கும்போதே ஒரு பெரிய குடும்பத்தின் பலவிதமான உறவுகள் நமக்காகக் காத்திருக்கின்றன.

    சரி, திருமணம்? காதல் திருமணம் என்றாலும், பெற்றோர்கள் நிச்சயித்தாலும் கணவன் அல்லது மனைவி என்னும் உறவு ஓர் ஏற்பாடு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    ஆனால், பெற்றோர்களோ, பிள்ளைகளோ, கணவனோ, மனைவியோ அமையவேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்கிறோம். ஏனென்றால், பெரும்பாலும் அந்த உறவுகள் நம் கையில் இல்லை. அவை நம்முடைய சாய்ஸ் இல்லை. எனவே, அவற்றை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே நமக்கு மிஞ்சுகிறது.

    ஆனால், நண்பர்கள் என்னும் உறவு அப்படிப்பட்டதல்ல. அது நாம், கவனமாக இருந்து அமைத்துக்கொள்ள வேண்டிய உறவாகும். எனவேதான், திருவள்ளுவர்,

    நாடாது நட்டலிற் கேடில்லை, நட்டபின்
    வீடில்லை நட்பாள்பவர்க்கு

    என்றார். ஆராயாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் தீங்கானது ஒன்றுமில்லை. ஏனென்றால், நட்பு என்பது ஏற்பட்டபின், அதிலிருந்து விலகுதல் சாத்தியமில்லை என்கிறார்.

    மற்ற உறவுகளுக்கும் நட்பு என்னும் உறவுக்கும் உள்ள வேறுபாடு, அதை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் என்பதே.

    ஒற்றுமை என்ன? மற்ற உறவுகளைப் போலவே — அதாவது, பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி – போலவே, நட்பு என்னும் உறவிலிருந்து விலகுதல் சாத்தியமில்லை என்கிறார் வள்ளுவர். உறவுக்கு அவர் வழங்கும் மதிப்பு இதிலிருந்து புரிகிறது.

    திருமணம் என்னும் நிகழ்வு அந்நாளில் கைத்தலம் பற்றி அக்கினியை வலம்வருவதோடு முடிந்தது. அந்தக் கணத்திலிருந்து வாழ்க்கை தொடங்குகின்றது.

    நட்பும் அப்படித்தான். ராமனும், சுக்ரீவனும் நண்பர்களாகும்போது, அக்கினியை வலம் வந்தார்களாம்! இனி, நமது இன்பதுன்பங்கள் சமமானவை, நாம் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை என்னும் உறுதியை இருவரும் ஒருமித்து எடுத்துக்கொள்வது, திருமணத்திலும், நட்பிலும் அன்று இருந்தது என்ற சேதி நமக்கு முக்கியமானது.

    சரி, ஒரு நண்பன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்பதையும், எப்படிப்படவனாகத் தன் நண்பன் இருக்கிறான் என்பதையும் “கண்ணன் என் தோழன்” என்னும் பாட்டில் பாரதியார் நமக்கு நயம்பட விளக்குகிறார். நட்பு என்றால் என்னவென்பதைத் திருவள்ளுவரை விடவும் யாரும் திறம்படச் சொன்னதில்லை. இரண்டையும் சேர்த்துப் பார்ப்போம்:

    உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்tr3045_hand_of_friendship_poster
    ஓங்கி யடித் திடுவான்; – நெஞ்சில்
    கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன் னாலங்கு
    காறி யுமிழ்ந்திடு வான்;

    நண்பன் என்பவன் நாம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவன் அல்ல. நமக்கு எப்போதும் இதமான வார்த்தைகளையே சொல்லி நம்மை ஆதரிப்பவன் அல்ல. நாம் நம்முடைய மனிதனென்னும் நிலையிலிருந்து தவறிவிடாமலும், நாம் நம் மனித நிலையை மேலும் வளர்த்துக்கொள்ளவும் உதவுபவனே நண்பன்.

    நம்மில் பொய்யை அனுமதிக்காதவன்தான் நம் நண்பன். ஒரு பணக்கார வீட்டு இளைஞனைச் சுற்றி நின்று ஜால்ரா அடிப்பவர்கள் நண்பர்களே அல்ல. இதைத்தான் திருவள்ளுவர்,

    நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
    மேற்சென் றிடித்தற் பொருட்டு

    என்றார். சும்மா சிரித்துவிட்டுப் போவதல்ல நட்பு. இதை வள்ளுவரும் பாரதியும் எவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்கள்!

    விசாரணையின்றியே உடனே உதவ வருபவன் நண்பன். ஒரு துன்பம், ஆபத்து என்றால் அடுத்த கணமே ஓடிவந்து அங்கு நிற்பான் நண்பன்.

    ramஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.

    இதைவிடச் சிறந்த உவமையைச் சொல்ல முடியுமா? கட்டிய துணி அவிழ்ந்தால், அடுத்த கணமே நமது கை அதைச் சரிசெய்வது போல, நம்முடைய துன்பங்களை நீக்குபவன் நண்பன். அதற்குப் பெயர்தான் நட்பு.

    இதையே பாரதியார் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்:

    கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
    கேலி பொறுத்திடுவான்; – எனை
    ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
    ஆறுதல் செய்திடு வான்; – என்றன்
    நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
    நான்சொல்லும் முன்னுணர் வான்;

    ”நான் சொல்லும் முன்னுணர்வான்” என்னும் வரியில் அடங்கியுள்ள ஆழத்தைக் கவனியுங்கள். ஒரு நல்ல நண்பனுக்கு விளக்கங்கள் தேவைப்படுவதில்லை. ஒருவன் நல்ல நண்பனாக இல்லாதபோது, எந்த விளக்கத்தாலும் பயனில்லை. இதுதான் நட்பின் அடையாளம். இதுதான் உறவின் நாகரிகம்.

    அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
    அரைநொடிக் குள்வரு வான்;
    மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்
    வாழ்வினுக் கெங்கள்கண்ணன்

    A friend is one who is available for you the moment you need him! எவ்வளவு அழகு! நீங்கள் ஒரு முக்கியமான கூட்டத்திற்கோ, திருமணத்திற்கோ, அல்லது வேலைக்குச் சேர்வதற்கோ சிறப்பான உடையணிந்து செல்கிறீர்கள். அப்போது, தெருவில் நடந்து செல்லும்போது மழை பொழிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கணத்தில், உங்கள் வாழ்க்கையிலேயே உங்களுக்கு மிகமிகத் தேவையானதாக நீங்கள் கருதக் கூடிய ஒரே பொருள் குடைதான் அல்லவா!! அது போலத்தான் பசி நேரத்து உணவு. அதுதான் நட்பு. அதைத் தருபவனே நண்பன்.

    சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் இரண்டே கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன்.
    ஒன்று, நண்பர்களாவதற்கு ஒரே மாதிரியான ரசனைகள் தேவையில்லை; ஒரேவிதமான உணர்ச்சிகளே நல்ல நட்புக்கான வாய்ப்பை அமைக்கும் என்கிறார் திருவள்ளுவர்:

    புணர்ச்சி பழகுதல் வேண்டா ; உணர்ச்சிதான்
    நட்பாம் கிழமை தரும்.

    இது மிகவும் ஆழமானதும் நுட்பமானதும் கூட. எனக்கும் உங்களுக்கும் இந்த உணவு பிடிக்கும், அந்த நடிகரைப் பிடிக்கும் என்பது நம்மிடையே நட்பு வளர்வதற்குக் காரணமாகாது. ஆனால், எனக்கும் உங்களுக்கும் இந்த தேசம் பிடிக்கும், மனிதர்களைப் பிடிக்கும், அவர்கள் நல்வாழ்வு பெறுவது பிடிக்கும் என்பன போன்ற உணர்ச்சிகள் நம்மிடையே நல்ல நட்பு அமைவதற்குக் காரணங்களாக அமையும்.

    ஆழமான நட்புக்கு ஆழமான உணர்ச்சிகளே காரணங்களாகின்றன.

    இரண்டாவது. கடவுளை வழிபட ஒன்பது விதமான பக்தியைக் குறிப்பிடுகிறார்கள். அதில் நட்பு மூலம் இறைவனை அடைவதை ஒரு பாதையாகவே வகுத்திருக்கிறார்கள். இந்த நட்புதான் இறைக்காதல், அதாவது, Divine Love, என்னும் தளத்திற்கு உயர்கிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்த நிலையை எய்தியவர்களே. அவர்களுள்ளும் சுந்தரரும், திருமங்கையாழ்வாரும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆண்டாளும் மீராவும், இறைவன் மீது கொண்ட நட்பைக் காதலாக்கி, ஒரு புதிய வழியையே படைத்தார்கள்.

    ஏன், இறைவனை நண்பனாகக் கருதுகிறோம் தெரியுமா? நண்பன் என்பவன் நமது மனசாட்சியின் வடிவம்! ஆம், நம்முடைய மனசாட்சிதான் வேட்டியோ, புடவையோ, ஜீன்சோ, லுங்கியோ அணிந்துகொண்டு நம் நண்பனாக எதிரே நிற்கிறது!

    யார், இறைவனுக்குத் தனது மனசாட்சியை ஆசனமாக அமைக்கிறார்களோ அவர்களே பேறு பெற்றவர்கள். அவர்களே அவனை அடைகிறார்கள்.

    எனவேதான், இறைவனிடம் நட்புக்கொள்வது என்னும் ஏற்பாடு அமைந்தது.

    நண்பர்களே! நட்பு என்பது வானம் போல. அது வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை. நட்பு வாழ்க!

    நலமே விளைக நமக்கு!

    Share
  • கலாயோகி, கவியோகி ரவீந்திரநாத் தாகூர்

    -வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்

     

    tagore

     

    செல்வப் பாரம்பரிய இந்துக் குடும்பத்தில்
    கல்கத்தா ஜோராசங்கர் மாளிகையில் பிராலிப் பிராமணர்
    பலதுறை ஆளுமையர், வங்காள இலக்கியர்
    வல்லவர் குருதேவ் ஒன்பதாவது மகனாகினார்.
    வைகாசி ஏழில் 1861ல் இவரைக்
    கைகளிலேந்தினர் தேவேந்திரநாத் சாரதாதேவி தம்பதியர்.

    வையகம் போற்றும் காவியக் கவியோகிக்குக்
    கைத்தது பாரம்பரியக் கல்விமுறை, சட்ட திட்டம்.
    கல்விச்சாலை செல்லாது சமஸ்கிருதம், இஸ்லாத்தின்
    நல் பாரசீக இலக்கியங்கள், மரபுச்
    செல்வர் கவி காளிதாசர் கவிகளிலுமாழ்ந்தார்.
    வல்லமையோடு எட்டு வயதில் கவியடியெடுத்தார்.

    கல்வெட்டாய் முதற் கவித்தொகுப்பு 17 வயதில்.
    சொல் வளமுடைக் கவிதைகள் ஆயிரத்திற்கு மேலாக.
    காவியக் கம்பர், வியாசருக்கடுத்து ஏராளமாகத்
    தூவினாராம் அறுபது ஆண்டுகளென்பது கணிப்பு.

    பரம்பரை இந்தியக் கலாச்சாரக் கருத்துடன்
    தரமான மேற்கத்திய முற்போக்குக் கருத்துகளும்
    வரம்பின்றி விளையாடியது தாகூர் வரிகளில்!

    வித்தகர் வங்காள இலக்கிய நாயகர்
    பத்து வயது மிருனாலிதேவி ராய்சௌத்திரியைப்
    பத்தினியாக்கினார் 1883ல். புத்திரிகள் மூவர்
    புத்திரர்கள் இருவர் பிறந்த போதும்
    முத்தான இருவர் இளமைக்கு முன்னிறையடியேகினர்.

    கெட்டித்தனமான கல்வியாளர், நூலாசிரியர், கவிஞர்
    நாட்டிய நாடகங்கள், சிறுகதைகள், நாடகங்களுடன்
    நாட்டமுடன் இசையும் அமைத்தார் – இசைமேதையுமானார்.

    மானுடம் போற்றிய தத்துவஞானி, இயற்கைவிரும்பி
    மனிதநலப் பொதுமைவாத மெய்யியற் சிந்தனையாளர்
    1878 – 1932னுள் ஐந்து கண்டங்களில்
    முப்பத்தொரு நாடுகளேகிய சுற்றுலா விரும்பி.
    இந்திய ஆத்மிகப் பெருமைக்கு இலக்கணவிலக்கியமானார்.

    1901ல் சாந்திநிகேதன் கலைக் கழகம் அமைத்தார்.
    குருகுல முறையில் இயற்கைச் சூழலில்
    அரும் கல்விப் போதனைகள் நடந்தது.
    உருவானது முழுமையான இலக்கியப் பணி.

    சாந்தி நிகேதனே விசுவபாரதி உலக
    சர்வகலாசாலையாகப் பின்னாளில் பரிணமித்தது.
    1905னுள் இந்தியக் கலாச்சாரத் தலையாயப் பிரதிநிதியானார்.
    1911ல் இலக்கியத் துறைப் பேரரசாகப் போற்றப்பட்டார்.

    19ம் நூற்றாண்டின் நவஇந்தியக் கலாச்சாரப் பிரதிநிதி.
    ரவீந்திரநாத்தாகூர் மாபெரும் தேசியக்கவி. காந்தி
    விக்டர் கியூகோவிற்கு இணையாகக் கணிக்கப்பட்டார்.

    பிரிக்கப்படாத வங்காள ஒற்றுமையைக் குறித்திட
    வரித்து ராக்கிபந்தன் விழாவை அங்கறிமுகமாக்கினார்.
    வங்காளப் பிரிவினையை எதிர்த்து எழுதிய வரிகள்
    ”அமர் சோனார் பங்களா ” வங்காள தேசியகீதமானது.
    இன்னிசைக் கனிவுடைய உணர்வுப் பாடலானது!

    வங்காள மொழிக்கு உலகக் கண்ணோட்டம் தந்தார்.
    வங்காள பாரம்பரிய நாட்டுப் புறப்பாடல்
    பாரம்பரிய இசைத் தொகுப்பாக 2000ற்கும் மேலாக்கினார்.
    இரவீந்திர சங்கீத் என்றிது அழைக்கப் பட்டது.

    தாகூர் காந்திக்கு ” மகாத்மா ‘ வை இணைத்தார்
    இந்திரா காந்திக்கு ”  பிரியதர்சினி ”  யைச் சூட்டினார்.
    தாகூர் காந்தியை மாபெரும் காவலனென்றார் (    )
    அறிவுஜீவியாம் தாகூர் இந்தியத் தேசியகீதமாக்கினார்.

    1913ல் வங்கமொழி கீதாஞ்சலியின் ஆங்கில
    மொழிபெயர்ப்பிற்கு நோபல் பரிசு பெற்றார்.
    ஆசிய முதல் நோபற் பரிசாளரிவரே!

    ஆங்கில கீதாஞ்சலியைத் தமிழில் கனடா சி. ஜெயபாரதன்
    மொழி பெயர்த்த பெருமையாளர் – 2004ல்   
    1915ல் பிரித்தானியா ’ செவ்வீரர்’ (     ) பட்டமளித்தது.
    1940ல் இலக்கிய முனைவர் பட்டம் பெற்ற
    குழந்தைப் பிரியர் 7-9-1941ல் இயற்கையெய்தினார்.

    (பிரியதர்சி – அமைதியான பார்வை.)

     

    Share
  • நிலவே சாட்சி!

    -சீர்காழி உ செல்வராஜு

    அமைதியான அலைகளற்ற                                                 
    அந்திநேரப் பொழுதினிலே                                                     moon for kavithai
    மெல்ல மெல்லத் தெரிகிறாயே
    மென்மையான வெண்ணிலவே!

    சூடான நிலைமாறிச்
    சுகமான பால்நிலவே
    உன்னழகு என்னருமை!
    உனக்கு எங்கும் ரசிகர்களே…!

    ஓய்வெடுக்க அணியணியாய்
    ஓகோவெனத் திரண்டிடுவர்
    களிப்புடனே ரசிகர்களோ
    கடந்தகாலம் பகிர்ந்திடுவர்!

    எட்டாத தூரத்தில்
    கிட்டாத காதலியாய்
    மட்டிலா அன்புடனே
    மயக்கத்திலே மூழ்கடிப்பாய்!

    உம்முடனே எம்முன்னோர்
    உரைத்ததெல்லாம் சொல் நிலவே!
    இறந்தகாலம் நிகழ்காலம்
    எதிர்காலம் நீ அறிவாய்!

    அத்தனையும் அங்கிருந்தே
    அற்புதமாய் நோக்குகிறாய்
    நிழல்படம் எடுத்திருப்பாய்
    நிறைமதியே! நீ தானே சாட்சி…!

    Share
  • சாஹஸ மோஹினி நீ

    கே.ரவி

     


    10365964_1412031469078978_5027039259935012318_n

     

    =========================================

    பாடலைக் கேட்க:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/06/Saahasa-Mohini_new2.mp3

    =========================================

     

    சாஹஸ மோஹினி நீ – என்
    மானஸ வீணையின் நாள நரம்புகள்
    ராகம் இசைத்திட ராஜஸம் பயில்
    சாஹஸ மோஹினி நீ

    காலையிலே செந்தாமரை நீ – பகல்
    வேளையிலே பொன்னோவியம் நீ – அந்தி
    மாலையிலே நீலோத்பலம் நீ – பின்
    இரவினிலே வரும் பேரமைதி
    சாஹஸ மோஹினி நீ

    கண்களிலே நீ ஒளிவடிவம்
    பண்களிலே நீ களிநடனம் – என்
    எண்ணமெல்லாம் ஒரு ஜீவநதி – அதன்
    ஒவ்வொரு துளியுமுன் சலங்கையொலி
    சாஹஸ மோஹினி நீ

    காதலர் நடுவே காற்றாக – நல்ல
    கவிதையிலே அமுதூற்றாகப்
    புன்னகையில் இளம் கீற்றாகப்
    புயல் இடி மழையென்று கூத்தாடப்
    புதுப்புது வடிவம் எடுப்பவளே – ஒன்றும்
    புரியாததுபோல் நடிப்பவளே
    சாஹஸ மோஹினி நீ

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — கீதா மதிவாணன்

     

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasanதிரையிசைப்பாடல்கள் வழியாகவே நம்மில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர் கவிஞர் கண்ணதாசன் என்றாலும் திரைப்பாடலாசிரியர் என்பதைத் தவிரவும் எண்ணற்ற பன்முகங்களைக் கொண்ட அவர் என் பார்வையில் ஆகச்சிறந்த ஒரு இலக்கியவாதியாகத்தான் புலப்படுகிறார். இலக்கியங்களிலிருந்து  வரிகளையும் கருத்துக்களையும் தான் எடுத்தாள்வதைக் கவிஞரே நேர்மையாக ஒப்புக்கொண்டபடியால், இலக்கியங்களைக் களவாடி கவிதைகளில் புகுத்துகிறார் என்பவர்களின் குற்றச்சாட்டை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. பந்தியில் பரிமாறப்படும் உணவுக்கான பாராட்டு பரிசாரகரிடம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அது தனக்கானதில்லை என்பதை அவரும் அறிவார்; நாமும் அறிவோம்.

    தமிழிலக்கியம் என்பது பாமர மக்களில் சிலருக்கு எட்டிக்காய், சிலருக்கோ எட்டாக்கனி. புலவர்களும் தமிழறிஞர்களும் ஆய்வறிஞர்களுமே  இலக்கியங்களின் நயத்தையும் இன்பத்தையும் மாந்தி மகிழும் பேறு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். ஆர்வமிருக்கும் பலருக்கு அதற்கான வாய்ப்பு அமைவதில்லை. வாய்ப்பு அமைந்த பலரும் பிறருக்கு அவற்றை அறியத்தரும் முயற்சியில் இறங்குவதில்லை. அதனால் நம்மில் பலர்  வாழ்நாளில் தமிழின் இலக்கிய இன்பங்களை நுகரும் வாய்ப்பு கிட்டாமலேயே வாழ்ந்து மறைந்துபோகிறோம்.

    இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?

    நம்மில் எத்தனை பேர் கம்பராமாயணத்தையும் கலித்தொகையையும் கலிங்கத்துப்பரணியையும் நளவெண்பாவையும் படித்திருக்கிறோம்? அந்தப் பெயர்களையாவது கேள்விப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் திருக்குறளின் அத்தனை அதிகாரங்களையும் வாசித்து அர்த்தம் புரிந்து பரவசப்பட்டிருக்கிறோம்? பள்ளியில் படித்திருக்கும் ஒரு சில குறள்கள் தவிர பிறவற்றை நாம் அறிய முனைந்ததே இல்லை. பள்ளியிலும் கூட முப்பாலில் மூன்றாம் பாலான இன்பத்தை ஒதுக்கிவிட்டு அறமும் பொருளும்தான் போதிக்கப்படும். காமத்துப்பாலில் காதலின் அத்தனைப் பரிமாணத்தையும் அழகாக அலசியிருக்கும் வள்ளுவரின் திறனை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம். திருக்குறள் மட்டுமல்ல, கடலென விரிந்துகிடக்கும் சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பலவற்றுள் இருக்கும் இலக்கியச்சுவை இன்னதென அறியாமலிருக்கிறோம்.

    நம்மைப் போன்ற இலக்கியம் அறியாதோருக்காக, பல கவிஞர்களும் தங்கள் பாடல்களில் இலக்கியங்களை நயமாகப் புகுத்தி இலக்கிய நயத்தை நாம் அனுபவிக்கத் தந்திருக்கிறார்கள். ஆனால் அனைவரிடத்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பங்கு அலாதியானது. சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை, பாரதியார் முதல் பட்டினத்தார் வரை யாதொரு தெளிவுரை, பதவுரையின் தேவைகளின்றி எளிதில் எவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இனிய தமிழ் வார்த்தைகளால் திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தைப் பகிர்கிறார் இந்த இன்சுவைக் கவிஞர்.

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ
    எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ் வழி அறிதும்,
    செம் புலப் பெயல் நீர் போல,
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
    என்ற குறுந்தொகைப் பாடலை அறியாதோர் அநேகருண்டு. ஆனால் கண்ணதாசனின் இப்பாடலை அறியாதோர் யாவர்?

    நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
    இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
    காணும் வரை நீ எங்கே நான் எங்கே
    கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

    இதே பாடலில் காமத்துப்பாலில் குறிப்பறிதல் அதிகாரத்திலிருந்து ஒரு குறளையும் நமக்குச் சுட்டியுள்ளார்.
    யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.

    நம் கவிஞர் என்ன சொல்கிறார்?
    உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
    விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே

    இதோ இன்னொரு குறள் அதே குறிப்பறிதலில் இருந்து…
    இருநோக்கு    இவளுண்கண் உள்ளது    ஒருநோக்கு    
    நோய்நோக்கொன்    றந்நோய் மருந்து.

    ‘கலையே உன் எழில் மேனி கனியாவதேன்’ பாடலில் கவி சமைத்த எளிய வரிகள்…

    இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
    ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன்
    பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே
    எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே

    தமிழிலக்கியம் கற்க எனக்கு ஆர்வமிருந்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதை தமிழறிஞரான என் மாமனாரிடம் ஆதங்கத்தோடு வெளியிடுவதுண்டு. அவர்களும் அவ்வப்போது இலக்கியங்களிலிருந்து சில பாடல்களை எடுத்து நான் அறியத் தருவார்கள்.

    ஒருநாள் கலித்தொகையில் புலவர் பெருங்கடுங்கோ பாடிய ஒரு பாடலை சிலாகித்து விளக்கினார்கள். தனக்குப் பிடித்தவனுடன் பெண் ஊரைவிட்டுப் போகும் பழக்கத்தை அன்று ‘உடன்போக்கு’ என்பார்களாம். இன்றைய வழக்கத்தில் ‘ஓடிப்போதல்’ என்போம். அப்படி உடன்போக்கு போன பெண்ணை அவளுடைய வளர்ப்புத்தாய் தேடிக்கொண்டு போகிறாள். வழியில் எதிர்ப்படுபவர்களைப் பார்த்து ‘இந்த வழியே என் மகள் ஒரு ஆடவனோடு போனதைப் பார்த்தீர்களா?’ என்று அழுதுகொண்டே கேட்கிறாள். அவ்வழியே வந்த பெரியவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி அவளுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

    பலஉறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
    மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்?
    நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
    சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
    நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
    தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
    ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
    யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
    சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

    “மலையிலுள்ள காட்டிலிருந்து பெறப்படும் சந்தனத்தால் அதைப் பூசுவாருக்கு அல்லாமல் மலைக்கு என்ன பயன்? கடலிலிருந்து கிடைக்கும் முத்தால் அதை அணிபவர்க்கு அல்லாமல் கடலுக்கு என்ன பயன்? யாழிலிருந்து கிடைக்கும் இனிய இசை, அதைக் காதால் கேட்பவர்க்கு அல்லாமல் அந்தக் கருவிக்கு என்ன பயனைத் தரும்? அதுபோல் உன் மகளும் உரிய காலத்தில் தலைவனைச் சேர்தலே முறை. அவ்வாறின்றி அவளை உன்னோடு தக்கவைப்பதால் உனக்கென்ன பயன்?” என்று கூறி அவளை சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்பினர்.

    ஆஹா.. என்னவொரு அற்புதமான வாழ்வியல் தத்துவம். என் மாமனார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் ஏதோ குறுகுறுத்தது. இதை.. எங்கோ கேட்டிருக்கிறேன்.. எங்கே..? ஆங்…. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னும் பாடலில் இந்த வரிகளைக் கவியரசர் இப்படிக் குறிப்பிடுகிறார்.

    மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
    மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
    நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
    நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
    காலம் மாறினால் காதலும் மாறுமோ…
    இப்படித் தொடர்கிறது அப்பாடல். கலித்தொகைப் பாடலைப் புரிந்துகொள்ள எனக்கொரு தமிழறிஞரின் உதவி தேவைப்பட்டது. ஆனால் கண்ணதாசனின் பாடலை எவர் உதவியுமின்றி அழகாக ரசித்து மகிழமுடிகிறதே..

    மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
    பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்
    காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
    வேர்த்தளைக் காணென்றான் வேந்து.
    புகழேந்திப் புலவர் பாடிய இந்த நளவெண்பா பாடலை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்? இந்த உவமையின் ஒரு பாதி கையாளப்பட்டத் திரைப்பாடல் இந்நேரம் நினைவுக்கு வந்திருக்கவேண்டுமே… ஆம், அதேதான்.

    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…
    கவியரசரின் இந்தப் பாடல் மூலம் நளவெண்பாவின் அறிமுகம் கிடைத்தது எனக்கு.

    புலவர் செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் ஒரு பாடல். போர் முடிந்து நெடுநாள் கழித்து வீடு திரும்பிய கணவர்களிடம் ஊடல் கொண்டு வாயிற்கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரின் ஊடல் தீர்க்க புலவர் பாடுவது….
    வாயின் சிவப்பை விழிவாங்க
    மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
    தோயக் கலவி அமுதளிப்பீர்
    துங்கக் கபாடம் திறமினோ.

    இந்த வரிகளின் நயத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வெளிப்படுத்திய திரைப்பாடல் வரிகள்…
    வாயின் சிவப்பு விழியிலே
    மலர்க்கண் வெளுப்பு இதழிலே

    கவிஞரை ஈர்த்த கலிங்கத்துப்பரணியின் மற்றுமொரு பாடல்,
    கலவிக் களியின் மயக்கத்தால்
    கலைபோய் அகலக் கலைமதியின்
    நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
    நீள்பொற் கபாடம் திறமினோ

    கவிஞர் நமக்கு வழங்கும் எளிய வரிகள்….
    ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது வழக்கம்

    இலக்கியச் சான்றுகளை ஆங்காங்கே தொட்டுக்காட்டி “உள்ளே வாருங்கள், இன்னும் இன்னும் அனுபவிக்கலாம்” என்று ஈர்க்கிறார் தமிழின் சுவையறியத் துடிக்கும் உள்ளங்களை.

    நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்     
    தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று    
    நனந்தலை யுலகமுந் துஞ்சும்     
    ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
    ஊர் உறங்கிவிட்டது, உலகம் உறங்கிவிட்டது. உரியவன் அருகில் இன்மையால் நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கிடக்கிறேனே என்ற பொருள்படும் குறுந்தொகைப்பாடலின் சாரத்தை எடுத்துக்கொண்டார் கவிஞர். தலைவியின் கூடவே நிலவும் உறங்காமல் விழித்திருப்பதாக கற்பனை கூட்டி எளிய வரிகளால் நமக்களிக்கிறார்.

    பூ உறங்குது பொழுதும் உறங்குது
    நீ உறங்கவில்லை நிலவே
    கானுறங்குது காற்றும் உறங்குது
    நான் உறங்கவில்லை….

    கண்ணதாசன் அவர்களின் மகன் காந்தி கண்ணதாசன் ஒருமுறை தந்தையாரிடம் சென்று,  “நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன் அப்பா” என்றாராம். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழிலக்கியம் எல்லாவற்றையும் படிக்கவேண்டும். பிறகு அனுபவங்களுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்று தந்தை பதிலளித்தாராம். பாட்டு எழுதுவது வெகுசுலபம் என்பது போல் சொன்னாலும் தமிழிலக்கியத்தை நன்கு கற்றுணர்ந்திருக்கவேண்டும் என்ற அவரது வார்த்தையில் எவ்வளவு அழுத்தம்! கவியரசரின் பாடல்களில் பலவற்றுள் கம்பராமாயணத்தின் ஈர்ப்பிருப்பதைக் காணமுடியும்.

    நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
    பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
    மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
    விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்.

    இந்த வரிகள் கண்ணதாசனின் எண்ணத்தில்
    நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
    நதி செய்த குற்றமில்லை
    விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா?
    என்று அழகிய பாடலாய் விரியும்.

    கண்ணில் தெரியும் பொருளினைக்
    கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட
    மண்ணில் தெரியுது வானம்,
    அதுநம் வசப்பட லாகாதோ?
    என்னும் பாரதியின் வரிகள் கவிஞரின் கவிவண்ணத்தில் மிளிர்கிறது இப்படி!
    கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ?

    என் சொந்தக் கருத்துக்களோடு இணையத்திலிருந்து பெறப்பட்ட பல தகவல்கள் இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தாலும் இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச்சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே. சங்கப்பாடல்களின் பொருளுணர்ந்து அவற்றுள் என்னால் சங்கமிக்க இயல்வதற்கும், நளவெண்பாவையும் கலிங்கத்துப்பரணியையும் கம்பராமாயணத்தையும் வாசித்து வாசித்து இன்புற்றுக் களிப்பதற்கும் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையை எளிய தமிழில் புதுக்கவிதை பாணியில் எழுதும் துணிவைப் பெற்றமைக்கும் முக்கியக் காரணம் இலக்கியம் சார்ந்த கவியரசரின் இனிய பாடல்களே என்றால் அது கிஞ்சித்தும் மிகையில்லை.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்…

    — ஷைலஜா

    என் பார்வையில் கண்ணதாசன்…

     

     

    Kannadasan‘மாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி,
    ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்..’

    என்கிறார் இறைவன் கண்ணனைப்பாடும் பாசுரத்தில் ஆழ்வார் பெருமான்! எந்தக் கலப்படமும் இல்லாத, சுத்தமான 24 காரட் தங்கத்தைதான் ‘ஆணிப்பொன்’ என்று அழைக்கிறோம். ஆணிமுத்தும்  உயர்வானது.

    ‘ஆணிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்!

    கண்ணதாசனும் தமிழ்மாதமான ஆனியில்  பிறந்த ஆணிமுத்து! இயற்பெயரிலும் முத்தினைக்கொண்டவர்! தமிழ் அன்னையின் கழுத்தில் முத்தாரமாய் திகழ்பவர் !

    திரை இசைப்பாடல்களில் தனி  முத்திரை பதித்த ஒப்பற்ற கவிஞர்! மனவாசமும் கண்டவர் வனவாசமும்  கொடுத்தவர்! இந்தியமண்ணின் உமர்கய்யாம்!  இயேசுகாவியமும் அளித்தவர் அர்த்தமுள்ள இந்துமதமும் படைத்தவர்!

    கண்ணதாசனே!கங்கைவெள்ளம் நீங்கள்!  தங்களைப்பற்றி ஆயிரம்வரிகளுக்கு மிகாமல் எழுதுவதும் சாத்தியமா என்ன! கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!

    உங்களைப்பற்றி எழுதும் பொழுதிலும் உங்களது பாடல்வரிகளைத்தான்  உதாரணம் காட்டவேண்டி இருக்கிறது பார்த்தீர்களா!  உங்கள்  பாடல்களில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு ! அவை யாவும்  மனதில் அசைபோடுகிறது! சீர்மிகு செந்தமிழை  சிகரத்திற்குக்கொண்டு சென்றவரல்லவா இந்த செட்டிநாட்டுக்கவிஞர்!

    எளிமை என்பது எவரையும் வசீகரிக்கும்  மாயம்! அவரது பாடல்களில் எளிமை தான் மிகுதி. அதனால்தான்  பாமரனையும் போய் பற்றிக்கொண்டன! என்னையும் மிகக்கவர்ந்து இன்று எழுதவைக்கிறது!

    தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான  வாழ்வியல் தத்துவங்களை, வாழ்வின்வளைவுகளை நெளிவுகளை சுழிவுகளை வார்த்தைகளில் வள்ளலாய் வடித்துக்கொடுத்தவரை வெறும் சிறுகட்டுரைக்குள் சிறைப்படுத்தவும் முடியாதுதான். ஆயினும் கதம்பமாலையின் மலர்க்கூட்டமிடையில், தன்பச்சை இலை மேனிவாசனையை வீசும் மரிக்கொழுந்தாய் கவிஞர்புகழ்பாடும் இந்தக்கட்டுரை, இங்கும் மணக்கும்எனும் நம்பிக்கை!

    கலை என்பதே  ஆழ்மனம் சார்ந்ததுதான் அதற்கு படிப்பறிவு அவசியமில்லை படித்தபலருக்கு கலையை  ரசிக்கத்தெரிவதில்லை. எங்கள் கவிஞர் எந்தப்பள்ளிச்சாலையிலும் சென்று பட்டம்  வாங்கியதில்லை ஆனாலும் அறிவு  அவர்  மூளையில்  சாலை போட்டுக்கொண்டது.

    நூல்களை அல்ல நூலகங்களையே  படித்துமுடித்தவர்..அவரது வாழ்க்கை அனுபவம்  வாகான  வார்த்தைகளில் கவிதையாய் வடிவெடுத்தன.

    ஐந்தாயிரம்  பாடல்களுக்கு மேல் எழுதிய   கரங்கள், அரத்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதியதும்  நாத்திகக்கறை நீங்கப்பெற்று நானிலமெங்கும் அவரது புகழை இன்னமும் உயர்த்தின!

    வீணையின் சுபாவம்  அதனை  மீட்டி முடித்தபின்னும் அதிர்வுகளை சிலக்கணம் பரப்பிக்கொண்டிருக்கும்.

    காலவீணையை உந்தன் கவிதைவரிகளில்மீட்டிவிட்டுப் போய்விட்டாய்  காவியக்கவிஞனே! இனியகானத்தின் அதிர்வு இன்னமும்  ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

    தாய் பாடும் தாலாட்டில் தமிழ் மணம் கமழ்ந்து வருகின்றது. தாய்க்குக் குழந்தை எப்படித் தெரிகிறதா? கவிஞர் பாடலில் காண்போம் அதை!

    “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
    நடந்த இளந்தென்றலே வளர்
    பொதிகை மலைதோன்றி
    மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே”

    தமிழ் மன்றத்தைப் போன்று தெரிகின்றதாம்! தமிழுடன் குழந்தையை ஒப்பிட்டுப்பாடும் தாயின் மனம் கவிஞரின் வார்த்தைகளில் பெருமையுடன் வெளிப்படுகிறது.

    சிறுகூடற்பட்டியிலே பிறந்து,  சிகாகோ நகரில் தம் வாழ்வை முடித்த  மகா கவிஞனுக்கு கம்பன்மீதான காதல் அலாதியானது!

    கம்பன்  தன் காவியத்தின் ஒருபாடலில்,
    “மழைவண்ணத்து அண்ணலே உன்
    கைவண்ணம் அங்கு கண்டேன்
     கால்வண்ணம் இங்கு கண்டேன்”
    என்பதாக இராமனைப்புகழ்ந்தபடிஅப்பாடலில் எட்டு வண்ணம் வைத்தான் என்றால் கண்ணதாசனோ “பால் வண்ணம் பருவம் கண்டு” என்று தொடங்கும் பாட்டில் முப்பத்திரண்டு வண்ணம் வைத்துள்ளார்!

    “கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்” என்பது கண்ணதாசன் வாக்கு!

    தனது பாடலின் நடுவே, அவளது  திருப்பாவையின் ஒருபாசுரமான,

    குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறி…”என்றவரிகளின் தாக்கமாய்,

    “குத்துவிளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க
    மெத்தைவிரித்திருந்து மெல்லியலாள் காத்திருக்க..”
    என்கிறார் தான் இயற்றிய திரைப்பாடலொன்றில்.

    திருப்பாவை மற்றும் திருவெம்பாவையை  மனதில்கொண்டு  வடித்த “தைப்பாவை” நூல் இலக்கிய உலகின் அணையாவிளக்கு.

    “என்னைக்கவலைகள்   தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன்” என்றான் பாரதி.

     “பின்னிவரும் இன்னலைச் சன்னல்வழிவீசியே பிணமாய்புதைக்கவேண்டும்” என்றார் கண்ணதாசன்.

    பாரதியைப்போலவே கவிஞருக்கும்   உண்டு  ஒரு கனவு ..ஆம்,அந்த முண்டாசுக்கவிஞன்,

    “பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
    எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்
    அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்
    என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்”
    (–காணி நிலம்வேண்டும்)
    என்றான்.

    “அழகான சிறிய வீடு அடுக்காகப் புத்த கங்கள்
    பழங்கால ஓவியங்கள் பஞ்சணை குளிர்ந்த காற்று
    தொழத்தக்க இளைய கன்னி தொண்டுக்கோர் சிறியபையன்
    எழிலான காகி தங்கள் எழுதுகோல் பழுதில் லாமல்!”
    என்கிறார் நம் கவிஞர்!
    “தொழத்தக்க இளைய கன்னி” என்பதில் வெறும் காமத்தைத் தாண்டிப் பெண்மையின் மீதான பெருமதிப்பையும் காட்டுவதை உணரமுடிகிறது.

    “எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
    நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
    நமக்காக நம் கையால் செய்வது நன்று
    நமக்காக நம் கையால் செய்வது நன்று”
    (–ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்)

    நமக்கான  கடமைகளை   நம்கைகளால் செய்யவேண்டியது  நல்லதென்பதை  எளிமையாய் அருமையாய்  சொல்லியவிதம்  அதன்படி நடக்கத்தூண்டிவிடுகிறது.

    “அத்திக்காய்காய் காய் ஆலங்காய்வெண்ணிலவே” என்ற பாடலில் இரண்டு அர்த்தங்கள் வரும்படி எழுதி இருப்பார். அத்திக்காய் என்பது ஒரு காய் என்று ஒரு பொருள். அடுத்து, அத்திக்காய் எனில் அந்த திக்காய் (திசையில்) காய் என்றால் நிலா காய்கிறது என்பதுபோல பொருள். பாடல்முழுவதும் காய்களோடு விளையாடி இருப்பார். ஆமாம்! அத்திக்காயை ஏன் முதல் வார்த்தையாய் கொண்டுவந்தார் தெரியுமா?அத்தி மரம்  சுக்கிரனின் ஆகர்ஷண சக்தி கொண்ட மரம். சுக்கிரன்  காதல்தேவதை!

    காதலை நிறைவேற்றுவதில் சுக்கிரனின் பங்கு  மகத்தானது. காதலுக்குரிய கிரகம் இவரே. ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருப்பது மிக மிக அவசியம். மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் அருள் அவசியம்.

    அத்தி மரத்திலிருந்து வெளிப்படும்  ஒரு வகையான ஆற்றல்  தம்பதிகளின் பிணக்கைத் தீர்த்துவைக்கும்  என்பது ஜோதிடர்களின்  நம்பிக்கை. திரைப்படத்தில் தம்பதிகள் சிறு ஊடலில் பாடும் பாடல் இது. எத்தனை விஷய ஞானம் இருந்திருந்தால் கவியரசர் இந்தப்பாடலுக்கு அத்தியை முதல் வார்த்தையாக அமைத்திருப்பார்!’ Amazing’என்பார்கள் ஆங்கிலத்தில்! வியப்பில் வாய் அடைத்துத்தான் போகிறது!

    “மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்” சொல்லாமல் கொள்ளாமல் வந்தது! என்று எதிர்பாராமல்வரும் காதலுணர்வைக்குறிப்பிடுகிறார்! காதலைக்காமமின்றி பலப்பலகவிதைகளில்கொடுத்த கவிஞரின் கைவண்ணம் பற்றி எழுத நீள்வானம் தான்  தாள் ஆக  வரவேண்டும்!

    அடுத்து  வாழ்க்கை எங்கும் வாசல்கள் இருப்பதை  இந்தப்பாடலின் வரிகள் உணர்த்துகின்றன.

    “பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்
    கவலை திறந்தால் வாழலாம்!!!”
    (– வாழ நினைத்தால் வாழலாம்)

    வாழ நினைக்கவேண்டுமாம்  நினைத்துவிட்டால் வாழலாம் என்கிறார். “எண்ணியமுடிதல்வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்” என்றான் பாரதி! கவிஞரின் இந்த வரிகள் எளிமைதான் ஆனால் அர்த்தம் கடல் அளவு ஆழமானது. நிறைய சிந்தித்தாலே ஒழிய இந்தவரிகளை நாம் உணர இயலாது.

    “மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
    மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
    ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா,
    அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா? “

    இப்படி, தாய்மையை போற்றும் வரிகளிலேதான் எத்தனை நீர்மை !

    இன்னும் மனித மன இயல்பை பட்டவர்த்தனமாய் காட்டும் வரிகளாய்…….
    “ஆடை இன்றி பிறந்தோமே –
    ஆசை இன்றி பிறந்தோமா?
    ஆடி முடிக்கையிலே
    அள்ளி சென்றோர் யாருமுண்டோ?”
    என  நம் கன்னத்தில் அறைவதுபோல கேள்விகள் வருகின்றன.

    சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலான,
    “உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால்
    உலகத்தில் போராடலாம்!
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை
    வணங்காமல் நீ வாழலாம்!”

    என்று ஆரம்பமாகும்  பாடலை அறியாதார் யார்!

    இன்று எந்த தன்னம்பிக்கை நூல்களை எடுத்துக்கொண்டாலும் “தன்னை அறிவது” அதாவது “SELF-REALISATION” தான் அடிப்படை. அதாவது “KNOW YOURSELF” இதை உன்னை அறிந்தால்  என்னும் பாடலில் எளிமையாக சொல்லிவிட்டார்.

    புராண, இதிகாச, இலக்கியங்களில் கவிஞர் கண்ணதாசனுக்கு ஆழ்ந்து அறிவு! ஆம்  ஒருசில பாடல்களில், அதிலும் ஓரிரு வரிகளில் மட்டும் அந்தப் பாதிப்பு தெரியும்.

    “காலங்களில் அவள் வசந்தம், மாதங்களில் அவள் மார்கழி..”
    (– பகவத்கீதை)

    “மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
    கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
    கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா.”

    “பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;
    அருகுள து  எட்டியே யாயினும் முல்லைப்
    படர்கொடி படரும்”
    (– மனோன்மணியம் )

    “தோள் கண்டேன் தோளே கண்டேன்” (கம்பர்)

    “நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
    நதி செய்த குற்றம் இல்லை” (கம்பர்)”

    “அன்றொரு நாள் இதே நிலவில்”  (பாரி மகளிர்)

    “வீடு வரை உறவு வீதி வரை மனைவி” (பட்டினத்தார்)

    இப்படிப்பல!

    “நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!!”

    சோர்வில் துவளும் மனத்திற்கு இதைவிட ஆறுதலான  வார்த்தைகளை கண்ணதாசனைத்தவிர வேறு யாராலும் தர இயலாது..

    இன்னமும்  சொல்லிக்கொண்டேபோகலாம்  ஆனால் கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடுமா என்ன?! சர்க்கரை சமுத்திரமாக தமிழ்நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் அற்புதக்கவிஞனுக்கு  இறுதியாக  அவரது வார்த்தைகளினாலேயே  முடிப்பதே சிறப்பு.

    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை”என்றார்! ஆம், தமிழைப்போல், கவியரசர் கண்ணதாசனும் நிரந்தரமாக அனைத்துத்தமிழ் நெஞ்சங்களிலும்  வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்!

     
     
     
     
     
     
     
     
    —  ஷைலஜா,பெங்களூர்

    Share