Blog

  • பயன் என்ன ? – சத்தியமணி

    பார்வை முன்னால் நடக்கும் கொடுமை
    பாராதிருப்பதில் பயன் என்ன ?
    சால்வை மூடிட வலம்வர கொடியோர்
    சாடாதிருப்பதில் பயன் என்ன?
    வேர்வை சிந்திட உழைத்தார் வறுமை
    வீழாதிருப்பதில் பயன் என்ன?
    போர்வை போர்த்திட ஒளிந்தார் கோழை
    வாழ்க்கை நடத்திட பயன் என்ன?

    படிப்பை கொடுத்தோ சொத்தை சேர்த்தோ
    அடுத்த தலைமுறை வாழ்ந்திடவே
    சிறப்பை காட்டும் பெற்றோர் முயற்சி
    எடுத்த வழிமுறை வீணாமோ
    பாதி வஞ்சம் மீதி இலஞ்சம்
    வளர்ந்திட‌ சமைத்தார் தன்காலம் ?
    நீதி நேயம் நியாயம் தர்மம்
    அழித்திட கொடுத்தார் வருங்காலம் ??

    Share
  • வால்ட் விட்மன் வசனக் கவிதை -13

    என்னைப் பற்றிய பாடல் – 6

    (Song of Myself)

    (1819-1892)
    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++++++++++++++

    இவை யாவும் மெய்யாய்

    எல்லா மனிதரின் சிந்தனைதான் !

    எல்லா காலங் களிலும்,

    எல்லா நாடுகளிலும் உதித்தவை தான் !

    எனது மூலப் படைப்புகள் அல்ல

    உன்னைச் சேரா தாயினும் அவை

    என்னைச் சேரா தாயினும்

    ஒன்றும் பயனில்லை !

    புதிரில்லை யாயினும், அவை

    புதிரை விடுவிக்கா திருப்பினும்

    மதிப்புறுவ தில்லை !

    அப்பால் இருப்பவை

    அருகில் இல்லை யாயினும் அவை

    பொருளற் றவை தான் !

    நிலம் எங்கு இருக்குமோ

    நீர் எங்குள்ளதோ அங்கெல்லாம்

    இந்தப் புல்லினம் முளைக்கும் !

    பூகோளத்தைக் குளிப்பாட்டி வைக்கும்

    பொதுக் காற்று இதுதான்

    சமமாகப் பரிமாறப் பட்டிருப்பது

    நமக்கெல்லாம்

    இந்த உணவு தான் !

    இயற்கையாய் எழும் பசிக்கு ஏற்றது !

    இந்தப் புலால் உணவுதான்

    நல்லவர், தீயவர் எல்லோ ருக்கும் !

    எல்லாரையும் சந்திக்க நான்

    முன்வருவேன் !

    ஒருவர் கூட இகழப் பட்டு

    ஒதுக்கப் படார் !

    வைப்பு மாது,

    குப்பை கூட்டுவோன், திருடன் கூட

    வரவேற்கப் படுவார் !

    உதடு தடித்த அடிமையும்

    உடலுறவு நோயாளியும்

    வரவேற்கப் படுவார் !

    அவருக்கும் பிறருக்கும் வேறுபா டிருப்பது

    தவறு தான் !

    இந்த நேரத்தில் சொல்லப் போவதை

    இரகசிய மாய்ச் சொல்வேன் !

    எல்லோ ருக்கும் சொல்வ தில்லை

    சொல்வது உனக்கு மட்டும் !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 27, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • எமனுடன் சண்டையிட்ட பால்காரி … !

    எமனுடன் சண்டையிட்ட பால்காரி … !


    சி. ஜெயபாரதன், கனடா



    பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில் சாய்ந்திருந்தாள். பத்து நிமிஷத்துக்கு முன்புதான் புருசனின் மூச்சு நின்று போனது. இப்போது என்ன செய்வ தென்று தெரியாமல் தடுமாறினாள். நீண்ட பெரு மூச்சை விட்டு பொன்னம்மா எழுந்தாள்! அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விழவில்லை. புருசன் முகத்தைப் பார்க்காமல் சுவறில் தொங்கிய ஒரு குழந்தையின் படத்தைப் பார்த்தாள். புன்முறுவல் பூத்த அந்தப் பாசமலர் அவள் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது! மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். உடனே திடுக்கிட்டு பரபரப்புடன் கதவைத் திறந்து கொண்டு வீதிக்கு ஓடினாள்.

    “போகாதீங்க, நில்லுங்க! நில்லுங்க!” என்று கூச்சலிட்டாள், பொன்னம்மா. எருமை மாட்டின் மீது ஏறிச் சவாரி செய்யப் போன எமதர்மன், உட்கார்ந்து கொண்டே பின்னால் திரும்பினான்.

    “சரித்திரம் மீள்கிறதா ? பின்னாலே வராதே பெண்ணே! உன் புருசன் உயிரைக் கொண்டு போறதுக்கு நான் மிகவும் வருந்துறேன்.”

    “நானே வருந்த வில்லை! நீங்க ஏன் வருத்தப் படணும் ? உங்க வேலைய நீங்க செய்றீங்க. என்னை பெண்ணேன்னு சொல்லாம, பொன்னம்மான்னு கூப்பிடுங்க!”

    “பொன்னம்மா, பேசாமல் போயிடு! என் பின்னாலே வராதே சாவித்திரி மாதிரி! நான் முதல் தரம்தான் ஏமாந்தேன். இரண்டாம் தடவை தப்பு பண்ணப் போறதில்லே! உன் புருஷன் உயிரை மட்டும் கேட்காதே.”

    “என் புருசன் உயிரைக் கேட்க நான் வர வில்ல. அது போறதுதான் நல்லது! எமராசா, நான் ஒன்னும் சாவித்திரி இல்லே ! சாதாரண மனுசிதான்.”

    “அட ஆச்சரிய மாயிருக்கே! ஏம்மா! நீ கண்ணகி பிறந்த நாட்டுக்காரி! கல்லானானும் கணவன், புல்லானாலும் புருசன் என்று கும்பிட குலமாச்சே! காலம் மாறிப் போச்சு! நீ பெண்ணல்ல என்னு சொன்னது இப்போதான் ஞாபகம் வருது!”

    “கண்ணகி எங்க குல தெய்வம் மாதிரி! ஆனா என் புருசன் குலத் துரோகி! நான் வாழ்றதிலே புண்ணிய மில்ல, எம ராசா!”

    “பொன்னம்மா! என்ன கவலை உனக்கு ? பால் வியாபாரத்திலே உனக்கு பண நொடிப்பா ?”

    “எம ராசா! கையெடுத்துக் கும்பிடறேன். ஒரேதா என் உயிரையும் கொண்டு போயிருங்கோ!”

    “நீ செத்துப் போக இன்னும் நாற்பது வருச மிருக்கே, நான் எப்படி உன் உயிரைக் கொண்டு போறது ? அது பெரிய தப்பாச்சே.”

    “தனியா எப்படி நாப்பது வருசம் வாழ்றது, எம ராசா! புருசன் இல்லாம, பிள்ளை, குட்டி இல்லாம ?”

    “இந்தா வந்துட்டயே! இது பழைய சாவித்திரி உத்தி! முதல்லே பிள்ளை வேணும் என்பே! பிள்ளைக் கொடுத்தா, எப்படிப் பிள்ளை பிறக்கும், புருசன் இல்லாம என்னு, புருசன் உயிரையும் வாங்கத் தந்திரம் பண்ணுவே!”

    “இத்தன நாளாய் என் புருசன்தான் என் உயிரை வாங்கிக் கிட்டிருந்தான்! எமலோகம் போற என் புருசன் உயிரை நீங்க தந்தாலும், நான் திரும்ப அங்கே அனுப்பிடுவேன்! அவனும் வேணாம்! அவன் கொடுக்கிற பிள்ளையும் வேணாம்!”

    “கதை வேற மாதிரிலே போவுது! புரியலையே பொன்னம்மா! குழப்புறயே!”

    “எம ராசா! பெண்ணுக்கு உத்தம புருசன் ஒருத்தன்தான் வேணும்! ஆனா ஆம்பிளைக்கு அப்படி யில்லே. சில ஆம்பிளைக்கு மூனு பொம்பளை வேணு மின்னு ஆசை யிருக்கு! கண்ணைக் கவரும் ஆடகியோ, காதில் இனிக்கும் பாடகியோ ஒருத்தி! கட்டில்லே ராத்திரி பக்கத்திலே படுக்க செதுக்கின சிலை போல இன்னொருத்தி! அப்புறம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு, வீட்டுலே காத்து கிடக்க மூனாவது ஒருத்தி!”

    “பொன்னம்மா நீ என்ன சொல்றே ? புதிர் போடாமல் புரியும் படி பேசு.”

    “என் புருசன் ஊர்க் காளை மாடு மாதிரி! நாலாவது வீட்டு ரங்கம்மாவுக்கு ஒரு பிள்ளையை கொடுத்து, அது கழுதையாய் மண்ணுலே புரளுது! அவன் பிறந்த ஊர்லே குப்பம்மாவுக்கு இன்னோர் பிள்ளை கொடுத்து, அது கொண்டி மாடாய் ஊரைச் சுத்துது! இந்தா பாருங்கோ, என் புருசன் படுக்கிற கட்டிலிலே, நான் படுக்கிறதே இல்ல. அந்தப் பிள்ளைகளுக்கே அவன் அப்பனாக தொலையட்டும். என் பிள்ளைக்கு அவன் அப்பனா இருக்க வேணாம். அடுத்துப் பிறக்கிறது பன்றியாத்தான் இருக்கும்!”

    “அப்ப பிள்ளை வரத்தை எப்படிக் கொடுக்கிறது, சொல்லு ? ‘

    “. . . .மூனாவது குடிசையிலே வாழ்ற . . .  கார் டிரைவர் கந்தசாமி மேலே. எனக்கு ஒரு கண்ணு. கந்தசாமிக்கு என் மேலே. இரண்டு கண்ணு.”

    “இது தப்புத் தாளமாச்சே! புருசன் இருக்கும் போது அடுத்தவனை பார்க்கிறது அதர்ம மாச்சே!”

    “ஆமா! பொன்னம்மா வீட்டிலே இருக்கும் போது, என் புருசன் ரங்கம்மா கட்டில்லே ஒருநாளும், குப்பம்மா பாயிலே அடுத்த நாளும் படுக்கிறது என்னவாம் ?”

    “அதுவும் அதர்மம்தான்.”

    ‘அதைப் பெண்டாட்டி துரோகம் என்னு முதல்லே சொல்ல, ஆம்பிளை உங்க வாயிலே வரலையே!”

    “இரண்டும் தவறுதான். சரி நீயே போய் கந்தசாமியை கட்டிக்க வேண்டியதுதானே. நான் என்ன செய்யணும் ? ‘

    “எம ராசா! நான் கேட்க வந்தது, கந்தசாமிக்கு எப்படி ஆயிசு ? நீண்ட ஆயிசு தானே ?”

    “என் கிட்டே கந்தசாமியின் ஜாதகம் இல்லே. ஆயுள் கையேடும் இல்லே. எப்படி ஆயிசுக் கணக்கிடறது ?”

    “ஏதோ காலன், தூதன், சித்திர குப்தன் என்னு சொல்றாங்க, எங்கே போயிட்டாங்க அவுங்க ?”

    “இரு காலனைக் கேட்கிறேன். அவன் கிட்ட போர்டபிள் கம்பியூட்டர் ஒன்னு இருக்கு. சீக்கிரம் பார்த்துச் சொல்லிருவான்.”

    “சீக்கிரம் சொல்லுங்க எம ராசா! என் நெஞ்சி பக்பக்கென்னு அடிக்குது.”

    எமதர்மன் பெரு மூச்சு விட்டு ஆயுளைச் சொல்லத் தடுமாறினார். இரு கைகளையும் பிசைந்து கொண்டு மேலே நோக்கினார்.

    “என்னங்க எம ராசா, ஏன் வானத்தைப் பார்க்கிறீங்க ? ஆயுசு எப்படின்னு சொல்லுங்க ?  என் கண்ணைப் பார்த்துப் பேசுங்க.”

    “பொன்னம்மா! பார்த்ததுதான் பார்த்தையே, நீண்ட ஆயுசு ஆளாப் பார்த்துப் பிடிச்சிருக்கலாமே.”

    “என்ன சொல்றீங்க எம ராசா ? கந்தசாமி அற்ப ஆயுசா ?”

    “கண் கலங்காதே, பொன்னம்மா! கந்தசாமி வீட்டுக்கு . . .. நான் சீக்கிரம் . . . வருகிறதா யிருக்கு.”

    “அட கடவுளே! . இன்னும் எத்தனை வருசம் அவரு . .  ?”

    “கந்தனுக்கு அற்ப ஆயசுன்னு . . . காலன்கூடக் கண் கலங்குறான்.”

    “காலன் சரியாப் பார்த்துதான் சொன்னானா ? சில கம்பியூட்டர் சரியா வேலை செய்யாதாமே ? என் பிள்ளை கொஞ்ச நாள்தான் தகப்பனை பார்க்குமா ? எமதர்ம ராஜா, இது ஞாய மில்லே! அவருக்காவது நீண்ட ஆயுசைக் கொடு! உன் காலிலே விழுந்து கும்பிடுறேன்!”

    “என் காலிலே விழறேன்னு, எருமைக் காலைப் போய் கும்பிடறே! . . . அற்ப ஆயிசு கந்தசாமியை விட்டு, வேற ஆளைப் பாரு, பொன்னம்மா! அது தான் புத்திசாலிப் பெண் செய்யுற காரியம்.”

    “உத்தம ஆம்பளை கந்தசாமி போல எத்தனை பேர் இருக்கான் ? ஒழுக்கம் கெட்ட பயல்கள் தான் எங்க ஊரில அதிகம். ஆமா கந்தசாமிக்கு . .  எப்போ . .  ஆயுசு . . . முடியுது ? அதைச் சொல்லுங்க முதல்லே.”

    “அடேடே கந்தசாமிக்கு தம்பி இருக்கானாமே ! அவனுக்கு ஆயசு பலமா இருக்காம் ! 80 வயசு வரை தெரியுதாம். காதிலே காலன் ஏதோ முணுமுணுக்கிறான்.”

    “அந்த ஒட்டடைக் குச்சி பொன்னுலிங்கம் ஒரு குடிகாரப் பயல்! அவனை வச்சி துடைக்க என் வீட்லே ஒட்டடை கூட இல்லே! ராத்திரி ராத்திரி குடிச்சிபிட்டு வந்து பெண்டாட்டியை போட்டு அடிப்பான். காலையிலே நடு வீதியிலே தூங்கிக் கொண்டு கிடப்பான்! குடிக்கப் பண மில்லேனா என் மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையிலே வித்துட்டு, சாராயக் கடைக்கும் சர்க்காருக்கும் சம்பாரிச்சு கொடுப்பான்! எம ராசா! அயோக்கியப் பயலுக்கு அதிக வயசையும், உத்தம ஆம்பளைக்கு அற்ப ஆயுசையும் தலையிலே எழுதி வைக்கறீங்களே, இது என்ன ஞாயம் ? சொல்லுங்கோ அவருக்கு . . ஆயசு எதுவரை ?”

    “பொன்னம்மா! அற்ப ஆயுசு ஆளுங்க பூமியிலே இல்லாம போனால், எங்கள் ராஜியத்திலே பலருக்கு வேலை யில்லாம போயிரும் ! அப்புறம் என் பட்டாளங்கள் கறுப்புக் கொடியைத் தூக்கிட்டு அரண்மனைக்கு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்து பட்டினி கிடப்பாங்க ! வேலை யில்லாத் திண்டாட்டம் எங்க துறையிலே மட்டும் வரக்கூடாது அம்மா !  வந்தால் என் உயிரை வாங்க வந்திடுவாங்க !”

    “அம்மான்னு சும்மா சொல்லாதீங்க !  நான் இன்னும் அம்மாவாகலே ! . . . சொல்லுங்க கந்தசாமிக்கு ஆயுசை ! என் மனசு துடிக்குது! சொல்லுங்க எம ராசா!”

    “உன்னைப் படைச்ச கடவுளே அதை மறைச்சு வச்சிருக்கான். அதை முன்னாலே நான் சொன்னா நீ மயக்கம் போட்டு விழுந்திடுவே. இல்லே திடீரென்னு உன் நெஞ்சு நின்னுட்டா, பிறகு என் மேலே புகார் வந்திடும். உன் உயிரை நான் எடுத்து போகவும் முடியாது.  இங்கே விட்டுட்டு போகவும் முடியாது. அது அப்புறம் அந்தரத்திலே பேயாய் அலையும்! உயிரை திருப்பி உடம்புல ஒட்ட வைக்கிற உத்தியும் எனக்கு தெரியாது! அது என் வேலை இல்லே. பிரம்மா படைப்பு வாரியத்தைச் சேர்ந்தது.”

    “சும்மா சொல்லுங்க எமராசா! நான் ஒன்னும் வெண்ணை யில்ல, உருகிப் போக. என் மனம் தேக்கு மரம் போல. . . என்ன கந்தசாமி இன்னும் அஞ்சி வருசம் இருப்பாரா ?”

    ‘உம் . . . அத்தன நீண்ட ஆயுள் இல்ல . . . அற்ப ஆய்சுக் கந்தனுக்கு.”

    “சரி அஞ்சில்லே. மூனு வருசமாவது அவர் . . . உயிரோட இருப்பாரா ?”

    “அதுவும் . . . இல்லே! . . . பொன்னம்மா! . . ஏன் கண்ணிலே கண்ணீர் குபுகுபுன்னு பொங்குது ?”

    “அப்படீங்களா ? . . பொன்னம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். சரி ஒரு வருடமாவது மனுசன் . . . உயிரோ டிருப்பாரா ?”

    “அதை நான் சொல்ல முடியாது, பொன்னம்மா! உனக்குப் பிள்ளை பிறந்து, கந்தன் கொஞ்ச காலம் இருப்பான்.”

    “எனக்குப் பிள்ளை பிறந்து, கந்தசாமி ஒரு வருசமாவது உயிரோடு இருக்கணும். அதுக்கு வரம் தருவீங்களா, எம ராசா ? உங்களைக் கெஞ்சி கேக்கிறேன்.”

    ‘அந்த வரத்தை நான் தர முடியும், பொன்னம்மா!”

    “நிச்சயமா சொல்றீங்களா எம ராசா ?”

    “ஆமாம்! உனக்கு பிள்ளை பிறந்து, கந்தன் ஒரு வருசம் உயிர் வாழறது உறுதி. அதுக்கு வரம் தருவதிலே எனக்கு எந்த ஆட்சேபணையு மில்லே! . . ஏன் பொன்னம்மா! . . நயாகரா மாதிரி கொட்டின கண்ணீ ரெல்லாம் . .  சினிமா ரீல் திருப்பி ஏறுற மாதிரி உன் கண்ணு மேலே ஏறுதே.”

    “என் வயிற்றுலே பசும் பாலை வார்த்திட்டாங்க எம ராசா! அந்த உத்தரவாதம் போதும் எனக்கு!”

    ஆனந்த கண்ணீர் இப்போது வடிய, பொன்னம்மா துள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

    “என்ன சொல்றே பொன்னம்மா ?  நான் பசும்பாலை உன் வயிற்றில் வார்த்தேனா ?”

    “இப்போ எனக்கு பிள்ளை வேணாம் எம ராசா ! . . நான் அதைத் தள்ளிப் போடறேன்.  நீங்க நீண்ட நாள் வாழணும்.” என்று சிரித்துக் கொண்டு கதவை மூடினாள், பொன்னம்மா.

    எமனுக்கு மண்டையில் ஏறிப் புரிபட சிறிது நேரம் பிடித்தது.

    “அடி பாதகி ! ஏமாற்றி விட்டாயே ! இரண்டாம் தடவையும் நான் ஏமாந்துட்டேன்.  சாவித்திரியை விட பால்காரி பலே கைக்காரி !”  கோபத்தில் கீரிடத்தைத் தூக்கி விட்டெறிந்து தலையில் நாலடி அடித்துக் கொண்டான்.

    எருமை வாகனத்தை வேகமாய் முடுக்கினான், எம ராஜன்.  திடீரென்று பின்னால் மறுபடியும் குரல் எழுந்தது.

    “போகாதீங்க! நில்லுங்க! நில்லுங்க!” என்று அலறிக் கொண்டு மறுபடியும் பொன்னம்மா ஓடி வந்தாள். பின்னால் திரும்பிய எமனுக்குக் கண்கள் இரண்டும் சிவந்து கோபக் கனல் பறந்தது.  பற்களை நறநற வென்று கடித்தான். கைகளைத் தூக்கி ஆங்காரத்துடன் திரும்பினான்.

    “இன்னும் ஏன் பின்னாலே வர்றே ! போதும் உன் உபத்திரம் ! போ! போ! போ! ஒழிஞ்சு போ.  எதுவும் உனக்கினித் தர மாட்டேன் !”

    “என் வயிற்றிலே மண்ணைப் போட்டு போறீங்களே, எம ராசா! நான் முக்கியமானதை விட்டிட்டேனே !”

    “புரியும்படி சொல்லித் தொலை!”

    “எம ராசா ! இது அநியாயம் ! திருடுன்னு எங்க ஊரிலே சொல்லுவாங்க ! நீங்க ஏறிப் போறது, என் எருமை மாடு ! தினம் எனக்குப் பால் கறக்கிற எருமை ! பால் எருமைக்கும் எருமைக் கடாவுக்கும் வித்தியாசம் தெரியாம, என் மாட்டை பத்திட்டு போறது சரியா ? மாட்டைப் பிடிக்க வந்தவ, புருசன் கிடைச்ச சந்தோசத்திலே அதை மறந்துட்டேன் !  புருசனைக் கொடுத்ததுக்கு எருமை வெகுமதியா ?”

    எம ராஜனின் சினம் பட்டெனத் தணிந்தது !  எருமையை விட்டுக் கீழ் இறங்கிப் பார்த்தான் !  எருமை மாடு எமனைப் பார்த்து முறைத்தது !

    “அட ஆமா, பால் எருமைதான் இது ! முதல்லே அதைச் சொல்லி யிருக்கலாமே ! . .  அதானே பார்த்தேன் ! தெற்கு நோக்கிப் போறதுக்கு பதிலா வடக்கிலே போவுதே, ஏன் என்று எனக்கு தெரிய வில்ல ! . . எங்கே என் மாட்டைக் காணோமே ?”

    “புல்லுத் தின்ன போயிருக்கும், எம ராசா! . . காலையிலே அது வயித்துக்கு ஏதாவது போட்டீங்களா ? . . எருமை மாட்டிலே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியலையே, நீங்க எடுத்துட்டுப் போற உயிர்கள் எல்லாம் சரியானதா ? . .  அட ஆண்டவா ! . .  எம ராசனுக்கும் வயசாகுதில்லே ! கண்ணு மிரளுது ! . . எம ராசா! மாடு தேடிறதுக்கு முந்தி முதல்லே ஒரு கண்ணாடி வாங்கி மாட்டிக்கங்க ! எருமை மாறாட்டம் மாதிரி, ஆள் மாறாட்டம் ஆனா என்ன ஆகுறது ?”

    பொன்னம்மா மாட்டை தட்டிக் கொண்டு கொட்டத்துக்குள் நுழைந்தாள்.  உதட்டைக் கடித்துக் கொண்டு திருதிரு வென்று விழித்த எமன், கீழே கிடந்த கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டு, வேகமாக வாகனத்தை தேடி நடந்தான்.

    ++++++++++++++

    S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 19, 2008)] (Revised R-1)

    Share
  • முக்கோணக் கிளிகள்

    சி. ஜெயபாரதன், கனடா

    [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும்! எதிர்த்துப் பனிப்புயல் அடிக்கும்! முடிவில் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போது தாக்கும் இமாலயத் தடைகளைத் தாங்க முடியுமா? ஒரு சிக்கல் அவிழ்ந்தால் அதன் வயிற்றிலிருந்து இன்னொரு சிக்கல் பிறக்கிறது!]

    காயிலே இனிப்ப தென்ன! கனியானால் புளிப்ப தென்ன!

    தட்டிய கதவைத் திறந்த புனிதா அதிர்ச்சி அடைந்து கண்ணிமை கொட்டாமல் சிலையாய் நின்றாள். வாசற் படியில் மகள் சித்ராவுடன் இணையாக நின்ற கவர்ச்சியான வாலிபனைக் கண்டதும், அவள் நெஞ்சில் குப்பென ஓர் ஊற்று பொங்கி எழுந்தது! அவன் கண்ணொளி பட்டதும் வெற்றிடமாய் சப்பிக் கிடந்த அவள் இதயம் உப்பி விரிந்தது!

    “அம்மா இவர்தான் மிஸ்டர் குருநாதன்! புதிதாகக் கல்லூரியில் சேர்ந்துள்ள எங்க மாத்ஸ் லெக்சரர். நமது மாடி வீட்டுக் காலி அறையில் தங்க விரும்புகிறார். முழுப் பெயர் சிவ குருநாதன், எங்க குரு!” உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் சமாளித்துக் கொண்டு பேசினாள் புனிதா, “நான் கொடுத்த விளம்பரத்தில் கல்லூரிப் பெண்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும் என்று அழுத்தமாகச் சொல்லி யிருக்கேனே”.

    “நான்தான் அவரை அழைத்து வந்தேன், அம்மா. விளம்பரத்தைப் படித்த பிறகு அவருக்கும் இஷ்ட மில்லைதான்”

    “மாடி அறையில் ஆடவர் குடி வருவதை நான் விரும்பவில்லை. சித்ரா! உள்ளே வா! சொல்றேன்” சித்ரா உள்ளே சென்றதும் கதவை மூடிப் புனிதா ஏதோ மராட்டிய மொழியில் அவளுடன் பேசுவது சிவாவின் காதில் மெதுவாக விழுந்தது. பதினைந்து நிமிடங்கள் கழித்து, கதவு திறந்தது. சித்ரா மட்டும் தொங்கிய முகத்துடன் வெளியே வந்தாள்.

    “வெரி ஸாரி ஸார்! எங்கம்மாவுக்கு விருப்பம் இல்லை. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்”

    “நான் மராட்டிக்காரன் இல்லை என்பது காரணமாக இருக்கலாம்”

    “அப்படி ஒன்றும் இல்லை”

    “ஒரு வருடம் தராவிட்டாலும், ஆறு மாதமாவது தங்கலாமா”

    “அம்மா ஆறு மாதத்துக்கு அவர் தங்கட்டுமே” என்று தாயிடம் கனிந்து கேட்டாள் சித்ரா.

    “ஒரு வருடத்துக்கு குறைஞ்சி வாடகைக்கு விடுவதாய் இல்லை. அதுவும் ஆண்களுக்கு கொடுப்பதாய் இல்லை” என்று உள்ளே இருந்து புனிதாவின் குரல் வந்தது.

    “மூன்று மாதங்களுக்குத் தங்க விடுங்கள். அதற்குள் வேறு இடம் பார்த்துக் கொள்கிறேன்”

    “இது பெண்களுக்குத் தரப்படும் ரூம்! ஆண்களை வைப்பதாக இல்லை” என்று அழுத்தமாகப் பேசினாள், புனிதா.

    “ஒரு மாதமாவது கொடுங்களேன். அதற்குள் வேறு ஒரு இடத்தைப் பார்த்துக் கொள்கிறேன். வேண்டுமானால் உங்களுக்கு ஓய்வு நேரத்தில் என்னால் முடிந்த வேலையைச் செய்து கொடுக்கிறேன்” என்று சிவா அவர்களைப் பரிதாபமாக நோக்கினான். புனிதாவிடமிருந்து உடனே பதில் வராமல் சற்று அமைதி நிலவியது.

    “எங்களுக்கு ஆடவர் உதவி எதுவும் தேவையில்லை!”

    “அம்மா நான் டியூஷனுக்கு வெளியே போக வேண்டியதில்லை, ஸார் எனக்கு கணக்கு, பிசிக்ஸ் சொல்லிக் கொடுத்தால்”

    “நான் பணம் வாங்காமலே சித்ராவுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்”

    “அம்மா நமக்கு டியூஷன் பணம் மிச்சம், குரு நம்ம மாடியிலே வாடகைக்கு வந்தால்”

    “சித்ரா! உனக்கு யாரும் இலவசமா சொல்லித் தர வேண்டாம்” … போட்டாள் ஒரு போடு, புனிதா.

    “அப்போ சரி! குருவுக்கு டியூஷன் பணத்தைக் கொடுத்திடலாம். ஆனால் ஒரு மாதத்திலே நான் என்ன கணக்கைக் கற்றுக் கொள்வது? அல்ஜீப்ராவுக்கே மூணு மாசம் ஆகும்! அப்புறம் ஜியாமெட்ரி இருக்கு. அனலிடிகல் ஜியாமெட்ரி இருக்கு. அப்புறம் பிசிக்ஸ் படிக்க வேணும்! ஒரு வருசத்துக்கும் குறைஞ்சா அரை குறையாகத்தான் என் டியூஷன் முடியும்”

    “நான் அதுக்கு இப்போ பதில் தர முடியாது. கல்லூரி மீட்டிங் போக நேரமாச்சு! யோசித்து இரண்டு நாளிலே சொல்றேன்” என்று கூறி புனிதா உள்ளே போய் விட்டாள்.

    சித்ரா சிவாவைக் கண்டு புன்னகை புரிந்தாள். அழகிய அவளது மீன் விழிகள் இன்னும் விரிந்தன.

    கதவுக்குப் பின்னால் மறைந்த புனிதாவின் பேச்சில் காரம் இருந்தாலும், அவளது குரல் இனிமை சிவாவைப் பாகாய் உருக்கியது.

    “சித்ரா! நீ சாமர்த்தியக்காரி. உன் அம்மாவை மடக்கிப் போட்டு விட்டாயே. நன்றி சித்ரா நன்றி! நான் வருகிறேன் என்று நடக்க ஆரம்பித்தான்.

    “குருவே! ஹோட்டல் அறையில் தூங்கி விழாமல், சற்று தியானம் செய்யுங்க, மாடி அறை கிடைக்க வேணும் என்று. அம்மா மனதை மாத்துவது மிகக் கஷ்டம். இன்னும் நாற்பத்தி எட்டு மணி நேரம்! எண்ணிக் கொண்டே இருங்க” என்று சிரித்துக் கொண்டு கதவைச் சாத்தினாள், சித்ரா.

    ஞான ஒளி வீசுதடி, மோன விழிச் சுடர்முகத்தில்!

    கோயமுத்தூர் எஞ்சனியரிங் கல்லூரியில் இடம் கிடைத்து முதலாண்டு சேர்ந்த சித்ரா, மாத்ஸ் லெக்சரர் சிவநாதனை வகுப்பில் அன்று காலையில்தான் சந்தித்தாள். அப்போது சிவாவுக்கு தங்க அறை இல்லாதது, தன் வீட்டு மாடி காலியாக இருப்பது இரண்டையும் ஒன்றாய் இணைக்க ஒரு கணிதச் சமன்பாடு போட்டுப் பார்த்தாள். அன்று கணக்கு வகுப்பைத் தொடங்கிய சிவநாதன் பள்ளியில் போதித்த பழைய ஜியாமெட்ரியில் முக்கோணத்தின் பண்புகளை மாணவருக்கு நினைவூட்டினான். பித்த கோரஸ் தேற்றத்தை விளக்க வரும் போது அவன் கூறியதை சித்ரா மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தாள். முக்கோணத்தில் ஒரு கோணம்தான் நேர்கோணமாக இருக்க முடியும்! கணக்கில் அவள் ஒன்றும் பலவீனமானவள் அல்ல! கடைசி நேரத்தில் எப்படியாவது உருட்டிப் புரட்டி அறுபது மார்க்கு வாங்கி விடுவாள்! எப்படியோ படித்து, எப்படியோ தேர்ச்சி பெற்று, எப்படியோ இடம் வாங்கி, அவள் இப்போது எஞ்சனியரிங் கல்லூரி முதலாண்டு மாணவி என்ற பெருமிதத்தில் இருந்தாள்!

    பதினெட்டு வயது பொங்கித் ததும்பும் சித்ரா ஊர்வசியா அல்லது மேனகாவா? இரண்டில் ஒருத்தி. முதல் நாளே சிவநாதனின் நடை, உடை, பாவனை அனைத்தும் சித்ராவை மயக்கி விட்டன! சித்ராவுக்குப் பேசும் விழிகள்! அவள் தாய் புனிதாவுக்குப் பேசா விழிகள்! பேசும் விழிகளை விடப் பேசாத விழிகளே சிவாவுக்குக் காவியங்களைக் கூறின! புனிதாவையும், சித்ராவையும் அருகே நிற்க வைத்துப் பார்த்தால் தாய், மகள் மாதிரி தெரியாது. இருவரையும் அக்காள், தங்கை என்றுதான் சொல்ல வேண்டும்!

    சித்ராவின் தாய் புனிதவதி நாற்பது வயதைத் தாண்டி விட்டவள்! இருபது வயது வனிதா மணிபோல் புனிதா இருந்தாள்! சித்ராவை விட எடுப்பாகவும், உடல் கட்டு குலையாமல் செதுக்கி வைத்த சிலை போல இருந்தாள். அவளது கணவர் காப்டன் ஆனந்த் குல்கர்னி இறந்து பத்தாண்டுகள் ஓடி விட்டன! ராணுவ அதிகாரியாக ஜம்மு காஷ்மீரில் சில வருடங்கள் பணி புரிந்தவர். கடைசியில் காஷ்மீர் மூர்க்கர்களின் தாக்குதலில் உயிரைப் பலி கொடுத்தவர். கோயமுத்தூர் ராணுப் பயிற்சி முகாமில் மூன்று வருடங்கள் ஆனந்த் குல்கர்னி அதிபதியாக இருந்தவர். கணவனை இழந்த புனிதா இப்போது தனிமையில் மகளுடன் வாழும் தனிமரம்!

    பூனேயில் மராட்டியக் குடும்பத்தில் பிறந்த அவர்கள் கோவையில் இருபது ஆண்டுகளாக இருந்ததால் மூவருக்கும் நன்றாகத் தமிழ் பேசவும், எழுதவும் தெரியும். அதிலும் சித்ரா கோவையிலே பிறந்தவள். வீட்டில் மராட்டிய மொழி பேசினாலும் அவளுக்குத் தமிழ்தான் நன்கு எழுதப் பேசத் தெரியும். புனிதா எம்.ஏ. பட்டதாரி. நாகரீக மராட்டியக் குடும்பத்திலே பிறந்த புனிதா, கணவனை இழந்த பின்னும் நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டாள்! கூந்தலில் பூ வைத்துக் கொண்டாள்! வண்ணச் சேலைகளைக் கட்டிக் கெண்டாள்! கணவனை இழந்தவள் என்று புனிதா வெளியில் விளம்பரம் செய்து கொள்வதில்லை! கோவை நிர்மலா பெண்டிர் கல்லூரியில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாக புனிதா வேலை பார்த்து வந்தாள். கல்லூரியில் பாதிப்பகல் கழிந்து விடுவதால், அவளைத் தனிமை கொடுமைப் படுத்துவது மீதிப் பாதி இரவு நேரம்தான்!

    சிவநாதன் நாற்பது வயதை எட்டியவன்! தங்கையின் திருமணம் தள்ளிக் கொண்டே போனதால், தனிமையில் அவன் வயதும் ஏறிக் கொண்டே போனது! தன் வயது ஏறுவதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை! ஆனால் மணமாகாமல் தங்கையின் வயது ஏறுவதை அவனால் தாங்க முடிய வில்லை! மதுரைக் கல்லூரியில் பற்றாத குறைந்த சம்பளத்தில் பத்தாண்டுகள் கணக்குச் சொல்லிக் கொடுத்தான். அந்த வருடம்தான் கணக்கு லெக்சரர் வேலை கிடைத்து, கூடிய சம்பளத்தில் கோவை எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அவனும் தங்கையும் இரண்டே நபர்கள். தகப்பனார் காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் கலந்து இரண்டு வருடம் பெல்லாரி சிறையில் கிடந்தவர். இப்போது தியாகிகள் பென்ஷசன் பெற்று ஓய்வில் இருக்கிறார்! தாய் இருக்கிறாள். சிவாதான் குடும்ப கோபுரத்தைத் தாங்கும் தூண்! பணம் சேர்த்து தங்கையின் கல்யாணத்தை முடித்து வைக்க வேண்டியது அவன் கடமை! ஹோட்டல் அறையில் தங்கி தினமும் அவனது சேமிப்புப் பணம் கரைந்து போவதை எண்ணி சிவநாதன் கவலை அடைந்தான்! குறைந்த வாடகையில் அறை எடுத்து எப்போது ஹோட்டலை விட்டு ஓடுவது என்று சிவா அலை மோதிக் கொண்டிருந்தான். வசதியாக சித்ரா, அவனை அன்று மாலை தன் அம்மாவிடம் இழுத்துச் சென்றாள்.

    இனம் தெரியவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்!

    அன்று காலை முதல் பீரியட் கணக்கு வகுப்பில் ஏகப்பட்ட கலவரம். அப்போது தென்னக மாநிலங்கள் தனியாகப் பிரியாத காலம் அது! நூறு பேர் கொண்ட முதல் வகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழி மாணவர்களும் கலந்திருந்தனர். அவர்களில் பெண்கள் மட்டும் பத்துப் பேர். முதல் வகுப்பு மலையாள மாணவர்களுக்கு சிவநாதனை ஏனோ பிடிக்கவில்லை! பின் பெஞ்சிகளில் அமர்ந்த மலையாளிகள் பலர் கணக்குப் பாடத்தில் கவனம் செலுத்தாமல் வேண்டு மென்றே கலாட்டா செய்தனர். பொறுமையையிழந்த சிவா, கணக்குப் போதிப்பதை நிறுத்தி, இராமாயணத்தைப் பற்றி ஆங்கிலத்திலே உரையாட ஆரம்பித்தார்.

    “கவியோகி வால்மீகி தான் எழுதிய இராம காவியத்தில் தென் கோடியில் வாழ்பவரை வானரங்களாய் காட்டியிருக்கிறார்! நான் அதை நம்புவதில்லை! வடக்கே அயோத்தியா புரியில் நாகரீக மனிதர் வாழும் சமயத்தில், தெற்கே மட்டும் எப்படி வானரங்கள் வாழ்ந்தன? வால்மீகி சொல்லியிருப்பது டார்வின் நியதிக்கு முரணாக இருக்கிறது! இதுவரை நம்பாத நான் வால்மீகி சொல்லி யிருப்பது உண்மை என இப்போது நம்புகிறேன்” என்று சிவா சொல்லி முடித்த போது, வகுப்பில் சிரிப்பு வெடிகள் வெடித்தன! மலையாள மாணவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது! சிவா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் ஒன்றும் நடக்க வில்லை! உடனே அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியேறினர்! பிறகு வகுப்பில் கணக்குப் பாடம் ஒழுங்காக நடந்து முடிந்தது.

    சிவா வெளியே வந்ததும் காத்துக் கொண்டிருந்த சித்ரா புன்னகை மலர, “கணக்கு வகுப்பில் அனுமார் கதையைச் சொல்லி எல்லாரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து விட்டீர்களே! ஸார் உங்களுக்காக மாடி அறைக் காத்துக் கொண்டிருக்கு! இன்று மாலை வரலாம். சிவப்புக் கம்பளம் விரிக்கவா? அல்லது பச்சைக் கம்பளம் விரிக்கவா? அறையில் ஏர் கன்டிஷன் இல்லை. வேண்டுமானால் மாட்டித் தருகிறோம். ஆனால் வீட்டு டியூஷனில் ராமர் கதா காலட்சேபத்தை ஆரம்பித்து விடாதீர்கள்” என்று நக்கல் புரிந்தாள்.

    “உங்க அம்மா ஒரு மாதத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்களா?”

    “ஒரு மாதமா? இல்லை. ஆறு மாதங்கள் வாங்கி விட்டேன், அம்மாவிடம் சண்டை போட்டு! எனக்கு மட்டும் நன்றி சொல்லுங்கள், முதலில்” என்றாள்.

    “உனக்கு நூறு நன்றி! உன் அம்மாவுக்குக் கோடி நன்றி”

    “எனக்கு ஒரு நன்றி போதும்! அம்மாவின் நன்றியை என்வழியாக அனுப்பாமல், நேராகச் சொல்லிக் கொள்ளுங்க” என்று கூறி விட்டு அடுத்து கெமிஸ்டிரி கூடத்துக்குள் நுழைந்தாள். சிவா அடுத்த கணக்கு வகுப்புக்கு நேரமாகவே சென்றான்.

    பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளி முகத்தாள்!

    அன்று மாலை சிவா, சித்ரா வீட்டு முன் அறையில் வந்து அமர்ந்தான். சுவரில் ஜனாதிபதி பதக்கத்தை அளிக்கும் ஒரு பெரிய படம் தொங்கியது! கம்பீரமான தோற்றமுடன் இராணுவ உடையில் நின்றார், ஆனந்த் குல்கர்னி. சித்ரா சிவாவுக்கு மாடி அறைகளைக் காட்டி விட்டு, அம்மாவிடம் கீழே அழைத்து வந்தாள். புனிதா சிறிது கடுமையான முகத்துடன் சிவாவை வரவேற்றாள். காபி கொண்டு வந்த சித்ராவுக்கு சிவா நன்றி சொன்னதும், வாடகையைப் பற்றி புனிதா பேச ஆரம்பித்தாள். அறைக்கு மாத வாடகை 400 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்பணம் தர வேண்டும். ஆக முதலில் 1200 ரூபாய் வேண்டும். ஆறு மாதத்திற்குள் அவன் வேறோரு இடம் பார்த்து அறையைக் காலி செய்ய வேண்டும்.

    கல்லூரி நாட்களில் மாலை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சித்ராவுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தால் மாதம் 100 ரூபாய் தருவதாகச் சொன்னாள். சிவா உடனே ஒப்புக் கொண்டான். ஆனால் முன்பணமும், முதல் மாத வாடகையும் தற்போது தன்னால் தர இயலா தென்றும், முதல் மாதச் சம்பளம் கையில் கிடைத்ததும், சேர்த்துத் தருவதாக சிவா சற்று பரிதாபமாகக் கூறினான். அதற்குப் புனிதா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அவனது நிலை புனிதாவுக்குப் புரிந்தது. ஹோட்டல்காரன் பணமில்லாத சிவாவை ஒருநாள் கூடத் தங்க விடமாட்டான்! கனிவாக சிவாவைப் பார்த்தாள், புனிதா. அவளது பாசமலர்க் கண்களில் சிவாவின் இதயம் சிக்கிக் கொண்டது. சிவா புறப்பட எழுந்தான்.

    “சில நிபந்தனைகள், மிஸ்டர் சிவா! மாடி அறையில் எந்தக் கேளிக்கைப் பார்டிக்கும் அனுமதியில்லை! குடிச்சுக் கூத்தடிக்க அனுமதியில்லை! புகை பிடிக்க அனுமதி இல்லை! உங்க பெற்றோர், உறவினர் வரலாம். குடிப் பழக்கம் இருக்கும் நண்பர்களை இங்கு அழைத்து வர வேண்டாம்! இரவில் பின் வழியாக மாடியில் ஏறிச் செல்லும் போதும், இறங்கும் போதும் சத்தமோ சந்தடியோ உண்டாக்கி வீட்டில் தூங்குபவரை எழுப்பி விடக் கூடாது”

    “நான் குடிப்பதில்லை” என்றான் சிவா. நிபந்தனைகளுக்கு உடன்படாக சிவா தலையை ஆட்டினான். பிறகு தன் பெட்டி, படுகையைக் கொண்டு வர ஆட்டோ ரிக் ஷாவைத் தேடிச் சென்றான். போகும் போது புனிதாவின் மிடுக்கான கண்களும், எடுப்பான தோற்றமும் சிவாவின் நெஞ்சையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன!

    கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதை
    வண்ணப் படமெடுக்கும் நெஞ்சம்!

    அன்று தீபாவளி. கல்லூரியில் கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் மதுரைக்குச் சென்று வர சிவா விரும்பவில்லை. காலையில் புத்தாடை கட்டி இனிப்புப் பலகாரம் தின்ன அமரும் போது, மாடியில் நடமாடும் காலடிச் சத்தம் கேட்கவே, சிவாவை அழைத்து வரும்படி புனிதா சித்ராவை அனுப்பினாள். கீழே வந்த சிவா புத்தாடை புனைந்து, பூவும் பொட்டும் இட்டுப் புது மணப்பெண் போல் காட்சி அளித்த புனிதாவைக் கண்டதும் அவளது அழகில் மயங்கினான். அவன் நெஞ்சில் கனல் பற்றி இதயத் துடிப்பு அதிகமானது! இளமை பொங்கும் சித்ராவும் அழகாய் அணிந்து அன்று பூத்த மலர் போல் தோன்றினாள். அவளது வாலைமீன் கண்கள் சிவாவைக் கவர வலை விரித்தன! அவள் தன் அழகிய சிரிப்பிலே அவனை மயக்கினாள். சிவாவின் கண்கள் சித்ராவின் சிலந்தி வலையிலிருந்து தப்பி, புனிதா விரிக்காத வலையில் சிக்கிக் கொண்டன!

    புனிதா புன்னகை மலர சிவாவை நாற்காலியில் அமரச் சொன்னாள். கைப் பொன் வளையல்கள் ஆட தாமரை அரும்புகள் போன்ற பளிங்கு விரல்கள் பலகாரங்களைப் பரிமாறும் அழகைச் சிவா ரசித்தான்! தின்னும் பலகாரங்களின் சுவையை ரசிக்காது சித்ராவின் கண்ணிமைகள் சிவாவின் முகத்தைப் பார்த்தும், பார்க்காமலும் விட்டு விட்டுப் படமெடுத்துக் கொண்டிருந்தன! புனிதா தயாரித்த தீபாவளிப் பலகாரங்கள் எல்லாம் சுவையாய் இருந்தன. அதைவிடப் புனிதாவின் குரல் சிவாவின் காதில் தேனாய் இனித்தது! வருடத்தில் தீபாவளி இப்படி ஒரு தடவைதான் வர வேண்டுமா என்று சிவாவின் மனம் கேட்டது! தேவலோக ரம்பை போன்ற புனிதா அன்று அன்புடன் தீபாவளித் தின்பண்டங்களைப் பரிமாற அவன் கொடுத்து வைத்தவன்! பல முறைத் தடுமாறி நன்றி சொல்லி சிவா இதயத்தை அவர்களிடம் விட்டு விட்டு மாடிக்குச் சென்றான். சித்ரா, புனிதா இருவரும் அவர்களது இதயத்தை அவன் பறித்துச் செல்ல சிலையாய் நின்றனர்!

    தோயும் மது நீ எனக்கு! தும்பியடி நான் உனக்கு!

    நாட்கள் சென்றன! டியூஷன் பாடங்கள் தினமும் நடந்தன! சித்ரா தினமும் டியூஷனில் கற்றுக் கொள்வது குறைவு! தனக்கு நன்றாகத் தெரிந்த விபரங்களையும் தனக்குத் தெரியாதது போல் திருப்பித் திருப்பி கேள்வி கேட்டு சித்ரா காலத்தைக் கடத்தினாள்! அவன் கவனத்தை கவர்ந்தாள்! தினமும் தரிசனம் தந்து சிவா தன்னையே நினைக்கும்படி செய்ய பல உபாயங்களைக் கையாண்டாள். நெருங்கி ஒட்டிக் கொள்ளத் துடிக்கும் சித்ராவை வெட்டி விட முடியாமல் தன்னைக் கட்டுப்படுத்த சிவா மிகவும் சிரமப் பட்டான்! காந்தக் கனல் வீசும் அவளது வாலிப மேனியைப் பற்றிக் கொள்ள எழும் இச்சையைக் கட்டுப் படுத்த சிவாவின் மனம் படாத பாடு பட்டது! என்னதான் கற்றாலும், எதற்குத்தான் கட்டுப் பட்டாலும் ஐம்புலன்கள் ஆட்சி செய்யும் தோல் போர்த்திய உடம்பு வேறு! அகத்தே உறங்கிக் கிடக்கும் உள்ளம் வேறுதான்! உடற்பசி வேறு! உள்ளப்பசி வேறு! உடல் வேண்டுவதை உள்ளம் தடுக்கும்! உள்ளம் வேண்டியதை உடல் தடுக்கும்! உடலும், உள்ளமும் ஒன்றுக்கொன்று பகையாளி! கண்ணிருந்தும் உடல் குருடானது! கண்ணில்லா உள்ளம் ஒளி கொண்டது! சித்ராவை அணைத்துக் கொள்ள உடல் விரைந்தது! ஆனால் சிவாவுக்கு உள்ளம் தடை உத்தரவு போட்டது!

    அன்று சித்ராவுக்குப் புரியாத பிஸிக்ஸ் கணக்குளைச் சொல்லிக் கொடுக்க தியரியை விளக்கப் போய் இரவு பத்து மணி ஆகிவிட்டது! சாப்பிடும் ஹோட்டலில் இரவு ஒன்பது மணிக்கு மேல் உணவு கிடைக்காது! சித்ரா மட்டும் சாப்பிட உட்கார்ந்தவள், அம்மாவைக் கெஞ்சினாள்! “அம்மா! என்னால் இன்றைக்கு அவரது இரவுச் சாப்பாடு போச்சு! நம் வீட்டில் சாப்பிட அழைக்கலாமா” என்று கேட்டாள் சித்ரா. தாயும் சம்மதம் தரவே, சித்ரா ஓடிப் போய் சிவாவை அழைத்து வந்தாள். நாற்காலியில் அமரச் சொல்லி அவனைச் சிரித்த முகத்துடன் வரவேற்றாள், புனிதா. மேஜை மேல் பாதிப் பக்கங்கள் திறந்தபடிக் கிடந்த வி.ஸ. காண்டேகரின் நாவல் “கிரௌஞ்ச வதம்” அவன் கவனத்தைக் கவர்ந்தது. தள்ளி உட்கார்ந்த சிவாவை, அம்மா பரிமாற வசதியாக இருக்கும் என்று பக்கத்தில் அமரச் சொன்னாள் சித்ரா. அவன் கேளாமல் போகவே சித்ரா போய் அவன் அருகில் உட்கார்ந்தாள். இடது புறத்தில் சித்ரா! வலது புறத்தில் நின்று, தட்டில் பரிமாறியவள் புனிதா! இரண்டு அணங்குகளின் கவர்ச்சியான மேனியில் எழுந்த காந்த மண்டலத்தில் அகப்பட்டுக் கொண்டு இருபுறமும் சிவா ஈர்க்கப் பட்டுத் திண்டாடினான்!

    “காண்டேகரின் கிரௌஞ்ச வதம் நாவலை நான் படித்திருக்கிறேன். உணர்ச்சி பொங்கும் உயர்ந்த நாவல்! அவர் உன்னதக் காவியப் படைப்பாளர்” என்று மௌனத்தைக் கலைத்தான் சிவா.

    “ஏற்கனவே “கிரௌஞ்ச வதம்” நாவலை நான் மராட்டியில் படித்ததுதான்! இப்போது அந்த நாவலைத் தமிழில் சுவைக்கிறேன். அழகிய தமிழ் நடையில் கா.ஸ்ரீ.ஸ்ரீ காண்டேகரின் மனத்தை அப்படியே எடுத்துக் காட்டியிருக்கிறார்” என்று தனது தமிழ்ப் பற்றைக் காட்டினாள் புனிதா.

    “பாவம்! கடைசிக் காலத்தில் மராட்டியக் காவிய மேதை காண்டேகரின் கண்கள் ஒளியிழந்து குருடாகிப் போயின”

    “ஆங்கிலக் கவி மேதை ஜான் மில்டன் போல” என்றாள் புனிதா.
    “உயர்ந்த மேதைகளுக்கு ஒன்று ஆயுள் குறுகிப் போவுது! அல்லது கண்கள் குருடாகிப் போவுது!”
    அப்போது புனிதாவின் எழிற் கண்கள் வீசிய ஒளிவீச்சு சிவாவின் நெஞ்சில் மின்னலைப் பாய்ச்சின! அந்த மின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவன் விழிப்படைய சில கணங்கள் எடுத்தன!

    சப்பாத்தி, குருமா, பருப்புக் குழம்பு, அப்பளத்துடன் மராட்டிய முறையில் தயாரித்த உணவு சிவாவுக்கு அமுதமாய் இருந்தது! அதை விட அவளது கனிவுக்குரல் இனித்தது! இனிதாக அவள் பேசுவதைத் திரும்பத் திரும்ப கேட்க வேணும் போல அவனுக்கு ஆசை எழுந்தது. அத்தனை அன்புடன் அவனை யாரும் இதுவரை உபசரித்ததில்லை.

    அன்றைய தினத்தில் நடந்த சிவாவின் முதல் விருந்து புது விதமான உணர்ச்சிகளை மூவரிடமும் எழுப்பியது! சிவாவை வீட்டுக்கு வந்த மருமகனாக எண்ணிச் சித்ரா கற்பனைக் கனவில் மிதந்தாள்! பத்தாண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் புருசனுக்கு உணவு பரிமாறிய நினைவு புனிதாவுக்கு வந்தது! கண்ணான கணவனுக்குத் தனது கையால் உணவு பரிமாறுவது போல் எண்ணிப் புனிதா மனதில் இன்புற்றாள்! சிவாவுக்கு வயிறு மட்டும் நிறைந்தது. ஆனால் இதயம் காலியாகிப் பசி உண்டானது! அவனது உள்ளம் புனிதா ஒருத்தியை மையமாக வைத்து அவளையே சுற்றிச் சுற்றி வந்தது!

    சாப்பிட்டதும் நன்றி கூற வந்த சிவா, தான் இரண்டு மாத வாடகை தர முடியாமல் போனதற்குப் புனிதாவிடம் வருத்தம் தெரிவித்தான். அவன் கையில் பணம் சேர்ந்தாலும், சேர்ந்த பணத்தை விட செலவுப் பணம் அதிகமானது! தகப்பனாரின் கடிதம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வந்துவிடும். மாதம் ஒரு முறை மொத்தமாக அனுப்பினாலும், அவருக்குத் தொகை பற்றவில்லை. தங்கை திருமணச் சீட்டுக்குச் செலுத்தும் பணம்! மின்சார வாரியத்துக்குப் பணம்! அரிசி, பருப்பு காய்கறிகளுக்குப் பணம்! பால் வாங்க தனியாகப் பணம்! சிவா கல்லூரிக்குக் கடன் வாங்கிப் படித்ததுக்கு மாதா மாதம் பணம் அடைப்பு! அதனால் பெரிய பணமுடை உண்டாகிக் கடைசி இரண்டு மாத வாடகை புனிதாவுக்குத் தர முடியாமல் போனது!

    தங்கையின் திருமணத்துக்குச் சீட்டுப் பணம் செலுத்துவது, தன் படிப்புக் கடனை அடைப்பது, நோய்வாய்ப் பட்ட தந்தையின் மருந்துக்குத் தருவது, அத்துடன் வீட்டுச் செலவுக்கு அனுப்புவது இவைகளுக்கே தன் வருவாய் பற்றாமல் போவதைப் புனிதாவிடம் இப்போது சொல்லி விடுவதுதான் நல்லது என்று நினைத்து தனது பண முடையை விபரமாகக் கூறினான். கண்ணிமைகள் கொட்டாது கூர்ந்து கேட்ட புனிதாவுக்கு என்ன சொல்வ தென்றே தெரியாமல் பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

    தன்னால் வாடகை தர முடியாமல் போவதால், ஆறு மாதத் தவணைக்கும் முன்பாகவே தான் அறையைக் காலி செய்வதாய் வருத்தமுடன் கூறினான் சிவா!

    “என் டியூஷன் என்ன ஆவது? பாதியிலே விட்டு விட்டுப் போவது சரியா” என்று அலறினாள் சித்ரா. புனிதா பெருந்தன்மையுடன் பேசினாள்.

    “மிஸ்டர் சிவா! திடீரென்று எங்கும் போக வேண்டாம்! பணம் மிஞ்சும் போது கொடுக்கலாம். போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். கல்லூரியிலிருந்து வந்ததும் மாலையில் பேசிக் கொள்ளலாம்” என்று கனிவாகப் பேசி சிவாவை அனுப்பி வைத்தாள். சித்ராவின் முகத்தில் முழு நிலவு தென்பட்டது. புனிதாவுக்கு நன்றி கூறி அவள் முகத்தை நெஞ்சில் படமெடுத்துக் கொண்டு, பெரு மூச்சுடன் மாடிக்குச் சென்றான், சிவா.

    தூண்டிற் புழுவினைப் போல், எரியும் சுடர் விளக்கினைப் போல்
    நீண்ட பொழுதாக எந்தன் நெஞ்சம் துடித்தடி!

    அன்று மூன்று பேருக்கும் தூக்கம் இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒருவித ஏக்கம்! சிவாவுக்கு வாடகைப் பணம் தர முடியவில்லையே என்னும் குற்றமுள்ள நெஞ்சு! புனிதாவின் அன்ன மிட்ட கைகள், புன்னகை தழுவிய முகம், கனிவு பொங்கும் இனிய குரல் அனைத்தும் கனவாகப் போகுமா என்ற பயம்! படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான்! இதயத்தைக் கவர்ந்த ஒருத்தியை விட்டு விட்டு அவனால் போக முடியுமா? வாடகை தர முடியாத சிவாவை இன்னும் மாடி அறையில் தங்க அனுமதித்த, புனிதாவுக்கு சிவா என்ன கைம்மாறு செய்யப் போகிறான்?

    புனிதாவுக்கும் அன்று உறக்கம் வரவில்லை. பத்தாண்டுகளாக கணவன் காஷ்மீரில் மரணமடைந்த பின் ஆடவர் வாடையே இல்லாமல் தனியாகக் காலம் கழித்தவள் புனிதா. இப்போது பாலை வனத்தில் கண்ட பசுஞ் சோலையாக சிவா அவளது தலை வாசலில் கால் வைத்தான். தங்கையின் திருமணத்துக்கு அவன் பணம் சேர்ப்பதும், குடும்பமே கண்ணாக அவன் உழைப்பதும் புனிதாவுக்கு அவன் மேல் பற்றையும், கவர்ச்சியையும் உண்டாக்கியது. அவன் வாடகை தராமல் பணம் தாமதமாகி விட்டாலும் பரவாயில்லை. அறையை விட்டு அவன் போய் விட்டால், அவளது நெஞ்சில் ஒரு பெரும் குழி உண்டாகி விடும் என்று அஞ்சினாள். கல்லூரியிலிருந்து மாலையில் சிவா வீடு திரும்பி மாடியில் நடக்கும் ஓசையைக் கேட்கும் போதெல்லாம் அவளது இதயத்தில் ஏதோ ஒரு துடிப்பும், அதைத் தொடர்ந்து ஒரு கனலும் எழுந்தது. கல்லூரியில் அவள் பீ.ஏ. வகுப்பில் ஷேக்ஸ்பியரின் நாடகம் “அண்டணி & கியோபாட்ரா” நடத்தும் போது, சிவா அண்டணியாகவும் தான் கிளியோபாத்ராவாகவும் எண்ணிக் கற்பனை செய்து கொள்வாள்! அவனையே இராப்பகலாக நினைக்கும் அவள் மனம் அவன் போய் விட்டால் என்ன பாடு படும்?

    சித்ராவும் தூங்க வில்லை! முந்திய நாள் அவனுக்குத் தெரியாமல் அறையில் எடுத்த அவன் படத்தை பார்த்துப் படுக்கையில் ரசித்துக் கொண்டிருந்தாள். கல்லூரி வகுப்பில் சந்தித்த முதல் நாளே, சித்ரா மயங்கி, தன் இதயத்தை சிவாவிடம் பறி கொடுத்தாள்! அப்புறம் சாமர்த்தியமாகத் தன் வீட்டு மாடி அறையில் அவனை அடைத்து விட ஒரு வாய்ப்புக் கிடைத்தது! கணிதப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்க வைத்துத் தினமும் அவனைத் தரிசிக்க, சித்ரா வழி வகுத்து அதிலும் அவளுக்குப் பூரண வெற்றி!

    அன்று சனிக்கிழமை! முகத்தைக் கழுவி விட்டுத் துண்டில் மூடித் துடைத்து கொண்டு கண்ணாடி முன் நின்ற சிவா தன் தோள் மீது மெத்தென்ற ஒரு கரம் பட்டதும் திடுக்கிட்டான்! கவர்ச்சி பொங்க சிரித்துக் கொண்டு பின்னால் நின்றவள் சித்ரா! சிவாவின் இதயம் ஆடியது! மெதுவாக அவளது கைகளை விலக்கினான்! சித்ரா மறுபடியும் அவனது தோளில் கையை வைத்தாள்! சிவநாதனுக்குப் கோபம் வந்தது!

    “சித்ரா! இது தப்பு! நீ என்னைத் தொடுவது தகாத செயல்” என்று அலறினான்.

    “நீங்க என்ன கீழ் ஜாதியா? இதிலே என்ன தப்பு இருக்கு?”

    “நீ வயசுப் பெண். என்னை நீ தொடக் கூடாது! நான் எந்த ஜாதியா இருந்தா என்ன? உங்க அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? என்னை வெளியே துரத்திடுவாங்க”

    “துரத்த மாட்டாங்க! என்ன ஆகும் தெரியுமா? எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகும்! எங்க அம்மாவுக்கு அவ்வளவு பயமா?”

    “இப்போ உன்னைக் கண்டால்தான் எனக்குப் பயமாயிருக்கு! பிளீஸ் கையை எடு”

    “நான் உங்களைத் தொடுவது தப்புன்னு என் கையை உதறித் தள்ளினால் என் கையைப் பிடிச்சு இழுத்தீங்க நான் அம்மாவிடம் புகார் செய்வேன்! அப்போ என்ன செய்வீங்க?” என்று அவனை மடக்கினாள். சிவாவுக்குத் தர்ம சங்கடமாய்ப் போனது!

    “அப்படி உன் அம்மாவிடம் நீ பொய் சொல்வாயா? எதற்காக இங்கு வந்தாய்? இன்று டியூஷன் கூட இல்லை”

    “சினிமாவுக்குக் கிளம்பினேன். உங்களுடன் போகலாம் என்று அழைக்கத்தான் வந்தேன்”.

    “நான் சினிமாவுக்குப் போவதில்லை. அப்படிப் போனாலும், உன்னுடன் போவதாக இல்லை”

    “இப்போ நான் தீண்டத் தகாதவளாக ஆயிவிட்டேனா? நான் பணம் தருகிறேன், சினிமாவுக்கு”

    “சித்ரா, உன் பணத்தில் நான் சினிமா பார்க்க விரும்பவில்லை”

    “நீங்க இந்தப் பணத்தை எனக்குத் திரும்பித் தர வேண்டாம்”

    “நான் உன்னுடைய கிளாஸ் லெக்சரர். வாலிபப் பெண் உன்னுடன் நான் படம் பார்க்கப் போவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?”

    “பாய் பிரண்டு என்னு நினைப்பாங்க! வீட்டிலே நீங்க லெக்சரர் இல்லே! அந்தப் பட்டமெல்லாம் கல்லூரியிலே!”

    “நான் உனது பாய் பிரண்டு இல்லே! சினிமா தியேட்டரில் நம்ம கல்லூரிப் பசங்கள் வருவாங்க”

    “நம்ம இரண்டு பேரையும் ஒன்னாக் காட்டுறதுக்குத்தானே படத்துக்குப் போலாம் என்கிறேன்”

    “அந்தக் காட்சியைக் காண எனக்கே பிடிக்கலே”

    “வரப் போறீங்களா? இல்லையா? எங்க வீட்டு விருந்தாளி நீங்க! தெருவிலே போற அன்னியன் இல்லே!” சித்ராவின் குரலில் அதிகாரம் தொனித்தது.

    “உன்னோடு சினிமாவுக்கு அவர் வர மாட்டார்! நீ மட்டும் போ!” என்ற குரல் கேட்டு சிவா நடுங்கினான்.

    கண்களில் கனல் பறக்க மாடிக்கு வந்த புனிதாவைக் கண்டு சிவாவுக்குத் தலை சுற்றியது. சித்ரா ஒன்றும் பேசாமல் தடதட வெனப் படியில் இறங்கி ஓடினாள். சிவாவின் கண்கள் தரையை நோக்கப் பேசினான்.

    “மன்னிக்க வேணும் மேடம். உங்களிடம் என்ன சொல்றதின்னு எனக்குத் தெரியலே!”

    “எல்லா வாதங்களையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நான் தோட்டத்தில் இருந்தது சித்ராவுக்குத் தெரியாது. நீங்க வருத்தப் பட இதிலே ஒண்ணும் இல்லே!” புனிதா நாற்காலியில் பெரு மூச்சுடன் அமர்ந்தாள்.

    “நான்தான் சித்ராவுக்காக வருத்தப் படுறேன். என் கணவர் காஷ்மீர் கலவரத்தில் இறந்த போது, சித்ராவுக்கு வயது ஆறு! போன அப்பா திரும்பாமல் போகவே அவள் மனதில் எழுந்த துடிப்பு இன்னும் இருக்கு! தந்தையை இழந்து போனதால் அவளுக்கு ஆடவர் மீது வாஞ்சை அதிகம்”

    “நான்தான் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடினேன்!” என்றான் சிவா.

    நீயே எனக்கு என்றும் நிகரானவள்!

    சித்ரா தனியாகச் சினிமாவுக்குப் போய் விட்டாள். சிறிது நேரம் மௌனமாய் இருந்து, புனிதா சிவாவை சாப்பிடக் கீழே அழைத்துச் சென்றாள். சாப்பிட்டுக் கொண்டே புனிதா பேசினாள்.

    “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க. எங்கே பிறந்தது, எங்கே படித்தது, பெற்றோர்கள் என்ன செய்கிறாங்க இதெல்லாம் தெரிஞ்சு கொள்ள விருப்பம்”

    “பிறந்தது மதுரையில். எம்.எஸ்சி. சயன்ஸ் பட்டம் பெற்றது, மதுரைக் கல்லூரியில். பெற்றோர்கள் இருவரும் அங்குதான் சொந்த வீட்டில் இருக்காங்க. காந்தியைப் பின்பற்றி அப்பா 1942 இல் சிறை சென்று, இப்போ தியாகிகள் பென்ஷன் பெற்று ஓய்வில் இருக்கார். அப்பாவுக்கு எழுபது வயது. அம்மாவுக்கு அறுபத்தி ஐந்தைத் தாண்டி விட்டது. நானும் தங்கையும் இரண்டே பேர்கள்தான்”

    “உங்க அப்பா சுதந்திரக்குப் போராடிய ஒரு தியாகின்னு பெருமைப் படுறேன். நீங்க ஏன் எஞ்சினியரிங் கல்லூரிக்குப் போகலே?”

    “அப்பாவாலே சப்போர்ட் பண்ண முடிய வில்லை. எனக்கும் ஆசைதான். என்ன செய்வது? எம்.எஸ்சி. முடிச்சு வேலைக்குப் போய் சம்பாதிக்கும்படி அப்பாவின் உத்தரவு”

    “உங்களுக்குக் கணிதத்திலே எப்படி ஆர்வம் அதிகமாச்சு?”

    “மதுரைக் கல்லூரி பிராமணர் நடத்தும் கல்லூரி. மாத்ஸ் பரீட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கிய சில மாணவரில் பிராமணர் அல்லாதவன் நான் ஒருவன் மட்டுமே. வைஸ் பிரின்சிபால் சுப்ரமணிய ஐயர் தனியாக என்னை அவரது ஆபீஸ¤க்கு அழைத்துச் சென்று முதுகில் தட்டிக் கொடுத்து, கணக்கில் நூற்றுக்கு நூறு நான் வாங்கியதற்குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்”

    “கணித மேதை ராமானுஜனுக்கு அடுத்த படியா?”

    “ராமானுஜன் தெய்வ அருள் பெற்ற ஞானச் சிறுவன்! நான் அவரது கால் தூசிக்குச் சமம்! ஏழு வயதிலேயே அவரது கணித ஞானம் பளிச்சென வெளிப்பட்டது! பன்னிரெண்டு வயதில் கடினமான லோனியின் டிரிகினாமெற்றியைக் கரைத்துக் குடித்தார். பாவம் அந்த கணிதச் சுடர் முப்பத்தி ரெண்டு வயசிலே காச நோயில் அணைந்து போனது! ….. உங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்க” என்றான் சிவா.

    “பூனேயில்தான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, விவாகம் புரிந்து கொண்டது எல்லாம். எம்.ஏ. லிட்ரேச்சர் பட்டம் வாங்கியது பூனே யுனிவர்ஸிட்டியில். என் பெற்றோரும், கல்யாணமான தங்கையும் அங்கே இருக்கிறார்கள். ஆனந்த், என் கணவர் மிலிடரி கல்லூரியில் படித்து எஞ்சினியரானவர். திருமணம் ஆனதுமே, ஆனந்துக்கு முதல் பணி கோவை ராணுவ பயிற்சி முகாமில் கிடைத்தது. சித்ரா பிறந்தது, இந்தக் கோயமுத்தூரில்தான். காஷ்மீருக்கு மூணு மாசம், ஆறு மாத விஷேச டியூட்டி அடிக்கடி ஆனந்துக்கு வரும். அதில் ஒரு முறைப் பங்கு கொள்ளப் போனவர் திரும்பி ….வரவில்லை” புனிதாவின் தொண்டை சட்டென அடைத்துக் கொண்டது. கண்கள் இரண்டும் மூடின. கண்ணீர் மடை திறந்தது.

    சற்று அங்கு மௌனம் நிலவியது. கண்களைச் சேலையில் துடைத்துக் கொண்டாள், புனிதா.

    “தமிழில் எப்படி அழகாக உங்களால் பேச முடிகிறது?” என்று கேட்டான் சிவா.

    “நானும் ஆனந்தும் மாலை வேளைகளில் தனியாகத் தமிழ் கற்றோம். கோவை ராணுவப் பயிற்சி முகாமல் இருப்பவர் அநேகர் தமிழ்ப் படையாட்கள். தமிழ் தெரியாமல் அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது? கணவர் தமிழ் படிக்கும் போது, நானும் சேர்ந்து கொண்டேன். சித்ரா படித்தே தமிழ்ப் பள்ளியில்தான். உங்களுக்கு யார் எழுதிய புத்தகங்கள் பிடிக்கும்?” என்று கேட்டாள் புனிதா

    “தமிழில் பாரதியாரின் பாக்கள், டாக்டர் மு.வரதராசனார், அகிலன், பார்த்தசாரதி, காண்டேகர் நாவல்கள் என்னைக் கவர்ந்தவை. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஸாவின் நாடகங்கள், ஸோமர்செட் மாகம், பேர்ல் எஸ் பெக், டால்ஸ்டாய் நாவல்கள், எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். உங்களுக்கு யாரெல்லாம் பிடிக்கும்?”

    “எனக்கும் உங்களைப் போல் பேர்ல் எஸ். பெக், டெயிலர் கால்டுவெல் மற்றும் பெர்னாட்ஸா, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பிடிக்கும். எங்க நிர்மாலா கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் நான் டைரக் செய்யும் நாடகங்கள் அவை. தமிழ் எளிய மொழி! இனிய மொழி! ஒற்றை வரி ஒளவையாரைப் போல, இரட்டை வரி திருக்குறளைப் போல, நால்வரி நாலடியாரைப் போல ஒழுக்க நெறிகள் மராட்டியில் இல்லை! தெள்ளு தமிழில் இனிமையாக ஆண்டாள் எழுதிய திருப்பாவை போல மராட்டியில் எவரும் எழுதவில்லை!”

    சற்று மௌனம் நிலவியது. சிவா எதிர்பார்க்காத போது புனிதா சட்டென ஒரு கேள்வியை வீசி, அவனைத் திடுக்கிடச் செய்து, அவனது கண்களை நோக்கினாள்.

    வெண்ணிலவு நீ எனக்கு! வீசும் ஒளி நான் உனக்கு!

    “ஒரு மராட்டியப் பெண்ணை விவாகம் செய்து கொள்ள .. உங்க அம்மா, அப்பா ஒப்புக் கொள்வார்களா?” … சிவா பதில் கூற முடியாது நெஞ்சடைத்துக் குரல் விக்கிக் கொண்டது.

    “என் அப்பாவும், அம்மாவும் சம்மதம் தர மாட்டார்கள். சுற்றத்தாரின் அவதூறான பேச்சுக்கு அவர்கள் அஞ்சுவார்கள். இந்த விவாகத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!” என்று சிவா சொல்லியதும் புனிதாவின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன.

    “ஆனால் நான் முழு மனதாய் மணம் செய்து கொள்வேன்” என்று சிவா தொடர்ந்ததும் புனிதாவின் முகத்தில் ஒளி பெருகியது.

    “உங்க பெற்றோர் ஒத்துக் கொள்வார்களா?” என்று கேட்டான் சிவா.

    “மனப்பூர்வமாய் ஆசீர்வதிப்பாங்க. இதற்கு முன்பு இப்படி நான் இருமுறை முயன்று திருமணம் நின்று போயிருக்கு” புனிதாவின் கண்களில் ஈரத் துளிகள் மிதந்தன.

    “அந்தத் தோல்வி உங்களை வருத்துது! ஆனால் எனக்கு எல்லையில்லா ஆனந்தம் அளிக்குது! புனிதாவின் கைகளை நான் பற்றிக் கொள்ள வேணுமென விதி எழுதி யிருந்தால், யார் அதை மாற்ற முடியும்?” என்று சிவா சொல்லியதும் புனிதா மனம் விட்டுச் சிரித்தாள். அப்போது ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தன!

    “நான் கணவனை இழந்தவள் என்று என்மேல் வெறுப்பு இல்லையா?”

    “இல்லை. நீங்க மறுமணம் புரிய விரும்புவது, எனக்கு ஊக்கம் அளிக்குது! முதல் நாள் பார்த்த போதே, என் மனம் உங்களை நாடியது. அப்போது நீங்க யார் என்றோ, உங்க தனியான வாழ்க்கை பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் ரூம் ஆண்களுக்கில்லை என்று என்னை விரட்டிய அன்றைய தினமே, என் நெஞ்சில் உங்கள் உருவம் பதிந்து விட்டது. என்னை நீங்க விரட்ட விரட்ட, ஏனோ என் மனம் உங்களைத்தான் விரும்பியது! அன்று திரும்பிப் போகவே மனமில்லை, எனக்கு! போகப் போக என் இதயம் உங்க வசப்பட்டு உறுதியாகி, எப்படி இதைக் கேட்பது என்று தெரியாமல் அலை மோதினேன்”.

    அப்போது புனிதாவின் கண்களில் நீரருவி பொங்கியது.

    “எனக்குப் பதினெட்டு வயது வயசுக் குமரிப் பெண்ணிருப்பது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?”

    “மனக் கஷ்டம் இருக்கு. ஆனால் சித்ரா, உங்க அருமை மகள்! இன்னும் சில வருசங்களில் அவள் கல்யாணமாகிப் போய் விடுவாள். சித்ரா நம் இல்வாழ்வுக்கு இடராகத் தோணவில்லை! அந்த மனத்தாங்கலை நான் தாங்கிக் கொள்ள முடியும்”.

    “சித்ரா இப்போ என்னுடன் இந்த வீட்டில் இருப்பது உங்களுக்கு எப்படி தோணுது?”

    “அவளுக்கு என்மேல் விரும்பம் இருக்கு. நம்ம விவாகத்தால் சிக்கல் ஏற்படலாம்! முதலில் நம் விவாகத்துக்கு சித்ரா ஒப்புக் கொள்வாளா?”

    “அவள் ஒப்புக் கொள்ள மாட்டாள்! அது போகட்டும், சித்ராவை நீங்க விரும்புகிறீர்களா?”

    “சித்ரா மீது எனக்கு விருப்பம் இல்லை! எந்த விதத்திலும் அவள் எனக்குப் பொருத்தம் இல்லை”

    “சித்ரா நமது விவாகத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆனால் அவள் மராட்டிய வாலிபன் ஒருவனை மணம் புரிய வேண்டுமென நினைக்கிறேன். அவள் மனதில் எந்த நிழல் ஆடுகிறதோ?”

    “எனக்கு இந்த விவாகத்தில் முழு விருப்பம். கொஞ்சம் அவகாசம் கொடுங்க. தங்கையின் திருமணம் முடிஞ்சதும் என் பெற்றோரிடம் இதைப் பற்றி நான் பேச வேண்டும்”

    “உங்கள் தங்கையை பற்றிச் சில விபரம் அறிந்து கொள்ள ஆவல். என்ன படித்திருக்கிறாள்?”

    “ஹைஸ்கூல் முடித்து விட்டு, மதுரைத் தபால் ஆபீஸில் சாதாரண வேலை செய்து வருகிறாள். வயது முப்பதைக் கடந்து விட்டது. உணவைக் கட்டுப் படுத்தி உடல் பெருக்காமல் பார்த்துக் கொள்கிறாள். கடந்த பத்து வருசங்களாக தங்கை கல்யாணத்தை முடிக்க முடியாது, இன்னும் தள்ளிக் கொண்டே போவுது.

    பானமடி நீ எனக்கு! பாண்டமடி நான் உனக்கு!

    புனிதாவின் சிந்தனையில் சற்று ஆழ்ந்தாள்.

    “உங்களுக்கு கொஞ்சப் பண உதவி செய்யலாம் என நினைக்கிறேன், நீங்க ஏத்துக் கொண்டால்”

    “வாடகை தர முடியாத நான் எப்படி உங்களிடம் இன்னும் கடன் வாங்குவது?

    “என் கணவர் இறந்த பிறகு, ஆயுள் இன்சூரன்ஸ் தொகை பெரு மளவில் கிடைத்தது. பூனேயில் இருந்த அவருடைய பூர்வீக வீட்டை விற்று இன்னும் சேமிப்பு உயர்ந்தது. கல்லூரிச் சம்பளப் பணமே மாதா மாதம் எனக்கு மிஞ்சுகிறது. சித்ராவின் திருமணத்துக்கு வேண்டிய பொன்னும் பொருளும் நிறைவாகவே இருக்கிறது”

    “பேர் மட்டும் தெரிந்த என்னை நம்பி பெரிய தொகையைத் தர எப்படி முடிவு செய்தீங்க? எதற்காக உதவி செய்றீங்க?” புனிதா பதில் சொல்ல முடியாமல் சற்று திண்டாடினாள். சொல்ல நினைத்தது மனதுக் குள்ளே சிக்கிக் கொண்டது. புனிதாவின் கண்கள் சிவநாதனின் கண்களை நோக்கின! சிவநாதனின் கண்கள் புனிதாவின் இதயத்தை ஊடுறுவின.

    “என்னிடம் சும்மா இருக்கும் பணம் உங்கள் தங்கைக்கு வாழ்வளிக்க உதவட்டும் என்று நினைத்தேன்”

    “நான் எப்படி இந்தக் கடனை அடைப்பது? எப்படி வட்டி கொடுப்பது?”

    “இந்தப் பணத்துக்கு நான் வட்டி வாங்கவும் விரும்ப வில்லை. முதல் வாங்கவும் விரும்பவில்லை” சிவநாதன் திடுக்கிட்டு அதிர்ச்சி அடைந்தான்.

    “நீங்க என்ன சொல்றீங்க?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

    “தயவு செய்து நான் தரும் பணத்தை வரதட்சணையாய் எண்ண வேண்டாம். நம் விவாகம் நடக்காமல் போனாலும், உங்க தங்கையின் திருமணத்துக்குத் தருகிறேன்” அதிர்ச்சி அடைந்த சிவாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் அரும்பின.

    “இந்த உதவியை நான் மறக்க முடியாது, மிஸ் புனிதா?” எழுந்து போகக் கிளம்பினான் சிவா.
    புனிதா முகமலர, “இனிமேல் நீங்க மாடி அறைக்கு வாடகை தர வேண்டாம்! வெளியே ஹோட்டலுக்குப் போக வேண்டாம். எங்க வீட்டிலே தினம் சாப்பிடலாம். சொல்ல மறந்து விட்டேன் சிவா. என்னை மேடம் என்றோ, மிஸ். புனிதா வென்றோ அழைக்க வேண்டாம்” என்று அழுத்திச் சொன்னாள்.

    வண்ண மயில் நீ எனக்கு! வானமழை நான் உனக்கு!

    சிவநாதனின் தங்கை திருமணம் சிறப்பாக, சிக்கனமாக மதுரையில் நடந்தேறியது. புனிதா குல்கர்னியும், சித்ராவும் திருமண விழாவுக்கு வந்தது சிவாவுக்கு மன மகிழ்ச்சியையும், திருப்தியையும் தந்தது. கல்யாணக் கூட்டத்தில், பால் போன்ற மராட்டிய பளிங்குச் சிலைகள் இரண்டு அத்தனை பேர் கண்களையும் கவனத்தையும் கவர்ந்தன! சித்ராவையும், புனிதாவையும் சிவா தனது தாய், தந்தையார் மற்றும் திருமணத் தம்பதிகள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். குறிப்பாகப் பெற்றோர், தங்கைக்கு மட்டும் அவர்கள் யாரென்று விளக்கமாகக் கூறினான். பெருந்தன்மையாக புனிதா கல்யாணத்துக்குப் பண உதவி செய்ததை அவர்களது காதில் மெல்லக் கூறினான். மூவரும் அன்பு மிகுந்து புனிதாவுக்கு நன்றி கூறினார்கள்.

    சித்ரா வான மேகங்களில் மிதந்தாள். சிவாவின் தங்கையோடு மிகவும் ஒட்டிப் பழகினாள். அவளது கல்யாணத்துக்கு ஒரு தடை நீங்கி வழி திறந்ததாக ஆனந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டாள். சித்ராவை விட பெரு மகிழ்ச்சியில் இருந்தவள் புனிதா. திருமணம் ஆன பிறகும் அவள் தனிமையில் வாடிய நாட்களே அதிகம். கணவனுடன் அவள் ஆனந்தமாய்க் களித்த நாட்கள் மிகக் கொஞ்சம். இருபத்தியோர் வயதிலே கல்யாணமாகி கணவருடன் ஒன்பது வருசங்கள் வாழ்ந்தாலும் பாதிக் காலம் பாதுகாப்பு ராணுவ அதிகாரியாய்க் காஷ்மீருக்கு பயணம் போய்விடுவார். அவள் சிவாவோடு எதிர்காலத்தில் வாழப் போவதாய்க் காணும் காட்சி மெய்யாக நிகழுமா அல்லது கனவாய்ப் பழங் கதையாய்ப் போகுமா என்பது இன்னும் நிச்சயமில்லை!

    நினைப்ப தெல்லாம் நடப்பதில்லை! நடப்பதெல்லாம் நினைப்பதில்லை!

    அன்று மாலை நிர்மலாக் கல்லூரில் வருடாந்திர விழாவில் பங்கு கொள்ள புனிதா சென்று விட்டாள். ஆங்கில நாடகம் ஒன்றை இயக்கி அரங்கேற்ற வேண்டிய பொறுப்பு அவள் மீது விழுந்தது. சித்ராவும், சிவாவும் நாடகத்தைக் காண 9 மணிக்கு வருவதாய்ப் புனிதாவிடம் சொல்லியிருந்தார்கள். அவளது நாடகமே கடைசி நிகழ்ச்சியாக இருந்தது. சித்ரா மாடிக்குச் சென்று சிவாவைப் பார்க்கச் சென்றாள். சோபாவில் அமர்ந்த சிவாவிடம் அவள் ஒட்டி அமர்ந்து அவனது தலை மயிரைக் கோதி விட்டாள். சற்று தள்ளி அமர்ந்த சிவாவை மறுபடியும் நெருங்கி உட்கார்ந்தாள். சோபாவின் முனைக்குப் போகவே சிவா எழுந்து நின்றான்! உடனே சித்ரா அவன் கையைப் பற்றி இழுத்து சோபாவில் உட்கார வைத்து உரசிக் கொண்டு அமர்ந்தாள். அவன் முகத்தை அவளது மலர்க் கரங்களால் தடவினாள்!

    “இந்த முகத்தை இப்படித் தடவ வேண்டுமென, நான் எத்தனை நாள் காத்திருக்கேன்” சித்ராவின் மொட்டு விழிகள் சிவாவின் மூடும் விழிகளை விழுங்கிவிட விரிந்து மலர்ந்தன! சிவாவுக்கு தர்ம சங்கடமானது.

    “நாம் உன் அம்மாவின் நாடகத்தைப் பார்க்க நிர்மலாக் கல்லூரிக்குப் போகணும்”

    “நம்ம நிஜ நாடகம் இங்கு நடக்கும் போது, அம்மாவின் நாடகத்தை அங்கு போய்ப் பார்க்கணுமா? இப்படி நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா? ஏன் பயந்து நடுங்குறீங்க? உங்க தங்கையின் கல்யாணம் முடிஞ்சி நமக்குக் காலம் வந்தாச்சி. கதவும் திறந்தாச்சி! இனிமேல் நம்ம கல்யாணத்தைப் பத்தி நாம் பேச வேண்டும்! நானே அம்மாவிடம் சொல்றதா இருக்கேன். எங்க அம்மாவிடம் என்னைக் கேட்க உங்களுக்கு தைரியம் உண்டா?”

    “சித்ரா! உனக்கும் எனக்கும் கல்யாணம் என்று கனவு காணாதே! அது நடக்காத கல்யாணம். குமரிப் பெண் நீ. பாதி ஆயுளைக் கடந்தவன் நான். உன்னை விட இரு மடங்கு வயது எனக்கு”.

    “போதும் உபதேசம். ஒருவரை நேசித்து அவரையே மணக்க நான் விரும்புறேன். எனக்கு உங்க வயதைப் பற்றிக் கவலை இல்லை”

    “மோகம் உன் கண்களைக் குருடாக்குது! என் வயதைப் பற்றி இப்போது நீ கவலைப்பட மாட்டாய். எண்பது வயதுக் கிழவனாய்க் கூன் விழுந்து குருடனாய் நான் நொண்டும் போது, நீ நாற்பது வயது வாலிப மங்கையாய் உறவை நாடுவாய்! அப்போ என் எலும்பு கூட்டைப் பார்த்து வேதனைப் படுவாய். வீட்டில் கிடைக்காத இன்பத்தைத் தேடி நீ…. வெளியே கூடப் போவாய்”

    “சீ என்ன ஆபாசப் பேச்சு இது? நம்மிருவருக்கும் ஜோடிப் பொருத்தம் இருக்கு”.

    “ஆனால் நமக்கு இனப் பொருத்தம் இல்லை! மனப் பொருத்தம் இல்லை!”

    “பூனேயில் பிறந்தாலும் தமிழ் நாட்டிலே பதினைந்து வருசமா இருக்கோம். எனக்கு மராட்டியன், தமிழன் என்றெல்லாம் இன வேறுபாடு கிடையாது. மராட்டியன் தமிழனை விட உயர்ந்தவனும் இல்லே! தமிழன் மராட்டியனை விட எந்த விதத்தில் தாழ்ந்தவனும் இல்லே! இரண்டு பேரும் ஒரு தாய் ஒரு தந்தைக்குப் பிறந்தவரே”.

    “உன்னை எனக்குப் பிடிக்கவில்லை!” என்றான், சிவா.

    “பொய் சொல்றீங்க! எனக்கு என்ன குறைச்சல்? அழகில்லையா? அறிவில்லையா? அந்தஸ்தில்லையா?”

    “நீ அழகிதான்! அறிவாளிதான்! நல்ல குடும்பத்தில் பிறந்தவள்தான்! ஆனால் இதயத்தில் கள்ளும், முள்ளும் உள்ளன! நெஞ்சி இருக்கு! ஆனால் உள்ளம் இல்லை! மூளை இருக்கு! ஆனால் முதிர்ச்சியில்லை! மணக்கப் போகும் பெண்ணை, நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்”

    “யார் அந்த அதிர்ஷ்டக்காரி? அன்று கல்லூரியில் சிரித்துச் சிரித்துப் பேசினாளே, அந்த பைனல் இயர் பியூட்டி மஞ்சுளாவா?”

    “இல்லை. உனக்குத் தெரிந்த ஒரு மாது”

    “யார் அந்த மாது? என் கிளாஸ்மேட் மேனகாவா?”

    “உன் அம்மா என்று சொன்னால் உனக்கு மயக்கம் வருமா?”

    “சீ என் அம்மாவா? அம்மாவையா விவாகம் செய்யப் போறீங்க? ஏற்கனவே திருமணமாகிய ஒருத்தியா உங்க மணப்பெண்? பதினெட்டு வயசுக் குமரிப் பெண்ணை மகளாகக் கொண்ட ஒரு தாயா உங்க மணப்பெண்? கணவனை இழந்த ஓர் அபாக்கியவதியா உங்க வருங்கால மனைவி?”
    “ஆம் அந்தப் புனிதவதிதான் என் வருங்கால மனைவி”

    “என் தந்தையின் இடத்தை நீங்க நிரப்ப முடியாது. கணவனாய்க் கருதிய ஒருவரை என் உள்ளம் ஒருபோதும் தந்தையாக ஏற்றுக் கொள்ளாது. தெரியுமா! ஏற்கனவே இது போல் அம்மா முயன்று, இரண்டு தரம் நிச்சயமாகிக் கடைசியில் திருமணம் நின்று போயிருக்கு”

    “எனக்கும்தான் நிச்சயமாகி கல்யாணம் நின்னு போயிருக்கு”

    “நான் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன். வாலிபக் குமரி நான் காத்திருக்கும் போது, வயதான விதவையை நீங்க நாடுவது முட்டாள்தனம்”

    “பெற்ற தாயை விதவை என்று கேலி செய்கிறாயே”

    “பெற்ற தாயானாலும் விதவை, விதவைதான்! அப்பா இறந்து போனதை எப்படி மறைக்க முடியும்? நான் விதவை என்று சொல்லா விட்டாலும், உங்க அப்பா சொல்வார்! உங்க அம்மா சொல்வாள்! உங்க தங்கை சொல்வாள்! உங்க ஊரார், உற்றார் எல்லாரும் சொல்வார்! அப்படிப் பழிப்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?”

    “தாங்கிக் கொள்ள முடியும். நான் உன் தாயை மணக்க வாக்குக் கொடுத்து விட்டேன்”

    “தாயை மணந்து, மகளைப் பிரிக்க முடிவு செய்து விட்டீங்க! உண்ட வீட்டுக்கு இரண்டகமா?”

    “நான் அப்படி வஞ்சகம் செய்ய நினைக்கவில்லை!”

    “தம்பதிகளாய் என் தாயும், என்னைக் கவர்ந்தவனும் அடுத்த அறையில் ஒன்றாய் இருப்பதை எப்படி என்னால் தாங்கிக் கொள்ள முடியும்?”

    “தாங்கிக் கொள்ள முடியாதுதான். தனியாக இருக்கும் உன் தாய் மறுபடியும் குடும்ப மாதாய் வாழப் போவதில் உனக்கு அக்கறை இல்லையா?”

    “அக்கறை இருக்கு. ஆனால் நீங்க அம்மாவுக்குச் சொந்தம் இல்லே! எனக்குத்தான் சொந்தம்! முதலில் உங்களைக் கண்டு பிடித்தவளே நான்தான்! என் தாய் உங்களைக் களவாடி விட்டாள்!”

    “இல்லை! பார்த்த முதல் நாளே நான்தான் புனிதாவை நாடியவன்! போகப் போக புனிதாவுக்கும் என்னைப் பிடித்து விட்டது!”

    “ஒரு பெரிய கைம்மாறை எதிர்பார்த்துத்தான், உங்க தங்கை திருமணத்துக்கு அம்மா பண முடிப்பைக் கொடுத்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையா?”

    “பண முடிப்பைத் தருவதற்கு முன்பே, எனக்கு புனிதா மேல் விருப்பம் இருந்தது. பண முடிப்பைத் தராமல் போயிருந்தாலும், புனிதாவை மணக்கத் தயாராக இருந்தேன்”

    அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு, சித்ரா வாயடங்கிப் போனாள். புனிதா விரைவாக மாடிக்கு ஏறி வந்தாள்.

    “நீங்க இரண்டு பேரும் போடுற சத்தம் வீதியிலே கேட்குது. என்ன ஆச்சு? ஏன் சண்டை போடுறீங்க?”

    “அம்மா! இவர் இந்த வீட்டுலே இனிமேல் இருந்தால் நான் கண்ணியமா வாழ முடியாது. வாடகை ஒப்பந்தத்தை முறிச்சி, இவரை வெளியே அனுப்புங்க. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வஞ்சக மனிதர் இவர். இவர் இன்னும் இங்கே இருந்தா, நான் நிம்மதியா வாழ முடியாது”

    “சித்ரா! ஏன் அப்படிச் சொல்றே? என்னாச்சு?”

    “அம்மா! இவர் ஒழுக்கம் கெட்ட மனிதர். இவரை நம்ம வீட்டறையில் வச்சதே தப்பு. முன்பே எனக்கு இவரைப் பத்தி தெரியாம போச்சு!”.

    “என்ன நடந்ததென்னு சொல்லு, சித்ரா” புனிதாவின் உடம்பு நடுங்கியது!

    “என்னைத் தொடக்கூடாத இடத்தில் தொட்டு வசப்படுத்த வந்தார்.” சிவாவின் நெஞ்சில் சம்மட்டி அடி விழுந்தது!

    புனிதா பேரதிர்ச்சி அடைந்தாள்! சிவாவின் தலை சுற்றியது! புனிதா தடதட வென்று படிகளில் இறங்கிக் கீழே தன் அறைக்கு ஓடினாள். படுக்கைக் கீழே ஓடிக் கொண்டிருந்த டேப் ரெக்காடரை நிறுத்தி, ரிவைண்டு செய்து, மாடியில் நடந்த உரையாடல்களை எல்லாம் துடிப்போடு கேட்டாள். அவளுக்கு உண்மை தெரிந்தது.

    தாயும் மகளும் மராட்டிய மொழியில் நள்ளிரவு வரைச் சண்டை போட்ட சத்தம் மட்டும் சிவாவுக்குக் கேட்டது. பிறகு சட்டென எல்லாம் அடங்கி விட்டது. அன்று இரவு மூவரும் தூங்கவே இல்லை.

    காயிலே புளிப்ப தென்ன! கனியானால் இனிப்ப தென்ன!

    மறுநாள் காலையில் சாப்பிட வந்த சிவா புனிதாவை அடுப்பறையில் சந்தித்தான். அவன் புனிதாவின் கண்களை நேராகக் காண முடியவில்லை.

    “மிஸ் புனிதா! நான் இனியும் இந்த வீட்டு மாடியில் குடியிருப்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. என்னால் உங்கள் இருவருக்கும் பகைமை உண்டாகி விட்டது! இந்த வீட்டில் எப்போது என்ன நடக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. தாயும் மகளும் சண்டையிடுவதை என்னால் தாங்க முடியாது! வேறொரு இடத்துக்கு போவதாக முடிவு செய்து விட்டேன்”

    “நீங்க எதற்காக வேறிடம் பார்க்கணும்? எங்கும் போக வேண்டாம். நேற்று மாடியில் என்ன பேச்சுக்கள் நடந்தன என்பதெல்லாம் எனக்குத் தெரியும். உங்களை இழந்து என்னால் இனி வாழ முடியாது. மன்னிக்க வேணும் என்னை. உங்களுக்கும் சித்ராவுக்கும் தெரியாமல், மாடி உரையாடல்களை எல்லாம், கீழே என் அறைப் டேப் ரெக்காடரில் பதிவு செய்து வந்தேன். நான் அப்படிச் செய்தது தப்புதான். முன்னும் பின்னும் தெரியாத ஆண் லெக்சரரை சித்ரா வாடகை அறைக்கு அழைத்து வந்தது, முதல் காரணம். மாடி அறையில் ஒரு வாலிபர் வசிக்க, வயசுப் பெண் வீட்டில் வாழ்ந்து கொண்டு வருவது அடுத்த காரணம். கல்லூரியில் சித்ராவுக்கு லெக்சரராக இருந்து, வீட்டில் அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது மூன்றாவது காரணம். பஞ்சையும், நெருப்பையும் எப்படி நாள் முழுவதும் கண்காணித்து வருவது? நாம் மூவரும் கல்லூரிக்குத் தினம் போய் வந்தாலும், மூவரும் வீடு திரும்பும் நேரம் வேறாவது அடுத்த காரணம். முற்றிலும் அன்னியன் நீங்கள்! சித்ரா பருவ மொட்டு விடும் புதிய பறவை!”

    “மிஸ் புனிதா! தாயான நீங்க டேப் ரெக்காடரில் பதிவு செய்ததைத் தப்பென்று நான் சொல்ல மாட்டேன்”

    “போன ஒரு சமயம் நடந்த சினிமா சண்டையில் உங்க உத்தம குணத்தைக் கண்டேன். நேற்றைய உரையாடல்களைக் கேட்ட பின்பு, பெண்களிடம் ஒழுக்கமுள்ள இப்படிப்பட்ட ஓர் ஆடவனைக் கணவனாக ஏற்கப் போகிறோம் எனப் பேரானந்தம் அடைந்தேன். நான் பண்ணியது சரியோ, தப்போ உண்மையில் இந்த டேப் ரெக்காடர்தான் ஓர் உத்தமனைக் கண்டு பிடித்துத் தந்தது. இல்லா விட்டால் சித்ரா குற்றச் சாட்டை நம்பி, ஒரு அப்பாவி மனிதனை வீட்டை விட்டுத் துரத்தி இருப்பேன்!”

    “மிஸ் புனிதா, உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது?”

    “மாடியில் நீங்க பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டுவது, கீழே என் காதில் விழுந்தது. நீங்க பயப்படாமல் நிம்மதியாக மாடியில் தங்கலாம்…… முதலில் உட்கார்ந்து இந்த காபியைக் குடியுங்க, இட்லி தயாராகிறது” என்று குழைந்தாள், புனிதா. அப்போது உள்ளே நுழைந்தாள் சித்ரா.

    “அம்மா! வீட்டை விட்டு இவரை நான் போகச் சொல்லும் போது, நீங்க காபி கொடுத்து உபசரிப்பதா?”

    “சித்ரா! வாயை மூடு! சிவா மாடியைக் காலி செய்ய வேண்டியதில்லை. அவர் இந்த வீட்டில்தான் நிரந்தரமாகத் தங்கப் போகிறார்”

    “சிவா சொன்ன தெல்லாம் உண்மைதானா? அம்மா வாலிபக் குமரி நான் வீட்டில் இருக்கும் போது, இந்த வயசிலே இன்னொரு விவாகம் நீங்க செய்யப் போறீங்களா?”

    “ஆம் சித்ரா. நாற்பது வயதில் நான் மூப்பு அடையவில்லை. நான் இரண்டாம் விவாகம் செய்யப் போறது உண்மை”

    “அம்மா! அவரை நான் திருமணம் செய்ய விரும்புறேன். நீங்க எனக்குப் போட்டியாக வருவது சரியா! கல்லூரியில் அவரை முதலில் சந்தித்த போதே நான் செய்த முடிவு அது”

    “சித்ரா! நீ ஒரு மராட்டிய வாலிபனை மணம் புரிவதையே நான் விரும்புறேன். நீ சின்னஞ் சிறியவள். உன் வயதை விட சிவாவின் வயசு இரண்டு மடங்கு! வயதுப் பொருத்தம் இல்லாததால் மனப் பொருத்தம் ஏற்படாது. உன் வயசுக்குத் தகுந்த வாலிபனை நீ மணம் புரிவதுதான் ஏற்றது”.

    “வீட்டில் நான் இருக்கும் போது, நீங்க இவருடன் வாழ விரும்புவது சரியா? இவரை மணம் புரியக் கனவு கண்ட பின் அப்பா இடத்தில் அமர்த்திப் பார்க்க என்னால் முடிய வில்லை!”

    “சித்ரா! உன் மனப் போராட்டம் எனக்குப் புரியுது. உனக்குத் திருமணம் ஆகும் நேரம் இன்னும் வரவில்லை. அதுவரை வாழாமல் நான் தனிமையில் சாக வேண்டுமா? வாழ விரும்புறேன் நான். உனது திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. நீ சிவாவை மறந்து விடு”

    “உங்க லாஜிக் எனக்குப் புரியவில்லை. உங்க இரண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க என்னால் முடியாது” என்று கூறி அழுகையுடன் வெளியே போய் விட்டாள், சித்ரா.

    முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாய் இருக்க முடியும்!

    சற்று மௌனமாக இருந்த பிறகு புனிதா சிவாவிடம் பேச ஆரம்பித்தாள்.

    “சித்ராவை உடன்படச் செய்வது சிரமான காரியம்தான். அதைக் கையாளுவது என் பொறுப்பு. உங்க அப்பா, அம்மாவை எப்படிக் கையாளப் போறீங்க” என்று புனிதா கேட்டாள். சிவா பையிலிருந்து தன் தந்தை கடிதத்தையும், தான் அதற்கு எழுதிய பதில் கடிதத்தின் நகலையும் படிக்க அவளிடம் கொடுத்தான்.

    சிரஞ்சீவிச் செல்வன் சிவகுருநாதனுக்கு,

    தங்கையின் திருமணத்துக்குப் பிறகு இப்படி ஒரு புரட்சி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மராட்டியம்மா பண முடிப்பை நமக்குத் தந்ததே ஒரு பெரு வெகுமதியைத் தனக்கு நாடித்தான் என்பது எங்களுக்குத் தெரியாமல் போனது. நாற்பது வயதுவரைப் பொறுத்து, நாங்கள் கொண்டு வந்த நல்ல பெண்களை எல்லாம் உதறித் தள்ளி, போயும் போயும் வாலிப பெண்ணிருக்கும் ஒரு விதவைத் தாயை, நீ விவாகம் செய்ய விரும்புவது கேலிக் கூத்தாக தெரிகிறது. மேலும் அது எங்களுக்கு அவமானமாகவும் இருக்கிறது.

    இந்தத் திருமணம் நடந்தால் நானும் உன் அம்மாவும் அதில் பங்கு கொள்ள மாட்டோம். எங்களுக்கு கல்யாண அழைப்பிதழ் அனுப்ப வேண்டாம். ஆசீர்வாதத்தை வேண்டி நீங்கள் இந்த வீட்டு வாசலில் கால் எடுத்து வைப்பதையும் நாங்கள் விரும்பவில்லை. அது போல் நாங்களும் அங்கு வந்து உங்கள் இருவரது முகத்தில் விழிக்கப் போவதில்லை.

    தங்கை திருமணம் முடியப் பணம் கொடுத்து உதவிய மராட்டியம்மாவுக்கு எங்கள் உளங்கனிந்த நன்றி.

    அன்பு மறவாத அப்பா,
    வேலுச்சாமி

    கடிதத்தைப் படித்த புனிதாவின் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.

    “உங்க அப்பா நல்ல மனதுடையவர். ஊருக்கும், உற்றாருக்கும் அவர் பயப்படுவது எனக்குப் புரிகிறது. நான் செய்த பண உதவிக்கு அவர் நன்றி தெரிவிப்பது, என் உள்ளத்தைத் தொடுகிறது. அடுத்து அவன் எழுதிய பதிலைப் படிக்கத் தொடங்கினாள்.

    அன்புள்ள அப்பாவுக்கு,

    வணக்கமுடன் சிவா எழுதியது. மிஸ். புனிதாவின் கனிவான அன்பும், மேலான பண்பும் முதல் சந்திப்பிலே என்னைக் கவர்ந்து விட்டது உண்மைதான்! பண முடிப்பு தருவதற்கு முன்பே நாளுக்கு நாள் புனிதாவின் மேல் பற்றும் நாட்டமும் எனக்கு மிகுந்தது. எப்படி என் விருப்பத்தை மிஸ். புனிதாவிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் திண்டாடி இருக்கிறேன்! அதற்கு ஒரு நல்ல வழி பிறந்தது. இப்படிப் பட்ட மாதர் குல மாணிக்கம் எனக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே!

    எங்கள் இருவரது விவாகத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதே எங்கள் மனமார்ந்த ஆசை. உங்கள் இருவரது அன்பான ஆசிகள் எங்கள் இல்வாழ்வுக்கு ஆணிவேர் போன்றது.

    உங்கள் நலம் நாடும்,
    சிவகுரு நாதன்.

    “உங்க பதிலை படித்த பிறகு எனக்கு அச்சம் குறைந்து ஊக்கம் அதிகமாகுது”

    “இந்த வரவேற்பை நான் எதிர்பார்த்ததுதான்! வருத்தமாகத்தான் இருக்கிறது! யாரும் பின்பற்றாத புதுப் பாதையில் போகும் போது, முள்ளும், கல்லும் குத்தும். தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். இந்த எதிர்ப்புக்குப் பரிகாரம் நாம் திருமணம் செய்து கொள்வதே! அவர்கள் வாழப் போவது இன்னும் கொஞ்ச காலம்! அதற்காக நமது நீண்ட பயணத்தை நிறுத்த வேண்டாம்! அலைகளுக்குப் பயந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது! அஞ்சிக் கொண்டு கரையிலே வாழ்நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கலாம்! நமது தனிமையின் கொடுமை நீங்கட்டும்! இந்த நல்ல காரியத்தைச் செய்ய என் மனம் துடிக்குது!”

    “துணிச்சலான ஆண்பிள்ளை நீங்க! நோய்வாய்ப் பட்ட பெற்றோர்களை எப்படி கண்காணிக்கப் போறீங்க?”

    “தங்கை இருக்கிறாள். நான் பணத்தை அனுப்பி அவள் மூலமாகக் கவனித்துக் கொள்வேன்”.

    “சித்ராவின் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை எனக்கு”

    “எளிய முறையில் நாம் பதிவுத் திருமணம் செய்து கொள்ளுவோமா”

    “அதைத்தான் நானும் விரும்புகிறேன்” என்றாள் புனிதா.

    “நாம் தேதியைக் குறித்ததும், அப்பாவுக்கு அடுத்த கடிதம் போடுறேன்” என்று கூறி எழுந்து சென்றான் சிவா.

    பூணும் அணி நீ எனக்கு! புது வயிரம் நான் உனக்கு!

    அடுத்த பத்து தினங்களில் கோயமுத்தூர் பதிவுத் திருமண செயலகத்தில் புனிதா குல்கர்னி, சிவகுருநாதன் இருவரும் தம்பதிகள் ஆனார்கள். பதிவுப் புத்தகத்தில் எழுதும் போது புனிதா குல்கர்னி சிவகுருநாதன் என்று கையெழுத்திட்டாள் புனிதா. அங்கே வருகை தந்தவரை எண்ணி விடலாம். சிவாவின் தங்கை, தங்கையின் கணவர் இருவர் மட்டும் சிவா வழியில் வந்தனர். புனிதா வழியில் வருவதாக இருந்த சித்ரா வரவில்லை. புனிதாவின் பெற்றோர் ஆசிகள் மட்டும் தந்தியில் வந்தது. புனிதாவின் தங்கை வர வில்லை. நிர்மலாக் கல்லூரியின் பிரின்சிபால் உஷா நாயர், மற்றும் சில ஆசிரியைகள் வந்திருந்தனர். மகளை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்திருந்த புனிதா அவள் வராமல் போகவே, மிக்க ஏமாற்றமும், வருத்தமும் அடைந்தாள்.

    தம்பதிகளாய் கதவைத் திறந்து வீட்டுக்குள் இருவரும் நுழைந்ததும் சிவாவின் கண்களில் பட்டது, முன் அறையில் பளிச்செனத் தொங்கிய காப்டன் ஆனந்த் குல்கர்னியின் படம் நீக்கப் பட்டு, அந்த இடத்தில் ரவிவர்மாவின் கலைமகள், திருமகள் ஓவியங்கள் அலங்கரித்தன! புனிதாவின் கண்ணில் பட்டவை, தரையில் கிடந்த இரண்டு கடிதங்கள்! ஒரு கடிதம் புனிதாவுக்கு. அடுத்து ஒரு கடிதம் சிவாவுக்கு. இருவரும் உடனே வேகமாக உறையைக் கிழித்துப் படித்தார்கள்.

    அன்புள்ள அம்மா,

    நான் முட்டாள்தனமாக கண் காணாத ஓர் இடத்துக்கு ஓடிப் போக வில்லை. பூனேயில் இருக்கும் சித்தி வீட்டுக்குப் போகிறேன். சில வருசங்கள் தங்கி அங்கிருந்து என் படிப்பைத் தொடர்வேன்.

    உங்கள் இரண்டாம் கல்யாணத்தில் முன்னின்று பங்கு கொள்ள என் மனம் இடம் தரவில்லை. அப்பா இருந்த இடத்தை, நான் விரும்பிய ஒருவர் எடுத்துக் கொள்வதை என் மனம் ஒப்ப வில்லை. நீங்கள் இருவரும் உண்டாக்கிய இந்த ஆறாப் புண் எப்போது ஆறுமோ எனக்குத் தெரியாது. என்றாவது ஒரு நாள் புண் ஆறினால், அன்று உங்களைக் காண வருவேன். சில வருசங்களுக்கு உங்கள் இருவரது முகத்திலும், நான் விழிக்கப் போவதில்லை.

    பிரளயம் ஏற்பட்ட பிறகு அந்த வீட்டில் யாராவது இருவர்தான் வாழலாம்! நாம் மூவரும் இனிமேல் அங்கு நிம்மதியாக வசிக்க முடியாது!

    அன்பு மகள்,
    சித்ரா

    அன்புணராத குருவே,

    உங்களைப் பற்றி அம்மாவிடம் அசிங்கமாகப் பேசி அவமானப் படுத்தியதுக்கு மன்னிக்கவும். அப்படி எல்லாம் அவதூறாய்ப் பேசி அம்மாவிடமிருந்து உங்களைப் பிரித்து விடலாம் என்று நான் முயன்றது பலிக்காமல் போனது. நீங்களும் நானும் இணைந்து வாழும் பாக்கியத்தை என் தாய் பறித்துக் கொண்டாள் என்பதை என்னால் தாங்க முடிய வில்லை. ஆண்களில் உயர்ந்த ரகம் நீங்கள். உண்மையாக என் அம்மா ஓர் அதிர்ஷ்டசாலி.

    அபாக்கியவதி,
    சித்ரா

    பாயும் ஒளி நீ எனக்கு! பார்க்கும் விழி நான் உனக்கு!

    கடிதத்தைப் படித்ததும் புனிதாவின் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டு வந்தது. அவளது உள்ளத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு நிறைவு உதய மானது. புனிதா சிவாவின் அருகில் நெருங்கி வந்தாள்.

    “கண்ணே! உன் வாழ்வில் ஒரு கதவு மூடி, இன்னொரு கதவு திறந்திருக்கிறது! ஒரு உறவு கிடைத்து, இன்னொரு உறவு பிரிந்து போகிறது! கடவுள் நமக்கு ஒன்றைக் கொடுக்கும் போது, இன்னொன்றை ஏனோ எடுத்துக் கொள்கிறார்! ஆகவே ஒன்றை நாம் அடைந்தால், இன்னொன்றை இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும்! புனிதா! நமது புதிய உறவைப் பிரிக்கப் பிரச்சனைகள் கிளம்புகின்றன! நாமிருவரும் இப்போதான் இணைந்து போராட வேணும்” என்று சொல்லிக் கொண்டே புனிதாவின் கண்ணீரைத் துடைத்து அவளைத் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான் சிவா.

    ++++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) [Dec 3, 2008]
    Share
  • ஆதிரையின் தீர்மானம்

    மேகலா இராமமூர்த்தி

    பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஆதிரை தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அது நேரம் காலை 8:30 எனக் காட்டியது. “என்ன இது? எப்போதும் 8:25-க்கே வர்ற பஸ்ஸை இன்னும் காணலையே…? காலேஜ் போக லேட்டாயிடும் போலருக்கே….ப்ரொஃபசரே லேட்டாப் போனா ஸ்டூடெண்ட்ஸ்  என்ன நினைப்பாங்க” என்று யோசித்தவாறே நின்றிருந்தாள். நல்ல வேளை! அவளுடைய பொறுமையை மேலும் சோதிக்காமல் அந்தப் பேருந்து வந்து சேர்ந்தது. அவள் விரும்பியபடி ஜன்னலோர இருக்கையே கிடைத்ததால் மகிழ்ச்சியோடு அங்கு சென்று அமர்ந்தாள். சில்லென்ற குளிர்ந்தகாற்று அவள் முகத்தைத் தாக்கி அவளுடைய சுருண்ட கூந்தலை அலைபாய வைத்தது.

    கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்தாள். காலையில் கல்லூரிக்குக் கிளம்பும்முன் தன் தாய் சொன்ன வார்த்தைகள் அவள் காதில் திரும்பவும் ஒலித்தன. “அம்மா….ஆதிரை! இன்னிக்கு மத்தியானம் மூணு மணிக்கு ஒன்னப் பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க..அதனால அரை நாள் லீவு சொல்லிட்டு, மதியம் ஒண்ணு, ஒண்ணரை மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடும்மா…ப்ளீஸ்..!, இன்னைக்கு ஒரு நாள் முழுசா லீவு போடுன்னு சொல்றேன் கேக்க மாட்டேங்கறே” என்றாள். மேலும் தொடர்ந்து,”ம்…ம்…! இந்த எடமாவது அமைஞ்சாத் தேவலை..எத்தன நாளைக்கு பொம்பளப் புள்ளைய வீட்டுல வெச்சுக்கறது…” என்று பேசிக் கொண்டே போனாள். தன் தாயின் பேச்சுக்கள் ஒன்றுமே ஆதிரைக்குப் பிடிக்கவில்லை என்றாலும் தான் ஏதாவது சொன்னால் தாயின் மனம் புண்படும் எனக்கருதி அமைதி காத்தாள்.

    ”பாப்பா..! டிக்கெட் இந்தாம்மா! ஏதோ பலமான யோசனையில இருக்கற மாதிரி தெரியுது” என்றபடி பேருந்தின் நடத்துநர் அவள் கையில் டிக்கெட்டைத் திணித்தார். தினமும் இதே பேருந்தில் செல்வதனால் அதில் வேலைசெய்யும் நடத்துநர்கள் அனைவருமே ஆதிரைக்கு அறிமுகமானவர்கள் தாம். நடத்துநரின் கேள்விக்குப் புன்னகையையே பதிலாகத் தந்துவிட்டு டிக்கெட்டிற்கான பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு டிக்கெட்டைப் கைப்பையில் பத்திரப்படுத்தினாள் ஆதிரை.

    சம்பவங்களைத் தொடர்வதற்கு முன் கதாநாயகியைப் பற்றி வாசகர்களுக்கு ஓர் சிறிய அறிமுகம்.

    நம் கதையின் நாயகி, மார்கழி மாதம் நிறைந்த பௌர்ணமித் திதியில் வரும் திருவாதிரைத் திருநாளில் அவதரித்ததால்……ஸாரி..பிறந்ததினால் அவளுக்கு  ஆதிரை என்று பெயரிட்டு அன்பும், அறிவும் ஊட்டி வளர்த்து வந்தனர் அவள் பெற்றோர். அழகிய முகவெட்டும், துறுதுறுவென்ற கண்களும், நீண்ட, சுருண்ட கார்கூந்தலும், அளவான உயரமும், அதிக வெளுப்போ, கருப்போ இல்லாத மாந்தளிர் வண்ணமும் கொண்ட அவளை அழகியாக ஒப்புக்கொள்வதில் யாருக்கும் தயக்கம் இருக்காது.

    மிகச் சிறந்த தமிழறிஞராகிய அவள் தந்தை ’எழிலரசன்’ அவளுக்குச் சிறுவயதிலேயே தொல்காப்பியம், திருக்குறள், பகுத்தறிவுச் சிந்தனைகள் எனப் பலவற்றையும் ஊட்டி அவளின் அறிவை வளப்படுத்தி ’அழகிருக்கும் இடத்தில் அறிவிருக்காது’ என்ற பொதுவான கருத்தைப் பொய்யாக்கினார். இவ்வாறு ஆதிரை நாளொரு விளையாட்டும் பொழுதொரு குதூகலமுமாகத் தன் பள்ளிப் பருவத்தை இன்பமாய்க் கழித்தாள். கல்லூரிப் பருவமும் களிப்புடனேதான் சென்றது.

    கணினி அறிவியல் படித்தால் தான் எதிர்காலம் என்ற மாயை எழுந்த காரணத்தால் அவளும் கணினியிலேயே உயர்கல்வி பயின்றாள். இதோ… இப்போது ஓர் தனியார்க் கல்லூரியில் கணிப்பொறித்துறையில் விரிவுரையாளராய்ப் பணியாற்றுகின்றாள்.

    நடிகர் வடிவேலு சொல்வதுபோல் “எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டிருந்திச்சு” ஆதிரைக்குக் திருமணப் பருவம் வரும்வரை. இப்போதோ….வீட்டில் ஆதிரையின் தாய் எப்போது பார்த்தாலும் தன் மகளின் திருமணத்தைப் பற்றியே பேசுகின்றாள். இவள் வயதொத்த பெண்களில் யாருக்காவது திருமணம் என்று வீட்டிற்குப் பத்திரிகை வந்துவிட்டால் போதும்….தன் மகளுக்கு இன்னும் திருமணம் கூடிவரவில்லையே எனப் புலம்ப ஆரம்பித்து விடுகின்றாள். ஆனால், இந்தப் புலம்பலையெல்லாம் ஆதிரை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

    திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு வரமா? சாபமா? என்று திருமணமாகித் தன் அடையாளத்தைத் தொலைத்த பல பெண்களைப் பார்க்கும்போதும் ஆதிரை எண்ணமிடுவாள். தன் தாய், தந்தையரும் தன்னை அருமையாக வளர்த்ததை மறந்து இப்போது வேறோர் வீட்டுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்களே என அவள் வருந்துவதுண்டு.

    எல்லாவற்றிற்கும் மேலாகக் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வரும் ‘பெண்பார்க்கும் படலங்கள்’ ஆதிரையின் பொறுமைக்குப் பெரும் சோதனையாகவே இருந்துவருகின்றன. இதுவரை இரண்டு இடங்களிலிருந்து வந்து ஆதிரையைப் பெண் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். சென்றவர்களிடமிருந்து இன்றுவரை எந்த ஒரு தகவலும் இல்லை.

    பெண்பார்க்க வந்துசென்ற இரு பையன்களுமே மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் தாம். முதலில் வந்த பையன் தன் தாய், தந்தை, சகோதரி சகிதம் பெண் பார்க்க வந்திருந்தான். வந்தவன் ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்தான். எல்லாக் கேள்விகளையும் அவன் தாயும், உடன் வந்திருந்த அவன் சகோதரியுமே கேட்டுக் கொண்டிருந்தார்கள் (இதுதான் பெண்ணுரிமையோ!). அவன் தந்தையும் வாய் திறக்கவில்லை.  நல்லவேளையாகச் சாப்பிடும்போது தந்தையும், மகனும் வாய் திறந்தார்கள். வந்தவர்கள் வீட்டை நன்றாகச் சுற்றிப் பார்த்தார்கள். எத்தனை கிரவுண்டு? எப்போது கட்டியது? என்று (வீட்டைப் பற்றிப்) பல உருப்படியான கேள்விகளைக் கேட்டு விடை தெரிந்து கொண்டார்கள் (ஏதோ வீட்டைத்தான் பார்க்க வந்தவர்கள் போல்!). வீட்டின் எளிமையான தோற்றமும், உயர்ந்த பதவியிலிருந்தாலும் வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் மட்டுமே அணிந்து கொண்டிருந்த ஆதிரையின் தந்தை எழிலரசனின் எளிமையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. இந்த வீட்டில் பெண் எடுத்தால் பெரிதாக ஒன்றும் கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டார்களோ என்னவோ!… ஊருக்குச் சென்றவுடன் உறவினர்களைக் கலந்துகொண்டு முடிவு சொல்கிறோம் என்று போனவர்கள் தான். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை.

    அடுத்த மாதத்திலேயே இன்னும் ஒரு குடும்பம் வந்து ஆதிரையைப் பெண் பார்த்து விட்டுச் சென்றது. இந்த முறை மாப்பிள்ளைப் பையனையும் சேர்த்து ஏழெட்டு உருப்படிகள் வந்து இறங்கினர். வந்திருப்பது பெண் பார்ப்பதற்கா.. அல்லது கல்யாண வீட்டில் விருந்து சாப்பிடவா? என்று ஆதிரையின் பெற்றோர் மலைத்தனர். எனினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஆதிரையின் தாய் வழக்கம்போல அவர்களை நன்றாகவே உபசரித்தாள். இந்தப் பையனும் மென்பொருள் பொறியாளனாகவே பணியாற்றுவதாய் ஆதிரை அறிந்தாள். இவனும் ஆதிரையை ஓரக்கண்ணால் பார்ப்பதும், தலைகுனிவதுமாக இருந்தானே தவிர வேறொன்றும் பேசவில்லை; ஒரு முடிவுக்கும் வந்தவனாகவும் தெரியவில்லை. இந்த கேலிக்கூத்தையெல்லாம் பார்த்த ஆதிரைக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது. “ஏன்டா, பொண்ணப் பிடிச்சிருக்கா…இல்லையாங்கறத இப்பவே சொல்லேன்டா…ஏன் தலயக் குனிஞ்சுகிட்டு ஒக்காந்திருக்க…..கோழை” என்று தனக்குள் திட்டித் தீர்த்தாள்.

    இப்படிச் சமீபத்தில் நடந்த (அவளுக்குப் பிடித்தமில்லாத) நிகழ்ச்சிகள் பலவற்றை அவள் மனது பேருந்தில் அமர்ந்து கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தபோது ‘ரீப்ளே’ செய்து கொண்டிருந்தது. அப்போது யாரோ தன் தோளைத் தொடவும், ஆதிரை தன் நினைவலைகளிலிருந்து மீண்டு நனவுலகிற்கு வந்து, யாரென்று நிமிர்ந்து பார்த்தாள். மேடம் …நாம எறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்திடுச்சு…நீங்க எறங்கலியா?” என்று தன்னிடம் படிக்கும் மாணவி ஒருத்தி கேட்கவும் விரைவாகப் பேருந்தை விட்டு இறங்கிக் கல்லூரி நோக்கி நடந்தாள்.

    கல்லூரியில், ஸ்டாஃப் ரூமில் அமர்ந்து மாணவி ஒருத்தியின் வினாத்தாளைத் திருத்திக் கொண்டிருந்த ஆதிரை, தன் அலைபேசி சிணுங்குவதைக் கண்டு அதனை எடுத்துப் பார்த்தாள். அது தன் தாய்தான் என்பதனை அறிந்து….. பழைய புராணத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போகிறாளே என்ற சலிப்போடு, ”ஹலோ!” என்றாள். எதிர்முனையில் ஆதிரையின் தாய் பதட்டத்தோடு பேசினாள்”, அம்மாடி ஆதிரை.! இன்னைக்கு மாப்பிள்ள வீட்டுக்காரங்க ஏற்கனவே சொன்ன நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னாடியே நம்ம வீட்டுக்கு வராங்களாம். அப்படிப்பாத்தா.. மத்தியானம் ரெண்டு மணிக்கெல்லாம் நம்ம வீட்டுல இருப்பாங்க….இப்ப பாத்து நீ காலேஜ் பசங்களுக்கு டெஸ்ட் குடுக்கணும்னு சொல்லிட்டு அங்க போய் ஒக்காந்திருக்கியேம்மா? கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு? எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல. உடனே கெளம்பி வாம்மா. இப்பவே மணி 11:30 ஆகுது. ஒங்க அப்பாவுக்கும் ஃபோன் பண்ணிச் சொல்லியிருக்கேன். ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்குது, இருந்தாலும், அத கான்சல் பண்ணிட்டு ஒண்ணரை மணிக்கே வீட்டுக்கு வந்துடறேன்னு சொல்லிட்டார்…..” என்று பட படவெனப் பொரிந்து கொட்டினாள்.

    அம்மாவை நினைக்கையில் ஆதிரைக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்தப் ”பெண்பார்க்கும் படலங்களும்” அதனால் பெண் வீட்டார்க்கு ஏற்படும் மன உளைச்சலும், செலவுகளும் கொஞ்சமா…நஞ்சமா? இதனை ஏன் ஆண் பிள்ளையைப் பெற்றவர்கள் உணர்வதில்லை?

    என்னதான் சமதர்மம், சமநீதி என்று ’மைக்’ பிடித்துக்கொண்டு தொண்டை கிழியக் கத்தினாலும் நடைமுறையில் அவை சாத்தியம் இல்லாமலே போவதேன்? ஒரே செயலுக்கான அணுகுமுறையும், அளவுகோலும் ஆணுக்கொன்றாகவும், பெண்ணுக்கொன்றாகவும்தானே இன்றுவரை இருந்துவருகின்றது….என்று சிந்தனைவலை மீண்டும் மனத்தில் கூடுகட்ட ஆரம்பிக்க…அந்தச் சிந்தனையைக் கலைத்து, ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்று முடிவெடுத்து எழுந்தாள் ஆதிரை.

    அரை நாள் விடுப்புக் கடிதம் (leave letter) ஒன்றை எழுதிமுடித்து, பிரின்சிபால் இருக்கும் அறைக்குச் சென்று அவரிடம் நீட்டினாள். நல்ல வேளையாக அவரும் தேவையற்ற கேள்விகள் எதனையும் கேட்காமல் ஆதிரையைப் போக அனுமதித்தார். நல்ல சூடிகையான பெண் என்று அவளிடம் அவருக்குப் எப்போதும் பிரியம் உண்டு.

    மீண்டும் வீடு நோக்கிய தன் பேருந்துப் பயணத்தைத் தொடங்கிய ஆதிரை ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தவளாக பேருந்தை விட்டு இறங்கினாள். மாப்பிளை வீட்டாருக்கு இனியும் தன் தாய் ”சொஜ்ஜி, பஜ்ஜி உபசரணைகள்” செய்துகொண்டிருக்க வேண்டாம் என்று எண்ணமிட்டபடி வீடு நோக்கி நடந்தாள். ஆதிரை வாசல் கேட்டைத் திறக்கவும், அவள் தாய் அவளை நோக்கி விரைவாக வந்து, ”வாம்மா…! சீக்கிரம் சாப்பிட்டுட்டு ரெடியாயிடு, அவங்கல்லாம் வந்துடுவாங்க…லேட் பண்ணாதே” என்று கெஞ்சும் குரலில் கூறினாள்.

    தன் தாயின் முகம் வியர்த்திருப்பதைப் பார்த்த ஆதிரை, அம்மா வழக்கம் போல மாப்பிள்ளை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய டிபன் உபசாரங்களுக்காகத்தான் இப்படி வியர்க்க விறுவிறுக்க உழைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதையறிந்து, ”சரிம்மா, இதோ சாப்பிடறேன்” என்று சொல்லி உடனே போய்ச் சாப்பிட உட்கார்ந்தாள். ”இந்தா…இந்த கேசரி எப்படியிருக்குன்னு கொஞ்சம் டேஸ்ட் பாத்துச்சொல்லு!” என்ற தாயின் வேண்டுகோளை நிராகரித்து…..”எல்லாம் நல்லாத்தான் செஞ்சிருப்பீங்கம்மா…உங்க சமையல் திறமையப் பத்தி இனிமேதான் நான் புதுசாத் தெரிஞ்சுக்கணுமா என்ன?” என்று கேட்டுவிட்டு, “நம்ம வீட்டுக் கேசரி ருசிக்காக யாரும் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறதில்ல… அவங்களோட எதிர்பார்ப்பு என்னங்கறது அவங்களுக்குத் தானே தெரியும்” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டு உணவினை உண்டு முடித்தாள்.

    வழக்கம்போல் தன்னை மிகவும் எளிமையாகவே அலங்கரித்துக் கொண்ட ஆதிரை கண்ணாடிமுன் போய் நின்றாள். அப்போது அவள் மனதிற்குள்ளிருந்து ஒரு குரல்.. ”ஆதிரை! இப்படிப் ’பெண்பார்க்கும் படலத்திற்காக’ நீ அரிதாரம் பூசிக்கொள்வதும், அன்ன நடை நடப்பதும் இதுவே கடைசி முறையாயிருக்கட்டும்” என்று ஒலித்து மறைந்தது.

    பிற்பகல் மணி 2:30. மாப்பிள்ளை வீட்டார் இன்னும் வரவில்லையே என்று ஆதிரையின் தந்தை வாசலுக்குச் செல்வதும் உள்ளே வருவதுமாக இருந்தார். வீட்டில் எல்லாருடைய இதயங்களும் ஏதோ ஓர் பரபரப்பினாலும், சிறிது பயத்தினாலும் வழக்கத்தை விடச் சற்று வேகமாகவே துடித்தன. நல்லவேளை….அதற்கு மேலும் தாமதம் செய்யாமல் 2:45 மணி வாக்கில் மாப்பிள்ளை வீட்டார் வீட்டினுள் நுழைந்தனர்.

    தன் தாயும் தந்தையும் அவர்களை விழுந்து விழுந்து உபசரிப்பதும், தங்கள் தாமதத்திற்குத் தாங்கள் வந்த பேருந்துதான் காரணம் என்று வந்தவர்கள் கூறிக்கொண்டிருந்ததும் தனியறையில் அமர்ந்திருந்த ஆதிரையின் காதிலும் விழவே செய்தது.

    சம்பிரதாயமான உரையாடல்கள் முடிந்தபின் ஆதிரையின் தாய் அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து ஆதிரையை பார்த்து “வாம்மா! அவங்கல்லாம் உன்னப் பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்றாள். இப்போது ஆதிரைக்கும் சற்று பதட்டமாகத்தான் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே வந்து மாப்பிள்ளை வீட்டாரை நிமிர்ந்து பார்த்து ஓர் செயற்கைப் புன்னகை உதிர்த்தாள்.

    மாப்பிள்ளைப் பையனின் அம்மா ஆதிரையை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து, ”வாம்மா…வந்து என் பக்கத்துல ஒக்காரு” என்று அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டாள். விலையுயர்ந்த பட்டுப் புடைவையும், முழங்கை வரையில் குலுங்கிய தங்க வளையல்களும், கழுத்தில் ஜொலித்த கல் நெக்லஸுமாகத் தன்னை ஓர் மணமகள்போல் அலங்கரித்துக் கொண்டுவந்திருந்தாள் பையனின் அம்மா. அரக்கு நிற க்ரேப் சில்க் புடைவையும், கழுத்தில் ஒரே ஒரு சங்கிலியும் அணிந்திருந்த ஆதிரையைக் கண்டதும் அவள் முகத்தில் அவ்வளவாக மலர்ச்சியில்லாததை ஆதிரை கவனிக்கத் தவறவில்லை.

    அந்த அம்மாள் பின்பு மெதுவாக ஆதிரையைப் பார்த்து “எங்கம்மா வேல செய்யற? என்ன சம்பளம்?” என்று கேள்விகளை ஒவ்வொன்றாக வீசினாள். ஆதிரையும் எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டு வந்தாள். பின்பு தன்னுடைய தாய்”, பையன் எந்தக் கம்பனியில (company) வேலை செய்யறார்?” என்று கேட்ட கேள்விக்குப் பையனின் தாயே பதில் சொல்லத் தொடங்கினாள். இன்று பெண்பார்க்க வந்திருக்கும் பையனும் ஒன்றுமே பேசவில்லை. சொல்லிவைத்தாற்போல் இதுவரைத் தன்னைப் பெண்பார்க்க வந்த பையன்களில் ஒருவர் கூடப் பேசாததும், அவர்களின் தாய்மார்களே பேசிக் கொண்டிருந்ததும் ஆதிரைக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒருங்கே அளித்தன.

    “இப்படியே போய்க்கொண்டிருந்தால் பெண்ணும், பையனும் ஒருவர் மனதை மற்றொருவர் அறிவதுதான் எப்படி?” என்று ஆதிரை எண்ணிக்கொண்டிருந்த வேளையில், “சரி! அப்ப நாங்க கெளம்பறோம்….சீக்கிரத்தில ஃபோன்ல தகவல் சொல்றோம்”….என்று பையன் வீட்டார் எழவும்….ஆதிரையும் எழுந்தாள். ”கொஞ்சம் இருங்க…..நீங்க என்னைப் பிடிச்சிருக்கா…இல்லையான்னு ஒரு முடிவும் சொல்லாமலே கெளம்பறீங்களே…?” எனக் கேட்டாள். பையன் வீட்டார் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் விழித்தனர். ஆதிரையின் தாய் உடனே கோபமாக ஆதிரையைப் பார்த்து, ”ஏய்..ஆதிரை என்ன இது அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி…அவங்கதான் ஊருக்குப் போனப்பறம் சொல்றோங்கறாங்கல்ல…பேசாம இரு” என்று அதட்டவும், ஆதிரை சற்று ஆவேசமானாள். ”ஊருக்குப் போய் முடிவு சொல்றதுக்கு இதுல என்னம்மா இருக்கு? பெண்ணை இவங்களும் இவங்க பையனும் பாத்தாச்சு…. பிடிச்சிருக்கா.. இல்லையாங்கறத இப்பவே சொல்ல என்னத் தயக்கம்?” என்று கேட்டுவிட்டுப் பையனைப் பார்த்தாள். அவன் பேந்தப் பேந்த விழித்தபடி ஆதிரையைப் பார்க்க, ஆதிரை நேரடியாகவே அவனைக் கேட்டாள். ”உங்க அம்மா, அப்பா இங்கேயே சொல்ல யோசிக்கிறாங்க போலிருக்கு. நாம இந்தத் தலைமுறை….எல்லா விஷயத்திலேயும் நம்மள மாத்திகிட்டு வர்றோம்….அப்புறம் பெண் பார்க்கும் விஷயத்தில் மட்டும் ஏன் பழைய பஞ்சாங்கமா இருக்கணும்..? உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா….பிடிக்கலையா…? எதுவானாலும் சரி…..உங்க முடிவை இப்பவே சொல்லிடுங்க… வீணா நாளக் கடத்துவானேன்?” என்று அதிரடியாய்க் கேட்க அவன் இவற்றையெல்லாம் எதிர்பார்க்காதவனாய் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தன் தாயின் முகத்தையும், தந்தையின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அவர்களும் இப்படி ஓர் சூழ்நிலையை இதுவரை சந்திக்காத காரணத்தால் சிலையாய் நின்றனர்.

    ஆதிரை தொடர்ந்தாள்….”பெண் பிடிச்சிருக்கா.. இல்லையாங்கறதக் கூடத் தானா சொல்லத் தெரியாம…அதுக்குக்கூட அம்மாவையும், அப்பாவையும் கேக்கற உங்க பையன், எந்த விஷயத்திலும் சொந்தமா முடிவெடுக்கற சக்தியோ, திறமையோ இல்லாதவராத்தான் இருக்கணும். பெண் பாக்க வந்தா சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் ஒருத்தரோடு ஒருத்தர் பேசவும், தங்கள் முடிவைச் சுதந்திரமாச் சொல்லவும் அனுமதிங்க. இனிமேலாவது… பெண் பாக்கப் போற இடத்தில உங்க விருப்பத்தையும், முடிவையும் உடனே சொல்லிப் பெண் வீட்டுக்காரங்களுக்கு ஏற்படற வீணான மன உளைச்சலைத் தவிர்க்கப் பாருங்க…” என்று பேசி முடித்தாள். அவர்கள் பதில் பேசாமல் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு வெளியேறினர்.

    ஆதிரையை எரிப்பது போல் பார்த்தாள் அவள் தாய். ”உனக்கு என்னாச்சு இன்னிக்கு? ஏன் இவ்வளவு அநாகரிகமா நடந்துகிட்டே?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள். ”எதும்மா அநாகரிகம்…? நாகரிகம் எதுன்னு சுட்டிக்காட்டுறதுக்குப் பேரா அநாகரிகம்?” என்று கேட்ட ஆதிரைக்கு இப்போது அவளுடைய அப்பா ஆதரவுக்கரம் நீட்டினார். “ஆதிரை நீ கேட்டதுல எந்த தப்பும் இல்லம்மா. அறிமுகம் இல்லாதவங்க முன்னால ஒரு அலங்கார பொம்மை மாதிரி வந்து நிக்கறதுன்னா.. அது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு சங்கடமான விஷயங்கறது எனக்கு நல்லாப் புரியுதும்மா. அதுலயும் மாட்டோட பல்லப் புடிச்சுப் பாக்கற மாதிரிப் பாத்துட்டு, ஒரு முடிவும் சொல்லாமப் போறதுங்கறது நாகரிகம் இல்லாத நடைமுறையாத்தான் இருந்துட்டு வருது” என்றார்.

    புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி போலச் சிறிது நேரத்திற்குப் பின் ஆதிரையின் வீட்டில் இயல்புநிலை மெல்ல மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தது.

    தன் அறைக்குச் சென்று தான் வழக்கமாகச் செய்யும் கணினி சம்பந்தமான வேலைகளில் மூழ்கிய ஆதிரை, திடீரென்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள். ”அம்மா..அப்பா ரெண்டு பேரும் இங்க உடனே வாங்க” என்று உற்சாகக் குரல் கொடுத்த அவளைக் காணும் ஆவலில் அவளின் தாயும், தந்தையும் அவள் அறைக்கு விரைந்து வந்தனர். ஆதிரை அவர்களைக் கண்டதும்…..”அம்மா..!, நான் போன வாரம், சென்னையில இருக்கற ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நடந்த இண்டர்வியூக்குப் போயிட்டு வந்தேன் இல்லையா? அடுத்த வாரமே வேலையில சேரச் சொல்லி அவங்ககிட்டேயிருந்து எனக்கு அப்பாயின்ட்மென்ட் லெட்டர் (appointment letter) வந்திருக்கு” என்றாள். அவள் கண்களில் ஓர் ஒளி தெரிந்தது. சமீபத்தில் அவ்வளவு உற்சாகத்தோடு தன் மகளைக் கண்டிராத ஆதிரையின் தாய் அவள் முகத்தையே மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க, ”அம்மா! எனக்குக் கொஞ்சம் கேசரி கொண்டுவாங்க.. உடனே சாப்பிடணும்போல இருக்கு” என்றாள் ஆதிரை.

     

     

     

     

     

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் 8

    திவாகர்

    நீதிபதியின் வலது புறத்தில் நகர ஷெரீஃப் அமர்ந்திருந்தார். அவர் அணிந்திருந்த அலங்காரமான அணி எல்லோர் கவனத்தையும் கவர்ந்திருந்தது. நீதிபதியின் இடதுபுறத்தில் போடப்பட்டிருந்த இரண்டு பெஞ்சுகளில் ஒருவர் பின் ஒருவராக ஒன்பது பேர் உட்கார்ந்திருந்தார்கள். இந்த ஒன்பது பேரும் ஸ்பெஷல் ஜூரர்கள். பொதுமக்களிடமிருந்து நீதி வழங்குவதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வெவ்வேறு வாழ்க்கைத் துறையில் ஈடுபட்டவர்களாகையால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்தனர்.


    இவர்களுக்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நீதிபதிக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்தவர் மிஸ்டர் ஸஹஸ்ரநாமம்.. அவர் பிரபலமோட்டார் கம்பெனியில் மேனேஜர். இதற்கு முன்பு இவர் ஜூரராக இருந்து கோர்ட் அனுபவமுள்ளவராகையால் இவரை ’ஃபோர்மென்’ ஆக தேர்ந்தெடுத்தார்கள். அநேகமாக முன்புறம் வழுக்கை விழுந்திருந்தது போல தலை. முகம் மிகவும் பருத்திருந்ததால் கழுத்து இருக்கும் இடம் தேடவேண்டியிருந்தது. ’என்னடா இப்படிப் பிடித்துப் போட்டுவிட்டார்களே, மூன்று நாளோ நான்கு நாளோ தெரியவில்லையே, ஆபீஸில் உட்கார்ந்தபடி அலுங்காமல் நலுங்காமல் போவதை விட்டு இது எதற்கு? என ஆயாசப்படுபவர் போல காணப்பட்டார்.

    அடுத்தபடி உட்கார்ந்தவர் ஒற்றைநாடி ரங்கநாத முதலியார் ஆவார். உள்ளூர் பேங்க் ஒன்றில் அக்கௌண்டண்ட் வேலை.. ஜட்ஜைப் பார்ப்பதும், ஷெரீஃபைப் பார்ப்பதும் மறுபடி ஜட்ஜைப் பார்ப்பதுமாகப் பொழுதைப் போக்கினார். வீட்டுக்கு மாப்பிள்ளை ஒருவார கால லீவில் வந்திருக்கும்போது அவனுடன் பேசமுடியாமல் இப்படி செய்துவிட்டார்களே என்ற  தாபம் ஒருபக்கம்; மாப்பிள்ளை எதிரில் தனக்கு இப்படி ஒரு பெரிய பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று கௌரவமாக சொல்லிக்கொள்ளலாம் என்ற சபலம் ஒருபுறம், இதில் எது விசேஷம் என்று காணமுடியாத தத்தளிப்பு அடிக்கடி ஏற்பட்டது.

    மூன்றாவது ஆசாமி கொக்கு போல நாசியுடன் அடிக்கடி கனைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். புரபசர் சிவசாம்பனை நகரக் கல்லூரியில் கணித புரபசர் என்பதாக பலர் அறிவார்கள். இந்த கேஸ் என்ன் பிரமாதம்? எக்ஸ் ப்ளஸ் ஒய் இண்ட்டு எக்ஸ் மைனஸ் ஒய் இஸிகோல்டு என்கிற மாதிரி ஊதியெறிந்துவிட வேண்டியதுதானே..என்கிற பாவத்தில் அவர் காத்துக் கொண்டிருந்ததாகப் பட்டது.

    அவருக்கு அடுத்தாற்போல் சுமார் ஆறடி உயர நிஜார் அணிந்த ஓர் ஆசாமி உட்கார்ந்திருந்தார். அவர் கோர்ட் பூராவையுமே கண்ணோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். முன் பெஞ்சில் உட்கார்ந்திருந்த இளம் வக்கீல்களை பார்ப்பதும், வாயின் இடதுபக்கத்தால் புன்னகை செய்து அவர்களைத் தாம் தெரிந்துகொண்டதாக மட்டுமே பாவனை செய்தார். இன்சூரன்ஸ் கம்பெனி செல்வரங்கத்தின் பிணைப்பில் அவர்களில் அநேகர் அகப்பட்டுக்கொண்ட பேர்., மிகுதியுள்ளவர் இனி தப்பமுடியாது என கவலை கொண்டால் ஆச்சரியமில்லை  பேச்சிலே அவ்வளவு வாசாகலகமாக இருப்பவர் ஒரு புள்ளியை குறி வைத்தார் என்றால் மடக்குவதில் தவறியது என்பது இவர் அகராதியில் இல்லை. இப்போது இவர் இந்த புதிய சூழ்நிலையை ரசித்தார், விரும்பினார், இதன் மூலம் தம் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ள இடம் செய்து கொண்டார் என்று முடிவு செய்வதும் தவறாகாது.

    பின் பெஞ்சியில் முதலில் அமர்ந்தவர் ஒரு ஆடிட்டர். பெயர் ஜோசப் ஞானமுத்து, பிரபலமானவர்,’ ஜூரர் என்று அழைத்துவிட்டார்கள், எதிர்த்துப் பேச வாயில்லை, உட்கார்ந்து விட்டுப்போவோம்’ என்ற ஒரு விரக்தியுடன் உட்கார்ந்து விட்டார். அடுத்தாற்போல ஆறாவது பேர்வழி ஹோட்டல் முதலாளி. அவருக்கு அங்கே இருந்தாலும் இங்கே இருந்தாலும் லட்சியமில்லை. மச்சினன் பயல் பெட்டியடியில் உட்கார்ந்து கொள்வான், கவலையில்லை. அதுவும் வியாபாரம் பத்து மணிக்கு ஓய்ந்து மறுபடி ஐந்து மணிக்குதான் ஆரம்பிக்கிறது. இங்கே தமாஷாக பொழுதைப் போக்கலாம். அவருக்கு ஒரே ஒரு குறை காலடியில் ஒரு திண்டு, தலையணை போட்டிருக்கப்படாதா என்பதுதான்.

    ஏழாவதாக உட்கார்ந்திருப்பவர் ராமநாத சாஸ்திரி. பி.ஏ படித்து ஊரில் நிலபுலன்களைப் பார்ப்பதோடு இங்கே ஆயில்மேன் பிஸிநஸ் வைத்திருக்கிறார். மதாசாரங்களில் ஊறி காலை மாலையில் பூஜை புனஸ்காரங்களை ஒரு காரியமாகச் செய்பவர் நெற்றியில் சந்தனமும் குங்குமமும் இவர் பக்தியின் சின்னங்கள்.  கோயிலைப் பார்த்தால் கை கூப்பாமல் போகிறவர்களை தூக்கில் கொண்டு போய் போடவேண்டும் என்பது இவர் அபிப்ராயம்.

    எட்டாவதாக உட்கார்ந்திருந்த முத்தையா பிள்ளை வாழ்க்கையில் பல துறைகளில் வேலை பார்த்தவர். அவர் பேசாத விஷ்யம் இல்லை. கமிஷன் ஏஜெண்டாக வேலை பார்ப்பவர். வீடு கட்டும் காண்ட்ராக்டுகளை எடுத்துக் கொண்டு கொள்ளை கொள்ளையாகக் குவித்தவர். அரசியல் விஷயங்களைத் தெரிந்ததோடு பிரபலங்களோடு பழகியவர்.

    கடைசியாக ஒரு பெஞ்ச் ஓரமாக உட்கார்ந்து கொண்டு எல்லாரையும் விழுங்கிவிடுவதாக பார்த்துக் கொண்டிருப்பவர் ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் பெயர் கௌரிசங்கர். அதைவிட அவருடைய புனைப் பெயர் ‘மண்டலி’ என்பது அதிக பிரபலம். தினம் ஒரு துப்பறியும் கதை படித்துக்கொண்டிருப்பவர். அவர் எழுத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து கொலையும் கொள்ளையும் மர்மமும்தான். அநேகப் புத்தகங்கள் படித்து இதுவரை மானசலோகத்தில் சஞ்சரித்தவர் இன்று கண்ணெதிரேயே ஒரு கேஸ் விசாரணையை பார்க்க நேர்ந்ததில் அவர் சொர்க்கப்பிராப்தியே அடைந்துவிட்டது போல ஆனந்தம் கொண்டிருந்தார். இந்த அனுபவத்தை வைத்து ஒரு இருபைத்தைந்து வாரம் போகும் ஒரு அபூர்வமான கதை எழுதிவிடுவேனே என்று மனைவியிடம் மார் தட்டி வந்திருந்தார்.

    இதற்கு முன்பு கிரிமினல் கோர்ட்டின் உட்புறத்தை அவர் பார்த்ததே இல்லை. ‘எத்தனை அழகு, என்ன பந்தா, எத்தனை கருக்கு’ என்று வியந்தே போனார். நியாயப்படி, சட்டப்படி நடப்பதென்பார்களே அது இங்கேயல்லவா இருக்கின்றன. புத்திசாலிகள் சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சிங்கங்கள், மனதில் குரோதம் இல்லாதவர்கள் ஒன்று கூடி ஒரு ஆள் தண்டனை அடையலாமா கூடாதா என்பதைக் கண்டுபிடித்து முடிவு சொல்வது எவ்வளவு அற்புதம்! எப்பேர்ப்பட்ட தர்மம்’ என்று திறந்த வாய் மூடாமல் இருந்தார்.

    ஜஸ்டிஸ் ஜகன்னாதன் கதை ஆரம்பம்தான் மேலே கொடுத்திருப்பது. தேவன் கதைகளிலிருந்து இது முதலில் வித்தியாசப்படுவது பெயர்த் தலைப்பிலே. ஏனென்றால் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற புதினத்தில் தலைப்பிட்ட பாத்திரம் இந்தக் கதையின் நாயகன் இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.. இதனால் வேறு யார்தான் நாயகன் என்றால் இக் கதையைப் படித்தவர் எந்த ஒரு பாத்திரத்தையும் நாயகனாகவே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கதைப்படி பேருக்கு நாயகன் வரதராஜபிள்ளை என்றாலும் அந்த பாத்திரம் கூட கதை முழுக்க வரும் கதாநாயகப்பாத்திரம் இல்லைதான். அதே போல வரதராஜபிள்ளையின் மனைவி ஜெயலக்ஷ்மியைக் கூட கதாநாயகியாக அவ்வளவாகக் காண முடியாது என்றுதான் படுகிறது. என்னைக் கேட்டால் இந்தக் கதைக்கு நாயகன்-நாயகி இந்தக் கதையைப் படைத்த தேவன் மட்டுமே என்றுதான் சொல்வேன். இத்தனைக்கும் கதை என்ன?

    பெரிய செல்வந்தரானவரும் மூன்று மனைவிக்காரருமான (முதல் மனைவிக்கு சந்தானம் கிடையாது என்பதால் இரண்டாவது மனைவி வர, அவள் மூன்று மக்கள் செல்வங்களைக் கொடுத்து விட்டு இறந்து போனதால் துக்கம் தாளாமல் போக மூன்றாவது மனைவி தேவைப்பட்டதாம்) தியாகராயப் பிள்ளை, நோய்வாய்ப்பட்டாலும் சீரடைந்து தன்னுடைய பெரிய பெண்ணின் கணவனான வரதராஜ பிள்ளையின் வீட்டில் அவன் மேற்பார்வையில் ஹாயாக இருந்து வரும் ஓர் இரவில் அகஸ்மாத்தாக மடிந்து போகிறார். அந்த இரவு வேளையில்  அவரை விஷம் வைத்து மாப்பிள்ளை வரதராஜபிள்ளையே தன் மாமனாரை சொத்துக்காக ஆசைப்பட்டு கொன்றுவிட்டதாக போலீஸ், அவர்களுக்குக் கிடைத்த சாட்சியங்களின் பேரில் கைது செய்து கிரிமினல் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். வரதராஜபிள்ளை தான் அந்த இரவில் அங்கு இல்லவே இல்லை என்று சாதித்தாலும், வேறு பல பலமான சாட்சியங்கள் அவனைக் குற்றவாளியாக கூண்டில் நிற்கவைத்து விடுகின்றன. அவன் மனைவி ஜயலக்ஷ்மியும், அவனுடைய வக்கீல் ஈஸ்வரன் மட்டுமே அவன் பக்கம் நிற்க, கோர்ட்டில் இந்த வழக்கு ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்கிற நீதிபதியின் முன்பும் ஒன்பது ஜூரர்களின் முன்பும் விசாரணைக்கு வருகிறது. மிகவும் பிராபல்யமான ’கிரவுன்’ பிராஸிகியூஷன் கருணாகரன் இந்த கேஸை போலீஸ் சார்பாக நடத்த, அவரை எதிர்த்து எல்லோரும் மதிக்கும் வக்கீலான ஈஸ்வரன் டிபன்ஸ் தரப்பு வக்கீலாக ஆஜராகிறார். கிரவுன் என்றால் ராஜாங்கத்து சார்பாக என்பதாக பொருள் கொள்ளவேண்டும். பிரிட்டிஷ் சட்டம் இல்லையா, எல்லாமே ராஜாவின் ஆணைப்படிதான்.

    இந்தக் கதை ஆனந்த விகடனில் 1953-54 இல் தொடராக வந்தது. அந்தக் கால கட்டத்தில் நீதிபதிக்கு உதவி செய்யவும் முடிவுகள் தீர ஆராய்ந்து சரியான தீர்ப்பு சொல்லவும் ஒன்பது பேர் கொண்ட ஜூரர் ஸிஸ்டம் ஒன்று இருந்தது. இங்கு ஜூரர்களின் மெஜாரிடி முடிவின் படி நீதிபதியின் தீர்ப்பு இருக்கும். கிட்டதட்ட இப்போது இருக்கும் பெஞ்ச் அல்லது மல்டி-ஜட்ஜ் சிஸ்டத்தைப் போல என்று வைத்துக் கொள்ளலாம். இந்த ஜூரர் சிஸ்டம் இன்னமும் வெளிநாடுகளில், அதுவும் அமெரிக்க நாடுகளில் வலுவாக உள்ளது. நகர ஷெரிஃப் இப்படிப்பட்ட கிரிமினல் குற்ற கேஸ்களில் ஏறத்தாழ நடுநாயகமாக அமர்ந்திருப்பது ஒரு அலங்காரத்துக்கு மட்டுமே தவிர அவருக்கு நீதி அளிப்பதில் எந்தவித உரிமையும் கிடையாது. அவர் ஒரு அதிகாரம் இல்லாத சூபர்வைஸர் என்று கொள்ளலாமோ என்னவோ. (சென்னை மாநகருக்கு ஷெரீப் என்றொரு பதவி இருந்தது . அப்போது மாநகர மேயருக்கு அடுத்த முக்கியத்துவம் கொண்ட பதவி இது. அரசாங்கத்தால் வழங்கப்படும் நியமனப் பதவி. அரசியல் சார்பற்ற இந்தப் பதவியில் இருப்பவர்கள் நகரின் பல நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகிப்பார்கள். நகருக்கு வரும் முக்கியப் பிரமுகர்களை வரவேற்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.  பெரிய வழக்குகளை அவர்கள் முன்னிலையில் நடத்துவது கோர்ட்டுகளில் ஒரு வழக்கம்)

    ஜூரர்கள் என்பவர்களை சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவில் நல்ல அந்தஸ்து மரியாதை உள்ளவராக இருப்பவர்களாகப் பார்த்து அமர்த்துவது வழக்கம். அத்தகைய ஜூரர்களைப் பற்றிதான் தேவன் முதன் முதலில் நகைச்சுவையாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

    இது கொலைக் குற்றம் எனப்தால், எப்போதுமே இதைப் போன்ற கதைகளில் ஒரு த்ரில் அல்லது சஸ்பென்ஸ் இருக்கும். சாதாரணமாக துப்பறியும் புதினங்கள் எழுதுபவர்கள் ஒரு கொலை எப்படி நடந்தது என்பதை போலீஸ் மூலமோ அல்லது ஒரு துப்பறியும் சிங்கம் மூலமாகவோ மிகவும் தீர ஆராய்ந்து, கஷ்டப்பட்டு, ஒவ்வொரு இடமாக நாய் போல அலைந்து திரிந்து, அடிபட்டு, உதைபட்டு, கடைசியில் இவர்தான் கொலை செய்தார் என்று முடிவு செய்து கதைக்கு ஒரு முடிவையும், வாசகருக்கு அப்பாடி என்கிற திருப்தியையும் கொடுத்து விடுவார்கள். கடைசியில் குற்றவாளி பிடிபட்டான் என்று தெரியுமே தவிர அவன் கோர்ட்டில் மிக எளிதாக பெயிலில் வெளியே வரமுடியும், வந்து பின்னர் தான் பிடிபட்ட காரணங்களை எல்லாம் தவிர்க்கப் பாடுபடமுடியும், சாட்சியங்கள் வீணாகிப்போனால் ஜாலியாக பழையபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமுடியும் என்றெல்லாம் நமக்குக் காண்பிக்கமாட்டார்கள்.

    ஆனால் ஜஸ்டிஸ் ஜகன்னாதனில் இப்படிப்பட்ட கதையாக இது ஆரம்பிக்கப்படவில்லை.. துப்பறியும் கதைகளின் இரண்டாம் பாகம் போல, குற்றவாளி பிடிபட்டு அவன் வழக்கில் எப்படி குற்றம் செய்திருக்கலாம் என்பதாக நிரூபிக்கிறார்கள் என்று காண்பிக்கப்படுவதால், இந்தக் கதையில் நவரசங்களும் கலந்தே இருக்கின்றன. ஒருநாள் வரதராஜபிள்ளை குற்றம் செய்துவிட்டார் என்பதை சந்தேகமுற கருணாகரன் (பிராஸிக்யூஷன் வக்கீல்) நிரூபித்து விட, அதுதான் நிஜம் என்றே ஜூரர்களும் அசைபோட ஆரம்பித்தாரென்றால் அடுத்தநாள் டிஃபென்ஸ் தரப்பு வக்கீல் ஈஸ்வரன் அரசாங்கத் தரப்பில் காண்பிக்கப்பட்ட சாட்சியங்களில் ஏகப்பட்ட ஓட்டைகளைக் காண்பிக்க, ‘ச்சே’ இந்த வரதராஜ பிள்ளையாவது, குற்றம் செய்வதாவது..” என்று ஜூரர்களோடு சேர்ந்து நாமும் பரிதாபப்படும் நிலைக்கு கொண்டுசெல்வார் தேவன்.

    1954 இல் எழுதப்பட்ட இந்தக் கதையின் ஆங்கிலப் பதிப்பு 2004 இல் அதாவது ஐம்பது ஆண்டுகள் கழித்து லக்ஷ்மி வெங்கட்ரமணன் அவர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது (2004 ஆம் ஆண்டில் ஹிந்து நாளிதழில் வந்த அதற்கான படம் இங்கே இருக்கிறது). ஆங்கிலத்தில் இதைப் போன்ற கதைகள் ஏராளம்தான். ஒப்புக் கொள்ளவேண்டும்தான். அதே சமயத்தில் ஆங்கிலம் என்பதை உலகம் பரவிய, அதிகமாகப் பேசப்படுகின்ற, படிக்கப்படுகின்ற மொழியாகவே கடந்த நூறு ஆண்டுகளில் செய்துவிட்ட பிறகு ஆங்கிலத்தில் இதைப் போன்ற கதைகள் எத்தனை வந்தாலும் ரசிப்பதற்கு வாசகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் தமிழ் என்று வரும்போது இருக்கும் ஆறு கோடிப் பேரில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்கு கூட (ஒரு கோடி) கூட வாசிப்பதில் விருப்பம் காண்பிப்பது கிடையாது என்பதை தமிழ் அறிஞர்கள் சமீபத்திய செம்மொழி மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்தார்கள். படிப்பு முன்னேறிய இப்போதைய காலகட்டத்திலேயே நிலைமை இப்படி என்றால் படிப்பில் வீழ்ந்திருந்த அந்த 1950 களில் இப்படி ஒரு கதைக்களம் வைத்து எழுதி வெற்றி பெற்றால் அது படைப்பாளியின் மிகப் பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும்.

    இதைப் படித்தவர் பலபேர் தேவன் அந்த நாட்களில் கோர்ட் நிகழ்ச்சிகளை அடிக்கடிப் பார்த்திருக்க வேண்டும் என்றே எழுதினர். மேடையில் பேசவும் செய்தனர். அத்தனை துல்லியமாக கோர்ட் நடவடிக்கைகளை எழுதியதோடு வாசகர்களுக்கு அங்கே இடையிடையே நடக்கும் ஹாஸ்யபூர்வ நிகழ்ச்சிகளை தம் பாணியில் கொடுத்திருப்பார் தேவன்.

    இப்படி ஒருநாள் மிக முக்கிய சாட்சியை ஜூரர்கள் முன் வைக்கப்பட்டு கிரவுன் ப்ராஸிக்யூட்டர் கருணாகரன் வெகு பரபரப்பாக வாதித்துக் கொண்டிருக்கிறார். கோர்ட் முழுவதுவமே ஒரே ஸீரியஸ். நீதிபதி முதற்கொண்டு பார்வையாளர் வரை எல்லோருமே உன்னிப்பாக வாதத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.

    அப்போது ஜூரர்களில் ஒருவர், முத்தையா பிள்ளை மிக மெதுவான குரலில் பக்கத்தில் உள்ள இன்னொரு ஜூரரிடம் பேசுகிறார்.

    “பிடிச்சுகிச்சு”

    அந்த இன்னொரு ஜூரர், முத்தையா ஏதோ முக்கியமான பாயிண்டைப் பிடித்துவிட்டார் போலும் என்ற ஆவலினாலோ அல்லது பொறாமையாலோ அவரைத் திருப்பி கேட்பார்.

    “என்ன பிடிச்சுகிச்சு?”

    மிகவும் இயல்பாகவும் அதே மெல்லிய தொனியில் முத்தையா பதில் சொல்லுவார்.

    “நேத்து ராத்திரி… மொட்டை மாடில படுத்தேனா?… ஒரே பனியா?… அதான் பிடிச்சுகிச்சு..” என சொல்லிவிட்டு மூக்கையும் உறிஞ்சுவார்.

    சளி பிடித்துவிட்டதாம் அவருக்கு. பிடிக்கட்டும். ஆனால் அதை சொல்வதற்கும் நேரம் காலம் உண்டல்லவா? இப்படி கோர்ட்டில் முக்கியமான கட்டத்தில் வாதத்தை கேளாமல் தனக்கு மனதில் தோன்றியதை உடனடியாக பக்கத்து நபரிடம் சொல்லியே தீரவேண்டுமென்ற ஒரு உணர்ச்சி…

    இந்த ஆவல் உணர்ச்சியை நிறைய பேரிடம் இப்போதும் பார்க்கலாம். தேவனுக்கு மற்றவர்களை மிக மிக உன்னிப்பாக கவனிக்கும் குணம் உண்டு என்பது ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

    கோர்ட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட ஜஸ்டிஸ் ஜகன்னாதனைப் போன்ற இன்னொரு கதைதான் ராஜத்தின் மனோரதம். ‘வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்’ என்று சொல்வார்கள் இல்லையா.. இந்த வீடு கட்டும் படலத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதிலுள்ள கஷ்டங்களை நகைச்சுவை எள்ளளவும் குறையாமல் தேவன் எழுதிய புத்தகம்தான் ராஜத்தின் மனோரதம். கதாநாயகியான மனைவி ராஜம் எப்படியாவது ஒரு சொந்த வீடு வேண்டாமோ என நச்சரித்துக் கொண்டே இருக்க, அவள் கனவை நனவாக்குவதற்காக சொந்த வீடு கட்டினால்தான் என்ன என்று இறங்கிவிடும் நாயகன். அடித்தளம் போடுவதிலிருந்து முழு வீடு கட்டும் வரை ஏற்படும் சிரமங்கள், அதிலும் மேஸ்திரி முதற்கொண்டு ஒவ்வொரு வேலையாட்களிடமும் இந்த வீடு கட்டுபவர் படும் கஷ்டமும் இந்த சிமெண்ட் போன்ற வஸ்துக்களை வாங்குவதில் உள்ள சிரமங்களும் முக்கியமாக இன்றைய அடுக்கு மாடி குடியிருப்போர் படிக்கவேண்டும். படிக்கப் படிக்க சுவையான ஒரு புத்தகம்தான் ’ராஜத்தின் மனோரதம்’.

    ஆனால் இவைகள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் விதத்தில் தேவனின் ‘சாம்பு’ ஒரு மிகப் பெரிய புகழை தேவனுக்கு அள்ளித் தந்தது. தேவன் புத்தகங்கள் என்றால் சாம்புதானே என இன்றைய தலைமுறையினரும் வெகுவாக அறியக்கூடிய அளவுக்கு புகழ் பெற்ற அந்த துப்பறியும் சாம்புவை நாம் துப்பு துலக்குவோம்.

    தொடர்ந்து வரும்

    Share
  • தடையைத் தகர்த்தெறிந்த தன்னம்பிக்கை!

    பவள சங்கரி

    உழைக்கும் கரங்கள்!

    சென்னை அண்ணாநகர் பக்கம் செல்பவர்கள் காலை எட்டு மணி தொடங்கி மாலை ஆறு மணி வரை ஒரு 58 வயது பெண்மணி, முகம் நிறைய மஞ்சளுடன், புன்னகையும், நெற்றி நிறைய குங்குமமும் கண்கள் நிறைய கனிவும், உள்ளம் நிறைய அமைதியும் அணிந்து கொண்டு தலையில் பெரும் சலவைத் துணி சுமையுடன் நடமாடிக் கொண்டிருப்பதைக காணலாம். இவர் பெயர் நாகம்மா. தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் கையில் இருந்தால் எத்தகைய தடையையும் முறியடித்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்தான் இந்த நாகம்மா.. ஆம். தன்னுடைய 14 வயதில் அடிக்கடி உடல் நலிவுற்று அரசு மருத்துவமனையில் பலமுறை தங்கி மருத்துவம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. படிப்பும் பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்திருக்கிறது. பல பரிசோதனைகளுக்குப் பிறகு, நாகம்மாவிற்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதாகவும், அவர் கடுமையான பணிகளோ, அல்லது திருமண வாழ்க்கையையோ மேற்கொண்டால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் முடங்கிப்போய் விடவில்லை நாகம்மா. தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொண்டுதான் இருந்திருக்கிறார். இவர்  சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் அதற்குரிய தன்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளைச் செய்து கொண்டிருந்திருக்கிறார். விதியின்  விளையாட்டு அதோடு நிற்காமல்  தன்னுடைய 17 வது வயதில் பெற்றோரையும் ஒருவர் பின் ஒருவராக இழக்கச் செய்துவிட்டது.. உடன் பிறந்த ஒரே சகோதரியும் திருமணம் செய்து கணவன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இளம் வயதில் தனித்து விடப்பட்ட இந்தப் பெண்ணின் பாதுகாப்பற்ற சூழலை மனதிற்கொண்டு வேறு வழியின்றி, மருத்துவரின் ஆலோசனையையும் மீறி, தம் அன்புத் தங்கையை தம் கணவருக்கே மறுமணம் செய்து வைத்துள்ளார், இவருடைய அன்புச் சகோதரி. அந்த பாச தீபத்தின் தியாகத்தினால் நாகம்மா அன்று முதல் தன் சகோதரியுடனேயே, அவருடைய வாழ்க்கையையும் பங்கு போட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

    துரத்தி வந்த நோயைக்கூட இவருடைய தன்னம்பிக்கை என்ற உறுதியான மனம் விரட்டியடித்திருக்கிறது என்பதை அறிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருதய நோய் காரணமாக அடிக்கடி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும் தன்னுடைய கடமைகளை மட்டும் எந்த காரணம் கொண்டும் தவிர்க்க நினைக்கவில்லை இவர். ஹோமியோபதி மருத்துவமும் பார்த்துக் கொள்ள ஆரம்பித்த வேளையில்தான், திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளிலேயே குழந்தைப்பேறும் பெற்றிருக்கிறார். இருதயத்தில் இருந்த பிரச்சனையுடன், மருத்துவர்கள் குழந்தை வேண்டாம் என்று கூறியும், தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் உறுதியாக வைத்துக் கொண்டு பலப்பல சிரமங்களுக்கிடையே, மருத்துவ மனையிலேயே முழுவதும் தங்கி, நல்லபடியாக அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தும் வந்துவிட்டார். சகோதரியின் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்ற இரு குழந்தைகளுடன் நாகம்மாவின் பெண் குழந்தையும் ஆரோக்கியமும், நல்ல அறிவுமாக வளர்ந்து கொண்டு வந்திருக்கிறது.

    மகன் பட்டயப் படிப்பு படித்துவிட்டு குடும்பத் தொழிலான சலவைத் தொழிலையே செய்ய விரும்ப, மகள்கள் இருவரையும், பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்துள்ளனர். மிகச் சிரம்ப்பட்டே தம் மகள்களை படிக்க வைத்ததாகக் கூறும் நாகம்மா,. தன் மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கும், தன் குழந்தைக்கும் எந்தவிதமான வேறுபாடும் இன்றுவரை பார்த்திராதது மட்டுமே இவருடைய அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு காரணமில்லை. தங்கள் மகள்களை நன்கு படிக்க வைத்து, இன்று அவர்கள் நல்ல நிலையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தும் அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் இன்றுவரை உழைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே அது மட்டுமே நிம்மதியை தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் சத்தியம். அக்காவிற்கு முதுமையினால் இயலாமை ஏற்பட்டுள்ள நிலையில் அவரை நல்ல ஓய்வான சூழலில் கவனித்துக் கொண்டும், 70 அகவையைத் தொடும் தம் கணவருடன் இன்றும் சலிக்காமல் உழைத்துக் கொண்டுமிருக்கிறார், இந்த மங்கை. மகள்களுக்கு திருப்தியாக சீர் செய்து திருமணம் செய்து கொடுத்துள்ளதையும் பெருமை பொங்கக் கூறுகிறார். தம் மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது , வாடிக்கையாளர் ஒருவரின் மூலமாக திரைப்பட நடிகை ரேவதி இது போன்று சிரமத்தில் படிப்பவர்களுக்கு உதவி செய்வதாக கேள்விப்பட்டு, அவரை அணுகியபோது ரூபாய் 5000 உதவித் தொகை கொடுத்தது தன் மகளின் கல்விக்கு பயனுள்ள வகையில் அமைந்தது என்பதையும் நினைவுகூர்கிறார். அக்காவின் மகனுக்கும் திருமணம் செய்து வைத்து அவரும் மனைவி குழந்தையுடன், தனி வீட்டில் குடித்தனம் நடத்த, இன்று தாங்கள் மூவரும் அமைதியாக, முதுமை பயமோ, இறுதி நாட்களின் தேவைகளோ என்ற எந்த அச்சமுமின்றி நிம்மதியாக பொழுது போய்க் கொண்டிருக்கிறது என்கிறார் புன்னகையுடன்.

    நான்கு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ஓயாமல் சுமையுடன் படி ஏறிச் செல்லும்போது சிரமம் இல்லையா என்றால், அதற்கும் அழகாக சிரித்துக் கொண்டே, “சிரமம் இருக்கத்தான் செய்யும். அதைப்பார்த்தால் பொழப்பு நடக்குமா… முடிந்தவரை அப்படியே ஓடிக்கினேதான் இருக்கணும்” என்கிறார்.

    இருதயத்தில் இருந்த கோளாறு என்ன ஆனது? என்று வினவியபோது, “யாருக்குத் தெரியும், ரொம்ப நாளா ஆஸ்பத்திரிக்கே போவலை.. இப்ப ஹோமியோபதிதான் பார்த்துக்கிணு இருக்கேன். கடவுள் புண்ணியத்துல எந்தப் பிரச்சனையும் இல்ல..அப்பப்ப முடியாமப் போனா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாக்கா சரியாப்பூடுது.. என்னாங்க எல்லா கடமையும் முடிச்சாச்சு, இனிமே வாழற ஒவ்வொரு நாளும் போனசுதானே.. அதான் எதைப்பத்தியும் கவலைப் படறதே  இல்லைங்க…” என்கிறார் பூரிப்புடன்.

    வயதாகிவிட்டபடியால் பொட்டி தூக்கி தேய்க்க சிரமமாக இருப்பதால், இன்று கூலிக்கு ஆள் போட்டுக்கொண்டு தொழிலை கவனித்துக் கொள்வதாகச் சொல்லும் இவர்களின் வருமானம் நாளொன்றுக்கு சராசரியாக 1000 ரூபாயாம். அந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாலானவர்களுடன், பாசமும், நேசமும் கொண்டு குடும்பத்தினர் போலவே பழகிவரும் நாகம்மாவைப் பார்க்கும் வேளையில், இவருடைய தன்னம்பிக்கை, இருதய நோயின் தீவிரத்தைக்க்கூட கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    இனிமேலாவது சற்று ஓய்வெடுக்கலாமே என்று கேட்டபோது, “இப்ப இன்னா  58 தானே ஆவுது, ஓய்வெடுக்குற வயசா இது..? இன்னும் காலம் அதுக்கு நிறைய இருக்கே..” என்கிறார் சர்வ சாதாரணமாக. 70 வயது கணவர் இன்றும் அதே குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பணிக்கு வந்து இயன்றவரை உழைப்பதைக் காணும் மனைவிக்கும் இது போன்ற எண்ணம் தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

    Share
  • பணவிடை

    மிசிசிப்பி ஆற்றைக் கடந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அதுகுறித்த மகிழ்ச்சி எப்போதும் உண்டு எனக்கு. நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி. நேற்று செங்காவி நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இன்று இளநீலங் கொண்டு சலசலச் சிரிப்போடு போய்க் கொண்டிருக்கிறது.

    மிசிசிப்பியை நான் ஒரு கனவு தேவதையாகவும் எட்ட நின்று பார்த்துப் பரவசங்கொள்ளும் தீண்டமுடியாப் பேரழகியாகவும்தான் ஆராதித்து வருகிறேன். சிலிர்த்துக் குலுங்கி நாணம் சிந்த ஒயிலாடும் பெருநதியைப் பார்த்து இரசிக்காதவன் இருந்தென்ன? வாழ்ந்தென்ன??

    தேநீர் குடித்த கையோடு எதையாவது வாயில் போட்டு நாச்சுவையைக் கொல்வானேன்? டீ குடித்த மறுநொடியே கம்பர்கட் தின்பான் முண்டாபனியன் முருகேசன். எழவு, அதற்கு அதைக் குடிக்காமலே இருந்திருக்கலாமே?? டீ குடித்தால், நாவில் எஞ்சியிருக்கும் சுவை தீருமுட்டும் அனுபவிக்க வேண்டும். அடிக்கரும்பின் இனிப்பு, நெல்லியின் பின்சுவை, டீயின் நாச்சுவை, புணர்தலின் ஈற்றின்பம் என எதிலும் அந்த இறுதிக்கணங்கள் அலாதியானவை.

    கடந்த வந்த பின்னரும் ஒரு அரை மணி நேரத்துக்காவது நெஞ்சில் படர்ந்து கொண்டிருக்கும் மிசிசிப்பி ஆற்றின் எழில் வனப்பு. இன்றைக்கு அந்த அசைபோடலைக் கொன்றழித்து விட்டான் பீட்டர்சன்.

    எதையாவது முனைப்பாகச் செய்து கொண்டிருக்கையில், “ரொய்ங்க்” என்று காதில் புகுந்து இம்சித்துவிட்டுப் போகும் கொசு. எனக்கு மிகவும் எரிச்சலூட்டக் கூடியது உண்டென்றால் அது இதுதான்.

    மிசிசிப்பியின் வனப்பின் மிதப்பில் வந்து கொண்டிருந்தவனை அலைபேசியில் அழைத்து, ஆப்பிரிக்க அமெரிக்க ஆங்கிலத்தில் “ரொய்ங்க்” அடித்து விட்டிருக்கிறான் பீட்டர்சன். அலைபேசியைக் கண்டுபிடித்தவன் இரசனை இல்லாத வெற்றுமானிடனாய்த்தான் இருந்திருக்க முடியும். அண்டிய அந்தப் பீடைக்கு மாதாமாதம் சுளையாக நூற்றுப்பத்து டாலர்கள் அழுது தொலைக்க வேண்டி இருக்கிறது. மிசிசிப்பி ஆற்றிலேயே அதையும் விட்டெறிந்து விடலாம். ஆனால் மணிக்கொருதரம் அழைத்துத் திட்டாமல் அவளால் இருக்க முடியாது. தார்க்குச்சியால் விட்டு விட்டுக் குத்து வாங்குவதற்கென்றே சபிக்கப்பட்டவர்கள் கணவன்கள். அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. எனவேதான் இந்த அலைபேசியையும் கூடவே வைத்துச் சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.

    ஒன்றும் புரியவில்லை. எனது அறையில் ஆறாயிரம் டாலர்கள் பணம் வைத்திருக்கிறானாம். அதிலிருந்து, மாதம் ஒன்றுக்கு முந்நூறு வீதம் மால்டோவாவுக்கு நான் அனுப்பி வைக்க வேண்டுமாம். இதென்ன பெரிய வில்லங்கமாக இருக்கிறது? நான் எதற்காக இதைச் செய்ய வேண்டும்??

    முதலில் எதிர்ப்பட்டவள் டீனா. தரக்கட்டுப்பாட்டு மேலாளர். முகம் கோணி, மூக்கு உறிஞ்சி, கழுத்துச் சிவந்து நான் பார்த்ததில்லை. முறுவலிப்பை வாழ்நாள் குத்தகைக்கு எடுத்திருக்கிறவள் இவள். அவள் பேசுகிறாளோ இல்லையோ, அவளுடைய குதிரைவால் சடை ஆடியாடிப் பேசும். இடைக்கிடை சிரிக்கத் தவறுவதும் இல்லை. அவ்வப்போது அலுங்கும் ஒத்த வயதுடைய அவ்விரு முலாம்பழக் கொங்கைகளைப் பார்க்க உள்மனச்சிறுவன் வேட்கையுறுவதும் உண்டு.

    ”டியர் ஹனீ! உனக்கு விசயந் தெரியுமா?”, எதோ மணமுறிவு பெற்றுக் கொண்டு போனவன் மீண்டும் தன்னிடமே வந்து விட்டதைப் போன்ற தொனியில் மிகவும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கிறாள்.

    “என்ன? நான் இப்பத்தான உள்ள வர்றேன்?! என்ன விசயம்??”

    “பீட்டர்சன் வேலையிலிருந்து நின்னுட்டானாம்! இப்பத்தான் சொல்லிட்டுக் கிளம்பினான்!”

    ”அடப்பாவி! அவன் என்கிட்ட இந்த விபரத்தைச் சொல்லவே இல்லை. இப்பத்தானே அலுவலக எண்ணிலிருந்து என்னை அழைச்சிப் பேசினான். நான் கார் ஓட்டிட்டு இருந்ததால, சரியாக் கவனிச்சுக் கேட்க முடியலை! இரு டீனா, நான் என்னோட அறைக்குப் போயிட்டு வர்றேன்!”

    மால்டோவா நாட்டில் இருக்கும் முகவரி ஒன்றை ஒட்டுநறுக்கில் எழுதி, அதை என் கணினித் திரையின் மீது ஒட்டி வைத்திருக்கிறான். சொன்னபடியே பணத்தையும் வைத்துவிட்டுப் போயிருக்கிறான். என்ன இவன்? தொடர்பு எண் கூடக் கொடுக்காமல் போயிருக்கிறான்.

    பீட்டர்சன். அவனின்றி எங்கள் அலுவலகத்திலிருக்கும் வீணாய்ப்போன அட்மின் ஆண்ட்டி கெல்லியின் பிரிண்ட்டர் கூட வேலை செய்யாதே? எது ஒன்றுக்கும் அவனை நாடித்தான் வெகுபேருடைய வேலை நகர்ந்து கொண்டிருக்கிறது இவ்வளவு காலமும். ஓடியோடி உழைப்பானவன். அலுவலகப் பணிகள் என்றில்லை. தனிப்பட்ட வேலைகள் சொன்னாலும் அதையொரு பேறாக எண்ணிச் செய்வான். ஒட்டு மொத்த அலுவலகத்துக்கும் அவனைப் பிடிக்கும். அவனை வீழ்த்த எண்ணிய முதிர் கன்னிகளும் உண்டு இங்கு. ஆண்மையும் சொக்குத்தன்மையும் சரிக்கு சரியாகக் கலந்த புதிர் மைந்தன் அவன்.

    மெம்ஃபிசு நகரத்தில் வசிக்கிறான். அப்பாவும் அம்மாவும் அமெரிக்காவில் இன்னமும் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால் இன்னார்தான் தன்னுடைய அம்மா அப்பாவென அவனுக்குத் தெரியாது.

    என்னைப் பெற்ற அம்மாவுக்கே என்னுடைய அப்பன் யாரென்று தெரிந்திருக்கவில்லை என்று தன் பாட்டி சொல்லியிருக்கிறாளென வெகுசாதாரணமாகச் சொல்வான். எதையும் நினைத்துக் கொஞ்சம் கூட அகங்கலாய்த்ததே இல்லை. எப்போதும் எழுச்சியாகவும் குதூகலமாகவுமே இருக்கப் பழக்கப்பட்டவன்.

    இரண்டு வயதுச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்த இலையுதிர்காலப் பொழுதொன்றில், ”நீ என் அம்மாவுக்குப் பிள்ளையாயிரு. ஏனென்றால் நம்மிருவருடைய அப்பாவும் ஒருவராகவே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது!” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அம்மா. போனவள் தன்போக்கில் நினைத்தவர்களோடு வாழத்துவங்கி விட்டாள் என்பதும் பாட்டி சொல்லித்தான் தெரியும் பீட்டர்சனுக்கு.

    பள்ளிக்கூடம் செல்வதெல்லாம் வேண்டாத வேலையென நினைக்கும் வளவு ஒன்றில் வளர்ந்தவனுக்கு ஆறுதலாக இருப்பது அவனுடைய சோசியல் செக்யூரிட்டி எண்ணும் பிறந்தநாள் சான்றிதழும்தான். அவைதான் என்னுடைய மாபெரும் சொத்து என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான்.

    பாட்டி கல்லறை கண்ட பின், அவளது இறுதிக் காரியங்களைச் செய்தவர்களுக்கே அந்த சோளக்கொல்லை வீட்டையும் விட்டுக் கொடுத்தான். விட்டுக் கொடுத்த சில நாட்களில், குடிபெயர்பவர்களுக்கான இடமாற்றுச் சேவை நிறுவனத்தில் பாரந்தூக்கும் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தான் பீட்டர்சன்.

    எந்த வனத்திற்குச் சென்றாலும் குயிலோடு குயிலும் காகத்தோடு காகமும்தான் சேருகிறது. ஏரோ வேன்லைன் நிறுவனத்தின் வேலையிடத்தில் இவனைப் போலவே இன்னொருவனும். அவனது நிலையின் காரணமாய் எழுந்த கழிவிரக்கமே பீட்டர்சனையும் அவனையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்ந்திருக்கக் கூடும். அவன் பெயர் லேபான். அவனுடைய மரபணுக்கள் க்யூபா நாட்டு மாந்தப் பண்புகளைக் கொண்டதாய் இருக்கக் கூடும்.

    சிறுவர் சிறைக்கு லேபான் எப்படி வந்து சேர்ந்தான் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. நினைவு தெரிந்த நாளிலிருந்தே சிகாகோ சிறைதான் அவனுக்குத் தாய்வீடு. இன்ன தேதியில் பிறந்தோம், இன்னாருக்குப் பிறந்தோம் என்ற எதுவும் தனக்கு இல்லாததே தன்னுடைய சுதந்திரத்திற்கான முகாந்திரம் என நினைப்பவன் லேபான்.

    எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடியவன். ஏரோ வேன்லைன் நிறுவனத்திற்குக் கூட அன்றைய கைச்செலவுக்காகத்தான் பாரந்தூக்க வந்திருந்தான். வந்த இடத்தில் பீட்டர்சனிடம் அகப்பட்டு விட்டான்.

    இருவருமாகச் சேர்ந்தே இருந்தார்கள். வேன்லைன் நிறுவன வண்டிகளில் ஊர் ஊராகப் போவதும் வருவதுமாய் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். சிகாகோவின் புறநகர்ப்பகுதியான ஷாம்பர்க்கில் உள்ள ஒரு வீட்டில் சாமான்களை இறக்கிவிட்டு அட்லாண்டா புறப்பட்டுப் போனார்கள். போகும் வழியில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்து விட்டது.

    நடப்பதெல்லாம் சொல்லிவிட்டா நடக்கிறது? அது அது  அதனதன்பாட்டில் நடந்து கொண்டுதானிருக்கிறது. தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வண்டிக்குள்ளேயே தூங்கலாமென்றான் பீட்டர்சன். சரி வராது; சிறுவிடுதிக்குத்தான் போயாக வேண்டுமென்றான் லேபான். விட்டுக் கொடுத்துப் போவதெனக்கருதி ஒத்துக்கொண்டான் பீட்டர்சன்.

    நீ வண்டியிலேயே இரு; நான் அறையிருக்கிறதாவெனக் கேட்டு வருகிறேன் எனச் சொல்லி விடுதிக்குப் போனான் பீட்டர்சன். அங்குதான் அவள் அழுது கொண்டிருந்தாள். காற்றுநகரம் என அழைக்கப்படும் சிகாகோ நகரின் வளிமண்டலத்தில் குளிர்காற்று  வளைத்தடித்துக் கொண்டிருக்கிறது. சரியானதொரு உடுப்பில்லாமல் அங்கே அழுது கொண்டிருந்தாள் அவள். இவனைக் கண்டதும் ஓட முடியாமல் ஓடி வருகிறாள்.

    ரோட்டோரப்பட்சியும் அல்ல. கண் கிரங்கப் பார்த்து, முலை காட்டி, தொடை வெட்டியபடி அவர்கள் அணுகும் விதமே தனியாக இருக்கும். ஆனால் இவள் அப்படிக் காட்சியளிக்கவில்லை. இவளை லேபான் பார்த்தால் அனுபவிக்கத் துடிப்பான். திரும்பிப் போய் விடுவது என்ற எண்ணத்தில் திரும்பிச் செல்லத் துவங்கினான்.

    ஓக் மரத்திலிருந்து பறந்து வந்த பனித்தூவல் இவனது முகத்தில் ’பளிச்’ என்று இறங்கியது. விதி யாரை விட்டது? அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டு தலைநிமிர்கையில், வந்து நின்றிருந்தாள் அவள்.

    கண்கள் சிவந்திருந்தன. பனிக்காற்றில் முகமும் கழுத்தும் கைகளும் உலர்ந்து வற்றிய செவ்வாழைத் தண்டு போல இருந்தது. அந்த அலங்கோலத்திலும் தேவதை போல இருந்தாள். சித்திரம் போல அசையாது அப்படியே நிற்கிறாள். பேசுவதற்கு அவளால் முடியவில்லை. அப்படியே நிலைகுலைந்து கீழே இருந்த பனிக்களிம்புச் சகதியில் ’தொத்’தென விழுந்தாள்.

    அலாக்காகத் தூக்கியபடி தான் ஓட்டிக் கொண்டு வந்த வண்டிக்கே வந்தான் பீட்டர்சன். லேபானுக்கு வியப்பாய் இருந்தது. பீட்டர்சன் அவ்வளவு சுலுவாக இந்த வேலையில் இறங்கமாட்டான் என்பது அவனுக்குத் தெரியும்.

    உள்ளே அவளைக் கிடத்தியதும்தான் லேபானுக்கு நிலைமை புரிந்தது. தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டு அவள் முகத்தில் தெளித்தான் லேபான். இரு கைகளைப் பற்றித் தோய்த்து வெப்பமூட்டினான் பீட்டர்சன்.

    கொஞ்சம் கொஞ்சமாக சீர்நிலைக்கு வந்தாள் வெண்முத்துச் சிங்காரி. சாப்பிடுவதற்கு உருளைக்கிழங்கு நொறுவலைக் கொடுத்தான் லேபான். கீழிறங்கிப் போய் சூடாக மோக்கா வாங்கி வந்தான் பீட்டர்சன்.

    வாய்ப்பே இல்லாத முகம். முகட்டு மேட்டில் பொதிந்திருக்கும் பனி போன்ற உடல். வாளிப்பாய் இருக்கிறது இருக்க வேண்டிய எல்லாமும். அதரங்கள் கோவைப்பழத்தை தோற்கடித்து அவமானப்படுத்தின. மைபூசாமல் வதங்கிய இந்த நிலையிலும் வசீகரிக்கிறது கண்கள். என்ன பேசினாலும் எதோ ஒரு சொல்தான் ஆங்கிலத்தில் வருகிறது. இனியும் இங்கிருக்க வேண்டாமென நினைத்து வண்டியைக் கிளப்பினார்கள் இருவருமாகச் சேர்ந்து.

    பத்து மைல்கள் தள்ளிப் போய் சிற்றுண்டிச் சாலையொன்றுக்கு அவளையும் அழைத்துப் போனார்கள். சிறுகச் சிறுக உண்டு பசியாற்றினாள் அவள். அவள் உண்பதை இவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள். அவளைக் கண்களால் தின்றே பசியாற்றிக் கொண்டார்கள் இருவரும்.

    பல மணித்தியால விருந்தோம்பலுக்குப் பின்னால் அவளுக்கான பின்புலமும் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெரியலாயிற்று. அவளொரு மோல்டோவாப் பைங்கிளி. பெயர் ஷெல்ஃபியா. மோல்டோவா நாட்டில் இருக்கிற கோசேனி எனும் சிற்றூரைச் சார்ந்தவள். வீட்டில் இவள்தான் மூத்தவள். இவளுக்கு ஐந்து தங்கைகளும் ஒரு தம்பியும்.

    நான்கு மாத டூரிஸ்ட் விசாவில் கனடாவிற்கு முகவர் ஒருவனது ஏற்பாட்டின் பேரில் முலையாட வந்திருக்கிறாள். முலையாடுவது என்பது ஒரு பேருக்குத்தான். மற்றபடி உரிந்த கோழியாய் நாடக நாட்டியம், கொக்கோகக் கலைகள் எல்லாமும் மேற்கொண்டு களிப்பூட்ட வேண்டும்.

    சரக்கு வண்டியொன்றிலேற்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டு இவளைக் கைகழுவி விட்டான் அழைத்து வந்தவன். நான்கு மாத வருமானம், கடவுச்சீட்டு முதலான எல்லா உடைமைகளையும் இழந்தபடி இப்போது இவர்களிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறாள் ஷெல்ஃபியா.

    அவளை ஓரிடத்தில் எங்காவது தங்க வைக்க வேண்டும். அவர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் மெம்ஃபிசுக்கே வந்தான் பீட்டர்சன். தேவாலயப் பெரியவர் ஒருவரின் உதவியின் பேரில் வாடகைக்கு வீடு பிடித்துத் தங்கினர் மூவரும். இதில் பீட்டர்சனுக்கு மட்டுமே வேலை தேடத் தேவையான சோசியல் செக்யூரிட்டி எண், பிறந்தநாள் சான்றிதழ் இருக்கிறது. மற்ற இருவருமே, சட்டத்துக்குப் புறம்பாகத்தான் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

    உள்ளூர் வேலை தேடித் திரியும் போதுதான், துப்புரவுப் பணியாளர் வேலைக்காக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தான் பீட்டர்சன்.

    பெண் என்பவள் வாழ்க்கையில் வந்து விட்டால் எல்லாமும் நிகழ்கிறது.

    கடந்த நான்காண்டுகளாக எங்களில் ஒருவனாகத்தான் இருந்து வருகிறான் பீட்டர்சன். மிகவும் நேர்மையானவன். மதிய உணவு இடைவேளைகளில் எங்களுக்கு உணவுப் பண்டங்கள் வாங்கி வருவான். எங்கள் கார்களுக்கு ஏதேனும் பராமரிப்பு வேலையிருப்பின், அவனிடமே கொடுத்தனுப்பிச் செய்து கொள்வோம். விடுமுறை நாட்களில் தத்தம் வீட்டு வேலைகளுக்கும் கூட வேண்டிய உதவியை அவனிடமிருந்து வெகு இயல்பாகக் கேட்டுப் பெறுவோம் நாங்கள்.

    பீட்டர்சன் எங்கள் அலுவலகத்தில் வேலைபார்க்க, லேபான் அவனது பாணியில் சிறுதொண்டு வேலைகளைச் செய்து கைக்காசு பார்த்து வந்தான். பெரிய பெரிய கிடங்குகளுக்கு பாரந்தூக்கும் வேலைக்குப் போவான்.  பாரந்தூக்கி வேலை பார்த்து வரும் வருமானத்தைக் காட்டிலும் களவாடிக் கொண்டு வரும் பொருட்களை விற்றுப் பெரும் பணம் பார்த்து விடுவான். அவ்வப்போது சிறையிலும் அடைபட்டுக் கொள்வான். இப்படியாக வெளியே வருவதும், உள்ளே செல்வதுமாய் இருப்பான் லேபான்.

    லேபான் கொண்டு வரும் பொருட்களை ஈபே இணையதளத்தினூடாக விற்றுக் காசாக்குவது ஷெல்ஃபியாவின் வேலை. எல்லாவற்றுக்கும் ஆதாரம் பீட்டர்சனின் சோசியல் செக்யூரிட்டி எண்தான். அது இல்லாவிட்டால், வங்கிக் கணக்கு, கடனட்டை என எதுவும் வைத்திருக்க முடியாது இவர்களால்.

    பீட்டர்சன் வெளிப்படையாகவே சொல்வான். ”இனி எங்களால் ஷெல்ஃபியை விட்டு இருக்க முடியாது. நானும் லேபானும் அவளைப் பகிர்ந்து கொள்கிறோம். அவளும் எங்கள் இருவரையும் முழுமையாக நேசிக்கிறாள். எங்களது எதிர்காலமே அவள்தான் இனி!” என வெள்ளை மனத்தோடும் புளகாங்கிதத்தோடும் சொல்வான். நான்கு, ஐந்து முறையாவது என்னிடம் சொல்லியிருப்பான். இணங்கிய ஒன்றிப்பு ஈடேறுகிற இடத்தில் வக்கிரத்துக்கும் விரசத்துக்கும் வன்முறைக்கும் இடமில்லை.

    மெம்ஃபிசு நகரில் மிசிசிப்பி பேராறு ஓடுகிறது. அவ்வப்போது பனி பெய்கிறது. பூமி எல்லாரையும் போல இவர்களையும் அரவணைக்கிறது. வானம் வாழ்த்துகிறது. சரியான கல்வி கிடையாது. ஆனாலும் அவர்களுக்குள்ளான புரிதல் உண்டு. ஷெல்ஃபியின் குடும்பத்தாருக்கு அவள் மாதாமாதம் பணம் அனுப்பி வைக்கிறாள். இந்த ஆடவர் இருவரே அவளுக்கான தேவதூதன்கள்.

    மோல்டோவாவை விட்டுக் கிளம்பு முன்னர் குலதேவதையிடம் வேண்டச் சென்றாளாம் ஷெல்ஃபி. அப்போது அவர்களது குலவழக்கப்படி முட்டைக்கோசு ஒன்றை எடுத்து கோவில் தளத்தில் உருட்டியிருக்கிறாள். வலது புறமாகச் சென்றால் வாழ்வில் ஏற்றம் என்பது மரபாம். எனக்கும் வலதுபுறமாகத்தான் உருண்டோடியது. அது போலவே எனக்கு நல்லதே நடந்திருக்கிறது எனச் சொல்லி மகிழ்வாளாம் அவள்.

    கொஞ்சநாட்களாகவே அவ்வப்போது உடம்புக்கு சரியில்லாமல் வருகிறதாம் அவளுக்கு. கடை மருந்துகளைக் கொடுத்தே சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களிடம் அவ்வப்போது சொல்வான். ஆனால் இப்படியொரு ஏற்பாட்டினைச் செய்திருப்பதாகக் கடைசிவரை சொல்லவே இல்லை.

    பீட்டர்சனுக்கு சிறையிலிருந்த அனுபவம் உண்டு. அப்போது நண்பனானவன்தான் கார்லோசு. இவனொரு மெக்சிகன். கருந்துவக்கு, தூள், மெர்சுவானாத்தழை போன்றவற்றின் ஏகபோக முகவர் இவன். இவனுக்கான கட்டமைப்பு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா என எல்லை தாண்டியதாகும்.

    அமெரிக்காவில் துப்பாக்கி(துவக்கு) வாங்குவதென்பது கடைவீதிக்குப் போய் செருப்பு வாங்குவதற்கு ஒப்பானதாகும். கடைச்செருப்பு வாங்க வேண்டுமென்றால் கூடுதலாகச் செலவு ஆகும். கார்லோசு போன்ற ஆட்களைப் பிடித்தால் மலிவான விலையில் தெருச்செருப்பு வாங்கலாம். ஐந்து டாலரிலிருந்து ஐயாயிரம் டாலர்கள் வரையிலுமான இந்த கள்ளச்செருப்புகளை வகைவகையாக வாங்கிக் கொள்ளலாம். வாங்கி வைத்துக் கொண்டு, இவனை அவன் தீர்த்துக் கட்டலாம். அவனை இவன் தீர்த்துக் கட்டலாம். தூள் பாவிப்பதில் பாடசாலைகளுக்குத்தான் முதலிடமாம். மாணவர்கள் படிப்பதற்குப் போகிறார்களா, தூளுறிஞ்சி சொக்குசொகம் காணப் போகிறார்களா தெரியவில்லை. தூள் விற்பவர்கள் பிஎம்டபுள்யூ, லெக்சசு, பென்சு  போன்ற உயர்தரக் கார்களில்தான் வந்து போகிறார்கள். மர்சுவானாத் தழைக்கு சில மாகாணங்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டன. மற்ற மாகாணங்களுக்கு, மெக்சிகோ இருக்க கவலையேன்? கார்லோசுகளும், மார்ட்டினெசுகளும் வேண்டிய அளவு கொண்டு வந்து கொடுப்பார்கள். பீடி போல ஊதித்தள்ளலாம். பிஸ்கெட், பாண் போன்ற பண்டங்களிலும் போட்டு உண்ணலாம். உலகத்தை மறந்து உல்லாசமாய் இருக்கலாம். அதே உல்லாசத்தோடு பரலோகத்துக்கும் கதியாய்ச் சென்று சேரலாம்.

    கார்லோசின் உதவியோடு மெக்சிகோவுக்குச் சென்றுவிட்டால், ஷெல்ஃபிக்கான மருத்துவம் பெறுவதில் எவ்விதச் சிக்கலும் இல்லையாம். அதுதான் ஹூசுடன் அருகிலிருக்கும் நுவலார்டோ காட்டுவழிச் சிறுபாதையினூடாக மெக்சிகோவுக்குச் சென்று விட்டார்கள். குழந்தைப் பிறப்புக்கான பேறு கால மருத்துவத்திற்காகக் கூட ஷெல்ஃபியை அவர்கள் அழைத்துச் சென்றிருக்கக் கூடுமென்கிறான் நெட்டைக்கொக்கு ஜான் லொஷன்ஸ்கி.

    பீட்டர்சன் எங்கள் அலுவலகத்தை விட்டுச் சென்ற பின்னர், இங்கு எல்லாமே தலைகீழாக மாறிப்போய் விட்டது. எனினும், அவன் சொன்னபடியே  மால்டோவா முகவரிக்கு வெஸ்டர்ன்யூனியன் மூலமாக பணவிடை(money order) அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த மாதம் இன்னும் அனுப்பவில்லை.

    நாங்கள் வேலைபார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தைப் பிறிதொரு நிறுவனம் விலைக்கு வாங்கிக் கொண்டபடியால், நிறுவனத்தின் மெம்ஃபிசு நகர அலுவலகம் மூடப்பட்டு விட்டது. பெரும்பாலானோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். நாங்கள் மிகச் சொற்பமானோர் மட்டுமே வேறு வேறு அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டு பணியில் இருக்கிறோம்.

    இனி நான் பீட்டர்சனைச் சந்திப்பேனா தெரியாது. அவன் குறித்த எந்தத் தகவலும் என்னிடத்தில் இல்லை. என்னைப்பற்றிய தகவலும் அவனிடத்தில் இருக்குமா என்பது ஐயத்திற்குரியதே. உயிர்த்த நொடியிலேயே சாவுக்கான பயணமும் துவங்கி விடுகிறது. அத்தகைய பயணத்தில் பலரைச் சந்திக்கிறோம். அதற்கான நேரம் வரும் போது பயணத்தின் இடையிலேயே அவரவரிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள நேரிடுகிறது.

    ஊரே அடங்கி விட்டது. உறைபனியின் கனம் தாங்காமல் ஒடிந்து சாளர ஆடியின் மீது விழும் மரக்கிளையின் உராய்வொலி  அதிர்ந்து கேட்கிறது. கோலியர்வில் குளத்தில் கனடியக்கீச்சுகளின் சத்தம் அவ்வப்போது. இவ்வளவு பெரிய பேராறு, மிசிசிப்பி பக்கதிலேயே ஓடுகிறது. ஆனாலும் அதற்கான அறிகுறி ஏதுமில்லை.

    சத்தமின்றி கள்ளப்பூனை போல அடுத்திருக்கும் அறைக்குப் போனேன். குழந்தைகள் நன்றாய்த் தூங்குகிறார்கள். மீண்டும் வந்து படுக்கையில் மிகக் கவனத்துடன் படுத்தேன். அவள் கண் விழித்தால் அவ்வளவுதான். ஏன் இன்னமும் தூங்காமல் உயிரை வாங்குகிறீர்கள் எனச் சாமியாடுவாள்.

    எழவு தூக்கமும் வரவே மாட்டேன் என்கிறது. மீண்டும் மீண்டும் அமேசான் நினைவே வந்து படுத்துகிறது. அதனால்தான் எனக்கு இப்படி நடக்கிறது. தீர்மானமாய் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். மால்டோவாவுக்கு இனியும் பணம் அனுப்பித்தான் வைக்க வேண்டுமா என நினைத்து அனுப்பாமல் இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. அருவருப்பாய் இருக்கிறது.  குற்றம்தான். அதுதான் அமேசானில் போட்ட காசு கரையத் துவங்கிவிட்டது. விடிந்ததும் அமேசான் பங்குகளை விற்றுவிட வேண்டும். மறுபக்கம் புரண்டு படுத்தால், கை உளைகிறது.

    வெஸ்டர்ன் யூனியன் கடை இருப்பது கேஷ் ஸ்டேசனில்தான். அது இரவிலும் திறந்திருக்கும். இந்த மாதம், அடுத்த மாதம், இரண்டு தவணைகளையும் கட்டிவிட்டு வந்தாலென்ன? கேள்விகள் மனத்தையும் மண்டையையும் குடைந்தெடுக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோர்டோவா கேஷ் ஸ்டேசனில் நடந்த துப்பாக்கி விளையாட்டுக்கு நான்கு காவு விழுந்ததாம். ஆடு காவு கொடுத்தலையும், கோழி காவு கொடுத்தலையும் மனிதன் இரசிக்கிறான். மனித காவுகளை யார் இரசிக்கிறார்கள்? மிகவும் முக்கியம். கண்ட கண்ட கேள்விகள் சுயம்புகளாக வந்து துளைத்துப் படுத்துகின்றன. கைச்செலவுக்குக் காசு இல்லாத நேரத்தில் வந்து, பரிகாரம் பனிரெண்டு செய்யணும் என்பானாம் சாமக்கோடாங்கி.

    விருட்டென்று எழுந்து வெளியே வந்தாள்.

    ”என்ன இது? இந்த நேரத்துல எங்க போறீங்க??”

    “வயிறு ரொம்ப வலிக்குது. வயிறு கட்டிகிச்சு போலத் தெரியுது.  வால்கீரீன்சுல மலமிளக்கி, அதான் அந்த கிளிசரின் ஸ்டிக்ஸ் வாங்கிட்டு வரலாம்னு”

    “இந்த நேரத்துலயா? அதெல்லாம் வேண்டாம். டீ போட்டுக் குடுக்குறேன்.  சித்த நேரத்துல வந்திடும்!”

    “இல்ல; போய் வாங்கிட்டே வந்துடுறேன். ப்ளீஸ்டா கண்ணம்மா!!”

    பனித்தூவல் அறவே நின்றிருந்தது. வானம் யாருக்கும் வஞ்சனை செய்வதில்லை. தன் எல்லைகளை முழுக்கத் திறந்தே விட்டிருக்கிறது. யாரிடமும் கட்டணமேதும் வாங்காமல் அதன் போக்கில் வீசிக்கொண்டிருந்தது காற்று. தன்னுள் இருக்கும் மினுமினுப்புகளை மின்னித் தீர்ப்பதில் யார் முதல் என்பதில் போட்டி போட்டிக் கொண்டிருந்தன சகல விண்மீன்களும். இப்போது கேட்கிறது ஓய்வில்லா மிசிசிப்பியின் மெல்லொலி. நெஞ்சு நிமிர்த்தி சட்டைப்பைக்குள் கையை விட்டுத் துழாவியெடுத்துப் பார்க்கிறேன். இளக்காரக் குறும்புடன் செல்லமாய்ச் சிரிக்கிறது மால்டோவா நாட்டின் கோசேனி.

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 3

     சு.கோதண்டராமன்

    அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

          இறைவன் கண்ணனாக அவதரித்துப் பாரதப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாகப் பணி புரிந்தது நமக்குத் தெரியும். அதே கண்ணன் துரியோதனனாக வடிவெடுத்து அர்ஜுனனோடு சண்டையிட்ட செய்தி தெரியுமா?

    இது என்ன புதுக்கதை? பாரதத்திற்குப் போட்டியாக யாரேனும் நாத்திகர் கீரதம் என்று ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்ன?

    இதை எழுதியவர் நாத்திகர் அல்ல. அத்வைத வேதாந்தத்தில் தோய்ந்து கண்ணனின் பரம பக்தராக வாழ்ந்து, இன்று பதின்மூன்றாவது ஆழ்வாராகப் போற்றப்படும் பாரதி தான் இப்படிச் சொல்கிறார்.

    அரைச் செய்தி சொன்னால் குழப்பமாகத் தான் இருக்கும். முழுவதையும் கேளுங்கள்.

    கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எதைக் கொண்டு படைத்தார் என்ற வினாவுக்கு விடையாக அத்வைதம் கூறுகிறது – கடவுள் எதைக் கொண்டும் உலகைப் படைக்கவில்லை. தானே பிரபஞ்சமாகத் தோற்றம் காட்டி அருளினார். அப்படி என்றால் இங்குக் காணப்படும் மலைகள், கடல்கள், காடுகள், விலங்குகள், மனிதர்கள் எல்லாமே கடவுளின் வெவ்வேறு தோற்றங்கள் தாமே. அப்படி இருக்க, மானிடரில் சிலரைப் பகைவர் என்று கூறி வெறுக்கிறோமே அது சரியா? சரி அல்ல. அதனால் தான் பாரதி கூறுகிறார் –

    பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்

    புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே

    பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

    ‘யாரையும் மேல் தோற்றத்தை மட்டும் பார்த்து மதிப்பிடக் கூடாது. ஆழ்ந்து நோக்குக. புகை நடுவில் தீ போல, சிப்பியினுள் முத்து போல, குப்பை நடுவே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி போல, பகைவனிடத்திலும் உறைவது பிரம்ம சைதன்யமே. தின்ன வரும் புலியைப் பார். அதன் கண்ணில் தெரியும் பசியைக் கூர்ந்து நோக்கு. பராசக்தி தென்படுவாள். எந்த தேவி எல்லா உயிரினங்களிலும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அந்தத் தேவிக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் என்று தேவி பாகவதம் கூறுவதைச் சிந்தனை செய். அந்தப் பராசக்தியைக் கும்பிடு.

    ‘எல்லா உயிர்களாகவும் இருப்பது ஒரே கடவுள் என்றால், எதிரி என்று முத்திரை குத்தி ஒருவனை அழித்து விட்டு நீ வாழ நினைப்பது எவ்வளவு பேதைமை? எதிரியை அழிப்பதன் மூலம் நீ கடவுளை அழிக்க முயல்கிறாய். நீயும் கடவுள் தானே? அதாவது உன்னையே நீ அழிக்க முற்படுகிறாய்.

    ‘இதெல்லாம் கடவுளின் லீலை என்பதை உணர்க. அவனே புலியாகவும் மானாகவும் வடிவெடுத்து ஒன்றை ஒன்று அழிப்பதாகத் தோற்றம் காட்டுகிறான். எதுவும் அழிவதும் இல்லை, எதுவும் அழிக்கப்படுவதும் இல்லை. மாயத் தோற்றங்களில் ஒன்று மறைகிறது, ஒரு புதிய மாயத் தோற்றம் ஏற்படுகிறது.

    ‘பாரதக் கதை கேட்டிருக்கிறோம். அங்கே, பார்த்த சாரதியாக வந்தது மட்டும் கண்ணன் அல்ல. அங்கு இருந்த அனைத்து மனிதர்களும் விலங்குகளும் உயிரற்ற பொருள்களும் கண்ணனே. அவனே தன்னை இப்படிப் பல  கூறாக ஆக்கிக் கொண்டு பாரதப் போர் என்னும் மாயையைத் தோற்றுவித்தான். சுருக்கமாகச் சொல்லப் போனால், பார்த்த சாரதி மட்டுமல்ல, பார்த்தனும் கண்ணனே, அவனை எதிர்த்த துரியோதனனும் கண்ணனே, அவனது தம்பிகளும் கண்ணனே.

    ‘விசுவரூப தரிசனம் தந்து நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ற முக்காலத்தையும் காட்டின கண்ணன் தன் உடலுக்குள்ளேயே இரு திறத்துப் படைகளையும் உள்ளடக்கிக் காட்டவில்லையா? இந்த உண்மையைச் சந்தேகம் இன்றித் தெரிந்து கொண்டால் உன் உள்ளம் நிறைவு பெறும். சிறிதேனும் சந்தேகம் கொண்டால் குடம் தேனில் ஒரு துளி விஷம் என்ற கதை ஆகிவிடும்’ என்பது பாரதியின் கருத்து.

    இனி அப்பாடலைப் பார்ப்போம்.

    பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்

    புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே

    பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

     

    சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ?

    குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி வளராதோ?

     

    உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ?

    தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?

     

    வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?

    தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவான் என்ற சாத்திரம் கேளாயோ?

     

    போருக்கு வந்தங்கெதிர்த்த கௌரவர் போல வந்தானும் அவன்

    நேருக்கருச்சுனன் தேரிற் கசை கொண்டு நின்றதும்   கண்ணனன்றோ?

     

    தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையிற் போற்றிடுவாய்

    அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் அவளைக் கும்பிடுவாய்.

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2012/09/bharathiyar-4.jpg

    Share
  • “குறையொன்றுமில்லை”!…..

    பெருவை பார்த்தசாரதி

     

    ‘எப்படியோ?..ஒரு வழியா என்னோட பையன் கணேஷ் லவ் மேரேஜ் பண்ணிகிட்டு அஞ்சு வருஷம் ஆவுது’………….உன்னோட பொண்ணத்தான் அவனுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு எனக்கு ஆசை, ஆனா, ‘காதல்’, ‘லவ்’ அது இதுன்னு போயிட்டதால, என்னால ஒண்ணும் செய்யமுடியல!….  எங்களோட பேச்சக் கேக்காம அவன் நினச்சத சாதிச்சுக்கிட்டான்….நண்பன் சுரேஷிடம் சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் ஸ்ரீராம்…

    அப்பா சொல்றத பையன் கேக்காததும், பையன சொல்றத அப்பா உதாசீனப் படுத்தறதும் சகஜம்தானேப்பா?…..சரி, சரி, இப்ப பழசெல்லாம் கிளறாத, உன் மருமகளுக்கு வருஷக் கணக்கா உடம்பு சரியில்லன்னு சொல்லிகிட்டு இருக்கியே?…… ஓ வைராக்கியத்த விட்டுட்டு, ஒரு தடவ  போய் பாத்துட்டு வந்தா என்ன குறஞ்சா போய்டுவே?”…சுரேஷ் உரிமையோடு நண்பனைக் கேட்கிறான்.

    அதெல்லாம் ஒண்ணுமில்ல சுரேஷ், அவன் விரும்பியபடி லவ் மேரேஜ் பண்ணி, என்ன சுகத்த கண்டானோ தெரியல, அவன் தலயெழுத்து ஆஸ்பத்திரிக்கும், வீட்டுக்கும் அலஞ்சுகிட்டுருக்கான். விளையாட்ட அஞ்சு வருஷம் ஓடி போயிட்டுது, இது வரைக்கும் குழந்த பத்தி பேச்சே இல்ல, என்ன சிக்கலோ தெரியல….கடவுளுக்குதான் வெளிச்சம். அம்மனுக்கு காப்பு கட்டி இன்னியோட 7 நாள் ஆவுது, இன்னும் 3 நாள் போகட்டும் பட்டணம் போய் பார்த்துட்டு, கொஞ்ச நாள் அவனோட இருந்துட்டு வரலாம்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.  பெத்த பாசம் யார விட்டு வச்சுது சொல்லு, சுரேஷ்!……….

     ஸ்ரீராம் தன்னோட மனைவியோடு பையன் வீட்டுக்கு வந்து ஒருவாரமாகிறது

    அப்பா…….இன்னிக்கு நான் ஆபீஸ் போய்ட்டு அப்படியே டாக்டர பாத்திட்டு வரணும், ராத்திரி 11 மணிக்கு மேலாகும், நீங்க சாப்பிட்டு தூங்குங்கப்பா…..

    ஏங்க போன வாரம் கொடுத்த என்னோட பிளட் ரிப்போர்ட் வந்திருச்சா, டாக்டர் என்ன சொன்னாரு…கமலா

    தெரியல கமலா?…., ஒவ்வொரு டெஸ்டா எடுக்கச்சொல்றாரு…இப்ப எனக்கும்  சில டெஸ்ட்  எழுதிக் கொடுத்திருக்காரு.

    அன்று அலுவலகம் முடிந்து டாக்டரைப் பார்த்துவிட்டு, மனதிற்குள் ஏதோ ஒரு போராட்டத்தோடு வீட்டினுள் நுழைந்த கணேஷிடம்,

    ஏண்டா டாக்டரப் பாத்தியா, ஒரு வாரமா நான் வந்ததிலேர்ந்து அலஞ்சிகிட்டு இருக்கியே, என்ன சொல்றாரு டாக்டர், அவளுக்கு என்ன வியாதியாம்?..படபடப்போடு வினவுகிறாள் அம்மா…

    சும்மா தொண தொணன்னு ஏதாவது கேக்காதம்மா, சாப்டுட்டு போய் டிவி பாரு. எங்களுக்கு என்ன ஆனா, உங்க ரண்டு பேருக்கும் என்ன அவ்வள கவல, உனக்கும் அப்பாவுக்கும் வேற வேலயே கிடையாது. தின்னுட்டு போய் பேசாம படுத்துக்கங்க.  உள்ளுக்குள் எரிச்சலோடு வெடிக்கிறான் கணேஷ்.

    ஏண்டா அம்மாவ இப்படி கரிச்சுக் கொட்டற, உன்ன பத்துமாசம் சுமந்து பெத்தவ, அவளுக்கும் ஓம்மேல கரிசனமும், அக்கறயும் இருக்கு?…உனக்கு ஒண்ணுன்னா அவளுக்கும் பங்கு உண்டுடா!…

    அய்யோ, ஆபீஸல பிரச்னன்னு, வீட்டுக்கு வந்தா, நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து வார்த்தையால என்ன கொல்லறீங்க?.. உங்க பேச்ச கேட்காம, லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு எங்க இரண்டு பேரையும் வார்த்தையாலயே அப்பப்ப கொட்டுறீங்க……………நான் விரும்பின பெண்ணை கல்யாணஞ் செஞ்சுகிட்டதுல தப்பு கிடையாதுப்பா?…அதே மாதிரி உங்க ப்ரண்டு சுரேஷோட பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதும் தப்பில்ல?..இரண்டையுமே நீங்க எப்படி எடுத்துக்கறீங்க என்பதப் பொருத்துதான் அமையும்.

    அப்டி என்னதான் நா சொல்லிட்டேன், ஒரே அடியா எர வானத்துல ஏறி கத்துற. எங்க ரெண்டு பேரையுமே நீ மதிக்கல, நீ நெனச்சதயே சாதிச்சுட்டே, என்னோட உயிருக்குயிரான நண்பன் சுரேஷோட பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா, நாங்க ரெண்டு பேருமே பழக்கப்பட்ட குடும்பத்தோட அனுசரிச்சு, கொஞ்ச காலம் சந்தோஷமா இருந்திட்டு போய்ச்சேர்ந்திருப்போம்…அப்பா ஆவேசப்படுகிறார்.

    எது நடக்குமோ, அதான் நடக்கும்!….கணேஷ் முணு முணுக்கிறான்.

    அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கிற வாக்குவாதம் சரியில்லை என்பது தெரிந்ததும் “ஏங்க உள்ள வாங்க, வந்ததும் வராதுமா என்னங்க அப்பாவோட வாக்கு வாதம், ஏதோ பழசெல்லாம் மறந்திட்டு கொஞ்ச காலம் நம்மளோட இருக்கணும்னு வந்தவங்கள அவமதிக்காதீங்க” அவங்க அனுபவத்தில முதிர்ந்தவங்க……கணவனனச் சமாதானப் படுத்த நினைக்கிறாள் கமலா.

    பாத்தீங்களா?…..பாத்தீங்களா?, அவளுக்கு என்ன திமிறுன்னு, நமக்கு சோத்துக்கு வழியில்ல கடைசி காலத்துல இவகிட்ட வந்து ஒட்டிக்கிட்டதா ஜாடபேசுறா…இதுக்கு மேல இங்க குந்த வழியில்ல, இன்னிக்கே நம்ம கிராமத்துக்கே போயிடலாம்…அடுத்து கணேஷின் அம்மா படபடக்கிறாள்.

    ஏண்டா?…..மழ, தண்ணி இல்லாம வயக்காடல்லாம் காஞ்சு போச்சுன்னுதான், இங்க கொஞ்ச நாள் இருக்கணும்னு வந்தோம், இங்க நிலைமை தலைகீழா இருக்கு, ஒரு நிமிஷம் கூட நிம்மதியில்லையே!…அப்படி என்ன பாவம் பண்ணிணோம், நாங்க உன்ன பெத்து, வளர்த்து, படிக்க வைச்சு ஆளாக்குனதுக்கு?…அப்பா அழாத குறையாகப் புலம்புகிறார்.

    கணேசும், கமலாவும் தங்களுடைய ரூமுக்குள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொள்கிறார்கள்.

    கமலா நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காத, எங்க அம்மாவும் அப்பாவும் கிராமத்துலேயே வளர்ந்தவங்க, ரொம்ப சென்சிட்டிவ் டைப், சட்டுனு எடுத்த எடுப்பில வார்த்தயக் கொட்டிடுவாங்க, அப்பாவோட ப்ரண்டு சுரேஷோட பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல, இன்னிக்கும் அந்த வருத்தம் அவருக்குள்ள இருந்துகிட்டு ஆட்டிவைக்கிது. வேலைக்குப் போகாம, வீட்டிக்குள்ள சொல்ற வேலய செய்துகிட்டு கிடக்கிற மருமக வல்லியேன்னு எங்கம்மாவுக்கு ஆதங்கம். இதெல்லாம் தான் அவங்கள உன்ன அடிக்கடி வார்த்தையால கொட்டச் சொல்லுது. நீ ஒண்ணும் இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காத கமலா!….

    இதெல்லாம் ஓண்ணுமில்லீங்க, இது கிடக்கட்டுங்க, இன்னிக்கு கிளினிக்குப் போனீங்கள ரிப்போர்ட்ட கலெக்ட் பண்ணி டாக்டர்கிட்ட காமிச்சீங்களா? என்ன சொன்னாரு?….கமலா வினவுகிறாள்.

    ஆமா, ஆமா, காமிச்சேன், அவரு இன்னும் சில டெஸ்ட்டுக்கு எழுதிக் கொடுத்திருக்காரு,  உனக்கு எழுதிக் கொடுத்தது போதாதுன்னு, இப்ப புதுசு புதுசா எனக்கும் டெஸ்ட் எழுதிக் கொடுத்திருக்காரு. சில சமயம் கமிஷணுக்கு ஆசப்பட்டு, எல்லா டெஸ்ட்டும் எடுக்கச் சொல்றாரோன்னு தோணுது. நாளக்கி அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்காரு. நீயும் வரயா,

    இல்லங்க, நாளைக்கு உங்க நாத்தனாரும் இங்க வறாங்களாம், ரண்டு நாள் தங்குவாங்களாம். முதல் முறையா நம்ம வீட்டுக்கு வர அவங்களுக்கு ஒரு புடவயாவது எடுத்துக் கொடுக்கணுமில்லையா, நான் திநகர் போய் எல்லோருக்கும் நல்லதா எதாவது வாங்கிட்டு வர்ரேன். பணம் இருந்தா ஆபீஸ் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் கொடுத்துட்டு போங்க!…

    கமலா நீ ஒரு புத்திகெட்டவ, எங்க அம்மா, அப்பா எல்லோரும் வாய்க்கு வந்தபடி ஒன்ன கடுமையாத் தூத்துராங்க, நீ என்னடான்னா, அவங்கள, உழுந்து உழுந்து அவங்கள உபசரிக்கற.  போதாதுக்கு என் அக்கா வேற வந்து உனக்கு என்ன வெடி வக்கப் போறாங்களோ?….. கடவுளுக்குதான் வெளிச்சம்.

    ஆரம்பத்திலே அப்படிதாங்க இருக்கும், பழகப் பழக எல்லாம் சரியாயிடுங்க. உங்களுக்கு பிபி ஏறிடிச்சு, நீங்க ஆபீஸ் கிளம்புங்க, இன்று வெள்ளிக்கிழமை, புத்துக் கோயிலுக்கு போய் பால் தெளிச்சிட்டு வந்திடுறேன். அந்த அம்மனாவது நமது வயிற்றில் பால் வார்க்கட்டும் என்று சொல்லிவிட்டு நம்பிக்கையோட கிளம்புகிறாள் கமலா.

    கமலா போன பிறகு, “அம்மா……நேத்திக்கு கோவில்ல அப்பாவோட பிரண்ட் சுரேஷ் அவர் மகளப் பார்த்தேன். அதான் நம்ம கணேஷுக்கு பாத்தோமே, அவளப் பத்திதா சொல்றேன், அவ இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலயாம். எனக்கு ஒரு ஐடியா தோணுது, இப்ப நம்ம கணேஷுக்கு குழந்தயில்லாம அவஸ்த்தப்படரத நினச்சுப் பாக்கறப்ப, எப்படியாவது அவளயே இவனுக்குக் மறுபடி பேசி இரண்டாந் தாரமா கட்டி வச்சா என்னன்னு தோணுதும்மா?.. நீ அப்பாகிட்டப் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வா?….. நாத்தனாருக்கு வந்த வேலை ஆகிவிட்டது. நான் இப்ப ஊருக்குக் கிளம்புறேம்மா!..சீக்கிரம் உங்க முடிவச் சொல்லுங்க.

    கமலா புத்துக்குப் பால் தெளித்துவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது, அம்மாவும் நாத்தனாரும் பேசிக்கொண்டிருப்பது லேசாக காதில் விழுகிறது. அதைக்கேட்டு இடிந்து போன கமலா, அப்படியே அங்கேயே திண்ணையில் உட்கார்ந்துவிடுகிறாள்.

    கனேஷுக்கு அலுவலத்தில் வேல முடியவில்லை, சீக்கிரம் அங்கிருந்து கிளம்பி டாக்டரிடம் போகலாம் என்று முடிவெடுக்கிறான். போவதற்கு முன்பு, அவன் மனம் பலவாறு குழம்புகிறது, கமலாவுக்கு சும்மா அடிக்கடி ஜுரம் வருதுன்னுதானே போனோம், உண்மையா அவளுக்கு என்ன பிரச்சினை, சொல்லமுடியாதபடி அப்படி என்னதான் நோய், டாக்டர், அவ மலடி அது இதுன்னு ஏதாவது சொல்லிவிடுவாறோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு, டாக்டரின் ரூமுக்குள் நுழைந்து, என்ன டாக்டர் என்னோட மனைவியின் ரிப்போர்ட் பாத்தீங்களா.

    வாங்க கணேஷ், நான் இப்ப அவசரமா, ஒரு கிரிட்டிகல் ஆபரேஷனுக்காக கிளம்பிக் கொண்டிருக்கிறேன்….இந்த மெடிகல் ரிப்போர்ட்ல எல்லாம் எழுதியிருக்கிறேன். படிச்சுப் பாத்திட்டு, இன்னொரு நாளைக்கு நீங்க இரண்டு பேரும் வாங்க.

    அந்த ரிப்போர்ட கையில் வாங்கிய கணேஷ், அத படிச்சுப்பார்த்துட்டு, மிகுந்த குழப்பத்தோடு, வீட்டிற்கு வந்ததும், யாருடனும் பேசாமல் உள்ளே சென்று கதவைத் தாளிட்டுக் கொள்கிறான்.

    அவன் மனைவி காப்பியுடம் உள்ளே நுழைகிறாள். என்னங்க உங்கக்காவுக்கு வாங்கியிருக்கிற பொடவயப் பாருங்க. நல்லா இருக்கா. அப்படியே அம்மாவுக்கும் ஒண்ணு, அப்பாவுக்கு எட்டு முழம் வேஷ்டி துண்டு சேர்த்து வாங்கியாந்துட்டேன். அவன் முகம் ரொம்ப வாடியிருப்பதைப் பார்த்துவிட்டு, ஆபிஸ்ல ஏதாச்சும் பிரச்சினையா, வரும்போது உங்கப்பாவுக்காக, ஒரு அரை கவுளி கும்பகோண வெத்தல வாங்கி வரச்சொன்னேனே வாங்கிட்டீங்களா?….

    ‘வெத்தல’ அது இதுன்னு சொல்லி வந்ததும் வராததும் வெறுப்பேத்தாத கமலா?…,அதெல்லாம் வாங்க நேரமில்ல, டாக்டர்கிட்டே போய்ட்டு, அப்படியே நேரா இங்கதான் வரேன்.

    சரி சரி, அது போகட்டும், டாக்டர் என்ன சொன்னார்?….கமலா பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறாள்.

    கமலா, நான் சொல்லப் போறத கவனமா கேளு, மனச சிதற விடாம, பொருமையா கேப்பியா?……

    என்னங்க பெரிசா பொடி வச்சு பேசுரீங்க, எதுவா இருந்தாலும் சுத்தி வளச்சு சொல்லாம நேரடியாச் சொல்லுங்க. உங்க அப்பா, 10 மணியான சுருண்டு படுத்துக்குவாரு, அவருக்கு சாதம் போடணும்.

    நம்ம இரண்டு பேரையும் அறவே வெறுக்கற அம்மா, அப்பா, அக்கா எல்லோரையும் நீ ஒரேயடியாத் தாங்கற, ஆனா அவங்க அதெயெல்லாம் புரிஞ்சுக்காம, உன்ன அப்பப்ப கரிச்சுக் கொட்டறாங்க.

    அதெல்லாம் கிடக்கட்டும், இப்ப விஷயத்த சொல்லுங்கங்க…..கமலா கேட்கிறாள்.

    இடிபோல பட்டுன்னு ஏதாவது சொல்லப் போய், ஏடாகூடமா ஏதாவது ஆயிடக்கூடாதுன்னு நினைச்ச கணேஷ், மெதுவாக…இதமாக…..’கமலா, இரண்டு வருஷம் முன்னாடி, நம்ம ஜாதகத்த பாத்துட்டு ஒரு ஜோசியர் சொன்னாருல்ல, டாக்டரும் அதையே தான்’…………பேச்ச இழுக்கிறான் கணேஷ்.

    என்னங்க இழுக்கறீங்க, டாக்டர் உடனே சொல்லாம ஒரு வாரம் காலங்கடத்துனதுக்கு, இப்பதான் அர்த்தம் விளங்குதுங்க. நான் மலடின்னு டாக்டர் சொல்லப்போறார்ன்னு, நீங்க சொல்ல வந்தத இழுக்கும் போதே, எனக்கு சூசகமா எனக்குத் தெரிஞ்சுப் போச்சு, இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க.  நான் ஒரு மலடின்னு மட்டும் பேரு வாங்க மாட்டேங்க, ஒருவன் எவ்வளவு வசதியோட வாழ்ந்தாலும், குறை இல்லாத மனிதன் என்பவன் யாரும் இவ்வுலகில் கிடையாது. குறை இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டு, இருக்கறத வச்சுக்கிட்டு சந்தோஷமா “எனக்கு ஒரு குறையுமில்லை” என்று எவன் வாழ்கிறோனோ அவன் தான் உண்மையான மனிதப்பிறவி…?… இப்ப நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன், இரண்டு மாசத்துக்கு முன்னாடி, உங்களோட பிரண்டு ஒருத்தர் குடும்பத்தோட ஆக்சிடெண்ட்ல இறந்தப்ப, அவரோட குழந்தய எங்கோ ஒரு ஆஸ்ரமத்துல சேத்துட்டதா சொன்னீங்களே, அதுதாங்க இப்ப நம்மோட குழந்தயா ஆகப்போவுது. நாளக்கு நாம இரண்டு பேருமே அங்க போயி குழந்தய எடுத்துட்டு வந்துருவோம். குழந்தையில்லை என்ற குறை இனி நமக்குக் கிடையாது!………..கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு, ஒரு பெரிய சொற்பொழிவே தங்கு தடையில்லாமல் நிகழ்த்துகிறாள் கமலா. சிறிது நேரம் கழித்து மீண்டும் பெருமூச்சு விட்டு, மறுபடி தொடங்குகிறாள்…..இத பாருங்க, நீங்க இந்த விஷயத்துல முடிவெடுக்கலேன்னா, நா ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டேன்!……

    என்ன, என்ன சொல்லு கமலா, அவசர கதியில் அவசரப் படுகிறான் கணேஷ்!….

    உங்க அம்மா, அப்பா, நாத்தனார் இவர்கள் மூணு பேரும் எடுத்த முடிவை நான் மனதார ஆதரிக்கிறேன், உங்களுக்குச் சம்மதமா?…

    என்னன்னு சொல்லாமலாயே புதிர் போடாதா, நீட்டி வளச்சுப் பேசாம, சட்டுனு சொல்லு, கமலா

    அவசரப் படாதீங்க, இது இரண்டு பேரோட வாழ்க்கைப் பிரச்சின, இந்த விஷயத்துல இருவருக்கும் பூரண ஒத்துழைப்போடுதான் இத செயல்படுத்தமுடியும்.

    இதையெல்லாம் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்த கணேஷ் ஆறுதல் அடையவில்லை மாறாக, மீண்டும் அவன் உள்மனம் பதை பதைக்கிறது. சரி சொல்லு நான் நிதானமா கேட்கிறேன்.

    உங்களய கணவனா அடையுனுமின்னு, இன்னும் கன்னியாவே இருக்கிற உங்க அப்பாவோட நண்பன் சுரேஷ் பொண்ண உங்களுக்கு இரண்டாம் தாரமா கட்டி வைக்கிறதுக்கு உங்க அம்மா, அப்பா, அக்கா மூணு பேரும் முடிவு பண்ணிருக்காங்க.  எது எப்படியோ உங்களுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்பதால், நானும் இதுக்கு மனப்பூர்வமா சம்மதம் தெரிவிக்க முடிவுக்கு வந்து விட்டேன்.

    இதைக் கேட்டவுடன், இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறான் கணேஷ், அவன் மனதுகுள்ளே பல கேள்விக்கணைகள் துளைத்துக் கொண்டிருக்கின்றன.  அய்யோ கடவுளே என் மனைவியைப் பற்றி நான் எவ்வளவு தவறான எண்ணங்களுடன் டாக்டரிடம் சென்றேன்.  அவர் எழுதிக் கொடுத்த மெடிகல் ரிப்போர்ட், அவன் எதிரில் வந்து பூச்சாண்டி காட்டுகிறது.

    ஏங்க, நா எவ்வளவு சீரியஸான விஷயத்தைச் சொல்லிகிட்டிருக்கேன், நீங்க என்னடான்னா, எதைப் பத்தியோ யோசிச்சுகிட்டு இருக்கீங்க, இது வாழ்க்கப் பிரச்சினங்க. ஜோக்கா எடுத்துக் காதீங்க, ஒரு முடிவுக்கு வாங்க.

    கணேஷ்….மறுபடி மெளனமாகிறான்.

    என்னங்க நா திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கேன், நீங்க எதையுமே காதுகொடுத்துக் கேக்காம, எங்கோயோ மனசப் பரிகொடுத்துட்டு யோசிக்கிறீங்க!….

    மீண்டும் யோசனையில் மூழ்குகிறான்…..மனதுக்குள் மீண்டும் மத்தாப்பு.

    ‘கமலா சொல்வது போல, என் நிலைமையை எப்படி மற்றவரிடம் சொல்ல முடியும்?… கமலாவைப் போல ஒரு புதுமைபெண்ணை நான் மனைவியாகப் அடைந்தது கடவுள் கொடுத்த வரமல்லவோ?……குறை என்னிடம்தான் இருக்கிறது என்பதை முழுவதுமாகத் தெரிந்து கொள்வதற்கு முன், அதை மனைவியின் பக்கம் திருப்பி விட நினைப்பது எவ்வளவு பெரிய மடத்தனம்?. கள்ளம் கபடமற்ற கமலாவை எனக்குக் கொடுத்த கடவுளே!……’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமல்லவா!….கமலா சொன்னது போல் ‘எனக்கு ஒரு குறையுமில்லை’….என நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும்போதே குடுகுடுப்பைக்காரன் மாதிரி டமடமவென்று அந்த மெடிக்கல் ரிப்போர்ட் மீண்டும் மணி அடிக்கிறது.

    “கணேஷ், உங்களுக்கு கருவை  உற்பத்திசெய்கிற உயிரணுக்களில் உயிரணு இம்மியளவும் இல்லை’ மருத்துவத்தால் இந்தக் குறையை நிவர்த்தி செய்யமுடியாதெனினும், மனம் தளராமல் முயன்று பார்ப்போம்!.. அடுத்த வாரம் என்னை சந்தியுங்கள்”.

    இதை அப்படியே கமலாவிடம் சொல்லி விடலாமா?……..யோசித்தவன் சட்டைப்பையிலிருக்கும் மெடிக்கல் ரிப்போர்ட்டைத் தொட்டுப் பார்த்து கொள்கிறான்.

    Share
  • பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???

    பி.தமிழ் முகில் நீலமேகம்

    வினோதினி… வித்யா….

    இன்னும் எத்தனை

    வனிதையர்  ஆசிட்டின்

    அகோரப் பசிக்கு

    இரையாகி – துடித்து

    பலியாயினரோ ???

     

    காதல் வந்துவிட்டது –

    உன்மேல் எனக்கு !!!

    ஒற்றை வார்த்தையைக்

    கேட்டதும் – உங்கள்

    பின்னால் ஓடிவர

    பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???

     

    விரும்பியதாகவும் காதலித்ததாகவும்

    கூறுகிறீர் – நீங்கள் விரும்பும் ஒன்றை

    கண்ணெனக் காக்க மாட்டீரோ ??

    விரும்பிய ஒன்றை

    உருத் தெரியாமல் சிதைக்கவும்

    மனம் ஒப்பிடுமோ ???

     

    உங்கள் சகோதரிகளை

    கண்ணென காத்திட

    துடிக்கிறீரே – எல்லாப்

    பெண்களும் எவரோ ஒருவரின்

    சகோதரி தானென்பது

    ஏன்  உங்களுக்கு விளங்கவில்லை ???

     

    வலியோர் அநீதி இழைத்துவிட்டு

    சட்டத்தின் திரைக்குப் பின்

    முகத்தை மறைத்துக் கொள்ள

    இழப்பும் வலியும் ஏனோ

    எளியோருக்கு மட்டுமே !!!

     

    இறைவா !!! இனி

    சிருஷ்டிக்கும் ஒவ்வோர்

    பெண் சிசுவுக்கும்

    உறுதியான பாதுகாப்பான

    கவசத்தை கொடுத்து விடு !

    ஏனெனில், உன் பிரபஞ்சத்தில்

    பாவையருக்கு பாதுகாப்பு இல்லை !!!

     

    படத்துக்கு நன்றி: http://www.vikatan.com/entrichy/2012/09/zjexod/images/blog-4.jpg

     

    Share
  • “பச்சை நிறமே இல்லை”

    பி.பிரகாஷ்

     

    புழுதிப்படர்ந்த சாலையின் நடுவே வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது.

    ஜன்னலின் வழியாக எதயோ தேடிக்கொண்டிருந்தது, உள்ளே அமர்திருந்த ஸ்கூல் பசங்களின் கண்களும் , முன் இருக்கையில் அமர்திருந்த தலைமையாசிரியார் சுகவனத்தின் கண்களும்.

    சிக்னலில் சிவப்பு லைட் விழுந்ததை கவனித்த ட்ரைவர் வண்டியை நிறுத்தினார். மீண்டும் நீல லைட் விழுந்தவுடன் வண்டியை கிளப்பினார்.

    சற்று தொலைவில் ஒரு டீக்கடையில்  லேப்டாப்பில் செய்திகளை  படித்துக்கொண்டிருந்தவர்களிடம்  சென்ற சுகவனம் தன் கையில் இருந்த

    ஒரு புகைப்படத்தை காட்டி இதை பாத்தீருங்காளா? என்றார் , அதைப்பார்த்த அங்கிருந்தவர்கள்,

    இல்ல நாங்க பார்த்ததில்ல, இது என்ன?, என்று சிரிச்சிகிட்டே அவர்கிட்ட மறுபடியும் கேட்டனர்.

    தலையை அசைத்தவாரே மறுபடியும் வண்டிக்கு வந்தார்,

    செல்லும் வழியெல்லாம்  வெறும் தொழிற்சாலைகளும் , காற்றுகூட புகமுடியாதளவுக்கு நெருக்க கட்டபட்ட வீடுகளாகவும் தான் காட்சியாளித்தது.

    மஞ்சள் சால்வை போத்தினது  போல் எல்ல இடமும் ஒரே புழுதியாக இருந்தது.

    அங்க ஒரு இடதுல அழ்துளை  கிணறு தோண்ட அதிலிருந்து  தண்ணீர் வரம வெறும் ப்ளாஸ்ட்டிக் கழிவுகள் தான் தண்ணீரை போல வந்து கொண்டிருந்தது.

    சுகவனமும் வழியில் செல்லும் ஒவ்வொருத்தர்கிட்டயும், அந்த போட்டவை காட்டி கேட்க யாருமே தெரியாதுனு சொல்லீடாங்க.

    கடைசியாக அதைபார்த்த ஒருவர் எங்க தாத்தாவுக்கு தெரிஞ்சிருகணும் நினைக்கிறேன், வாங்க அவர்கிட்ட கேட்டு பார்ப்போம்.

    அந்த புகைபடத்தை தனது சுருங்கிய  கண்ணால் விரித்து பார்த்த பெரியவர், இந்த இடத்த பாக்காணும்னா இன்னும் நீங்க 300 கீ.மீ போகணும் சொன்னாரு.

    இதை கேட்ட சுகவனம் மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றிய சொல்லிவிட்டு அங்கிருந்தது கிளம்பினார்.

    மாணவர்களும் மகிழ்ச்சியில் ஆரவரம் போட்டனர். சற்று நேரத்தில் அவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்த இடத்திற்கு வந்துவிட்டனர்,

    பசங்களை வண்டியில் இருக்க சொல்லிவிட்டு சுகவனம் அலுவலகத்திற்கு சென்றார், தான் வந்த விபரத்தை காப்பாளரிடம் கூறினார்.

    அதைக்கேட்ட காப்பாளர்  சாரி சார் இன்னைக்கு பர்மிஷன் தரமுடியாது, இன்னைக்கு மட்டுமில்ல, இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க பார்க்கமுடியாது, ஏன்ன எற்கனவே எல்லாம் டிக்கெட்டும் புக் ஆயிட்டு.

    மூணு மாசத்துக்கு முன்னடியே  நீங்க புக் பண்ணிருக்கணும், அப்பதான்  நீங்க இப்ப பார்க்கமுடியும், இல்ல சார் எனக்கு தெரியாது, நாங்க ரொம்ப தூரத்துலேர்ந்து வர்றோம்,

    பசங்கலெல்லாம் ரொம்ப ஆசையோட வந்தீருக்காங்க, இப்ப நீங்க பார்க்கமுடியாதுனு சொல்லீடிங்கனா ரொம்ப ஏங்கி போயிடுவாங்கா.

    இதுவரைக்கும் எங்க ஸ்கூலேருந்து யாருமே அத பார்த்ததுயில்ல ,  சோ ,ப்ளீஸ் நீங்க தான் கொஞ்சம் உதவி பண்ணணும்.

    என்ன? சார் இப்படி தொல்ல  பண்ணுறீங்க,

    ஒரு நாளைக்கு 50 பேரதான் அனுமதிப்போம், இன்னைக்கு எல்லாமே புக் ஆயிட்டு,

    சரி ஒண்ணு பண்ணுவோம், 15 நிமிசம் டைம் தர்றேன் அதுக்குள்ள போய் பார்த்திட்டு வந்திடணும் சரிய?,

    ஒ,கே சார், அதுபோதும், சரி வாங்க என்று சொல்லி கேட்டை திறந்துவிட்டார். பசங்களை அழைத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார் சுகவனம்,

    பசங்களும் சுகவனமும் கண்ட காட்சி அவர்களை ஆச்சர்யபடவைத்தது,

    அவர்கள் வியப்புடன் பார்த்தது  முன்னே கம்பீரமாக நிற்கும் மரங்களைதான்.

    நாகரீக வளர்ச்சியில் காடுகள்  அனைத்தும் அழிக்கப்பட்டதால் அந்த மாணவர்கள் அப்போதுதான்  முதல் முறையாக மரங்களை  பார்க்கின்றனர்

    அவர்கள் முகத்தில் எல்லையில்ல மகிழ்ச்சி கரைபுரண்டு ஒடியது, சுகவனம் இதுதான் மரங்கள் என்று மாணவர்களிடம் கூறினார்.

    அது என்ன? நிறம்  என்று மாணவர்கள் கேட்க, இதுதான் பச்சை நிறம் என்று விளக்கினார்.

    இந்த காத்து ரொம்ப  சூப்பர இருக்கு, ஏதோ புது வாசம் அடிக்குது, இந்த காத்து வீச எவ்வளவு கரண்ட் செலவாகும், இதுக்கு எங்க சார் மோட்டார் இருக்கு,

    இது எப்படி? சார் ஒரே கால்ல நிற்குது, என்று அடுக்குகடுக்காக கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர் மாணவர்கள்.

    இதைக்கேட்ட சுகவனம் இதுதான்  சுத்தமான ஆக்ஸிஜன் உள்ள காத்து, இந்த மரத்துல பச்சையம் என்று ஒரு கெமிக்கல் இருக்கு, அதுனால்தான் இது பச்ச கலருல இருக்கு.

    மரங்களே இல்லததால்தான்  பச்சை என்கிற நிறமே இல்லாம போயிட்டு, அதுனாலதான் உங்களுக்கு பச்சை கலரே எப்படி இருக்கும்ணு?தெரியில

    இதுக்கு கிழ நிரைய வேர்கள் இருக்கும் அதுனால்தான் இப்படி நிற்குது .டேய் இலைகள பறிக்காதீங்க?

    எங்க காலத்துல மரத்துக்கு கிழேதான் பாடம் நடத்துவாங்க  இப்ப உங்களுக்கு மரத்த பற்றியே பாடம் நடத்த வேண்டியாத இருக்கு, இப்படி ஃபோட்டோவிலும்,புக்லேயும் மட்டும் தான் பார்க்க வேண்டியாதிருக்கு ,என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே

    அங்கு வந்த காப்பாளர் சார் உங்க டைம் முடிஞ்சிடுச்சி. நீங்க கிளம்புலாம் என்றார் .மிகுந்த மனவருத்ததுடன் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டனர்.

    ஆரம்பத்துல இந்த இடம் முழுக்க சுற்றுலாத்தலமதான் இருந்திச்சு, கொஞ்ச கொஞ்சம இங்க இருக்கிற மரத்தயெல்லாம் காலிபண்ணி பேக்டரியாவும்,ப்ளாட்டாவும் ஆக்கீடாங்க,

    கடைசிய இருக்கிறது இந்த இடம் மட்டும்தான், அதுனால்தான் இந்த இடத்த பத்திரம பாத்துக்கிறோம் என்று கூறிய காப்பாளருக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    அப்போது காத்துல மரங்கள்  ஆடுவது அனைவருக்கும் டாடா காட்டுவது போல் இருந்தது.

    மாணவர்களும் பதிலுக்கு  டாடா காட்டினர், அவர்களுடன் சேர்ந்த்து சுகவனமும் கையை அசைத்தார்.

    வண்டிபுறப்பட்டு சென்றுக்கொண்டிருக்கும் போது சட்டென நின்றது,

    முகத்தை துடைத்தவாறே எழுந்த சுகவனத்திற்கு அப்போதுதான்  தெரிந்தது தான் இதுவரை கண்டது கனவு என்று.

    சுகவனம் அந்த ஊரில் வசிக்கும்  பெரிய பணக்காரர், அவருக்கு சொந்தமாக ஒரு பள்ளியும் நிரைய தோட்டங்களும் உள்ளது.

    அவருக்கு சொந்தமாக  தோட்டத்தை  அழித்துவிட்டு ப்ளாட் போட  செல்லும்போதுதான் இந்த கனவு நடந்தது.

    மரங்கள் இல்லன அந்த ஊரு  எப்படி இருக்கும் என்பதைத்தான் இவ்வளவு நேரமா அவருடைய  கனவுல வந்தது.

    அதில் வந்த ஒவ்வொரு சம்பவமும் மனதில் ஈட்டியை போல் பாய்ந்தது.

    என்னயா ?முழுச்சிகிட்டீங்களா? என்று கேட்ட ட்ரைவர்  மணியிடம் ஆமாம் இப்பதான் முழுச்சிகிட்டேன்.

    எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்ய பார்த்தேன், என் மண்ண நானெ அழிகப்பாத்தேனெ, என்று மனசுக்குள்ளே நினைத்வாறே ,

    ஸ்கூலுக்கு சென்ற சுகவனம்  மத்த ஆசிரியர்களையும் தனது  உதவியாளரையும் தனது ரூமுக்கு அழைத்தார்

    இங்க இருக்குர மரத்தயெல்லாம் அழிக்கவேணாம், அப்படியே இருக்கட்டும்,

    அதுமட்டுமில்ல ஏற்கனவே  நாம போட்டு இருக்கிற எல்லா ப்ளாட்டிலேயும் புதுசா மரங்கல வாங்கிட்டு வந்துபோட்டுங்க,

    அத நம்ப ஸ்கூல் படிக்கிற ஒவ்வொரு பசங்ககிட்டேயும்  கொடுத்து நட சொல்லுங்க, அத அவங்களவிட்டே நல்ல பராமரிக்க சொல்லுங்க,

    சரியா விளையாத மண்ணுல அந்த மண்ண டெஸ்ட் பண்ணி அதுக்கு  ஏத்த மாதிரி சரியான மரங்களையும், பயிர்களையும் போடுங்க,

    அதுமட்டுமில்லாம நம்ப ஏரியாவுல இருக்கிற ஒவ்வொரு வீட்லேயும் ஒவ்வொரு மரம் கண்டிப்பா  வளக்கணும்ணு சொல்லுங்க,

    பத்து வீட்டுக்கு ஒரு குப்பைதொட்டிய நம்ப செலவுலே வச்சி கொடுத்துடுங்க, குப்பையயெல்லாம் அதுல தான் போடனும்,

    முடிஞ்சவரைக்கும் பிளாஸ்டிக் பொருள தவிர்க்க சொல்லுங்க .

    இத கொஞ்சம் கவனமா ஃபாலோ  பண்ணங்க என்று சொல்லியதோடு மட்டுமில்லாமல் அதை சரியாக கையாளவும் செய்தார்.

    அன்று முதல் அந்த ஊர் மற்ற ஊர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தது.

    ஒரு நாட்டின் வளம் நன்றாக இருக்கனும் என்றால்- அந்த நாட்டிலுள்ள காட்டின் வளம் நன்றாக இருக்கனும். எனவே நாமும் மரங்களை  வளர்ப்போம். காடுகளை பாதுகாப்போம்.

    Share
  • சங்கரா தொலைக்காட்சியின் சரசுவதி கடாட்சம்

    செல்வரகு

    சரஸ்வதி கடாக்ஷம்

    (காலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை)

    திங்கள் முதல் வெள்ளி வரை உங்கள் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, சரஸ்வதி கடாக்ஷம்.  இந்நிகழ்ச்சியானது, ஒவ்வொரு பள்ளிகளுக்கம் நேரிடையாக சென்று, அங்கு கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் தியான ஸ்லோகத்துடன் ஆரம்பித்து, சங்கல்பம், பூஜை, அர்ச்சனை, மற்றும் ப்ராத்தனைகளும் இடம் பெறும்.  இறுதியில், ஒரு சிறந்த கல்வியாளர், கல்வியின் நுணுக்கத்தை பற்றி விளக்குகிறார்.  இந்நிகழ்ச்சி, காலை 7.30 மணி முதல் 8மணி வரை நேரடியாக ஒளிப்பரப்பாகிறது.  உங்கள் பள்ளியும்  இந்நிகழ்ச்சியில்  இடம் பெற, ஸ்ரீ சங்கரா டிவியை தொடர்பு கொள்ளவும்.  044-45072009

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 7

    திவாகர்

    தேவன் ஒரு சகாப்தம் – 6

    ”ஏ பைத்தியக்கார மனிதனே1 நீ பிறரைப் பற்றி எவ்வளவு  தவறாக நினைக்கிறாய்? நீ ஒருவன்தான் கவலையுள்ளவன் போலவும்,பொறுப்பு உள்ளவன் போலவும் எண்ணி, பிறர் நிச்சிந்தையாக இருப்பதாக முடிவு செய்கிறாய்.! என்ன ஏமாற்றம் அது.! சிலசமயம் நான்ஒருவனே மேதாவி என்று இறுமாப்புக் கொள்கிறாய்! என்ன முட்டாள்தனம். ஒரு சமயம் நம் சகதியே சக்தி என்று மெச்சிக் கொள்கிறாய்! என்ன அசட்டுத் தனம்’ ”

    மிஸ்டர் வேதாந்தம் நடந்துகொண்டேயிருக்கும்போது இப்படித்தான் மனிதர்களைப் பற்றி வேதாந்தமாகப் பேசுவதாக தேவன் எழுதி வைப்பார். ’மிஸ்டர் வேதாந்தம்’ புத்தகத்தைப் படித்தவர்களைக் கேட்டால் இப்படி ஒரு அருமையான கதாபாத்திரத்தைத் தேவன் ஒருவரால்தான் படைத்திருக்கமுடியும் என்பார்கள். ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லாமல் எளிமையான வாழ்க்கைத் தத்துவத்தை மிஸ்டர் வேதாந்தம் என்கிற பாத்திரத்தின் மூலமாக தேவன் தந்திருப்பதே இதற்கு காரணம். வாழ்க்கையில் சுகமும் துக்கமும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை முதலிலிருந்து கடைசி வரை வேதாந்தம் மூலம் நாம் பார்க்கலாம்.

    சுகஜீவியாக கல்லூரி படிப்பு வரை வாழ்ந்தவன் வேதாந்தம். இவனைப் பற்றிய ஆரம்பகாலக் கட்டங்களை தேவனின் எழுத்துகள் மூலமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

    தூத்துக்குடி தேசிகாச்சாரி எனபவர் ஏழைகளான பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தாலும்கூட,அவரது வலது உள்ளங்கையின் மத்திய பாகத்தில் செங்குத்தாக ஒரு நீண்ட கோடு ஓடியது. ரேகை சாஸ்திரப் புத்தகங்களில் இது தனப்ராப்தியைக் குறிப்பதாகும் என்று போட்டிருக்கும்.அதையொட்டித்தானோ என்னவோ, அதே ஊரில் மிராசுதாராக இருந்த சக்கரபாணி அய்யங்காருக்குப் புத்திர சந்தானம் ஏறபடவில்லை. தேசிகாச்சாரியின் களை மிகுந்த முகமும் அவரை வசீகரித்தது.. இரண்டாம் பேரைக்கலந்து கொள்ளாமலே அந்தப்பிள்ளையை ஸ்வீகாரம் செயதுகொண்டு விட்டார்.

    நமது கதாநாயகனாகிய வேதாந்தத்தின் சாக்ஷாத் தகப்பனார்தான் இந்தத் தேசிகாச்சாரியார். தூத்துக்குடி கிராமத்தில் மாடிவீட்டில் உடகார்ந்துகொண்டு தம் ஏக புதல்வனாகிய வேதாந்தத்தை மாயவரம் ஹைஸ்கூலுக்கு அனுப்பி வைத்தார்.

    தேசிகாச்சாரி படித்தவர் இல்லை.தாமாகச் சம்பாதித்தவரும் இல்லை.’’ பூர்வ ஜன்ம க்ருதம்’’ என்று சொலவார்களே, அந்த நியாயத்தின்படி அவரிடம் தனம் வந்து சேர்ந்தது. அதைத் தன் பிள்ளைக்கு தாராளமாகச் செலவழித்தார்.

    பையன் பள்ளிக்கூடம் போகிறான் என்றால் , அது சாமான்யமான விஷயமாக கருதப்படவில்லை. மாயவரத்தில் தேசிகாச்சாரியின் பிள்ளையைத் தெரியாதபேர் கிடையாது. அவன் ஹோட்டலில் ஹல்வா தின்றால், அவன்கூட இருபது சகாக்களாவது ஹல்வா தின்பார்கள். பிள்ளையாண்டானுக்கு வெற்றிலைபாக்கு ஒரு ரூபாயக்குக் குறைந்து வாங்கத் தெரியாது.வாங்கினால், அதை ஒரேநொடியில் மாயமாக மென்று துப்ப நணபர்கள் காத்திருந்தார்கள். மாயவரத்தில் புதிதாக நாடகம், சர்க்கஸ், கண்காட்சி என்று எது வந்தாலும் வேதாந்தம் முதல்வரிசையில் இருந்து கொண்டு ஒரு டஜன் பரிவாரங்களுடன் பார்ப்பான்.

    வேதாந்தத்தின் தகப்பனார் தேசிகாச்சாரி,பிள்ளை சம்பந்தப்பட்ட வரையில் கடுமையான பேர்வழியே இல்லை.அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்.

    ஒருசில ஆப்தர்கள் தேசிகாச்சாரியிடம் , வேதாந்தம் இப்படி இருக்கிறானே, கவனியேன்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘இருக்கட்டுமே..நம்ம பையன்தானே, அவன் பாஸ் செயது முன்னுக்கு வந்து தங்கமும் வெள்ளியுமாக வேண்டியது சம்பாதித்துக் கொள்கிறான்!’’ என்று பதில் சொல்லி அனுப்புவார். அவர் எங்கிருந்து வாரி வீசுகிறார், அவர் வரும்படி என்ன என்பது ஒரு பெரிய மர்மம் .வேதாந்தம் அதைப்பற்றிக் கேட்டதும் இல்லை. மனத்தை வருத்திக் கொண்டதும் இல்லை.

    டென்னிஸ் மட்டைகளில் நாலு வைத்திருந்தான். உயர்ந்த துணிகளில் தயாரிக்கப்பட்ட உடுப்புகள் மூன்று பெட்டிகள் இருந்தன. புரொபஸர் ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்ல வேண்டியதுதான்.மறுநாள், என்ன விலையானாலும் லடசியம் செய்யாமல் வாங்கிவிடுவான்..

    இப்படிப்பட்ட பணக்கார வேதாந்தந்துக்கு விதி ரூபமாக வாழ்க்கை தடம் புரண்டது. அப்பா இஷ்டத்துக்கு வகை வழி இல்லாமல் செல்வத்தைச் செலவு செய்ததும் அல்லாமல் கடனும் நிறைய வாங்க ஆரம்பித்து செல்வந்தனாகவே மறைவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செத்துப்போனதும்தான் வேதாந்தத்துக்குத் தன் உண்மை நிலை புரிய ஆரம்பித்தது. பணம் இருக்கும் வரை, இனிப்பைச் சுற்றி பறக்கும் ஈக்கள் போல இருந்த உற்றார் உறவினர் கல்லூரிப் படிப்பின் கடைசி கால கட்டத்தில் அவனை விட்டு நீங்கியதோடு மட்டுமல்லாமல் மீதி இருந்த செல்வத்தையும் சூறையாடினர். அவனின் அந்தக் கஷ்டகாலத்தில் காப்பாற்றியது அவன் அத்தையும் அத்தை பெண்ணான செல்லமும் தான். அவர்கள் ஏழைதானென்றாலும் வேதாந்தத்தின் செல்லக் காதலியாக வளர்ந்தவள் செல்லம்.

    இனி அவன் பரிட்சையில் பெயில் ஆகி, சென்னை மாநகரம் வந்து அவதிப்பட்டு எழுத்துலகத்தில் போராடி தோல்வியுற்று பிறகு மெல்ல மெல்ல எப்படி வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை எட்டிப் பார்க்கிறான் என்பதுதான் கதை.

    தேவன் இந்தக் கதையில் சொந்த அனுபவங்களை ஆங்காங்கே தூவினாரோ என்னவோ, பத்திரிக்கையுலகையும், எழுத்தாளர்கள் நிலையையும் துல்லியமாக வெளிப்படுத்துவார் தன் கதையில். வேதாந்தத்துக்கு உதவி புரியும் ஸ்வாமியும் சிங்கமும், அதே போல அவனுக்கு எதிரியாக அவனை வதம் செய்யும் வைரம் போன்ற பாத்திரங்களும் இன்னமும் இந்தக் கால கட்டத்திலும் எங்காவது இருந்துகொண்டே இருக்கின்றனர் என்றுதான் நினைக்கத் தோன்றும். கள்ளமும், சூதும், கபடமும் நிறைந்த வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலுமே அதன் பிரதிபாவம் இருக்கின்றதை படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

    மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதுகையில், தேவனின் கதாபாத்திரங்கள் உருவாகியவுடன் அனுபவங்களின் ஊடே படிப்படியாக மெருகு பெற்று நேர்த்தியான முறையில் நம் உள்ளத்தில் பதிகிறார்கள், அப்படிப்பட்ட வகையில் வேதாந்தத்தின் பாத்திரப்படைப்பு என்பது தேவனின் ‘மாஸ்டர்பீஸ்’ என்பார். இது உண்மைதானே. செல்வம் மறைந்தாலும் நற்குணம் மறையக் கூடாது. ஏழ்மை சூழ்ந்தாலும் சோம்பல் கூடாது, என்பதோடு முயற்சிகள் முதலில் ஏமாற்றத்தைத் தந்தாலும் வெற்றியின் படிக்கட்டை நம்மால் அடையமுடியும் என்ற நம்பிக்கை எப்போதும் வேண்டும் என்பதே வேதாந்தம் நமக்குத் தரும் பாடம்.

    தேவன் இந்தக் கதையில் இன்னொன்றையும் வாசகருக்குத் தெரிவிப்பார். வேதாந்தந்துக்கு யார் யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ, யார் யாரெல்லாம் தீங்கிழைத்தார்களோ அவர்கள் எல்லோருமே வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்தில் ஏதாவது ஒருவிதத்தில் கஷ்டப்பட்டு யாருக்கு தீங்கிழைத்தாரோ அந்த வேதாந்தத்திடமே உதவி கேட்டு வருவது. இது நிச்சயமாக ஒரு எழுத்தாளரின் சமூகப் பணியாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். தீங்கிழைத்தவனாகட்டும், மோசம் செய்தவனாகட்டும் வருந்தியோ, தண்டனைப்பட்டோ ஆகவேண்டும் என்பதை சமூகத்துக்கு தெளியவைப்பதும் வாழ்க்கையில் அது ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதை வாசகர் மனதில் பதிப்பதும் சீரிய சமூகச் சேவைதானே.

    வேதாந்தத்தை போலத்தான் ஸ்ரீமான் சுதர்சனம் பாத்திரமும் நம் மனதில் பலமாக நிற்கக்கூடியதுதான். நிதர்சனங்களையும், தன்னை அழுத்தும் கட்டாயச் செலவினங்களையும் தாங்கமுடியாமல் ஒரு ஏழை குமாஸ்தா, அதுவும் தனியார் கம்பெனியில் பணிபுரியும் ஒரு சம்சாரி, நல்லவன், ஒவ்வொரு கட்டத்தில் திசை மாறுவதும், ஆனாலும் தகுந்த சமயத்தில் உண்மை உணர்ந்து திருந்துவதோடு மட்டுமல்லாமல் தான் செய்த குற்றங்களையும் தயக்கமில்லாமல் தன் முதலாளியிடமும் கடைசியில் தன் மனைவியிடமும் ஒப்புக் கொண்டு வருந்துவதும் ஒரு யதார்த்தமான முறையில் தேவன் நமக்குக் காண்பித்திருப்பார். சுதர்ஸனமும் அவன் மனைவி கோமளமும் தங்கள் தாய் தந்தையர்களை பட்டணத்துக்கு வரவழைத்து அவர்கள் மருத்துவத்துக்கு ஏற்பாடு செய்கையில் அவர்கள் படும் துன்பம், வலி எல்லாமே நகைச்சுவை போர்வையில் கொடுக்கப்பட்டிருந்ததால் சிரித்துக் கொண்டே வாசகனும் அவர்கள் வலியை உணரும் வாய்ப்பை அளிப்பார் தேவன்.

    அதே சமயத்தில் தேவன் வாழ்ந்த கால கட்டத்தில் இருந்த சமுதாயத்தில் முழுச் சூழலையும் இங்கே தெரிவித்திருப்பார். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலகட்டங்கள் மிக மிக ஏழ்மையானவை. பிரிட்டிஷ் அரசு அப்படித்தான் நம்மை விட்டுச் சென்றது என்பதுதான் உண்மை. சமூகம் நலிந்து கிடந்ததென்றால் அந்த சமூகத்தில் இருக்கும் மக்களின் சுயநலங்கள், பகை, மோசம் செய்தல், ஒருவனை ஒருவர் காட்டிக்கொடுத்து வாழுதல் போன்ற நீச குணங்கள் சமூகத்தில் ஏராளமாகவே வேரூன்றிக் கிடந்தாலும், நல்லவர் என நால்வர் இருப்பதால் மட்டுமே இந்த சமூகம் வாழ்கின்றது என்ற எளிமையான தத்துவங்களையும் தேவன் கதை மூலம் அறியலாம்.

    சென்னையில் வசிக்கும் மத்திய தர வர்க்கத்தினரைப் பற்றி மகாகவி பாரதியார் ‘ஆறில் ஒரு பங்கு’ எனும் சிறுகதையில் “ஸ்ரீமான் நாயுடுவுக்கு மூன்று வருஷத்துக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும் வீட்டில் ஒரு குழந்தையும் பிரமோஷன்’ என்று நகைச்சுவை பொங்க மக்கள் பெருக்கத்தையும் பொதுஜனக் கஷ்டத்தையும் விவரிப்பார். பாரதியார் காலத்திய கஷ்ட நிலை நாம் சுதந்திரம் பெற்ற பின்னும் வெகு காலம் நீடித்தது என்றே சொல்லவேண்டும். அடிமைகள் போல கஷ்டப்பட்டு அரையணா கூலிக்காக வேலைசெய்து பிழைப்பவர்கள் அந்தக் கால கட்டத்தில் உண்டு.

    ஸ்ரீமான் சுதர்ஸனமும் சரி, லக்ஷ்மி கடாட்சம் கதையானாலும் சரி, சற்று துன்பமயமாக சாதாரணமாகத் தோன்றினாலும் உண்மையில் எளிய நகைச்சுவையின் அடிப்படையிலேயே துன்பத்தைக் காண்பித்திருப்பார் தேவன். இது தேவன் டெக்னிக் என்றுதான் சொல்லவேண்டும். பொதுவாக துன்பத்தை அனுபவிப்பதும், அதைப் பற்றி எழுத பேச நிறைய வாசகர்களுக்குப் பிடிக்காது. ஆனால் சொல்லும் பாணி நகைச்சுவையில்தான் இருப்பதால் கடகடவென படித்துவிடத்தான் தோன்றும். முதலில் சிரிப்பாக இருந்தாலும் அந்தப் பாத்திரம் எத்தனை துன்பப்படுகிறது என்பது புரியும். ஆனால் ஏற்கனவே சொன்னது போலவே அந்தந்த கால கட்டத்தின் பிரதிபலிப்பு அந்தக் கதைச் சம்பவங்களில் ஏராளமாகக் கிடைக்கும்.

    மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும் மிகவும் பிடித்ததாக ‘ஸ்ரீமான் சுதர்ஸனத்தை’ சுட்டிக்காட்டுகிறார். ”பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்” (நன்றி – சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், பாகம் 1).

    நகர வாழ்க்கை இன்னமும் பலம் பெறாத கால கட்டத்தில் கிராமத்தில் உள்ள குடும்பங்களும், நகர வாழ்க்கைக்காக இடம் பெயர்ந்த குடும்பங்களும் (முக்கியமாக ஏழைகள்) எப்படியெல்லாம் அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற நிதர்சனம் இந்தக் கால வாசகர்களுக்குக் கிடைக்கும்.

    இப்படி சமூகங்களைப் பற்றிய நிலவரங்களை நகைச்சுவையோடு தன் பாணியில் பிற்கால சமூகத்துக்குத் தந்த தேவன் ஒரு புதுமை நிறைந்த புதினத்தை தமிழுலகத்துக்குப் பரிசாகத் தந்தார். அதுதான் ஜஸ்டிஸ் ஜகன்னாதன்.

    (தொடர்ந்து வரும்)

    படம்: கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    முருகனென்றாலே இனிமை என்றொரு பொருளுண்டு. முருகனைப் பற்றி நா பேசப் பேச நாவினிக்கும். கேட்க கேட்க செவியினிக்கும். அவன் திருப்புகழ் நமக்கு மாபெரும் திரவியம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆந்திராவில் முருகன் எப்போதிலிருந்து சரித்திரபூர்வமாக அறியப்படுகிறான் என்பதில் எனது ஆராய்ச்சிப் பணி சென்று கொண்டிருந்தது. இதுவும் முருகன் எனக்குக் கொடுத்த அருளென்றே பாவித்ததால் அவனைப் பற்றிய இனிமையான செய்திகள் பல கிடைத்துக் கொண்டே இருந்தன. அவன் கோயில் கொண்ட இடத்தைக் காணச் செல்லும்போதெல்லாம் இன்ப மயம்தான். அவனைக் கண்டாலோ அது ஒரு தனி சுகம். இதையெல்லாம் எழுத்தில் வர்ணிப்பதுதான் கஷ்டம்.

    அப்படிப்பட்ட முருகன் பற்றி திரு டி. சச்சிதானந்தன் அருமையாக அறுமுகநூறு எழுதி வருகிறார்.

    அடிமனக் கடலின் அமுதே போற்றி,

    அறுமுக நிலவின் ஒளியே போற்றி,

    அதிமது ரத்தின் சுவையே போற்றி,

    அருள்மனம் பொங்கி அருள்வாய் போற்றி!                                                                     6

     

    கவிமனம் கொண்ட கந்தா போற்றி,

    குவிமனம் என்றாய் குகனே போற்றி,

    செவியினில் மந்திரம் சொன்னாய் போற்றி,

    புவியினைக் காக்கும் புதல்வா போற்றி!   

    முருகனைப் போலவே அவனைப் பற்றிய போற்றிப் பாடலும் இனிக்கிறது. அந்த இனிமையைத் தந்து கொண்டிருக்கும் இனியவர் திரு சச்சிதானந்ததை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மிகுந்த மன மகிழ்ச்சி. முருகனைப் போற்றும் அவருக்கு முருகனின் இனிய அருள் என்றும் கிடைப்பதாக.

    கடைசி பாரா : திரு ரிஷி ரவீந்திரனின்  மழை.

    மீன்களும் மழைநீரினால் அடித்துச் செல்லப்படுவதுண்டு. சில மீன்கள் நீரின் மேற்பரப்பில் துள்ளித் துள்ளி நடனமாடித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும். எனக்கென்னவோ அந்த மீன்களும் என்னைப் போல் மழையினில் நனைய ஆசைப்படுவதாய்த்தான் நான் நினைப்பதுண்டு. அவைகள் அதிக உற்சாகமாய் நீரின் மேற்பரப்பில் துள்ளிக்கொண்டிருக்கும்.  நான் அப்பொழுதெல்லாம் அது மழையில் மகிழ்ச்சியாக நடனமாடுகின்றதோ என எண்ணிக்கொண்டாலும் அதன் மரணபயமும் என்னை பயமுறுத்தும். சில நேரங்களில் பாம்புகள் அவைகளை நீர்ப்பயணத்திலேயே விழுங்குவதும் எனக்குள் கிலியினை ஏற்படுத்தும்.

    Share