திவாகர்

முருகனென்றாலே இனிமை என்றொரு பொருளுண்டு. முருகனைப் பற்றி நா பேசப் பேச நாவினிக்கும். கேட்க கேட்க செவியினிக்கும். அவன் திருப்புகழ் நமக்கு மாபெரும் திரவியம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆந்திராவில் முருகன் எப்போதிலிருந்து சரித்திரபூர்வமாக அறியப்படுகிறான் என்பதில் எனது ஆராய்ச்சிப் பணி சென்று கொண்டிருந்தது. இதுவும் முருகன் எனக்குக் கொடுத்த அருளென்றே பாவித்ததால் அவனைப் பற்றிய இனிமையான செய்திகள் பல கிடைத்துக் கொண்டே இருந்தன. அவன் கோயில் கொண்ட இடத்தைக் காணச் செல்லும்போதெல்லாம் இன்ப மயம்தான். அவனைக் கண்டாலோ அது ஒரு தனி சுகம். இதையெல்லாம் எழுத்தில் வர்ணிப்பதுதான் கஷ்டம்.

அப்படிப்பட்ட முருகன் பற்றி திரு டி. சச்சிதானந்தன் அருமையாக அறுமுகநூறு எழுதி வருகிறார்.

அடிமனக் கடலின் அமுதே போற்றி,

அறுமுக நிலவின் ஒளியே போற்றி,

அதிமது ரத்தின் சுவையே போற்றி,

அருள்மனம் பொங்கி அருள்வாய் போற்றி!                                                                     6

 

கவிமனம் கொண்ட கந்தா போற்றி,

குவிமனம் என்றாய் குகனே போற்றி,

செவியினில் மந்திரம் சொன்னாய் போற்றி,

புவியினைக் காக்கும் புதல்வா போற்றி!   

முருகனைப் போலவே அவனைப் பற்றிய போற்றிப் பாடலும் இனிக்கிறது. அந்த இனிமையைத் தந்து கொண்டிருக்கும் இனியவர் திரு சச்சிதானந்ததை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மிகுந்த மன மகிழ்ச்சி. முருகனைப் போற்றும் அவருக்கு முருகனின் இனிய அருள் என்றும் கிடைப்பதாக.

கடைசி பாரா : திரு ரிஷி ரவீந்திரனின்  மழை.

மீன்களும் மழைநீரினால் அடித்துச் செல்லப்படுவதுண்டு. சில மீன்கள் நீரின் மேற்பரப்பில் துள்ளித் துள்ளி நடனமாடித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும். எனக்கென்னவோ அந்த மீன்களும் என்னைப் போல் மழையினில் நனைய ஆசைப்படுவதாய்த்தான் நான் நினைப்பதுண்டு. அவைகள் அதிக உற்சாகமாய் நீரின் மேற்பரப்பில் துள்ளிக்கொண்டிருக்கும்.  நான் அப்பொழுதெல்லாம் அது மழையில் மகிழ்ச்சியாக நடனமாடுகின்றதோ என எண்ணிக்கொண்டாலும் அதன் மரணபயமும் என்னை பயமுறுத்தும். சில நேரங்களில் பாம்புகள் அவைகளை நீர்ப்பயணத்திலேயே விழுங்குவதும் எனக்குள் கிலியினை ஏற்படுத்தும்.

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. இந்த வார வல்லமையாளராய்த் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

    –மேகலா

  2. இந்த வார வல்லமையாளர் திரு.சச்சிதானந்தம் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். கருணைக்கடலான கந்தவேள் அருளால் அவருக்கு மேன்மேலும் சிறப்புகள் பல குவியப்  பிரார்த்திக்கிறேன். திரு.ரிஷி ரவீந்திரன் அவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

  3. இவ்வார வல்லமையாளர் விருது பெற்ற திரு சச்சிதானந்தத்திற்கும், மழையின் அனுபவத்தை விவரித்து எழுதிய சிறந்த கட்டுரைக்காக பாராட்டப் பெற்ற ரிஷி ரவீந்திரனுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ….. தேமொழி

  4. எனது ஆத்ம நண்பன் சச்சிதானந்தத்திற்கு ‘வல்லமையாளர் விருது’ கிடைத்திருப்பதை அறிந்தபோது, எனக்கே மீண்டும் ஒருமுறை விருது கிடைத்தது போல் உணர்ந்தேன்!!! அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!!!!!

    திவாகர் ஐயா, அருமையாக வாழ்த்தியிருக்கிறீர்கள்! தங்களுக்கும், ஆசிரியர் குழுவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! மேலும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. 

    ‘வல்லமையாளர்’ சச்சிதானந்தம், தன் செல்வனைப் பாடியதற்கு உனக்கு ‘வல்லமை’ தந்திருக்கிறாள் பராசக்தி. உன் மற்ற படைப்புகளையும் விரைவில் எதிர்பார்க்கிறேன். 

    வாழ்த்துகள் நண்பா!!! 

    கடைசி பாராவில் இடம்பிடித்த வரிகளுக்குச் சொந்தக்காரர் ரிஷி அவர்களுக்கும், என் வாழ்த்துகள்!  

  5. வல்லமை இதழில் எழுதுவதையே அரிய வாய்ப்பாகக் கருதியிருந்த நேரத்தில், உயரிய வல்லமையாளர் விருதினை வழங்கி ஊக்குவித்திருக்கும் திவாகர் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  6. பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வழங்கிய முன்னோடிகள் மேகலா ராமமூர்த்தி, இன்னம்பூரான், பார்வதி ராமச்சந்திரன், தேமொழி, மற்றும் இளங்கோ அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, வல்லமை இதழை எனக்கு அறிமுகப் படுத்தி, உரிமையுடன் என்னைத் தொடர்ந்து வற்புறுத்தி, அன்புக் கட்டளையிட்டு எழுத வைத்த நண்பன் இளங்கோவிற்கு எனது நன்றிகள்.

  7. சிறந்த கட்டுரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “மழை” ரிஷி ரவீந்திரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  8. அனைவருக்கும் நன்றிகள் !
    அருட்பேராற்றல் கருணையினால் அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடூழி வாழ்க வளமுடன் … வாழ்க வளமுடன்… வாழ்க வளமுடன் !

  9. கவிநயா, தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.