Blog

  • Kudos Tamilnadu Police

    Kudos Tamilnadu Police

    Baskar Seshadri

    We all must be aware the problem the Policemen face when they are posted on Bandobust Duty. Most particularly the women Police. Normally the bandobast duty is handled by the police force when large meetings are held by political meetings and agitations are held or when National leaders land in Chennai. In such a case many police forces used to be deployed are drawn from suburbs and even from outstations. They can manage to eat elsewhere after the duty is over or can take a break and go for a quick bite.

    But the main problem is they may not find a toilet or any small restroom in the vicinity. They have to depend upon a hotel or a shop which is an issue of embarrassment since their obligation may draw ire sometimes. But not anymore.

    The state police had made arrangements to procure restroom vehicles for these police force which are taken to the sites where the meeting or agitation is being held in Chennai . These vehicles do have the facility to use a toilet both western and Indian with a wash area and change room. This is a boon to those who are drawn to the sites and there are six vehicles as of now, one exclusive for women.

    There are official drivers for all the vehicles and the one which was parked few days back is shown in the picture. A Good initiative indeed. The vehicle is taken to the filling point like MRC Nagar or any other point in Nungambakkam for regular top up depending upon the location where vehicle is to be taken. The very idea though a long pending one had been implemented at a right time and kudos to the state Police in doing it so. Hats Off.

    And there is a background news to this .An year ago a person an active man of Facebook had a chat with a sub inspector when he was on a Bandobust duty .He raised this point about the toilet facility with him and he expressed in negative and said it could not happen overnight as all those are to be done in a process which might take time.

    Too disturbed at this Mr Chandramouleeswaran visvanathan took the matter with a serious intention to do something and posted first this on his facebook wall with a copy to the CM Cell.

    Based on his petition and grievance the cell took the action and informed him back that they are in the process of finding a solution and arranging mobile toilets, zone wise soon.

    Not this alone. Joint secretary of TN Government called him and apprised about the action that has been done based on his request.

    All these had happened based on his petition and the system is now in place. Besides he received two calls from DIG of two different zones and expressed the happiness on the action taken by the state.

    First the appreciation should go Mr Chandramouleeswaran Visvanathan on this for having taken up this issue and next to the state government for the swift action.

    What a Concern and determination Sir, Congrats

    Share
  • குறளின் கதிர்களாய்…(337)

    குறளின் கதிர்களாய்…(337)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(337)

    அறிவின்மை யின்மையு னின்மை பிறிதின்மை
    யின்மையா வையா துலகு.

    – திருக்குறள் -841 (புல்லறிவாண்மை)

    புதுக் கவிதையில்...

    இல்லாமை பலவற்றுள்ளும்
    ஒருவனுக்கு
    மிக்க இல்லாமை
    அறிவில்லாமையாகும்..

    மற்றைப்
    பொருள் இல்லாமை
    போன்றவற்றைப்
    பெரிதாய் எடுத்துக்கொண்டு
    இகழார் உலகிலுள்ளோர்…!

    குறும்பாவில்...

    இல்லாமைகளில் கொடிய இல்லாமை
    அறிவில்லாமையே, பிற இல்லாமைகளைப் பெரிதுபடுத்தி
    ஒருவனை இகழார் உலகோர்…!

    மரபுக் கவிதையில்...

    அறிவ தொருவனுக் கில்லாமையே
    அனைத்திலும் கொடிய இல்லாமையே,
    பிறவெலாம் இதனை மிஞ்சிவிடும்
    பெரிய இலாமை இல்லையாமே,
    உறவுகள் முதலா உடனிருக்கும்
    உற்ற பொருளெலாம் இலையெனிலும்
    குறையதைப் பெரிதாய் எடுத்தேதான்
    குற்றம் சொல்லார் உலகோரே…!

    லிமரைக்கூ..

    அறிவின்மை வாழ்விலொருவனுக்குக் கறையே,
    இல்லாமைகளில் உயர்விதுவே, பிறவற்றைப் பெரிதாயெண்ணி
    உலகோர் சொல்லார் குறையே…!

    கிராமிய பாணியில்...

    பெருசு பெருசு
    இல்லாம எல்லாத்திலயும்
    ரெம்பப்பெருசு
    ஒருத்தனுக்கு அறிவில்லாமயே..

    மத்தபடி அவனுக்கு
    பொன்னு பொருளுண்ணு
    செல்வமெல்லாம் இல்லண்ணணாலும்
    அதப் பெருசுபடுத்தி
    ஒலகத்தில உள்ளவங்க
    ஒரு கொறயாச் சொல்லமாட்டாங்க..

    அதால
    பெருசு பெருசு
    இல்லாம எல்லாத்திலயும்
    ரெம்பப்பெருசு
    ஒருத்தனுக்கு அறிவில்லாமயே…!

    Share
  • Circus for a Cup of Food

    Circus for a Cup of Food

    Baskar Seshadri

    It was an ordinary Sunday morning and people were busy in shopping, prayers, and vending on South Mada Street Mylapore.

    But this girl with her parents was there to perform a rope walk for their survival. Almost similar to what we see in a Circus. She must be around twelve years and am sure she may not be schooling like other children.

    Her day starts with a rope walk somewhere on the streets of Chennai to the beating of small handy banjos by their parents. She walks on and on back to back changing the direction.

    Her father places a plate under her foot and she manages to walk on that at a height of around ten feet above. Highest level of Focus and concentration and a determined walk it was .There was not a slip anywhere or any sight of wrong footing. Everything was perfect to the core. If only she could be hired for her excellent skills by an event manager in some programmes, she can survive better and keep her family happy afloat to fill the belly.

    My heart goes to them. I offered them Chai and little money, the best I could do.

    Share
  • படக்கவிதைப் போட்டி 294இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 294இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    புகைப்படக் கலைஞர் திரு. சரவணன் தண்டபாணி  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டி 294க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

    மலரும் மலர்முகச் சிறுவனும் அருகருகே ஒருவரையொருவர் நோக்கிக் கொள்ளும் எழிற்காட்சி நம் உள்ளம் கவர்கின்றது. இதற்குப் பொருத்தமாய்க் கவிதை தீட்ட, காட்சிக்குக் கவினைக் கூட்ட அழைப்போம் நம் கவிஞர்களை!

    *****

    ”விரிந்து மலர்ந்த மலரைப்போல் சிரித்து மலர்ந்த முகத்தோடும் பொய்யில்லாச் சொல்லோடும் பிள்ளையாய் இருந்தால் தொல்லையில்லை” என்று பிள்ளைப் பருவத்தைப் போற்றுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    பிள்ளை உள்ளம்

    துள்ளிப் பாயும் வெள்ளோட்டம்
    பள்ளம் மேடு பார்ப்பதில்லை
    கள்ளம் இல்லா உள்ளத்தில்
    பொய்யும் கசடும் சேர்வதில்லை

    விரிந்து மலர்ந்த மலரைப் போல்
    சிரித்து மலர்ந்த முகம் கொண்டு
    திறந்து வைத்த புத்தகமென – மனதை
    மறைத்து மூடிப் பூட்டவில்லை

    சொல்லும் சொல்லில் பொய்யில்லை
    வெள்ளை கருப்புப் பேதம் இல்லை
    உள்ளத்தில் உள்ளதை மறைப்பதில்லை
    பிள்ளையாய் இருந்தால் தொல்லையில்லை

    *****

    ”மண்ணில் மலரும் மலர்களோ தண்ணீரில் மலரும் மலர்களோ எவையாயினும் தாமே நம் கைக்குக் கிட்டா; முயன்று பறித்தால்தான் வசப்படும்; அவ்வாறே வாழ்வில் வாய்ப்புகளையும் தேடிப் பெற்றிடு மனிதா!” என்று நல்வழிகாட்டுகின்றார் திருமிகு. இராதா.

    மண்ணில் மலரும் மலர்களாயினும்
    தண்ணீரில் மலரும் மலர்களாயினும்
    கண்ணுக்குத் தெரிந்த மலர்கள் நம்
    கைகளுக்கு வருவதில்லை ….

    குளத்தில் மலரும் அல்லியைப் பறிக்கக்
    குளிர்ந்த நீரில் இறங்கி உடல் நனைய
    மூச்சை அடக்கி நீந்தி முயன்றால்
    எட்டாதாயினும் கிட்டிடும் நம் கைகளில்

    அதுபோல்…..
    வாழ்வு சிறக்க வாய்ப்புகள் பல உண்டு

    வாய்ப்புகள் வாசல் தேடி வருவதில்லை
    மலரைத் தேடும் தேனீக்களைப் போல

    மனிதனே நீயும் வாய்ப்பைத் தேடிட வெற்றி நிச்சயம்….

    *****

    சிந்தனைக்கு விருந்தளிக்கும் கவிதைகளைப் படைத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து நாம் காணவிருப்பது இந்த வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பதை…

    மாறுபாடு!

    துள்ளித் திரியும் வயது,
    துடுக்காகச் சென்று
    சிறுவன்
    பறித்துவிட்டான் மலரை…

    சுள்ளென வெயிலில்
    மலர்
    வாடுவது கண்டு
    வாடுகிறது அவன் முகமும்
    வருத்தத்தில்…

    பிஞ்சு மனத்திற்குப்
    புரிகிறது தவறென,
    அஞ்சுகிறது அவன் மனது…

    அச்சமிது போய்விடுகிறதே
    அவன் வளர்ந்ததும்,
    ஆம்
    பஞ்சமா பாதகங்களையும்
    அஞ்சாமல் செய்கிறானே
    மனிதன்..

    இதுதான் இயற்கையா,
    மாறுமா மனிதனின் குணம்…!?

    ”அறியாமல் பறித்த அழகுமலர் வெயிலில் வாடுவது கண்டு வாடும் பிஞ்சு மனம், வளர்ந்தபின் பஞ்சமா பாதகங்களையும் அஞ்சாமல் செய்வதேன்?” என்று வினவி, மனிதனின் குண மாறுபாடு குறித்து நம்மையும் யோசிக்க வைக்கின்ற இந்தக் கவிதையைத் தந்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கண்ணைக் கட்டிவிட்டால் வரைய முடியுமா? – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 6

    கண்ணைக் கட்டிவிட்டால் வரைய முடியுமா? – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 6

    சந்திப்பு – அண்ணாகண்ணன்

    கண்ணைக் கட்டிவிட்டால் உங்களால் ஓவியம் வரைய முடியுமா? என ஓவியர் ஸ்யாமுக்கு ஒரு சவால் விடுத்தோம். அதை உடனே ஏற்றுக்கொண்டு, என்ன வரைய வேண்டும் என்று கேட்டார். ஒரு காதல் காட்சியை வரையக் கேட்டோம். அவர் என்ன வரைந்திருக்கிறார் என்று பாருங்கள். அத்துடன், இந்தக் காதலர் தினத்தில் அவரது காதல் அனுபவங்களையும் காதல் பற்றிய, காதலர்கள் பற்றிய அவரது அதிரடியான கருத்துகளையும் நம்முடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பாருங்கள், கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 294

    படக்கவிதைப் போட்டி – 294

    (அனைவருக்கும் வணக்கம். வல்லமை மின்னிதழ் சிறிது தடைப்பட்டதால், இதே படத்தை மீண்டும் அறிவிக்கின்றோம். வரும் சனிக்கிழமை வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அதன் பிறகு முடிவுகளை அறிவிப்போம். – ஆசிரியர்)

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் சரவணன் தண்டபாணி  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.02.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • வெற்றிக்குக் காரணம் (சிறுகதை)

    வெற்றிக்குக் காரணம் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    ராமனுக்கு மனைவியிடம் எரிச்சல்தான் எழுந்தது.

    அப்படி என்ன உலகில் இல்லாத குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டாள்? அதற்காக ஓயாமல் அழுதுகொண்டிருந்தால்?

    முதல் குழந்தை என்று அவனும் எத்தனையோ கனவுகளுடன் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தெரியவில்லையே, அது குறையுடன் பிறக்கும், இருக்கும் நிம்மதியையும் பறித்துவிடும் என்று!

    `வீணா அதைக் கொஞ்சிக்கிட்டு இருக்காதே. கீழேயே போட்டுவை. அது அல்பாயுசில போனதும் ரொம்ப வேதனையாப் போயிடும்!’ என்னமோ, அதன் இறப்புக்கு நாள் குறித்தவர்கள் போல் பலரும் அறிவுரை கூறியதை புனிதா காதில் வாங்கவேயில்லை.

    தலையிலிருந்து ஒரு மயிரிழை உதிர்ந்தால்கூட சற்றே வருந்தும் பெண்ணாயிற்றே! தன் உடலில் ஒரு பாகமாக இருந்த குழந்தையின் இழப்பை நினைத்தும் பார்க்கமுடியுமா?

    குழந்தையின் உடலும், கண்களும் மஞ்சள் நிறமாக மாறியபோதுதான் முதலில் சந்தேகம் எழுந்தது அவளுக்கு.

    சிரிப்பும் களிப்புமாக இருக்கவேண்டிய குழந்தை! இப்படி சுரத்தில்லாமல் இருக்கிறதே! அடிக்கடி வாந்தி வேறு.

    `வயிற்றுப்பகுதியில் இருக்கும் பெரிய உறுப்பு. கழிவுகளை அகற்றி, கொழுப்பைச் சேர்த்துவைப்பது என்று பல உபயோகங்கள் கொண்ட அவயவம்,’ என்றெல்லாம் மருத்துவர் விளக்கிய கல்லீரல் பழுதாகி இருந்தது.

    “குழந்தைக்கு மாற்று லிவர் பொருத்தவேண்டும். இல்லாவிட்டால்..,” என்று அவர் முகத்தில் பரிவைத் தேக்கி வைத்துக்கொண்டு கூறியபோது, தான் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் இருக்குமோ என்று எழுந்த சந்தேகத்தை உதறினான் ராமன். அதை மனைவியின்மேல் ஆத்திரமாக மாற்றிக்கொள்வது எளிதாக இருந்தது.

    `உருப்படியா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கக்கூடத் துப்பில்லே!’ என்று சாடினான். “சனியன் செத்துத் தொலையட்டும். ஒரே அழுகையோட போயிடும்!”

    “அப்படியெல்லாம் சொல்லாதீங்க,” என்று கதறினாள் பெற்றவள். “நான் என்னோடதைக் குடுக்கறேன்”.

    “ஹூம்!” உறுமிவிட்டு அப்பால் நகர்ந்தான் ராமன்.

    இவளோட கல்லீரலைத் தானம் கொடுக்கப்போகிறாளாம்! கருவிலிருக்கும் இன்னொரு உயிரும் குறையுடன் வெளியாகவா?

    டாக்டர் தான், `இந்த நிலையில் முடியாது!’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாரே! அது தெரிந்தும் நாடகமாடுகிறாள்!

    `நீ ஆம்பளை. ஒழைச்சுக் கொட்டணும். ஒன் ஒடம்பிலே எதையாவது அறுத்தா, அப்புறம் ஒன்னால வேலை செய்ய முடியுமா?’ என்ற தந்தையின் விவாதம் நியாயமாகப்பட்டது அவனுடைய குழம்பிய மனதிற்கு.

    அம்மாவும் ஒத்துப் பாடினாள்: “ஒரு பொட்டைக்கழுதை போனா என்னடா? இன்னும் அஞ்சு மாசத்திலே இன்னொண்ணுதான் பிறக்கப்போகுதே!” வசதியற்ற குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்து, அனுபவித்த வேதனைகள் அவளை அப்படிப் பேச வைத்தது.

    தாத்தா பாட்டியின் நம்பிக்கைக்குச் சவால் விடுவதுபோல், ஒரு வயதுக்குமேல் அந்தக் குழந்தை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தது.

    புனிதாவின் உறுப்பில் ஒரு பகுதி குழந்தை பூரணிக்குப் பொருத்தப்பட்டது.

    நான்கே மாதங்களில் இருவரது கல்லீரலும் முழுமையாக வளர்ந்தது. அவளும் வளர்ந்தாள்.

    “நீ பிழைக்கவே மாட்டேன்னு நினைச்சோம் டீ,” என்று கிழவர் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டார். “நான், ஒங்க பாட்டி, எல்லாரும், `இந்தப் பொட்டைக்குட்டி போனா என்னா?’ ன்னுகூட சொல்லியிருக்கோம். ஒங்கம்மா கேக்கலியே!’

    “அப்பா?” மெல்லிய குரலில் கேட்டாள்.

    “அவனும்தான்! ஒடம்பில எதையாவது அறுத்துக் குடுத்தா, அப்புறம் எப்படி வேலை செஞ்சு சம்பாதிக்க முடியும்னு யோசிச்சான். நியாயம்தானே!” பழியை அவன்மேலேயே திருப்பினார்.

    பூரணிக்கு வருத்தமாக இருந்தது. யாருக்குமே தான் முக்கியமாகப் படவில்லை!

    தனக்குள் எழுந்த ஆத்திரத்தை விளையாட்டுகளின்மூலம் வெளியே தள்ளினாள்.

    “நம் நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனையாக நீங்கள் ஆகியிருக்கிறீர்கள். இதற்கு யாரெல்லாம் காரணம்?” என்று கேட்டார் ஒரு பேட்டியாளர்.

    “என் கல்லீரலும் அம்மாவும்!” என்று உறுதியாகப் பதிலளித்தாள் பூரணி.

    `என்னை `வேண்டாம்’னு சொன்ன அப்பாவுக்கு நன்றியும், பாராட்டும் ஒரு கேடா!’ என்ற வீம்பு எழுந்தது அவளுக்குள்.

    Share
  • Mahatma Gandhi

    Mahatma Gandhi

    Baskar Seshadri

    It was an ordinary day for Mohandas. It was Friday and the life was usual for everyone. Mohandas got up at sharp 3.30am in Birla house and he has been staying there since september of 1947. The peacemaking ceremony had happened in this place among many persons. Attendant Brij Krishna was ready as usual with his nieces Manu and Abha. The prayer started at sharp 3.45 am on the dot. He had a simple massage and corrected the draft proposal he already made. He had his lemon juice. Later little honey and orange juice since he underwent a long fast only a month ago which had deteriorated his health. The completed document was almost his last will and testament in a way. He recollected about the Noakhali issue and the crisis of Rice in Madras to his secretary Pyarelal and then went to take a short nap. There were some heated speech by shyam prasad Mukherjee only few days ago and he had threatened to kill congress men on this. Mohandas was upset at this hate speech. He met as a normal practice his visitors which included blind refugees. A delegation from Punjab and Sikh came to invite and he suggested Babu Rajendra Prasad to be the President. He also had a meeting with Nehru and Patel since he did his peace making process between them.

    On the other hand it was Nathuram Godse who was staying in the retiring room Number six decided that he had a mission on his hand and he was among a big team who were in various points to execute in case of any failure from his end. Many may not be aware that there was an attempt on Jan 10 was later treated as a dry Run Mohandas love to be punctual and sadly on this day he was late by ten minutes since his secretaries decided not to intervene a discussion which was going on already .His famous Ingersoll was not worn by him and that could be another reason for his being late that day.

    To make it quick he chose a short cut and was moving to the prayer hall in the first floor There were normally twenty policemen to protect him which was arranged only few months ago after an attempt was made months ago Well before five Pm Godse reached Birla Temple and Apte and Karkare was there following him. He was in Khaki and engaged a tonga .The mission was on and they were all travelling towards the Birla House. Normally people used to form a passage track and on that fateful day it was not to be. Godse was getting ready with his Italian made Beretta pistol. Godse Pushed Manu aside and moved his way towards Mohandas. In the melee when the flower plates fell down she bent down to pick it. It was at this moment Godse picked his gun and shot Mohandas thrice one at the chest and two on the abdomen. It was a point blank range .Mohandas stood till third bullet was pumped on him and fell on the ground.

    The man who fought against the violence fell prey to his teaching and the prime age of close to eighty. All were over at 5.17 Sharp on the evening of January 30, 1948. The fragrance of flowers vanished and it became a smokey Gun Powder smell that filled the air.

    When Mohandas fell to the bullets he chanted just two times He Ram He ram and had his last breathe. That was his last prayer.

    There are versions to say that he did not say He Ram at all. His personal assistant Sri Kalyanam (still alive and resides in teynampet) says he fell and died and it was Manu and Abha who lifted him and kept his head on their laps.

    The whole world grieved. It was this man who preached nonviolence and it was the same who fell to the Beretta Bullets. Its shame on us that we killed him. Who also can be fondly called Bapu and its our own Mahatma.

    Our salutes forever to this Messiah.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 53

    பழகத் தெரிய வேணும் – 53

    நிர்மலா ராகவன்

    உன்னையே நீ மதிக்கணும்

    `… இறைவனடி சேர்ந்தார். அன்னாரது இழப்புக்காக ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும்..,’ என்று, அன்றாடம் பல பெயர்களை வெளியிட்டிருப்பார்கள் தினசரியில்.

    அதில் என்றோ இறந்துபோனவர்களின் பெயர்களும் இருக்கும். (அவர்கள் எப்படி வருத்தத்தில் ஆழ்ந்திருப்பார்கள்?)

    இம்மாதிரியான அறிக்கைகளை பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் எழும். தம் பெயர் தினசரியில் வெளியாகிவிட்டதே என்ற பெருமைக்காக வெளியிடுபவர்களில் எத்தனைபேர் இறந்தவர் உயிருடன் இருந்தபோது அவருடைய மதிப்பை உணர்ந்து, அன்பாக நடத்தினார்கள்?

    கதை

    கணவன் மறைந்ததும் தான் தனிமரமாகிவிட்டோமே என்ற கவலையில், கதறி அழுதுகொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. அந்த மனிதர் மனைவியை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றவில்லை என்பது வேறு விஷயம்.

    தாய் அனுபவித்த துன்பங்கள் தெரிந்திருந்தும், அவளது பெண்கள் இருவருக்கும் இரக்கம் கிடையாது.

    “நீங்க என்னோட வந்து இருங்கோம்மா,” என்றாள் சின்னவள், உபசாரமாக. “சும்மா இருக்க வேண்டாம். ஒங்க பென்ஷன் பணத்தைக் குடுத்துட்டு இருங்கோ!”

    சில வருடங்கள் கழித்து, அந்த தாய் தனியாகவே வாழ்ந்து இறந்தபின், அப்பெண் கதறினாளே, பார்க்கவேண்டும்!

    பெரும்பாலோருக்கு எதையும் இழந்தபின்தான் ஒரு நபர் அல்லது பொருளின் அருமை புரிகிறது.

    கதை

    “என் சட்டை! நானே மச்சு வெச்சுக்கறேன்,” என்று அடம்பிடிப்பான் என் மூன்று வயதான மகன்.

    ஒரு கையால் சட்டையின் நுனியைப் பிடித்து, இன்னொன்றால் அதை விரல்களில் சுற்றுவான். இன்னும் கசங்கிவிடும். அவனைப் பொறுத்தவரை, அவன் திறமையுடன் செய்திருக்கிறான்.

    அண்மையில், இதை நான் சொல்லிச் சிரித்தபோது, யாரோ கேட்டார்கள், “அப்புறம் நீ அதைச் சரியாக மடித்து வைத்துவிடுவியா?”

    நான் அதிர்ந்து, “ஐயோ! அப்படிச் செய்வது, `நீ செய்தது தவறு!’ என்று அவனைக் குறைத்து மதிப்பிடுவதுபோல் இருக்குமே!” என்றேன்.

    சும்மாடுபோல் சுருண்டு, கசங்கியிருந்த சட்டையைப் பார்க்கும்போதெல்லாம், `அப்போதே அவனுடைய அருமை புரிந்திருந்ததே!’ என்ற திருப்தி ஏற்பட்டது. அவன் இறந்தபின் குற்ற உணர்வு ஏற்படவில்லை.

    சுயமதிப்பு ஏற்பட

    குழந்தைகளைச் சுதந்திரமாக எதுவும் செய்யவிடாது, தம்மையே நாடிக்கொண்டிருந்தால் அந்த பிணைப்பையே அன்பு என்று நினைக்கிறார்கள் பலர்.

    எந்த வயதானாலும் பிறரது உதவியை எதிர்பார்க்க நேர்ந்தால் ஒருவரால் எப்படித் தன்னையே மதிக்கத் தோன்றும்? தன்னையே மதிப்பவன்தான் மற்றவர்களையும் மதிக்கமுடியும். தன்னம்பிக்கை என்பது, `என்னால் முடியும்’ என்று தன் திறமைகளை உணர்ந்து ஒரு காரியத்தைச் செய்வது.

    தன் வாணாளில் பிறருக்கு உபயோகமாக எதையாவது செய்தவரைத்தான் அவர் மறைந்தபின்னும் கொண்டாடுகிறோம்.

    பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அண்மையில், அவருக்குப் பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. பாட்டின் பொருளை மனதில் கொண்டு, அதற்கேற்ப குரலில் உருக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொணர்ந்ததில் எத்தனைபேரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்!

    பிறரை மகிழ்விக்க தம்மையே வருத்திக்கொள்கிறவர்கள்

    இத்தகையவர்கள், `எனக்கு எல்லாரையும் பிடிக்கும். என்னையும் எல்லாருக்கும் பிடிக்கும். உனக்கு எத்தனை எதிரிகள், பார்!’ என்று தன்னம்பிக்கையோடு நடப்பவர்களைப் பழிப்பார்கள்.

    `நான் இப்படி இருந்தால்தான் பிறர் மதிக்கிறார்கள்!’ என்று ஒருவர் தன் குணத்தையும், போக்கையும் மாற்றிக்கொண்டே இருந்தால், மற்றவர்களை விடுங்கள், அப்படி நினைப்பவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்காது.

    தாம் சொல்வதற்கு மதிப்புக் கொடுக்காது அலட்சியம் செய்பவரை `கர்வி,’ `நட்புடன் பழகத் தெரியவில்லை’ என்று பலவாறாகப் பழிப்பார்கள். பிறர் மதிக்காததால் ஒருவரின் மதிப்பு குறைந்துவிடுமா?

    சில சமயம், நம் மதிப்பு, நம்மால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பது நமக்கே தெரிவதில்லை. அதை உணர்த்த நல்ல உறவினரோ, நண்பரோ வேண்டும்.

    கதை

    புதிதாக காரோட்டும் உரிமம் பெற்றிருந்தாள் அப்பெண். அதன்பின், எங்கு காரோட்டிப் போனாலும் அவள் பக்கத்தில் யாராவது உட்கார்ந்திருக்க வேண்டும். தனியாகப் போனால் தவறு நேர்ந்துவிடும் என்ற பயம்.

    ஒரு மாதம் இப்படிக் கழிந்தது.

    அன்று அவசரமாக ஓரிடத்திற்குப் போக வேண்டியிருந்தது. வீட்டில் ஒரு முதியவரைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

    “என்னுடன் வாருங்கள், தாத்தா,” என்று கெஞ்சினாள்.

    அவர் மென்மையாக, “நீ நடக்கப் பழகியபோது, விழுந்திருக்கிறாயோ?” என்று கேட்டார்.

    `இது என்ன முட்டாள்தனமான கேள்வி!’ என்று தோன்ற, பேத்தி சிரித்தாள். “யார்தான் விழாமல் நடை பழகியிருக்கிறார்கள்?” என்று எதிர்கேள்வி கேட்டாள்.

    அவர் விடவில்லை. “விழுந்துவிடுவோமோ என்று நடக்கப் பயந்து, எழுந்திருக்காமலேயே இருந்துவிட்டாயா?”

    அவளுக்குப் புரிந்தது.

    “நன்றாக ஓட்டிக் காட்டியதால்தானே உரிமம் கிடைத்திருக்கிறது! சிலர் தொலைபேசியில் ஒரு கண்ணை வைத்தபடியே ஓட்டுகிறார்கள். நீதான் பார்த்து ஓட்டவேண்டும்,” என்று அறிவுரை கூறினார்.

    தெளிந்த மனத்துடன் அவள் போனாள். தனியாகவே.

    பொருட்களை மதிப்பவர்கள்

    நாம் நம்மேல், அல்லது பொருட்களின்மேல் அளவுகடந்த மதிப்பு வைக்கும்போது, நம் மதிப்பைக் குறைவாக எடைபோட்டு விடுகிறோம்.

    கதை

    ஒரு பார்ட்டி. வெளிநாட்டுக்காரர்கள் பலர் வந்திருந்தார்கள்.

    மலேசிய அதிகாரி ஒருவரின் (வெளிநாட்டு) மனைவியான ஜாக்குலின், “என் காப்பைப் (bracelet) பார்த்தீர்களா? இன்றுதான் வாங்கினேன்!” என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லி, அதன் உயர்ந்த விலையையும் சேர்த்துக் கூறினாள்.

    யாரும் கண்டுகொள்ளவில்லை.

    `இவளுடைய மதிப்பு ஒரு ஆபரணத்திலா இருக்கிறது!’ என்று அலட்சியம் செய்தார்கள். அவளுடன் அதிகம் பேசவுமில்லை.

    அடுத்த முறை, நான் அதேபோன்ற ஒரு விருந்துபசாரத்திற்குச் செல்ல நேரிட்டபோது, என்னிடமிருந்த தங்க நகைகளைப் புறக்கணித்தேன். இருபத்தைந்து காசு கொடுத்து வாங்கிய ஒரு பிளாஸ்டிக் வளையலைத் தேர்ந்தெடுத்தேன்.

    “என்னம்மா!” என்று மகள் அதிர்ந்தபோது, “நான் ஜாக்குலினைப்போல் நடிக்கப்போவதில்லை,” என்றேன்.

    தலையை நிமிர்த்தி, பிறருடன் எளிதாகப் பழக சுயமதிப்பு போதுமே!

    பல விருந்தினர்கள் விருப்பத்துடன் என்னுடன் உரையாடினார்கள். யாரும் என் எளிய வளையலைக் கவனித்ததாகத் தெரியவில்லை.

    ஒருவர் தன்னையே மதித்து நடந்தால், பிறர் அவரிடம் உண்மையுடன் பழகுவார்கள். நடிக்க மாட்டார்கள்.

    தம்மைப்பற்றிக் குறைவாக மதிப்பிடுவர்கள்:

    மனோபலம் குன்றியவர்களாக இருப்பார்கள்.

    உடல் ஆரோக்கியத்தை பெரிதாகப் பாராட்டுவது கிடையாது. அதனால், எளிதில் தீய பழக்கங்களுக்கு ஆளாகிவிடுவார்கள்.

    காதலில் தோல்வி, நீண்டகாலம் ஒரு உறவில் நிலைக்க முடியவில்லை என்று, எடுத்த காரியங்களில் எல்லாவற்றிலும் தோல்வியைச் சந்திக்க நேரிடலாம்.

    பிறரை ஓயாமல் குறைகூறுவது இவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. அப்போதாவது தாம் உயர்ந்திருப்பதாக நினைக்கலாமே!

    இதையெல்லாம் எப்படித் தவிர்ப்பது?

    பெற்றோரோ, ஆசிரியர்களோ சிறு வயதிலேயே ஒருவர் தன் குறைகளையோ, பிறருடையதையோ பாராட்டாதிருக்கப் பழக்கவேண்டும்.

    கதை

    பதின்ம வயதுச் சிறுவர்களுக்கு நான் போதித்தபோது, “உங்களில் ஒருவர் ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியாது என்றாலோ, தவறாகப் பதிலளித்தாலோ கேலி, சிரிப்பெல்லாம் கூடாது” என்று கண்டித்தேன்.

    சில மாதங்களுக்குப்பின், என் சக ஆசிரியை, “உங்கள் வகுப்பில் மட்டும் ஒரு மாணவனைப் புகழ்ந்தால், மற்றவர்கள் எல்லாரும் தாமே பாராட்டப்பட்டதுபோல் பூரித்துப்போகிறார்களே!” என்று அதிசயப்பட்டாள்.

    தவறு செய்வதால் ஒருவரின் மதிப்பு குன்றிவிடுவதில்லை என்று அவர்கள் உணர்ந்தவர்கள். அதனால் அவர்களால் பிறரை ஏற்க முடிந்தது. அவர்களது வெற்றியிலும் பங்குகொள்ள முடிந்தது.

    (நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணையஇங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A)

    Share
  • இக்காலகட்டத்தில் காரைக்காலம்மையார் பற்றிய பெண்ணியல் நோக்கு

    இக்காலகட்டத்தில் காரைக்காலம்மையார் பற்றிய பெண்ணியல் நோக்கு

    கௌசி, ஜெர்மனி

    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும்
    வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
    அறவாநீ ஆடும் போதுன்
    அடியின்கீழ் இருக்க

    உடலுக்கு அழிவு உண்டு ஆன்மாவுக்கு அழிவில்லை. நிச்சய மோட்சம் கிடைத்து இறைவன் காலடி சேர்ந்தால் அன்றி உயிர்கள் மீண்டும் மீண்டும் தம்முடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும் என்பது இந்துமத நம்பிக்கை. உலக வாழ்க்கையை விரும்பாத அடியார்கள் மீண்டும் பிறப்பெடுப்பதை விரும்பாது மோட்சம் கிடைப்பதையே விரும்புகின்றார்கள். பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மீண்டும் பிறப்புண்டானால் சிவனடியாராகவே இருந்து உன்னை என்றும் மறவாமை வேண்டும். அதைவிட வேண்டும் நீ சிவதாண்டவம் ஆடுகின்ற போது உன்னுடைய காலடியின் கீழிருந்து நான் பாடவேண்டும் என்று இறைவனிடடம் வரம் கேட்டுப் பாடியவரே காரைக்காலம்மையார்.இவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இக்காலகட்டத்துடன் எடுத்து நோக்குவதற்கு முன் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு பற்றி நோக்குவோம்.

    காரைக்காலம்மையார் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்தவர். பாடல்களால் இறைவனைப் பூசித்தவர். இவர் பாடிய அற்புதத்திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை போன்ற நூல்களே பல்லவர்கால பக்தி இலக்கியங்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தன. நாம் வாழுகின்ற இந்த காலகட்டத்தில் இக்காரைக்காலம்மையார் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தாலும் இப்பாடல் வரிகளின் ஆழத்தை நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. சிறுவயதில் இருந்தே சிவனில் பக்தி கொண்டிருந்த காரைக்காலம்மையார் சிவனடியார்களைச் சிவனெனப் போற்றும் பண்புள்ளவர். அவருக்கு பரமதத்தன் என்னும் வணிகனைத் திருமணம் செய்து கொடுக்கின்றார்கள். ஒருநாள் கணவன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றை பசியோடு வந்த சிவனடியார் ஒருவருக்குக் கொடுத்து விடுகின்றார். கணவனுக்கு உணவு பரிமாறும் போது அந்த மாங்கனியில் ஒன்றை உண்ட பரமதத்தன், அதன் சுவையில் ஈர்ப்படைந்து மற்றைய மாங்கனியையும் தனக்குப் பரிமாறுமாறு கேட்கின்றான். காரைக்காலம்மையாரும் சிவனடியாருக்கு அருந்தக் கொடுத்ததை மறைப்பதற்காக இறைவனிடம் வேண்டிநிற்கின்றார். சிவபெருமானின் அருளால் காரைக்காலம்மையாருக்கு ஒரு மாங்கனி கிடைக்கின்றது. அக்கனியைக் கணவனுக்குக் கொடுத்த போது இக்கனி அதிக சுவையுடையதாக இருப்பதை பரமதத்தன் உணர்கின்றான். இக்கனியின் சுவை வேறாக இருக்கின்றதே காரணம் என்ன என்று வினவுகின்றான். இறைவன் அருளால் அம்மாங்கனி கிடைத்ததாகக் காரைக்காலம்மையாரும் சொல்லுகின்றார். உடனே பரமதத்தனும் அதனை நிரூபித்துக் காட்டும்படிக் கூறவே இறைவன் அருளால் மீண்டும் ஒரு கனி இறைவன் அருளால் கிடைக்கின்றது. ஆச்சரியம் அடைந்த பரமதத்தனும் தெய்வீகப் பெண்ணுடன் குடும்ப வாழ்க்கை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தால் காரைக்காலம்மையாரை விட்டுப் பிரிந்து மதுரைக்குச் சென்று வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து தனக்குப் பிறக்கும் குழந்தைக்கு காரைக்காலம்மையார் பெயரை வைத்து வாழுகின்றான்.

    தன்னைப் பிரிந்து சென்ற கணவனை உறவினர் துணையுடன் மதுரைக்குச் சென்று கண்ட காரைக்காலம்மையார் கணவனுக்கு உதவாத இந்த உடல் அழகு தேவையில்லை என இறைவனை வேண்டித் தசை உடம்பு நீத்து என்புடலுடன் கைலாயமலை நோக்கிப் பயணமாகின்றார். அங்கே தலையாலே நடந்து செல்வதைக் கண்ட இறைவனும் அம்மையே வருக. வேண்டும் வரம் கேள் என்று கேட்டபோது இப்பாடலில் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கின்றார்.

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் மனிதனுடைய வாழ்க்கையில் சொர்க்கமும் நரகமும் அடங்கிக் கிடக்கின்றது. மனித வாழ்க்கையை விரும்பாத மனிதன் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற ஆசையை அடியோடு விட்டுவிடுவான். எமக்கும் மேலே ஒரு உலகம் இருக்கின்றது என்று நம்பும் மனிதர்கள் அங்கே இறைவன் குடியிருப்பதாகவும் இறைவன் காலடியில் தன்னுடைய வாழ்க்கை சென்றடைய வேண்டும் என்றும் நினைப்பார்கள். இதுவே காரைக்காலம்மையார் விரும்பிக் கேட்டதாக அறிகின்றோம். அன்ன ஆகாரமின்றி இறைவனை நினைத்து விரதமிருப்பவர்களுக்கு எலும்பை அண்டியிருக்கும் தசைப்பகுதி குறைவடைவது இயற்கையே. Magersucht என்று  ஜேர்மன் மொழியில் சொல்வார்கள். ஆக்மீக யாத்திரை செல்வதற்கு இலகுவான மெல்லிய என்புடலை காரைக்காலம்மையார் இறைவனை வேண்டிப் பெற்றிருக்கலாம்.

    கைலாய மலையை அடைந்ததாகவும் இறைவன் வரம் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ள கதை தற்போதைய Hologram போல் அக்காலத்தில் இருந்திருக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. இம்முறையிலேயே திருநாவுக்கரசருக்கு சிவபெருமானின் திருநடனக் காட்சி கிடைத்தது.

    மாங்கனி கிடைக்கும் நிகழ்வு தற்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது என்றாலும் வேண்டுதல்கள் நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாகவோ வேறு ஒரு சந்தர்ப்பத்திலோ எம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதை நாம் இக்காலப்பகுதியில் அநுபவ ரீதியாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. நாம் ஒருவருக்கு ஒரு உதவி செய்கின்ற போது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எமக்கு ஒரு உதவி தேவைப்படுகின்ற போது எங்கிருந்தோ ஒருவர் வந்து உதவி செய்வார். எவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் காரக்காலம்மையார் தன்னுடைய சிவனடியார்களைப் போற்றும் பணியைச் செய்திருக்கின்றார் என்பதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. அக்காலகட்டத்தில் கணவனுக்குத் தெரியாமல் ஒரு பெண் யாருக்கும் எநத ஒரு ஆடவனுக்கும் ஏழைக்குக் கூட உணவு கொடுக்க முடியாது. அவ்வளவு சந்தேகக் கண் கொண்டு மனைவியரைப் பார்க்கின்றது மட்டுமன்றி தம்மை மீறிப் பெண்கள் எதுவும் செய்வதை ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே ஆண்கள் இருந்திருக்கின்றார்கள். இதற்குச் சிலப்பதிகாரத்தில்

    “அறவோர்க் களித்தாலும் அந்தண ரோம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் இழந்த என்னை” என்னும் வரிகளை நாம் காணலாம்.

    இனிமையான கனி சுவைமிக்கதாக இருந்தால் தன்னைப் போல் தன் மனைவியும் அக்கனியை உண்டு இன்பம் அனுபவிக்கட்டும் என்று நினைக்காத பரமதத்தன்கள் இக்காலப்பகுதியிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனால், அடிப்படையில் உலகம் உருண்டு கொண்டுதான் இருக்கின்றது. வாழ்க்கை நிகழ்வுகளும் உருண்டு கொண்டுதான் இருக்கின்றன. பரமதத்தனின் அதிகாரப் போக்கை அறிந்த காரைக்காலம்மையார் தேவையில்லாத பிரச்சினையை ஏன் கொண்டு வர வேண்டும் என்று ஒரு மாங்கனியை காரைக்காலம்மையார் வாங்கி வைத்திருக்கலாம். வியாபார நிமிர்த்தம் ஒவ்வொரு நாடாகச் செல்லும் வியாபாரிகள் தங்கியிருக்கும் நாடுகளில் தம்முடைய இச்சைகளை அனுபவிப்பதற்கு ஒரு பெண் வைத்திருப்பது அந்தக்காலத்தில் வழக்கமாக இருந்தது. பரமதத்தன் தான் வியாபார நோக்கத்திற்காகச் சென்ற இடத்தில் தொடர்பு கொண்ட பெண்ணுடன் வாழ்வதற்கு இந்த மாங்கனிப் பிரச்சினை ஒரு வடிகாலாக இருந்திருக்கும்.

    இது புராணக்கதையாக இருந்தாலும் காரைக்காலம்மையார் பக்தி இலக்கியத்திற்கு முன்னோடி என்பதை நாம் அறிய வேண்டும்.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 25

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 25

    -மேகலா இராமமூர்த்தி

    ஏன் இன்னும் இலக்குவன் மீளவில்லை? ஒருவேளை சீதையை கவர்ந்துசென்ற அரக்கர்களைக் கண்டு அவர்களோடு வெஞ்சமர் புரியத் தொடங்கிவிட்டானோ? இராவணன் என் இளவலையும் கவர்ந்துசென்று கொன்றுவிட்டானோ? என்றெல்லாம் எண்ணிக் கவன்ற இராமன், தன்னைத்தானே வாளால் குத்திக்கொண்டு மாள எத்தனித்த வேளையில், அயோமுகியால் தூக்கிச்செல்லப்பட்ட இலக்குவன் அவளின் வசிய வித்தையிலிருந்து மீண்டு, சூர்ப்பனகையின் நாசியை அறுத்து அவளைத் தண்டித்ததுபோலவே, அயோமுகியின் நாசியையும் அறுத்தான். அவள் வலிதாளாது அலறிய பேரொலி இராமன் செவிகளில் விழுந்தது.

    இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு எழுகின்ற இந்தப் பேரொலி ஏதோ ஓர் அரக்கியின் குரலாகவே இருக்கவேண்டும் என ஊகித்த இராமன், சாகும் எண்ணத்தைக் கைவிட்டு, இலக்குவனைக் காக்க விரைந்தான். அப்போது இலக்குவனே இராமனுக்கு எதிரில் வந்துவிட்டான். வந்தவன், தன்னைக் குறித்து அண்ணன் கொண்டிருக்கும் கவலையைப் போக்கும் விதத்தில், ”அண்ணா! அடியனேன் வந்துவிட்டேன்; ஆதலால் அஞ்ஞான இருள்படியாத உளமுடைய நீ வருந்தற்க!” என்று உரைத்தவண்ணம் அண்ணனின் தளிரொத்த திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அதுகண்ட இராமன், இழந்த கண்களை மீண்டும் பெற்றதுபோல் மகிழ்ந்தான்.

    வந்தனென் அடியனேன் வருந்தல்
    வாழி நின்
    அந்தம் இல் உள்ளம் என்று
    அறியக் கூறுவான்
    சந்த மென் தளிர் புரை
    சரணம் சார்ந்தனன்
    சிந்தின நயனம்
    வந்தனைய செய்கையான். (கம்ப: அயோமுகிப் படலம் – 3724)

    நடந்த நிகழ்ச்சிகளை இலக்குவனிடம் கேட்டறிந்த இராமன், இலக்குவன் உற்ற இடர்ப்பாட்டுக்காகத் துன்பமும், அதனின்று அவன் வெற்றிகரமாய் மீண்டமைக்காக உவமையும் எய்தினான் ஒருங்கே.
    பின்னர்ச் சிறிதுநேரம் காட்டிடை ஓய்வுகொண்டனர் இருவரும். சீதையைப் பிரிந்தபின் இராமன் உண்ணவும் இல்லை; அவமானத்தின் தாக்கத்தால் உறங்கவும் இல்லை. கானத்தில் நோக்கும் திசையெல்லாம் அவனுக்குச் சானகி உருவமே தெரிந்தது. இதுவும் அரக்கர்செய் மாயையோ என உளம் நொந்தான் அவன்.

    ஒருபொருளை ஆழமாய் எப்போதும் சிந்தித்திருந்தால், அப்பொருளே எங்குநோக்கினும் காட்சியளிக்கும் என்பது உளவியல் உண்மை.
    முன்பு இராவணனும் தன் தங்கை சூர்ப்பனகை வாயிலாய்ச் சீதையின் அழகையறிந்து அவள் நினைவால் வாடி, அவளின் உருவெளித் தோற்றத்தைக் கண்டு, அது சீதைதானா என்று சூர்ப்பனகையிடம் வினவ, அவளோ இராமனையே எப்போதும் எண்ணிக்கொண்டிருந்த காரணத்தால் அவ்வுருவம் இராமனுடையது என்று விடை பகர்ந்ததைக் கண்டோம்; இப்போது இராமனின் நிலையும் அவ்வாறானது.

    கங்குல் பொழுதை மிகுந்த மனத்துயரோடு கழித்த இராமன், பொழுது புலர்ந்ததும் இளவலோடு தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஐம்பது யோசனை தூரத்தை இருவரும் நடந்தே கடந்தனர். ஒருநாள் உச்சிப்போதில் கவந்தன் எனும் அரக்கன் வதியும் இடத்தருகே வந்துசேர்ந்தனர். ஆங்கே அடுத்த சோதனை ஆரம்பித்தது அவர்களுக்கு.
    இந்தக் கவந்தன், வயிற்றிலே பெரிய வாயைக் கொண்டிருக்கும் பயங்கரமான தோற்றத்தைக் கொண்டவன். இருந்த இடத்திலிருந்தபடியே வெகுதூரத்திற்குக் கைகளை நீட்டி யானை முதல் எறும்பு வரை அனைத்துயிர்களையும் உண்ணக்கூடியவன். அவனுடைய கைகளில் இராம இலக்குவர் சிக்கினர். சீதையைக் கவர்ந்துசென்ற அரக்கர் படைதாம் தம்மை எதிர்த்து வந்திருக்கின்றதோ என்றெண்ணினான் இராமன்.

    அவ் அரக்கனின் கை அவர்களைத் தன் வாயருகே கொண்டுசெல்ல முயன்றபோது இஃது அரக்கர் சேனையன்று; பயங்கர வடிவுடைய ஓர் அரக்கனே என்று தெளிந்த இராம இலக்குவர், இன்னும் சற்றுநேரத்தில் தாமிருவரும் அவனுக்கு இரையாகப் போகின்றோம் என்பதையும் அறிந்தனர்.

    அப்போது இராமன் ஒரு முடிவுக்கு வந்தவனாய், ”இளவலே! தோகை சீதையும் எனைப் பிரிந்தனள்; தந்தை போன்றிருந்த சடாயுவும் துஞ்சினன். இவர்களையெல்லாம் காக்கத் தவறிய பெரும்பழியைச் சுமந்துகொண்டு இனியும் நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனவே, நான் இந்தப் பூத வடிவினனுக்கு உணவாகின்றேன்; நீ தப்பித்துச் செல்!” என்றான்.

    தோகையும் பிரிந்தனள்
    எந்தை துஞ்சினன்
    வேக வெம் பழி சுமந்து
    உழல வேண்டலேன்
    ஆகலின் யான்
    இனி இதனுக்கு ஆமிடம்
    ஏகுதி ஈண்டுநின்று
    இளவலே என்றான். (கம்ப: கவந்தன் வதைப் படலம் – 3766)

    அதைக்கேட்ட இலக்குவன், ”உமக்கு ஏதேனும் தீங்குவந்தால் உமக்கு முன்பாக நான் என்னுயிரை முடித்துக்கொள்ள வேண்டும். அப்படியிருக்க நீர் உயிர்துறக்கவும் நான் ஊர்திரும்பவும் செய்யலாம் என்றால் அச்செயல் மிக நன்று” என்றான் வேதனையோடு. தன் அன்னை சுமித்திரை இராமனுக்கு ஏதேனும் தீங்கென்றால் அவனுக்கு முன்பாக நீ மடி; உயிரை முடி என்று சொன்னதை இலக்குவன் மறக்கவில்லை என்பதை அவன் பேச்சு ஈண்டு நமக்கு உணர்த்துகின்றது.

    இராமன் துவளும்போதெல்லாம் அவனைத் தேற்றும் தம்பி இலக்குவன் இப்போதும் அப்பணியைச் செவ்வனே செய்து இராமனுக்கு உள்ள உரமூட்டினான். பின்னர் இருவரும் கவந்தனைத் தீரத்தோடு எதிர்த்து அவன் தோள்களை வெட்டி வீழ்த்தினர். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. இராமனின் ஆயுதத்தால் வெட்டுண்ட கவந்தன், கூட்டைவிட்டு நீங்கிய பறவைபோல் வானிடைத் தோன்றினான்.

    விசும்பில் நின்றபடி,
    “ஆதிப் பிரமனும் நீ
    ஆதிப் பரமனும் நீ
    ஆதி எனும் பொருளுக்கு அப்பால்
    உண்டாகிலும் நீ
    சோதிச் சுடர்ப் பிழம்பு நீ” (கம்ப: கவந்தன் வதைப் படலம் – 3787)
    என்று இராமனைப் பலபடத் துதித்தான்.

    இராம இலக்குவர் அவனை வியப்போடு நோக்கிக்கொண்டிருந்தபோது தன் வரலாற்றைக் கூறத் தொடங்கினான் அவன்.

    ”ஐயன்மீர்! நான் தனு எனும் பெயர்கொண்ட கந்தருவன் ஆவேன். முனிவர் ஒருவரின் சாபத்தால் இந்தக் கொடிய வடிவமெடுத்தேன். இப்போது உம்முடைய மலர்போன்ற கரங்களால் தீண்டப்பெற்றதால் என் சாபம் நீங்கி முந்தைய வடிவமெடுத்தேன்” என்றுரைத்தவன், ”நான் சொல்வதைக் கேட்பீர்! ஒப்பற்ற திறலுடையோராய் நீவிர் இருவரும் இருந்தாலும் சீதையைத் தேடிக் கண்டடைவதற்கு உமக்குத் துணைவலி தேவை; எனவே, உயிர்களுக்குத் தாயினும் சாலப் பரிந்து உதவுகின்ற சவரி எனும் அம்மையைச் சந்தித்து, அவள் காட்டுகின்ற வழியிற்சென்று இரலைக் குன்றத்தை (உருசியமுக பர்வதம்) அடைவீர். ஆங்கே கதிரவன்செல்வனும், பொன்வண்ணத்தவனுமாகிய சுக்கிரீவனோடு நட்பு கொள்வீர். அவன் சீதையைத் தேட உதவுவான்!” என்றுரைத்து விண்வழி ஏகினான்.

    சீதையைத் தேடி இராம இலக்குவர் பயணப்படுகின்றார்கள் என்பதைக் கவந்தன் எப்படி அறிந்தான் என்பதைக் கம்பர் தம் காப்பியத்தில் குறிப்பிடவில்லை. அவன் தேவன் என்பதால் ஒருகால் அவர்கள் சொல்லாமலேயே அவர்களைப்பற்றி அறிந்தானோ என்று எண்ணவேண்டியுள்ளது.

    கவந்தனின் வழிகாட்டுதல்படி சவரியைத் தேடிப் புறப்பட்டனர் சோதரர்கள் இருவரும். பூவுலக சொர்க்கம் என்று சொல்லும்படியான சோலைகள் சூழ்ந்த இடத்தில் அமைந்திருந்தது மதங்கர் எனும் முனிவரின் குடில். அங்குதான் சவரி எனும் வேட்டுவகுலப் பெண்மணி நெடுங்காலமாக இராமனை தியானித்துக்கொண்டும் அவன் வரவை எதிர்பார்த்துக்கொண்டும் காலங்கழித்து வந்தாள். விரைவில் அவள் இராமனைச் சந்திப்பாள் என்று தேவர்கள் சொல்லிச் சென்றிருந்தனர். ஆதலால் அந்த நன்னாளை ஆவலோடு அவள் எதிர்பார்த்திருந்த வேளையில் இராமன் அவளைத் தேடிவரவே மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றாள் அம்மாதரசி.

    அவ் அம்மையைப் பார்த்து இராமன், ”தீதின்றி நலமாய் இருக்கின்றீரா?” என்று வினவினான். அம்மொழிகள் அமுதமென அவள் செவிகளில் பாய, இவ்வுலகப் பாசம் எனை விட்டகன்றது; பிறவியும் தொலைந்தது என்றெண்ணி உவந்தவளாய் இராம இலக்குவர் உண்ணக் கனிகள் படைத்தாள் கனிவோடு.

    அவர்கள் உண்ணுவதை மகிழ்வோடு கண்ணுற்றபடி, ”எந்தையே! நீ இங்கே வருவாய் என்ற செய்தி அறிந்தமையால் உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்; இன்றுதான் என் தவம் பலித்தது” என்றாள். அதைக்கேட்ட இராம இலக்குவர் அத் தவத்துறை அரசியை அன்புற நோக்கி, ”எம் வழிநடைத் துயர்தீர்த்த அன்னையே! நீ வாழ்க!” என்று வாழ்த்தினர்.

    இருந்தனென் எந்தை நீ ஈண்டு
    எய்துதி என்னும் தன்மை
    பொருந்திட இன்றுதான் என்
    புண்ணியம் பூத்தது என்ன
    அருந் தவத்து அரசிதன்னை
    அன்புற நோக்கி எங்கள்
    வருந்துறு துயரம் தீர்த்தாய்
    அம்மனை வாழி என்றார். (கம்ப: சவரி பிறப்பு நீங்கு படலம் – 3805)

    ”அம்மையே!” என்று காரைக்கால் அம்மையாரைச் சிவனார் விளித்ததுபோல் இங்கே பத்தியிற் சிறந்த சவரியை ”தாயே” என்று இராம இலக்குவர் விளிக்கக் காண்கின்றோம்.

    அந்த நாளை அங்கேயே கழித்தனர் சகோதரர்கள். மறுநாள் காலை அம்மாதரசி காய்கதிர்செல்வன் மைந்தனாகிய சுக்கிரீவன் வதியும் உருசியமுக மலையை அடையும் வழியை அவர்களுக்கு விளக்கமாய் எடுத்துரைத்தாள்; அதைக் கவனத்துடன் கேட்டுக்கொண்டனர் இருவரும்.

    யோகநெறியால் ஞானமடைந்தவளான சவரி, இராம இலக்குவர் அங்கிருந்து புறப்படும் முன்னரே, தன் உடலை உகுத்து வீடுபேறுற்றாள். அந்த அதியசத்தைக் கண்டு வியந்தவாறே சுக்கிரீவனைச் சந்திக்கும்பொருட்டு உருசியமுக மலைநோக்கிப் புறப்பட்டனர் இருவரும்; கணக்கற்ற ஆறுகளையும் குன்றுகளையும் கடந்து நல்வினைகளின் இருப்பிடம் என்று விளங்கித் தோன்றிய பம்பை எனும் பொய்கையை அடைந்தனர்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

    Share
  • I saw the man who had served Mahatma Gandhi – Precious Moments in my Life

    I saw the man who had served Mahatma Gandhi – Precious Moments in my Life

    Baskar Seshadri

    Many of us may know Venkita Kalyanam the man who served Mahatma as his assistant for around five years and it was this man who was around Mahatma when Godse pumped bullets on that 30th January (Friday) of 1948.

    It was at this time Kalyanam who was just twenty years old rushed to break the news and went on to call the office of Vallabhai Patel and later to Jawaharlal Nehru.

    It was a small job which Kalyanam got for Rs sixty per month and he took that position after Mahadev Desai passed away. On that fateful day it was Kalyanam who served Gandhi his little food in the noon before he proceeded to Birla House.

    Kalyanam was a small time freedom fighter and did something against Britishers and was arrested for a while. He worked for an insurance company and then through a contact known to Devdas Joined the ashram.

    After the demise of Mahatma he also worked for few personalities like Nehru, Edwina and Red Cross.

    Incidentally Kalyanam was born on August 15 of 1920. Kalyanam would spend his time tending the plants and he has a big garden in Teynampet where he would love to spend time with plants. He was active enough to do the same till late 2010 then due to age factor he dropped the work and it was his assistant who is now doing there. Now he lives with his daughter and bedridden with a catheter support.

    I had the opportunity to see him last week in his place. I was already told that I cannot take long time with him since he is not too well. I went to him and said Namaskaram. He could not recognise any one since he has a vision problem to the acute stage but could see as an Image.

    He told me to sit and I hesitated but he ordered to sit and I was on the edge. I did not speak to him but was awestruck.

    This was the man who had seen Gandhi and other freedom fighters. What a moment in life to me? After few minutes I left the place and had a small chat with his family members. I am too happy that I have seen this man and was with him for a while.

    He will be celebrating centenary celebration next year. I feel the long mission in my life is complete. Heart filling memories with Kalyanam Sir. My Pranams.

    Please enlarge the photos for a better view . (The last photo below on right side is Kalyanam with Mahatma)

    Share
  • முருகன் பாட்டுப் போட்டி முடிவுகள்

    முருகன் பாட்டுப் போட்டி முடிவுகள்

    தைப்பூசத்து அன்று அறிவித்த முருகப் பெருமான் பாட்டுப் போட்டிக்கான முடிவுகளை முனைவர் வ.வே.சு. அறிவித்துள்ளார். வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள். முனைவர் வ.வே.சு. அவர்களுக்கும் ஓவியர் ஸ்யாம் அவர்களுக்கும் நன்றிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜோதிடப் பார்வையில் காதலும் திருமணமும் | வேதா கோபாலன்

    ஜோதிடப் பார்வையில் காதலும் திருமணமும் | வேதா கோபாலன்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    இது காதலர் தினச் சிறப்புப் பதிவு.

    திருமணத்துக்கு முன்பு ஜாதகம் பார்த்துத் தீர்மானிப்பது போல், காதலிக்கும் முன்பும் ஜாதகம் பார்த்துத் தீர்மானிக்கலாமா? எந்தெந்தப் பொருத்தங்களை முக்கியமாகப் பார்க்க வேண்டும்? திருமணம் தள்ளிப் போவதற்கு என்ன காரணம்? ஜாதகம் பார்த்தும் பார்க்காமலும் செய்த திருமணங்கள் எப்படி இருக்கின்றன? இத்தகைய கேள்விகள் பலவற்றுக்கும் ஜோதிடர் வேதா கோபாலன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நீச்சல்காரனின் கணித்தமிழ் ஆக்கங்கள்

    நீச்சல்காரனின் கணித்தமிழ் ஆக்கங்கள்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    நீச்சல்காரனின் கணித்தமிழ் ஆக்கங்கள் – 1 | Neechalkaran Rajaraman Interview – 1

    நண்பர் நீச்சல்காரன் என்கிற இராஜாராமன், வாணி, நாவி பிழைதிருத்திகள் உள்பட, பல்வேறு மென்பொருள்களைத் தமிழில் உருவாக்கியவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, தமிழக முதலமைச்சரின் கணித்தமிழ் விருது ஆகியவற்றைப் பெற்றவர். தமது மென்பொருள்கள், தேடல்கள், ஆய்வு முயற்சிகள் அனைத்தையும் இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    நீச்சல்காரனின் கணித்தமிழ் ஆக்கங்கள் – 2 | Neechalkaran Rajaraman Interview – 2

    நண்பர் நீச்சல்காரன் என்கிற இராஜாராமன், தனது கணித்தமிழ் ஆய்வுகளை, புதிய முயற்சிகளை, தேடல்களை தொடர்ந்து விவரிக்கிறார். பொது வெளியில் வைக்கப்படாத அவரது தனிப்பட்ட மென்பொருள்கள், நிரல் பணிகள் உள்ளிட்ட பலவற்றையும் இந்த அமர்வில் நமக்குச் செயல்படுத்திக் காட்டுகிறார். தமிழில் எத்தனை இணையத்தளங்கள் உள்ளன? எத்தனை வலைப்பதிவுகள் உள்ளன? இதோ தரவுகள். உரிய ஆதரவு அமைந்தால், தமிழுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இந்த நேர்காணலின் வழியே நாம் தெரிந்துகொள்ளலாம்.

    Share