Blog

  • குருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லை

    குருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லை

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    முல்லைத்தீவு மாவட்டம் குமிழமுனைக்கு அண்மித்தான குருந்தக் குன்றில் அருள்மிகு ஆதி சிவ இலிங்கேச்சரர் திருக்கோயில் மூலவரான முச்சூலம் நீக்கப்பட்டதாக வந்த செய்திகள் தவறானவை.

    குன்றின் உச்சியில் உள்ள சைவ வழிபாட்டு இடம் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது. குருந்தக் குன்று திருக்கோயில் அறங்காவலர் என்னிடம் தெரிவித்தார்கள். மேலும் விவரம் பெற விரும்புவோர் திருக்கோயில் அறங்காவலர் திரு சசிகுமார் அவருடன் தொடர்புகொண்டு விபரங்களை அறியலாம். +94767644290

    குருந்தன்குளம் அணைக்கட்டுக்கு அருகே மலையடிவாரத்தில் உடைந்த கட்டிடம் இருந்தது. நான் நேரில் பார்த்திருக்கிறேன். அங்கு புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்ட முயன்றதால் நீதிமன்றத்தில் வழக்கு.

    உடைந்த அந்தக் கட்டடத்தின் அருகே தொல்லியல் மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தனர். மேசைமீது புத்தர் சிலை ஒன்றை வைத்தனர் வணங்கினர். அந்த இடத்தில் நிலத்தைத் தோண்டவில்லை, நோண்டிப் பார்த்தனர்.

    அமைச்சர் வந்திருந்தார். படைப் பிரிவினரும் வந்திருந்தார்கள். புத்தபிக்குகள் எவரும் அங்கு வரவில்லை.

    படைப்பிரிவின் காப்பரண் நெடுங்காலமாகவே அங்கு உண்டு. படைவீரர் ஒருவரோ இருவரோ இருப்பார்கள். கடமைக்கு வராத நாள்களே கூடுதலானவை.

    சைவக் கோயிலுக்குச் செல்வதற்குத் தடை ஏதுமில்லை. பொங்கலுக்குத் தடையில்லை. வழிபாட்டுக்கு தடையில்லை. என அமைச்சர் அறங்காவலரிடம் கூறியுள்ளார்.

    முழுமையான தகவல் அறியாமலே முச்சூலம் அகற்றியதாகத் தவறான செய்திகள் வெளியாகி சைவ உணர்வாளர்களின் மனம் புண்ணாகியதே.

    வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குமிழமுனை வழியாகச் சைவ உணர்வாளர்கள் வழிபடு பயணமாக குருந்தக் குன்று சென்று குருந்த மரநிழலில் அமர்ந்து இருக்கும் சிவபெருமானை வழிபட்டு அருள் ஆசி பெற்று வருவார்களாக.

    Abrahamic machinations towards Buddhist Hindu discord

    Maravanpulavu K. Sachithananthan
    Siva Senai

    As has been in the past, Catholic and Missionary Christians are once again in the forefront of fermenting a rift, a conflict, a riotous situation between the Buddhists and Hindus in Sri Lanka.

    This time they have chosen a god-forsaken hill top off Kuizhaminai in Mullaitivu District to provoke Hindus against the Buddhists.

    Kuruntham Hill is in the midst of a reserved forest area on the banks of the newly reconstructed Kuruntham kulam tank-bund. On the top of the hill are remnants of archeological interest of a Hindu temple, Siva temple.

    A trust at Kumuzhamunai is maintaining the worship centre at the hilltop. They arrange for regular poosai. Also the villagers climb up the shrub grown, snake infested tree shaded trek-track, to pray with pongal on most full moon days. The climb is a rigorous task on slippery red sand gravel as there is no paved track or laid steps.  

    Prior to the violent conflict (period of 30 years) the government did not even know of this site. Post conflict era, the army out-post continues and a Buddhist statue for the army personnel has been installed. As usual for a victorious conqueror, Buddhist bhikkhus backed by the archeological department are claiming the hill as a repository of Buddhist relics.

    Recently there was an attempt to construct a hall for the archeologists to stay and work from. The prayer for an injunction by the temple trustees had a favourable response at the courts and the building activity was halted.

    Last weekend, a group of archaeology students from the Peradeniya University visited the hill led by a Minister and supported by the Army. It was part of a field study for the students. 

    They climbed about 2-3 meters to reach an old dilapidated building to explore the area. The Minister and the Army escort were there. There were no Buddhist bhikkhus at all. They did not climb to reach 40-50 m. high hilltop, where the Siva temple is situated. 

    Catholic and Missionary Christian groups based at Mullaitivu sent out hate messages saying that the Minister and the Army had severely damaged the Siva temple to build a Buddhist vihara there.  

    They use their inward remittances, build a network of social and other media outlets to fan the flames of hatred between Buddhists and Hindus. Especially those at Mullaitivu, demographically a miniscule compared to the vast Hindu population in the district, are so organised to work fulltime on non-ecclesiastical manipulations, machinations to meticulously inflame the passions of Hindus against Buddhists. This morning all the media, print, digital and social media carried in bold headlines that Hindus should rise against Buddhist hegemony.   

    Earlier, it was these ecclesiastes who led a procession to protest against the cremation of a Buddhist priest near a Pillayaar temple at Neeravi, Nayaaru off Mullaitivu.  The ecclesiastes (1) who describe the abode of Pillayaar as the abode of Satan, (2) who had a colleague at Mannar as one of the accused in the case on the demolition of the ceremonial Hindu arch at the 10,000 year or so old historical Thiruketheechcharam Siva temple, organised a procession (participants mostly from their parishes) relating to the cremation, saying that the Buddhists have desecrated a Hindu temple.

    I appeal to the Global Hindus to intervene. A representation from the Global Hindus to all those concerned to desist from promoting religious hatred. Sri lankan Hindus are recovering slowly from the hardships endured through a prolonged violent conflict. They are not, repeat not, prepared to be pawns in the malicious hands of those inciting Buddhist – Hindu discord towards another unwanted conflict.

    Abrahimic colonialism has not ended. It is on a divide and rule policy. Global Hindus should come to the rescue of Sri Lankan Hindus. We want to have peace within ourselves and with our neighbours. Enough is enough of these conflict mongering Abrahamists.       

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 114 (நல்ல)

    சேக்கிழார் பாடல் நயம் – 114 (நல்ல)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    “நல்ல கோவணம்  கொடுப்பனென்று  உலகின்மேல்  நாளும்
    சொல்லு வித்ததுஎன் கோவணம் கொள்வது துணிந்தோ?
    ஒல்லை ஈங்குறு வாணிபம்  அழகிதே யுமக்கு!“என்று
    எல்லை யில்லவன்  எரிதுள்ளி னால்என  வெகுண்டான்.

    நல்லூர்  அமர்நீதியாரிடம்  தம்  கோவணத்தை  வைத்துச்  சென்ற  வேதியர் அக்கோவணத்தை மறைத்துவிட்டு  அதற்குத்  தலைமுழுகினாரோ, சடையில் உள்ள கங்கைநீரில்  நனைந்தாரோ, வானம் பெய்த மழையில் நனைந்து வந்தார். அவரை அறுசுவை உணவுடன் அமர்நீதியார் வரவேற்ற பொழுது, ‘’நான் ஈரத்தை  மாற்ற முன்பு உம்மிடம் தந்த  கோவணத்தை தருக’’  என்றார். அந்தணரின் சூழ்ச்சியை அறியாத அமர்நீதியார்  அக்கோவணத்தை  வைத்த இடத்தில் காணாது, எங்கெங்கும் தேடினார். கோவணத்தைக் காணா மையால் பெருந்துன்பமுற்றார். தம் இல்லத்தில்  மனைவியார் மற்ற உறவினர்கள்  யாவரும் இப்படி ஒரு சங்கடம் வந்ததே   என்று திகைத்தனர். ஆகவே  வேதியர் அணிந்து கொள்வதற்கேற்ற நல்ல கோவணத்தை எடுத்துக் கொண்டு, அவர்முன் சென்று ‘’ நீங்கள் அளித்த கோவணத்தை வைத்த  இடத்தில் காணவில்லை;  யாரும் அதனை எடுத்து வைக்க வில்லை; இது வியப்புக்குரியது!  ஆதலால்  நீறு புனைந்த  நெற்றியடைய வேதியரே, நன்றாகப்  புதிய துணியால் நெய்த வேறொரு  நல்ல  கோவணம் கொண்டு வந்தேன்; ஈரத்தை மாற்றி, என்னை மன்னித்து, இதனை அணிந்து கொள்க’’ என்று வேண்ட வேதியர், ‘’இன்று காலையில் வைத்த கோவணம்  இன்றே காணவில்லை என்கிறீர், பலநாளும் ஆகவில்லை, வேறொன்று தருகிறேன் என்பது சரியோ?’’; இதுவரை நல்ல கோவணம் தருவேன் என்று ஊரறியக் கூறி, என் சிறந்த ஆடையைக் கவரும் நும் வியாபார உத்தியோ?‘’ என்று கனல் உமிழும் சொற்களால்  வைதார். அந்தப்பாடல் ,

    “நல்ல கோவணம்  கொடுப்பனென்று  உலகின்மேல்  நாளும்
    சொல்லு   வித்ததுஎன் கோவணம்   கொள்வது   துணிந்தோ?
    ஒல்லை ஈங்குறு வாணிபம்  அழகிதே யுமக்கு!“என்று எல்லை யில்லவன்  எரிதுள்ளி   னால்என  வெகுண்டான்.

    பொருள்:

    “நல்ல கோவணந் தருவேன் என்று உலகிலே பல நாளும் சொல்லச் செய்வது எனது கோவணத்தைக் கொள்வதற்குத் துணிந்துதானோ? விரைவாக நீர் இங்குச் செய்த வாணிபம் உமக்கு அழகிதே!“ என்று கூறி, எல்லையிலாதவராகிய இறைவர் எரிதுள்ளினாற் போலச் சினந்தார்.

    விளக்கம்:

    நல்ல….சொல்லுவித்தது – நாயனார் உலகில் தமது செயலைத் தாமே விளம்பரப்படுத்தியதாகக் கூறியவாறு.

    ‘’உங்கள் பழைய பொருளை போட்டுவிட்டுப் புதியதை எடுத்துச் செல்லுங்கள்‘’ என்று விளம்பரப்படுத்தலே (Advertisement) வியாபார முறை என்பதை இந்நாள் மக்களுக்குச் சொல்லவேண்டுவதில்லையன்றோ?

    சொல்லுவித்தது – பலரும் எடுத்துச் சொல்லும்படி செய்தது. உலகின் மேல் – உலகிலே மேற்போக்காக. மேன்மையாக என்றலுமாம்.

    கொடுப்பன் என்று சொல்லுவித்தது, கொள்வது துணிந்தோ? – கொடுப்பதும் கொள்வதுமே வாணிபத் தொழிற்குரியன. “கொடுப்பதுங் குறைபடாது கொள்வது மிகைபடாது“ என்ற பட்டினப் பாலையை  இங்கு நினைவு கூர்க. இக்கருத்தினைத் தொடர்ந்தே பின்னரும் “ஈங்குறு வாணிபம் அழகிதே“ என்றார் இங்கு மறையவர் நாயனாரது குலத்தொழிலையும் சுட்டி இழித்துக் காட்டுவது போலக் கூறியது. தமது மிக்க வெகுட்சியையும் அறிவித்து, அவர் செயலைமிக இழிவுபடுத்துவது போன்று காட்டி, அதற்கும் கீழ்ப்பட்டுநின்ற அவரது அன்பின் பெருமை காட்டுதற்காம்.

    அழகிதே – அழகன்று. எதிர்மறை குறித்தது. “நிலைமை நன்று“ (526) என்றது போல உடன்பாட்டுப் பொருட் குறிப்பும் பெறக்கூறிய சுவை காண்க.

    எல்லையில்லவன் – அளவுட்படாதவன். “அளவிலா அளவுமாகி“ முதலியனவாக முன்னர் இப்புராணத்தில்  உரைத்தனவுங் காண்க.

    எரிதுள்ளினால் என வெகுண்டான் – கோப மிக்கவழிக் கண்கள் தீப்பொறி பறக்க உள்ளனபோலச் சிவக்கும். இது மிகு கோபத்தின்தியல்பு என்பர். தீயும் சிவந்து மிகுதியும் பற்றியவழிப் பொறி பறக்க நிற்கும். ஆதலின்- எரிதுள்ளினாலென தீப்பொறி பறக்க மிகுவதுபோல என்றதாம். இதனைக் “கதமிக் கெரிகதிரின் முன்னிருள்போல்“ என்ற சிவஞானபோதம் 10-ம் சூத்திர உதாரண வெண்பாவினுரையில் “ஒப்புமைபற்றிக் கதமிக் கெரிகதிர்“ என்றார். ஒப்புமையாதல் “எல்லை யில்லவ னெரிதுள்ளினாலென வெகுண்டான் என்றதனானுமறிக“ என்று சிவஞானபோத மாபாடியத்துள் விளக்கியருளினார்,  எமது மாதவச்சிவஞான சுவாமிகள்!

    அழகிதீதுமக் கென்று – என்பதும் பாடம். 26

    Share
  • Krishna gana sabha

    Krishna gana sabha

    Baskar Seshadri

    We all could have felt bit disappointed that we missed a grand music season this 2021 due to Covid 19 but please kindly note how grandly it was celebrated almost fifty years ago in Krishna gana sabha.

    The image here refers to an advertisement in Kalki (Now only on online). There were good number of programmes throughout the period including good dramas of popular stage artistes of those days on this season and almost all the great popular celebrities had been chosen by the sabha and strangely and rightly to say that none of the names of the office bearers names had not been mentioned at all.

    I request friends to enlarge the image to see the names of the stalwarts to wonder how great geniuses this soil had produced. This griffith road where the sabha is still there later became Muppathamman koil street fondly being called by locals and later the Tamilnadu Government had renamed this street as Maharajapuram Santhanam salai.

    Please download the photo and enlarge if you can to get a better image.

    Share
  • DDoS தாக்குதலால் முடங்கிய தளம்

    DDoS தாக்குதலால் முடங்கிய தளம்

    எல். கார்த்திக்
    தள மேலாளர், வல்லமை

    ஜனவரி 15 ஆம் தேதி பிற்பகலில் இருந்து ஜனவரி 17 மாலை வரை நம் “வல்லமை” இணையதளம் செயல்படாமல் இருந்தது. ஜனவரி 17 மாலையில் இருந்து மீண்டும் வேலை செய்யத் தொடங்கியது. தளம் முடங்கியதற்கு முதலில் எனது வருத்தங்கள்.

    பொதுவாய், தளம் முடங்கவேண்டும் என்றால் அதன் வழங்குபொறியில் (server) பிரச்சனை வரலாம். இதில் வழங்குபொறி பிரச்சனை இல்லை. எந்தவித மால்வேர் பிரச்சனையும் இல்லை. DDoS Attack என்ற, தனிப்பட்ட தளத்தைக் குறிவைத்துச் செய்யப்படும் தாக்குதல்தான் இது. அதனுடன் வேறு இரண்டு சிறிய பிரச்சனைகளும் இணைந்துகொண்டன.

    இது வைரஸ் அல்ல. நமது தளத்திற்கு மிக மிக அதிகப்படியான விசிட்டுகளைச் செயற்கையாக உருவாக்கி அதன் மூலம் சர்வரை வேலை செய்யவிடாமல் செய்வதுதான் DDoS. 14&15 இரண்டு நாட்களுமே மிக மிக அதிகமான விசிட்டுகள் இருந்தன. இதனால் நமக்கு சர்வர் சேவையை வழங்கும் நிறுவனமே தளத்தை முடக்கினார்கள்.

    அவர்களுடன் கலந்தாலோசித்து “cloud Fare ” எனப்படும் சேவையில் நமது தளத்தை இணைத்துள்ளோம். இதன் மூலம் மிக அதிக விசிட்டுகள் முடக்கப்படும். சர்வர் பாதிக்காமல் இயங்கும். இப்பொழுதைக்கு அபாயம் நீங்கினாலும் , மீண்டும் அப்பிரச்சனை உடனே வரக்கூடாது என்பதற்காக இப்பொழுது தளத்தை யார் விசிட் செய்தாலும் முதலில் “captcha ” கேட்கும். அதைச் சரியாகப் பூர்த்தி செய்தால் மட்டுமே தளம் வரும். இது ஒரு தற்காலிக ஏற்பாடே. விரைவில் இதை நீக்கிவிடுவோம். இந்த captcha இருப்பதனால் செயற்கையான விசிட்டுகள் தடுக்கப்படும்.

    அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

    Share
  • What a big heart it is?

    What a big heart it is?

    Baskar Seshadri

    Sevalaya is now a household name which has been functioning for almost three decades extending the best of their social services with the best support that pours from various sources like individuals and corporate companies. It was started with just five kids in a rented home in chennai and now it has service facility that is being extended in other parts of Tamilnadu like Trichy, Thiruvallur and Kancheepuram. It is headed by Sri V Muralidaran with the able support from other office bearers/trustees and all these years they have been functioning on PS Sivaswamy Salai near Vivekananda college.

    Mr. V. Muralidharan, Founder and Managing trustee of Sevalaya

    Now the news is more Big. Mrs. Lakshmi Venkatraman a old resident of Mylapore who was so impressed with the service of Sevalaya had come forward to donate a flat belonging to her on Ananda Road near Abiramapuram. Its not just a donation but it was a real transfer of the deed of the property on the name of Sevalaya.

    A 1250 Square feet residential home is now being converted as an office and the service organization is to move there soon. The estimated value of the property in today’s realty market value is close to 1.75 Crores. What a big heart Mam to donate for such a lovely cause?

    Mrs. Lakshmi is quiet about all these media reports and she want to stay away from all the lauding reports. She is a writer who has been contributing since late eighties in Arts and Culture section of The Hindu and a critic too. When I approached her over phone for a small appointment she was too hesitant to speak on the said subject but I insisted her that she speak to me for a minute on the said cause. I literally fell at her feet and said it was greatest Generosity I had come across in the recent times. My Pranams Madam.

    She is the granddaughter of Late Justice Sundaram on whose name there is a road now near Nageswara rao park and Rama Rao road. One of the Greatest Moments in my life which had melted me on a public cause recently.

    Cover Photo: Mrs. Lakshmi Venkatraman

    Share
  • அனைத்துத் தமிழர் நலம் பேணும் ஆற்றலர் இவரே

    அனைத்துத் தமிழர் நலம் பேணும் ஆற்றலர் இவரே

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    தமிழ் தேசியத்தின் இலக்கைத் தெளிவாகத் தெரிந்தவர். அந்த இலக்கை அடையும் வழி முறைகளையும் நன்றாக அறிந்தவர். சாத்தியமான வழிமுறைகளை எடுத்துச்செல்லும் திறமையாளர். அனைத்து தரப்பினருடனும் நல்லுறவைப் பேணுபவர். அதற்காகத் தேசிய நிலைப்பாட்டிலிருந்து கிஞ்சித்தும் விலகாதவர்.

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்துக்குச் சொல்லவேண்டும். தமிழர் தரப்பு இணந்து இதைச் சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்தார். அனைத்து தரப்பினரையும் இணைத்தார்.

    தமிழ் மக்கள் வாழும் நிலப்பரப்பின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களையும் அழைத்தார். சிறந்த வரைவை உருவாக்கினார். ஒன்றிணைந்த தமிழர் கோரிக்கையை உருவாக்கினார்.

    மன வேறுபாடுகள், மாச்சரியங்கள், விரிசல்கள் இவைக்கு அப்பால் ஈழத் தமிழர்களின் ஒன்றிணைந்த கோரிக்கை இதுவே என உலகநாடுகளுக்கு எடுத்துச் சொன்னவர்.

    திருவள்ளுவர் காட்டிய ஒழுக்க நெறிகளை வாழ்வின் தலையாய நெறிகளாக கொண்ட பகுத்தறிவாளர்.

    தமிழர் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்.

    இன்றைய சூழ்நிலையில் அனைத்துத் தமிழ் அரசியல் அமைப்புகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் தலைமை தாங்கக் கூடிய தகுதி உடையவர் அவரே.

    அவரே மன்னாரின் மணியான முத்தான மனிதர் சுப்பிரமணியம் சிவகரன். ஒருங்கிணைந்த அரசியல் அமைப்புக்குத் தலைவராகும் தகுதியர்.

    அரசியல் களத்தில் அவர் நின்றாலும் மக்கள் நலம் அவர் உள்ளத்தில் குடி கொண்டிருக்கின்றது.

    ஈழத்தமிழ் மக்கள் நலனை முன்னெடுப்பதில் ஆட்சித் திறமையை அவர் வளர்க்க வட மாகாண முதலமைச்சராகவும் அவரைத் தேர்ந்தெடுத்துப் பொறுப்புகளைக் கொடுத்தால் சிறப்பாகப் பணியாற்றக் கூடியவர்.

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்காக அவர் இந்த ஆண்டில் ஆற்றிய பணிகளை மனதில் கொண்டு நான் சொல்லவில்லை .

    கடந்த பல ஆண்டுகளாகவே அவரை அறிவேன், அவரது தேசியம் சார் முன்னெடுப்புகளையும், மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளையும், அரசியல் முன்னெடுப்புகளையும், அறிவார்ந்த செய்தித் தொகுப்பு முன்னெடுகளையும் அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

    மன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன்.

    Share
  • நினைத்தேன் வந்தாய் நூறு வயது – மக்கள் திலகம் பிறந்த நாள்

    நினைத்தேன் வந்தாய் நூறு வயது – மக்கள் திலகம் பிறந்த நாள்

    பாஸ்கர்

    அது 1958 ஆம் வருடம். மருதூர் கோபாலக்ருஷ்ண மேனன் ராமசந்திரன் அந்த திரைப்படத்தில் ஒரு வசனம் பேசுவார். பட்டேனே பல துயரம், கெட்டேனா… இதை எண்ணி தான் புரட்சி கூட்டத்தில் சேர்ந்தேன்.

    அண்ணா என எம் என் ராஜம் அலறுவார்.

    கவலைப்படாதே மனோஹரி… அது ஆளை கொல்லும் ஆயுத புரட்சி அல்ல. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை என்பார்.

    என்னை நம்புகிறாயா சகோதரி?

    நான் மட்டும் இல்லை அண்ணா.. இந்த நாடே உங்களை தான் நம்பியிருக்கிறது. மக்கள் திலகம் பேசி முடிப்பார்.

    கொட்டகையில் சீழ்க்கை ஒலி பறக்கும். அவர்கள் பாஷையில் பிகில் — கொண்டு வந்த சில்லறையை இறைப்பார்கள். பூக்களை தூவுவார்கள். அவர்கள் வணங்கும் தெய்வம் அவர்.. வசனம் கண்ணதாசன் . உதவி செய்தவர் ரவீந்தர். சுமார் அஞ்சு மணி நேர படம் அது .அதனை சீவி மூன்று மணியாக்கினர். படம் மாபெரும் வெற்றி — வெற்றி பெற்றால் மன்னன், தோல்வி அடைந்தால் நாடோடி என முன்னர் சொன்னார். அன்று முதல் அவர் மன்னன். தனது பிம்பம் பற்றிய திட்டத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கி அவர் அடைந்த பெரிய உயரம் யாரும் அடையாதது .அவரை மலையாளி என்றார்கள், அவர் ஊர் கண்டி என கிண்டல் செய்தார்கள் ஆனால் அவர் பேசிய தமிழ் வசனம் மிக அற்புதம் . அதற்கு முன்னர் அவர் அடைந்த வெற்றி பல படங்களில் இருந்தாலும் நாடோடி மன்னன் அவரை பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றது .கட்டுடல், அழகான சிரிப்பு, வசீகர முகம் – தமிழ் திரை உலகம் ஒரு மயக்கத்திற்கு தயாராகி கொண்டு இருந்தது. மன்றங்கள் முளைத்தன. பட்டுகோட்டையும், மருதகாசியும் திறந்த பேனாவை மூடவில்லை. செங்கொடி பாட்டில் தெறித்தது.

    அண்ணாதுரை அணைத்து அவரை கூட்டத்தில் காட்ட தி மு க விஸ்வரூபம். மக்கள் திலகத்திற்கு இப்பொது தான் தன் பலம் என்ன என்பது தெரிந்தது. 1972 ஆம் ஆண்டில் அதை நிரூபித்தார் தன் கட்சியை கொண்டு வருவதின் திட்டம் எப்போதோ போட்ட விதை. கருணாநிதியிடம் கணக்கு என்பது ஒரு சம்ப்ரதாய காரணம். மக்கள் திலகம் இருக்கும் வரை தி மு க எழவில்லை. காரணம் கலைஞரை காட்டிலும் அவருக்கு இருந்த பெயர். அரியணை கட்டில் ஏறிய பின்னர் அவரும் பால்டிகா பல்கேரியா என்ற ஊழல் பிரச்சனையில் மாட்டி நின்றார். ஒரு தேர்தலில் தோல்வி கண்டு பிறகு வலி உணர்ந்தார். அதற்கு பிறகு அவர் தோல்வியடையவில்லை பெற்ற வெற்றியில் செய்த பெரிய தவறு விடுதலை புலிகளுக்கு ஆதரவு கொடுத்தது. அதன் வீர்யம் மற்றும் வீச்சும் ராஜீவ் மரணம் வர தொடர்ந்து வந்தது. அன்று பிரபாகரனிடம் கோட்டையில் வைத்து கோடிக்கணக்கில் கொடுக்காமல் இருந்திருந்தால் பிரபாகரன் தன்னை பொருளாதார ரீதியாக தயார் செய்து கொண்டிருக்க மாட்டார். நாமும் ராஜீவ் காந்தியை இழந்து இருக்க மாட்டோம். தான தர்மங்களில் அவர் காட்டிய முனைப்பு, எல்லோரையும் அணைத்து செல்லும் பாங்கு, ஏழை மக்களின் அன்பு அவரை ஒரு தேசத்து ராஜாவாக்கியது. நல்ல நினைவாற்றல், கொடுத்த வார்த்தையை காக்கும் புத்தி.

    ஒரு கல்யாண பத்திரிகை கொடுக்க போனவரிடம் ஏன் விருந்துக்கு மட்டும் என்னை அழைக்கிறீர்.. கல்யாணம் எங்கே என வினவ அது ஒரு ஊரில் என்றார். ஆனால் அது உறவுகள் ஏற்பாடு என்றார். நான் உனக்கு உறவு இல்லையா என கேட்டு சொல்லி வைத்தார் போல அடுத்த மாதம் அவர் ஊருக்கு சென்று கல்யாணம் முன்னின்று நடத்தினார்.

    உடல் நலம் குன்றி இருந்த போது இந்திரா காந்தி 1984ஆம் சென்னை வந்து அவரை சந்தித்து வெளிநாடு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.. கொஞ்சம் குணமாகி நன்றி சொல்வதற்கு முன்னால் இந்திரா கொல்லப்பட்டார். மக்கள் திலகம் அடைந்த பெரிய கலக்கம் அது, மூன்று வருடங்களில் அவரும் இயற்கை எய்தினார். ஊரே புலம்பியது, தொலைகாட்சி காமிராக்கள் ஏதும் இல்லை தொண்டர்கள் சுருண்டு கலங்கினார்கள் – எல்லாம் உணர்ச்சிபூர்வமான நடத்தை எதிர்பார்ப்பற்ற செயல்கள். இவர்கள் யாரும் நடிக்கவில்லை.. பொன்னை மண் மூடியது, அவருக்கு வயது அப்போது 71.

    அன்று மாலை நான் நண்பர்களுடன் கடற்கரையில் இன்னொரு மூலையில் இருந்தேன். எல்லா துக்கமும் மனசுக்கு தான். காற்றும் அலைகளும், காகமும், மேகமும் வழக்கம் போல் தத்தமது வேலைகளை செய்ய நாங்கள் எல்லோரும் வீடு திரும்பினோம்.

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் – வாலி

    கவிஞர் வாக்கு – பொய்க்கவில்லை .

    Share
  • குறளின் கதிர்களாய்…(336)

    குறளின் கதிர்களாய்…(336)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(336)

    தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ
    னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று;.

    – திருக்குறள் – 875 (பகைத்திறம் தெரிதல்)

    புதுக் கவிதையில்...

    உதவிடும் துணையில்லை
    வருத்திடும் பகை இரண்டு,
    இந்நிலையில்
    தனியே இருக்கும் ஆட்சியாளர்
    பகையிரண்டில் ஒன்றைத்
    தனக்கு
    இனிய துணையாய்
    ஆக்கிக் கொள்க…!

    குறும்பாவில்...

    தனக்குத் துணையில்லை பகையிரண்டு,
    தனியான ஆட்சியாளர் பகையில் ஒன்றைத்
    தனக்கு நற்றுணையாக்கிக் கொள்க…!

    மரபுக் கவிதையில்...

    உதவிடத் தனக்குத் துணையில்லை
    உறுபகை யுள்ளது இரண்டாக,
    பதறிட வேண்டாம் ஆட்சியாளர்
    பகையினைக் கண்டே தனிமையிலே,
    சிதறிட வைக்கப் பகையினையே
    சிறந்த வழியது ஒன்றுண்டு,
    உதவிடும் வகையில் பகையொன்றை
    உற்ற நட்பாய் ஆக்குதலே…!

    லிமரைக்கூ..

    தனிமையில் இரண்டாய்ப் பகையே,
    உற்ற துணையாய் ஒருபகையை ஆக்குதலே
    ஆட்சியாளர் உய்யும் வகையே…!

    கிராமிய பாணியில்...

    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
    பகயோட நெலய
    நல்லாத் தெரிஞ்சிக்கோ..

    ஒதவி செய்யத்
    தொண இல்லாதபோது
    தனக்குப் பக ரெண்டுவந்து
    தனியா நின்னா
    ராசாங்கத்தில உள்ளவங்க
    செய்யவேண்டியது இதுதான்,
    தனக்கு ஒதவுற வகையில
    ஒரு பகய
    தொணயாக்கிட வேண்டியதுதான்..

    அதால
    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
    பகயோட நெலய
    நல்லாத் தெரிஞ்சிக்கோ…!

    Share
  • Pottery painting

    Pottery painting

    Baskar Seshadri

    It was early this morning close to seven am (January 14, 2021). I could see a young cute girl assisting her mother in the pottery painting near the luz corner.

    She was bright and energetic to help her mother and she is Tejasvi. She was in full smile and was keen to do more painting all over the Pongal pots but was restricted by her mother fearing she may break by mistake.

    She was in her innocence and do not even know what it is to dream about. Her mother was waiting for someone to pick up the pots but there were no big takers. They were sleeping on the pavements since yesterday night to do the sale on the eve of pongal.

    Like many others Tejasvi is waiting for the school to open. She is to go to first standard. She should study well and not struggle like her parents and be on the pavement to eke the livelihood.

    I wish to see them this evening to give few masks and little money. I am never able to come to terms in life with this inequality among people. In tears

    Share
  • Robusta

    Robusta

    Baskar Seshadri

    Almost fifty years ago when I was a lad my father used to make me work on a fascinating equipment which I loved most for reasons unknown at that time. But the fascination for the same is still even today. That simple equipment is the portable coffee powder grinding machine which we had in our house.

    My Father with his highest level of technical brilliance used to make something strange and innovative at the drop of the hat. This powder vending machine is normally fitted in a place and we used to rotate the handle to get the best of the powder.

    Since I was too young I can apply a little force but my dad in his late forties used to apply such a force to get the powder perfectly ground and I used to get wonderstruck both at the machine and the man. I could never get the way he did it.

    He used to get the coffee seeds well roasted in the shop and grind it little every week. For a while he loved chicory but later he dropped the idea and it was plain robusta.

    Later he insisted that coffee seeds Plantation A and peaberry be mixed at equal proportion and be roasted to be grounded later in the house, but on the same day.

    No fridge those days to preserve it safe in a cool place either.

    Coffee is life line since sixties to us like in any other family of Madras.

    Today when I chanced upon a bill of early eighties of Leo Coffee time rolled me back to those days of Old Mylapore. And the rate of a half kilogram of robusta was Rs 13.50 / from Leo. Today you can only get just a little chai for that. Much water had flown today under the bridge and I could see the same Leo and The Mada street but not my Father who passed away ten years ago.

    A pain no pill can cure.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 51

    பழகத் தெரிய வேணும் – 51

    நிர்மலா ராகவன்

    புகழ்ச்சிக்கு மயங்கினால்…

    கலைவிமர்சராக ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.

    புகழ்பெற்ற அக்கலைஞர் எனக்குத் தெரிந்தவர் என்றதால், மறுநாள் காலை அவரை அழைத்து, எந்தெந்த அம்சங்கள் சிறப்பாக இருந்தன என்று விவரிக்க ஆரம்பித்தேன்.

    அவர் உடனே என்னைத் தடுத்து, “எந்த இடம் சரியாக இல்லை என்று மட்டும் கூறுங்கள்,” என்றார்!

    அவர் முன்னேற்றம் அடைந்ததன் காரணம் புரிந்ததா?

    குறையை ஏற்காதவர்கள்

    `நான் தவறே செய்யமாட்டேன். என்னைக் குறை கூறுகிறவர்களுக்கு என்னைவிட அதிகமாகத் தெரியுமோ?’ என்பதுபோல்தான் பலரும் பேசுகிறார்கள்.

    இத்தகையினர் ஓரளவு உயர்ந்தபின், கர்வத்தால் அங்கேயே நிலையாக நின்றுவிடுவார்கள். பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

    இவர்களுக்குத் தம்மைப் புகழ்கிறவர்களைத்தான் பிடிக்கும். அவர்களே உற்ற நண்பர்கள் என்று நினைத்துவிடுவார்கள்.

    ஆணோ, பெண்ணோ, எந்த வயதினராக இருந்தாலும், அவர்களைப் புகழ்ந்தால் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்பது பலரது அனுபவம்.

    சிறு குழந்தைகளைப் புகழ்ந்தால், `நல்ல பிள்ளை, புத்திசாலி’ என்று பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பார்கள். அதன்மூலம் தன்னம்பிக்கை வளரும்.

    அதற்காக, ஒரேயடியாகப் புகழ்ந்தாலும் விளைவு எதிர்மாறாக அமைந்துவிடும்.

    கதை

    நான் உத்தியோகம் பார்த்த பள்ளி ஒன்றில், படிப்பில் கீழ்த்தங்கிய மாணவிகள் ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டு இருந்தார்கள். அங்கு பலரும் அழகாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமாகப் போயிற்று எனக்கு.

    வகுப்பில் கவனம் செலுத்தாமல், பென்சிலைக் கூர்செய்யும் சிறு சாதனத்தின் பின்புறம் இருந்த கண்ணாடியில் அடிக்கடி முகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டார்கள் அந்த பதின்ம வயதுப் பெண்கள்.

    `ஏன் இப்படி?’ என்று யோசித்தேன்.

    `நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!’ என்று சிறு குழந்தையாக இருந்தபோது பாராட்டி இருப்பார்கள் பெற்றவளும் பிறரும். குழந்தையின் முகம் மலர்வதைக் கண்டு அவர்களுக்கும் மகிழ்ச்சி எழுந்திருக்கும்.

    வேறு எந்த குணமோ, திறமையோ முக்கியமில்லை என்பதுபோல் ஓயாமல் இதையே சொல்லிக்கொண்டு இருந்தால், பெரியவர்களானபின்பும், அழகைத் தக்க வைத்துக்கொள்வதைத் தவிர வேறு எதிலும் மனம் போகாது.

    தம் அழகைப் பாராட்டுகிறவர் நல்லவர்தானா, அல்லது ஏதாவது உள்நோக்கத்துடன் அப்படிச் செய்கிறாரா என்றெல்லாம் யோசனை போகாது.

    பெண்களை வசப்படுத்த புகழ்ச்சி ஒரு வழி என்று கண்டுகொண்டு, அநேக ஆண்கள் இம்முறையைப் பின்பற்றுவது உண்டு.

    தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆண்களைப்பற்றிய பேச்சு வந்தபோது, “உங்களிடம் முதலில் என்ன சொல்வார்கள்?” என்று என் மாணவிகளில் சிலரைக் கேட்டேன்.

    “அழகா இருக்கே!” இதையே பலவிதங்களில் கூறினார்கள், சற்று வியப்புடன். லேசான சிரிப்பும் கலந்து வந்தது.

    வீண்புகழ்ச்சியை நம்பினால் நமக்குத்தான் கேடு வரும் என்பது இதற்கு இது ஓர் உதாரணம்.

    அது மட்டுமா! புகழ்ச்சியை மட்டுமே சந்தித்தவர்கள் தம்மை யாரேனும் சற்றே திட்டினாலும் இடிந்துபோய்விடுவார்கள். பெரியவர்களாகப் போனதும், தம்மீது குறை காண்பவர்களின்மீது ஆத்திரம் எழும்.

    புகழவே கூடாதா?

    பாராட்டும்படியாக ஏதாவது இருந்தால், ஓரளவோடு புகழலாம். ஆனால், முகஸ்துதி செய்பவர்களை, அல்லது வெகுவாகப் புகழ்கிறவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். மிகப் பணிவாக நடந்துகொள்பவர்களும் இதே ரகம்தான். நம்ப முடியாது.

    எவ்வளவு புகழலாம்?

    “புகழ்ச்சி என்பது தேன் போன்றது. சிறிதளவு இனிமையாக இருக்கும். அளவுக்கு அதிகமாகப்போனால், வயிற்றைக் கெடுத்துவிடும்,” என்கிறார் ஒருவர். புகழ்ச்சிக்கு அடிமையாகி, இவர் எதையெல்லாம் இழந்தாரோ!

    கதை

    பிரபல நடிகர் நடித்த நீண்ட படம் அது.

    தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில், சிங்கப்பூர் ரசிகர்களைக் கேட்டார்கள்: “படம் எப்படி இருந்தது?”

    அனேகமாக எல்லாரும், “சூப்பர்!” என்று பாராட்டினார்கள்.

    ஒருவர் மட்டும், “பல கோடி செலவழித்து, இரண்டு வருடங்கள் தயாரித்து வெளியிட அப்படி இதில் என்ன இருக்கிறது?”

    சொன்னவர் வைரத்தைத் தரம் பார்க்கிறவர்.

    அது ஏன் மற்றவர்கள் எல்லாரும் பாராட்டினார்கள்?

    பிரபல நடிகர் என்பதால் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்று நினைத்திருப்பார்கள்.

    தங்கள் நேரம் வீணாகிவிட்டதென ஒத்துக்கொள்ள விரும்பாது, அதைப் பிறரும் அறிந்துவிடக்கூடாது என்ற நோக்கமாகக்கூட இருக்கலாம்.

    சாண்ட்விச் திட்டு

    சமையலில் அதிக அனுபவமில்லாத ஒரு பெண் சமைத்துவைத்ததைச் சாப்பிட்டபின், “இன்று பொரியல் நன்றாக இருந்தது. உப்பு, காரம் எல்லாம் அளவோடு இருந்தது,” என்று ஆரம்பித்தால் மகிழ்ந்துவிடுவாள்.

    அடுத்து, “எண்ணையைக் கொஞ்சம் குறைத்துவிடு. இல்லாவிட்டால், கடைசியில், ஓட்ஸ் சேர்த்து லேசாக வறுக்கலாம்,” என்று மெள்ளக் கூறினால், அக்குறை அவளைப் பெரிதாகப் பாதிக்காது.

    அடுத்த முறை, அதிக அக்கறையுடன் சமைப்பாள்.

    வளரும் குழந்தைகளிடம் குற்றம் கண்டுபிடிக்கும்போது, இம்முறை பயனளிக்கும்.

    இந்த நியதியைத் தவறாகப் பயன்படுத்தியவர்களும் உண்டு.

    கதை

    மலாய் ஆசிரியை ஜலீலாவுக்கு அவள் வீட்டுத் தோட்டக்காரர், மற்ற கடைநிலைத் தொழிலாளிகள் ஆகியோரின் இனத்தைச் சேர்ந்த தமிழ் மாணவி சுனந்தா அழகாகவும், புத்திகூர்மையானவளாகவும் இருந்தது எரிச்சலை ஊட்டியது.

    ”உன் கண் அழகாக இருக்கிறது. மூக்கும் அழகாக இருக்கிறது. உன் கையெழுத்து மட்டும் ஏன் அழகாக இல்லை?” என்று கேட்டுக் கேட்டு அவளை வதைத்தாள்.

    மூக்கிற்கும் கையெழுத்திற்கும் என்ன சம்பந்தம்?

    ஏழு வயதுக் குழந்தைக்கு இப்படிச் சுற்றிவளைத்துப் பேசினால் என்ன புரியும்? குழப்பம் உண்டாக, கையெழுத்து இன்னும் மோசமாகிற்று.

    `ஏன் தினமும் அதையே சொல்கிறாள்? டீச்சருக்குப் பைத்தியமோ?’ சந்தேகத்தைத் தாயுடன் பகிர்ந்து கொண்டாள்.

    ஆதரவாகப் பதில் வந்தது. “நீ பெரியவளானதும், காசோலையில் மட்டும்தான் உன் கையெழுத்து இருக்கும். நீ மிகவும் புத்திசாலி! அதுதான் பலருக்கும் உன்னைப் பிடிப்பதில்லை”.

    அவள் வாக்கு பலித்தது. கணினி நடைமுறைக்கு வந்தபின், கையெழுத்து எப்படி இருந்தால் என்ன! அந்த ஆசிரியையைவிட மிக மிக உயர்ந்த நிலைக்குப் போனாள் சுனந்தா.

    நம்மிடம் ஒருவர் குற்றம் கண்டுபிடிக்கும்போது ஆத்திரம் எழும். குழப்பமும் எழக்கூடும். அது இயற்கை.

    அந்த உணர்ச்சிகளுக்கு பெருமதிப்பு கொடுக்காது, நாம் மதிக்கும் ஒருவர் நம் குறையைச் சுட்டிக்காட்டும்போது, அது நியாயமாக இருக்கிறது என்று தோன்றி திருத்திக்கொண்டால் உயரலாம். அதைத்தான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நடனக் கலைஞர் செய்தார்.

    பலருக்கும் புகழை ஏற்கும் திறன் இல்லாமல் போய்விட்டது.

    தெரியாத்தனமாக, ஆரம்பகாலக் கலைஞர் ஒருவரை நான் பாராட்டிவிட்டேன்.

    அடுத்த நாள் அதே நிகழ்ச்சியில், நாட்டியத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தாது அவர் ஆடியதைப் பார்த்து நான் கற்றேன்: அளவோடு புகழவேண்டும். அதுவும், தகுதி இருந்தால்தான். இல்லாவிட்டால், தலைக்கனம் கூடிவிடும்.

    இதைத்தான் என் தாய் தினமும் சொல்லி வந்திருக்கிறாள்: “`தான்’ அப்படின்னு ஜம்பமா இருந்தா, சாமி தலையிலே பட்டுனு போட்டுடும்!”

    Share
  • பொங்கல் கோலங்கள்

    பொங்கல் கோலங்கள்

    தொகுப்பு – இயேகாம்பரம்

    மார்கழிக் கோலங்களை அடுத்து, பொலிவுமிகு பொங்கல் கோலங்களின் அணிவரிசையைப் பாருங்கள். கோலம் என்பது கலை வெளிப்பாடு மட்டுமில்லை. அது ஒரு ஊடகமும் கூட. அதன் வழியே கருத்துகளையும் செய்திகளையும் நம் வாழ்த்துகளையும் கூடத் தெரிவிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மட்டுமில்லை, நம் வாசலைக் கடந்து செல்லும் அத்தனை பேருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம். பொங்கலோ பொங்கல்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 293

    படக்கவிதைப் போட்டி – 293

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் ஆர். கே. லக்ஷ்மி  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (17.01.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • மேன்மைகள் சூழ்க!

    மேன்மைகள் சூழ்க!

    மேன்மைகள் சூழ்க! மெய்ப்பொருள் காண்க!
    வாய்மை வெல்க! வல்லமை திகழ்க!
    உண்மை ஒளிர்க! ஒருமை கூர்க!
    வண்ணம் பொலிக! வாழ்க வாழ்க!

    பாடல் இயற்றியவர் – அண்ணாகண்ணன்
    பாடியவர் – கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன்

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!

    தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

    தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர்ந்து வரவேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாகும். ஆனால் சென்றவருடம் பொங்கலைப் பொங்கி மகிழ்ந்த பின்னர் கண்ணூறு பட்டதுபோல் சீனாவின் சீதனம் வந்திறங்கியது. சீதனத்தின் சீரழிவால் வாழ்வே தடம்புரண்டு நிற்கும் நிலை ஆகிவிட்டது. பொங்கல் இப்பொழுது வந்து நிற்கிறது. பொங்குவதா விடுவதா? பொங்கினால் பகிர்ந்து கொடுத்து மகிழலாமா? அல்லது அவரவர் பாட்டில் வீட்டிலே பொங்கி நிற்பதா என்றெல் ல்லாம் எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம் முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம் குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் ”  – என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல்லவா?  இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரினதும்  பேராவலும் ஆகும்.

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    ” உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு 

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மனமிருத்தும் அமுத வாக்குகள்.

    பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், அத்தனையும் சீனாவின் சீதனத்தால் நாளும் பொழுதும் சீரழியும் நிலையினைப் பற்றிய அறிவிப்புக் களை வெளிப்படுத்தியபடி இருக்கின்றன. “வாழப்பழகிக் கொள்ளுங்கள்” என்று பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே சொல்லும் அளவுக்கு பரவிய பாவி பரந்து நிற்கிறது. விலத்திப் போகவேண்டும். பாதுகாப்புடன் வாழுவோம் என்னும் நிலையில் இவ்வருடப் பொங்கல் வந்திருக்கிறது.

    பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது! புதுப்பானை வாங்குவது! சர்க்கரையும், தேனும், நெய்யும், பருப்பும், பாலும் தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும், கரும்பும் சேர்ந்து விடும்! இவையெல்லாம் அனுபவித்து ஆனந்தம் அடைவதற்கு வாய்ப்பு வருமா என்பதை எண்ணியே யாவரும் சிநதனைக்குள் மூழ்கி நிற்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    என்றாலும் இதுவும் கடந்து போகும் என்னும் துணிவுடன் பொங்கலை மங்கலமாய் வரவேற்றிடத் துணிய வேண்டும் என்றும் ஒரு பக்கம் மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

    அப்படிச் சொல்லும் வேளையில் தைப்பொங்கலைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போமா? பார்த்தால் மனதின் கலக்கம் சற்று ஓய்வெடுக்கும் அல்லவா?

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப் படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறதுஇந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவல்ல பொங்கல்!

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள்உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைவதால்த்தான் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப் படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப் படுகின்றன.இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல்”  என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமை யாததாகும்.

    கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசிபால்சர்கரைகரும்பு, இஞ்சிமஞ்சள்வாழைமாவிலைஇவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன் படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்க மாய்வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமாவருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப் படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம்உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனதிலுள்ள பொறாமை வஞ்சகம். பொய்கபடுசூதுவாதுஇவற்றையெல்லாம் ஞானம் என்னு. தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரைபெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த் தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல்போகித்திருநாள்காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரித்தில் வாழ்கின்றவர்களுக்கோ. புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைதான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம்.மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாப மாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறீஸ்தவராயினும்இந்துக்களாயினும்தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!  நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மதபேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    Share