Blog

  • அனைவருமே தடுத்திடுவோம் !

    – எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

      விஞ்ஞானம் தானிப்போ
      விண்ணோக்கிச் செல்கிறது
      நல்ஞானம் எனப்பலரும்
      நாட்டிலிப்போ சொல்லுகிறார்

     கல்ஞானம் எனவெண்ணிக்
     கட்டளையும் இடுகின்றார்
     உள்ளமெலாம் விஞ்ஞானம்
     உட்புகுந்தே நிற்கிறது

     தொழிநுட்ப விஞ்ஞானம்
     தொகையாக வந்துளது
    துறைதோறும் அதுசென்று
    சூடாக்கி நிற்கிறது

     கிராமத்தார் கூடவிப்போ
     ’கிறுகிறுத்து’ நிற்கின்றார்
    அங்கெல்லாம் தொழிநுட்பம்
    அரங்கேறி நிற்கிறது

     மொழிபற்றிக் கவலையின்றி
    முறுவலுடன் ஏற்கின்றார்
    முகம்பார்த்துக் கதைத்துவிட்டு
    அகங்குளிர்ந்தும் நிற்கின்றார்

     அழகான படம்பார்த்து
    அவர்மகிழ்வு கொள்ளுகிறார்
     அயல்நாட்டில் மருமகளின்
     சுகம்கேட்டும் நிற்கின்றார்

     குறுஞ்செய்தி பலர்பார்த்து
    குதூகலத்தில் மிதக்கின்றார்
    முகநூலால் திருமணங்கள்
    சபையேறி  நிற்கிறது

     வியாபாரம் பெருகுதற்கும்
    விளம்பரங்கள் செய்வதற்கும்
    நலமான நண்பனென
      நாட்டிலுள்ளோர் நினைக்கின்றார்

      தகவல் பரிமாற்றம்
      தான்பெருகி நிற்பதற்கும்
      சரியான வழியெனவே
      சகலருமே எண்ணுகிறார்

     அரசியல் தலைவரையும்
    ஆன்மீகத் தலைவரையும்
    ஆட்டிவைக்கும் சக்தியென
    அதுவிப்போ திகழ்கிறது

     கற்பழிப்பு நடப்பதற்கும்
    காடைத்தனம் செய்வதற்கும்
    கண்போன்ற தொழிநுட்பம்
    கருவியென நிற்கிறது

      மண்ணிலுள்ளோர் பயனடைய
      வந்ததொழில் நுட்பமதை
      மனிதகுல மாண்பழிக்க
      மாற்றுவது முறைதானா?

     விஞ்ஞானத் தொழில்நுட்பம்
     எஞ்ஞான்றும் உதவுவதை
     வீணடிக்கும் கூட்டமதை
     வீதிக்குக்  கொணர்ந்திடுவோம்

      நல்லபக்கம் பார்த்திட்டால்
    நமக்கெல்லாம் நன்மையன்றோ?
    நம்மனதில் நல்லவெண்ணம்
    நாளும்நாம் வளர்த்துநிற்போம்

      உள்ளமதில் நல்லவெண்ணம்
    ஊற்றெடுக்கச் செய்துவிடின்
    பள்ளமதில் வீழ்ந்திருக்கும்
    பாதகரும் மாறுவரே

      தொழில்நுட்பச் சேவையினைத்
    துஷ்டத்தனம் செய்யாமல்
    அழிவுநாடிச் செல்வதனை
    அனைவருமே தடுத்திடுவோம் !

     

    Share
  • சித்திர வெளி

    கவிஜி.

    சட்டென நின்றான். கண்களை கூர்மையாக்கினான்.

    அந்தத் தேநீர்க் கடையின் சுவற்றில் ஒட்டியிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் கண்கள் சுழன்றது. தலையே கிறுகிறுத்தது. நம்ப முடியாத கண்களை இன்னும் ஒரு முறை அழுந்தத் துடைத்தான். மூளைக்குள் அந்தக் காட்சியைப் பதிய இன்னும் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டி இன்னும் கொஞ்சம் உற்று நோக்கினான். மனமெங்கும் இடி விழுந்த சத்தம். மெல்ல மெல்ல பயந்தபடியே அருகில் சென்றான். நம்பிக்கை இழந்தே போனான். ஆழ்மனம் நம்ப மறுக்கிறது. யார் இது? நானா? நேற்று இறந்து விட்டேனா? அதுவும் அகால மரணம்!!! கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் அவனைக் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. அவனாலும் யாரையும் கண்டு கொள்ள முடியவில்லை. மனம் எங்கும் ஊசி குத்தும் வலி. பனிக் காட்டுக்குள் ஆடையின்றி உருண்டு புரளும் வலி. கலங்கிய கண்களில் அப்பா அம்மாவும், அண்ணன் தங்கையும், நட்பும் உறவும் உருண்டு திரண்டு கண்ணீராய் உருண்டு விழக் காத்திருந்தார்கள்.

    அவன் பார்வையில் அத்தனை நேரம் ஓடிக் கொண்டிருந்த வாகனங்களும், அவனைக் கடந்து கொண்டிருந்த மனிதர்களும், 3டி எஃபெக்டில் முன் பின் மாறி இருப்பதாகத் தெரிய ஆரம்பித்தது. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். வானம் பார்த்தான். வானம், பால்வீதி, கேலேக்சி, நட்சத்திரம் நியுற்றினோ, நிலா சூரியன், கோள்கள், எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியுட்ரான், ராக்கெட் , ஒளி ஆண்டு, ஓசோன் மண்டலம் என ஒவ்வொன்றாக மறக்க ஆரம்பித்ததாக ஒரு தோன்றல். அவனது உறவுகள் நட்புகள், அம்மா அப்பா உட்பட அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளில் இருந்து நீந்தி வெளியேறிக் கொண்டிருப்பதாக ஒரு தோன்றல்.

    பிறப்பதற்கு முன்னால் இருந்த வெற்றிடம் நோக்கி தான் தள்ளப்படுவதாக ஒரு எண்ணம். அவன் கால்கள் தடுமாறி தடுமாறி நடக்க ஆரம்பித்தது. இதோ இந்த பூமி அவனை உதறப் போகிறது. அதோ அங்கே போவது அவனின் நண்பன். ந…ண்…ப…ன்… அய்யோ! பெயரை மறந்து விட்டோமே. அவன் ஞாபகக் கிணற்றுக்குள் எட்டிக் குதித்தான். நீச்சல் அடிப்பது மறந்து போயிருந்தது.

    எதிரே உள்ள தேநீர்க் கடையில் ஒருவர் ஊத்தி ஊத்தி ரசித்து ருசித்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் ஒரு முறையாவது இத்தனை ரசனையாக ஒரு தேநீர் குடித்திருப்போமா? அவன் மனம் தேடியது. எதுவெல்லாம் இன்பமாய், சுகமாய் இருந்ததோ அவையெல்லாம் மிக சுலபமாகக் கிடைத்த சின்ன சின்ன சந்தோசங்கள். மனிதன் ஒரு போதும் அதில் வாழ்வதேயில்லை. பெரிய பெரிய சாதனைகளில் தன்னை இருத்திக் கொள்வதே தன் இருப்பாக இருக்க முடியும் என்ற கற்பனைக்குள் நீந்தி கொண்டே, கரை கொண்ட காலடிகளை மறந்து போகிறான். அவனும் அப்படித்தான் மறந்து போனான். இன்னும் மறந்தே போகிறான். சாலையோரம் விளையாடும் குழந்தைகளின் முகங்களை உற்று பார்த்தான். அவைகள் வண்ணங்களற்று தெரிந்தது. பூச்சு இல்லாத பூக்களாய் மலர்ந்து திரிவதை காண முடிந்தது. வெப்பச் சலனமும், கானல் நீரும் கவிதை எழுதத் தூண்டியது. ஆனால் வார்த்தைகளற்ற எண்ணமும், தீர்ந்து போன பேனாவும், ஏற்கனவே எழுதி முடித்த காகிதமும் அவனை சுற்றிச் சுழன்றடிக்க, எப்படி எழுதுவது கவிதையை.

    எப்போதாவது சாலையில் ஓடியிருக்கிறோமா? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியிருக்கிறோமா? வீசும் காற்றை முழுக்க உள் வாங்கியிருக்கிறோமா? ஒரு மழை நாளில் குடை மறந்து நனைந்திருக்கிறோமா? ஒரு ஓவியம் ரசித்திருக்கிறோமா? பாரதியைப் படித்ததில்லை. பால் மணக்கும் குழந்தையைக் கொஞ்சியது இல்லை. நாய்க்குட்டியை வளர்க்க நேரம் இல்லை. வானவில் கண்டதும் செல் போனில் தானே படம் பிடித்தோம். வெறும் கண்ணால் கண்டதில்லையே. காடு கண்டதில்லை, காட்டாறு கண்டதில்லை, நதி தேடியதில்லை, கரை கொண்ட மரம் ரசித்ததில்லை. யாருக்காவது உதவி செய்திருக்கிறோமா ?

    யோசிக்க யோசிக்க அவனின் மனம் பதற ஆரம்பித்தது. காற்று குறைந்து கொண்டே போனது. அவனின் கால்கள் தனது சக்தியை இழந்து கொண்டிருந்தது. அவனின் சிறு வயது ஞாபகங்கள் ஒவ்வொன்றாக மறக்கத் துவங்கியிருந்தது. அவன் கடந்து வந்த பாலத்தைப் பார்த்தான். எத்தனை பாதங்களைக் கண்டிருக்கும்? எத்தனை சுமைகளைத் தாங்கியிருக்கும்? இதை கட்டும் போது வேலை செய்தவர்களில் பலர் இப்போது இறந்திருக்கலாம். அவர்களும் தன் நினைவுகளை, வாழ்வை மறந்திருக்கலாம், இந்த பாலத்தையும் சேர்த்து.

    முதலில், இறந்தவன் மறக்கிறான் பின் இறந்தவன் மறக்கப்படுகிறான். எவன் வகுத்த நியதி. ஒரு மரணம் எல்லாரையும் விட மரணித்தவனையே அதிகம் பாதிக்கிறது. மற்றவர்களுக்காவது, மரணித்தவன் யாரென்று தெரியும். ஆனால் மரணித்த பின், தான் யாரென்று கூட தெரிவதில்லை மரணித்தவனக்கு. மரணம் மிகக் கொடுமையான ஒன்றாக இந்த இடத்தில் தான் மாறுகிறது. விடியலில் மறந்து போகும் கனவுகளை ஒத்தது இந்த மரணம். தன் உடல், எடையை இழப்பதை உணர முடிந்தது. தன் வீட்டில் தன் இழப்பு எப்படி இருக்கும்? இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வீட்டிற்க்குச் செல்ல முடியும் ?

    இனி என்ன பெயர் சொல்லி என்னை அழைப்பார்கள்? நான் அயர்ன் பண்ணி வைத்த சட்டை பேண்ட்களை இனி யார் அணிவார்கள்? ஒரு அம்மாவாய், ஒரு அப்பாவாய் என் மரணத்தை எப்படித் தாங்குவார்கள்? இனி நான் என்னை சார்ந்தவர்களின் நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருப்பவனாகி விட்டேன். இல்லையா?

    அவனின் தலைக்குள் ராட்டினம் சுற்றத் தொடங்கியிருந்தது. அதிலிருந்து பட்டாம் பூச்சிகள் முளைக்க ஆரம்பித்தது. ஒரு பெருங் காட்டைக் கடக்க போகும் மனநிலைக்குள், தான் தள்ளி விடப் பட்டதாக தோன்றியதை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் தோன்றியது. அவன் சுடச் சுட சாதமும், கத்திரிக்கா பொறியலும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தான். ஆமாம், சாதம் வெள்ளையாகத் தானே இருக்கும். ஏனெனில் இப்போது வண்ணங்களை சுமப்பதே வேதனையாக இருந்தது அவனுக்கு.

    அவனை நோக்கி யாரோ ஓடி வருவதை உணர்ந்தான். யார் அது? அதுவும் அவனின் ஆடை எதிலோ நனைந்திருக்கிறதே. நன்றாக யோசித்து, யோசித்து, மிகுந்த கஷ்டத்திற்குப் பின், மூளையை வருத்தி யோசித்த நொடியில், சில வினாடி நினைவு வந்து போனது. ஆம். அது சிவப்பு வண்ணம். சிவப்பு வண்ணமா? ஐயோ!!! அது ரத்தம். ஆம், ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவன் ஓடி வந்து கொண்டிருக்கிறான். யார் அவன்? எதற்காக? மனமெங்கும் பயங்கள் முகமூடி போட்டுக் கொண்டு பல்லை ஈ … ஈ… ஈ… எனக் காட்டி முன்னேறுவதாக ஒரு பிரம்மை. அவனைப் பின் தொடர்ந்து இன்னொருவன். ஆங்காங்கே தன் உடலில் வழியும் ரத்தங்களுடன் துரத்தி வந்து கொண்டிருக்கிறான்.

    அவனை நோக்கி ஓடி வந்தவர்கள், அவனைக் கடந்து ஓடினார்கள். முன்னால் ஓடியவன் நன்றாக நனைந்திருந்தான் ரத்தத்தில். பின்னால் விரட்டிக் கொண்டு ஓடியவன் ஆங்காங்கே நனைந்திருந்தான். ஒரு விஷயம் கவனிக்க வேண்டியதாய் இருந்தது. முன்னால் ஓடியவன் நன்றாக பார்த்துக் கொண்டே ஓடினான். பின்னால் விரட்டியவன் தன்னை கண்டுகொள்ளவில்லை. யாருமே கண்டு கொள்ளாத இறந்தவனான தன்னை அவன் மட்டும் எப்படி உற்று பார்த்தான். கேள்விகளால் ஆனது மரணமும்… வாழ்வும்…

    நடை நின்றது. மனக் கண்ணில் புயலுக்கு பின்னாலான அமைதியோடு அவன் வீடு பார்த்துக் கொண்டிருந்தது. வெறித்த பார்வையில் பூச்சிகள் பறந்தன. இனி எனக்கும் இந்த வீட்டிற்கும் என்ன தொடர்பு? வாசலெங்கும் சிதறிக் கிடந்த மலர்களில் தேங்கி நின்றது நேற்றையக் கண்ணீர்த்துளிகள். அனாதையாக்கப்பட்டவன், இயலாமையின் உச்சி மீது பயந்தபடியே நின்று கொண்டிருந்தான். இது என் வீடு, என் வாசல். அதோ… அது என் சைக்கிள். இனி இவையெல்லாம் யாருடையது. வீட்டிற்குள் செல்ல அனுமதி இல்லை என்பதை வீட்டு முற்றத்தில் அடித்து வைத்த ஆணி பறை சாற்றியது. தன் முகம் மறக்கத் துவங்கியிருந்தது அவனுக்கு. ஒரு பெருமழைக்கான அழுகை நெஞ்சுக் கூட்டில் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. தான் வளர்த்த கொய்யா மரம் தன்னை மறந்திடுமா.

    இதே நேரம்…

    அங்கே ஒரு வீட்டு வாசலில் ரத்தம் தோய்ந்தவனை, விரட்டிப் பிடித்தவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.

    “முதல்ல சொல் பேச்சு கேட்டு பழகு. என்ன அவசரம். ம்… ம் … நான் தான் எல்லாம். என்னால படைக்கப் பட்டவன் தான் நீபுரிஞ்சுக்கோ. கொஞ்சம் காத்திருக்க முடியலயா.ம்ம்ம்ம்ம் …”

    “எல்லாம் நீங்கதான்னு சொல்லாதீங்க. என்னால தான் நீங்க படைப்பாளி. அப்போ நான் தான் எல்லாம்.”

    “இவ்ளோ வாய் பேச எங்க கத்துகிட்ட? உன்கிட்ட வாதாட எனக்கு நேரமில்ல. உள்ள போ… பினிஷிங் டச் தரணும்.”

    உள்ள போ, கோபத்தைக் கிளராதே என்றபடியே அந்த படைப்பாளி, அந்த ஓவியன், அதாவது விரட்டிக் கொண்டு ஓடினானே அவன், மிரட்டிக் கொண்டிருந்தான்.

    எல்லாம் விதி என்றபடியே ரத்தம் சொட்ட சொட்ட ஓடினானே அவன், அது ரத்தமல்ல சிவப்பு வண்ணம், அவன் அந்த ஓவியத்திற்குள் நுழைந்தான்.

    நுழைய சொன்னவன் ஓவியன். நுழைந்தவன் ஓவியமாய் நின்றவன்.

    ஓவியன் வரையத் துவங்கினான். ஜோல்னா பை, கண்ணாடி சகிதம் யாரையோ தேடிக் கொண்டு வந்த இன்னொருவன், ஓவியனிடம் ஏதோ விசாரிக்க, ஓவியன் ஒரு நிமிஷம் என்றபடியே அவன எங்கயாவது பார்த்தயாடா என்று ஓவியத்துள் அடைபட்டவனிடம் மிரட்டிக் கேட்க, அவன் முனகி கொண்டே சின்ன பாலத்துகிட்ட பார்த்தேன் என்றான். “இதே வேலைப்பா இவுங்களுக்கு”, என்றபடியே ஜோல்னா பை கடந்து சென்றது அந்த இடம் தாண்டி.

    வீட்டை வெறித்துப் பார்த்தபடியே அவன் நின்று கொண்டிருந்தான். பிணம் போல மாறிவிட்டிருந்தான். அனைத்தும் மறந்திருந்தான். அனிச்சை செயலைப் போல
    இதோ திரண்டு நின்ற கண்ணீர், தன்னை விடுவித்துக் கொண்டு பூமியில் ஒரு அணு குண்டை போல விழப் போகிறது. கதவு மூடியிருந்தது. இவன் வெற்றுக் கண்களில் வெறித்துக் கொண்டிருந்தான்.

    சட்டென தோளில் விழுந்த கை … அவனைத் திடுக்கிட வைத்தது. திரும்பிப் பார்த்தான். ஜோல்னா பை முறைத்துக் கொண்டு நின்றது. “கொஞ்சம் பாருங்க சார், என்ன அவசரம் உங்க கேரக்டர நான் இன்னும் முழுசா எழுதி முடிக்கல, அதுக்குள்ளே இப்படி ரிகர்சல் பாக்க கிளம்பிட்ட எப்படி சார்? வாங்க, சமத்தாஉள்ள வந்துடுங்க” என்றான் ஜோல்னா பை.

    இல்ல சார், இப்போ இந்த கதவு திறந்தா என்னாகும்னு தெரிய ஆர்வமா இருக்கு, அதையும் பார்த்துட்டுப் போய்டலாமா என்றது அந்த கதாபாத்திரம் கெஞ்சலாக.

    “எப்போதுமே ஒரு படைப்போட முடிவ அதப் படைக்கற படைப்பாளிதான் முடிவு பண்ணனும். படைப்புகள் அவனால்தான் படைக்கப் படணும். இப்போ நீ 7 மாச கரு மாதிரி. இப்ப நீயா எந்த முடிவும் பண்ணக்கூடாது. கதவு திறக்கப் படுமா வேண்டாமான்னு நைட் தான் எழுதப் போறேன், நீ வா உள்ள” என்றான் ஜோல்னா பை. மெல்ல யோசித்துத் தயங்கியபடியே கதாபாத்திரம் ஜோல்னா பைக்குள் இருக்கும் நோட்டுக்குள் நுழைந்து கொண்டது.

    படைப்பாளியின் ஆளுமை எப்போதுமே படைப்புகளை ஆண்டு கொண்டு தான் இருக்குமோ என்னவோ. படைப்புகள் படைப்பாளியை உருவாக்க கூடாதா கேள்வியும் பதிலும் எதற்குட்பட்டவைகள்?

    ஒரு வீதி தாண்டி.

    அவள் ஓடிக் கொண்டிருந்தாள்… பின்னால் கையில் உளியோடு அந்த சிற்பி விரட்டிக் கொண்டிருக்கிறான்…

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    கண்ணன் காப்பு
    —————————

    கஷ்டம் கலைந்திடும் நஷ்டம் நகர்ந்திடும்
    இஷ்டம் நமக்கு இணங்கிடும் – அஷ்டமி
    ரோகினியில் தோன்றிய லேகிய வண்ணனை
    ஏகிட எல்லாம் எளிது….(0)
    தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
    வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
    அப்பம் அதிரசம் முப்பழங்கள் வைத்தாலும்
    அப்பயலுக்(கு) அன்பே அமுது (or) அறம்….(1)

    மாதவனை கேசவனை மாலொழிய வந்தவனை
    ஆதவனை ஆயர் அணிவிளக்கை -யாதவனை
    ரோகினி அஷ்டமியாய் ஆகிய கீதையை
    தாகிநீ தேஹியென்றோ தி….(2)
    நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
    கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
    அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
    குப்பம் நுழைந்தவனே காப்பு….(3)

    கட்டு மயிற்பீலி கொண்டை யிலணிந்து
    பட்டுப்பீ தாம்பரம் பூண்டாவை -வெட்ட
    வெளிதனில் மேய்க்க வேய்ங்குழல் ஊதும்
    களிமிகு கண்ணனே காப்பு….(4)

    பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
    விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
    சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
    காயாம்பூ வண்ணனே காப்பு….(5)

    காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
    தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
    அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
    கண்ணனே வேண்டினேன் காப்பு….(6)

    பூதனை மார்பை புசித்தவள் ஆவியை
    வேதனை இன்றி விரட்டியவா -தீதினை
    ஓட்டவும் தர்மம் உயரவும் பாண்டவ
    கூட்டம் பிணைந்தவா காப்பு….(7)

    தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
    சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
    மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
    கீதா உபதேசா காப்பு….(8)

    எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
    புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
    நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
    சுகமளிக்கும் செல்வச் செழிப்பு….(9)

    தீரன் யமுனா தரங்கக் கரையோரன்
    சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்
    அழகில் சுகுமாறன் அன்பில் உபகாரன்
    கழுகில் வரும்நேரம் காப்பு….(10)

    குவலயா பீடத்தின் கொம்பொசித்துக் கம்சன்
    கவலையால் பீடிக்கக் கொன்றோன் – அவலையா
    தந்தாய் எடுத்துக்கொள் தோழாயென் செல்வத்தால்
    கந்தையைக் கட்டென்றான் காப்பு….(11)

    கூவும் கஜேந்திரனை காத்த புஜேந்திரா
    ஏவிய சக்கரத்தை ஏந்தியவா -காவிய
    பாகவதக் கண்ணா பரந்தாமா நாரணா
    காகவத காகுத்தா காப்பு….(12)

    ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
    நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
    திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
    கருத்தில் கலந்துவளைக் காப்பு….(13)

    உதித்தவா நேற்று மிதித்தவா இன்று
    நதிக்கரை நந்தகோபன் நாட்டை -எதிர்த்ததாய்
    மாமா அனுப்பிய மல்லர் களையன்று
    கோமாளி ஆக்கியவா காப்பு….(14)
    கோலத்தால் காலிட்டு கைகூப்பி கும்பிட்டு
    ஞாலத்தை உண்டுமிழ்ந்த நாதனுக்காய் -தாலத்தில்
    பக்ஷணத்தை ஏந்திநின்றால் பக்தராதைக்(கு) ஈடாக
    தக்ஷிணையாய் கேட்டான் தபஸ்….(15)

    கால்கள் பலநூறு கண்டேனென் வாசலில்
    வால்கள் புடைசூழ வந்தமுகுந்தன்-நூல்போல்
    அணிவகுப்பாய் சென்று அடுக்களை உள்ளில்
    விநியோகம் செய்தான் விருந்து….(16)

    பலராமன் தம்பி, பனிநாளில் பீச்சை
    வலமாக வந்ததில் வைரஸ் -ஜலதோஷம்
    நாசியில் கொட்டும் நயகரா வீழ்ச்சியாய்
    க்ரேஸிக்கு தேவையுன் காப்பு….(17)

    உறியிழுத்தாய் பின்னர் உரலிழுத்தாய் பின்னர்
    மரமிழுத்தாய் பின்னர் மதகில் – அரவிழுத்தாய்
    பின்னர் நகிலிழுத்தாய் பெண்கள் துகிலிழுத்தாய்
    கண்ணா எனையிழுப்பாய் காப்பு….(18)
    கண்ணே கனியமுதே கற்கண்டே கார்முகிலே
    என்னே பெயர்வைத்து ஏத்தினாலும் -அண்ணே!
    டபாய்த்திடுவான் கண்ணன் உபாயமொன்று கேளாய்
    அபாயமென்பாய் உண்டே (அ)பயம்….(19)

    சகடா சுரனை சுமந்தா காய
    முகடில் முறித்த முகுந்தா -பகடையில்
    தோற்றவர்க்காய் தேரேறி நூற்றவர் மாய்ந்திட
    கூற்றவனாய் நின்றவனே காப்பு….(20)

    கோடி குருமார்கள் கூறிய வேதாந்தம்
    தேடிப் படித்தும் திருப்தியில்லை -நாடியில்
    ஏதோ அதிருப்தி என்னென்று சொல்வது
    கீதோ பதேசகா காப்பு….(21)

    தரையில் புரளபீ தாம்பர ஆடை
    சுருளும் முடிநுதல் சாய -முரளி
    மனோகரா வந்துன் மதிவதனம் காட்டு
    கனாவரும் நேரத்தில் காப்பு….(22)

    கன்னத்தில் அன்னையிட்ட கண்மை திருஷ்டியது
    வண்ணக் கருமையில் வாடிட -எண்ணற்ற
    இம்சைக்(கு) இடமாகி இன்னல் கடந்தோனே
    கம்சன் மருகோனே காப்பு….(23)

    வையங்கள் ஏழை வயிறார உண்டும்
    ஐயம் மிகக்கொண்டு அய்யனே -கையால்
    பிடித்துக் கமல பதத்தை அன்று
    கடித்துக் களித்தவனே காப்பு….(24)

    நான்மறை ஓதிடும் நான்முகன் வாழ்ந்திடும்
    தாமரை நாபியும், பூமகள் -போய்மறையும்
    சந்தனம், ஸ்ரீவத்ஸம், சாற்றும் திருத்துழாய்யு
    கந்திடும் திண்மார்பும் காப்பு….(25)

    மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
    பீதகப் பட்டாடை பாழாக -காதினை
    கைகளால் பற்றி கரணமிட்(டு) ஆழியை
    கொய்தகோ பாலனே காப்பு….(26)

    தேர்கடவி பாரதப் போர்முடிக்க பார்த்தனின்
    சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோய் -மோர்குடத்தை
    கல்லால் உடைத்தன்று கோபியர் கோபத்திற்க்
    குள்ளான கண்ணனே காப்பு….(27)

    சாக்கிரதை யாக சகாக்களுடன் சென்றாயர்
    தூக்கிலிட்ட வெண்ணை திருடியுண்ட -போக்கிரிப்
    பையனே பேய்மழைக்குப் பர்வதம் தாங்கியக்
    கையனே கண்ணனே காப்பு….(28)

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    பவள சங்கரி

    உள்ளத்தில் உண்மையும், மனதில் தெளிவும், விடா முயற்சியும் இருந்தால் எந்த தீய சக்தியும் அணுகாமல் தம் இலட்சியம் நிறைவேற மன உறுதியே துணை நிற்கும் என்று நிரூபித்து உள்ளார் சிங்கால்!

    மனதில் உறுதி வேண்டும்!

    545543_362907083797923_2088759971_n

    ‘மன உறுதி’ என்பது ஆண், பெண் என இரு சாராருக்கும் பொதுவான விசயம். காரணம் ‘மனம்’ என்பதற்கு மனம் என்பது ஆன்மாவின் தொடர்புடையது என்பதே நம் ஆன்மீகம் நமக்கு உணர்த்தும் நெறி. இந்த மனத்தில் தோன்றும் எண்ணங்கள்தான் ஒருவரின் குணநலன்களையும், அதன் தொடர்பான வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது என்று எடுத்துக்கொண்டால் அந்த எண்ணம் தோன்றுவது எப்படி? ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட எண்ணங்கள் தோன்றுவது எப்படி? ஒருவருக்குள்ளேயே பலவிதமான கோணங்களில் பல்வேறு எண்ணங்கள் தோன்றுவது எங்கனம்? இவையெல்லாம் புரியாத புதிராக இருந்தாலும், இந்த மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்து தாம் எடுக்கும் காரியங்களை தடையேதும் இன்றி நிறைவேறும் பொருட்டு, அதனை அலைபாய விடாமல், உறுதியுடன் நின்று சாதித்துக் காட்டியவர் பலர். அவர்கள் வரலாற்றுப் பட்டியலில் நீங்கா இடம் பெறக்கூடிய வாய்ப்பும் பெறுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சாதனையாளர்தான் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ள டெல்லியைச் சேர்ந்த மாற்று திறனாளி பெண்ணான இரா சிங்கால். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் ஆகிய உயர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நாடெங்கிலும் மொத்தம் 1,236 பேர் பணி ஒதுக்கீட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் அவர்களில் டெல்லியைச் சேர்ந்த இரா சிங்கால் முதலிடம் பெற்றுள்ளார். இந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் நான்கு இடங்களை பெண்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டைக்காட்டிலும், நம் தமிழகத்தில் அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த, 2012ல், 97 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 2014ல், 118 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    050715_disabled

    இரா சிங்கால் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற இந்திய வருவாய்துறை பணி தேர்வில் வெற்றி பெற்று தற்போது ஐதராபாத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 31 வயதான, இரா சிங்கால் ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றபோது அவரது ஊனம் அதிகமாக இருப்பதாகக் கூறி பணி இடம் வழங்க மத்திய பணியாளர் நலத்துறை மறுப்புத் தெரிவித்தது. ஆனால் மனம் தளராத சிங்கால் நான்கு ஆண்டுகள் கடுமையாக சட்டத்துடன் போராடி பின் கடந்த டிசம்பர் மாதம்தான் இவருக்கு பணி இடம் ஒதுக்கப்பட்டது. முதுகுத் தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளைந்து, உயரம் குறைவாகக் காணப்படும் இவர் அதனால் மனம் தளராமல் ஐ.ஏ.எஸ் தேர்வில் நல்ல ரேங்கில் வெற்றி பெற வேண்டும் என்கிற தனது கனவை தற்போது நனவாக்கியுள்ளவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தீவிர மன உறுதியே தனது வெற்றிக்கு முக்கியக் காரணம் எனக் கூறும் சிங்கால் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.

    தன்னுடைய உடற்குறையை பெரிதுபடுத்தாமல், தான் கொண்ட இலட்சியமே பெரிதென சாதித்துக்காட்டியிருக்கிறார் சிங்கால். தன் புறத்தோற்றமோ அல்லது உடற்குறையோ தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவிடாமல், இதனால் எந்த விதமான தாழ்வு மனப்பான்மையோ அல்லது தம் சக தோழியருடன் ஒப்பீடு செய்து அதனால் தம் மன நிலை பாதிக்கப்பட்டு மன உறுதியை இழந்துவிடாமல், தம் இலட்சியத்திற்கு இந்த ஊனமோ அல்லது மற்ற எதுவும் தன்னை அண்டாது என்ற நம்பிக்கையே அவரை சாதனைப் பெண்மணியாக்கியிருக்கிறது.

    இந்தத் தாழ்வு மனப்பான்மையானது, ஆண்,பெண் என்ற இரு சாராரையும் விட்டு வைப்பதில்லை. என்றாலும் பெண்கள் சீக்கிரம் மனச்சிக்கல்களுக்குச் சிறைப்பட்டு விடுகிறார்கள் என்ற பெண்ணிய உடல் கோட்பாட்டை முறியடித்திருக்கிறார் இவர். அன்றாட வாழ்வில் பல விதமான துன்பங்களுக்கு ஆட்படும் ஒரு குறைபாடுடன், இத்தனை பெரிய சாதனை புரிந்தாலும், தற்போதும் ஐஏஎஸ் பணி ஒதுக்கீடு செய்வதிலும் அரசு தயக்கம் காட்டுமோ எனஅவரும் அவருடைய பெற்றோரும் கலக்கம் அடைந்துள்ளனர். ஐ.ஏ.எஸ். பணி என்பது மிகவும் சவாலான ஒரு பணிதான் என்றாலும், அவருடைய மனவலிமையை கருத்தில்கொண்டு, அதற்குரிய வகையில், அவருக்குரிய பணியை வழங்குவதே நியாயமான செயல். நான்கு முறை முயன்று தம் தரத்தை உயர்த்திக்கொண்டு பெரும் பாடுபட்டு இந்நிலையை அடைந்திருக்கும் இவருடைய வல்லமையை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்வதே முறையாகும்.

    பொதுவாக ஒரு பெண் புறத்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலேயே, சின்னச் சின்ன பாதிப்புகளுக்கும் விரைவிலேயே மனம் தளர்ந்து விடுவதோடு, தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு தன்னம்பிக்கைக் குறைவுக்கும் ஆரோக்கியக்கேடு என மிகப் பெரிய ஆபத்தாகவும் அமைந்து விடுகிறது. சமுதாயத்துடன் ஒன்றி செயல்படுவதற்கும் இது பெரும் சவாலாகிவிடுகிறது.

    நம்பிக்கைதான் வாழ்க்கை. அதற்கு மன உறுதியே வித்து. மனச்சிதைவிற்கு வழிவிடாமல், தம்மால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சாதித்துக் காட்டியிருக்கும் இரா சிங்கால், நம் நாட்டிற்கு தம் தன்னலமற்ற சேவையை வழங்குவார் என்ற நம்பிக்கையும் நம்முள் துளிர்விடுகிறது.

    சிங்கால் தாமே கூறியுள்ளபடி, “இதற்குப் பிறகு மக்கள் பெண்களை அதிகமாக மதிப்பார்கள். குறிப்பாக உடல் ஊனமுற்ற பெண்களை மிகவும் மதிப்பார்கள்” என்பது சத்தியமான வாக்கு. தற்போது இந்திய வருவாய் துறையில், அதிகாரியாக பணியாற்றி வரும் தாம் விரும்பியபடி எந்த தடையும் இல்லாமல் ஐ.ஏ.எஸ். பதவி கிடைத்து, நாட்டிற்கு நலம் பல செய்ய வேண்டும் என்று மனமார வாழ்த்துவோம்.

    Share
  • அறிவுக்கு வேலை கொடு…பகுத்தறிவுக்கு வேலை கொடு…

    akav1

    திரைப்படப் பாடல்களில் இடம்பெறும் வரிகள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல.. வாழ்க்கை முழுமைக்கும் வழிகாட்டும் விளக்காக அமைய முடியும் என்பதற்கு சான்று பகரும் பாடல்களை கவிஞர் பெருமக்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி போன்றோர் வழங்கியிருக்கிறார்கள்.

    சமுதாய அவள்கள், சீர்கேடுகளைச் சாடுவதும் அவற்றை சீர் செய்ய மொழியைப் பயன்படுத்துவதும் இவர்களின் தலையாய கடமைகளில் ஒன்றானது. அவ்வாறு அமையும்போது செம்மை மொழிவளத்தால் இசைக் கோர்வையுடன் கை கோர்க்கும் வார்த்தைச் சரங்களை கொட்டிமுழக்கும் கொள்கைப் பான் பாடுகிறார்கள்.

    குறிப்பாக மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகனுக்காக இப்பாடல்கள் அமைந்துவிடும்போது புதிய பொலிவுடன் புரட்சியின் முழக்கங்கள் புறப்பட்டு வருகின்றன. ஆம். இதோ.. இந்தப் பாடல் தலைவன் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி வரைந்தளித்தது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைப்பில் ஏழிசை வேந்தர் டி எம்.சௌந்தரராஜன் பாடியதாகும்.

    அறிவுக்கு வேலை கொடு…பகுத்தறிவுக்கு வேலை கொடு…

    ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும் avali
    கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
    கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
    தீபத்தை ஏற்றி வைத்தான்
    ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
    பொருந்தாத பழக்கமெல்லாம்
    ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
    அழிவுக்கு வழி வகுக்கும்
    ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
    அழிவுக்கு வழி வகுக்கும்

    ……………………………..
    பாடல்: அறிவுக்கு வேலை கொடு
    திரைப்படம்: தலைவன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: வாலி
    இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
    ஆண்டு: 1970

    அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
    அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
    மூடப் பழக்கத்தை விட்டு விடு
    காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்
    நம்மால் நாடும் மாற வேண்டும்

    அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

    ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
    கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
    கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
    தீபத்தை ஏற்றி வைத்தான்
    ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
    கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
    கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
    தீபத்தை ஏற்றி வைத்தான்
    ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
    பொருந்தாத பழக்கமெல்லாம்
    ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
    அழிவுக்கு வழி வகுக்கும்
    ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
    அழிவுக்கு வழி வகுக்கும்

    அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

    மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
    மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
    தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
    தானறிய மறந்திருப்பார்
    மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
    மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
    தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
    தானறிய மறந்திருப்பார்

    பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
    பட்டது போல் திரும்பி வரும்
    பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
    பட்டது போல் திரும்பி வரும் இந்த்த்
    தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
    தீங்கு செய்யும் எண்ணம் வருமோ? இந்த்த்
    தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
    தீங்கு செய்யும் எண்ணம் வருமோ?

    அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
    ஆஹாஹஹ ஹா

    https://www.youtube.com/watch?v=alcegBOWi3I

    ஐந்து அறிவு வரை யுள்ள ஜீவன்களைத் தாண்டி ஆறாம் அறிவாம் பகுத்தறிவு தானே .. எது நல்லது.. எது கெட்டது எதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற பகுத்துணர்வு மனித குலத்திற்கான மாபெரும் வரப்பிரசாதம். “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு..” என்னும் குறளின் குரலும் கேட்கிறதல்லவா?

    வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் அறிவு வெளிச்சத்தில் மட்டுமே ஆராயப் பட முடியும். மட்டிலா நம் அறிவுச் சுரங்கத்தை எத்தனை சதவிகிதம் நாம் பயன்படுத்துகிறோம் என்கிற கேள்விக்கான விடையில் தனி மனித வாழ்வின் வெற்றிக்கான ரகசியம் அடங்கியிருக்கிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”என்றுமே கூடாதோர்க்(கு), ஏற்றமிடு கோவிந்தனை,
    நின்றுகொல்லும் தெய்வமென்று நூலுரைக்கும்: -இன்றென்ன,
    மாறாக காளியன் மேலமர்ந்து கொட்டத்தை,
    சீராயன் கொள்வதேன்கே சவ்!”….கிரேசி மோகன்….

    Share
  • காதலின் பொன்வீதியில் – 9

    -மீனாட்சி பாலகணேஷ்

    தலைவி நீராடிய சுனை!

    கட்டு வரிவில் கரும் குறவர் கைத்தொழிலால் இட்ட பரண் மீதமர்ந்து அந்தக் குறமகள் கிளி முதலாகிய பறவைகளை தினைப்புனத்தின் அருகே வராவண்ணம் ஓட்டுகிறாள். ஆலோலம் பாடிப் பறவைகளை விரட்டித் தினைப்புனத்தைக் காக்க வேண்டுவது அவள் தந்தை அவளுக்கிட்ட பணி.

    valli-guhai-stucco

    ‘பூவைகாள் செம் கண் புறவங்காள் ஆலோலம்
    தூவிமா மஞ்சைகாள் சொல் கிளிகாள் ஆலோலம்
    கூவல் சேர் உற்ற குயில் இனங்காள் ஆலோலம்
    சேவல்காள் ஆலோலம்’ என்றாள் திருந்து இழையாள்.

    இவ்வாறு அந்த அழகு மயில், குயில் குரலில் ஆலோலம் பாட அதனைக் கேட்டு அங்கு வருகிறான் ஒரு இளம் வேடுவன். அவன்…..

    காலில் கட்டிய கழலன் கச்சினன்
    மாலைத் தோளினன் வரிவில் வாளியன்
    நீலக் குஞ்சியன் நெடியன் ……………… 

    காலில் கழல்களணிந்து, இடையில் கச்சினை இறுகக்கட்டி, திண்ணிய தோள்களில் காட்டு மலர்களால் ஆன வண்ண மலர் மாலைகளை அணிந்து கொண்டு வில்லையும் அம்பினையும் ஏந்தியபடி, முடிந்த குடுமித் தலையோடு, கம்பீரமாக நின்றான் அந்தக் கட்டிளம் காளை…..

    சொல்லினைத் தேனில் குழைத்துரைக்கும் இளம் பெண்ணைக் கண்டு சொக்கி நின்றான் அவன். ஆச்சரியத்தில் கண்கள் விரிய, அவளை விழித்து நோக்குகிறான். அவள் மேல் மையல் பொங்குகின்றது அவனுக்கு! யார் இந்த அற்புத நங்கை? யாரந்தக் கட்டிளங்காளை?

    அவள் வேட்டுவ மன்னன் நம்பிராஜனின் அருமை மகள் வள்ளி!

    “அழகு மங்கையே! நீ யார்? உன் பெயரென்ன? சொல்ல மாட்டாயோ! ஊரென்ன? அதையும் சொல்ல மாட்டாயா? சரி. உன் ஊருக்குச் செல்லும் வழியென்னவோ?” எனக் கேட்டான்.

    வள்ளி பதில் கூறாமல் நிற்கிறாள். வழியில் போகிறவன் வருகிறவன் எல்லாம் வந்து ஊரையும் பேரையும் கேட்டால், அவள் ஏன் கூற வேண்டும்? ஆகவே பாராமுகமாய் நின்றாள் வள்ளி. கட்டிளம் காளைக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவள் வனப்போ உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு. கொஞ்சுமொழி அஞ்சுகம். கண்டதும் கொண்ட காதலில் உருகி அவனுடைய ஊனும் உயிரும் தவிக்கின்றதே!

    மேலும் சொல்வான்,

    மொழி ஒன்று புகலாய் ஆயின் முறுவலும் புரியாய் ஆயின்
    விழி ஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன் உய்யும்
    வழி ஒன்று காட்டாய் ஆயின் மனமும் சற்று உருகாய் ஆயின்
    பழி ஒன்று நின்பால் சூழும் பராமுகம் தவிர்தி ….”

    “ஒரு மொழி கூறமாட்டேன் என்கிறாய். புன்னகையும் நீ புரியவில்லை! என்னை நோக்க மாட்டயோ? விரகம் மிகுகின்றதே; எனக்கு ஒரு மறுமொழி தாராயோ? உன் மனம் உருகாவிட்டால் பழி ஒன்று உன்பால் சூழும்,” என அச்சுறுத்துகிறான்.

    இப்படித்தான் காதலின் ஆரம்ப நிகழ்வுகள் பெரும்பாலும் துவங்குகின்றன!
    ____________________________________

    இது தலைவன் தலைமகள் ஒருத்தியைக் கண்டதும் கொள்ளும் காதல். ஆயினும் ஒருதலைக் காதல். எவ்வாறு இவள் மனதைக் கவர்ந்து தன்வசப் படுத்திக் கொள்வது? அன்புமொழி புகன்றான் காளை. அவள் அதனை லட்சியமே செய்யவில்லை. இந்தக் கட்டிளம் காளை வேறு எவரோ அல்லவே! செந்தமிழ்க் குமரன் அல்லவோ? அவளுக்கு அதைத் தெரிவிக்க வேண்டாமோ? என்ன செய்யலாம்?
    (இந்தக் காதல் நாடகம், குமரன் அரங்கேற்றியதைத்தான் காலகாலங்களாகக் கட்டிளம் இளைஞர்கள் காதலின் பாடங்களாகப் படித்து வருகின்றனர்!)

    ஓ! இதென்ன, தனது ஜனங்கள் புடைசூழ நம்பிராஜ மன்னன் வந்து கொண்டிருக்கிறான். தினைப்புனம் காக்கும் அருமை மகளுக்குப் பசியெடுக்குமே! தேனும், தினைமாவும் தர வந்தான். இப்போது இந்தக் காளை அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும்! திடீரெனக் காளை நின்ற இடத்தில் ஒரு வேங்கை மரம் எழுந்து நின்றது.

    கச்சியப்பச் சிவாச்சாரியார் தாம் இயற்றிய கந்தபுராணத்தில் ‘தானோர் வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்,’ என்கிறார். இவன் மாயாஜாலம் செய்வதிலும் வல்லவன் போலும். வள்ளி இதனை உணரவில்லை. புதிய மரத்தைக் கண்ணுற்ற நம்பிராஜன், “அம்மா! குழந்தாய்! இது உனக்கு நிழல் தந்து உதவும்,” எனக் கூறிப் போகிறான். தானே அறியாமல் குமரனின் காதலுக்கு அவனும் தன் பங்கிற்கு உதவுகிறான்!

    நம்பிராஜன் அங்கிருந்து அகன்றதும் வேங்கைமரம் மறுபடி உருமாறிக் கட்டிளங் காளையாயினான். “உன்னிடம் மையல் கொண்டேன். இனி உன்னைப் பிரிந்து வாழ இயலாது; என்னை மணந்து கொள்,” என வள்ளியிடம் இறைஞ்சி நின்றான்! அவள் உள்ளமும் மெல்லக் காதலில் கனிந்தது.

    காதலனின் கருத்தறிந்த பேதைப்பெண் நாணமும் அச்சமும் ஒருசேரக் கொண்டாள். “உயர்குடிப்பிறந்த உமக்கும் வேடர் குலத்துப் பிறந்த எனக்கும் எவ்வாறு பொருத்தம்?” என்று கேட்டாள்.

    திரும்பத் தன் தந்தையும் அவன் கூட்டத்தாரும் வர, என்ன ஆகுமோ என அஞ்சினாள். தன்மீது காதல் கொண்டு நிற்பவனை, அவர்கள் சினத்திற்கு ஆளாகாமல் மறைந்து நிற்கக் கூறினாள்.

    இங்கு தான் அவளுடைய காதல் உள்ளம், தன்னையறியாமலே குமரன் எனும் காளை பால் சென்று விட்ட உள்ளம், அவனுடைய நன்மையை எண்ணிப் பதைக்கும் உள்ளம், அதன் மென்மை, கனிவு எல்லாம் அவ்விளைஞனுக்கும், நமக்கும் புலனாகின்றது! அவளைத் தவிக்க விடாமல் மாயவித்தைக் காரன் போல் நமது காளை, கிழவேடம் கொண்டான்!

    (பேதைப்பெண் வள்ளி இதனை உணர்ந்திலள்!)

    என்ன துணிவு! வந்த நம்பிராஜனை வாழ்த்தவும் செய்கிறான்(ர்) அந்த விருத்தன் (முதியவன்): “உனக்கு வெற்றி உண்டாகுக! உன் குலம் தழைக்க!” எனத் திருநீறு தந்தார்!

    “என் முதுமை நீங்கி இளமை எய்த இந்தக் குமரித் தீர்த்தத்தில் ஆட வந்தேன்,” என இருபொருள் படுமாறு தந்தையிடமே சொல்கிறான் முதியவன்!

    ‘நீண்டதனி மூப்பகல நெஞ்சமருள் நீங்க
    ஈண்டுநும் வரைக்குமரி எய்தி இனிதாட
    வேண்டிவரு கின்றனன் மெலிந்துகடி தென்றான்’

    ‘உமது மலையிலுள்ள குமரித் தீர்த்தத்திலாட (அ) உமது மகளான இந்தக் குமரி வள்ளியைக் கூடி மகிழ’ என இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்!

    அப்பனுக்குப் பாடம் சொன்ன முருகன் இங்கு அப்பனிடமிருந்து கற்ற பாடத்தைத் தானும் திரும்பப் படித்து, நடித்துப் பார்க்கிறான்! (தவ முனிவர் வேடம் கொண்டு வந்து தன் தலைவியைச் சீண்டி விளையாடுகிறான்!)

    “அங்ஙனமே செய்வீராக! என் அருமை மகளுக்கும் துணையாக இருப்பீராக,” என்று வெகுளியாகக் கூறுகிறான் நம்பிராஜன்! இப்படியும் ஒரு தகப்பன்.

    அவன் சென்றதும், “பெண்ணே! பசிக்கின்றது,” என்று பெரியவர், தேனையும், தினைமாவையும் உண்டு பின் தாகத்திற்கு நீர் கேட்டார்! அவள் சுட்டிய சுனைக்கு வழி தெரியாதது போல் நடித்து, தன்னைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லுமாறு செய்தார். நீரையும் பருகித் தாகமும் தீர்ந்தது. உடலில் தெம்பு வந்ததும் மனம் வேறெல்லாமோ எண்ணியது. வள்ளி மேல் கொண்ட மோகம் பெருகியது. “அதையும் தீர்ப்பாயா?” எனக் குறும்புடன் கேட்டார்.

    “நரைத்த தலைக் கிழவனாரே! தவவேடம் கொண்ட உமக்கு இது தகுமோ? எனது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குக் கேடு தான் விளையும். பித்தர் போலும் பிதற்றி உமது குலத் துக்கும் எனது வேடர் குலத்துக்கும் பெரும் பழியைச் செய்து விட்டீர்,” எனச் சீற்றத்துடன் மொழிகிறாள் வள்ளிக் குமரி!
    விடு விடென்று அங்கிருந்து புனங்காக்கப் புறப்பட்டுச் செல்லலானாள்.

    இப்போது காளை தவிக்கிறான். கன்னிக் கனியமுது கைநழுவிப் போயிற்றே! குறும்புக்காரக் கிழவனாக வந்தவன் குமரனல்லவோ? தன் அண்ணன் தந்திமுகத்து விநாயகனைத் துதித்தான். அவரும் தம்பிக்கு உதவ வேண்டி, மதயானை வடிவெடுத்து, அண்டமெல்லாம் நடுங்க ஒடோடி வந்தார்.

    இப்போது வள்ளி என்ன செய்வாள் பாவம். சிந்திக்கப் பொழுதில்லை! ஆபத்துக்குப் பாவமில்லை! ஆகவே மிகுந்த அச்சம் கொண்டவள், பொய்வேடம் கொண்டு நின்ற புங்கவனான கிழவ னாரை அணுகி, “இவ்வேழத்தினிடமிருந்து என்னைக் காத்தருளுக,” என அவரை இறுகத் தழுவிக் கொண்டனள்.

    அவ்வேளை யில்வள்ளி அச்சமொடு மீண்டுதவப்
    பொய்வேடங் கொண்டுநின்ற புங்கவன்தன் பாலணுகி
    இவ்வேழங் காத்தருள்க எந்தைநீர் சொற்றபடி
    செய்வேன் எனவொருபால் சேர்ந்துதழீஇக் கொண்டனளே.

    artஇப்போது குமரனின் உள்ளமும் உடலும் குளிர்ந்தது! தான் காதல் கொண்ட மங்கைக்குத் தன் உண்மை வடிவைக் காட்டி நின்றான் அந்தக் குறும்புக்காரன். வேழமும் தான் வந்த செயல் நிறைவேறியதால் விரைந்தோடி மறைந்தது! காதல் மங்கை நாணினாள்; வியர்த்தாள்; அயர்ந்தாள்; அச்சம் கொண்டாள். காதலில் அவனுக்கிணையாகக் கசிந்துருகினாள்.

    நம்மை அணையும்வகை நற்றவஞ்செய் தாய்அதனால்
    இம்மை தனிலுன்னை எய்தினோ மென்றெங்கள்
    அம்மை தனைத்தழுவி ஐயன் அருள்புரிந்தான்.

    வள்ளியுடன் கூடி இன்புற்றிருந்தபின், “நீ தினைப்புனம் செல்; நான் அங்கே வருவேன்,” எனக் கூறினான். திரும்பச் சென்ற வள்ளியிடம் தோழி வருகின்றாள்.

    “என்னம்மா இது? பறவைகளெல்லாம் வந்து பயிர்களைப் பாழ்படுத்த விட்டு விட்டு நீ எங்கு சென்றாய்?” எனக் கேட்டாள். அவளை மேலும் கீழுமாகப் பார்வையால் துளைத்தெடுக்கிறாள்.

    வள்ளியின் உடலிலொரு புது வாசனை (நாற்றம்); உருவம் சிறிது மாறுபட்டுத் தெரிகின்றது! நடந்து கொள்ளும் விதமும் புதுமையாக உள்ளது. எங்கோ பார்த்தபடி விட்டேற்றியாக அல்லவோ மறுமொழி பகருகிறாள். சொல்லும் செயலும் (மாற்றமும் செய்கையும்) உள்ளமும் இவை எல்லாமே வேறுபட்டுத் தெரிகின்றன தோழிக்கு! இவையெல்லாம் காதலனுடன் கூடிக் களித்தமையால் வந்த மாற்றங்கள் என ஊகித்து அறிந்த தோழி (இகுளை), “எங்கேயடி சென்றாய்?” என உரிமையுடன் கேட்கிறாள்.

    நாற்றமுந் தோற்றமும் நவிலொ ழுக்கமும்
    மாற்றமுஞ் செய்கையும் மனமும் மற்றதும்
    வேற்றுமை யாதலும் விளைவு நோக்கியே
    தேற்றமொடு இகுளையங்கு இனைய செப்புவாள்.

    “போடி, நான் மலை மீதுள்ள சுனை நீரில் ஆடச் சென்றேன்,’ என வள்ளி நாணத்துடன் எங்கோ பார்த்தபடி கூற, தோழிக்கு எழுந்த ஐயம் நிச்சயமாகின்றது.

    “விழிகள் சிவந்து வாய் வெளுத்து, உடலில் வியர்வையும் விம்மிய நெஞ்சகமுமாக, கைவளை நெகிழவும், ஆடியவர்க்கு இவற்றை எல்லாம் செய்விக்கும் தண்மையான சுனை எங்கே உள்ளதடி, காட்டுவாய்!” என வள்ளியிடம் தோழி கூறுகிறாள்.

    மைவிழி சிவப்பவும் வாய்வெ ளுப்பவும்
    மெய்வியர் வடையவும் நகிலம் விம்மவுங்
    கைவளை நெகிழவுங் காட்டுந் தண்சுனை
    எவ்விடை இருந்துளது இயம்பு வாயென்றாள்.

    தோழி புரிந்து கொண்டதை, வள்ளியும் அறிந்து கொண்டாள். “அடி, நீயல்லவோ எனக்கு உற்ற தோழி, என்னைத் தவறாக எண்ணலாமோ?” என்று வேண்டினாள்.

    காதல் நிறைவேறத் தோழியின் உதவி தாராளமாக வேண்டும் அல்லவோ?
    அச்சமயம் குமரன் எனும் காதல் தலைவன் (வள்ளியின் தலைவன்) தனது அம்பினால் புண்பட்ட வேழம் ஒன்றினைத் தேடியவாறு வருபவன் போல் வந்து நின்றான்.

    கொம்பினைக் கையிலேந்தி, குறி தவறாத அம்புகளை உடையவனாய், தீட்டப்பட்ட குறுவாளினையும் கொண்டு, கச்சினை இறுகக்கட்டி, வேட்டையால் இளைத்துக் காணப்பட்டவனாயும், தாள்கள் சிவக்குமாறு அவன் அங்கு தோன்றினான் என்பார் கச்சியப்பர்.

    கோட்டிய நிலையினன் குறிக்கொள் வாளியன்
    தீட்டிய குறியவாள் செறித்த கச்சினன்
    வேட்டம தழுங்கிய வினைவ லோனெனத்
    தாட்டுணை சிவந்திடத் தமியன் ஏகினான்.

    இருவரும் ( வள்ளியும் முருகன் எனும் குமரனும்) கொண்ட மையல் தன்னை அவர்கள் இருவரின் கண்களும் உரையாடுவதிலிருந்து புரிந்து கொண்டாள் தோழி. அவள் உதவியின்றி, இக்காதல் நிறைவேறாது என்றுணர்ந்த குமரவேள் அவள் உதவியை வேண்டுகிறான். பல நாட்கள் ரகசியமாக இவர்கள் சந்தித்து மகிழத் தோழி உதவுகின்றாள்.

    தோழியின் குறுக்கீட்டினால் தான் காதலர் ஒன்று சேர்கின்றனர். தந்தை அறிந்து கொண்டதும், அவனறியாமல் குமரன் எனும் காதலனுடன் வள்ளியை உடன்போக்காக அனுப்பி வைப்பதும் தோழி தான்! அவள் மதியூகத்தினால் தான் இக்காதல் கடிமணத்திலும் நிறைவு பெறுகின்றது!
    காதலின் பொன்வீதியில் காதலர் வெற்றி நடை பயில எல்லாம் அறிந்த தோழியின் துணை மிகவும் அவசியம் என நாம் காண்கிறோம்.

    தலைவன் கடிமண நாளை நீட்டும் போதுக் கடிந்துரைப்பதும் தோழியே!
    அவனுடன் தலைவியை யாரும் அறியாது அனுப்பி வைப்பதும் தோழியே!
    ‘மணம் புரிந்து செல்லும் எம் தலைவியைக் காதலுடன் வாழ்நாள் முழுமையும் போற்றுவாயாக,’ எனக் கண்ணீர் மல்கத் தலைமகனிடம் வேண்டுவதும் அந்த உற்ற தோழியே!

    *************************************************************

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 6, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு “அமெரிக்கத்தமிழர் வருண் ராம்” அவர்கள் 

     

    Varun-Ram

     

    வல்லமையின் இந்தவார வல்லமையாளர் என்ற சிறப்பைப் பெறுபவர் கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர், அமெரிக்கத்தமிழர் திரு. வருண் ராம் அவர்கள்.

    இருபத்தியிரண்டு வயதாகும் திரு. வருண் ராம் என்னும் வருண் இராமசாமி அவர்கள் இந்த ஆண்டு மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பில் முதன்மை மாணவராக  (3.99/4.00 GPA), நரம்பியல், உடற்செயலியல் என்ற இரு அறிவியல்துறைகளில் பயின்றுப் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் அவர் கூடைப்பந்தாட்டத்திலும் சிறந்து விளங்கி தனது மேரிலாண்ட் பல்கலைக் கழக அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த திறமையான ஆட்டத்தினால் வளரும் இளம் விளையாட்டுவீரர் என்ற பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

    இந்தியக் குடும்பத்து மாணவர் என்றால் கணிதம், அறிவியல், தொழில் நுட்பம் படிக்க விரும்புபவர்; சிறந்த படிப்பாளிகள் என்று அமெரிக்க மக்கள் மனதில் ஒரு பொதுமைப்படுத்தும் எண்ணம் உருவாகும் வண்ணம் அயல்நாடுவாழ் இந்தியர்கள் இருந்துவருகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் அவர்கள் படிப்பில், பிற தொழில்களில் மட்டுமல்ல, வாய்ப்புகள் அமைந்தால் விளையாட்டுத் துறையிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்ற செய்தியை அமெரிக்க மக்களுக்கு வருண் ராம் அனுப்பி இருக்கிறார். படிப்புடன் விளையாட்டிலும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை அமெரிக்க இந்திய மாணவர்களுக்கும் தனது வெற்றியின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

    பொதுவாக அமெரிக்கக் குடும்பங்களில் வளரும் பிள்ளைகள், தங்களுக்கு ஆர்வம் ஏற்படும் துறைகளில் முயன்று, தங்கள் திறமைக்கு ஏற்ற, மனதுக்குப் பிடித்த துறையில் வளரவேண்டும். அது கலையாகவோ, விளையாட்டாகவோ இருந்தாலும்கூட அவர்கள் விருப்பம் தடை செய்யப்படுவதில்லை என்ற நிலை அமெரிக்கர்களிடம் உள்ளது. இதற்கு மாறாக, இந்தியக் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் மருத்துவம், பொறியியல், கணினி சார் கல்விகள், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஈடுபடுவது மட்டுமே எதிர்பார்க்கப்படும். கலை மற்றும் விளையாட்டு என்பவை பொழுதுபோக்கு என்ற வகையில் மட்டுமே கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாழ்வாதாரத்திற்கு மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ, பேராசிரியராகவோ, வழக்கறிஞகராகவோ பணிபுரிவது மட்டுமே மதிப்பாக, உயர்வாக  எண்ணப்படும்.

    வருண் ராமின் பெற்றோர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் தொடர்ந்து நல்ல மதிப்பெண்கள் வாங்கும்வரை அவர் விளையாடலாம், அதுவரை  விளையாட்டிற்குத் தடையில்லை என்று முதலில் அனுமதித்தவர்கள், பின்னர் வருண் ராமின் திறமையைக் கண்டு அவர் வளர்ச்சிக்கு முழு ஆதரவும் கொடுத்து அவரது வாழ்வின் குறிக்கோளுக்கு உதவியாகவும் இருப்பவர்களானார்கள். இந்தியர்களின் பொதுவான பாதையில் இருந்து விலகி,  தன்னார்வத்தால் மட்டுமே விளையாட்டுத் துறையில் திறமையை வளர்த்துக் கொண்டு, தனது குறிக்கோள் நோக்கி முன்னேறியிருக்கிறார் வருண் ராம். இவர் குடும்பத்திலும் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்த முதல் மனிதரும் இவர் மட்டுமே.

    வருண் ராமின் பெற்றோர்கள் திரு.கொழந்தவேல் இராமசாமி, முனைவர் சாந்தினி என்போர்.  பெற்றோர் இருவரும் சேலத்திலிருந்து சற்றொப்ப 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தவர்கள். இருவரும் அமெரிக்க அரசின் அரசுப்பணியாளர்களாக இருப்பவர்கள். அத்துடன் மேரிலாண்ட் தமிழ்ச்சங்கத்தின் பணிகளிலும் மிகவும் ஈடுபாட்டுடன் பங்கேற்பவர்கள்.

    அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் (National Basketball Association) விளையாடுவது வருண் ராமின் குறிக்கோள். தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் சிறந்த பல்கலைக்கழக விளையாட்டுக் குழுக்களுக்காக விளையாடித் திறமையை வெளிப்படுத்தி, தேசிய அணியினர் கவனத்தைக் கவரவேண்டும். அமெரிக்க பல்கலைக்கழக விளையாட்டுச் சங்கம் (National Collegiate Athletic Association – NCAA) பல்கலைக் கழகங்களின் விளையாட்டு அணியை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை பிரிவு I, பிரிவு II, பிரிவு III ( Division I, Division II, and Division III of NCAA) குழுக்களென முறையே மிகப்பெரும் புகழ்வாய்ந்த பெரிய பல்கலைக்கழகங்கள், நடுத்தர நிலை மற்றும் சிறிய பல்கலைக்கழகங்கள் என்பவையே அப்பிரிவுகள்.

    Varun-Ram-1

    பிரிவு I இல் இருக்கும் பெரிய கல்லூரிகளில் படித்தால் தேசிய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்புகளும் அதிகம். ஆனால், உயர்நிலைப் பள்ளி கல்விக்குப் பிறகு வருண் ராமிற்கு புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காது போக, அதற்காகவே ஓராண்டு மேலும் பள்ளிக் கல்வியை நீட்டித்து மறு ஆண்டும் பெரிய கல்வி நிறுவனங்களில் நுழைவுக்கு விண்ணப்பித்தார். மீண்டும் முயற்சி தோல்வியடைந்தாலும், பிரிவு III நிலையில் உள்ள கனக்டிகட் பல்கலையில் சேர்ந்து ஓராண்டு படித்துவிட்டு, அங்கிருந்து மறு கல்வியாண்டில் மாற்றல் வாங்கிக் கொண்டு, பிரிவு I நிலையில் இருக்கும் மேரிலாண்ட் பல்கலைக் கழகத்திற்கு வந்தார். இது போன்று மாற்றம் வாங்கினால் விளையாட்டு அணியில் இடம் கிடைக்காது என்ற மறுப்பு கூறியவர்களின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தின் ‘மேரிலாண்ட் டெர்ராபின்ஸ்’ (Maryland Terrapins) கூடைப்பந்து அணியில் தனது திறமையினால் இடம் பிடித்தவருக்கு விரைவில் அவரது திறமையான விளையாட்டால் அமெரிக்கர் அனைவரையும் அவரைத் திரும்பிப்பார்க்க வைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

    Varun-Ram-2

    சென்ற மார்ச் மாதம் ‘வலப்ரேஸோ க்ருசேடர்ஸ்’ (Valparaiso Crusaders) அணியுடன் போட்டியிட்ட மேரிலாண்ட் டெர்ராபின்ஸ் அணியின் வெற்றிக்கு வருண் ராமின் திறமையான விளையாட்டே காரணமாக அமைந்தது. அவரது கனவுகளை நிறைவேற வாய்ப்பளிக்கும் சிறந்த தருணமாகவும் அது அமைந்தது எனலாம். அமெரிக்க இந்திய மாணவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக விளங்கும் வருண் ராமைப் பாராட்டி, சென்ற வார இறுதியில் ஜூலை 4 ஆம் நாள் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்திய “தமிழ்விழா – 2015” (FeTNA – 2015) நிகழ்ச்சியில் சிறப்பு விருது அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளார்.

    varunR2

     

    varunR
    தாய், தந்தையருடன் (வலது, இடது புறங்களில் நிற்போர்) வருண் ராம் பொன்னாடை போர்த்திப் பாராட்டப் பெறுகிறார்

     

    அவர் அவ்வாறு பாராட்டப்பட்ட பொழுதே, தமிழ்விழா – 2015 அரங்கிலேயே, வருண் ராம் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டும்படியும் பார்வையாளர்கள் சிலரால் பரிந்துரைக்கப்பட்டார். வருண் ராம் தனது கூடைப்பந்தாட்டக் கனவுகளை (Hoop Dreams) நிறைவேற்றுவதற்காக ஆங்கிலத்தில் “jumping through hoops” என்று சொல்வது போல பல தடைகளை எதிர்கொண்டு வெற்றிகண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அவரது குறிக்கோள்களான மருத்துவத்துறையில் பணியாற்றும் கனவு,  மற்றும் தேசியஅணியில் விளையாடும் கனவுகள் நிறைவேற வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    தொடர்புக்கு:
    டுவிட்டெர் சமூக வலைத்தளத்தில் வருண் ராம் – https://twitter.com/vram_21

     

    தகவல்கள் படங்கள் சேகரிக்கப்பட்ட இடங்கள்:
    ‘They ask, who is this kid?’: Varun Ram on life as an Indian basketball player
    [http://www.theguardian.com/sport/2015/mar/18/they-ask-who-is-this-kid-varun-ram-on-life-as-an-indian-basketball-player]

    Varun Ram is a star both on and off the court
    [http://ekalavyas.com/2014/12/20/varun-ram-star-off-court/]

    Wikipedia
    [https://en.wikipedia.org/wiki/Varun_Ram]

    அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டில் சாதித்துவரும் அமெரிக்கத்தமிழர் வருண் ராம்
    [http://www.valaitamil.com/tamizhar-varun-ram-college-basketball_10948.html]

    வருண் ராம் அவர்களின் படங்கள் அவரது டுவிட்டெர் தளத்தில் இருந்தும்,  மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தின் தளத்திலிருந்தும் சேகரிக்கப்பட்டுள்ளன

     

    நன்றி:
    FeTNA – 2015 படங்களுக்கு ஏற்பாடு செய்த திரு. பழமைபேசி அவர்களுக்கு சிறப்பு நன்றிகள் உரித்தாகிறது.

    Share
  • தமிழ் மையை நிரப்பு

    amay

    ஆதித் தொன்மையாம் குமரிக் கண்டம்
    ஆஸ்திரேலியா, சாலித்தீவு, தென்னாபிரிக்கா இணைவாம்
    ஏக மனதாராய்ச்சி தேவநேயப்பாவாணரோடு பலரால்.
    ஊகமல்ல பதினான்கு  மாநிலங்களான பிரிவாம்
    ஏழு தெங்கு நாடு என்றும்
    ஏழு பனை நாடெனப் பிரிவுகளாம்!
    தமிழன், தமிழ்மொழி பிறப்பிடம் குமரிக்கண்டம்
    தக்கசான்றுகள் பினீசியர்கள் கல்வெட்டுகள் நாணயங்கள்.
    உன்னத இலக்கியம் இரண்டாயிரமாண்டுகளிற்கு மேலானது
    கன்னலாம் நீண்ட இலக்கண மரபுடையது.
    இன்பத் தமிழேயித்தனை பழமைத் திமிரே!
    என்னைக் கவலைகள் தின்னத் தகாதென
    துன்ப அகராதி துடைத்தழிக்கும் அமிழ்தே!
    என்னுயிர்ச் சொத்தாமுலகின் பதினெட்டாம் நிலையே!
    உன்னையின்னும் மக்கள் இழுத்து அணைக்கட்டும்!
    சின்ன எழுதுகோலில் தமிழ்மையை நிரப்பட்டும்!
    மொழி எம் வாழ்க்கையின் வழி!
    ஆழி! உள்ளாழ்ந்து முத்துக் குளி!
    தோழியாய்த் தோளணைத்து மழையாய்ப் பொழி!
    ஊழிக்காலம் வரை காத்திட விழி!
    அறிவானது பனையோலை வாய்மொழியான பாதுகாப்பு!.
    செறிமைச் சூரியன்! இன்ப நீரோடை!
    வறியவனாக்காத மொழிப் பயிர் மேடை!
    தறியெனும் எழுதுகோலால் நூல் நெய்வோம்!
    பா ஆக்கம்
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்
    21-6-2015.
    Share
  • நிசாரியின் (சூரியன்) வீரியம்.

    பா வானதி வேதா. இலங்காதிலகம்

     

    summer heat02

    குளிருது குளிருது என்று குடங்குதலானோம்.
    குனிய நிமிர உடல் நோவானோம்.
    நிமிர்ந்து நிம்மதி கொள்வாய் என்று
    நிசாரி தன் கிரணங்களை வீசினான்
    கஞ்சத்தனம் காட்டாது அதி பரிவை
    வஞ்சகம் இன்றிக் காட்டுதல் கொடுமை
    அஞ்சுகிறார் மக்கள் அலறுகிறார் வெப்பத்தால்
    விஞ்சுதலாய் வெக்கையில் வியர்வை வழிகிறது

    கோடை வேண்டும் கோடை வேண்டுமென்றோம்
    கோரிக்கை கோரமாகித் துடிக்கிறோம் இன்று
    மரங்களின் கீழ் மக்கள். பறவை
    மரங்கொத்தியாய் முயற்சி, நிழல் தேடி.
    குளியல் இரண்டு மூன்று முறை
    எளிதான பருத்தி உடைத் தேர்வு
    களித்திட கடல் தேடி ஓடல்.
    புளித்திடாத குறையாக வெயில்..வெயில்..

    பா ஆக்கம்
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    5-7-2015

    Share
  • படக்கவிதைப் போட்டி – 20

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    11717174_858467787540755_455889006_n

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    8122644@N04_rதிரு. விஜய் கணேஷ் ஜெயராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.07.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • உன்னையறிந்தால் . .. (12)

    நிர்மலா ராகவன்

    மல்லிகையும், தாம்பத்தியமும்

    உனையறிந்தால்1-11

    குழந்தைகள் வளர்ந்து, பெரியவர்களானாலும் பிரச்னைகள் எழாமல் இருப்பதில்லை. அப்படி ஒன்று இதோ!

    கேள்வி: எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகப்போகின்றன. தினமும் வேலை முடிந்து வருகையில் நான் மல்லிகைச் சரம் வாங்கி வரவேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கிறாள். மல்லிகைப் பூவிற்கும், தாம்பத்தியத்துக்கும் அப்படி என்ன உறவு?

    விளக்கம்: தந்தையோ, தாயோ வேலை நிமித்தம் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுப் போகிறார்கள். திரும்பி வரும்போது, அவர்கள் தின்பண்டமோ, விளையாட்டுச் சாமானோ வாங்கிக்கொண்டு வந்தால் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். தான் அருகில் இல்லாதபோதும், தன்னைப்பற்றிய நினைவு வைத்திருக்கிறார்களே!

    இதேபோல்தான் ஒரு பெண்ணும். கணவன் அலுவலகத்தில் பல பெண்களுடன் பழகக்கூடும். இருந்தாலும், தன் நினைவாகவே இருந்திருக்கிறார் என்ற அற்ப ஆறுதல்.

    இத்தகைய பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் என்றே தோன்றுகிறது. கணவன்மேல் ஒருவித ஆக்கிரமிப்பு.

    என் உறவினர் பெண் வேறு மாதிரி சொன்னாள். எப்பொழுதாவது கணவர் மல்லிகைச் சரம் வாங்கி வந்தால், அன்று அவளை நாடுகிறார் என்று அர்த்தமாம். வாய்விட்டுச் சொல்ல முடியாததை குறிப்பால் உணர்த்துகிறாராம்!

    இந்திப் படங்களிலும், சில தமிழ்ப் படங்களிலும், நடனப் பெண்கள் இருக்குமிடத்தில் உட்கார்ந்திருக்கும் வில்லன் தன் கரத்தில் மல்லிகைச் சரம் சுற்றியிருப்பான். அடிக்கடி அதை முகர்ந்து பார்த்துக்கொள்வான். ஒரு இயந்திரியத்தைத் தன் வசப்படுத்தினால், மற்றவைகளும் நன்கு செயல்படும் என்று காட்ட எண்ணினார்களோ பட இயக்குனர்கள்?! (சிலருக்கோ, மல்லிகையின் நறுமணம் தலைவலி உண்டாக்குகிறதே?)

    தாம்பத்தியமே சிக்கல்தான்.

    கதை 1; ஒரு நண்பர், `உங்களிடம் ஒரு விஷயம் கேக்கணுமே!’ என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்தார்.
    அவருடைய நண்பர் ஒருவர் வருத்தமாக இருந்தாராம். நண்பர்கள் சிலர் என்ன ஆயிற்று என்று கேட்க, மனைவிக்கு தாம்பத்திய சுகத்தில் விருப்பம் போய்விட்டது என்றார்.

    நான்: `உங்கள் நண்பருக்கு என்ன வயது? `நாற்பத்து ஐந்து!’
    நண்பர்களெல்லாம் தமக்கும் அப்படி ஒரு நிலை வந்துவிடுமோ என்று அஞ்சியவர்களாய், ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, `கொஞ்சம் அல்வாவும், மல்லிகைப் பூவும் வாங்கிப்போ!’ என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

    மகிழ்ச்சியுடன் போனவர், சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிட்டார், முகத்தைத் தொங்கப் போட்டபடி.
    `ஏங்க பொண்ணுங்க இப்படி, புரிஞ்சுக்க முடியாதபடி, இருக்காங்க?’ என்று என் நண்பர் என்னைக் கேட்டார்.

    எல்லாப் பெண்களையும் புகழ்ச்சியாலோ, பரிசுப்பொருட்களாலோ வழிக்குக்கொண்டுவர (வீழ்த்திவிட?) முடியாது.

    நாற்பதுக்கு மேல் ஆன பெண்ணிற்கு உடல் உபாதைகள் இருக்கலாம். பெண் மருத்துவரைப் பார்த்தால் விளங்கும். இல்லை, கணவன்மேல் ஏதாவது மனத்தாங்கலாக இருக்கலாம்.

    கதை 2: கணவன் தமிழ்ப்படங்களில் `கவர்ச்சி நடனம்’ என்ற பெயரில் அரைகுறை ஆடைகளில் பெண்கள், ஆண்கள் மனத்தைத் தூண்டவேபோல் இடுப்பையும், மார்பையும் ஆட்டும் காட்சிகளைப் பார்த்துவிட்டுத் தன் அருகில் வருகிறார். அது தனக்கு வெறுப்பாக இருக்கிறது என்று வலிய வந்து என்னிடம் சொன்னார் ஒரு மாது. `விரதம்,’ என்ற சாக்கில், தனியே பாயில் உறங்குவாராம்.

    கணவன் மனைவிக்குள் எந்த காரணத்திலாவது இடைவெளி ஏற்பட்டால், வெளிப்படையாகப் பேசுவதுதான் ஒரே வழி. நிறைய கத்தலும், அழுகையும் தவிர்க்க முடியாதது. ஆனால், பலன் கிடைக்கும்.

    கதை 3: கணவன் தன்னை நெருங்குவதைத் தவிர்த்தாள் அந்த இளம்பெண். ஓயாமல் குற்றம் கண்டுபிடிப்பவன் தன்மேல் இன்னும் அதிகமாகக் குற்றம் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயம்தான் அவளுக்கு.

    `இரவு எட்டு மணிக்கெல்லாம் படுத்துத் தூங்கிவிடுகிறாள்!’ என்று அக்கணவன் என்னிடம் குறைபட்டுக்கொண்டான். `ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், என்னைக் குறை சொல்லாதே!’ என்று அடிக்கடி மனைவியை மிரட்டுவதாகவும் சொன்னான்.

    இருவருக்குமே நிம்மதி இல்லை. இத்தனைக்கும், காதல் திருமணம்!
    அப்பெண் பாலியல் வதைக்கு ஆளானவள். ஆண்கள் என்றாலே ஒருவித மிரட்சி. இதைக் கணவரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள்.

    கணவனும் அடிக்கடி, அவளை `முட்டாள்,’ என்று பழிப்பதைக் கண்டேன், அவர்கள் இல்லத்தில் சில தினங்கள் தங்கியிருந்தபோது.

    ஏற்கெனவே தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று உள்ளுக்குள் புழுங்குகிறவள்! அவளை இன்னும் மட்டம் தட்டினால்?

    பழியை அவன்மீது திருப்பினேன். வேண்டுமென்றே அவளுக்குப் புரியாத விதத்தில், பெரிய பெரிய வார்த்தைகளை உபயோகித்து ஆங்கிலம் பேசுவது, பழிப்பது எல்லாவற்றையும் சுட்டிக் காட்டினேன்.
    அவனுக்கு என்மேல் காட்டம். தான் ரொம்ப உயர்ந்தவன் என்பதுபோல் மனைவியை ஆட்டுவித்துக்கொண்டிருந்தவன், அல்லவா?

    ஆனாலும் அவன் தன்னை மாற்றிக்கொண்டான். அடுத்த ஆண்டே, தனக்குக் குழந்தை பிறந்த செய்தியை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தாள் அப்பெண்.

    அவன் மல்லிகைப்பூ வாங்கி வந்து அவளை மயக்கினானா என்று தெரியவில்லை. எது எப்படியோ, தளர்நடை போட்டுக்கொண்டிருந்த தாம்பத்தியம் வலுவாயிற்று.

    தொடருவோம்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 172

    மலர்சபா

    மதுரைக் காண்டம் – 05. அடைக்கலக் காதை

    கவுந்தி மாதரியிடம் ‘கண்ணகியை அழைத்துச் செல்க’ எனல்

    amala

    சாரணர் உரைத்த தகுதிவாய்ந்த
    அறவுரைகளைக் கேட்டு
    அதை மறைகள் கூறிய உரை எனக்கொண்டு
    அந்நகரத்தில் வாழ்ந்த
    அருந்தவம் செய்தவர்களும்
    தனக்கென வாழாமல்
    பிறர்க்கென வாழும் உலக நோன்பிகளும்
    தானங்கள் பலவும் செய்து வாழ்ந்து வந்த
    சாயலனும் அவன் மனைவியும்
    குறைகள் இன்றி இன்பம் வழங்கும்
    வீடு பேறு எய்தினர்.

    “தானத்தின் சிறப்பினை உணர்ந்து
    அதற்கு உடன் பட்டாய் என்றால்
    அடர்ந்த கூந்தலையுடைய இவளுடன்
    மேலும் காலம் தாழ்த்தாது
    நீ சென்றிடுவாயாக” என்று
    கவுந்தியடிகள் கூறிய உரைதனில்
    அகம் மகிழ்ந்து அவரைப் போற்றினள் மாதரி.

    மாதரி கண்ணகியுடன் மாலையில் தன் மனைக்குச் செல்லுதல்

    வளர்ந்து வருகின்ற
    இளமை பொருந்திய
    அழகிய மார்பையும்
    மூங்கிலின் அழகைக் கொண்ட
    வலிமையான தோள்களையும்,
    இளைய நாணல் முளைத்தது போன்ற
    வெள்ளைப் பற்களையும்
    முதிர்ந்த அறிவையும் உடைய கண்ணகியோடு,
    மேற்குக் கடலில் கலந்து
    சூரியனின் ஒளி அடங்கும் நேரத்தில்,
    கன்றுகளை எண்ணிப் பசுக்கள்
    எழுப்பும் குரலொலிகள் ஒலித்திருக்க
    கன்றினை நினைத்து வருகின்ற
    பசுக்களின் குரல் ஒலித்திருக்க,
    ஆட்டுக்குட்டியையும் கோடரியையும்
    உணவு உறிகளையும்
    தோளில் சுமந்து செல்லும் இடையர்களுடன்
    கைவளையல்களை அணிந்து செல்லும் ஆய்ச்சியர்கள்,
    கண்ணகி புதியவளாக இருந்தபோதும்
    அவள் அழகைக் கண்டு வியந்து
    அவளைச் சூழ்ந்து வந்தனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 192- 205

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

    Share
  • குறளின் கதிர்களாய்…(79)

    செண்பக ஜெகதீசன்

      

     

    பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை 

    வெரூஉம் புலிதாக் குறின்.

          -திருக்குறள் -599(ஊக்கமுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    உருவில் பெரியது யானை,

    நெருங்கிட அஞ்சும்

    கூரிய கொம்புடைத்தாயினும்,

    ஊக்கமுடன்

    உருவில் சிறிய புலி தாக்கிட,

    பயந்து ஓடும்…!

     

    குறும்பாவில்…

     

    பெரிய வலிய கொம்பன்யானையும்

    பயந்தோடும்,

    ஊக்கமுடன் புலி எதிர்த்தால்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    காட்டி லுள்ள விலங்குகளில்

         காணும் பெரிய உடலுடனே

    ஈட்டி போன்றே கூர்மையுடன்

         இரண்டு தந்தம் இருந்தபோதும்,

    ஓட்டம் பிடிக்கும் யானையதும்

         ஊக்க முடனே புலிபாய்ந்தால்,

    காட்டிடு செயலில் ஊக்கமதை

         காசினி வாழ்வில் வென்றிடவே…!

     

    லிமரைக்கூ…

     

    பயந்தோடும் உருவில் பெரிய யானை

    ஊக்கமுடன் புலி எதிர்த்தால்,

    ஊக்கம் வாழ்வில் வென்றிடும் சேனை…!

     

    கிராமிய பாணியில்…

     

    யானயான கொம்பன்யான

    காட்டுலபெரிய கொம்பன்யான,

    ஈட்டிபோல கொம்போட

    எவரயுமே குத்தும்யான..

     

    ஊக்கமோட காட்டுப்புலி

    பாஞ்சிவந்தா வீரத்தோட,

    பயந்தேஓடும் யானையுந்தான்..

     

    அதால,

    வேணும்வேணும் ஊக்கம்வேணும்

    வெற்றிகெடைக்க ஊக்கம்வேணும்…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share