Author: தேமொழி

  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 30, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு ஆர். பி. ரமேஷ் அவர்கள்

    Ramesh RB

    வழக்கத்திற்கு மாறாக, அளவுக்கதிகமாகப் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தத்தளித்து வருகிறது சென்னையும், சென்னையின் புறநகர்ப்பகுதிகளும், அதன் சுற்றுவட்டாரங்களும். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பலர் வீட்டையும் உடைமைகளை இழந்து துன்பப்படுவது செய்திகளாக வந்த வண்ணம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போர்க்கால அடிப்படையில் உதவிப்பணிகளும் அரசால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மட்டுமின்றி பல அரசு சாரா பொதுப்பணி நிறுவனங்களும் தங்களால் இயன்றவகையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வருகின்றன. அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்களுக்கு உணவளித்து உதவி செய்த சமூக நல ஆர்வலரும், தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகியுமான திரு. ஆர். பி. ரமேஷ் (R. B. Ramesh) அவர்களை அவரது சமூக சேவைகளுக்காக இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழு பாராட்டுகிறது. இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் ஆசிரியர் திருமதி பவளசங்கரி அவர்கள்.

    Ramesh RB1

    Ramesh RB2

    Ramesh RB3

    செங்கல்பட்டைச் சேர்ந்த ஆர். பி. ரமேஷ் அவர்கள் சமூக அக்கறை கொண்டவரும், ஆன்மீக ஆர்வலரும் ஆவார். சமூகநலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ரமேஷ் அவர்கள் சென்னையில் பள்ளிப்படிப்பையும், திருச்சி நேஷனல் இன்ஸ்டிடுயுட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பையும் முடித்து பொறியியலில் பட்டம் பெற்றவர். ரமேஷ் அவர்கள், இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த மேதகு ஆர். வெங்கட்ராமன் அவர்களின் மகளும், புகழ் பெற்ற சமூக சேவகியுமான திருமதி பத்மா வெங்கட்ராமன் அவர்களிடம் பணிபுரிந்தவர்.

    நலிவுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் ‘தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு’ என்ற அறக்கட்டளையைத் துவக்கி, அதன் இயக்குநராகத் திட்டங்கள் வகுத்து வாடும் மக்களுக்குப் பலவகைகளிலும் உதவி செய்து வருகிறார். இதைத் தவிர மேலும் பல சமூகநலப்பணி நிறுவனங்களின் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பங்காற்றி வருகிறார்.

    தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தொழுநோயாளர்களின் பிள்ளைகளுக்காக நடத்தப்படும் ஞானோதயா உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வியிலும், உணவுத் தேவைக்கும் உதவி வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பல அரசு தொழுநோய் மையங்களில் இருப்பவர்களுக்கு அடிப்படை வசதிக்குத் தேவையான பொருட்களை வழங்கியும், மருத்துவ உதவிகளிலும் பங்கேற்று வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி செல்ல மிதிவண்டிகள், காலணிகள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், உணவு விடுதிக்குத் தட்டுகள் போன்ற உதவிகளும், நோயாளிகளுக்கு இரத்தப் பரிசோதனை போன்ற மருத்துவ உதவிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு உதவிகள், மரம் நடுவோருக்கு மரக்கன்றுகள் வழங்கும் உதவிகள், தேவையுள்ளோருக்கு தொழிற்பயிற்சி உதவிகள் என விரியும் உதவிகளினால் சற்றொப்ப ஆயிரம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த உதவிகளையும், சுமார் ஐந்நூறு தொழு நோயாளிகள் மருத்துவ உதவிகளையும் பெற்று பயனடைந்துள்ளனர்.

    தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு தனது எதிர்காலத் திட்டங்களாக; கல்வி, வேலைவாய்ப்புக்கான தொழிற்பயிற்சி, குக்கிராமங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான உதவி, கிராமப்புற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் மருத்துவ உதவி, முதியோர் விடுதி, அனாதை குழந்தைகளுக்கான விடுதி எனத் தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. தி நியூ லைஃப் அறக்கட்டளை அமைப்பு  திரு. ஆர். பி. ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலில் மேலும் பல சமூகப் பணிகளில் பங்கேற்று தேவையுள்ளோர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட உதவ வேண்டும் என்று வாழ்த்தி அதன் நிர்வாகி திரு. ஆர். பி. ரமேஷ் அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்புக்கு :
    வலைத்தளம்: http://www.thenewlifetrust.org/
    சமூக வலைத்தளங்கள்
    https://www.facebook.com/TheNewLifeTrust/
    https://www.facebook.com/rbramesh.rb

    அறக்கட்டளையின் முகவரி:
    The New Life Trust – Regd
    Plot No.1,Akshaya Nagar,
    Lake Avenue 1st Street Extn,T.K.M.Road,
    Chengalpattu – 603002

    தொலைபேசி: +91 96598 47096
    மின்னஞ்சல்: thenewlifetrustcpl@gmail.com

    நன்கொடை வழங்க விரும்புவோருக்கான தகவல்:
    Bank : Karur Vysya Bank
    Branch : Chengalpattu
    Account Name : The New Life
    Account Number : 16321152804
    IFSC Code : KVBL0001632

    Share
  • நடைபாதையின் முடிவில் …

    – தேமொழி.

    நடைபாதையின் முடிவில் …

    கவிதை மூலம் – ஷெல் சில்வர்ஸ்டீன்
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

    நடைபாதையின் முடிவிலோர் இடமுண்டு
    அங்கே சாலை துவங்கும் முன்
    அங்கே வெண்மையாய் மென்மையாய் வளரும் புல்லுண்டு
    அங்கே ஒளிவீசும் செங்கதிரவனுண்டு
    அங்கே பறந்து ஓய்ந்த நிலாப்பறவை
    இளைப்பாறத் துளசியின் குளிர்க்காற்றுமுண்டு

    கரும்புகை வீசுமிடத்தை விட்டு நாம் சென்றுவிடுவோம்
    வளைந்து நெளிந்து செல்லும் இருண்ட சாலைகளை விட்டு
    தார்ச்சாலையின் குழிகளில் பூத்திருக்கும் மலர்களைவிட்டு
    காலால் நிலமளப்பதுபோல் மெதுவே மிகமெதுவே நடந்து
    வெள்ளைச் சுண்ணாம்பு அம்புக்குறிகளைத் தொடர்ந்து
    நடைபாதை முடியுமிடம் நோக்கி நாம் செல்வோம்

    ஆம் நிலமளப்பதுபோல் மெதுவே மிக மெதுவே நடப்போம்
    வெள்ளைச் சுண்ணாம்பு அம்புக்குறி காட்டுமிடம் போவோம்
    குழந்தைகளுக்காகக் குறிக்கப்பட்ட, குழந்தைகள் நன்கறியும்
    நடைபாதை முடியுமிடம் நோக்கி நாம் செல்வோம்

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    Shel-Silverstein
    Where The Sidewalk Ends

    – by Shel Silverstein

     

    There is a place where the sidewalk ends
    and before the street begins,
    and there the grass grows soft and white,
    and there the sun burns crimson bright,
    and there the moon-bird rests from his flight
    to cool in the peppermint wind.

    Let us leave this place where the smoke blows black
    and the dark street winds and bends.
    Past the pits where the asphalt flowers grow
    we shall walk with a walk that is measured and slow
    and watch where the chalk-white arrows go
    to the place where the sidewalk ends.

    Yes we’ll walk with a walk that is measured and slow,
    and we’ll go where the chalk-white arrows go,
    for the children, they mark, and the children, they know,
    the place where the sidewalk ends.

    Share
  • நான் யார்?

    – தேமொழி

    நான் யார்?

    கவிதை மூலம் – கார்ல் சாண்ட்பர்க்
    மொழிபெயர்ப்பு – தேமொழி

    விண்மீன்களை என்தலை மோதிடும்
    மலையுச்சியில் என் பாதங்கள் பதிந்திடும்
    பள்ளத்தாக்கிலும், எங்கெங்கும் நிறைந்திருக்கும்
    வாழ்வின் கரையிலும் என் விரல்நுனிகள் திளைத்திருக்கும்

    ஓசையுடன் நுரை பொங்கும் ஆதி அலைகளின்
    ஆழத்தில் விதியெனும் கூழாங்கற்களை
    என் கரங்களால் துழாவி நான் விளையாடுவேன்

    நான் பலமுறை நரகத்திற்குச் சென்று வந்திருக்கிறேன்
    நான் கடவுளுடன் பேசியுள்ளேன், சொர்க்கம் பற்றியும் நன்கறிவேன்
    நான் கொடியவரின் குருதியிலும் துணிவிலும் மூழ்கியிருக்கிறேன்
    ஆசையாய் கவர்ந்திழுக்கும் அழகினை நான் அறிவேன்
    தவிர்த்திடு என அறிவித்தால், அதனை எதிர்த்திடும்
    மனிதரின் அதிசயக் குணத்தையும் நான் அறிவேன்

    எனது பெயர் உண்மை, உலகில் யார் கட்டுப்பாட்டிலும்
    கட்டுண்டிருப்பதில்லை நான்

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    Carl Sandburg

    Who Am I?

    – Carl Sandburg

    My head knocks against the stars.
    My feet are on the hilltops.
    My finger-tips are in the valleys and shores of
    universal life.
    Down in the sounding foam of primal things I
    reach my hands and play with pebbles of
    destiny.
    I have been to hell and back many times.
    I know all about heaven, for I have talked with God.
    I dabble in the blood and guts of the terrible.
    I know the passionate seizure of beauty
    And the marvelous rebellion of man at all signs
    reading “Keep Off.”

    My name is Truth and I am the most elusive captive
    in the universe.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 23, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு கே. பிரித்திகா யாசினி அவர்கள்

    Prithika Yashini

     

    தொலைக்காட்சிகளின் பண்டிகைக்காலச் சிறப்புத் திரைப்பட வெளியீடு அறிவிப்பு போல அறிவிக்க வேண்டிய சாதனை திருமிகு பிரித்திகா யாசினி அவர்களுடையது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக, தமிழகத்தின் திருநங்கை பிரித்திகா யாசினி காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். தளரா முயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு, சட்டத்தின் துணையுடன் விடாது போராடி இந்தியவரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார் இவர். இந்த மாதம் (நவம்பர் 6) சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், பிரித்திகா யாசினி காவல்துறைப் பணிக்குத் தகுதியானவர் எனத் தீர்ப்பு வழங்கி, தமிழகக் காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அவரை அமர்த்துமாறு உத்தரவிட்டிருந்தது. சென்றவாரம் (நவம்பர் 16, 2015) தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட பட்டியலில் (Tamil Nadu Uniformed Services Recruitment Board – TNUSRB) நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, பிரித்திகா யாசினி அவர்களைக் காவல்துறை உதவி ஆய்வாளர் (Sub Inspector of Police) பணிக்குத் தேர்வுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடைகள் பல கடந்து வெற்றிவாகை சூடிய திருமிகு கே. பிரித்திகா யாசினி அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம்.

    Prithika Yashini - X

    Source: http://www.tnusrbexams.net/documents/opq_finalresults.pdf

    காவல்துறை அதிகாரியாகப் பணியாற்ற விரும்பி சிறுவயது முதல் கனவு கண்ட பிரித்திகா கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பிரித்திகா, வாடகை ஊர்தி ஓட்டும் தந்தைக்கும், தையல் தொழில் செய்யும் தாய்க்கும் மகனாகப் பிறந்த பிரதீப் குமார் ஆவார். பள்ளி நாட்களில் இருந்தே பெண்மை உணர்வு கொண்ட அவரது நடவடிக்கைகள் பள்ளியிலும், பிறகு கணினி சார்ந்த பட்டப்படிப்பு படித்த கல்லூரி நாட்களிலும் பலரது கேலிகுள்ளானது. இருபதாவது வயதில் தனது பெண்மை நிரம்பிய மனவுணர்வுகளின் வழிநடந்து அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பிய அவரது எண்ணத்தை அவரது பெற்றோர் ஆதரிக்கவில்லை. மாறாக, மந்திரிப்பது முதல் மனநல மருத்துவம் செய்வது வரை பல வழிகளிலும் அவரது எண்ணத்தைக் கைவிடச் செய்ய முயன்றனர். தனது பெற்றோர்களின் தடைகளினால் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார். மகளிர் விடுதியில் காவல் பணியாளர், ஹார்மோன் சிகிச்சை ஆலோசகர், தொண்டு நிறுவன ஊழியர் எனப் பற்பல பணிகளில் ஈடுபட்டதுடன், தமிழினப்படுகொலைக்கு எதிரான போராட்டம், திருநங்கை திருமணம், வேலை வாய்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றில் பங்கு பெற்று தன்னார்வப் பணிகளும் செய்தார். அறுவை சிகிச்சையும் செய்து கொண்டு பெண்ணாக மாறினார்.

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு இவர் விண்ணப்பித்தார். தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை இவர். விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினப் பிரிவு குறிப்பிடாத காரணத்தால் பெண் எனக் குறிப்பிட்டார். சான்றிதழ்கள் ஆண் பெயரில் இருக்க, பெண்பெயரில் இருந்த இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எழுத்துத் தேர்வுக்கு அனுமதி பெற்று தனது ஆவணங்களையும் சட்டப்படி பிரித்திகா என்ற பெயரில் மாற்றிக் கொண்டார். தேர்வறை நுழைவுச்சீட்டைக் கடைசி நேரத்தில் பெற்று, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதினார். கடந்த மே மாதம் நடந்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இந்த எழுத்துத் தேர்வில் 1078 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அத்துறையில் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கான 20% ஒதுக்கீட்டைக் கணக்கில் கொண்டால், பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கான சுமார் 850 பணியிடங்களுக்குத் தேர்வெழுதியவரின் எண்ணிக்கை இத்தேர்வுக்கான போட்டியின் தீவிரத்தைக் காட்டும்.

    இத்தேர்வில் வெற்றி பெற்றும் ஆகஸ்ட் மாதம் நடந்த உடல்தகுதித்திறன் போட்டிக்கு இவர் அழைக்கப்படாததால் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றத்தின் ஆணையில் தேர்வு நடக்கும் நாளுக்கு முதல் நாளன்று தேர்வில் பங்கு பெற வருமாறு அழைப்பைப் பெற்றார். ஆனால் மூன்றாம் பாலினத்திற்கென்ற தகுதி வரையறைகள் நிர்ணயிக்கப்படவில்லை. பல போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்றாலும் உடல் தகுதித் தேர்வின்ல் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாகக் கூறி பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது தேர்வாணையம். இதனால் போட்டியின் காணொளி ஆதாரங்களைக் கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். மனிதநேய அடிப்படையில் மீண்டும் ஒருமுறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அதில் வெற்றி பெற்றார்.

    வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் இவர் பணிக்குத் தகுதி பெற்றவர் எனத் தீர்ப்பு வழங்கினர். பணிக்குத் தேர்வு செய்ய காவல்துறைக்கு வழங்கிய ஆணையில், தேசிய சட்டப்பணி ஆணைக்குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசுப் பணிகளில் திருநங்கைகளை 3-வது இனம் என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று சென்ற ஆண்டே தீர்ப்பளித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரும் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்வாணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். பாலினப்பிறழ்வுடன் பிறந்த காரணத்தால் வளர்ந்த குடும்பம் முதற்கொண்டு, வாழும் சமூகம் வரை அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு, தகுதிக்கேற்ற வேலையோ தங்குமிடமோ கிடைப்பதில் சிரமங்கள் எதிர்கொண்டு மூன்றாம் பாலினர் பலர் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படுகிறது. சமூகம் இவர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற பிரித்திகா ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பார், அவர்களது நலத்திற்காகப் பாடுபடுவார் என்பது தீர்ப்பெழுதிய நீதிபதிகளின் கருத்தும் கூட.

    மத்திய அரசின் கணக்கெடுப்புப்படி சுமார் ஐந்து லட்சம் திருநங்கைகள் இந்தியாவில் உள்ளனர், அவர்கள் யாவருக்கும் பிரித்திகாவின் போராட்டமும் வெற்றியும் நல்ல வழிகாட்டுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை. திருநங்கைகளின் நல்வாழ்விற்காக உதவும் ‘சினேகிதி’ என்ற அரசுசாராத் தொண்டு நிறுவனம், பிரித்திகாவை நம்பிக்கை நட்சத்திரம் எனப் பாராட்டியுள்ளது. தனது கனவுகளைக் கைவிடாது, எஸ். ஐ வேலைக் கிடைக்காவிட்டால் ஐ.பி.எஸ். ஆகும் திட்டத்தில் இருந்தவர் பிரித்திகா. பிரித்திகாவை வல்லமையாளராக அறிவித்து வல்லமை இதழ் பெருமை கொள்கிறது.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    படம் உதவி: பிரித்திகாவின் ஃபேஸ்புக் பக்கம்
    https://www.facebook.com/prithikayashin

    தகவல் பெற்ற தளங்கள் பல, குறிப்பாக:
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1387830
    http://www.bbc.com/tamil/india/2015/11/151105_transgenderpolice
    https://ta.wikipedia.org/s/53up
    http://www.tnusrbexams.net/
    http://www.tnusrbexams.net/documents/opq_finalresults.pdf

    Share
  • கனவிலோர் கனவு

    – தேமொழி

     

    கனவிலோர் கனவு

    கவிதை மூலம் – எட்கர் ஆலன் போ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

    நெற்றியிலிடும் முத்தத்தை ஏற்றுக்கொள்
    உன்னைப் பிரியும் இவ்வேளையில்
    நானும் ஒப்புக்கொள்கிறேன்
    நீ சொன்னதில் தவறில்லையென
    எனது வாழ்வே ஒரு கனவுதான்
    என் நம்பிக்கையும் பறந்தோடிவிட்டால்
    ஓரிரவிலோ, ஒரு நாளிலோ
    பார்வையொன்றிலோ, அது இல்லாமலோ
    அதனால் ஏதேனும் குறைவா?
    நாம் பார்த்ததும், பார்ப்பதெல்லாம்
    வெறும் கனவில் ஓர் கனவல்லவா?

    ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகள்
    மோதும் கரையில் நான் நிற்கையில்
    என் கைப்பிடியில் இருக்கும்
    பொன் மணல் துகள்களின்
    அளவோ மிகவும் கொஞ்சம்,
    அதுவும் நான் அழ அழ என்
    விரலிடுக்கின் வழி நழுவுகிறதே
    கடவுளே! என்னால் அவற்றை
    இறுகப் பிடிக்க முடியாதா?
    கடவுளே! இரக்கமற்ற அலையிடமிருந்து
    ஒன்றையேனும் என்னால் காப்பாற்ற இயலாதா?
    நாம் பார்த்ததும் பார்ப்பதெல்லாம்
    வெறும் கனவில் ஓர் கனவுதானா?
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    Edgar-Allan-Poe-230x300

    A Dream Within a Dream

    – Edgar Allan Poe

    Take this kiss upon the brow!
    And, in parting from you now,
    Thus much let me avow—
    You are not wrong, who deem
    That my days have been a dream;
    Yet if hope has flown away
    In a night, or in a day,
    In a vision, or in none,
    Is it therefore the less gone?
    All that we see or seem
    Is but a dream within a dream.

    I stand amid the roar
    Of a surf-tormented shore,
    And I hold within my hand
    Grains of the golden sand—
    How few! yet how they creep
    Through my fingers to the deep,
    While I weep- while I weep!
    O God! can I not grasp
    Them with a tighter clasp?
    O God! can I not save
    One from the pitiless wave?
    Is all that we see or seem
    But a dream within a dream?

     

    Edgar Allan Poe - A Dream Within A Dream

    Share
  • அவள் அழும்பொழுது …

    – தேமொழி.

    அவள் அழும்பொழுது …

    கவிதை மூலம் – ஷெல் சில்வர்ஸ்டீன்
    மொழிபெயர்ப்பு – தேமொழி

    யாருமே அறிவதில்லை என்னவளின் தனிமையை
    யாருக்கும் புரிவதில்லை என்னவளின் ஆழ்மனதில்
    உறையும் அச்சங்களும் கனவுகளும் என்னவென்று
    அவளது அன்பிலும் சிரிப்பிலும் பங்கு கொண்டோருண்டு
    ஆனால் அவளது கண்ணீரை அறிந்தவரில்லை… என்னைத்தவிர
    யாரும் அவளது துயரத்தைப் புரிந்தவரில்லை

    அவள் அழும்பொழுது வானில் பறந்து
    ஒளி வீசும் சூரியனைக் கொணர்ந்து
    அவளின் மனத் துயரைக் களைந்து
    அவளது வாழ்வில் ஒளியேற்ற ஆசைவரும்
    அவளின் துயர் நீக்கும் எண்ணம் வரும்

    அதிகாலையின் இளம் பனிச்சாரலில்
    வெறும் பாதத்துடன் உலவிடும் நேரம்
    அவளது விழிகளில் சென்ற நாட்களின்
    பொன்னான கனவுகள் மின்னிடும்
    அந்திமாலை நேரமோ சோகமது கவிந்திட
    அச்சம் கொண்டே அழுவாள் … எனக்காக
    அச்சம் கொண்டே அவள் அழுவாள்

    உன்னறையில் உனதருகே உன்விளக்கொளியில்
    அவளுடன் நீ கிசுகிசுத்துப் பேசியிருந்தாலும் சரி
    ரகசியப் புன்னகையைப் பகிர்ந்திருந்தாலும் சரி
    ஆனால் அவளது சோகத்தில் என்னிடம் அனுப்பிவிடு
    அவள் அழும்பொழுது நான் அவளுக்குத் தேவை

    அவள் அழும்பொழுது வானில் பறந்து
    ஒளி வீசும் சூரியனைக் கொணர்வேன்
    ஆகையால் அழும்பொழுது என்னிடம் அழைத்துவா
    என்னவள் அழும்பொழுது நான் அவளுக்குத் தேவை

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    Shel-Silverstein

    When She Cries

    – Shel Silverstein

    No one knows my lady when she’s lonely
    No one sees the fantasies and fears my lady hides
    There are those who’ve shared her love and laughter
    But no one hears my lady when she cries…but me
    No one hears my lady when she cries

    And when she cries she makes you wanna run
    And chase the sun and bring it back
    To brighten up a corner of her dark and troubled skies
    When she cries

    She walks barefoot through the misty mornin’
    Dreams of golden yesterdays reflectin’ in her eyes
    But soon the evenin’ shadows crowd around her
    Frightening my lady till she cries…for me
    Frightening my lady, till she cries

    You may have seen her lyin’ in your lamplight
    And if you’ve heard her whispered words, it comes as no surprise
    So be the one she shares her secret smiles with
    But send me back my lady when she cries…for me
    My lady’s gonna need me when she cries

    And when she cries she makes you wanna run
    And chase the sun and bring it back
    So bring me back my lady when she cries… For me
    ‘Cause my lady’s gonna need me when she cries

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 16, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு “நீச்சல்காரன்” ராஜாராமன் அவர்கள்

    S. Raja Raman1

    தமிழ் இணையக் கல்விக்கழகமும், தமிழ் விக்கிப்பீடியாவும் கூட்டு முயற்சியாகத் தமிழ் விக்கிபீடியாவில் ‘தமிழக ஊராட்சிகள்’ பற்றிய கட்டுரைகளைச் சேர்த்து வரும்பணி நடந்து வருகிறது. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் தானியக்கமாக விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டுள்ளதுடன் (பார்க்க: https://ta.wikipedia.org/s/4u75) இன்னும் ஓரிரு வாரங்களில் இப்பணி நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியில் முக்கியப் பங்கேற்று செயலாற்றி வருபவர் “நீச்சல்காரன்” என்னும் திருவாளர் சே. ராஜாராமன் அவர்கள். கணித்தமிழுக்காக அவர் தொடர்ந்து ஆற்றிவரும் தன்னார்வப்பணிகளைப் போற்றும் விதமாக நீச்சல்காரன் ராஜாராமன் அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்து பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    நீச்சல்காரன் வல்லமையின் வாசகர்களுக்கு அறிமுகமானவரே. இவரது, “கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?“, “விளம்பரங்களுக்கு விலை போகிறோம்” என்ற கட்டுரைகளும், ‘மறுஜென்மம்‘ என்ற சிறுகதையும் வல்லமை மின்னிதழில் வெளிவந்துள்ளன. திண்ணை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்துக் கமலம் போன்ற மற்ற பிற இணைய இதழ்களிலும்; விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், தமிழ் கம்ப்யூட்டர், அருவி காலாண்டிதழ் போன்ற அச்சுப் பதிப்பில் வெளியாகும் இதழ்களிலும் எழுதியுள்ளார்.

    S. Raja Raman

    நீச்சல்காரன் பல்துறையில் திறமைபெற்றவர் என்பதுடன் அவரது சமூக அக்கறை என்ற பண்பும் சேர்ந்ததால், தனது திறமைகளை ஆக்கபூர்வமாகத் தன்னார்வப் பணிகளில் செலுத்திவருகிறார். குறிப்பாகக் கணித்தமிழ் சார்ந்த பங்களிப்பினால் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கு உதவும் வகையில் ‘நாவி’ என்ற சந்திப்பிழை திருத்தியையும் (http://dev.neechalkaran.com/p/naavi.html), ‘வாணி’ என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தியையும் (http://vaani.neechalkaran.com/) உருவாக்கி தனது நீச்சல்காரன் இணையத்தளத்தில் அனைவரும் விலையின்றிப் பயன்பெறும் வண்ணம் வெளியிட்டுள்ளார். ஆங்கில எழுத்தின் உதவியுடன் ஒலிபெயர்ப்பில் தமிழை எழுதிப் பழகிய இக்கால எழுத்தாளர்களுக்கு நீச்சல்காரன் உருவாக்கிய பிழைதிருத்திகள் உதவிகரமானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஒற்றுப்பிழைகளுடன் எழுதும் பொழுது வலி மிகும், வலி மிகா இடங்களைப் பற்றிய பரிந்துரைகளையும், பிழைகளைச் சுட்டிகாட்டியும் உதவுகிறது நாவி-சந்திப்பிழை திருத்தி. அவசரகதியில் தட்டச்சும் பொழுது அதிகத் தட்டச்சுப் பிழைகளுடன் எழுதுபவர்களுக்கும், பிழைதிருத்துகையில் மேலோட்டமாகப் படித்துச் செல்லும் கூரிய பார்வை கொண்டிராதவருக்கும் வாணி – தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இன்றியமையாத மென்பொருள். சந்திப்பிழை திருத்தியைப் பயன்படுத்திப் பார்த்தவரும், விக்கிபீடியாவில் அதிகக் கட்டுரைகளைப் பதிவிட்டவருமான முனைவர் செங்கை பொதுவன் அவர்கள் இதனை எழுத்தாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

    S. Raja Raman3

    கணினி சார்ந்த ஐயங்களைத் தீர்க்க உதவும் தகவல்களும் விளக்கங்களும் கொண்ட “மானிட்டர் உலகம்” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார் நீச்சல்காரன். ‘எதிர்நீச்சல்‘, ‘தமிழ்ப்புள்ளி  என்ற இணையதளங்களில், இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் பல பதிவு செய்து வருகிறார்.

    விக்கிபீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டுரைகள் எழுதிவரும் நீச்சல்காரன், விக்கிபீடியாவின் தமிழ் அகராதியான விக்சனரியின் சொற்தொகுப்பிலும் உள்ளிடலிலும் பங்கேற்றுள்ளார். விக்கியில் கட்டுரைகளை விரிவாகப் படிப்பதற்கு வழிசெய்யும் பல்வேறு இணைப்புகளையும் சேர்க்கும் ஒரு தானியங்கியையும் இவர் வடிவமைத்துள்ளார், தமிழ் விக்கி பீடியாவில் இயங்கிவரும் முக்கியத் தானியங்கி இது.

    நீச்சல்பாட் -விக்கிப்பீடியா தொகுக்கும் தானியங்கி  
    தமிழ் அகராதித் தொகுப்பு
    இணையப்படிப்பகம்
    வலைப்பூ திரட்டி
    தமிழ் டிவிட்/கீச்சு திரட்டி  
    கோலசுரபி
    ஆடுபுலி ஆட்டம்
    தமிழ்ச் சொற்புதிர்  
    தமிழ் மாயயெழுத்து வழங்கி
    போன்ற மென்பொருள் செயலிகளையும் உருவாக்கி தமிழ் இணையப் பயனர்கள் பயன்பெற அளித்துள்ளார்.

    தமிழ் மாயயெழுத்து வழங்கியில் உருவாக்கிய வல்லமையாளர் என்ற சொல்லின் தோற்றம் கீழே …

    ──────o───────────────────────o─────╔╦╗──o───────o───────────o──
    ╔═╗║╔═╗║╔═╗║╔═╦╦╗║╔╗║║║╔╦╔═╦╦╔╦────╔╬╚╝─╔╦──╔╦─╔═╗║─╔╦─╔╦╔╦╔═╦╦╦
    ╠╗║║║─║║║─║║╠╗║║║║║║║║║║║╠╗║║║║────║╬╗─╔╬╬═╔╬╬═║─║║╔╬╬╗║║║║╠╗║║║
    ╚╝╚╝╚╝╚╝╚╝╚╝╚╝╚╝║╚╩╝╚╩╝║║╚╝║║║║────║║║─╚═╝─╚═╝─╚╝╚╝╚═╝╝║║║║╚╝╚╝║
    ──────────────────────────────╝─────╔╝────────────────────╝─────

    இருபத்தெட்டு வயதாகும் நீச்சல்காரன் மதுரை யாதவர் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர். புனேவில் சிறிதுகாலம் பணியாற்றிய நீச்சல்காரன் தற்பொழுது சென்னையின் புகழ்பெற்ற பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமொன்றில் பிணையக் கட்டுமானத் துறையில் (network-infrastructure) பணிபுரிகிறார். தனது ஓய்வு நேரத்தில் இணையத் தமிழ் தொடர்பான தன்னார்வப்பணிகளைச் செய்து வருகிறார்.

    ஆங்கிலம் தவிர்த்த எந்தப் பிற மொழியின் கருவிகளுக்கும் வணிக அளவில் சந்தை இருக்கப்போவதில்லை, அதனால் கணித்தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்களின் வளர்ச்சியைத் தன்னார்வலர்கள், மொழி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசு மட்டுமே முன்னெடுக்க முடியும் என்று கருதும் நீச்சல்காரன், மொழி சார்ந்த நிறுவனம் மற்றும் அரசு ஆகியவற்றில் அவர் அங்கம் வகிப்பதில்லை என்பதால் தன்னார்வலராகத் தனது முயற்சிகளைத் தொடர விரும்புகிறார்.

    தமிழ் இலக்கணப் பிழை திருத்தியை உருவாக்கும் திட்டம், பிற இந்தியமொழிகளின் வரிவடிங்களையும் தமிழுக்கு மாற்றும் ஒரு மென்செயலியை உருவாக்கும் திட்டம், மொழிமாற்றி, அருஞ்சொல் பொருள்மாற்றி, எதிர்ச்சொல் மாற்றி என வேறு சில திட்டங்களையும் செயலாக்க விரும்பும் நீச்சல்காரன் ராஜாராமனின் திட்டங்கள் வெற்றி பெற வல்லமை குழுவினரின் வாழ்த்துகளையும், அவரது கணித்தமிழ் தன்னார்வப் பணிகளுக்குப் பாராட்டையும் தெரிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    படங்கள் உதவி:
    ஆங்கில மற்றும் தமிழ் இந்து நாளிதழ்

    தகவல்கள் பெற்ற இடங்கள்:
    [1] தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!
    http://tamil.thehindu.com/society/lifestyle/தப்பில்லாமல்-தமிழ்-எழுதலாம்-தமிழா/article7565616.ece

    [2] நெட்டெழுத்து: இணைய ஊருக்கு உழைக்கும் நீச்சல்காரன்!
    http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டெழுத்து-இணைய-ஊருக்கு-உழைக்கும்-நீச்சல்காரன்/article7184833.ece

    [3] Save yourself from sandhi errors – The Hindu
    http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/save-yourself-from-sandhi-errors/article5864196.ece

    [4] தமிழ் நீச்சலில் ஈடுபட்டு பல்வேறு தானியங்கிக் கருவிகளை உருவாகிவரும் நீச்சல்காரன் – ஜோதிஜி, திருப்பூர், வலைத்தமிழ்
    http://www.valaitamil.com/neechalkaaran-involved-in-technology-contribution_12048.html

    தொடர்புகொள்ள:
    neechalkaran@gmail.com
    http://neechalkaran.com

    https://www.facebook.com/neechalkaran
    https://plus.google.com/108891151460637064235/
    https://www.youtube.com/user/neechalkaran
    http://neechalkaran.blogspot.com/
    http://www.neechalkaran.com/p/author.html

    வலைப்பூவில்:
    மணல்வீடு – http://arts.neechalkaran.com/
    எதிர்நீச்சல் – http://tech.neechalkaran.com/
    முத்துக்குளியல் – http://opinion.neechalkaran.com/

    Share
  • தனிமையிலே …

    – தேமொழி

    தனிமையிலே …

    கவிதை மூலம் – எட்கர் ஆலன் போ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

    நினைவு தெரிந்த நாள்முதலாக
    நான் வாழவில்லை பிறரைப் போல
    எனக்கு வாழ்க்கையுமில்லை பலரைப் போல
    என் ஆசைகளின் நீரோட்டம்
    தோன்றிய நீரோடையும் வேறுபட்டது
    என்னை வருத்தும் துயரங்களின்
    தோற்றமும் முற்றிலும் வேறுபட்டது
    எனது இதயத்தை மீட்டிடும் இன்ப
    இசையின் ராகமும் வேறுபட்டது
    அனைத்தையுமே நான் நேசித்தேன்
    நேசித்தேன் நான் தன்னந்தனியாகவே!
    என் சிறுவயதிலிருந்தே, புயல்வீசும்
    என் வாழ்வின் அந்த விடியல் முதலே
    என் வாழ்வின் ஏற்றத்திலும் தாழ்விலும்
    என்னைக் குழப்புமிந்தப் புரியாத புதிர்
    காட்டாற்று வெள்ளமானாலும்
    கவின் மிகு நீரூற்றானாலும்
    செந்நிற மலைமுகட்டிலும்
    பொன்னிற ஒளிவீசும்
    கூதிர்காலக் கதிரவனிலும்
    என்னைக் கடந்து செல்லும் புயலிலும்
    அதன் மின்னலிலும் இடியோசையிலும்
    தெளிந்த நீலவானில் திரண்டிடும்
    உருமாறிடும் மழைமேகத்திலும்
    நான் காண்பதென்னவோ
    அச்சமூட்டும் பேயுரு மட்டுமே!

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    Edgar Allan Poe

    Alone

    – Edgar Allan Poe

     

    From childhood’s hour I have not been
    As others were; I have not seen
    As others saw; I could not bring
    My passions from a common spring.
    From the same source I have not taken
    My sorrow; I could not awaken
    My heart to joy at the same tone;
    And all I loved, I loved alone.
    Then- in my childhood, in the dawn
    Of a most stormy life- was drawn
    From every depth of good and ill
    The mystery which binds me still:
    From the torrent, or the fountain,
    From the red cliff of the mountain,
    From the sun that round me rolled
    In its autumn tint of gold,
    From the lightning in the sky
    As it passed me flying by,
    From the thunder and the storm,
    And the cloud that took the form
    (When the rest of Heaven was blue)
    Of a demon in my view.

     

     

    Share
  • தனிமையிலே … – கவிதை

    – தேமொழி

    தனிமையிலே …

    Maya-Angelou

    கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

    வாழ்வின் உண்மையை உணர்ந்திராத
    எனது உறக்கமற்ற நேற்றிரவில்
    என்னில் எழுந்தது ஓர் சிந்தனை …
    எங்கே தேடுவேன்?
    என் ஆன்மாவிற்கான புகலிடத்தை,
    எங்கே தண்ணீரே தாகத்துடன் நீர் தேடாத,
    ரொட்டியும் கல்லாகிப் போகாத இடத்தை
    எங்கே நான் காண்பேன்?
    எனக்கு விடையொன்று கிடைத்தது,
    அதுவும் சரியென்று தெரிந்தது,
    அது… யாரும், எவரும் இங்கு
    தனிமையில் வாழ முடியாது.

    தனியே தன்னந்தனியே
    யாரும், எவரும் இங்கு
    தனித்து வாழ்ந்திட இயலாது.

    செல்வந்தரும் சிலர் இங்குள்ளனர்
    மகிழ்ச்சியை சிறிதும் வாங்கமுடியாத
    பயனற்ற பணக்குவியலுடன்,
    ஊளையிட்டே  எங்கும் அலையும்
    மோகினிப்பேய்களான மனைவியருடன்,
    உள்ளத்தின் சோகமதை கீதமாக  இசைக்கும்
    துயரத்தில் வாடும் பிள்ளைகளுடன்,
    திறமையான அவர்களது
    மருத்துவர்களாலும் குணப்படுத்த முடியாத
    கல்லாய்ப்போன மனதுடன்
    ஆனால் … யாரும், எவரும் இங்கு
    தனிமையில் வாழ முடியாது.

    தனியே தன்னந்தனியே
    யாரும், எவரும் இங்கு
    தனித்து வாழ்ந்திட இயலாது.

    சொல்வதைக் கவனமாகக்
    கேட்பீர்கள் என்றால்
    சொல்லிடுவேன் அறிந்து கொண்டதை
    நானும் உங்களுக்கு.
    புயல் மேகங்கள் சூழ்கின்றன
    பெருங்காற்றும் வீசத் துவங்கும்
    மனிதஇனம் துயரத்தில்
    வாடுகிறது
    அவர்தம் புலம்பலும்
    கேட்கிறது
    ஏனெனில் … யாரும், எவரும் இங்கு
    தனிமையில் வாழ முடியாது.

    தனியே தன்னந்தனியே
    யாரும், எவரும் இங்கு
    தனித்து வாழ்ந்திட இயலாது.

    ______________________________

    Alone – Poem by Maya Angelo
    ______________________________
    Lying, thinking
    Last night
    How to find my soul a home
    Where water is not thirsty
    And bread loaf is not stone
    I came up with one thing
    And I don’t believe I’m wrong
    That nobody,
    But nobody
    Can make it out here alone.

    Alone, all alone
    Nobody, but nobody
    Can make it out here alone.

    There are some millionaires
    With money they can’t use
    Their wives run round like banshees
    Their children sing the blues
    They’ve got expensive doctors
    To cure their hearts of stone.
    But nobody
    No, nobody
    Can make it out here alone.

    Alone, all alone
    Nobody, but nobody
    Can make it out here alone.

    Now if you listen closely
    I’ll tell you what I know
    Storm clouds are gathering
    The wind is gonna blow
    The race of man is suffering
    And I can hear the moan,
    ‘Cause nobody,
    But nobody
    Can make it out here alone.

    Alone, all alone
    Nobody, but nobody
    Can make it out here alone.

    Alone - Poem by Maya Angelou

    மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
    நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
    தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 9, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு பேராசிரியர்  முனைவர் நா. கண்ணன் அவர்கள்

    kannan

    இந்தியாவின் கொரிய துணைத் தூதரகமும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து “இந்திய – கொரிய கலாச்சார பரிமாற்றம்” என்ற தலைப்பிலான உலகளாவிய ஆய்வுக் கருத்தரங்கை சென்னையில் சென்றவாரம் (நவம்பர் 6, 2015 அன்று) நடத்தின. இக்கருத்தரங்கு நடைபெறத் துவக்கம் முதல் ஒரு வினையூக்கியாக இருந்தவர் பேராசிரியர் முனைவர் நா. கண்ணன் அவர்கள். அக்கருத்தரங்கில் “In search of an ancient relationship between Tamilnadu, India and Kaya Kingdom, Korea: Discovery, research, hopes and questions” என்ற தலைப்பில், “தமிழ் கொரியா ஆகிய இருமொழிகளுக்குமான உறவிற்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொரியாவின் அரசியாக இருந்தவர், இந்தியாவில் இருந்து சென்று கொரிய அரசரை மணந்து கொண்ட, பாண்டியநாட்டு இளவரசியான ஒரு தமிழ்மகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளது” என்ற கருதுகோளில் ஆய்வுரை வழங்கியுள்ளார். இருமொழிகளுக்கும் உள்ள உறவை ஆராயும் அவரது இத்தகைய ஆய்வு முயற்சியைப் பாராட்டும் விதமாக மலேசிய புத்ரா பலகலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் நா. கண்ணன் அவர்களை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டி மகிழ்கிறோம்.

    kannan3

    தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவரும், நிறுவனர்களில் ஒருவருமான முனைவர் நா. கண்ணன் (நாராயணன் கண்ணன்) அவர்கள், அந்த அறக்கட்டளையின் சார்பில் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளார். முனைவர் நா. கண்ணன் ஒரு அறிவியல் ஆய்வாளர். மதுரைப் பல்கலைக் கழகத்திலும் (Madurai Kamaraj University, India), ஜப்பானிலுள்ள எஹிமே பல்கலைக் கழகத்திலும் ( Ehime University, Japan) வேதியியல் ஆய்வில் ஈடுபட்டு இருமுறை முனைவர் பட்டங்கள் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் ஆகியவற்றில் கொண்ட ஆர்வம் காரணமாக சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துவதால் உயிரினங்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய ஆய்வுகளை நடத்தி வருகிறார். ஜெர்மனியின் ‘கீல்’ பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராகவும், கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றிய முனைவர் நா. கண்ணன், தற்பொழுது மலேசியாவின் புத்ரா பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

    தமிழ் ஆர்வலரான முனைவர் நா. கண்ணன், தான் நிறுவிய தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) அமைப்பின் மூலம் தமிழ் மரபு சார் இலக்கிய, வரலாற்று, கலை வடிவங்களை எண்ணிம வடிவில் பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொண்ட முன்னோடிகளில் ஒருவர். மதுரைத்திட்டத்தில் ஐரோப்பிய ஒருங்கமைப்பாளராகவும், உத்தமம் அமைப்பின் (உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் – உத்தமம்/ International Forum for Information Technology in Tamil – INFITT) தொன்மை உறுப்பினராக, அதன் ஐரோப்பிய கிளையின் தலைவராகவும் செயல்பட்டு இருக்கிறார்.

    கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல் என படைப்புகள் பல உருவாக்கி தமிழிலக்கியப் பங்காற்றிய முனைவர் நா. கண்ணன் அவர்களது படைப்புகள் கணையாழி, சுபமங்களா, இந்தியா டுடே, குங்குமம் மற்றும் புகலிடப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. திசைகள் மின்னிதழ், இ-சங்கமம், சிஃபி டாட் காம் ஆகிய இதழ்களில் சில காலம் ஆசிரியர் குழுவில் பங்கேற்று தனது பங்களிப்பை அளித்துள்ளார். ‘உதிர் இலை காலம்’, ‘நிழல்வெளி மாந்தர்’ ஆகிய சிறுகதை நூல்களையும், ‘விலை போகும் நினைவுகள்’ என்ற குறும்புதினத்தையும், ‘பாசுர மடல்கள்’ என்ற படைப்புக்களை குறுந்தகடு வெளியீடாகவும் வெளியிட்டுள்ளார்.

    கொரியாவில் பணிபுரிந்த காலத்தில் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டுணர்ந்து மேலும் ஆராயத் தலைப்பட்டார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பொது ஆண்டு 48 ஆண்டில், கொரியா நாட்டின் பண்டைக்கால ‘கயா’ அரசின் அரசர் ‘சுரோ’ (King Suro of Geumgwan Gaya) என்பவர், ‘ஹூவாங் ஹூ’ (Heo Hwang-ok) என்ற இளவரசியை மணந்தார். இந்த இளவரசி அரசரை மணம் புரிவதற்காக கப்பலில் வந்தவர். இவரது பெற்றோரின் கனவில் இளவரசியை அரசர் சுரோவுக்கு மணமுடிக்குமாறு அறிவித்த கடவுளின் கட்டளையை ஏற்று, அரசகுடும்பம் தனது இளவரசியைக் கப்பலில் ஏற்றி அனுப்பியது. இது போன்றே தனது மனைவி கப்பலில் வருவாள் என்ற தெய்வவாக்கு கிடைத்த அரசர் சுரோவும் கப்பலில் வந்த இளவரசி கூறியதை ஏற்று அவளை மணமுடித்தார் என்பதை பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘சம்குக்யுசா’ (Samguk Yusa) என்ற கொரிய நூல் கூறுகிறது. மேலும், அரசர் சுரோவை மணந்த இளவரசியே கயா அரசின் முதல் அரசி, இவர் தொலைதூரத்தில் இருந்து வந்தவர் என்றும், தனது கப்பலில் யாழ், தேயிலைச் செடி, புயலில் கப்பலை நிலைப் படுத்தும் கல்லடுக்குகள் ஆகியவற்றுடன், இரட்டை மீன் சின்னத்தைக் கொண்டுவந்தார் என்பதும், ஆயுக்த நாட்டின் அரசர் இளவரசியின் தந்தை என்று இளவரசி கூறினார் என்பதும் அந்த நூல் தரும் தகவல். இவரது பெயரின் பொருளான ‘மஞ்சள் நிற ரத்தினம்’ (yellow jade) என்பதைத் தனது கொரிய மொழியில் ஹூவாங் ஹூ என மொழிபெயர்த்து அரசர் அழைத்தார் என்பதும் அந்த நூல் தரும் தகவல்.

    நூல் குறிப்பிடும் இளவரசியின் தாயகத்தைத் தேட முற்பட்ட கொரிய மக்கள், ‘ஆயுக்தா’ என்பதனை இந்தியாவின் அயோத்தியுடனும் தொடர்புப்படுத்தி, அங்குக் காணப்படும் இரட்டை மீன் இதை உறுதிப்படுத்துவதாகவும் எண்ணி இந்தியா கொரியா என இருநாடுகளின் நல்லுறவைப் பேண நடவடிக்கைகள் எடுத்தனர். ஆனால், நூற்றுக்கணக்கான தமிழ் சொற்கள் அதே பொருளில் கொரிய மொழியில் உள்ளதாலும்; உழவு, நெசவு, மற்ற பிற அன்றாட நிகழ்வுகளில் காணும் ஒருசில கலாச்சார ஒற்றுமைகள் தமிழ்ப் பண்பாட்டை ஒத்திருப்பதாலும்; இரட்டை மீன் சின்னம் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய பாண்டிய மன்னர்களின் முத்திரையைக் காட்டுவதாலும் இந்த இளவரசி பாண்டிய இளவரசியாகவும், அவரது பெயர் ‘செம்பவளம்’ என்பதாக இருக்கக்கூடும் என்பது முனைவர் நா. கண்ணன் அவர்களது கருதுகோள். தமிழ்மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குழுமத்தில் இவரது கருதுகோள் விவாதங்களுக்கு உட்பட்டு, அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் உதவியுடன், இந்தியாவின் கொரிய துணைத் தூதரகமும் இணைந்து “இந்திய – கொரிய கலாச்சார பரிமாற்றம்” என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்யும் நிலையை எட்டியது.

    kannan5

    சென்னைக்கான கொரிய துணைத் தூதர் திரு. கிம் கியாங்சூ அவர்கள் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் தொன்று தொட்டு உள்ள உறவை ஆய்வு செய்யவும், மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தக் கருத்தரங்கம் உதவும், இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார உறவு இது போன்ற ஆய்வுக்கருத்தரங்குகள் மூலம் மேலும் வலுவுறும் என்ற கருத்தினை கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். இத்தகைய ஆய்வு முயற்சியை முன்னெடுத்த முனைவர் நா. கண்ணன் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி, அவரது கருதுகோள் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டு இருநாடுகளின்  நல்லுறவை வளர்க்க உதவ வேண்டும் என்று வல்லமை இதழின் குழுவினர் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    செய்தி உதவி:
    http://www.dinamani.com/tamilnadu/2015/11/06/திருக்குறள்-கொரிய-மொழியில்-/article3116563.ece

    தொடர்புக்கு:
    Prof. Dr. Narayanan Kannan
    Putra University, Malaysia, Putrajaya
    http://profile.upm.edu.my/drnkannan
    Tel: +49 431 65709280
    E-Mail: nkannan@gmail.com

    சமூக வலைத்தளங்களில்:
    https://plus.google.com/102872541469969435096/
    https://www.facebook.com/narayanan.kannan.37

    https://scholar.google.com/citations?user=TlpVWukAAAAJ&hl=en
    http://www.researchgate.net/profile/Narayanan_Kannan3
    http://www.tamilheritage.org/old/ec/ec.html#_kannan

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு

     

    தொன்மையின் மாண்ட துணிவொன்றும் இல்லாதார்
    நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் – இன்னொலிநீர்
    கன்மேல் இலங்கு மலைநாட! மாக்காய்த்துத்
    தன்மேல் குணில்கொள்ளு மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
    நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர்
    கல் மேல் இலங்கும் மலை நாட!-மாக் காய்த்துத்
    தன்மேல் குணில் கொள்ளுமாறு.

    பொருள் விளக்கம்:
    பழமையான நூல்பல கற்பதால் மேன்மைதரும் துணிவு ஒன்றும் பெறாதவர், நன்மை தரும் வகையில் மாண்பு கொண்ட செல்வம் பெறுவாரெனில்; இனிமையான ஓசையுடன் நீரானது கற்பாறைகள் மேல் பாயும் அருவிகள் கொண்ட மலைநாட்டைச் சேர்ந்தவரே, (அவரது நிலையானது) மாமரம் செழித்து காய்கள் பல கொண்டதால் தன்மேல் கல்லெறி படுவது போன்ற நிலையாக அமைந்துவிடும்.

    பழமொழி சொல்லும் பாடம்: கல்வியறிவு பெறாத ஒருவர் முயன்று செல்வம் பல சேர்த்தாலும், அதனைக் காப்பாற்றும் வழி அறியாததால், பிறர் அவரது செல்வதை ஏமாற்றி பறித்துக் கொள்ளும் நிலையில் தள்ளப்படுவார் என்றும் பொருள் கொள்ளலாம். கல்வியறிவற்ற காரணத்தால், தான் பெற்ற செல்வதைத் தேவையுள்ளவர் நன்மை பெரும் வகையில் பயன்படுத்தத் தெரியாத, ஈகையின் மேன்மையை உணராத ஒருவரின் செல்வம், அவருக்கும் பலனின்றி பிறகு தீயார் கொள்ளை கொள்ளும் நிலையை அடையும் என்றும் பொருள் கொள்ளலாம்.

    எனவே பொதுவாகக் கொள்வோமானால், அறிவின்மை காரணமாக செல்வதை எவ்வாறு பாதுகாப்பது என்றோ; அல்லது எவ்வாறு தனக்கும் பிறருக்கும் பயனளிக்கும் வகையில் நன்முறையில் செலவழிப்பது என்றோ அறியாத ஒருவரின் செல்வம், அவருக்குப் பலன் தராமல் தீயவர் கைப்பற்றும் நிலையை அடையும். அறிவில்லாதவர் பெற்ற செல்வமானது, காய்த்த மரம் கல்லடி பட்டு துன்பம் பெறுவது போல அவருக்கும் அவரது பொருளுக்கும் துன்பத்தையே விளைவிக்கும், இக்கருத்தைக் குறள்,

    நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
    கல்லார்கண் பட்ட திரு. (குறள்: 408)

    அறிவற்றோர் பெற்ற செல்வம், கற்றறிந்த நல்லவர் ஒருவரை வருத்தும் வறுமையை விடவும் பெரிதும் துன்பம் தருவதாகும் என்று கூறுகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: இறந்தது பேர்த்தறிவார் இல்

     

    மறந்தானுந் தாமுடைய தாம்போற்றி னல்லாற்
    சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்
    கறங்குநீர் காலலைக்குங் கானலஞ் சேர்ப்ப!
    விறந்தது பேர்த்தறிவா ரில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    மறந்தானும், தாம் உடைய தாம் போற்றின் அல்லால்,
    சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;-
    கறங்கு நீர் கால் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!-
    இறந்தது பேர்த்து அறிவார் இல்.

    பொருள் விளக்கம்:
    மறந்தும், (அறிவுடையவர்) தனது பொருளை தானே போற்றிப் பாதுகாப்பதைச் செய்யாமல், சிறந்த உறவினர் இவரென்று தகுதியற்ற ஒருவரிடம் ஒப்படைக்க மாட்டார். ஒலிக்கும் அலைகள் கொண்ட நீர்நிலைகளும், அதன்கண் அழகிய சோலைகளும் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, கைநீங்கிய பொருளை மீட்டுத் தருவதை அறிந்தவர் இல்லை.

    பழமொழி சொல்லும் பாடம்: நம்பிக்கைக்குரியவர் இவரென்ற எண்ணத்தில் பிறரிடம் தமது பொருளை ஒப்படைக்காமல் தாமே பாதுகாப்பதுதான் அறிவுடையவர் செயலாகும். நமது கையை விட்டு நீங்கிய பொருள் மீண்டும் கிடைக்கலாம் என்பதை உறுதியாகக் கூற இயலாது. நல்லவர் இவரென்று நம்பிச் செய்வதிலும் பிழை நேரக்கூடும் என்பதை வள்ளுவர்,

    நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை. (குறள்: 469)

    ஒருவருடைய பண்புகளை தெளிவாக அறியாமல், நல்ல செயல் என்று எண்ணிச் செய்யும் செயலிலும் பிழைகள் நேரும் என்கிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 2, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு பேராசிரியர் முனைவர்  டி. நாகராஜன் அவர்கள்

    nagarajansir

    வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், தமிழில் எழுத்துரை – பேச்சுரை மாற்றிக்கான மென்பொருளை (Tamil text to speech software) உருவாக்கிய, எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் (SSN College of Engineering) தொலைத்தொடர்பு தொழில்நுட்பத் துறையின்(Department of Information Technology) தலைவரும், பேராசிரியருமான முனைவர் டி. நாகராஜன் அவர்கள்.

    முனைவர் டி. நாகராஜனும், அவருடைய தலைமையில் அவரது குழுவினரும் உருவாக்கியுள்ள “தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை” அவர் தமிழ் இணையக் கழகத்தில் இயக்கிக் காட்டினார். இந்த மென்பொருளின் செயல்பாட்டை பார்வையிட்ட, தமிழக அரசின் 2013 ஆண்டிற்கான கணித்தமிழ் விருதாளரும், மொழியியல் பேராசிரியருமான முனைவர் ந. தெய்வ சுந்தரம் அவர்கள், உண்மையில் மிக நன்றாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாகயிருந்தது. ஏறக்குறைய 100% சரியாக இயங்குகிறது … மேலும் சிறிது உழைத்தால், மொழியியல் ஆய்வாளர்களுடன் இணைந்து செயல்பட்டால், உச்சரிப்பில் இயல்புத் தன்மையை மேலும் மேம்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    முனைவர் டி. நாகராஜன் அவர்களின் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை இயக்கி அதன் செயல்பாட்டை அறிய விரும்புபவர்கள் – http://www.ssn.edu.in/Speech_Lab/tts_demo.html – என்ற தளத்திற்குச் சென்று பயன்பெறலாம். கீழுள்ள படத்தில் காண்பித்துள்ளது போன்று 1. தங்களுக்குத் தேவையான தமிழ் மொழி தகவலைப் பதிவிட்டு, 2. மென்பொருளை இயக்கி (விருப்பமான குரலை – ஆண் குரலையோ, பெண் குரலையோ தேர்வு செய்யலாம்) 3. மென்பொருள் தமிழைப் படிப்பதைக் கேட்கலாம், 4. தேவையானால் அதனை ஒலிக்கோப்பாக தங்கள் கணினியில் சேமித்தும் பயன்பெறலாம்.

    dr nagarajan text to speech demo

    முனைவர் டி. நாகராஜன் அவர்கள் சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வில் பேச்சொலி மொழியை அடையாளம் காணும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பிறகு தனியார் நிறுவனம் ஒன்றின் ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்றுப் பணியாற்றிய பிறகு, கனடாவின் தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் முதுமுனைவராக (postdoctoral fellow at The National Institute of Scientific Research – INRS, Montreal, Canada) இரண்டு ஆண்டுகள் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அந்த ஆய்வில் தொடர் பேச்சொலியை அடையாளம் காணுவதையும், ஒலியை வகைப்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கண்டறியும் ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இரண்டாண்டு முதுமுனைவர் ஆய்விற்குப் பிறகு, சென்னை எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் பேராசிரியராக பணியில் இணைந்து இன்றுவரை ஆய்விலும், கற்பித்தலிலும், ஆய்வு மாணவர்களை நெறிப்படுத்துவதிலும் பங்கு பெற்று வருகிறார். கருத்தரங்கங்களிலும், ஆய்விதழ்களிலும் தனது ஆய்வுகளைப்பற்றி இதுவரை சுமார் 80 ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார். மேலும், இவர் தற்பொழுது ஈடுபட்டிருக்கும் ஆய்வுகளையும், இவரது ஆய்வுப்பணிகளைப் பற்றி விரிவாக இத்தளத்தில் – http://www.ssn.edu.in/?page_id=1483 – அறிந்து கொள்ளலாம்.

    கணினித் தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்கு பெரும் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை உருவாக்கியுள்ளமைக்காக முனைவர் டி. நாகராஜன் அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராக அவரைப் பாராட்டி மகிழ்கிறோம். அவரது ஆய்வுகள் மேலும் வெற்றி பெற வல்லமை இதழின் வாழ்த்துகள்

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Contact Info:
    Dr. T. Nagarajan,
    Professor & Head
    Department of Information Technology
    SSN College of Engineering
    Rajiv Gandhi Salai (Old Mahabalipuram Road)
    Kalavakkam- 603 110 (off. Chennai)

    Phone: 044 27469700 [HOD Extn: 217]
    Fax: 044 27469772
    Email: nagarajant@ssn.edu.in

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: கடலுள்ளும் காண்பவே நன்கு

    ஒல்லாத வின்றி உடையார் கருமங்கள்
    நல்லவாய் நாடி நடக்குமாம் – இல்லார்க்
    கிடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!
    கடலுள்ளும் காண்பவே நன்கு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஒல்லாத இன்றி, உடையார் கருமங்கள்
    நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு
    இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!
    கடலுள்ளும் காண்பவே, நன்கு.

    பொருள் விளக்கம்:
    இயலாமல் போனது என்று (தடையேதும்) இல்லாமல், செல்வந்தரின் காரியங்கள் நல்ல முறையில் இனிதே நடந்தேறும். பொருள் இல்லாதவருடைய செயல்கள் துன்பமாகவே முடியும். சிறந்த நீர்வளம் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, (பொருள் உள்ளவர்) கடல்தாண்டி சென்றாலும் காரியத்தில் நன்கு வெற்றி காண்பார்.

    பழமொழி சொல்லும் பாடம்: பொருள் உடையவர் தொடங்கும் காரியங்கள் தடையின்றி நன்கே முடியும். காரியத்தின் வெற்றி தோல்விக்கு பொருளாதார நிலை காரணமாக அமைகிறது. இதனையே வள்ளுவர்,

    பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று. (குறள்: 753)

    பொருள் என்ற அணையாவிளக்கைப் பெற்றிருப்பவரால், எந்த தேசத்திற்குச் சென்றாலும் இருள் என்ற துன்பத்தை பொருளால் விரட்டி வெற்றி காண முடியும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: யாரானும் சொற் சோராதாரோ இலர்

    நற்பால கற்றாரு நாடாது சொல்லுவ
    ரிற்பால ரல்லா ரியல்பின்மை நோவதென்?
    கற்பா லிலங்கருவி நாடமற் றியாரானுஞ்
    சொற்சோர் விலாதாரோ வில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     
    பதம் பிரித்து:
    நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்;
    இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?
    கற்பால் இலங்கு அருவி நாட!-மற்று யாரானும்
    சொல் சோர்விலாதாரோ இல்.

    பொருள் விளக்கம்:
    நல்ல குடியில் பிறந்த கற்றறிந்தவரும் (சில நேரங்களில்) ஆராயாமல் தவறானவற்றைச் சொல்வதுண்டு; (அவ்வாறிருக்க) நற்குடியில் பிறவாதவர் அவரது இயல்பாக இன்னாதவை கூறுவதை எண்ணி வருந்துவதில் என்ன பயன்? மலைப்பாறைகளின் இடையே வீழும் அருவி உள்ள நாட்டைச் சேர்ந்தவரே! யாராக இருப்பினும் சொல் குற்றம் செய்யாதவர் இல்லை.

    பழமொழி சொல்லும் பாடம்: நற்குடியில் பிறந்த, நற்பண்புகள் கொண்ட கற்றறிந்த சான்றோரும் கூட சிலநேரங்களில் கூறத் தகாத தவறான சொற்களை சிந்தித்துப் பார்க்காமல் சொல்லிவிடுவதுண்டு. இக்கருத்தை வள்ளுவர்,

    அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு. (குறள்: 503)

    அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த, குற்றமற்ற ஆன்றோரை ஆராய்ந்து பார்த்தால், அவர்களிடமும் அறியாமை என்ற குற்றம் இருப்பது தெரியவரும் என்கிறார்.

    Share