Author: கவிஞர்.காவிரிமைந்தன்

  • தொட்டால் பூ மலரும் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    கவிதைபோல் தமிழ் மணம் கனிந்துருக வைத்துவிடும்
    இளமைபோல் இனிமைநலம் என்றென்றும் பாடிவிடும்
    அருமையெனச் சொல்லாதார் எவர் இருக்க முடியும்? – கவிஞர்
    திறமைதனை மெச்சித்தான் ஊர் புகழும் உன்னை!!

    படகோட்டி என்னும் ஒரு திரைப்படத்தில் எட்டுப் பாட்டு
    மெட்டுக்குள் நம்மையும் கட்டிப்போடும் முத்துப் பாட்டு
    வட்டமிடும் வாலிபர் முதல் பாங்கான காளையர் வரை
    வஞ்சியர் முதல் வளையல் கொஞ்சிடும் மங்கையர் வரை
    மனதுக்குள் கொண்டாடும் மயக்கம் தரும் பாட்டு.

    இதுவரைக்கும் வந்த பாடல்களையெல்லாம் வென்றெடுக்கும் பாட்டு!!!!

    தொட்டால் பூ மலரும்தொட்டால் பூ மலருமாம்! தொட்டவர்கள் அறிவார்கள். இசை மெட்டால் நமை மீட்டும் இருவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி, திரையில் தோன்றிய வெற்றிச் சரித்திரம் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி. கற்பனைகளின் உச்சம் தொட்டு கவிஞரின் எழுதுகோல் நகர, அற்புத இயக்கம் தந்த பிரகாஷ்ராவ் இயற்கையின் வனப்பைக்காட்டும் காமிரா இத்தனையையும் கூட்டணி அமைத்து நம்மைக் கொள்ளையடிக்க, பாடலின் தொடக்கத்தில் ஓடிவந்த நாயகன் நாயகியைத் தொட்டுவிடும் அழகு.

    பாடல் முழுவதும் ஓடிவருகிற வண்ணத்தை என்ன சொல்ல? கைகளால் காதலனும் காதலியும் தட்டிக்கொள்ள. ஒவ்வொரு வரியும் உள்ளத்தில் ஓராயிரம் சுகம் பிறக்க வைக்கிற உண்மையை மீண்டும் இப்பாடலைக் கேட்கும்போது உணரலாம். வண்ணத்தில் வரைந்து வைத்த காவியமாம் இத்திரைப் படம் நம் எண்ணத்தில் என்றும் முன்னணியில்… இது போன்ற இனிய பாடல்களால்.

    படம்: படகோட்டி (1964)
    வரிகள்: வாலி
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
    ராகம் : சுத்ததன்னியாசி

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்ந்தேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன்
    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்ந்தேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன்

    கண்கள் படாமல் கைகள் தொடாமல்
    காதல் வருவதில்லை
    நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்
    ஆசை விடுவதில்லை ஹோ!
    ஆசை விடுவதில்லை
    [தொட்டால்…]

    இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
    இளமை முடிவதில்லை ஹோ!
    இளமை முடிவதில்லை
    எடுத்துக் கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
    பொழுதும் விடிவதில்லை ஹோ!
    பொழுதும் விடிவதில்லை
    [தொட்டால்…]

    பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல்
    பித்தம் தெளிவதில்லை ஹோ!
    பித்தம் தெளிவதில்லை
    வெட்கம் இல்லாமல் வழங்கிச் செல்லாமல்
    சொர்க்கம் தெரிவதில்லை ஹோ!
    சொர்க்கம் தெரிவதில்லை
    [தொட்டால்…]

    பழரச தோட்டம் பனிமலர் கூட்டம்
    பாவை முகமல்லவா ஹோ!
    பாவை முகமல்லவா
    அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
    ஆயிரம் முகமல்லவா ஹோ!
    ஆயிரம் முகமல்லவா
    [தொட்டால்…]

    காணொளி: https://www.youtube.com/watch?v=RJXrqY-Df1M

    Share
  • நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா?

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா?

    திரைக்கதை வசனங்களில் புதிய யுக்தி வகுத்து, தனக்கென ஒரு பாதை சமைத்து பயணம் மேற்கொண்ட பல்துறை வித்தகர் டி.ராஜேந்தரின் இரண்டாவது படம் இது என்று நினைக்கிறேன். இரயில் பயணங்களில்… வழக்கம்போல் பாடல்களின் பவனியில் இவர் முன்னணியில்! இசையும் தானே அமைத்திடுவதால் வார்த்தைகள் மாற்றம்செய்வதோ மலரச்செய்வதோ எளிதான பணி!

                             rail payanangalil     rail payanangalil2     rail payanangalil3

    உற்றதோழி காதலியாக வேண்டும்! உயிர்ப்பறவை அவள் சுமக்க வேண்டும்! வாழும்வரையில் அவளின் துணைவேண்டும். கடவுள் இந்தக் கருணை வரம்தர வேண்டும்! மாறாக, இதோ காதலித்த ஒருத்தி இன்னொருவனை கரம்பிடிக்க நேர்ந்து, அவளின் வாழ்க்கையில் புயல்வந்து சேர்ந்து அலைபாயும்போது, அங்கு ராகங்கள் எல்லாம் ஸ்வரபேதம் காட்டி மனதிலே மோதுகின்றன.

    கதையின் நாயகன் இந்தச் சூழ்நிலையில் தன்னுணர்வைப் பாடலிலே பதிக்கிறான். இசையை அதற்கேற்ப வடிக்கிறான். இரயில் பயணங்களில் படத்தில் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக பாடிக் கொண்டிருந்த டி.எம்.செளந்திரராஜன் குரலில் இந்தப் பாடல் பாவங்களை அழுத்தந்திருத்தமாக சொல்லுகிறது! அரிதாரம் பூசாத காதலின் அவஸ்தைகள் நிச்சயம் இப்படித்தான் இருக்கும் என்று காதல் கதை சொல்ல அவதாரம் எடுத்துவந்த டி.ராஜேந்தர் படைத்த படைப்பு!

    படம்: இரயில் பயணங்களில்
    உணர்வு: வேதனை
    ஆக்கம்: டி. ராஜேந்தர்

    வசந்த ஊஞ்சலிலே
    அசைந்த பூங்கொடியே
    உதிர்ந்த மாயமென்ன
    உன் இதய சோகமென்ன
    உன் இதய சோகமென்ன

    நூலுமில்லை வாலுமில்லை
    வானில் பட்டம் விடுவேனா
    நாதியில்லை தேவியில்லை
    நானும் வாழ்வை ரசிப்பேனா
    நானும் வாழ்வை ரசிப்பேனா

    நினைவு வெள்ளம் பெருகி வர
    நெருப்பெனவே சுடுகிறது
    படுக்கை விரித்துப் போட்டேன்
    அதில் முள்ளாய் அவளின் நினைவு
    பாழும் உலகை வெறுத்தேன்
    அதில் ஏனோ இன்னும் உயிரு
    மண்ணுலகில் ஜென்மம் என
    என்னை ஏனோ இன்று விட்டு வைத்தாய்
    கண்ணிரண்டில் திராட்சை கொடி
    எண்ணம் வைத்து கண்ணீரை பிழிந்தெடுத்தாய்
    இறைவா… கண்ணீரைப் பிழிந்தெடுத்தாய்
    (நூலுமில்லை வாலுமில்லை …)

    நிழலுருவில் இணைந்திருக்க
    நிஜம்வடிவில் பிரிந்திருக்க
    பூத்தால் மலரும் உதிரும்
    நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
    நிலவும் தேய்ந்து வளரும்
    அவள் நினைவோ தேய்வதில்லை
    காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை
    பாவை உன்னை நினைத்திடுவேன்
    பாடையிலே போகையிலும்
    தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே
    உறவை… தேடி உயிர் பறந்திடுமே
    (நூலுமில்லை வாலுமில்லை …)

    காணொளி: https://youtu.be/2t9e2JJZ1RU

    Share
  • ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    அன்பின் முகவரிகாட்டும்
    ஆனந்தப் பூக்கள் பூக்கும்
    இன்பமே ஈகையென்றாகும்
    இறைவனின் அருள் வந்தாகும்!!                       eid

    சத்தியம் தர்மங்கள் வழியே
    சமத்துவம் சாத்தியமாகும்!
    இத்தரை மாந்தர் எல்லாம்
    இனிதே வாழ்ந்திடச் செய்யும்!

    நன்மைகள் பரவிடத்தானே
    நாயகன் வரலாறு கண்டோம்!
    உண்மையில் கடமையைச் செய்தால்
    உயர்வுகள் தானாய் அமையும்!

    தன்னால் இயன்ற உதவி
    தருவதன் மூலம் மட்டும்
    அல்லாவின் ஆசியெல்லாம்
    அனைவரும் பெறுவோமன்றோ?

    ஏழ்மையைப் போக்க எண்ணும்
    ஏந்தல்கள் வாழ வேண்டும்!
    எண்ணங்கள் தூய்மையாக
    ஏற்றங்கள் நாளும் வேண்டும்!

    மண்ணிலே வந்த நோக்கம்
    மானிடராய் வாழத்தானே?
    தன்னுயிர் போலவே எண்ணி
    இன்னுயிர் எல்லாம் காப்போம்!

    வரும்மழை தென்றல்யாவும்
    வல்லவன் தந்த கொடைகள்!
    தர்மங்கள் பலவும் செய்தால்
    தரணியே சுபிட்சமாகும்!!

    இல்லையே ஏழையென்னும்
    இனியநிலை தோன்றவேண்டும்
    இல்லாமை இல்லாததோர்
    இனியசமுதாயம் வரட்டும்!

    வல்லமை உள்ளோர் எல்லாம்
    வலிந்துநல் உதவிகள் செய்வீர்!
    வறுமைக்கு வறுமை வழங்கி
    வையத்தை வாழவைப்போம்!

    இறைவனின் பேரருளாலே
    இவ்வுலகில் வாழும் உயிர்க்கெல்லாம்
    இசைந்தநல் இதயங்கள் அனைத்திற்கும்
    எந்தன் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்!

     

    Share
  • சொன்னது நீதானா… சொல்… சொல்… என்னுயிரே…

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    சொன்னது நீதானா… சொல்… சொல்… என்னுயிரே…

    Sonnathu Neethana Screen Shotவாழ்க்கைப் பயணத்தில்தான் எத்தனை எத்தனைத் திருப்பங்கள்! சொந்தங்களும் பந்தங்களும் உண்டாக்கும் தாக்கங்கள், அன்பில் கலந்த உறவுகளை அப்படியே விட்டு விடுவதில்லை. பிரிவும் வந்து முகம் காட்டி உயிர்வரை கேட்கும் அபாயங்கள், இப்படி விதி வரைந்த கோலங்களின் விபரீத விளையாட்டினை முக்கோணத்தில் வடித்த மதிப்பிற்குரிய இயக்குநர் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்” – மறக்க முடியாத படம். அதிலே கண்ணதாசனின் முத்தான வரிகள். தத்துவ தரிசனங்களும், உள்ளக் குமுறல்களின் உணர்ச்சி வெளிப்பாடுகள் நெஞ்சைப் பிழிய வைக்கும். இசையோ கேட்டுக் கேட்டு உருக வைக்கும். இரட்டையர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்தப் பரிமாணங்கள் தமிழ்த் திரைக்குத் தந்த வெகுமானம் இப்பாடல்கள்.

    சொன்னது நீதானா… சொல்… சொல்… என்னுயிரே…

    கதாநாயகி நம் தேவிகா, கருப்பு – வெள்ளைப் படச்சுருள் மூலம் கருத்தில் நிறைகிறார். பாடலின் வார்த்தைகள் சொல்லும் அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் பாவங்கள் முகம் முழுவதும். உடல் நோய்வாய்ப்பட்டிருக்கும் கணவன் – தனது மரணத்திற்குப் பிறகு ‘நீ மறுமணம் செய்து கொள்’ என்று மனைவியிடம் சொன்ன சொல்லால் பிறக்கும் பாடலிது.

    தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை – தெருவினில் விழலாமா?
    தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கைப்படலமா?

    தமிழ்ப் பண்பாட்டு மரபை வார்த்தைகளில் கட்டிக்காத்து எழுதியுள்ளார் கவியரசு கண்ணதாசன். என்று முத்தமிழரசி முனைவர் சரஸ்வதி ராமநாதன் விளக்கம் தருகிறார்.

    Sonnathu Neethana Screen Shot2எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடத்திய வானம்பாடி என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற கவிஞர் பிறைசூடன் தந்த விளக்கம் கேளுங்கள்…

    ‘மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே’ என்கிற ஒற்றை வரியில் எத்தனை அர்த்த புஷ்பங்கள் பாருங்கள்.

    ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை ஒரு ஆண் மகன் தொடுவது அல்லது அறிவது முதன் முதலில் எப்போது தெரியுமா (அது அந்தக் காலம்?) திருமணத்தன்று மண மேடையில் மாலையிடும்போதுதான். அப்படி மாலையிடும்போது கூட தொடுவது இருக்காது. குங்குமம் இடுவது, தனது வலது கரத்தால் மணமகளின் திருமுகத்தில் குங்குமமிடும்போதுதான். எனவேதான் மங்கல மாலை குங்குமம் என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார் என்றார்.

    இன்னும் கூட ஒரு சில பின்னணிகள் இப்பாடலுக்கு உண்டு. மெல்லிசை மன்னருக்கும் கவியரசருக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தைப் பிரகடனத்தின்போது கிடைத்த பல்லவி. சொன்னது நீதானா?

    காணொளி: https://www.youtube.com/watch?v=znRUzlYa3bk

    திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்
    வரிகள்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    குரல்: பி. சுசீலா
    பாடல்: சொன்னது நீதானா சொல் சொல் சொல்

    சொன்னது நீதானா… சொல் … சொல் …

    சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
    சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
    ஏன் ஏன் ஏன் என்னுயிரே
    (சொன்னது)

    இன்னொரு கைகளிலே யார் யார் நானா
    எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
    (சொன்னது)

    மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
    மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
    என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
    இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே
    இன்று
    (சொன்னது)

    தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
    தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
    ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
    ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா
    (சொன்னது)

    Share
  • மூங்கில் இலைக் காடுகளே …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    Moongil Ilai Kaadugale video screen shotஅடர்ந்து வளர்ந்த மூங்கில்காடுகளில் காற்று மழை புயல்களினிடையே சிக்கிடும்போது ஒரு சில துளைகள் உண்டாகும்! அதில் உண்டான துளைகளின் வழியே காற்று நுழைந்த போது புல்லாங்குழல் நாதம் கண்டறியப்பட்டது, அதுவே பூபாளம் எனப்பட்டது.

    காலைக் கதிரவன் கடலில் குளித்தெழுந்து வருகின்ற அழகும், அதிகாலை இளங்குயில் பாடி நமை அழைக்கும் இனிமையும் நம் இதயத்திற்கு இதமானவை. எனவேதான் திரைப்படப்பாடல்களில் பெரும்பாலும் தொடக்கம் புல்லாங்குழல் இசையிருக்கும்.

    மிகக்குறைந்த செலவில் திரைப்படம் எடுப்பதையும், அதில் அன்றாட வாழ்க்கையில் சராசரி மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அலசி ஆராய்வதையும் தனது கொள்கைகளாய் கொண்டிருந்த விசு அவர்கள் இயக்கிய “பெண்மணி அவள் கண்மணி” திரைப்படத்தில் தேனிலவு செல்லும் தம்பதிகள் பாடும் பாடலாய் இந்தப் பாடல்!

    Moongil Ilai Kaadugale video screen shot3“இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழலோ” என்கிற கவிதை வரியை நினைவூட்டும் பல்லவி. இயற்கையின் அழகு எத்தனை எத்தனை!! விரிந்துகிடக்கும் வானம் முதல், பரவி எழுந்துநிற்கும் மலைகள் என அதன் கூறுகள் ஒவ்வொன்றும் தன்னெழில் தந்து இந்த உலகத்திற்கு அழகூட்டுகின்றன!

    எஸ்.பி.பாலசுப்பிரமணிம் குரலில் இழைந்தோடும் இனிய கானம், சங்கர் கணேஷ் இசையில் பொங்கிப் பெருகி வருகிறது பெண்மணி அவள் கண்மணிக்காக! மூங்கில் இலைக் காடுகளே முத்துமழை மேகங்களே எழுதியிருப்பவர் கவிஞர் வாலி.

    மூங்கில் இலை காடுகளே
    முத்து மழை மேகங்களே
    பூங்குருவி கூட்டங்களே வாருங்கள்
    வானகத்தில் சொர்க்கமில்லை
    வையகத்தில் உள்ளதென்று
    ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள் பாருங்கள் (மூங்கிலிலை)

    மாம்பூக்களே மைனாக்களே
    சந்தோஷ வேளைதான் சங்கீதம் பாடுங்கள்
    நாணல்களே நாரைகளே
    கல்யாணப் பெண் இவள் நல் வாழ்த்துப்பாடுங்கள்
    கால காலமாய் தப்பாத தாளமாய்
    காதல் வண்ணமே மங்காத வேளையாய்
    பெண் என்ற காவியம் பல்லாண்டு வாழணும் (மூங்கிலிலை)

    கார்காலமே நீர்த் தூவுமே
    செந்தாழம்பூ உடல் சில்லென்று கூசுமே
    ஆண் பாதியும் பெண் பாதியும்
    ஒன்றாகும் வேளையில் சம்சார காணமே
    ஓடம் போலவே உள்ளங்கள் ஆடவே
    ஏரி போலவே வெள்ளங்கள் ஊறவே
    ஒன்றான ஜாதகம் பல்லாண்டு வாழணும் (மூங்கிலிலை)

    மூங்கில் இலை காடுகளே
    முத்து மழை மேகங்களே
    பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்

    காணொளி: https://www.youtube.com/watch?v=hxC69rkhPiE

    https://www.youtube.com/watch?v=hxC69rkhPiE

    பாடும் நிலா பாலசுப்ரமணியன் அவர்கள் பாடும் பாடலாக மேற்கண்ட வரிகளில் ஒருமுறையும் …

    வாணி ஜெயராம் அவர்கள் குரலில் கீழ்க்கண்ட வரிகளில் மற்றொரு முறையும் இடம்பெறும் பாடல்.

    மூங்கில் இலை காடுகளே
    முத்து மழை மேகங்களே
    பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
    மாலையிட்ட மங்கையர்க்கு
    தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
    மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள் (மூங்கிலிலை)

    மாம்பூக்களே மைனாக்களே
    கல்யாணப்பாவை என் கண்ணீரை பாருங்கள்
    நாணல்களே நாரைகளே
    பெண்பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்
    பேரம் பேசவே கல்யாண சந்தையோ
    பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ
    கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம் (மூங்கிலிலை)

    பூச்சூடவும் பாய் போடவும்
    கல்யாண மாப்பிள்ளை கேட்பாரே வாடகை
    பொன்னோடுதான் பெண் தேடுவாள்
    அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை
    கேள்வி என்பதே இல்லாத தேசமா?
    யாரும் உண்மையை சொல்லாத தோசமா
    பெண் இங்கு தாரமா? வந்தாலே பாரமா? (மூங்கிலிலை)

    காணொளி: https://www.youtube.com/watch?v=i1jitFtbkRs

    https://www.youtube.com/watch?v=i1jitFtbkRs

    Share
  • சத்தியமே லட்சியமாய் கொள்ளடா

    கவிஞர் காவிரிமைந்தன்.

    SATHTHIYAMEY LATCHIYAMAAIK KOLLLLADAA  VIDEO SCREEN SHOT1 “நீலமலைத் திருடன்” திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் அ. மருதகாசி இயற்றிய பாடலிது. ரஞ்சன் என்கிற நடிகர் கதாநாயகன் (பலருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை). டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் உச்சஸ்தாயில் ஒலிக்கும் பாடல். திரையில் கூட ஒரு குதிரைப் பயணத்தோடு நாயகன், அந்த குளம்படிச் சத்தம் இன்றும் நம் செவிகளில் கேட்டுக்கொண்டே இருக்கும்.

    SATHTHIYAMEY LATCHIYAMAAIK KOLLLLADAA  VIDEO SCREEN SHOT1தேவர் பிலிம்சாரின் தயாரிப்பில் கருப்பு வெள்ளை வண்ணத்திலேயே ஒவ்வொரு திரைப்படமும் நீதியைச் சொல்லவும், அது நம் நெஞ்சினில் தங்கவும், பொற்காலமது … மீண்டும் வருமா? எண்ணவும் ஏங்கவும் வைக்கிற அக்காலம். குறைந்த பட்சம் தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும் ஒளி-ஒலித்த வண்ணம் உள்ளது ஓரளவு ஆறுதல் தருகிறது.

    கவிஞர் மருதகாசி, மண்ணின் மனம் கமழ பாடல்கள் தந்த திருமகன். கொள்கை முழக்கமிடும் இதுபோன்ற பாடல்களும் தந்துள்ளார். கே.வி.மகாதேவன் இசை இன்னும் மெருகேற்ற, டி.எம்.சௌந்தரராஜன் முன்னணியில் நினைவுக்கு வருகிறார்.

    வளரும் தலைமுறைகளுக்கு இதுபோன்ற நீதிகளைச் சொல்லித் தர பாடல்கள் இன்று அதிகம் இல்லையே. பொற்காலப் பாடல்களென விளங்கும் இப்பாடல்களே அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் போதுமானவை என்று சொல்லத்தக்க அளவு எழுதிக்குவித்திருக்கிறார்கள்.

    நம்பிக்கையும் தைரியமும் ஒருசேர உருவாக்கும் பாடலை நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவோமா?

    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
    தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா

    எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
    இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
    எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
    இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
    அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
    அத்தனையும் தாண்டி காலை முன் வையடா- நீ
    அஞ்சாமல் கடமையிலே கண் வையடா

    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
    தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
    தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

    குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்
    நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்
    குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்
    நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும் – நீ
    எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா
    எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா – அவற்றை
    எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா

    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
    தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா….. செல்லடா…..

    காணொளி: https://youtu.be/nKnO5xuiId4

    Share
  • கடவுள் ஏன் கல்லானான்?

    கவிஞர் காவிரிமைந்தன்.
    “அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
    ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்!
    ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
    அனுபவம் என்பதே நான்தான் என்றான்….!!!!
    –கவியரசு கண்ணதாசன்

    இந்த அனுபவக் கவிஞனின் தத்துவப் பாடலில் இதுவும் ஒன்று!

    நல்லவன் கெட்டவன் என்று இரண்டு வகையிலும் மனிதர்கள் உண்டு. இதிலே கெட்டவன் செயல்களால் நல்லவன் பாதிக்கப்படுகிறபோது, படைத்த கடவுளை அழைத்துக் கேள்விகேட்பது கண்ணதாசனுக்குக் கைவந்த கலையே!

    Kadavul Yen Kallanan video screenshotநேரில் வாழும் தெய்வங்களுக்கெல்லாம் நிம்மதி கிடையாது.
    அந்த நிம்மதி தேடி ஓடியதெய்வம் கல்லாய் மாறியது!
    என்கிற வரிகளை நான் எழுதத் தொடங்கிய காலத்தில் என் சிந்தனையில் உதித்தது, ஏதோ ஒரு அழுத்தம் மனதை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது என்று மட்டும்தான் சொல்வேன்.

    பகுத்தறிவுப் பார்வையில் கடவுளை மனிதன் தேடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மனசாட்சியும் கூட கடவுள்தான் என்று கண்ணதாசன் இப்பாடலில் அனுபவத்திலிருந்து மர்மமுடிச்சுக்களை அவிழ்க்கிறார்!

    தவறு செய்யாமலே தண்டனை பெறுவது எத்தனைச் சுமையானது? அதுவும் தவறு செய்தவன் யார் என்று தனக்குத் தெரிந்திருந்தும் சட்டரீதியான சாட்சிகள் சாதகமாக இல்லையாதலால், ஆண்டுக் கணக்கில் தண்டனையை அனுபவிக்கும்போது மனம் என்ன பாடுபடும்? யாரிடம் நீதி கேட்கும்? படைத்தவனிடம்தானே? அந்த உணர்வுகளின் ஓங்காரம் இந்தப் பாடல்!

    மக்கள் திலகம் திரையில் தோன்றி எளிமையாய், இனிமையாய், கே.வி.மகாதேவன் வழங்கிய இசையில், கண்ணதாசன் வரிகளில் எதிரொலிக்கும் இக் கேள்விகள் நியாயத்தராசு பேசிடும் மொழியோ?

    Kadavul Yen Kallanan video screenshot2நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி
    அது நீதி தேவனின் அரசாட்சி
    அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
    மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி!!!

    கடவுள் ஏன் கல்லானான் – சற்று சிந்தித்துப் பாருங்கள்.

    சதிச் செயல் செய்தவன் புத்திசாலி – அதை
    சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
    உண்மையைச் சொல்பவன் சதிகாரன் – இது
    உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் !!!

     

    கடவுள் ஏன் கல்லானான்?
    மனம் கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)

    கொடுமையைக் கண்டவன் கண்ணை இழந்தான் – அதை
    கோபித்துத் தடுத்தவன் சொல்லை இழந்தான்
    இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் …
    இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் – இங்கு
    எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
    எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)

    நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி
    அது நீதி தேவனின் அரசாட்சி
    அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
    அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி …
    மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
    அரங்கத்தில் வராது அவன் சாட்சி (கடவுள்)

    சதி செயல் செய்தவன் புத்திசாலி
    அதைச் சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
    உண்மையைச் சொல்பவன் சதிகாரன்
    உண்மையைச் சொல்பவன் சதிகாரன் …
    இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
    இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் (கடவுள்)

    காணொளி: https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM

    Share
  • வெள்ளி மணி ஓசையிலே …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    வெள்ளிமணி ஓசை - ஸ்க்ரீன்ஷாட்கண்ணதாசன் – வாலி இவ்விரு கவிஞர்களின் கைவண்ணங்கள் தமிழ்த்திரை வானில் எழுதியிருக்கும் கோலங்கள் வகை வகையானவை. வண்ணத்தமிழுக்கு மகுடங்கள் போன்றவை. மனதைப் பறிகொடுத்தே ஆகவேண்டிய அளவிற்கு இசையோடு அவை நடனமாடுபவை. பல நேரங்களில் இது யார் பாடல் என்கிற சந்தேகம் தருபவை என்றாலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என்பதை தம் வசந்த வரிகளால் வரைந்துகாட்டியவர்கள்!

    கற்பனையில் உருவாகிறது கவிதை என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை உண்மையல்ல. கவிதை, அது உள்ளத்தே ஊறிவரும் ஊற்று! திரைக்கதையை உள்வாங்கி, பாடல் இடம்பெறும் காட்சியை மனதில் பதித்து, அந்தக் கதாப்பாத்திரங்களாகவே தங்களை உருக்கொண்டு, உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை வார்த்தைச் சரங்களால் வளைத்து, இனிமை சேர்த்து இன்பம் பயக்கும் வரிகளைச் சமைத்து, இசைக்குக் காணிக்கையாக்குவதில் இருபெரும் வல்லவர்கள் இவர்கள் என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.

    வெள்ளிமணி ஓசை - ஸ்க்ரீன்ஷாட்2இதோ ஒரு பாடல். இந்தப் பாடல் இடம்பெறும் படம் ‘இருமலர்கள்’. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடுகின்ற பாடலாய், அன்பின் ஆனந்த எல்லையில் ஒரு பெண்ணின் மனம் சொல்லும் இன்பஸ்வரங்களில் விளைந்த கீதமிது! கே.ஆர்.விஜயா திரையில் நடிகர் திலகத்துடன். முகபாவங்கள் வெட்கக் கோலங்கள். துள்ளிவருகிற உற்சாகத்தை அள்ளித்தருகிற அற்புதப் பாடல்!

    பாலும் பழமும் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதியிருக்கும் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலின் சாயல் இந்தப் பாடலில் எதிரொலிக்க, வெள்ளி மணி ஓசை முழங்குவது இரு மலர்களுக்காக. விஸ்வநாதன் அவர்களின் இசையின் பங்கு இரண்டிலும். வாலி அவர்கள் வழங்கியிருக்கும் வரிகளில் பரவச அலைகள் பரிமாறப்பட்டிருக்கின்றன. நாயகி தன் நாயகனை எண்ணி, கவிதைசொல்லி வணங்குகிறாள். கண்கள்மூடி மலர்கிறாள். இன்பமழை பொழியுமிந்தப் பாடலை இதயம் நனையக் கேளுங்கள்..

    காணொளி: https://www.youtube.com/watch?v=tUyBqJzBuv8

    வெள்ளி மணி ஓசையிலே …

    வெள்ளி மணி ஓசையிலே
    உள்ளமெனும் கோயிலிலே
    வள்ளல் வரும் வேளையிலே
    வாழ்வு வரும் பூ மகளே
    வெள்ளி மணி ஓசையிலே
    உள்ளமெனும் கோயிலிலே
    கோயிலிலே…

    பிறந்து வந்தேன் நூறு முறை
    மன்னவன் கை சேரும் வரை
    தவமிருந்தேன் கோடி முறை
    தேவன் முகம் காணும் வரை
    வெள்ளி மணி ஓசையிலே
    உள்ளமெனும் கோயிலிலே
    கோயிலிலே…

    மணி விளக்காய் நானிருக்க
    மாளிகையாய் தானிருக்க
    மனது வைத்தான் சேர்ந்திருக்க
    கருணை வைத்தான் கை கொடுக்க
    வெள்ளி மணி ஓசையிலே
    உள்ளமெனும் கோயிலிலே
    கோயிலிலே…

    Share
  • வீசு தென்றலே வீசு …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    கே.வி. மகாதேவன் அவர்களின் இசையில் உருவான கானங்கள் தேவாமிர்தம் வகையைச் சார்ந்தவை! பொன்னித் திருநாள் திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலை எழுதியவர் புத்தனேரி சுப்பிரமணியம். பி.பி.ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இணைந்து பாடும் இன்பகீதம்.

    ஏழு ஸ்வரங்களுக்குள் இத்தனைப் பாடல்களா என்று வியக்க வைக்கும் இசை.

    ஆண் முகம் காணும் பெண்
    மனம் நாணம் அடைவதும் ஏனோ
    அதிசயம் தானோ

    ஆண்மையை வெல்லும் நாணமே
    எங்கள் அணிகலம் அதுவே
    துணை பலம் அன்றோ

    Veesu Thentrale Veesu screen shot 2Veesu Thentrale Veesu screen shot 1

    பெண்ணின் மாண்பைக் காட்டும் குணங்களைத் தொட்டுக்காட்டி, கவி வண்ணம் தந்திருக்கும் கவிஞரும் அதற்கேற்ற இசையமைத்து நம் நெஞ்சங்களை அள்ளும் இசை அமைப்பாளர், காதில் தேனைக் கொண்டு வந்து சேர்க்கும் குரல்களும் இப்பிறவியில் நாம் பெற்ற இன்ப வரங்கள்!

    திரையில் தோன்றும் முகத்தில் ராஜ சுலோச்சனா அவர்களை அறிய முடிகிறது. அது யார் உடன் தோன்றும் நாயகன்? விடை தருகிறார் வேம்பர் மணிவண்ணன்… வளையாபதி முத்துக்கிருஷ்ணன் என்பவராம்.

    பாடலில் இன்பம் வழிகிறது. இதயம் நிறைகிறது. அன்புத் தேனாகிப் பெருகும்போது இருவரின் உள்ளங்கள் சொல்கின்ற சொற்கள் மட்டுமே பாடலை உருப்பெற, உருவாகி இருக்கிறது இப்பாடல். அதிகம் அறியப் படாத கவிஞர் என்றாலும் அழகிய தமிழில் எளிமையாக எழுதியிருக்கிறார்.

    பாடலைக் கேளுங்கள், பரவசம் எய்திடலாம்.

    பாடல்: வீசு தென்றலே வீசு
    படம்: பொன்னித் திருநாள் (1960)
    பாடியவர்கள் : பி. சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ்
    இசை: கே.வி. மகாதேவன்
    நடித்தவர்கள்:வளையாபதி முத்துக்கிருஷ்ணன் & ராஜசுலோச்சனா

    ________________________________________________________

    வீசு தென்றலே வீசு… வேட்கை தீரவே வீசு
    மாசில்லாத என் ஆசைக் காதலன்
    வந்து செந்தமிழில் சிந்து பாடவே…

    பாடு கோகிலம் பாடு … பாசமாக நீ பாடு
    தேடும் காதலன் ஓடி வந்தனன்
    சிந்து பாடிட நீ சேர்ந்து பாடுவாய்…

    ஆண் முகம் காணும் பெண்
    மனம் நாணம் அடைவதும் ஏனோ
    அதிசயம் தானோ
    ஆண் முகம் காணும் பெண்
    மனம் நாணம் அடைவதும் ஏனோ
    அதிசயம் தானோ

    ஆண்மையை வெல்லும் நாணமே
    எங்கள் அணிகலம் அதுவே
    துணை பலம் அன்றோ
    ஆண்மையை வெல்லும் நாணமே
    எங்கள் அணிகலம் அதுவே
    துணை பலம் அன்றோ

    பாடு கோகிலம் பாடு … பாசமாக நீ பாடு
    தேடும் காதலன் ஓடி வந்தனன்
    சிந்து பாடிட நீ சேர்ந்து பாடுவாய்…

    நிலவினை எங்கே காணோம்
    இந்த நேரத்திலே தனியாக ஆனோம்
    நிலவினை எங்கே காணோம்
    இந்த நேரத்திலே தனியாக ஆனோம்

    தலை மறைவாகவே கலை மதி முகமே
    தலை மறைவாகவே கலை மதி முகமே
    சாகசம் செய்வதில் தான் என்ன சுகமே

    தொட்டால் குளிரும் விட்டு விலகினால்
    சுடுமே காதல் நெருப்பு
    தொட்டால் குளிரும் விட்டு விலகினால்
    சுடுமே காதல் நெருப்பு

    விட்டு விலகுதல் இனி ஏது
    விட்டு விலகுதல் இனி ஏது
    எந்த வெப்பமும் நம்மை அணுகாது

    வீசு தென்றலே வீசு… வேட்கை தீரவே வீசு
    மாசில்லாத என் ஆசைக் காதலன்
    வந்து செந்தமிழில் சிந்து பாடவே…
    வீசு தென்றலே வீசு…
    வேட்கை தீரவே வீசு…

    காணொளி: https://youtu.be/cjRfjtJ2cd4

     

    https://youtu.be/cjRfjtJ2cd4

    புத்தனேரி சுப்பிரமணியம் அவர்களின் இப்பாடலை நினைவூட்டிய நண்பர் சுந்தர் (ராகப்ரவாகம்) மற்றும் நடித்தவர்கள் வரையில் விவரங்கள் தந்து உதவிய வேம்பர் மணிவண்ணன் அவர்களுக்கும் நன்றி.

    Share
  • கண்ணன் எனக்கொரு பிள்ளை …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    ‘கண்ணன் எனக்கொரு பிள்ளை 

    நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை’

    Kannan Enakkoru Pillaiசூலமங்கலம் பாடும் பாடல். ‘ஏன்’ திரைப் படத்தில், இசைப் பேரறிஞர் டி.ஆர். பாப்பா அமைத்த இசையில் கண்ணன் ராதை கோலாகலம்! புல்லாங்குழலெடுத்து போதைமுத்தம் தான் கொடுத்து விட்டால் மயங்காதார் யாரிங்கே? ஆடலும் பாடலும் இல்லையென்றால் அகிலத்தில் ரசிக்க என்ன இருக்கிறது? கண்ணன் பிறந்த நாள், தொடர்ந்து கண்ணதாசன் பாடல்களில் ஒன்று உள்ளம் கொள்ளைகொள்ளத் தரலாமே என்று எண்ணியபோது சிந்தனையில் வந்த பாடலிது.

    திரையில் தோன்றும் நட்சத்திரங்களாய் லட்சுமி – ரவிச்சந்திரன். இன்பங்களின் ஒட்டுமொத்தக் குத்தகையை எடுத்துக் கொடுக்கும் இசையமைப்போடு ஒரு சுப லாலி. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத வார்த்தைகளில் கவிஞரின் சொல்லோவியம்! லீலா விநோதங்களில் காணும் ‘பா’வங்கள் அணிவகுக்கும் கோலங்கள்!

    இருவராய் இருந்தாலும் ஒருவராய் வாழ்தலே இன்பம் என்கின்ற வரம்தரும் வார்த்தைகள் வந்து விழுகின்றன கண்ணதாசனுக்கு.

    Kannan Enakkoru Pillai3இவனுக்கு இவளென்ற கருத்து – அந்த
    இறைவன் எழுதிய எழுத்து
    இடமுண்டு நேரங்கள் உண்டு- என்
    இதயமே பொறுமைகொள் இருவரும் ஒன்று

    இதயத்தைப் பொறுமைகொள் என்று சொல்லும் அழகு, கவிதையின் சிறப்பு மட்டுமல்ல அங்கே கன்னியின் சிறப்பும் கூட.

    மடியினில் நான் வைத்துச் சிரிக்க – அவன்
    மயக்கத்தில் மேலாடை பறிக்க
    இடையினை ஓர் கையில் வளைக்க – அந்த
    இன்பத்தையல்லாமல் வேறெதை நினைக்க

    கவிதையின் வாயிலாக இன்பங்களை அள்ளித்தருகிறார் பாருங்கள். கடவுளாய் இருந்தாலும் மனிதனாய் பிறப்பெடுத்தால் மயக்கத்தில் விழத்தான் வேண்டுமோ, நியதியும் இங்கே காணுங்கள்.

    கண்ணன் எனக்கொரு பிள்ளை – நான்
    கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
    கண்ணன் எனக்கொரு பிள்ளை – நான்
    கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
    கண்ணன் எனக்கொரு பிள்ளை

    மன்னன் சிரிப்பொரு முல்லை – அதன்
    மணமே ஆனந்தக் கலைகளின் எல்லை (கண்ணன்)

    மெல்லிதழ் தொடும் அவன் கரங்கள் – அந்த
    வேளையில் ஆயிரம் குணங்கள்
    சொல்லவொண்ணாதன சுகங்கள் – அவன்
    தொடுவதும் அணைப்பதும் எத்தனை விதங்கள் (கண்ணன்)

    மடியினில் நான் வைத்துச் சிரிக்க – அவன்
    மயக்கத்தில் மேலாடை பறிக்க
    இடையினை ஓர் கையில் வளைக்க – அந்த
    இன்பத்தையல்லாமல் வேறெதை நினைக்க (கண்ணன்)

    இவனுக்கு இவளென்ற கருத்து – அந்த
    இறைவன் எழுதிய எழுத்து
    இவனுக்கு இவளென்ற கருத்து – அந்த
    இறைவன் எழுதிய எழுத்து
    இடமுண்டு நேரங்கள் உண்டு – என்
    இதயமே பொறுமைகொள் இருவரும் ஒன்று (கண்ணன்)

    காணொளி: https://www.youtube.com/watch?v=XM9aIhxNCDU

    Share
  • ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    தமிழ் இனிமையான மொழி என்பதை காலங்காலமாக கவிதைகள்தான் பறைசாற்றுகின்றன! இனிக்க வைக்கும் இவர்களின் படைப்புகளில் நம் இதயங்கள் மூழ்கித்தான் போகின்றன! அடுக்குமொழிச் சொற்களும் அவற்றுள் ததும்பும் இன்பமும் இன்னும் வேண்டும் என்றே கேட்க வைக்கின்றன. திரைப்படப் பாடலாசிரியர்கள் அவர்களும் தங்கள் பங்கிற்கு இப்பணியைச் செவ்வனே செய்துவருகிறார்கள். மக்களைச் சென்றடையும் ஊடகங்களில் முதன்மை வகிப்பது திரைப்படங்கள் என்கிற பட்சத்தில் இவர்கள் பங்களிப்பு அதன் வெற்றிக்கு மட்டுமல்ல, நம் செவிகளுக்கும் மனதிற்கும்தானே!!

    AAYIRAM KANNUKKUஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாய் பாடலும் இசையும் கைகோர்த்து நடைபோடும், நாட்டியமாடும், நம்மையும் ஈர்த்துவிடும்! கேட்கும்போதெல்லாம் மனம் தாளமிடும்! கால்களும்கூட அபிநயிக்கும். இந்தக் குற்றாலத் தென்றல் கும்மாளமிடும்போதெல்லாம் குளிர்ந்துவிடுகிறதே மனம்! அதுவும் நமக்குப் பிடித்த நாயகன், நாயகி திரையில் தோன்றிவிட்டால் இந்த சந்தோஷம் ஆனந்தநதியில் சங்கமிக்கும்! உதடுகள் பல்லவியை உச்சரிக்கும்! சரணத்தில் கொஞ்சம் சஞ்சரிக்கும்! கற்பனைதான் இங்கே தலைமைவகித்தாலும் மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்!

    ஒருதாய் மக்கள் என்கிற திரைப்படத்தில் கவிஞர் வாலியின் வரிகள் தொட்டுக்காட்டும் இன்பங்கள் ஒன்றல்ல. பொதுவாக நாயகன் நாயகியை நோக்கி நாயகிக்காகவே பாடுவான். ஆனால், இப்பாடலில் ஒரு புதுமையைக் காணலாம். ஆம், நாயகன் தான் பாடினாலும் நாயகிக்கு வரவிருக்கும் காதலன் குறித்து நாயகிக்கு எடுத்துரைக்கும் வரிகளாக, பதுக்கிவைத்த இன்பங்களைப் பட்டியலிட்டுப் போட்டுக் காட்ட, அவள் தனக்காகவே பாடுகிறான் என்று குதூகலிக்கும்போது, உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான், அது நானல்ல, அது நானல்ல, என்று சொல்ல… அட! இப்படி ஒரு பாடல் இதுவரை நாம் கேட்டதில்லையே என்கிற உணர்வு வருகிறது!

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்நாதன் இசையமைக்க, ஏழிசை வேந்தர் டி.எம்.செளந்திரராஜன் குரல் கொடுக்க இதோ அந்த இன்பநதி ஓடிவருகிறது! நம் உள்ளங்கள் மகிழ! புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும்​, திரையில் தோன்றிடும் நட்சத்திரங்களாக எம்.ஜி.ஆர். ஜெயலலிதா.

     **********



    AAYIRAM KANNUKKU-1

    காணொளி: டி. எம். எஸ். குரலில்
    https://youtu.be/shWARw7nirI

    ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
    உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நானல்ல அது நானல்ல
    அது நானல்ல அது நானல்ல

    உன் கை வளை ஓசையில்
    கலந்திருப்பான்
    செங்கனி இதழ் ஓரத்தில்
    விழுந்திருப்பான்
    உன்னை எட்டிப் பிடிப்பான்
    மெல்ல கட்டி அணைப்பான்
    எட்டிப் பிடிப்பான்
    மெல்ல கட்டி அணைப்பான்
    சுவை கொட்டிக் குவிப்பான்
    எந்தன் குறை தீர
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நானல்ல அது நானல்ல
    அது நானல்ல அது நானல்ல

    ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
    என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நானல்ல அது நானல்ல
    அது நானல்ல அது நானல்ல

    உன் பாதத்தில் தலை வைத்து
    படுத்திருப்பான்
    கண் பாவத்தில்
    காவியம் படித்திருப்பான்
    உன்னை சிரிக்க வைப்பான்
    கொஞ்சம் தவிக்க வைப்பான்
    சிரிக்க வைப்பான்
    கொஞ்சம் தவிக்க வைப்பான்
    பின்பு துடிக்க வைப்பான்
    நெஞ்சம் சுகமாக
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நானல்ல அது நானல்ல
    அது நானல்ல அது நானல்ல

    நல் ஆரம்ப நேரத்தை
    வரவு வைப்பான்
    தன் அனுபவ ஞானத்தை
    செலவழிப்பான்
    மலர் அள்ளி முடிப்பான்
    கன்னம் கிள்ளி எடுப்பான்
    அள்ளி முடிப்பான்
    கன்னம் கிள்ளி எடுப்பான்
    இன்னும் சொல்லிக் கொடுப்பான்
    இன்பம் சமமாக
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நானல்ல அது நானல்ல
    அது நானல்ல அது நானல்ல

    ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
    உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நானல்ல அது நானல்ல
    அது நானல்ல அது நானல்ல

     **********


    AAYIRAM KANNUKKU-2

    காணொளி: பி. சுசீலா குரலில்
    https://youtu.be/2p12GCKjlqU

    ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
    என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நீயன்றோ அது நீயன்றோ
    அது நீயன்றோ அது நீயன்றோ

    என் கை வளை ஓசையில்
    கலந்திருப்பான்
    செங்கனி இதழ் ஓரத்தில்
    விழுந்திருப்பான்
    என்னை எட்டிப் பிடிப்பான்
    மெல்ல கட்டி அணைப்பான்
    எட்டிப் பிடிப்பான்
    மெல்ல கட்டி அணைப்பான்
    சுவை கொட்டிக் குவிப்பான்
    எந்தன் குறை தீர
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நீயன்றோ அது நீயன்றோ
    அது நீயன்றோ அது நீயன்றோ

    ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
    என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நீயன்றோ அது நீயன்றோ

    என் பாதத்தில் தலை வைத்து
    படுத்திருப்பான்
    கண் பாவத்தில்
    காவியம் படித்திருப்பான்
    என்னை சிரிக்க வைப்பான்
    கொஞ்சம் தவிக்க வைப்பான்
    சிரிக்க வைப்பான்
    கொஞ்சம் தவிக்க வைப்பான்
    பின்பு துடிக்க வைப்பான்
    நெஞ்சம் சுகமாக
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நீயன்றோ அது நீயன்றோ
    அது நீயன்றோ அது நீயன்றோ

    நல் ஆரம்ப நேரத்தை
    வரவு வைப்பான்
    தன் அனுபவ ஞானத்தை
    செலவழிப்பான்
    மலர் அள்ளி முடிப்பான்
    கன்னம் கிள்ளி எடுப்பான்
    அள்ளி முடிப்பான்
    கன்னம் கிள்ளி எடுப்பான்
    இன்னும் சொல்லிக் கொடுப்பான்
    இன்பம் சமமாக
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நீயன்றோ அது நீயன்றோ
    அது நீயன்றோ அது நீயன்றோ

    ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
    என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
    ஓ ஹோஹோ ஹோஹோ ஹோ
    அது நீயன்றோ அது நீயன்றோ
    அது நீயன்றோ அது நீயன்றோ

    **********


    Share
  • சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே… இந்தப் பாடலைப் பற்றிய முன்னுரையை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தருகிறார்.

    “மகாதேவி என்றொரு பெரிய படம். எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்திருக்கிறார். கண்ணதாசன் அவர்கள் பாடல் மற்றும் வசனம் எல்லாம்! அதிலே ஒரு லல்லபை… லல்லபை மட்டும் எங்க கிட்ட ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருக்கு… எந்த லல்லபையும்… நாங்க போட்ட எந்த லல்லபையும் வீணாகவில்லை… அது என்ன காரணம்னா… எங்க தாயாருடைய ஞாபகமும் அந்த டிரெடிஷன்… அந்தத் தாய்மையிலே இருக்கிற அன்பும்… இது வந்து எத்தனை பேர் அந்தப் பாடலைக் கேட்டு உருகாத ஆட்களே இல்லை… அந்தப்பாட்டு… மாதிரியே பின்னாளில் நிறையப் பாடல்கள் வந்தது… அதை ஒட்டியே… தழுவியே… ஏன் அப்படி வந்தது? அந்தப் பாட்டு மேலே அவ்வளவு காதல்! பாக்கி இசையமைப்பாளர்களுக்கு… அதனால சிங்காரப் புன்னகை பாட்டு மாதிரியே நிறைய மெட்டுக்கள் பல இசையமைப்பாளர்கள் போட்டாலும்கூட அந்தப் பாட்டு மேல இருக்கிற ஆவல்… அது அருமையான பாடல்… அந்தக் காலத்திலே ஹிட்டான பாடல்!”

    singaarap punnagai1எம்.ஜி.ஆர் சாவித்திரி இணைசேர்ந்து நடித்தது மூன்று திரைப்படங்கள் மட்டுமே… ஒன்று மகாதேவி… மற்றொன்று பரிசு… இன்னொன்று வேட்டைக்காரன். நம் இதயத்தில் தவழ்ந்து கொண்டேயிருக்கும் இந்தப் பாடலின் சிறப்பம்சம் என்னவென்று மெல்லிசை மன்னர் கூற அறிந்தோம். தாய் அவள் பாடும் தாலாட்டு… எத்தனைச் சுகம் என்பதை அனுபவித்தவர்கள் நாம். அன்பைப் பொழியும் அன்னையின் குரலில் அமுதகீதம் வரும்! தன்னைத் தந்து உன்னை வளர்க்கும் உன்னதம் வேறு யாருக்கு வரும்? கண்ணில் நிறைத்து மார்பில் அணைத்துக் காத்திடும் தெய்வமது… கவிதை பாடி கண் வளர்க்கும் இன்ப நாதமது!

    singaarap punnagaiமங்கையர்கூடி மகிழ்ந்தாடி மனம்வழியப் பண்பாடி வரும் காட்சியில், தமிழ்ப்பண்பாட்டைச் சுமந்திருக்கும் வரிகள் சுகமானவை. வீரத்தை நிலைநாட்டும் வரிகள் நம் பெருமை கூறுபவை. திரையில் தோன்றிய இரட்டையர்கள் சாவித்திரியும் எம்.என்.ராஜம் அவர்களும். இசைத்திருக்கும் இரட்டையர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும். குரல்களில் பொழிந்த அருவிகள், எம்.எஸ்.இராஜேஸ்வரியும் பாலசரஸ்வதி அவர்களும் ஆவர்.

    இந்தப் பாடல் ஒற்றைப் பாடல்தான். ஆனாலும் இரண்டு குழந்தைச் செல்வங்களைத் தாலாட்டு இணைந்திருக்க, இரண்டு பாடல்கள் ஒன்றிணைந்திருக்கும் பேரழகைக் காணலாம். காலவெள்ளம் எத்தனை வேகமாக ஓடினாலும் அழிந்துபோகாத செவிவழிச் செல்வங்களுள் இந்தப் பாடலும் ஒன்றென்பேன்! ஒரு வரியில் சொல்வதென்றால்… இந்தப் பாடலைக் கேட்கும் எவரும் அவர்தம் தாயாரின் தாலாட்டுப் பாடலைக் கேட்ட நினைவுகளுக்குள் மூழ்குவது நிஜம்!!

    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா ஓஹோ….ஹோ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா ஓஹோ….ஹோ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

    கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
    எண்ணங்கள் கீதம் பாடுமே ஓ….ஓ….ஓ….
    கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
    எண்ணங்கள் கீதம் பாடுமே
    பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
    பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா
    பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

    ஆ….ஆ….ஆ….(இசை) ஆ….ஆ….ஆ…

    செல்வமே என் ஜீவனே செல்வமே என் ஜீவனே
    எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
    எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
    செல்வமே என் ஜீவனே செல்வமே என் ஜீவனே
    ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
    உன் அழகு முகம் கண்டு கொண்டால்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும்

    ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
    உன் அழகு முகம் கண்டு கொண்டால்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும்
    செல்வமே எங்கள் ஜீவனே
    செல்வமே எங்கள் ஜீவனே

    தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
    வில்லேந்தும் வீரன் போலவே ஹே….ஹே….
    தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
    வில்லேந்தும் வீரன் போலவே
    மகனே நீ வந்தாய் மழலை சொல் தந்தாய்
    வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
    மகனே நீ வந்தாய் மழலை சொல் தந்தாய்
    வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

    ஓ….சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா ஓ….
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

    காணொளி:
    https://youtu.be/faocj4sZf2g

    https://youtu.be/faocj4sZf2g

    எம். எஸ். விஸ்வநாதனின் உரையில் ….
    https://www.youtube.com/watch?v=hGqZfCr-uNw

    https://www.youtube.com/watch?v=hGqZfCr-uNw

    Share
  • தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    thannuyir pirivathaiகவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலின் பல்லவியைக் கேட்டு கவியரசு கண்ணதாசன் வியந்து வாலி அவர்களைப் பாராட்டினாராம்!

    உயிருக்கு உயிராக வாழ்ந்திருந்து ஒன்றையொன்று பிரிய நேர்ந்தால் அங்கு உருகிவிடும் துயருக்கு எல்லைகளில்லை. இயற்கை எழுதும் கணக்கும் தீர்ப்பும் மனதுக்கு என்றுமே புரிவதில்லை. உறவின் பிரிவில் துடித்துக் கதறும் உள்ளம் பாவம் இனி என்ன செய்யும்? திரையில் இதுபோல் காட்சிகள் வந்தால் பிரிவின் வழியை வார்த்தையில் சொல்லும் வித்தகம் தெரிந்த கவிஞர்கள் உண்டு. அவருள் நம்மைக்கவர்ந்த கவிஞர்கள் கண்ணதாசன் – வாலி எனலாம்.

    ஆம்,. கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலின் பல்லவியைக் கேட்டு கவியரசு கண்ணதாசன் வியந்து வாலி அவர்களைப் பாராட்டினாராம்!

    தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
    என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன், நான்
    என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன் …

    thannuyir pirivathai0கவித்துவம் என்பதோ, கவிதை என்பதோ, எதைச் சொல்கிறோம் என்பதல்ல, எதை எப்படிச் சொல்கிறோம் என்பதே. இதுவரை சொல்லிய விஷயத்தைத்தான் இன்னுமொரு புதிய விதத்தில் கவிஞர் கையாளும்போது அந்தப் பாடல் தனித்துவம் பெறுகிறது. அதற்கு இந்தப் பாடல் சாட்சியாகிறது! எண்ணிப் பார்க்கும்போது இன்னும் பிரம்மிப்பாக இருக்கிறது. பிரிவை இப்படியும் சொல்லலாம் அல்லவா? எனவேதான் கவிஞர் வாலியின் தமிழ், தமிழ் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்திருக்கிறது. வாழும் தமிழே வாலி என வலம் வரச் செய்கிறது!

    பணம் படைத்தவன் திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில், பி. சுசீலா குரலில், எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா நடிப்பில், ஒரு இனிமையான பாடல், சோகத்திலும் ஒரு சுகம் இழையோடுகிறது கேளுங்கள் …

    தன்னுயிர் பிரிவதை …
    காணொளி: https://www.youtube.com/watch?v=m6K4iHRN5vU

    தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
    என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
    தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
    என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன் நான்
    என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

    என்னுடனே எந்தன் பூ உடல் வாழும்
    உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்
    தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
    என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
    நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

    தெய்வத்தை நினைத்தேன் தேரென்று வளர்ந்தேன்
    தென்றலை நினைத்தே பூவென்று மலர்ந்தேன்
    தேரென்றும் இல்லை பூவென்றும் இல்லை
    கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
    கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்

    மன்னனை நினைத்தே மாளிகை அமைத்தேன்
    வள்ளலை நினைத்தே மையலை வளர்த்தேன்
    மாளிகை இல்லை மன்னனும் இல்லை
    கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
    கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்

    தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
    என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

    Share
  • திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    திருப்பாற்கடலில் பள்ளிபக்தி மனம் கமழும் பாடல்களுக்குப் பஞ்சமில்லாத தமிழ்நாட்டில், உலகினை இயக்கி வைக்கும் சக்தியைப் பல்வேறு வடிவங்களில் வழிபடுகின்ற பழக்கம் தலைமுறை தலைமுறையாய் தொடர; அண்மையில் 50 வருடங்களுக்கு முன்பாகத் தொடங்கிய பழக்கமாம் ஹரிஹர சுதன் ஐயப்பன் என்னும் தெய்வம் மலையாள நாட்டில் உள்ள சபரிமலையில் இருமுடி சுமந்து பாதங்கள் வலிக்க, கடுங்குளிரையும் தாங்கி, தேவாதி தேவன், நாமாவளி கோடி, கரகோஷங்களுடன், பக்தி பிரவாகமாய் சங்கமங்கள், வீதிதோறும் வீடுதோறும் விழாக்கோலம் பூண்டு தெய்வீகமாய், பரிபூரணமாய் இறைவனிடம் ஒப்படைத்து, பக்தியால் உன்னதப் பரவசம் எய்தும் மக்கள் கூட்டம் அலையலையாய் சபரிமலை மேலே சாஸ்தா சந்நிதானம் நோக்கி …

    திருப்புகழ் மணக்கும் இந்தப் பக்தி பரவசத்தைத் தழுவித் திரைத்துறையில் பல படங்கள் சபரிநாதன் சரித்திரமாய், அன்பர்கள் பெற்ற அனுபவங்களின் அருள் தொகுப்பை நயமிகு திரைப்படங்களாய் பல படங்கள் வெளிவந்துள்ளன. அதிலும் இயக்குநர் தசரதன் அவர்கள் இயக்கத்தில் தக்ஷிணாமூர்த்தி என்னும் மஹாப் பெரியவர் அமைத்த இசையமைப்பில் கானக்குரல் மூலம் எல்லோரையும் சபரிக்கு ஈர்த்த கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் தெய்வீகக் குரலில் பாட, கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலிது …

    புராணங்களின் கதைச் சுருக்கத்தை ஒவ்வொரு வரியிலும் வைத்து திருமாலின் அவதாரப் பெருமைகளை சரமாரி தொகுத்து சந்தங்களுடன் விளையாடியிருக்கும் அழகை சராசரி மனிதன் கூடப் புரிந்துகொள்ளச் செய்த கண்ணதாசனே, எப்படிப் பார்த்தாலும் உன் படைப்புகள் அற்புதம் அற்புதமே. அவற்றைப் படிப்பதும், இசையோடு கேட்பதும், ஆனந்தம் ஆனந்தமே …

    திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா – அங்கு
    திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா
    (திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

    உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா – அன்று
    உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணா
    இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா – அன்று
    இந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா
    (திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

    கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே – அவள்
    கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணா
    தேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே – உன்
    தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே
    (திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

    தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயே
    கணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
    அனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே – உன்
    அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே
    (திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

    ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
    நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்
    வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் – இனி
    வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்
    ஸ்ரீமன் நாராயணா ஸ்ரீபதி ஜெகன்னாதா வருவாய்
    திருமாலே – துணை தருவாய் பெருமாளே.

    _________________________________________________________________

    படம்: சுவாமி ஐயப்பன்
    பாடல்: கண்ணதாசன்
    இசை: தக்ஷிணாமூர்த்தி
    குரல்: கே. ஜே. யேசுதாஸ்

    காணொளி:
    https://youtu.be/zHtDbLPjMOg
    https://youtu.be/3bzuylmI_ek

    https://youtu.be/3bzuylmI_ek

    Share
  • நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே! – புலவர் புலமைப்பித்தன்

    கவிஞர் காவிரிமைந்தன்

    நாளை உலகை ஆளவேண்டும்

    akav

    கோவை செழியன் அவர்கள் தயாரிப்பில் கே.சி.பிலிம்ஸாரின் உழைக்கும் கரங்கள் திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில்!!

    எம்.ஜி.ஆர். கதாநாயகனாக.. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் புலவர் புலமைப்பித்தன் வரைந்த பூபாளமிது!

    உழைக்கும் மக்களுக்காக வரையப்பட்ட உன்னத சாசனமிது!! கே.ஜே.யேசுதாஸ் என்னும் கானப்பறவை தன் கந்தர்வக்குரலில்..

    நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே!

    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த
    நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
    புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த
    நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே

    கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
    கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
    வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
    உழைக்கும் கரங்களே

    தன்னானே தானேனானான நானானானா
    தானேனானே னனானே

    ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
    ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
    போராடும் காலம் எல்லாம் போனதம்மா
    எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
    நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா
    விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
    ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை

    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
    உழைக்கும் கரங்களே

    ஆஹா ஆஹா ஆஹா நானானானனே ஆஹாஹா

    கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
    நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்
    தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
    நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
    சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
    சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
    வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த
    நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
    புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

    ஏருழவன் சேற்றில் கை வைக்கவில்லையென்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள்!

    அவர்தம் ஏழ்மைநிலை நீங்கி.. உருவாக வேண்டிய சமத்துவ சமுதாயம் புலவரின் பொதுவுடைமை நோக்கம் எல்லாம் பாடலின் வரிகளாய்!!

    புரட்சிக்கு வித்திடும் போராட்டங்கள்! அப் போராட்டங்கள் உருவாகக் காரணம் ஏற்றத்தாழ்வுகள்!!
    கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் கூட்டுறவு சங்கங்கள்!!

    நாளைய விடியல் நம்பிக்கையின் வெளிச்சத்தோடு வெளிவரட்டும்!!

    https://www.youtube.com/watch?v=_h8lvYbu880

    Share