கவிஞர் காவிரிமைந்தன்.
“அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான்….!!!!
–கவியரசு கண்ணதாசன்

இந்த அனுபவக் கவிஞனின் தத்துவப் பாடலில் இதுவும் ஒன்று!

நல்லவன் கெட்டவன் என்று இரண்டு வகையிலும் மனிதர்கள் உண்டு. இதிலே கெட்டவன் செயல்களால் நல்லவன் பாதிக்கப்படுகிறபோது, படைத்த கடவுளை அழைத்துக் கேள்விகேட்பது கண்ணதாசனுக்குக் கைவந்த கலையே!

Kadavul Yen Kallanan video screenshotநேரில் வாழும் தெய்வங்களுக்கெல்லாம் நிம்மதி கிடையாது.
அந்த நிம்மதி தேடி ஓடியதெய்வம் கல்லாய் மாறியது!
என்கிற வரிகளை நான் எழுதத் தொடங்கிய காலத்தில் என் சிந்தனையில் உதித்தது, ஏதோ ஒரு அழுத்தம் மனதை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது என்று மட்டும்தான் சொல்வேன்.

பகுத்தறிவுப் பார்வையில் கடவுளை மனிதன் தேடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மனசாட்சியும் கூட கடவுள்தான் என்று கண்ணதாசன் இப்பாடலில் அனுபவத்திலிருந்து மர்மமுடிச்சுக்களை அவிழ்க்கிறார்!

தவறு செய்யாமலே தண்டனை பெறுவது எத்தனைச் சுமையானது? அதுவும் தவறு செய்தவன் யார் என்று தனக்குத் தெரிந்திருந்தும் சட்டரீதியான சாட்சிகள் சாதகமாக இல்லையாதலால், ஆண்டுக் கணக்கில் தண்டனையை அனுபவிக்கும்போது மனம் என்ன பாடுபடும்? யாரிடம் நீதி கேட்கும்? படைத்தவனிடம்தானே? அந்த உணர்வுகளின் ஓங்காரம் இந்தப் பாடல்!

மக்கள் திலகம் திரையில் தோன்றி எளிமையாய், இனிமையாய், கே.வி.மகாதேவன் வழங்கிய இசையில், கண்ணதாசன் வரிகளில் எதிரொலிக்கும் இக் கேள்விகள் நியாயத்தராசு பேசிடும் மொழியோ?

Kadavul Yen Kallanan video screenshot2நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி!!!

கடவுள் ஏன் கல்லானான் – சற்று சிந்தித்துப் பாருங்கள்.

சதிச் செயல் செய்தவன் புத்திசாலி – அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் !!!

 

கடவுள் ஏன் கல்லானான்?
மனம் கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)

கொடுமையைக் கண்டவன் கண்ணை இழந்தான் – அதை
கோபித்துத் தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் …
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)

நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி …
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி (கடவுள்)

சதி செயல் செய்தவன் புத்திசாலி
அதைச் சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையைச் சொல்பவன் சதிகாரன்
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் …
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் (கடவுள்)

காணொளி: https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *