Author: ரா. பார்த்த சாரதி

  • காதலெனும்  சோலை 

     -ரா.பார்த்தசாரதி

    காதலெனும்  சோலையிலே  கண்டடெடுத்த  ரோஜாவே
    காதலனிடம்  காதலை  வெளிப்படுத்திய  ரோஜாவே
    காதலெனும்  போதையிலே  கண் மயங்கும் ராஜாவே
    என் மனதை கவர்ந்திடும்   இனிய  ராஜாவே!

    காதலெனும் சோலையில்  கானக்குயில் பாடுதே
    ஆதியும் அந்தமுமில்லாமல்  அமரகீதம் பாடிடுதே
    வண்ணமலர்கள் மனதை தென்றல் வாரி வீசிடுதே
    கடலாகிய  அலைதன்னில் கவிதை பாடி ஓடிடுதே!

    உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும்  போதினிலே
    கொள்ளும் இன்பமே  சொர்க்கம் வாழ்வினிலே
    கொஞ்சும்  சோலைக்குருவி  சொந்தம் பேசுமே
    குறைவில்லாமலே  எல்லா இன்பமும் தருமே!

    இரு இதயங்கள்  இவ்வுலகில்  ஒன்றாகி
    என்றும் அழியாமல்   காதலாகிக்  கசிந்துருகி
    கண் மூடும் வேளையிலே கலை என்ன கலையோ
    கண்ணே உன் பேரழகிற்கு உலகம் தரும் விலையோ !

    உன்னை நினைத்தாலே என் மனம் காதல்கீதம் பாடிடுமே
    உன் மதிமுகம் இரவினிலே நன்கு தெரிந்திடுமே
    உன்னிடத்தில் என் இதயத்தை தந்துவிட்டேனே
    காதலியே
    என் இதயத்தைப் பாவை நீயும் எடுத்துச்
    சென்றுவிட்டாயே!

     

     

     

    Share
  • காதல் ஓவியமே! 

    -ரா.பார்த்தசாரதி

    பூத்த விழிகள்  கதை  பேச, பூங்காற்று மெல்லசைந்து,
    உன் வேல்  விழிகள் என் இதயத்தைத் துளைத்து
    என் ஜீவனைப் பறித்து, தேகம் எரிக்கும் காதல்ஓவியமே
    என் சேவை உனக்கு, நாணம் உனக்கு  எதற்கு?

    எங்கோ படித்தது  நினைவிற்கு  வருகிறது
    மனம் துடித்தது  தெளிவாய்   தெரிகிறது
    என்னைக் கொடுக்க வந்தேன் பேரரசியே
    பொய்யான எதிர்ப்பைக் காட்டாதே எழிலரசியே!

    காதல் வசப்படும் வரையில் வாட்டமில்லை
    வந்தபின்  ஏனோ நம்மிடையே  ஊடல் இல்லை
    கண்களால்  பேசி விழிகளால் என்னை அளக்கின்றாயே
    என் நெஞ்சினில் களிப்பினை மிதக்கச் செய்கின்றாயே!

    உன்னையும் காதல் உணர்வு  தீண்டுமே
    உன் கண்களில் அந்த ஏக்கம் தெரியுமே
    காதலிக்கும் போது  பசி  இருக்காது
    நேரம் கழிவதும்  உனக்குத் தெரியாது!

    காதல் என்பது ஜாதி, மதம் பார்ப்பதில்லை
    இரு உள்ளங்கள் சந்தித்து பேசாமல் இருந்ததில்லை
    காதல் என்பது சத்தியமே,  துணிந்து  நிற்போம்
    காதல் தினத்தை மகிழ்வுடன்  போற்றிடுவோம்!

     

     

     

    Share
  • குடியரசு தினம்

     

     

    ரா.பார்த்தசாரதி

     

    சட்டங்களையும், மனித உரிமைகளையும் ஒரு குடைக்கீழ் வந்த தினம்

    நாட்டின் ஒருமை பாட்டிற்காக,சட்டங்கள் பிரகடன படுத்திய தினம்

    எல்லா மாநிலத்திற்கும் பொதுவான சட்ட திட்டங்கள் உண்டான தினம்

    ஜனநாயக நாடு ஒரு குடியரசு நாடாய் அமல்படுத்திய தினம்.!

     

    எங்கு சட்டம் முடிகிறதோ, அங்கே கொடுங்கோல் ஆரம்பமாகும்

    இன்றைய சட்ட திட்டங்கள் தேவைக்கேற்ப வலைப்பதாகும்

    அரசியல் சாசனங்களும், அரசியல் வாதிகளும் காரணமாகும்

    கொலைக்கும், கொடுங்கோன்மைக்கும் துணை நிற்பதாகும் !

     

    தீவிர வாதத்தையும், கருப்பு பணத்தையும், அறவே ஒழிக்கமுடிந்ததா

    நாட்டின் சட்ட திட்டங்களால் இவைகளை முழுதும் அழிக்க முடிந்ததா

    ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், இதற்கு துணைநிற்பதா

    அறுபத்து ஏழு ஆண்டுகள் ஆயினும் தீர்வு இல்லாமல் இருப்பதா !

     

    குடியரசு நாடே ! இன்று பணக்காரர்கள் ஆட்டி வைக்கும் பொம்மையா

    ஏழைகளுக்கு இன்று சட்ட திட்டங்கள் ஓர் எட்டா கனியா

    நிதி கிடைத்தால் போதும் என்றெண்ணி நீதியை புறக்கணிக்கலாமா

    நடுநிலை கொண்டு நீதியையும், தர்மத்தையும் நிலைநாட்ட வேண்டாமா !

     

    Share
  • பொங்கலோ பொங்கல்

    ரா.பார்த்தசாரதி 

     

    செங்கதிரோன்  எழுந்திட்டான் செவ்வானம்  வெடித்து 

    செந்தமிழன்  எழுந்திட்டான் செங்கரும்பு ஒடித்து 

    மங்கையரும்,மழலைகளும் புத்தாடை உடுத்து 

    மாக்கோலம் போட்டிடுவார் மணிகரத்தால் தொடுத்து,

     

    உழவர்கள் விளைச்சலை கொண்டாடும் காலம்.

    தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக் காலம் !

    உழவர்கள்  உவகையுடன் கொண்டாடும் விழா

     பசுவிற்கும், எருதுக்கும் மக்கள் எடுக்கும்  விழா !

     

    உழவன் சேற்றினிலே இறங்கினால்தான்  நமக்கு சோறு

    நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு 

    பசுவும் , எருதும் விவசாயியின்  முதலீடு, என அறிந்ததே 

    வான் பொய்த்தாலும், வாயில்லா ஜீவன் காப்பாற்றுதே !

     

    பழையன கழிதலும், புதியன புகுதலுமே  போகிப்பண்டிகை,

    பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கணுப் பொங்கல்,

    கால்நடைகளுக்காக  கொண்டாடும்   மாட்டுப் பொங்கல்,

    உறவும், நட்பும், பரிமாற்றம் கொள்ள  காணும் பொங்கல்!  

     

    தைத்திங்கள் வரட்டும், விவசாயிக்கு தன்னம்பிக்கை தரட்டும்,

    விவசாயி தற்கொலை முயற்சியிலிருந்து விடுபட அரசு உதவட்டும்

    கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே ,

    குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே ! 

    Share
  • எதிர்காலம்   

    -ரா. பார்த்தசாரதி

    படிக்கும்  மாணவன்  எதிர்பார்ப்பதோ  நல்ல  மார்க்!
    அறிவை விட மார்க்கை வைத்து எதிர்காலம்
    கணிக்கப்படுகிறதே!

    இளம் பெண்களின் கல்வியே  எதிர்காலத்தைத்
    தீர்மானிக்கிறதே!
    நல்ல ஊதியமும், நற்கணவனும் அமைந்தால்  சிறப்படைகின்றதே!

    மாத  வருமானத்தில்  சேமிக்க வேண்டிய  நிலைமை!
    அதுவே,  பிரச்சனைகளை எதிர்காலத்தில்  சமாளிக்கும்
    திறமை!

    அரசியல்வாதிகளும், அரசு ஊழியரும் எதிர்பார்க்கும்
    பதவி உயர்வு!
    தன் முயற்சியின்றி, பணபலத்தால் அடையும்  இறுமாப்பு!

    நல்ல வேலை கிடைத்தால், நல்ல குடும்பம்
    அமைவதில்லை!
    நல்ல குடும்பம்  அமைந்தால், நல்ல ஊதியம் கிடைப்பதில்லை!

    சோம்பேறியாய்த் திரிபவனுக்கு எதிர்காலம் ஓர்
    இருட்டறைதான்!
    கடின முயற்சியுடன் உழைப்பவனுக்கு எதிர்காலம் ஓர்
    பொற்காலம்!

    எங்கே  சென்றிடும் காலம், அது நம்மையும்  வாழ
    வைக்கும்!
    கடமை, கண்ணியம், கட்டுப்பாடுபோன்றவை  நம்மை
    உயர வைக்கும்!

    எதிர்காலத்தை  நினைந்து  என்றும்  கனவு  காணாதே!
    வருவது  வரட்டும் என்று எண்ணி உழைக்கத் தவறிடாதே!

    நாட்டின் எதிர்காலம் இளைஞர்  கையில்தான்!
    திறம்படச்  செயலாற்றினால் நன்மை நமக்குத்தான்!

    எதிர்காலத்தை நினைந்து வாழ்க்கையில் சேமிக்கக்
    கற்றுக்கொள்!
    உன் குடும்பத்தைத் தாங்கும் தூண் என  ஓத்துக்கொள்!

     

     

    Share
  • சில்லறை

     

     

    ரா.பார்த்தசாரதி

     

     

     

    பணம் கிடைத்தும்,  சில்லறைப் பணம்  கிடைக்கவில்லை

    மக்களின் அன்றாட  வாழ்க்கைக்கு கையில் சில்லறை இல்லை

    ஏனோ, நமக்கு  ஒவ்வொரு நாளும் பொருள் வாங்க தடுமாற்றம்

    இதனை அறிந்த அரசு, மக்களுக்கு கொடுப்பதோ ஏமாற்றம் !

     

    மாற்றம் ஒன்றே உலகில் என்றும்  மாறக்கூடியது

    மாற்றமில்லாமல் எதையும் முடிக்க முடியாது

    மக்களின் கஷ்டங்களைப் போக்க வழி தெரியாத

    அரசும், அரசியலும் இதற்கு வழி வகுக்காது !

     

    சில்லறைக்காக மக்கள் பொன்னான நேரத்தை கழிக்கின்றனரே

    பணம் இருந்தும், பொருள் வாங்க சில்லறைக்கு அலைகின்றனரே

    இன்றோ கடன் கார்ட்   மூலம் பணம் செலுத்துவதே கட்டாய வழி.

    பாமர மக்கள் கார்ட்  இல்லாமல் பிதுங்குதே அவர்கள்  விழி !

     

    மக்கள் படும் துன்பத்திற்கு  வழி  காண  வேண்டாமா !

    எதற்கெடுத்தாலும், பணமில்லா பரிவர்த்தனையை நீட்டிக்கலாமா

    இன்று நாட்டில் படிப்பறிவு இல்லாதவர்களே மிகவும் அதிகம்

    கணினி  முறையினை  அமல்படுத்துவது மிகவும் சிரமம் !

     

    வங்கி  கணக்கு  இல்லாமல்  இன்று பல கோடி பாமர மக்கள்

    கணினி மூலம் பணம்செலுத்துவதும்,பெறுவதும் கற்றார்களா !

    இன்று  பல கோடி மக்கள் கையெழுத்து போடத் தெரியாத நிலைமை

    மக்களுக்கு கணினி செயல்பாட்டை  அறிவுறுத்துவது அரசின் கடமை !

     

    இன்று கறிவேப்பிலை,கொத்தமல்லி வாங்கவும் கடன் அட்டைகள்

    கடன் அட்டைகள் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் கருவிகள்

    புலியைப்  பார்த்து பூனை சூடு போட்டுக்கலாமா ! ஒரு முடிவு வேண்டாமா

    அயல் நாட்டை பார்த்து எல்லாவற்றினையும் நிலைநாட்டமுடியுமா !

     

     

     

     

     

     

    Share
  • தன்னம்பிக்கை

     

     

    ரா.பார்த்தசாரதி

     

     

     

    மனிதன்  வாழ  தேவை  தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கையை இழந்தால் தைரியம் பிறக்காது

    சோதனையை  கண்டு  என்றும் பயந்தவனுக்கு

    சாதனை என்பது,  என்றும்  நடக்காது !

     

     

    வாழ்க்கை என்பது பொதுவாய் அமைந்த நியதியடா

    தைரியம் இல்லாத மனிதர்கள் பூமிக்கு சுமையடா

    தோல்வியை தாண்டி சென்றாலே வெற்றி கிடைக்குமே

    தொடர்ந்து முயற்சி செய்பவனுக்கே வெற்றி கிட்டுமே !

     

     

    கடனே என்று வாழ்பவனுக்கு கடமையும் சுமைதான்

    தென்றலின் இனிமையை புயலாய்  நினைப்பான்

    தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் நாணயத்தின் இரு பக்கங்களே

    மனிதனின் பலம்  நம்பிக்கையிலே, யானையின் பலம் தும்பிக்கையிலே!

     

     

    உலகில் மனித நேயத்துடன்  பழகு !

    தாமே  வந்திடும்  புகழ்  உனக்கு

    சோர்வையும், சோம்பேறித்தனத்தை அறவே நீக்கு

    வாழ்வில்  வெற்றியினை  எப்போதும்  உனதாக்கு !

     

     

     

     

     

     

    Share
  • பூவே ! செம்பூவே

     

     

                     ரா.பார்த்தசாரதி

     

                    பூவே, செம்பூவே !  உனக்காக  நான் காத்திருப்பேன் 

                    என் மனதில் கவிதையாய் உன்னைக் காண்கின்றேன் 

                    சோலை வனத்தில், நீ  நடக்கும் அழகே  அழகு 

                    என் உள்ளமறிந்து அருகில்  வந்து  பழகு !

                 

                    பூக்களும், உன் சிரிப்பில்  தோற்கும் 

                   நான் எழுதும் பாடல்களுக்கு  வேர்க்கும் 

                   பூக்களின்  ஆயுளே  ஒரு நாள் தானே !

                    பெண்ணின் தலையில் இருப்பதும் ஒரு நாள் தானே !

                 

                   பூக்கள் சேர்ந்தால்  மாலையாய் உருவாகும் 

                   உன் புன்னகை பூக்கள் மாலைகளுக்கு உயிராகும் 

                   உன்னை காணாத  வேளையில் துடித்தேன் 

                   உன்னை எண்ணாத    வேளையில் மனம் தளர்ந்தேன் !

               

                   தனிமை வாட்டும் போது உன் அழகை கவிதையாக்கினேன் 

                   என் உள்ளம் எனும் கோவிலே  கூடி  புகுந்தேன் 

                   திருவிழா என்றாலே   அம்மன்  ஊர்வலம் 

                   நம்மிருவரும்  இணைய எப்போது திருமண ஊர்வலம் ?

                 

    Share
  • வேலி தாண்டிய காற்று

     

       ரா.பார்த்தசாரதி

     

    மனிதன் வாழ்க்கையில்   எதற்கெல்லாமோ வேலி  போடுகின்றான்

    குற்றங்களை மறைக்க தனக்குத்  தானே வேலி போட்டுக்கொள்கின்றான்

    அடக்கமான பெண்  கற்பு எனும்  வேலியை தானே போட்டுக்கொள்கிறாள்

    தன் வீடு, தன் கணவன்,தன் பிள்ளை என்ற வேலியை சுற்றி வருகிறாள் !

     

    காற்றுக்கு என்ன  வேலி,  காதலுக்கு ஏது  தோல்வி !

    காதலியின் கண்பார்வையே  காதலுக்கு  வேலி

    பூங்காற்றாய்  மாறிவிடு, புன்னகையால் வென்றிடு

    என் ஜீவன்  வாழ்ந்திட  வாழ்த்துக்கள் சொல்லிவிடு!

     

    காதலினை  தடை  செய்ய ஏது  முள்வேலி ?

    காதலன்,காதலி இடையே ஏது  இடைவெளி

    காதல் இல்லா  வாழ்க்கை  வீணாய்  போகும்

    மெய்யான காதல் ஒன்றே வாழ்வை மேன்மையாக்கும் !

     

    பயிருக்கு  பாதுகாப்பு வேலி, காதலுக்கு பாதுகாப்பு நம்பிக்கை

    காற்று வெளிதனில்  காதல் என்பது ஓர்  ஒத்திகை

    வேலியே பயிரை மேயுமா, காதல் உயிர் மூச்சாய் இருக்குமா

    வேலி  தாண்டிய  காதல், நிலை பெற்றிடுமா  இருக்குமா !

     

     

     

     

    Share
  • அழுதகண்ணீர்

    ரா.பார்த்தசாரதி

     

    அழுத  கண்ணீர்  என்றும் ஆற்றாமையை உணர்த்தும்

    தொண்டுள்ளம், கொண்டு, மக்களின் பசியாற்றினார்

    அவர் இறக்கும் போது கடல்நீரும் கண்ணீரில் கரையும்

    அலை கடலென மக்கள் வெள்ளம் அஞ்சலி செய்ததே !

     

    சாதனை படைத்தது வாழ்ந்து, வரலாறாக புகழ் ஓங்கியதே

    மக்கள் மனதில் குடிகொண்ட தால் அம்மா என அழைத்தனரே

    வினைத்திட்பம் கொண்டு எதிரிகளையும் எதிர்த்து நின்றாய்

    அஞ்சி விடாமல் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றாய் !        

     

    செய்வதை மட்டும்  சொல்லிட வேண்டும்

    சொன்னதை  நிச்சயம் செய்திட வேண்டும்

    நல்லதையே செய்ய நினைத்திடல் வேண்டும்

    பாகுபாடின்றி செயலாற்றினால் புகழ் தேடி வரும் !

    Share
  • காதல் ரோஜாவே

     

                      ரா.பார்த்தசாரதி

     

    முள்ளிடையே  காணும்  அழகிய  ரோஜாப் பூவே

    எப்படி பூத்து அழகாய்  தலையசைக்கின்றாள்

    வண்டுகள் சொன்ன  புகழ்ந்துரையா! புகழுரைகூறும் யா !

    ரோஜா மலரே நீ கொண்ட  நாணத்தினாலா !

     

    காதலன்  கொடுத்த  காதல் மலர் அடையாளத்திலா ,

    அவள் கூறும் இனிமை பேச்சினிலா

    காதலியின்  மயக்கும் வேல்விழிப் பார்வைலா

    தேவதையே ! என் நெஞ்சத்தின்  நினைப்பிலா !

     

    இளமைக்  காதல்,   இணைவதும் இயற்கையே

    காதலன் வர்ணிக்கும் வார்த்தைகள் செயற்கையே

    காதல் என்பதே  இரு  விழிகளின்  நேசமே

    அதுவே அவர்கள் வசிக்கும் காதல் தேசமே !

     

    சூரியனைக்  கண்டால்  தாமரை  மலருமே

    சந்திரனைக் கண்டால்  அல்லி  மலருமே

    இயற்கையான  ஒன்று, உள்ளம் கவர்வதும் ஒன்று

    உள்ளம் கவர்ந்தவனை கண்டால் முகம் மலர்வது என்று !

     

    காதலில்  கனவுகள்  மாறி, மாறித்  தோன்றும்

    காதலியை நினைந்து  மனம்  மகிழும்

    விழித்தவுடன்  தெரியும் எது  உண்மையென்று

    மனம் நினைத்தாலே காதலியை  அழைக்கும் என்று !

     

    காதல்  ரோஜாவே,  காதல் கண்மணியே 1

    ரோஜா இதழ் என  நின் மேனி  கண்டேனே

    கோவைப் பழம் போன்ற நின் உதட்டினை  கண்டேனே !

    உன் முல்லைச் சிரிப்பினிலே நான் தொலைந்துபோனேனே !

     

     

    Share
  • புரட்சித் தலைவி ஜெயலலிதா

     
    புரட்சித் தலைவி, புரட்சியுடன் தமிழகத்தில் செயலாற்றினார்

    சமூகத் திட்டங்கள் பல செய்து மக்கள் மனதில் குடிகொண்டார்

    ஏழை மக்களுக்கு நியாய விலையில் உணவு வழங்கினார்

    தமிழகத்தை சிறப்புடன் ஆட்சி புரிந்து, நற்பெயருடன் திகழ்ந்தார்

    புதுமை திட்டங்கள் புகுத்தி ஏழைகள் மனதில் இடம் பிடித்தார்

    எச்செயலையும் துணிவுகொண்டு ஆளுமையுடன் செயலாற்றினார்

    தமிழ் நாட்டின் சிறந்த முதலமைச்சர் என போற்றப்பட்டார்

    அயல்நாட்டுத் தலைவர்களும் மெச்சத்தகும்படி விளங்கினார்

    அம்மா என்று எல்லோராலும், தமிழகத்தில் கொண்டாடப்பெற்றார்

    அம்மா மறைந்தாலும் , அவர் புகழ் என்றும் மறையாது !
    ரா. பார்த்தசாரதி

    Share
  • நடா புயலே

                  ரா.பார்த்தசாரதி              

     

    புயல் என்றாலே மக்கள் மனதில் கலக்கம்

    விபரீத விளைவுகள் ஏற்படும் என்கிற தயக்கம்

    புயலால் சேதம் ஏற்படுமே  என்ற தவிப்பு

    மக்கள் மனதில் தவிர்க்கமுடியாத பதைபதைப்பு !

     

    நடா புயலே ! எங்களை சேதப்படுத்தாமல் ஒதுங்கிடு

    மக்கள்  பணமில்லாமல் பொருள் வாங்க தவித்திடுது

    மக்களிடத்தில்,பணம் எல்லாம் செல்லா காசாக  மாறியது

    இதனை கண்டு அரசும் என்ன செய்வதென்று தவிக்கின்றது !

     

    புயலே ! என்று அரசும் உதவும் நிலையில் இல்லை

    மக்கள் கையில் பணமும் அதிகம் இல்லை.

    எங்கள் நிலையறிந்து சற்றே  ஒதுங்குவாயா

    எங்கள் வாழ்வினை நிலைபெறச்  செய்வாயா !

     

    புயலுக்கு பின்னே அமைதி என்றான்  மனிதன்

    அரசு  முன்னெச்சரிக்கை செய்வதையும் கண்டான்

    சீர்செய்ய  அரசின் மெத்தன போக்கையும் கண்டான்

    இயற்கையால் ஏற்படும் அழிவை தடுக்க வழி கண்டானா !

     

    Share
  • தோல்வி

     

     

    ரா.பார்த்தசாரதி

     

    தோல்வி   என்பது வெற்றியின்  முதற்  படி

    தோல்வி என்பது விதியின் வலி அல்ல

    அதுவே விதியை மாற்றும்  வழியாகும்

    தோல்வி என்பது தலைக்குனிவும் அவமானமாகும்

    அதுவே  தடை நீக்கும்   அடையாளமாகும்

    தோல்வி என்பது வெட்கப்படும் செயல் அல்ல

    அதுவே வெற்றியை தூண்டும்  வீரம்

    தோல்வி என்பது முள்குத்தும் பாதையல்ல

    அதுவே முன்னேற சொல்லும் பாடமாகும்

    தோல்வி என்பது மிரளவைக்கும் பூதமல்ல

    அதுவே அனுபவம் தரும் தேவதை

    தோல்வி என்பது துன்பத்தின் நினைவலை

    அதுவே நம்மை தூங்கவிடாத கனவு

    தோல்வி என்பது கிழிந்த புத்தகம் அல்ல

    அதுவே வாழ்க்கையின் சிறந்த புத்தகம்

    தோல்வி என்பது பின்னிழுக்கும் பயமே

    வெற்றியை எட்டி பிடிக்கும் துணிவே !

    தோல்வி என்பது முட்டாள்களின் தலைவன் அல்ல

    அது அறிவாளிகளின்  ஆசிரியன்.

    தோல்வியை ஏற்போம் ! துவளாமல் இருப்போம் !

     

     

     

    Share
  • கலப்படம்

    ரா.பார்த்தசாரதி

     

      எதில்  கலப்படம் இல்லை?

    வாயை புண்ணாக்கும் புகையிலையிலும், குளிர் பானத்திலும் கலப்படம்!

    உயிர் காக்கும் மருந்திலும் கலப்படம்  செய்யப்படுகின்றது!

    ஏழை, பணக்காரன் பேதமின்றி குடிக்கும் மதுவிலும் கலப்படம் !

    கைக்கு கை மாறும்  பண நோட்டுக்களிலும் கலப்படம் !

    தண்ணீரிலும், வணிகப் பொருள்களிலும் கலப்படம் !

    மிருகங்களிலும், தாவரங்களிலும்  இன  கலப்படம்!

    காப்பி, தேயிலைகளிலும்  கலப்படம் செய்யப்படுகின்றது !

    பதவி பெரும் வோட்டுக்களிலும்  கலப்படம் !

    ஜாதி வேறுபாட்டால் திருமணங்களில் இன கலப்படம்!

    எங்கு? எப்படித்தான் தேடுவது, நேர்மையில் கலப்படமில்லாத

    அரசியல்  தலைவர்களையும், ஆட்சியாளர்களையும் !

     

     

     

     

     

    Share