ரா.பார்த்தசாரதி

 

மனிதன் வாழ்க்கையில்   எதற்கெல்லாமோ வேலி  போடுகின்றான்

குற்றங்களை மறைக்க தனக்குத்  தானே வேலி போட்டுக்கொள்கின்றான்

அடக்கமான பெண்  கற்பு எனும்  வேலியை தானே போட்டுக்கொள்கிறாள்

தன் வீடு, தன் கணவன்,தன் பிள்ளை என்ற வேலியை சுற்றி வருகிறாள் !

 

காற்றுக்கு என்ன  வேலி,  காதலுக்கு ஏது  தோல்வி !

காதலியின் கண்பார்வையே  காதலுக்கு  வேலி

பூங்காற்றாய்  மாறிவிடு, புன்னகையால் வென்றிடு

என் ஜீவன்  வாழ்ந்திட  வாழ்த்துக்கள் சொல்லிவிடு!

 

காதலினை  தடை  செய்ய ஏது  முள்வேலி ?

காதலன்,காதலி இடையே ஏது  இடைவெளி

காதல் இல்லா  வாழ்க்கை  வீணாய்  போகும்

மெய்யான காதல் ஒன்றே வாழ்வை மேன்மையாக்கும் !

 

பயிருக்கு  பாதுகாப்பு வேலி, காதலுக்கு பாதுகாப்பு நம்பிக்கை

காற்று வெளிதனில்  காதல் என்பது ஓர்  ஒத்திகை

வேலியே பயிரை மேயுமா, காதல் உயிர் மூச்சாய் இருக்குமா

வேலி  தாண்டிய  காதல், நிலை பெற்றிடுமா  இருக்குமா !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.