ரா.பார்த்தசாரதி

 

முள்ளிடையே  காணும்  அழகிய  ரோஜாப் பூவே

எப்படி பூத்து அழகாய்  தலையசைக்கின்றாள்

வண்டுகள் சொன்ன  புகழ்ந்துரையா! புகழுரைகூறும் யா !

ரோஜா மலரே நீ கொண்ட  நாணத்தினாலா !

 

காதலன்  கொடுத்த  காதல் மலர் அடையாளத்திலா ,

அவள் கூறும் இனிமை பேச்சினிலா

காதலியின்  மயக்கும் வேல்விழிப் பார்வைலா

தேவதையே ! என் நெஞ்சத்தின்  நினைப்பிலா !

 

இளமைக்  காதல்,   இணைவதும் இயற்கையே

காதலன் வர்ணிக்கும் வார்த்தைகள் செயற்கையே

காதல் என்பதே  இரு  விழிகளின்  நேசமே

அதுவே அவர்கள் வசிக்கும் காதல் தேசமே !

 

சூரியனைக்  கண்டால்  தாமரை  மலருமே

சந்திரனைக் கண்டால்  அல்லி  மலருமே

இயற்கையான  ஒன்று, உள்ளம் கவர்வதும் ஒன்று

உள்ளம் கவர்ந்தவனை கண்டால் முகம் மலர்வது என்று !

 

காதலில்  கனவுகள்  மாறி, மாறித்  தோன்றும்

காதலியை நினைந்து  மனம்  மகிழும்

விழித்தவுடன்  தெரியும் எது  உண்மையென்று

மனம் நினைத்தாலே காதலியை  அழைக்கும் என்று !

 

காதல்  ரோஜாவே,  காதல் கண்மணியே 1

ரோஜா இதழ் என  நின் மேனி  கண்டேனே

கோவைப் பழம் போன்ற நின் உதட்டினை  கண்டேனே !

உன் முல்லைச் சிரிப்பினிலே நான் தொலைந்துபோனேனே !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.