ரா.பார்த்தசாரதி

 

 

 

மனிதன்  வாழ  தேவை  தன்னம்பிக்கை

தன்னம்பிக்கையை இழந்தால் தைரியம் பிறக்காது

சோதனையை  கண்டு  என்றும் பயந்தவனுக்கு

சாதனை என்பது,  என்றும்  நடக்காது !

 

 

வாழ்க்கை என்பது பொதுவாய் அமைந்த நியதியடா

தைரியம் இல்லாத மனிதர்கள் பூமிக்கு சுமையடா

தோல்வியை தாண்டி சென்றாலே வெற்றி கிடைக்குமே

தொடர்ந்து முயற்சி செய்பவனுக்கே வெற்றி கிட்டுமே !

 

 

கடனே என்று வாழ்பவனுக்கு கடமையும் சுமைதான்

தென்றலின் இனிமையை புயலாய்  நினைப்பான்

தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் நாணயத்தின் இரு பக்கங்களே

மனிதனின் பலம்  நம்பிக்கையிலே, யானையின் பலம் தும்பிக்கையிலே!

 

 

உலகில் மனித நேயத்துடன்  பழகு !

தாமே  வந்திடும்  புகழ்  உனக்கு

சோர்வையும், சோம்பேறித்தனத்தை அறவே நீக்கு

வாழ்வில்  வெற்றியினை  எப்போதும்  உனதாக்கு !

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *