கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”நப்பின்னை போலவே நானும் அழகுதான்
அப்பெண் அகமுடையாள் ஆனாற்போல், -இப்பெண்நான்
பின்னாடி வந்தாலும் ”ப்ரோச்சேவா”, பக்தியில்
கண்ணாடி காட்டுகிறாள் காண்”….கிரேசி மோகன்….!
”பாஸுரமுக கரிராஜுலு(யானை கஜேந்திரன்) ப்ரோச்சின(காப்பாத்தின)
த்யாகய்யர் கீர்த்தனை” ப்ரோச்சேவா எவருரா” வாசித்ததில்….!ஆண்டாள்
தன்னை மணம்புரிந்து காப்பாத்துமாறு கண்ணனிடம் கோருகிறாள்….
தான் பத்தினி நப்பின்னையைப் போல் அழகானவள் என்பதை கண்ணாடி காட்டி
CONFIRM செய்கிறாள் கோதை….!