Tag: மலர் சபா

  • நான் அறிந்த சிலம்பு – 72 (20.05.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி
    (49)

    இன்று எமைப் பிரிந்து சென்ற காதலர்
    அன்று அன்புடன் சொல்லிச் சென்றார்
    ‘உனைப் பிரியேன்’ என்று;
    அந்தச் சொற்கள் தருகின்ற நிழலதனில்
    தங்கியே ஏங்கியே நானும் வாழ்கிறேன்.

    மாலைப்பொழுதே!
    நீயோ தனித்திருந்து வருந்தி வாழும்
    என்னுயிரைக் கவர்ந்திட
    எனைச் சூழ்ந்து கொள்கிறாய்!
    இங்ஙனம் எமைத் துன்புறுத்தும் நீதானும்,
    கோட்டையதன் உள்ளே
    வலிமையற்றிருக்கும் வேந்தனவன்
    மதிலின் புறத்தே சூழ்ந்து நிற்கும்
    பகை வேந்தனுக்கு
    என்னதான் உறவு உடையாயோ!

    (50)

    பகல் செய்யும் கதிரவன் மேற்குக் கடல்புரத்தில்
    மறைந்து விட
    பலருக்கும் துன்பம் தரும்
    காமநோய் அதிகரிக்கச் செய்கிறாய் நீ
    மயக்கத்தயுடைய மாலைப்பொழுதே!

    நின் கொடுமைதான் காணச் சகியாமல்
    நிலமகளும் கண் மூடிக்கொண்டனள்;

    நீ மட்டும் வந்திடுவாய் ஆயின்,
    எம் தலைவர் வாராதிருப்பார் ஆயின்,
    யாம் மட்டுமின்றி இவ்வையமே
    இங்ஙனம் துன்புறுமன்றோ..
    மாலையே! நீ வாழ்வாயாக!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/d011/d0111/html/d0111111.htm

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 71

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     

    “முகம் இல் வரி”
    “காமம் மிக்க கழிபடர் கிளவி”
    (46)

    நாரையே! நாரையே!
    எம் கானலிடத்தே வந்துதான் அடையாதே!
    கரையில் அடித்து
    அதை உடைக்கின்ற அலைகளையுடைய
    கடல் பகுதி சார்ந்த
    எம் தலைவனுக்கு
    நீ எம் காதல் நோயை
    உரைக்கவே இல்லை.
    எனவே,
    இனி எம் கானலில் வந்துதான் அடையாதே!

    கட்டுரை
    மாதவி பண்ணுப் பெயர்த்துப் பாடத் தொடங்குதல்

    (47)

    அங்ஙனம் கோவலன் பாடியது போலவே
    பாடல்கள் பாடிமுடித்தனள் மாதவி;
    பின்னர் தன் மென்காந்தள் மென்விரல்களால்
    கைக்கிளையைச் சுருதியாகக் கொண்டு
    இன்னிசையுடைய செவ்வழிப்பாலை என்னும்
    இசையதனை எழுப்பி
    முறைப்படி பாடினள் மாதவி;
    அதற்குப் பின்பு
    வேறொரு பண்ணையும் பாடத் தொடங்கினள்.

    முகம் இல் வரி
    தலைவி மாலைபொழுது கண்டு கூறுதல்

    (48)

    மாலைப் பொழுதே!
    நெய்தல் நில மக்களுக்குரிய
    ‘விளரி’ எனும் இனிய பாலைப்பண்ணை
    யான் யாழ் மீட்டிப் பாடுங்கால்,
    இளி நரம்பைத் தடவுவதற்குப் பதிலாக
    கைக்கிளை எனும் நரம்பைத் தடவும் வண்ணம்
    எனக்குத்தான் மயக்கத்தைத் தந்துவிட்டாயே!
    இங்ஙனம் பகைநரம்பு
    எனை மீட்டவைக்க வல்ல நீ
    என் உயிரை மாய்க்கவும் வல்லாய்!
    ஆதலால்,
    என் உயிரினைக் கொண்டு சென்று வாழ்வாயாக!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html<http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html>

    படத்துக்கு நன்றி:
    http://blondesearch.ru/index.php?key=Raja_Ravi_varma_paintings&page=1

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 70

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    **
    *(43)*
    **
    *”சாயல் வரி”
    “மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் அல்லது ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி
    இயற்பழிக்க, தலைமகள் இயற்பட மொழிதல்”*

    தாழையை வேலியாகக் கொண்ட
    இக்கழியில்
    முன்னர் ஒருவர் வந்திருந்தார்;
    நாம் விளையாடிய
    பொய்தல் விளையாட்டை
    மறக்க வைத்துச் சென்ற அவர்
    நம் மையல் கொண்ட
    மனத்தைவிட்டு நீங்கி அகல்வாரல்லர்.

    *(44)*

    கடற்கரைச் சோலையை
    வேலியாகக் கொண்ட
    இக்கழியில்
    முன்னர் ஒருவர் வந்திருந்தார்;
    ‘நீ அருள்செய்வாய்” என்று
    வேண்டி நின்றிருந்த அவர்
    நம் மான் ஒத்த பார்வையை
    மறப்பாரல்லர்.

    *(45)*

    நேற்றைய நாளில்
    அன்னம் தன் துணையுடன்
    விளையாடக் கண்டிருந்தார் ஒருவர்.
    அதனையே நோக்கி நின்றிருந்த அவர்,
    பொன்னிறத்தில் நம் மேனிமீது
    படர்ந்திட்ட பசலை போல
    நம்மை விட்டு நீங்குவாரல்லர்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html<http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html>
    படத்துக்கு நன்றி:
    http://www.gunathamizh.com/2011_06_06_archive.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 69 (29.04.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (41)
    கதிரவனும் மறைந்தனனே;
    கார் இருளும் படர்ந்ததுவே;
    அந்திமாலையை எதிர்நோக்கியிருக்கும்
    என் குவளை போன்ற கண்களும்
    நீரைத்தான் உகுக்கின்றனவே;

    புதிய நிலா போன்ற முகம் உடையவளே!
    திங்கள் ஒளியை உமிழ்ந்து
    ஞாயிற்றின் ஒளியை விழுங்கும்
    இம்மாலைப் பொழுது
    நம்மைப் பிரிந்து சென்ற
    தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமன்றோ?!

    (42)

    பறவைகள் பாட்டு அடங்கிப்போயினவே;
    பகல் பொழுது செய்யும் சூரியனும் மறைந்தனனே;
    குறைவற்ற நிறைநிலா
    என் காமநோய் அதிகரிக்கச் செய்கிறது;
    நோய்மிகுதியால் என் நீண்ட கண்கள்
    நீரைத்தான் சொரிகின்றன;
    மொட்டவிழ் மலர்கள் சூடிய
    கூந்தலை உடையவளே!
    கொடுமையான வன்மையுடன்
    என்னுயிருடன் பகைகொண்டு விளங்கும்
    இம்மங்கிய மாலைப்பொழுது
    நம்மைப் பிரிந்து சென்ற
    தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமன்றோ?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

    படத்துக்கு நன்றி:
    http://arundhtamil.blogspot.com/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 68 (22.04.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (39)

    புலால் நாற்றம்
    தன் மீது பொருந்தியிருக்க
    அதற்கென வருந்தி
    அந்நாற்றம் நீக்க எண்ணி
    பொழிற்சோலையது புகுந்து
    ஆங்கே உதிர்ந்து நின்ற
    பூந்தாதுகளின் கலவையை
    மணம் கமழவெனத்
    தன் மேல் பூசிக்கொண்டு நிற்கின்ற
    அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
    நெய்தல் நிலத் தலைவனே!

    பலவிதமான துன்பங்கள் உற்று வருந்துவதால்
    இது இன்ன நோய் என்று அறியாமல்
    எம் தலைவிதானும் தனித்துத் துன்புறுகிறாள்.
    இவள் மெலிவதும் இரங்குவதும்
    பிறர்க்குப் புலப்படவில்லை என்பதால்
    எவரும் உண்மை அறிந்திலர்.
    இதனைத் தாய் அவள் அறிந்திட்டால்
    என்னதான் நான் செய்வேன்?!

    “பொழுது கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு உரைத்தல்”

    (40)

    மெல்லிய இருள் படர்ந்ததுவே;
    பகல் பொழுது தரும்
    கதிரவன் அவனும் மறைந்தனனே;
    நீக்கிட முடியாத தனிமைத் துன்பத்தால்
    என் கண்கள்தானும் நீரைச் சொரிகின்றனவே;

    மொட்டவிழ்ந்த மலர்கள் அணிந்த
    கூந்தலை உடையவளே!
    வளையல் கழன்று விழும்படி
    காமம் எனும் தீ கொண்டுவந்த
    இம்மாலைப் பொழுது
    நம்மைப் பிரிந்து சென்ற
    தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமோ?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

    படத்துக்கு நன்றி:
    http://arulalantamizh.blogspot.com/2012/07/4-971.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 67

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    “மயங்கு திணைநிலை வரி அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல்”
    (37)

     

    நல்ல முத்துகளால் செய்த அணிகளை அணிந்த
    நன்மை பொருந்திய பவளத்தால் ஆன மேகலை அணிந்த
    செந்நெல் பயிரையுடைய மருத நிலம் தோறும்
    அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
    நெய்தல் நிலத் தலைவனே!

    புன்னை மரங்களடர்ந்த சோலையதனில்
    வலிய மீன்கொடி உடைய மன்மதன் ஏவிய அம்புகளால்
    என் மேனியில் மேவிய புதிய புண்கள்
    என்னை அடையாளமே கண்டுகொள்ள முடியாவண்ணம்
    என் அழகதனை மறைத்துதான் விளங்குகின்றன.
    இதை என் அன்னையவள் அறிந்தால்
    என்னதான் நான் செய்வேன்?!

    (38)

    அழகிய பவளவாய் திறந்து
    கடல் முத்து நிகர்த்த புன்னகை புரியும்
    பரதவர் சேரியில் வலைகள் உலரும்
    அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
    நெய்தல் நிலத் தலைவனே!

    மழைக்காலத்து மலரும் பீர்க்கம்பூக்களின்
    நிறமொத்த மேனியளாய்ப்
    பசலை படர்ந்த என் மேனி
    பொன்னிறத்தில் பொலிகின்றது.
    வெறியாட்டு நிகழ்த்தி தெய்வமது வழிபட்டு
    இக்கொடுமை செய்தவர் யார் என
    என் அன்னையவள் ஆராய்ந்து அறிந்தால்
    என்னதான் நான் செய்வேன்?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/diploma/a031/a0312/html/a0312103.htm

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 66

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (35)
    பிரியேன் என்று
    அன்று சொல்லிச் சென்ற
    அன்பு பொருந்திய காதலரின்
    உருளையுடைய பெரிய வலிய தேர்
    சென்ற வழியது சிதையும்படி
    பரந்து விரிகின்ற கடல் வெள்ளமே!

    குளிர்பூக்கள் கொண்ட சோலையே!
    துணையுடன் கூடி மகிழும் அன்னமே!
    ஈரம் பொருந்திய குளிர் நீர்த்துறையே!
    இங்ஙனம் எமைப் பிரிதல் தகாது என்று
    அவரிடம் உரைக்க மாட்டீரோ!

    (36)

    பிரியேன் என்று
    அன்று சொல்லிச் சென்ற
    அன்பு பொருந்திய காதலரின்
    உருளையுடைய பெரிய வலிய தேர்
    சென்ற வழியது சிதையும்படி
    பரந்து விரிகின்ற கடல் வெள்ளமே!

    நீ வாழ்வாயாக!
    முன்பு எம்முடன் அன்புடன்
    உறவாடியிருந்த கடலே!
    இன்று உன் செயலால்
    உறவு கெடப் பகைமை ஆனாய்!
    என்றாலும் நீ வாழ்வாயாக!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/c012/c0123/html/c01234l3.htm

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 65

    மலர் சபா
    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     

    இனிய கள் ஊறும் வாயையுடைய
    நெய்தல் மலரே!
    வருத்தம் அதிகரிக்க வைக்கும்
    இம்மாலைப் பொழுதினில்
    தனிமையில் வருந்துகின்றன
    என் கண்கள்.

    அது போன்ற துன்பம்
    ஏதும் இல்லாததால்
    ஆழ்ந்து நீ உறங்குகின்றாய்!
    நீ உறங்கும்போது
    காண்கின்ற கனவுதனில்
    கொடியவராம் எம் காதலர்
    இச்சோலைப் பக்கம் வரக்கண்டாயா?

    (34)
    பறவைகள் போல
    விரைந்து சென்றிடும்
    குதிரைகள் பூட்டிய
    தேரின் சக்கரங்கள்
    சென்ற வழி அனைத்தையும்
    சிதைத்து நீ நிற்கிறாய்,
    தெளிந்த நீரையுடைய கடலே!

    என்ன செய்வேன் இனி யான்?
    என்னுடன் இருந்து கொண்டே
    பழிபோற்றும் அயலாரோடு
    சேர்ந்துகொண்டு
    நீயும் எனக்குத் துன்பம் தருகின்றாய்.
    என் நோயினை நீ அறியாய்;
    என்ன செய்வேன் இனி யான்?

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://jaikrishnaraitushar.blogspot.com/2011_03_01_archive.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 64

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (31)
    திணைநிலை வரி
    “அறியேன் என்று வலிதாகச் சொல்லி, பாங்கி குறைநயப்பித்தல்”

    தன் துணையோடு கலந்து விளையாடும்
    புள்ளிகள் பொருந்திய உடம்பினை உடைய
    ஆண் நண்டினைக் கண்டான் தலைவன்.
    அதே நேரம்
    பூங்கொத்துகள் செறிந்த
    கானற்சோலையில் இருந்த
    என்னையும் நோக்கினான்.
    தன் உணர்வு ஒழியச் சென்றான்;

    வளைந்த சுருள் கூந்தல் உடையவளே!
    அவ்வாறு சென்ற தலைவனின்,
    ஒலிக்கும் அலைகள் கொண்ட
    அக்கடற் சேர்ப்பனின் நிலைமைதனை
    நானும் அறிந்திலேனடீ!

    (32)

    குளிர்ந்த தம் அருளைத் தரவென்று
    தம் குதிரை பூட்டிய தேரிலே
    வருபவர் நம் தலைவர்!
    இப்போது எனை நினைக்காது
    கைவிட்டுவிட்டாரே அவர்!

    அழகிய மென்கொத்துகளையுடைய
    அடும்புகளே!
    அன்னங்களே!
    நம்மை அவர் மறந்தாலும்
    நாம் அவரை மறக்காதிருப்போம்!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.dollsofindia.com/product/contemporary-hand-painted/lady-in-moonlight-raja-ravi-verma-painting-painting-on-woven-bamboo-strands-BJ98.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 62

     

     

    நான் அறிந்த சிலம்பில் இடையில் 62-ம் பகுதி விட்டுப்போய்விட்டதற்கு வருந்துகிறோம். இதோ அந்த பகுதி

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (27)

    காவிரியே!
    நின் கணவனது நாடு
    வளநாடு ஆகுக!
    அந்நாடு நின் குழந்தையாக,
    நீ அதைத் தாயாய் நின்று வளர்த்து,
    தவறாது உதவி செய்கிறாய்!
    அதனால் காவிரியே! நீ வாழ்க!

    அங்ஙனம் நீ காத்து நிற்கக் காரணம்,
    நாடு காத்து ஓம்புகின்ற
    ஆணைச் சக்க்ரம் ஏந்தியவனும்,
    நடுவு நெறி பாராட்டுபவனும்.
    அனைவராலும் விரும்பப்படுபவனுமாகிய
    நின் கணவன் சோழமன்னனது அருளேயாகும்;
    அதனால் காவிரியே! நீ வாழ்க!

    (28)

    “சார்த்துவரி”
    “புகாரைப் பற்றிய பாடல்கள்”
    “கையுறை மறுத்தல்”

    இனிய கதிர்களையுடைய
    திங்களது போலும்
    ஒளிர்ந்திருக்கும் முகத்தையுடைய
    தலைவியின் சிவந்த வாயில் இருக்கும்
    அழகிய பற்களுக்கு
    நீ தரும் இந்த முத்துகள் ஈடாகா;

    எனினும்
    ‘முத்துகளை நீங்கள் வாங்குங்கள்’ என்று கூறித்
    திருமாலின் மகன் காமன் அவன் போல் பித்தேறி
    கடலே! நீயும் நாள்தோறும் இங்கு வருகின்றாய்!

    ஐயனே!
    ஒலிமிகுந்த கடல் அலைகள்
    ஒளிமிகுந்த வெண் முத்துகள் தந்து
    அவற்றுக்கு ஈடாக வணிகர்கள் போல்
    மணம்மிக்க மலர் மாலைகளைக்
    கானலிடத்தே பெற்று விளங்குகின்ற
    புகார் அன்றோ எமது ஊர்?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    படத்துக்கு நன்றி:
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 63

     

     

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    [ 29 ]

    “தோழியிற் கூட்டம் கூடி, பின்பு வந்து வரைவல்
    என்ற தலைவனுக்குத் தோழி கூறுதல்”

    வலிமைமிக்க பரதவர் வாழும் பாக்கத்தில்,
    களவில் கூடிய மகளிர்
    தலைவனைப் பிரிந்ததால் நேர்ந்த துயரால்,
    அம்மகளிர்தம்
    செம்மையான முன் கையில் இருந்து
    வளையல்கள் தாமே கழன்று வீழ்ந்து
    தூற்றுவதை, தலைவனே!
    ஏழைகளாகிய நாம் எங்ஙனம் அறிவோம்?

    பூக்களின் அரும்புகளின் சுமையால்
    பாரம் அதிகரித்த
    நீண்ட புன்னைமரத்தின் கொம்பதனில்
    அன்னமொன்று ஏறியிருக்க,
    அந்த அன்னத்தை முழுநிலவு என்றும்
    சுற்றி இருந்த பூக்களை
    நட்சத்திரங்கள் என்றும் எண்ணிய
    அந்தியில் மலரும் ஆம்பல் மலர்
    பகலிலேயே மலர்ந்தது.
    தேன் உண்பதற்காகவென
    அவ்வாம்பல் மலரை
    வண்டுகள் ஊதி நிற்கும்
    புகார் அன்றோ எமது ஊர்?!

    (30)

    தன்னை உண்டவரைத் தம் போதையாலே
    அறிவிழக்கச் செய்து அடிமை செய்யும்
    கள் எனும் ஊண் எம் பாக்கத்துள்
    அழியாது நிற்கும்.
    இங்கு வாழும் மகளிர்க்கு
    எம்மருந்தாலும் தீர்த்திட முடியாத
    காம நோய் அதனை நீ தருகின்றாய் என்று
    தலைவனே!
    நாங்கள் எங்ஙனம் அறிவோம்?

    சிறுமியர் வண்டல் கொண்டு இழைத்திருந்ததை
    கடல் அலைகள் அழித்துச் சென்றிட,
    சிறுமியரின் மதிமுகத்தில் இருந்த,
    பகைவர்கள் புண்ணில் தோய்த்தெடுத்த
    வேல்போன்ற கண்கள் நீரைத்தான் வார்க்கின்றன.
    கோபம் கொண்ட சிறுமிகள்
    கடலைத் தூர்க்க முயன்று
    மணலை வாரி இறைக்கின்ற
    புகார் அன்றோ எமது ஊர்?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/a011/a0113/html/a01134l7.htm

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 61

     

    மலர் சபா
    புகார்க் காண்டம் -07. கானல் வரி
     
    (25)

    ஆற்றுவரி
    காவிரியை நோக்கிப் பாடியன
     

    இரண்டு பக்கங்களிலும்
    வண்டுகள் ஆர்த்து ஒலிக்க,
    அழகுப் பூக்களால் ஆன
    ஆடையைப் போர்த்திக் கொண்டு
    கரிய கயல் போன்ற விழிகள் விழித்து.
    நீ அசைந்து அசைந்து நடக்கின்றாய்!
    காவிரியே, நீ வாழ்கவே!

    இங்ஙனம் நீ அசைந்து அசைந்து
    களித்து நடந்திடக் காரணம்
    நின் கணவனாம் சோழமன்னன் கையிலுள்ள
    வளையாத திருத்திய செங்கோலே காரணம்
    இதை நானும் அறிந்து கொண்டேன்;
    காவிரியே, நீ வாழ்கவே!

    (26)

    பூக்கள் நிறைந்த சோலையில்
    மயில்கள் ஆடவும்
    குயில்கள் விரும்பி இசை பாடவும்
    அணிந்திருக்கும் அழகிய மாலைகள்
    அசைந்து ஆடவும்
    இவற்றினூடே புகுந்து செல்லும் காவிரியே!

    இவ்வாறு நீ செல்லக் காரணம்
    நின் கணவன் சோழமன்னனின்
    பகைவர்க்கு அச்சம் தரும்
    வேலின் ஆற்றலை நீ அறிந்ததால்தான் என
    நானும் அறிந்து கொண்டேன்.
    காவிரியே, நீ வாழ்கவே!

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram20.html
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 60 (25.02.13)

     

     

     

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (23)
    காமம் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை
    எய்தியோன் சொல்லுதல்

    இளமையான அன்னமே!
    நீ இவளுடன் நடந்திடாதே! நடந்திடாதே!
    அலைகள் சூழும் கடல்பகுதியில் வாழ்பவரை
    தமது அழகால் கொன்று திரிகிறாளே!
    இவள் நடைக்கு நின் நடை ஒப்பாகாது!
    அதனால் அவளோடு நடந்திடாதே!

    (24)

    கட்டுரை

    மாதவி, கலவியால் மகிழ்ந்தாள்போல் கோவலனிடம்
    இருந்த யாழை வாங்கி, புலவியால் கானல் வரி பாடத் தொடங்குதல்

    அவ்விடத்தில்
    கோவலன்  யாழதனில் வாசித்த
    கானல்வரிப் பாடல்களை
    மான் போன்ற நெடிய கண்களையுடைய
    மாதவி கேட்டனள் .

    அவன் பாடிய பாடல்களில்
    பிறிதொரு பெண்ணைப் பற்றிய
    எண்ணங்கள் உள்ளடக்கிய
    குறிப்புகள் இருந்தன என்றும்,
    இவன் அன்றைய தன் நிலையிலிருந்து
    தன்னோடு கூடியிருந்த நிலையிலிருந்து
    இன்று பெரிதளவும் மாறியிருக்கிறான் என்றும்
    எண்ணினள் மாதவி.

    மனதில் ஊடல் கொண்டாலும்
    அவனுடன் கூடியிருந்த அக்கணத்தில்
    இன்புற்றவள் போலவே
    தோன்றினள் மாதவி.

    யாழினை அவனிடமிருந்த வாங்கி,
    வேறு குறிப்புகளை மனதில் கொண்டவள் போலவே
    தன் இனிய குரலில்
    பாடத் தொடங்கினள் மாதவி.

    அந்நிலத்துக்குரிய தெய்வமாகிய வருணனும்
    அப்பகுதிவாழ் மக்களும் கேட்டு
    இன்புறும்படி வியந்திருக்கும்படி
    யாழதனுடன் இரண்டறக் கலந்து
    தன் இனிய குரலில்
    பாடத் தொடங்கினள் மாதவி.

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram20.html

    படத்துக்கு நன்றி:
    http://www.nagapattinam.tn.nic.in/thestory.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 59

     

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் -07. கானல் வரி

    குறியிடத்துத் தலைமகளைக் கண்ட பாங்கன் கூற்று அல்லது தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைமகன், அவளை விடுத்தல் அருமையால்,
    ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்
    (20)

    பவளத்தால் செய்த உலக்கையைக்

    கையால் பற்றிக் கொண்டு
    வெண்மையான முத்துகளைக் குற்றுகிறாளே,
    இவளுடைய செவ்வரி படர்ந்த
    கண்கள்தாமும் குவளை மலர்களோ?அல்ல! அல்ல! குவளை மலர்கள் அல்ல!
    இவை மிகவும் கொடியவை!

    (21)

    புன்னை மரத்தின் நிழலில்
    புலால் நாறும் அலைமீதினில்
    அன்னப்பறவையது போன்று
    அசைந்து நடக்கிறாளே,
    இவளின் சிவந்த கண்கள், கண்களா?
    அல்ல! அல்ல! கண்கள் அல்ல!
    மிகவும் கொடிய கூற்றமாகும்!

    (22)
    தேனைத் தன் வாயிடத்துக் கொண்ட
    நீல மலரினைக் கையில் ஏந்தி
    மீன் வற்றலைத் தின்ன வரும்
    பறவைகளை ஓட்டுகிறாளே!
    இவளின் சிவந்த கண்கள்தாமும்
    வெள்ளிய வேல்களோ?

    அல்ல! அல்ல! வேல்கள் அல்ல!
    அதனினும் கொடிது கொடிது!

     

     

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    படத்துக்கு நன்றி:

     

    http://www.dollsofindia.com/product/contemporary-hand-painted/fisher-woman-from-kerala-painting-on-woven-bamboo-strands-HF77.html

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 58

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     
    திணைநிலை வரி
    புணர்ச்சி நீட, இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல்

     
    (17)

     
    கடலில் புகுந்து உயிர்களைக் கொன்று வாழ்பவர்
    உன் மூத்தோராகிய தமையன்மார்;
    நீயோ கண்வழியே உடலினுள் புகுந்து
    என் உயிரதனைக் கொன்று வாழ்கின்றாயே!
    கச்சையினுள் இருந்தும்
    விம்முகின்ற உன் மார்புகள்
    மிகவும் சுமையானவை;
    அதனால் வருந்தித் தளர்ந்து
    ஒடிந்திடவும் கூடும் நின் இடை;
    உன் இடைதனை நீ இழந்திடாதே.

     
    (18)

     
    வளைந்த கண்கள் கொண்ட வலையால்
    உயிர்களைப் பிடித்துக் கொல்பவன் நின் தந்தை;
    நீயோ உன் நெடுங்கண் வலையால்
    என் உயிர்தனைக் கொல்கிறாயே!
    முத்துவடம் தாங்கிநிற்கும்
    நின் மார்புகளின் சுமையால்
    மழைமேகத்தின் மின்னல் போல்
    அசைந்து தளர்கின்றது நின் இடை;
    அதை நீ இழந்திடாதே!

     
    (19)

     
    ஓடுகின்ற படகினைக் கொண்டு
    கடல்வாழ் உயிர்களைக் கொன்று வாழ்வர்
    நின் தமையன்மார்;
    நீயோ உன் வளைந்த புருவம்கொண்டு
    எனைக் கொன்று நிற்கிறாயே!
    உன் பெருமையையும் நீ அறியாய்;
    உன்னால் பிறர்படும் துன்பத்தையும் நீ அறியாய்;
    உன் மார்புகளின் பாரம் சுமந்து
    தளர்கிறதே நின் இடை;
    அதை நீ இழந்திடாதே!

     

    Share