நான் அறிந்த சிலம்பு – 62
நான் அறிந்த சிலம்பில் இடையில் 62-ம் பகுதி விட்டுப்போய்விட்டதற்கு வருந்துகிறோம். இதோ அந்த பகுதி
மலர் சபா
புகார்க் காண்டம் – 07. கானல் வரி
(27)
காவிரியே!
நின் கணவனது நாடு
வளநாடு ஆகுக!
அந்நாடு நின் குழந்தையாக,
நீ அதைத் தாயாய் நின்று வளர்த்து,
தவறாது உதவி செய்கிறாய்!
அதனால் காவிரியே! நீ வாழ்க!
அங்ஙனம் நீ காத்து நிற்கக் காரணம்,
நாடு காத்து ஓம்புகின்ற
ஆணைச் சக்க்ரம் ஏந்தியவனும்,
நடுவு நெறி பாராட்டுபவனும்.
அனைவராலும் விரும்பப்படுபவனுமாகிய
நின் கணவன் சோழமன்னனது அருளேயாகும்;
அதனால் காவிரியே! நீ வாழ்க!
(28)
“சார்த்துவரி”
“புகாரைப் பற்றிய பாடல்கள்”
“கையுறை மறுத்தல்”
இனிய கதிர்களையுடைய
திங்களது போலும்
ஒளிர்ந்திருக்கும் முகத்தையுடைய
தலைவியின் சிவந்த வாயில் இருக்கும்
அழகிய பற்களுக்கு
நீ தரும் இந்த முத்துகள் ஈடாகா;
எனினும்
‘முத்துகளை நீங்கள் வாங்குங்கள்’ என்று கூறித்
திருமாலின் மகன் காமன் அவன் போல் பித்தேறி
கடலே! நீயும் நாள்தோறும் இங்கு வருகின்றாய்!
ஐயனே!
ஒலிமிகுந்த கடல் அலைகள்
ஒளிமிகுந்த வெண் முத்துகள் தந்து
அவற்றுக்கு ஈடாக வணிகர்கள் போல்
மணம்மிக்க மலர் மாலைகளைக்
கானலிடத்தே பெற்று விளங்குகின்ற
புகார் அன்றோ எமது ஊர்?!
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: