நான் அறிந்த சிலம்பு – 64
புகார்க் காண்டம் – 07. கானல் வரி
(31)
திணைநிலை வரி
“அறியேன் என்று வலிதாகச் சொல்லி, பாங்கி குறைநயப்பித்தல்”
தன் துணையோடு கலந்து விளையாடும்
புள்ளிகள் பொருந்திய உடம்பினை உடைய
ஆண் நண்டினைக் கண்டான் தலைவன்.
அதே நேரம்
பூங்கொத்துகள் செறிந்த
கானற்சோலையில் இருந்த
என்னையும் நோக்கினான்.
தன் உணர்வு ஒழியச் சென்றான்;
வளைந்த சுருள் கூந்தல் உடையவளே!
அவ்வாறு சென்ற தலைவனின்,
ஒலிக்கும் அலைகள் கொண்ட
அக்கடற் சேர்ப்பனின் நிலைமைதனை
நானும் அறிந்திலேனடீ!
(32)
குளிர்ந்த தம் அருளைத் தரவென்று
தம் குதிரை பூட்டிய தேரிலே
வருபவர் நம் தலைவர்!
இப்போது எனை நினைக்காது
கைவிட்டுவிட்டாரே அவர்!
அழகிய மென்கொத்துகளையுடைய
அடும்புகளே!
அன்னங்களே!
நம்மை அவர் மறந்தாலும்
நாம் அவரை மறக்காதிருப்போம்!
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html
படத்துக்கு நன்றி:
http://www.dollsofindia.com/product/contemporary-hand-painted/lady-in-moonlight-raja-ravi-verma-painting-painting-on-woven-bamboo-strands-BJ98.html

