நான் அறிந்த சிலம்பு – 65

மலர் சபா
புகார்க் காண்டம் – 07. கானல் வரி

 

இனிய கள் ஊறும் வாயையுடைய
நெய்தல் மலரே!
வருத்தம் அதிகரிக்க வைக்கும்
இம்மாலைப் பொழுதினில்
தனிமையில் வருந்துகின்றன
என் கண்கள்.

அது போன்ற துன்பம்
ஏதும் இல்லாததால்
ஆழ்ந்து நீ உறங்குகின்றாய்!
நீ உறங்கும்போது
காண்கின்ற கனவுதனில்
கொடியவராம் எம் காதலர்
இச்சோலைப் பக்கம் வரக்கண்டாயா?

(34)
பறவைகள் போல
விரைந்து சென்றிடும்
குதிரைகள் பூட்டிய
தேரின் சக்கரங்கள்
சென்ற வழி அனைத்தையும்
சிதைத்து நீ நிற்கிறாய்,
தெளிந்த நீரையுடைய கடலே!

என்ன செய்வேன் இனி யான்?
என்னுடன் இருந்து கொண்டே
பழிபோற்றும் அயலாரோடு
சேர்ந்துகொண்டு
நீயும் எனக்குத் துன்பம் தருகின்றாய்.
என் நோயினை நீ அறியாய்;
என்ன செய்வேன் இனி யான்?

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

படத்துக்கு நன்றி:
http://jaikrishnaraitushar.blogspot.com/2011_03_01_archive.html

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *