மலர் சபா

புகார்க் காண்டம் – 07. கானல் வரி

(41)
கதிரவனும் மறைந்தனனே;
கார் இருளும் படர்ந்ததுவே;
அந்திமாலையை எதிர்நோக்கியிருக்கும்
என் குவளை போன்ற கண்களும்
நீரைத்தான் உகுக்கின்றனவே;

புதிய நிலா போன்ற முகம் உடையவளே!
திங்கள் ஒளியை உமிழ்ந்து
ஞாயிற்றின் ஒளியை விழுங்கும்
இம்மாலைப் பொழுது
நம்மைப் பிரிந்து சென்ற
தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமன்றோ?!

(42)

பறவைகள் பாட்டு அடங்கிப்போயினவே;
பகல் பொழுது செய்யும் சூரியனும் மறைந்தனனே;
குறைவற்ற நிறைநிலா
என் காமநோய் அதிகரிக்கச் செய்கிறது;
நோய்மிகுதியால் என் நீண்ட கண்கள்
நீரைத்தான் சொரிகின்றன;
மொட்டவிழ் மலர்கள் சூடிய
கூந்தலை உடையவளே!
கொடுமையான வன்மையுடன்
என்னுயிருடன் பகைகொண்டு விளங்கும்
இம்மங்கிய மாலைப்பொழுது
நம்மைப் பிரிந்து சென்ற
தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமன்றோ?!

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

படத்துக்கு நன்றி:
http://arundhtamil.blogspot.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *