-தனுசு
என்
தோள் மீது சாய்ந்தால்
அவளுக்கு இன்பம்
என்
மார் மீது படுத்தால்
அவளுக்குப் பேரின்பம்.
என் அணைப்பு
அவளுக்கு ஆனந்தம்
என் முத்தம்
அவளுக்குப் பேரானந்தம்.
என் மடியில் கிடப்பது
அவளுக்குப் பிடிக்கும்
நான் இல்லையென்றால்
அவள் இதயம் துடிக்கும்.
என் பெயர்
அவளுக்கு வேதம்
என் நெருக்கம்
அவள் உயிரின் நாதம்
அவள்
எனக்குப் பிடித்த கவிதை
அவள்
எனக்குப் பிடித்த ஓவியம்.
பாலூறும் முகம்
தேனூறும் பேச்சு
கள்ளூறும் பார்வை
கொட்டி வைத்திருக்கும்
இந்தப் பாவைக்கு…..
ஒரு சின்னப் பா
எழுத வேண்டும்
அவளின்
முதலாம் பிறந்த நாளுக்கு
ஒரு வரி சொல்லுங்களேன்…..
அவளின்
இந்த
அன்புள்ள அப்பாவுக்கு.
படத்துக்கு நன்றி: http://kranantistraphotography.blogspot.com/


Leave a Reply