நான் அறிந்த சிலம்பு – 72 (20.05.13)

மலர் சபா

புகார்க் காண்டம் – 07. கானல் வரி
(49)

இன்று எமைப் பிரிந்து சென்ற காதலர்
அன்று அன்புடன் சொல்லிச் சென்றார்
‘உனைப் பிரியேன்’ என்று;
அந்தச் சொற்கள் தருகின்ற நிழலதனில்
தங்கியே ஏங்கியே நானும் வாழ்கிறேன்.

மாலைப்பொழுதே!
நீயோ தனித்திருந்து வருந்தி வாழும்
என்னுயிரைக் கவர்ந்திட
எனைச் சூழ்ந்து கொள்கிறாய்!
இங்ஙனம் எமைத் துன்புறுத்தும் நீதானும்,
கோட்டையதன் உள்ளே
வலிமையற்றிருக்கும் வேந்தனவன்
மதிலின் புறத்தே சூழ்ந்து நிற்கும்
பகை வேந்தனுக்கு
என்னதான் உறவு உடையாயோ!

(50)

பகல் செய்யும் கதிரவன் மேற்குக் கடல்புரத்தில்
மறைந்து விட
பலருக்கும் துன்பம் தரும்
காமநோய் அதிகரிக்கச் செய்கிறாய் நீ
மயக்கத்தயுடைய மாலைப்பொழுதே!

நின் கொடுமைதான் காணச் சகியாமல்
நிலமகளும் கண் மூடிக்கொண்டனள்;

நீ மட்டும் வந்திடுவாய் ஆயின்,
எம் தலைவர் வாராதிருப்பார் ஆயின்,
யாம் மட்டுமின்றி இவ்வையமே
இங்ஙனம் துன்புறுமன்றோ..
மாலையே! நீ வாழ்வாயாக!

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

படத்துக்கு நன்றி:
http://www.tamilvu.org/courses/degree/d011/d0111/html/d0111111.htm

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *