Tag: படக்கவிதைப் போட்டி

  • படக்கவிதைப் போட்டி … (52)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12767778_963779777009555_639098695_n
    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.02.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், கவிஞர் மதுமிதா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 51 இன் முடிவுகள்

    மதுமிதா

    12736466_960121290708737_181381344_n

    வணக்கம். இம்முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட படமும், படத்துக்கான கவிதைகளும் சிறப்பாக இருக்கின்றன. முதல் பரிசு என்று தேர்வு செய்வது கடினமாக இருக்கும் வகையில் பங்கேற்பாளர்கள் எழுதுகின்றனர். ஒவ்வொரு முறையும் முன்பு நான் எழுதிய ஏதோ ஒரு கவிதையை நினைவு கூறச் செய்கின்றனர் படைப்பாளிகள்.

    செண்பக ஜெகதீசன்

    நடிப்பாய்…

    நாட்டை யாழும் மன்னனென
    நடையுடை பாவனை ஒப்பனையில்,
    பாட்டும் நடிப்பும் ஓங்கிடவே
    பலர்முன் கூத்தில் நடிப்பவனின்
    வீட்டு ஏழ்மை நிலையினையே
    வெளியே காட்ட முடிவதில்லை,
    நாட்டில் பலரின் கதையிதுவே
    நடிப்பாய்ப் போனது வாழ்வதுவே…!
    -செண்பக ஜெகதீசன்…

    செண்பக ஜெகதீசன் – கச்சிதம்

    ·
    மதிபாலன்

    தெருக்கூத்து

    நிழல் திரைப்படம்
    விழிகளில் நுழைந்து
    நம்மை
    சிறைப்படுத்தி விட்டது !
    நிஜம் இங்கே
    தெருவோரமாய்
    கேட்பாரற்றுக் கிடக்கிறது !
    கட்டை கட்டி ஆடும்
    கலைஞனின் அரிதாரம்
    கவர்ச்சியற்றுப் போனது !
    எட்டுக்கட்டையில் பாடும்
    அவனது பாடலை
    ரசிக்க ஆளில்லை !
    கணினி இசை
    நம்மைக் களவாடிவிட்டது !
    தெருக்கூத்தை
    திரைக்கூத்து
    தின்றுவிட்டது !
    கண்ணீர்த் துளியோடு
    காவியம் படைக்கிறான்
    உண்மைக் கலைஞன் .
    அவனைக்
    கண்டுகொள்ளாமல்
    படத்தில் லயிக்கிறான்
    இனறைய இளைஞன் !

    மதிபாலன் – உண்மை நிலையே இது.

    ·
    சரஸ்வதி ராஜேந்திரன்

    திரைக்கூத்தும் அரசியல் கூத்தும் இன்று
    தெருக்கூத்தாய் பவனி வருகிறது பாரம்பரிய
    தெருக்கூத்து பாதியிலேயே மறக்கடிக்கப்பட்டது
    வேஷம் பலவிதம் மோசம் சாசுவதமாகிப்போனது
    கோஷங்கள் போடுகிறார்சந்தடி சாக்கில் வருமானத்திற்கு
    ஆனாலும் நாட்டிற்கு நல்லது செய்ய எண்ணி
    ஆண் ஒருவர் ஓய்வு அடைந்தும் வேஷம் போடுகிறார்
    நங்கைகள் கூடும் இடத்தில் தாய்ப்பால் அவசியத்தையும்
    ஆடவர்கள் கூடும் இடத்தில் புகை பகை எனகூறி
    சத்தான பேச்சால் விழிப்புணர்வு தூண்டுகிறார்
    வித விதமான வேஷத்தால்,, ஏனெனில் ,மக்கள்
    வேஷத்தில் பழகிவிட்டார்கள் என்று ஆம்
    உலகமே ஒரு நாடக மேடை அதில்
    உலவும் மக்கள் எல்லோரும் நடிகர்கள்தானே
    தெருக்கூத்துப்போய் திருக்கூத்தாய் ஆனது கொடுமை

    சரஸ்வதி ராஜேந்திரன் – கூத்தையும் வாழ்க்கை நாடகத்தையும் ஒன்றாக இணைத்து உவமை நன்று.

    ·
    க.கமலகண்ணன் 

    நம் பாரம்பரியத்தின் அடையாளம்
    பங்குபெற ஒருவருமில்லை தற்போது
    ஒப்பில்லா கலைகள் பல காணவில்லை
    கவிதையாய் அனைத்தையும் பார்த்து வளர்ந்த
    அளவில்லா சிலர் கலைஞர்களாய் மாறிப்போன
    சிலிர்ப்பு மட்டும் உண்மை உள்ளம் சுடுகிறது
    மட்டற்ற கட்டபொம்மனும் சர்க்கரவர்த்திகளும் கெத்து
    களம் காட்டியதல்ல நேரடியாக பார்த்தது போன்று
    காணவில்லையே இப்போது இந்த தெருக்குகூத்து…
    – க.கமலகண்ணன்

    கமலகண்ணன் – இழப்பின் அவலத்தை பேசும் வரிகள்

    வேதா. இலங்காதிலகம்

    தமிழர்களின் பழங்கலை.

    இரண்டாயிரம் வருடங்களின் முன்னரான கலை
    புரண்டது கூத்தெனும் பெயரில் மாறுதலை-
    நாட்டிய நாடகம், தெருக்கூத்து கதையில்
    பாட்டு ஆடல், மேடையேற்றம் களரியில்.
    வண்ண ஆடை, பின்னணி இசையிசைத்து
    எண்ணும் விழிப்புணர்வுக் கருத்து, பக்தி
    பரப்பும் சீர்திருத்தமாக. கோமாளியாதார யுக்தி.
    உரப்பும் மனம் குரலின் சக்தி.

    வாழ்வாதாரத்திற்குக் கூத்தாடும் வறுமை நிலை
    தாழ்வு நிலைக்கின்று சினிமா கணனியலை.
    கட்டாரி கையில் ஏந்தி ஆக்ரோசமோ!
    கரடியை வனத்தில் கொல்லும் இராசாவோ!
    சுவையாகப் பார்த்து இரசிக்குமொரு கூட்டம்
    சபையாகத் தரையில் அமர்ந்தும் நின்றும்
    ஒரு பொழுது போக்கும் உழைப்போர்
    பெரும் ரசிகராய் ஆர்வமுடன் சுகிக்கிறார்.

    வரியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    20.2-2016.

    வேதா – இவரின் பாணியே அலாதியானது. சிந்தையிலும் எழுத்திலும் ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கிறார்.

    முதல் பரிசு – செண்பக ஜெகதீசன்

    அன்புடன்

    மதுமிதா

    23.02.1016

    Share
  • படக்கவிதைப் போட்டி (51)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12736466_960121290708737_181381344_n
    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.02.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், கவிஞர் மதுமிதா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 50 இன் முடிவுகள்!

    மதுமிதா

    12576240_949330908454442_569273548_n

    பார்க்கும்போதே மனதை உருக்கும் படியான காட்சியாக ஷாமினி தான் கண்டதை ஒளிக்கண்ணில் பதிவு செய்த இந்தப் படத்தை சாந்தி போட்டிக்குத் தேர்ந்து எடுத்திருக்கிறார். நான்கு கவிதைகள் வந்திருக்கின்றன. குழந்தையின் பாதுகாப்பு கருதி இடப்பட்ட ப்ளாஸ்டிக் கயிறுடன் குழந்தையின் கண்களும் உருவமும் நம்மைக் கட்டிப் போடுகின்றன. நன்றி பவளா.

    சிறகற்ற பட்டாம் பூச்சி

    ஒரு செங்கல் சுமப்பவளாக
    இருக்கலாம்….
    ஒரு யாருமற்ற தேவதை
    குழந்தையோடு
    அனாதையாகி இருக்கலாம்..
    எவனாவது காதல் சொல்லி
    வயிறு நிரப்பி இருக்கலாம்…
    மானம் போன பிறகு
    நகரம் நரகமே ஆனாலும்
    சாலைவாசியாய் மாறி இருக்கலாம்…
    உடல் விற்பவளாய் விரல்கள்
    மட்டும்…… கயிறோடு
    பிணைத்திருக்கலாம்…
    பசி மட்டுமே பீறிட்டுக்
    கிடக்கும் இந்த கண்களுக்கு
    அவள் தேடும் வயிறு
    கயிறுகளால இறுக கட்டப்
    பட்டிருக்கலாம்…
    ஒரு கனவற்ற காட்டுக்குள்
    கயிறு கொண்டு
    அவள் அடைத்தே
    வைத்திருக்கலாம்…
    இந்த பட்டாம்பூச்சியையும்
    இந்த உலகம் பியித்து
    எறிந்துவிடுமோ என்பது
    அவளின் தத்துவமாக கூட
    இருக்கலாம்..

    கவிஜி

    சிறந்த கற்பனா சிந்தனை. பெண்மையைப் போற்றி யதார்த்தமான வலியினைப் பதிவு செய்திருக்கிறார் கவிஜி கனிவான மனதுடன்.

    கட்டு…

    கல்யாணமெனும்
    கால்கட்டு போட்டபின்னே
    கைக்கு எட்டியது குழந்தை..

    பிள்ளை வயிறு காயாதிருக்க,
    வாயைக் கட்டிய
    வயிற்றைக் கட்டிய உழைப்பு
    பெற்றோருக்கு..

    வாழ்வைக் கட்டிய வறுமையிலும்
    வளர்க்கின்றனர் பிள்ளையை,
    வறுமையைக் காட்டாமலே..

    வாலைக் காட்டுகிறது அது
    இவர்களை
    வேலைசெய்ய விடாமலே..

    வறுமைக்கட்டை அவிழ்க்கமுடியாமல்
    பாசக்கட்டை மறைத்து
    பெற்றோர் போட்டதுதான்
    இந்தப்
    பாசக் கயிறு…!

    -செண்பக ஜெகதீசன்…

    கயிறிலும் கட்டிலும் சிறப்பான வார்த்தை விளையாட்டை நிகழ்த்தி இருக்கிறார் செண்பக ஜெகதீசன்

    இடை விலங்கு.

    செல்வந்தர் பிள்ளைகளை மக்கள் கூட்டத்தில்
    செல்வாக்காய் தோற்பட்டியில் இணைத்துக் கையில்
    நாகரீகமாய் பிணைப்பார் நளினமான செயல்
    நாசுக்கான பூட்டாக விலங்கு கையில்
    கைக்குழந்தையானால் ஏணை கட்டி யருகில்
    மைவிழி கரைய இணைவார் பணியில்.
    நடமாடும் பிள்ளையை என்ன செய்வார்!
    வடம் கொண்டு இடை பிணைத்தார்.

    தடமின்றிப் போகாது கண்காணிப்பில் பிள்ளையது
    முடமாகாது வாழ்விற்கு வேதனம் தேடுவது.
    கடப்பாட்டாளர் ஏழைகளின் எளிமை வழி.
    நடமாடல், விளையாடலுடனேதும் கடிக்கவும் வழி.
    பாசத்தின் பிணைப்பு திருஷ்டிப் பொட்டில்
    பேச வழியற்ற பேந்தும் விழியில்.
    ஆசுடை தாக்கங்கள் பிள்ளையெதிர் காலத்திலே
    மாசுடை சமூகப் பிழையாலும் இந்நிலையே!

    வரிகள் வேதா. இலங்காதிலகம்
    டென்மார்க்.
    13-2-2016.

    குழந்தையின் உருவை எழுத்தில் இன்னுமொருமுறை காட்சிப்படுத்துகிறார். மேட்டுக்குடிக்கும் ஏழ்மைக்குமான வேறுபாட்டைத் துல்லியமாகக் காட்டுகிறார் வேதா இலங்காதிலகம்.

    கலிகாலம்

    சுட்டிப்பெண்ணே உன்
    சுட்டித்தனத்திற்குப் பயந்துதான்
    கட்டிப்போட்டிருக்கிறாள் அன்னை
    கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரைதான்
    கட்டளைகள் செலுத்தமுடியும்
    இந்த நிகழ்வை பார்க்கும்போது
    அந்த யசோதா வீதியிலுள்ளவீடுகளில்
    வெண்ணை திருடிய மாயக்
    கண்ணனை உரலில் கட்டிப்போட்டதுதான்
    நினைவுக்குவருகிறது ..
    தாய் கண்முன்னே காவல்இருக்கும் வரை
    பெண்ணுக்கு பாதுகாப்பு
    மனிதனின் காமம்
    மரணகுழி வெட்டும் சோகம்
    மலராத மொட்டுகளைக் கூட
    மதிகெட்டு கசக்கக் கூடாதென்றே
    அழுத்தும் பணியிலும்
    துரத்தும் கடமையிலும்
    கண்முன்னேயே கட்டிப்போட்டிருக்கிறாள்
    என்ன செய்வது கலிகாலம்
    பெண் பெயரில் இருப்பதால்
    நதிகள் கூட பாழ்படுத்தப்ப்டும் நிலையில்
    நீயெங்கே நான் எங்கே?

    சரஸ்வதி ராஜேந்திரன்

    உவமையும் ஒப்புமையும் அழகு. அக்கறையும் தாய்மை உணர்வும் இயலாமையுடன் சமூக அவலத்தைக் காட்டும் பாங்கும் நன்று சரஸ்வதி ராஜேந்திரன்.

    கவிஜி முதல் இடத்தைப் பெறுகிறார்.

    இன்னும் எழுத வேண்டிய படைப்பூக்கத்தை இந்தப் படத்தின் குழந்தை மனதுக்குள் நின்றபடி எழுப்பியபடியே இருக்கிறார்.

    அன்புடன்
    மதுமிதா

    15.02.2016

    மதுமிதாவின் குதிரை கவிதை!

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (50)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12650584_953119718075561_2009024006_n
    112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.02.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    இந்த வாரப்போட்டியின் நடுவராக கவிஞர் மதுமிதா அவர்கள் தொடருவார்கள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 49 இன் முடிவுகள்

    அன்பினிய நண்பர்களுக்கு,

    12576240_949330908454442_569273548_n

    photoவணக்கம். சில நாட்கள் தாமதமாக வந்துள்ள படக்கவிதைப் போட்டி 49இன் முடிவு இது. படக்கவிதைப் போட்டியின் நடுவர் திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் திடீரென விடுப்பில் செல்ல வேண்டிய நிலையில் இடைக்கால ஏற்பாடாக பிரபல கவிஞர் மதுமிதா அவர்கள் தம்முடைய கடுமையான பணி நேரத்திலும் நமக்காக போட்டியின் நடுவராக இருப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள். அன்புத் தோழி மதுமிதாவிற்கு மனமார்ந்த நன்றி. தொடர்ந்து போட்டி நடைபெறும். நண்பர்கள் உற்சாகமாக கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். இதோ அவருடைய முடிவுரை:

    வணக்கம். எனக்கு குதிரையை மிகவும் பிடிக்கும். இந்தத் தலைப்பிலேயே கவிதையொன்றும் எழுதியிருக்கிறேன். இந்தப் புகைப்படத்தையும், கவிதைகளையும் காண்கையில் உளம் உவகையுற்றேன்.

    புகைப்படம் எடுத்தவருக்கும், புகைப்படத்தைத் தேர்வு செய்தவருக்கும் பாராட்டுகள்,

    அழகிய புகைப்படம். அதற்கேற்ற விதமான கவிதை வரிகள்.

    நம்பிக்கை…

    என்னை நம்பி
    என்தலையில் பணத்தைக் கட்டி
    ஏமாந்துபோகும் மனிதனே,
    உன்னை நம்பு
    உன் உழைப்பை நம்பு..

    உன்னை நம்பி
    உழைத்து ஓடாய்த் தேய்ந்து
    உன்னை உயர்த்திய
    அன்னை தந்தையின்
    நம்பிக்கை சிதறிடாமல்
    கைகொடு..

    என்னையும் கைவிட்டுவிடாதே,
    கைப்பிடியாவது புல்கொடு…!

    -செண்பக ஜெகதீசன்… 

    செண்பக ஜெகதீசனின் இக்கவிதை நீதிக்கவிதை.

    எஸ். நித்தியலட்சுமி

    நாலு சுவருக்குள்
    என்னை அடைத்துவிட்டு
    நீ மட்டும் சுதந்திரமாக
    இருக்க வேண்டும் என் நினைக்கிறாயோ?
    மிருக வதைச் சட்டத்திலிருந்து
    என்னை காப்பாற்ற யாராவது வருவார்களா
    என்று எதிர்ப்பார்க்கிறதோ என்னவோ!

    நித்யலக்‌ஷ்மியின் இந்தக் கவிதை பெண்மனதைக் காட்டுகிறது.

    பட வரி   49
    கண்களில் கனிவோ!
     
    நான்காயிரம்  ஆண்டுகள் கிறிஸ்துவிற்கு முன்னர்
    நாளும் பழக்கிப் பாவித்த குதிரையில் 
    நாகரிகமாக இன்று ஏறிச் சவாரிக்கும் 
    நாரீமணியின் வரவுக்காகக் காத்திருக்கிறானோ பயிற்றுவிப்போன்!
    அன்றி,…பொறுத்திரு மனிதா விரைவில்
    உன் மாணவி வருவாளென்று இதமாய்
    அன்பு மொழி விழியாலே மொழிகிறதோ
    தனக்குத் தானே வாழும் குதிரை!
     
    தன் நிழல் கண்டு பின் நகரும்
    வன்முறையில் நாட்டம் இல்லாக் குதிரை
    பண்களில் பேசுமுயர் நட்புடை பரியிது
    கண்களில் காட்டுவது பெரும் கனிவோ!
    திண்ணெனும் கொம்பின்றி வலிமையானதும், மனிதக்
    கண்களிலுமிரு மடங்கு பெரிய கண்களால்
    மண்ணிலேதும் எதிர்பார்க்காத வாழ்வு எனது
    எண்ணிடு நீயும் என் மாதிரியென்கிறதோ!
     
    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.

    வேதாவின் கவிதை தேர்ந்த வித்தியாசமான அணுகுமுறை

    சரஸ்வதி இராஜேந்திரன்

    பந்தயக் குதிரை

    பந்தயக் குதிரை

    அரேபியாவின் இறக்குமதியே 
    அப்பாவி அழகு குதிரையே  நீ
    குதித்து ஓடியதால் குதிரையானோயோ
    பரிந்து ஓடியதால் பரி ஆனாயோ  ?
    உன்னை மனிதன் அடிமை ஆக்கி
    தன்  இஷ்டத்திற்கு ஆட்டி வைத்தான்
    ஏருழவும்  வண்டி இழுக்கவும் பயன் பட்ட நீ
    இன்று அலங்காரத்திற்கும்பந்தயத்திற்குமாய் 
    உன்னை நம்பியே இருக்கிறான் ஜாக்கி
    உன் வேகத்தை காட்டி வெற்றியை அடையகுதிரை
    ஊக்கமருந்து ஊசி போடாதே என்று இரைஞ்சுகிறதா  ?
    போட்டால்தான் வெற்றியென பாகன் நினைக்கிறானா?
    அரசியல் வாதிகளும் குதிரை சக்தியில்
    ஆரம்பித்து விட்டார்கள் ஓட்டத்தை
    தேர்தல் நேரம் வந்து விட்டதால் 
    இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கேதாவ
    குதிரை பயன் பாடு குறைந்தாலும்
    குதிரை சக்தி என்ற சொல் மட்டும் இன்றும்
    மோட்டார்களிலும் எலக்ட்ரிக் என்ஜின்களிலுமாய்

     

    சரஸ்வதி ராஜேந்திரனின் கவிதையின் தலைப்பும் எண்ணவோட்டமும் ஆற்றொழுக்கு போன்றது. வரிசையாக தேர்தல் வரை கொணர்ந்து சேர்த்துவிட்டார்.

    கொ.வை.அரங்கநாதன்

     அந்நிய அடிமை

    செஸ் விளையாட்டில்தான்
    உனக்கும் எனக்குமான
    முதல் அறிமுகம்

    அந்தக்கால ஆண்மைமிக்கத்
    திரை கதாநாயகர்கள்
    உன் மீதேறி கம்பீரமாய்
    இசைத்த பாடல்கள்மீது
    எனக்கு அளவற்ற காதல்

    கிண்டி மைதானத்தில்
    நீ நொண்டி அடித்து பலரை
     ஓட்டாண்டியாய் ஆக்கியதால்
    ஜெமினி பாலம் ஓரமாய்
    நீயும் சிலை வடிவானாய்

    ஆனாலும் எனக்கொன்று
    புரியவில்லை
    ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்
    ஓடி விளையாடும்
    எங்கள் ஜல்லிகட்டு காளைகள்மீது
    எங்களவர் காட்டும் அக்கரை
    இராணுவத்திலும் காவல்துறையிலும்
    வீரர்களை வேதனையோடு சுமப்பதோடு
    விருந்தினர் முன்னே நடனமும் ஆடும்
    உன் மீது ஏன் பிறப்பதில்லை
    ஓ    நீ
    அந்நிய தேசத்திலிருந்து வந்த
    அடிமை என்பதாலா

     

    அரங்கநாதன் அவர்களின் கவிதையின் தொனி அலாதியானதாக உள்ளது.

    முதல் பரிசுக்கு இந்த ஐந்து கவிதைகளில் கோவை அரங்கநாதன் அவர்களின் கவிதையைத் தேர்ந்தெடுக்கிறேன் .

     

    விஜயவாடாவில் நடந்த பன்மொழிக் கவிஞர்கள் சந்திப்பில் நான் எழுதி வாசித்த குதிரை கவிதை ஏனோ நினைவுக்கு வந்தது.

    அன்புடன்

    மதுமிதா

    9.02.2016

    Share
  • படக்கவிதைப் போட்டி (49)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12576240_949330908454442_569273548_n

    95494202@N04_lதிரு. புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (48)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12583686_946026822118184_1224948226_n
    27182698@N05_rதிருமதி ராமலஷ்மி ராஜன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (9.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (46)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12463850_939138782806988_1760068728_n

    வாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (9.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 44

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12395466_930420910345442_335089823_n
    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி … (43)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12380561_928432517210948_352344013_n
    24942309@N07_rயெஸ்மெக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (42)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12351594_925174920870041_1161854140_o

    95475568@N05_rவெங்கட்சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (40)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12305808_919906761396857_1498062885_n

    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.11.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (39)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12270598_916542848399915_15380368_n

    127764326@N06_rராகுல் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.11.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (38)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12210933_913951735325693_2075831684_o

    94284833@N07_rதுளசிதாசன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.11.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share