Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(70)

    சக்தி சக்திதாசன்

    images (2)

    old-couple-holding-hands

     

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இம்மடலை வரைகிறேன்

    திருமண பந்தம் என்பது இரு மனக்களின் தூய்மையான புரிந்துணர்தலின் வழி ஏற்படும் உறவு அவ்வுறவின் நெருக்கத்தினால் எதிர்பார்ப்பிலாத அன்பு ஒர் மகிழ்ச்சியான திருமண வாழ்விர்கு அடித்தளம் அமைக்கின்றது.

    முந்தைய காலங்களில் இத்திருமணம் என்பது பெற்றோரின் தேர்விற்கமைய உறவினர்களின் ஒப்புதலோடு ஏற்படுத்தப்பட்டது.

    ஆனால் காலமாற்றத்திற்குட்பட்ட சமுதாய மாற்றம் தற்காலத்தில் பெரும்பான்மையான் திருமணங்கள் ஒரு ஆணாலும், பெண்ணாலும் “காதல்” எனும் சொல்லின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது.

    இந்தக் காதல் எனும் உணர்வு ஏதோ இன்று நேற்று ஏற்பட்டதல்ல . இதிகாசங்களில் குறிப்பிட்டபடி “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்” எனும் வரிகளின் அப்டி அக்காலங்களிலேயே இள நேஞ்சங்களில் உணர்வின் அடிப்படையில் எழுந்த உறவு என்பது தெட்டத் தெளிவு.

    அப்படியானல் அந்தக் காலத்துக் காதலுக்கும், இந்தக் காலக் காதலுக்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தோமானல் காதல் எனும் பதத்தை பார்க்கும் சமுதாயத்தின் கண்ணோட்டமே என்பது தெளிவாகும்.

    சரி எதற்காக சக்தியின் இந்தக் காதல் ஆராய்ச்சி எனும் கெள்வி உங்கள் மனதை அரிக்கத் தொடங்கியிருக்குமோ ?

    கவலையை விடுங்கள் இதோ காரணத்தைக் கட்டவிழ்க்கிறேன்..

    இங்கிலாந்து ஊடகங்களில் நேற்ரைய தினம் வெளியான ஒரு கருத்துக் கணிப்பின் தாக்கமே எனது இந்த மடலின் அடியிலுள்ள சாரம்.

    இங்கிலாந்து நாட்டில் 60 வயதுக்கும் மேலான தம்பதியினரிடையே நிகழும் விவாகரத்துக்களின் எண்ணிக்கையின் அளவு அதிகரித்துள்லது என்பதுவே இந்தச் செய்தி.

    அட என்னடா இது 60 வயது என்பது ஒரு அனுபவ முதிர்ச்சி அடைந்த வயது அல்லவா ? இளவயதில் கண்டதும் காதல் எனும் மனப்பான்மையில் இருக்கும் இளவயதினர் தாக்கங்களை நன்கு பரிசீலிக்காமல் மணவாழ்க்கையில் தம்மை ஈடுபடுத்தி விட்டு பின்னால் அந்தத் தாக்கங்களின் விளைவுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் மண்முறிவுக்குள்ளாகுகிறார்கள் என்பது ஓரளவிற்கு புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயம்.

    ஆனால் வாழ்க்கைப் பயண்த்தின் பெரும்பகுதியைக் கடந்து அனுபவம் எனும் புத்தகத்தில் பல அத்தியாயங்களைச் சேர்த்துக் கொண்ட னுதுமை எனும் படியினுள் தம்மைப் புகுத்திக் கொண்டவர்கள் கூடவா மணமுறிவு எனும் நிகழ்வுக்கு தம்மை உட்படுத்திக் கொள்கிறார்கள் என்பது ஆச்சரியத்துக்குரிய ஒரு செய்தியாகிறது.

    தாய், தந்தை, உடன் பிறந்தோர் எனும் சொந்தம் எம்மால் கேட்டு பெறப்படுவதல்ல. ஆனால் வாழ்க்கைத்துணை என்பதின் தெரிவில் நிச்சயம் எமக்கும் ஒரு பங்கு இருக்கிறது. இந்தப்பந்தத்தின் பாதுகாப்பை காப்பார்றிக் கொள்வதன் கடமை ஒவ்வொருவருக்கும் அதிக அளவில் இருக்கிறது. பின் எப்படி இந்த 60 வயதில் மணமுறிவு விவகாரம் ? . . . . .

    இவ்வறிக்கையின் படி 2011இல் 60 வயதிர்கு மேலானவர்களில் விவாகரத்து செய்து கொண்டவர்களில் ஆண்களின் சராசரி மணவாழ்வின் நீளம் 27.4 வருடங்கள் என்றும் பெண்களின் சராசரி மணவாழ்வின் நீளம் 31.9 என்றும் கணகிடப் பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் பொதுவாக விவாகரத்தின் வீதம் வீழ்ச்சியடைந்து கொண்டு வரும் வேளையில் இவ்வாறு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் விவாகரத்தின் வீதம் ஆதீத வளர்ச்சியடைந்திருப்பது அதிசயமே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    இவ்வாய்வின் படி 2011இல் நடைபெற்ற 118000 விவாகரத்துக்களில் 9500 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது இது 1991 இலிருந்து 73% அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

    அதே சமயம் பெண்களை எடுத்துக் கொண்டால் 19991இல் 3200 , 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து 2011இல் 5800 ஆக உயர்ந்துள்ளது.

    இதன் காரணத்தை அராயும் ஆய்வாளர்கள் வாழும் காலம் மருத்துவ வசதிகளினால் நீடிக்கப்படுவது இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள். 1991ம் ஆண்டில் தம்பதியரில் ஒருவர் மரணம் எய்தும் வீதம் 2011ஜ விட அதிகமாக இருப்பது அடஹ்ற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

    அது மட்டுமல்ல காலமாற்றத்தின் படி சமுதாயம் விவாகஎத்தை நோக்கிக் கொண்டிருக்கும் பார்வை மிகவும் மாறுபட்டிருப்பதனால் விவாகரத்து என்பது ஒரு பெரிய இழுக்கு அல்ல என்பதும் இதற்கு இன்னொரு காரணமாக் அமைகிறது.

    அது மட்டுமின்றி 16 வயதிற்கும் 64 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களின் வேலைவாய்ப்பு 1991ம் ஆண்டு 53% ஆக இருந்தது 2011ம் ஆண்டு 66% ஆக உயர்ந்துள்ளதினால் பெண்கல் திருமணம் எனும் பந்ததிற்கு வெளியே கணவனின் பாதுகாப்பின்றி தமது சொந்தக் காலில் நிற்கும் வசதியின் அதிகரிப்பும் இதற்கு மற்றொரு காரணம் என்கிறார்கள்.

    குழந்தைகள் அவர்களோடு இருக்கும் காலத்தில் அவர்களின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் தமது பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுவதால் தம்பதியர் தம்கிடையில் இருக்கும் வேறுபாடுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றும் பிள்ளைகள் வளர்ந்து தனியாக வசிக்கும் போது தம்பதியரிடையே காணப்படும் வேறுபாடுகளின் தாக்கம் அதிகரித்து அது பல இடங்களில் விவாகரத்தை நோக்கி அவர்களை இழுத்துச் செல்கிறது என்கிறார்கள் இதை ஆங்கிலத்தில் Empty nest syndrome என்கிறார்கள்.

    வாழ்வில் பெற்றோருடன் வாழும் காலத்தை விட ஒரு கணவனோடோ அன்றி மனையியோடோ வாழும் காலமே அதிகம். இவ்வாழில் மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லாது போனால் அவ்வாழ்வில் அர்த்தம் அற்றுப் போகிறது. அது தவிர பல சமயங்களில் கணவனோ அன்றி மனைவியோ மற்றவரை வாழ்வு முழுவதும் துன்புறுத்தும் செயல்களும் நடைபெறுகிறது.

    இப்படியான் சூழலில் விவாகரத்து என்பது ஓரளவு அவர்களின் அடிப்படையான மனித வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை.

    ஆனால் விவாகரத்து என்பதனை உள்வாங்கிக் கொள்வதில் உள்ள இலகுத்தன்மை என்னை கொஞ்சம் அசர வைக்கிரது. கருத்து வேர்றுமை, சிறு சிறு பிணக்குகள், சச்சரவு இல்லாத தம்பதியர் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். ஆனால் இதையும் தாண்டி அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் மனப்பான்மையே அவர்களுக்கு வாழ்வில் ஒரு ஸ்திரமான உரவினைக் கொடுக்கிறது.

    அதனை மனதில் கொண்டு வித்தியாசங்களை ஏர்றுக் கொண்டு விட்டுக்கொடுப்புகளுடன் வாழ்ந்தால் வெற்றிகரமான் தம்பத்தியத்தை நடத்தி முடிக்கலாம் .

    எல்லாவர்றிலும் மேலைநாடுகளின் நாகரீகத்தைப் பின்பற்றும் எமது பின்புல நாடுகள் இவ்விடயத்தில் அந்நடைமுறைய மாற்றிக் கொள்வார்களா? இல்லையானல் அவர்களும் இந்தச் சகதியினுள் சிக்கிக் கொள்வார்களா?

    விடை எதிர்காலத்தின் கைகளில் . . . .

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    07.08.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சுதந்திரக் கவிதை

     

    சக்தி சக்திதாசன்

    flag

    அன்னை பாரதத்தின்
    அடிமை விலங்கொடிந்த
    உன்னதமான நாளதில்
    உளமார வாழ்த்துகிறேன்

    சுதந்திரக் காற்றைச்
    சுவாசிக்கும் இன்பத்தை
    சிந்திக்கும் போதெந்தன்
    தித்திக்கும் மனமென்பேன்

    கருணை மனம் கொண்டு
    கடமை தனை எண்ணி
    காந்தி எனும் தந்தை
    கட்டிய பெருங் கோட்டை

    நேற்றைய வியர்வையில்
    இன்றைய செடியொன்றில்
    நாளை மலரும் ரோஜாவாக
    நிமிர்ந்திடும் பாரத தேசம்

    கனவுகளில் மட்டும் அந்த
    கவியுலக வேந்த பாரதி
    கண்டு வந்த சுதந்திரத்தை
    கணக்கின்றிச் சுவைக்கின்றோம்

    உயர்ந்திடட்டும் இச்சுதந்திரம்
    உருவாகட்டும் புதுப் பாரதம்
    இல்லையென்போர் இல்லையென
    இருப்போர்கள் இயங்கட்டும்

    பொருளாதார ஏணியின்
    உச்சத்தை நோக்கி வேகமாய்
    நடைபோடும் பாரத தேசம்
    நிறைகிறது நெஞ்சம் இன்று

    உயிர்கொடுத்து மண் காத்த
    உத்தமர்கள் நினைவு வாழ
    உழைப்போர்கள் உயர்ந்திடும்
    உன்னத பூமியாக மாற்றிடுக!

    இளையோர்கள் விழித்திடுங்கள்
    இதயத்தைத் திறந்திடுங்கள்
    நாளை உங்கள் கைகளிலே
    நெஞ்சுயர்த்தி நடவுங்கள்!

    என்னினிய சொந்தங்களே !
    தமிழன்னை பாதம் பணிந்து
    தமிழாலே கவி தந்து
    வாழ்த்துகின்றேன் அனைவரையும்!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (69)

     

    -சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலுடன் உங்களோடு இணைகிறேன்.

    அரசியல் எனும் அஸ்திரம் பொதுநலத்திற்காகப் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானத்தின் அடிப்படையாகும். ஆனால் அதே அரசியல் , அரசியல் கட்சிகளின் செல்வாக்கைப் பலப்படுத்தும் ஆயுதமாகப் பாவிக்கப்படும் போது ஏற்படும் தாக்கங்கள் மிகவும் சிந்திக்கப்பட வேண்டியவை.

    இங்கிலாந்தைப் பொறுத்தவரை யார் விரும்பினாலோ , விரும்பாமல் விட்டாலோ இங்கு பல்கலாசார அடிப்படையே சமூகங்களில் நிலவுகிறது.

    அதிகமான எண்ணிக்கை வெளிநாட்டவர்கள் இங்கிலாந்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு பல்வேறு திசைகளில் இருந்து, பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து கிளம்பினாலும் இந்நாடு பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் இணைந்து வாழும் நாடு என்பது அனைவராலும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

    இங்கிலாந்தின் கூட்டரசாங்கம் இந்நாட்டின் பொருளாதார நடவடிக்கையைச் சீராக்க எடுக்கும் நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியில் பலமாக செல்வாக்கை இழந்து கொண்டு வந்தது.

    பொருளாதாரக் கொள்கையின் வெற்றியின் அடிப்படையில் தமது அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள முடியாது தவித்தன இக்கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கன்சர்ட்வேடிவ் கட்சியும், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியும்.

    இந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கு ஒரேவழியாக வெளிநாட்டுக்காரரின் குடியேற்றம் அதாவது immigration ஒரு பெரிய பிரச்சனையாக்கப்பட்டது.

    இதற்கு தகுந்த காரணங்கள் இல்லாமல் இல்லை. ஜரோப்பிய யூனியன் நாடுகளின் எண்ணிக்கை விஸ்தரிக்கப்பட்டு முன்னைய கம்யூனிசக் கூட்டமைப்பில் இருந்த கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் பல இவ்வொன்றியத்தில் இணைந்ததால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இலகுவாக இங்கிலாந்துக்குள் நுழைந்து இந்நாட்டின் சமூக நலனின் அடைப்படையில் இவ்வரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது.

    இதனால் இக்கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் இங்கிலாந்துக்குள் நுழைந்தார்கள். இவர்கள் தமது வேலைகளைப் பறித்துக் கொள்வதான உணர்ச்சி இங்கிலாந்து நாட்டின் மக்கள் மனதில் எண்ணம் மேலோங்கியது இதனால் இவ்வெளிநாட்டுக் காரரின் வருகையையும், ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்தின் அங்கத்துவமும் சர்ச்சைக்குரியதாக்கப்பட்டது.

    இக்கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கடையத் தொடங்கியது.

    இக்கட்சிகளின் செல்வாக்கின் முன்னேற்றத்தைக் கண்ணுற்ற கூட்டரசாங்கத்தின் முக்கிய கட்ச்சியான கன்சர்வேடிவ் கட்சியில் தாம் எங்கே அடுத்த தேர்தலில் தோற்று விடுவோமோ எனும் பயம் ஏற்பட்டது.

    விளைவு,

    மக்கள் மத்தியில் தாம் வெளிநாட்டுமக்களின் குடியேற்றக் கொள்கையில் மிகவும் கடினமானவர்கள் எனும் தோற்றத்தைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

    அதன் நிமித்தம் சமீபத்தில் அவர்கள் எடுத்த ஓர் நடவடிக்கை மக்கள் மத்தியில் மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

    அது என்ன என்கிறீர்களா?

    எந்தெந்த நகர்களில் வெளிநாட்டு மக்களின் குடியேற்றம் அதிகளவில் காணப்படுகிறதோ அந்த இடத்தில் ஓர் வாகனத்தில் கட்ட வலம் வரச் செய்யப்பட்ட ஒரு விளம்பரப் பலகையே சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

    ஆமாம் அவ்விளம்பரத்தில், “நீங்கள் இந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறீர்களா? நீங்களாகவே எம்மைத் தொடர்பு கொண்டால் நாம் உங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல ஆவன செய்வோம், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள். ஏற்கனவே உங்கள் இடத்தில் பலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டவிரோதமாக வசிப்பவர்கள் இந்த நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள்” எனும் விளம்பரப் பலகையத் தாங்கிய வாகனம் வலம் வருவதே சர்ச்சைக்குரியதாக்கப்பட்டுள்ளது.

    இதற்கான எதிர்ப்பலைகளின் விரிவாக்கத்தை அடுத்த வார மடலில் பகிர்ந்து கொள்கிறேன்.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(68)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    வணக்கத்துடன் மீண்டும் உங்களை இம்மடலில் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒரு நாட்டின் சுதந்திரம், ஒரு நாட்டின் இறைமை, ஒரு நாட்டின் தனித்தன்மை என்பன அந்நாட்டின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது.

    தமது நாட்டின் பாதுகாப்பிற்காக மற்றொரு நாட்டில் தங்கியிருக்கும் எந்த நாடுமே உளசுத்தியோடு நேர்மையாக தம்முடைய கொள்கைகளை வழிநடத்துவதென்பது முடியாத காரியம்.

    ஆனால் இன்றய உலகச் சூழலில் பெரும்பான்மையான் நாடுகள் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சில சிறுபான்மையான நாடுகளிலேயே தங்கியிருக்கும் நிலையைக் காண்கிறோம்.

    ஒவ்வொரு நாட்டினது பாதுகாப்பிற்கும் அந்நாட்டின் இராணுவமே பொறுப்பாகிறது. தம்முடைய நாட்டிற்கான இராணுவத்தில் இணைந்து பணிபுரிவோர் தம் நாட்டின் மீதுள்ள அதீத பற்ரின் அடிப்படையிலே இணைந்து கொள்கிறார்கள்.

    நாட்டின் இராணுவத்தினருக்கு ஊதியம் கொடுக்கப்பட்டாலும் அது என்னவோ அடித்து விழுந்து ஓடிப்போய் பணியில் அமர்ந்து கொள்லும் வகையில் பெரியதோர் ஊதியமாக இருக்காது. இருந்தாலும் தமது நாட்டிற்கு அந்நியதோர் நாட்டினாலே ஆபத்து என்று கண்டு கொண்டதும் தமது உயிரைப் பணயம் வைத்து அந்நதந்த நாட்டு இராணுவங்கள் போரிடுவது அவ்விராணுவத்தினரின் தியாக மனப்பான்மையையே சுட்டிக் காட்டுகிறது.

    எதிலும், எங்கும் சில விதிவிலக்குகள் இருப்பது போல இவ்விராணுவத்தினர் மத்தியிலும் சில சுயநலம் கொண்ட,வர்கள் இல்லாமல் இல்லை ஆனால் அவர்கள் மிகச் சொற்ப அளவிலேயே கணப்படுவார்கள்.

    சரி என்னடா இவன் இராணுவத்தைப் பற்றி ஏதோ எமக்குத் தெரியாதவைகளைச் சொல்ல வந்தது போல சொல்லிக் கொண்டே போகிறான் என்று நீங்கள் சலிப்படையாதீர்கள் வழக்கம் போல எனது பீடிகைக்கு ஒரு காரணம் இருக்கிறது.

    கடந்தவாரம் இங்கிலாந்து தொலைக்காட்ச்சியில் தேசிய சேவையான பீ.பீ.சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கண்ணுற்ற போது எழுத என் எண்ணப் பரிமாணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மேற்கண்ட ஆரம்பம்.

    சமீபத்தில் இங்கிலாந்து இராணுவம் கண்ட போர்கள் கனமானவை, அதிக உயிரிழப்புகளைக் கொண்டவை. அவை மேற்கொள்ளப்பட்ட காரணங்களின் பின்னனியில் இருக்கும் நியாயத்தைப் பற்றி வாதிப்பதல்ல எனது இம்மடலின் நோக்கம். ஆயுதங்களின் பங்குபற்றி தற்போது இராணுவ சேவையிலிருந்து விடுபட்ட இராணுவ வீரர்களின் நிலை பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியை பற்றிய கருத்தோட்டமே இது.

    அத்தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படி கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளில் உயிரிழந்த பிரித்தானிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை விட தற்கொலை செய்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கையே அதிகம் எனக் கூறப்பட்டது.

    களத்தில் நடைபெறும் போர் என்பது என்ன? மற்றொரு மனித உயிரைக் கொலை செய்வது அதேநேரம் எதிரியால் தனது உயிருக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ எனும் அச்சத்தில் வாழ்வது. இவையிரண்டும் ஒரு மனிதனின் மனதில் எப்போது பெரும்பான்மையாகக் குடி கொண்டிருந்தால் அம்மனிதனின் மனநிலை சீராக இருக்க முடியுமா?

    ஆனால் இத்தகிய சீரற்ற மனோநிலையைத் தாங்கி அதைலிருந்து வெளிவந்து விடக்கூடிய வல்லமை பலருக்கு இருந்தாலும் இம்மனோநிலையில் சிக்கி வாழ விரும்பாமல் தமது வாழ்வை முடித்துக் கொண்டு விடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

    2012ம் ஆண்டில் அப்கானிசஸ்தானில் பணியாற்றிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களில் ஏழு பேர் தமது உயிரைத் தாமாக மாய்த்துக் கொண்டார்கள் எனவும் மேலும் 14 பேரின் மரணம் தற்கொலை எனச் சந்தேகிக்கப்பட்டாலும் அவர்களின் மரணத்தைப் பற்றிய விசாரணை முற்றுப்பெறாததால் அவை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என உத்தியியோகபூர்வமான அறிக்கை சொல்கிறது என்று டெய்லி டெலிகிராப் பத்திரிகை அறிக்கை ஒன்று கூறுகிறது..

    நான் மேற்சொன்ன கணிப்பு பணியாற்றிக் கொண்டிருந்த இராணுவவீரர்களைப் பற்றியது. ஆனால் ஏற்கனவே ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பாணியாற்றி விட்டு இராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்ப்பி சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர்களில் 50க்கும் மேற்பட்டோர் கடந்த வருடம் தமது உயிரைப் பறித்துக் கொண்டார்கள் என்று இதே அறிக்கை கூறுகிறது..

    இராணுவ நடவடிக்கை என்பது பல சமயங்களில் மற்றவர்களின் உயிரைப் பறிக்கும் நடவடிக்கை ஆகிரது. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டோர் மற்றும் தமது கண்முன்னால் தமது நண்பர்களின் உயிரைப் பறிகொடுத்தோர், தம்மோடு உண்டு, உடுத்தி, உறங்கி வாழ்ந்தோர் தமது கண்முன்னாலேயே உயிரிழப்பதைக் கண்ணுற்றோர் என பலவகையானோர் மனோநிலையில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

    ஆனால் இத்தகைய மனஓநிலை பாதிக்கப்பட்டவர்களாக அரியப்பட்டோர் இராணுவ வாழ்க்கையில் இருந்து சகஜ வாழ்க்கைக்குத் திரும்போது அவர்களின் ஆரோக்கியத்தின் தொடர்ந்த பராமரிப்பை அரசாங்கம் சர்வரச் செய்கிறதா எனும் கேள்வியே இப்போது எழுந்துள்ளது.

    இவ்விடயத்தில் இப்போது இங்கிலாந்து ஊடகங்களில் எழுந்துள்ள வினாக்கள் அரசாங்கத் திணைக்களத்தையும் ஓரளவு தட்டி எழுப்பியுள்ளது.

    அது தவிர இத்தகிய தற்கொலைகளுக்குள்ளானவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் எடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஆங்காங்கே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

    எமது பாதுகாப்பிர்காக, எம் நாட்டின் அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கி தமது உயிரைப் பணயம் வைப்போருக்கு நாம் எத்தகய கெளரவத்தை அளிக்கிறோம்? எமது அரசாங்கத்தில் இராணுவப்பிரிவுக்கான அமைச்சர்கள் இதனை எத்தனை தூரம் மிகவும் முக்கியமான விடயமாகக் கருதுகிறார்கள்?

    கேள்விகளுக்கான விடைகள் சாதாரணத் தேர்தல் கோஷங்களாக இல்லாமல் நாட்டிற்க்குச் சேவை செய்யும் மனிதர்களில் நல்வாழ்க்கைக்கு வழிவகுக்கும் கொள்கைகளாக மிளிர வேண்டும் என்பதுவே பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    17.07.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(67)

    சக்தி சக்திதாசன்

     

    vaali

    clip_image002

     

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    துயரம் தோய்ந்த உள்ளத்துடன் , எழுதும் இந்த விரல்கள் முக்கியமான் ஒரு வலுவை இழந்து போன்ற ஒரு கனத்த இதயத்தின் சுமையைத் தாங்கிய நிலையில் இம்மடலை உங்களுக்கு வரைகின்றேன்.

    “வாலி”பத்தின் முக்குயமான பகுதியத் தன் பெயரில் கொண்டிருந்ததினால் அவர் என்றுமே எங்களுடன் வாலிபக் கவிஞனாக இருந்து விடுவார் என்று நம்பிக் கொண்டிருந்தோம் போலிருக்கிறது. காலப்புத்தகத்தில் கடைசி அத்தியாயத்தை அனைவர்க்கும் எழுதும் ஒரு மாபெரும், மறைக்க முடியா எழுத்தாளன் காலன் எம் அன்புக்குரிய வலிபக் கவிஞர் வாலியின் வாழ்க்கைப் புத்தகத்திலும் கடைசி அத்தியாயத்தை எழுதி விட்டான்.

    என்ன செய்வது ? தமிழுலகம் ஒரு உன்னதப் படைப்பாளனை இழந்து விட்டது. தமிழ்த் திரையுலகம் நான்கு தலைமுறைகளுக்கு பாடல்கள் தந்த ஒரு வித்தக பாடலாசிரியனை இழந்து விட்டது.

    நானோ ?

    எப்போதும் தப்பாமல் என்னைத் தட்டிக் கொடுத்து நேசமிகு நல்ல பல கணங்களை எனக்குக் கொடுத்த ஒரு பாசமிகு குருநாதனை இழந்து விட்டேன்.

    ரங்கநாதன் எனும் இந்த ஸ்ரீரங்கம் தந்த ஒப்பர்ர ஒரு கவிஞனை , இலக்கிய வித்தகனை, தமிழை நேசித்தவனை நாம் இழந்து விட்டோம்.

    என் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசனை அவர் வாழும் நாளில் நான் சந்திக்க முடியாமல் போய் விட்டதே எனும் ஆதங்கம் எப்போதும் என் மனதினுள் அழப்பதிந்து உறுத்திக் கொண்டே இருக்கிறது.

    அப்படியில்லாமல் என்னைக் கவர்ந்த இன் இனிய கவிஞர் வாலியை நான் என் வாழ்நாளில் நான் சந்தித்து விட வேண்டும் எனும் இலக்கிய தாகமே எம் சந்திப்புக்கு வித்திட்டது.

    அப்போது நான் தோழி நிர்மலாவின் “நிலாச்சாரல்” இணையத் தளத்தில் ஓய்வற்று எழுதிக் கொண்டிருந்த நேரம் .

    “ சக்தி தமிழக இலக்கியப் பிரபலங்களுடனான ஒரு நேர்காணல் தொடரை நீங்கள் எமக்காகத் தந்தால் என்ன ? “ என்று தோழி சிறு பொறியைத் தட்டி விட அது ஒரு அழகிய தொடராக ஒளியேற்றியது.

    எனது நீண்டநாள் மனவோசையான “கவிஞர் வாலியுடனான சந்திப்பு” என்பதற்கு இவ்நேர்காணல் ஒரு வழிகோல் சமைத்தது என்பதுவே உண்மை.

    ஆனால் அச்சந்திப்பு ஒரு ஊடகத்திற்கான நேர்காணல் சந்திப்பு என்பதை விட என் உளம் நிறைந்த “கவிஞர் வாலியுடன்” ஒரு ஒப்பற்ற நீண்டநாள் உறவுக்கு வழி சமைத்தது என்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது.

    அவ்வுறவு நட்பு அல்ல அதைத் தாண்டிய ஒரு “குரு சிஷ்ய” பக்தி என்றே சொல்ல வேண்டும். கவினர் வாலி என்பவரைப் பற்றி அதுவரை ஊடகங்களினூடாக அறிந்தவைகள் ஏராளம். ஆனால் அவருடனான நேர்ச் சந்திப்பு என்னுள் அவரிப்பற்ரி இருந்த மதிப்பை மென்மேலும் பன்மடங்கு உயர்த்தியது .

    “உண்மை , நேர்மை, உழைப்பு ” என்பனவற்றிற்கு கவிஞர் வாலி ஜயா கொடுத்த முக்கியத்துவம் உண்மையிலேயே என்னைச் சிலிர்க்க வைத்தது.

    இத்தகைய ஒரு உன்னத கவிஞன் அனைத்திற்கும் மேலாக ஒரு உத்தம மனிதன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதுவே எனக்குப் பெருமை,/ இ,ம் மாபெரும் கவிஞன் வலம் வந்த மண்ணிலே நானும் என் கால் பத்தித்திருக்கிறேன் என்பதுவே என் வாழ்வில் எனக்குப் பெருமை சேர்க்கும் விடயம்.

    ஒரு சாதாரண் ஈழத்தமிழன் புலம் பெயர்ந்து இங்கிலாந்திலே வாழ்பவன் ஏதோ கொஞ்சம் எழுத்திலே மோகம் கொண்டிருப்பவன் என்று எதையுமே கணக்கிலெடுக்காமல் என்னை மிகவும் அன்பாக உபசரித்த அந்த மனிதாபிமானம் மிக்க கவிஞர் வாலி வானளாவும் வகை உயர்ந்தவர் என்பதுவே உண்மை.

    அந்நாட்களில் கைகளினால் எழுதும் பிரதி போல கணனி மூலம் நான் தயாரிக்கும் “தமிழ்ப்பூங்கா” எனும் இதழைப் பார்த்து எனக்கு ஆக்கபூர்வமான பல ஆலோசனைகளைத் தந்தலிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முன்னர் வரை எப்போது நான் தமிழகம் வரும்போதும் நேரடியாகவும், இங்கிலாந்திலிருந்து தொலைபேசி வழியாகவும் தொடர்ந்து என்னைத் தட்டிக் கொடுத்து வந்த ஒரு உயர்ந்த இலக்கியச் சிற்பியின் இழப்பு என்னைத் துயரத்திலாழ்த்துகிறது..

    இவரைப் பற்றி பல செய்திகளை நான் உங்களுடன் இம்மடலின் மூலம் இனிவரும் காலங்களில் பகிர்ந்து கொள்வது நான் செய்ய வேண்டிய காலத்தின் கடமை என்றே கொள்கிறேன்.

    இம்மடலின் முடிவில் அவருடைய இரண்டு சிறிய ஆரம்பக் கவிதைகளை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    அவர் பள்ளியில் படிக்கும் போது அவரின் “வாலி” எனும் புனைப்பெயரைக் கண்டு “வாலில்லையே உனக்கு பின் எப்படி வாலி என்று . . . . “ பரிகசித்த ஆசிரியருக்கு

    காலில்லை என்பதால்

    காடிகாரம் ஓடாதா ?

    வாலில்லை என்பதால்

    வாலியாக முடியாதா ? என்று இன்பத் தமிழாலே பதிலடி கொடுத்தாராம்

    இதோ என்ன்னைப் போன்றவர்களுக்கு அவர் தரும் ஊட்டச் சத்து ,

    ஊக்கு விக்க ஆளிருந்தால்

    ஈக்கு விக்கும் ஆள்கூட

    தேக்கு விற்பான்

    ஆமாம் எளிமை, இனிமை, புலமை இவையனைத்தின் மறுவடிவம் தாம் என் கவிஞர் வாலி ஜயா. இவரின் கடைசி அத்தியாயத்தை எழுதி விட்டதாக அந்தக் காலன் எண்ணலாம் ஆனால் இவ்வகிலத்தில் தமிழை நேசிக்கும் கடைசித் தமிழன் உள்ள வரை எம் வாலி ஜயா என்றும் முதிரா “வாலி”பனாக வாழ்ந்து கொண்டேயிருப்பார்.

    அவரின் ஆத்ம சாந்திக்காக ந்ல்லாம்வல்ல என் மனம் வாழும் திருஅண்ணாமலையான் பாதம் பணிகிறேன்.

    துயரத்துடன்

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (66)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !
    அன்பான வணக்கங்களுடன் உங்களுடன் அடுத்த மடலில் உறவாடுவதில் மகிழ்கிறேன். காலமாற்றம் மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் சில முன்னேற்றங்களாகவும், வேறு சில பின் தள்ளல்களாகவும் இருக்கின்றன.

    ஒவ்வொரு நாடும் காலத்தோடு தனது நாட்டு மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவே அந்நதந்த அரசாங்கங்களின் மூலம் முயற்சிக்கின்றன.

    ஆதிவாசிகளான காடுகளில் வாழ்ந்த மனிதன் இன்று நாகரீகமாக நகரங்களில் வசதிகளோடு வாழும் ஒரு நிலை மக்களின் தேவைகளின் நிமித்தமே சாத்தியமாயிற்று.

    நான் வாழும் இந்தப்புலம் பெயர் தேசமான இங்கிலாந்து நாட்டில் மக்களின் வாழ்க்கை முறையில் காலகாலமாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

    எத்தனையோ நூறு வருடங்களாகப் பொருளாதார வளர்ச்சியில் துரித முன்னேற்றத்தைக் கண்ட நாடு இங்கிலாந்து. பல கண்டு பிடிப்புகள், பல ஆராய்ச்சிகள் என்பனவற்றின் பிறப்பிடமாக இவ்விங்கிலாந்து தேசம் விளங்கியிருக்கிறது.

    ஆனால் இன்றோ பொருளாதார வீழ்ச்சி எனும் சிக்கலுக்குள் அமிழ்ந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் ஜரோப்பிய நாடுகளில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    இப்பொருளாதாரச் சிக்கலுக்கு யார் காரணம் அல்லது இது ஏன் நிகழ்ந்தது எனும் ஆராய்ச்சிகளை ஒரு பக்கம் வைத்து விடுவோம். நம் முன்னே பூதாகரமாக இருக்கும் உண்மை நாம் பொருளாதாரச் சிக்கல் எனும் நிலைக்காட்பட்ட ஒரு தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே.

    அடிமட்ட மனிதனும் தன் அன்றாட வாழ்விற்கு அல்லாடக் கூடாது எனும் காரணத்திற்காகவே இங்கிலாந்தில் பல காலங்களாக “சமூக வாழ்வாதாரம் (சோஷல் வெல்வெயார்) “ எனும் ஒரு சலூகை அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    அதாவது வேலையின்றித் தவிக்கும் மக்களுக்கு அவர்களின் அன்றாடத் தேவைகளுக்காக ரசாங்கம் உதவிப் பணம் கொடுத்து வருகிறது.

    ஆனால் இத்தகைய சலுகையே இன்று மக்களின் சோம்பலுக்கு வித்திட்டு விட்டது எனும் கருத்தே பலரின் மத்தியில் மிகவும் பாரமான வினாவாக எழுந்துள்ளது.

    வேலையின்றி அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தையே தமது தொழிலாகக் கொண்டு வாழும் ஒரு பகுதி இன்று சமுதாயத்தில் உருவாகி விட்டது என்பது அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகக் காணப்படுகிறது.

    அரசியல்வாதிகளின் மத்தியில் காணப்படும் இந்த ஒருமித்த அடிப்படைக் கருத்துக்குக் காரணம் பொதுவான மக்களின் மனதில் அலையடிக்கும் பொதுக்கருத்துக் கணிப்பே.

    இத்தகைய “அரசாங்க உதவிப்பண” வாழ்வாளர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தாலும் இவர்களைப் பற்றிய அன்றாட ஊடகங்களின் அங்கலாய்ப்புகளும், இவர்களின் சலுகைத் துஷ்பிரயோகத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் அரசாங்கத்திர்கு வரிப்பணத்தைச் செலுத்தி ஒழுங்காக வாழும் மக்களின் மனதில் ஒருவகை ஆவேசத்தைக் கிளறி விட்டுள்ளது.

    இதற்கு மிக முக்கியமான காரணம் இன்றையப் பொருளாதாரச் சிக்கல் என்று சொன்னால் மிகையாகாது. அரசாங்கத்தின் வரவு செலவுக் கணக்கைச் சீர் செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துகிறோம் என்று கூறி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட இன்றைய கூட்டரசாங்கம் இந்த மூன்றரை வருடங்களில் அதற்கான வழி பல அரசாங்கத் திட்டங்களை கட்டுப்படுத்திப் பொதுத்துறைகளுக்கான செலவுகளைக் குறைப்பது என்று கூறி மக்களுக்கான சேவையில் பலரைக் குறைத்து விட்டது என்று கூறலாம்.

    தாம் தமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்காகவே வரிப்பணத்தைச் செலுத்துகிறோம் ஆனால் தமக்கான சேவைகளைக் கட்டுப்படுத்தி, வேலையில்லாமல் வாழ்வோர்களுக்கான உதவிப் பணத்தை மட்டும் தாராளமாக வழங்குவது எவ்வகையில் நியாயமாகும் என்று பலரின் மனதில் சீற்றம் தோன்றியுள்ளது.

    அது மட்டுமல்ல மற்றைய நாடுகளில் இருந்து அகதிகளாகவும், குடியேற்றம் செய்பவர்களும் இதே சலுகைகளைப் பெறுவது எவ்வகையில் நியாயம் என்பது வலதுசார அரசியல்வாதிகளினதும், வலதுசார எண்ணங் கொண்டவர்களினதும் வாதம்.

    அதேசமயம் அரசாங்கம் செய்யும் ஆட்குறைப்பு முதலான பொருளாதாரக் கட்டுப்படுத்தும் கொள்கைகளின் மூலம் பதிவியிழந்த பலர் இத்தகைய உதவியகளைக் குறைப்பதன் மூலம் பாதிக்கப்படுகிறார்களே ! இவர்களை சோம்பேறிகள் என்று வாதிடுவது எவ்வகையில் நியாயமாகும் என்று வாதிடுகிறார்கள் மறுசாரார்.

    பணிபுரியும் போது மிகவும் வசதியாக பெரிய மனைகளில் வசித்து வந்தவர்கள் பதவியிழந்த பின்பும் அதே மனையில் வசிப்பதற்கு எதற்காக அரசாங்கம் அவர்களுக்கு உதவிப்பணம் கொடுக்க வேண்டும் ? வேலையை இழந்து விட்டால் அவர்கள் தமது பெரியமனைகளில் வசிக்க வசதியில்லை என்றால் தம்மால் பராமரிக்கக் கூடிய சிறிய மனைகளுக்கு இடம் மாறவேண்டியது தானே நியாயம் என்று வாதிடுபவர்கள் பலர்.

    நாம் பணிபுரியும் போது அனைவரையும் போலத்தானே வரிப்பணம் செலுத்தினோம் இப்போது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் பதவியிழந்த நாம் எமது இல்லத்தை விட்டு குடிபெயர்ந்து சிறிய இல்லங்களில் வசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயமாகும் என்பது மறு பகுதியினருடைய வாதம்.

    வேலையற்றோருக்கு கிடைக்கும் உதவிப்பணத்தை விட முறைவான தொலையே வேலை செய்யும் போது ஊதியமாகக் கிடைக்கிறது எனவே நாம் வேலை தேடிச் செய்வது எமக்கு நஷ்டமே என்பதால் அரசாங்க உதவிப்பணத்தில் வாழ்வதையே தமது பணியாகக் கொண்டோர்கள் இல்லாமலில்லை.

    இவர்களில் பலர் இதை மிகவும் வெளிப்படையாக ஏதோ தமது புத்திசாலித்தனம் போல தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் இதை ஊடகங்கள் வேறு ஊதிப் பெரிதாக்குகிறார்கள். அதுவும் அவர்கள் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றால் அதைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

    இந்த பொதுமக்களின் அபிப்பிராய அலையைத் தமக்கு சாதமாக்கிக் கொள்ள கூட்டரசாங்கத்தின் முக்கிய கட்சியான கன்சர்வேடிவ் கட்சி முயற்சிக்கிறது. அதன் பலனாக அவர்கள் கொண்டு வந்த பல புதிய சட்டங்கள் நேற்றிலிருந்து (15.07.2013) அமுலுக்கு வந்துள்ளன.

    இதன் விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (65)

    சக்தி சக்திதாசன்

    ramsey

    அன்பினியவர்களே வணக்கம் ,
    உங்களை அடுத்த மடலில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் உங்கள் முன்னே நான். விசித்திரமான சூழல் வித்தியாசமான காலங்கள் மாற்றங்களை வலுவாக அனைவர்க்குள்ளும் புகுத்துகின்றன.

    மனிதர்களுடைய வாழ்க்கை முறையை நிர்ணயிக்கும் காரணிகள் , அவனின் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள், அவனுடைய எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தைக் கணிக்கும் வழிமுறைகள் என்பன ஒவ்வொரு சமுதாயத்திலும் அந்நாட்டின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.

    இம்மென்னெடுப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஜனநாயகம் என்று சொல்லப்படும் ஒரு மனிதன் ஒரு வாக்கு என்னும் முறை சில நாடுகளிலும் , சர்வாதிகாரம் என்று தம்மைத்தாமே அந்நாட்டுக்கு அதிபர்களாக்கிக் கொள்ளும் வகையில்,  அந்நாட்டு ராணுவங்களினால் மக்களைக் கட்டுப்படுத்தும் மற்றொரு வகையுமே பிரதானமாக இன்றைய நடைமுறையில் எம்முன்னே முன்னெடுக்கப் படுகின்றன..

    இம்முறைகளில் ஜனநாயகம் எனும் முறையில் நடக்கும் தேர்தல்களில் நடக்கும் தில்லு முல்லுகளைப் பற்றி நான் இங்கே கணக்கிலெடுக்கவில்லை அந்நாட்டின் அரசியல் நடப்புகளை பற்றியே குறிப்பிடுகிறேன்.

    சரி இந்த வகையிலே நான் இவ்வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்த விடயத்திற்கு வருவோம்.

    இங்கிலாந்து அரசியலில், அரசியல் உலகில் பொதுவாக பேசப்படும் ஜனநாயக முறையிலான வகையிலேயே தேர்தல் நடைபெற்று அரசாங்கங்கள் தெரிவாகின்றன.

    இங்கிலாந்தில் 1900 ம் ஆண்டு வரை இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே அரசியலில் ஈடுபட்டு இருந்தன. அவை கன்சர்வேடிவ் கட்சியும் , லிபரல் கட்சிகளுமே யாகும். இவைகளில் கன்சர்வேடிவ் கட்சி பிரபுக்களையும் , நில முதலாளிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது லிபரல் கட்சி தாம் சுதந்திரமான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அக்கட்சியிலும் பணமுதலைகளே இருந்தார்கள்.

    இதன் காரணமாக சாதாரண அன்றாடத் தொழிலாளரின் அபிலாஷைகளை முன்னெடுக்கும் வகையிலான அரசியலைப் பிரதிபலிக்கும் கட்சி இல்லை என்ற தொழிலாளரின் ஆதங்கம் 1900ம் ஆண்டு இங்கிலாந்தில் லேபர் கட்சியைத் தோற்றுவித்தது,

    சாதாரண தொழிலாளர்களின் கூடுதலாக ஆரம்பித்த இக்கட்சிக்கு பலகாலங்கள் அரசாங்கம் அமைக்கும் வகையிலான ஆதரவு இருந்ததில்லை. அக்கால லிபரல் கட்சியுடன் இணைந்து அவர்களின் அரசாங்கம் அமையும் போது தமது கொள்கைகளை சிலவற்றை அதனுடன்  முன்வைப்பது ஒன்றே இவர்களது அன்றைய அரசியல் முனைப்பாக இருந்தது.

    1916ம் ஆண்டளவில் லிபரல் கட்சி இரண்டாக பிளவு பட்ட போதே லேபர் கட்சியின் செல்வாக்கு மிகைப்பட்டது. அக்கட்சி தனது முதலாவது அரசாங்கத்தை 1924ம் ஆண்டு “ராம்சி மக்டொனால்ட்” என்பவரின் தலைமையில் அமைத்தது. இவர் லேபர் கட்சியின் முதலாவது பிரதமராவார்.

    இங்கிலாந்தின் தொழிலாளர் யூனியன்கள்  இணைந்து அவ்விணைப்பினால் உருவானதே லேபர் கட்சியாகும். இன்றுவரை இங்கிலாந்தின் ஏதாவது தொழிலாளர் யூனியனில் மெம்பராக இருந்தால் அவர்கள் செலுத்தும் சந்தாப்பணத்தின் ஒரு பகுதி லேபர் கட்சிக்கு அளிக்கப்படுகிறது.

    இது தவறு என பல காலமாக வாதிட்டு வந்த கன்சர்வேடிவ் கட்சியின் பிரச்சாரத்தினால்,  யாராவது தொழிலாளர் யூனியன் மெம்பர் விரும்பினால் தமது சந்தாப்பணத்திலிருந்து லேபர் கட்சிக்குத் தாம் பணம் கொடுக்க விரும்பவில்லை என்று அறிவித்தால் அவர்களது சந்தாவிலிருந்து லேபர் கட்சிக்குப் பணம் செல்வதை நிறுத்தலாம் என்பது சட்ட மூலமாக்கப்பட்டது.

    சரி இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்கிறீர்களா?

    இன்றைய காலகட்டத்தின் அரசியல் மாறிவிட்டது. லேபர் கட்சிக்குள் தொழிலாளர் யூனியனின் ஆதிக்கம் கூடி அவர்கள் கண்மூடித்தனமான கோரிக்கைகளை முன்வைப்பதினால் நாட்டின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க முடியாதிருக்கிறது எனும் வாதத்தை முன்வைக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்குப் பலம் அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்டு லேபர் கட்சித் தலைவர் “எட் மில்லிபாண்ட்” லேபர் கட்சியை தொழிலாளர் யூனியன்களிலிருந்து அந்நியப் படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

    ஆமாம் கட்சியை ஸ்தாபித்தவர்களின் உறவைத் துண்டித்து அவர்களை அந்நியப் படுத்தும் முயற்சியில் “எட் மில்லிபாண்ட்” வெல்வாரா? இங்கிலாந்து மக்களின் மனதில் உள்ள லேபர் கட்சிக்கும், யூனியன்களுக்கு உள்ள தொடர்பின் பிரதிபலிப்பு மாறுமா?

    காத்திருப்போம் காலம் விடையளிக்கும்

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    ed_66455179_66455178

     

     

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(64)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிமையான வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சியுறுகிறேன்.

    சின்னச் சின்ன சில்லறை விடயங்கள் பல எம் வாழ்வில் நாளும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றைச் சில்லறை விடயங்களாக ஒதுக்கி விட்டு விட்டுப் போவோரும் இருக்கிறார்கள், மிகவும் பிரதானப்படுத்தி அல்லொகல்லோபப் படுவோரும் இருக்கிறார்கள், அவற்றிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையானவற்றை தெரிந்தெடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

    இதுவே மனித வாழ்க்கையின் யதார்த்தம்.

    பண்பு என்பது மனித வாழ்க்கையில் மாபெரும் பங்கெடுக்கிறது. அப்பண்பு பலவிதமான வடிவங்களில் நம்மிடையே பரிணமிக்கின்றது.

    அப்பரிமாணங்களின் விளைவுகள் பலவிதமான வித்தியாசமான முடிவுகளுக்குள் எம்மைத் தள்ளுகின்றன.

    இங்கிலாந்திலே “ஸ்யின்பறீஸ் (Sainsburys)” எனும் சூப்பர் மார்க்கெட் பிரபல்யமானது. இங்கே நடந் ஒரு சுவாரச்ய சம்பவத்தை இன்று ஒரு பத்திரிகையில் படித்த போது இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

    அது என்ன என்கிறீர்களா? இதோ ,

    லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள “கிறேவோர்ட்(Crayford)” எனும் இடத்திலுள்ள இப்பிரபல்யமான சூப்பர் மார்க்கெட்டில் காஷியராகப் பணிபுரியும் ஒரு இளம் பெண்ணுக்கு வந்ததாம் கோபம் பாருங்கள் . . . .

    அப்படி என்னதான் நடந்தது என்கிறீர்கள் ?

    இவரது செக் அவுட் கவுண்டரில் தான் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க வந்த ” ஜோ கிளார்க்” எனும் பெண் வாடிக்கையாளர் செல் போனில் யாரோடு உரையாடிக் கொண்டே இவரது செக் அவுட்டில் நின்றாராம் .

    செக் அவுட் கண்ணகி மதுரையை எரிக்கவில்லை இவ்வாடிக்கையாளரையே எரித்து விடுவதைப் போல பார்த்து ,

    செல்போன் தொடர்பைத் துண்டித்தால் தான் அவருக்கு தான் சேர்வ் பண்ணுவேன் என்று சொல்லி விட்டாராம் போங்கள் !

    வந்ததே ஆத்திரம் அந்த வாடிக்கையாளருக்கு சாதாரண செக் அவுட் பணியாளரான உனக்கு எனது தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கச் சொல்ல என்ன அருகதையிருக்கிறது என்று வெடித்து, பாய்ந்து சென்று அந்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினரிடம் முறையிட்டாராம் !

    பண்பாவது , மண்ணாங்கட்டியாவது எமக்கு எமது வாடிக்கையாளரின் பணமே முக்கியம் என்று எண்ணிய நிர்வாகத்தினர் அப்பெண் பணியாளருக்காக அவ்வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கோரினார்களாம்.

    ஆனால் விடயம் அத்தோடு நின்று விடவில்லை , அவ்வாடிக்கையாளரின் பண்பற்ற முறையைக் கண்டித்தும், அப்பெண் பணியாளரின் வைராக்கியத்தைப் பாராட்டியும் , அச் சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகிகளின் நடவடிக்கையைக் கண்டித்தும் இணையத்தளம் மூலமான கண்டங்கள் குவிந்து கொண்டிருக்கின்றனவாம்.

    இந்த செல்போன் தொடர்புகள் பற்றி நீங்களும் பல இடங்களில் அனுபவப்பட்டிருப்பீர்கள். எங்கு பார்த்தாலும் அனைவர் கைகளிலும் ஒரு செல்போன் ! அனைவரும் அதில் குறுஞ்செய்தி அனுப்புவதும், இணையத்தளங்களை வலம் வருவதும், சமூக வலைத்தளங்களில் சம்பாஷிப்பதும், பேசுவதும் என எப்போதும் குனிந்த தலை நிமிராமல் ( ஓ ! அது கூட பண்புதானோ ?) நடப்பதையே பார்க்கிறோம்.

    ஏறுபோல் பீடுநடை என்றவர் இன்றிருந்தால் அவரும் குனிந்த படிதான் நடப்பாரோ ?

    அது மட்டுமா? அன்று நான் காரில் போய்க் கொண்டிருக்கும் போது நடப்பவர் சாலையைக் கடப்பதற்கான ஒரு குரொசிங் ப்க்கத்தில் ஒரு நடுத்தர வயதான பெண்மணி அச்சாலையைக் கடப்பதற்குக் காத்திருக்கும் பாணியில் காதோடு பொருந்திக் கொண்ட செல்போனுடன் நின்றிருக்க , இங்கிலாந்து சாலை விதிகளுக்கமைய நானும் அவர் கடப்பதற்காக காரை நிறுத்தினேன். அப்பெண்மணிக்கு வந்ததே ஆத்திரம் பாருங்கள் . . . . .

    என்னைப் பார்த்துச் சீறும் பாணியில் கையைத் தூக்கி ” ஏன் நிற்கிறாய் ? போ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு . . . . . “ எனும் பாணியில் கையால் எனைப்பார்த்துச் சைகை காட்டினார்.

    சாலை விதிகளை நோவதா? செல்போனை நோவதா ? அப்பெண்ணை நோவதா ? இல்லை என்னத்தான் நோவதா ? என்று தெரியாமல் அசடு வழிய காரை நகர்த்தினேன்.

    புகையிரதங்கள் அல்லது பேரூந்துகளில் பயணம் செய்யும் போது முன்னும் பின்னும் உட்கார்ந்திருப்பவர்கள் சிலர் ஆங்கிலத்திலும், வேறு சில வெளிநாட்டுக்காரர் தமது மொழியிலும் ஏதோ தாம் தமது வீடுகளில் இருப்பது போல மிகவும் சத்தமாக சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பார்கள்.

    எனது அருகிருந்தவர் சூள் கொட்டவும் அடடா ! என்னைப் போல எண்ணும் மற்றுமொருவர் எனும் நப்பாசையில் நாம் அருகே திரும்பினேன் . . . ஜயகோ ! அவரது சூள் கொட்டலின் காரணம் என்ன தெரியுமா ? தான் குருஞ் செய்தி அனுப்பும் போது இவர்களின் பலத்த சம்பாஷணை தனக்கு இடையூரு செய்கிறதாம் . . . . . .

    மற்றொரு பக்கத்தில் அமர்ந்திருக்கும் மற்றொருவரோ தனது காதுகளுக்குள் செல்போனைப் பொருத்தி படல்களைக் கேட்டு ரசிக்கும் பாணியில் கண்களை மூடிக் கொண்டே தலையாட்டிக் கொண்டிருந்தார்.

    அனைத்தையும் பார்க்கும் போது எது பண்பு எனும் குழப்பம் என்னையே சூழ்ந்து கொண்டது. ஓ! நாம் தான் இடம் மாறி உட்கார்ந்து விட்டோம் இல்லைக் காலம் மாறி பிரந்து விட்டோம் என்று எனக்கு நானே சமாதானம் கூறிக் கொண்டேன்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(62)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலுடன் உங்கள் முன்னே !

    நம் பிறந்து வளர்ந்து எமது தாய்மண்ணில் தவழ்கிறோம். எமது தாய்மொழி எமது உதடுகளில் இருந்து முதல் மொழியாக வெளி வருகிறது.

    இதே முறையில் வளர்ந்து பெரியவர்களானதும் அம்மொழியின் விரிவாக்கம் எமது உள்ளத்தினுள் வியாபித்து விடுகிறது. வசரத்தில், ஆபத்தில் எம் தாய்மொழியே முதல் மொழியாக எம் உதடுகளுக்குளிருந்து பீறிட்டு வருகிறது.

    ஆம் அம்மொழி , அம்மொழியை நாம் பேசும் வகை, எமது மொழியின் உச்சரிப்பு இவைகளே எமது அடையாளங்களாகின்றன.

    தாய்மொழியைத் தொலைத்தால் நாம் முகவரி தொலைந்தவர்கள் ஆகிறோம்.

    ஆங்கிலம் என்பது ஒரு அகிலம் முழுவதுமே பேசப்படும் பொதுமொழியாகக் கணிக்கப்படுகிறது இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அவர்களின் தாய்மொழி ஆங்கிலமாக இருந்து வருகிறது.

    ஆனால் இம்மொழி இந்நாடுகளில் பேசப்படும் போது அவர்கள் உச்சரிக்கும் முறையில் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இலகுவாகக் கூறி விடலாம். ஏனெனில் அவர்களது ஆங்கில உச்சரிப்பு அந்தந்த நாடுகளுக்கே உரித்தான வகியில் அமைந்திருக்கும்.

    ஒரு உதாரணத்திர்கு இலங்கைத் தமிழர் ஒருவரை எடுத்துக் கொள்வோம் அவர் தாமிழ்நாட்டில் வந்து தமிழ் பேசும்போது அவர்களுக்கேயுரிய பொதுமொழியாகத் தமிழ் இருந்தாலும் அவர் இலங்கையச் சேர்ந்த தமிழர் என்பதை தமிழ்நாட்டில் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள். இல்லையா?

    என்னடா இது ? வழக்கத்திற்கு விரோதமாக மிகவும் அழமான கருதை அழுத்தமான பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று எண்ணுகிறீர்களா?

    சரி எனது இந்தப் பீடிகைக்கான காரணத்தைப் பார்ப்போமே !

    சமீபத்தில் நான் படித்த ஒரு விசித்திரமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்தப் பீடிகை. அவுஸ்திரேலியாவை அண்மித்த ஒரு தீவகமே டாஸ்மேனியா (Tasmania) ஆகும். இங்கு வசித்து வரும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியின் வாழ்வில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவமே எனது ஆச்சரியத்திற்குக் காரணம்.

    லியான் ரோவ் (Leanne Rowe) எனும் இந்தப் பெண் எட்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

    இவ்விபத்தின் போது இவருக்கு தஒயில் பலத்த அடி பட்டுள்ளது. மேலும் இவ்விபத்தின் காயங்களாக இவரது அலகும், முதுகெலும்பும் முறிவடைந்து அதற்கான சிஒகிச்சை பெற்றிருந்திருக்கிறார்.

    கொஞ்சம் கொஞ்சமாக இவரது அலகு குணமடைந்து வருகையில் இவரது வாயிலிருந்து சம்மந்தமில்லாத வார்த்தைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவர் தனது உடம்பின் வலியைத் தாங்கிக் கொள்ல எடுக்கும் மாத்திரைகளின் வீரியமே இவரது இந்தச் சம்மபந்தமில்லாத பேச்சுக்குக் காரணம் என்று வைத்தியர்கள் கூறியிருந்திருக்கின்றனர்.

    இவர் தனது தாய்மொழியான ஆங்கிலத்தைப் பேசத் தொடங்கியதும் அனைவரும் திகைக்கும்படியான விடயம் நடந்துள்ளது. அது என்ன என்கிறீர்களா ?

    ஒரு அவுஸ்திரேலியப் பிரஜையான இப்பெண்மணி இதுவரை காலமும் ஒரு அவுச்திரேலியப் பாணியில் ஆங்கிலத்தை பேசிவந்திருந்தார் ஆனால் இப்போதோ ஒரு பிரெஞ்சுக்காரர் எப்படி ஆங்கிலத்தைப் பேசுவாரோ அதே உச்சரிப்பிலேயே இவரால் தனது தாய்மொழியான ஆங்கிலத்தைப் பேசக்கூடியதாக இருக்கிறது.

    டாஸ்மேனியாவில் பிறந்து வளர்ந்த இவர் ஒருபோதும் பிரெஞ்சு நாட்டுக்கே சென்றிருக்கவில்லை. அப்படியான தான் பிரெஞ்சு உச்சரிப்பில் ஆங்கிலத்தைப் பேசுவது இவருக்கு ஆழ்ந்த மனவருத்தத்தையும், அமனழுத்தத்தையும் கொடுத்துள்ளது என்கிறார்.

    பொதுஇஅடங்களில் பேசுவதையே தவிர்த்து வரும் இவருக்காகப் பொதுஇடங்களில் இவரது மகளே பேசிவருகிறாராம்.

    இவரது குடும்ப வைத்தியரான ரோபேர்ட் நியூட்டன் (Robert Newton) என்பவர் கூறும்போது தான் இவரை அறிந்த நாள் நாள் முதல் சாதாரண அவுஸ்திரெலியப் பாணியிலான ஆங்கிலத்தைப் பேசிவந்த இவர் இந்த விபத்திற்குப்பின்னர் தான் இப்படி மாறியுள்ளார் என்கிறார்,

    பாடசாலை மாணவியாக இருந்தபோது பிரெஞ்சு மொழியை ஒரு மேலதிகப் பாடமாகப் பயின்றிருக்கிராரெ ஒழிய இவர் பிரெஞ்சு நாட்டுக்குக் கூட சென்றதில்லை என்றார் குடும்ப வைத்தியர்.

    இதுவரை உலகில் ஏறத்தாழ 60 பேர் வரை இத்தகைய ஒரு நிலைமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

    இப்படிப்பட்ட ஒருவகை வியாதியால் பீடிக்கப்பட்ட முதலாவது அறிந்த வியாதி 1907ம் ஆண்டு பதியப்பட்டுள்ளதாம்.

    2010ம் ஆண்டு மல்டிப்பில் செல்ரோசிஸ் (multiple sclerosis ) எனும் ஒருவகை வியாதியால் பீடிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் ஒருவர் தனது நியூசிலாந்து உச்சரிபிலான ஆங்கிலத்திலிருந்து மாறி வேல்ஸ், ஸ்கொட்லாந்து,வட இங்கிலாந்துப் பகுதிகளின் பாணியிலான உச்சரிப்பில் பேசினார்

    கடந்த வருடம் பேர்மிங்காம் நகரைச் சேர்ந்த டெபி ரோய்ஸ்டன் (Debie Royston ) என்பவர் பயங்கரமான ப்ளூவிலிருந்து மீளும்போது தனது வழமையான ஆங்கில உச்சரிப்பிலிருந்து மாறி பிரெஞ்சுக்காரர் ஆங்கிலம் பேசும் வகையில் பேசத்தொடங்கியுள்ளார்.

    அதேபோல இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த81 வயது அலன் மோர்கன் (Alun Morgan ) ஸ்ட்ரோக் எனும் இருதய வியாதியிலிருந்து மீளும் போது வேல்ஸ் பாணி ஆங்கிலத்தைப் பேசியுள்ளார்.

    இதைப்பற்றி ஆராய்ச்சி செய்த வைத்திய நிபுணர்கள் மூளைப்பகுதியில் பேச்சைக் கட்டுப்படுத்தும் நரம்புகளில் ஏற்படும் சிலவகையான பாதிப்புகளே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    19.06.2013

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(61)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும். தொடக்கம் அனைவருக்கும் ஓரே மாதிரியாக அமைந்தாலும் முடிவில் அனைவரும் வித்தியாசமான முடிவுகளையே சந்திக்கிறோம்.

    ஆனால் இம்முடிவு காலத்தின் படி எமக்குக் கிடைக்கிறது எனும் வாதத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் இம்முடிவின் நிகழ்வில் எமது முயற்சியின் தாக்கங்கள் எதுவித பங்கையும் எடுப்பதில்லையா ?

    எமது வாழ்வின் போக்கை மாற்றும் சக்தி எமக்கில்லையா ?

    நிச்சயமாக இருக்கிறது . வாழ்க்கை ஒரு கட்டுப்பாடாற்ற குதிரை போன்றது அதன் மேல் மிகவும் சிரத்தை எடுத்து ஏறி உட்கார்ந்து அதன் கடிவாளத்தை இறுகப் பற்றி அதனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாம் முன்னேறிப் போக நினைக்கும் பாதையில் அதைச் சீராக செலுத்துவதே ஒவ்வொரு மனிதர்களினதும் கடமை ஆகும்.

    ஆனால் இதனை ஏன் சிலரால் செய்ய முடிவதில்லை ? ஓ அதைத்தான் அவர்களது காலம் என்று சொல்கிறோமா ?

    இல்லையெனில் அக்காலத்தை மாற்றியமைக்கும் வழிகள் இருந்தாலும் அதைத் தெரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் ஒருவகை உறக்கத்தினுள் அமிழ்ந்து போயிருக்கிறார்களா?

    நாம் ஏன் இத்தகிய வாழ்க்கை வாழ்கிறோம் என்பதற்கு எல்லோராலும் அழகாக சந்தர்ப்பம் சூழலை இலகுவாகக் காரணம் காட்டி விடலாம். ஆனால்ல்ல்ல்ல் இக்காரணங்கள் பல சமயங்களில் “நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது சாட்டு” என்பது போலவும் அமைந்து விடுவது உண்டு.

    அதற்காக சூழ்நிலை காரணத்தினால் தமது வாழ்க்கையில் பல சிக்கல்களை அனுபவித்து இருப்பவர்கள் இல்லை என்று நான் வாதிட வரவில்லை.

    சரி எப்படியானல் எங்கே போகிறது எனது இந்தக் கட்டுரையின் சாரம் ?

    புள்ளிக் கணக்கு விபரங்களின் படி இங்கிலாந்தின் வடமேற்கு (North West) பகுதியில் வாழும் மக்களிடையே வாழ்க்கைக் காலம் மிகவும் குறைவாக காணப்படுகிறது எனும் விப்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

    ஒரு மனிதன் நாட்டில் வாழும் பகுதியை ஒட்டியே அவன் எத்தனை வருடங்கள் வாழ்ப்போகிறான் எனும் கணக்குத் தங்கியுள்ளது என்கிறார்கள்.

    இது என்ன விந்தையாக இருக்கிறது ? ஒவ்வொரு மனிதரும் எப்போது இறக்கப் போகிறார்கள் என்பது எமது கையிலா இருக்கிறது ? பின் எப்படி இது அவர்கள் வாழும் பகுதியைச் சார்ந்ததாக இருக்க முடியும் ? எனும் கேள்வி நியாயமானதே !

    எம்முடைய வாழ்வின் முடிவு எமது கையில் இல்லை எனும் வாதம் சரியானதே ஆனால் இப்பகுதியில் வாழ்வும் மக்கள் அவர்களால் தவிர்க்கப்படக்கூடிய பல காரணங்களினால் குறைந்த வயதினிலே சாவைத் தழுவிக் கொள்கிறார்கள். இத்தகிய இறப்புகள் தவிர்க்கப்படக்கூடியவை என்றே இவர்கள் இவ்வாதத்தை முன்வைக்கிறார்கள்.

    ஆமாம் மாரடைப்பு (Heart attack) புற்றுநோய் (Lung cancer) , பாரீசவாதம்(Stroke) இது போன்ற தமது வாழ்க்கை முறையினால் தவிர்க்கப்படக்கூடிய நோய்களுக்கு இளவயதிலே தம்மைப் பலி கொடுக்கிறார்கள் என்பதுவே முன்வைக்கப்பட்ட கருத்தாகும்.

    இங்கிலாந்து போன்ற வைத்திய சிகிச்சையில் முன்னிற்கும் நாடு ஒன்றில் அவர்களினது மக்களிடையே இத்தகைய வேறுபாடு காணப்படுவது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் இங்கிலாந்து அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர்.

    இவ்வறிக்கை வெளிவந்ததும் இதைப்பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பல ஊடகங்களில் நிகழ்ந்தன. இவற்றில் பலவற்றில் பொதுமக்கள் பலர் தமது கருத்துக்களையும் வெளியிட்டனர்.

    சரி இப்படியானல் இத்தகைய நோய்களின் அடிப்படைக் காரணங்கள் எவை?

    மக்களின் அன்றாட வாழ்க்கை முறை என்கிறார்கள் அறிவியலாளர்கள். அதாவது கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது, தேக ஆரோக்கியத்திற்கான அப்பியாசங்கள் எதுவும் செய்யாதது, அதிக அளவிலான புகைபிடித்தல், கட்டுப்பாடற்ற மது உட்கொள்ளல் இவைகளே முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

    சரி இதற்கும் அவர்கள் வாழுகின்ற பகுதிகளுக்கும் என்ன சம்மந்தம் ?

    இதற்கான ஒருவகை விளக்கத்தை மேற்கூறிய ஊடக நிகழ்ச்சி ஒன்றிலே ஒரு பொதும்கன் கூறிய கருத்தொன்றில் கேட்கக்கூடியதாக இருந்தது.

    ஒரு நடுத்தர வயதுடைய மனிதர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. அவரின் வார்த்தைகளிலே தன்னுடைய வாழ்வின் நிதிநிலைமையே தன்னை அதிக அளவில் மது உட்கொள்ள வைக்கிறது என்கிறார்.

    தான் வாழும் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் ஊதியப் பணம் தேசிய அளவின் அடிப்படையில் குறைவானது எனவும். மாதக் கடைச்சிக்கு முன்னதாகவே தன்னுடைய இருப்பில் பணம் கரைந்து விடுவதாகவும் தனது குடும்ப அங்கத்தவர்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாத வேதனையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் மதுவ்வ்வ்வை வாங்கி உட்கொள்வதின் மூலம் தனது பிரச்சனைகளை கொஞ்ச்ச்ச நேரம் மறந்து போய் இருக்கக் கூடியதாக இருக்கிறது என்கிறார்.

    இவ்வூடக நிகழ்வை நடத்தியவர் நீங்கள் மதுவுக்குச் செலவழிக்கும் பணம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதைச் சேமித்தால் அந்தளவு பணமாவது உங்கள் கையிருப்பு இருக்குமே ? என்று கேட்ட கேள்விக்கு அப்படி கையிருக்கும் பணத்தினால் தான் நிறைவேர்ற நினைக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாது என்றார் அவர்.

    சரி இத்தகைய சுகாதார அடிப்படியிலான வித்தியாசங்கள் வாழும் பகுதிக்கேற்ப மாறுவது அப்பகுதி மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சனையில் அடிப்படையிலா ? எனும் கேள்வி எழுகிறது. அதே கேள்வியின் மூலம் இதற்கெல்லாம் இங்கிலாந்து நாட்டின் அரசாங்கப் பொருளாதாரக் கொள்கைதான் காரணமா ? எனும் கேள்வியும் எழுகிறது.

    மறுபக்கம் பார்த்தால் புகை பிடிப்பது , மது அருந்துவது என்பன ஒவ்வொருவருடைய தனிப்பட்ட இச்சையின் அடிப்படையில் எழும் செயல்களாகும் இதற்கு அராஆஅசாங்கம் எவ்வகையில் பொறுப்பாக முடியும் ? எனும் கேள்வியும் நியாயமானதே !

    அதேசமயன் இப்புள்ளி விபர அறிக்கையில் பாதிக்கப்படும் பகுதிகள் எனும் சுட்டிக்காட்டப்பட்ட பகுதிகளுக்குள் உள்ள சில தனிப்பட்ட பிரதேசங்கள் இதற்கு எதிர்மாறான முடிவுகளைக் காட்டுகின்றன.

    சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் தான் காரணமெனில் சில பொருளார அளவில் கீழுள்ள பிரதேசங்களில் மக்களின் வாழ்க்கைக் காலம் நீண்டு இருப்பதன் காரண்ம் என்ன ? எனும் கேள்வியை முன்வைக்கிறது அரசாங்கம்.

    இப்பிரச்சனைகளின் அடிப்படைக் காரணங்கள் மக்கள் வாழும் பகுதிகள் என்பதை விட அஓஅகுதி மக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான புரிந்துணர்வு அதிக அள்வில் இல்லை என்றும் இதற்கான புரிந்துணர்தலை அளிக்கும் அதிகாரத்தையும் கடமையையும் அந்தந்த உள்ளுராட்சி கவுன்சில்களின் பணிகளில் ஒன்றாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

    எது எப்படி இருப்பினும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையைத் தனது கைகளில் எடுக்காவிட்டால் அம்மனிதனின் முன்னேற்றம் என்ருமே சறுக்கிக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    எமக்குப் பசி எடுக்கும் போது உண்ண வேண்டும் என்பதை எப்படி அரசாங்கமோ அன்றி வேறு அமைப்புகளோ சொல்லத் தேவையில்லையோ அதே போல சீராக வாழ வேண்டும் என்பதையும் வேறு ஒருவர் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    12.06.2013

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(60)

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் இவ்வார மடலை வரைகிறேன்.

    இலக்கியம் என்பது மனைத வாழ்க்கையுடன் இன்றியமையாத வகையில் இணைக்கப்படிருக்கிறது. எமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு கணத்தினையும் இலக்கிய உணர்வோடு பார்க்கும் போது அப்பாஅர்வை எம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் சோகத்திலும் சுகமான, இதமான எண்ணங்களை தவழ விடுகிறது.

    இதனால் தான் கவிஞர்கள் சோகத்திலும் அழகிய கவிதைகளை ஆழமான உணர்வுகளோடு வரைஒயும் வல்லமை பெற்றவர்களாகிறார்கள்.

    இலக்கியம் எனும் சொல்லைக் கேட்டவுடனே அதனை ஏதோ அர்த்தம் புரியா கனமான விடயம் எனும் வகையில் பார்க்கும் பலரைக் காணக்கூடியதாக இருக்கிறது.

    ஒவ்வொரு மொழியின் பெருமையும் அதனுடைய இலக்கியத்திலேதான் வெளிப்படுகிறது.

    இலக்கியத்தை ரசிப்பவர் மொழியின் மீது வெறி கொள்வதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை எனலாம்.

    ஒவ்வொரு மனதின் சிந்தனையின் வெளிப்பாடு அதனுடைய உணர்வுகளின் அதீதம் இலக்கியத்தின் பால் திரும்புமானால் எவர் மனதிலும் தீவிரவாதம் தலைதூக்கும் வாய்ப்புகள் அருகிறது,

    இன்றைய நவீன உலகினிலே காணப்படும் வெறித்தனமான போராட்டங்கள் பலவும் மதத்தையோ அன்றி மொழியையோ சார்ந்ததாக இருப்பதன் காரணம் இலக்கிய உணர்வுகள் பெரும்பான்மையோரின் மனங்களில் குன்றிப்போயிருக்கும் காரணத்தினாலேயே என்று சொன்னால் அது மிகையாகாது.

    எதற்காக இந்த ஆழமான முன்னுரை என்று கேட்கிறீர்களா ? இதோ வருகிறேன் விடயத்திற்கு.

    இங்கிலாந்து அரசாங்கத்தினால் “Poet Laureate” அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இலக்கியவாதி எனும் வகையிலான ஒரு கெளரவப் பட்டம் , பெயர் பெற்ற இலக்கியவாதி ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இக்கெளரவப் பட்டம் மூன்று வருட காலத்திற்கு ஒவ்வொருவருக்கும் வழங்கப் படுகிறது.

    இவர்கள் நாட்டின் பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் அந்நிகழ்வுகளைப் பெருமைப்படுத்துவதோடு நாட்டின் இலக்கிய வலர்ச்சியைப் பற்றிய கருத்துக்களை முன்னிலைப் படுத்தும் வகையில் முதன்மையானவர்களாகத் திகழ்கிறார்கள்.

    இவர்களின் பங்களிப்புகளும் இப்படியான ஒரு கெளரவப் பட்டத்தை அரசாங்கமே முன்னிலைப் படுத்தி வழங்குவதும் மக்களின் மனதில் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்பதே இதன் ஆதரவாளர்களினது வாதமாகும்.

    இதே போல ஒரு கெளரவப் பட்டத்தை ” Children’s Laureate “ அதாவது குழந்தைகளுக்கான இலக்கிவாதி எனும் வகையில் இளையோர் இலக்கியத்தை முதன்மைப் படுத்தும் எழுத்தாளர்களுக்கும் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

    இம்முறை இக்குழந்தைகளுக்கான இலக்கியவாதி எனும் கெளரவப் பட்டம் முதன்முறையாக ஒரு கறுப்பு இனத்தவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இப்பட்டம் ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டிருப்பது மேலும் ஒரு சிறப்பாகக் கணிக்கப்படுகிறது.

    இப்பட்டத்துக்குரிய பெண்மணி 51 வயதே நிரம்பிய ” மலோரி பிளாக்மன் (Malorie Blackman) “ எனும் ஒரு முன்னனி எழுத்தாளராவார்.

    1962ம் ஆண்டு பிறந்த இவர் “நீல் பிளாக்மன்(Neil Blackman)” எனும் ஸ்கொட்லாந்து நாட்டுக்காரரைக் கணவனாகவும் எலிஸபெத் எனும் 17 வயதுப் பெண்ணின் தாயருமாவார்.

    “ Noughts and Crosses “ எனும் பதின்ம வயது இளையோருக்கான ஒரு தொடர் நாவல்களி எழுதி மிகவும் பிரபலமடைந்தார்.

    இவருடைய நாவல்களின் சாரம் இங்கிலாந்தில் இலைமறைகாய் போல இருந்து வரும் இனவேற்றுமை, நிறவெறி என்பனவற்றைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருப்பது இவரது தனித்தன்மையாகும்.

    இலக்கிய உணர்வு சிறுவர்களின் உள்ளத்தில் சிறு பராயத்திலிருந்தே வளர்க்கப்படுவது அவசியம் எனும் இவர் இத்தன்மையை வளர்த்தெடுப்பதற்கு பெற்றோரும், ஆசிரியரும் குழந்தைப்பருவத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிடங்களாவது குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

    இன்றைய கணணி உலகத்தில் இலக்கியமும் விஞ்ஞானமயப்படுத்தப் பட வேண்டியது அவசியம் என்று கூறும் இதனாலேயே இளையோரை இலக்கியத்தில் ஈடுபடச் செய்யலாம் என்று அறிவுறுத்துகிறார்.

    புத்தகங்கள் படிக்கும் வழக்கம் ஒன்றே தன் வாழ்க்கையில் தனக்கு பல சந்தர்ப்பங்களுக்கான கதவுகளைத் திறக்கக் காரணமாயிருந்தது என்பதே இவரது கருத்தாகிறது.

    ஒவ்வொரு சிறுவர்கள் கைகளிலும் சிறுவர்களுக்கான வாசிகசாலை அங்கத்தவர் அட்டை இருப்பது அவசியம் என்கிறார். இதைப் பெற்றோர் செய்யத்தவறினால் அதற்கான பொறுப்பைப் பாடசாலைகள் ஏற்றுக்கொள்ல வேண்டும் என்பது இவரது வாதமாக இருக்கிறது.

    நாவல்கள் எழுதியது மட்டுமல்லாமல் லண்டன் தொலைக்காட்சியில் இளையோருக்கான ஒரு முன்னனித் தொடரான “பைக்கர் க்றோவ்(Byker Grove)” எனும் தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

    ஒரு நாட்டின் மொழியின் தொன்மை அந்நாட்டின் இலக்கியச் செழுமையிலேயே தங்கியுள்ளது. இவ்விலக்கியம் செழுமையடைய வேண்டுமானால் அச்சமூகத்தின் இளைய தலைமுறை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இளையோர்கள் உலகம் இன்று கணனி எனும் மையத்தினுள் சிக்கிக் கிடக்கிறது. இலக்கியம் தன்னை இக்கணனி வலைக்குள் பிணைத்துக் கொண்டால்தான் இளையோர்கள் இலக்கியத்தின் முக்கியத்தினை உள்வாங்கிக் கொள்வார்கள்.

    இளையோர்களுக்கான நாவல்கள் மூலம் புகழ் பெற்ற இத்தகைய முன்னனி எழுத்தாளர்களை முன்னிலைப் படுத்துவதன் மூலம் அவர்கள் இச்செயல்களின் தாக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்கிறார்கள்.

    இதை ஆதரித்துச் செயல்படுத்தும் இங்கிலாந்து அரசாங்கத்தை பாராட்டாமல் இருக்க முடியாது

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     http://www.thamilpoonga.com

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(59)

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

    அன்பினியவர்களே !

    அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திக்கும் மகிழ்விருப்பினும் இம்மடல் தாங்கி வரும் செய்தியின் துயரச்சாயல் நெஞ்சினில் சிறிதளவு துன்பத்தினை தவழத்தான் செய்கிறது.

    மதம், மதம் தாங்கி நிற்கும் தெய்வத்தின் போதனைகள் என்பன என்றுமே தீய எண்ணங்களின் அடிப்படியீஈல் எழுந்தவை அல்ல. எந்த மதமாயினும் சரி தம் வழி நடக்கும் மனிதர்களின் மனதைத் தூய்மைப்படுத்தி அன்பின் வழி நின்று நல்ல மனிதர்களாக வாழ வழிகளைக் கற்றுத் தருவதே அவற்றின் முக்கிய நோக்காகிறது.

    ஆனால் அம்மதங்களின் பெயர்களின் அவற்றின் போதகர்கள் எனக்கூறிக் கொள்ளும் பலர் அம்மதத்தின் கூற்றுக்களின் உண்மையான கூறுகளை விளங்கிக் கொள்ளாது அன்றி அவற்றைத் தமது எண்ணங்களுக்கேற்ப திரிபு படுத்தி வன்முறைகளின் வழிகளில் அவற்றைப் போதித்து வருவது வேதனைக்குரியது.

    கடந்தி சில நாட்களுக்கு முன்னால் லண்டன் தெருவினிலே நடந்த ஒரு அகோரமான, மிலேச்சத்தனமான செய்கை இங்கு வாழும் அனைத்து மக்களின் உள்ளங்களையும் உலுக்கி விட்டது.

    ஓ இப்படியும் ஒரு மிருகத்தனமான செய்கை கூட நடக்குமா? என்னும் எண்ணத்தை அனைவரினதும் உள்ளங்களிலும் ஓடவிட்டு நட்டையே ஒருவித பீதிக்குள்ளாக்கி விட்டது எனலாம்.

    நடந்தது என்ன ?

    கடந்த 22ம் திகதி புதன்கிழமை மதியம் 2 மணியளைவில் லண்டன் தென்கிழக்குப் பகுதியில் உள்ள “வூல்விச்(Woolwich)” எனும் இடத்தில் ஒரு பயங்கர நிகழ்வு இடம் பெற்றது.

    அவ்விடத்தில் அமைந்துள்ள “இராணுவ முகாம் (Army Barracks)” ஒன்றிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் 22 வயதே நிரம்பிய “லீ ரிக்பி(Lee Rigby) . இவர் இங்கிலாந்து இராணிவ வீரர்களில் ஒருவராவார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பணியாற்றி விட்டுத் திரும்பியவராவார்.

    ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் அசம்பாவிதங்களினால் காயமுற்று அங்கவீனர்களாகிய இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்ட ஒரு உதவி மையமான “ஹெல்ப் த ஹீரோஸ் (Help The Heros)” எனும் அமைப்பினை விளம்பரப்படுத்தும் டீ சார்ட்டை அணிந்திருந்தார்.

    அச்சமயம் அவரை நோக்கி காரைச் செலுத்திய இருவர் அக்காரின்ன்ன்ன்ன்னால் அவரை வழி மறித்து கையில் கொண்டு வந்திருந்த வாளினால் அவரை வெட்டி பட்டப்பகலில் பலரின் முன்னிலையில் படுபயங்கரமாகக் கொலை செய்துள்ளனர்.

    கத்தி மட்டுமின்றி அக்கொலையாளிகளின் கைகளில் துப்பாக்கியும் இருந்தது என்று கண்கூடாகக் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.

    அக்கொலையைப் புரிந்தது மட்டுமல்ல அக்கொலையாளிகளில் ஒருவர் இரத்தம் தோய்ந்த கைகளுடன் தாம் இக்கொலையைப் புரிந்ததை தமது மதமாகிய இஸ்லாமின் அடிப்படையில் நியாயப் படுத்தியுள்ளார்.

    தானாகவே அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பொலிசாரை அழைக்குமாறு பணித்துள்ளார். போலிஸார் அங்கு விரைந்து வந்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கி சகிதம் ஓடியுள்ளானர் அச்சமயம் அவர்கள் இருவரும் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து கைது செய்யப்பட்டு காவலுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர்.

    இச்செயல் இங்கு வாழும் பல சமூகத்தினரிடையே நிலவி வந்த பரஸ்பர ஒற்றுமை உணர்வைச் சீர்குலைத்து வைத்துள்ளது. இங்கு வாழும் பெரும்பான்ம்மை இனத்தவர் வெள்ளையர் என்பதும், அவர்களில் பெரும்பான்மையோர் கிறீஸ்துவர் என்பதுமே உண்மை.

    தம்முடைய நாட்டில் புகலிடம் தேடியும், வாழ்க்கையை மேம்படுத்தீஈஈஈஈஈக் கொள்ளும் வகையில் குடிபெயர்ந்தவர்களின் தமது மத்ஹ்ஹ்ஹ்ஹங்களைப் பின்பற்றுவதில் இவர்கள் யாருக்கும் எதுவித தடையும் விதித்ததில்லை.

    அப்படி இருக்கையில் இங்கு தம்மை இந்நாட்டுப் பிரஜைகள் என்று கூறிக் கொள்பவர்கள் இந்நாட்டு இராணுவ வீரர்களையே சமயத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் கொலை செய்யும் அளவிர்கு முன் வந்து விட்டது இந்நாட்டு பெரும்பான்மை மக்களின் மனதில் ஒருவித ஆத்திர உணர்வினைத் தோற்றுவிப்பது சகஜமே.

    இவர்களுள்ளும் ஏற்கனவே வெளிநாட்டவரின் குடியேற்றத்தைத் தடை செய்ய வேண்டும் எனும் கோஷம் கொண்ட நிறவெறி கொண்ட தீவிரவாதிகள் இல்லாமலில்லை.

    இத்தகைய செய்கை அவர்களின் இனவெறி எனும் தீயிற்கு எண்ணெய் வார்த்தது போலாகி விட்டது.

    இக்கொலைச்சம்பவத்தைத் தொடர்ந்து சில இஸ்லாமியர்களின் கலாச்சார மையங்கள் தாக்கப்பட்டுள்ளன.

    அதுதவிர ஆசிய இனத்தவர்கள் ஆனைவரினதும் மனங்களிலேயும் ஒரு விதமான பாதுகாப்பின்மை எனும் பீதியைக் கீளப்பி விட்டுள்ளது.

    நாம் புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளில் எமக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்கிறோம். எமக்கென தரப்பட்ட சுதந்திர எல்லைக்குள் எமது மதம், காலாச்சாரம் என்பனவற்றை நாம் பேணிப் பாதுகாப்பதில் எதுவித தவறுமில்லை.

    அதேவேளை இந்நாட்டுப் பிரஜைகளாக வாழும் எமக்கு ஒரு அளவிலாவது இந்நாட்டின் பாதுகாப்பினைப் பலப்படுத்தும் உணர்வு இருக்க வேண்டும். எமக்கும், எமது சந்ததிக்கும் ஒரு நிலையான நிம்மதியான வாழ்வை ஈந்த இம்மண்ணின் மீது ஓரளவாவது பற்று இருக்க வேண்டும்.

    இல்லையெனில் இனக்கள், மதங்களுக்கிடையே நிலவி வரும் பரஸ்பர ஒற்றுமை உணர்வு சீர்குலைந்து வாழ்வு நிலையற்றதாகி விடும்.

    அன்பு உள்ளங்களே ! நான் எனது மதத்தை மதிப்பவன், மிகுந்த இறைபக்தி உள்ளவன். ஆனால் எந்த ஒரு மதமும் மற்றவர்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்க வைக்கும் வகையில் தமது மக்களை வழிநடத்துவதில்லை.

    சுயலாபம் கொண்ட பல தீவிரவாதிகள் மாதம் எனும் போர்வையில் மக்களை ஏமாற்றும் செய்கையாலேயே உலகெங்கும் மததின்ன்ன்ன்ன்ன் அடிப்படையிலான பேத்ங்கள் தலை தூக்குகின்றன.

    இக்கோரச் சம்பவத்தின் எதிரொலியாக விளைந்த ஒரு நன்மை என்னவெனில் இங்குள்ள அனைத்து இஸ்லாமிய மத அமைப்புக்களுமே ஒட்டு மொத்தமாக இக்கொலையை நடத்தியவர்கள் “அல்லாஹோ அக்பர்” எனும் கோஷத்தை ஒலித்திருப்பினும் இக்கொலைக்கும் இஸ்லாம் எனும் மதத்திற்கும் எதுவித சம்மந்தமுமில்லை என்று கூறியிருப்பதுவே.

    அது மட்டுமின்றி வானோலிகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் நடைபெற்ற கருத்தரங்குகளில் இஸ்லாமியர் பெருமளவில் கலந்து கொண்டு இக்கொலையை வன்மையாகக் கண்டித்ததுடன் இதச் செய்தவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்கள்.

    மனிதன் என்பது ஒன்றே ஒரு இனம், அன்பு என்பது ஒன்றே ஒரே மதம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திருந்துஒருமடல்!…..(58)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    இதோ அடுத்தொரு மடல் உள்ளத்தின் உதிர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்காக உங்கள் முன்னே.

    இன்றைய உலகம் நாகரீக மிக்கதொன்றாக , நவீன விஞ்ஞான வளர்ச்சிகளின் அதியுச்சியை நோக்கி அதி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

    மக்களிடையேயும் , நாடுகளிடையேயும் காணப்பட்ட பொருளாதர சமனற்ற நிலை இவ்விஞ்ஞான வளர்ச்சியினால் வேகமாகக் கரைந்து கொண்டு போகிறது .

    சமுதாயங்களில் காணப்படும் கொடுமையான வறுமை எனும் நிலைக்கு இவ்விஞ்ஞான வளர்ச்சி உதவும் எனும் நம்பிக்கை பலரின் மனதில் வியாபித்திருந்தாலும் அதற்கான வலுவான சான்றுகள் இன்னும் பெரும்பான்மையாகக் காணப்படவில்லை .

    சரி , எதற்காக இந்தப் பீடிகை ? சக்தியின் மடல் எதை நோக்கிய பார்வைக்கு எம்மை அழைத்துச் செல்கிறது எனும் கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கையே !

    மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தின் அளவுகோல் என்ன ? என்பதே இவ்வாரம் நான் உங்கள் முன்னால் தொடுக்கும் வினா .

    சமுதாய முன்னேற்றம் எனும் போர்வையினால் கலாச்சார அடித்தளத்தை அசைத்துப் பார்ப்பது சரியா ?

    ஒருவர் ஆத்திகராக இருப்பதோ அன்றி நாத்திகராக இருப்பதோ அவர்களின் தனிமனித சுதந்திரம் என்பதை நான் மறுக்கவில்லை .

    அதே சமயம் இத்தனிமனித சுதந்திரம் எனும் கோஷத்திற்கு எல்லையென்பதே கிடையாதா ? என்பதே என்னுள் விளையும் கேள்வி .

    இன்று மேலைத்தேசங்களில் மட்டுமல்ல கீழைத்தேசங்களிலும் இந்த ” ஓரினச் சேர்க்கை ” அல்லது ” தன்னினச் சேர்க்கை ” என்பது அதாவது ஆங்கிலத்தில் ” Gay relationship “ அன்றி ” Homosexual relationship “ எனும் வகையிலான உறவுமுறை சமுதாயத்தின் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது எனலாம் .

    இது சரியா ? தவறா ? என்பதல்ல எனது வாதம் . இங்கேயுள்ள ” தனிமனிதச் சுதந்திரத்தை ” நான் உள்வாங்கிக் கொள்கிறேன்.

    ஆனால் தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயரில் கால காலங்களாகப் பராமரிக்கப்பட்டு வந்த கலாச்சார மையங்களின் அடிப்படை விதிகளை மாற்றியமைக்க முயல்வது எற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல என்பது எனது கருத்து .

    இந்த வாரம் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விடயம் சட்டமாக்கப் படுவதற்குரிய நடவடிக்கை அநேகரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது.

    அது என்ன என்கிறீர்களா ?

    ஒரு ஆணும் மற்றொரு ஆணும் அன்றி ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணும் காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்வது இயல்பான செயல் என்று அங்கீகரிப்பதற்காக கடந்த லேபர் அரசாங்கத்தினால் ” சமூக ஜோடி (Civil Partnership) “ எனும் சட்டம் அமூலாக்கப்பட்டது . இதன்மூலம் தம்பதியராக வாழும் ஒரு ஆணுக்கும் ,பெண்ணுக்கும் சட்டத்தின் மூலம் என்ன உரிமைகள் இருக்கிறதோ அதே உரிமை இவோரினத் தம்பதியினருக்கும் உண்டு என்று வரையறுக்கப்பட்டது .

    இதைத் தனிமனித உரிமை என்பதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் .

    ஆனால் இப்போது இத்தகைய ஓரினத் தம்பதியினர் சர்ச்சிலோ அன்றி மற்றைய மதக் கலாச்சார மையங்களிலோ ஆண்-பெண் தம்பதியினரைப் போல திருமணம் செய்து கொள்ளலாம் என்பதைச் சட்டமாக்கும் முயற்சியில் தற்போதைய கூட்டணி அரசாங்கம் இறங்கியுள்ளது .

    இது ஏதோ என் மனதைக் கொஞ்சம் கலக்குகிறது . ஆத்திக நம்பிக்கையினால் கண்மூடித்தனமான கருத்தை நான் கொண்டிருக்கிறேன் என்பது அல்ல இதன் காரணம் .

    சரியோ , தவறோ ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கோட்பாடு உண்டு . இவற்றிற்கு அந்தந்த மதத்தில் வலுவான பின்னனிகள் உண்டு. இவற்றில் சிலவற்றை மூட நம்பிக்கை என்று சொல்வதின் பின்னால் உள்ள நியாயங்கள் எனக்குப் புரிகிறது.

    ஆனால் அவற்றின் அதிமுக்கியமான அடிப்படைக் கொள்கைகளை தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயரில் அசைத்துப் பார்க்க விழைவது அம்மத நம்பிக்கை கொண்டவர்களின் தனிமனித சுதந்திரத்தைத் தாக்காதா ?

    “ ஓரினத் தம்பதியர் ” எனும் வாழ்க்கை முறையை இன்றைய சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளும் அதே சமயம் சமூக முன்னேற்றம் , கால மாற்றம் எனும் பெயரில் சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தை ஆட்டிப்பார்ப்பது பயங்கரமான ஒரு செயல் என்பது என் தனிப்பட்ட கருத்து .

    இன்றைய காலகட்டத்தில் இத்தகைய விவாதங்கள் நடைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது . எத்தகையதோர் சமுதாயக் கட்டமைப்பை எமது சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லப் போகிறோம் எனும் கேள்விக்கு இவ்விவாதங்கள் இன்றியமையாதவையாகின்றன .

    எமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறதா ? இல்லையா ? என்பதை அறுதியாக எவராலுமே நிரூபிக்க முடியாது . எவ்வளவுக்கெவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியியால் இயற்கையின் பல நிகழ்வுகளுக்கு நாம் விளக்கத்தை அளித்தாலும் மற்றொரு பக்கத்தில் எம்மால் விளக்க முடியாத நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

    விஞ்ஞானம் எனும் பெயரால் , பகுத்தறிவு எனும் விளக்கத்தால் இயற்கையின் அழிவைத் துரிதப்படுத்தும் பல செயல்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

    ஆனால் அதே சமயம் மதங்களின் பெயரால் , ஆத்திகத்தின் போர்வையில் பல மூடத்தனமான செயல்களும் நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன.

    நன்மைக்கும் , தீமைக்கும் , ஆக்கத்திற்கும் , அழிவிற்கும் , ஆத்திகத்திற்கும் ,நாத்திகத்திற்கும் இடையே ஒரு பொதுவான நிலைப்பாட்டில் புரிந்துணர்வை ஏற்படுத்தி கலாச்சாரக் கட்டமைப்பில் முக்கிய அடிப்படை அறிவான காரணிகளைப் பாதுகாத்து வாழ்வது அவசியம்.

    இல்லையெனில் மனித வாழ்க்கைக்கும் விலங்கு வாழ்க்கைக்கும் வித்தியாசம் அற்றுப் போய்விடும்.

    தனிமனிதச் சுததிரம் அவசியம் தான் ஆனால் அதற்கும் ஒரு எல்லை வகுத்துக் கொள்வது அவசியம் இல்லையெனில் தனிமனிதச் சுதந்திரத்தின் பெயரால் கொலைகளும் , கொள்ளைகளும் கூட நியாப்படுத்தப்படத் தொடங்கி விடும் .

    கலிகாலத்தில் இதுவெல்லாம் சகஜமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(57)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    கைவிரல்களின் வளைவுகள் உங்கள் நலத்தினை அறியும் வரிகளை விதைத்திடும் வகையில் வரைந்திடும் இம்மடலுடன் உங்கள் முன்னே !

    காலச் சக்கரத்தின் சுழற்சியினூடாக வாழ்க்கைத் தேர் விரைவாக அகவைகள் எனும் பாதையினூடாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

    இப்பயணம் வெவ்வேறு கால கட்டங்களினூடக பயணித்துக் கொண்டிருப்பதால் அக்காலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப மனிதனது தேடல்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன.

    இன்றைய இந்தச் சூழலிலே மனிதர்களின் வாழ்வில் அவர்களால் கணிக்கப்படும் பல விடயங்களின் அடிப்படை உடமைகளிலேயே தங்கியுள்ளது.

    ஒவ்வொரு மனிதரது தேவைகளும் வித்தியாசப்படுகிறது. அவரவருடைய பார்வைகளுக்கேற்ப அவர்களுடைய தேவைகளின் முக்கியத்துவம் வரிசைப்படுத்தப்படுகிறது.

    இது மாற வேண்டும், மனிதர்கள் பொருளாசையில் இருந்து விடுபட வேண்டும்.வாழ்வின் நிலையாமையை உணர்ந்து இவ்வாசைகளில் இருந்து தம்மை அந்நியப் படுத்தி வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பல ஆன்மீகவாதிகள் ,பல ஆன்மீக கருத்துக்கள் காலத்துக்குக் காலம் மனித சமூகங்களுக்கிடையில் பரவிக் கொண்டே வந்திருக்கின்றது,, வருகின்றது.

    ஆனால் இவை எந்த வகையில் யதார்த்தமானவை என்பதைச் சிறிது நோக்கினால் மிகவும் வியப்பான விளக்கங்கள் எம் மனங்களை அலைக்கழிக்கும் என்பதுவே உண்மை.

    மனிதர்களுடைய ஆசைகளின் வித்தியாசங்களின் அடித்தளத்திலேதான் உலகத்தின் பொருளாதாரம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

    மனித சமூகம் இத்தகைய பொருளாசைகளிலிருந்து என்றுமே தம்மை அந்நியப்படுத்திக் கொள்ள முடியாது எனும் நம்பிக்கையே இவுலகத்தின் பொருளாதர வளர்ச்சியின் மீதான நம்பிக்கையின் வலிமைக்கு ஆதாரமாகிறது.

    உலகத்தின் இயக்கம் நன்ம்மை, தீமை ஆகிய இரண்டு நிகழ்வுகளினாலுமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

    உலகில் உள்ள அனைவருமே புத்தர்களாகி விட்டால் இன்று புத்தர் எனும் ஒருவரினது அதியுயர் போதனைகளை நாம் போற்றிக் கொண்டிருக்க முடியாது.

    அதே போல உலகில் உள்ள அனைவருமே துரியோதனர்களாக இருந்து விட்டால் பாஞ்சாலிக்கு நடந்த அநீதியின் மூலம் வாழ்க்கையின் தர்மத்தை நாம் போதித்துக் கொண்டிருக்கவும் முடியாது.

    ஒவ்வொரு மனங்களிலேயும் நன்மைகளும் தீமைகளும் குடி கொண்டிருக்கிறது.நன்மையின் கை ஓங்கியவர்கள் நன்மை செய்பவர்களாகவும், தீமையின் கை ஓங்கியவர்கள் தீமை புரிபவர்களாகவும் உருவகம் பெறுகிறார்கள்.

    வாழ்க்கையின் வெற்றிக்கு வழி உண்மையான உழைப்பே. இந்த உண்மையான உழைப்பை மூலதனமாகக் கொடுத்த யாருமே தம் வாழ்வில் தோற்றதாகச் சரித்திரமே இல்லை.

    என்ன இதை எவ்வாறு உன்னால் அடித்துக் கூற முடிகிறது ? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுவது எனக்குப் புரிகிறது.

    வாழ்வின் “வெற்றி” என்பதன் உண்மையான அர்தத்தைப் புரிந்து கொண்டால் என் வாதத்திலுள்ள ஆணித்தரமும் புரியும். வெறும் பணமும், உடமையாயுள்ள பொருட்களும் மட்டும் ஒருவருடைய வாழ்வின் வெற்றிக்குச் சான்றுகளல்ல.

     நான் எனது இளமையான வயதில் (18) இங்கிலாந்துக்குள் கால் பதித்தவன். எமது பின்புல நாடுகளில் பணி புரிந்த அனுபவமற்றவன் ஆனால் இங்கிலாந்தில் எனது உழைப்பின் அனுபவத்தின் அடிப்படையில் பல உண்மைகளை உள்வாங்கிக் கொண்டவன்.

    பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் நிறைந்த நாட்டிலே தாய்மொழியல்லாத ஆங்கிலத்தை நன்கு பேசக் கற்றுக் கொள்ள வேண்டிய காட்டாயத்தின் நடுவில் எனது புலம்பெயர் வாழ்வினை ஆரம்பித்தவன்.

    ஆங்காங்கே வெள்ளை இனத்தவருள் சில காடையர் மத்தியில் நிறவேற்றுமை காரணமாக சில தாக்கங்களைக் கண்டேனேயொழிய உண்மையான உழைப்பிற்கு அவர்கள் கொடுத்த மரியாதையைக் கண்கூடாக கண்ட அனுபவம் எனக்குண்டு.

    பேராசைகளின் வழி குறுக்கு வழியில் செல்வந்தர்களாகும் எண்ணம் கொண்டு அலையும் பேர்வழிகள் இகத்தினில் என்றுமே இருக்கத்தான் போகிறார்கள். அதே போல இப்பேராசைகளின் வழி நடந்தால் இறுதியில் அடையப் போகும் அழிவுகளை வாழ்வின் நிலையாமையின் உதாரணங்களின் மூலம் விளக்கும் ஆன்மீகச் சித்தர்களும் இருக்கத்தான் போகிறார்கள்.

    இவர்கள் இரண்டுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் எனும் தண்டவாளத்தில் தான் உலகம் எனும் ரயில் தனது பயணத்தைத் தொடரப் போகிறது. இவற்ரில் ஒன்று இல்லையென்றாலும் உலகின் பயணம் ஆட்டம் கண்டு விடும்.

    இவை இரண்டுக்கும் நடுவே தாமரை இலைமேல் உருளும் தண்ணீர்த்த துகளைப் போல வாழப் பழகிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள் தமது வாழ்வை அமைதியாக வாழ்ந்து விடுவார்கள் என்பதுவே உண்மையாகும்.

     மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(56)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய மடல் மூலம் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    புரியாத பல புதிர்கள், புதிதான பல வினாக்கள் புலர்ந்து மனதில் அபல அசைவுகளை நிகழ்த்துவதுண்டு.

    நான் எனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது எனது காரில் உள்ள வானொலியில் நடந்த கருத்தாடலைச் செவிமடுத்தேன்.

    அதன் சாரம் என் உள்ளத்தில் பல விடையறா வினாக்களை விதைத்தன. நாம் இலகில் எந்த நாட்டில் வாழ்கிறோம் என்பது அல்ல எங்கு வாழ்ந்தாலும் எம் வாழ்வை எம்முறையில் வாழ்கிறோம் என்பதுவே முக்கியம்.

    குழந்தைகள் எந்த நாட்டிலும் சரி, எந்த சமூகத்திலும் சரி ஒரே மதிரியான உணர்வுகளுக்குள்ளாக்கப் படுகிறார்கள் .தமது குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்ளாத பெற்றோர் இருப்பது அபூர்வம்..

    ஒரு குழந்தையின் எதிர்காலத்தை சரியான வகையில் வழிநடத்துவதற்கு அந்தக் குழந்தைக்கான கல்வியறிவே முக்கியமானது. அக்கல்வியறுவைப் புகட்டுவதர்குக் காரணமான ஆசிரியர்கள் அக்குழந்தையின் எதிர்காலத்தை வகுப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

    அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் எத்தகைய மதிப்பைக் கொடுக்கிறார்கள் ? இது ஒரு ஆழமான கேள்வியே !

    சரி, இனி நான் வானொலியில் செவிமடுத்த அந்தக் கருத்தாடலுக்கு வருவோம். அதன் சாரம் இதுதான்,

    இங்கிலாந்திலே உள்ள பாடசாலை மாணவை ஒருவரின் தாயர் அவருக்கு அம்மாணவியின் தலைமை ஆசிரியரால் கொடுத்தனுப்பப்பட்ட கடிதத்தைப் பற்றிக் கொண்ட ஆவேசத்தைப் பற்றியதுவே !

    சரி எதற்காக அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது என்று நினைக்கிறீர்கள்?

    அம்மாணவியின் வயது 11 வயது. இங்கிலாந்திலிலுள்ள பாடசாலைகளில் மாண்வர்களின் கல்வித் தராதரத்தை நிர்ணயிப்பதற்காக “கல்வித் தராதர நிர்ணயிப்புப் பரீட்சை (Scholastic Assessment Test – SAT) @ என்றழைக்கப்படும் பரீட்சை 11 வயது மாணவர்களுக்கும் நடத்தப்படும்.

    இப்ப்ரீட்சையில் அதி சித்தி எய்தும் மாணவர்களின் விகிதாசாரப்படி பாடசாலைகளும் வரிசைப் படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தப்படும்.

    இப்படியான பரீட்சையொன்றில் தோன்றப்போகும் 11 வயது மாணவியின் மூத்த சகோதரிக்காக ஒரு பிறந்தநாள் விழாவைத் தாயார் ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்ட நாள் அப்பரீட்சைக்கு முந்திய மாலையாகும்.

    சரி இதர்கும் அம்மாணவியின் தலைமை ஆசிரியருக்கும் என்ன சம்மந்தம் ? உங்கள் கேள்வி புரிகிறது.

    அவ்விழாவிற்கு இம்மாணவியின் சில நண்பர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தச் செய்தி அத் தலைமை ஆசிரியரின் காதுக்கு எட்டியதும் அவர் அம்மாணவியின் தாயாருக்கு ஒரு கடிதம் னௌப்பியிருக்கிறார்.

    “உங்களுடைய மகளின் பரீட்சைக்கு முந்திய மாலை இப்படியான ஒரு விழாவை ஏற்படு செய்து உங்கள் மகளையும் அவர்களது நண்பர்களையும் அழைத்திருப்பது வேதனைக்குரியது.இதைத் தாங்கள் ரத்துச் செய்ய வேண்டும்” எனும் வேண்டுகோளை இக்கடிதத்தின் வாயிலாக விடுத்திருந்தார்.

    இம்மாணவியின் தாயாருக்கோ பொத்துக் கொண்டு வந்து விட்டது கோபம்.

    என்னுடைய மகளின் பிறந்தநாள் வாழ்த்தை இஅரத்துச் செய்யச் சொல்லிக் கேட்பதற்கு இவர் யார்? என்னை என்ன கையாலாகாத தாயார் என்று எண்ணி விட்டாரா? என்று கோபம் கொண்டு ரகளை செய்திருக்கிறார்.

    இவ்விடயத்தில் அத் தலைமை ஆசிரியர் நடந்து கொண்ட முறையா ? அன்றி அத் தாயார் நடந்து கொண்ட முறை சரியா என்பதுவே அவ்வானோலியிக் கருத்தாடலின் கரு..

    குழந்தைகளின் மாணவப் பருவம் என்பது பொன்னான பருவமாகும். இப்பருவத்திலே இவர்களின் மனங்களிலே ஏற்படும் நிகழ்வுகளின் தாக்கம் அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானதாகி விடுகிறது.

    இப்பருவத்திலே பிள்ளைகள் தமது இல்லங்களிலே பெற்றோர்களுடன் கழிக்கும் நேரத்தோடு ஒப்பிடும் வகையில் அதிக நேரத்தை பாடசாலிகளில் மற்றைய மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் செலவிடுகிறார்கள்.

    ஆசிரியர்களும் இம்மாணவர்களின் நலன்களிலே பெற்றோர்களுக்கு இணையான வகையில் அக்கறை கொள்வது அவசியம்.

    அப்படிப் பார்க்கையில் இத் தலைமை ஆசிரியர் அம்மாணவியின் நலன் குறித்து அம்மாணவியின் தாயாருக்கு வலியுறுத்தியது எப்படித் தவறாக முடியும் என்பது ஒரு சாராருடைய கருத்து.

    தன் குழந்தையின் நலனில் ஒரு தாய்க்கு இருக்கக் கூடிய அக்கறையை விட ஒரு தலைமை ஆசிரியருக்கு அதிக அளவில் எப்படி அக்கறை இருக்க முடியும் ? தன்னுடைய பாடசாலை தர அட்டவணையில் மேலிடத்தைப் பெற வேண்டும் எனும் அக்கறையினால் அத்தாய்ய்ய்ய்யைக் கட்டுப்படுத்த முயல்கிறார் என்கிறார்கள் ஒரு சாரார்.

    சரி எது எபடியாக ஆவது இருந்து விட்டு போகட்டும்.

    தன்னுடைய பாடசாலை உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு அதிக அளவிலான மாணவர்கள் அதிக புள்ளிகள் எடுத்துச் சித்தியெய்த வேண்டும் என்று அத்தலைமையாசிரியர் அம்மாண்வியை அதிக புள்ளிகள் எடுக்கும் வகையில் தூண்டுவாராக இருந்தால் அத்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹு அம்மாணவிக்கும், அம்மாணவியின் தாயாருக்கும் நன்மையாகத் தானே முடியும் ?

    மாணவர்களுக்கு நாமளிக்ககூடிய செல்வங்களில் அதியுயர்வானது கல்விச் செல்வம் ஒன்றேதான். ஏனேனில் அதை யாராலும் எப்போதும் அவர்களிடமிருந்து பறித்து விட முடியாது .

    பெற்றோர்களும், ஆசிரியர்களும் இணைந்தால் தான் மாணவர்களின் வாழ்க்கை ஒளிமயமானதாகும். பெற்றோர்கள் ஆசிரியர்களை இடையூறாக நோக்குவதோ அன்றி ஆசிரியர்கள் பெற்றோர்களை இடையூறாக நோக்குவதோ ஒரு மாணவ பருவக் குழதைக்க்கு ஆரோக்கியமாக அமையாது.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share