சக்தி சக்திதாசன்

 

 

 

 

அன்பினியவர்களே !

அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திக்கும் மகிழ்விருப்பினும் இம்மடல் தாங்கி வரும் செய்தியின் துயரச்சாயல் நெஞ்சினில் சிறிதளவு துன்பத்தினை தவழத்தான் செய்கிறது.

மதம், மதம் தாங்கி நிற்கும் தெய்வத்தின் போதனைகள் என்பன என்றுமே தீய எண்ணங்களின் அடிப்படியீஈல் எழுந்தவை அல்ல. எந்த மதமாயினும் சரி தம் வழி நடக்கும் மனிதர்களின் மனதைத் தூய்மைப்படுத்தி அன்பின் வழி நின்று நல்ல மனிதர்களாக வாழ வழிகளைக் கற்றுத் தருவதே அவற்றின் முக்கிய நோக்காகிறது.

ஆனால் அம்மதங்களின் பெயர்களின் அவற்றின் போதகர்கள் எனக்கூறிக் கொள்ளும் பலர் அம்மதத்தின் கூற்றுக்களின் உண்மையான கூறுகளை விளங்கிக் கொள்ளாது அன்றி அவற்றைத் தமது எண்ணங்களுக்கேற்ப திரிபு படுத்தி வன்முறைகளின் வழிகளில் அவற்றைப் போதித்து வருவது வேதனைக்குரியது.

கடந்தி சில நாட்களுக்கு முன்னால் லண்டன் தெருவினிலே நடந்த ஒரு அகோரமான, மிலேச்சத்தனமான செய்கை இங்கு வாழும் அனைத்து மக்களின் உள்ளங்களையும் உலுக்கி விட்டது.

ஓ இப்படியும் ஒரு மிருகத்தனமான செய்கை கூட நடக்குமா? என்னும் எண்ணத்தை அனைவரினதும் உள்ளங்களிலும் ஓடவிட்டு நட்டையே ஒருவித பீதிக்குள்ளாக்கி விட்டது எனலாம்.

நடந்தது என்ன ?

கடந்த 22ம் திகதி புதன்கிழமை மதியம் 2 மணியளைவில் லண்டன் தென்கிழக்குப் பகுதியில் உள்ள “வூல்விச்(Woolwich)” எனும் இடத்தில் ஒரு பயங்கர நிகழ்வு இடம் பெற்றது.

அவ்விடத்தில் அமைந்துள்ள “இராணுவ முகாம் (Army Barracks)” ஒன்றிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் 22 வயதே நிரம்பிய “லீ ரிக்பி(Lee Rigby) . இவர் இங்கிலாந்து இராணிவ வீரர்களில் ஒருவராவார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பணியாற்றி விட்டுத் திரும்பியவராவார்.

ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் அசம்பாவிதங்களினால் காயமுற்று அங்கவீனர்களாகிய இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்ட ஒரு உதவி மையமான “ஹெல்ப் த ஹீரோஸ் (Help The Heros)” எனும் அமைப்பினை விளம்பரப்படுத்தும் டீ சார்ட்டை அணிந்திருந்தார்.

அச்சமயம் அவரை நோக்கி காரைச் செலுத்திய இருவர் அக்காரின்ன்ன்ன்ன்னால் அவரை வழி மறித்து கையில் கொண்டு வந்திருந்த வாளினால் அவரை வெட்டி பட்டப்பகலில் பலரின் முன்னிலையில் படுபயங்கரமாகக் கொலை செய்துள்ளனர்.

கத்தி மட்டுமின்றி அக்கொலையாளிகளின் கைகளில் துப்பாக்கியும் இருந்தது என்று கண்கூடாகக் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.

அக்கொலையைப் புரிந்தது மட்டுமல்ல அக்கொலையாளிகளில் ஒருவர் இரத்தம் தோய்ந்த கைகளுடன் தாம் இக்கொலையைப் புரிந்ததை தமது மதமாகிய இஸ்லாமின் அடிப்படையில் நியாயப் படுத்தியுள்ளார்.

தானாகவே அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பொலிசாரை அழைக்குமாறு பணித்துள்ளார். போலிஸார் அங்கு விரைந்து வந்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கி சகிதம் ஓடியுள்ளானர் அச்சமயம் அவர்கள் இருவரும் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து கைது செய்யப்பட்டு காவலுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர்.

இச்செயல் இங்கு வாழும் பல சமூகத்தினரிடையே நிலவி வந்த பரஸ்பர ஒற்றுமை உணர்வைச் சீர்குலைத்து வைத்துள்ளது. இங்கு வாழும் பெரும்பான்ம்மை இனத்தவர் வெள்ளையர் என்பதும், அவர்களில் பெரும்பான்மையோர் கிறீஸ்துவர் என்பதுமே உண்மை.

தம்முடைய நாட்டில் புகலிடம் தேடியும், வாழ்க்கையை மேம்படுத்தீஈஈஈஈஈக் கொள்ளும் வகையில் குடிபெயர்ந்தவர்களின் தமது மத்ஹ்ஹ்ஹ்ஹங்களைப் பின்பற்றுவதில் இவர்கள் யாருக்கும் எதுவித தடையும் விதித்ததில்லை.

அப்படி இருக்கையில் இங்கு தம்மை இந்நாட்டுப் பிரஜைகள் என்று கூறிக் கொள்பவர்கள் இந்நாட்டு இராணுவ வீரர்களையே சமயத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் கொலை செய்யும் அளவிர்கு முன் வந்து விட்டது இந்நாட்டு பெரும்பான்மை மக்களின் மனதில் ஒருவித ஆத்திர உணர்வினைத் தோற்றுவிப்பது சகஜமே.

இவர்களுள்ளும் ஏற்கனவே வெளிநாட்டவரின் குடியேற்றத்தைத் தடை செய்ய வேண்டும் எனும் கோஷம் கொண்ட நிறவெறி கொண்ட தீவிரவாதிகள் இல்லாமலில்லை.

இத்தகைய செய்கை அவர்களின் இனவெறி எனும் தீயிற்கு எண்ணெய் வார்த்தது போலாகி விட்டது.

இக்கொலைச்சம்பவத்தைத் தொடர்ந்து சில இஸ்லாமியர்களின் கலாச்சார மையங்கள் தாக்கப்பட்டுள்ளன.

அதுதவிர ஆசிய இனத்தவர்கள் ஆனைவரினதும் மனங்களிலேயும் ஒரு விதமான பாதுகாப்பின்மை எனும் பீதியைக் கீளப்பி விட்டுள்ளது.

நாம் புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளில் எமக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்கிறோம். எமக்கென தரப்பட்ட சுதந்திர எல்லைக்குள் எமது மதம், காலாச்சாரம் என்பனவற்றை நாம் பேணிப் பாதுகாப்பதில் எதுவித தவறுமில்லை.

அதேவேளை இந்நாட்டுப் பிரஜைகளாக வாழும் எமக்கு ஒரு அளவிலாவது இந்நாட்டின் பாதுகாப்பினைப் பலப்படுத்தும் உணர்வு இருக்க வேண்டும். எமக்கும், எமது சந்ததிக்கும் ஒரு நிலையான நிம்மதியான வாழ்வை ஈந்த இம்மண்ணின் மீது ஓரளவாவது பற்று இருக்க வேண்டும்.

இல்லையெனில் இனக்கள், மதங்களுக்கிடையே நிலவி வரும் பரஸ்பர ஒற்றுமை உணர்வு சீர்குலைந்து வாழ்வு நிலையற்றதாகி விடும்.

அன்பு உள்ளங்களே ! நான் எனது மதத்தை மதிப்பவன், மிகுந்த இறைபக்தி உள்ளவன். ஆனால் எந்த ஒரு மதமும் மற்றவர்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்க வைக்கும் வகையில் தமது மக்களை வழிநடத்துவதில்லை.

சுயலாபம் கொண்ட பல தீவிரவாதிகள் மாதம் எனும் போர்வையில் மக்களை ஏமாற்றும் செய்கையாலேயே உலகெங்கும் மததின்ன்ன்ன்ன்ன் அடிப்படையிலான பேத்ங்கள் தலை தூக்குகின்றன.

இக்கோரச் சம்பவத்தின் எதிரொலியாக விளைந்த ஒரு நன்மை என்னவெனில் இங்குள்ள அனைத்து இஸ்லாமிய மத அமைப்புக்களுமே ஒட்டு மொத்தமாக இக்கொலையை நடத்தியவர்கள் “அல்லாஹோ அக்பர்” எனும் கோஷத்தை ஒலித்திருப்பினும் இக்கொலைக்கும் இஸ்லாம் எனும் மதத்திற்கும் எதுவித சம்மந்தமுமில்லை என்று கூறியிருப்பதுவே.

அது மட்டுமின்றி வானோலிகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் நடைபெற்ற கருத்தரங்குகளில் இஸ்லாமியர் பெருமளவில் கலந்து கொண்டு இக்கொலையை வன்மையாகக் கண்டித்ததுடன் இதச் செய்தவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்கள்.

மனிதன் என்பது ஒன்றே ஒரு இனம், அன்பு என்பது ஒன்றே ஒரே மதம்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *