Tag: தமிழ்த்தேனீ

  • தூண்டில்!

    -தமிழ்த்தேனீ

    அப்பா  என்னை ஒரு பையன் ரொம்ப நாளா தொடர்ந்து வந்து  தொந்தரவு பண்ணிகிட்டே இருக்கான். இன்னிக்கும்  அவன் வருவானோன்னு பயமா இருக்குப்பா  என்றாள் விஜயா.  என்னது  சொல்லவே இல்லையே என்கிட்ட என்று பதறினாள்  கோமதி, அவளை  இரு இரு பதறாதே  என்னான்னு கேப்போம்  என்று  சொல்லி விஜயா  ஏன்  இவ்ளோ நாளா  சொல்லவே இல்லை, சொல்லி இருந்தா அவனுக்குப் புத்தி சொல்லியோ  இல்லே மெரட்டியோ  அனுப்பி இருக்கலாமே!  சரி ஆனது ஆச்சு.  இப்பவாவது சொன்னியே  இன்னிக்கு நானும் உன்கூட  வரேன். பயப்படாதே என்று ஒரு சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினார் வேம்பு.  வேம்புவும் விஜயாவும்  சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோதே  அவன் வந்தான், அப்பா இவன்தாம்பா  இவன் பேரு  ரமேஷ்  என்றாள்  விஜயா பயந்தபடி. சரி சரி  பயப்படாதே  நான் பாத்துக்கறேன்  என்றபடி  அவனை நோக்கிப் போனார் வேம்பு.

    ரமேஷ் அவரை  லட்சியம் செய்யாமல் ஒதுக்கி  விஜயாவிடம் போய்நின்று எத்தனை நாளா கேட்டுகிட்டிருக்கேன்  நீ பதிலே சொல்லாமே  அலட்சியப்படுத்துறியா இப்ப பாரு என்றபடி ஒரு பிளேடால் தன் கழுத்தில் அறுத்துக் கொண்டு ரத்தம் வழிய நீ  இல்லாட்டி நான் செத்துப் போறேன்  என்றபடி கீழே விழுந்தான். பதறிப்போய்  அப்பா  இவனை ஒரு கை பிடிங்க  என்றபடி  ஒரு ஆட்டோவை நிறுத்தி இருவருமாக  அவனைத் தூக்கி  வண்டியில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு  சென்று அவனுக்கு முதல் உதவிக்கு ஏற்பாடு செய்துவிட்டு டாக்டரின் அழைப்பின் பேரில் வந்த காவல்துறை அதிகாரியிடம் யாரோவிட்ட காத்தாடி நூல் இவர் கழுத்தை அறுத்துவிட்டது யதேச்சையாக பார்த்த  நானும்  எங்க அப்பாவும் இவரை இங்கே  கூட்டி வந்தோம்  என்றாள்.

    இங்க கொஞ்சம் தனியா வாங்க என்று  அழைத்துப்போய் மேடம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு தைரியம் ரொம்ப அதிகமாயிடிச்சு, இந்த ஆளு செத்துப் போயிட்டான்னு வெச்சிக்கோங்க அப்போ  நாங்க விசாரிப்போம் அதுக்கப்புறம் உங்களுக்குத்தான் ப்ரச்சனை, நீங்க ஏதோ நல்ல எண்ணத்திலே செய்யறீங்கன்னு நெனைக்கிறேன், காவல்துறையை அவ்ளோ லேசா  எடைபோடாதீங்க  சம்பவம் நடந்த  இடத்திலே விசாரிச்சிட்டுத்தான் இங்கே வந்திருக்கேன், ஆனா ஒண்ணுபுரியுது உங்களுக்கு இந்த ஆளுமேலே ஏதோ இரக்கம் அதான் காப்பாத்தறீங்க, நான் கொஞ்சம் வித்யாசமான ஆளு எனக்கும் பொண்ணு இருக்கும்மா,  எத்தனையோ  கிரிமினலையும்  கிரிமினல் கேசையும் பாத்தவங்க நாங்க, சாட்சி இல்லாததாலே நிரூபிக்க, முடியாத காரணத்தாலே  பல கேசிலே மனசாட்சிக்கு விரோதமா பலபேர் மேலே  இன்னும் நடவடிக்கை  எடுக்காமலே இருக்கோம், இந்தப் பையன் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ செஞ்சிட்டான், இவனைத் தற்கொலைங்கற கேசிலே உள்ளேபோட்டு இவன் வாழ்க்கையைக் கெடுக்கவேண்டாமேங்கற  நல்ல எண்ணத்திலே  நான் இதைக் கேசா  எழுதாமே விபத்தாவே  நெனைச்சு மறந்துடறேன்.  ஆனா ஜாக்கிரதை, இவன்கிட்டே எல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்  வாழ்க்கையைக் கெடுத்துக்கிடாதீங்க.    வரேம்மா என்ற காவல்துறை அதிகாரி டாக்டரிடம் என்ன டாக்டர் இந்த ஆளு பொழைச்சிருவானா என்றார். அவரைச் சரியான நேரத்திலே இவங்க  கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க அவர் பிழைச்சுட்டார்  இனிமே பயமில்லே என்றார். நல்லவேளை  தப்பிச்சீங்க மேடம்  நான் வரேன்  என்றபடி ஒரு புன்சிரிப்புடன் வெளியேறினார்  காவல் அதிகாரி.

    மறுநாள் அப்பாவையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு  மருத்துவமனைக்குப் போய் டாக்டரிடம் எப்படி இருக்காரு அவரு  என்றாள். டாக்டர்  நல்லா இருக்காரும்மா ஒண்ணும் பயமில்லே என்றார், நன்றி டாக்டர், அவருக்குச் செலவான தொகையை நான் கட்டிடறேன் என்றபடி பணத்தைக் கட்டப் போனாள் விஜயா.      எனக்கு ஒரே பதட்டமா இருக்கு இவ என்ன செய்யப் போறாளோ என்று பதறினாள் கோமதி. சரி இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு  நாம எது சொன்னாலும்  புரியாது  இவங்களை நாம  கட்டுப்படுத்தவும் முடியாது நாம் பதறி என்ன  ப்ரயோசனம் நீ கொஞ்சம் அமைதியா இரு என்று கோமதியிடம் சொல்லிவிட்டுத் திரும்பினார். விஜயா  பணத்தைக் கட்டிட்டேம்பா என்றாள்.

    வேம்பு எதுக்கும்மா  நீ இதையெல்லாம் செய்யறே? இவங்களுக்கெல்லாம் இரக்கமே  பாக்கக் கூடாது  என்றார். அப்பா நாம விபத்து  ஏற்படுத்தினா  நாமதானே  செலவு செய்யணும்.  ஆமாம்பா இது கூட  ஒரு வகையிலே  விபத்துதான்.  ஏதோ  ஒரு வகையிலே  நான் இவரைக் கவர்ந்திருக்கேன். அதுனாலேதானே இப்பிடி ஆச்சு. நான் இன்னும் கொஞ்சம் அடக்கமா இருந்திருக்கணுமோ அப்பிடின்னு தோணுதுப்பா. இவரு மேலே  இரக்கம்தான் வருது என்றாள் விஜயா. இப்பிடி இரக்கத்தை வரவழைக்கத்தானே  இவங்கள்ளாம் திட்டம் போட்டு இப்பிடி செய்யறாங்க  அது புரியலையா விஜயா உனக்கு… தப்பும்மா  இவங்களுக்கெல்லாம் பரிதாபமே காட்டக் கூடாது என்றார் வேம்பு.

    எனக்குத் தெரியும் அப்பா பேசாம வாங்க  என்றபடி  அவன் படுத்திருக்கும் அறைக்குப் போய் வேம்புவை அங்கே உட்காரவைத்துவிட்டு  ரமேஷ் படுத்திருந்த  கட்டிலின் அருகே போய் உட்கார்ந்தாள், அங்கே  இருந்த  ரமேஷின்  பெற்றோர்கள்  ரொம்ப நன்றிம்மா  என் புள்ளையை  காப்பாத்திட்டீங்க  என்றார்கள் கண்ணில் நீர் வழிய.  உங்க  பிள்ளை பொழைச்சிட்டாரு.  ஆனா என்னா செஞ்சாருன்னு தெரியுமா சரி விடுங்க  அதெல்லாம் பரவாயில்லே  நான்  போலீஸ்காரங்க கிட்டே எஃப் ஐ ஆர்  போடாம  விட்ருங்கன்னு  கெஞ்சி  ஒரு வழியா  சமாளிச்சிட்டேன். இங்கே  டாக்டர்கிட்டேயும்  பேசிட்டேன்  அதுனாலே கவலைப்படாதீங்க என்று கூறிவிட்டு  என்ன   ரமேஷ்  இப்போ எப்பிடி இருக்கீங்க என்றாள் புன்னகையுடன். ரமேஷைப் பார்த்து   இந்த முறை  நான் பொழைச்சிட்டேன், எனக்கு  அதுகூட  மகிழ்ச்சி இல்லே… விஜயா நீ இப்பிடி என் பக்கத்திலே உக்காந்து பேசறியே அதுதான்  எனக்கு ரொம்ப மகிழ்ச்சி நான் குடுத்து வெச்சவன்  என்றான் ரமேஷ்.     விஜயா  வேம்புவைப் பார்த்து  அப்பா அம்மா  ரெண்டு பேரும் இங்கே  கிட்டக்க வாங்களேன், என்றவள்  அவனுடைய  பெற்றோர்களையும்  இங்கே வாங்கன்னு அழைத்து கட்டிலை சுற்றி நிற்கவைத்துவிட்டு   ரமேஷ்   இந்த  முறை  உங்களை நான் காப்பாத்திட்டேன் , ஆனா  இப்பிடி நடந்தா  அடுத்த முறை காப்பாத்த  மாட்டேன்  என்றாள்.

    அதுக்கு அவசியமே இருக்காது  விஜயா  என்றான் ரமேஷ் அவசரமாக. அது இல்லே  இப்பிடி எதுக்கெடுத்தாலும்   தற்கொலைன்னு  முடிவெடுக்கறவங்களுக்கு  எப்பவுமே  இந்த யோசனை வந்துகிட்டே இருக்கும் அதுக்குதான்  சொன்னேன்  என்றாள்.   சரி  ரமேஷ்  உங்களை நான் நம்பறேன் .ஆனா  எதுக்காகவும் என்னைப் பயமுறுத்தி பணிய வைக்கறவங்களைக் கண்டா  எனக்கு பிடிக்காது . நீங்க  என்னை காதலிக்கறது உண்மைதானே  என்றாள் . ஆமாம்  விஜயா சந்தேகமே படாதே  நான் உன்னை  மனப்பூர்வமா காதலிக்கறேன் என்றான் ரமேஷ்.   அப்போ  இனிமே தற்கொலைங்கற  எண்ணமே உங்களுக்கு வரக்கூடாது  வரவே கூடாது என்றாள்.  இல்லே  விஜயா  நான் சத்தியமே செஞ்சு தரேன்;  சத்தியமா  இனிமே இது மாதிரி நடக்கவே மாட்டேன்   என்றான் ரமேஷ் .

    நீங்க என்னைக் காதலிக்க எவ்ளோ உரிமை உங்களுக்கு இருக்கோ அதே மாதிரி  உங்களைக் காதலிக்காம இருக்க எனக்கும் உரிமை இருக்கு. எனக்கு  இந்த மாதிரி ஒரு பொண்ணை நடுத்தெருவிலே பயமுறுத்தி காதலிக்க வைக்கறதெல்லாம் பிடிக்காது. அதுனாலே நீங்க உங்க அப்பா அம்மாகிட்டே சொல்லி உங்களுக்கேத்த  பொண்ணைக் கல்யாணம் செஞ்சிக்கங்க, சத்தியம் செஞ்சிருக்கீங்க  இனிமே  தற்கொலை செஞ்சிக்க மாட்டேன்னு. ஆனா  இனிமேயும்  புரிஞ்சிக்காம  என்னைக் கல்யாணம் செஞ்சிக்கோன்னு  வற்புறுத்தினா  சரின்னு  கல்யாணம்  செஞ்சிக்குவேன் உங்களை, அதுக்கப்புறம் உங்க வாழ்க்கை  நரகமாயிடும்  நல்லா யோசிங்க. வாங்கப்பா வாங்கம்மா போகலாம் என்று வெளியே  வந்த  வேம்பு  விஜயா  உங்கம்மாவை நான் பொண்ணு பாத்தபோது என் மாமனார் இவளைக் கல்யாணம் செஞ்சிகிட்டா  உங்க வாழ்க்கை  சொர்க்கமா இருக்கும்ன்னு சொன்னாரு. சரி அதை விடு, முதல்லேயே  என்னைக் கல்யாணம் செஞ்சிகிட்டா உங்க வாழ்க்கை  நரகமாயிடும்னு நீ தெளிவா சொல்லிட்டே,  இந்தப் பையன் இனிமே உன்னை நெனைச்சுகூடப் பாக்கமாட்டான்னு நான் நினைக்கறேன் என்றார் நிம்மதியுடன். கோமதி நிம்மதியுடன் சிரித்தாள். விஜயாவைப் பெருமையாகப் பார்த்தபடி.
    சரி வாங்கப்பா  வாங்கம்மா  நாம போகலாம் என்றாள் விஜயா உறுதியாக.

    சுபம்

     

     

    Share
  • காதல் புதிர்!

    -தமிழ்த்தேனீ

    ”எத்தனை தடவை சொல்றது கதவைத் திறந்தா  முழுசு திற… இப்பிடி அரைகுறையாத் திறக்காதே!  போகும்போது வரும்போது  கால் விரலைப் பதம் பாக்குதுன்னு”  என்று  எரிந்து விழுந்தார் முருகன். ”எதுக்கு அத்தனை தடவை சொல்றீங்க?  ஒருதடவை சொல்லிட்டு நிறுத்த வேண்டியதுதானே?”  என்றாள் ரோஷமாக வள்ளி. ”இத்தனை தடவை  சொல்லியே மாத்திக்க மாட்டேங்கற  இதுலே உனக்கு ரோஷம்வேற வருது; ஒரு தடவை சொல்லும்போதே  மாத்திகிட்டா நான் ஏன் மறுபடியும் சொல்லப் போறேன்?” என்றார் முருகன். ”சரிங்க எதுக்கெடுத்தாலும் கோவப்பட்டு கத்திகிட்டு இருக்கறதே  உங்களுக்கு வழக்கமாபோச்சு!” என்றாள் வள்ளி. ”ஆமாம் நான் என்ன  பயித்தியக்காரனா  சும்மாக் கத்த…?  நானும் பொறுமையாச் சொல்லிப்பாத்துட்டு அதை நீ காதிலேயும் வாங்கறதில்லே… மனசிலேயும் வாங்கறது இல்லேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தானே  கத்தறேன். என்னைக் கத்தவிடாமே இருக்கியா நீ?  நானும் அமைதியா இருக்கணும்னுதான் பாக்கறேன். முடியலையே…!”  என்று அலுத்துக் கொண்டார் முருகன்..

    ”சரி, சரி இனிமே பாத்துச் செய்யறேன் கத்தாமே இருங்க!”  என்றாள் வள்ளி; ”என்னை அடக்காதே  நீ! ஒரு தடவை சொன்னவுடனே அதை மாத்திக்க!” என்றார் முருகன்.  வள்ளி அவரையே  உற்றுப்பார்த்துவிட்டு  படுக்கைஅறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டு புத்தகம் படிக்க ஆரம்பித்தாள். முருகன் வந்து  கம்ப்யூட்டரில் உட்கார்ந்து   எதையாவது  முகநூலில் எழுதலாம் என்று ஆரம்பித்தார்; ஆனாலும் அவர் மனம்  இவ கொஞ்சமாவது மதிக்கறாளா, புரிஞ்சிக்கறாளா  என்றே யோசித்துக் கொண்டே இருந்தது. சற்றுநேரம் கழித்துச் ”சரி… சாப்பிட வாங்க!”  என்றாள் வள்ளி. தட்டுக்களை எடுத்துக் கழுவி மேசையில் வைத்துவிட்டுச் சமையலறைக்குப்போய் சாதம், கறி எல்லாவற்றையும் எடுத்து வர அவரும்  உதவி,  எல்லாவற்றையும்  கொண்டுவந்து வைத்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்தனர் இருவரும். அவரை மறந்து ரசித்து  சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்.

    வள்ளியின் குரல்… ”நல்லா இருக்கா?” என்றாள். ”உண்மையிலேயே  நல்லா இருக்கு அதான் ரெண்டாவது தடவை குழம்பே போட்டுகிட்டேன்!”  என்றார் சற்றே தணிந்த  குரலில். ”அது சரி… நல்லா  சமைக்கறே, ருசியா  சமைக்கறே… ஆனா, சொன்னதைக் கேக்கவே  மாட்டேங்கறையே  ஏன் கொஞ்சம் அனுசரிச்சுப் போனாத்தான் என்னவாம்?” என்றார். சாப்பாட்டு மேசையிலேகூட  எதுக்காவது என்னைத் திட்டிகிட்டே இருப்பீங்களா  சாப்பிடுங்க என்றாள் வள்ளி. நான் இப்போ உன்னை என்னா திட்டினேன். நான் பேசினாவே அதைத்  திட்றதுன்னு ஏன் எடுத்துக்கறே  என்றார் முருகன். வள்ளிக்குப்  புரைக்கேறியது.   பதறிப்போய் யாரோ நினைக்கறாங்க உன்னை…  இந்தா… தண்ணி குடி என்றார் முருகன்.

    சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் உணவு வகைகளை உள்ளே கொண்டு வைப்பதற்கு உதவிவிட்டுக்  காலையிலேருந்து  வேலை செஞ்சுகிட்டே இருக்கே.  போயி கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடும்மா. நான் இந்த மேஜையைத் துடைக்கறேன், கதவெல்லாம் சாத்தித் தாப்பாள் போட்டுட்டு அப்புறம் கம்ப்யூட்டர்லே உக்கார்ரேன், கவலைப்படாமே  கொஞ்சநேரம் தூங்கி எழுந்திரு என்றார் கனிவாக.  வள்ளியும் சரி என்று சொல்லிவிட்டு உள்ளே போய்ப்படுத்தாள். சற்று நேரத்திலே சத்தமே காணுமே என்று எட்டிப் பார்த்தார் முருகன். வள்ளி ஆழ்ந்து தூங்கிக் கொன்டிருந்தாள். இவளுக்கு மட்டும் எப்பிடி படுத்தவுடனே தூக்கம் வருதுன்னு தெரியலே என்று நினைத்துகொண்டு மனதுக்குள் சிரித்தபடி வந்து கணிணியில் உட்கார்ந்தார்.

    ஐந்து நிமிடத்திலே தொலைபேசி அழைத்தது.  ஐயோ பாவம்  இவ தூங்கிட்டு இருக்காளே நாம் யாருன்னு பாப்போம்  என்று தொலைபேசியை எடுத்தார் . மறுபுறத்தில் வள்ளியின் தங்கை லதா.  வள்ளி எப்பிடி இருக்கே என்றாள். நல்லா இருக்கேன் லதா  நீ எப்பிடி இருக்கே  என்றாள்  வள்ளி உற்சாகமான  குரலில். சரி  நாம ஏதோ ஒட்டுக்கேக்கறோம்னு நெனைச்சுப் போறாங்க என்று நினைத்து ரிசிவரை வைத்தார் முருகன். ஐய்யயோ  என்று பதட்டமாக  வள்லியின் குரல் கேக்கவே  ஓடிப்போய்  என்னாச்சு வள்ளி என்றார் முருகன். ஒண்ணுமில்லேங்க  லதாகிட்டே பேசிகிட்டு இருக்கேன் என்றாள் வள்ளி. அதுக்கு ஏன் ஐயய்யோ… அப்பப்பான்னு ஒரு அலறல் மெதுவாப் பேசேன் என்றார் முருகன்.  அந்தப் பக்கம்  லதா  என்ன  உங்க வீட்டுக்காரர் கோவமா பேசறாரு என்றாள். அது ஒண்னுமில்லே  நீ சொன்னியே  அந்த  ஆளைக் கட்சியைவிட்டு நீக்கிட்டாங்கன்னு;  அதுக்கு ஐயய்யோன்னு சொன்னேனே அதுக்குதான்  வேறொண்ணுமில்லே  என்றபடி  சரி  அதுக்குப்புறம்  என்ன ஆச்சு என்றாள் சாவதானமாக.  மீண்டும் வந்து  கணிணியில் உட்கார்ந்தவருக்கு ஏதேதோ யோசனைகள்.   திருமணம் ஆனதும்  சத்திரத்திலிருந்து  அவர்கள் தங்கிஇருந்த  குடித்தன வீட்டிற்கு வந்ததும் பக்கத்திலே நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார்கள்.  இந்தப் பக்கம் யாரோ ஏதோ கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தால்  வள்ளியைக் காணவில்லை.  எல்லோர்  எதிரிலும் தேடினால் கிண்டல் செய்வார்களே என்று  உள்ளே போனார்  முருகன், அங்கே சமையற்கட்டில் அம்மா நான் பாத்துக்கறேன், நீங்க  கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க  என்று தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வள்ளி. அன்று தானாகவே வந்து பொறுப்பெடுத்துக் கொண்ட வள்ளி இன்றும் பொறுப்பிலிருந்து  விலகாமல் நிர்வாகம் செய்துவருகிறாள்.

    சரி  சும்மா உக்காந்து  யோசனை செய்து கொண்டே  இருக்கறதைவிட ஏதேனும் உருப்படியாக செய்யலாம் என்று  கணிணியிலிருந்து எழுந்து கார் ஷெட்டுக்கு போயி  காரைத் துடைக்கலாம் என்று போய்ப்பார்த்தால்  கார் சுத்தமாக இருந்தது. எல்லா வேலையையும் இவளே செஞ்சிருவா, எதுக்காவது உதவிக்குக் கூப்புடுவா  அதைப் போயி செய்யலாம்னா அதையும் இவளே செஞ்சிருவா. அவசரக் குடுக்கை என்று மனதுக்குள் சிரித்தபடி இப்பிடி அறுபத்தி ஐஞ்சு வயசாகியும்  உதவிக்கு ஒரு வேலைக்காரி கூட வெச்சிக்காமே இவளே உழைக்கறா, தோட்டத்தைச் சீரா வெச்சிக்கறா, எல்லாச் செடிக்கும் தண்ணி கொட்டி  இவளைப் பார்த்தாவே  எல்லாச் செடியும்  மரமும்  பூக்கொடியும்  இவ கைபட்டவுடனே மகிழ்ந்து போயி  பூவாக் கொட்றது, பழமாக் கொட்றது.

    நல்ல ராசியான  கை;  அது மட்டுமில்லே!  நல்ல  விகல்பமில்லாத  மனசு, பக்தி எல்லாம் இருக்கு, ஆனா  கொஞ்சம் பொறுமையை வளத்துண்டா  நல்லா இருக்கும் என்று நினைத்துக்கொண்டு  மீண்டும் கணிணியில் வந்து உட்கார்ந்தார்  முருகன். இந்தாங்க காப்பி  குடிங்க என்றாள் வள்ளி. காப்பியை நீட்டியபடி, இவ இப்பத்தானே  தூங்கிட்டு இருந்தா  அதுக்குள்ளே  ஏன் எழுந்து  காப்பி போட்டா என்று நினைத்தபடி  ஏம்மா  கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுன்னு சொன்னேனே என்றா முருகன். இல்லே  மணியாச்சு  சாயங்காலம் கடைக்குப் போயி கொஞ்சம் மளிகை சாமான் வாங்கணும்; நாளைக்கு நம்ம எதிர்வீட்டு  பால்கிருஷ்ணனும்  லக்‌ஷ்மியும் யூஎச்லேருந்து வராங்க.  அவங்களுக்கு  காலையிலே ஏதாவது செஞ்சு எடுத்துட்டுப் போயி குடுக்கணும் என்றாள். மாலை கடைக்குப் ரெண்டு பேரும் போயி எல்லாம் வாங்கிட்டு வந்தாச்சு. சரி, சீக்கிரமா படுத்துத் தூங்கு. காலையிலே அஞ்சரை மணிக்கெல்லாம் எழுந்துக்கறே  என்றார் முருகன். சரி என்று சொல்லிவிட்டு  இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு   வள்ளி நான் போயி தூங்கறேன் என்றபடி உள்ளே போனாள்.

    எல்லாக் கதவும் போட்டிருக்கா என்றெல்லாம் பார்த்து எல்லாவற்றையும்  பூட்டிவிட்டுச் சமையற்கட்டில் கியாஸ் மூடிஇருக்கான்னு பாக்கலாம்ன்னு போனா  கியாசை சரியாவே மூடலே, அவருக்கு கோவம் கோவமாக வந்தது. எவ்ளோ ஆபத்து எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாடேங்கறா சரியா மூடினா என்ன என்கிற கோவத்தோடு அதைச் சரியாக மூடிவிட்டு, படுக்கை அறைக்குள் நுழைந்து  ஏம்மா வள்ளி  அந்த  கியாசை சரியா மூடுன்னு எத்தனை தடவை சொல்றது  என்றார்.    சரியா மூடலையா  நீங்கதான் மூடிட்டு வாங்களேன்; அதுக்கு ஏன் இப்பிடித் திட்றீங்க  என்றாள் வள்ளி, அவருக்கு  வந்த கோவத்திலே நான் இப்போ என்ன திட்டினேன்  ஏதாவது  தகாத வார்த்தை சொன்னேனா நல்லதைச் சொன்னா திட்றேன் திட்றேங்கறியே  இது நியாயமா?  என்றார். சரி சரி எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு  திரும்பிப் படுத்தாள் வள்ளி.

    முருகன் கோவத்தை  அடக்கிக் கொன்டு  மீண்டும் கணினியின் முன்னால் வந்து உட்கார்ந்து  தன்னையே  சமாதானப்படுத்திக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்தார். செய்திகள்  வாசிப்பது  என்று முக்கியமான செய்தியை தப்பும் தவறுமான தமிழில் சொல்லிக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண்மணி. உள்ளே இருந்து  ஏங்க அந்த  டீவீ சத்தத்தைக் குறைங்க…  தூக்கமே வரலே  என்றாள் வள்ளி. இவ   நம்மை ஒண்ணுமே நிம்மதியாச் செய்ய விடமாட்டா  என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு  சரி சரி  நான் எது செஞ்சாலும் ஏதாவது  சொல்லு   மனுஷனை நிம்மதியா  விடாதே என்றார்  எரிச்சலுடன். தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு .

    தூங்கும்போதுகூட ஏதானும் திட்டிகிட்டே இருக்காதீங்க வந்துபடுங்க. நேத்து கூட   சரியாத் தூங்கலை நீங்க! இன்னிக்கு  மதியமும்  கொஞ்சநேரம் படுக்கலே  முதுகெல்லாம் வலிக்கும் என்றாள். அடடா இவ என்னிக்கு நம்மைப் புரிஞ்சிப்பா  நமக்கு எது  நிம்மதியா இருக்கும்னு புரிஞ்சிக்கவே மாட்டளா இவ என்று மனதுக்குள் வருந்தியபடி எல்லாம் வரேன் நீ தூங்கு என்றார்  எரிச்சலுடன். அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது கல்யாணம் ஆகி நாற்பது வருஷம் ஆச்சு.  இன்னமும் இவ என்னைப் புரிஞ்சு நடக்கமாட்டேங்கறாளே.  மனுஷன் என்ன ரோபோ மாதிரியா நடந்துக்க முடியும் உணர்ச்சியே இல்லாம  ஏன் இவளுக்கு ஒண்ணும் புரியலே.

    அவருக்கு திருமணமான புதுசில் சம்பளம் 500 ரூபாய், அந்தக் காலத்திலேருந்து  இவருடைய  எல்லாக் கஷ்டநஷடங்களுக்கும் ஈடுகொடுத்து,  சிக்கனமா இருந்து பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் செஞ்சு பேரன் பேத்தியெல்லாம் பாத்தாச்சு. அதெல்லாம் சரி… இவ நம்மோட குடும்பத்துக்காகவே  உழைச்சிகிட்டு இருக்கா,   அதெல்லாம் இல்லேன்னு சொல்லையே. ஆனா இவ இன்னமும்  கல்யாணம் ஆனப்போ இருந்தா மாதிரியே  இருக்காளே;  நான் எந்த நல்லதைச் சொன்னாலும் திட்றேன்னே  எடுத்துக்கறாளே எப்போத்தான் புரிஞ்சு நடந்துக்குவாளோ என்று கோவம் வந்தது.

    பேருந்தில் எங்காவது  சென்றால் கூட பக்கத்திலே  இடம் கிடைக்கலேன்னு முன்னாடி  பெண்கள் இருக்கையிலே இவ போயி  உக்காந்துகிட்டு இருந்தாலும்  அப்பப்போ  இவளையே பாத்துகிட்டு  ஜன்னல் ஓரமா உக்காந்திருக்காளே கையை வெளியே நீட்டாமே இருக்கணுமேன்னு கவலைப்பட்டு உக்காந்து இருக்கற  இடத்திலேருந்து எழுந்துபோயி  அவ பக்கத்திலே நின்னு  கையை வெளியே நீட்டாதேன்னு சொன்னா இவரோட  அக்கறையை கொஞ்சமும் புரிஞ்சிக்காமே  எனக்கு தெரியும் என்று முறைச்சிண்டே பதில் சொல்லுவா இவ. நாம இவளைத் தாங்கு தாங்குன்னு தாங்கறோம்னு கொஞ்சமாவது புரிஞ்சிக்கறாளா இவ. நமக்கு இவமேலே எவ்ளோ அன்பு இருக்குன்னு கொஞ்சமாவது யோசிக்கறாளா  எதுவும் கிடையாது! என்று யோசித்துக் கொண்டே இருந்தவரை  என்ன ஆச்சு மணி பதினொண்ணு சீக்கிரம் வந்து படுங்க; முதுகு வலிக்கப் போவுது. எப்பொப் பார்த்தாலும் அந்தக் கம்ப்யூட்டர் முன்னாலே உக்காந்து,கண்ணைக் கெடுத்துக்கறீங்க. சரி  கிச்சன்லே பாலு காச்சி வெச்சிருக்கேன் ஒரு டம்ளர் பாலாவது குடிச்சிட்டு வந்து படுங்க என்று வள்ளியின் குரல் கேட்டது. அவருக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம் ஆமா! இவ என்னைப் புரிஞ்சிக்கலேன்னு கோவப்படறோமே  நாம இவளைப் புரிஞ்சிகிட்டு இருக்கோமான்னு?  அது மட்டுமில்லே நாம இவளை நேசிக்கிறோமான்னு சந்தேகம் வந்தது. அவரையே அவர் அலசிக்கொண்டிருந்தார்.

    இது வரைக்கும் இவளைத் தவிர வேற யாரையாவது எந்தப் பெண்ணையாவது  தப்பான கண்ணோட்டத்தோட பாத்திருக்கோமா  இல்லே, எப்பவும்  இவளுக்கு நல்லதைத்தானே சொல்றோம்;  ஒவ்வொரு புருஷன் மாதிரி  சுயநலமா இல்லையே நாம  இவளுக்கு ஒண்ணுன்னா  பதறிப் போறோம், இவளைக் கலந்து ஆலோசிக்காம இது வரைக்கும்  எதுவுமே செஞ்சதில்லையே நாம,  அம்மாவை எவ்ளோ நேசிச்சேனோ  அதே மாதிரிதானே  இவளையும் நேசிக்கறோம், இந்த உலகத்திலேயே நான் அதிகமா நேசிச்ச  எங்க அம்மாவுக்கு டாக்டர்   கான்ஸர்ன்னு  சொன்ன போதிலேருந்து   என்னைவிட  அதிகமா அவங்களைப் பத்தி தெரிஞ்சிகிட்டு அவங்களுக்கு  சிரிச்சமுகம் மாறாம  பாத்துப்பாத்து பணிவிடை  செஞ்சவதானே இவ.

    எனக்குக் கூட  அம்மாவைப் பத்தி அவ்ளோ தெரியாது;  ஆனா இவளுக்கு  அம்மாவைப் பத்தி தெரியாததே கிடையாதே. அப்பிடிப்பட்ட  இவ!  இப்போ ஏன் எப்போப் பாத்தாலும்  சிடுசிடுப்பா  மாறிப்போனா?  எத்தனையோ உறவுக்காரங்க செஞ்ச துரோகம் அதையெல்லாம் தாங்கித் தாங்கித்தானோ இவளுக்கு  சிரிக்கவே மறந்து  ஒரு யந்திரமா ஆயிட்டாளோ.  இந்த  எல்லாத்தையும் நானும்தானே தாங்கினேன் அதை மறந்துட்டாளோ இவ?  நானும்தானே  அவ்ளோ துரோகத்துக்கு நடுவிலேயும் இவளையும் நல்லா பாத்துகிட்டேன். எனக்கு மட்டும் இவ மேலே உண்மையான  ஆசை இல்லாமலா  எல்லாம் செஞ்சேன். இவளுக்குத் தெரியாமே ஒரு துரும்பைக் கூட நான் நகத்தினது இல்லையே. இவளுக்கு எந்த விதத்திலேயும் ஒரு சின்னத் துரோகம் செய்யாமே  அப்பிடியே  பாதுகாத்து பாதுகாத்துதானே  பறவை அடை காக்கறா மாதிரி கூடவே வாழ்ந்திருக்கேன். அதுனாலே இவளோட மனசுக்கும் தெரியும்  நாம இவளை எவ்ளோ நேசிக்கறோம்னு.  ஆனா சிலபேருக்கு  அன்பை வெளியிலே காட்டத் தெரியாது. அதைப் புரிஞ்சிகிட்டதுனாலேதானே இவ என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு அமைதியா போறேன்.   அதுக்காக  இவங்களுக்கே  ஆபத்து ஏற்படக் கூடிய  சில விஷயங்களிலே விட்டுக் குடுக்க முடியலையே! எப்பிடி வேணா போகட்டும்னு சுயநலமா இருக்க  முடியலையே!  அதான் கத்தறேன். எந்த ஒரு வினாடியும் நடிக்காமே உண்மையா  வாழணும்னு  நாம  வாழறோம்; உண்மையா வாழறோம்!  அது இவளுக்கு எங்கே புரியப் போகுது. ஒரு நாள் புரியும்! இவளுக்கும் புரியும்  ,இவளுக்கு மட்டுமில்லே. நான் எப்போ பார்த்தாலும் சண்டை  போட்டுகிட்டே இருக்கேன்,  நான் கோவக்காரன்னு, சண்டைக்காரன்னு  நெனைச்சிகிட்டு இருக்கற  பிள்ளைங்களுக்கும் புரியும்.

    வாழ்க்கையிலே  அதுக்கும் ஒருநாள் வரும். இவங்களுக்கு புரியுதோ இல்லையோ  நான்  உண்மையாத்தான் வாழறேன். அதுனாலே நாமும் இவளைக் மனசாரக் காதலிக்கறோம், சந்தேகமே இல்லே!  நிச்சயமா  நாம இவளை நேசிக்கறோம் இவளை மட்டும் இல்லே  நம்ம பிள்ளங்களையும் நேசிக்கறோம். அதிலே எந்தச் சந்தேகமும் இல்லேன்னு தீர்மானமாக  ஒரு எண்ணம் வந்தது  அவருக்குள்.  எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டுக்  கதவெல்லாம் பூட்டிஇருக்கான்னு பாத்துட்டு  அப்பிடியே  மனசுக்குள்ளே  எல்லாத் தெய்வங்களையும் வேண்டிகிட்டுத் தெய்வமே இவளுக்கும் என்னோட  எல்லாக் குழந்தைகளுக்கும், எல்லாருக்குமே தீர்க்க ஆயுசும் தீர்க்க சுமங்கலித்தனமும், தீர்க்க ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் குடு ஆண்டவான்னு வேண்டிகிட்டு  படுத்தார். பக்கத்திலே நீல விளக்கின் லேசான ஒளியிலே வள்ளி தூங்குவது தெரிந்தது.  வள்ளி மாத்திரை சாப்டியா என்றார். எல்லாம் சாப்டாச்சு தூங்கவிடுங்களேன் என்று எரிந்து விழுந்தாள் வள்ளி, சிரித்துக் கொண்டே ஐ லவ் யூ  என்றார். அவளிடமிருந்து ஒரு பதிலும் இல்லே. நான் சொன்னது உனக்கு கேட்டுதா?   நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றார் அழுத்தம் திருத்தமாக. சரி சரி  தூங்கும்போது எழுப்பி இதைச் சொல்லணுமா?  உங்களுக்கு சொன்னாக் கோவம் வருது!  நிம்மதியாத் தூங்கவிடுங்க காலையிலே  சீக்கிரம் எழுந்துக்கணும்  என்றாள் வள்ளி..

    மனதுக்குள்  இதான்,  இந்த திமிருதான் எனக்கு இவகிட்ட  பிடிச்ச விஷயமே, அதெப்பிடி கல்யாணம் ஆன புதுசிலே எப்பிடி மனசை வெச்சிருந்தாளோ  அப்பிடியே புதுக்கருக்கு அழியாமே இன்னும்  குழந்தை மாதிரியே  மனசை வெச்சிருக்கா  இவ என்று  மனதுக்குள் ஆச்சரியப்பட்டபடி  மனதுக்குள் சிரித்துக்கொண்டு  அவளுக்கு   நன்றாகப் போர்த்திவிட்டுவிட்டு  மீண்டும்  ஐ லவ்  யூ  என்றார். பாதித் தூக்கக் கலக்கத்தில்  நீங்களும் மாத்திரை சாப்பிட்டுட்டு படுங்க என்றாள் வள்ளி.

    சுபம்

     

     

    Share
  • “ எறும்பு பௌடர் “

    தமிழ்த்தேனீ

    இதோ  பாருங்க  எறும்பு  நிறைய வர ஆரம்பிச்சிடிச்சு,  முதல்லே போயி  எறும்புப் பவுடர் வாங்கிண்டு வந்து  போடணும் ,இல்லேன்னா  எல்லா சாப்பாட்டுப் பொருள்ளேயும்  எறும்பு வந்துடும் ,  அப்புறம் நாம சாப்படற  காப்பியிலேயும் மிதக்கும், ஏன்னா சர்க்கரையிலே எறும்பு இருக்கும், பால்லே எறும்பு வரும், அதைக் கவனிக்காம நாம காப்பி கலந்து  குடிப்போம் , அப்போ காப்பியிலே எறும்பு வரும் , சாப்படவும் முடியாது கீழே கொட்டவும் மனசு வராது  என்றாள் காமாட்சி.

    ஆமாம் காமாக்‌ஷி   மழைக்காலம் வருது , நாம வேணா  மழைக்காலத்துக்கு என்ன சேமிச்சு வெச்சுக்கணும்னு தெரியாம இருப்போம், ஆனா  நம்மவிட அறிவு குறைவுன்னு நாம சொல்றோமே  அந்த ஜீவராசி எல்லாம் புத்திசாலியா இருக்கு . எங்கேயாவது  உணவுப் பொருளைப் பார்த்தால்  உடனே  தன்னோட இருக்கற   எல்லாத்துக்கும் அதைச் சொல்லி  எல்லாரையும் கூட்டிகிட்டு வந்துடுது.

    எப்பிடி எல்லாத்துக்கும் புரியவைக்குதுன்னே  தெரியலே.  வெய்யில் காலம் முடியறதுக்குள்ளே  தங்களோட சக்திக்கும் மீறி  தங்களோட உடல் பலத்துக்கும் அதிகமான உணவுப் பொருட்களை  தங்களோட வாயாலே கவ்வி  முதுகிலே சுமந்துண்டு போயி  சேமிச்சு வெச்சிக்கும் என்றார் ஏகாம்பரம்.  அதெல்லாம் சரி,  நாட்டு மருந்துக் கடைக்கு போயி எறும்பு பௌவுடர்ன்னு ஒண்ணு விக்கறான், அதை வாங்கிண்டு வந்து வீட்டைச் சுத்தி  போட்டா  எறும்பு வராது  . முதல்லே போயி அதை வாங்கிட்டு வந்து வீட்டைச் சுத்திப் போடுங்க  என்றாள் காமாட்சி  .

    நாட்டு மருந்துக்  கடைக்குப் போயி  எறும்புப் பௌடர் இருக்கானு கேட்டார் ஏகாம்பரம். சார்  ஸ்டாக் தீந்து போச்சு, நீங்க ரெண்டு நாளைக்கு அப்புறம் வாங்க என்றார். என்னா வெலை சார் என்றார் கடைக்காரரிடம் .    சார்  எல்லாக் கடையிலேயும்  ஒரு பாக்கட்  10 ரூபாதான் சார் . ஆனா இப்பவே சொல்லிட்டேன்  நம்ம கடையிலே  ஸ்பெஷல்  அதுனாலே  15 ரூபா ஆவும் என்றார் கடைக்காரர்.

    அப்பிடி என்னா ஸ்பெஷல்  உங்க கடையிலே  என்ற ஏகாம்பரத்திடம், சார் இப்போ சொன்னா உங்களுக்கு புரியாது , ரெண்டு நாளைக்கு அப்புறம் வாங்க  எடுத்து வைக்கிறேன் என்றார்  கடைக்காரர்.

     இரண்டு நாட்கள் கழித்து  கடைக்கு சென்று அந்த  ஸ்பெஷல்  எறும்பு பவுடரை  ஒரு பாக்கெட்  வாங்கிக் கொண்டு வந்து வீட்டைச் சுற்றிப் போட்டார் ஏகாம்பரம். அப்போதும் எறும்பு வருவது குறையவில்லை.

    கடைக்காரரிடம் சென்று என்னா ஸ்பெஷல்  எறும்பு மருந்து  அப்பிடீன்னீங்க, இன்னமும் எறும்பு  வந்துகிட்டே இருக்குதே  என்ற ஏகாம்பரத்தைப் பார்த்து  சார் உங்களுக்காக  ரெண்டு நாள்  கஷ்டப்பட்டு  நிறைய எறும்பெல்லாம் பிடிச்சு  அதைக் காய வெச்சு  பொடி செஞ்சு குடுத்திருக்கேன்  அதுனாலேதான்  ஐந்து ரூபாய் அதிகம் வாங்கினேன் என்றார் கடைக்காரர்.

    அதெல்லாம் சரி.   நான் அந்த எறும்பு பவுடரை  எடுத்துகிட்டுப் போயி  வீட்டைச் சுத்திப் போட்டேனே  என்றார் அவர்.     எப்பிடிப் போட்டீங்க  என்றார் கடைக்காரர் .

    என்னாங்க இது கூட எனக்குத் தெரியாதா.  அந்தப் பொட்டலத்தை கையிலே வெச்சுகிட்டு  வீட்டு முன்னாலே  நின்னுகிட்டு  மூணு தரம் வலப்புறமாவும் மூணு தரம் இடப்புறமாவும் சுத்திட்டு  ,அதுவும் போதாததுக்கு  ஒரு தடவை வீட்டை கிழக்குலேருந்து ஆரம்பிச்சு   வலமா வந்து   நல்லா  சுத்திட்டு  அதுலே து துன்னு   ரெண்டு வாட்டி  துப்பிட்டு   அதுக்கு அப்புறம்  முச்சந்தியிலே   கொண்டு போயி போட்டுட்டு  திரும்பிப் பாக்காம வந்துட்டேனே என்றார்   ஏகாம்பரம்.

    சார்   எலி மருந்து வேணும்னாக் கூட  சொல்லுங்க  ஸ்பெஷல் எலி மருந்து தரேன் என்றார் கடைக்காரர்.

    இப்படி இருக்கிறது நாடு. மொத்தத்தில்   பெருச்சாளிகளுக்கும் , எலிகளுக்கும் , எறும்புகளுக்கும்  மட்டுமே  கொண்டாட்டமாய் இருக்கிறது.

    Share
  • விவசாயம்

    தமிழ்த்தேனீ

    உள்ளே  நுழைந்த ரமேஷைப் பார்த்து  சதாசிவம்  ஒரு புன்னகை  சிந்தி  உட்காருமாறு சைகை செய்தார்.     தொலைபேசியில்  யாரிடமோ  உத்தரவுகள் போட்டுக்கொண்டிருந்தார் . ஆமாம்   இன்னும் ஒருமணிநேரத்துலே  தக்காளி கேரட்டு மொத்தத்தையும் அறுவடை பண்ணிடணும் இல்லேன்னா காஞ்சு போயிடும் .அதுக்கு அப்புறம்  அந்த நெல்லு அதையும் இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள அறுவடை ஆரம்பிக்கணும்.  சேகர் கிட்ட சொல்லி உடனே மொத்த வயலையும்  உழுது  இன்னிக்கு  4 மணிக்குள்ளே திருப்பியும் மொத்த வயல்லேயும் நெல் போடச் சொல்லு  கொஞ்சம் ரூபா சேக்கணும்,  அமாம் ஆமாம்  மல்டிபில் டூல் யூஸ் பண்ணச் சொல்லு  டீசல் தீந்து போச்சுன்னா  ஆளைவிட்டாவது இன்னிக்கு அறுவடை பண்ணியே ஆகணும் . அப்புறம் ப்ரியாகிட்ட சொல்லு  அவளோட வயல்லயும், இன்னிக்கு பதினோரு மணிக்கு  மொத்தம் அறுவடை பண்ணனும், அப்போதான்  சரியா 12 மணிக்கு உழுது  திருப்பியும்   கேரட்டு போட நேரம் சரியா இருக்கும் .

    நான் இன்னிக்கு ஒரு மணி நேரம் சீக்கிரம் வந்துடுவேன்,  நானும் வந்தவுடனே  என்னோட  வயல்ல  மொத்தத்தையும் அறுவடை பண்ணிட்டு  சன்ப்ளவர் போட்ருவேன் என்று கூறிக்கொண்டே  அந்த முக்கியமான பைலில் கையெழுத்திட்டார் .

    ரமேஷ்  அந்த பைலை வாங்கிக்கொண்டே    “நாங்க கூட விவசாயக் குடும்பம்தான் சார்,   நாட்டுலே தண்ணி இல்லே, உரமெல்லாம் சரியா கிடைக்க மாட்டேங்குது, மின்சாரம் கிடைக்கலே,இனிமே  விவசாயிக்கெல்லாம்  மதிப்பில்லைடா, விவசாயம் செய்யறதே இனிமே கஷ்டம்தான், அதுனாலே நீயாவது ஒரு நல்ல வேலைக்குப் போயி குடும்பத்தைக் காப்பாத்துன்னு சொல்லி ,எங்க அப்பா  என்னை ரொம்பக் கஷ்டப் பட்டு படிக்க வெச்சார் சார். . ஆனா   விவசாயம் செஞ்ச நெலத்திலே  தண்ணி இல்லாமே   எல்லாம் க்ருகிப் போச்சுன்னு  மனசொடிஞ்சு அதே நெலத்திலே    தற்கொலை பண்ணிகிட்டாரு”  சார்  என்றான்

    சார் .   இந்த மாதிரி  ஒரு இன்டெர் நேஷனல் லெவெல்ல இருக்கிற  ஒரு அலுவலகத்துலே  இவ்ளோ பெரிய மேனேஜரா இருந்தாலும்  உங்க குடும்பத்தோட  விவசாயத்திலெ இவ்வளவு ஆர்வமா இருக்கீங்களே  உங்களை நெனைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு,  இன்னிக்கும் நம்ப நாடு ஓரளவாவது விவசாயத்துறையிலே முன்னணிலே இருக்குன்னா  அதுக்கு உங்களை மாதிரி நல்லவங்கதான் காரணம் என்றான்.

    அவனை  ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு விலாப்புடைக்க சிரிக்க ஆரம்பித்தார் அவர். அவர் இவ்வளவு சிரிக்கும்படி என்ன சொல்லிட்டோம்னே புரியாம  திரு திருன்னு முழிச்சிண்டு உக்காந்திருந்தான் ரமேஷ்.

    அவர் சிரித்து முடித்து விட்டு  ரமேஷ்  நாங்க  இந்த கம்யூட்டர்லே  இணைய தளத்திலே  பேஸ்புக்குலே  ஃபார்ம் வில்லா  ன்னு   ஒரு விளையாட்டு இருக்கு , அதுலே இந்த விளையாட்டு விளையாடிண்டு இருக்கோம்,  அப்பிடியே  வயல், அதுலே எல்லாக் காய்கறிகளும், நெல்லு எல்லாமே  எப்பிடி விளையுதுன்னு  அருமையாப் பண்ணி இருக்கான். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்லே   கலக்கறான், வெரி இன்ட்ரெஸ்டிங் கேம். ப்ளாஷ் ப்ளேயர்ன்னு ஒரு  சாஃப்ட்வேர்லே செஞ்சிருக்காங்க . அதுலே  என்னமா டிசைன் பண்ணி இருக்கான் தெரியுமா. நாங்க அதைப்பத்தி  பேசிகிட்டு இருக்கோம்.  நீ என்னடான்னா  உண்மைக் கதையெல்லாம் சொல்றே    என்று சொல்லிவிட்டு  மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார் மேனேஜிங் டைரைக்டர்.

    Share
  • “ இயற்கை ”

     

    தமிழ்த்தேனீ

     

    ஒன்பது வழிகள் வைத்தான் உடல்விட்டு உயிர் போக‌

    ஒரு வழியும் வைக்கவில்லை உயிர் வந்து உடல் சேர‌

    இறைவனிடம் நான் கேட்டேன், இது என்ன ஓர வஞ்சனை ?

    ஒரு கேள்வியினால்  கொக்கிபோட்டேன்

    அவனளித்தான் பல பதில்கள், அது எதுவும் புரியவில்லை

    ஆனாலும் ஒரு பதில் ஓரளவு புரிந்ததெனக்கு,

    ரகசியமாய் முணுமுணுத்தான் என் காதில் மட்டுமதை

    உங்களிடம் சொல்லுகிறேன் காத்திடுவீர் ரகசியமே

     

    இயற்கையின் சாகசமே அதிலிடங்கும் அதிசயமே

    இயற்கையை வெற்றி கொள்ள என்னாலும் முடியவில்லை

    இயற்கைதான்  கடவுள்  ,நான் கூட அதன் பிடியில்

    தவிக்கிறேன் மீளாமல், சொன்னால் நம்ப மாட்டாய்

    ஒரே ஒருமுறை தான் விதைத்தேன் ப்ரபஞ்ஜம் வளர்ந்தது

    பல முறை அழித்துப் பார்த்தேன் ஒன்றும் பலனில்லை,

    இனி இப் ப்ரபஞ்ஜம் நானே நினைத்தாலும் அழிக்க முடியாது

    ,இயற்கையை வெல்ல  என்னாலும் முடியாது..

     

    நீ கேட்ட கேள்விக்கு விடை தெரியுமா உனக்கு?

    கேள்விகள்கேட்பது சுலபம், உயிர் வந்து உடல்

    சேர ,இயற்கையை வெற்றி கொள்ள‌ வழி எதேனும்

    இருக்கிறதா ? ரகசியமாய் என்னிடமே இறைவன்

    கேட்டான் என்ன ப‌தில் நான் சொல்ல‌

    உங்க‌ளுக்கு தெரிந்தால் ரகசியமாய் என்னிட‌ம்

    சொல்லுங்க‌ள் …அவனிடம்  சொல்லுகிறேன்  நான் !!

     

     

     

    Share
  • “ கங்கா ஸ்னானம்”

    தமிழ்த்தேனீ

                                                உ

     காயத்ரி  அம்மாகிட்டே  பேசிண்டு இருந்தா  எனக்கும் உன் மாப்பிள்ளைக்கும்  சண்டை தெரியுமா? நான் அவர்கிட்டே  சரியா  பேசி  ஒரு மாசமாச்சு  என்றாள்  ,  ஏண்டி  இப்பிடி  மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் ஆச்சே  ,அவர்கிட்டே என்ன  சண்டை  என்றாள் அம்மா  !   ஆமா  உன்  மாப்பிள்ளையை  நீதான் மெச்சிக்கணும் . ஒண்ணுகூட   எனக்கு சாதகமா  செய்ய மாட்டார் , எதுக்கெடுத்தாலும் நாந்தான் அடங்கிப் போகணும்   எதுக்குமே  அவர் எனக்கு ஆதரவா பேசி இந்த ஒரு வருஷத்திலே நான் பாக்கலே.  அவருக்கும் எனக்கும் ஒத்துவராது  அதுனாலே  நாங்க ரெண்டு பேரும்  விவாகரத்து செஞ்சிடலாம்னு இருக்கோம் என்றாள் காயத்ரி.

    என்னடி சொல்றே இதுதான் உங்களுக்கு  தலை தீபாவளி, கல்யாணம் ஆகி  ஒரு வருஷம் கூட  ஆகலே அதுக்குள்ளே  ஒருத்தரை ஒருத்த என்ன புரிஞ்சிண்டீங்க. வாழ்க்கைங்கறது  சினிமா பாக்கறா மாதிரி இல்லே  இடைவேளை விட்டுட்டு  மறுபடியும் பாக்கறதுக்கு,  இப்பிடியெல்லாம் ஒளறாதே  நல்ல நாளும் அதுவுமா எனக்கு பகீர்ங்கறது, அந்த  பகவான்தான்  உனக்கு நல்ல புத்தி குடுக்கணும்  ,முட்டாள்தனமா  ஏதாவது செஞ்சுடாதே  பொறுமை வேணும் பொம்மனாட்டிக்கு  என்றாள் அம்மா. சரி  சரி  சீக்கிரமா வா  இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், எல்லாம் சரியாயிடும். அவசரப்பட்டு எந்த  முடிவுக்கும் வந்துடாதே  . அவசரமா  முடிவெடுத்துட்டு  அப்புறம்  காலம் காலமா வருத்தப்பட்டாலும்  அதெல்லாம் சரியாகாது,  அங்கே கூடத்திலே உங்க அப்பா  மாப்பிள்ளை  எல்லாரும்   நலங்கு இடப்போறோம்னு காத்திண்டு இருக்கா  என்றபடி  காயத்ரியையும்  அழைச்சிண்டு கூடத்துக்கு  வந்தாள். எல்லா  கவலையையும்  மனசுக்குள்ளே  வெச்சிண்டு  ஆனா சிரிச்ச முகமா  அம்மா வந்து  எல்லார் எதிரிலேயும் வந்து உக்கார்ந்தாள் .

    வாங்கோ மாப்பிள்ளை  நீங்களும் வந்து உக்காருங்கோ   காயத்ரி மாப்பிள்ளை பக்கத்திலே  வந்து உக்காரு என்றாள். காயத்ரியும்  அரைகுரை மனசோடு வந்து  உட்க்கார்ந்தாள் ,  எதிரே  தாம்பூலத் தட்டிலே  வெற்றிலை பாக்கு , வரளி மஞ்சள் வாழைப்பழம் அரைத்த  விழுது மஞ்சள், குங்குமம்,   ஒரு கிண்ணத்திலே நல்லெண்ணெய் போன்ற  எல்லாம் நிறைந்து இருக்கிறது.   மணைகளில்  கோலம் போட்டு  வைத்திருக்கிறது, வெளி வாயிலில்   புழக்கடை வாயிலில்  கோலம் போட்டு பளிச்சென்று இருக்கிறது. வீடே  ஒளிமயமாக  இருக்கிறது.

    நல்ல  தூக்கத்திலே  எழுப்பி    பல் தேய்த்து  வந்தவுடன்   காலை  ஒரு  காப்பியைக் கொடுத்து  கொஞ்ச நஞ்சம் இருக்கும்  தூக்கத்தையும் போக்கி  மணையிலே  உட்காரவைத்து  காலை நீட்டு ரெண்டு காலையும்  பக்கத்திலே  பக்கத்திலே சேர்த்து வெச்சுக்கோ  என்றபடி   விழுது மஞ்சளை எடுத்து   புறங்காலிலிலிருந்து  முழுப்பாதத்துக்கும் சேர்த்துப் பூசி    குங்கும விழுதால் புறங்காலிலே  கோலம் போன்ற கோடுகள் வரைந்து அதன் நடுவிலே பொட்டு வைத்து  ஒரு வெற்றிலை கொஞ்சம் பாக்கு சற்றே   சுண்ணாம்பு  வைத்து  அதை வாயிலே போட்டு  கடிச்சு  நல்லா மென்னு முழுங்கு  என்றபடி கொடுத்துவிட்டு    துடையிலே  நல்லெண்ணையால்  ஏழு பொட்டுக்கள்  வைத்து    உச்சந்  தலையிலும்   நல்லெண்ணெய்  தேய்த்துவிட்டு  சீக்கிரம் போயி   குளிச்சிட்டு வாங்கோ , வந்து   வாங்கி இருக்கோமே   அந்தப் புதுத் துணிகளை  போட்டுண்டு  வாங்கோ சீக்கிரம் என்று அனுப்புகிறாள்  அம்மா,     இந்த  வரிசையில் முதலில் நடந்தது  கண்ணுக்கு குளிர்ச்சியான  செயல், அப்பாவை மணையிலே உட்காரவைத்து அவர் காலில்  முதலில்  இந்த  எல்லாம் நடந்து முடிந்து  அவருக்கு வெற்றிலை பாக்கு கொடுத்தாள்  அம்மா  , அதன் பிறகு  அம்மாவை மணையிலே உட்காரவைத்து   அப்பா  அம்மாவின் காலிலே அதே போல்  மஞ்சள் பூசி எல்லாம் குங்குமம் செய்து  இட்டார். அய்யய்யே  அம்மா  காலை அப்பா பிடிக்கிறார்  என்றேன் நான்

    டேய் கண்ணா  இதுக்கு பேரு  காலைப் பிடிக்கறது இல்லே   அம்மா  என்னை மஹா விஷ்ணுவாக  நினைத்து எல்லாம் செய்தாளே  அது மாதிரி  நானும் உங்க  அம்மாவை மஹாலக்ஷ்மியாய்  நினைச்சுண்டு   அவளோட  பாதத்துக்கு  மஞ்சள் பூசி  குங்குமம்  வெச்சு வெற்றிலை பாக்கு குடுத்து  மரியாதை செய்யறது  என்றார் அப்பா.    ஒரு வருஷம் முழுவதும்  உங்க அம்மா  நமக்கெல்லாம்   எல்லாம் செய்யறாளே  அதுனாலே  அதுக்கு மரியாதை  குடுக்கறா மாதிரி  இன்னிக்கு  அம்மாவுக்கு நாமளும்  நல்லதெல்லாம் செய்யணும்  , இன்னிக்கும்   , பெருமாளுக்கு  பூஜை செய்யறதுக்கு  எல்லாம் எடுத்து வெச்சிருக்கா   பண்டிகை  சமையல் செஞ்சு வெச்சிருக்கா, பட்டாசெல்லாம் வெச்சிருக்கா , பக்‌ஷணமெல்லாம் செஞ்சு வெச்சிருக்கா சீக்கிரம் போயி குளிச்சிட்டு  வந்து   , அந்த தட்டிலே  நமக்கெல்லாம் புதுத் துணி எல்லாம் வெச்சிருக்காளே அதையெல்லாம் எடுத்து  போட்டுண்டு  பெருமாளையும்

    லக்‌ஷ்மியையும்  சேவிச்சு  எல்லாரையும் மகிழ்ச்சியா  வையுங்கன்னு   வேண்டிகிட்டு  பட்டாசெல்லாம் வெடிச்சு கொண்டாடுவோம் .   நம்ம பெரியவங்க  எல்லாத்தையுமே  யோசிச்சு ஏற்பாடு செஞ்சு வெச்சிருக்காங்க  உங்க அம்மாவுக்கு  என் மேலே  ஏதாவது கோவம் இருந்தா  அதே மாதிரி  எனக்கு உங்க அம்மா மேலே  எதுக்காவது  கோவம் இருந்தா  வருஷத்துக்கு  ஒரு நாள் இப்பிடி  செஞ்சா  கோவமெல்லாம் போயி  அன்பு வந்துடும் ,பாசம் வந்துடும் அதுக்குத்தான் இதெல்லாம் செய்யறது.   இதுக்கெல்லாம்  விடியற் காலையிலே எழுந்து  இவ்ளோ செஞ்சு வெச்சிருக்காளே  அதுக்காக  நாமெல்லாரும்  அம்மாவுக்கும் நன்றி சொல்லணும். ஐதுக்கு பேரு  நலங்கு இடுறது   காலைப் பிடிக்கறது இல்லே  என்றார்

    அடுத்ததா  மாப்பிள்ளை  பொண்ணு  ரெண்டு பேரையும்   உக்கார வெச்சு  அவங்களுக்கும்   நலங்கு இட சொல்லிக் கொடுத்தாள் அம்மா.   பொண்ணு காயத்ரி மாப்பிள்ளையை  உட்கார வைத்து  அவர் காலுக்கு நலங்கு இட்டாள்,  மாப்பிள்ளை  காயத்ரியை உக்கார  வெச்சு  நலங்கு இட்டு விட்டாள்.   சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ  மாப்பிள்ளை  ,காயத்ரி  நீயும் சீக்கிரம் குளிச்சிட்டு வா   பூஜை பண்ணிட்டு  சாப்படலாம்  பசிக்கறது    என்றார்.  அப்பா  ,

    டே கண்ணா  ஒரு விஷயம்  தெரியுமா  இன்னிக்கு  நாம  வாங்கி வெச்சிருக்கோமே  அந்த  கங்கா ஜலம் இருக்கற  சொம்பை எடுத்து அதிலேருந்து  கங்கா ஜலம் எடுத்து  அதை  மொத்த  தண்ணீரிலே கொட்டி   கங்கா ஸ்னானம் செய்யணும் என்றார்.  உங்களுக்கெல்லாம் ஒரு  விஷயம் சொல்லணும்  எத்தனையோ சாக்கடைகள்  வந்து கலக்கறது நதிகளிலே  .  அதே மாதிரிதான்  கங்கையிலேயும்  பல சாக்கடைகள் வந்து கலக்கறது   அதுக்கும் மேலே  அந்த கங்கையிலே  பல  அழுகிய உடல்கள் மிதக்கறது,  இவ்ளோ மாசுபடுத்தறோம் அந்த  கங்கையை. ஆனா  அந்த  கங்கா நதி இத்தனை அழுக்கையும் சுமந்து கொண்டு  புனித நதின்னு பேர் வாங்கறதே  அது எப்பிடி”  அதுமட்டுமில்லே  அந்த கங்கை நதியோட  தண்ணீரை  ஒரு சொம்பிலே கொட்டி அதை பாது காத்து வெச்சா  எத்தனை வருஷமானாலும்  அதோட  புனிதம்  கெட்டுப் போகாமே  அப்பிடியே இருக்கே  அதான் அந்த கங்கையோட  பவித்ரம், சக்தி  அது மாதிரிதான்  நாமளும்   நம்மோட  வாழ்க்கையிலே எத்தனையோ  கோபதாபங்கள், வெறுப்புகள்  சண்டைகள் ஊடல்கள் , எல்லாத்தையும்  அனுபவிச்சாலும் அடிப்படையான  நம்மோட தரத்தை இழக்காம அப்பிடியே இருக்கணும்  அப்பிடீங்கறதைத்தான் அறிவுறுத்தறது  இந்த  கங்கா  மாதான்னு நம்மாலே வர்ணிக்கப்படற  கங்கை நதி  என்றார்  அப்பா.

    புது ஆடைகள் பொட்டுண்டு  வந்து உக்கார்ந்த  மாப்பிள்ளை நீங்க சொன்னதெல்லாம் உண்மை நாம் எப்பவுமே  நல்லதுக்குதான்  சொல்றோம் நல்லதுக்குதான் செய்யறோம்னு  புரிஞ்சிக்கறவங்களுக்கு  அவங்களோட  தரம் குரையறதே இல்லே  என்றார், காயத்ரியையே பார்த்தபடி.   உள்ளே வந்த  காயத்ரி அம்மா  நீங்க  சொன்னதெல்லாம் யோசிச்சிண்டே  கங்கா ஜலத்திலே  குளிச்சேன் , இப்போ  மனசு தெளிவா இருக்கு, அதோட  அப்பா சொன்னதையெல்லாம் கேட்டேன்,  கவலைப்படாதே  அவரையும்  சரி செஞ்சு  நானும் சந்தோஷமா இருக்கேன், என்றபடி   அந்த  அல்வாவைக் குடு எங்க ஆத்துக்காரருக்கு  ரொம்பப் பிடிக்கும்  என்றபடி அல்வாவை எடுத்துக் கொண்டு போன  காயத்ரியைப் பார்த்து  பெருமாளே  நீதான்  இவளுக்கு நல்ல புத்தியைக் குடுத்தே  , கங்கா மாதா  எல்லாம் உன் அருள்  என்றபடி  சீக்கிரம் பட்டாசு  வெடிச்சிட்டு சாப்பிட வாங்கோ  என்றாள்,

    இந்தாங்கோ உங்களுக்கு  அல்வா பிடிக்குமேன்னு குடுக்கச் சொன்னா அம்மா  என்றாள் காயத்ரி   .மாப்பிள்ளை  அல்வாவை  வாங்கியபடி   நீ ரொம்ப கெட்டிக்காரி  எனக்கே அல்வா குடுக்கறையா  என்று சிரித்தபடியே  எழுந்து  இந்தப் புடவை  உனக்கு ரொம்ப நல்லா இருக்கு  சரி வா  சங்கு சக்கரம் கொளுத்தலாம் என்றார்.

    உங்களுக்கு கூட  இந்த  வேஷ்டியும்  சொக்காயும்  ரொம்ப நல்லா இருக்கு கையிலே  ஒரு  சங்கும் சக்கரமும்தான்  பாக்கி  அப்பிடியே  மஹா விஷ்ணு மாதிரியே  இருக்கும்   என்றாள் காயத்ரி காதலுடன்  அவனையே பார்த்துக் கொண்டு  சிரித்தபடி ..    எல்லோரும்  ஹோ என்று கத்திக் கொண்டே எழுந்து ஓடிப்போய் குளிச்சிட்டு புதுத்துணியெல்லாம் போட்டுண்டு  வாசல்லே போயி  பட்டாசு வெடிச்சிண்டு இருக்காங்க  நீங்க  என்னா செய்யறீங்க   கங்கா ஸ்னானம் ஆச்சா?  சீக்கிரம்  சீக்கிரம் , மகிழ்ச்சியா  தீபாவளி கொண்டாடுங்க.

                                     சுபம்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • பெரிய மனுஷன்

    தமிழ்த்தேனீ

    மாலைகள் மலைகளாக வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. சிவா ஒவ்வொரு மாலையாக வாங்கி  வைத்துவிட்டு அடுத்தவர் மாலை போட அனுமதிக்கிறான். அவர்  பெயர் என்னவோ சின்னசாமி ஆனால் வியாபார  உலகிலே அவர்தான்  பெரியசாமி.  பெரிய  மனிதர்  ,அவர்  நின்றால் வியாபார  உலகமே நிற்கும்   நடந்தால்தான்   உலகமே நடக்கும். சமீபத்தில் அவர் வியாபாரத்தில் இந்தியாவிலேயே முதல்  இடத்தைப் பிடித்து  இந்தியாவின் முதல் பணக்காரராக  அறிவிக்கப்பட்டார் .   அப்படிப்பட்ட   சின்னசாமி  லேசாக தலையைத் திரும்பிப் பார்த்தார்.

    அவர் சற்றே தலையைத் திருப்பினால் என்ன பொருள், வேகமாகத் திரும்பினால் என்ன பொருள்  நிமிர்ந்து பார்த்தால் என்ன செய்யவேண்டும், சற்றே  கண்களை மூடித்திறந்தால் அதன் விளைவு எப்படி இருக்க வேண்டும் அந்த  விளைவுக்கு  என்ன செய்ய வேண்டும்   என்றெல்லாம்  ஒரு அகராதியே  எழுதி அதை  தினமும் படித்து  மனப்பாடம் செய்து வைத்து  அதன்படியே  இம்மியும் பிசகாது நடக்கும் அந்தரங்க காரியதரிசி சிவா  .

    சிவா  சின்னசாமியிடம்  காரியதரிசியாக வந்து சேர்ந்து  20 வருடங்கள்  ஓடிவிட்டன. நல்ல  நாணயமான நம்பிக்கையான அவருடைய அந்தரங்கம் மொத்தம் அறிந்த ஒரே மனுஷன்.   அப்படிப்பட்ட   சிவாவை அழைத்து “டேய் குளிருதுடா அந்த ஏசீயைக் கொஞ்சம் குறை”  என்றார்  சின்ன சாமி .

      அவனும்  இவரையே பார்த்துக் கொண்டிருக்கிறான் .அவன் பார்வையில் ஒரு கனமான அழுத்தம்.. என்ன  ஆச்சு?  ஓ வீடு முழுவதும்  சென்ட்ரலைஸ்ட்  ஏசீ   அதுனாலே  யோசிக்கறானோ!

    “டேய் சிவா  என்னடா ஆச்சு என்ன யோசிக்கறே”  என்றார்  சின்ன சாமி.

    சிவாவின் கண்களிலிருந்து  கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

    “ என்னடா  ஆச்சு  சொல்லிட்டு அழு  என்ன ஆச்சுன்னே சொல்லாமே அழுதா  என்ன  அர்த்தம் “ என்றார்  எரிச்சலாக.

    “ உன்னோட  பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லேன்னு சொன்னியே எப்பிடி இருக்கா” என்றார்.

    சிவா உதட்டைப் பிதுக்கி மீண்டும் அழ ஆரம்பித்தான்.

    “ஏண்டா  அவளுக்கு உடம்பு சரியில்லேன்னா  டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போக வேண்டியதுதானே  இங்கே  நின்னு அழுதுகிட்டிருந்தா  சரியாயிடுமா  சரி  போ போயி அவளைக் கவனி  அம்மாகிட்ட  சொல்லி பணம் வேணுன்ம்னா  வாங்கிக்கோ “ என்றார்

    ஆனால் அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறான்

    பக்கத்தில் இருந்த  மனைவி  பாருவிடம் “ இவனுக்கு  கொஞ்சம் பணம் குடுத்து  அனுப்பிட்டு  நீயாவது அந்த  ஏசீயைக் கொஞ்சம் குறையேன்  எனக்கு குளிருது  “ என்றார்

    “பாரூ  உன்னைத்தான் சொல்றேன்  என்றார் . அட  நான் சொல்றதையே காதிலே வாங்காம   என்னையே பாத்துகிட்டு இருக்கே  . உன்னோட  பேரு பார்வதி அதைச் சுருக்கி  பாரூன்னு செல்லமா கூப்பிட  ஆரம்பிச்சதிலேருந்து இப்பிடித்தான்  பாருன்னு கூப்பிட்டா  பாத்துகிட்டே இருப்பே”  என்றார்  பெருமையுடன் .

    என்ன இது யாருமே  காதிலே வாங்க மாட்டேங்கறாங்க  அவருக்கு கோவம் கோவமாக வந்தது.  அவரோட   மதிப்பு என்னா  , அவர் போகாத   வெளிநாடு இல்லே    எங்கே போனாலும் ரத்தினக் கம்பள வரவேற்பு, என்னா மரியாதை, அவனவன்  வாயை பொத்திகிட்டு  மரியாதையா  தூர  நிப்பான், அப்படிப்பட்ட  அவர் சொல்லியும் கேக்காம  இருக்காங்களே .

    அவரைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் ஒரு முறை  பார்த்தார் . அட எல்லோருமே  ஏதோ மௌனமா இருக்காங்களே . ஆமாம் என்ன  நடந்து போச்சு.  அது சரி  அவருக்கு மட்டும் சொல்லவே இல்லையே  ஒரு வேளை மரியாதையினாலேயா  அல்லது  பயத்தினாலேயா  ,

    அது என்னான்னே  தெரியலையே , அவருக்கு  எப்போதுமே மறைத்து வைப்பது பிடிக்காது  எல்லாமே வெளிப்படையா பேசணும் என்பார்

    சரி  நாமே எழுந்து போய் ஏசீயைக் குறைச்சிட்டு  அப்புறம் பாக்கலாம் என்ன ஆச்சுன்னு  என்று  எழுந்தார்! எழுந்திருக்க  முடியவில்லை  கை கால்களை அசைக்க  முடியவில்லை

    இதென்ன  மூச்சு திணறுகிறது  என்ன இது அவருடைய  மூக்கிலே  ஏதோ அடைத்துக் கொண்டிருக்கிறது.   தும்மல் வருகிறது. ஆனால் தும்ம முடியவில்லை, இருமல் வருகிறது , ஆனால் இரும முடியவில்லை , உள்ளே இருக்கும் சளி வெளியே போனால்தானே   இருமல் நிற்கும்.

    “ஏசீயைக் குறைங்கடா  எத்தனை முறை சொல்றது  “ என்று கத்தினார் , யாருக்கும் காதிலே விழவில்லை

    அவர்  குளிர்சாதனக் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறார்.  அவரைச் சுற்றி  எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள் .

    “ எப்போ பாடியை  எடுப்பாங்க”  என்று யாரோ கேட்து  அவர் காதில் விழுகிறது

    மாலைகள் மலைகளாக வந்து குவிந்து கொண்டிருக்கின்றன

    சுபம்

    Share
  • வண்ணான்

    -தமிழ்த்தேனீ

    “நீ  என்னை   ரொம்ப நல்லவன்னு நெனைக்காதே! நான் அவ்ளோ நல்லவன் இல்லே”  என்றார் கார்த்திகேயன். திடுக்கிட்டாள் சௌதாமினி.

    “என்னது ஏன் இப்பிடி உளர்றீங்க…என்ன ஆச்சு உங்களுக்கு  உடம்பு சரியில்லையா?”  என்றாள் பதட்டத்துடன்.

    “அடேடே  பயந்துட்டியா…?  பயப்படாதே! ஆனா நான் சொன்னது உண்மை” என்றார் கார்த்திகேயன்.

    “என்ன விளையாட்டு இது? உங்களுக்கு வயசு  ஐம்பது!“  என்றாள் சௌதாமினி.

    “அதுனாலே என்ன? நான் குழந்தையாப் பொறந்து வாலிபப் பருவத்தை அடைஞ்சுதானே இப்போ ஐம்பதை எட்டி இருக்கேன். புரியுதா… நானும் வாலிபப் பருவத்திலே இருந்திருக்கேன், இன்பேச்சுவேஷன் ஆக்ரமிச்சிருந்த பருவத்திலே  எது காதல் எது காமம்னே  தெரியாமத்தானே இருந்தேன்“

    “எது அழகு…எது கவர்ச்சி…எது குத்துவிளக்கு… எது அகல் விளக்கு… எது மின்மினி விளக்குன்னு குழம்பித்தானே வளந்திருக்கேன்?”

    “நான் என்ன புத்தனா ராமனா  உணர்ச்சிகள் நிறைஞ்ச வெறும் கார்த்திகேயன்தானே? நானும் தவறுசெய்ய நிறைய வாய்ப்பு கிடைச்சுதே!”

    “இப்போ என்னை உத்துப் பாரு!  நான் இந்த  ஐம்பது வயசிலேயும்  கம்பீரமா அழகா ஆண்மையா இருக்கேன்னா…அப்போ  என்னோட வாலிபப் பருவத்திலே நான் எப்பிடி இருந்திருப்பேன்னு  உன்னாலே கற்பனை செஞ்சு பாக்க  முடியுதா?”

    “என்னோட  பழைய போட்டோவெல்லாம் பார்த்துட்டு  உண்மையிலேயே  நீங்க  அழகாத்தான் கவர்ச்சியாத்தான் இருக்கீங்கன்னு  ஒருநாள்  ரசிச்சுச் சொல்லிட்டு,   ஏங்க உங்களை யாருமே காதலிக்கலையா  நீங்க  வேற யாரையுமே காதலிக்கலையான்னு கேட்டியே நியாபகம் இருக்கா?”

    “நான்கூட   சே……… சே  அதெல்லாம் ஒண்ணுமில்லேன்னு வழிஞ்சேனே  அதை அப்பிடியே  நம்பி என்னோட  இத்தனை வருஷமா குடித்தனம் நடத்தறியே… உன் மனசிலே  என் மேலே  சந்தேகமே வரலியா? வந்திருக்கும்  ஆனாலும் நம்மோட புருஷன்  நல்லவன்னு   நம்பியோ இல்லே….சரி நாம கல்யாணம் செஞ்சிகிட்டு வரதுக்கு முந்தி ஏதாவது நடந்திருந்தா  அதைத் தோண்டியெடுத்து கவலைப் படறதிலே  என்ன உபயோகம்  நமக்கு கல்யாணம் ஆகி  இந்த ஆளு  நம்மோட  புருஷனா  ஆயிட்டாரு  இனிமே இந்த  ஆளை நம்ம கையிலே வெச்சிக்கணும்னு அதுதான் வாழ்க்கை  அப்பிடீன்னு புரிஞ்சு  புத்திசாலித்தனமா  ப்ராக்டிகலா வாழ்ந்தியான்னு யோசிச்சேன்”

    “எது எப்பிடி இருந்தாலும்  என்னமோ ஒரு அலசல்  சுய அலசல் . ஆனா சத்தியமா என்னைப் பொறுத்த  வரைக்கும்  உன் மேலே  ஒரு துளிக்கூட  சந்தேகமே எனக்கு வந்தது கிடையாது.  அதுனாலே எனக்கு எந்த  உறுத்தலும் இல்லே”

    “ஆனா  நான் நல்லவன் தானான்னு அப்பப்போ சந்தேகம் வரும். யோசிப்பேன்… அப்பிடி யோசிச்சதிலே எனக்கு கிடைச்ச  விடையைத்தான்  உனக்கு இன்னிக்குச் சொன்னேன்” என்றார் கார்த்திகேயன்”

    “அப்பிடி ஏன் உங்களுக்கு தோணுது? ஏதாச்சும் தப்பு பண்ணீங்களா”  என்றாள் சௌதாமினி.

    “இந்தக் கேள்விக்குதான்  விடையைத் தேடிகிட்டு இருக்கேன்” அவ்ளோ நல்லவன் இல்லேன்னு விடை வந்தாலும்… நானும் நல்லவன்தான் அப்பிடீன்னு ஒரு விடையையையும்  சொல்லுது மனசு என்றார் கார்த்திகேயன்.”

    “ஏன் தெரியுமா?  தைரியம் இல்லாமலோ,  பயத்தாலோ அல்லது மனசாட்சி, கடவுள், பாவம் புண்ணியம் எல்லாம் கலந்த ஒரு உணர்வாலோ  இல்லே  ஏதோ தெய்வத்தோட அருளாலோ எவ்வளவோ  சந்தர்ப்பம் கிடைச்சும் நான்  தப்பு பண்ணலேன்னு  சொல்றதைவிட   தப்பு பண்ண முடியலேன்னு சொல்றதுதான்  உண்மை”

    “மனசிலே  நிறைய  தப்பெண்ணம் வந்தாலும் அது பாவம்தான்  அப்பிடீன்னாலும்   உடம்பாலே  எந்த   தப்பும் செய்யாமே  இருந்தோம்   அப்பிடீங்கற திருப்தி ஒண்ணுதான் இன்னமும் என்னைத் தலை நிமிர்ந்து நல்லவன்னு நெனைக்க வைக்குது“

    “அதுக்கு என்னைச் சரியா வழிநடத்தின எங்க அப்பா அம்மாவுக்கும்  இறைவனுக்கும்  நான் நன்றி சொல்லிகிட்டே இருக்கேன்”

    “ஆனாலும் நான் ஒண்ணும் அவ்ளோ கெட்டவன் இல்லே  நல்லவன்தானே”   என்றார் கார்த்திகேயன்

    மொத்தத்தையும் கேட்டுவிட்டு  அவரைக் கட்டிக்கொண்டு அவர் கண்களையே உற்றுப் பார்த்து “அப்பிடிப்பாத்தா  நீங்களும் நல்லவர்தான்  நானும் நல்லவதான்  என்றாள் சௌதாமினி”

    ”மணி வெளுக்கச் சாணை உண்டு
    மனம் வெளுக்க வழி உண்டோ?” என்று எங்கிருந்தோ  பாடல் கேட்டுக்கொண்டிருந்தது.

    சுய அலசல் செய்து அங்கே மனிதம் நிமிர்ந்தது.   இருவரும்  மனம்விட்டுச் சிரித்தனர்.

    சுபம்

     

     

     

    Share
  • நடக்காத கதை!

    -தமிழ்த்தேனீ

    ஏங்க  நீங்க எழுதற  எல்லாக் கதையையும் படிச்சுப் பாத்தேன்;  அதென்ன  நம்மைச் சுத்தி  நடக்கறதையே   கதையா எழுதறீங்க.  நமக்குத் தெரிஞ்சவங்க யாரு படிச்சாலும்  அது யாரோட  கதைன்னு  உடனே புரிஞ்சுக்குவாங்க  என்றாள் குற்றம் சாட்டும் பாவனையில் ஆனந்தவல்லி.

    திடுக்கிட்டு  நிமிர்ந்த  எழுத்தாளர் தமிழ்த்தேனீ.  சுதாரித்துக் கொண்டு  சாரதா  நம்மைச் சுத்தி நடக்கறதைத்தான் கிரகிச்சுக் கதை எழுதணும்.  எழுத முடியும். இது வரைக்கும்   நடக்கறதை வெச்சிக் கதை எழுதறவங்கதான் அதிகம். ஏன் தெரியுமா? நடக்காததை கற்பனை செஞ்சு கதை  எழுதினா படிக்கறவங்களுக்கு  அது புரியாது.

    அதுனாலே  படிக்கறவங்களுக்கு  புரிஞ்சாதான் அது ஒரு கதையோட வெற்றி.

    அது மட்டுமில்லே நம்மைச் சுத்தி நடக்கறதை கூர்ந்து கவனிச்சு  அதிலே இருக்கற நுணுக்கத்தை மட்டும் மையமா வெச்சிண்டு  அதையே கருவாக்கி கதை எழுதினாத்தான்  அது கதை. நீ நெனைக்கறா மாதிரி  உனக்கு நான் எழுதற கதை புரியறா மாதிரி  மத்தவங்களுக்கு  புரியாது.  அதாவது  அவங்களுக்கு  நம்மைச் சுத்தி நடக்கறதுதெரியாது . அதுனாலே அவங்களுக்கு நான் எழுதற கதைகள் வேற மாதிரி புரியும்; அதுனாலே பிடிக்கும் என்றேன் நான்.

    ஆனாலும் ஒரு  கதையைப் படிக்கற வாசகனுக்கு அந்த அனுபவம் எப்பிடி இருக்கணும் தெரியுமோ?

    நல்ல  தலைவாழையிலையிலே மனசுக்கும் நாக்குக்கும் பிடிச்சா மாதிரி ரசிச்சு சாப்ட்டுட்டு  பத்தும்பத்தாக் குறைக்கு   திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழத்தை வெச்சுண்டு  மெல்லமா  அதன் தோலை உரிச்சு  கொஞ்சம் கொஞ்சமா நுனிப்பல்லாலே  கடிச்சு கடிச்சு சாப்பிடும்போது அதோட இனிப்பு  நாக்கு பூராவும்  அப்பிடியே மையாக் கரைஞ்சு  தொண்டையிலே இதமா இறங்கி  பாதாதி கேசம் வரைக்கும்  படர்ந்து  ருசிக்கறதே…அது மாதிரி சுகானுபவமா இருக்கணும்.

    நல்ல பங்கனபள்ளி மாம்பழத்தை பல்லாலேயே தோலுரிச்சுக் கடிச்சு அதோட சாறு முழங்கை வரைக்கும்  போயிடப்போறதேன்னு பயந்து கீழே வழிய விடாமே புறங்கையிலேயே  நக்கி மறுபடியும்  பாளம் பாளமா அதோட  சதைப்பற்றை கடிச்சுக் கடிச்சு மொத்தப் பழத்தையும் சாப்பிட்ட பிறகும்   மாங்கொட்டையிலே ஒட்டிண்டு இருக்கற  இனிப்பான சதையை  பல்லாலே வரட் வரட்டுன்னு வழிச்சு பல்லுலே நார் மாட்டிண்டாலும் பரவாயில்லேன்னு வழிச்சு  சாப்படணும்கிறா மாதிரி  டேஸ்ட்டா இருக்கணும்.

    இன்னும் ஒரு மாம்பழம் வேணுமான்னு  யாராவது கேட்டா  இல்லே  போதும்னு சொல்ல  மனசு வரலேன்னாக் கூடத்  தப்பா எடுத்தக் போறாங்களேன்னு… பறக்காவிட்டின்னு  நெனைச்சுப்பாங்களேன்னு பயந்து  ரொம்ப நல்லா இருந்துது போதும்  எல்லாம் ஒரு  லிமிட்டுதான்  அதான் சாப்ட்டேனே ன்னு அசடு வழியறா மாதிரி இருக்கணும்.

    நல்ல  சாப்பாட்டு ராமன்… வேற உதாரணமே கிடைக்காதா  உங்களுக்கு  என்றாள்  ஆனந்தவல்லி சிரித்துக் கொண்டே.

    என்ன செய்யறதும்மா? ருசின்னாலே  சாப்படுதானே. நல்ல  கத்திரி வெய்யில்லே  வெப்பம் தாங்காமா  வேர்த்து வடிஞ்சு   குழாயைத் தொறந்து விட்டுக்  காலைநீட்டினா  அதிலேயும் கொதிச்சுப்போன டேன்க்  தண்ணி சுளீர்ன்னு  பட்டா  எரிச்சலா இருக்கும் . ஆனால் தண்ணியோட  வேகத்திலே  மேலாக இருக்கற கொதிச்சுப்போன தண்ணி சர்ருன்னு கீழே போயிட்டு  திடீர்னு  சில்லுன்னு  தண்ணி  வந்து காலிலே படும் போது  ஏற்படுமே  ஒரு  உணர்ச்சி அப்பிடி இருந்தாக் கூட ரசிக்கலாம்.

    ஏரோப்ளேன் டேக்ஆஃப்  ஆகும்போது  அடி வயித்திலேருந்து ஜிவ்வுன்னு கிளம்பி உச்சந்தல வரைக்கும் ஏறுதே  பாம்பு மாதிரி ஒரு பய உணர்ச்சி அதுமாதிரியும்  மூச்சு முட்டிக்  காதெல்லாம் அடைச்சுண்டு  செவிடாயிட்டா மாதிரி பூஜ்ஜியமா ஆயிடறோமே  அது மாதிரியும் இருக்கலாம். ஆன ஒண்ணு… வெளிநாடே பாக்காதவங்க  கிட்டப்  போயி   பர்கர், பிஸ்ஸாவைப் பத்தி வர்ணிச்சா  அதுக்கு தொட்டுக்க  ஒரு சாஸ் குடுப்பாங்க பாருங்கன்னு  சொன்னா அவங்களுக்கு புரியுமா?  அதுக்காகத்தான்  மதுர மல்லி மாதிரி  வெள்ளை வெளேர்ன்னு இட்லி,   ஜாதி மல்லியோட  வாசனை மாதிரி   நறுமணமா  குருமா   அப்பிடீன்னெல்லாம்  வர்ணிச்சா  புரியும்.

    அதுனாலேதான்  நம்மைச் சுற்றி நடக்கிறதையெல்லாம் கதையா எழுதறேன்.

    இங்கே  எல்லாரும் எதை  அனுபவிக்கறாங்களோ  அதை எழுதறேன்.

    இப்பிடியெல்லாம்  சமாதானம் சொல்லிண்டாலும்  ஒரு  வேளை  சாரதா சொல்றது கூடச்  சரியா  இருக்கும் போல இருக்கே கொஞ்சம் விதயாசமா  எழுதவும் கத்துக்கணும்.

    சரி ஒரு கதையை இதுவரை நடக்காத  சம்பவத்தை மையமாவெச்சு எழுத முடியுமா  வாசகர்களுக்கு  புரியறா மாதிரி  என்பது ஒரு  சவாலாகவே  மனசுக்குள்ளே  உறுத்திகிட்டே இருக்கு. அப்பிடி ஒரு கதையை  எழுதணும்ன்னு  ஒரு தீர்மானம் உருவாச்சு மனசுக்குள்ளே. சரி  ஆனந்தவல்லி  நீதான்  சொல்லேன்…  இது வரைக்கும்   நடக்காத ஒண்னை சொல்லேன். அதைக் கதையா  எழுதறேன்  என்றேன்.

    அய்யய்யோ  எனக்கு  அதெல்லாம் தெரியாது அப்பிடி எழுதினா  நல்லா இருக்கும்னு சொன்னேன்.  எனக்கு உள்ளே வேலையிருக்குன்னு சொல்லிட்டு எழுந்துபோனாள் அவள்.

    உண்மையிலேயே  இது கதாசிரியனுக்கு  ஒரு அருமையான  சவால்தான். நடக்காத  கதையை  எப்பிடி எழுதறது ,எதை எழுதினாலும் உலகத்தோட ஏதோ ஒரு  மூலையிலே  அது நடந்திருக்கு. கல்  நடந்தா   மரம் நடந்தா  குளம் நடந்தா  அதுதான்  சம்பவம். கிணறு  நடந்தா  அதுவும் சம்பவம்    இதெல்லாமே  நடக்காத  சம்பவம்  நடக்காத  கதைக்கு  ஒரு உதாரணம் வேணும்னா  நடந்த  தேர்தலில்  நேர்மையான அரசியல்வாதி ஒருவர்  வெற்றி பெற்றார்  இந்த ஒரு வரியே  நடக்காத  கதைக்கு  உதாரணம்  அப்பிடீன்னு  சொன்னா  அது நடக்காத  கதைன்னு ஒத்துக்குவாங்க.

    நாம் யார்கிட்ட  பேசினாலும்  பேசும்போது இல்லாத ஒன்றைப் பற்றிக் கதைவிட்டால்தான் அதை ரசனையோடு கேக்கறாங்க  இல்லேன்னா  காதிலேயே  வாங்கமாட்டாங்க . ஆக, கதையோ, கவிதையோ அல்லது கற்பனையோ எந்த ஒரு எழுத்துக்கும் விறுவிறுப்பும், ஆரவாரமும் அவசியம் தேவை. நடந்த அல்லது   நடக்காத கற்பனையான ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அதைத் திரித்து, அவரவர் சிந்தனைக்கு ஏற்றபடி அதை லாவகமாகக் கதையாக்கினாத்தான்  படிப்பாங்க.

    நாம் ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்டு, அதை மற்றவரிடம் சொல்லும்போது அது நடந்தமாதிரிதான் நாம் சொல்லுகிறோம். அதை நம்மகிட்ட கேட்டவர், வேற ஒருத்தர்கிட்ட  சொல்லும்போது  அதையே வேறு மாதிரி சொல்கிறார். இப்பிடிப் பல காதுக்கு இந்த சம்பவம் போகும்போது  அந்த உண்மையான சம்பவமே  கற்பனை கலந்து  மொத்தமாவே  மாறிப் போயிடுது.

    ஆக இது வரைக்கும், நடக்காத  ஒரு சம்பவத்தை அல்லது நிகழ்ச்சியை நாம் கற்பனை செய்ய முடியும் என்பது உண்மையானாலும், அது நம்மாலே  முடியுமா  என்று சந்தேகமே  வந்தது  அவருக்கு இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இயற்கை. சூரியனும் சந்திரனும் பகல் இரவாக மாறி மாறித் தோன்றுகின்றன. யுகம் தோன்றிய காலத்திலிருந்து, இது நடந்து கொண்டிருக்கின்ற ஒன்று. ஏன்னா!.. இந்த நிகழ்ச்சியையே இப்படி கற்பனை செய்தால் எப்படி இருக்கும்.  இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு தொடர்ந்து சூரியன் உதிக்கும், அதன்பிறகு ஒரு வாரத்துக்கு சந்திரன் ஆட்சி செய்யும். அதாவது ஒருவாரம் இருட்டில இருப்போம், நிச்சயமா கரெண்ட் இருக்காதுன்னு நினைச்சுக்குவோம், அப்புறமா வெளிச்சம் ஒரு வாரந்தான் இருக்கும். ஏன்னா, இது நடக்காத சம்பவமாச்சே!

    அட  இது நல்லா இருக்கே! அவருக்கு  அவரோட  அம்மா  எழுத்தாளர் கமலம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.  நம்மோட  மூளையிலேருந்து  வெளிப்படற  கதிர்கள் இந்தப் ப்ரபஞ்சத்திலே  ஏற்கெனவே நிறைஞ்சு அழியாம சுத்திகிட்டே இருக்கற கதிர்களோட எப்பிடியோ ஒரு  தொடர்பு ஏற்படும் போதுதான்  நமக்கும்  கற்பனை  வரும். எதுவுமே இல்லாமே  நமக்கும் கற்பனை வராது;  ஏன்னா  பஞ்ச பூதங்களோட  தொடர்பு கொண்டதுதானே  நம்மோட  மனசும் புத்தியும்  அப்பிடீன்னு.

    மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டு  ஏதேதோ பேசிக்கொண்டே இருந்த ஆனந்தவல்லி,  உங்க கதையெல்லாம்  நல்லாத்தா இருக்கு.  நான் நல்லா இல்லேன்னு சொல்லலலே… அதுனாலே  நீங்க ஏதும் வருத்தப்படாதீங்க  என்று சமாதானப்படுத்தினாள்.

    இல்லேம்மா… நான் அதுக்கெல்லாம் வருத்தப்படலே.  ஜீரணிக்க  முடியாத  கேள்விதான்! ஆனாலும் உண்மையான  கேள்வி  நீ கேட்டது.  அதைத்தான்  யோசிச்சிண்டு இருக்கேன்;  நீ ஒண்ணும் தப்பாச் சொல்லலே.

    உண்மையாச் சொல்லணும்னா  ஒரு கதாசிரியனோட  ஈகோவைத்  தொட்டு  அவனோட திறமைகளை வெளிக்கொண்டு வர கேள்வி இது.  சுய பச்சாதாபத்தினாலேயோ   வீண் கர்வத்தினாலேயோ  நாம்  எப்பேர்ப்பட்ட எழுத்தாளன்  நமக்கு போயி ஒருத்தர்  உபதேசம் செய்யறதா  என்றெல்லாம் எதிர்மறையா  சிந்திக்காம  நேர்மையாச் சிந்திச்சு  எழுதினா  கிடைக்கப் போற நல்ல பேரு  எனக்குதானே.   அதுக்காகத்தானே   நீ சொல்றே.  அதைப் புரிஞ்சுண்டுதான்  யோசிக்கறேன்  என்றார்.

    உங்களுக்கு  ஒரு விஷயம் தெரியுமா?  நாம லாஸ்வேகஸ்லே பாத்தோமே  சரஸ்வதி… அவங்ககூட உங்க நாடகம் சினிமால்லாம் பாத்திருக்கேன்னு  சொன்னாங்களே. அவங்க  ஐம்பது வயசிலே கர்ப்பமா இருக்காங்களாம். இனிமே கருவைக் கலைச்சா அவங்க உயிருக்கே ஆபத்துன்னு  டாக்டருங்க சொல்லிட்டாங்களாம். அதனாலே என்ன?  ஏதோ  ஆனது ஆச்சுன்னு   அடுத்து என்ன செய்யணுமோ அதைச் செய்யறதை விட்டுட்டு அவங்க மருமகப் பொண்ணு  அவமானம் அவமானம்னு  பிடுங்கி எடுக்கறாளாம்  என்றாள்.

    இது  நடந்த  கதை.  ஆனால் இதை மையமாக வைத்து இதையே நடக்காத  கதையாக மாற்றி அதாவது மாற்றுக் கோணத்தில் சிந்தித்து  எழுதினார்.  அது  “நெருப்பின் நிழல்“  என்னும்  கதை.  ஆனால், இது என் கற்பனையின் ப்ரகாரம்  நடக்காதுதான்,  நடக்காத  கதைதான். ஆமாம்  ஒரு தாயின்  மனம்படும்  வேதனை என்னும்  அடுப்பிலே எரிந்து கொண்டிருக்கும் அணையாத நெருப்பு  அதன் தாக்கம் அதனால் எழுந்த ஏக்கம்  அதன் விளைவாக  எழுந்த ஆக்கம்!

    சரி  என் பொண்டாட்டி ஒப்புக்கறாளான்னு பாப்போம். இவளே ஒத்துக்கலேன்னா…  எப்பிடி  ரசிகர்கள் ஒத்துக்குவாங்க? தயக்கத்தோடு  நீட்டினார்  படிச்சுப் பாரு என்றார்.  ஆனந்தவல்லி  படிக்க  ஆரம்பித்தாள்… 

    நெருப்பின்நிழல்

    மனைவியை  ப்ரசவத்துக்கு  உள்ளே அனுமதித்துவிட்டு வாழ்க்கைத் துணையா  குழந்தையா என்னும் பதைப்புடன் வெளியே நின்று தவிப்பதை விட   எவ்வளவு கொடுமையான வலியாக இருந்தாலும் ப்ரசவமே மேல், உள்ளே  வலியின் கொடுமை தாங்காமல் கதறிக் கொண்டிருந்தாள்  கற்பகம். அந்தரத்து ஊஞ்சல்  எப்போது அறுந்து விழும் எங்கே தள்ளும் என்றே தெரியாத  அவஸ்தை  போன்ற நெருப்பு அவள் கதறல். தவித்துக்கொண்டிருந்தார் சதாசிவம்.

    சற்றே தள்ளி  நின்று கொண்டு மருமகள்  ராகினி பேரன் பேத்தியைக் கொஞ்சவேண்டிய இந்த ஐம்பது வயசிலே இதெல்லாம் தேவையா?  ஊர்லே நாலு பேரு அசிங்கமாப் பேசறாங்க.  வெளியிலே தலைகாட்ட முடியலே  என்று சலித்துக் கொண்டாள். மகன் சங்கரும், பெண்ணும் மாப்பிள்ளையும்  மௌனமாக நின்றிருந்தனர்.

    நமக்குத்தானே அவமானமா இருக்கு  என்ற  மருமகள் ராகினியின் சொற்கள் தணலின் தகிப்பாய்  மனதை சுட்டது சதாசிவத்துக்கு.

    சார்… குழந்தை சரியா திரும்பாம மாட்டிகிட்டு இருக்கு. சிசேரியன்தான் வேற வழியில்லே. அவங்க வயசு எதிர்ப்புத் திறன் இதெல்லாம் ஒத்துவருமான்னு தெரியலே. இதுலே கையெழுத்து போடுங்க. எங்க முழு முயற்சியை நாங்க செய்யறோம் என்றாள் அவசரமாக டாக்டர் தாரிணி.

    எப்பிடியாவது  என் பொண்டாட்டியையும்  குழந்தையையும் காப்பாத்திக்குடு  கர்ப்பரக்‌ஷகாம்பிகா  என்று மனமுருகி வேண்டிக்கொண்டு பதைப்புடன் காத்திருந்தார் சதாசிவம். சற்று நேரத்தில் உள்ளேயிருந்து வந்த டாக்டர்   தாரிணி தாயும் சேயும் நலம். நார்மல் டெலிவரி. அவங்க வயசுக்கும் இருந்த நிலமைக்கும்  இது ஏதோ தெய்வ சக்திதான்.  நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கு… வாழ்த்துக்கள் என்று கையைக் குலுக்கிவிட்டுப் புன்னகைத்தாள்.

    சதாசிவத்துக்கு அந்தப் புன்னகை கர்பரக்‌ஷகாம்பிகையின் புன்னகையை நினைவூட்டிற்று. நீங்கள்ளாம்  வீட்டுக்கு போயிடுங்க. அவளுக்குத் துணையா நானே இருக்கேன் என்று  இருந்த சதாசிவம் கையால் குழந்தையை லாவகமாக  எடுத்து உச்சி மோந்து உடல் சிலிர்ப்புடன் கட்டிலில் படுத்திருந்த கற்பகத்தின் பக்கத்தில்  விட்டுவிட்டுச் சொல்ல முடியாத   உணர்வோடு ஆதரவாக கற்பகத்தின் கையைப் பிடித்துக் கொண்டார்.

    என்னோட  எல்லாப் பிடிவாதத்துக்கும் இது வரைக்கும் நீங்க  ஏன்னு ஒரு வார்த்தை கூடக் கேக்கலை.  எல்லா உயிரும் பொறக்கறதும் போறதும்  சகஜம்தான் அதுக்கு நடுவிலே இருக்கற வாழ்க்கையில் மனசுதாங்க முக்கியம்.

    நாம ரெண்டு பெத்தோம் வளர்த்தோம். ஆனா அவங்களுக்கு ஏதோ தானே பொறந்து தானே வளர்ந்தா மாதிரி ஒரு உணர்வு வந்திருச்சுங்க.  ஒரு வார்த்தை  அம்மான்னு கூப்படறதில்லே.  அதுனாலேதான்  அந்தத் தாய்மை உணர்வை, மறுபடியும் அனுபவிக்கணும்; அம்மாங்கற பாசமான மந்திரத்தை மறுபடியும் கேக்கணும்னு  ஒரு எண்ணம்.

    இந்தக் குழந்தை பெரியவனா  ஆகற வரைக்குமாவது என்னை அம்மான்னு கூப்பிடுமே. மறுபடியும்  பாசமான  அம்மாங்கற குரல் காதிலே விழுமே அதான் இந்தப் பிடிவாதம் என்றாள் புன்னகைத்தபடி.

    சதாசிவம்  எனக்கு புரியுதும்மா    நெருப்புக்கு நிழல் விழாதுன்னு சொல்வாங்க அதான் என்னோட பயம் என்றார்.

    இது  நீறுபூத்த  நெருப்புங்க. நெருப்புக்கு  நிழல் விழாதுதான்  ஆனா இது நெருப்போட நிழல் இல்லே நெருப்போட நிஜம்  என்றாள் கற்பகம்.

                                                      சுபம் 

    கதையைப் படித்துவிட்டு நிமிர்ந்தாள் ஆனந்தவல்லி. ஒரு மர்மக் கதையைப் படிக்கும்போது  முடிவை நோக்கி  நகரும்போது  இதயம் லப்டப் என்று துடிக்குமே  அந்த  நிலையில்  அவளைப் பார்த்தார்  கனக்கும்  இதயத்துடன்.

    எனக்கு இப்பதாங்க புரியுது  நடக்காத  கதையை நம்மாலே எழுத முடியாது   அப்பிடீன்னு. ஆனா இந்தக் கதை அருமையா இருக்கு என்றாள். அட!  பொண்டாட்டி பாராட்றாளே… இதுவே  உலகத்திலே  நடக்காத  கதையாச்சேன்னு ஒரு திருப்தி  வந்தது அவருக்கு.

     

     

    Share
  • வினாயக சதுர்த்தி

    தமிழ்த்தேனீ

    images (13)

    வழக்கம் போல் வினாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடைத்தெருவுக்குப் போய் வினாயகர் வாங்கி வரவேண்டும்.. நடந்து போய் வாங்கிக் கொண்டு அதி ஜாக்கிரதையாக நடந்து வரவேண்டும். கடைத்தெருவுக்கு போய் வினாயகர் வாங்கி வரவேண்டுமென்றால் ஒரு மணைப்பலகை வேண்டும் அதிலே களிமண்ணால் செய்த வினயாகரை வாங்கி வைத்துக் கொண்டு அந்த வினாயகர் கீழே விழுந்துவிடாதபடி பத்திரமாக எடுத்துக் கொண்டு வரவேண்டும். அப்போது சாலையில் வரும் பாதசாரிகள், வாகனங்கள் எதன் மேலும் படாதவாறு கொண்டு வரவேண்டும்.

    கிட்டத்தட்ட கோயிலிலே பெருமாள் தாயார் ஏளப்பண்ணுபவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக பெருமாளுக்கும் தாயாருக்கும் எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லாமல் அவர்களுடைய ஆடை அணிகலன்கள் ஆபரணங்கள் மாலை போன்றவை கீழே விழாமலும் அசங்காமலும் அழகாக ஏளப்பணுகிறார்களோ அப்படி மிக பக்தியோடு பிள்ளையாரை ஒரு மணைப் பலகையில் வைத்துக்கொண்டு ஏளப்பண்ணிக் கொன்டு வரவேண்டும்.

    கடைத் தெருவுக்குப் போய் முதலில் வினாயகரை வாங்கக் கூடாது, முதலில் அவருக்கு மஞ்சள் குங்குமம் அவருக்கு அணிவிக்கும் எருக்கம் பூ மாலை, தென்னை ஓலையில் செய்த தோரணங்கள் . குடை, அவர் கண்ணில் பொருத்த குந்துமணி, , அதன் பிறகு அவருக்கு நிவேதனம் செய்ய விளாம்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம், போன்ற பழவகைகள், அரிசிபொறி கடலை வாழை இலை போன்ற எல்லாவற்றையும் வாங்கிவிட்டு எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துக் கொன்டு அதன் பின்னர் வினாயகரை வாங்கி மணைப்பலகையில் வைத்து கூடவே கொஞ்சம் களிமண் வாங்கி வினாயகரை மணைப் பலகையோடு நான்கு புறமும் வைத்து வினாயகர் நர்த்தன வினாயகராய் ஆடாதாவாறு பொருத்திக் கொண்டுதான் பத்திரமாக வீட்டுக்கு கூட்டிவரவேண்டும் வினாயகரை.

    எல்லாம் வினாயகன் அருளால் வெற்றிகரமாக ஆயிற்று. வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து அதி ஜாக்கிரதையாக வாங்கிய பொருட்களை மனைவியிடம் கொடுத்துவிட்டு மிக கவனத்தோடு கிழக்கு பக்கம் பார்த்து மணைப்பலகையோடு வினாயகரை ஏளப்பண்ணி ஆயிற்று

    அதற்குள்ளாக குளித்துவிட்டு பூஜைக்கு வேண்டிய நிவேதனங்கள் புஷ்பம் தேங்காய் போன்ற எல்லாவற்றையும் தயார் செய்து பூஜைக்கு தயார் நிலையில் இருந்தாள் துணைவியார்
    சரி சீக்கிரம் வினாயகரை தயார் செய்யுங்கள் பூஜைக்கு என்றாள் சகதர்மிணி

    என்னாது வினாயகரை பூஜைக்கு ரெடி பண்ணனுமா ! எப்போ எப்பிடி பூஜை பண்ணாலும் அவர் ஏத்துக்குவாரே அவரை எதுக்கு தயார் பண்ணனும் என்றேன் நான்.

    போதும் அசடு வழியாதீங்க வினாயகருக்கு நெற்றிக்கு இட்டு எருக்கம் பூ மாலை போட்டு குடையை அவருக்கு பின்னாலே வெச்சு பூணூல் அணிவிச்சு எல்லாம் செஞ்சு தயார் பண்ணுங்க .அதுக்கு முன்னாடி களிமண்ணுலே வாங்கிண்டு வந்திருக்கற பிள்ளையாருக்கு அந்தக் குந்து மணி குடுத்திருக்கானே அதை சரியா வெச்சு கண்ணு பொருத்துங்க, என்றாள் அவள்

    ஓ நீ அதைச் சொன்னியா என்று வழிந்தபடி சரி சரி என்று வினாயகரை தயார் செய்யத் தொடங்கினேன், முதலில் கண்ணைப் பொருத்திவிடலாம் என்று வினாயகா எல்லோருடைய அறிவுக்கண்ணையும் திறக்கறவன் நீ உனக்கு கண்ணு பொருத்தணும் நான், அதுக்கு நீதான் முகத்தை அசைக்காம காட்டணும் என்றேன் .

    ஏனோ தெரியவில்லை யசோதை கிருஷ்ணனுக்கு ரசித்து ரசித்து அலங்காரம் செய்வாளாம். வேண்டுமென்றே கண்ணுக்கு மையெழுதும் போது நெற்றிக்கு திலகமிடும்போது சற்றே அசைத்துவிடுவானாம் குறும்புக்கார கிருஷ்ணன் மறுபடியும் இடுவாளாம் யசோதா அது நினைவுக்கு வந்தது

    மிகக் கவனமாக ஒரே நேர்க் கோட்டிலே வினாயக்னின் தும்பிக்கையின் இரு பக்கமும் நெற்றியின் இருபக்கமும் மிகச் சரியாக இருக்கும்படி குந்து மணியின் சிகப்பு பாகத்தை கண்களின் உள்ளே பொருத்தி க்ருப்பு பாகத்தை வெளியே இருக்குமாறு பொருத்தி தூரத்திலே சென்று அவர் பார்க்கும் பார்வையில் மாறுபாடு உள்ளதா என்று பார்த்துவிட்டு சரியாக இருக்கிறது என்று மனத் திருப்தியுடன் எருக்கம் பூ மாலையை எடுத்து அவருக்கு சார்த்திவிட்டு. நானே என்னை ஒரு முறை பார்த்துக்கொண்டு எந்தப் பக்கமாக பூணூல் இருக்கவேண்டும் என்று சரிபார்த்துக் கொண்டு நல்ல நூல் எடுத்து மூன்று இழையாக திரித்து அதை பூணுலாக்கி ப்ரும்ம முடிச்சு இடது தோளின் மேல் இருக்க வேண்டும் வலது புறமாக கிழே வரவேண்டும் பூணூல் என்று சரிபார்த்துக்கொண்டு அதையும் அவருக்கு சார்த்திவிட்டு சரி அவருக்கு நெற்றியிலே திருமண் ஶ்ரீசுவர்ணம் இடவேண்டுமே நம்முடைய வைஷ்ணவர்களின் வழக்கப்படி என்று திருமண் ஶ்ரீசுவர்ணப் பெட்டியைத் திறந்து நெற்றியிலே திருமண்ணால் இரு பக்கமும் கோடு போட்டு கீழே நெற்றியின் மூலாதாரப் பகுதிக்கு கீழே அந்த இரு கோடுகளையும் இணைத்து நடுவிலே ஶ்ரீசுவர்ணக் கோடு வரைந்து ஆஹா எல்லா அலங்காரமும் பண்ணியாச்சு சரியா இருக்கா பாரு என்றேன்

    நன்னா இருக்கு ஆனா நாம வடகலை ஆனா திருமண் யூ மாதிரி வராமே ஒய் மாதிரி கீழே நீட்டிண்டு இருக்கே பரவாயில்லையா என்றாள்

    ஆமா பிள்ளையார் வடகலையா தென்கலையா அப்போதுதான் எனக்கே சந்தேகம் வந்தது.

    சரி எதுக்கும் இருக்கட்டும் என்று அந்த நாமத்துக்கு கீழே விபூதியையும் பூசி ஒரு குங்குமப் பொட்டும் வைத்து வினாயகரை தும்பிக்கையாழ்வாராகவும் வினாயகனாகவும் விக்னேஷ்வரனாகவும் மூல முதல்வனாகவும் வேத வியாசர் சொல்லச்சொல்ல தன் தந்தத்தையே எழுத்தாணியாக்கி மஹாபாரதம் எழுதிய வினாயகரை பூஜை செய்யத் தொடங்கினோம்

    Share
  • ஆசிரியர் தினம்

    தமிழ்த்தேனீ

    புழுவாயிருந்த  என்னை  என் தாயாரும் தந்தையாரும்  கொட்டிக் கொட்டியே  தேனியாக்கினார்கள் அப்படிப்பட்ட என்னை  அதன் பின்னர் தமிழைக் கொட்டி  தமிழ்த்தேனைக் கொட்டி தமிழ்த்தேனியாக்கிய  என் ஆசிரியர்கள்  மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கம்.

    ஆசிரியருக்கும்  குருவுக்கும் வித்யாசம் என்ன   என்று ஆராய்ந்தால்  கற்றுக்கொள்ள விழைபவனுக்கு  உலகத்தில் அத்தனைபேருமே குருவாகிறார்கள். ஆனால் ஒவ்வொரு  குறிப்பிட்ட  நூலையும் கற்க ஒவ்வொரு ஆசிரியர் தேவைப்படுகிறார்.  கணக்குக்கு ஒரு ஆசிரியர், தமிழுக்கு ஒரு ஆசிரியர்  என்று. ஆனால் குரு என்பவர் தனக்குத் தெரிந்த  அத்தனையையுமே கற்பிக்கிறார்   தன்னிடம் சீடனாய் இருப்பவருக்கு, அதனால்தான் முற்காலங்களில்  குருகுலம் என்னும் முறை இருந்தது.   மாதா  பிதா குரு அதன் பிறகுதான் தெய்வத்தையே வைத்தோம்  நாம் ஆமாம் பிறந்தது முதல்  தாய், அதன் பின்னர் தாயும் தந்தையும், அதன் பின்னர்  தாயும் தந்தையும் குருவும்,  இறைவனும்.

    வாழ்க்கை முழுவதும்  நமக்கு கற்றுத் தரும்  குரு அல்லது ஆசிரியர் யார் தெரியுமா  ‘அனுபவம்’  .

    நான் அடிக்கடி சொல்வேன்  அனுபவம் கற்றுக் கொடுக்கின்ற பாடத்தை ஆன்டவனால் கூட அளிக்க முடியாது  என்று.  ஆனால் ஒவ்வொரு உயிர்க்கும்  ஆண்டவன் தான்  விதி என்கின்ற பெயரிலே  அனுபவங்களைக் கொடுக்கிறான் என்பது  உண்மையே. ஆயினும்  அனுபவம் நம்மை நேரிடையாகச் சந்திக்கிறது, பாடத்தை  அறிவை வழங்குகிறது. என்னுடைய  எட்டாம் வகுப்பு  ஆசிரியர்கள்  திரு. கம்பீர நாயனார் அவர்களும்   கிருஷ்ணமாச்சாரி என்கிற ஆசிரியரும்  எனக்கு தமிழ் போதித்தவர்கள். அப்போதெல்லாம்  தமிழ்  1  தமிழ் 2  என்று  இரு பிரிவாக வகுப்பெடுப்பார்கள்.

    அன்று அவர்கள் விதைத்த  தமிழ்தான் இன்றும் எனக்கு  உதவுகிறது.  நடிக்க, மேடையில் பேச, கதைகள் கட்டுரைகள்  கவிதைகள்  எழுத, நாடகம் எழுத இயக்க, மிக முக்கியமாக  மிகச் சரியான முறையிலே  தமிழை உச்சரிக்க. ஆகவே ஆசிரியர் தினமாகிய  இன்று நாம் தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், குருவையும், அனுபவங்களையும் சேர்த்தே இறைவனாகப் பார்க்கும் மனப்பான்மையை  வளர்த்துக் கொள்ளுதல்  நலம் பயக்கும்.  அனைவரையுமே  வணங்குவோமே.

     

    Tamil

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    ஆசிரியர் தினம்

    ஆசிரியன் எனைக் கடைத்தேற்ற

    அவரெடுத்த முயற்சிகள் எத்தனை

    பாசிறிய திருக்குறளும்

    ஆச்சரிய நாலடியும் நூற் சிறிய நன்னூலும்

    ஆல் போன்ற  கலித்தொகையும்

    அரண் போன்ற  பாரதமும்,வாழ்வுதாரணமாய் 

    ராமாயணமும் பூப்போன்ற மனம் கொண்ட

    பெரியோர்கள் ஆசான்கள் தேவதைகள்

    தெய்வங்கள் அல்லா ஏசு  ராமனையும்

    அறிமுகம் செய்து வைக்க எத்தனை பயிற்சிகள்

    திருமுகம் போல் ஒளிரும் ஆசிரியர்

    அறிமுகம் ஆன அந்நாள் வாழ்வின்

     மறுமுகம் காட்டிய பொன்னாள்

    இன்முகம் காட்டி இலக்கணம் மூட்டி

    தமிழ்ச்சுவை இனிதே ஊட்டி

    கனிமுகம் காட்டி கணிதம் ஊட்டி

    அஞ்ஞானம் அகற்ற மெய்ஞ்ஞானம் ,விஞ்ஞானம் ஊட்டி

    நண்பராய் பண்பிலே தெய்வமாய் பழகுதற்கு இன்பராய்

    வாழ வழிகாட்டி அருளோடு ஆன்மீகம் ஊட்டி

    அருள்கின்ற ஆசிரியர்க்கு பெரு நன்றி காட்ட

     நாம் பெற்ற  ஒரு தினம்  ஆசிரியர் தினம்

     

    Share
  • யார் குழந்தை

    தமிழ்த்தேனீ

    2016ம் ஆண்டு பிறக்கிறது, இந்த வருடம் ஜனவரி மாதம் 1ம் தேதியிலிருந்து அவருக்கு 63 வயது முடிந்து 64 ம் வயது ஆரம்பமாகிறது  கதிரேசனுக்கு . புது வருட வாழ்த்துக்கள் அவருடைய தொலைபேசியிலும் இணையதள மடல்களிலும் நிரம்பி வழிகின்றன. அத்துடன்  அவருடைய பிறந்த நாளுக்கும்  சேர்த்து வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும்  வேலையிலிருந்து ஓய்வு பெற முடியவில்லை, அவர்   வியாபாரம் ஓஹோவென்று ஓடிக்கொண்டிருக்கிறது.

    வாழ்க்கையின் ஒவ்வொரு துளி ஸ்வாரஸ்யத்தையும் அனுபவிக்க முடியாமல் பணம் பணம் என்று அதன் பின்னால் அலைந்து குரங்கின் கையில் பிடித்த பாம்பாய்  விட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். விட்டால் வியாபாரம் என்னும் பாம்பு ஒரே போடாகப் போட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

    பேரக் குழந்தை பிறந்தவுடன் பார்த்தது. இப்போது அதற்கு மூன்று வயதாகிறது. பிறந்த  குழந்தையை இன்னும் வந்து பார்க்கவில்லை என்கிற குறை மகனுக்கும் மருமகளுக்கும்.

    இந்த முறையும் ஒரே நாள்தான் குழந்தையுடன் இருக்க முடியும். என்ன செய்யறது  அவர் வேலை அப்படி. மாதக் கணக்காய் வெளிநாடுகளில் சுற்றி சுற்றி இந்தியாவுக்கு வருவதே  அபூர்வமாகி இருக்கிறது.

    அவருக்கே வெறுப்பாய் இருந்தது, என்ன வாழ்க்கை இது நாமபாட்டுக்கு பேரப் பிள்ளைகளுடன் விளையாடினோமா,ராத்திரி பேரனின் பக்கத்திலே படுத்து அணைத்துக் கொண்டு தலையைக் கோதிவிட்டுக் கொண்டே கதை சொல்லி குழந்தை தூங்கியவுடன் நன்றாகப் போர்த்திவிட்டு,

    ஹூம்ம் இதெல்லாம் நமக்கு கிடைக்காத சொர்க்கங்கள், நினைத்துப் பெருமூச்சு விடத்தான் முடியும்   என்று நினைத்துக் கொண்டார். கதிரேசன்  மனிதர்களுக்கு எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதானே,

    ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றிற்கு அதுவும் கிடைக்காத மறு பக்கத்துக்கு ஏங்கிக் கொண்டேதான் வாழுகின்றனர் என்று நினைத்தவருக்கு சிரிப்பு வந்தது.  ஏதோ இப்போதாவது பேரனைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே. இதோ ஆயிற்று இன்னும் சிறிது நேரத்தில் இந்தியாவில் தரையிறங்கி விடுவோம். விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணம்.

    இமிக்ரேஷன் முடிந்தவுடன் லக்கேஜை எடுத்துக் கொண்டு  வெளியே போக வேண்டும் . அடிக்கடி பயணம் செய்யும் அவரை அடையாளம் கண்டு ஹலொ சார் நலமா என்று விசாரிக்கும் இமிக்ரேஷன் அதிகாரியிடம் நாங்கள் நலமே நீங்க நல்லா இருக்கீங்களா என்று விசாரித்துவிட்டு

    வெளியே வந்தார். தூரத்தில் மகனும் மருமகளும் பேரனும் நின்று கையை ஆட்டுவது தெரிந்ததும் உற்சாகமானார்.  வாங்கப்பா ப்ரயாணமெல்லாம் சௌகர்யமா இருந்துதா என்றாள் மருமகள்

    நல்லா இருந்துதும்மா குட்  எப்பிடி இருக்கேம்மா , எப்பிடிப்பா இருக்கே டேய் குட்டிப் பையா  எப்பிடி இருக்கே என்றார். பதிலே சொல்லாமல் அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது குழந்தை.

    என்னடா அப்பிடிப் பாக்கறே  நான் உன்னோட தாத்தாடா, என்கிட்ட வா  என்று அழைத்தார் வாஞ்சையுடன்  வரமாட்டேன்  எனக்கு உன்னைப் பிடிக்கலே   என்றது குழந்தை.

    அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது தாத்தாவை என்றான் மகன்.

    அது குழந்தைடா  அதுக்கு என்ன தெரியும்   ஏதோ சொல்லுது அதைப் போயி பெரிசா எடுத்துக்க முடியுமா என்று வாய் கூறினாலும்  மனம் துணுக்கென்றது.

    என்னது இந்தக் குழந்தை இப்பிடிப் பேசுகிறது என்று எண்ணிக் கொண்டே காரில் உட்கார்ந்தவர்.  சரிப்பா   எப்பிடிப் போகுது உங்க ஆபீசெல்லாம்  என்றார்.  நல்லாப் போகுதுப்பா, ஆனா ரெஸ்டே இல்லே  எப்போ பாத்தாலும்   வேலை வேலைன்னு ஓடவேண்டி இருக்கு  ஓ அப்பிடியா  என்னம்மா   உனக்கு எப்பிடிப் போகுது வேலை  டீச்சர் வேலை போரடிக்குதா     என்றார்

    இல்லேப்பா  நல்லா போகுது    நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்கேயும் வெளியே போக முடியலே.  சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை கூட  டியூஷன் வெச்சிருக்கேன் நாற்பது பசங்க படிக்கறாங்க.

    இப்போ இருக்கற காலத்திலே ரெண்டு பேரும் வேலை செஞ்சு சம்பாதிச்சாதானேப்பா முடியுது  இருந்தாலும் எனக்கு நல்லாத்தான் பொழுது போகுது  என்றாள்.

    பின்னாடி இருக்கையிலிருந்து இவரையே பார்த்துக் கொண்டிருந்த பேரன்  நீங்க எப்போ ஊருக்குப் போவீங்க  என்றான்

    மீண்டும் துணுக்கென்றது அவருக்கு . சமாளித்து இதோ பாரு தாத்தா  உனக்கு  ரொம்பப் பிடிக்குமே   ஸ்பைடர் மேன் பொம்மை அது வாங்கிண்டு வந்திருக்கேன். வீட்டுக்குப் போனதும் பெட்டிலேருந்து எடுத்து தரேன்  என்றார்.

    எனக்கு ஒண்ணும் வேண்டாம்.  நீங்க எப்போ ஊருக்கு போவீங்க   என்று கேட்டுவிட்டு  அவரையே பார்த்துக் கொண்டிருந்த பேரனை எப்படி சமாளிக்கப் போகிறோம்  என்கிற கவலை அவருக்குள் புகை வளையமாய்ச் சுழன்றது.   வரும்போதே   எப்போ போகப் போறேன்னு கேக்குதே  இது .

    நினைத்துக் கொண்டிருக்கும் போதே பின்னாலிருந்து அவருடைய முடியைப் பிடித்து வேகமாய் இழுத்தது. வலி தாங்க முடியாமல் அப்பிடியெல்லாம் செய்யக் கூடாது  கையை எடு என்றார்.  அவருடைய பிள்ளை  காரோட்டிக் கொண்டே  அனிருத் கையை எடு என்றான்.

    பின்னாலிருந்து மருமகள் ஏன் அனிருத் இப்பிடி செய்யறே  தப்பும்மா  என்றபடி  அவருடைய  முடியிலிருந்து குழந்தையின் விரலைப் பிரித்து எடுத்தாள்.

    தாத்தாக்கு வலிக்கும்   தாத்தா கிட்டே சாரி சொல்லு என்றாள் , வலிக்கட்டும்  நன்னா வலிக்கட்டும்  சாரி சொல்லமாட்டேன்  என்றான் அனிருத்.

    சரி விடும்மா  அது குழந்தை அதுக்கு என்னா தெரியும் குழந்தையை திட்டாதே  என்றாலும்  அவருக்குள் ஒரு பயமே வந்தது.இந்தக் குழந்தையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று.

    ஆயிற்று வீட்டுக்குப் போய் மருமகள் கையால் சமைத்த வீட்டுச் சாப்பாட்டை ஒரு கைபார்த்துவிட்டு முதலில் பெட்டியிலிருந்து  ஸ்பைடர் மேன் பொம்மையை எடுத்து  குழந்தை அனிருத்திடம் கொடுத்துவிட்டு ,எனக்கு  வேண்டாம்  என்று தூக்கிப் போட்டான்  அனிருத். தூக்கம் கண்களைச் சுழற்றவே அப்படியே  தூங்கிப் போனார்.

    திடீரென்று இரண்டு மணிக்கு சந்திரகாந்தை  தொடர்பு கொள்கிறேன் என்று கூறியது நினைவுக்கு வரவே,  திடுக்கிட்டு எழுந்து  செல்போனைத் தேடினார் கிடைக்கவில்லை.  எங்கே வைத்தோம். தூங்கும் போது தலைமாட்டிலேதானே வைத்துக் கொண்டு தூங்கினோம் என்று எல்லா இடத்திலேயும் தேட கிடைக்கவே இல்லை.

    சந்திர காந்தின் எண்ணும் நினைவில்லை . வர வர  மூளையில் ஒன்றுமே இல்லை   சொந்த மூளையை  தொலைபேசிக்குள்ளும்  கணிணிக்குள்ளும் அடமானம் வைத்தாயிற்று.  இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை.

    டைரியை   கணிணியை உயிர்ப்பித்து அதில் சந்திரகாந்த் என்று தேட  அட நல்ல வேளை  இதில் பதிந்திருக்கிறோம் . எண்களைக் குறித்துக்கொண்டு  மகனின் தொலைபேசியில்  சந்திர காந்தை தொடர்பு கொண்டார்.

    ஆமாம் சந்திரா  நான் மூணு மணிக்கு அங்கே வந்துடறேன்.  நம்ம சந்திப்பு அரைமணி நேரம்தான்.  எனக்கு மாலை ஆறு மணிக்கு மறுபடியும் ஃப்ளைட் .  சரி நான் தாஜ் கோரமண்டலுக்கு  வந்துடறேன் என்றபடி  தொலைபேசியை மகனிடம் கொடுத்தார்.

    இப்போ என்னா செய்யறது என்னோட தொலைபேசியிலேதான் எல்லா எண்ணும் இருக்கு  என்று மறுபடியும் தேடிப் பார்க்கலாம் என்று மகன் மருமகள்  ஆளுக்கொரு மூலையில்  தேடி  ஒரு வழியாக  அவர் படுத்துக் கொண்டிருந்த சோபாவின் அடியிலே விழுந்து கிடந்த போனைக் கண்டு பிடித்தவுடன் அப்பாடா என்று இருந்தது  அவருக்கு.

    நாந்தான்  உங்க  போனை  ஒசிச்சு வெச்சேன்  என்றான் அனிருத் .

    அதிர்ந்து போனவர்   சமாளித்துக் கொண்டு  சரிப்பா நான் கிளம்பறேன்  நல்ல சாப்பாடும்மா   எல்லா நாட்டுக்கும் போயி உயர்தரமான எல்லா உணவகத்திலேயும் சாப்டுட்டேன்.

    ஆனாலும் உன் கையாலே சமைச்சு போடற இந்த உணவோட ருசி அதிலெல்லாம் இல்லேம்மா  என்று கூறிவிட்டு  சரி நான் கிளம்பறேன்  என்றார்.    தாத்தாவுக்கு ஒரு முத்தம் குடுடா  என்றார் பேரனிடம் ,  மாட்டேன் போ என்றது அனிருத்.

    டேய் அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது  தாத்தா இப்போ கிளம்பறாரு  ஒரு முத்தா குடுத்துட்டு  பை பை சொல்லு என்றாள் மருமகள் கண்டிப்பான குரலில்…

    மாட்டேன் போ என்று சொல்லிவிட்டு  அறைக்குள் சென்று சோபாவில் படுத்துக்கொண்டு இவரையே பார்த்துக் கொண்டிருந்தது  அனிருத் .

    சரிம்மா குழந்தையை  தொந்தரவு செய்யாதே  நான் கிளம்பறேன் என்று ஏமாற்றத்துடன்  கிளம்பினார்.

    மகனும் மருமகனும் சரிப்பா ஜாக்கிறதையா போயிட்டு வாங்க

    என்றபடி வழியனுப்பினர்.

    இரண்டு அடி எடுத்து வைத்து காரிடம் சென்றவர்   அனிருத் பயங்கரமாக   அலறி அழும் குரல் கேட்டு அப்படியே நின்றார்.

    பதறிப் போய் உள்ளே ஓடினர் அனைவரும்.  தாத்தாவைப் போக வேணாம்னு   சொல்லு, இங்கேயே இருக்க சொல்லு அவரை எங்கூடவே இருக்கச் சொல்லு என்று உரத்த குரலில் அனிருத் அலறி அழுது கொண்டிருந்தான்.

    அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.  ஓ நீ எப்போ போகப் போறேன்னு வந்த வுடனே கேட்டதுக்கு இதுதான் அர்த்தமா?..

    என் தலை முடியைப் பிடிச்சு இழுத்ததுக்கு இதான்     அர்த்தமா?..

    என்கிட்ட பேசாம இருந்ததுக்கு இதான் அர்த்தமா?..

    அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்து ப்ரவாகமாப் பெருகி வெள்ளமாய் சீறி வெடித்துக் கொண்டு கிளம்பியது.

    உள்ளே ஓடிப்போய் இல்லேடா கண்ணா  நான் உன்னை விட்டுட்டுப் போகலே, இங்கேயே இருக்கேன்  என்றபடி அனிருத்தை அணைத்துக் கொண்டார்.  அவர் கன்னத்தில் மெல்ல  ஒரு அடி அடித்துவிட்டு,

    எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் தாத்தா  நீங்க  இனிமே என்னை விட்டுட்டு எங்கேயும் போகக் கூடாது  ப்ராமிஸ்  என்று உள்ளங்கையை நீட்டினான் அனிருத்.

    குழந்தையின் மழலையை மனதைப் புரிந்து கொள்ள இன்னும் எந்த நவீனக் கருவியும் வரவில்லை  என்கிற உண்மை உரைத்தது  அவருக்கு.

    அவர் அனிருத்தின் அணைப்பில் கரைந்து போனார்.

    Share
  • கடிவாளம்

    தமிழ்த்தேனீ

    கொள்ளுன்னா வாயைத் தொறக்கறதும் கடிவாளம்னா வாயை மூடிக்கறதும் குதிரைக்கு மட்டுமல்ல மனுஷனுக்கும் அதுதான் இயல்பு.

    அடுத்த வீட்டுக்காரன் பாம்பைப் பிடிச்சா மத்தவங்க எல்லாருக்குமே அல்லித் தண்டு மாதிரிக் குளிர்ந்துதான் இருக்கும்.

    சின்னக் க‌ஷ்டமா இருந்தாலும் பெரிய கஷ்டமா இருந்தாலும் வலி என்னான்னு அவவனுக்கு வரும் போதுதான் தெரியும் புரியும்.

    ஒரு பையன் அரசாங்க வேலை இன்னொருத்தன் ஆடிட்டர் ஆனா ரெண்டு பேருக்கும் ஒத்துப் போறதே இல்லே நியாத்தை சொல்லி ரெண்டு பேரிலே யாருக்கு சாதகமா பேசினாலும் நீங்க பாரபக்‌ஷம் பாக்கறீங்க உங்களுக்கு எப்பவுமே அவன் தான் உசத்தி அப்பிடீன்னு ரெண்டு பேரும் இவங்களையே திருப்பிக்குவாங்க அந்த அபாயம் இருக்கு ரெண்டு பேருமே அவர் பெத்த பசங்க.

    ஒரு நாள் மூத்த பையன் அப்பா அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்காங்க உங்களுக்கும் அம்மாவுக்கும் டாக்டர்கிட்ட போயி ஹெல்த் செக்கப் பண்ணிட்டு வரலாம் என்று அழைத்துக் கொண்டு போனார்கள்.

    எல்லாப் பரிசோதனையும் முடித்து காது மருத்துவர் அவரைப் பரிசோதனை செய்துவிட்டு அப்பாவுக்கு ஒண்ணும் பரச்சனை இல்லே காதிலே செவிப்பரை நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு சார் நீங்க கொஞ்சம் வெளியிலே உக்காருங்க என்றார்.
    வெளியிலேயும் மருத்துவர் சொன்னது காதிலே கேட்டது.

    உங்க அப்பாக்கு காதிலே ஒரு ப்ரச்சனையும் இல்லே ஆனா நீங்க அவருக்கு காது கேக்கலைன்னு சொல்றீங்க லக்‌ஷத்திலே ஒருத்தருக்கு எல்லாம் சரியா இருந்தாலும் வயசு காரணமா காது கேக்காம போக வாய்ப்புண்டு. திடீர்ன்னு மறுபடியும் கேக்கத் தொடங்கலாம் இல்லே மொத்தமாவே கேக்காம போயிடவும் வாய்ப்புண்டு என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

    சற்று நேரம் விட்டத்தையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தவர் மெல்ல பூனைபோல் எழுந்து சப்தம் போடாமல் நடந்து அவருடைய மேஜை அறையைத் திறந்தார் . அதிலிருந்த அவருடைய அம்மாவின் படத்தை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு அப்படியே சற்று நேரம் உறைந்திருந்தார்

    திருமணமாகி முதல் நாள் இரவு அம்மா பேசிக்கொண்டிருக்கிறாள் அவர் மனைவி யமுனாவிடம் தண்ணீர் குடிக்க வந்த சபேசன் காதில் யதேச்சையாக அது விழ சரி அம்மா என்னதான் சொல்றான்னு கேப்போமே என்று அங்கே மறைவாக நின்றார் ஒரு ஆர்வத்தில் அவர் காதிலும் அம்மா சொல்வதெல்லாம் தெளிவாக கேட்டது
    இதோ பாரும்மா யமுனா நீயும் என் பொண்ணு மாதிரிதான் உங்க அம்மா இல்லேன்னு வருத்தப்படாதே நான் அவனுக்கு மட்டுமில்லே உனக்கும் நான்தான் அம்மா நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதே நான் என் வாழ்க்கையிலே அடைஞ்ச அனுபவத்தை உனக்கு சொல்றேன் இது உண்மையிலேயே பெரிய ரகசியம்
    நாம எல்லாரும் பொறக்கறோம் வாழறோம் ஆனா சில ரகசியங்களை தெரிஞ்சுக்கறதில்லே
    நீ பூ வெச்சுக்கோ மஞ்சள் பூசிக் குளி வாழ்க்கையோட எல்லா அனுபவத்தையும் ருசி ரசி வேணாங்கலே ஆனா நாம பொறக்கும் போதே நாம எவ்ளோ வருஷம் வாழணும் எப்பிடி வாழணும்னு எல்லாமே ஒரு கணக்கு போட்டுத்தான் நம்மை அனுப்பறான் ஆண்டவன். எல்லாமே கணக்குதான்  அதுனாலே நீ என்ன செய்யணும் எவ்ளோ செய்யணும் என்ன பேசணும் எவ்ளோ பேசணும் எவ்ளோ கேக்கணும் எல்லாமே கணக்குதான்.

    அதுனாலே கொஞ்சமா பூ வெச்சிக்கோ எல்லாத்திலேயும் ஒரு அளவு வெச்சிக்கோ ஏன்னா நாம பேங்குலே எவ்ளோ போட்டு வெச்சிருக்கோமோ அவ்ளோதான் செலவழிக்க முடியும்.  அதுனாலே சிக்கனமா இருந்தா அதிக நாள் நம்ம கணக்கிலே பணம் இருக்கும் அதுமாதிரிதான் இந்த உலகத்திலே எல்லாமே அதுனாலே சிக்கனமா இருந்தா அதிக காலம் தீராம இருக்கும் என்றாள் என்ன புரிந்ததோ ஏதோ மாமியார் அக்கறையா சொல்றாங்க புரியுதோ புரியலையோ கேட்டுக்குவோம் என்று பவ்வியமாக தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு தலையை ஆட்டினாள் யமுனா அம்மாவும் மகிழ்ச்சியா ஏதோ சொல்லணும்னு தோணித்து சொன்னேன் சரி அவன் காத்திண்டு இருப்பான் நீ போ மிச்ச வேலையை நான் பாத்துக்கறேன் என்றபடி அனுப்பினாள்.

    அம்மாவை நமஸ்கரித்துவிட்டு யமுனா கையில் பால் சொம்போடு வருவதைப் பார்த்து அவளுக்குத் தெரியாமல் மீண்டும் வந்து அறைக்குள் நுழைந்து கட்டிலில் உட்கார்ந்தார் ஒன்றும் அறியாதவர் போல் .

    இதெல்லாம் பழசுதான் ஆனாலும் பழசிலே நிறைய பொருள் இருக்கு என்ரு நினைத்துக் கொண்டே தூங்கத் தொடங்கினார் சபேசன்.

    மறுநாள் ஏதோ வாக்குவாதம் இவரைப் பற்றிக் கவலைப்படாமல் பேசிக்கொண்டிருந்தனர் யமுனாவும் பிள்ளைகளும் மறு மகள்களும்.

    திடீரென்று திரும்பிப் பார்த்த மூத்த பிள்ளை நீங்க சொல்லுங்கப்பா இவன் செய்யறது சரியா என்றான்.

    அதிகமாவே பேசிட்டோம் அதிகமா கேட்டுட்டோம் போதும் இதோட நிறுத்திக்கலாம் என்று தோன்றியது.

    நான் சாப்டாச்சுப்பா என்றார்.

    அதில்லேப்பா இவன் சொல்றது சரியா என்றான் இளைய மகன்.

    நான் டாக்டர் குடுத்த மருந்தெல்லாம் ஒழுங்காத்தான் சாப்படறேன் என்றார்.

    ஏங்க அப்பாவுக்கு டாக்டர் சொன்னா மாதிரி காது சுத்தமா கேக்கலை என்றாள் மருமகள் .தேங்க்ஸ்மா என்றார் சபேசன்.

    பக்கத்தில் படுத்திருந்த மனைவியை தொட்டார் சபேசன் என்ன தண்ணி வேணுமா இந்தாங்க என்று அவரிடம் பாட்டிலை நீடிவிட்டு இந்தப் பக்கம் திரும்பி படுத்தாள் யமுனா அம்மாவுக்கும் உனக்கும் தேங்க்ஸ் என்றார் சபேசன்.

    யமுனா திரும்பிப் படுத்துக் கொண்டு இந்த மனுஷன்கிட்ட நான் இப்ப ஒண்ணுமே சொல்லலையே எதுக்கு செத்துப்போன அம்மாவுக்கும் எனக்கும் தேங்க்ஸ் சொல்றாரு இவருக்கு நாம ஏதாவது பேசினா காது கேக்காது ஆனா ஒண்ணுமே சொல்லாதப்போ ஏதோ சொன்னா மாதிரி நெனைச்சிண்டு தேங்க்ஸ் சொல்லுவாரு ஒண்ணுமே புரியலே என்று அலுத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள் யமுனா.

    சுபம்

    Share
  • “ ஜோதிடம் “

    தமிழ்த்தேனீ

    வேலைக்கு சேர்ந்து சில நாட்கள் சென்ற பின்   ஒரு நண்பரைச் சுற்றிலும் பல நண்பர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்துவிட்டு நானும் அந்தக்  கூட்டத்தில் பங்கெடுக்க அவர்களை சமீபித்தேன்.

    வாப்பா தம்பி வா உக்காரு உன் பேரு என்னா என்றார் நடு நாயகமாக உட்கார்ந்திருந்த ஒரு மூத்த  நண்பர்.

    சார் என் பேரு கிருஷ்ணமாச்சாரி, நான் வேலைக்கு சேந்து ஆறு மாதம் ஆச்சு என்றேன். அப்போதுதான் கவனித்தேன் அந்த நடு நாயகம் அங்கிருந்த அனைவருக்கும்  உள்ளங்  கையில் உள்ள ரேகைகளைப் பார்த்து  ஜோதிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.   என் கையை நீட்டச் சொன்னார்.  கடந்த காலத்தைப் பற்றி எல்லோரும் சொல்வார்கள், என் வருங்காலத்தைப்   பற்றிச் சொல்ல முடியுமா என்றேன்.    இங்க பார்ரா  நான் கடந்த காலம் , வருங்காலம்  எல்லாம் சொல்வேன்  என்றார், சரி சொல்லுங்கள் என்றேன். நான் சொல்றது இருக்கட்டும்   நீ உன் வருங்காலத்திலே  என்ன ஆகப்  போகிறாய்  என்றார்.

    நான் ஒரு நடிகனாவேன், இயக்குனராவேன், எழுத்தாளனாவேன் என்றேன். கொல்லென்று ஒரு சிரிப்பலை எழும்பியது அங்கே!  இதோ பாரு தம்பி என்னோட முன்னோர்கள் ஜோதிடத்திலே வல்லவங்க, அவங்ககிட்டேருந்துதான்  நான் இந்தக் கலையைக் கத்துகிட்டேன்.

    ஆமாம் உனக்கு இந்தக் கலையிலே  நம்பிக்கை இருக்கிறதா என்றார் நாயகம்.  எனக்கு இந்தக் கலையிலே நம்பிக்கை இருக்கிறது, ஆனால் ஜோதிடம்   சொல்பவர்கள் மீது  நம்பிக்கை இல்லை என்றேன்

    புரியலையே என்றார் நடுநாயகம்.

    இந்தக் கலை  மிக நல்ல கலை, அதில் சந்தேகமில்லை, ஆனால் இந்தக் கலையைக் கற்றுக் கொள்பவர்கள் முழுமையாகக் கற்றுக் கொண்டு சொல்கிறார்களா  என்பதுதான் என் சந்தேகம் என்றேன்.

    எப்படி உனக்கு இந்த சந்தேகம் வந்தது என்றார் நடுநாயகம் .  ஆண்களுக்கு வலது கை  ரேகையையும் பெண்களுக்கு  இடது கை ரேகையையும் பார்த்துதான் கைரேகை  ஜோதிடம் சொல்வார்கள், ஆனால் நீங்கள் இங்கே  ஆண்களுக்கே  இடது கை  ரேகையைப் பார்த்து  சொல்கிறீர்கள் என்றேன்.

    மீண்டும் ஒரு முறை கொல்லென்று சிரிப்பு ஒலி கேட்டது, இதோ பாரு எல்லாம் தெரிஞ்சா மாதிரிப் பேசாதே, இப்போ உன்னோட வலது  கை ரேகையைப் பார்த்து   நான் பலன் சொல்றேன்  என்றார்.

    ஐயா இப்போது மாலை  7 மணி, பொதுவாக இரவில் கை ரேகை ஜோதிடம்  பார்க்கமாட்டார்கள், பார்க்கவும் கூடாது என்றேன்.  திகைத்துப் போனார் அவர்

    அவரிடம் நான் சொன்னேன்  உங்களை எல்லாம் தெரிந்தவர்  என்று காட்டிக்  கொள்ள ஜோதிடக் கலையைப் பயன்படுத்தாதீர்கள். இங்கே இருப்பவர்கள்  நீங்கள் கூறுபவைகளை உண்மையென்று  நம்பி அதனால் ஏதேனும் அவதிக்குள்ளானால் அந்த அவதிக்குண்டான பலன் உங்களைச் சேரும், வீணாக பாவம் செய்யாதீர்கள் என்றேன்.

    நீ இன்னும் என்னைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அரைகுறையாக  எதையோ தெரிந்து கொண்டு கதையளக்கிறாய்.   சரி நாளை நமக்கெல்லாம் விடுமுறை அப்போது உன் கையைப் பார்த்து நான் பலன் சொல்கிறேன் , அப்போது  தெரிந்து கொள்வாய் என் திறமையைப் பற்றி என்றார்.

    இன்று அமாவாசை நாளைக்கு ப்ரதமை, ப்ரதமையில் யாரும்  ஜ்யோதிடம் , ஜாதகம் , கைரேகை பார்க்க மாட்டார்கள் என்றேன்.  ஜ்யோதிடம் ,ஜாதகம் கைரேகை போன்றவைகளை  நல்ல நேரத்தில் தான் பார்க்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நல்ல நாளில் வெற்றிலை பாக்கு போன்றவைகளை காணிக்கையாக வைத்து முதலில் ஜ்யோதிடம் பார்ப்பவருக்கு அளித்துவிட்டு அவரையே  நம்பி, மனதில் உறுதியுடன் , நம்பிக்கையுடன் கேட்பவர் கேட்டால்தான் பலிக்கும் என்றேன்.   அது மட்டுமல்ல  கொண்டு வருபவரிடம் வெற்றிலை பாக்கு இவைகளை  வாங்கி  அந்த வெற்றிலைகளை  முதலில் எண்ணுவார்கள். அதன் பிறகு தனித்தனியே பிரித்து  அந்த வெற்றிலைகளை பின் புறமாக அமைந்திருக்கும் நரம்புகளைப் பரிசோதிப்பார்கள் என்றேன்.

    8434400e-81bc-4dbe-bd37-4c23ea2f3868

    இதோ பார்ரா  கைரேகையைப் பாருடான்னா  வெற்றிலையோட நரம்புகளைப் பாப்பாங்களாம் என்று எக்காளமிட்டு சிரித்தார் நாயகம்.

    ஆமாம் அந்த நரம்புகள் அமைப்பில் வித்யாசம் உண்டு. வெற்றிலையின் காம்பின் பகுதியிலிருந்து சீரான நடு நரம்பும் , அந்த நடு நரம்பிலிருந்து பிரியும் பக்கவாட்டு  நரம்புகள் தொடங்கும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெற்றிலையின் வால் பக்கம் சேரும் இடம் வரையில் சீராக, அமைந்து முடியுமிடத்தில் இரண்டு நரம்புகளும் ஒரு புள்ளியில் சந்தித்தால்  அது பெண் வெற்றிலை.

    அப்படி இல்லாமல் தொடக்கத்திலிருந்து நரம்புகள் சீராக இல்லாமல் வெற்றிலையின் வால் பக்கத்தில்  அந்த  நரம்புகள் மேலும் கீழுமாய் சந்தித்தால்  அவை ஆண் வெற்றிலை என்றும் சொல்வார்கள். என்றேன் நான்

    ஆமாம் உனக்கு என்னா வயசு என்றார் நாயகம், நான் சொன்னேன்  18 முடிந்து  ஆறு மாதங்கள் ஆகின்றன என்றேன்.  அதுக்குள்ள  வெற்றிலையிலேயே  ஆண் பெண் விதயாசம்  பாக்க  ஆரம்பிச்சிட்டியா  உருப்பட்டாப் போலத்தான் என்றார் நாயகம்.

    ஐய்யா நான்  பார்க்கிறேன் என்று சொல்லவில்லை ஜோதிட விவரமறிந்தவர்கள்  இதையெல்லாம் கூர்ந்து கவனிப்பார்கள்  என்று சொன்னேன்.

    ஓஹோ   சரி சரி நானும்தான் கேக்கறேன்  உனக்குத் தெரிந்ததை யெல்லாம்  சொல்லு , நாங்க நம்புவோம்  என்று நக்கலடித்தார் நாயகம்.

    நானும் அமைதியாக  அப்படியே ஐயா சொல்கிறேன் நம்புவதும் நம்பாததும்  உங்கள் இஷ்டம்.  இப்படி நாம் கொண்டு செல்லும் வெற்றிலைகளை  நம்மிடம் பேசிக் கொண்டே   நமக்கே தெரியாமல்  அவைகளில் பெண் வெற்றிலை எவ்வளவு, ஆண்  வெற்றிலை எவ்வளவு  என்று எண்ணிக்கையை மனதில் வைத்துக்   கொள்வார்கள். அதில் பெண் வெற்றிலைகள் எவ்வளவு ஆண் வெற்றிலைகள் எவ்வளவு என்று எண்ணி அந்த எண்ணிக்கையை மனதில் கொண்டு பலன்களை சொல்வர் என்றேன்.

    வெற்றிலை என்பது வெற்று இலை அல்ல, விஷயமுள்ள இலை என்பது என் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.  கும்பகோணத்து மக்கள் வெற்றிலை போடும் அழகை ரசித்திருக்கிறீர்களா   நல்ல விருந்தை உண்டுவிட்டு, சாவகாசமாக திண்ணையில் காற்றாட வந்து உட்கார்ந்து இடுப்பில் வேட்டி மடிப்பில் இருக்கும் அந்தச் செல்லத்தை ,அந்த வெற்றிலைப் பெட்டியை எடுத்து கனிவோடு ஒரு முறை அதைப் பார்த்துவிட்டு,  கையால் அன்பாக இதமாக அந்தப் பெட்டியைத் தடவிக்கொடுத்துவிட்டு, வலிக்காமல் மெல்லத் திறந்து  அதன் உள்ளே இருக்கும் வெற்றிலையை,  ஒவ்வொன்றாக எடுத்து  உள்ளங்கையால் சுத்தமாக  ,இதமாக  தடவி , வெகு லாவகமாக மனதுக்கு  இதமான சொற்களை, கலைகளை, ஆராய்ந்து கொண்டே, சங்கீத ஞானத்தையும்  விவரித்துக்கொண்டே, கூடவே சில குறும்புக்காரர்கள்.

    சங்கீதம் பாடிய  பெண்மணியின் சாரீரத்தையும் , கூடவே  சரீரத்தையும் பற்றி  மிக லாவகமாக நுணுக்கமான சொற்களால் குறும்புடன் ஸ்லாகித்துக்கொண்டே   இதமாக  சுண்ணாம்பை எடுத்து வெற்றிலையில் தடவி, லாவகமாக நடு நரம்பில் மடித்து முன் பக்கமாக நடு நரம்பை மட்டும் கிழித்து, மடித்து  கையில் வைத்துக்கொண்டு, மணக்கும் தூள் பாக்கை வாயில் போட்டுக்கொண்டு, மடித்த வெற்றிலையை வாயில் போட்டு வெற்றிலைக்கு வலிக்காமல் இதமாக மென்று அதன் சாறை வாயில் குதப்பிக்கொண்டே பன்னீர் புகையிலையையும்  வாயில் போட்டு அதோடு சுவைத்து  கடைவாயில் அதை அடக்கிக்கொண்டு  சிவந்த  உமிழ் நீர் வழிய எதிரே இருப்பவர்மீது தெறிக்காமல் பேசும் நளினம் இருக்கிறதே அடடா!

    இத்தனை கலைகளும்  அந்த வெற்றிலைப் பெட்டியில்தான்  இருக்கிறது என்று நம்பும் அவர்களுக்கு   இந்த வெற்றிலைப் பெட்டி  செல்லம்தான்.

    வெற்றிலைப் பெட்டி செல்லமாக இருக்கலாம், ஆனால் வெற்றிலையே செல்வம் என்று நாம் உணர்வோம். வீட்டில் வெற்றிலைக் கொடி வைத்து அந்தக்  கொடி நன்றாக வளர்ந்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.  தேனி மாவட்டம் பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, பெரியகுளம் கீழவடகரை, தெய்வேந்திரபுரம், தாமரைக்குளம் மற்றும் போடி, சின்னமனூர் பகுதியில் அதிக அளவில் வெற்றிலைக் கொடி பயிரிடப்படுகிறது.

    வெற்றிலையில் எத்தனை ரகம் இருக்கிறது என்று பார்த்தால்  கருப்பு வெற்றிலை அல்லது கார வெற்றிலை  என்னும் கும்பகோணத்து கொழுந்து வெற்றிலை ஒரு ரகம்.  கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும்.

    வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. அகத்தி மரங்களை இடையில் வளர்த்து அதில் வெற்றிலைக் கொடிகளைப் படர விடுவார்கள். சில வெற்றிலைகள்  நன்றாகப் படர்ந்து பெரியதாக வளரும், சில வெற்றிலைகள்  சிறு வடிவமாய் இருக்கும் ,பெரிதாக வளராது.

    பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும்,  உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.  வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர நீர்ச்சுருக்கு என்னும் நோய் குணமாகும்.

    வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி அதை அடுப்பில் காயவைத்து லேசான சூட்டுடன் குழந்தைகளின் மார்பில் பரப்பினால் நாள்பட்ட சளி கரைந்து குழந்தை சுகமாக மூச்சுவிடும்.

    வயிற்றுப் பொறுமல் மந்தம் போன்றவைகளுக்கு இதே முறையில் வெற்றிலையை வாட்டி வயிற்றில் இட்டால் சற்று நேரத்தில் குழந்தை வலி நீங்கிச் சிரிக்கும்   வெற்றிலைச் சாறுக்கு  தொண்டையிலுள்ள குரல் நாளங்களைச் சரிப்படுத்தும் குணம் உண்டு , அதனால் குரல் வளமாகும் . அதனால்தான் இசைக்கலைஞர்கள் வெற்றிலை போடும் பழக்கம் மேற்கொள்ளுகிறார்கள்.

     மன்னருக்கு  வெற்றிலை மடித்துக் கொடுக்க அடைப்பைக் காரர்கள் என்று ஒரு  வேலையாள் உண்டு.  அவர்கள் வெற்றிலையை பின்பக்கமாக மடித்து நடு நரம்பு நீக்கி  அளவாக சுண்ணாம்பு தடவி தேவையான பாக்கை அதிலிட்டு மன்னர்களுக்கு சுவைக்கக் கொடுப்பார்கள்.

    தாம்பூலத்தில் பயன்படும் வெற்றிலை இல்லாத வைபவமே கிடையாது. இன்று வரை  வெற்றிலை இல்லாத வைபவங்களோ, பண்டிகைகளோ கிடையாது.  வெற்றிலையில் மைதடவிப் பார்த்து குறி சொல்லுபவர்கள் உண்டு.   திருமண சம்பந்தத்தை உறுதி செய்ய வெற்றிலை பாக்கு வைத்து தட்டு மாற்றிக்கொண்டு  தொடங்குவார்கள் .

    வெற்றிலையில் ஒரு ரகசியம் உண்டு

     நல்ல நாட்கள் பார்க்கவோ, திருமண சம்பந்தம் பேசவோ நாம் ஜோசியரிடம் செல்லும்போது நாம் வெற்றிலை  அவரிடம் அளித்தால், அவர்கள்  எத்தனை வெற்றிலை நாம் கொண்டு சென்றோம் என்பதை  எண்ணியே நாம் நினைத்த காரியம் நடக்குமா நடக்காதா  என்று கூறிவிடுவார்கள்.

    அது மட்டுமல்ல வெற்றிலையின் அமைப்பில் கிளை நரம்புகள்  வெற்றிலையின் இருபக்கத்திலும் சமமாகப் பரவி நடு நரம்போடு வந்து  இணையும் வடிவத்தை வைத்துக்கொண்டே  அந்த வெற்றிலை ஆண் வெற்றிலையா ,அல்லது பெண் வெற்றிலையா  என்று கண்டறியும் அறிஞர்கள் நம்மிடையே உண்டு

    அப்படி கண்டு பிடித்து பெண் வெற்றிலை அதிகமாக இருந்தால் அதை வைத்து  வந்தவரின் காரியம் நடக்க சாத்தியக் கூறுகள் எவ்வளவு சதவிகிதம் என்பதையும் கண்டறிவார்கள்.  பெண் வெற்றிலை அதிகமாயிருந்தால்  அதை சக்தியின் வடிவம் என்பர். காரிய சித்திக்கு  அதிக எண்ணிக்கை கொண்ட பெண் வெற்றிலை சக்தி கொடுக்கும் என்பது நம்பிக்கை.

    “அந்ததை அடைக்காய் தின்பதில் ஊறு

    முதல் நீர் நஞ்சாம்-அதி பித்தம்

    இரண்டாவதூறு நீரே-கடையமிர்தம்

    மூன்றாவதூறு நீர் தான்

    கனமதுர நான்காவதூறு மந்நீர்

    மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி

    வருநீர் களைச் சுகித்து

    தடையுருப் பித்தமொடு மந்த நோயும்

    தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.””

    என்று தேரையர் என்னும் சித்தர்  எழுதியிருக்காரு   என்றேன்

    அடேங்கப்பா எல்லாம் தெரிஞ்சிருக்கே உனக்கு என்று என்னைச் சமாளிக்கும் விதமாக  தன் தோல்வியை சமாளித்தார் நடுநாயகம்.

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • ஏட்டுச் சுரைக்காய்

    தமிழ்த்தேனீ

    வாசிப்பு, அறிவியல், கணிதம் ஆகிய திறன்களில் மலேசியா முறையே 55, 52, 57ஆம் இடங்களில் இருக்கிறது. முதல் ஐந்து இடங்களில் சிங்கப்பூர், தென்கொரியா, ஹாங்காங், சங்காய் சீனா, பின்லாண்ட் ஆகிய நாடுகள் இருக்கின்றன.

    ஜப்பானியக் கல்வி முறை 21 ஆம் நூற்றாண்டை நோக்கி பீடு நடை போடுகிறது. ஜப்பானில் அவர்கள் ஒரு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் . அதாவது ஒவ்வொரு மாணவருக்கும் அவர் வாங்க வேண்டிய மதிப்பெண் 100 என்றால் அதிலே 20 சதவிகிதம் எழுத்து வடிவமாகவும் .80 சதவிகிதம் நேரிடையான பயிற்சியும் என்பது அவர்களின் தாரக மந்திரமாக உள்ளது.

    நேரிடையாக களத்தில் இறங்கி பரிசோதனைகளில் ஈடுபடும் போது அவர்களுக்கு எந்தக் கருவியை எந்த நுணுக்கத்தை எங்கே உபயோகிக்கவேண்டும் என்று நேரிடை அனுபவம் கிடைக்கிறது.

    அதனால் பொறியாளர்களுக்கும் முழு வேலையும் அந்தந்த வேலைகளின் நுணுக்கமும் தெரிகிறது யாருக்கு வேலையைப் பற்றி நன்றாகத் தெரியுமோ அவர்களால்தான் வேலை வாங்க முடியும் என்னும் சூக்ஷுமத்தை உணர்ந்திருக்கிறார்கள் அவர்கள் ஏட்டுச் சுரைக்காய் கவைக்குதவாது என்பதை சற்றே மாற்றி ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்னும் பழமொழியை ஏற்படுத்திய நாம் இன்னமும் பாடங்களை மனப்பாடம் செய்து அப்படியே காகிதத்தில் மறக்காமல் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று தேறியவுடன் படித்த அத்தனையும் மறந்து போகும் படிப்பு முறையைக் கையாண்டு கொண்டிருக்கிறோம்.

    நம் நாட்டு கல்வி முறையை மாற்ற வேண்டும் படித்துப் பட்டம் பெற்ற பல பொறியாளர்களுக்கு எந்தக் கருவிக்கு என்ன பெயர் அந்தக் கருவியை எங்கே எப்போது எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தெரியவில்லை எந்த நுணுக்கத்தை எங்கே எப்படி உபயோகிக்க வேண்டும் என்றே தெரியவில்லை

    ஆகவே பல படித்த பொறியாளர்கள் கூட அவர்கள் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் இன்னமும் கட்டிடம் கட்டும் மேஸ்திரி என்று சொல்லிக் கொள்பவர்களையும் தச்சர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களையும் நம்பித்தான் செயல் படவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.

    முறையான களப்பயிற்சி இல்லாத காரணத்தால் பொறியாளர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி உபயோகப்படுவதில்லை .

    குலக் கல்வி என்னும் முறையில் நேரிடையான பயிற்சிகள் அவர்களது முன்னோர்கள் செய்யும் போது பார்த்துப் பழக்கப்பட்டோ அல்லது அவர்களால் முறையாக கற்பிக்கப்பட்டோ வருகிறது.

    ஒரு சிற்பி சிற்பம் செதுக்கும் போது அதை விளையாடிக்கொண்டே கவனித்துக் கொண்டிருக்கும் அவருடைய மகனும் அவனை அறியாமலே தொழில் நுணுக்கங்களைக் கற்கிறான் .

    ஆகவே கணிணி உலகத்தில் காலடி வைத்தும் இன்னமும் கை வலிக்க எழுதி எழுதி களப்பயிற்சியே இல்லாமல் மனப்பாடம் செய்து ஒப்பித்து மறந்து போகும் கல்வி முறையை மாற்றி களப்பணியில் ஈடுபடுத்தி முறையாகக் கற்றுக் கொடுத்து அவர்களின் தொழில் நுணுக்க ஞானத்தை ஏற்படுத்தும் கல்வி முறைக்கு நம் நாடும் மாறவேண்டும்.

    அப்படி முறையான கல்வி கற்றோர் அவர்களுக்குள் அவர்களை அறியாமலே மனப்பாடம் ஆகியிருக்கும் கருவிகளின் பெயர்களையும் நுணுக்கங்களையும் மிக எளிதாக எழுதுவார்கள்

    ஆகவே தெளிவாக தட்டச்சு செய்தாலே முப்பது பக்கமாயினும் ஒரு மணி நேரத்தில் தட்டச்சு செய்து அதைப் பதிப்பித்து ஆசிரியரிடம் கொடுக்கும் திறமைகளை வளர்க்கவேண்டும் அதை விடுத்து யோசித்து யோசித்து கைவலிக்க இரண்டு மணி நேரம் எழுதியும் கையெழுத்து சரியில்லாத காரணத்தினாலும் தெளிவாக எழுத முடியாத காரணத்தினாலும் மதிப்பெண் பெற முடியாத அவல நிலையில் மாணவர்களை வைத்திருக்கும் கல்வி முறை அடியோடு மாற வேண்டும்.

    வருங்காலத்தில் நேரத்தின் அருமை தெரிந்து குறுகிய காலத்திலே அதிகம் தெரிந்து  கொள்ளும் நேரிடைப் பயிற்சியில் மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களுடைய தொழில் ஞானத்தையும் தொழில் நுணுக்கங்களையும் நவீன விஞ்ஞான வளர்ச்சியின் நவீனத்தை உபயோகப்படுத்தி தொழில்களையும் பொறியாளர்களின் மேம்பாட்டையும் வளர்த்து நாட்டை நவீன இந்தியாவாக ஆக்கி வளர்க்கும் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்பது என் ஏக்கம் யோசிப்பார்களா கல்வியாளர்கள்.

    Share