Tag: ரா. பார்த்தசாரதி

  • தன்னம்பிக்கை

     

     

    ரா.பார்த்தசாரதி

     

     

     

    மனிதன்  வாழ  தேவை  தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கையை இழந்தால் தைரியம் பிறக்காது

    சோதனையை  கண்டு  என்றும் பயந்தவனுக்கு

    சாதனை என்பது,  என்றும்  நடக்காது !

     

     

    வாழ்க்கை என்பது பொதுவாய் அமைந்த நியதியடா

    தைரியம் இல்லாத மனிதர்கள் பூமிக்கு சுமையடா

    தோல்வியை தாண்டி சென்றாலே வெற்றி கிடைக்குமே

    தொடர்ந்து முயற்சி செய்பவனுக்கே வெற்றி கிட்டுமே !

     

     

    கடனே என்று வாழ்பவனுக்கு கடமையும் சுமைதான்

    தென்றலின் இனிமையை புயலாய்  நினைப்பான்

    தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் நாணயத்தின் இரு பக்கங்களே

    மனிதனின் பலம்  நம்பிக்கையிலே, யானையின் பலம் தும்பிக்கையிலே!

     

     

    உலகில் மனித நேயத்துடன்  பழகு !

    தாமே  வந்திடும்  புகழ்  உனக்கு

    சோர்வையும், சோம்பேறித்தனத்தை அறவே நீக்கு

    வாழ்வில்  வெற்றியினை  எப்போதும்  உனதாக்கு !

     

     

     

     

     

     

    Share
  • பூவே ! செம்பூவே

     

     

                     ரா.பார்த்தசாரதி

     

                    பூவே, செம்பூவே !  உனக்காக  நான் காத்திருப்பேன் 

                    என் மனதில் கவிதையாய் உன்னைக் காண்கின்றேன் 

                    சோலை வனத்தில், நீ  நடக்கும் அழகே  அழகு 

                    என் உள்ளமறிந்து அருகில்  வந்து  பழகு !

                 

                    பூக்களும், உன் சிரிப்பில்  தோற்கும் 

                   நான் எழுதும் பாடல்களுக்கு  வேர்க்கும் 

                   பூக்களின்  ஆயுளே  ஒரு நாள் தானே !

                    பெண்ணின் தலையில் இருப்பதும் ஒரு நாள் தானே !

                 

                   பூக்கள் சேர்ந்தால்  மாலையாய் உருவாகும் 

                   உன் புன்னகை பூக்கள் மாலைகளுக்கு உயிராகும் 

                   உன்னை காணாத  வேளையில் துடித்தேன் 

                   உன்னை எண்ணாத    வேளையில் மனம் தளர்ந்தேன் !

               

                   தனிமை வாட்டும் போது உன் அழகை கவிதையாக்கினேன் 

                   என் உள்ளம் எனும் கோவிலே  கூடி  புகுந்தேன் 

                   திருவிழா என்றாலே   அம்மன்  ஊர்வலம் 

                   நம்மிருவரும்  இணைய எப்போது திருமண ஊர்வலம் ?

                 

    Share
  • அழுதகண்ணீர்

    ரா.பார்த்தசாரதி

     

    அழுத  கண்ணீர்  என்றும் ஆற்றாமையை உணர்த்தும்

    தொண்டுள்ளம், கொண்டு, மக்களின் பசியாற்றினார்

    அவர் இறக்கும் போது கடல்நீரும் கண்ணீரில் கரையும்

    அலை கடலென மக்கள் வெள்ளம் அஞ்சலி செய்ததே !

     

    சாதனை படைத்தது வாழ்ந்து, வரலாறாக புகழ் ஓங்கியதே

    மக்கள் மனதில் குடிகொண்ட தால் அம்மா என அழைத்தனரே

    வினைத்திட்பம் கொண்டு எதிரிகளையும் எதிர்த்து நின்றாய்

    அஞ்சி விடாமல் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றாய் !        

     

    செய்வதை மட்டும்  சொல்லிட வேண்டும்

    சொன்னதை  நிச்சயம் செய்திட வேண்டும்

    நல்லதையே செய்ய நினைத்திடல் வேண்டும்

    பாகுபாடின்றி செயலாற்றினால் புகழ் தேடி வரும் !

    Share
  • காதல் ரோஜாவே

     

                      ரா.பார்த்தசாரதி

     

    முள்ளிடையே  காணும்  அழகிய  ரோஜாப் பூவே

    எப்படி பூத்து அழகாய்  தலையசைக்கின்றாள்

    வண்டுகள் சொன்ன  புகழ்ந்துரையா! புகழுரைகூறும் யா !

    ரோஜா மலரே நீ கொண்ட  நாணத்தினாலா !

     

    காதலன்  கொடுத்த  காதல் மலர் அடையாளத்திலா ,

    அவள் கூறும் இனிமை பேச்சினிலா

    காதலியின்  மயக்கும் வேல்விழிப் பார்வைலா

    தேவதையே ! என் நெஞ்சத்தின்  நினைப்பிலா !

     

    இளமைக்  காதல்,   இணைவதும் இயற்கையே

    காதலன் வர்ணிக்கும் வார்த்தைகள் செயற்கையே

    காதல் என்பதே  இரு  விழிகளின்  நேசமே

    அதுவே அவர்கள் வசிக்கும் காதல் தேசமே !

     

    சூரியனைக்  கண்டால்  தாமரை  மலருமே

    சந்திரனைக் கண்டால்  அல்லி  மலருமே

    இயற்கையான  ஒன்று, உள்ளம் கவர்வதும் ஒன்று

    உள்ளம் கவர்ந்தவனை கண்டால் முகம் மலர்வது என்று !

     

    காதலில்  கனவுகள்  மாறி, மாறித்  தோன்றும்

    காதலியை நினைந்து  மனம்  மகிழும்

    விழித்தவுடன்  தெரியும் எது  உண்மையென்று

    மனம் நினைத்தாலே காதலியை  அழைக்கும் என்று !

     

    காதல்  ரோஜாவே,  காதல் கண்மணியே 1

    ரோஜா இதழ் என  நின் மேனி  கண்டேனே

    கோவைப் பழம் போன்ற நின் உதட்டினை  கண்டேனே !

    உன் முல்லைச் சிரிப்பினிலே நான் தொலைந்துபோனேனே !

     

     

    Share
  • புரட்சித் தலைவி ஜெயலலிதா

     
    புரட்சித் தலைவி, புரட்சியுடன் தமிழகத்தில் செயலாற்றினார்

    சமூகத் திட்டங்கள் பல செய்து மக்கள் மனதில் குடிகொண்டார்

    ஏழை மக்களுக்கு நியாய விலையில் உணவு வழங்கினார்

    தமிழகத்தை சிறப்புடன் ஆட்சி புரிந்து, நற்பெயருடன் திகழ்ந்தார்

    புதுமை திட்டங்கள் புகுத்தி ஏழைகள் மனதில் இடம் பிடித்தார்

    எச்செயலையும் துணிவுகொண்டு ஆளுமையுடன் செயலாற்றினார்

    தமிழ் நாட்டின் சிறந்த முதலமைச்சர் என போற்றப்பட்டார்

    அயல்நாட்டுத் தலைவர்களும் மெச்சத்தகும்படி விளங்கினார்

    அம்மா என்று எல்லோராலும், தமிழகத்தில் கொண்டாடப்பெற்றார்

    அம்மா மறைந்தாலும் , அவர் புகழ் என்றும் மறையாது !
    ரா. பார்த்தசாரதி

    Share
  • நடா புயலே

                  ரா.பார்த்தசாரதி              

     

    புயல் என்றாலே மக்கள் மனதில் கலக்கம்

    விபரீத விளைவுகள் ஏற்படும் என்கிற தயக்கம்

    புயலால் சேதம் ஏற்படுமே  என்ற தவிப்பு

    மக்கள் மனதில் தவிர்க்கமுடியாத பதைபதைப்பு !

     

    நடா புயலே ! எங்களை சேதப்படுத்தாமல் ஒதுங்கிடு

    மக்கள்  பணமில்லாமல் பொருள் வாங்க தவித்திடுது

    மக்களிடத்தில்,பணம் எல்லாம் செல்லா காசாக  மாறியது

    இதனை கண்டு அரசும் என்ன செய்வதென்று தவிக்கின்றது !

     

    புயலே ! என்று அரசும் உதவும் நிலையில் இல்லை

    மக்கள் கையில் பணமும் அதிகம் இல்லை.

    எங்கள் நிலையறிந்து சற்றே  ஒதுங்குவாயா

    எங்கள் வாழ்வினை நிலைபெறச்  செய்வாயா !

     

    புயலுக்கு பின்னே அமைதி என்றான்  மனிதன்

    அரசு  முன்னெச்சரிக்கை செய்வதையும் கண்டான்

    சீர்செய்ய  அரசின் மெத்தன போக்கையும் கண்டான்

    இயற்கையால் ஏற்படும் அழிவை தடுக்க வழி கண்டானா !

     

    Share
  • தோல்வி

     

     

    ரா.பார்த்தசாரதி

     

    தோல்வி   என்பது வெற்றியின்  முதற்  படி

    தோல்வி என்பது விதியின் வலி அல்ல

    அதுவே விதியை மாற்றும்  வழியாகும்

    தோல்வி என்பது தலைக்குனிவும் அவமானமாகும்

    அதுவே  தடை நீக்கும்   அடையாளமாகும்

    தோல்வி என்பது வெட்கப்படும் செயல் அல்ல

    அதுவே வெற்றியை தூண்டும்  வீரம்

    தோல்வி என்பது முள்குத்தும் பாதையல்ல

    அதுவே முன்னேற சொல்லும் பாடமாகும்

    தோல்வி என்பது மிரளவைக்கும் பூதமல்ல

    அதுவே அனுபவம் தரும் தேவதை

    தோல்வி என்பது துன்பத்தின் நினைவலை

    அதுவே நம்மை தூங்கவிடாத கனவு

    தோல்வி என்பது கிழிந்த புத்தகம் அல்ல

    அதுவே வாழ்க்கையின் சிறந்த புத்தகம்

    தோல்வி என்பது பின்னிழுக்கும் பயமே

    வெற்றியை எட்டி பிடிக்கும் துணிவே !

    தோல்வி என்பது முட்டாள்களின் தலைவன் அல்ல

    அது அறிவாளிகளின்  ஆசிரியன்.

    தோல்வியை ஏற்போம் ! துவளாமல் இருப்போம் !

     

     

     

    Share
  • கலப்படம்

    ரா.பார்த்தசாரதி

     

      எதில்  கலப்படம் இல்லை?

    வாயை புண்ணாக்கும் புகையிலையிலும், குளிர் பானத்திலும் கலப்படம்!

    உயிர் காக்கும் மருந்திலும் கலப்படம்  செய்யப்படுகின்றது!

    ஏழை, பணக்காரன் பேதமின்றி குடிக்கும் மதுவிலும் கலப்படம் !

    கைக்கு கை மாறும்  பண நோட்டுக்களிலும் கலப்படம் !

    தண்ணீரிலும், வணிகப் பொருள்களிலும் கலப்படம் !

    மிருகங்களிலும், தாவரங்களிலும்  இன  கலப்படம்!

    காப்பி, தேயிலைகளிலும்  கலப்படம் செய்யப்படுகின்றது !

    பதவி பெரும் வோட்டுக்களிலும்  கலப்படம் !

    ஜாதி வேறுபாட்டால் திருமணங்களில் இன கலப்படம்!

    எங்கு? எப்படித்தான் தேடுவது, நேர்மையில் கலப்படமில்லாத

    அரசியல்  தலைவர்களையும், ஆட்சியாளர்களையும் !

     

     

     

     

     

    Share
  • மனிதனுக்கு ஒரு தினம்

     

     ரா.பார்த்தசாரதி

     

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் சுப தினம்

    தினந்தோறும் சிறப்பு தினங்கள் நமக்கு  உண்டு

    அன்னையை முதியோர் இல்லத்தில் விட்டு வைத்தோம்

    அன்னையர் தினம் என்று கொண்டாடுகின்றோம்

     

    நண்பர்களுக்கு மோசம் செய்து வேடிக்கை பார்க்கின்றோம்

    நண்பர்கள் தினத்தை  வெட்கமின்றி கொண்டாடுகின்றோம்

    ஒருதலை காதலால் காதலியை கொன்றுவிடுகின்றோம்

    காதலர் தினத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றோம்

     

    பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறார்கள்

    மகளிர் தினத்தையும் மறக்காமல் கொண்டாடுகிறார்கள்

    விவசாய நிலங்களை மனைகளாக்கி விற்றுவிடுகின்றோம்

    விவசாய தினத்தையும்  மனசாட்சியின்றி கொண்டாடுகின்றோம்!

     

    குடிநீரையும், நதிநீரையும், கழிவு நீரால் மாசுபடுத்துகின்றோம்

    மாசுக்கட்டுப்பாடு தினத்தையும் ஒப்புக்காக கொண்டாடுகின்றோம்

    புகை நமக்கு பகை என தெரிந்தும் அதனை  கட்டுப்படுத்தமுடியவில்லை

    சுற்றுப்புற சூழ்நிலை தினத்தையும் நாம் கொண்டாடுகின்றோம்

     

    போராட்டம் என்றால் பேருந்துகளை  எரிக்கின்றோம்

    பேருந்து  தினத்தையும் வெட்கமின்றி கொண்டாடுகின்றோம்

    வஞ்சகமாய் உணவு பொருளை மறைப்பவர்கள் வணிகர்களே

    வணிகர் தினம்  என்று  பெருமையுடன் கொண்டாடுகிறார்களே !

     

    இன்னும் எத்தனையோ தினங்கள்  நமக்கு உண்டு

    மனிதனே தன்னலத்துடனே இருக்கின்றது உனது தொண்டு

    சற்றே  பொதுநலனை கருத்தில் கொண்டு செயலாற்று

    மனித நேயம் கொண்டு, மனித தினம் கொண்டாடலாமா ?

     

     

    Share
  • குழந்தைகள் தினம்

    ரா.பார்த்தசாரதி

     

    கள்ளமில்லாச் சிரிப்பும், தளிர் நடையுமே குழந்தையின் உருவமே

    சிரிப்பினை கண்டு சிரித்து வெகுளிதனத்தை வெளிப்படுத்தும் முகமே

    எந்த வித எதிர்பார்ப்பின்றி , நம்மை கண்டு ஓடி வரும் குழந்தைகளே

    அன்பிற்கும், தாய் பாசத்திற்குமே கட்டுப்படும் பாசமுள்ள குழந்தைகளே!

     

    குழந்தையின் மழலைச் சொல் யாழையும் குழலையும் விடச் சிறந்தது

    மழலைச் சொல் கேளாதவர் பெருஞ்செல்வம் பெற்றிடினும் வீணே 

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று எனக் கூறுவர் .

    குற்றங்களை மறந்து, பகைமை கொள்ளாது ஒன்று சேர்ந்திடுமே !

     

    இந்திய பிரதமர் நேருவிற்கு குழந்தைகள் என்றால் விருப்பம் அதிகம் 

    தன் பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக கொண்டாட விரும்பினார் 

    அன்று முதல் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாயிற்றே 

    குழந்தைகள் தினம் என்றாலே நேருவின் பிறந்த நாளாயிற்றே !

    Share
  • கறுப்பு பணம்

    ரா.பார்த்தசாரதி

     

    இந்திய பிரதமர் கறுப்பு பணம்  நீக்க அதிரடி வழி கண்டார் 

    அதிகம் புழங்கும் ரூபாய் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட் டுக்களே

    கறுப்பு  பணம் வைத்திருப்பவர்களுக்கே திண்டாட்டம் 

    ஏழை, நடுத்தர மக்களுக்கோர் சில நாட்களே திண்டாட்டம் !

     

    பணவீக்கமும், கறுப்பு பணத்தினால் ஏற்படுகின்றதே 

    விலைவாசிகள் அதிகமாகி மக்களை தடுமாற செய்கின்றதே

    அதிக பணம் கொடுத்து குறைந்த பொருள் வாங்கப்படுகின்றதே 

    பல ஆண்டுகள் கறுப்பு பணத்தால் வளர்ச்சி தடை பட்டதே !

     

    பல கோடி ரூபாய்கள் குவியலாக்கி எரிக்கப்படுகின்றதே 

    நல்ல உள்ளம் கொண்டவர்களால் இலவச உணவு அளிக்கப்படுகின்றதே

    மக்கள் படும் துன்பத்தை கண்டு அரசும் ஆவண செய்கின்றதே 

    பணம்  பதுக்குபவர்களுக்கு இது ஒரு  சாட்டையடியானதே !

     

    கறுப்பு பண ஒழிப்பால் லஞ்சமும் சற்றே கட்டுப்படுமே 

    உண்மை விலை நிர்ணயித்து பொய்யான விலை தவிர்க்கப்படுமே, 

    பொருள்களின் விலைகள் சற்றே கட்டுப்பாட்டிற்குள் வருமே 

    நல்லவை நடக்க சில துன்பங்களை எதிர்கொள்ள வேண்டுமே !

     

    கறுப்பு பண ஒழிப்புக்கு மக்களும் உதவ முன் வரவேண்டும் 

    இவைகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு என எண்ணவேண்டும் 

    நாட்டில் கறுப்பு பண முதலைகளை அடையாளம் காட்டவேண்டும் 

    அரசுடன் ஒத்துழைத்து நாமும் உதவிக்கரம் நீட்டவேண்டும் !

    Share
  • தீபாவளி

    ரா. பார்த்தசாரதி

     

    மக்களுக்கு  மகிழ்ச்சியும், ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை,

    எல்லோரும்,  ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை

    வாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,

    சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

     

    விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்து குளித்து ,

    மகிழ்வுடனே    புத்தாடை  உடுத்தி,   இனிப்பினை பகிர்ந்து,

    பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்று

    ஊர் எங்கும்  ஒன்றாய் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

     

    நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி

    வடக்கே விளக்கு பூஜை, துர்கா பூஜை என் கொண்டாடும் தீபாவளி,

    முதியோர் இல்லத்திற்கும், அநாதை இல்லங்களுக்குச் செல்வோம்

    இல்லாதவர்களுக்கு  இருப்பதை  கொடுத்து உதவி கரம் நீட்டுவோம் !

     

    அசுரன்  மரணித்த  நன்னாளை   தீபாவளியாக கொண்டாடுகின்றோம்

    வெடிகளும், பட்டாசுகளும்  வெடித்தால் மட்டும் போதுமா?

    மதவெறி, இனவெறி, தீவிரவாதம்  இம்மூன்றும்  தவிர்த்தே

    இணக்கமான மொழி பேசி   வாழ்ந்திடுவோம் !

     

    Share
  • மனம் எனும் பேய்

     

         ரா.பார்த்தசாரதி

     

    மனம் ஒரு கண்ணாடி ,

    நமது எண்ணங்களை பிரதிபலிக்கும்,

     

    மனம்  ஒரு குரங்கு

    அது எண்ணங்களை தாவ வைக்கும்

     

    மனம் ஒரு  நீர்க்குமிழி

    அது  எண்ணங்களை உருவாக்கி அழிக்கும்

     

    மனம்  ஒரு கடல் அலை

    அது  மாறி, மாறி  எண்ணங்களை மோத விடும்

     

    மனம் ஒரு அணையா நெருப்பு

    அதில் பொறாமை என்பது கொழுந்துவிட்டு எரியும்

     

    மனம் ஒரு குப்பைத்தொட்டி

    அதில் தேவையில்லாத கெட்ட எண்ணங்களை சேர்த்துவைக்கும்

     

    மனம் ஒரு  கடிவாளம் இல்லா குதிரை

    அது தன்  விருப்பப்படியே  பறந்தோடும்

     

    மனம்  ஒரு கனவு உலகம்

    கனவு உலகத்தில் அடிக்கடி சஞ்சரிக்கும்

     

    மனம்   ஒரு அழகின்  அடிமை

    அழகான காட்சிகளுக்கு சரணடையும்

     

    மனம்  எனும் பேய்

    மனிதனை  சுயநலமாய், தீயவற்றிற்கு அடிமையாக்கும்

     

     

    Share
  • நிலையாமை!

    ரா.பார்த்தசாரதி

     

     

    சொந்த, பந்தங்கள் யாவும் ,நன்மைக்காக  ஏற்பட்ட உறவுகள்

    அந்தந்த நேரத்தில் முகம் காட்டும் அடையாளங்கள்

    உடன் வருவோரெல்லாம் ஊர் வரைக்கும் வருவதில்லை!

    துன்பப்படும் போது, உறவும், நட்பும்  கண்டுகொள்வதில்லை

     

     

    நேற்று இருந்தவன்  இன்று இல்லை

    என்ற பெருமைதான் மனித வாழ்க்கை

    நிலையாய் வாழ்ந்து அனுபவிக்க பேராசை படுபவன்

    வள்ளுவனின் நிலையாமை நினைக்க தவறலாமா ?

     

    பத்து  தலைமுறைக்கு  கட்டிக்காத்த செல்வங்கள் யாவும்

    சல்லடையில் தேங்கிய நீர்போல  ஆகவும்

    கட்டிக்காதவன் போகும்போது கொண்டு செல்ல முடியுமா

    யார்  அனுபவிக்கிறார்கள்  என பார்க்க முடியுமா?

     

    வளர்பிறை காலமும், தேய்பிறை காலமும் உண்டு,

    உயர்வு,தாழ்வு  பகலிரவு போல் இருப்பதுண்டு

    .தாமரை இலை தண்ணீர் போல் நிலையில்லாமல்  ஆனதே

    தண்ணீர் மட்டத்துக்கு மேல் வந்து மறையும் நீர்குமிழி போல் ஆனதே

     

    பழமையும், சிறப்பும் வாய்ந்த அரண்மனைகள், கோட்டைகள்

    இவை எல்லாம்  காலம் தின்று  அழித்த  இடங்கள்

    மிஞ்சியவைகள்  இன்று சுற்றுலா  தலங்களே

    நமது சிறப்பைக்  காக்கும் அடையாள ஏடுகளே !

     

    இறைவா புகழ்  பெற்று வாழ்பவர்கள்  உண்டு

    செருக்கடைந்தவர்கள்  சேற்றில் புதைந்தவர்களுண்டு

    மாற்றங்கள் நிகழ்வதில்லை  என்றும் மாற்றமேயில்லை

    நிலையானது எதுவெனில், நிலையாமையை என்றறிக

     

    Share
  • மகாத்மாவே மன்னியுங்கள்

     

    ரா.பார்த்தசாரதி

     

    கண்ணியம், ஒழுக்கமற்ற கனவான்களின்  விமர்சனமும்,

    தங்கள் கொள்கைகளை  மறந்து பின்பற்றுவது போன்ற நடிப்பும்

    உங்கள் பிறந்த நாளை விடுமுறைக்காக  ஏற்படுத்தினாலும்,

    உங்கள் புகழும் மாண்பும் மங்க போவதில்லை !

     

    அரிச்சந்திரன் நாடகத்தைப்  பார்த்து உண்மையை  கடைபிடித்தவரே

    உங்களிடம்  உண்மையே உன் விலை என்ன கேட்கும் கனவான்கள்  உள்ளனரே

    சத்ய சோதனை என்பது காட்சி பொருளாய்  இருப்பது புத்தகத்தில் மட்டுமே

    இன்றைய காலகட்டத்தில்   இது சோதனையாய் இருப்பது மட்டுமே !

     

    கைராட்டை சுற்றி ஆடை நெய்த காலம் மறைந்து விட்டது

    அயல்நாட்டு பொருட்கள் மனம் நாட்டம் கொண்டுவிட்டது

    ஆடம்பரத்தில் எங்களை நாங்கள் இழந்து விட்டோம்

    தங்கள் எளிய பாதையினை நாங்கள் மறந்துவிட்டோம் !

     

    அன்று சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்தினீர்கள்

    இன்று மாநில பிரிவினை போறே நடத்துகிறார்கள்

    அன்று தொடர்ந்த காஷ்மீர் பிரச்னை இன்றும் தீர்ந்தபாடில்லை

    என்று தீருமோ, போரில் முடியுமோ எனத் தெரியவில்லை !

     

    நீருக்கு சண்டை போட்டாலும், மது அருந்த சண்டை போடமாட்டோம்,

    தீண்டாமையை ஒழித்தாலும் , இனம், ஜாதியை,மறக்காத  மக்கள் மனம்

    விளம்பரத்திற்காக, சிலை வைத்தோம், கடற்கரையில் நிற்கவைத்தோம்,

    உங்கள் அருமை அறியாத எங்களை மன்னிக்க வேண்டுகின்றோம் !

    Share