Tag: விசாலம்

  • இயற்கையே தெய்வம்!..

    விசாலம்

    இயற்கையே தெய்வம்!….

    இதையே பாரதியாரும் “இயற்கையென்றுனை உரைப்பார், சிலர் இணங்கும் ஐம்பூதங்களென்றிசைப்பார்” என்று இயற்கையை சிவசக்திக்கு ஒப்பிடுகிறார்  அத்துடன்  பஞ்ச பூதங்கள் என்றும்   சொல்கிறார்  இதிலே தான்  அப்பு வாயு  நீர் நிலம்  நெருப்பு என்பவை   பின்னப்பட்டிருக்கின்றன நாம் இயற்கைக்குக்கேடு செய்ய  அது நமக்கே கேடாக முடிகிறது  மரங்களை அழித்து வீடுகள் கட்டுகிறோம் காடுகளை அழிக்கிறோம்  இதனால் நமக்குத்தேவையான பிராணவாயு குறைந்து கரிமலவாயு அதிகமாகிறது இதனால் மழை குறைவாகிறது ,இதன் பலன் விளைச்சலும் குறைகிறது ,தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படுகிறது  ஓசோன் என்னும்  திரை குறைந்து கடும் வெப்பம் உண்டாகுகிறது.  நாம் இயற்கையை வணங்கி பிரார்த்தித்து காக்க வேண்டும்  முன் காலத்தில் அக்னிக்குத்தனி பூஜை நீருக்குத்தனி பூஜை  அரசமரம் வேப்பமரம் போன்ற்வைகளுக்கும்  பூஜை செய்வதை வழக்கமாகக்கொண்டிருந்தனர்

     ,நான் ஒரு எகிப்து நாட்டுக்கதையைப்படித்தேன்  அதில்    சூரியனின் முக்கியத்துவம் பற்றிக்கூறப்பட்டிருக்கிறது

    ‘எலோடஸ் என்பவர் இயறகையை மிகவும் ரசிப்பவர் .இயற்கைமேல் அதிக பற்றும் பக்தியும் வைத்திருந்தார் ,ஒவ்வொரு செட்யுடன் பேசுவார் நீரை வீணாக்க மாட்டார்

    காலையில் வெகு சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு முற்றத்தில் வந்து நிற்பார் அழகான  செந்நிறமான சூரியனைக்கண்டு ரசிப்பார் பின் சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்து விடுவார்  தெருவில் போவோர் எல்லோரும்  இவரைக்கண்டு சிரித்தனர் கேலி செய்தனர் ஆனாலும் இவர் இதைப்பராட்டவில்லை

     “என்ன முட்டாள் மாதிரி சூரியவெளிசத்தை வணங்குகிறாயே ” என்று சிலர் கேட்க

    அதற்கு இவர் “உங்களுக்கு இயற்கையின் அருமை பெருமை  தெரிந்தால்தானே  உங்கள் அறியாமையால் இப்படி பேசுகிறீர்கள் ”  என்பார்

     தினமும் அந்தப்பக்கம் ஒரு கடலை வியாபாரி  வருவாள் எலோடஸைப்பார்த்து கேலி செய்வாள்

    ஆனல் எலிடோஸ் மிகப்பொறுமையாக கேட்டபடி இருப்பார்  அன்றைய தினமும்

    கடலைவியாபாரி வந்தாள் ,  “எல்லோரும் இந்தப்பைத்தியக்காரரைப்பாருங்கள் தினமும் சூரியனைக் கும்பிடுகிறார் சூரியன் அதன் கடமையைச்செய்கிறது

    வெளிச்சம் தருகிறது அது என்ன தெய்வமா? இந்தக்கும்பிடு கும்பிடறாரே  கஷ்டம்   கஷ்டம் என அலுத்தபடி சொன்னாள்

     இது நாள் வரை பொறுமையாக இருந்த எலிடோஸ்  ” கடலை வியாபாரியம்மா  என்னை

    நீங்கள் தினமும்   கிண்டல் செய்கிறீர்கள்! சூரியன் தான் முதன்மையான இயறகைக்கடவுள் இதை வழிபட   நம் வாழ்வும் மேன்மையடையும்  “

     “இது என்ன பைத்தியக்காரத்தனம்  தினமும் சூரியனைக்கும்பிடு   இயற்கை தெய்வம் என்றெல்லாம் பிதற்றுகிறீரே!”

     “சரி சூரியனின் அருமைத்தெரிய நான் ஒன்று சொல்கிறேன் கேட்பீர்களா? தைரியம் உண்டா ?”  “என்ன சொல்லுங்கள் கேட்கிறேன்”

     “ஒருநாள் முழுவதும் ஒரு இருட்டு அறையில் இருந்து கழிக்க வேண்டும்

    உங்களால் அப்படி இருக்க முடியுமா?

     “இதென்ன பிரமாதம் இருக்கலாமே என்னால் முடியும் ” என்று ஆணவத்துடன் பதிலளித்தாள்.

     எலிடோசும் தன் வீட்டின் பின் புறம் இருக்கும் ஒரு இருட்டறையில்  அவளைத்

    தங்க வைத்தார்,எல்லா கதவுகளும் மூடிவிட்டார்

     “உள்ளே சென்ற சில நிமிடங்களுக்குள்ளேயே அவளுக்கு மூச்சு அடைத்தது

    காற்று வரவில்லை  வெளிச்சம் வரவில்லை மனதுக்குள் ஒரு பயம் வந்தது

    மறுநாள் கதவைத்திறந்ததும் வெளியே ஓடோடி வந்தாள் கடலைக்காரி

    எலிடோசின் கையைபிடித்தாள்

    “என்னை மன்னித்துவிடுங்கள் ஒரு நாள் முழுவதும்  இருட்டில் இருப்பது எத்தனைக்கடினம் என்று  தெரிந்துக்கொண்டேன் சூரிய வெளிச்சம் உடலில் படும்

    போது தான் புத்துண்ர்ச்சிப்பெற்றேன்  சூரிய ஒளிக்கு ஒரு அபூர்வ

    சக்தி இருக்கிறது என்பதையும் உணர்ந்தேன்  இனி நான் கேலி செய்ய மாட்டேன்

    நானும் அந்தச்சுரியனை வணங்குவேன் “

    எலிடோஸ்  சிரித்தார்   ”  நாம் செயற்கைப்பொருட்களைக்கண்டுபிடிக்கிறோம்

    ஆனாலும் அதில்  எதாவது பிரச்சனை ஏற்படுகிறது  ஆனால் அந்தத்தெய்வம்

    போன்ற இயற்கைகளால் நம்க்கு நன்மையே ..அவைகள் இல்லாமல் நாம் வாழமுடியாது,,காற்று நீர் நெருப்பு சூரிய ஒளி இவைகள் எல்லாம் இல்லாமல் நம்மால் உயிர் வாழமுடியுமா ?’

    கடலைவியாபாரி இயறகையின் பெருமையை உணர்ந்தாள்.

    Share
  • அதிசய லிங்கங்கள்!….

    விசாலம்

    பெங்கலூரு அருகில் சுமார் அறுபது கி மீ தூரத்தில் சிவகங்கா என்ற கிராமம் உள்ளது அங்கு நாம் பார்க்கப்போகும் லிங்கம் மலையடிவாரத்தில் ஒரு குகைக்குள் சுமார் ஐந்து அடி உயரத்துடன் காணப்படுகிறது இந்த லிங்கரூபத்தின் பெயர் கவி கங்காதீஸ்வரர் இங்கு பூஜை செய்ய வருபவர் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்கிறார் அந்த அபிஷேகம் முடிந்தவுடன் அந்த நெய் வெண்ணெயாக மாறிவிடுகிறது அந்த வெண்ணெயைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்

    கேரளாவில் திருச்சூரில் இருக்கும் வடக்குநாதர் கோயிலிலும் சிவலிங்கம் இருக்கிறது பெயரும் வடக்குநாதர் தான் இங்கு பல்லாண்டுகளாக நெய் அபிஷேகம் தொடர்ந்து நடந்து வருகிறது இதனால் லிங்கமே தெரியாமல் சுமார் நாலு அடி உயரத்திற்கு லிங்கம் வளர்ந்து விட்டது இதில் இருக்கும் அதிசயம் என்னவென்றால் எத்தனை உஷ்ணமாக இருந்தாலும் .நல்ல கோடைக்காலத்திலும் அந்த நெய் உருகாமல் அமர்நாத் லிங்கம் போல் காட்சியளிக்கிறது

    தஞ்சாவூர் அருகே குடவாசல் என்ற இடம் .அதன் அருகில் நாலூர் திருமயானம் என்ற இடத்தில் ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது இதன் மேற்பகுதியைப்பார்த்தால் பலாப்பழத்தின் மேல் பாகம் போன்று முள்ளு முள்ளாக உள்ளது இந்த லிங்கத்தின் பெயர் பிலாச வனேஸ்வரர் அமர்நாத் லிங்கம் பனி லிங்கமாக காட்சியளிக்கிறது இது சந்திரனைப்போலவே பௌர்ணமியின் போது முழுமையாகவும் பின் அமாவாசை வர வர குறைந்து மறைகிறது பின் திரும்பவும் அடுத்த பௌர்ணமியில் முழுசந்திரன் போல் பிரகாசிக்கிறதாம் காசியில் அனுமன் காட் என்ற இடத்திற்குப்போனால் சிவபெருமான் அம்பிகை மடியில் சயனித்திருக்கும் காட்சியைக் காணலாம் இந்தக்கோயிலின் பெயர் “காமகோடீஸ்வரர் ” கோயில்

    இதே போல் சிவன் விஷ்ணு போல் பள்ளிக்கொண்ட க் காட்சியை ஆந்திராவில் சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் காணமுடிகிறது மஹாராஷ்டிராவில் எல்லோரா குகை அருகே “குஸ்மேஸம் “என்ற ஊரில் இருக்கும் சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது அது எப்படி கெட்டியாக உடையாமல் இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது நீடூரில் அருள் புரியும் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் அருட்சோமநாதர் இந்த சுவாமியை ஒரு நண்டு தினமும் வணங்கி வந்ததாம்

    திருவக்கரை வக்ர காளியம்மன் கோயிலி,ல் இருக்கும் சிவபெருமான் அருள் மிகு சந்திரமௌலீஸ்வரர் . இவர் மும்முகம் கொண்ட லிங்கமாகக் காட்சி அளிக்கிறார் .கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் ,வடக்கு முகம் வாமதேவ முகம் தெற்கு முகம் அகோர மூர்த்தியாக அருள் புரிகிறார் , திருநல்லூரில் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் இருக்கிறது பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்துக்கொண்டு

    இந்தச்சிவலிங்கத்தைப்பூஜித்தாராம் இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் பஞ்சவர்ணேஸ்வரர் காக்கும் கடவுள் வீஷ்னுவும் சிவனைப்பூஜித்த இடம் ஒன்று உண்டு அதுவே தலைச்சங்காடு . இங்கு திருமால் சிவபெருமானை வழிபட்டு பாஞ்சஜன்ய சங்கைப்பெற்றார் ,இதனால் ஈசன் சங்கு வடிவில் மூலவராக அருள் புரிகிறார் பெயரும் சங்காரேண்யஸ்வரர் .

    தேனி மாவட்டத்தில சின்னமனூர் என்ற கிராமத்தில் சுயம்புவாக இருக்கும் சிவலிங்கம் அருள்மிகு புலாந்தீஸ்வரர் , அந்த லிங்கம் பார்வையாளரின் உயர்த்துக்குத்தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்கிறார் அந்த லிங்கத்தைத் தழுவிக்கொண்ட ராஜசிங்க பாண்டியனின் மார்பு கவசத்தின் அடையாளம் அந்த லிங்கத்தின் மேல் தெரிகிறது தவிர இங்கிருக்கும் அம்பாள் சிவகாமிக்கு முகத்தில் எப்போதும் வியர்க்குமாம் இதேபோல் இன்னும் பல வியக்குமளவுக்கு நம் நாட்டில் கோயில்கள் மண்டிக்கிடக்கின்றன அவைகளில் சில எண்ணெய் விட்டு விளக்கேற்ற க்கூட வசதியில்லாமல் இருண்டு கிடக்கின்றன பல புது கோயில்கள் கட்டுவதைக்குறைத்துக்கொண்டு இந்த பழமையான கோயில்களை நாம் பாதுகாப்பது நமது கடமையல்லவா?

     

    Share
  • தாய்க்குப்பெருமை சேர்த்த மகன்!….

    விசாலம்                                                                                                                                                                                                                          

    ஒரு தாயின்  சொற்படி நடந்து அந்தத் தாய்க்குப் பெருமைச் சேர்க்கும் வண்ணம் ஒரு மகன் இருந்து விட்டால் அந்தத் தாய்க்கு அதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? ஆம்  கொல்கத்தாவில் ஒரு ஏழைக் குடுமபம்  இருந்தது

    ஒரு தாயும் அவரது மகனும் , அவர்கள் சிறிய கிராமத்தில் வ  சித்து வந்தனர் தாய் மிகவும்   சிரமப்பட்டு  உழைத்து மகனை படிக்க வைத்தார் .மகனும் தெருவில் இருக்கும்  விளக்கின் அடியில் அமர்ந்து   படிப்பான் படிக்கும் நேரம் தவிர அவனும்  மிகக் கடுமையாக உழைத்தான் ,உழைப்பின் பலன் கிடைத்தது    காலேஜும் சேர்ந்து பின்   துகலைப் பட்டப்   படிப்பும் படித்து முதல் இடத்தில் தேறினார்  பின்  மேடையிலும் பேச ஆரம்பித்து சிறந்த பேச்சாளராகவும்  ஆனார் .மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் பேசியதால் அவர் பேச்சைக் கேட்கக் கூட்டம்  அதிகம் வரும் இத்தனை இருந்தும் ப்ல மாதங் ள் வேலைக் கிடைக்காமல் இருந்ததால் வீட்டில் வறுமை மிகுந்தது தாய்க்கும் வயதானதால் முன்பு போல் வேலைச் செய்யமுடியவில்லை ஆகையால் கஞ்சி வைத்து குடிப்பார்கள்  தாய் தனக்கு இல்லாமல் தன் மகனுக்கு அளிப்பார்      மகனோ ஆசையுடன் தாய்க்கு அளிப்பார்  இத்தனைக் கஷ்டப்பட்டவர் பிற்காலத்தில்  யாவரும் போற்றும்   மகன்  ஆனார் அவர்தான் திரு ஈச்வர சந்திர வித்யாசாகர்

    பல நாட்கள் பொறுமையாக இருந்த பின்  அவருக்கு நல்ல வேலைக் கிடைத்து முதல் சம்பளம் வாங்கியதும் தன் தாயிடம்  ஓடி வந்து  அவர்  பாதங்களில் வைத்து “அம்மா எனக்காக் நீங்கள் எத்தனைக்  கஷ்டப் பட்டிருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும்? நான் உடனே வாங்கித் தருகிறேன் “என்றார்

    அதற்கு அந்தத் தாய் ” எனக்கு இப்போது ஒன்றும் வேண்டாம் தகுந்த நேரம் வரும் போது நானே கேட்கிறேன் ” என்றார்

    ஒரு சமயம் தாயுடன் கிராமத்தில் நட்ந்த ஒரு சந்தைக்கு ஈச்வர சந்தரவிதயாசாகர் புறப்பட்டார் தாய் மிகுந்த பழைய புடவையைக் கட்டிக் கொண்டு கிளம்பினார் , உடனே மனம் பொறுக்காமல்  கடையிலிருந்து நாலு  புது புடவைகள் வாங்கித் தன் தாயிடம் தந்தார் .

     “அம்மா இந்தாருங்கள் இப்போதாவது சொல்லுங்கள் ,,உங்களுக்கு என்ன வேண்டும்”

    மகனே  நமது கிராமத்தில் சிறந்த பள்ளிகூடம் இல்லை வெகு தூரம் நட்ந்து சென்றால் தான் ஒரு பள்ளி வருகிறது     அந்தக்குழந்தைகள் பத்திரமாகத்  திரும்பி வரும் வரை பெற்றோர்கள் தவித்துப் போகிறார்கள்   ஆகையால் நான் மூன்று ஆபரணங்களைக் கேட்கப் போகிறேன் முதல் ஆபரணம் நமது கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம்      அதை நீதான் கட்டிக் கொடுக்க வேண்டும்”

    மகனின் கண்களில் கண்ணீர் வழிய  தாயின் ஆசையைப் பூர்த்திச்செய்தார் , பின் கொஞ்சக்காலம்   கழிந்தப்பின் ” இரண்டாவது ஆபரணம் எது அம்மா “? என்று கேட்டார் அப்பா மகனே  கிராமத்து மக்கள் குடிநீருக்காக  மிக கஷ்டப்படுகின்றனர் ஆகையால் கிரமத்திற்கு குடிநீர் வரவழைக்க எதாவது வழி செய்  இதுதான் என் இரண்டாவது  ஆபரணம் ”  திரு வித்யாசாகரரும் பல இடத்தில் குழாய்கள்  கிணறுகள் வைத்து   அந்தக் கிராமத்தை வசதியாக்கினார் தாயின் மனமும்  மகிழ்ச்சி அடைந்தது

    ஒருநாள் தெருவில் வந்துக் கொண்டிருக்கையில்   ஒரு  யாளியைப்பார்த்து மனம் வருந்தினார் அந்தத் தாய் உடனே தன் மகனிடம் “மகனே என் மூன்றாவது ஆபரணம் கேட்கும் நேரம் வந்து விட்டது பள்ளிக்கூடம் அமைத்தாய்  குடிநீரும் கொடுத்தாய் இப்போது அவர்களுக்கு ஒரு   மருத்துவ மனையும் கட்டிக் கொடுத்து விடு  ” தன் தாயை அன்புடன் அணைத்துக் கொண்டார் அவர்      உடனே அவர் ஆசை நிறைவேறியது

    தன் மகனை அணைத்துக் கொண்டு “ஒரு தாய்க்கு  உன்னைப் போன்று ஒரு மகன் இருந்தால் போதும்  உலகமே சுவர்க்கமாகிவிடும் ‘ என்று நெஞ்சு தழுக்கக் கூறினாள் ஸ்ரீசத்யசாயி பாபா சொன்ன உண்மைச் சம்பவம்   இது


    Share
  • காட்சிகள் சில . மகளிர் தினம்

    விசாலம்

    காலை நேரம் .}    என்ன  இன்னும் பொன்னம்மா வேலைக்கு வரவில்லையே  இந்த வேலைக்காரி டென்சன்   என்னிக்குத்தான் போகுமோ ?’

    “ஏன் பொன்னம்மா இவ்வளவு லேட் ? ” ஏன் இப்படி அழுவுறே  “.

    “அத ஏம்மா கேக்கறீங்க .இஸ்கூல் பீஸுன்னு வச்சிக்கினுருந்தேன் ஒரு நூறு ரூபா  ..அதயும்  என் புருசன் எடுத்துக்குனு ஓடிட்டாரு. என் முவத்தைப்பாருங்கம்மா   கன்னத்தல எத்தன அடின்னு பாருங்கம்மா .’

    “ஆமாம்  என்ன இப்படி அடிச்சிருக்கான்  ? எதுக்கு அவனுக்கு பணம் ?

    “அதாம்மா  . அந்தப்பாழாப்போன  குடி  ……. எல்லாம் நா  பொண்னா பொறந்த வேளை  இந்த அழகல  இன்னிக்கி “மகளிர் தினமாம் ”

    கோடி வீட்டம்மா  சொல்லிச்சு  …..இதுவாம்மா  “மகளிர் தினம் .புருசன்டேந்து அடி வாங்கி சாவரதா   மகளிர் தினம் “?

    காட்சி 2        “என்னங்க  டாக்டரம்மா  என் வயித்தல வளர்ர குழந்தை நன்னாருக்குன்னு சொன்னா ……..நானு ..நன்னா சத்துள்ள  உணவை
    சாப்பிடணுமாம்

    “அது சரி  தாமரை  .    என்ன குழந்தன்னெ  கேக்கச் சொன்னேன்னே  கேட்டயா  ‘?

    ” கேட்டேங்க   . சொல்லமாட்டேன்னுட்டாங்க  . எதுவா இருந்தா என்னாங்க   ?

    “என்ன?      எதுவா இருந்தா என்னாங்க,,,,,,, இழுக்கறே  அப்போ பொட்டப்புள்ள தான் பொறக்கும்  .எனக்கு வேண்டாம் அது    ஏற்கனவே
    ஒன்னு இருக்கு சிலவு வைக்க  ….. அத  அழிச்சுடு  …”

    ” நான் அந்த பாவத்த  செய்யமாட்டேனுங்க  .  அது நம்ம குழந்தைங்க ‘

    “சீ வாய மூடு . எனக்கு வர சம்பளத்ல  இன்னொரு மவளா?    அப்படி பெத்துண்டேன்னா உங்கப்பன் வூட்டுக்கு போ  இங்க வராதே ‘

    “என்னங்க  இன்னிக்கு ‘மகளிர் தினம்” னு பேபர்ல போட்டிருந்துச்சு  இப்படி
    நடந்துக்கிறீங்களே!

    ‘மகளிர் தினமாவது மண்ணாங்கட்டியாவது .இதெல்லாம் நமக்கில்லை  அதல்லாம் பெரிய இட சமாச்சாரம்   இங்க நான் சொல்றத நீ கேக்கணும்  தெரிமா?”

    காட்சி மூன்று  . .. ஏம்பா    கொஞ்சம் பஸ்ஸ  நிறுத்துப்பா    ஸ்டாப்பில கூட ஓட்டிண்டே போறயே ‘

    ”  என்னம்மா  ஆம வேகத்ல  வந்துகிட்டு  …. ஏறுங்கம்மா  சீக்கரம் .   ”

    ” அம்மாடி   எத்தன  மேல படி  ஏறவே முடியலை   கைல வேற இரண்டு பை,,,,,, இன்னிக்கின்னு பாத்து மளிகை சாமானும் தெரியாத்தனமா வாங்கிட்டேன் வீட்ல இருக்கற ஆம்பள பசங்கள  என்னத்த சொல்றது ?”

    ” என்னங்கம்மா   ……ஏறிட்டீங்களா ? இந்தாங்க  சீட்டு  ‘

    ” என்னப்பா  நான் எப்படிப்பா    சில்லறை  எடுக்கறது  உட்க்கார ஒரு இடமில்ல .  யாராவது ஒத்தராவது எழுந்து எடம் விடறாளா பாரு
    எல்லாம் இளம் வயசுகள் . ஆனா  கூட வயசுக்கு மரியாத கொடுக்கறாளோ பாரு ஏதுடா ஒரு வயசான பொம்பள  நிக்கறாளே ன்னு
    ஒத்தருக்கும் தோணலயே ‘

    “அம்மா  அதெல்லாம் அந்தக்காலம் .சரி சரி டிக்கட்ட பிடிங்கோ  ‘

    ”  ஏண்டா  சுரேஷ்  மகளிர் தினத்துக்கு    உங்கம்மாக்கு   என்ன வாங்கி  தரப்போறே ‘

    ஒ  இன்னிக்கு மகளிர் தினமா  மறந்தே போயிடுத்து , வேலன்டின் டே தான் எப்பவும் ஞாபகம் இருக்கு ‘

    “சரி சரி இதான் சாக்குன்னு  என் கன்னத்தை கிள்ளாதே . பக்கத்தல நிக்கற அந்த வயசான மாமி பாக்கறா,”

    “எழுந்து இடம் தரவா?’

    ” என்ன லூஸுடா நீ     என்னிக்கோ உம் பக்கத்தல உட்காந்துக்க  சான்ஸ் கிடைச்சிருக்கு அதபோய்  விடறேங்கறயே

    காட்சி  4      ஏண்டி கலா  பக்கத்தாத்து மாமாக்கு இந்த அல்வாவ கொடுத்துட்டு வா இத்தன நாளா உனக்கு கணக்கு வேற கத்துக்கொடுத்திருக்கா தவிர உன் பிறந்த நாள் வேறு ‘

    “சரியம்மா  கொடு .”

    ”  மாமா  சீனுமாமா  ..எங்கே இருக்கீங்க  ? ஓ உள்ளே படுத்திருக்கீங்களா? ‘

    ‘ ஆமாண்டி செல்லம்    தலவலி …  உள்ள வா ……. கையில என்ன ?

    “அல்வா மாமா  . இன்னிக்கி என் பெர்த் டே . மாமா’

    ‘ ஆஹா   கங்ராஜுலேஷன்ஸ் .அதான் இன்னிக்கு இந்த நீல டிரெஸ்லே ரொம்ப அழகா இருக்கே என்ன போனமாசம் முழுக்க வரலை ,’

    ” அதுவா   …….வந்து      வந்து ..’

    ஐயோ என்ன வெட்கம் பாரு  . நீ பெரிய மனுசி ஆயிட்டே  இல்லையா ? என்ன ஒன்னும் பேசமாட்டேங்கறே .அது  சரி  அங்க  தலவலி
    பாம் வச்சிருக்கேன்  அத எடுத்துண்டு வந்து என் நெத்திலே தடவி விடு  .’

    சரி மாமா  ”

    “ஆஹா  என்ன இதமாக தடவி விடறே . அப்படியே உன்னைக்கட்டிக்கணும்போல  இருக்கு ‘

    ” சீ  என்ன  மாமா செய்றீங்க   . தப்பான காரியம் செய்யறீங்க   என்ன விடுங்க நான் வரேன் ஐயோ அம்மா  …… என்ன இந்த மாமா
    தனி ரூம்முக்கு கூட்டிண்டு போறாம்மா  . ‘

    ” உங்கம்மாவுக்கு  காதில விழாது  .  சும்மா இரு . இன்னிக்கு மகளிர் தினம் அதான் உனக்கு இந்த பரிசு   . என்  அன்பை  உனக்கு காட்டவேண்டாமா ”

    “என்ன  இது அல்வா கொடுக்கப்போன பொண்ணை இன்னும் காணோம்   ஏண்டி கலா என்னடி பண்ற இத்தன நேரம் ”

    காட்சி 5   என்னம்மா  நான் இத்தன நிறைய மார்க் எடுத்து  கிளாசிலே முதல் இடம் வந்திருக்கேன்  . மேலே படிக்க விடமாட்டேங்கற ‘

    ” எல்லாம் இத்தன படிச்சது போறும் ஜானா …  கல்யாணம் ஆகி ஒரு இடத்துக்குத்தானே போணும்  உன் தம்பிகள் இரண்டு பேர் இருக்கா ஞாபகம்  வச்சுக்க  உனக்கே படிப்புக்கு சிலவழிச்சுட்டா  அவாளுக்கு எங்க போறது ?’

    “என்னம்மா  நீ   ரமேஷுக்கு படிப்பே வரலை   சிவா  ஊரை சுத்தறான் .  ஆனா நான் எல்லாத்லேயும் முதலா இருந்தாலும் மேலே படிக்க விடமாட்டேங்கற அப்பா  நீங்களாவது சொல்லுங்கோ இந்த  அம்மாக்கு ‘

    ”   ஜானா செல்லம் அம்மா சொல்றது சரிதான் நீ உன் புக்காத்துக்க போனப்பறம்  மேலே படி இல்ல  ஸ்டேட்ஸ்க்குத்தான் போ

    இப்ப  உன் தம்பிகளத்தான்  பாக்கணும்  ‘

    “என்னப்பா  நீங்களுமா   …….. மகளிர் தினத்ல இப்படி  ஒரு பதிலா ?  நம் நாடு மாறவே போறதில்ல   இந்த பெண்கள் விஷயத்ல ,,,,,,,

    காட்சி  6     ” அன்பு சகோதரிகளே   இன்று மகளிர் தினம்   மார்ச் எட்டாம் தேதி  .   பெண்கள் சுதந்திரத்திற்கு இன்னும் நாம் போராட வேண்டும்

    ஆண்களுக்கு சரிசமமாக நாம் எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டு அவர்களைவிட ஒரு படி மேலேயே வளர்ந்திருக்கிறோம்
    ஆனாலும்  நமக்கு ஒரு  ரெகக்னிஷன்  கிடைப்பதில்லை  வீட்டிலும் அடிமைப்போல் தான்  வாழ்க்கை இருக்கிறது

    டிரீங்க  டிரீங்  ……….. ” ஒரு நிமிடம்    இதோ வந்துவிட்டேன்

    ” என்னங்க  என்ன வேணும்  இந்த நேரத்தல கூப்படறீங்க நான் மேடைல பேசிண்டிருகேங்க ‘

    “போதும் பேசினது  வீட்டுக்கு வந்து தொலை , ஒம் பொண்ணு  முத்தரசி ஙொய் ஙொய்ன்னு  அழறது என்னால பாத்துக்க முடியாது

    “ஏன் சீட்டு விளையாட போணுமா என்ன…….  வழக்கம்போல ‘

    ‘ நீ முதல்ல வீட்டிற்கு வா  அப்பறம் பேசலாம் ‘

    “மன்னித்துக்கொல்ளுங்கள்  அன்பு சகோதரிகளே  நான் என்ன சொன்னேன்  ஆம் நாம் மகளிர் சுதந்திரத்திற்காக போராட வேண்டும்

    தைரியமாக  சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டும் தன் காலிலிலேயே நிற்க கற்றுக்கொள்ள வேண்டும்   .  மகளிர் தினத்திற்காக  என் நல் வாழ்த்துகள்

    அவசரமாக நான் வீடு போக வேண்டும் . நன்றி வணக்கம்

    Share
  • நான் கண்ட முருக பக்தர்!..

    விசாலம்                                                                                                                                    

    பல வருடங்களுக்கு முன் ……… பம்பாயில் தாதர் அருகில் இருக்கும் என் வீட்டிற்கு பள்ளியிலிருந்து வந்துக்கொண்டிருந்தேன் . என் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பார்க்கிலிருந்து மிக அழகான காதிற்கு இனிமையான இசை, தென்றலில் மிதந்து என்னை அப்படியே ஸ்தம்பிக்க வைத்தது .கூடவே ஹார்மோனியத்தின் ஒலியும் அந்த இசையுடன் சேர்ந்து மெருகூட்டின .  நடு நடுவே முருகா என்ற நாமமும் கேட்டது . அந்தப்பார்க் மிகவும் சிறியது . தாதர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிறது . அந்த இடம் அநேகமாக மராட்டியர்கள் வசித்து வரும் இடம் . அங்கு தான் பிரகாஷ் படுகோனே . முன்னாள் கிரிகெட் வீரர் தாமானே. மெர்ச்சன்ட், உலகப்புகழ் பின்னணி பாடகி , லதாமங்கேஷ்கர் ஹிந்தி கிளாசிகல் பாடகர் திரு நாரயண் வியாஸ் போன்றவர்கள் வசித்து வந்தார்கள் . இப்போதும் அவர்கள் வீடுகள் அங்கு இருக்கின்றன ஆனால் அவர்கள் அங்கு இல்லை . அங்கு எல்லோருமே மராட்டியர்கள் தான் .இந்த நிலையில் முருகனின் பாடல்கள் அந்த இடத்தில் அமிருதமாக பொழிய எனக்கு வியப்பு ஏற்பட்டது.

    PITHUKULI_jpg_2623_2623536f

    மாதுங்கா என்றால் சென்னையில் இருக்கும் தி.நகர் மாதிரி….. ஆனால் தாதர் அப்படி இல்லை . அந்த இசையைக் கேட்க நானும் அந்த இடம் சென்றேன். அங்கிருந்தவர் எல்லோரும் வேஷ்டி சட்டையுடன் நெற்றியில் விபூதி தரித்து பயபக்தியுடன் ஒருவரைச்சுற்றி நின்று கொண்டிருந்தனர் அந்த ஒருவர் தாடியுடன் இருந்தார் தலையில் சீரடி பாபாவைப்போல் மஞ்சள் துணி கட்டியிருந்தார். முகத்தில் தமிழ்வாணன் போல் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டிருந்தார் . கொஞ்சம் தூரத்தில் ஒரு கூஜாவுடன் ஒருவர் நின்றிருந்தார் . அவர் அருகில் சென்றேன்

    “இங்கு என்ன நடக்கிறது .? இங்கு அமர்ந்து பாடுபவர் யார் ?”

    “இவரை உங்களுக்குத்தெரியாதா? இவர் பெரிய முருக பக்தர் . இவர் போக இருந்த ரயில் மூன்று மணி நேரம் லேட் அதனால் இந்த கார்டனில் அமர்ந்து இருக்கிறார்கள் . சில பக்தர்களின் வேண்டுகோளின்படி பாடிக்கொண்டிருக்கிறார்.

    ” இவர் பேரென்ன ?’

    ” இவரை எல்லோருக்குமே தெரியும் இவர்தான் பித்துக்குளி முருகதாஸ் “

    ” ஆ ..  அவரா இவர் .. இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன் . இப்போதுதான் நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது”

    என் வீடு மிக அருகில் இருந்ததால் வேகமாக வீட்டிற்கு வந்தேன் என் பள்ளிப் புத்தகங்களை வைத்துவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு திரும்பவும் அந்த இடத்திற்கு வந்து புல்லில் அமர்ந்தேன் ஆஹா இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை

    கந்தா, குமரா, வடிவேலா என்று பல பாடல்கள் , பின் திருப்புகழ் என்று அருவி கொட்டுவது போல் அவருக்குரிய பாணியில் பாடிக்கொண்டிருந்தார் அன்றுதான் அவரை முதன் முதலாக பார்த்தேன். அதன் பின் பல தடவைகள் மாதுங்கா பஜனைசமாஜுக்கு வருகை தரும்போதெல்லாம் நான் போவது வழக்கம் பின்னர் அவரைப்பற்றி பல விஷயங்கள் நான் தெரிந்துக்கொண்டேன்

    ஆமாம் ! அவர் பெயர் பித்துக்குளி முருகதாஸ் என்று வந்த காரணம் என்ன ?

    பிரும்மானந்த பரதேசி என்ற ஒரு சித்தர் இருந்தார் , அவர் உடை ஒன்றும் அணியமாட்டார் ஆனால் அவரது உடலை அவரது தலை முடி மூடி மறைத்தது .அத்தனை நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் . அவரது வயதைப்பற்றி பலர் பலவிதமாகச்சொல்லி வந்தனர் . சிலர் நானூறு வயது என்றும் கூறினர் . ஒரு தடவை அவர் கோயம்பத்தூரில் நடந்துக்கொண்டிருக்க திரு முருகதாஸ் ஒன்பது வயது பையன் .. தெருவில் கல்லை எரிந்து வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான் . அந்த நேரம் நிர்வாணமாக பிரும்மானந்தர் அந்தப்பக்கம்வந்தார் . அவரை இந்த நிலையில் பார்த்ததும் “சே என்ன இவர் இப்படி வருகிறாரே என்று நினைத்து ஒரு பயத்தில் கல்லை அவர் மேல் வீசினான். அவ்வளவுதான் அவர் நெற்றியில் அந்தக்கல் பட்டு பொல பொலவென இரத்தம் வழியத்தொடங்கியது .

    “டேய் பித்துக்குளி” ! நீயும் என்னைப்போல் ஒரு நாள் ஊர் சுத்தி முருகன் பெயரைச்சொல்லி முன்னுக்கு வரக்கூடியவன் .நீ ஏண்டா இப்படி செய்தே?’ என்றபடி தன் நெற்றியில் கையை வைத்தார் . என்ன ஆச்சரியம் .உடனே இரத்தம் வடிந்தது நின்று விட்டது . அன்று அவர் மேல் அளவுகடந்த பக்தி ஏற்பட்டு அவர் அழைத்த பெயரான “பித்துக்குளியையே” தன் பெயருடன் சேர்த்துக்கொண்டு பித்துக்குளி முருகதாஸ் ஆனார் . முருகதாஸின் இயற்பெயர் திரு. சுப்பிரமண்யம் அவரது தாயின் பெயர் அலமேலு தந்தை திரு சுந்தரமய்யர் .. நடுத்தர குடும்பமாக இருந்தாலும் இவர் தானம் செய்வதை மிக முக்கியமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார் கேட்பவர்க்கெல்லாம் இல்லையென்று சொல்லாமல் தண்ணீர் மற்றும் உணவு வாரி வழங்குவார். ஒரு சிறந்த முருகபக்தர். அவருக்குப் பிறந்த அவரது மகனோ ஒரு முருகபக்தன் மட்டுமில்லாமல் முருகதாசனாகவும் ஆகிவிட்டார். ஒரு எட்டு வகுப்பு வரைதான் படித்திருந்த அவர் பின்னால் உலக முழுவதும் சுற்றித் தமிழும், தமிழ்ப்பாடல்களையும் பரப்பி சரவணபவ அலைகளை வீச வைத்தது எத்தனைப் பெரிய சாதனை! அவரது எட்டு வயதிலேயே பல பக்திப் பாடல்கள் அருவி போல் கொட்ட ஆரம்பித்தன, அவரது பதினைந்தாம் வயதில் எங்கும் வந்தேமாதரம் ஒலி நிரம்ப அவர் மனதும் நாட்டிற்கு எதாவது செய்யவேண்டும் என்று தீர்மானிக்க சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். வீட்டிலிருந்தபடி இது செய்ய முடியாது என தீர்மனித்து வீட்டை விட்டு வெளியேறினார், பிரிட்டிஷ் போலீஸ் அவரைப்பிடித்து செம அடி அடித்தது அந்த அடியில் தான் அவருக்கு ஒரு கண் சேதமாகி பார்வை போனது என்று சிலர் சொன்னார்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் அவர் கிட்டிப்பிள்ளை விளையாட்டின் போது அந்தக் கில்லித் தண்டு கண்ணில் தெரித்து ஒரு கண்ணில் அடிப்பட்டதாக என் தந்தை எனக்குச் சொல்லியிருக்கிறார். இரண்டுமே சரியாக இருக்கலாம் .

    இதனால் தான் அவர் முகத்தை கருப்பு கண்ணாடி அலங்கரித்தது .பின்னர் பெங்களூரு சிறையிலும் அந்தப் போராட்டத்தின் போது கைதியாகி அடைக்கப்பட்டார். ஒரு ஆறுமாதங்கள் கழிந்த பின் வெளியே வந்து முழு ஆன்மீகத்தில் ஈடுபட்டார். அடிக்கடி பழனி குகையிலும் , திருவண்ணாமலை குகையிலும் தியானம் செய்ய ஆரம்பித்தார்  ஒரு சன்யாசியாக.

    வட இந்தியாவுக்குப் பாத யாத்திரையாக பல முக்கிய க்ஷேத்திரங்களுக்குப்போய் தன் ஆன்மீக அறிவை வளர்த்துக்கொண்டார் , ஒரு சமயம் சரஸ்வதி நதியின் கரையில் அமர்ந்து தியானம் செய்ய அவரது உள்மனம் அவரை அழைத்தது ” முருகதாஸ் .. நீ தமிழ் நாட்டிற்கு திரும்பிச்செல். உனக்கு அங்கு பல சேவைகள் செய்ய வாய்ப்பு காத்திருக்கிறது , ஒரு பெரிய இசை மேதையாக பக்தியைப் பரப்பு ” இந்த உள்குரலைக்கேட்டு முருகனது ஆணையாக இதை பாவித்து உடனே தமிழ் நாட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ., அவரது இசை பழனி மலையில் எதிரொலிக்க திரு பிரும்மானந்த பரதேசி சுவாமிகள் இதைக்கேட்டு அவரை சிஷ்யராக ஏற்று பல பாடல்களைக் கற்றுக்கொடுத்தார் . அவரைத்தவிர ஆனந்தாஸ்ரமத்தின் தலைவர் சுவாமி ராமதாசர் கேரளாவில் இருக்கும் கஞ்சன்கோடிலிருந்து வந்து இவரது இசையில் மெய்மறந்து அவருக்கு “முருகதாஸ்” என்ற பட்டமும் கொடுத்தார் . அத்துடன் பிரும்மானந்த யோகீஸ்வரர் கொடுத்த ‘பித்துக்குளி’ என்ற பெயரையும் இவர் தன் பெயருடன் சேர்த்துக்கொண்டார்.

    images (2)

    இவர் அடிக்கடி விரதங்கள் அனுஷ்டிப்பார் அதில் சஷ்டி, கிருத்திகை, ஏகாதசி, சதுர்த்தி என்று பல மாறி மாறி வரும் இந்த விரதத்துடன் மௌன விரதமும் அடிக்கடி கடைபிடிப்பார். இவர் கன்யாகுமரிலியிலிருந்து பத்ரி கேதார்நாத் வரை பல புண்ணிய தலங்களைத் தரிசித்திருக்கிறார் இவருக்குக் கன்யாகுமரி கோயில் மிகவும் பிடித்த ஒன்று . கிட்டத்தட்ட தன் ஐம்பத்தெட்டாவது வயதில் அவர் திருமணம் செய்து கொள்ள அந்தத் தேவியின் அருளைக் கேட்டபோது பகவதி தேவியும் தன் மேலிருந்த பூவை கீழே போட்டு சம்மதம் தெரிவித்தாளாம் . அதன் படி அவருக்கு வந்த மனைவியின் பெயரும் தேவி சரோஜா .. இந்த தேவி சரோஜா பித்துக்குளி முருகதாஸின் இசையிலும் அவரது முருக பக்தியிலும் மனதைப் பறி கொடுத்து அவரைத் தன் மணாளனாக ஆக்கிக்கொள்ள விரும்பினார். இதில் அவருக்குச் சேவை செய்ய வேண்டும், அவருடன் சேர்ந்து முருகனது பாடல்களைப் பாட வேண்டும் என்ற நோக்கமே அந்தப் பெண்மணிக்கு இருந்ததாம் . கன்யாகுமரி அம்மனும் பூவை அளித்து சம்மதம் தெரிவித்ததால் பித்துக்குளி முருகதாஸ் அவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணம் ஆனபின் ஒரு தடவை அவர் தன் மனைவியுடன் மும்பைக்கு வருகை தந்தார் . அப்பப்பா .. அப்போது நடந்த சம்பவம் . இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது . ஒரு சன்யாசியாகப் போனவர் எப்படி இந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பலர் அவர் முன் மிகவும் மோசமாக கடுப்பைக் காட்டினர் மாதுங்காவில் அவர் பஜன் நடக்கவிடாமல் கற்களை வீசினர். பின்னால் அமர்ந்திருக்கும் சிலருக்கு இது தெரிந்து மெள்ள அவரைப் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன், அவர் திருமணம் குறித்து ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி எடுத்தபோது அவர் சொன்னது .”அடியேன் வயது ஏற ஏற என் உடல் தொல்லை தரும் நேரத்தில் என்னைப் பார்த்துக்கொள்ள என் தாயார் தான் இருந்தார் .அவர் மிகவும் பாசமானவர் . அவருக்கு நான் சேவை செய்யவேண்டுமே தவிர அவர் எனக்கு செய்வதை அடியேன் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? சில கடமைகள் மனைவிதான் செய்ய முடியும். கணவர் நோய்வாய்பட்டால் கூட இருந்து பார்த்துக்கொள்வது அவள்தான். அடியேனின் மனைவி தேவி சரோஜா மிகவும் அன்பைப் பொழிபவர் . கடவுளின் சித்திரங்கள் மிக அழகாக வரைவார். எல்லாம் அந்த முருகனின் விருப்பம் ” ஆம் உண்மைதான் , சிறுவயதை விட வயதான பின்தான் எல்லோருக்கும் ஒரு துணை மனம் விட்டுப் பேசவோ , அல்லது அன்பை பரஸ்பரம் பரமாறிக்கவோ  தேவைப்படுகிறது

    இவருக்கு அமைந்த மனைவி கடவுள் பக்தி மிகுந்தவர் . அவர் வீட்டில் அம்பாள் பூஜை ஒவ்வொரு வெள்ளிக் கிழமைக்கும் நடக்கும் . அதுவும் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியபடி இச்சா சக்தி , ஞானசக்தி , கிரியா சக்திக்கு பூஜை நடக்கும் . பலர் இந்தப் பூஜையைப் பார்க்க வருவார்கள். இவரைப் பார்க்க விரும்புபவர்கள் மாட்டுப் பொங்கலன்று மருதமலை முருகனை தரிசிக்கப் போனால் இவரையும் பார்க்கலாம். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இவர் இந்த மருதமலைக் கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார், இவருடைய முருகனும் இவருக்குப் பல அதிசயங்களைச் செய்திருக்கிறான். ஒரு சமயம் இவருடைய மற்றொரு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு வலி ஏற்பட்டதாம். ஏற்கனவே தன் ஒரு கண் தெரியாமல் போனதால் இந்தக் கண்ணிற்கும் ஏதாவது வந்துவிடப் போகிறதே என்று சுவாமி ராம்தாஸ் ஆச்ரம பஜனுக்குப் போனார் அங்கு முருகனின் பல பாடல்கள் கேட்டு தன்னை மறந்தார் . அப்போது ஒரு மூதாட்டிக்கு அருள் வந்து அவரிடம் வந்தாள் . அவரது வலது கண்ணைத் தடவி விட்டாள் ” அப்பா முருகதாஸ் இந்தக்கண்ணுக்கு ஆயுசு கெட்டி .. நீ நன்றாக இருப்பாய்” என்றாள். மற்றொரு சமயம் வட இந்தியாவில் பாதயாத்திரை போயிருந்த போது ஒரு நாள் இரவு எட்டுமணி மேல் இருக்கும் . மனித நடமாட்டம் இல்லாத ஒரு இடம் . பசி எடுத்தது . அங்கு ஒரு சின்ன வீடு தென்பட்டது. உள்ளே ஒரு பெண்மணி நின்றது தெரிந்தது . வீட்டு வாசலுக்குப் போய் “அம்மா சாப்பிட எதாவது இருக்கிறதா?” என்று கேட்க அந்த அம்மாள் ஒரு வாழை இலை போட்டு சுடச்சுட சாதம் பரிமாறினார் . பின்னர் ” மகனே இந்தத் திண்ணையில் ஓய்வுஎடுத்துக்கொண்டபின் நாளை யாத்திரை தொடருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். மறுநாள் காலை .ஆதவனின் கிரணங்கள் ஒளிபட திண்ணையிலிருந்து எழுந்து கதவைத்தட்ட அது தானாகவே திறந்து கொண்டது. உள்ளே அறைகள் ஒன்றுமில்லாமல் வெட்டவெளியாக இருந்ததாம் . வந்தது அந்த முருகனின் தாயல்லவா . அப்படியே கண் கலங்கி தன்னை மறந்து நின்றார் முருகதாஸ் . பிருந்தாவனத்தில் நடந்த ஒரு சம்பவம் . யமுனை நதிக்கரையில் உள்ள பிருந்தாவனில் ஒருவர் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார் . கண்ணன் விளையாடிய இடமல்லாவா? கிருஷ்ணலீலா சொல்லிக்கொண்டிருந்தார் , ‘கண்ணன் வந்தான் மெள்ள பூனைப்போல் நடந்து உறியின் மேல் ஒரு கண் வைத்து கல்லடித்தான் பின் வெண்ணெயைத் திருடி உண்டான் .பின் எல்லா கோபிச்சிறுவர்களும் கேட்க தன் கையை வீசிக்கொடுத்தான் ” என்றபடி அவர் தன் வெறுங்கையை வீசினார் ..

    கூட்டத்தில் அமர்ந்திருந்த அத்தனைப்பேர் வாயிலும் வெண்ணெய் விழுந்தது. ஒரு மறக்க முடியாத சம்பவமாக பித்துக்குளி முருகதாஸ் உணர்ச்சி வசப்பட்டு கூறினார். இவருக்கு மலேசியாவில் இருக்கும் பத்துமலை முருகன் ரொம்பவும் பிடித்த இடமாம். வாழ்க்கையில் பலராலும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் . ஊனமுற்றவர்களுக்கும் பலவிதத்திலும் சேவை செய்து வந்திருக்கிறார் இவர். தை பூசத்திலே இவரது பிறந்த நாள் வருவதினால் அன்று எல்லோருக்கும் அன்னதானம் செய்து வருகிறார் . அவரது மனைவி தேவி சரோஜா இந்த உலகத்தில் இல்லாதது மனதுக்கு கனமாகத்தான் இருக்கிறது . தவிர ஶ்ரீ ஜ்யோதி மாயாதேவி டிரஸ்டு ஒன்றும் சேவை செய்யும் நோக்கத்துடன் நடத்தி வருகிறார் என்று தெரிய வந்தது . நான் அடிக்கடி ரசித்து கேட்கும் இவரது பாடல்கள். அம்மா தாயே கலைவாணி . அலைபாயுதே மகர குண்டலம் ஸ்வாகதம் செந்தூர் முருகன்  பால் வடியும் முகம் …………..

    இந்த முருக பக்தரைப்பற்றி எழுதியதை ஒரு இரண்டு பேர் படித்தால் கூட நான் எழுதிய பலனும் மனத் திருப்தியும் எனக்கு ஏற்படும்.

    Share
  • பாரதி கண்ட கோதை

    விசாலம்

    ஒரு  நாள் மஹா கவி பாரதியார் திருவல்லிக்கேணி  ரோட்டில்  நடந்துக் கொண்டிருக்க ஒரு அருமையான  அவர் இயற்றியப் பாடல் ஒன்று காற்றினில் மிதந்து  வந்தது.

    “ஜயபேரிகைக் கொட்டடா”  …… ஒரு இனிமையானக் குரல்  அவரை இழுத்தது . மெய் மறந்து நின்றார் அவர் . அப்போது  அவர் சுதேசமித்திரனின்  துணை ஆசிரியராக இருந்தார். போகும் போது திரு வெங்கடாசாரியாரின்  வீட்டுத் தெரு வழியாக்கத்தான் போவார் ,ஆம்  அந்தப்பாடலைப் பாடியவர்  ஒரு சிறு  பெண், பெயர் கோதை நாயகி, பாரதியாரின் வீட்டிலும்  அவரது இரு பெண்கள்  { தங்கம்மாள் சகுந்தலா} இருந்தனர், கோதை பாடியப் பாட்டில் மயங்கி கோதை வீடு நுழைந்து அந்தப்பெண்ணை வாழ்த்தினார். அன்றைய தினத்திலிருந்து பாரதியார் தாம் புனைந்த பாடல்களைத் தருவதும்  கோதை  அதைப் பாடிக்காட்டுவதும்  வழக்கமாயிற்று . ஒரு  நாள் கோதையை பாரதி தன் வீடு அழைத்தார். கோதை  மிகச் சங்கோசத்துடன்  தலையைக் குனிந்துக் கொண்டாள் ஆனால்  பிற்காலத்தில் அவர்  ஒரு பெரிய நாடக ஆசிரியர்  எழுத்தாளர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்  என்று  பல திசைகளில்  முன் நிலையில் நின்றவர், நம் மனதில்  அவர்  பெயர் பதிந்து விட்டது     அவர்தான் திருமதி  வை. மு கோதை நாயகி அம்மாள.

    திருமதி வை மு கோதை நாயகியை எனக்கு நன்றாக தெரிய வைத்தது என் அத்தைதான் . அவர்   இவருடைய பல நாவல்கள் புத்தகாலயத்திலிருந்து  எடுத்து வருவார். .ஆனால் கண் பார்வை குன்றியதலால்  அவர் ப்டுத்தி ருக்க அவர் தலைமாட்டில் அமர்ந்து நான் தான்  அவருக்குக் கதைகளைப் படித்துச் சொல்லுவேன் .அப்படி படித்தே  அவருடைய எழுத்தும்   கற்பனையும் என்னை மிகவும் கவர்ந்தன . அவருடைய பல நாவல்கள் சினிமாவாக வந்து சக்கைப்போடு போட்டு அவருக்கு விருதுகளும் வங்கித்தந்துள்ளன  .அதில் எனக்கு மிகவும் பிடித்தது “சித்தி’  திருமதி பத்மினி நடித்த படம்.
    பாரதியாரைப் போலவே  ஆவேசமாக  வீரமாகப்    பாடும்  ஒருவர்  இருந்தார் ,அவர் பெயர் திரு சங்கு சுப்பிர மண்யம் ” சுதந்திரச்சங்கு”  என்ற பத்திரிக்கையை நடத்தி வந்ததால் அவரை எல்லோரும் ” சங்கு  சுப்பிர மணியம்”  என்று அழைத்தனர். பாரதியாரின் பாடல்களை   அந்தக்காலத்தில்   பரப்பிய புகழ் திருமதி  கோதை நாயகிக்கும்    சங்கு சுபிரமண்யத்திற்கும்   சேரும் ….. கோதைக்கு சுமார் பத்து  வருடம் இருக்கும்    அப்போதே
    அவருக்கு  பாலவிவாஹம்  நடந்து விட்டது  அவரது  கணவர்  திரு பார்த்தசாரதி, அவரை இசைக்   கச்சேரிக்கு அழைத்துச் செல்வார் அந்தக்காலத்தில்  வைதீகக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் வீட்டை விட்டு  வெளியே கச்சேரி போன்றவைகளுக்குப்  போகமாட்டார்கள். ஆனால் கோதைநாயகியின் கணவர்  இளமையிலேயே புரட்சி , சீர்த்திருத்தம் என்ற முற்போக்குக் கொண்டிருந்தவர். அவர் தன் மனைவியை  நன்கு  பாட வைத்தார். ஒரு நாள்  மேடைக் கச்சேரியில்  தன்னை மறந்து அவர்  “மருவேறேதிக் கெவரையா  ராமா” என்று பாட  முதல் வரிசையில்  உட்கார்ந்திருந்த  ஒரு வித்துவான் அகமகிழ்ந்து உள்ளே வந்து வாழ்த்திவிட்டுப் போனார் .  அவர் தான் பாலக்காடு  அனந்தராம பாகவதர் பின்னால்  கோதையின்  குருவானார்  திருமதி கோதை நாயகியின்  இசைப் பயணம் இப்படித்தான்  ஆரம்பித்தது .கவிக்குயில் சரோஜினி தேவி அவர்கள்  அடிக்கடி   கோதை வீட்டுக்குச் செல்வாராம். அவரைச் செல்லமாக அணைத்துக்கொண்டு   அவர் விரும்பும்   பாடல்களெல்லாம் கேட்டு அக மகிழ்வாராம்  அவர்  மிகவும்  விரும்பியப் பாடல் “பாரத சமுதாயம்  வாழ்கவே …. “வந்தே மாதரம்   என்போம் …….. “சென்னை  வானொலி  நிலயம் 1938ல்  தொடங்கப்பட்டது . அதன்  திறப்பு   விழாவில் திரு  ராஜாஜி அவர்கனின் முன்னிலையில்  பாடிய பெருமை திருமதி  வை மு கோதை நாயகிக்குக்  கிடைத்தது. ஆண்டுதோறும் பாரதியாரின் நினைவு நாளில் கோதைநாயகியின்  பாட்டு  வானொலியில் நிச்சயம் ஒலிக்கும் ,இதன் நடுவே  ” அன்பின் சிகரம் “என்ற நாடகம்  எழுதி  அவரே  நடித்தார் . டைரக்டரும்  அவரே.  அவர்  அறிவு  மேலும்  மேலும் வளர்ந்தது . அவர்  மாமியார் .அந்தக்காலத்தில் “கன்னையா கம்பெனி ” என்று ஒரு நாடகக் கம்பெனி  இருந்தது, அதில் தான்  திருமதி கேபி சுந்தராம்பபள்  திரு கிட்டப்பா போன்றவர் இருந்து நடித்தனர். திரு,பார்த்தசாரதி தன் மனனவியை பல   நாடகங்களுக்கும்      அழைத்துச் சென்றதின் பலனாக கோதைக்கு  கற்பனாசக்தி   ஊற்றுப்போல் பெருக்கெடுத்தது. அவரின்   முதல்  நாடகம் “இந்திரமோகனா “வெளிவந்து அதற்கு  நல்ல வரவேற்பும்  கிடைத்தது.

    இவரைப் பற்றிச் சொன்னால்  எழுதி கொண்டே போகலாம். இவரது தாயார்  இவருக்கு மிகவும் பக்க பலமாக இருந்தார்

    ஆரம்பத்தில்  கோதைக்கு எழுத வாரத நிலையில்   கோதை  தன் கற்பனையில் கதைசொல்ல அவரது  தாயார்  அத்தனையும் எழுதிவிடுவாராம்   அவர் சொல்லி திருமதி பட்டம்மாள் எழுதிய  முதல் நாவல்   “இந்திரமோஹனா ” இவர் கதை அல்லது நாவல்களில்  தேசப்பக்தி  . விதவை திருமணம் , மதுவிலக்கு , ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை எல்லாம்  மிகவும் அழகாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கும்   இவர்   இயல், இசை  ,நாடகம்  என்று எல்லா இடத்திலும்    முதல் இடம்  பெற்றார் தேசத்தொண்டிலும்  ஈடுப்பட்டு  ஒளிவீசினார்,,இராஜாஜி அவர்கள் மேடையில் பேசும்  போது  இவரையும் அழைத்து
    பேசச்சொல்லுவாராம் .. நாட்டுக்காக   ஜெயிலுக்கும் சென்றிருக்கிறார். அங்கிருந்த போது கைதிகளிடம் பேசி  “சோதனையின் கொடுமை ”
    எழுதினார் துப்பறியும் நாவலையும் இவர் விட்டுவைக்கவில்லை  துப்பறியும் நாவலை  எழுதிய முதற்பெண்மணி இவர் எனலாம் தெலுங்கு மொழியையும் கற்றுக்கொண்டு  பேச ஆரம்பித்தார்

    நாட்டுப்பற்று மிக  கதரையே  உடையாகக்  கொண்டாள்,  விடுதலைப்போரில் பங்குப்பெற்றுச்  சிறையும்  சென்றாள், இன்னிசைக் க்லைஞர், மேடைப்பேச்சினால் நாட்டின் விடுதலை உணர்வு வீசிய பெண்மணி, பெண்கள் விடுதலைப் பற்றி முழக்கம்  செய்து அதன்படி நடத்தியும்   காட்டினாள்,
    “வைஷ்ணவ ஜனதோ “வுக்கு  தமிழ் உருவம்  தந்தாள்,  மாதப்பத்திரிக்கை “நந்தவன்ம்  தொடங்கியப்  புதுமைப் பெண், “கலா ரத்னம் “என்ற  பட்டம்  பெற்றவர்.

    பெண்கள் வெளியே வருவதே  தவறு என்ற காலக்கட்டத்தில் சமூகக் கட்டுப்பாட்டை தவிர்த்து,  உடைத்து தான் நன்கு படித்து  வெள்யில் வந்து   மேடை ஏறிநாடகங்களில் நடித்து  இசைக்கச்சேரிகளும் செய்து தமிழ்ப்பெண்மணிகளிலேயே ஒரு சிறந்த இரத்னமாக விளங்கினார்ர்  திருமதி  வை. மு கோ.
    இவரது  நாவல் எளிமையுடன்  மனதைத் தொடும் . இலக்ண்த்திற்கு முக்கியத்வம்  இல்லை  , எலலா நாவல்களும்  ஆத்மாவைத் தொடும் . சொற்களில்  ஒரு ஆழம்  இருக்கும் , நிரம்பச் சுவை,  இருக்கும் காதல் இருக்கும் ஆன்மீகமும் இருக்கும்  நாவலை ஒரு முறை எடுத்துவிட்டால்  கீழே வைக்கத் தோன்றாது அவ்வளவு  விறுவிருப்பு.

    அவருடைய் ஒரே மகன்  வை மு ஸ்ரீனிவாசன் திடீரென்று  காலமாக அந்தத் துயரம் தாங்காமல் ஜெகன் மோஹினி பத்திரிக்கையை நடத்த  இயலாமல்   அதை விட்டு வந்தார் ஆனாலும் உள்ளேத் துயரம்  அழுத்த உடல் நிலைக் குன்றிப்போனார் , 1960ஆண்டு இந்த பேரொளி அணைந்து விட்டது. இருபது வயதில் கையில்  எடுத்த பேனா கடைசிவரையிலும் துணை தந்தது , தேசிய நாயகி  ,,இன்னிசை நாயகி , நாடக நாயகி  நாவல் நாயகி எழுத்துலக நாயகி
    தெய்வ நாயகி ஆகி நம் அனைவர் மனத்திலும் நிறைந்திருக்கிறார் இவர்.

    படத்திற்கு நன்றி :

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88._%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF

    Share
  • ” நா ஜீவோ தாரா “

    விசாலம்

    ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும் அன்றைய தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றியப் பஞ்ச ரத்ன கீர்த்தனங்கள் பாடுவார்கள்.அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடக்கும் . அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்  இது  .அவர் தன் ஐந்து வயதிலிருந்தே ஸ்ரீராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார் சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார், ஒரு சமயம் அவ்ர் திருப்பதி கோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இடத்தில்ஒரே கூட்டம் , என்னவென்று விஜாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டான்  என்றுத் தெரிய  வந்தது அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி, குழந்தையுடன்  அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான்,  இருட்டிவிட்டது ஒரு ஆலயத்திற்குள்   சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான் ஆனால் அந்தக் கோவில் உள்ளேத் தாழிடப்பட்டிருந்தது என்ன செயவது  என்றுத் தெரியாமல் அங்கிருக்கும் மதில் மேல் ஏறி உள்ளேக் குதித்து பின் உள் இருக்கும் தாழ்ப்பாளைத் திறக்கலாம் என்று எண்ணி உள்ளே   குதித்தான்  அவ்வளவுதான்   டம்  என்றச் சத்தத்துடன் கிணற்றில்  விழுந்து விட்டான் நீரில் மூழ்கி  தத்தளித்து  செத்துப்போனன் ,.அவள் மனைவி வாசலில்  தன் கணவன்  இவ்வளவு நாழியாகியும்  வெளியில் வரவில்லையெ என்றுக் கவலையுடன் அழுது    ஊரைக் கூட்டினாள் /எல்லொரும் கோவில் உள்ளேத்தேடி  பின் அவனைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.     அவன் கழுத்தில்  துளசி மாலை
    இருந்தது  அவன் சிறந்த விஷ்ணு பக்தன் என்று   தெரிந்து, கொண்டார்

    “நா ஜீவோ தாரா” என்றுத் தெலுங்கில் ஒரு பாட்டு    அதாவது  அந்த மனிதனின்  உயிரைத் தந்துவிடு ராமா என்று உள்ளம் உருகிப் பாடினார்    தியாகராசர்      அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ,,,
    ,
    அவர்  பாடிய  பாடல்

    நாஜீவாதா ர நாநோமு ப லமா

    ராஜீவலோசந ராஜ ராஜ சிரோமணி

    நா சூபு ப்ரகாசமா

    நா நாஸிகா பரிமளமா

    நா ஜபவர்ண  ரூபமா

    நாது பூஜா ஸூமமா த்யாக ராஜநுத

    இதன்  பொருள்

    என்னுடைய ஜீவனுக்கு ஆதாரமாயுள்ளவனே

     நான் பார்க்காத ஒளியாய் உள்ளவனே
    நான் என்னுடைய சுவாசத்தினால்  உன்னுடைய சுகந்தத்தை முகர்கிறேன்
    நான்  ஜபிக்கும்   அக்ஷரத்தின் ரூபமாய் உள்ளவனே ,
    என்னுடைய பூசையின் புஷ்பமாய் உள்ளவனே
    தியாகராஜனால் துதிக்கப்பட்டவனே …..

    பாகவதத்தில்  துருவசரித்திரத்தில்  துருவனுக்கு மஹாவிஷ்ணு பிரத்த்யட்சமான்வுடன்  ஒருஸ்லோகம் வரும் அதன் பொருள் இந்தப்பாட்டுப்போல் தான் இருக்கும்

    ” எவர்  என்னுள் பிரவேசித்து  தூங்கிக்கொண்டிருந்த வாக்கு கை கால்  காது கண்கள் ,தேகம் முதலியவைகளைத் தன் சக்தியினால்
    ஜீவிக்குமாறு செய்தாரோ அந்த மஹாபுருஷனான மஹாவிஷ்ணுவை   நமஸ்கரிக்கிறேன்

    ஸ்லோகம்

    யோந்த பிரவிக்ய மம வாசாமிமாம் ப்ரஸிப்தம்
    ஸஞ்ஜீவயதியகில சக்திதர ஸ்வதாம்னா
    அன்யாம்ச ஹஸ்த சரணா ஸ்ரவண த்வகாதீன
    பிராணான் நமோ பகவதே புருஷாய துப்யம் ‘

    இந்தப்பாட்டிலும் ஸ்ரீ தியாகராஜர் ஆரம்பத்திலேயே “என்னுடைய ஜிவனுக்கு ஆதாரமானவனே “ என்கிறார் இதில் “அஹம் பிரும்மாஸ்மி “என்ற தத்துவம்  சொல்லி அந்த இறந்தவன் ஜீவனுக்கும் நீதான் ஆதாரம் என்று சொல்லாமல் சொல்லி பாடுகிறார் ……. கீதையில்
    பத்தாவது அத்தியாயம்  20 ஸ்லோகத்திலும் இது சொல்லப்பட்டிருக்கிறது  என்று தெரிந்துகொண்டேன்

    அவருடைய பாடலிலும்   “நா ஜீவோ தாரா”   என்பது இதைக்குறிக்கிறது என  நினைக்கிறேன்

    அந்த மனிதனின்  உயிரைத் தந்துவிடு ராமா  என்ற  பொருள்  பட பாடிய பாடலால் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ……   “ராம நாமம்” ஒரு சிறந்த  மந்திரம்  இதை எப்போதும் ஜபிக்கலாம் ப்டுக்கையிலும்  ஜபிக்கலாம்   அதன் சக்தியே  தனி வாருங்கள்  நாமும் ராம  நாமம்    சொல்லலாமே !

    படத்திற்கு நன்றி:

    http://devotionalonly.com/wp-content/uploads/2010/04/sri-ramchandraji-ki-jai.jpg

    Share
  • ‘குடியரசு தின நினைவுகள்’

    விசாலம்

    என் தந்தையின் டைரியிலிருந்து

    குடியரசு தினம் ஜனவரி 26 — 1950

    என் தந்தையின் டைரியில் முதல் குடியரசு தினம் கொண்டாடிய குறிப்பு இருந்தது தில்லியில் நடந்த நிகழ்வும் சென்னையில் நடந்த நிகழ்வும் இருந்தன , சென்னையில் நடந்ததை எழுதுகிறேன் குடியரசுதினத்தை முன்னிட்டு 8000 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர் மாலை ஐந்து மணிக்கு சென்னை கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் விழா நடக்க இருந்தது பகல் 2 மணியிலிருந்தே கூட்டம் சேர ஆரம்பித்து விட்டது சுமார் இரண்டு இலட்சம் இருக்கலாம்.திடீரென்று நிசப்தம் ,,,, கோச்சு வண்டியின் சப்தம் ஆம் கவர்னர் தம்பதி கோச்சில் ஸ்டேடியத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் நெருக்கமாக இரு குதிரைகள் ராஜ நடைப் போட்டு அவரது கோச்சுடன் வந்துக்கொண்டிருந்தன அதில் ஒருவர் போலீஸ் உதவி கமிஷனர் திரு ஆர் எம் மகாதேவன் மற்றொருவர் சார்ஜெண்ட் மேஜர் லூயிஸ் ,,,,

    கவர்னரின் வரவேற்பு மிகப்பிரமாதமாக இருந்தது சென்னையின் முதன் மந்திரி பி எல் குமாரசாமி ராஜா ஓடி வந்து வரவேற்றார், போலீஸ் படையும் மரியாதைச் செலுத்தினர் அங்கு ஒரு மேடையில் தேசியக்கொடி தயாராக வைக்கப்பட்டிருந்தது கவர்னர் அங்குச் சென்று தேசியக்கொடியைப் பறக்கச் செய்தார் பின் அதற்கு மரியாதை அளித்தார். உடனே இராணுவப்படைகளும் மரியாதைச் செலுத்தின ,மாலையிலிருந்து இரவு வரை மெரினா கடற்கரையில் வாண வேடிக்கை கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக இருந்தது வனொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது காலையில் வந்தேமாதரம் பாடல் டீஅர் விஸ்வநாத சாஸ்திரிதொகுத்தது பின்மதுரை சோமசுந்தரம் கச்சேரி ,பின் டில்லியில் நடந்த குடியரசு விழாவின் நேர் முக வர்ணனை ,மாலை திருவெண்காடுபி சுப்பிரமண்யப்பிள்ளை நாதஸ்வரம் பின் குமாரசுவாமி ராஜாவின் குடியாட்சி சிறப்புறை , என் எஸ் கிருஷ்ணன ,டிஏ மதுரம் அவர்களின் “விந்தை மனிதன் ” இரவு திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்களின் கச்சேரி ,,,,, இத்துடன் வானொலி நிகழ்ச்சியும் முடிவடைந்தது ,,,,,,,, ஆஹா பழையகால என் தந்தை நினவுகளை நானும் மனதில் கொண்டுவந்து பார்க்கிறேன் இப்போது டிவியில் பல சானலகள் அதில் கச்சேரி என்பது மிக மிக குறைவு ,பல சினிமா கதாநாயகர்கள் நாயகிகள் வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் யாராவது தேசத்திற்கு உழைத்து எங்கேயோ ஒரு சின்ன வீட்டில் வாழ்ந்து வரும் சுதந்திர தியாகிகளைக் கண்டு பேட்டி எடுத்து டிவி முன் அழைத்து கௌரவிக்கலாமே ,இதே போல் அந்தக்காலத்தில் இருந்த கவிஞர் எழுத்தாளர் ,தியாகிகள் வீரர்கள் போன்றவர்களை அழைத்து அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளச்சொல்லாமே !…..                                                                                                                    என் இனிய ‘குடியரசு வாழ்த்துக்கள்’

    Share
  • எல்லோருக்கும் நம் இறைவன் !

    விசாலம்

    காக்கும் கடவுளான ஸ்ரீமகாவிஷ்ணு உலகசிருஷ்டியில் ஒரு பாரபட்சமின்றி அபயம் என்று வந்தவர்களைக் கைவிடாமல்  காப்பாற்றியிருக்கிறார் இதில் ஆறறிவு படைத்தவர்கள் மட்டுமல்லாது ஐந்தறிவு பிராணிகளுக்கும் தன் அருள் தந்து உயர்ந்த பதவியையும் அளித்திருக்கிறார்.

    ஸ்ரீராமர் கானகத்தில் இருந்த தருணத்தில் பலருக்கு இவரது அன்பும் அருளும் கிடைத்திருக்கிறது   ஒரு படகோட்டியான குகன் ராமர் ,சீதை இலட்சுமணர் மூவரையும்  மிகவும் அன்பொழிய வரவேற்று .உபசரித்து பின் கங்கையைக்கடக்கவும்  உதவி புரிந்தான். அவனை அப்படியே ஆலிங்கனம்  செய்துகொண்ட ராமர்  தன்னுடைய சகோதரானாகவும் ஏற்றுக்கொண்டார்

    அரக்கனின் மகனாகப்பிறந்த பிரஹ்லாதன் தன் ஒரே நாமமான “ஓம் நமோநாரயணாய “என்பதை விடாமல் பிடித்துக்கொண்டு அவனது தந்தை கொடுத்த அத்தனைக்கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு உயிர் பிழைத்தான்  மலை உச்சியிலிருந்து அவன் தள்ளப்பட்டவுடன் ஒடோடி வந்து தன்கைகளில் அவனை   ஏந்தியபடி காப்பாற்றினார் விஷ்ணு அடுத்ததாக யானையை ஹிரண்யகசிபு அனுப்ப   யானை தன் காலால்  அவனை மிதிக்க வந்தவுடன் பிரஹ்லாதனைக்கண்டு அருகில் வந்து அப்படியே  வணங்கிவிட்டு சென்றது கடைசியில்  விஷ்ணுவே நரசிம்மாவதாரம் எடுத்து அவனுக்கு  அருள் புரிந்தார்  தன் பக்தனுக்கு எதிரியாக நின்ற அரக்கனைக்கொன்றாலும் கடைசியில் மோட்சம் அளித்தார்

    கானகத்தில் ராமர் சீதாபிராட்டியின் மடியில் தலை வைத்துப்படுத்திருக்க அந்த நேரம் பார்த்து ஜயந்தன் காகம் உருவில் வந்து   சீதையின் மார்ப்பைக்கொத்தியது    ஸ்ரீராமர்  தன் மேல் இரத்தத்துளி சொட்டுவதைப்பார்த்து விழித்து  காகத்தின் செயலைப்பார்த்து கடுங்கோபம் கொண்டு தர்ப்பையில் பிரம்மாஸ்திரம்  ஜபித்து அதன் மேல் ஏவினார் .ஜயந்தன் உருவில் இருந்த காகம் உயிர்ப் பிச்சைகேட்டு  பிரும்மா ,விஷ்ணு சிவன் எல்லோரிடமும் போக  ஸ்ரீராமர் விட்ட அஸ்திரத்தை   அவர்கள் தடுத்து நிறுத்த  முடியாதென்றும்  அதனால் ஸ்ரீராமரிடமே போய் மன்னிப்புக்கேட்கும்படி  சொல்ல  காகம் திரும்பவும் ஸ்ரீராமரிடமே வந்து அவர் பாதங்களில் விழுந்தது  பரந்தாமனும்  காகத்தை மன்னித்து உயிர்ப்பிச்சை அளித்தார் .

    இப்போது பார்த்தசாரதியாக வந்த கிருஷ்ணனைப்பார்க்கலாம்  மஹாபாரதத்தில் பாண்டவர்களுக்கும்  கௌரவர்களுக்கும் போர் .அதில் அர்ஜுனனுக்குத்தேர் ஓட்டுபவராக கண்ணன் வருகின்றான் அப்படித்தேரை ஓட்டிவரும் போது  தேரில் கட்டிய குதிரைகள்  தாகத்தால் நாக்கு உலர்ந்து கனைத்தன .  இதைப்புரிந்து கொண்ட கிருஷ்ணர் குதிரைகளின்  தாகம் போக்க தன் அம்பை பூமியில் வீசிதண்ணீரை வெளியே பீச்ச வைத்து அதனது தாகத்தைப்போக்கினார் .

    பெருமாளே தன் மூச்சாகக்கொண்டிருந்த இந்திராஜும்னன்  என்ற அரசன் ஒரு தடவை தவம் செய்து கொண்டிருக்க அவரைப்பார்க்க திரு அகத்திய முனிவர்  வந்தார் .தன் தவத்தில் மூழ்கிப்போன அரசன் அகத்தியமுனிவரை வரவேற்க மறந்தான். பின் முனிவர் தான் வந்ததைத்தெரிவிக்க கனைத்தார்  பின்னர் அவர் கோபம் கொண்டு “உனக்கு இத்தனை கர்வம் கூடாது நீ யானையாகப் பிறக்கக் கடவது ” என சாபம் கொடுத்தார் .  அடுத்த பிறவியும் வந்தது . அரசன்  யானையாகப் பிறந்தான். ஆனாலும் அந்தப் பரந்தாமனை நினைக்காமல் இல்லை   தினமும் கஜேந்திரன் அருகே இருக்கும் குளத்திற்குச்சென்று தாமரை மலரைப்பறித்து அந்தத்திருமாலை வழிபடும் ஒரு நாள்  …. தாமரை மலரைப்பறிக்க   ஒரு முதலை  அதன் காலைக்கவ்வியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள்ளே இழுக்க ஆரம்பித்தது  /யானையோ தன் பூஜை முடியும் வரை பொறுத்துக்கொள்ளச்சொல்லி கெஞ்சியது. ஆனாலும் முதலை விடவில்லை ,  யானையும் கடைசி வரைப்போராடியது  .   ஒன்றும் பலனளிக்காமல் போக  “ஆதிமூலமே என்னைக் காப்பாற்று “என்று அலறியது   திருமால் கருடன் மேல் பறந்து வந்து தன் சக்கரத்தை வீசி முதலையின் கழுத்தை அரிந்து  யானையைக்காப்பாற்றிவிடுகிறார். இதுவே ‘கஜேந்திர மோட்சம்’,  என பாகவதத்தில் மிகவும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது

    பறவையை எடுத்துக்கொண்டால் ஜடாயூ நம் கண்முன்னால் வருகிறார் .ராமர்   கானகத்தில்  பர்ணசாலை அமைத்து   சீதை லட்சுமணருடன்  இருந்த நேரத்தில் இராவணன்சீதையை அபகரிக்க திட்டம் போட்டு அதில்   வெற்றியும் பெற்று  சீதாபிராட்டியை   தூக்கி தன் விமானத்தில் வைத்து பறக்கும் நேரத்தில் ஜடாயூ என்ற பட்சி ராவணனை மடக்கியது அவனை மேலே போகவிடாமல் போர் புரிந்தது .சீதையைக்காப்பாற்ற தன் உயிர் போனாலும் போகட்டும் என்ற முடிவில் போரிட்டது தன்  அருமை நண்பர் தசரதரின் மருமகள் சீதையைக்காப்பாற்றியே ஆகவேண்டும்  என்ற தீர்மானத்தில் ஆக்ரோஷமாகப் போரிட அந்த இலங்கேஸ்வரன் தன் கத்தியால் அதன் இறகுகளை வெட்டி மாய்த்தான் .இதை எதிர்ப்பார்க்காத ஜடாயு சுருண்டு கீழே விழ அந்த நேரத்தில் ஸ்ரீராமரும் சீதையைத்தேடி அந்தப்பக்கம் வர ஜடாயூவின் நிலைமையைக்கண்டார் .ஜடாயூ தன் உயிரைப்பிடித்து வைத்துக் கொண்டு நடந்த விஷயத்தை  பரந்தாமனிடம் சொல்லி உயிரை விட்டது. ஸ்ரீராமர்  அதைத் தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து அதற்கு ஈமக்கடன்கள் எல்லாம் செய்து மோட்சமும் அளித்தார் .பறவைக்கும் மோட்சமளித்த பரந்தாமனின் கருணையை என்னவென்று சொல்வது?

    இலங்கைக்குப்போக பாலம் அமைக்கும் தருணம் எல்லா வானரங்களும்  பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்க ஒரு சிறு அணிலும்  தானும் ஸ்ரீராமருக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டும் என்று எண்ணி தன் முதுகை ஈரத்தில் நனைத்து பின் மணலில் உருண்டு அந்த மணலை  பாலம் கட்டும் இடத்தில் உதறிவிட்டு வந்தது. இதைப்பலமுறை செய்ய ராமரும்  இதைக் கவனித்து ஓடோடி வந்து அதை மடியில் வைத்து தன் மூன்றுவிரல்களால் அதை அன்புடன் அதன் முதுகில் தடவிக்கொடுத்தார். அந்த மூன்று வரிகளை இன்றும் அணிலிடம் பார்க்கலாம்

    சுக்ரீவன்   தன் சகோதரன் வாலி யுடன் போரிட ராமரின் சரணம் நாட வானர இனமாக இருந்தாலும் சுக்ரீவனை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு  வாலியுடன் போரிட்டு அவனுக்கு ராஜ்ஜியமும் திரும்ப வாங்கித்தருகிறார்  ஸ்ரீ ராமர்  அத்துடன் இல்லாமல்  அனுமனுக்கு சிறிய திருவடி என்ற உன்னத பதவியும் கொடுத்து  சிரஞ்சீவி பட்டமும் அளிக்கிறார் .தவிர  அவர் ஆசைபடி தன்னிடமே இருந்து சேவை செய்யும் வாய்ப்பையும் அளித்து கௌரவிக்கிறார் . அவரது அன்பை என்னவென்று சொல்ல !

    கிருஷ்ணாவதாரதில்  கண்ணனைக்கொல்ல வந்த எல்லோருக்குமே மோட்சம் கிடைத்து விடுகிறது இதில்  காளிங்கன் என்ற நாகம் நம் நினைவில் வரும் காளிங்கன் கக்கும் விஷத்தினால் யமுனையில் வாழும் பல நீர் விலங்குகள் மாண்டன  மீன்களெல்லாம் செத்து மடிந்தன  இதன் முன் கதைஎன்னவென்றால் முன்பு கருடன் யமுனையில் இருந்த மீன்களை  எல்லாம் தின்று வந்தது  இதனால் வருந்திய மீன்கள்  சௌபரி என்ற முனிவரிடம் சென்று முறையிட்டன  முனிவரும் மீன்களில் மேல் பரிதாபப்பட்டு   கருடனை அழைத்து  யமுனையில் வாழும் மீன்களைத்தின்னால்  அது இறந்துவிடும் என்று சாபம் கொடுத்தார்  கருடனுக்கு பயந்துக்கொண்டிருந்த காளிங்கன்  நல்லதாகப் போயிற்று  என்று எண்ணி தான் வாழ மிகவும் பாதுகாப்பான இடம் யமுனைதான் என்று அங்கு வந்து தங்கி அட்டூழியம் செய்தது இதனால் கோப கோபியர்கள் கவலையுற்று கண்ணனிடம் சொல்ல அவரும் யமுனையில் நேரே காளிங்கனின் தலையில் குதித்து வாலைப்பிடித்தபடி நடனமாடிபோர் புரிந்து அதை சாகும் நிலைக்கு கொண்டுவர  காளிங்கனின் இரு மனைவிகள் அழுதபடி கண்ணனிடம் சரணமடைந்தனர் பின் தங்கள் மாங்கல்ய பிச்சை  கேட்டனர்.. கண்ணன் அந்த கொடிய பாம்பையும் மன்னித்து உயிர்ப்பிச்சை அளித்தார். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகளில் அனைத்துயிர்களிடத்தும் பரந்தாமன் சமமாக கருணைக்காட்டி உய்விக்க வருபவன் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். என்னே ஆண்டவனின் அருள்!

    படங்களுக்கு நன்றி:

    http://www.radiokrishna.com/cosmologia.htm

    http://devotionalonly.com/lord-mahavishnu-pictures-and-wallpapers/

    Share
  • ஸ்டீல் பீரோ

     

    விசாலம்

    நான்  அசையாமல் சிலைப் போல் உட்கார்ந்திருந்தேன் என் கையில் ஸ்காட்ஸ் விஸ்கி ,,,,,அழகு பூக்கள் கொண்ட ஒரு கண்ணாடிக் கோப்பையில்  நிரம்பி இருந்தது. சிலர் பேசினது காதிலே   விழுந்தது.

    “பாவம் ஸ்ரீதர் , பெண்டாட்டி மேலே உசிரையே வச்சிருந்தான் .இப்டி அல்ப ஆயுசிலே அவ   பொசுக்குன்னு போவாள்னு யார் நினைச்சா?”

    “ஆமாண்டா ரகு , அவன்  இப்போ   அந்த ஸ்டீல் பீரோ கம்பெனியை யாருக்கோ வித்துட்டானாம் ”

    “மனுசன் ரொம்ப உழைச்சு லட்ச லட்சமா சம்பாதிச்சான்! தனக்கு பிடிச்ச மாடல் பொண்ணைக்  காதலிச்சான்      பழகினான்    பின்னாலே  கல்யாணமும் கட்டிக்கிட்டான்.என்ன சொல்ல!  அவன்  கொடுத்து வச்சது அவ்வளவுதான் ”

    பேச்சு முடிந்தது ,நான் மனதிலேயே சிரித்துக்கொண்டேன்    விஸ்கி கோப்பையைப் பார்த்தேன் .என் ஸ்வீட்    டர்ர்லிங் கல்பனா சிரித்தாள். ஸ்விம்மிங் சூட்டில் நின்றாள்.    அழகு பிம்பம் தான் ,,,,சும்மாவா அவளுக்கு அழகுப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது!

    நான் அவளை மிகவும் நேசித்தேன் ,,அவளை அனுபவித்தேன் ,,,

    கோப்பையிலிருக்கும்  விஸ்கியை முழுங்கினேன் ,சற்று தொலைவில் இன்னும் இருவர் என்னைக்காட்டி ஏதோ பேசுகின்றனர்.
    என்னதான் பேசுவார்கள்?       ஐயோ பாவம் மனுசன் மனைவியை இழந்து நிற்கிறான் என்ற அனுதாப    பேச்சுதான்    .ஹாஹாஹா மனைவியை இழந்தேனா? இல்லைக்கொலைச் செய்தேனா?

    திடிரென்று பெரிதாக  சிரிக்கிறேன் ஒரு சிவப்புபட்டை அணிந்த ஆள் என் சோகத்தைப் போக்க  மஞ்சள் தண்ணீர் நிரப்பிவிட்டுப்
    போகிறான். அந்தக்கோப்பையின் உள் என் கல்பனா பீரோவில் சாய்ந்தபடி நிற்கிறாள்.   ஒரு கையை கதவின் மேல் தூக்கியபடி வைத்துப்போஸ் தருகிறாள் ,அவள் இளமையின் பூரிப்புகள் என்னை மயங்கச்செய்தன.

    நான் யார் என்று உங்களுக்கு   தெரியவில்லையா?  இது தருகிறேன் என் அறிமுகம்

    நான் தான்  “ராஜா”   , ஸ்டீல் பீரோ கமபெனியின் ராஜாவும் நான் தான் .சின்ன கம்பெனியாக ஆரம்பித்த எனக்கு  உழைப்புடன்
    அதிருஷ்டமும் கைக்கொடுத்து  என்னை உச்சியில் தூக்கியது ,அப்போதுதான் நான் 27 வய்து நிரம்பிய காளை என்று  என் மனதில்
    பட அரம்பித்தது,    என்   கம்பெனிக்கு அழகான நல்ல மாடெலிங் பெண் வேண்டும் என்று   விளம்பரம் கொடுத்தேன் பல அழகிகள் வந்தார்கள்    .கடைசியில் நான் என் கல்பனாவை தேர்ந்தெடுத்துக்கொண்டேன். அவள் புன்னகை ,பெரிய காந்தக்கண்கள் தந்தம் போன்ற கைகள் அந்த ஆப்பிள் கன்னம் .,,மொத்தத்தில் நல்ல பிகர்தான் ,,,அவளை   செலெக்ட் செய்தேன் ,வேலையுடன் என்னுடைய மனைவி என்ற பட்டமும் கொடுக்க எண்ணினேன் ,,,,அவள் மாடல் செய்ய   கம்பெனி வளர்ந்தது ,அவள் என் மனைவியும்  ஆனாள்,

    மேலும் ஒரு பெக் ,,,நிரப்புகிறேன் என் கடந்தகாலம் சினிமா  ரீல் போல் ஓடியது ,

    நான்  கதாநாயகனா?     இல்லை வில்லனா?

    நான் அப்போது ரொம்ப   பிசி .நேற்று சென்னை   இன்று மும்பய்  ,நாளை கொல்கத்தா ,என்று பிசினஸ் பிசினஸ் என்று பம்பரம் போல் சுற்றினேன் இன்று போர்ட் ஆப் மீடிங் ,,நாளை  பார்ட்டி  திறப்பு விழா என்று ஒரே சுற்றுதான்   ஆக என் கலபனாவைப் பார்க்கும் நேரம் மிகக்குறைந்தது. .இந்த விஐபிக்கு  நேரமில்லை ,,,,,,,,,,,,,பாவம் கல்பனா நன்கு படித்தவள் ,அறிவாளி என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக வியாபார நுணுக்கங்கள் எல்லாம் படித்து பிசினஸ் டெக்னிக் முழுவதும் கற்றுக்கொண்டு என்னையும் மிஞ்சிவிட்டாள்,     எனக்கு உதவி செய்தாள். எல்லாவற்றிலும் தேவதை மாதிரி வளைய வந்தாள்,நான் அவள் அழகை ரசித்தேன்
    அவளிடம் எப்போதும் இருக்க விரும்பினேன் ஆனால்  என் பிசினஸ் என்னை விடவில்லை   பணம்  புகழ் என்ற  ஆசையும்   மேலும் சேர்ந்துக்கொண்டது. அத்னால் பல நாட்கள் பாவம்  அவள்  தனியே விடப்பட்டாள்  இதனால் அவள்   மனம் என்னை விட்டு விலகுகிறது என்று நான் உணரவில்லை ,,,,,,,

    என் விஸ்கி கிளாஸைப் பார்க்கிறேன் ,யார் நிற்கிறான் ?

    பாஸ்கரன தானே ! ஆஹா என்ன அழகு அவனும் ஒரு மாடல்தான் சுருட்டை முடி , நான் ஒரு முட்டாள் ,,யானை தன் தலையில்
    மண் அள்ளிப்போட்டதைப்போல்  நானே என் வாழ்க்கைக்கு உலை வைத்து விட்டேன் அவனை என் கம்பெனிக்கு மானேஜராக   ஆக்கினேன் அவன் எனக்கு உயிரையே கொடுத்தான்    நானும்  அவனும் பிரிக்கமுடியாத நண்பர்கள் ஆனோம் , என் கல்பனாவுக்கும் அவனை மிகவும் பிடித்து விட்டது. .அண்ணா அண்ணா என்றுதான் கூப்பிட்டாள் ,,

    என் விஸ்கி காலி ஆயிற்று  கையால் ஒருவனுக்கு சைகை செய்தேன் அவன் என்னிடம் ஓடி வந்து திரும்ப நிரப்பினான் ,,,,,,,

    ஒருநாள்  கல்பனா குழைந்தாள் ,,,, தன் ,உடல் பருத்துவிட்டதாகவும் நீச்சல் குளம் சென்று வருவதாகவும் கூறினாள். அவள் ஆசைக்கு நான்  மறுப்பு தெரிவித்தது கிடையாது ,,”ஒகே மாலை ஒரு பார்ட்டி இருக்கு அதற்கு வந்து விடு”என்று சொல்லி கிளம்பினேன் ,,,,சிறிது தூரம் சென்ற பின் தான் என் முக்கிய பேப்பரை மறந்து வந்தது  தெரிந்தது . திரும்ப வீட்டிற்குப் போனேன் , அங்கு நீச்சல் உடையில்  கல்பனா நிற்க அவளைத் தழுவியபடி பாஸ்கர் ,,,,,,எனக்கு ஒரே ஷாக் ,,,,,,,அடித்தது ,,,, போனச்சுவடு தெரியாமல் திரும்பி விட்டேன் .

    சரக்கு உள்ளே போயிற்று ,,,,,,,,,,
    “எனக்கு மட்டும் தான் நீ என்று நான் சொன்ன போது எப்படி கன்னம் குழிய சிரித்தாள் துரோகி ,,,நயவஞ்சகி ..இது வெளியில்
    தெரியக்கூடாது  ஆசைக்காட்டுவது போல்  நடித்து அவளை முடிக்க வேண்டும் நான் மாட்டிக்கொள்ளக்கூடாது ,, ,,,,அந்த அழகு ராணியை”  ,,,,,,,,,,,,,,என் கையை முறுக்கிக்கொண்டேன்

    இரவு  வந்தது   என் கல்பனா என்னிடம் வந்தாள் நான் பார்த்த காட்சியைப் பற்றி அவளிடம் கேட்கவில்லை  கடைசி வரை நடிக்க வேண்டும் ,அவளும் ஒன்றும் தெரியாதது போல் நடித்து துரோகி,,,,,,, என்னுடன் விளையாடினாள்.ஒரு வாரம் ஓடியது  மும்பய்க்குப் கம்பெனி விஷயமாகப் போனேன் இரண்டு நாட்களுக்குள் திரும்பினேன்   பாவம் கல்பனா !நான் வேலை கம்பெனி பார்ட்டி என்று அவளை விட்டு போய்க்கொண்டே இருந்தால்  அவளும் தான் என்ன செய்வாள்?அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறதே 1 சம்பாதித்தது போதும் இனி  பிசினஸ் என்று ஓடாமல் அவளுடன் இருக்கலாம் ,அவளை மன்னித்து விடலாம்  என்று என் நல்ல மனம் சொல்லியது     ஒரு வாரம் வேலையை இரண்டு நாளில் முடித்து விட்டு “கல்பனா கல்பனா”என்று   மனதில் கூறிக் கொண்டு  சன்னல் திரையைத் தள்ளினேன் , கல்பனா  பாஸ்கர் இருவரும் இருந்தனர் ,கஜூரஹோ ஞாபகம் வந்தது ,,,,என்  ,,நரம்புகள் புடைத்துக்கொண்டன. மெல்ல திரும்பினேன்   இப்போது என் மூளைக்கு வேலைக்கொடுத்தேன் ,எப்படிஅவளைக் கொல்வது?

    ஒரு   புது  மாதிரியான ஸ்டீல் பீரோ ஒன்று  தயாரித்தேன். திருடன்  அதைத் திற்க்க முயன்றால் ஷாக் அடித்து மயக்கமடைவான்
    உள்ளே மின்சாரக்கம்பிகள் அதிக சக்தி இல்லாமல் இணைக்கப்பட்டிருக்கும் ,வெளியில் செல்லும் போது அதன் விசையைப் போட்டு விட்டுச் செல்லவேண்டும்    என் விருப்பபபடி நானே அதைத் தயாரித்தேன் .நல்ல சக்தியான  மின்சாரக் கம்பிகள் பொருத்தினேன், மறுநாள் என் அழகு கல்பனாவை   இல்லை  இல்லை  துரோகி கல்பனாவைக்கூப்பிட்டேன் ;”என்ன  டார்லிங்     தேனொழுக பதில் ‘நான் அவளை என் பக்கம் இழுத்தபடி,

    ”   என் டியர்  கல்பனா  நீ  “இந்த பீரோவில் சாய்ந்தபடி போஸ் தரவேண்டும். விளம்பரம் இந்தப் புது பீரோவுக்குத்தான்  நீ சாய்ந்து நின்றாலே போதும் பலர்  வாங்குவதற்கு   ஆர்டர் கொடுத்து விடுவார்கள்” என்று அந்தத் துரோகியை அணைத்துக்
    கொண்டேன் ,

    மறுநாள்      என் எண்ணம் படியே  அவளும் வந்தாள் பச்சை நிற பீரோவில் சாய்ந்தாள் ,,,,,,,,,,வெற்றி  முழு வெற்றி  ,,நான் நினைத்தது நடந்தது ,,,,,,விழிகள் பிதுங்க விழுந்தாள்,   என் கம்பெனியை விற்றுவிட்டேன் ,கோர்ட்டில் எல்லா பீரோக்களும் ஒரே கலராக இருந்ததால் தவறாக இதில் சாய்ந்து விட்டாள் என்று வாதாடினார் என் வக்கீல்    பணத்தை அள்ளி வீசினேன்  அங்கு  ,பணம் பேசியது , பணத்தால் ஜயித்தேன் ,   அவளைக் கொன்று விட்டேன் ஆனால் இன்று மனச்சாட்சி என்னைக் கொல்கிறது ,,,,,,,,,,

    கீழே மயங்கி சாய்கிறேன்  “பாவம் மனைவி மேல் உசிரே வச்சிருந்தார்  ,சோகத்தை இப்படி போக்கறார்”என்ற குரல் கிணற்றுக்குள் விழுவது போல் விழுகிறது ,,,,,,,,,,

    Share
  • சிதாரில் விளையாடிய விரல்கள்

     

    விசாலம்

    அந்தக்காலத்தில் வந்த  அனுராதா என்ற ஹிந்தி சினிமாவும் அதற்கு இசை அமைப்பாளராக இருந்து முத்துக்களொப்ப பாடல்களை நமக்கு அளித்த  சிதார் மேதை பண்டிட் ரவிசங்கரை எப்படி மறக்க  முடியும்?கதாநாயகியாக லீலாநாயிடு நடிக்க திருமதி ஆஷா போஸ்லே பாட  அந்தப்படத்தில் வந்த எல்லா பாடல்களுமே ஹிட் ஆயின “ஜானே கைஸே ஸ்பனேமே கோகயே அக்கியான் “”பியா ஜானென ” என்ற பாடலும் இன்றும் பசுமையாக இருக்கிறது .

    நல்ல தீர்க்கமான நாசி, அகண்ட நெற்றி  நல்ல சிவப்பு  பெரிய காதுகளுடன் சுந்தரபுருஷராக இருந்த  பண்டிட் ரவிசங்கர் தான் கற்றுக்கொண்ட சிதாரில் தான் என்னென்ன ஸ்வரங்கள் பேச வைத்தார் ! எல்லா ஸ்வரங்களும் இனிய லயத்துடன்  அப்படியே தென்றலில்  கலந்து நம்மிடம் வந்து சேரும் போது அவை அப்படியே நம் இதயங்களைத்தொட்டன .ஒரு மீட்டிலிலேயே  பல ஸ்வரங்கள் இழைந்து வெளிப்படும்  அவர் வாசிக்கும்  “யமன் ” என்ற நம் கல்யாணி ராகம்  .பெஹாக் சிந்து பைரவி . தேஷ்  எல்லாமே நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம் .தவிர அவர் நல்ல நடன கலைஞர்  நாட்டிய கோரியோகிராபர் ,தேர்ந்த ஆசிரியர் .நாட்டுப்பாடல்கள்  மேனாட்டு இசை . கர்நாடக இசை  சினிமா இசை ,மெல்லிசைப்பாடல்கள்  என்று பல கிளைகளில் புகழ்ப்பெற்று பாரத ரத்னா என்ற பட்டத்தையும் பெறறவர்.எப்போதுமே  ஒருவர்  கலைக்குடும்பத்தில் பிறக்க   அவர் பெரிய மேதையாக வளர அவர் வீட்டுச்சூழ்நிலையும்  மிகவும் உதவுகிறது என்பதை இவர் குடும்ப மூலமாகவும் தெரிய வருகிறது .பெங்காலி பிராமணக்குடும்பத்தில்  இவர் பிறந்தார் . இவரது சகோதரர் திரு உதயசங்கர் சிறந்த நடனகலைஞர்  பண்டிட் ரவிசங்கர் தன்னுடைய பத்தாவது வயதிலேயே  தன் சகோதரரின் நாடகக்குழுவிலும் பங்குப்பெற்று அத்துடன் தில்ரூபா .சிதார் என்ற பல வாத்தியங்களையும்  தன் முயற்சியாலேயே  வாசிக்க ஆரம்பித்து விட்டார். பாபா அல்லாவுத்தீன் கான் இவருக்கு சிதார் கற்றுக்கொடுக்க  ஆரம்பித்தார்.அவர் மல்ஹார் கரானாவைச்சேர்ந்தவர்   ஆனால் அப்போது ரவிசங்கர் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பாரிஸ் நகரின்  நாகரீகம் எல்லாம் மனதுக்குப்பிடிக்காமல் தன் கிராமத்திற்கு திரும்பவும் வந்துவிட்டார். இதனால் அவரது  சகோதரருக்குக்கோபம் ஏற்பட்டும் இவர் கவலைப்படவில்லை நேராக சிதார் கற்றுக்கொள்ள குரு இருந்த  கிராமத்திற்குச்சென்று குருகுலம் ஏற்று சிதார் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்   கடும்  பயிற்சி ஆரம்பமானது ஒரு நாளுக்கு பதினெட்டு மணி நேரம் பயிற்சி  பின்  குருவின் மகள் அன்னபூர்ணாதேவியைத்  திருமணம் செய்துக்கொண்டார் ஆனால்  அபிமான் படம்
    போல் இவருடைய வாழ்க்கை இருந்திருக்கும் என நினைக்கிறேன்  இவரது மனைவி இவரைவிட இசையில் மிஞ்சுபவளாக இருந்ததால் அங்கு இவருக்கு ஒரு “காம்ப்ளெக்ஸ் ” ஏற்பட்டு மனைவியுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு  விவாகரத்தும் ஆனது

    நான் இவரை இரண்டு முறை நேரில் பார்த்து பேசி இருக்கிறேன்  என் சகோதரர் திரு வெங்கட் திரு ரவிசங்கர் ஜியின் சிஷ்யரிடம்
    சிதார் படித்தார் அப்போது ஒரு முறை இவரை நேரில் காண போனபோது நானும் போயிருந்தேன் தன்னுடைய சிதாரில் மால்கோஸ் ராகம் வாசித்து எங்களை ஆனந்தப்படுத்தினார் .இவரது வாத்யவிருந்தம்  என்றவாத்ய குழுவின் இசை தில்லி ரேடியோவில் தவறாமல் வந்துக்கொண்டிருந்தது . கேட்க  மனரஞ்சகமாக இருக்கும்  .இவர் பல நாடுகளுக்குப்போயிருந்தாலும் முழு இந்தியனாகவே இருந்திருக்கிறார் .அதே போல்    இவரது இசையும் இந்திய இசையாகவே  இருந்திருக்கிறது இந்திய இசையை
    வெளி நாடுகளில் பரப்பிய பெருமை இவரையே சேரும்  இவரது இசைக்குழுவில் மிருதங்கம் ,தபலா கஞ்சிரா ,மோர்சிங்  கடம்  போன்ற எல்லா தாள வாத்தியங்களும்  சேர்ந்து அழகான போட்டியுடன் தனித்தனியாகவும் பின் கடைசியில் சேர்ந்தும் ரிதம் கொடுக்க நாம் நம்மையே மறந்துவிடுவோம்  நாட்டுப்பாடல் என்றால் அதற்கேற்ப வாத்தியங்கள் டோல் ,உடுக்கு போன்றவைகளும் சேரும்

    அமெரிக்காவில் பலதடவைகள்  நம் நாட்டு இசையைப்பற்றி சொற்பொழிவு ஆற்றி  பல அமெரிக்கர்களைக்கவர்ந்து      இதனால் பல வெளிநாட்டவர்கள் நம் நாட்டு சங்கீதத்தைக்கற்றுக்கொள்ளவும் அனுபவிக்கவும்  ஆரம்பித்தனர்  இவருடன் இசையில் சம்பந்தப்பட்டவர்கள்  பீட;ல்ஸ் ஜுபின் மேஹ்தா,   யஹூதிமெஹினின் ,ஜீன்பியர்   லூயிஸ் ராம்பல் போன்ற மேற்கத்து இசை மேதைகள் இவர் கச்சேரி செய்யும் போது கேட்க வந்திருக்கும்   ரசிகர்களிடம்  தான் வாசிக்கப்போகும் பாட்டைப்பற்றி அதன் ராகம்  தாளம் எல்லாம் விவரமாக எடுத்துரைத்து  பின் வாசிப்பார் .இதனால்  இசை புரியாதவர்களும் தலை ஆட்டி நன்கு அனுபவிப்பார்கள் இசைத்தெரிந்தவர்கள் தன்னையே  மறந்து அதில் லயித்துவிடுவார்கள் .இந்தியாவின் ஐம்பதாவது ஆண்டு சுதந்திர தினம் போது நியூயார்கில் ஒரு பெரிய புகழ் பெற்ற ஹாலில் இவர்  ” ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா   “என்ற பாடலை வாசித்து இந்தியாவுக்குப்பெருமை சேர்த்தார்.

    இவர்  கர்நாடக  இசை படிக்க காரணமாயிருந்தது வீணை தனம்மா அவர்களின் குடும்பம் இதனால் சாருகேசி  ராகமும் வாசஸ்பதி ராகமும் வட இந்தியாவில் இவர் மூலம் பிரபலமாயிற்று  வெளிநாடுகளிலும் மிகவும் புகழ் பெற்ற யஹுதிமெனுஹின் , ஜீன் பியேர், லூயிஸ் ராம்பல் ,போன்றவர்களுடன்   சேர்ந்து அவரது இசை இருந்தாலும் கொஞ்சமும் மேல்நாட்டு இசையைக்கலக்காமல் இந்திய இசையையே பிரதானமாகக்கொண்டு வாசித்ததாக இவர் அளித்த பேட்டி மூலம் தெரிய வருகிறது .

    இவரது இசை இத்தனை புகழ் இவருக்குத் தந்திருந்தும்  மணவாழ்க்கை இவருக்கு நிம்மதியைத்தரவில்லை என்றும்  அதனால்
    மனம் ஒடிந்து தற்கொலை எண்ணமும் வந்தது என்றும்  ஆனால் கடைசி  காலத்தில் சுகன்யா என்பவளை மணந்தப்பின் நிம்மதி கிடைத்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்  முதல் மனைவிக்குப்பின் இவரது குருவும் இவரை விட்டு விலகிக்  கொண்டாராம்
    பின் ஒரு நடனக்கலைஞர் கமலா சாஸ்த்ரி என்பவரை மணந்துக்கொண்டார் .பின் நோரோஜோன்ஸ் என்பவருடன் தொடர்ப்பு ஏற்பட்டு ஸுஜோன்ஸ் என்ற பெண்குழந்தைக்குத்தந்தை ஆனார் .பின் கடைசியில் இவர்  மணந்த சுகன்யாவுக்கு அனுஷ்கா சங்கர்  என்ற பெண் பிறந்து அவளும் இசையில் பல அவார்டு வாங்கி இருக்கிறாள். ஸுஜோன்ஸும் இசையில்   பல கிரானி அவார்டுகள் பெற்றிருக்கிறாள். “என் மனம் ஒருநிலையில் இல்லாமல் நான் என் வாழ்க்கையில் பல வருடங்கள் சஞ்சலத்திலேயே  இருந்து  நல்வாழ்க்கையைத்தவற விட்டேனோ என்று எனக்குத்தோன்றுகிறது” என்று அவர் முன்பு பேட்டியும் அளித்திருக்கிறார் .

    ஏசியன் கேம்ஸ் 1982ல் இவர் தயாரித்த ஸ்வாகதம் சுஸ்வாகதம் என்ற பாடல் இன்றும்  என் நினைவில் பசுமையாக இருக்கிறது
    இவர் வாசிக்கும்  “துன்” என்ற நாட்டுப்பாடல்களில் ஆடுமேய்ப்பவன் வருவான் படகோட்டியும் வருவான் . விவசாயியும் வருவான்
    நாமும் அவர்களுடன்  சேர்ந்து  அந்த இசைக்கலவையில் லயித்துவிடுவோம் . ரிச்சன் அட்டின் பரோ தயாரித்த மஹாத்மா காந்தியில் வரும்  இவரது வரும் இசை ஆஸ்கர் பரிசுக்குத்தேந்தெடுக்கப்பட்டது என்பது இந்தியாவுக்கே மிகவும் பெருமை அளிக்கும் விஷயம் தான்.. இந்த இசையில் பெரிய இசைக்கலைஞர் ஸுபென் மேஹ்தாவும் கூட இருந்தார்

    இத்தனைப்புகழ்ப் பெற்ற  .இசை மேதை  பாரதரத்னா பண்டிட் ரவிசங்கர்ஜி  இன்று நம்மிடம்  இல்லாதது இசையுலகத்தில் ஒரு பெரிய இழப்பேயாகும் . அவரது மகன் இவரைப்போல் மேலே வந்துவிடுவார் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    படத்துக்கு நன்றி

    http://post.jagran.com/legendary-musician-pandit-ravi-shankar-passes-away-1355285097

    Share
  • போதுமடா சாமி

     

    விசாலம்

    ‘அம்மா  அம்மா  இத பாரு என் பிரண்டு ஜோதி    நியூயார்க்  டைம்ஸ்ல  கவர் பேஜ்ல வந்திருக்கா ..எவ்வளவு  அடக்கமாக நிக்கிறா பாரேன்” என்றபடி  அனு  தன் அம்மா  ஜானகியிடம் புத்தகத்தைக்கொடுத்தாள். அதை வாங்கியபடியே  ஜானகி “இவள் போட்டோ இங்க ஏன் வந்திருக்கு “?  என்று கேட்க

    “அதுவா  அவள் கேலக்ஸியில்  எதோ பல புது கண்டுப்பிடிப்பு  செய்து  ஸீனியர் ஸைன்டிஸ்ட் ஆகி புகழ் உச்சிக்குப்போயிட்டா . கூடிய சீக்கிரம்  நோபல் பிரைஸுக்கும் அவள் பெயரைத் தேர்ந்த்டுக்கலாம் அம்மா,”

    “அப்படியா  ….ரொம்ப  சந்தோஷமா இருக்கே  தில்லியிலேயே அவ  காலேஜ்ல அவதான் முதல் இடம்ன்னு நீ சொல்லியிருக்கே “

    “ஆமாம்மா  இங்க அமெரிக்காவிலே  எல்லா மேகசின்னிலும்   டிவியிலும்  இவள பத்தி   வந்துடுத்து .ஒரே புகழாரம் தான்  ஒரு தமிழ்நாட்டுப்பெண் இந்தியாவுக்கு   அதுவும் தமிழ் நாட்டுக்கு  எத்தனைப்பெருமை வாங்கித்தந்திருக்கா  பார்த்தயா ?”

    “ஆமாம் அனு  ..ஆனா நான்  இங்க  வந்து ஒரு மாசம் தானே ஆச்சு .இதுக்கு முன்னாடி சென்னைல ஒரு பத்திரிக்கைலேயும் நான் இவள  பத்தி படிக்கவே  இல்லையே .நான் எல்லா முக்கிய பத்திரிக்கையும் வாங்கறேனே “

    ஆமா     நீயே ஒரு எழுத்தாளர். ஏம்மா நீ இவள  பத்தி எழுதேம்மா..தமிழ் நாட்டுக்கு பெருமை தானே “

    “நான் நினைச்சேன்   நீ சொல்லிட்ட  ..இன்னும் இரண்டு மாசம் கழிச்சு சென்னைப்போய்  நான் செய்யற  முதல் வேலை இதான்  “

    அனு தன் அம்மாவின் முதுகை செல்லமாகத்தட்டிவிட்டு  மொபைலை காதில் வைத்தபடி தன் அறை   சென்றாள்.

    ஜானகி நியூஜெர்ஸிக்கு வந்து ஒரு மாதம்  தான் ஆகிறது ஆனாலும் சென்னையில் மனம் ஈடுபட்டதுப்போல் இங்கு என்னவோ
    ஈடபடவில்லை  .எல்லா இந்தியப்பொருளும் இங்கு கிடைக்கிறது  வசதியான வாழ்க்கை  ஒரு பிரச்சனையும் வந்ததில்லை . பெண்ணும் மாப்பிள்ளையும் அன்பைப்பொழிகிறார்கள்  ஆனாலும் எதோ ஒரு வெறுமை .அது என்னவென்று சொல்லமுடியவில்லை . இந்திய கலாச்சாரத்திற்கு ஒவ்வாத சூழ்நிலையா ? ஊஹூம்   இருக்கமுடியாது ஏனென்றால் தற்போது சென்னை   அமெரிக்காவையும்
    தூக்கிச்சாப்பிட்டு விடுவது போல் ஒரு மாற்றம் .அப்படி ஒரு ஜெனரேஷன் கேப் {gap} …பின் என்ன!  ஹோம் ஈஸ் ஹோம்  எ ஸ்வீட்
    ஹோம்  இல்லையா ? ஆறுமாதம் இருக்க வந்தவள் இரண்டு மாதத்திற்குள்ளேயே  சென்னைக்கு
    மூட்டைக்கட்டிவிட்டாள்

    சென்னை வந்ததும் முதல் வேலையாக  வெளிநாட்டில் கொடிக்கட்டிப்பறக்கும் ஜோதியைப்பற்றி எழுதியாகிவிட்டது . இதை தகுந்த பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டும்  ,முதலில் அவள் கண்முன்னால் வந்தது  “ஆனந்த மஞ்சரி ” உடனே

    டெலிபோன் முன்   அமர்ந்தாள் ஜானகி

    “ஹலோ ஹலோ     வணக்கம் ஆனந்த மஞ்சரி  ஆசிரியர்  இருக்காறா?”

    “கொஞ்சம் லைன்ல் இருங்கம்மா  .”என்ற குரல் கேட்டு காதில் ரிசீவரைப்பிடித்தபடி இருக்க  “குறையொன்றுமில்லை மறைமூர்த்திக்கண்ணா” என்ற பாடல் ஓடிக்கொண்டேஇருந்தது,  ஒருவரும் வரவில்லை  .சிறிது நேரம் காத்திருந்து பின் சலிப்புத்தட்டி ரிசீவரை  டங்கென்று கீழே வைத்தாள். இன்னிக்கு அஷ்டமியோ அதான் இப்படி என்றபடி மனம் சமாதானமடைந்தது .
     ,,

    இருநாள் கழித்து  இதே பல்லவி   …. “ஹலோ ஹலோ  வணக்கம்  யார் பேசறீங்க “

    ”   வணக்கம் ஆனந்த மஞ்சரி ஆபீஸ் “

    ” சார்  எனக்கு ஆசிரியருடன் பேசவேண்டும்”

    ” லைன்ல இருங்கம்மா   ”   உடனே அதே பாடல் அதே குரல்      .குறையொன்றுமில்லை ……..

    “அப்பா வெங்கடேசா  … இதாம்ப்பா எனக்கு குறை  ..போன்ல இப்படி பாட்டப்போட்டுட்டு  எங்கேப்பா எல்லாரும் போய்டறா…….

    என்று எண்ணிய எனக்கு வெங்கடேசன் அருள் புரிந்தான்.

    ”  வணக்கம்  நான் ஆசிரியர்  சோமு பேசறேன்   என்னம்மா  வேணும் ?”

    “சார்  நான் ஒரு விக்ஞானியைப்பற்றி   எழுதியிருக்கேன்  யூ எஸ் ஏ ல அவளுக்கு ரொம்ப  பேரு  ……அத உங்க பத்திரிக்கைக்கு
    அனுப்பட்டுமா ? ஈமெயில் ல அனுப்பறேன்  “

    “சரிம்மா  அனுப்பி வையுங்கோ .படிச்சுப்பாத்து பிரசுரிக்கிறோம் ‘

    ” ரொம்ப நன்றி  சார் ”     அவள் சார் என்று முடிப்பதற்குள்  மறுபக்கம் துண்டிக்கப்பட்டது …அத்தனை பிசி போல  ………

    ஒரு வாரம் சென்றது  .அங்கிருந்து பதில் மடல் ஒன்றும் வரவில்லை  .போடவும் மாட்டார்கள் .நாம் தான் பின்னால் அலையணும் .

    திரும்பவும்  ஜானகி  ஆனந்த மஞ்சரி ஆபீஸுடன்  தொடர்ப்பு கொண்டாள் ” ஹலோ  நான்  ஜானகி பேசறேன்  வணக்கம்    நான் அனுப்பிச்ச”  பெண்விக்ஞானி ” வந்து சேர்ந்ததா? ஆசிரியர் பார்த்தாரா ?

    “மேடம்   கொஞ்சம் ஹோல்ட் பண்ணுங்க   அவர் ஸீட்ல வந்துட்டாரான்னு பாத்து சொல்றேன் ”

    ஐந்து நிமிடம் கழிந்தது  ,,பின் அதேகுரல் வந்தது     ” மேடம்   அவர் இன்னும் வரலை   . எப்ப வருவார்ன்னு தெரிலை  நாளைக்கு

    இந்த நேரத்தில போன் பண்னி கேட்டுங்க  ”       டக்    ……..பேச்சு துண்டிக்கப்பட்டது

    ஐயோ இது என்ன ?அனுப்பறதே இத்தனை சிரமமான காரியமாயிருக்கே  எதாவது சிவாரிசு பிடிக்கணுமோ ! என்று   மனம்  குழம்பிப்போனது

    இதேபோல் அனுபவம்   ஒன்றல்ல இரண்டல்ல…..மல்லிகைச்செண்டு  .மஞ்சள்குங்குமம்   .குமுதமலர்   என்ற பல  புகழ்ப்பெற்ற பத்திரிக்கை
    ஆசிரியர்களிடம் பேசி  அவர்களும் அனுப்பச்சொல்லி அது அப்படியே விழலுகிறைத்த் நீர் போல் வீணானது  .எல்லோருக்கும் வாய்ப்பு வர வரத்தானே  ஒரு சுஜாதா அல்லது சிவசங்கரி யாக ஆகமுடியும்   இது ஏன் இவர்களுக்குப்புரியவில்லை

    ஒரு வாரம் சென்றது   ” ஆனந்த மஞ்சரி  வேண்டாம் ராசியில்லை .  ” மங்கை உலகம் ”     பத்திரிக்கையில் நிச்சியம் எடுப்பார்கள்

    அங்கு போடுகிறேன் ” என்று தனக்குத்தானே பேசியபடியே ஜானகி அந்தப்பத்திரிக்கை ஆசிரியரை  அழைத்தாள்.

    இங்கு ரிங்க் டோனில் கோவிந்தா வரவில்லை  ஆனால்  கந்தசஷ்டிக்கவசமாக முருகன் வந்தான் .

    “ஹல்லோ   மங்கை உலகம்  ஆசிரியர்   ஹேமா   ….. வணக்கம்

    “வணக்கம்   “என்றபடி எல்லா இராமயணமும்  சொன்னாள் ஜானகி

    “”ரொம்ப மகிழ்ச்சி  அவசியம் அனுப்புங்கள் போடுகிறோம்   அப்படியே அவளது படமும் அனுப்புங்கள் .மகளிர்தினம் அன்று அட்டையில் அவள் புகைப்படத்தைப்போட்டு  ஜமாய்த்துவிடலாம்  ‘

    “அப்பாடி இன்றுதான்  என் டென்சன் நீங்கியது மிக்க நன்றி  :”

    அடுத்த போன்  அனுவுக்கு …………..

    “டிரிங்க டிரிங்க      ,,,ஹலோ அனுவா      ,,,,,,எப்படி   இருக்கே    நான் எதுக்கு இந்த நேரத்ல போன் செஞ்சேன் தெரிமா  ?  எனக்கு உடனே

    ஜோதியோட போட்டோ ஒண்ணு  ஈமெயில்ல அனுப்பு   “மங்கை உலகத்ல   “அவளப்பத்தி நான் எழுதியதை பிரசுரிக்கறேன்னு சொல்லியிருக்கா  .  அப்பாடி நான் எழுதி ஆறுமாசம் ஆயிடுத்து …..’

    “சரிம்மா  உடனே அனுப்பறேன்  பெஸ்ட் ஆப் லக்  நாளைக்கு ஸ்கைப்ல  வரேன்  “

    “சரி உடம்ப பாத்துக்கோ  பாத்து டிரைவ் பண்ணு  ஒகே  பை பை ‘

    “அப்பா எல்லாம்  ஒருவிதமாய்  முடிந்தது  இந்த மாதம்   ஜோதி அட்டையில் மின்னுவாள்  .தமிழ்நாட்டுப்பெண்ணின் புகழ் எல்லா இடத்திலும்  பரவும் .அப்போ பாயசம் வைச்சுக்கொண்டாடுவேன் ” என்று யோசித்தபடி  ஜானகி படுக்கச்சென்றாள்.

    ஒவ்வொரு நாளாய் எண்ணி    ..கடைசியில் அந்த ஒன்றாம் தேதியும் வந்தது போஸ்டில் தனக்கு இலவச காப்பி ஒன்று கிடைக்குமே
    என்று போஸ்டை எதிர்ப்பார்க்க  ஒன்றும் வரவில்லை  அனுப்ப விட்டுப்போச்சோ என்ற நினைவில் கடையில் மங்கை உலகம்   வாங்கப்போனாள் . புத்தகம் இப்போது அவள் கையில்  …அட்டையில்  அங்கு ஜோதி இல்லை  ஒரு வளரும் சினி  நடிகை
    மாடல் கவர்ச்சி ஆடையுடன் போஸ் கொடுத்தாள் ..

    ஜானகிக்கு ஒரே ஷாக் ..கோபம் வர  அழுகையும் வர   நேரே வீடு வந்தாள் நேரே டெலிபோனை எடுத்தாள்,

    ‘ஹலோ  “

    “ஹலோ   மங்கை உலகம்   நான் மீனா  பேசுகிறேன் “

    ” எங்கே உங்க ஆசியரைக்கூப்பிடுங்க “

    ” சாரி மேடம்    நீங்க தானே ஜானகி மேடம்  ஆசிரியர்  ..உங்களுக்கு ஒரு மெசேஜ்  கொடுக்கச்சொன்னா  ‘ எதோ மேலிடுத்து பிரஷராம்
    அதனாலே  ……..”

    “அதனாலே…..சரி பிரஷர்  யார் கொடுத்தா ?எனக்குத்தான் இப்ப  பிளட் பிரஷர் வந்துடுத்து “

    “இல்ல மேடம்   வந்து  . இந்த வளரும் மாடலைப்பேட்டி எடுத்து போட்டோவும் போடச்சொல்லி  ஒரு பெரிய பிரமுகர்  பெரிய தொகையை கொடுத்துட்டார்  அதனாலே எங்க மேடத்துக்குத் தட்டமுடிலை  சாரி மேடம் :

    டக்கென்று   டெலிபோன் துண்டிக்கப்பட்டது .

    Share
  • புத்தரும் ஆதிசங்கரரும்

     

    விசாலம்

    கிமு ஆறாம் நூற்றாண்டில்  புத்தர் அவதரித்ததும் புத்தமதம் ஸ்தாபனம் ஆனதும் நம் எல்லோருக்கும் தெரியும்.,     பின் ஹிந்து மதத்தில் இருந்த பல கட்டுப்பாடுகளும் .நியமங்கள் ஹோமங்கள் யாகங்கள் .போன்றவைகளாலும் மக்களின் மனம் புத்த ,சமண மதத்தில் நுழைய விரும்பியது .தவிர சம்ஸ்கிருத மொழியில் பூஜை .புனஸ்காரங்கள் எல்லாமே இருந்ததால் புரியாத மொழியிலிருந்து கொஞ்சம் மாற்றம் தேவைப்பட்டது இப்படி  ஹிந்து மதமும் புத்த மதமும் பல வித்தியாசங்கள் கொண்டிருந்தாலும்  முடிவில் அணுக வேண்டிய இடம் ஒன்றாகத்தான் இருந்தது . பகவான் புத்தரின் காலத்திற்குப்பிறகு தோன்றிய  ஆதி சங்கரர்  .பெரிய வேதந்தவாதியாகி ,அத்வைத சித்தாந்தத்தில் கரை கண்டு சம்ஸ்கிருத மொழியில் மிகச்சரளமாகப்பேசி  பாரத தேசத்தையே தன் திருப் பாதங்களினால் வலம் வந்து ஹிந்துமதத்தைத் திரும்பவும் தூக்கி நிறுத்தினார்  நான் புத்தரின் சரித்திரமும்  , .ஸ்ரீஆதிசங்கரரின் பஜகோவிந்தமும் பல விஷயங்களில் ஒத்துப்போவதைக்கண்டேன்

     கௌதம புத்தருக்கும்  ஶ்ரீ ஆதிசங்கரருக்கும் பல  ஒற்றுமைகளை நான்   பார்க்கிறேன் . சித்தார்த்தர் பிறப்பதற்கு முன் அவரது தாயார் மஹாமாயாவுக்கு ஒரு கனவு வந்ததாம் அதில் ஒரு குட்டியானை  அவளையும் குழந்தையையும்  வாழ்த்திவிட்டுச் சென்றதாம் யானை என்றால்  கணபதியின் ஸ்வரூபம் என எடுத்துக்கொள்ளலாம்

    அதேபோல்  பலவருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமல்  சிவகுரு .ஆர்யாம்பாள் தம்பதிகள் சிவபூஜை செய்ய  சிவனும் அவர்களுக்கு தரிசனம் தந்தப்பின்னர் தானே அவர்களுக்கு வந்து பிறப்பதாக அனுக்கிரஹம் செய்தார் ,அதேபோல் சிவனே ஆதிசங்கரராக அவதாரம் செய்தார் .சிறுபிராயத்திலேயே வேதம் உபநிஷத், மஹாபாரதம் ,இராமாயணம் போன்றவைகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுவிட்டு  .தனது ஐந்தாவது வயதிலேயே பூணலும் போட்டுக்கொண்டார் .இவர் தனது தந்தையை மிகச்சிறிய வயதிலேயே இழக்க நேர்ந்தது

    .இதேபோல் சித்தார்த்தருக்கும்  தன் தாயாரை பிறந்த ஒரு வாரத்திலேயே இழக்க நேர்ந்தது சித்தார்த்தர் பிறந்தவுடன்  ஒரு பெரிய  ஜோசியர் இவர் பெரிய சன்யாசியாகவோ அல்லது பெரிய சைன்ய தலைவனாகவோ வருவான் என தெரிவிக்க   அவரது தந்தை தனது மகனுக்கு அரசகுமாரனுக்குத் தேவையான அத்தனை விதப் பயிற்சிகளையும்  கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார் .ஆனால் சித்தார்த்தரின்  மனம் இதில் நாடவில்லை எப்போதும் தனிமையே நாடினார் .சுகபோகங்களை வெறுத்தார் மனைவி குடும்பம் என்பதையும் வெறுத்தார் .இதனால் பயந்துப்போன அரசர் சுத்தோதனர் அவருக்கு திருமனம் செய்வித்தால் மனம மாறலாம் என நினைத்து யசோதராவை மணம் செய்வித்தார் .ஆனாலும் சித்தார்த்தரின்  மனம்  மகிழ்ச்சியடையாமல் ஒரு தேடலநோக்கிப் போய்க்கொண்டிருந்தது    அவர்  பதினாறு வயதில் திருமணம் செய்துகொண்ட போது யசோதராவுக்கும் வயது பதினாறு ..

    சாதரணமாக அந்த வயதில் ஆண்பிள்ளைகள் சிருங்கார ரசத்தில் பல புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவார்கள். ஆனால் சித்தார்த்தரோ முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார் .  திருமணமாகி பதிமூன்று வருடங்கள் கழித்து ராஹுல் பிறந்தான் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது வயது 29. . எப்போதும் சித்தார்த்தர் எதையோ நினைத்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததால் அவரை அந்த  யசோதரா கவரவில்லை .காமத்தை அவர் நாடவில்லை.  இதை  ஹிந்தியில் வடநாட்டுக்கவி   ஸ்ரீமைத்லி சரண்குப்தாஜி  தன்னுடைய  யசோதராவின் காவ்யத்தில்  அந்தப்பெண்மணியின் நிலைமையை மிகவும் ஆழமாகச் சித்தரித்திரிக்கிறார்  பதிமூன்று ஆண்டின் பின் குழந்தைப்பிறந்த அன்றே  அவர் இரவில் வீட்டைவிட்டுச்சென்று விட்டார், எங்கே  பந்த பாசக்கயிறில் சிக்கிக்கொண்டுவிடுவோமா? என்ற பயம் தோன்றிருக்கலாம் .அல்லது    ஜகத்தில்  மதகுருவாக   ஆக  எல்லா கலைகளும் தெரியவேண்டும் என்று மதன் மிஸ்ராவின மனைவி    பாரதி சொன்னாளே அதுபோலவா இது என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது

    இதை ஆதிசங்கரர் வாழ்க்கையிலும் காணமுடிகிறது, மீமாம்சு தத்வஞானி குமாரிலபட்டரின் சிஷ்யரான மண்டன மிஸ்ராவுடன் ஒரு சமயம் சங்கரருக்கு மோதும் வாய்ப்பு வந்தது அந்தப்பட்டி மன்ற நீதிபதியாக  மிஸ்ராவின் மனைவி பாரதி இருந்தாள். இரண்டு வாரங்கள் தர்க்கம் நடந்தது எங்கே தன் கணவர் தோற்றுவிடுவாரோ என நினைத்து அவள் சங்கரருக்கு ஒரு கேள்வி கேட்டாள்

    “காதலுக்கும் காமத்திற்கும் என்ன  வேறுபாடு ” ?

     அதன் பதிலை மறு நாள் சொல்வதாகக்  கூறிவிட்டுச்சென்றார் .    ஞான திருஷ்டியிலும் விடை விளங்காமல் பாம்பு கடித்து இறந்த மன்னன் உடலில் கூடு விட்டுக்கூடு பாய்ந்து அரசனாகிறார் .பின் அந்த ஒரு நாள் அரண்மணையில் அரசியுடன் இருந்துவிட்டு வருகிறார். மறுநாள் அதனின் விடையை சரியாக   அளித்தார் சங்கரர்  .    போட்டியில் தோற்றவர் துறவரம் மேற்கொண்டு சங்கரர் வழியை பின்பற்றினார்.  இந்த பாரதி சாட்சாத் சரஸ்வதியே என்றும் சிருங்கேரியில் இருக்கும் சாரதாம்பாளும் இவளே என்று ஒரு சிருங்கேரி பக்தர் என்னிடம் கூறினார்

    சங்கரரும் உலகத்தை உய்விக்க வந்த ஒருஜகத் குருவாக ஆவார் என்று ஜோசியம் கூறியது  அதேபோல ஒரு நாள்  அவர் நதியில் குளிக்கபோக ஒரு முதலை அவர் காலை கவ்வி உடும்பு பிடியாகப் பிடித்துக்கொண்டது  இல்லற பந்தங்களை விட்டு சன்யாசியாக மாற  அவர் ஒப்பத்துக்கொண்டால் அந்த முதலை தன் பிடியிலிருந்து விட்டுவிடும்  எனச்சொல்லவும் செய்தது.     .தன் தாயாரை ரொம்பவும் தேற்றிவிட்டு இவரும் சன்யாசி ஆகிவிட்டார்.

    சித்தார்த்தரும் முதலில் ஒரு தொண்டு கிழவர்  ஒருவர் தள்ளாடித்தள்ளாடிபோனதைக்கண்டு  “வாழ்க்கை இதுதானா ? இதிலிருந்து விடுதலை கிடைக்க வழியில்லையா ?”என்று யோசிக்க ஆரம்பித்தார் .அதன் பின் ஒரு சவ ஊர்வலம்,  .ஒரு நோயாளி என்றும் பார்த்ததை நாம் அறிவோம் .

    இதேபோல் ஆதிசங்கரருக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது.   இந்த அனுபவத்தால்தான் நமக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்துள்ளது
    அதுவே மோஹமுத்கரம் .அதாவது மோஹத்தை உடைத்தெறியும் சம்மட்டி  .மோஹமுத்கரத்தின் முதல் பாடல் தான் நம்மில் பலருக்கும் தெரிந்த “பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே  “{இந்தப்பாடலை நினைத்தவுடனேயே என் கண்முன் வருவது  திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்கள் தான் .

    பஜகோவிந்தம்  உருவான இடம் காசி மாநகரம்.   நதிகளிலேயே மிகச்சிறப்பு பெற்ற புனித கங்கை நதி தீரத்தில் தனது புனித பாதங்களை  பதித்தபடி  ஞானப்பழமாக கங்கைப்பிரவாகம் போல் .ஞானப்பிரவாகமாக நடந்து வருகிறார்  ஸ்ரீஆதிசங்கரர்  .தனது  முப்பதிரண்டாவது  வயதிலேயே  ஒரு தத்துவ ஞானியாக அத்வைத்த  தத்துவத்தை  ஸ்தாபித்து  பாரதம் முழுவதும்  தனது திருப்பாதங்களால் புனிதப்படுத்திய அவதார புருஷர்  கங்கைத்தீரத்தில் சிவப்பழமாக நடந்து வருகிறார் ,கூடவே நான்கு சீடர்களும் தொடருகின்றனர் .

    ஜயஜய சங்கரா ஹரஹர சங்கரா என்ற கோஷமும் கிளம்பி  பின்   மெள்ள தென்றலில் மிதந்து கங்கை நதியில்  கலக்கிறது.

    அந்த கங்கை பளிங்குப்போல் சலசலவென ஒட சூரியோதயம் போல் அங்கு சங்கரர் வருகிறார் . அந்த நேரம் ஒரு பண்டித  கிழவர் கையில் கோலுடன் தள்ளாடித்தள்ளாடி வருகிறார் .அவர் கையில் ஒரு சுவடி. அதைப்பார்த்துப்பார்த்து  எதையோ மனப்பாடம் செய்ய அது மனதில் ஏறாமல்  கிழவர் தவிக்கிறார்.அவர் சுவடியில் படித்ததோ  சிலஇலக்கண நியமங்கள்   .இதைப் பார்த்து ஜகத்குரு அவர்  அருகில் செல்கிறார் இன்றோ நாளையோ என்பது போன்ற உடல் ….காலன் எந்தநேரமும் வரலாம் .இந்த நேரத்தில் இலக்கண சூத்திரம், படித்து மண்டையை உடைத்துக் கொள்கிறானே.! ஒரு நிமிடம் யோசனையில் ஆழ்கிறார்.

     .” என்ன உலகம் இது? ஒரு இடம் பொன் மேல் மோகம் .ஒரு இடம் வெறும் சதையும் எலும்பும் ஆன உடலின் மோகம்  ,பெண் மேல் காமம் , மனைவி ,மக்கள் என்ற. பந்தவலையில் விழுந்து  நான் , எனது என்ற அஹங்காரத்துடன் அந்த இறைவனை நினைக்காமல்  காலத்தை வீண் செய்கிறதே!”

    அவரது  எண்ணங்களின்  ஓட்டம்  “பஜகோவிந்தமாகப் பிறக்கிறது

    கோவிந்தனை  பஜிப்பாய்   ,,கோவிந்தனை   பஜிப்பாய்
    ஏ மூடமனமே
    நீ    மாயுங்காலம் அந்தகோவிந்தனன்றி வேறு  யார் ரட்சிப்பார் ‘ என்ற
    பொருளில்   ஆரம்பித்து  மேலே பல மலர்கள் உதிர்ந்து  பூமாலையாகிறது .

    வாழ்க்கை நிலையற்றது ,ஆடி ஒடி பணம் ஈட்டும் நேரம் தான் நம்முடன்  உற்றார் உறவினர்கள், ஜனனம் மரணம்  தொடர்தல் ,

    பிரும்மத்தை அறிய நேரமினமை  .இளமங்கை  சதை பிண்டம் மேல் மோகம் என்று  பல பூக்கள் அந்த மாலையில் தொடுக்கப்பட்டிருக்கிறது

    புத்தரது  எட்டு வழிகளான   நல்ல பார்வை,    நல்லெண்ணம்  இனிய பேச்சு நற்செய்கை    நல்ல வாழ்க்கை நன்முயற்சி ,நல்ல மனசாட்சி நல்ல தியானம் {  right view ,right intention ,rt speech ,rt பல action rt lively hood     rt effort  rt mindfulness  rt  concentration }
    இவைகள்   இந்து மதத்தில் தொன்றுதொட்டு இருந்து வர சங்கரரும் இதை  பல இடங்களில் கூறியிருக்கிறார் .

    பிரும்மம் உணர ஆசையான  மண்ணாசை ,பொன்னாசை ,பெண்ணாசை மூன்றையும் அறவே துறக்கவேண்டும் என்று   இருவருமே சொல்லியிருக்கின்றனர் .இன்பம் துன்பம் இரண்டையுமே சமமாக எடுத்துக்கொண்டால் தான் நிம்மதி பெறமுடியும்  என்றும்  இருவருமே சொல்கின்றனர்

    இருவருமே துறவறத்தை  ஆதரித்து  பிரும்மனைக் காண்கின்றனர்

    இதேபோல்  பல ஒற்றுமைகளை  புத்தர் ,சங்கரர் இருவரிடத்திலும் என்னால் காணமுடிந்தது  .

    ஒம் ஜயஜய சங்கர  ஹரஹரசங்கர   ,,,,,,,புத்தம் சரணம்  கச்சாமி  ….

    படத்திற்கு நன்றி :

    http://pinterest.com/pin/112519690661213331/

     

    Share
  • அண்ணாமலை தீபம்

     

    விசாலம்

    ஆறுமுகம் அவதரித்த  சுப நாள் இது
    கார்த்திகை மாதத் திருநாள் இது
    தீபங்கள்   ஏற்றும் நன்னாள் இது 
    சிவன் . சக்தி சேர்ந்த  பொன்னாள் இது,

    பரணி தீபம் எங்கும் சுடர
    கார்த்திகைத் தீபம் மறுநாள் ஒளிர,
    அண்ணாமலையில்  விளக்குகள் மின்ன ,
    மக்கள் கடலலை  மோதி வழிய ,
    ரதோத்சவம் சக்கைப்போடு போட ,
    ரிஷப வாஹனத்தில் சிவனும் அமர
    அண்ணாமலையார்  பல்லக்கில் ஆட
    அர்த்தநாரீஸ்வரருக்கு  தீபார்த்தனைக்காட்ட
    கூடவே அண்ணாமலை ஜோதியும்  எரிய
    எங்கும் கோஷம் எங்கும் பரவசம் .
    எங்கும் உத்சவம்  எங்கும் உத்சாஹம் ,
    அண்ணாமலையானுக்கு  அரஹரோஹரா  ‘
    ஓம் நமசிவாய ,ஓம் நமசிவாய ,
    நாமும் சேர்ந்து   முழங்குவோம்
    அவன் தாளைப் பற்றுவோம் ,
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    படத்திற்கு நன்றி :

    http://www.maalaimalar.com/2012/11/26141612/thiruvannamalai-karthigai-deep.html

     

    Share
  • அனுவாவி சுப்பிரமணியன்

     

    விசாலம்

    ஹனுமானின் தாகம் தீர்த்த முருகன்!!

     

    இலக்குமணன் மயக்கமடைந்து கிடக்கிறார் .ராம   ராவண யுத்தம் தான் .எல்லோர் முகத்திலும் கவலையும் வேதனையும் நிறைந்திருக்க விபீஷணர் எப்படியும்  ஸ்ரீராமரின் சகோதரரைக்காப்பாற்ற துடிக்கிறார் பின் ஜாம்பவானிடம் கலந்தாலோசிக்கிறார் . இப்போது ஜாம்பவான் பேசுகிறார் “கவலைப்படாதீர்கள் இமயமலைப்பகுதியிலிருந்து  சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து முகரவைத்தாலே மயக்கமடைந்தவர் எழுந்து விடுவார் .  யோசிக்க  அவகாசமில்லை உடனே யாராவது போய் அந்த மூலிகையைக் கொண்டு வரவேண்டும் .”

    இதோ அனுமான்   எழுந்து நிற்கிறார்  ” நான் போய் அந்த மூலிகையக் கொண்டுவருகிறேன்” என்றபடி விர்ரென்று கிளம்புகிறார். இதோ   சஞ்சீவினி மலை அருகே வந்தாயிற்று . எது மிருத சஞ்சீவினி என யோசிக்க நேரமில்லாததால் அந்தப் பர்வதத்தையே  அலாக்காகத் தூக்கி பறந்து வருகிறார்..அவரது நாக்கு வரண்டு போகிறது .தாகம் தாங்கவில்லை .அப்படியே ஒரு குன்றின் மேல் நின்றபடி தாகத்திற்குத் தண்ணீர் தேடுகிறார் . கண்களை மூடியபடி முருகப் பெருமானைத் தியானம் செய்கிறார். . அடுத்த வினாடியே அங்கு அழகன்   புன்னகை முகத்துடன் நிற்கிறான் .கூடவே தெய்வானையும் நிற்க சுபிரமண்யர்  தன் வேலை எடுத்து அந்தக் குன்றின் இடுக்கில்   பாய்ச்ச அப்படியே   நீர்   கசிந்து  பின் வேகமாக வர அனுமானும்  பக்தியால் கண்கலங்கி  முருகனை வணங்கி தாகச்சாந்தி செய்து கொள்கிறார் . பின் இலக்குமணனைக் காப்பாற்ற பறக்கிறார்

    இந்தப் புனிதமான இடத்திற்குப் போகும் பாக்கியம் எனக்கு சமீபத்தில் கிட்டியது இந்த இடத்தின் பெயர் அனுவாவி  . அனுமன் பெயரால் வந்த குளம் என்ற பொருள் இருக்கலாம் . கனுவாய் , ஆனைக்கட்டி, போகும் ரூட்டில் இந்தக் கோயில் வருகிறது பெரிய தடாகம் என்ற   இடத்தில் அமைந்திருக்கிறது, இக்கோயில். .இந்தகோயிலுக்குப்போகும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையும் நம்மைத் தொடர்ந்து வாருங்கள் என்று  அழகாக   தன் கைகளை நீட்டி வரவேற்பது போன்ற தோற்றம் நம்மைப் பரவசப்படுத்துகிறது. சுற்றுப்புரத்தில் காடு இருப்பது தெரிகிறது அடிக்கடி யானைகளும் நீர் குடிக்க இங்கு வருவதாக இங்கு இருப்பவர்கள் சொன்னார்கள் .   விவசாயமும்  செங்கல் செய்வதும் இந்த கிராம மக்களின் தொழில்  என்று  தெரிய வந்தது

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சரியாகத்தான் இருக்கிறது மருதமலை ஆகட்டும் .ரத்னகிரி ஆகட்டும்  இந்த முருகன் ஏன் ஒருவரது சௌகரியமும் பார்க்காமல்  மேலே போய் அமர்ந்து விடுகிறார்?

    . வயதானவர்களெல்லாம் எப்படி ஏறி தன்னை வந்து பார்ப்பார் என்று கொஞ்சமாவது யோசிக்கிறாரா? இப்படி உச்சியில் போய் கோயில் கொண்டு  விடுகிறாரே !ஒரு சமயம் “என்னால் முடியும் என்ற எண்ணமும் “எல்லாம்முருகன் பார்த்துப்பான்” என்ற சரணாகதியும்  ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி குன்றின் மேல் போய் அமர்ந்து விடுகிறாரோ என்னமோ ! உயரத்தைப் பார்க்க எனக்கும்  எப்படி ஏறப் போகிறோம் என்ற  பயம் இருந்தது . என் கூட வந்தவர்கள சுமார் 550 படிகளாவது  ஏற வேண்டும் என்று சொல்லுகையில்    உள்ளூர ஒரு கலக்கம் …..எப்படியும் ஏறித்தான் போகவேண்டும் .முருகன் தரிசனம் என்றால் சும்மாவா என்று என் மனம் எண்ண, என்னைச் சுற்றி முருகனின் ஒளியை ஒரு பாதுகாப்பு வட்டம் போல் கற்பனை செய்து கொண்டேன் , எப்போதுமே நான் எதை வாங்குகிறேனோ இல்லையோ தவறாமல் மூச்சு என்னை வாங்கும் அதுவும் மேலே ஏற ஏற .. கழுத்தில் இருக்கும் குழி உள்ளே போய்விட்டு .போய்விட்டு வரும் ஆனாலும் இந்த அனுமானுக்கு அருளிய முருகனை எப்படியும் பார்த்தே தீரவேண்டும் என்ற தாகம் ……..அனுமனுக்கு ஏற்பட்ட தாகத்தை விட அதிகமாக இருந்தது ஆயிற்று கோயில் வாசல் வந்தாயிற்று .  அழகாக  வெல்கம் ஆர்ச் என்பது போல் பாதி வளைந்த வட்டத்துடன் முகப்பு  எங்களை வரவேற்றது ,அதில் சிற்பக் கலையின் நுணுக்கங்களைப் பார்க்க முடிந்தது

    சிறிது தூரம் வந்தவுடன் ஒரு பெரிய கணபதி அங்கு அமர்ந்திருக்க பலர் அவருக்கு தீபமும் கற்பூரமும் ஏற்றுகின்றனர்  நானும் சுறுசுறுப்பாக  ஒரு 200 படிகள்: ஏறிவிட்டேன் அதன் பின் தான் எனக்கு முச்சு விட சிரமம் ஏற்பட்டது . என் கூட வந்த இரு பெண்மணிகள்  ” நாங்கள் இங்கேயே ஒரு மேடையில்
    உட்க்கார்ந்திருக்கிறோம் நீங்கள் போய் வாருங்கள் “என கழண்டு கொண்டனர்

    .நான் மலேசியாவில் இருக்கும் முருகனை அத்தனை படிகள் ஏறிப் பார்த்தேனே இங்கு பார்க்கமாட்டேனா என்ற வில் பவர் .என்னை மேலே ஏற ஊக்கிவித்தது, தவிர முருகன் வழிகாட்டுவான் என அசைக்க முடியாத நம்பிக்கை ஓம் சரவணபவ என்றபடியே மேலே ஏறத் தொடங்கினேன் .இப்போது கடைசி ஐம்பது படிகள் இருக்க   என்  தலைச்சுற்றுவதுபோல் தோன்றி என்  உடம்பை என்னவோ செய்தது    “முருகா  என்னை அழைத்துப்போ ,இன்னும் கொஞ்சம் படிகள் தான் பாக்கி “என்று என் வாய் சொல்ல திடீரென்று உடலில் ஒரு புத்துணர்ச்சி   ஏற்பட்டது அவ்வளவுதான் .ஒரு படியிலும் ரெஸ்ட் எடுக்காமல் நேரே மேலே ஏறிவிட்டேன் , இது  என் முருகன் அருளால் தான் ஏற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை .முருகா  இப்படியும் உன் கருணையா என்றபடி  கையில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து  மள மளவென்று தண்ணீர் குடித்தேன் ,

    உள்ளே கர்ப்பகிரஹத்தில் சுப்பிரமண்யன் தேவ்யானை  ,வள்ளியுடன்  நின்று புன்னகைத்தபடி அருள் புரிகிறார் பார்க்கப் பார்க்க அத்தனை அழகு.அழகான வடிவம்  .அவனது   கண்கள் நம்மையே பார்ப்பது போன்று தோற்றம் அளிக்க இருகைகளைக்கூப்பியபடி  அவனையே பார்த்து நின்றேன்அப்படி  நின்றதில் கிடைத்த ஆனந்தத்தை   சொல்லி இயலாது அதன் அருகில் அடுத்த பக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரும்  கம்பீரமாக கைகளில் சஞ்சீவனி மலையைத்தூக்கியபடி காட்சி அளிக்கிறார் .முருகன் கோயிலில் ஆஞ்சநேயர் இருப்பது அபூர்வமாகவும் விசேஷமாகவும் இருக்கிறது முருகன் தன் வேலால் உண்டாக்கிய அனுவாவி சுனை மருத்துவ குணம் கொண்டது அந்தச் சுனையின் நீரை பக்தி சிரத்தையோடு அருந்த எந்த விதமான நோயும் சரியாகிவிடுகிறதாம் சுனையின் நீரும் மிகவும் ருசியாக இருக்கிறது

    வெளிப்பக்கத்தில் மரத்தால் ஆன ரதமும் வைக்கப்பட்டிருக்கிறது தைப்பூசம்,வைகாசி விசாகம் சஷ்டி கிருத்திகைப்போன்ற நாட்களில் இந்த மர ரதத்தில்  முருகன் இரு மனைவியர்களுடன் உலா வருவாராம், இடும்பனுக்கும்  ஸ்பெஷல் இடம்  உண்டு .இந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த முருகன் தான் குலதெய்வமாம் .முருகன் வேலால் குத்தி வரவழைத்த நீரைத் தான் இந்த கிராம மக்கள் உபயோகப்படுத்துகின்றனர்   இந்த முருகனுக்குப்பூஜை செய்ய வருபவரும் இந்த கிராமத்தைச்சேர்ந்தவர் தான் என்று அங்கு இருந்த ஒருவர் கூறினார் . அந்த ஊர் மக்கள் எத்தனை வயதானாலும் அபிஷேகத்திற்கான பொருட்களைத்தூக்கியபடி அத்தனைப்படிகளையும் ஏறி மேலே வந்து பிரார்த்தனைகள்  செலுத்த வருகின்றனர்  நான் அங்கு இருந்த போது கூட ஒரு வயதானவர் தன் கையில் பெரிய பூமாலை, .பால் நிரம்பிய பாத்திரம்   என்று இரு கையிலும் பல சாமான்களுடன் படிகளைக்கடந்து வந்துக்கொண்டிருந்தார் .  அது அவரது குல தெய்வமாதலால் மிகுந்த சிரத்தையுடன் பூஜைகளை நடத்தினார் .பின் சஷ்டிகவசம் படிக்க ஆரம்பித்தார் .. நாங்களும் அவருடன் சஷ்டி கவசம்
    ஓத அன்றைய தினம் மறக்கமுடியாத தினமாக நினைவில் நின்றது

    இங்கு   வைகாசி விசாகம் .ஆடி கிருத்திகை .தைப்பூசம் போன்ற முருகனின திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர் .ஆனால் சூரசம்ஹாரம் இங்கு நடப்பதில்லை என நினைக்கிறேன் திருத்தணி போல் இங்கும் சுப்பிரமண்யன் வள்ளி தேவானையுடன்  சேர்ந்து  நாடி வந்த பக்தர்களுக்கெல்லாம் அருள் புரிகிறார் . மேற்குதொடர்ச்சி மலையின் சூழலில் அதிரம்யமான இயற்கையின் நடுவே அவர் அமைதியுடன் ஆனந்தமாக இருப்பதைப்பார்த்தாலே நம் வாழ்க்கையிலும் பேரானந்தம் தான் என்று நமக்கும்  ஏதோ ஒரு புல்லரிப்பு உண்டாகிறது ,

    ஓம் சரவணபவ

    Share