காட்சிகள் சில . மகளிர் தினம்
விசாலம்
காலை நேரம் .} என்ன இன்னும் பொன்னம்மா வேலைக்கு வரவில்லையே இந்த வேலைக்காரி டென்சன் என்னிக்குத்தான் போகுமோ ?’
‘
“ஏன் பொன்னம்மா இவ்வளவு லேட் ? ” ஏன் இப்படி அழுவுறே “.
“அத ஏம்மா கேக்கறீங்க .இஸ்கூல் பீஸுன்னு வச்சிக்கினுருந்தேன் ஒரு நூறு ரூபா ..அதயும் என் புருசன் எடுத்துக்குனு ஓடிட்டாரு. என் முவத்தைப்பாருங்கம்மா கன்னத்தல எத்தன அடின்னு பாருங்கம்மா .’
“ஆமாம் என்ன இப்படி அடிச்சிருக்கான் ? எதுக்கு அவனுக்கு பணம் ?
“அதாம்மா . அந்தப்பாழாப்போன குடி ……. எல்லாம் நா பொண்னா பொறந்த வேளை இந்த அழகல இன்னிக்கி “மகளிர் தினமாம் ”
கோடி வீட்டம்மா சொல்லிச்சு …..இதுவாம்மா “மகளிர் தினம் .புருசன்டேந்து அடி வாங்கி சாவரதா மகளிர் தினம் “?
காட்சி 2 “என்னங்க டாக்டரம்மா என் வயித்தல வளர்ர குழந்தை நன்னாருக்குன்னு சொன்னா ……..நானு ..நன்னா சத்துள்ள உணவை
சாப்பிடணுமாம்
‘
“அது சரி தாமரை . என்ன குழந்தன்னெ கேக்கச் சொன்னேன்னே கேட்டயா ‘?
” கேட்டேங்க . சொல்லமாட்டேன்னுட்டாங்க . எதுவா இருந்தா என்னாங்க ?
“என்ன? எதுவா இருந்தா என்னாங்க,,,,,,, இழுக்கறே அப்போ பொட்டப்புள்ள தான் பொறக்கும் .எனக்கு வேண்டாம் அது ஏற்கனவே
ஒன்னு இருக்கு சிலவு வைக்க ….. அத அழிச்சுடு …”
” நான் அந்த பாவத்த செய்யமாட்டேனுங்க . அது நம்ம குழந்தைங்க ‘
“சீ வாய மூடு . எனக்கு வர சம்பளத்ல இன்னொரு மவளா? அப்படி பெத்துண்டேன்னா உங்கப்பன் வூட்டுக்கு போ இங்க வராதே ‘
“என்னங்க இன்னிக்கு ‘மகளிர் தினம்” னு பேபர்ல போட்டிருந்துச்சு இப்படி
நடந்துக்கிறீங்களே!
‘மகளிர் தினமாவது மண்ணாங்கட்டியாவது .இதெல்லாம் நமக்கில்லை அதல்லாம் பெரிய இட சமாச்சாரம் இங்க நான் சொல்றத நீ கேக்கணும் தெரிமா?”
காட்சி மூன்று . .. ஏம்பா கொஞ்சம் பஸ்ஸ நிறுத்துப்பா ஸ்டாப்பில கூட ஓட்டிண்டே போறயே ‘
” என்னம்மா ஆம வேகத்ல வந்துகிட்டு …. ஏறுங்கம்மா சீக்கரம் . ”
” அம்மாடி எத்தன மேல படி ஏறவே முடியலை கைல வேற இரண்டு பை,,,,,, இன்னிக்கின்னு பாத்து மளிகை சாமானும் தெரியாத்தனமா வாங்கிட்டேன் வீட்ல இருக்கற ஆம்பள பசங்கள என்னத்த சொல்றது ?”
” என்னங்கம்மா ……ஏறிட்டீங்களா ? இந்தாங்க சீட்டு ‘
” என்னப்பா நான் எப்படிப்பா சில்லறை எடுக்கறது உட்க்கார ஒரு இடமில்ல . யாராவது ஒத்தராவது எழுந்து எடம் விடறாளா பாரு
எல்லாம் இளம் வயசுகள் . ஆனா கூட வயசுக்கு மரியாத கொடுக்கறாளோ பாரு ஏதுடா ஒரு வயசான பொம்பள நிக்கறாளே ன்னு
ஒத்தருக்கும் தோணலயே ‘
“அம்மா அதெல்லாம் அந்தக்காலம் .சரி சரி டிக்கட்ட பிடிங்கோ ‘
” ஏண்டா சுரேஷ் மகளிர் தினத்துக்கு உங்கம்மாக்கு என்ன வாங்கி தரப்போறே ‘
ஒ இன்னிக்கு மகளிர் தினமா மறந்தே போயிடுத்து , வேலன்டின் டே தான் எப்பவும் ஞாபகம் இருக்கு ‘
“சரி சரி இதான் சாக்குன்னு என் கன்னத்தை கிள்ளாதே . பக்கத்தல நிக்கற அந்த வயசான மாமி பாக்கறா,”
“எழுந்து இடம் தரவா?’
” என்ன லூஸுடா நீ என்னிக்கோ உம் பக்கத்தல உட்காந்துக்க சான்ஸ் கிடைச்சிருக்கு அதபோய் விடறேங்கறயே
காட்சி 4 ஏண்டி கலா பக்கத்தாத்து மாமாக்கு இந்த அல்வாவ கொடுத்துட்டு வா இத்தன நாளா உனக்கு கணக்கு வேற கத்துக்கொடுத்திருக்கா தவிர உன் பிறந்த நாள் வேறு ‘
“சரியம்மா கொடு .”
” மாமா சீனுமாமா ..எங்கே இருக்கீங்க ? ஓ உள்ளே படுத்திருக்கீங்களா? ‘
‘ ஆமாண்டி செல்லம் தலவலி … உள்ள வா ……. கையில என்ன ?
“அல்வா மாமா . இன்னிக்கி என் பெர்த் டே . மாமா’
‘ ஆஹா கங்ராஜுலேஷன்ஸ் .அதான் இன்னிக்கு இந்த நீல டிரெஸ்லே ரொம்ப அழகா இருக்கே என்ன போனமாசம் முழுக்க வரலை ,’
” அதுவா …….வந்து வந்து ..’
ஐயோ என்ன வெட்கம் பாரு . நீ பெரிய மனுசி ஆயிட்டே இல்லையா ? என்ன ஒன்னும் பேசமாட்டேங்கறே .அது சரி அங்க தலவலி
பாம் வச்சிருக்கேன் அத எடுத்துண்டு வந்து என் நெத்திலே தடவி விடு .’
சரி மாமா ”
“ஆஹா என்ன இதமாக தடவி விடறே . அப்படியே உன்னைக்கட்டிக்கணும்போல இருக்கு ‘
” சீ என்ன மாமா செய்றீங்க . தப்பான காரியம் செய்யறீங்க என்ன விடுங்க நான் வரேன் ஐயோ அம்மா …… என்ன இந்த மாமா
தனி ரூம்முக்கு கூட்டிண்டு போறாம்மா . ‘
” உங்கம்மாவுக்கு காதில விழாது . சும்மா இரு . இன்னிக்கு மகளிர் தினம் அதான் உனக்கு இந்த பரிசு . என் அன்பை உனக்கு காட்டவேண்டாமா ”
“என்ன இது அல்வா கொடுக்கப்போன பொண்ணை இன்னும் காணோம் ஏண்டி கலா என்னடி பண்ற இத்தன நேரம் ”
காட்சி 5 என்னம்மா நான் இத்தன நிறைய மார்க் எடுத்து கிளாசிலே முதல் இடம் வந்திருக்கேன் . மேலே படிக்க விடமாட்டேங்கற ‘
” எல்லாம் இத்தன படிச்சது போறும் ஜானா … கல்யாணம் ஆகி ஒரு இடத்துக்குத்தானே போணும் உன் தம்பிகள் இரண்டு பேர் இருக்கா ஞாபகம் வச்சுக்க உனக்கே படிப்புக்கு சிலவழிச்சுட்டா அவாளுக்கு எங்க போறது ?’
“என்னம்மா நீ ரமேஷுக்கு படிப்பே வரலை சிவா ஊரை சுத்தறான் . ஆனா நான் எல்லாத்லேயும் முதலா இருந்தாலும் மேலே படிக்க விடமாட்டேங்கற அப்பா நீங்களாவது சொல்லுங்கோ இந்த அம்மாக்கு ‘
” ஜானா செல்லம் அம்மா சொல்றது சரிதான் நீ உன் புக்காத்துக்க போனப்பறம் மேலே படி இல்ல ஸ்டேட்ஸ்க்குத்தான் போ
இப்ப உன் தம்பிகளத்தான் பாக்கணும் ‘
“என்னப்பா நீங்களுமா …….. மகளிர் தினத்ல இப்படி ஒரு பதிலா ? நம் நாடு மாறவே போறதில்ல இந்த பெண்கள் விஷயத்ல ,,,,,,,
காட்சி 6 ” அன்பு சகோதரிகளே இன்று மகளிர் தினம் மார்ச் எட்டாம் தேதி . பெண்கள் சுதந்திரத்திற்கு இன்னும் நாம் போராட வேண்டும்
ஆண்களுக்கு சரிசமமாக நாம் எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டு அவர்களைவிட ஒரு படி மேலேயே வளர்ந்திருக்கிறோம்
ஆனாலும் நமக்கு ஒரு ரெகக்னிஷன் கிடைப்பதில்லை வீட்டிலும் அடிமைப்போல் தான் வாழ்க்கை இருக்கிறது
டிரீங்க டிரீங் ……….. ” ஒரு நிமிடம் இதோ வந்துவிட்டேன்
” என்னங்க என்ன வேணும் இந்த நேரத்தல கூப்படறீங்க நான் மேடைல பேசிண்டிருகேங்க ‘
“போதும் பேசினது வீட்டுக்கு வந்து தொலை , ஒம் பொண்ணு முத்தரசி ஙொய் ஙொய்ன்னு அழறது என்னால பாத்துக்க முடியாது
“ஏன் சீட்டு விளையாட போணுமா என்ன……. வழக்கம்போல ‘
‘ நீ முதல்ல வீட்டிற்கு வா அப்பறம் பேசலாம் ‘
“மன்னித்துக்கொல்ளுங்கள் அன்பு சகோதரிகளே நான் என்ன சொன்னேன் ஆம் நாம் மகளிர் சுதந்திரத்திற்காக போராட வேண்டும்
தைரியமாக சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டும் தன் காலிலிலேயே நிற்க கற்றுக்கொள்ள வேண்டும் . மகளிர் தினத்திற்காக என் நல் வாழ்த்துகள்
அவசரமாக நான் வீடு போக வேண்டும் . நன்றி வணக்கம்