காட்சிகள் சில . மகளிர் தினம்

0

விசாலம்

காலை நேரம் .}    என்ன  இன்னும் பொன்னம்மா வேலைக்கு வரவில்லையே  இந்த வேலைக்காரி டென்சன்   என்னிக்குத்தான் போகுமோ ?’

“ஏன் பொன்னம்மா இவ்வளவு லேட் ? ” ஏன் இப்படி அழுவுறே  “.

“அத ஏம்மா கேக்கறீங்க .இஸ்கூல் பீஸுன்னு வச்சிக்கினுருந்தேன் ஒரு நூறு ரூபா  ..அதயும்  என் புருசன் எடுத்துக்குனு ஓடிட்டாரு. என் முவத்தைப்பாருங்கம்மா   கன்னத்தல எத்தன அடின்னு பாருங்கம்மா .’

“ஆமாம்  என்ன இப்படி அடிச்சிருக்கான்  ? எதுக்கு அவனுக்கு பணம் ?

“அதாம்மா  . அந்தப்பாழாப்போன  குடி  ……. எல்லாம் நா  பொண்னா பொறந்த வேளை  இந்த அழகல  இன்னிக்கி “மகளிர் தினமாம் ”

கோடி வீட்டம்மா  சொல்லிச்சு  …..இதுவாம்மா  “மகளிர் தினம் .புருசன்டேந்து அடி வாங்கி சாவரதா   மகளிர் தினம் “?

காட்சி 2        “என்னங்க  டாக்டரம்மா  என் வயித்தல வளர்ர குழந்தை நன்னாருக்குன்னு சொன்னா ……..நானு ..நன்னா சத்துள்ள  உணவை
சாப்பிடணுமாம்

“அது சரி  தாமரை  .    என்ன குழந்தன்னெ  கேக்கச் சொன்னேன்னே  கேட்டயா  ‘?

” கேட்டேங்க   . சொல்லமாட்டேன்னுட்டாங்க  . எதுவா இருந்தா என்னாங்க   ?

“என்ன?      எதுவா இருந்தா என்னாங்க,,,,,,, இழுக்கறே  அப்போ பொட்டப்புள்ள தான் பொறக்கும்  .எனக்கு வேண்டாம் அது    ஏற்கனவே
ஒன்னு இருக்கு சிலவு வைக்க  ….. அத  அழிச்சுடு  …”

” நான் அந்த பாவத்த  செய்யமாட்டேனுங்க  .  அது நம்ம குழந்தைங்க ‘

“சீ வாய மூடு . எனக்கு வர சம்பளத்ல  இன்னொரு மவளா?    அப்படி பெத்துண்டேன்னா உங்கப்பன் வூட்டுக்கு போ  இங்க வராதே ‘

“என்னங்க  இன்னிக்கு ‘மகளிர் தினம்” னு பேபர்ல போட்டிருந்துச்சு  இப்படி
நடந்துக்கிறீங்களே!

‘மகளிர் தினமாவது மண்ணாங்கட்டியாவது .இதெல்லாம் நமக்கில்லை  அதல்லாம் பெரிய இட சமாச்சாரம்   இங்க நான் சொல்றத நீ கேக்கணும்  தெரிமா?”

காட்சி மூன்று  . .. ஏம்பா    கொஞ்சம் பஸ்ஸ  நிறுத்துப்பா    ஸ்டாப்பில கூட ஓட்டிண்டே போறயே ‘

”  என்னம்மா  ஆம வேகத்ல  வந்துகிட்டு  …. ஏறுங்கம்மா  சீக்கரம் .   ”

” அம்மாடி   எத்தன  மேல படி  ஏறவே முடியலை   கைல வேற இரண்டு பை,,,,,, இன்னிக்கின்னு பாத்து மளிகை சாமானும் தெரியாத்தனமா வாங்கிட்டேன் வீட்ல இருக்கற ஆம்பள பசங்கள  என்னத்த சொல்றது ?”

” என்னங்கம்மா   ……ஏறிட்டீங்களா ? இந்தாங்க  சீட்டு  ‘

” என்னப்பா  நான் எப்படிப்பா    சில்லறை  எடுக்கறது  உட்க்கார ஒரு இடமில்ல .  யாராவது ஒத்தராவது எழுந்து எடம் விடறாளா பாரு
எல்லாம் இளம் வயசுகள் . ஆனா  கூட வயசுக்கு மரியாத கொடுக்கறாளோ பாரு ஏதுடா ஒரு வயசான பொம்பள  நிக்கறாளே ன்னு
ஒத்தருக்கும் தோணலயே ‘

“அம்மா  அதெல்லாம் அந்தக்காலம் .சரி சரி டிக்கட்ட பிடிங்கோ  ‘

”  ஏண்டா  சுரேஷ்  மகளிர் தினத்துக்கு    உங்கம்மாக்கு   என்ன வாங்கி  தரப்போறே ‘

ஒ  இன்னிக்கு மகளிர் தினமா  மறந்தே போயிடுத்து , வேலன்டின் டே தான் எப்பவும் ஞாபகம் இருக்கு ‘

“சரி சரி இதான் சாக்குன்னு  என் கன்னத்தை கிள்ளாதே . பக்கத்தல நிக்கற அந்த வயசான மாமி பாக்கறா,”

“எழுந்து இடம் தரவா?’

” என்ன லூஸுடா நீ     என்னிக்கோ உம் பக்கத்தல உட்காந்துக்க  சான்ஸ் கிடைச்சிருக்கு அதபோய்  விடறேங்கறயே

காட்சி  4      ஏண்டி கலா  பக்கத்தாத்து மாமாக்கு இந்த அல்வாவ கொடுத்துட்டு வா இத்தன நாளா உனக்கு கணக்கு வேற கத்துக்கொடுத்திருக்கா தவிர உன் பிறந்த நாள் வேறு ‘

“சரியம்மா  கொடு .”

”  மாமா  சீனுமாமா  ..எங்கே இருக்கீங்க  ? ஓ உள்ளே படுத்திருக்கீங்களா? ‘

‘ ஆமாண்டி செல்லம்    தலவலி …  உள்ள வா ……. கையில என்ன ?

“அல்வா மாமா  . இன்னிக்கி என் பெர்த் டே . மாமா’

‘ ஆஹா   கங்ராஜுலேஷன்ஸ் .அதான் இன்னிக்கு இந்த நீல டிரெஸ்லே ரொம்ப அழகா இருக்கே என்ன போனமாசம் முழுக்க வரலை ,’

” அதுவா   …….வந்து      வந்து ..’

ஐயோ என்ன வெட்கம் பாரு  . நீ பெரிய மனுசி ஆயிட்டே  இல்லையா ? என்ன ஒன்னும் பேசமாட்டேங்கறே .அது  சரி  அங்க  தலவலி
பாம் வச்சிருக்கேன்  அத எடுத்துண்டு வந்து என் நெத்திலே தடவி விடு  .’

சரி மாமா  ”

“ஆஹா  என்ன இதமாக தடவி விடறே . அப்படியே உன்னைக்கட்டிக்கணும்போல  இருக்கு ‘

” சீ  என்ன  மாமா செய்றீங்க   . தப்பான காரியம் செய்யறீங்க   என்ன விடுங்க நான் வரேன் ஐயோ அம்மா  …… என்ன இந்த மாமா
தனி ரூம்முக்கு கூட்டிண்டு போறாம்மா  . ‘

” உங்கம்மாவுக்கு  காதில விழாது  .  சும்மா இரு . இன்னிக்கு மகளிர் தினம் அதான் உனக்கு இந்த பரிசு   . என்  அன்பை  உனக்கு காட்டவேண்டாமா ”

“என்ன  இது அல்வா கொடுக்கப்போன பொண்ணை இன்னும் காணோம்   ஏண்டி கலா என்னடி பண்ற இத்தன நேரம் ”

காட்சி 5   என்னம்மா  நான் இத்தன நிறைய மார்க் எடுத்து  கிளாசிலே முதல் இடம் வந்திருக்கேன்  . மேலே படிக்க விடமாட்டேங்கற ‘

” எல்லாம் இத்தன படிச்சது போறும் ஜானா …  கல்யாணம் ஆகி ஒரு இடத்துக்குத்தானே போணும்  உன் தம்பிகள் இரண்டு பேர் இருக்கா ஞாபகம்  வச்சுக்க  உனக்கே படிப்புக்கு சிலவழிச்சுட்டா  அவாளுக்கு எங்க போறது ?’

“என்னம்மா  நீ   ரமேஷுக்கு படிப்பே வரலை   சிவா  ஊரை சுத்தறான் .  ஆனா நான் எல்லாத்லேயும் முதலா இருந்தாலும் மேலே படிக்க விடமாட்டேங்கற அப்பா  நீங்களாவது சொல்லுங்கோ இந்த  அம்மாக்கு ‘

”   ஜானா செல்லம் அம்மா சொல்றது சரிதான் நீ உன் புக்காத்துக்க போனப்பறம்  மேலே படி இல்ல  ஸ்டேட்ஸ்க்குத்தான் போ

இப்ப  உன் தம்பிகளத்தான்  பாக்கணும்  ‘

“என்னப்பா  நீங்களுமா   …….. மகளிர் தினத்ல இப்படி  ஒரு பதிலா ?  நம் நாடு மாறவே போறதில்ல   இந்த பெண்கள் விஷயத்ல ,,,,,,,

காட்சி  6     ” அன்பு சகோதரிகளே   இன்று மகளிர் தினம்   மார்ச் எட்டாம் தேதி  .   பெண்கள் சுதந்திரத்திற்கு இன்னும் நாம் போராட வேண்டும்

ஆண்களுக்கு சரிசமமாக நாம் எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டு அவர்களைவிட ஒரு படி மேலேயே வளர்ந்திருக்கிறோம்
ஆனாலும்  நமக்கு ஒரு  ரெகக்னிஷன்  கிடைப்பதில்லை  வீட்டிலும் அடிமைப்போல் தான்  வாழ்க்கை இருக்கிறது

டிரீங்க  டிரீங்  ……….. ” ஒரு நிமிடம்    இதோ வந்துவிட்டேன்

” என்னங்க  என்ன வேணும்  இந்த நேரத்தல கூப்படறீங்க நான் மேடைல பேசிண்டிருகேங்க ‘

“போதும் பேசினது  வீட்டுக்கு வந்து தொலை , ஒம் பொண்ணு  முத்தரசி ஙொய் ஙொய்ன்னு  அழறது என்னால பாத்துக்க முடியாது

“ஏன் சீட்டு விளையாட போணுமா என்ன…….  வழக்கம்போல ‘

‘ நீ முதல்ல வீட்டிற்கு வா  அப்பறம் பேசலாம் ‘

“மன்னித்துக்கொல்ளுங்கள்  அன்பு சகோதரிகளே  நான் என்ன சொன்னேன்  ஆம் நாம் மகளிர் சுதந்திரத்திற்காக போராட வேண்டும்

தைரியமாக  சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டும் தன் காலிலிலேயே நிற்க கற்றுக்கொள்ள வேண்டும்   .  மகளிர் தினத்திற்காக  என் நல் வாழ்த்துகள்

அவசரமாக நான் வீடு போக வேண்டும் . நன்றி வணக்கம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *