சிரிப்பில்…
ஆளுக்கு ஆள் ஆயுள்,
அளவிலுண்டு வேறுபாடு-
கூடலாம், குறையலாம்..
அதில் அவன்
அழுதுகொண்டே பிறக்கிறான்
அழுதுகொண்டே வாழ்கிறான்
அழுதுகொண்டே சாகிறான்..
ஆனால் இந்தப் பூக்கள்,
சிலமணி நேரம் வாழ்ந்தாலும்
சிரித்துக்கொண்டே இருக்கின்றன..
புரிந்ததா மனிதனே,
தெரிந்துகொள் பார்த்து-
சிரித்து வாழ்
சிரிக்க வாழாதே அழுது…!
படத்துக்கு நன்றி
http://stuffpoint.com/flower/image/104090/beautiful-iris-purple-flowers-picture/
சிரித்து கொண்டே உதிரும் பூக்கள்
அழுது கொண்டே பார்க்கும் மக்கள்
பறிக்கத் துடிக்கும் வணிகக் கூட்டம்
ரசிக்கத் துடிக்கும் தமிழின் வாட்டம்
என்று புரிந்து கொள்வாரோ !
சத்தியமணி அவர்களின்
கருத்துக் கவிதைக்கு நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…