செண்பக ஜெகதீசன்

ஆளுக்கு ஆள் ஆயுள்,

அளவிலுண்டு வேறுபாடு-

கூடலாம், குறையலாம்..

 

அதில் அவன்

அழுதுகொண்டே பிறக்கிறான்

அழுதுகொண்டே வாழ்கிறான்

அழுதுகொண்டே சாகிறான்..

 

ஆனால் இந்தப் பூக்கள்,

சிலமணி நேரம் வாழ்ந்தாலும்

சிரித்துக்கொண்டே இருக்கின்றன..

 

புரிந்ததா மனிதனே,

தெரிந்துகொள் பார்த்து-

சிரித்து வாழ்

சிரிக்க வாழாதே அழுது…!

 படத்துக்கு நன்றி

 http://stuffpoint.com/flower/image/104090/beautiful-iris-purple-flowers-picture/                                       

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சிரிப்பில்…

  1.  சிரித்து கொண்டே உதிரும் பூக்கள்
     அழுது  கொண்டே பார்க்கும் மக்கள்
     பறிக்கத் துடிக்கும்  வணிகக் கூட்டம்
     ரசிக்கத்  துடிக்கும்  தமிழின் வாட்டம்
     என்று புரிந்து கொள்வாரோ !

  2. சத்தியமணி அவர்களின் 
    கருத்துக் கவிதைக்கு நன்றி…!
    -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *